என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2 (Post No.4860)

Date: MARCH 29, 2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4860

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2

 

ச.நாகராஜன்

 

இந்தியா காத்து வரும் மொழி தான் சம்ஸ்கிருதம்.என்றாலும் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதையும் அது கவர்ந்து வந்திருக்கிறது!

அது தரும் ஞானம் மேற்கு நாடுகளைக் கவர்ந்துள்ளது என்பதை யோகா, ஆயுர்வேத மருந்துகள், தியான உத்திகள், நடைமுறை தத்துவங்களாகத் திகழும் ஹிந்து மதம், புத்த மதம் ஆகியவற்றின் மூலமாக உணரலாம்.

ஆங்காங்குள்ள இடங்களில் இருக்கும் பாரம்பரியங்களையும், மதங்களையும் அது எதிர்ப்பதில்லை; அவற்றுடன் முரண்படுவதில்லை! மாறாக அவற்றை ஆதரிக்கிறது. விரிவாக்குகிறது.

மேலும் அதிகப் பொலிவுடன் அவற்றைத் திகழ வைக்கிறது!

சம்ஸ்கிருதத்தின் துல்லியம் அகர வரிசையில் ஒலிகள் எப்படி அமைக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிறது என்ற இணையற்ற விவரத்திலிருந்தே உருப்பெறுகிறது.

வாய், மூக்கு,தொண்டை முதலிய இடங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒலி எழும்புவதை அது விவரிக்கிறது. அவை மாறுவதே இல்லை!

ஆகவே தான் சம்ஸ்கிருதத்தின் எழுத்துக்கள் ‘அக்ஷரங்கள்’ – அழிக்கப்பட முடியாதவை – என்று வழங்கப்படுகிறது.

ஆக வாயிலுள்ள ஐந்து இடங்கள் எல்லா அக்ஷரங்களையும் எந்த இடத்திலிருந்து உருவாக்குகிறது என்பதானது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சில மன மற்றும் உடல் முயற்சிகள் மூலம் இவை நன்கு முறைப்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

A,b,c,d,e,f,g  என்ற ஆங்கில அகர வரிசையில் இதை உச்சரித்த பின் என்ன அமைப்பு (structure) இதில் இருக்கிறது?

ஏதேனும் தெரிகிறதா பாருங்கள்?! ஒரு அமைப்பும்   இல்லை.

A -இல் ஆரம்பித்து Z  வரை போகிறது. அவ்வளவு தான்!

மாறாக சம்ஸ்கிருதத்தில் உள்ள அழகிய அமைப்பு (structure) ஆங்கிலத்தில் இல்லை.

சரி,இப்போது எழும் கேள்வி, என் குழந்தை ஏற்கனவே இருக்கும் பாடச் சுமை போதாது என்று இன்னுமொரு மொழியை ஏன் கற்க வேண்டும் என்பது தான்!

இது அவர்களுக்கு எந்த விதத்தில் பயன்படும்?

பதில் இது தான்:

சம்ஸ்கிருதத்தின் குணாதிசயங்களே உங்கள் குழந்தையின் குணாதிசயங்களாக மாறும். அதாவது உங்கள் குழந்தையின் மனமும் இதயமும் அழகியதாக ஆகி விடும்!

துல்லியமானதாக (precise) ஆகி விடும்!

நம்பகமானதாக (reliable) ஆகி விடும்! எதையும் கூர்ந்து கவனிக்கும் சக்தியை அதனுடைய துல்லியத்தினால் சம்ஸ்கிருதம் அதைக் கற்கும் உங்கள் குழந்தைக்குத் தானாகவே கற்பித்து விடும்!

துல்லியம் இருக்குமானால் உயரச் செல்லுதல் என்பது ஏற்படும் என்பது அனுபவம்!

 

அது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கூட அதன் இனிய அனுபவத்தை உணர முடியும். இசை போல அது உங்களை உயர்த்தும்.

அது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், பகுதிகளிலும் வாழ்நாள் முழுவதும் உதவும்.

இது மற்ற எல்லா குழந்தைகளையும் ஒப்பிடும் போது உங்கள் குழந்தைக்கு மிகுந்த பயனை நல்கும்.

சம்ஸ்கிருதத்தைக் கற்பதன் மூலமாக இதர மொழிகளைக் கற்பது சுலபமாக ஆகிறது.

சம்ஸ்கிருதத்தில் உள்ள சில இலக்கணங்களை ஐரிஷ் அல்லது கிரேக்கம்,லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரதிபலிக்கிறது.

இந்த மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருத இலக்கணத்தின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது.

சம்ஸ்கிருதம் கற்பதானது முறையான ஒரு மொழியைக் கற்கிறோம் என்பதாகிறது. அதன் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் அது உங்கள் குழந்தைகளை முன்னேற்றுகிறது – வாழ்நாள் முழுவதும்!

அதை அவர்களே உங்களுக்குச் சொல்வார்கள்.

அவர்கள் நன்கு பேச ஆரம்பிப்பார்கள். யார் நன்கு பேச முடியுமோ அவர்களே உலகை வழி நடத்திச் செல்கின்றனர்.

பாரக் ஒபாமா நன்கு பேசுவதால் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

மஹாத்மா காந்தி தனது சீரான சொற்களால் பெருந்திரளான கூட்டத்தைக் கவர்ந்தார்.

தெரஸா எளிய சொற்களால் அனைவரையும் உயர்த்துகிறார்.

பெரும் ஆசான்களின் மொழியானது நமக்குப் பழமையான காலத்திலிருந்து கிடைத்துள்ள ஒன்று. ஆனால் அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ப்ளேட்டோவின் வார்த்தைகளின் மூலம் அவரது அருமையான மனத்தின் மூலம் புக முடிகிறது.

உங்கள் மகனோ மகளோ துல்லியமான மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த முடியுமானால் அவர்களே எதிர்காலத் தலைமுறையின் தலைவர்களாக ஆகி விடுவார்கள்.

வேதம், கீதை ஆகியவற்றின் மூலமாக சம்ஸ்கிருதம் அனைத்தையும் உள்ளடக்கிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler yeats) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உபநிடதங்கள் உலகம் முழுமைக்கும் பொதுவான மத உணர்வுகளை கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குத் தந்து வருகிறது!

மொழி பெயர்ப்பின் மூலம் இவற்றைப் படிப்பது மூலத்தைப் படிப்பதற்கு ஈடாகாது.

ஆகவே அவற்றை மூலத்தில் உள்ள மொழியிலேயே படிக்க வேண்டும்.

மதச் சச்சரவுகள் பெருகி வரும் இக்காலத்தில் உலக முழுமைக்கும் பொதுவான மத நோக்கத்தைத் தரும் ஞானம் நல்கும் மதத்தை நாம் பெற வேண்டும்.

பயங்கரவாதம் தவறாக மதத்தைப் புரிந்து கொள்ளும் அரைகுறை மதக் கருத்துக்களால் ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் போற்றும் ஆன்மீக ஞானியான ஸ்வாமி விவேகானந்தர். சிகாகோவில் 1893இல்  சர்வ மத மகாநாட்டில நிகழ்த்திய உரையில் கூறியது இது:-

You can put a mass of knowledge into the world, but that will not do it much good. There must come culture into the blood. We all know in modern times of nations which have masses of knowledge, but what of them? They are like tigers, they are like savages, because culture is not there.

Knowledge is only skin-deep, as civilisation is, and a little scratch brings out the old savage. Such things happen; this is the danger. Teach the masses in the vernaculars, give them ideas; they will get information, but something more is necessary; give them culture.

 

சம்ஸ்கிருதம் உங்கள் குழந்தைக்கு உலகம் முழுமைக்குமான, சீரான லயத்துடன் கூடிய உண்மைகளை வெளிப்படுத்த உதவுகிறது!

 

***

தொடரும்

 

 

 

 

 

 

 

 

செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்! (Post No.4858)

\’WRITTEN by London Swaminathan 

 

Date: 28 MARCH 2018

 

Time uploaded in London –  7-51 am

 

Post No. 4858

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன், பெர்னார்ட் ஷாவின் தம்பி, காந்திஜியின் தாத்தா சொன்னது)

செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்! (Post No.4858)

சங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற அகத்துறைப் பாடல் செம்புலப்பெயல் நீரார் என்னும் புலவர் யாத்தது. ரிக் வேதம் போலவே, சில தமிழ்ப் புலவர்களின் புகழ்பெற்ற வாசகத்தைக் கொண்டே அப்புலவரை அழைப்பது தமிழிலும் உண்டு. ஒரு செம்மண் தரையில் மழை நீர் விழுந்தால் அது எப்படி இரண்டறக் கலக்குமோ அது போல நாம் ஒன்றுபட்டு விட்டோம்; இனி பிரியமாட்டோம் என்று காதலியிடம் காதலன் சொல்லும் பாடல் அது.

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

 

–குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்

 

பொருள்:

காதலன் கூறுகிறான்: “என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல நமது உள்ளங்கள் (தாமாகவே) ஒன்றுபட்டன.

 

கம்பனும் சொன்னான்

கம்பன், யுத்தகாண்டம், கும்பகர்ணன் வதைப் படலத்தில் சொல்லுகிறான்:-

 

புலத்தியன் வழிமுதல்வந்த பொய் அறு

குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமே

வலத்து இயல் அழிவதற்கு  ஏதுமை அறு

நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்

 

-கம்ப ராமாயணம்

 

பொருள்

புலத்திய முனிவரின் வழி வந்த குலத்தின் பெருமை உன்னால் அழிந்தது. உனது செயல் நமது வெற்றித் தன்மையை விழ்ச்சி அடையச் செய்யும். அறம் தவறிய உனக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காது. குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரினது இயல்பாகும் என்னும் முறைமைக்கு ஏற்றதாக உள்ளது. (இது ராவணனுக்கு கும்பகர்ணன் சொன்ன அறிவுரை)

 

நிலம் நன்றாக இருந்தால் அதில் விழும் நீரும் நன்றாக இருக்கும்.

 

வள்ளுவனும் விளம்பினான்

இதையே வள்ளுவனும் விளம்புவது, படித்து மகிழ்வதற்குரியது:-

 

நிலத்தியல்பால் நீர்திரிந்  தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப  தாகும் அறிவு – குறள் 452

 

பொருள்

தான் அடைந்த நிலத்தின் தன்மையையே நீரும் பெறும். அது போல மக்களும் எந்த இனத்தாருடன் சேருகின்றனரோ அந்த அறிவையே பெறுவர்.

 

இதை சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் சொல்லுவதால் சத் சங்கத்தின் மஹிமை தெள்ளிதின் விளங்கும்.

 

இன்னொரு குறளில் செம்புலப் பெயல் நீரார் செப்பியதையே வள்ளுவனும் செப்புவான்:–

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந்   தன்னா      ரகத்து – குறள் 1323

 

நிலத்தொடு நீர் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலனும் காதலியும் ஊடலில் அடையும் இன்பத்துக்குச் சமமான இன்பம் சொர்க  லோகத்தில் உண்டோ?

தேவலோகத்தில் SEX  செக்ஸ் கூடாது என்று பார்வதி சபித்ததால் அங்கு செக்ஸ் (பாலியல்) இன்பம் கிடையாது (பிற கிரஹங்களில் உயிரினங்கள் உண்டா? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில்

(Hindus’ Belief in Extra Terrestrial Civilizations) இது பற்றி விளக்கியுள்ளேன்.

 

 

காளிதாசனும் மொழிந்தான்!

 

காதலர்களின் மனம் ஒன்று பட்டதற்கு இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்தியது போல, சங்க காலத்துக்கு முன் வாழ்ந்த காளிதாசரும் மழை நீர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். (காளிதாசன் காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அவன் சங்க காலத்துக்கு முந்தியவன் என்பதை நிரூபித்துள்ளேன்)

 

ஒரே சுவையுடைய மழை நீர் எங்கெங்கு விழுகின்றதொ அந்தந்த நிலத்தின் சுவையைப் பெறுவதுபோல சத்வம் என்ற ஒரே குணமுடைய இறைவன், கைக்கொள்ளும் குணங்களுக்கு ஏற்ப தொழில்களையும் பெயர்களையும் ஏற்கின்றீர் (சத்வ குணம் காரணமாக விஷ்ணுவாகவும், ரஜோ குணம் காரணமாக பிரம்மனாகவும், தமோ குணம் காரணமாக ருத்திரத் தனமையையும் அடைகின்றீர். எப்படி நீர் என்பது ஒன்றுதானோ அதே போல இறைவன் ஒருவனே.

ரசாந்தராண்யேகரசம் யதா திவ்யம் பயோஸ்ச்னுதே

தேசே தேசேகுணேஷு  ஏவம் யதாத்வம்அவிக்ரியஹ

— ரகு வம்சம் 10-17

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?’ (Post No …

https://tamilandvedas.com/…/யாயும்-ஞாயும்-ய…

6 Apr 2017 – Written by London swaminathan Date: 6 APRIL 2017 Time uploaded in London:- 20-27 Post No. 3794 Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com காளிதாசனும், செம்புலப்பெயநீராரும் சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று குறுந்தொகை. அருமையான காதல் பாடல்கள் உள்ள நூல். அதில் ஒரு அருமையான பாடல். காதலர் …

 

சுபம்–

 

 

உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா (Post No.4821)

Written by London Swaminathan 

 

Date: 16 MARCH 2018

 

Time uploaded in London – 5-50 am

 

Post No. 4821

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

தமிழ்ப் பழமொழிகளும் சாணக்கிய நீதியும்

 

இருபதாயிரத்துக்கும் மேலான தமிழ்ப் பழமொழிகள் உள்ளன. இந்தப் பழமொழிகளில் பல, பாரதம் முழுதும் உள. அவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இமயம் முதல் குமரி வரை நம்பிக்கைகள் ஒன்றே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

 

இதோ! 2300 ஆண்டுப் பழமையான சாணக்கிய நீதியின் ஸ்லோகங்களும் இணையான பழமொழிகளும்

அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே என்பது தமிழ்ப் பழமொழி.

முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே- என்று அப்பர் பெருமான் தேவாரம் நாலாம் திருமுறையில் பாடுகிறார். புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேல் A bird in hand is better than two in the bush என்பது ஆங்கிலப் பழமொழி. ‘உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா’ என்றும் ‘கையில் வெண்ணை இருக்க நெய்யிற்கு அலைவானேன்’ என்றும், ‘உள்ளங்கையில் தேனை வைத்துக் கொண்டு புறங்கையை நக்கினாற் போல’ என்றும் தமிழில் செப்புவர்.

 

 

யோ த்ருவாணி பரித்யஜ்ய ஹ்யத்ருவம் பரிஷேவதே

த்ருவாணி தஸ்ய நஸ்யதி ஹ்யத்ருவம் நஷ்டமேவ ஹி

 

-சாணக்கிய நீதி 1-13

பொருள்:

உறுதியான ஒன்றை விட்டு விட்டு உறுதியற்ற- நிச்சயமற்ற- பொருளை நாடுபவன், இருக்கும் ஒன்றையும் இழந்து விடுவான்; இல்லாத பொருள் கிடைக்காது என்பது ஏற்கனவே அறிந்த விஷயம்.

xxx

சிறு துளி பெரு வெள்ளம்

ஜல பிந்து நிபாதேன க்ரமசஹ பூர்யதே கடஹ

ஸ ஹேதுஹு ஸர்வ வித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச

12-21

பொருள்:

“சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுந்தாலும் ஒரு பானை நிரம்பி விடும்.  இதுதான் மிகப் பெரிய ரஹஸியம் — செல்வம் சேர்வதும் இப்படித்தான், தர்மம் வளருவதும் இப்படித்தான்”.

 

எதிலுமே சிறுகச் சிறுக சேர்வது பின்னர் பெரும் கடல் போலப் பெருகிவிடும். பல ஓடைகளின் நீர் சேர்ந்து, நதிகளாகப் பெருகி சமுத்திரத்தை உண்டாக்குகின்றன. இயற்கையும் கூட நமக்கு கற்பிப்பது இந்த ரஹஸியமே!

xxx

 

மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி

யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled)  என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி. பகவத் கீதையில் கண்ண பிரானும் ‘பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ பொது மக்களும் அதையே செய்வர் (3-21) என்று சொல்லுவார்.

 

சாணக்கியன் நுவல்வதும் அஃதே!

ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா  பாபே பாபாஹா ஸமே ஸமாஹா

ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7

 

பொருள்

அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7

 

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்

 

xxx

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு – என்று பாடினான் சொற்தேரின் சாரதியாம் பாரதி.

 

ஒற்றுமையே உயர்வு என்பதற்குப் பல கதைகளை பஞ்ச தந்திரம் ‘மித்ர பேதம்’ என்னும் பிரிவில் எடுத்துரைக்கும்

 

சாணக்கியன் மொழிவதும் அஃதே!

பஹூனாம் சைவ ஸத்வானாம் ஸமவாயோ ரிபுஞ்ஜயஹ

வர்ஷதாஅதரோ மேகஸ்த்ருணரபி நிதார்யதே

14-4

 

பல கைகள் ஒன்று சேர்ந்தால், எதிரிகளை வென்று விடலாம்; வைக்கோலைச் சேர்த்துக் கட்டிய பாயும் பெரு மழையைத் தடுக்கவில்லையா!

 

xxx

 

குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு

குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பிள்ளைகளையும் மனைவியையும் அடிக்கும் குடிகாரனை எல்லோரும் கண்டித்தவுடன் நாளை முதல் குடிக்க மாட்டேன் இது சத்தியம் என்பான்; ஆனால் மறு நாளே குடிக்கச் செல்லுவான். குடி போதையில் இருக்கும் போது மனைவியைப் பார்த்து உனக்கு தங்கச் சங்கிலி, வைர நெக்லஸ் வாங்கித் தருவேன் என்பான். காலையில் எழுந்தவுடன் — குடி போதை தெளிந்தவுடன் கதையே மாறிவிடும்.

 

இதே போலத்தான் ஸ்மசான வைராக்யம்– சுடுகாட்டு சபதம்-

 

யாராவது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்தவுடன், அடடா! வாழ்க்கையே அநித்யமானது- உடனே நல்லது செய்துவிட வேண்டும்- கெட்ட வழியில் செல்லக்கூடாது- செல்ல மாட்டேன் என்று மனைதுக்குள் சபதம் செய்வர். பத்து நாள் சென்ற பின்னர் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்று ஆரம்பித்து விடுவர். இதை ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் – உள்ளிப்பூண்டு வைத்த பாத்திரத்துடன் ஒப்பிடுவார். அந்த வாடை என்றுமே போகாது

 

இதோ சாணக்கியன் சொல்

 

தர்மாக்யானே ஸ்மசானே ச ரோகிணாம் யா மதிர்பவேத்

ஸ ஸர்வதைவ திஷ்டேச்சேத் கோ ந முச்யேத் பந்தனாத்

14-6

 

பொருள்

ஒரு சமயச் சொற்பொழிவினைக் கேட்கும் நோயாளி மனதில் ஓடும் எண்ணங்களும், சுடுகாட்டில் இரங்கல் தெரிவிக்கும்போது மனதில் ஓடும் எண்ணங்களும் நிலையாக மனதில் தங்கிவிட்டால் எல்லோரும் பற்றற்றான் பற்றினைப் பற்றிவிடுவரே! பந்தங்கள் அறுபட்டு மோட்ச சாம்ராஜ்யத்துக்குச் சென்று விடுவது எளிதாகி விடுமே!

 

xxx

 

விநாச காலே விபரீத புத்தி

விதி கெட்டுப் போனால்

மதி கெட்டுப் போகும்

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ

ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ

ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய

விநாச காலே விபரீத புத்திஹி

 

-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5

 

பொருள்:

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”

(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் என்னும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )

–Subham—

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

 

 

Part 2 க்ராஸ் டாக்கில் உதயமானது அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4820)

Date: MARCH 16,  2018

 

 

Time uploaded in London- 3-45 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4820

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! -2

 

Part-1 was posted on 14th March, 2018

 

ச.நாகராஜன்

 

கல்கியின் உதவி ஆசிரியர் ரா.வீழிநாதன் மிகுந்த தயக்கத்துடன் கவிஞரின் இல்லம் சென்றார். அங்கு அவரது உதவியாளர் இராம.கண்ணப்பனைச் சந்தித்தார்.

 

“கல்கியின் சார்பாகக் கவிஞரைச் சந்திக்க வேண்டும். அவர் கல்கியில் எழுதுவதற்குச் சம்மதிப்பாரா?” என்றும் கேட்டார்.

“கவிஞரோ குழந்தை உள்ளம் கொண்டவர். நீங்கள் தாராளமாக அவரைச் சந்திக்கலாம்” என்றார் கண்ணப்பன்.

சந்திப்பு நிகழ்ந்தது.

 

மறுநாள் மாலையில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களை கவிதா ஹோட்டல் மண்டப்பத்திற்குக் கூட்டி வந்தார்.

கடைசிப் பக்கம் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுத கவிஞர் ஒப்புக் கொண்டார்.

 

கடைசிப் பக்கம் கல்கியில் வாசிக்கப்படும் முதல் பக்கமாக ஆனது.

 

அர்த்தமுள்ள இந்துமதம் எதையெல்லாம் தெரிவித்ததோ அதை கடைசிப் பக்கமும் தெரிவித்தது.

 

இதில் அவ்வப்பொழுது அருமையான கவிதைகள் வேறு.

பின்னர் கடைசிப் பக்கம் முதல் பக்கம் ஆனது.

பின்னர் கல்கியில் ஏதோ ஒரு பக்கத்தில் கவிஞரின் எழுத்துக்கள் இடம் பெற்றன. வாசகர்கள் அமோகமாக கவிஞரின் எழுத்துக்களை வரவேற்றுப் படித்தனர்.

 

அன்பார்ந்த நேயர்களுக்கு என்ற தனது பகுதியில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் 1976ஆம் ஆண்டு ஒரு கல்கி இதழில் இப்படி எழுதினார்:

 

“கண்ணதாசனைப் பொறுத்தவரை அவர் தமது பேனாவைச் செங்கோலோச்சித் தமிழை இலக்கிய உலகில் அரியாசனத்தில் அமர்த்தி விடும் ஆற்றல் வாய்ந்தவர் என்பது பற்றி யாருக்கும் ஐயமிராது. தமிழை அவர் ஆள்கிறாரா தமிழ் அவரை ஆள்கிறதா என்று புரியாத அளவுக்கு இன்றைய தமிழகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளருள் ஒருவரான கண்ணதாசன் எழுத்தில் எழில் கொஞ்சுகிறது; நடையில் நயம் மிகுந்திருக்கிறது. ஆத்ம திருப்தி இல்லாமல் வருவாயைக் கருதி மட்டுமே அவர் சிலவற்றை எழுதியிருக்கலாம். அவரே அதை ஒப்புக் கொள்வார். ஆனால் தமிழுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்புக்கள் இதனை நாம் மறந்து விடச் செய்கின்றன.”

 

பின்னர் “சேரமான் காதலி” தொடரை அவர் எழுத ஒப்புக் கொண்டமையை அவர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

இப்படியாக ராஜாஜியின் தூண்டுதலால் கல்கியின் நல்ல தொடர்பு கவிஞருக்குக் கிடைத்தது.

 

அதை ஒட்டு மொத்த தமிழர்களும் வரவேற்றனர்.

க்ராஸ் டாக்கும் நன்மை பயக்கும்; ராஜாஜி போன்ற பெரியோரின் நுட்பமான கவனமும் தமிழுக்கு நலம் தரும் என்பதை அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் கடைசிப் பக்கம் ஆகியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

இந்தத் தொடர் இத்துடன் முற்றும்.

 

–Subham–

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! (Post No.4819)

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 16-22

 

Post No. 4819

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

 

சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

 

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

 

என்று தமிழ்ப் பெரும் சித்தர் சிவவாக்கியர் பாடினார். இது 2300 ஆண்டுகளாகப் பாரதத்தின் தென் குமரி முதல் வட இமயம் வரை நிலவிய கருத்து என்பது சாணக்கிய நீதியைப் படித்தோருக்கு விளங்கும்.

சாணக்கியன் சொல்கிறான்,

படந்தி சதுரோ வேதான் தர்மசாஸ்த்ராண்யனேகசஹ

ஆத்மானம் நைவ ஜானதி தர்வீ பாகரஸம் யதா

 

மக்கள் நான்கு வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் மீண்டும் மீண்டும் படித்தும் தன்னை அறியும் அறிவில்லாவிடில் என்ன பயன்? சுவையான உணவைப் பரிமாறும் கரண்டிக்கு அந்த உணவின் சுவை தெரியுமா?

–சாணக்கிய நீதி 16-12

 

 

சாணக்கியன் சொல்லும் மரபியல் விஞ்ஞானம்

சாணக்கியன் உலக மஹா அறிவாளி; அலெக்ஸாண்டர் காலத்தில் வாழ்ந்தவன்; 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அவன் மரபியல் பற்றிப் பேசுகிறான்; கருவிலேயே திரு உற்றதாக நாயன்மார்கள் பாடினர்; மாணிக்க வாசகரோவெனில் திருவாசகத்தில் ஒரு கருவின் பத்து மாத வளர்ச்சியைப் பாடினார்.

 

சாணக்கியன் பகர்வதாவது,

 

கருவில் இருக்கும்போதே கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன– அவனது ஆயுள், வேலை, செல்வம், படிப்பு, மரணம்.

என்ன அதிசயம்!

இதைப் பார்க்கையில் ஜோதிடம் உண்மையே என்பது விளங்கும்.

 

இந்துக்கள் குழந்தை பிறந்த ஓராண்டுக்குப் பின்னர் குடும்ப ஜோதிடர் மூலம் ஜாதகத்தை எழுதி வாங்குவர்; அதில் அவர் அக்குழந்தையின் படிப்பு, ஆயுள், வேலை, செல்வ வளம் முதலியன குறித்து எழுதி விடுகிறார். இது 2300 ஆண்டுகளாக இருப்பது சாணக்கிய நீதி மூலம் தெரிகிறது:–

ஆயுஹு கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச

பஞ்சைதானி ஹி ஸ்ருஜ்யதே கர்பஸ்தஸ்யைவ தேஹினஹ

4-1

 

ஒரு தாயின் கரு பத்து மாத வளர்ச்சியில் நோக்கும் ஆபத்துகளை போற்றித் திரு அகவல் என்னும் திருவாசகப்   பகுதியில் மாணிக்க வாசகர் பாடுகிறார். அவர் தேவாரம் அருளிய மூவர்க்கும் முதல்வர்.

 

 

யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

  1. ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
  2. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
  3. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
    ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

–சுபம்–

ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது! (Post No.4814)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 6-35 am

 

Post No. 4814

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது! (Post No.4814)

 

ஒவ்வொரு ராகம் பற்றியும் ஒரு நம்பிக்கை உண்டு. மழை பெய்விக்கும் ராகம், தீயை உண்டாக்கும் ராகம், உறக்கத்தைத் தரும் ராகம், உற்சாகத்தை ஊட்டுவிக்கும் ராகம், நோய் தீர்க்கும் ராகங்கள், மாடுகளை அதிகம் பால் கறக்க வைக்கும் ராகம், மன நோய் தீர்க்கும் ராகம் எனப் பல பல.

 

 

ஆஹிரி ராகம் பாடினால் உணவு கிடைக்காது என்றும், அதைக் காலை நேரத்தில் பாடக்கூடாது என்றும் சொல்லுவர்; இது பற்றிய சுவையான கதை இதோ!

 

 

ஒரு பாகவதருக்கு ஆஹிரி ராகம் என்றால் உயிர் போல; அதைப் பாடிப் பாடி ஆனந்தம் அடைந்தார்; அதைக் கேட்ட ஒருவர் சொன்னார்:

“ஐயா, உமக்குத் தெரியாதா?ஆஹிரி  பாடினால் ஆகாரம் கிடைக்காது; அது மட்டுமல்ல அதைப் பகல் நேரத்தில் பாடக்கூடாது.”

 

“பாகவதர் சொன்னார்: அது எல்லாம் தவறான நம்பிக்கை; நானே அதைப் பொய்ப்பித்துக் காட்டுவேன்; அடுத்த ஊரில் நாளை முதல்  கோவில் திருவிழா நடக்கிறது. அங்கே சென்று கச்சேரியில் ஆஹிரிராகப் பாடல்களைப் பாடி உங்கள் கூற்றைப் பொய் என்று காட்டுகிறேன்” என்று சவால் விட்டர். அவரும் இசைவு தெரிவித்தார்.

 

 

அவரோ தேங்காய் மூடி பாகவதர்; அதிக வருமானம் இல்லாமல் அன்றாடக் கஞ்சிகே தாளம் போடுபவர்; அவர் கச்சேரியில் வாசிக்கப்போகும் செய்தி கேட்டவுடன் அவருடைய மனைவிக்கு ஆனந்தம்.

 

“நாதா, நான் கட்டுச் சோறு கட்டித் தருகிறேன்; கூஜாவில் தண்ணீரும் கொண்டு செல்லுங்கள்; கோவில் விழாவில் கண்டதைச் சாப்பிட்டு சரீரமும், சாரீரமும் கெட்டுவிடக்கூடாது” என்றாள்; அவருக்கு பரமானந்தம் சரி என்று சொன்னார்.

 

கட்டுச் சோற்றுக் கூடை, கூஜா தண்ணீர், குடை சகிதம் பயணம் ஆனார்.

 

பாதி தூரம் சென்றவுடன் களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். கூடை சோற்றை நாயோ மாடோ சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கே வளைந்து இருந்த ஒரு மூங்கில் மரத்தின் முனையில் கட்டித் தொங்க விட்டார்.  அழகிய குரலில் ஆஹிரி  ராகத்தை ஆலாபித்தார். அப்போது நண்பகல் நேரம்; ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று பாடி சாதகம் செய்தார். மணி இரண்டு ஆனவுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. சரி, சாப்பிடப் போவோம் என்று எழுந்தார். ஆனால் ஆகாரக் கூடையயைக் காணவில்லை.

அடக் கடவுளே! பகல் நேரத்தில் ஆஹிரி இசைத்தால், உணவு கிடைக்காது என்பது உண்மைதானோஎன்று பயந்தார்; சுற்று முற்றும் தேடினார்;  மரத்தின் மீது இருந்த ஒரு பறவை காச்சு மூச்சென்று கத்தியது;  தலையை நிமிர்ந்து பார்த்தார்.

 

மூங்கில் மரம் நிமிர்ந்து நின்றது. அதன் உச்சியில் சோற்றுக் கூடை தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுக்க முடியாமல் பரிதவித்தார். ஒரு கிராமத்தான் அதைப் பார்த்து, “ஓ, சுவாமி! மூங்கில் மரம் இரவில், குளிரில் வளைந்து பூமியைத் தொடும்; வெய்யில் ஏற, ஏற அது நிமிர்ந்துவிடும் என்பது உமக்குத் தெரியாதா? இரவு வரை காத்திருந்தால் சோற்று மூடை கீழே வரும்” என்றான்.

அவருக்கு இரவு வரை காத்திருக்க முடியாது என்பது புரிந்தது; பக்கத்து ஊருக்குச் சென்று பாசி ஆறுவோம் என்று நடந்தார். ஒரு தெருவின் முனையில் இருந்து கம கம வென அறுசுவை உண்டியின் வாசனை அடித்தது. அந்தத் தெருவுக்குள் நடந்து சென்றபோது ஒரு வீட்டின் வாசலில் ஒரே கூட்டம்; கல்யாண தோரணங்களும், வாழை மரமும் அலங்கரித்த பந்தல் வேறு இருந்தது.விசாரித்துப்  பார்த்த்ததில் அன்று கிராமம் முழுவதற்கும அங்கே இலவச விருந்து என்பதை அறிந்து உள்ளே சென்றார். பந்தியில் அமர்ந்தார்.

 

 

மரியாதையின் பொருட்டு பெண்ணின் தாய் , தந்தையரே எல்லோருக்கும் இலையில் பாயசம் முதலிய இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் பாகவதருக்கு உற்சாகம் மிகவே ஆஹிரி ராகத்தைப் பாடுவோம்; பகலில் பாடக்கூடாது; ஆகாரம் கிடைக்காது என்ற இரண்டு பழமொழிகளையும், நம்பிக்கைகளையும் தகர்போம் என்று எண்ணி பாகவதர் பேசத் துவங்கினார்:

 

“அன்பர்களே! ஆஹிரிதான் எவ்வளவு அழகு; ஆரபியின் அழகை ரசிக்காதவர்களும் சுவைக்காதவர்களும் உலகில் உண்டா? பகலிலும் ரசிக்கலாம்; இரவிலும் ரசிக்கலாம்; இதோ ஆஹிரியை ……….’’

—என்று பேசிக்கொண்டு இருந்த போது அவர் முதுகில் அடியும் குத்தும் விழுந்தன. அப்போதுதான் மணப் பெண்ணின் தாயார் பாயசம் பரிமாறிக் கொண்டு இருந்தாள். அவளும் பாயசக் கரண்டியால் அவர் தலையில் ஒரு போடு போட்டார்; பாகவதருக்கு ஒன்றுமே புரியவில்லை கண்கள் இருண்டன.

 

நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டுக் கொண்டு இருந்தபோதே நாலைந்து பேர் அவரை தர,தரவென இழுத்துக் கொண்டு போய் வெளியே தெருவில் நிறுத்தி திட்டத் துவங்கினர்:

“அடே பாவி உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா? மணப் பெண்ணின் தாயை பட்டப் பகலில் அவமானப் படுத்துகிறாயே!” என்று சொல்லி மேலும் இரண்டு அடி போட்டனர். நான் அப்படி ஒன்றும் செய்யவில்லையே, உங்கள் கண்களுக்கு முன் பந்தியில் வாழை இலை முன் அல்லவா உட்கார்ந்து  இருந்தேன்” என்று சொல்லி அழுதார்;

அட, நீ மணப் பெண்ணின் தாயார் ஆஹிரியை ‘’அழகி, ருசி, ரசி’’ என்று சொன்னாயே! என்றவுடன்தான் அந்த வீட்டுப் பெண்மணியின் பெயர் ‘ஆரபி’ என்று விளங்கியது. பின்னர் அவர்களிடம் ஆஹிரி பற்றிய முழுக் கதையையும் சொல்லி, தனது மகத்தானா  ஆஹிரி ராக விளக்கத் திட்டம் பற்றியும் சொன்னார்; பின்னர் எல்லோரும் பரிதாபப்பட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்று அறுசுவை உணவு அளித்தனர்.

 

வீட்டுக்குத் திரும்பிச் சென்றவுடன் அவர் மனைவி ஆவலுடன் கேட்டாள்: “என்னங்க ஆஹிரி பாடினீர்களா? நல்ல சன்மானம் கிடைத்ததா?”

 

சன்மானமா, தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டதே பெரும்பாடு; ஆஹிரியைப் பகலில் பாடினால் ஆகாரமும் கிடைக்காது என்பது மட்டும் அல்ல; அடி உதையும் கிடைக்கும் என்று தன் கதை  முழுவதையும் விளக்கினார்!

 

எனது இரண்டு பிளாக்குகளிலும் உள்ள முந்தைய சங்கீதக் கட்டுரைகள்:—

 

சாவேரி சோக ராகமா? | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/சாவேரி-சோக-ராகம…

மூட நம்பிக்கைகள் தோன்றுவது எப்படி? 4 கதைகள். Post No. 978 ; Date 14th April 2014. By London Swaminathan. பேராசிரியர் ராமானுஜ சீனிவாசன் இந்திய கலாசாரம் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றில் இசையில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தது பற்றி நான்கு கதைகள் சொல்லுகிறார். இவை இசைக்கு மட்டுமின்றி …

 

 

பாடப்பாட ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாடப்பாட-ராகம்/

Written by London Swaminathan. Date: 29 NOVEMBER 2017. Time uploaded in London- 9-38 am. Post No. 4444. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. ஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் …

 

 

ராகங்கள், தான்சேன், ராக தேவதை | Tamil and …

https://tamilandvedas.com/…/ராகங்கள்-தான்சேன…

பாரத சாம்ராட் என்று கவிஞர்கள் அக்பரைப் புகழ்ந்த போது தான்ஸேனை சங்கீத சாம்ராட் என்று அவர் அழைத்தார். அவர் மேக மல்ஹார் ராகத்தைப் பாடினால் மழை பொழியும்! (தான்ஸேன் தீபக் ராகம் பாடிய போது தீ ஜுவாலை எழுந்ததையும் குருநாதர் ஹரிதாஸைப் பார்க்க அக்பர் …

 

பைரவி ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பைரவி-ராகம்/

… எழுதியுள்ளார். அதில் பல்வேறு இசை வகைகளைக் கேட்டால்கிடைக்கும் நன்மைகளையும் விவரித்துள்ளார். … பைரவிராகம் பக்க வாத நோயைத் தீர்க்கும், காய்ச்சலைப் போக்கும்; எப்போதும் உடனடி சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது ‘ராக …

 

ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள் | Tamil …

https://tamilandvedas.com/…/ராகங்கள்-தமிழ்வடம…

7 Jun 2014 – பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி இந்தோளம் = மாய மாளகௌளம் புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி நட்டராகம் = பந்துவராளி நட்டபாடை = நாட்டை கொல்லி = பிலஹரி கொல்லி கவ்வாமை = நவரோகி தக்கேசி = காம்போதி தக்கராகம் = ஏகதேச காம்போதி நேரிசை = சிந்து கன்னடா

 

கல்யாணி ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கல்யாணி-ராகம்/

 

23 Jul 2016 – Article Written S NAGARAJAN Date: 23 July 2016. Post No. 2996. Time uploaded in London :– 5-26 AM ( Thanks for the Pictures). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). சுகமான கல்யாணி , ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு அற்புதமான கடிதம்! (எனது …

 

Music | Tamil and Vedas | Page 5

https://tamilandvedas.com/category/music/…:/tamilandvedas…/5/

7 Jun 2014 – தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரிடம் தமிழ் பண்களின் (ராகம்) பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன ராகம் என்று தெரியாது. ஏனெனில் தேவாரம் … பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி இந்தோளம் ….. https://tamilandvedas.wordpress.com/2013/02/16/hindu-eagle-mystery-deepens/. Four Birds in One …

 

Pancharatna Kritis | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/pancharatna-kritis/

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை? நாட்டை ராகத்தில்– ஜகதாநந்த காரக. ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா. கௌளைராகத்தில் – துடு குகல நன்னே தொர. வராளி ராகத்தில் – கன கன …

–Subham–

 

பதில் சொல்லடா, தமிழா! Tamil Q & A (Post No.4812)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 3-56 am

 

Post No. 4812

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில்/ விடை சொல்லி உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்

 

1.வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன்

கல்லால் எறியப்பிரம்பால் அடிக்க இக்காசினியில்

அல்லார் பொழில் தில்லை அம்பலவாணற்கு ஓர் அன்னைபிதா

இல்லாத தாழ்வுஅல்லவோ இங்ஙனேஎளிது ஆனதுவே

 

2.வெள்வாய்க் கழுதைப் புல் இனம் புரட்டி

வெள்ளிஅ வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ! வாழிய பெரிது

 

3.மறுஇல மாக்கதை கேட்பவர் வைகுந்தம்

பெறுவர் என்பது பேசவும் வேண்டுமொ

 

  1. அம் செஞ்சீறடி அணி சிலம்பு ஒழிய

மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக்

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்

 

  1. முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே

 

  1. நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய்- அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்

 

  1. ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் பார்த்து

இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்

 

  1. அறத்தான் வருவதே இன்பம்

 

  1. பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்

புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்

இருளுக்குள் சித்திரத்தின் – திறன்

ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்  கூடுமோ?

 

  1. வினையைப் பொடியாக்கித்

தணியார் பாதம் வந்தொல்லைதாராய்

பொய்தீர் மெய்யானே

 

11.காலில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

12.கையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

13.காதில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

14.இடையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

  1. நினைத்ததை அளிக்கும் ரத்தினக் கல்லின் ( தலையில் அணியும் ஒரு நகையின்) பெயர் வரும் காவியம்/ காப்பியம் எது?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடை/ ANSWERS

1.காளமேகம்,  தனிப்பாடல்கள், 2. சங்க கால அவ்வையார்

புறநானூறு, 3. கம்பன், கம்ப ராமாயணம், 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,

  1. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 6. பாரதி, பாரதியார் பாடல்கள், 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 9. பாரதிதாசன் பாடல்கள், 10. மாணிக்கவாசகர், திருவாசகம்
  2. சிலப்பதிகாரம், 12.வளையாபதி,13.குண்டலகேசி, 14. மணிமேகலை, 15.சீவக சிந்தாமணி

 

 

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 18-09

Written by London swaminathan

Post No. 4781

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.

 

ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:

தேயம்  போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா

ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா

அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்

நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா

-சாணக்கிய நீதி 11-18

 

பொருள்

தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!

தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

நல்ல உவமை!

 

 

நாலடியார் பாடிய பதுமனார்

உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது

வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட

உய்த்தீட்டுந் தேனீக்கரி

 

பொருள்:

தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.

 

 

வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!

உடாஅதும்= தான் உடுக்காமலும்

உண்ணாது = தான் சாப்பிடாமலும்

தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்

கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும்  செய்யாராகி

கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்

ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்

இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்

உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து

ஈட்டும் = சேர்த்து வைக்கிற

தேன் ஈ = தேனீயானது

கரி = இதற்குச் சான்று.

 


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

–Subham —

நல்ல பிராஹ்மணன் யார்? சாணக்கியன் இலக்கணம் (Post No.4777)

Date: 23 FEBRUARY 2018

Time uploaded in London- 7-59 am

Written by London swaminathan

Post No. 4777

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பிராஹ்மணர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் என்னும் மாமேதை செப்பிவிட்டான். அவன் பிராஹ்மணர்களுக்கு வகுக்கும் இலக்கணத்தைப் பார்க்கையில் இன்று வெகு சிலரே அந்த இலக்கண வரையறைக்குள் வருவார்கள். அவன் மௌரியப் பேர் அரசை ஸ்தாபித்த பின்னரும் குடிசையில் வாழ்ந்ததால் அவன் இவ்வளவு துணிச்சலாகப் பேச முடிந்தது; குணம் என்னும் குன்றேறி நின்றவன் அவன். அந்தணர் என்போர் அறவோர் என்ற சொற்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தவன். அவனுடைய ஸ்லோகங்களின் வாயிலாக நாம் மிலேச்சன், சண்டாளன் போன்ற சொற்களின் சரியான கணபரிமாணத்தை அறிய முடிகிறது. வெளி நாட்டினர் இந்தச் சொற்களுக்கு எல்லாம் விஷ(ம) அர்த்தம் கற்பித்து இருந்தனர்.

xxxx

ஒரே வேளை  மட்டுமே உணவு!

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டுத் திருப்தி அடைபவனும், ஆறு தொழில்களை மட்டும் செய்பவனும், மனைவியைக் குழந்தை பெறுவதற்காக மட்டும் அனுபவிப்பனும் ஆகிய பிராஹ்மணன் ‘த்விஜன்’ எனப்படுவான்.

 

த்விஜன்= இரு பிறப்பாளன்

அறுதொழிலோர்= வேட்டல், வேட்பித்தல், கற்றல் , கற்பித்தல், அறக்கொடை வழங்கல், அறக்கொடை பெறுதல் (திருக்குறள் 560)

 

காளிதாசன் ரகு வம்சத்தில் சொல்கிறான்: சூரிய குலத்து அரசர்கள், வம்சம் தழைக்க மட்டுமே மனைவியுடன் இருப்பார்களாம். அதாவது அவர்களை ‘செக்ஸ்’ sex பொருட்களாகப் பயன்படுத்த மாட்டார்களாம்; அதையே இங்கே சாணக்கியனும் மொழிவது குறிப்பிடத் தக்கது.

 

ஏக ஆஹாரேண ஸந்துஷ்டஹ ஷட் கர்ம நிரதஹ ஸதா

ருது காலாபிகாமி ச ஸ விப்ரோ த்விஜ உச்யதே

சாணக்கிய நீதி 11-12

xxxx

 

ரிஷி, முனிவர் யார்?

 

எந்த பிராஹ்மணன் காட்டில் வசித்துக்கொண்டு, தினமும், நிலத்தை உழாமல்- சாகுபடி செய்யாமல் —  வளரும் பழங்களையும், கிழங்குகளையும் உபயோகித்து சிரார்தம் செய்கிறானோ அவன் ரிஷி என அழைக்கப்படுவான்.

அக்ருஷ்ட பல மூலேன  வனவாசரதஹ ஸதா

குருதே அஹரஹஹ ஸ்ராத்தம்ருஷிர் விப்ரஹ ஸ உச்யதே

சாணக்கிய நீதி 11-11

 

இங்கே சிராத்த என்பது ஐந்து வேள்விகளைக் குறிக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தார் ஓம்பல் தலை (குறள் 43)

 

என்று வள்ளுவன் சொல்லுவதும் இதையேதான்.

 

xxx

நாய், பூனை வளர்ப்போன், விற்போன்

 

உலக விஷயங்களில் ஈடுபடுவோனும், நாய்,பூனை முதலிய மிருகங்களை வளர்ப்போனும், வியாபாரத்திலும், வேளாண்மையிலும் ஈடுபடுவோனும் ஆகிய பிராஹ்மணன், வைஸ்யன் எனப்படுவான். அதாவது பிராஹ்மண ரூபத்தில் உலவும் வைஸ்யன்.

 

லௌகிகே கர்மணி ரதஹ பசூனாம் பரிபாலகஹ

வாணிஜ்ய க்ருஷி கர்தா யஹ ஸ விப்ரோ வைஸ்ய உச்யதே

சாணக்கிய நீதி 11-13

 

xxxx

கள், மாமிஸம் விற்போர்

 

அரக்கு, எண்ணை, சாயப் பொருட்கள் (அவுரி), குங்குமப் பூ, தேன், கள், மாமிஸம் விற்போர் சூத்திரர்கள் என்று கருதப்படுவர்

லாக்ஷாதி தைல நீலானாம் குசும்ப மது ஸர்பிஷாம்

விக்ரேதா மத்ய மாம்ஸானாம் ஸ விப்ர சூத்ர உச்யதே

சாணக்கிய நீதி 11-14

xxx

 

  

ருத்ராக்ஷப் பூனை

மற்றவர்களின் வேலைகளில் இடையூறு உண்டாக்கும் , சுய நலமும், அகந்தையும் பொறாமையும், கொடூரமும் உள்ள பிராஹ்மணன் — பூனை எனப்படுவான்

(இது பஞ்ச தந்திரக் கதையிலும் மாமல்லபுர சிற்பத்திலும் வரும் ருத்ராக்ஷப் பூனை கதையாகும்; ருத்ராக்ஷப் பூனை பற்றிய எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

பரகார்ய விஹந்தா ச தாம்பிகஹ ஸ்வார்தசாதகஹ

ச்சலீ த்வேஷீ ம்ருதுஹு க்ரூரோ விப்ரோ மார்ஜார உச்யதே

 

சாணக்கிய நீதி 11-15

xxx

 

மிலேச்சன்

நீர்த்தேக்கத்தையும், குளத்தையும், கண்மாய்களையும், தோட்டங்களையும், கோவில்களையும் அழிக்கும் பிராஹ்மணன் மிலேச்சன் (காட்டுமிராண்டி, பர தேஸி, வெளி நாட்டுக்காரன்) எனக் கருதப்படுவான்.

 

மிலேச்சர்கள் என்ற சொல் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பயிலப்படுகிறது (முல்லைப் பாட்டு, வரி 66); பாரதியாரும், இந்து மத விரோத முஸ்லீம்களை மிலேச்சர் என்று அழைக்கிறார்; சிலப்பதிகாரத்திலும் இத்தாலி நாட்டவர்கள் (ரோம் நகர ஆட்சி) யவனர்கள்– மிலேச்சர் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவைப் பிரித்தாள வந்த வெளிநாட்டினர், இது திராவிடர்களைக் குறிக்கும் என்று எழுதி வைத்தனர்; அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதாவது இந்து தர்ம விரோதிகளும், கொள்ளையர்களும் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர். சாணக்கியனும் அணைகளை உடைப்பவர்களையும் புறச்சூழலெதிரிகளையும் கோவில்களை உடைப்போரையும் மிலேச்சர்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் நிலங்களை, கோவில் நந்த வனங்களை அபகரித்தோரையும், சுயநலத்துக்காக அழித்தோரையும் சாணக்கியன் இந்தக் கடுமையான சொல்லைப் பிரயோகித்து சாடுகிறான்.

 

வாபீ கூப தடாகானாம் ஆராமஸுரவேஷ்மனாம்

உச்சேதனே நிராசங்கஹ ஸ விப்ரோ ம்லேச்ச உச்யதே

சாணக்கிய நீதி 11-16

 

xxxx

சண்டாளன்

கோவிலுக்கும் குருவுக்கும் கொடுக்கப்பட்ட பணத்தைத் திருடும், மற்றவர்களின் மனைவியரை அனுபவிக்கும், இது போன்ற அடிமட்ட மக்களுடன் கொஞ்சிக் குலாவும் பிராஹ்மணர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்படுவர்.

 

ராவணன் 50 சதவிகித பிராஹ்மணன்; அவன் மாற்றான் மனைவியைத் தொட்டதால் அழிந்தான். வெளி நாட்டினர் நான்கு ஜாதிகளுக்கு வெளியே இருந்தாரும் திராவிடர்களும் சண்டாளர்கள் என்று சொல்லி மதப் பிரசாரம் செய்தனர். ஆனால் நான்கு ஜாதிகளுக்குப் புறம்பானவர்கள் சண்டாளர்கள் அல்ல; திருடர்களும், பெண் பித்தர்களும், கீழ் மட்டத்தில் பன்றிகள் போல உழலுவோரும் மட்டுமே– பிராஹ்மணர்களாக இருந்தாலும்– அவர்கள் சண்டாளர்கள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பகர்ந்தான் சாணக்கியன்.

 

இது வெளிநாட்டுக்கரகளின் சதியை அம்பலப்படுத்துகிறது

 

தேவ த்ரவ்யம் குரு த்ரவ்யம் பர தாராபிமர்ஷணம்

நிர்வாஹக ஸர்வபூதேஷு விப்ர சாண்டால/ள உச்யதே

 

சாணக்கிய நீதி 11-17


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

xxx SUBHAMxxxx

 

 

 

 

 

பண்டம் ஓரிடத்தில் பழி ஓரிடத்தில்- பழ மொழிக் கதை (Post No.4767)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 12-27

 

Written by London swaminathan

 

Post No. 4767

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

தமிழில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஒரு காரணமோ, ஒரு கதையோ உண்டு. பழமொழிகளே அழிந்து வரும் காலத்தில் கதைகள் மறைந்ததில் வியப்பில்லையே! மூன்று வெள்ளைக் காரர்கள் 20,000 தமிழ்ப் பழமொழிகளை வெளியிட்டனர். அதற்கும் மேலாக உள்ள பழமொழிகளையும், அவற்றின் பின்னுள்ள கதைகளையும் வெளியிடுவதும், அவைகளை விஷயம் (Subject wise)  வாரியாக வரிசைப்படுத்துவதும், பல்வேறு மொழிகளில் உள்ள பழமொழிகளுடன் அவைகளை ஒப்பிடுவதும், எல்லாத் தமிழ்ப் பழமொழிகளையும் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதும் செய்ய வேண்டிய பணிகளாகும். இதற்கென தனித் துறையும் ஆராய்ச்சிக் களமும் தேவை. நிற்க.

மேலும் ஒரு பழமொழிக் கதையைக் காண்போம்.

 

‘எய்தவன் இருக்க அம்பு என்ன செய்யும்?’ ‘பண்டம் ஓரிடத்தில் பழி வேறு ஒரு இடத்தில்’ என்று தமிழில் பழமொழிகள் உள.

 

ஒரு ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் கோடிக் கணக்கில் பணம் வைத்திருந்தான். காலப் போக்கில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே அரண்மனை போன்ற வீட்டைப் பராமரிப்பதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் பெரிய மழை பெய்தபோது ஒரு சுவர் இடிந்து விழுந்தது. உடனே வேலையாட்களைக் கொண்டு புதிய சுவர் எழுப்பினான். அது ஈரப் பசையுடன், காயாமல் இருந்த காலத்தில் ஒரு திருடன் அந்த ஊருக்குள் புகுந்தான்.

 

 

இருட்டு நேரத்தில் அந்த வீட்டில் திருட வந்தான். காயாத சுவர் என்று தெரியாமல் அதில் கன்னம் வைத்தான் (ஓட்டை போட்டான்). அது முழுதும் இடிந்து அவன் மீது விழவே அவன் அப்படியே மூச்சுத் திணறி இறந்தான்.

 

அந்த நாட்டை ஆண்ட மன்னன் மஹா மூடன் என்பதால் எல்லோரும் அவனை ஏமாற்றிப் பிழைத்தனர். திருடர் கூட்டத்தில் ஒருவன் இதை அறிந்து, அந்த மன்னர் மீது வழக்கு தொடுத்தான். உனது நாட்டில் வீடுகளைச் சரியாகக் கட்டுவதில்லை. அதை நீங்கள் சரியாக மேற்பார்வை செய்யவில்லை எனது சகா ஒருவன் இறந்ததற்கு உங்கள் மோசமான ஆட்சியே காரணம்; எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்- என்றான்.

 

முட்டாள் அரசன் சொன்னான்,

கவலைப் படாதே, இப்பொழுதே வீட்டுச் சொந்தக் காரனை அழைத்துவர ஆணை இடுகிறேன் என்றான். அந்த வணிகனை உடனே சேவகர்கள் இழுத்து வந்தனர். ஏன் வீட்டை மோசமாகக் கட்டினாய்? ஒரு திருடனின் சாவுக்கு நீயே காரணம் என்றான்.

அந்த வணிகன் சொன்னான்,

நான் என்ன செய்ய? வீட்டில் சுவர் எழுப்பிய கொத்தனாரை அல்லவா தண்டிக்க வேண்டும்?- என்றான்

உடனே கொத்தனாரை இழுத்து வந்தனர். அடே! ஈரமான சுவரை எழுப்பி ஒருவனைக் கொன்றுவிட்டாயே! உனக்கு தொழில் சுத்தம் என்பதே கிடையாதா? என்றான் மன்னன்.

 

மன்னவா! என் மீது பிழை இல்லை. மண் மிதித்துக் கொடுத்த கூலியாள் கொடுத்ததை நான் அப்படியே வைத்து சுவர் எழுப்பினேன். அவனை அல்லவா விசாரிக்க வேண்டும்?- என்று சொன்னான்.

உடனே கூலியாளை அழைத்துவர மன்னன் பணி ஆட்களை ஏவினான்.

 

கூலியாள் வந்தவுடன் அதே கேள்வி.

அவன் செப்பினான்,

மஹாராஜா! நான் இளகலாக மண் கலந்து கொடுத்தது ஏன் என்றால், நான் பயன் படுத்திய மிடாவின் வாய், வழக்கத்தைவிடப் பெரிதாக இருந்தது. அதைச் செய்த குயவனை அல்லவா விசாரிக்க வேண்டும்? என்று உரைத்தான்

 

குயவனை இங்கே இழுத்து வாருங்கள் என்று அரசன் ஆணை  இட்டான்.

 

குயவனும் வந்தான்; அதே பல்லவி!

அவன் பதில் கொடுத்தான்,

மன்னவா! உண்மைதான்; மிடாவின் வாய் பெரிதுதான். அதற்குக் காரணம், அந்தப் பக்கம் வந்த ஒரு பேரழகிதான். அவளைப் பார்த்துகொண்டே மிடா செய்ததால் அது பெரிதாகிவிட்டது என்று நுவன்றான்.

 

அந்தப் பேரழகியை இழுத்துவாருங்கள் என்று உத்தரவிட்டான் மூட அரசன்

அவளும் மினுக்கி குலுக்கி வந்தாள்; அதே  கேள்வி.

அவள் பகர்ந்தாள்,

ஒரு நகை செய்யும்படி தட்டானிடம் சொல்லி இருந்தேன்; அவன் சொன்ன நேரத்தில் என் வீட்டுக்கு வராததால் நானே அவன் வீட்டுக்குச் சென்றேன். அப்போது குயவன் வீடு வழியாகப் போனது உண்மையே. ஆனால் இதற்குக் காரணமான தட்டானை அழைத்து விசாரிப்பதே முறை என்றாள்.

தட்டான் வந்து நகை விற்கும் செட்டியார் மீது பழியைப் போட்டான். அவரையும் அழைத்து வந்தனர் சேவகர்கள்.

 

அவருக்கு நிலைமை முழுதும் விளங்கி இருந்ததால் — பூர்வ கதை தெரிந்து இருந்ததால்– இரண்டு நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார்.

 

அந்த இரண்டு நண்பர்களும் அரண்மனைக்கு வெளியே மன்னருக்குக் கேட்கும் அளவுக்குப் பெரிய சண்டை போட்டனர்.  மன்னர், செட்டியாரை விசாரிப்பதற்குப்  பதிலாக அந்த இரண்டு பேரையும் உள்ளே அழைத்து என்ன சப்தம்? என்ன சண்டை? என்று கேட்டான்.

அவர்களில் ஒருவன் மொழிந்தான்:

மன்னா! பாருங்கள்! நீங்கள் தண்டிப்பவனைக்  கழுவில் ஏற்றிக் கொல்ல கழு மரம் தயாராக இருப்பதைப் பார்த்தவுடன் நான்தான் கழுவில் ஏறுவேன் என்கிறான். ஆனால் நான்தான் முதலில் வந்தேன். ஆகவே நான்தான் கழுவேறி இறக்க வேண்டும்; இதுதான் வாக்குவாதத்தில்  முடிந்தது- என்றான்.

மன்னன் கேட்டான், நீங்கள் எதற்காகக் கழுவில் ஏற வேண்டும்?

மன்னரே, உங்களுக்குத் தெரியாத விஷயமா? இந்தக் கழுமரத்தில் இந்த நன்னாளன்று யார் முதலில்  கழுவேறி இறக்கிறார்களோ அவர்தான் இந்த நாட்டின் அடுத்த அரசன் என்று ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்களே! விரைவில் இந்த நாட்டில் ஆட்சி மாறும் என்றும் பகர்ந்தார்களே? நான் இதோ தயார் என்றான்.

 

அதைக் கேட்ட அரசன் திடீரென்று ஆசனத்தில் இருந்து குதித்தான். எல்லோரும் விலகிப் போங்கள்; இந்த நாட்டை ஆளுவதற்கு என்னைவிட வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்று சொல்லிவிட்டு நேராகச் சென்று கழுவில் ஏறினான்; முட்டாள் மன்னவனின் ஆயுளும் பிரிந்தது. அனைவருக்கும் பெரு  மகிழ்ச்சி!

 

 

பழி ஓரிடத்தில் பாவம் ஓரிடத்தில், பண்டம் ஓரிடத்தில் என்ற பழி ஓரிடத்திலென்ற பழமொழிகளுக்கு எல்லாம் மூலக் கதை இதுவே.


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

–சுபம்–