10 Feb 2017 – Written by London swaminathan Date: 10 FEBRUARY 2017 Time uploaded in London:- 20-56 Post No. 3624 Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com திருவள்ளுவரின் …
14 Nov 2015 – அவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்! coin valluvar. யார் அந்த எழுவர்? பூர்வத்தில் ஆதி என்ற …
You’ve visited this page 2 times. Last visit: 05/11/19
tamilandvedas.com › tag › திருவள்ளுவ…
திருவள்ளுவர் மனைவி பெயர் | Tamil and …
1.
30 Sep 2018 – Posts about திருவள்ளுவர் மனைவி பெயர் written by Tamil and Vedas. … இயற்பெயர் வாசுகி என்றும் சிறப்புப்பெயர் பெயர் மாதானுபங்கி என்றும் …
tamilandvedas.com › tag › திருவள்ளுவ…
திருவள்ளுவர் யார் | Tamil and Vedas
1.
12 Feb 2016 – Tagged with திருவள்ளுவர் யார். திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532). IMG_3156 (2). Written by london swaminathan. Post No. 2532. Date: 12th February 2016.
tamilandvedas.com › 2013/12/17 › திருவள…
திருவள்ளுவர் யார்? | Tamil and Vedas
1.
17 Dec 2013 – இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு! By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013. –லண்டன் சுவாமிநாதன் தமிழ் வேதமான …
tamilandvedas.com › 2018/10/27 › வள்ளுவ…
வள்ளுவரின் சகோதரி அவ்வையார் …
1.
27 Oct 2018 – திருவள்ளுவர் யார் | Tamil and Vedas. tamilandvedas.com/tag… Posts about திருவள்ளுவர் யார் written by Tamil and Vedas. திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post …
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
வள்ளுவர் புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய் சொல்வதில்
தப்பில்லை என்கிறார்.
நரியைக் காப்பாற்ற ரஸ்ஸல் பொய் சொன்னார். ஆனால் அந்த
நன்மை பயக்கும் பொய்யைக் கூட சத்திய சோதனை செய்து வந்த காந்திஜி ஒத்துக் கொள்ளவில்லை.
*
காந்திஜி வழியில் இன்னொரு கதை உண்டு.
ஒரு முறை துர்வாஸ முனிவரிடம் ஒரு மான் அடைக்கலம்
புகுந்தது.தன்னைத் தேடிக் கொண்டு வேட்டைக்காரர்கள் வருவதாகவும் அவரிடம் அடைக்கலம் புகுவதாகவும்
கூறிச் சரணடைந்தது.
துர்வாஸ மஹரிஷி அதை தன் ஆசனத்தின் பின்னால் மறைத்து
வைத்தார்.
வேட்டைக்காரர்கள் வந்தனர். மானைப் பார்த்தீர்களா
என்று கேட்டனர்.
துர்வாஸ முனிவரின் கண்கள் சிவந்தன. கோபம் கொப்பளிப்பது
போல அவர் முகம் மாறியது.
‘என்ன கேட்டீர்கள்’ என்று அவர் உரக்க வேட்டைக்காரர்களை
நோக்கிக் கேட்டார்.
துர்வாஸ மஹரிஷியின் கோபம் நாடறிந்த ஒன்று.
எங்கே தவம் கலைந்த நேரத்தில் அதற்குத் தாம் தான்
காரணம் என்று சபிக்கப் போகிறாரோ என்று வேட்டைக்காரர்கள் பயந்தனர்.
அந்த இடத்தை விட்டு ஓடோடிச் சென்றனர்.
மான் பிழைத்தது; மஹரிஷியும் மகிழ்ந்தார்.
ஒரே விஷயம்.
பல விதமான கருத்துக்கள்.
வீரராகவ முதலியார், பர்ட்ரெண்ட் ரஸ்ஸல், மஹாத்மா
காந்திஜி, துர்வாஸ மஹரிஷி ஆகிய இவர்கள் கூறிய அனைத்தையும் பார்க்கும் போது சத்தியம்
என்பது கத்தி முனையை விடக் கூர்மையானது; அதை முதன்மையாகக் கொண்ட தர்மம் இன்னும் சூக்ஷ்மமானது
என்று தெரிகிறது.
யத் பாவம் தத் பவதி!
(இதிலும் கூட) உள்ளத்தின் உணர்விற்கேற்ப உண்மை அமைகிறது.
இன்றுடன் வள்ளுவரின் அருளுரை முடியப் போகிறது என்பதை அறிந்த மக்கள் சற்று வருத்தப்பட்டனர். என்றாலும் மூன்று தினங்களுக்கு மேல் ஓரிடத்தில் இருக்காத வள்ளுவப் பிரான் முப்பெரும் தேவியருக்காக ஒன்பது நாட்கள் இருந்ததை எண்ணி அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.
சபை ஆரம்பித்தவுடன் வேகம் வேகமாக கேள்விகள் வர ஆரம்பித்தன.
ஒருவர் எழுந்து கேட்டார்.
நல்ல முறையில் வாழ்க்கை நடத்துகின்ற ஒருவனை நாம் எப்படி வாழ்த்த வேண்டும்?
வள்ளுவர் உடனே கூறினார்:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
அப்படி வாழாதவன்?
ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
பேய் உண்டா?
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்
தலைவன் யார் ஐயனே!
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்
ஒரு புலவர் உற்சாகத்துடன் எழுந்தார்.
பார்த்தீர்களா, வாழ்வாங்கு வாழ்பவனை தெய்வத்துள் வைத்தார். மற்றவருக்கு உதவி செய்யாமல் வாழ்பவனை செத்த பிணத்துடன் வைத்தார். உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் உலகம் உண்டு என்று சொல்வதை இல்லை என்று சொல்பவனைப் பேயாக வைத்தார். நீதிமுறை தவறாமல் மக்களைக் காப்பாற்றுபவனை தலைவன் என்று வைத்தார். இப்படி நான்கு விதமாக மனிதர்களைப் பிரிக்கிறார் வள்ளுவப் பிரான் என்று அவர் முடித்தவுடன் அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர்.
ஒருவரை நடுநிலைமை உள்ளவரா என்று எப்படி அறிவது?
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
இங்கு புலவர் இரு வரிசையாகப் பிரிந்தனர். ஒரு சாரார் ஒருவன் இறந்த பின் அவனைப் பற்றி நிற்கும் புகழாலும் பழியாலும் அவனது நடுநிலைத் தன்மை காணப்படும் என்றனர். இன்னொரு சாரார் அவனது எச்சம் என்பது அவனது பிள்ளைகளே, அவர்கள் வாழ்வைப் பார்த்து அறியலாம் என்றனர். இரு கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
தர்மவான் போல இல்லாத ஒருவனை எப்படி இனம் காண்பது?
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
மற்றவனைப் பற்றிப் புறங்கூறும் ஒருவன் தர்மவான் இல்லை என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
பிறவித் துன்பம் ஒழிவது எப்படி, ஐயனே?
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
ஆசைகளை விடு; அப்பொழுதே பிறவித் துன்பம் ஒழியும். இல்லையேல் மாறிமாறிப் பிறக்கும் நிலையாமை காணப்படும்.
அனைவரும் பெரிய ரகசியத்தை உணர்ந்தனர்.
பிறவித் துன்பம் அற வழி கேட்ட உடனேயே காமம் சம்பந்தமாக ஒருவர் ஒரு கேள்வி எடுத்து வைத்தார். மகளிரும் ஆண்களும் மிகவும் ஆவலாக வள்ளுவரைப் பார்த்தனர்.
ஐயனே! மனைவி ஊடலின் போது ஒருவர் விட்டுக் கொடுக்கிறார். யார் இதில் வென்றது?
வள்ளுவர் சிரித்தார்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலிற் காணப் படும்
மணம் புரிந்த அனைவரும் ஓஹோ என்று சிரித்து அதை ஆமோதிக்க இளம் மங்கையரும் வாலிபரும் புரியாமல் சற்று நாணித் திகைத்தனர்.
புலவர் ஒருவர் எழுந்து நான்கு ‘காணப்படும்’ விஷயங்களை பிரான் உணர்த்தி இருக்கிறார். இத்துடன் புறந்தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொன்னதையும் சேர்த்துப் பார்த்தால் ஐந்து ‘காணப்படும்’ என்ற ரகசியங்களை அறிகிறோம் என்றார்.
எதைக் கண்டால் அஞ்ச வேண்டும்?
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீய செயல்கள் தீயினும் கொடியன. ஆகவே அந்தத் தீமை விளவிக்கும் செயல்கள் அஞ்சப்படும்.
வள்ளுவர் தொடர்ந்தார்:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
முகத்தினால் சிரித்து அகத்தினால் தீமை கொள்ளும் கறுப்பு உள்ளத்தவரை நட்பாகக் கொள்ள அஞ்ச வேண்டும்.
இரு அஞ்ச வேண்டிய விஷயங்களைக் கேட்டவுடன் ஒருவர் ஒருவனை எப்படி ஆராய்ந்து நம்புவது என்று கேட்டார்.
அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப் படும்
அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஒருவனை ஆராய்ந்து பார். பின்னரே அவனைப் பற்றி அறிய முடியும்!
வள்ளுவர் மன்னனைப் பார்த்துத் தொடர்ந்தார்:
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன் மூவர்
சொற்றொக்க தேறப் படும்
ஒரு ஒற்றனை இன்னொரு ஒற்றனால் ஆராய்க; அப்படி ஆளப்பட்ட மூன்று பேர்களின் சொற்கள் ஒத்திருக்கிறதா என்று பார்த்து உண்மையை அறிக.
எப்போது ஒருவனின் மதிப்பு கெட்டுப் போகும்?
வள்ளுவர் கூறினார்:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
கல்லாத ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு பேசும் மதிப்பானது கற்றவர் அவையில் கூடிப் பேசும் போது கெட்டுப் போகும்.
நன்கு படித்த ஒருவன் நல்ல நூலின் பொருளை விரித்து உரைத்தாலும் கூட அவன் வறியவனாக இருந்தால் அவன் சொற்களை மதிப்புக் கொடுத்து யாரும் கேட்க மாட்டார்கள் அவன் சொற்கள் பயனின்றிப் போகும்.
கண்ணுக்கு அணிகலன் எது ஐயனே! கைகளில் மை தீட்டிய ஒரு அழகிய இளம் பெண் கேட்டாள்.
வள்ளுவர் குரல் புன்சிரிப்புடன் ஒலித்தது:
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
அந்தப் பெண்ணை கருணை பொதிந்த கண்களால் பாண்டிமாதேவி பார்க்க அவள் கண்களுக்கு அழகு மை அல்ல; கருணைப் பார்வை இல்லையேல் அது புண் என உணர்ந்து அமர்ந்தாள்.
ஒருவர் எழுந்து கேட்டார்: சற்றுக் கருணையற்றுக் கடுமையான சொற்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் கடிந்து கொண்டால்?
உறாஅ தவர் போல் சொல்லினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
வெளிப்பட அன்பில்லாதவர் போலக் கடுமையாகச் சொன்னாலும் கூட, அது அகத்தே பகையில்லாமல் தன் அன்புக்குரிய ஒருவரின் நன்மைக்காகவெ சொல்லப்பட்டது என்பதை விரைவில் யாரும் உணர்வர்.
வள்ளுவர் உடன் தொடர்ந்தார்:
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
அதே போல நண்பர்கள் போல நல்லனவற்றைச் சொன்னாலும் கூட, மனதிலே பகைமை கொண்டவர்கள் கூறும் சொற்களின் உண்மைத் தன்மையை விரைவில் யாவரும் உணர்வர்.
வள்ளுவரின் தீர்க்கமான சொற்களையும் அதற்கு புலவர்களின் விளக்க உரையையும் கேட்ட மக்கள் மகிழ்ந்தனர்.
ஆராயத் தக்கது எது?
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
பொறாமை நெஞ்சம் கொண்ட ஒருவனுடைய செல்வமும், பொறாமை இல்லாத ஒருவனின் கேடு காலமும் ஏன் என்று ஆராயப்பட வேண்டியவை.
எள்ளப்படுவது எது?
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
கேட்டவர்கள் எல்லாரும் வெறுக்கும் படியாக ஒரு பயனும் இல்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லும் ஒருவன் எல்லாராலும் இகழைப் படுவான்.
உள்ளப்படுவது எது?
வீறெய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன் கண்
ஊறெய்தி உள்ளப் படும்
நல்ல செயல் திறன் மூலம் தன் திறமை காட்டி உயர்ந்தவரின் வினைத் திட்பமானது அரசு வரை எட்டும்; அவரை அரசனும் மதிப்பான்.
எள்ளப்படுவதையும் உள்ளப்படுவதையும் கேட்டவுடன் மக்கள் மகிழ அந்தி மாலை வந்தது.
பாண்டிமாதேவி பாண்டியனுடன் வள்ளுவரின் பாதம் தொட்டு பாத பூஜையைச் செய்ய சேரமாதேவியும் சோழமாதேவியும் ஏக்கத்துடன் பார்த்தனர்.
காலையில் பாண்டிமாதேவியிடம் வள்ளுவர் தங்கள் நாட்டிற்கு வருகை தந்து தங்களைப் புனிதப் படுத்தக் கூடாதா என்ற ஏக்கத்தை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.
பாண்டிமாதேவி வள்ளுவரிடம் வினயமாக ஏதோ விண்ணப்பித்தாள்.
மக்கள் அப்படி தங்கள் மஹாராணி எதை விண்ணப்பிக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர்.
வள்ளுவர் புன் சிரிப்புடன் தலையை அசைக்க பாண்டியன் பெரிதும் மகிழ்ந்து உற்சாகக்குரலை எழுப்பினான்.
மக்கள் புரியாமல் திகைக்கவே ராணி சேரமாதேவியையும் சோழமாதேவியையும் பார்த்துக் கூறினாள் : “காலையில் என்னிடம் வள்ளுவப் பிரான் உங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்ற ஆசையைக் கூறினீர்கள் அல்லவா? அதை உங்கள் சார்பில் அவரிடம் விண்ணப்பித்தேன். அவர் வருகிறேன் என்று கூறி விட்டார். சென்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அங்கே உங்கள் மன்னருடன் நீங்கள் பாத பூஜை செய்யலாம்.”
கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப இருவரும் ஓடோடி வந்து அக்கா என்று கூவி அவரைக் கட்டி அணைக்க பாண்டிமாதேவி அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
அவர்கள் வள்ளுவரின் பாதம் பணிய அவர் ஆசீர்வாதம் கூறி எழுந்தார். மக்களும் எழுந்தனர். சிலர் அழுதனர். சிலர் ஆனந்தப் பட்டனர். சிலர் பேசினர்; சிலர் மௌனமாக இருந்தனர்.
மந்திரி, படைத்தலைவர், மக்கள் உடன் வர பாண்டியனும் மூன்று தேவிகளும் முன் செல்ல வள்ளுவர் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்து அனைவரையும் கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
இதற்கு மேல் என்னைத் தொடர வேண்டாம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.
நவ ராத்திரி போல ஒன்பது பகல் நடைபெற்ற அறிவு விருந்தைச் சுவைத்த மக்கள் திரும்ப மனமின்றி வள்ளுவரை வணங்கியவாறே திரும்பலாயினர்.
அவர் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்?
கொல்லி மலையை நோக்கியா, பொதிய மலையை நோக்கியா?
யாருக்குத் தெரியும்?
வள்ளுவர் வாழ்க என்ற மாபெரும் ஒலி கொல்லி மலையையும் பொதிய மலையையும் சென்று எதிரொலித்தது.
வள்ளுவர் வாழ்க; தமிழ் வாழ்க; உலகோர் சிறந்து உயர்க!
நன்றி, வணக்கம்!
****
இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்
தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)
Research Article written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 December 2018
GMT Time uploaded in London – 18-28
Post No. 5776
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கிரேக்க நாட்டு (கிரீஸ்) இலக்கியத்தில் அழியாத இடம் பெற்ற கதை பிதியாஸ்- டாமன் (Pythias- Damon) நட்புறவுக் கதை. அதை சங்க கால இலக்கிய பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.
நட்பின் இலக்கணம் என்ன?
வள்ளுவன் தமிழ் வேதமான திருக்குறளில் அழகாகச் சொல்லிவிட்டான்:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு-786
பொருள்
ஒருவரை ஒருவர் சந்தித்துச் சிரித்துப் பேசுவது உண்மையான நட்பு அல்ல; மனத்தளவில் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் போற்றுவதும் பாராட்டுவதுமே நட்பு
இதற்கு முன்னுள்ள குறளில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:-
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் – 785
பொருள்
நட்பு கொள்வதற்கு ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்து, கட்டித் தழுவி, கை குலுக்கிப் பேச வேண்டும் என்பது தேவையல்ல; ஒரே மாதிரியான சிந்தனையே (same wave length) நட்பு என்னும் உரிமையைக் கொடுத்துவிடும்.
இதற்கு முன்னுதாரணமான கதை கோபெருஞ்சோழன் – பிசிராந்தையார் கதையாகும்.
பலரும் அறியாத பிதியாஸ் – டாமன் கதையை முதலில் பார்த்துவிட்டு பிசிராந்தையாருக்கு வருவோம்.
கிரேக்கநாட்டின் மிகப்பெரிய தத்துவ அறிஞர் பிதகோரஸ் (Pythagoras) . அவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரும் வள்ளுவரைப் போலவே நட்பின் இலக்கணத்தை வரையரை செய்துள்ளார். அது என்ன? அதற்கு முன்னுதாரணமான கதைதான் — உண்மைக் கதைதான் — பிதியாஸ் கதை.
பிதியாஸும் டாமன் என்பவரும் இணை பிரியாத் தோழர்கள். கிரேக்க நாட்டின் தற்போதைய தலைநகரான ஏதென்ஸில் வாழ்ந்தவர்கள். ஒருமுறை அவர்கள் சைரக்யூஸ் (Syracuse) நகருக்கு வந்தனர். அங்கு டயோனிஸியஸ் (கி.மு. 405-367) என்ற கொடுங்கோலன் ஆட்சி நடாத்தி வந்தான். பிதியாஸ் ஒரு உளவாளி என்று எண்ணி சிறைப் பிடித்தான். எவ்வளவோ மன்றாடியும் மன்னன் விடுவதாயில்லை. மரண தண்டனையும் விதித்தான். இதைக் கேட்ட அவனது ஆருயிர்த் தோழன் டாமன் மனம் வெதும்பினான்.
பிதியாஸ், சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் தொலை தூரத்தில் வசிக்கும் தனது தாயார் உடல் நலம் குன்றி இறந்துவிடும் நிலையிலிருந்ததால் மன்னரிடம் ஒரே ஒரு வேண்டு கோள் மட்டும் விடுத்தான்.
“என்னுடைய மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், என் தாயாரை மட்டும் தரிசித்துவிட்டு, விடை பெற்று வருகிறேன்; அனுமதி தாருங்கள்; நான் ஓடி விடமாட்டேன்; கட்டாயம் திரும்பி வருவேன்; என்னை நம்புங்கள்” — என்றான்.
கொடுங்கோலன் டயோனிஸஸ் அதை நம்பவில்லை; உன் தாயாரோ தொலைதூர கிராமத்தில் வசிக்கிறாள்; உன்னை வெளியே விட்டால், நீ கூண்டுக் கிளியாகப் பறந்து விடுவாய். நீ திரும்பி வருவாய் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா; முடியாது போ– என்றான்.
அப்போது அங்கே டாமன் பிரவேசித்தான்.
மன்னர் மன்னவா; பிதியாஸ் என்னுடைய ஆப்த சிநேகிதன்; அவனுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்; அவன் சொன்ன நாட்களுக்குள் திரும்பி வராவிடில், நான் மரண தண்டனையை ஏற்கிறேன்; அவனை விடுத்து அந்த கை விலங்குகளை எனக்குப் பூட்டுங்கள். அவன் வராவிடில் என்னைக் கொல்லுங்கள்- என்றான். மன்னரும் கை விலங்கை மாற்றி பிதியாஸை அனுப்பிவிட்டு டாமனைப் பிடித்து சிறையில் தள்ளினான்.
அம்மாவைப் பார்க்கச் சென்ற பிதியாஸ் வரும் அறிகுறியே இல்லை; நாளையுடன் கெடு முடிகிறது.பிதியாஸ் வராவிட்டால் டாமன் தலை உருளுவது நிச்சயம். ஆனால் டாமநோ கொஞ்சமும் அஞ்சவில்லை. கெடு முடிவதற்குள் பிதியாஸ் வருவது உறுதி என்று கருதினான்.
கெடு முடியும் தருவாய். டாமனை மரண தண்டனை மேடைக்கு இட்டுச் சென்றனர். அப்போது வாசலில் ஒரே ஆரவாரம். காவல் காரன் ஓடி வந்து பிதியாஸ், அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அறிவித்தான். உடனே அவனை இங்கே அனுப்பு என்றான் மன்னன்.
பிதியாஸ் மூச்சு இளைக்க இளைக்க பேசினான்,
மன்னர் மன்னவா என்னை மன்னியுங்கள்; என் அருமை நண்பன் டாமனை பெரிய இக்கட்டில் வைத்தது என் தவறே. நான் வரும் வழியில் பருவ மழை கொட்டி கப்பல் திணறிப்போய் தாமதமாகிவிட்டது. டாமனை விடுங்கள் நான் உங்கள் கட்டளைப்படி மரண தண்டனையை ஏற்பேன் என்றான்
இதைக்கேட்ட மாத்திரத்தில் கொடுங்கோல் மன்னனின் மகன், மரண தண்டனையை நிறை வேற்றும் வெட்டியான் ஆகியோர் கண்களில் கண்ணிர் பெருகியது
அரிய நட்பின் பெரிய சின்னம் பிதியாஸ்- டாமன் நட்புறவு என்பதை அறிந்த கொடுங்கோல் மன்னன் டயோனிஸஸ், இருவரையும் விடுதலை செய்தான். நீங்கள் இருவரும் என்னுடனும் நப்பு பாராட்டுங்கள் என்று இறைஞ்சினான்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
இப்போது எல்லோரும் அறிந்த பிசிராந்தையார்- கோப்பெருஞ் சோழன் கதையைக் காண்போம்.
கோப்பெருஞ் சோழனை அவனுடைய மகன்கள் எதிர்த்தபோது, எயிற்றியனார் என்னும் புலவர் சொற்படி, நாட்டை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தார். வடதிசை புனிதமான திசை என்பதால் பாண்டவ சஹோதர்கள் போல வடதிசை நோக்கி நடந்து கொண்டே இருந்து பூமியில் உடல் விழுந்து இறப்பர் பலர்; சிலர் இருந்த இடத்திலேயே வடதிசை நோக்கி அமந்து இறப்பர்; இந்த உண்ணா விரதத்துக்கு பிராயோபவேசம் என்று பெயர். ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்திலும் புறநானூற்றிலும் காணலாம்.
கோபெருஞ் சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து பலரும் அவருடம் பந்தலில் உடகார்ந்து உயிர்துறந்தனர். பொத்தியார் என்ற புலவரை மட்டும் சோழன் திருப்பி அனுப்பிவிட்டான். நீ ஆண் குழந்தை பிறந்த பின்னர்தான் இப்படி சாக முடியும் என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டான். ஆனால் மன்னர், ஒரு ஆசனத்தை மட்டும் பிசிராந்தையாருக்காக ‘ரிஸர்வ்’ செய்தான். எல்லோருக்கும் ஆச்சர்யம். மன்னரே; அவரோ தொலைதூரத்தில் உள்ளார் உம்மையோ பார்த்ததே இல்லை. அவரை நண்பர் என்று சொல்லி இடம் ஒதுக்கச் சொல்கிறீரே என்று வியந்தனர்.
அதற்கு சோழன் பதில் சொல்கிறான்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்
அல்லற்காலை நில்லலன் மன்னே (புறம் –215)
பொருள்
பாண்டிய நாட்டில் தொலைதூரத்தில் பிசிர் என்னும் ஊரில் என் நண்பன் இருப்பதாகச் சொல்லுவர். அவன் எனக்கு செல்வம் இருந்த காலத்தில் வாராவிட்டாலும் துன்பம் வந்த காலத்தில் வாராது இருக்க மாட்டான்
அவர் சொன்னபடியே பிசிர் வந்தார்! உசிர் தந்தார்!!
அவருடைய ஆரூயிர் நண்பர் புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆயினும் சோழன் எதிர்பார்த்தது போலவே பிசிராந்தையாரும் சாகும் வரை உண்ணா நோன்பில் கலந்து உயிர்நீத்தார்.
பிதியாஸ் கதைக்கு ஆதாரம்- கிரேக்க ஆசிரியர் அரிஷ்டசேன, ரோமானிய ராஜதந்திரி சிஸரோ, கிரேக்க ஆசிரியர் டியோதரஸ் சிகுலஸ்
பிசிராந்தையார் கதைக்கு ஆதாரம்- புறநானூறு பாடல்கள் 213-223
பிசிராந்தையார் யார்?
சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:
ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறார்:–
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
——(புறநானூறு ,பாடல் எண். 191)
பொருள்:-
நுமக்குச் சென்ற ஆண்டுகளோ பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?
என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும் தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)
புறநானூற்றிலுள்ள (பாடல் 191) படுத்தும்.
xxx
பிதியாஸ் – டாமன் கதை திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் பரவியிள்ளது. அவர்கள் நட்புறவு பற்றிய பாடல்களும் உண்டு.
கிரேக்க கதை காட்டும் மற்ற உண்மைகள்
1. இந்துக்களைப் போலவே அவர்களும் சொன்ன சொல் மீறாதவர்கள். அரிசந்திரனை நினைவு படுத்துகிறது பிதியாஸ் கதை.
2.நட்புறவின் சிறப்பு; பஞ்ச தந்திரக் கதைகளின் முதல் பகுதியே நட்புறவின் சிறப்பைப் பற்றியதே; குசேலர்- கிருஷ்ணரின் நட்புறவு மற்றொரு எடுத்துக் காட்டு; உயிர் காப்பான் தோழன். சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘எ டேல் ஆப் டூ சிட்டிஸ்’ (A Tale of Two Cities by Charles Dickens) நாவலில் சிட்னி கார்ட்டனின் தியாகமும் நினைவு கூறத்தக்கது.
3. தாயைக் காண பிதியாஸ் மன்றாடியது- மாதா, பிதா குரு தெய்வம் என்ற வசனத்தை நினைவு படுத்தும்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு உலகம், தார்மீக ரீதியில் உளுத்துப் போகாமல் இருந்தது. போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி விட்டது.
GMT Time uploaded in London –11- 08 am
Post No. 5712
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
தமிழ் இலக்கியம்; அறநூல்!
பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும்கேள்விகள்! – 4
பாண்டியன் வியந்து போனான்.ஒவ்வொரு நாளும் பெருகி வரும் கூட்டத்தில் அருகிலிருந்த சோழ நாடு, சேர நாடு ஆகிய நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் வருவதைக் கண்டான்.
அவர்கள் தங்குமிடத்திற்கென ஏராளமான கூடாரங்களை அமைத்ததோடு உணவுக்கென ஏராளமான சமையல்கூடங்களையும் திறக்கச் செய்தான்.
அவை கூடியதும் வள்ளுவரிடம் கேள்வி கேட்க ஒரு கூட்டமே எழுந்தது.
இதை முறைப்படுத்த வேண்டி அமைச்சர் ஒவ்வொருவரையும் வரிசையாகத் தங்கள் கேள்விகளை கேட்கச் சொன்னார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது ஊரில் தனக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லி விட்ட ஒருவரை எண்ணி நொந்து கொண்டார் அவருக்கு என்ன தண்டனை என்று கேட்டார்:
வள்ளுவர் கூறினார்:
தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்
தன் மனச்சாட்சியை மீறிப் பொய் சொன்னவனுக்கு அவன் நெஞ்சமே தகுந்த தண்டனையைத் தந்து விடும். ஒவ்வொரு நாளும் அவன் தகிப்பான் என்று புலவர்கள் விரிவாக விளக்கியபின் கேள்வி கேட்டவர் அமைதியானார்.
தனது வீட்டில் கோபத்துடன் இருக்கும் கணவனையும் பெரியவரையும் சுட்டிக் காட்டிய பெண்மணி இதனால் தான் பெரிதும் மன வருத்தம் அடைவதாகவும் அவர்களுக்கு ஒரு வாழ்வியல் ரகசியத்தை அருள வேண்டுமென்றும் வேண்டினாள்.
வள்ளுவர் கூறினார்:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
அடடா என்று கூவிய புலவர்கள் அதை விரித்து உரைத்தனர். சேர்ந்தவரைச் சேர்ந்தவுடன் விஷம் கூடக் கொல்லாது. ஆனால் சினம் சேர்ந்தவுடன் ஒருவரின் வாழ்க்கை நிம்மதியைக் கொன்று விடும். அவனது மகிழ்ச்சி, செல்வம் எல்லாம் போய்விடும். அது மட்டுமன்றி அவனுக்கு கஷ்ட காலத்தில் உதவும் தெப்பமாக இருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்ஆகியோரையும் அது சுட்டு அழித்து விடும்.
அந்தப் பெண்மணியின் கணவரும் தந்தையும் எழுந்தனர். இனி ஒருக்காலும் தெப்பத்தைச் சுட விடமாட்டோம்; சேர்ந்தவரைக் கொல்லும் சினத்தை விட்டு விட்டோம் என்று உரக்கக் கூவவே மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
நெருங்கிய நண்பன் தன்னை ஒரு கஷ்டமான சூழ்நிலையில் கைவிட்டு விட்டதைச் சொல்லி ஒருவர் மனமுருக, அவரைப் பார்த்து வள்ளுவர் கூறினார்:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
நட்பு என்பது நிலைத்திருப்பது. அது நல்ல காலத்தில் மட்டுமல்ல; ஒருவனின் கஷ்ட காலத்திலும் மறையக் கூடாதது. அப்படி ஒருவர் இருந்தால் அது நட்பே அல்ல; அதை நினைத்தாலே நெருப்பே வேண்டாம்; உள்ளமே சுடும்; பார்த்துப் பழகுங்கள் என்று வள்ளுவர் அறிவிப்பதை அனைவரும் உணர்ந்தனர்.
கிராமப் புறத்திலிருந்து வந்தவர் தன் ஊரில் நல்ல கொள்கைகளை விடும், ஊர் செல்வந்தரைப் பற்றிக் கூறினார்; அதே ஊரைச் சேர்ந்த இன்னொருவர் அஞ்சி வெட்கப்பட வேண்டிய காரியங்களைக் கூட அவர் செய்வதாகக் கூறினார்.
அடடா என கூட்டத்தினர் வருத்தப்பட்ட போது வள்ளுவர் கூறினார்:
குலஞ் சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
ஐயோ! கொள்கை தவறினால் அது குலத்தையே அல்லவா கெடுக்கும்; நாண வேண்டிய பழி காரியங்களைச் செய்தால் அனைத்து நன்மைகளையும் அல்லவா அழித்து விடும் என்று கூட்டத்தினர் பேச கேள்வி கேட்டோர் வள்ளுவர் கூற்றை எழுதிக் கொண்டனர். கிராமத்தில் அதை எழுத வேண்டுமென்று தீர்மானித்தனர்.
மகளிர் பக்கத்திலிருந்து ஒரு இளம் அழகி எழுந்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என மஹாராணி வியந்தவாறே அவளைப் பார்த்தாள்.
“ஐயனே, கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளம் சுடும் என்று சொன்னீர்களே! என் உள்ளம் சுடுகிறதே,இது எதனால்? என்று நொந்தவாறே கேட்டாள்.
வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்; கூறினார்:
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்
பெரும்புலமை வாய்ந்த மஹாராணியார் அந்த இளம் அழகியைத் தன்னிடம் வரச் சொன்னார். அவளது கணவன் கடல் கடந்து பொருள் சம்பாதிக்கச் சென்றதை அறிந்து கொண்டாள். அவரை மறக்கவும் முடியவில்லை; மறக்காமல் நினைத்தாலும் பிரிவை நினைத்தே உள்ளம் சுடுகிறதே என்ற அவளது நிலையை எண்ணி, அவளிடம் ‘வருத்தப்படாதே; உன் கணவனை உடனே இங்கு திரும்பச் செய்கிறோம்.
அரண்மனையிலோ அல்லது படையிலோ தக்க வேலை ஒன்றைத் தகுதிக்கேற்பத் தரச் சொல்கிறேன்’ என்று கூறவே பெண்கள் அனைவரும் ராணியார் வாழ்க என்று கூவினர்.
பிரிவுத் துன்பம் தெரிந்த மகத்தான ராணி அல்லவா அவர் என்று மகளிர் பெருமிதத்துடன் பேச புலவர் ஒருவர் எழுந்தார்.
“இன்று ஒரு அதிசயம் பார்த்தீர்களா!
சுடும் என்ற சொற்களை வள்ளுவப் பிரான் எப்படிப் பயன் படுத்தி இரகசியங்களை விளக்கி இருக்கிறார் என்பதை ஓர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
குலஞ் சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்
வள்ளுவர் வாழ்வியல் இரகசியங்களைத் தேர்ந்த சொற்களால் விளக்கும் அருமையே அருமை” என்று மகிழ்ந்து கூறினார்
வள்ளுவரின் தெள்ளுதமிழ் அமுதத்தைப் பருகிய மக்கள் கூட்டம் கலைந்தது. மறு நாள் மலர்ந்தது.
தொடரும்
***
இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 293,306,799,1019,1207
GMT Time uploaded in London –6- 49 am
Post No. 5709
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
தமிழ் இலக்கியம்; அறநூல்!
பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும்கேள்விகள்! – 3
ச.நாகராஜன்
அவை கூடியது.
அனைவரும் திருவள்ளுவரைப் பார்க்க அவர் கையை அசைத்தார்- துவங்கலாம் என்று.
“ஐயனே! பெண் என்பவள் யார்? நாங்கள் எப்படி இருக்க வேண்டும் “ – இப்படி மகளிர் அமர்ந்திருந்த பக்கத்திலிருந்து ஒரு பேரிளம் பெண் கேட்டாள்.
அனைவருக்கும் ஒரு உற்சாகம் ஏற்பட, வள்ளுவரை நோக்கினர்.
வள்ளுவர் முழங்கினார் :
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)
அனைவரும் ‘ஆ’ என்று வியந்து பாராட்டினர் இந்த வரையறுப்பைக் கண்டு. கேள்வி கேட்ட அழகியை அனைவரும் பாராட்ட இன்னொரு பெண் எழுந்து கேட்டாள் : ‘என்னையும் காத்துக் கொள்கிறேன். கணவன் உள்ளிட்ட என் குடும்பத்தினரையும் நான் பேணுகிறேன் புகழையும் என்னால் சேர்க்கிறேன். இப்படிப்பட்ட பெண்ணை எப்படி அறிஞர் பார்ப்பார்கள்?’
வள்ளுவர் மஹாராணியையும் அந்தப் பெண்ணையும் பார்த்தார்; பின்னர்
கூறினார் :
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் (54)
அனைவரும் மஹாராணியின் கற்பின் திண்மையை முதல் நாள் பார்த்தவர்கள் ஆதலால் மிகவும் மகிழ்ந்தனர்.
மகளிர் அனைவரும் மகிழ்ந்த போது ஆண்கள் பக்கத்திலிருந்து ஒருவர் எழுந்தார்:
“ஐயனே! பெண்களிடம் அப்படி என்ன தான் உள்ளது?”
வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்:
கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள (1101)
இதைக் கேட்டு ஆண்களும் பெண்களும் பரவசப்பட்டுக் கத்தினர்.
ஐம்புலன்களுக்கு இன்பம் தர வல்லவள் பெண்ணல்லவோ! அவள் இல்லாமல் உலகம் இயங்குமா? இருக்கத் தான் செய்யுமா?
மகளிர் சிலர் நாணத்துடன் தலை கவிழ பலரோ வள்ளுவரைப் பாராட்டிக் கூவினர்.
மகளிர் அணியிலிருந்து எழுந்த ஒரு அழகிய இளம் பெண் கண்ணீர் மல்கவே மஹாராணியாரும் ஏனையோரும் துணுக்குற்றனர்:
அவள் விசும்பியவாறே கூறினாள்: “ என்னைக் கைப்பிடித்தவர் இன்னொருத்தியின் வீட்டில் அல்லவா இருக்கிறார்; இது நியாயமா?” என்று கேட்டாள்.
வள்ளுவர் வருந்திய முகத்துடன் கூறினார்:
“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று” (913)
கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து ஓடி வந்து அந்த அழகியை நோக்கிக் கூறினான்” என் தலைவியே! என்னை மன்னித்து விடு! இருட்டறையில் பிணத்தைத் தழுவி அல்லவா இது வரை வாழ்ந்தேன் என்று வள்ளுவப் பிரான் கூறுகிறார்; என் அறிவுக் கண்ணைத் திறந்து விட்டார்” என்று கூறி அழ, மன்னன் அவர்கள் இருவரையும் மேடைக்கு அழைத்தான்.
மஹாராணி தன் மார்பிலிருந்த பாண்டி நாட்டு தங்கச் சங்கிலியில் கோர்த்த முத்தாரத்தை எடுத்தாள்; மன்னரிடம் கொடுத்தாள்.
குறிப்பறிந்த மன்னன் அதை திருந்திய தனது குடிமக்களுள் ஒருவனான அவன் கையில் தந்து தன் தலையை அசைக்க அவன் உடனடியாக அந்த அழகியின் கழுத்தில் அணிவித்து தன்னை மன்னிக்குமாறு இறைஞ்சினான்.
கூட்டத்தினர் கை தட்டி, தங்கள் தோள்களில் இருந்த உத்தரீயங்களை மேலே எறிந்து பிடித்து ஆரவாரித்தனர்.
கண் கலங்கி, ஆனந்தக் கண்ணீர் விட்ட இளம் பெண் மஹாராணியின் காலில் விழ, அந்த இருவரையும் மஹாராணி வள்ளுவரை வணங்கி ஆசிப் பெறச் சொன்னாள்.
வள்ளுவர் கைகளை உயர்த்தி ஆசிகளைத் தர, கூட்டத்தினருக்கு ஒரு பெரிய நல் கூத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது; இங்கு வந்தது நமது புண்ணியமே என்று எண்ணினர்.
இதே போல பரத்தையர் வீடு செல்பவர்கள் இனி திருந்துவர் என மகளிர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
உடனடியாக புலவர் ஒருவர் எழுந்தார்:
“ஐயனே, அந்தணர் யார்?” என்று கேட்டார்
வள்ளுவர் பளீரென்று பகர்ந்தார்:
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
அனைவரும் அந்தணர்களைப் பார்த்து வணங்கினர்.
இன்னொருவர் கேட்டார் : அவர்கள் அறத்தை வழுவில்லாமல் காப்பது எப்படி? அனைவருக்கும் இது பொருத்தமான கேள்வி தான் என்ற எண்ணம் எழ, இதன் இரகசியத்தை வள்ளுவர் எப்படி விளக்கப் போகிறாரோ என்று பார்த்தனர்:
வள்ளுவர் கூறினார்:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
பாண்டியன் பெரிதும் மகிழ்ந்தான். அனைவரும் ஆஹாகாரம் செய்தனர்.
வளையா செங்கோல் நிமிர்ந்து நிற்க அந்தணர் பிறர்க்குரியாளராக வாழ்வதை அனைவரும் போற்றினர். பாண்டியன் பெருமிதத்துடன் மக்களைப் பார்க்க மக்களும் பாண்டியனை வெற்றிப் புன்னகையுடன் பார்த்தனர்.
அந்தணர் ஒருவர் எழுந்தார்:
“ஐயனே! மற்று எவ்வுயிர்க்கும் இப்படி செந்தண்மை பூண்டு வாழ்தலால் என்ன பயன்?”
வள்ளுவர் பகர்ந்தார்:
“கொல்லான் புலானை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்”
அடடா! என்ன ஒரு பதில்! புலாலை மறுத்தவர் அல்லவோ அந்தணர்! மன்னுயிர் எல்லாம் தொழும் என்பதில் என்ன ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது!
புலவர்கள் பேச எழுந்தனர். வள்ளுவர் கூறிய பெண்மையைப் போற்றும் கூற்றுகளையும், அந்தணர் சிறப்பையும், கொல்லாமையையும் பற்றி அவர்கள் பெரிதும் பேச கூட்டத்தினர் உன்னிப்பாகக் கேட்டனர்.
மாலை சூரிய அஸ்தமனம் ஆகவே கூட்டம் கலைய மக்கள் உற்சாகத்துடன் தமக்குள் பேசியவாறே வீடு திரும்பினர்
தொடரும்
***
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட்பாக்களின் எண்கள் : 56,54,1101,913,30,543,260
GMT Time uploaded in London –6- 04 am
Post No. 5705
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
தமிழ் இலக்கியம்; அறநூல்!
பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும்கேள்விகள்! – 2
ச.நாகராஜன்
பாண்டிய மன்னன் மேடையின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலைப் பார்த்தான்; மகிழ்ந்தான்.
முதல் நாள் கூட்டம் கலைய ஆரம்பித்தவுடன் மஹாராணி குறிப்பால் மன்னனை அருகில் அழைத்தாள்.
காலையில் சபை ஆரம்பிக்கும் போது இருந்த மக்கள் எண்ணிக்கை மாலையில் எப்படி இருந்தது பார்த்தீர்களா? – ராணியின் கேள்வி மன்னனைச் சிந்திக்க வைத்தது.
பல் மடங்கு பெருகி இருந்தது. வள்ளுவரை அருகில் வந்து தரிசித்து வணக்கம் சொல்வதிலேயே பெரும்பொழுது சென்று விட்டது.
நாளை என்ன ஆகும்? கூட்டம் பெருகுமல்லவா? அவர்கள் நன்கு அமர்ந்திருக்க சரியான பந்தல், நீர் பந்தல் ஆகியவற்றை அமைக்க வேண்டாமா? – ராணியின் கேள்வியால் மகிழ்ந்த மன்னன் உடனடியாக அமைச்சரையும் தளபதியையும் அழைத்தான்.
“நாளை இன்றைய தினத்தை விட பன்மடங்காக மக்கள் திரளுவர். எத்தனை தச்சர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்! அலங்காரப் பந்தல் பெரிதாக வேண்டாமா!”
அமைச்சர் தானும் அதையே நினைத்ததாகக் கூறி ராணியின் மதியூகத்தை எண்ணி வியந்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
மயன் கூட அமைக்க முடியாத மாபெரும் பந்தல். ஆங்காங்கு தண்ணீர்ப் பந்தல்.
ராணியார் இரவு முழுவதும் பந்தல் அமைப்பை மேற்பார்வையிட்டார். ஒரு சமயம் ஒரு செம்பில் நீர் கொண்டுவரச் சொல்லி அதை மேலிருந்து ஊற்றச் சொல்லி பந்தலில் அமர்ந்தார். ஒரு சொட்டு நீர் கூட கீழே சொட்டவில்லை. ராணியாரின் கவனத்தையும் அக்கறையையும் கண்ட தச்சர்கள் இன்னும் சாந்துப் பூச்சுக் கலவையை நிதானமாகப் பூசி தண்ணீர் விழாத படியும், சூரிய ஒளி ஆங்காங்கு பிரகாசமாக ஜொலிக்கும் படியும் பந்தலை நிர்மாணித்தனர்.
புலவர் குழாம் ஒரு புறமும் அரசவை உறுப்பினர் ஒரு புறமும் மகளிரும் ஆண்களும் அவரவர் இடத்திலும் அமர்ந்தனர்.
புலவர் குழாத்தில் ஒரு புலவர், வள்ளுவரை எப்படி மாட்டி விடலாம் என்ற எண்ணம் கொண்டவர், தனது சாதுரியத்தை முதலிலேயே காட்ட எண்ணினார். முதல் கேள்வியிலேயே வள்ளுவரைத் திணற வைத்தால் அந்த வித்வத் சதஸ் என்னும் அறிவுக் கூட்டம் சீக்கிரமே முடியுமல்லவா?
பவ்யமாக வள்ளுவரை நோக்கினார்: “பெருமானே, ஆமையைப் பற்றிக் கூறி அதனால் என்ன கற்க முடியும் என்று சொல்லுங்களேன்!
கூட்டத்தினர் கொல்லென்று சிரித்தனர்.
அந்தப் புலவரின் புலனுக்கடங்கா சேஷ்டைகள் ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியும். இப்படி இடக்காகக் கேட்கிறாரே!
ஆமைக்கும் வள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்.
மன்னன் கூடத் திடுக்கிட்டான். பெரிய புலவர் வாய்த்துடுக்காக இப்படிக் கேட்கலாமா?
யாரும் யோசித்து முடிக்குமுன்னரே பளீரென்று வள்ளுவர் வினவினார்:
“நீவீர் எந்த ஆமையைப் பற்றிக் கேட்கிறீர்? பிறனில் விழையாமை,அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, கள்ளாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை,
வள்ளுவரின் கூர்மையான கேள்வியைக் கேட்டு மக்கள் அனைவரும் ஆஹா ஆஹா என்று கூவினர். சிலரோ நாவல் நாவல் என்று கத்தினர்.
கேள்வி கேட்ட புலவர் நடுநடுங்கிப் போனார்!
இடக்கான கேள்வியைக் கேட்டதற்கு நொந்து போய் மென்று விழுங்கி, “நான்கு கால்களால் நிலத்திலும் நீரிலும் செல்லும் ஜந்து …” என்று தட்டுத் தடுமாறிக் கூறி அமர்ந்தார்.
வள்ளுவர் பளீரென்று கூறினார்:
ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
மக்கள் கரங்களைத் தட்டிப் பாராட்ட, புலவர்கள் அதற்கு விரிவுரை கூற கேள்வி கேட்டவர் வெட்கித் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
அவருக்கு ஏற்ற பதில்! இனியாவது ஆணவம் பிடித்து அலையாமல் கண்,காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகியவற்றை அடக்கி அவர் வாழ்வாரா என மன்னன் எண்ணினான்.
அந்தப் புலவர் பிறகு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதை மக்கள் வரும் நாட்களில் அறிந்தனர்.
அடுத்து பந்தலில் ஒரு கோடியில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு மெலிந்தவர் எழுந்தார்.
புலவர்கள் முகம் சுளித்தனர். படைவீரர்கள் துணுக்குற்றனர். அவர் மன்னனின் தேரை ஓட்டும் சாரதி.
“ஐயனே! தேரை வைத்து ஒரு கூற்றை உங்கள் வாயிலாகக் கேட்க ஆசைப்படுகிறேன்”.
‘தேரில் என்ன இருக்கிறது? இவன் எல்லாம் ஒரு ஆள்’, என்று சிறுமையாக அவரை நோக்கிப் பலரும் பார்க்க வள்ளுவர் கூர்மையாகக் கூறினார்:
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
இவன் பெரியவன், இவன் சிறியவன் என்று தோற்றத்தை வைத்து எடை போடாதே, உருளும் தேருக்கு அச்சாணி அல்லவா முக்கியம், அது போல தோற்றத்தால் எளிமையாக இருப்பினும் அவர்கள் முக்கியமான விஷயத்திற்கு அச்சாணி போன்றவர்கள்!
மன்னன் எழுந்து பாண்டிய நாட்டிலேயே விரைவாகத் தேர் ஓட்ட வல்லவன் அவன் என்று கூறி அவனது பெயரும் நளனே என்று கூறி மகிழ்ச்சியுடன் அமர்ந்தான்.
அனைவரும் இந்தப் புகழுரையைக் கேட்டு மகிழ்ந்து கரங்களைத் தட்ட நளனோ வெட்கத்தால் அனைவரையும் வணங்கி அமர்ந்தார். நளன் எப்படி தேரை விரைவாக ஓட்ட வல்லவன் என்பதைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் கூறப்பட்ட நள தமயந்தி சரித்திரத்தை அனைவரும் அறிந்தவர்கல் ஆதலால் அவர்கள் பெருமையுடன் மன்னனின் தேர்ப்பாகனான நளனைப் பார்த்தார்கள்.
வள்ளுவர் தொடர்ந்தார்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
மன்னனையும் மந்திரியையும் அவர் பார்த்துக் கூறிய வார்த்தைகளால் இடம் அறிந்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதை அவர் கூறுகிறார் என மக்கள் புரிந்து கொண்டனர். வலிய சக்கரங்களை உடைய நெடுந்தேர் கடலில் ஓடாது. அதே போல பெரிய கப்பலாக இருந்தாலும் அது நிலத்தில் ஓடாது.
கேள்வியைக் கேட்டு வாழ்வியல் ரகசியத்தை அறியச் செய்த தேர்ப்பாகனை அனைவரும் பாராட்ட கூட்டத்தில் வறியவராக இருந்த ஒருவர் எழுந்தார்.
“ஐயனே! நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளேன். எங்கள் ஊர்களில் மழையே பெய்யவில்லையே! என்ன செய்வது?”
என்று மெலிந்த குரலில் கேட்டார்.
அவரது கேள்வியைக் கேட்ட வள்ளுவர் மஹாராணியைப் பார்த்துக் கூறினார்:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
மஹாராணி வள்ளுவர் தன்னை நோக்கிக் கூறியதைக் கேட்டவுடன் ஆசனத்திலிருந்து எழுந்தாள்.
“அடடா, இப்படி மழையின்மையால் நீங்கள் வருந்துவது எனக்குத் தெரியாதே” என்று கூவி விட்டு வானை நோக்கிக் கைகளை உயர்த்தினாள் “வருண பகவானே! என் குடி மக்களுக்கு இப்படி ஒரு இடரா? மழையைப் பொழியுங்கள். பெய்க மழை” எனக் கூவி மனமுருக வேண்டினாள்.’அடுத்த சில கணங்களில் நிகழ்ந்தது அற்புதம்.
வானம் இருண்டது. மேகம் திரண்டது. வள்ளுவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் வானைப் பார்க்க ஒரு துளி பூமியில் விழுந்தது.
பின்னர் வந்தது அடைமழை.
மக்கள் ‘ஹாஹா’வென்று பத்தினி தேவி ராணியின் சொல் பலித்தது என்று மகிழ கேள்வி கேட்டவரோ ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்.
மழை நின்றது.
ராணியை அடுத்து மன்னன் எழுந்தான். தன் செங்கோலைக் கையில் ஏந்தி வானை நோக்கினான்.
“வருண தேவரே! நாடெங்கும் பெய்க மழை!” என்று கூவி வேண்டினான்.
அடுத்து இன்னொரு மழை தொடர்ந்தது.
அனைவரும் அதிசயிக்க பந்தலிலொ ஒரு சொட்டு நீர் கூட விழவில்லை. மக்கள் பந்தல் நிர்மாணிப்பை சிலாகித்துத் தமக்குள் பேசிக் கொண்டனர்.
பெரிதாகப் பெய்த மழை ஓய்ந்தது.
புலவர் கூட்டத்தின் அருகில் அமர்ந்திருந்த வேதம் ஓதும் அந்தணர்கள் உடனே எழுந்தனர். வருண ஜபத்தை ஆரம்பித்தனர். அடடா! அதிசயம் இன்னொரு மழை தொடர்ந்தது.