புராதன இந்தியாவின் 56 தேசங்கள் –பகுதி 2 (Post No 2693)

purana map1

Compiled by london swaminathan

Date: 4 April, 2016

 

Post No. 2693

 

Time uploaded in London :–  14-41

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

purana map6

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியானது. அதில் 17 தேசங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டன. ஏனைய தேசங்கள் கீழேயுள்ள பட்டியலில் உள்ளன:-

1.குரு தேசம்

2.சூரசேன தேசம்

3.குந்தி தேசம்

4.குந்தலதேசம்

56 desam3

56 desam4

தேசம் 18 முதல்

 

தேசம் 24 முதல்

 

தேசம் 31 முதல்

 

தேசம் 36 முதல்

 

தேசம் 44 முதல்

 

தேசம் 45 முதல்

 

தேசம் 52 முதல்

–சுபம்–

 

 

 

புராதன இந்தியாவின் 56 தேசங்கள்! (Post No. 2686)

purana map1

Compiled  by london swaminathan

Date: 2 April, 2016

 

Post No. 2686

 

Time uploaded in London :–  6-35 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

புராதன இந்தியாவில் 56 தேசங்கள், அதாவது 56 பிரிவுகள் இருந்தன. இவைகளை இப்போதைய மாநிலங்களுக்கு ஒப்பிடலாம். பலம்பொருந்திய மன்னர்கள் ஆளுகையில் எல்லா மன்னர்களும் சக்ரவர்த்தியின் ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டார்கள். சுயம்வரம், போட்டிகள், பட்டாபிஷேகங்கள் முதலியவற்றுக்கு 56 தேச ராஜாக்களுக்கும் அழைப்பிதழ்கள் சென்றன. அவ்வப்பொழுது சண்டைகளும் போட்டார்கள்; பெண் கொடுத்து, பெண் எடுத்தார்கள்.

 

இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர சோழ, பாண்டிய நாடுகளுக்குப் புறம்பாக திராவிட நாடு காட்டப் பட்டிருப்பது பற்றி, திராவிடர்கள் யார்? என்ற கட்டுரையில் முன்னரே எழுதியுள்ளேன் (திராவிடர்கள் யார்? ஜூலை, 2013). இதிலுள்ள வரைபடங்கள் ஓரளவுக்கு நமக்கு, நாடுகளின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுக்கிறது. ஆயினும் அவ்வப்பொழுது அவற்றின் எல்லைகள் விரிந்தும் சுருங்கியும் போனதால் குழப்பங்கள் ஏற்பட்டன.

 

ஒருவர் ஒரு நூலை எழுதும்போது, ஒரு நாட்டின் எல்லை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அதற்கேற்ப அவர்கள், ஊர்கள் பற்றியும் மக்கள் போக்குவரத்த் பற்றியும் எழுதினர். பிற்காலத்தில் நாம் அவைகளை ஒரு சேரப் படிக்கையில் முரண்பாடுகளைக் காண்கிறோம். யவன தேசம் என்பது பல தவறான முடிபுகளைத் தோறுவித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ரோமாபுரி, கிரேக்கம் மற்றும் அலெக்ஸாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவில் ஆண்டோர், அராபியர் ஆகிய அனைவரையும் குறித்தது!

 

இதோ ஜகதீச அய்யர் எழுதிய புராண இந்தியா – 56 தேச சரிதம். பேஸ்புக்கில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதிலுள்ள வரைபடங்கள், மேலும் ஆராய்ச்சி செய்ய உதவும்:–

purana map2

puranic india2

 

puranic india5

puranic india6

 

 

puranic india 8

puranicindia9

puranic india9

puranic india10

puranic india11

 

purana map3

purana map4

purana map6

purana map8

தொடரும்……. (இரண்டாவது பகுதியில் மீதி தேச விவரங்கள் வரும்)

–subam-

 

முஸ்லீம் படைகளை விரட்டிய அர்கால் தேச ராணி! (Post No 2646)

ARKAL RANI (3)

Compiled by london swaminathan

 

Date: 19 March 2016

 

Post No. 2646

 

Time uploaded in London :–  15-14

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நஜருதீன் என்ற மன்னன் டில்லியை ஆண்டு வந்தபொழுது பிரயாகை (இப்பொழுது அதன் பெயர் அலஹாபாத்) அருகிலுள்ள அர்கால் என்னும் பிரதேசத்தை கௌதமன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் டில்லி அரசனுக்குக் கப்பம் கட்ட மறுத்தான். உடனே நஜருதீன், தன் கீழிருந்த டில்லி கவர்னர் தலைமையில் பெரும்படையை அனுப்பினான். ஆனால், கௌதமன் அவர்களைக் கொன்று குவித்தான். டில்லி கவர்னர் படை தோற்றோடியது.

 

கௌதமனின் முன்னோர்களும் மாவீரர்கள்; தோல்வியே கண்டறியாதவர்கள். ஆகையால் குல வழக்கப்படி வெற்றி விருந்து நடத்தினான். நகர மக்கள் அனைவரும் உண்டு மகிழ்ந்து கொண்டாடினர். அன்றைய தினம் பௌர்ணமி. முழு நிலவு ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது.

 

அர்கால் மஹாராணி, அதவது கௌதமனின் மனைவி, ஒரு மஹா பதிவிரதை; தெய்வ பக்தி மிகுந்தவள்; முன்னோர்கள் பின்பற்றிய பௌர்ணமி விரதத்தைக் கடைப்பிடிப்பவள்; சத்திய விரதை; உண்மை விளம்பி. வழக்கம்போல கங்கையில் புனித நீராடி விரதம் அனுஷ்டிக்க எண்ணினாள். ஆனால் கணவனிடம் அனுமதி கேட்டால், போகாதே என்பான். ஏனெனில் இன்னும் எதிரிப்படைகள் கங்கையின் மறு புறத்தில் நிலைகொண்டிருந்தன. மேலும் டில்லியிலிருந்து மேலும் படைகளைப் பெற்று டில்லி கவர்னர் தாக்கக்கூடும். கணவன் சொல்லையும் மீறி எந்தச் செயலையும் செய்யும் பழக்கமும் அவளுக்குக் கிடையாது. ஆகையால் அர்கால் மஹாராணி வேறொரு திட்டம் போட்டாள். தோழிகளுடன், நைஸாக நழுவி, கங்கைக்குப் போய் புனித ஸ்நானம் செய்து, கணவன் நலனுக்கும், நாட்டு மக்கள் நலனுக்கும் விரதம் இருக்க எண்ணினாள்.

நசருத்தீன்

ஒவ்வொரு தோழியும் சந்தடி செய்யமல் விருந்திலிருந்து நழுவி மஹாராணியுடன் கங்கை நதிக்கு வந்தனர். ஒரு ராணி குளிப்பதானால் ரஹசியமாகவா குளிக்கமுடியும்? ராணிக்கே உரிய பரிவாரங்களுடன் ஆரவாரத்துடன் குளித்தாள். இதற்குள் டில்லி கவர்னரின் காதுக்கு இந்தச் செய்தி போய்விட்டது. அவன் தனது மகளை அனுப்பி உளவு விவரங்களச் சேகரித்தான். உண்மை தெரிந்தவுடன் ராணியைப் பிடித்து பணயம் வைத்து பேரம் பேசலாம், கௌதமனை மடக்கிவிடலாம் என்று திட்டமிட்டு, படைகளுடன் வந்தான்.

 

மஹாராணி, இதற்குள் குதிரை மீது புறப்பட்டாள். அவளை விரட்டி வந்த, டில்லிப் படையினர் அவளைச் சுற்றி வளைத்தனர். அவள் தோழிகளின் நடுவே நின்று கவர்னரை நோக்கிக் கூறினாள், “ சீச்சீ! நீ ஒரு ஆண் மகனா அல்லது பேடியா? என் கணவனிடம் தோற்றோடிவிட்டு, தனிமையில் நிற்கும் ஒரு பெண்ணைப் பிடிக்கிறாயே,  இதுதான் உன் வீரமா? நான் ரஜபுத்ர குலத்தில் உதித்தவள்; என் கணவனும் ரஜபுத்ர வீரன். இங்கே கூடியிருக்கும் மக்களில், யாரேனும் ரஜபுத்ரர்கள் இருந்தால், உங்கள் சகோதரியாகிய என்னைக் காப்பாற்றுங்கள்”.

 

இதைக் கேட்டவுடன் அங்கேயிருந்த இந்துக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களில் நிர்பயசந்தன், உபயசந்தன் என்ற இரண்டு வீரர்கள் முன்னுக்கு வந்து தாக்குதலுக்குத் தலைமை வகித்தனர். பெரும் சண்டை நடந்தது. இரு படைகளிலும் சேதம் ஏற்பட்டது. இதற்குள் கௌதமனுக்கும் தகவல் போனது. அவன் பொறுக்கியெடுத்த சில வீரர்களுடன் குதிரையில் விரைந்து வந்து முஸ்லீம் படைகளை ஓட ஓட விரட்டினான்.

 

மன்னன் கௌதமனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உபயசந்தன், மன்னர் குலத்தில் பிறக்காவிடினும், அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்வித்து, ராவ் (ராய= ராஜ) என்ற பட்டத்தைக் கொடுத்தான். ராஜஸ்தான் கிராம மக்கள் இன்றும் இந்த வீர,தீரச் செயல்களைக் கிராமீயப் பாடல்களாகப் பாடி ஆனந்தக் களிப்பு அடைகின்றனர். நிர்பயன், உபயன் ஆகிய இவ்விருவரின் புகழ் ஒரு புறம் பரவியது.மறு புறமோ பெண்ணிடம் ‘வீரம்’ காட்டிய டில்லி மன்னன், டில்லி கவர்னர் ஆகியோரின் இழிசெயல் தூற்றப்பட்டது.

புராதன இந்தியர்களின் சரித்திரம் ஒரு வீர காவியம்!

 

தீரத்திலே படை வீரத்திலே – நெஞ்சில்

ஈரத்திலே உபகாரத்திலே

சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு

தருவதிலே உயர்நாடு – இந்தப்

 

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்

பாரத நாடு – (மஹாகவி சுப்ரமண்ய பாரதி)

1947 vikatan

–சுபம்-

 

 

மூன்று நாழிகை சிம்மாசன யோகம்! (Post No 2639)

3 NAZIKAI THRONE (2)

Written by london swaminathan

 

Date: 17 March 2016

 

Post No. 2639

 

Time uploaded in London :–  6-15 AM

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

HUMAYUN BABAR (2)

மொகலாய அரசர்களுள் ஹூமாயூன் இரண்டாவது அரசராவார். ஹுமாயூன் என்னும் சொல்லுக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள். ஆனால் அவர்தான் மிகவும் துரதிருஷ்டசலியாக இருந்தார். இதற்குக் காரணம் அவரேதான். நல்ல வீரர்; இளகிய மனமுடையவர். ஆனால் சிற்றின்பப் பிரியர். அபினி தின்பதிலும் விருப்பமுடையவர்.

 

அவர் பட்டத்துக்கு வந்த சில நாட்களுக்குள் செர்ஷா என்னும் ஆப்கானிய பட்டாணியர் தலைவன் படையெடுத்து வந்தான். அவனை எதிர்த்து ஹுமாயூன் சென்ற போது அவன் மலைகளில் ஓடி ஒளிந்துகொண்டான்.; ஹுமாயூன் நடந்து, நடந்து சென்று வங்காளம் வரை போய்விட்டார். அங்கே மீண்டும் குடி, கூத்தில் காலத்தைக் கழித்தார்.

 

மழைக்காலம் துவங்கி ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்தது. அந்த நேரத்தில் செர்ஷா, மலைகளிலிருந்து இறங்கி வந்து போர் தொடுத்தான். வங்காளத்துக்கும் டில்லிக்கும் இடையேயுள்ள பாதையை அடைத்து முற்றுகையிட்டான். ஹுமாயூன், வங்களத்திலிருந்து, தலைநகர் டில்லிக்குப் போக முயற்சித்தார். முடியவில்லை. அவரது படைவீரர்களும் அதிகாரிகளும் நோய்வாய்ப்பட்டனர். உடனே செர்ஷாவுடன் சமாதானம் செய்துகொண்டு சில பகுதிகளை அவனுக்குத் தருவதாகச் சொன்னார். உடனே அவர் டில்லிக்குப் போக பாதையைத் திறந்துவிடுவதாக செர்சா வாக்கு கொடுத்தான். அவனை நம்பி எல்லோரும் கங்கைக் கரையில் ஓய்வு எடுத்தனர். அன்றிரவு அவர்கள் மீது பாய்ந்த ஆப்கன் படைகள் பலரையும் கொன்று தீர்த்தன.

 

ஹூமாயூன் உயிர் பிழைக்க வேண்டி முக்கிய அகாரிகளுடன் குதிரை மீது ஏறி கங்கை நதியைக் கடக்க முயன்றார். பலரும் கங்கைப் பிரவாகத்தில் சிக்கி இறந்தனர். ஹூமாயுனும் நதியில் விழுந்து மூழ்கி இறக்கவிருந்த நேரத்தில், தோல் பைகளில் கங்கை ஜலத்தை நிரப்பும் ஒரு நீர்துருத்திக்காரன், இரண்டு தோல் பைகளில் காற்றை நிரப்பி அந்த மிதவையில் நீந்திச் சென்று கொண்டிருந்தான். அவன், ஹுமாயூன் மீது இரக்கப்பட்டு தன் துருத்தியைப் பிடித்துக்கொண்டு நீந்தி வரும்படி கேட்டுக்கொண்டான். ஹுமாயூனும் அப்படியே செய்து கங்கை நதியைக் கடந்து ஆக்ராவுக்கு வந்து சேர்ந்தார்.

humayun-3

உயிர்தப்ப வைத்த உதவிக்கு நன்றிக்கடனாக அவனை மூன்று நாழிகை நேரத்துக்குச் சிம்மாதனத்தில் உட்கார வைத்து மொகலாய சாம்ராஜ்யத்தை ஆள்வதற்கு அனுமதிப்பதாக வாக்குக் கொடுத்தார். ஆக்ரா போய்ச் சேர்ந்தவுடன், அந்த நீர்துருத்திக்காரன், அவரிடம் போய் நின்றான். உடனே அவனை மூன்று நாழிகை நேரத்துக்கு சிம்மாசனத்தில் அமரவைத்தான். அதுமட்டுமல்ல.

 

நீர்துருத்திக்காரன், தன் கொண்டுவந்த தோல்பையை துண்டு துண்டாக நறுக்கி அதில் தன் பெயரை முத்திரையிட்டு, அதை நாணயமாக்கி உற்றாருக்கும் உறவினருக்கும் கொடுத்தான்.அவர்களுக்கு நல்ல வெகுமதிகள் கிடைக்கவும் மன்னரிடம் உதவி நாடினான்.

 

இந்தக் நிகழ்ச்சி முடிந்தபின்னர், ஹூமாயூன், டில்லிக்குச் சென்றார். அங்கே திடீரென்று செர்ஷா தாக்குதல் நடத்தி, ஹுமாயூனை டில்லிக்கு வெளியே துரத்திவிட்டான். ஹூமாயுன், தன் சகோதர்ககளிடம் உதவி கேட்டார். அவர்கள் உபகாரம் செய்யாமல், அபகாரம் செய்து ஹுமாயூனை ஓட ஓட விரட்டினார்கள். அவர் பாரசீகத்துக்குத் தப்பிப் போனார். அங்குள்ள மன்னர், இவனுக்கு அன்பாக உதவிகளைச் செய்தார். அவருடைய படைகளின் உதவியுடன்  காபூல் நகரைப் பிடித்தார்.15 ஆண்டுகளுக்குப் பின்னர் டில்லிக்கு வந்து மீண்டும் ஆட்சியை ஏற்றார். அதற்கு முன்பாகவே செர்ஷாவும் அவருடைய மகனும் இறந்து போனார்கள்.

இதுதான் ஹுமாயுனின் கதை!

ஒரு நாழிகை= 24 நிமிடம்

-சுபம்-

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம் (Post 2636)

owl story

Compiled by london swaminathan

 

Date: 16 March 2016

 

Post No. 2636

 

Time uploaded in London :–  காலை 5-56

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 

கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

 

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

 

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

-சுபம்-

நெப்போலியனின் வயது! (Post No 2560)

napole3

Written by S Nagarajan

 

Date: 21  February 2016

 

Post No. 2560

 

Time uploaded in London :–  6-28 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நெப்போலியனின் வயது!

ச.நாகராஜன்

milan

இத்தாலியில் உள்ள மிலான் நகரைப் பிடிக்க மாபெரும் போரில் நெப்போலியன் ஈடுபட்டிருந்த காலம் அது.

மறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போர் நடக்க இருக்கிறது.

 

 

கமாண்டர் இன் சீஃப் ஆக இருந்த நெப்போலியனை கௌரவிக்கும் வண்ணம் இரவு நேர விருந்தை ஒரு பெரிய மாளிகையில் பணக்காரப் பெண்மணி ஒருவர் அளித்தார்.

 

 

அதில் கலந்து கொள்ள வந்திருந்த நெப்போலியனை கூரிய கேள்விகளால் தொளைத்து எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

மறு நாள் போரைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாவீரனோ கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக ஆனால் ஆழ்ந்த அர்த்தமுடைய வார்த்தைகளால் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

 

 

இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்தப் பெண்மணி குத்தலாக நெப்போலியனை நோக்கி, “அது சரி. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு புகழ் பட்டங்களா உங்களுக்கு? உங்கள் வயது தான் என்ன?” என்று கேட்டாள்.

 

 

உடனே பளீரென்று சுருக்கமாக பதிலளித்தான் நெப்போலியன்: ”அதுவா, உண்மையில் என் வயது இன்று இருபத்தைந்து தான். ஆனால் நாளைக்கோ மி-லான்!” என்று பதிலளித்தான்.

 

 

மறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றி விடுவேன் என்பதைக் தன்னம்பிக்கையுடன் குறிப்பிடுகையில் மி-லான் என்ற வார்த்தையை சிலேடையாக அவன் பயன்படுத்தினான் பிரெஞ்சு மொழியில். மில் என்றால் ஆயிரம் என்று பொருள். ஆன் என்றால் வருடங்கள் என்று பொருள். மிலான் என்ற வார்த்தைக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள். மிலான் நகரை வென்று விட்டால் ஆயிரம் ஆண்டு புகழைப் பெறுவேன் என்று கூறிய மாவீரன் மறு நாள் மிலான் நகரைக் கைப்பற்றி பெரும் புகழை அடைந்தான்.

 

napole2

இத்தாலி போரில் படைவீரர்களை அணிவகுக்க வைத்த போது தனது தந்திரமான போர் முறையால் ஒவ்வொருவரும் எங்கிருந்து எப்படி தாக்குதலை நடத்த வேண்டும் என்று அவன் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குதிரைப்படை வீரன் ஒருவன், “மன்னரே! உங்களிடம் ஒரு நிமிடம் தனியாகப் பேச் அனுமதி வழங்க வேண்டும்” என்று வேண்டினான்.

அவனை அருகில் அழைத்த மாவீரன் “என்ன விஷயம்?” என்று கேட்டான்.

 

 

அந்த வீரன் நெப்போலியனின் ஒவ்வொரு உத்தரவையும் சொல்லி அது எப்படி எதிரிகளை வீழ்த்தி வெற்றியைத் தரப் போகிறது என்பதை புத்திசாலித்தனத்துடன் விளக்கினான்.

“அடப் போக்கிரி! மேலே ஒரு வார்த்தையும் பேசாதே! என் இரகசியம் எல்லாவற்றையும் சொல்லி விடுவாய் போல இருக்கிறதே!” என்று கூறி விட்டு அன்புடன் அவன் உதடுகளில் தன் விரல்களை வைத்து அவனை பேசாமலிருக்கச் செய்தான்.

.

குதிரை வீரன் விடை பெற்றுக் கொண்டு போர்க்களம் சென்றான்.

போர் முடிந்தது, மாபெரும் வெற்றியைப் பெற்ற நெப்போலியன் தன் உதவி தளகர்த்தரிடம் அந்த குதிரை வீரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான்.

 

எங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. போரிலே குண்டடி பட்டு அவன் மாண்டிருக்கக் கூடும்!

 

நெப்போலியன் பெரிதும் வருந்தினான் – மாபெரும் புத்திசாலி வீரனை இழந்து விட்டோமே என்று. அவன் கௌரவிக்கப்பட்டு பதவி உயர்வு பெறுவதற்கு பதில் இந்த பூமியிலிருந்து மேல் உலகத்திற்கு உயர்வு பெற்று விட்டான்!

 

Napoleon on Horseback at the St Bernard Pass by Jacques-Louis David

இத்தாலிய சேனையின் கமாண்டராக இருந்த நெப்போலியன் ஆஸ்திரிய படைகளுக்கு எதிராகக் கடும் போரைத் தொடுத்தான்.

கோரமான போர்! இரண்டு நாட்கள் இடைவிடாமல் கடுமையாகப் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களைப் பார்த்த அவன் சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரத்தில் தன் வீரர்களை நோக்கி, “இன்று இரவு முழுவதும் உங்களுக்கு ஓய்வு. நன்கு இளைப்பாறுங்கள்” என்று கட்டளையிடவே அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் தனது படை பாசறையின் எல்லையில் மட்டும் கூடாரங்களை அமைத்துக் காவல் காக்க உத்தரவிட்டான் அவன்.

இரவு நேரத்தில் எல்லையோரத்தில் இருந்த கூடாரக் காவல் வீரன் இடைவிடாத போரினால் ஏற்பட்ட களைப்பில் தன்னை மறந்து உறங்கி விட்டான்.

 

 

இரவு நேரச் சோதனைக்காக அங்கு வந்த நெப்போலியன் அந்தக் காவல் வீரன் தூங்குவதைப் பார்த்தான்.

 

பேசாமல் அவன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துத் தானே நின்றவாறு காவல் காக்க ஆரம்பித்தான்.

ஒரு மணி நேரம் கழிந்தது. மெதுவாகக் கண் முழித்த அந்த வீரன் அங்கு தன் துப்பாக்கியைக் கையில் ஏந்தி இருப்பது யார் என்று பார்த்தான்.

 

மாமன்னன் நெப்போலியன் காவல் வீரனாக அங்கு இருந்தான்.

“ஐயோ!” என்று அலறிய அவன், “நான் தொலைந்தேன்!” என்று புலம்பினான்.

 

“இல்லை, நண்பனே! உன் களைப்பால் நீ தூங்கி விட்டாய்; ஆனால் முக்கியமான வேலையில் நீ இருக்கிறாய். ஒரு கணம் அசந்தாலும் நாம் தோற்க நேரிடும். பிடி உன் துப்பாக்கியை. கவனமாகக் காவல் வேலையைப் பார்!” என்று சொல்லி விட்டு மெதுவாக நகர்ந்தான் நெப்போலியன்.

o-NAPOLEON-facebook

Napoleon Bonaparte

அந்தக் காவல் வீரனின் கண்கள் கசிந்தன.

ஒரு உண்மையான தலைவனாக இருந்ததாலேயே உலக்ப் புகழ் பெற்ற வீரனாக அவன் மிளிர்ந்தான் என்பதற்கு இதைப் போன்ற ஏராள்மான சம்பவங்கள் அவன் வாழ்வில் உள்ளன!

 

********

 

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சுவையான வரலாறு (Post No. 2526)

IMG_2380

Research Article written by london swaminathan

Post No. 2526

Date: 10th February 2016

Time uploaded in London  பகல் 12-07

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2253

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பற்றிய நாலாவது கட்டுரை இது. முதல் மூன்று கட்டுரைகள் கடந்த 3 நாட்களில் இங்கே வெளியிடப்பட்டன.

 

சுமார் 40,000 முதல் 50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் இங்கே குடியேறியதாக இப்போதைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மற்றொரு ஆய்வு, இந்தியர்கள் இங்கே 5000 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறும். ஆனால் இத்தகைய ஆய்வுகளை அப்படியே நம்பிவிடக்கூடாது. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இதை மறுத்து வேறு ஒரு தகவல் வரும்!

 

20, 30 ஆண்டுகளுக்கு முன் தினமணிச் சுடரில் பிலோ இருதயநாத் என்பவர் எழுதிய இந்தியப் பழங்குடி மக்கள் வரலாற்றையும், மஞ்சரியில் மாதம் தோறும் வெளியான பழங்குடி மக்களின் வரலாற்றையும் படித்து பேப்பர் கட்டிங் சேகரித்து வைத்துள்ள எனக்கு ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிகம் புதுமை இருப்பதாகத் தெரியவில்லை.

 

ஒவ்வொரு இன மக்களும் பிறப்பு, இறப்பு, ஆவிகள், திருமணம், தொடக்கூடாதவை, தீட்டு, இசை, நடனம் ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் பல விநோதக் கொள்கைகளையுடவர்களாய் இருப்பார்கள். இந்தியப் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் இந்துமதத்தின் தாக்கமும், சம்ஸ்கிருத மொழியின் தாக்கமும் ஆழமாகவே தெரிகிறது. இப்போது கோண்ட்வானா லாண்ட் என்று சொல்லப் பாடும் சொல்லே, காண்டவ வனம் என்பதன் மரூஉ என்பதையும் “கோண்டு”கள் என்போர் அர்ஜுனனும், கிருஷ்ணனும் எரித்த “காண்ட”வ வன மக்கள் என்பதையும் நான் முன்னரே என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பற்றி தமிழில் அதிக விஷயங்கள் கிடைக்காததால், சிட்னி நகர ஆஸ்திரேலிய மியூசியத்தில் நான் சேகரித்த விஷயங்களை மொழிபெயர்த்துத் தருகிறேன்.

IMG_2450

250 மொழிகள், 250 குழுழுக்கள்

ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் ஒரே மொழியைப் பேசவில்லை. 250 மொழிகளையும், கிளை மொழிகளையும் பேசுகின்றனர். கடல் என்பதற்குக் கூட ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல்! ஏன் இவ்வளவு மொழிகள் வந்தன என்பது ஆச்சரியமான விஷயமே. அருகிலுள்ள நியூகினி தீவுகளில் 750 மொழிகள் உள்ளன. மொழியியலாரின் கொளகைகளை எல்லாம் பொய்மையாக்கிவிடும் நிலவரம் இது.

இதே போல ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் அனைவரும் ஒரே அணி அல்ல. அவர்களிடையே 250 பிரிவுகள் உண்டு.

ஒவ்வொருவரும் தனது இடத்தை நாடு என்றும், அதிலுள்ள குழு எல்லாம் ஒரே இனம் என்றும் கருதுவர். ஆயினும் ஒரு குழு, மற்றொரு குழுவில் தலையிடாது. மேலும் அத்தகையோர் போற்றும் புனிதமான மிருகத்தை மற்றொரு குழுவினர் புசிக்கமாட்டார்கள். அவர்களிடையே, பல பொதுவான அம்சங்களும் இருக்கின்றன.

IMG_2258

முன்னொரு காலத்தில்

“இப்பொழுது ஆஸ்திரேலியாவில் காணப்படும் பிராணிகள் எல்லாம், மிகப் பழைய காலத்தில், கடலுக்கு அப்பாலுள்ள வேறு ஒரு பிரதேசத்தில் வசித்தன. அப்போது அவை எல்லாம் மனித உருவில் இருந்தன. அவை எல்லாம் ஒரு நாள் ஒன்று கூடி நமக்கு நல்ல வேட்டை நிலம் வேண்டும் என்று முடிவு செய்து ஒரு படகில் ஏறி இங்கு (ஆஸ்திரேலியாவுக்கு) வந்தன” என்பது பழங்குடியினர் கூறும் கதை.

 

முதல் குடியேறிகள்

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் தாழ்வாக இருந்தது. ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குப் படகுகள் மூலம் போவது எளிதாக இருந்தது. அவர்கள் அக்காலத்தில் குடியேறிய ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளை இப்பொழுது கடல் கொண்டுவிட்டது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் பூர்வ கதைகளும் இதையே சொல்லுகின்றன. தாங்கள் படகுகள் மூலம் வேறு  ஒரு இடத்திலிருந்து வந்ததாகவும், மழை மேகங்களைப் பின்தொடர்ந்து உள்நாட்டிற்குள் சென்றதாகவும் அவர்கள் கதைகள் சொல்லுவர். உலகில் இந்திய இலக்கியங்கள் மட்டுமே தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறுவதில்லை. வேறு சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் தங்களை வந்தேறு குடிகள் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். உலகின் நாகரீக தோற்றத்துக்கு இந்தியாவே மூல முதல்வன் என்பதை நமது இதிஹாச புராணங்கள் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றன. நிற்க

 

சுமார் 40000 ஆண்டுகளில், இவர்கள் ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் பரவிவிட்டனர். இந்தியர்கள் 56 தேசங்கள் வைத்து ஆண்டது போல இவர்கள் 250 “நாடு”களை உருவாக்கினர். 1700-ம் ஆண்டுகளில், இந்தோநேஷியத் தீவுகளிலிருந்து பலர் மீன் வியாபாரத்தின் பொருட்டு இங்கேவந்தனர். அதுதான், ஆஸ்திரேலியாவின் முதல் வெளி உலகத் தொடர்பு. பின்னர் கேப்டன் குக் முதலான வெள்ளையர்கள் வந்தனர்.

IMG_2259

1788ல் முதல் காலனி

உலகில் வடபகுதியில் நிலப்பரப்பு இருப்பதுபோலவே தென் பகுதியிலும் நிலப்பரப்பு  இருக்க வேண்டும், அப்படியில்லாவிடில் பூமியின் சமநிலை கெட்டு அது ஆட்டம் காணும் என்று கிரேக்க தத்துவ ஞானிகள் ஊகித்தனர். (இந்துக்கள், கீழ் ஏழு பாதாள லோகங்களில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றைச் சேர்த்திருந்தது வெள்ளைக்காரர்களுக்கு தெரியாது. எனது மாயா- நாகர் தொடர்பு கட்டுரைகளைப் படிப்போருக்கு இது விளங்கும்). பின்னர் 1570 ஆம் ஆண்டில் ஆர்டீலியஸ் என்பவர் டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று தனது வரைபடத்தில் ஆஸ்திரேலியாவை வரைந்தார். இதைத் தொடர்ந்து டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனியார் அங்கு போய் நியூ ஹாலந்து எனப் பெயரிட்டு, அது ஒன்றுமில்லாத இடம் என்று திரும்பிப் போய்விட்டர்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஜோசப் பாங்க்ஸ் என்பவருடன் லெப்டினண்ட் கேப்டன் குக் 1770 ஆம் ஆண்டில் வந்தார். பாங்ஸ் நிறைய படங்களை வரைந்தார். பின்னர் நியூ சவுத் வேல்ஸில் குடியேறி வசிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். 1788ஆம் ஆண்டில் ஒரு கப்பல் நிறைய ஆட்கள் வந்து ஆஸ்திரேலியாவை ஆக்ரமிக்கத் தொடங்கினர். ஆனால் முதலில் இங்கு அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள். வெள்ளைக்காரர்கள், நமது சுதந்திரப் போராட்டவீரர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பியதுபோல இங்கு பலரை அனுப்பினர்.

IMG_9059

கேடயங்கள்

ஒவ்வொரு குழுவும் ஒருவகை பாணியில் கேடயங்களைத் தயாரித்தனர். இவை பாதுக்காப்புக்கு மட்டுமின்றி கலாசார சின்னங்களாகவும் விளங்கும். ஒவ்வொரு இளைஞரும் அந்தக் கேடயத்தில் ஒரு புது வடிவு செய்து தனது தனித்துவத்தையும் காட்டுவார். கேப்டன் குக் வந்த போது அவரது பீரங்கி, துப்பாக்கிகளுக்கு , பழங்குடி மக்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. தங்கள் கேடயங்களைப் போட்டுவிட்டு காட்டிற்குள் சென்று மறைந்தனர். கேப்டன் குக் எடுத்துவந்த இந்த கேடயங்களே முதல் நினைவுப் பொருட்களாகும். இப்பொழுது ஆஸ்திரேலிய மியூசியத்தில் நூற்றுக்கணக்கான கேடயங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

 

வெள்ளையர்களுக்கு உதவிய இருவர்

ஆஸ்திரேலியாவை காலனியாக்க வந்த வெள்ளையர்களுக்கு இரண்டு பழங்குடி இன மக்கள் உதவினர். ஒருவர் பெயர் வைலி. 1840 ஆம் ஆண்டில் எட்வர்ட் ஜான் அய்ர் என்பவருக்கு உதவினார். பின்னர் இவருடன் வந்த வேறு இரு பழங்குடி இனத்தவர் (யார்ரி, ஜோயி) அவருடன் வந்த ஜான் பாக்ஸ்டர் என்பவரைக் கொன்றுவிட்டனர். வைலி மட்டும் இறுதிவரை அய்ருக்கு உதவி பின்னர் அரசு பென்ஷனும் பெற்றார். ஆஸ்திரேலிய கண்ட ஆராய்ச்சிகள் இப்படிப் பல படுகொலைகள் நடக்கக் காரணமாயின.

ஜாக்கி ஜாக்கி என்று புனைப்பெயருடைய கல்மாரா என்ற பழங்குடி இனத்தவர் எட்மண்ட் கென்னடி என்பவருக்கு உதவினார். ஆனால் ஒரு பழங்குடி இனக் குழு கென்னைடியை ஈட்டியால் துளைத்துக் கொன்றுவிட்டனர். கல்மாரா ஓடிச் சென்று, கப்பலில் இருந்த வெள்ளையரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு கென்னடியின் சடலத்தை மீட்க மீண்டும் புதர்களுக்குத் திரும்பிவந்தார். இதனிடையே அந்த ஆராய்ச்சிக் குழுவில் இருந்த பலர் காணாமற்போயினர். இரண்டுபேர் தவிர அனைவரும் மறைந்தனர். இப்படி ஐரோப்பியர்கள் சென்றவிடம் எல்லாம்  இரத்தக் களரியுடந்தான் வரலாறு துவங்கும். பின்னர் அதைக் காரணம் காட்டி, குருவி சுடுவதுபோல, பழங்குடி இனமக்களைச் சுட்டுக்கொல்லுவர். வட அமெரிக்க, தென் அமெரிக்க வரலாற்றைப் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்.

IMG_2382

 

IMG_9065

படங்கள்: கேடயங்கள் (லண்டன் சுவாமிநாதன்)

—தொடரும்

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே இந்துமத கருத்துக்கள் (Post No. 2520)

IMG_2255

Research Article written by london swaminathan

Post No. 2520

Date: 8th February 2016

Time uploaded in London 9-18 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2338

 

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது – “ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தமிழர்களா?” – என்ற தலைப்பில். அதைப் படித்துவிட்டு, இந்தக் கட்டுரையைப் படிப்பது நலம் பயக்கும்.

 

“பிறந்தனவெல்லாம் இறப்பது உறுதி

இறந்தனவெல்லாம் பிறப்பது உறுதி” – என்பது இந்து மதத்தின் தலையாய கருத்து. “புனரபி ஜனனம், புனரபி மரணம்,புனரபி ஜனனி ஜடரே சயனம்” – என்று இதையே ஆதி சங்கரர் அழகாகப் பாடி வைத்தார். அதற்கெல்லாம் முன்னதாக காலத்தால் அழியாத பகவத் கீதையில் கண்ண பிரானும், “ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச (பகவத் கீதை 2-27) – என்று சொல்லிவைத்தார். மறு பிறப்பில் நம்பிக்கை இலாதோருக்குக் கூட பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி – என்பது தெரிந்த விஷயமே. ஆனால் இதை எழுத்தில் வடிக்கும்போதுதான், ஒரு இனம் இதுபற்றி எவ்வளவு கவலைப் படுகிறது என்பது தெரியவரும். நான் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய மியூசியத்தில், பழங்குடி இனத்தின் பிரிவுக்குச் சென்றபோது, அவர்களுடைய நம்பிக்கைகளைப் படங்களுடன் போர்டு, போர்டாக எழுதி வைத்துள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் ஒரு போர்டின் வாசகம் பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி. இதற்கும் மேலே அவர்கள் எழுதிய விஷயமும் இந்து மதக் கருத்தே! இறந்த பின்னர் ஆவிகள் மேலுலகம் செல்லும், அதற்குச் சரியான பாதை காட்ட வேண்டும் என்பதாகும்.

ஒருவர் வீட்டில் மரணம் அடைந்த பின்னர், பிராமண புரோகிதர்கள் ஓதும் வேத மந்திரங்களும் இதையே சொல்கிறது. இறந்தவரின் ஆவி நல்ல நிலையை அடைய பல கடவுளர்களை வேண்டும் மந்திரங்கள் அவை. இதற்கும் மேலாக இறப்போர் பற்றி மேலும் ஒரு ஒற்றுமையையும் கண்டேன்.

 

பழங்குடி மக்கள், பல முகமூடிகளை அணிந்து நடனம் ஆடிவிட்டு, இறந்தோர் நினைவாக கம்பங்களை நட்டு வைக்கின்றனர். ஆதி காலத்தில் தமிழர்களும் நடு கல் நட்டு இறந்தோரை வழிபட்டனர். இந்தச் செய்தி நிறைய சங்கத் தமிழ் பாடல்களில் உள. கர்நாடகத்தில் மாஸ்தி கல் என்றும் ராஜஸ்தானில் கை சின்னங்களுடன் நினைவுச் சின்னங்களும் வைத்தனர். சாது சந்யாசிகள் இறந்தால் அவர்கள் சமாதிக்கு மேல் சிவலிங்கம் அல்லது, துளசி மாடம் எழுப்பினர். பிராமணர்கள், இறந்தோர் நினைவாக ஒரு கல்லை தோட்டத்தில் புதைத்து வைப்பர். இப்போது இது எல்லாம் அருகிவிட்டது. ஆக ஆதி காலத்தில் எல்லோரும் பின்பற்றிய வழக்கங்கள் பின்னர் கூனிக் குறுகி அறவே மறைந்துவிட்டன என்று கொள்ளல் பொருந்தும்.

IMG_2399

இறந்தவர்களைப் போற்றி வழிபடும் வழக்கம் இந்துமத்தில் உள்ளது போல வேறு எந்த மத்திலுமில்லை. தென்புலத்தாரை தினமும் வழிபடும் ஐவேள்வி (பஞ்ச யக்ஞம்) பற்றி வள்ளுவனும், மனுவும் பாடி வைத்தனர். இது இந்துக்கள் தினமும் செய்வது நின்று இப்பொழுது மாவாசை தர்ப்பணம் என்று மாதமொரு சடங்காக மலிந்துவிட்டது.

IMG_2331

சம்ஸ்கிருதச் சொற்கள்

ஆதி மக்களிடையே பல சம்ஸ்கிருத சொற்களும், தமிழ்ச் சொற்களும் புழங்குவது அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்களே என்பதைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள்வெளியிலிருந்து வந்ததாகச் சொல்லும் வாசகமும் மியூசியத்திலுள்ளது. நேற்று அணங்கு என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கண்டோம். மற்ரஒரு மக்கள் பெயர் துர்கா இன மக்கள். இறந்தோர் நினைவாக எழுப்பும் கம்பங்களை துங்கம் என்பர். இது வடமொழிச் சொல். உயரமான, உஅய்ர்த்தப் பட்ட என்பது இதன் பொருள்.

 

இப்படி நிறைய சம்ஸ்கிருதச் சொற்களை – ஆனால் மாறுபட்ட பொருளுடன் வழங்குவதைக் காணலாம்.

 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி….

பாரத தேசம் பற்றிப் பாரதியார் பாடினார்:-

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே (அவரும் கூட இந்தப் பாட்டில் ‘துங்கம்’ என்ற சொல்லைப் பயிலுகிறார்!)

 

இப்படிப்பட்ட தேசபக்தப் பாடல்கள் அதர்வ வேதத்தில் உள்ளன. பூ சூக்தம் என்ற பாடலில் பூமியை மிக விரிவாகப் போற்றிப் புகழ்கின்றனர் வேத கால ரிஷிகள். ஆஸி. பழங்குடி மக்களும் பூமி பற்றி இதே கருத்தைக் கொண்டுள்ளனர். இயற்கைச் சக்திகளை அவர்களும் போற்றுகின்றனர். நாடு, மண், காற்று, மரம் ஆகியவற்றை உடலின் உறுப்பாக உணருகின்றனர்.

தைத்ரீய ஆரண்யகத்தில் உள்ள வேத மந்திரம் சொல்கிறது (மது வாதா ருதாயதே….)

“காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிமையாகப் பெருக்கெடுத்து ஓடட்டும். செடி, கொடிகள் இனிமை அளிப்பவையாக இர்க்கட்டும். வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாய் இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் மதுரமான பாலையளிக்கட்டும் – தைத்ரீய ஆரண்யகம்

 

IMG_2327

எனைத்தானும் நல்லவை கேட்க…

மூத்தோர் சொல் அமிர்தம்- என்பது தமிழ்ப் பொன்மொழி. ஏதேனும் கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்கள் (திருக்குறள் 416) என்கிறார் வள்ளுவர். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர். இவையெல்லாம் வேதத்திலுளது. எல்லா இடங்களிருந்தும் எங்ளுக்கு நல்ல கருத்துக்கள் வரட்டுமென்று உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் (1-89-1) கூறுகின்றது.

ஆஸி. பழங்குடி மக்க: இதை ‘இங்காரா’ என்பர். நாங்கள் பிறந்த அன்றே எங்களுக்கு ‘இங்காரா’வைச் சொல்லித்தந்துவிட்டனர். நாங்கள் முதியோர் சொல்லைக் கேட்போம். நாலு பேர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்போம். எங்களுடைய செயல்கள் உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிவோம். அறிவு, ஞானம், விவேகம் அடையவும் உயிர் பிழைக்கவும் ஒரே பாதை ‘இங்காரா’தான். எங்கள் முன்னோர்கள் அறிவியல், தொழில்நுட்ப அறிவின் உறைவிடம்”

 

இது போன்ற சிந்தனை ஒரு குழுவின் மத்தியில் தோன்றவேண்டுமானால் அவர்கள் பக்குவம் அடைந்த, முன்னேறிய ஒரு இனம் என்றே நாம் கருதுவோம். இவை அனைத்தும் வேதத்திலும் உள்ளது.

IMG_2282

வான சாத்திர நிபுணர்கள்

ஆஸி. பழங்குடி மக்களின் பூகோள அறிவு அபாரமானது. அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மூலை, முடுக்கெல்லாம் தெரியும். அவர்கள் உதவியுடந்தான் வெள்ளைக்கார குடியேற்றக்காரர்கள் உட்பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் வானில் இயங்கும் கிரகங்கள், நட்சத்திரங்களை நன்கு அறிவர். அவைகளின் இயக்கத்தைக் கணகிட்டே அவர்கள் காலத்தை அளந்தனர். பெரிய வட்டக் கற்கள் அமைத்து காலம் முதலியவற்றை அளந்தனர். வேதங்களிலும் ஏராளமான வானியல் குறிப்புகள் உண்டு. அவற்றைக் கொண்டே ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும் ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார்கள். பழங்குடியினர் நட்சத்திரங்கள் பற்றி கதைகள் சொல்லி, அவைகளுக்குப் பெயரிட்டது போல நாமும் துருவன் , அகஸ்தியன், சப்த ரிஷிக்கள், சந்திரனின் 27 மனைவியர், திரிசங்கு நட்சத்திரக் கூட்டம் என்றெல்லாம் பெயரிட்டோம். இப்படிக் கதை சொன்னால் பாமரர்களும் நினைவு வைத்துக் கொண்டு, அடர்ந்த காடுகளிலும், பாலைவனத்திலும் எது வடதிசை, எது தென் திசை என்று இரவு நேரத்தில் வழி கண்டுபிடித்துவிடுவார்கள். ஆஸி. பழங்குடி மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் தெரியாத இடமே இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அங்கே வெள்ளைக் காரர்கள் வந்தனர். பழங்குடியினரோ 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் வழியாக அங்கே சென்று, சிறப்புடன் வாழ்ந்துள்ளனர்.

ஆஸி. பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் விரிவடைய, விரிவடைய அவர்களுடைய அபூர்வ திறமைகளை உலகம் உணரத் துவங்கியுள்ளது.

 

IMG_2403

 

 

IMG_2398

தொடரும்………………………………..

 

 

 

 

மிதிலை தந்த செல்வம்! (Post No.2519)

IMG_2695

மிதிலை தந்த செல்வம்! (Post No.2519) 

 

Written by S Nagarajan

 

Date: 8 February 2016

 

Post No. 2519

 

Time uploaded in London :–  5-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

ஹிந்து சரித்திர பொற்காலம்

 

மிதிலை தந்த செல்வம்!

 

ச.நாகராஜன்

 

 IMG_2695 (2)

ஹிந்து சரித்திரத்தை எழுத வேண்டுமெனில் பல கோடானு கோடி பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். அதில் ஒரு முக்கிய பங்கை மிதிலாபுரி வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

அங்கல்லவா சீதா தேவி தோன்றி வாழ்ந்து வந்தாள். இராமாயண நாயகியின் சரிதம் ‘சீதாயா சரிதம் மஹத் – சீதையின் மஹத்தான சரிதம் – என்று கூறி புகழப்படுகிறது.

 

விதேஹம் என்று இன்னொரு பெயரும் மிதிலைக்கு உண்டு. அதன் மன்னனான ஜனக புத்ரிக்கு வைதேஹி  என்ற பெயர் இதனால் தான் ஏற்பட்டது. மிதிலா புத்ரி என்பதால்  மைதிலி!

 

இந்த விதேஹம் பற்றி உலகின் மிகப் பண்டைய நூலான சதபத ப்ராஹ்மணம் கூறுகிறது. இங்கு சதாநீரா நதி ஓடியதாக அது தெரிவிக்கிறது. இந்த நதியே கோசல நாட்டையும் மிதிலாபுரியையும் பிரிக்கும் எல்லைக் கோடாகத் திகழ்ந்தது. சதாநீரா என்று பழைய காலத்தில் வழங்கப்பட்ட இந்த நதியை இன்று நாம் கண்டகி நதி என்று குறிப்பிடுகிறோம். நேபாளத்திலிருந்து பாய்ந்தோடி வரும் இந்த நதி கங்கையைச் சேர்கிறது. இதைப் பற்றிய அற்புதக் கதைகள் கேட்கத் தெவிட்டாதவை.

 

 

விதேஹம் பல ராஜ்யங்களை உள்ளடக்கி இருந்தது. வைசாலி அதில் ஒன்று. இங்கு தான் புத்த பிரான் பிறந்தார்.

ஆக மிதிலைச் செல்வமான மைதிலி – சீதா பிராட்டி இராமாயணத்தைத் தர கௌதம புத்தரோ ஒரு புதிய வழிகாட்டுதலை உலகிற்குத் தந்திருக்கிறார். அதற்கான இடமும் இந்த அழகிய பிராந்தியம் தான்!

 

 

மிதிலையும் அதன் அருகில் உள்ள வைசாலியும் சோனா மற்றும் கங்கை நதியின் அருகில் உள்ள ராஜ்யங்களாக வரலாறு விளக்குகிறது!

 

 

இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமனையும் லட்சுமணனையும் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்கையில் நான்கு நாட்கள் நடைப் பயண்மாக நடந்து விதேகத்தை அடைந்தார் என்ற குறிப்பு வருகிறது. இடையில் ஒரு நாள் இரவு அவர்கள் வழியில் இளைப்பாறுகின்றனர்.

ஆக, இவை இரண்டும் மிக அருகில் இருந்த நகரங்கள் என்பது தெளிவு.

 rama rama rama

மிதிலையைச் சேர்ந்த அந்தணர்களை மைதிலி பிராம்மணர்கள் என்று கூறுவது வழக்கம்.

இங்கு யாகங்களும் பண்டித சபை விவாதங்களும் அன்றாடம் நடை பெற்று வந்திருக்கின்றன.

 

சடங்குகளையும் யாகங்களையும் எதிர்த்த புத்தர் தன் கடுமையான பிரச்சாரத்தை இங்கு மேற்கொண்டது இயல்பே.

ஹிந்து தத்துவம் தழைத்து ஓங்கி இருந்த இடம் விதேஹம்.

மஹாபாரதம் விளக்கும் சுகதேவர் மற்றும் மைதில தர்மவியாதன் கதையை நாம் அறிந்து பிரமிக்கிறோம்.

மீமாம்சை என்னும் தர்ம சாஸ்திர பிரிவைச் சொல்பவர்களை மீமாம்ஸகாரிகா என்பர். அப்படிப்பட்ட மீமாம்ச சாஸ்திர நிபுணர்கள் 1400 பேர்கள் ஒரே சமயத்தில் இங்கு இருந்துள்ளர்.

இந்த 1400ன பேரை வைத்து ராஜா பைரவசிம்மன் என்னும் ஒரு மன்னன் யாகம் ஒன்றை நடத்தியுள்ளான். இதை 15ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

புகழோங்கிய பண்டைய நகரம் இன்று … இருக்கிறது.

இன்றும் இருக்கிறது. அவ்வளவு தான்!

 

 

ஹிந்து சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால் உத்வேகம் எழும். பழைய தத்துவ தரிசனங்கள் நமக்குப் புலப்படும். ஆனால் இன்றைய பீஹார் நிலையோ சொல்லவே தேவை இல்லை.

 

பழைய காலத்தில் சுமார் 1255 சதுர மைல் பரப்பைக் கொண்டிருந்த மிதிலாபுரி இன்று பீஹாரிலுள்ள 38 மாவட்டங்களில் சில மாவட்டங்களில் அடங்கிக் கிடக்கிறது.

மதுபானி, தர்பங்கா,சமஸ்திபூர், வைசாலி, முஸாபிர்பூர்ம் சம்பாரன், மொங்கைர், ஸஹர்ஸா, பூர்னியா ஆகிய மாவட்டங்களில் அடங்கி உள்ள பண்டைய பிரம்மாண்டமான ராஜ்யம் பழைய கதையை ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு  இதிஹாஸ சொல்லிலும் இங்கு சொல்கிறது.

 

 

ஹிந்து பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு தேசீய உணர்வு செகுலர் அடிப்படையில் அழிக்கப்பட்டு வந்தாலும் ஒரு பழம் பெரும் வரலாற்றைப் போற்றிப் பாதுகாக்கவாவது இந்த மிதிலாபுரியையும் அதன் செல்வங்களையும் பாதுகாக்கலாம் அல்லவா! காலம் கருணை செய்ய வேண்டும்; ஹிந்துக்கள் புகழோங்கிய பண்டைய நாளின் வீரத்தையும், தத்துவதர்சனத்தையும், சீலத்தையும் மீண்டும் கொண்டு எழ வேண்டும்.

 

 

அயோத்தியின் அருகில் உள்ள … 

மிதிலாபுரி இதற்கு அஸ்திவாரமாக அமையுமா?

*******

 

 

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 7 February 2016

 

Post No. 2517

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2250

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.

 

1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!

 

என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.

 

எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!

 

ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?

ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!

அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.

uluru2

ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.

 

அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை

 

அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.

 

நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.

 

இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!

 

நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!

IMG_2336

மூத்தோர் சொல் அமிர்தம்

 

பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும்  மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.

 

ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.

 

பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.

 

ஆராய்ச்சிக் கட்டுரை தொடரும்………….

 

–சுபம்–