ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு! (Post No.4692)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-28 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4692

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் நான்காவது உரை

 

  1. ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு!

 

ச.நாகராஜன்

 

ஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா? ஆம்! இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்!

இயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

கடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன! ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.

அதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப்படுகின்றனர்.

செக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன், தூக்கமின்மையுடன் சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.

இருள் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.

நாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு  எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.

உலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.

ஆகவே வீட்டினுள்ளே உபயோகிக்கும் மின் விளக்குகளையும், சாலைகள் மற்றும் இதர இடங்களில் நாம் உபயோகிக்கும் மின் விளக்குகளையும் மிக மிகக் குறைந்த அளவில் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தினால் ஒளி மாசும் அகலும்; செலவும் குறையும்; வெப்ப மயமாதலும் குறையும்.

உணர்ந்து செயல்படுவோம்!

***

 

 

செரிங்கட்டிவிதிகள் (Post No.4678)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-20 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4678

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் இரண்டாவது உரை

 

  1. செரிங்கட்டிவிதிகள்

ச.நாகராஜன்

    இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.

உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.

1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது!

கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.

செரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.

 

70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.

செரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

முதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

மனிதன் தான் இந்த இயற்கையின் விதிகளினூடே விளையாடுகிறான் என்பதும் அதனாலேயே அரிய விலங்குகளும் பறவைகளும் அழிந்துபடுகின்றன என்பதும் தெரிகிறது.

‘உயிர்களிடத்து அன்பு வேணும் என்ற பாரதியின் அறிவுரையை மனதில் கொண்டால் இயற்கை அமைத்த உலகம் வளம் பெறும்; நமக்கு வளத்தையும் நல்கும்.

***


 

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை! (4662)

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4662

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(என் வாசகர்கள் தமிழர்கள்= நல்லவர்கள்; தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

பாக்யா 26-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 49வது) கட்டுரை!

 

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை!

 

 

ச.நாகராஜன்

 

 

 

 

“மரபணு பற்றிய விதிகள் அவற்றை நீங்கள் அறிய மறுத்தாலும் கூட உங்களுக்கும் அது பொருந்தும்!” – ஆலிஸன் ப்லோடென்

 

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல விஞ்ஞானிகளில் பெரிதும் போற்றப்பட்டு வருபவர் மரபணு சம்பந்தமான பெரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த பெரும் விஞ்ஞானி சர் பால் நர்ஸ்! (Sir Paul Nurse).

 

முக்கியமாக கான்ஸர் வியாதி குணமாகக் கூடியதே என்பதை அவர் சொல்லும் போது உலகமே ஆறுதல் அடைகிறது. மருத்துவத்திற்கான 2001ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை அவர் மற்ற இரு விஞ்னானிகளுடன் கூடச் சேர்ந்து பெற்றுக் கொண்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த நர்ஸ் 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 69.

உலகிற்கே மரபணு பற்றிய ஏராளமான உண்மைகளைத் தெரிவித்த இந்த விஞ்ஞானியின் சொந்த வாழ்க்கையில் அவரது மரபணு பற்றிய விஷயம் பெரிய ரகசியமாக அமைந்தது தான் விசித்திரம்.

 

பெரிய மர்ம நாவல் போல அவரது வாழ்க்கை வரலாறு இருக்கிறது.

 

இதை அவரே ஒப்புக் கொள்கிறார். டிக்கன்ஸ் நாவலையும் தோற்கடிக்கும் அளவு அவரது வாழ்க்கை மிக்க சுவையான மர்மம் நிறைந்த ஒன்று.

 

அமெரிக்காவில் ராக்ஃபெல்லர் பல்கலைக் கழகத்திற்கு அவர் தலைவர் ஆனார். சுமார் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த அவர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டை வாங்க ஒரு விண்ண்பத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது அமெரிக்க ஹோம்லேண்ட் செக்யூரிடி பிரிவால் நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டது.

 

திகைத்துப் போன அவர் ஏன் என்று கேட்டார்.

அந்தப் பிரிவோ அவரது பிறப்புச் சான்றிதழில்  தந்தை பெயரும் தாயின் பெயரும் இல்லை என்று பதில் கூறியது.

இவ்வளவு தானே என்று நினைத்த நர்ஸ், ஒரு முழு பெர்த் சர்டிபிகேட்டை அனுப்புமாறு பிரிட்டன் ஜெனரல் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பின்னர் நிம்மதியாக இரு வார விடுமுறை எடுத்துச் சென்று விட்டார்.

திரும்பி வந்தவர் தன் செயலாளரிடம், ‘இப்போது எல்லாம் சரியாக ஆகி விட்டதல்லவா’ என்று கேட்டார்.

“ஊஹூம்” என்று சொன்ன அவர் பிரிட்டனிலிருந்து வந்த பெர்த் சர்டிபிகேட்டை அவரிடம் நீட்டினார். அதில் தாயார் என்பதற்கு நேராக அவரது சகோதரியின் பெயர் இருந்தது. தகப்பனார் என்பதற்கு நேராக ஒரு கோடு -டேஷ் – மட்டும் இருந்தது.

தகப்பனார் இல்லாத ஆளா நான் என்று வியப்புற்றார் நர்ஸ்.

உலகிற்கே மரபணு பற்றி விளக்கம் அளிப்பவர் தன்  மரபணு பற்றித் தெரியாமல் திகைத்தார்.

 

அவரது மனைவி என்ன திகைப்பு என்று கேட்டு விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆராய ஆரம்பித்தார்.

பின்னர் கூறினார்,”நீங்கள் தந்தை தாய் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் உங்கள் தாத்தாவும் பாட்டியுமே. நீங்கள் உங்கள் சகோதரி என்று நினைத்துக் கொண்டிருபபவர் தான் நிஜத்தில் உங்கள் தாயார்!”

திகைத்துப் போன நர்ஸால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

 

அவரது தந்தையும் தாயும் உயிருடன் இல்லை.

சகோதரியும் உயிருடன் இல்லை.

அவர் வாழ்ந்த வீடு பெரிய அத்தையின் வீடு. அந்தப் பெரிய அத்தையும் உயிருடன் இல்லை.

என்ன செய்வது?

பெரிய அத்தையின் பெண் உயிருடன் வாழ்கிறார். உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டார்.

“உனது வாழ்வில் ஒரு மர்மம் இருக்கிறது” என்று கூறிய அவர் “நீ பிறந்த போது எனக்கு 11 வயது. உனது தாயார் 17 வயதிலேயே கர்ப்பமானாள். கர்ப்பமானவுடன் அவரை இங்கு கொண்டு வந்து விட்டனர். நீ பிறந்தாய். உன்னை உன் தாத்தாவும் பாட்டியும் கொண்டு சென்று வளர்க்க ஆரம்பித்தனர். உன் அம்மாவை உனது சகோதரி என்று சொல்லி விட்டனர். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசிய பிரமாணமும் செய்ய வைத்தனர்.

 

உன் தாயார் பின்னர் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இது தான் நடந்த கதை” என்றார் அவர்.

 

இப்போது உலகப் பெரும் விஞ்ஞானியின் தலை சுழன்றது.

அப்போது தனது தந்தை யார்?

உறவுகள் எல்லாம் இப்போது அவருக்கு மாறிப் போனது.

அப்பா என்று கூப்பிட்டு வந்தவர் தாத்தா ஆனார். அம்மா என்று அழைத்தவர் பாட்டி ஆனார். சகோதரி மிரியம் இப்போது அம்மா ஆகி விட்டார்.

 

சகோதரர்கள் என்று நினைத்தவர்கள் இப்போது மாமன்மார் ஆகி விட்டனர். ஒரே குளறுபடி உறவுமுறையில்!

“நான் என்ன செய்வது? நான் ஒரு மோசமான மரபணு விஞ்ஞானி இல்லை. எனது குடும்பத்தினர் தான் என் மரபணு பற்றிய விஷயத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரகசியமாக வைத்து விட்டனர்!” என்கிறார் நர்ஸ்!

 

அவரது சகோதரி மிரியம் – இப்போது ரகசியம் தெரிந்து விட்ட நிலையில் அவரது அம்மாவாகி விட்ட மிரியம் – திருமணம் செய்து கொண்ட போது அவரது கணவரை ஒரு கையிலும் குழந்தை நர்ஸை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட போட்டோ நர்ஸின் நினைவுக்கு வந்தது.

தன் சொந்த அம்மா பிரியப் போகிறார் என்பதைத் தாங்க முடியாமல் தானோ என்னவோ அன்று நடந்த நிகழ்வு ஒன்றைச் சொன்னார் நர்ஸ். திருமண ஸ்பெஷல் கேக் வைத்திருந்த குட்டி மேஜையின் அடியில் புகுந்த நர்ஸ் அதன் காலை வாரி விட வெடிங் கேக் கீழே விழுந்து உடைந்து போனது. இது ஒரு சகுனமோ என்னவோ என்கிறார் நர்ஸ்.

 

தனது டி என் ஏ சாம்பிளையும் குடும்ப உறுப்பினர்களின் டி என் ஏ சாம்பிள்களையும் சோதனைக்கு அனுப்பியும் நர்ஸால் ஒன்றும் புதிதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

 

உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசைப் பெற்றவர்; உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் தந்த அறுபதுக்கும் மேற்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள்  பெற்றவர்; ஏராளமான விருதுகளைப் பெற்றவர். – அதைத் தனியே எழுதினால் ஒரு புத்தகமாகவே ஆகி விடும்!-  அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானிக்கு – மரபணு ஞானிக்குத் – தன் சொந்த வாழ்க்கை பற்றிய மர்மம் ஒரு விசித்திரமான விஷயமாக ஆகி விட்டதை விதியின் கொடுமை என்று சொல்வதா?

 

தன் தந்தை ஒரு சர்வீஸ்மேனாக இருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார் அவர்.

 

அவரது வாயால் வந்த உண்மைகளை உலகின் தலை சிறந்த பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டன.

 

சிலரது வாழ்க்கை விசித்திரமானது மட்டுமல்ல; மர்மமானதும் கூட என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் சர் பால் நர்ஸ்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

விண்வெளி வீ ரர்களிலேயே மிகவும் துணிச்சல்காரர் என்ற பெயரெடுத்த ஜான் யங் தனது 87ஆம் வயதில் 5-1-2018 அன்று மரணமடைந்தார்.

 

அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை நினைவு கூறும் விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் துக்கத்தை இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர். 1972இல் ஏப்ரல் மாதம் சந்திரனில் இறங்கிய அபல்லோ 16 விண்கலத்தின் கமாண்டராக இருந்தவர் யங். சந்திரனின் ஆராயப்படாத புதிய பகுதியில் தனது ல்யூனார் ரோவரை இயக்கி சாதனை படைத்தார். சுமார் 200 பவுண்ட் எடையுள்ள சந்திரக் கற்களைக் குவித்தார்.

 

அவரைப் பற்றிய சுவையான சம்பவங்கள் பல உண்டு.

24-9-1930 இல் பிறந்த அவர் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் ‘சந்திரனுக்கு மனிதன் செல்ல வேண்டும்’ என்ற உரையைக் கேட்டு உத்வேகம் அடைந்தார். நாஸாவில் சேர்ந்தார். 42 ஆண்டுக் காலம் பணியாற்றினார். 6 முறை விண்வெளிக்கு ஏகினார்.

நாஸாவில் அவர் சேர்ந்தவுடன் உடா என்ற இடத்தில் உள்ள தியோகால் தொழிற்சாலையில் ராக்கட்டின் இயக்கத்தைச் சோதனை செய்யும் போது ராக்கட் பூஸ்டர் பயங்கர சத்தத்துடன் சீறிப் பாய்ந்து அனைவரையும் பயமுறுத்தியது. அவரது சகாவும் அவருடன் விண்வெளியில் பின்னர் கூடப் பறந்தவருமான கிப்பன் என்பவர் அவரை நோக்கி, “ என்ன யங், இந்த மாதிரி ராக்கட்டுகளில் ஒன்றில் பறக்க ஆசைப் படுகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு உடனே யங், “ஒன்றென்ன, இரண்டில் பறக்க ஆசைப்படுகிறேன்” என்று பதிலளித்தார். அப்படியே விண்வெளியில் பறந்தும் காண்பித்தார்.

 

சந்திரனுக்கு மட்டும் மனித்ன் போனால் போதாது, இதர கிரகங்களுக்கும் சென்று கால் ஊன்ற வேண்டும் என்பதே மனித குலத்திற்கு அவர் அளித்த செய்தி. அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் நாமும் இணைவோமாக!

***

 

 

 

ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? (Post No.4652)

ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

Written by London Swaminathan 

 

Date: 23 JANUARY 2018

 

Time uploaded in London – 8-21 AM

 

Post No. 4652

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இது ஒரு பேய்க் கதை; பழமொழிக் கதை

சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

‘திராவிட பூர்வகாலக் கதைகள்’ என்ற பெயரில் நடேச சாஸ்திரி என்பார் பழங் கதைகளைத் தொகுத்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். அவை பழந்தமிழில் இருப்பதால் அவற்றைப் புதுக்கியும் சுருக்கியும் தருகிறேன்.

 

 

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள  ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள். மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.

தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம். ஆகையால் காரணத்தை அறியவில்லை.

 

ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள்.

 

தங்கை சொன்னாள்,

“முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது. மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில்தான் சாப்பிடுவேன்” என்றாள்.

அடுத்ததாக, அவள் பகன்றாள்,

“இது என்ன இரண்டரைப் படி அரிசி; இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?”

 

இதற்கு அக்காள் மறு மொழி நுவன்றாள்,

“இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்.”

தங்கை சொன்னாள்,

“எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா” என்றாள்

 

அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது.

 

 

தங்கை சொன்னாள், “பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்”

 

அக்காள் சொன்னாள்,

“இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்” என்றாள்

அப்போது திடீரென்று ஒரு சப்தம்

 

சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

வா நாம் போவோம்– என்று.

 

உடனே அக்காள் கேட்டாள்,

‘ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?’

 

அப்போது ஒரு குரல் ஒலித்தது,

“நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானூம் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்”.

 

இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம்!

 

அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.

 

இதுதான் சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

பழமொழியின் பின்னாலுள்ள கதை.

வாழ்க தமிழ்! 20, 000 பழமொழிகளுக்கும் கதையோ காரணமோ, அனுபவ அறிவோ உண்டு. எனது கட்டுரைகளைப் படித்து அறிக.

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சுபம்

பரபரப்பூட்டும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்! (Post No.4651)

 

Date: 23 JANUARY 2018

 

Time uploaded in London- 6-11 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4651

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

19-1-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 48வது) கட்டுரை

 

பரபரப்பூட்டும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்!

ச.நாகராஜன்

 

 

வானம் கண்களுக்கான தினசரி உணவு!” – ரால்ப் வால்டோ எமர்ஸன்

(The sky is the daily bread of the eyes! – Ralph Waldo Emerson)

 

1

பறக்கும் தட்டைப் பார்த்த பைலட்!

 

 

விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டு பிடித்தவற்றில் ‘டாப் ஸ்டோரீஸ்’ எவை என்று அறிய ஆவலாக இருக்கிறதா?

விண்வெளிப் பத்திரிகைகள் தொகுத்து விட்டன.

அவற்றில் முதலிடம் பெறும் சிலவற்றைக் காண்போம்.

அமெரிக்க சூப்பர்சானிக் ஜெட்டின் பெயர் F18. இதனுடைய வேகத்தை விட அதிகமாகப் பறந்த ஒன்றை விஞ்ஞானிகள் இப்போது அறிந்துள்ளனர்!

 

 

அது பறந்த வேகத்தில் கீழே இருந்த கடல் கொதித்துக் கொந்தளித்தது!. எங்கிருந்து வந்தது, எங்கு போனது என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடி மாயமாய் அது மறைந்து விட்டது!

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு கடற்படையைச் சேர்ந்த ஒரு பைலட் இந்த தகவலை அளித்துள்ளார். டேவி ஃபேவர் என்ற அந்த பைலட் இப்படிப்பட்ட பறக்கும் தட்டை 2004இல் பார்த்தாராம். அது பறந்த வேகத்தைப் போல இன்னொரு பொருளை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை என்பதை பிரமிப்புடன் அவர் பதிவு செய்திருக்கிறார்

 

 

2007ஆம் ஆண்டு அமெரிக்க அரசு இப்படிப்பட்ட பறக்கும் தட்டுகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டது. 2012இல் இந்த ஆய்வுக்கான செலவு  220 லட்சம் டாலர் என்ற தொகையை எட்டிய போது செலவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் டைம்ஸ் பத்திரிகையோ இந்தத் திட்டம் இன்னும் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக இப்போது தெரிவித்துள்ளது.

 

1950களில் காணப்பட்ட பறக்கும் தட்டுகளைப் பற்றிய இரகசிய ஆவணங்களை அமெரிக்க புலனாய்வு ஏஜன்ஸி 2016இல் வெளியிட்டுவிட்டது. இந்தப் பறக்கும் தட்டு செய்தி தான் இன்றைய பரபரப்புச் செய்தி!

 

2

நம் மண்டலத்திற்கு வந்த விருந்தாளி ஔமுவாமுவா!

 

இன்னொரு செய்தி, 2017ஆம் ஆண்டு, நமது சூரிய மண்டலத்திற்கு வருகை புரிந்த ஒரு “விருந்தாளியைப்” பற்றிச் சொல்கிறது!

அது எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. ஆனால் உற்சாகமடைந்த விண்வெளி ஆர்வலர்கள் அது பல்வேறு கிரகங்களுக்கு இடையே பறக்கும் ‘இண்டர்ஸ்டெல்லர் விண்கலம்’  என்று குதூகலப்படுகின்றனர்.

 

 

ஹவாயில் பான் STARRSI என்ற ஒரு அரியவகை டெலஸ்கோப்பை வைத்து ஆராயும் போது இது சென்ற 2017 அக்டோபரில் தென்பட்டது.

 

இது செல்லும் பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது சூரிய மண்டலத்தையும் விட்டுத் தாண்டிச் சென்று ஓடும் ஒரு பாதையில் செல்லும் விண்கலம் என்று கண்டுபிடித்துள்ளனர். சும்மா போகிற போக்கில் இது நமது சூரிய மண்டலத்தை எட்டிப் பார்த்திருக்கிறது.

 

டிசம்பரில் இது பற்றிய ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் இதற்கு ஔமுவாமுவா (Oumuamua) என்ற பெயரைச் சூட்டினர். இது ஒரு ‘காமட்’டாக இருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு.

சூரியனால் அது எப்படி தகிக்கப்படாமல் இருக்கிறது? இதற்கு விஞ்ஞானிகள் சொல்லும் சமாதானம் அந்த விண்பொருளைச் சுற்றி கார்பன் நிறைந்த பூச்சு இருந்து அதைச் சூரிய உஷ்ணத்திலிருந்து காத்திருக்கக்கூடும் என்கின்றனர். இதன் சிக்னலைக் கண்டுபிடிக்க பல ரேடியோ அலைவரிசையில் முயன்று பார்த்தும் இது சிக்கவில்லை. ஆகவே மறைந்திருந்து தாக்கும் ஒரு ரகசிய முறையில் இது பறந்திருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படியானால் இது அயல் கிரகம் ஒன்றிலிருந்து வந்த பறக்கும் பொருள் என்று ஆகி விடும்.

 

 

3

அயல்கிரக பாக்டீரியா!

 

அடுத்த செய்தி ரஷியாவிலிருந்து வருகிறது. ரஷிய விண்வெளி வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov)  2017 நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாக்டீரியாவைப் பற்றித் தகவல் அளித்திருக்கிறார்.பன்னாட்டு விண்வெளி நிலையமான இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் காணப்பட்ட இந்த பாக்டீரியா அயல்கிரகம் சார்ந்த ஒன்று என்கிறார். ரஷிய அரசு செய்தி நிறுவனமான டாஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் விண்வெளி ஸ்டேஷனின் முகப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பிள்கள் பூமிக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்.

ஆனால் சில ஆய்வாளர்களோ இது பூமியிலிருந்து ஏற்பட்ட தொற்றுக் கிருமி தான் என்கின்றனர். இப்படி விண்வெளி உயிரினம் பற்றி ரஷியா 2014இல் ஒரு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது. அதை அப்போதே அமெரிக்கா மறுத்தது. இப்போதும் இந்த செய்தி ரஷிய செய்தி என்பதால் “என்னத்தைச் சொல்வது” என்கிறது!

 

4

செவ்வாயில் நீர் ஆதாரம் இல்லை!

இன்னொரு செய்தி செவ்வாய் கிரகம் பற்றியது! அவ்வப்பொழுது செவ்வாயில் நீர்ப் பரப்பு இருக்கிறது; நிச்சயமாக இருக்கிறது என்று தகவல்கள் வரும். 2015இல் இப்படி நீர் இருப்பதற்கான அறிகுறியை அறிவியல் ஆய்வு உறுதி செய்தது. ஆனால் 2016இல் இப்படி நீர் இருப்பது ஒருவேளை விண் மண்டலத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு வந்து விழுந்ததோ என்ற ஐயப்பாட்டை இன்னொரு ஆய்வு ஏற்படுத்தியது.

ஆனால் 2017இல் நடத்தப்பட்ட இரு ஆய்வுகள் மூலமாக அங்கு நீர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அறியப்படுகிறது!

 

 

5

உஷ்ண கிரகத்தில் டைட்டானியம் பனி!

கொசுறுத் தகவல் ஒன்று! ஹப்பிள் டெலஸ்கோப்பை வைத்து விண்வெளியை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் கெப்ளர் – 13 Ab என்ற கிரகத்தை ஆராய்ந்த போது அவர்கள் திகைத்தனர். இது ஒரு எக்ஸோபிளானட். அதாவது சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகம்!

இது பிரம்மாண்டமான வியாழ கிரகத்தை விட ஆறு மடங்கு பெரியது. 1730 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. (இதை மைல் கணக்கில்  கணக்கிட்டால் மலைப்பு தான் வரும்). இதன் உஷ்ணம் 2760 டிகிரி செல்ஸியஸ்! இந்த கிரகத்தில் டைட்டானியம் டை ஆக்ஸைடு பனி போல படர்ந்திருக்கிறதாம்!

மிக அதிக உஷ்ணநிலை கொண்ட கிரகத்தில் டைட்டானியம்  எப்படிப் படர முடியும். விஞ்ஞானிகள் பல்வேறு கொள்கைகளை முன் வைக்கின்றனர்.

ஆக இப்படிப் பல மர்மங்களை விண்வெளி நமக்குத் தருகிறது.

விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் “துப்புத் துலக்கும்” வேலையை ஷெர்லாக்ஹோம்ஸ் போலச் செய்து வருகின்றனர்.

எல்லையற்ற பிரபஞ்சவெளியில் எல்லையற்ற மர்மங்கள்!!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கணித மேதையும் விஞ்ஞானியும் தத்துவ ஞானியுமான ப்ளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal பிறப்பு 19-6-1923 மறைவு 23-11-1662) வாழ்நாள் முழுவதும் உடல் வியாதியால் அவஸ்தைப்பட்டவர். பதினெட்டாம் வயதிலிருந்து தினமும் வலியினால் துடித்து வந்தவர்.

அவருக்கு 1654ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது. இரவு 10.30லிருந்து 12.30க்குள் ஒரு அபூர்வமான ஆன்மீக அனுபவத்தை தனது பாரிஸ் வீட்டில் படுத்துக் கொண்டிருந்த போது அவர் அனுபவித்தார். அதை அவரது வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் ‘தி நைட் ஆஃப் ஃபயர்’ (The night of Fire)  என்று பெயர் சூட்டிக் குறிப்பிடுகின்றனர்.

தனது அனுபவத்தை அவர் ஒரு சின்ன பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டார். அதை வாழ்நாள் முழுவதும் இரகசியமாகப் பாதுகாத்தார். அந்த பேப்பரை தனது சட்டையின் உள் பையில் வைத்துக் கொண்டே வாழ்ந்தார்.

 

அப்படி ஒரு பேப்பர் இருப்பது அவர் இறந்த பிறகு தான் தெரிந்தது. அந்த வரிகளுக்கு மெமோரியல் (Memorial) என்று பெயர்.

அந்த ஜொலிக்கும் தீயில் அவர் கண்டது என்ன? தனது தெய்வீகக் காட்சியைக் கண்டவுடன் அவர் உடனடியாக எழுதியது இது:

God of Abraham, God of Isaac, God of Jacob, not of the philosophers and scholars. Certitude, certitude, feeling, joy, peace. God of Jesus Christ. My God and your God. Thy God will be my God.

 

இப்படி ஆரம்பித்துத் தொடர்கிறது வரிகள். ‘இயேசு கிறிஸ்துவுக்கு முழுதுமாக சரணாகதி’ என்ற இந்த அனுபவத்தைத் தொடர்ந்து அவர் கணிதத்தையும் அறிவியலையும் விட்டு விட்டார்.

ஆன்மீக திசையில் அவர் பாதை திரும்பியது.

“என்னைக் கடவுள் ஒருபோதும் கைவிட வேண்டாம்” (May God never Abandon me) என்பது தான் அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடைசி வரி!

அபூர்வமான ஆன்மீக அனுபவம் பெற்ற உலகின் ஒரே அதிசய விஞ்ஞானி பாஸ்கல் தான்!

***

 

 

 

 

எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும்? மநு தரும் அதிசய தகவல்! (Post.4632)

 

Written by London Swaminathan 

 

Date: 18 JANUARY 2018

 

Time uploaded in London  7-54 am

 

 

 

Post No. 4632

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

மநு நீதி நூல்- Part 11

எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன

கிடைக்கும்? மநு தரும் அதிசய  தகவல்! (Post.4632)

மநு நீதி நூல் இரண்டாம் அத்யாயம் தொடர்ச்சி

 

163.பிராமணர்கள் வில்வம் அல்லது பலாச மரத்தால் ஆகிய தண்டத்தையும் (கையில் வைத்திருக்கும் குச்சி), க்ஷத்ரியர்கள் ஆல், கருங்காலியால் ஆகிய தண்டத்தையும், வைஸ்யர்கள் அத்தி, இரளி ஆகிய தண்டத்தையும் வைத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டில் ஒரு தண்டம் மட்டுமே இருக்கலாம்.. (2-45)

164.தடியின் அல்லது குச்சியின் உயரம் பிராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன் ஆகியோருக்கு தலை, நெற்றி, மூக்கு அளவில் இருக்க வேண்டும்.

 

165.இந்த குச்சிகள் வடுக்கள் இல்லாததாகவும், கோணல் இல்லாமலும், அழகானதாகவும், தீயினால் கருகாததாகவும், பார்ப்போருக்குப் பயம் ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். மேலும் அந்தந்த மரத் தோலுடன் இருக்க வேண்டும்.

 

166.அவரவர்க்குரிய தண்டத்துடன் புறப்பட்டு, சூரியனை நமஸ்கரித்து, அக்னியை (தீ) வலம் வந்து அவரவர்களுக்குரிய கோஷங்களுடன் பிச்சை கேட்க வேண்டும்.  இனி சொல்லப் போகிற விதிப்படி பிச்சை கேட்க வேண்டியது.

 

  1. பிராமணன் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்றும், க்ஷத்ரியன் பிக்ஷாம் பவதி தேஹி என்றும், வைஸ்யன் தேஹி பிக்ஷாம் பவதி என்றும் சொல்லி பிச்சை கேட்க வேண்டும் (Permutation combinations!)

168.பூணூல் போட்டவுடன் எடுக்கும் முதல் பிச்சையை தாயிடம், அல்லது அவளுடைய சஹோதரிகளிடம், அல்லது தனது சொந்த சஹோதரியிடம் செய்ய வேண்டும். இவர்கள் இல்லாத பட்சத்தில் அந்த மாணவன் மீது அன்புடையோரிடம் எடுக்க வேண்டும்.(2-50)

 

169.இவ்வாறு மூன்று பேரிடம், போதுமான அளவு வாங்கிய பின்னர், அதை குருவுக்கு நிவேதனம் செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து ஆசமனம் செய்துவிட்டுப் புசிக்க வேண்டும்.

 

  1. ஆயுளை விரும்புபவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை (புகழ்) விரும்புபவன் தெற்கு முகமாகவும், சம்பத்தை (செல்வம்) விரும்புபவன் மேற்கு முகமாகவும் சத்தியத்தை விரும்புபவன் வடக்கு முகமாகவும் அமர்ந்து சாப்பிடுக.

 

171.இரு பிறப்பாளன் (மூன்று வருணத்தார்) தினமும் கைகால் கழுவி, உணவைப் பூஜித்துவிட்டு, பரிசேசனம் செய்து அன்னத்தை உண்ண வேண்டும்; பின்னர் ஆசமனம் செய்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

(பரிசேசனம்+ மந்திரம் சொல்லி நீரால் அன்னத்தைச் சுற்றுதல்.

ஆசமனம்; கையில் உளுந்து மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து மந்திரம் சொல்லி உண்ணல்).

 

 

172.தினமும் உண்ணும் உணவு இறைவனின் வடிவம் (பரப் பிரம்ம ஸ்வருபம்) என்பதால் உணவை நிந்திக்கக்கூடாது. அதைப்போற்றிப் புகழ்ந்து, பார்த்து, சந்தோஷத்துடன் உண்ண வேண்டும்.

 

173.அன்னத்தைப் பூஜித்து உண்டால் தைரியமும் உணவின் சத்தும் (பலன்) கிடைக்கும்;  இல்லாவிடின் இது அழிந்துபோகும்

 

174.தான் உண்ட மிச்சத்தை எவனுக்கும் இடக்கூடாது. இரவும் பகலும் மட்டும் இரண்டே முறைதான் சாப்பிடலாம். அதிகமாகப் புசிக்ககூடாது; அதிகமாக உண்பது இக, பர லோக நன்மைகளைத் தராது.

எனது கருத்துகள்:

 

மநு ஒரு பெரிய உளவியல் நிபுணன் (great Psychologist). மநு ஒரு பெரிய விஞ்ஞானி- அறிவியல் வித்தகன் (great scientist); மநு ஒரு டாக்டர் (physician). எப்படி?

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்றனன் வள்ளுவன்.

 

மூன்று வர்ணத்து பாலகர்களும் முதலில் பிச்சை எடுப்பது அம்மாவிடமோ சின்னம்மாவிடமோ அல்லது பெரியம்மாவிடமோ, அவர்கள் வராவிடில் அல்லது அப்படி உறவுகள் இல்லாவிடில் சொந்த சஹோதரியிடமோ செய்ய வேண்டும். அவர்களும் பூணூல் விழாவுக்கு வரவில்லையென்றால் உன்னிடம் அன்பு பாராட்டுவரிடம் முதல் பிஷையை வாங்கிக்கொள்! என்ன அற்புதமான அறிவுரை!!

 

பச்சிளம் பிராஹ்மணப் பையன், அல்லது க்ஷத்ரியப் பையன் அல்லது வைஸ்யப் பையன் முதல் நாளிலேயே தெருவில் சென்று பிச்சை எடுத்து, அவர்கள் சீ’, போ!’ என்று சொல்லிவிட்டால் அந்த இளம் உள்ளம் எவ்வளவு வருந்தும்? இந்த அற்புதமான உண்மை தெரிந்த அன்பே உருவான மாபெரும் ரிஷி மநு!

 

மஹா அற்புதம்; அவர் ஒரு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist).

 

எந்த திசையில் அமர்ந்து எந்த திசையை நோக்கி உணவு அருந்தினால் என்ன கிடைக்கும் என்றும் சொல்கிறார். அவர் ஒரு பெரிய டாக்டர். இன்னும் விஞ்ஞானம் கண்டு பிடிக்காத விஷயங்களை அவர் ஞான த்ருஷ்டியில் கண்டு நமக்கு வழங்கியுள்ளார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நியூ ஸைன்டிஸ்ட் அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் (New Scientist or Scientific American) பத்திரிக்கையில் “திசையும் உணவும்” என்று ஆராய்ச்சிக் கட்டுரை வரும்போது நாம் வியப்போம்; அன்றே சொன்னார் எங்கள் மநு என்று!

மநு ஒரு பெரிய பொடானிஸ்ட் (Botanist); அவரது தாவரவியல் அறிவு வியக்கத்தக்கது. மரம் வளர்ப்பது பற்றியும், மரங்களை வெட்டுவது பாவம் என்றும் வரப்போகும் அத்தியாயங்களில் விளம்புவார். இப்போது எந்த ஜாதிக்காரன் எந்த குச்சி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மொழிவது அவர்தம் தாவரவியல் அறிவுக்குச் சான்று

 

 

இங்கே மேலும் ஒரு கருத்தையும் சுட்டிக் காட்டுவேன். மநு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முந்தையது எனது மேலை நாட்டாரும், அவர்தம் அடிவருடும் அரை வேக்காடுகளும் சொல்லும்.

 

ஆனா மநுவோ மூன்று ஜாதியினரும் பூணூல் போடுவது, கையில் தண்டம் வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது, ஒவ்வொருவரும் வெவ்வேறு வாக்கியங்களுடன் பிக்ஷை எடுப்பது,  பற்றி எல்லாம் பகர்கின்றார். இந்த வழக்கங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் கூட இருந்ததில்லை. அப்படி இருந்தால் அது புத்தர், மஹாவீரர் கதைகளில் வரும்; அவர்கள் க்ஷத்ரியர்கள்; சம்ஸ்கிருத நாடகங்களில் வந்திருக்கும்.

முன்னரே சொன்னேன்; மநு ஸரஸ்வதி நதியின் முழு நீளம் பற்றிப் பேசுகிறார். மனைவியை எரிக்கும் உடன்கட்டை வழக்கம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. மேலும் ரிக் வேதத்தில் பல மநுக்களைப் பற்றிய குறிப்புகள் உள. ஆகையால் ஒரிஜினல் மநு நீதி நூல் மிகவும் பழையது; அதில் பல இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டுள்ளன. அதுவே இன்று நம் கைகளில் தவழ்கிறது என்பது என் வாதம்.

மேலும் பிராமணர்கள் இன்று அரச மரக் குச்சியையே கையில் வைத்துப் பூணூல் கல்யாணம் நடத்துகின்றனர். மற்றவர்கள் நடத்துவதும் இல்லை. இந்தக் குச்சி, பிச்சிசை எடுக்கும் முறை, வேதக் கல்வி ஆகியனவும் அவர்களிடையே இல்லை.

 

இவை எல்லாம் எந்தக் காலத்தில் விடுபட்டது? என்பதை ஆராய்ந்தால் மநுவின் பழமை விளங்கிவிடும்!

 

இன்று டெலிவிஷன் பார்த்துக்கொண்டே உண்ணுவதால் ஏற்படும் தீங்குகளை பிரபல ஹிப்னாடிஸ்ட் (Hypnotist) பால் மக்கென்னா சொன்னதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். உணவை வணங்க வேண்டும்; புகழ வேண்டும்; சந்தோஷத்துடன் கண்ணால் பார்த்து உண்ண வேண்டும்– இவை எல்லாம் இன்று எடையைக் குறைக்க நவீன விஞ்ஞானம் சொல்லும் உத்திகள்; இதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மநு சொல்லிவிட்டார்! மேலும் உணவை நிந்திக்கக் கூடாது என்பதால் தாயையும் மனைவியையும் சமையல் அறையில் ஏசும் வழக்கமும் அறுபட்டுப் போகும். மநு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist) ; பெரிய விஞ்ஞானி! எதைச் சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சொல்லும் உணவியல் நிபுணன் (Dietician). மாணவர்கள் அதிகம் புசிக்கக் கூடாது; அளவோடு உண்டால்தான் மூளையில் பாடங்கள் பதியும் என்கிறான்; இது மேல் உலகிலும் உதவும் என்பான்.

இப்போது நாம் ஏற்றுக் கொண்ட நவீன மநு– அம்பேத்கரின்– அரசியல் சட்டத்தையே பார்லிமெண்ட் பலமுறை திருத்திவிட்டது! ஆகவே ஒரிஜினல் மநுவும் பல முறை திருத்தப் பட்டிருக்கும். இந்த மநு நூலின் சில ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக் காட்டும்- திராவிடங்களையும் மார்கஸீயங்களையும் பார்த்து அழுவதா சிரிப்பதா?

 

இரண்டாயிரத்து அறுநூற்று எண்பைத்தைந்து ஸ்லோகங்களில் சுமார் 200 மட்டுமே கண்டுள்ளோம்; இனியும் வரும்!!! பல வியப்பான விஷயங்கள் வரும்!!!

TAGS—உணவு, திசை, தண்டம், குச்சி, பிராமண, க்ஷத்திரிய, வைசிய, பூணூல்

–தொடரும்………………

ஆரோக்கியம் மேம்பட அர்த்தமுள்ள சில குறிப்புகள்! (Post No.4626)

Date: 17 JANUARY 2018

 

Time uploaded in London- 6-30 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4626

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஆரோக்கிய மேம்பாடு

 

2018 ஜனவரி ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

ஹெல்த்கேர் ஆண்டு சந்தா ரு 120/ முகவ்ரி: ஆசிரியர், ஹெல்த்கேர்,10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன்,627006

 

புத்தாண்டு 2018இல் உடல் ஆரோக்கியம் மேம்பட அர்த்தமுள்ள சில குறிப்புகள்!

ச.நாகராஜன்

1

2018ஆம் ஆண்டு பிறந்து விட்டது.போனதெல்லாம் போகட்டும், புதிதாக நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்வோம் என்று உறுதி பூணுவது இயல்பு.

 

முதலில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்ய வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொண்டு அவற்றை முழுமனதுடன் கடைப்பிடிப்போம்.

 

உடல் வலுவானால் மனம் வலுவடையும்.

மனம் வலுவடைந்தால் சிந்தனை சீரடையும்.

சிந்தனை சீரடைந்தால் சிறப்பான யோசனைகள் பிறக்கும்.

சிறப்பான யோசனைகள் பிறந்தால் சிறப்பான செயல்முறைகள் பிறக்கும்.

 

சிறப்பான செயல்முறைகள் பிறந்தால் செல்வம் கொழிக்கும்.

செல்வம் கொழித்தால் சமுதாயம் உயரும்.

சமுதாயம் உயர்ந்தால் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.

ஆகவே உடல் நல மேம்பாட்டிற்கான ஆலோசனைகளைத் தெரிந்து கொண்டு அவற்றைக் கடைப்பிடிப்போம்.

 

2

காலையில் எழுந்தவுடன் நீட்சிப் பயிற்சிகளைச் (Stretching Exercises) செய்யுங்கள். அது ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். ஜீரணத்தை அதிகரிக்கும். முதுகு வலியைப் போக்கும்.

நிச்சயமாக நல்ல காலை உணவை உண்ணுங்கள். எந்தக் காரணம் கொண்டும் அதைத் தவிர்க்காதீர்கள். உயர்ந்த நார்ச்சத்துள்ள உணவு வகைகள், பழச்சாறு, குறைந்த கொழுப்புச் சத்து உள்ள பால் நலம்.

பல் துலக்கல் ஒரு கலை. பலருக்கும் அது சரிவரத் தெரிவதில்லை. நல்ல முறையில் பல் துலக்கி, கொப்பளியுங்கள். பென்சிலை எப்படிப் பிடிப்பீர்களோ அப்படியே தான் பிரஷைப் பிடிக்க வேண்டும். இரண்டு நிமிடமாவது பற்களைத் துலக்க வேண்டும். பல் நலனைப் பற்றிய சந்தேகம் எழுந்தால் ஒரு பல் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.

மனம் ஆற்றல் பெற இப்போதைய நடைமுறையானநியூரோபிக்ஸைசெய்யுங்கள். இது மூளை சர்க்ட்யூட்டுகளை வலுவூட்டிப் பாதுகாக்கும்

பிரார்த்தனையை மறக்காதீர்கள். அறிவியல் ஆமோதிக்கும் ஒரு வழிமுறை தான் பிரார்த்தனை.

 

உள்ளிப்பூண்டு, வெங்காயம் முதலியவை நல்ல சத்தைக் கொண்டிருப்பதால் அதை உணவில் சேருங்கள்.

சிகரட் புகைப்பதை விட்டு விடுங்கள்.

 

 

கால்சியம் அளவு சரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா எனச் சரிபாருங்கள். முப்பது வயதிற்குப் பின்னர் எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 200 மில்லிகிராம் அன்றாடம் தேவை. அதுவும் மக்னீஷியத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூடான, காரமுள்ள உணவு வகைகள் எண்டார்பின்களை தூண்டி விட்டு ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தும்.

 

தக்காளி ஒரு சூப்பர் ஸ்டார். கான்ஸரை எதிர்கொள்ளும் சக்தி வாய்ந்த லிகோபென்னை அது கொண்டுள்ளது. விடமின் சி உள்ளது. சமைக்கப்பட்ட தக்காளியும் அதே சத்தைக் கொண்டிருக்கும் என்பது சுவையான செய்தி. தக்காளி ஆஸ்த்மாவைக் குறைக்கும். நுரையீரல் நோய்களைப் போக்கும்.

குறைந்த இரத்த சுகர் அளவு இருக்கக் கூடாது. ஆகவே சீரான, குறைந்த அளவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மூலிகை தேநீர் நன்கு உதவும்.

 

ஒரு நாளைக்கு 90 எம்ஜி அளவு விடமின் சி தேவை. இதைப் பெற ஐந்து முறை ப்ரஷ் ஜூஸ் (Fresh Juice) சாப்பிட வேண்டும்.

விடமின் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். பால்வகை உணவுகள், மாங்காய், மிளகாய் உள்ளிட்ட போன்றவற்றில் விடமின் உள்ளது.

உடல்பயிற்சியின் போது எனர்ஜி பானங்கள் வேண்டாம். சுத்த நீரைப் பருகினால் போதும்.

 

பரபரப்பு வேண்டாம். அடிப்படை விஷயங்களில கவனம் செலுத்துங்கள். பரபரப்பை விட்டு விட்டு நிதானமாக வேலை செய்யுங்கள்.

சிரிக்க மறக்காதீர்கள். தினசரி மனம் விட்டுச் சிரிப்பது உடல் நோய்களையும் மன நோய்களையும் போக்கும்.

உலகில் இன்று டைப்2 டயபடீஸ் கொண்டுள்ளவர்கள் அதிகம். மாரடைப்பு அபாயம் இதனால் உண்டு. ஆகவே உங்கள் குளுகோஸ் அளவுகளை அவ்வப்பொழுது சரி பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள்.

 

டயட்டில் இருக்கிறேன் என்று சொல்லாதீர்கள். மாறாக சீரான உணவுப் பழக்கங்களை நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளுங்கள்.

 

மது பானம் வேண்டாம்.

உப்பை உணவில் அதிகம் சேர்க்காதீர்கள். தினசரி நாம் சேர்க்க வேண்டிய உப்பின் அளவு 5-6கிராம் மட்டுமே.

1.5 லிட்டர் நீரை தினமும் அருந்த மறக்காதீர்கள்

இறுக்கமான உடை வேண்டாம். சாதாரணமாக உங்கள் நரையீரலின் கீழ்ப்பகுதிகளும் உதரவிதானமும் மேலும் கீழும் அசையும். இறுக்க உடை உங்கள் நுரையீரலின் மேல் பாகத்தில் மட்டுமே சுவாசிப்பதை ஏற்படுத்தும். இது தோள்களில் டென்ஷனை ஏற்படுத்தும். சுவாசிப்பதையும் கஷ்டமாக்கும்.

அதிகச் சுமையுள்ள ஹாண்ட் பேக்கைத் தோளில் சுமக்காதீர்கள.

மார்புப் பகுதியை  முன்னே வையுங்கள். தோள்களைப் பின்னே கொண்டு செல்லுங்கள். நேராக நில்லுங்கள். நன்றாக நடை பயிலக் கற்றுக் கொள்ளுங்கள். சரியான உடல் இருக்கை நிலையைக் கைக்கொள்ளுங்கள். அந்தப் பழக்கம் வாழ் நாள் முழுவதும் நீடிக்கும்.

 

இன்னும் இது போன்ற நிரூபிக்கப்பட்ட நல்ல ஆரோக்கிய மேம்பாட்டுக் குறிப்புகளைச் சேர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டு அதை அப்படியே அமுல் படுத்துங்கள்.

 

பிறகென்ன, ஹெல்தி, ஹாப்பி லைஃப் தான்!

ஹாப்பி 2018!

மேலும் பற்பல ஆரோக்கிய ஆண்டுகளைப் பார்க்க வாழ்த்துக்கள்!

****

 

 

 

கபுகதிகர் கசெகய்கதிகககளை கவிகடுகவிகத்கத (Post No.4614)

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London- 6-46 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4614

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

பாக்யா 12-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 47வது) கட்டுரை

 

கபுகதிகர் கசெகய்கதிகககளை கவிகடுகவிகத்கத கபெகண்கமகணிகககள்!

.நாகராஜன்

 

“இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க பழங்குடியினரின் மொழி சங்கேத வார்த்தைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதை அறிந்த ஜெர்மனியும் ஜப்பானும் தங்கள் மாணவர்களை அமெரிக்க பழங்குடியினரின் மொழிகளான செரூகி, சாக்டா, கொமென்சே போன்ற மொழிகளைக் கற்குமாறு செய்தனர்” – உலக மகா யுத்த வரலாற்றுத் தகவல்.

 

தலைப்பைப் பார்த்து மலைக்க வேண்டாம். தவறாக கம்போஸ் செய்து விட்டார்களோ என்று குழம்பவும் வேண்டாம். எல்லா ‘க’வையும் நீக்கி விடுங்கள். புதிர் விடுபட்டு விடும்.

புதிர் செய்திகளை விடுவித்த பெண்மணிகள் – இது தான் தலைப்பு.

யார் அவர்கள் என்று பார்ப்போம்.

 

இரண்டாவது உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்பதை முதலில் தெரிந்து கொண்டவர் ஒரு பெண்மணி! அவர் பெயர் வர்ஜினியா டி. அடர்ஹால்ட் (Virginia D.Aderholt).

இரகசியமாக ஜெர்மனியிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் அனுப்பப்படும் குறியீட்டு, சங்கேத செய்திகளை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

 

நாஜி ஜெர்மனி நேச நாடுகளிடம் சரணடைந்து விட்டது. ஜப்பானும் சரணடையப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஜப்பான் ஸ்விட்ஸர்லாந்துக்கு அனுப்பும் செய்திகளைக் கேட்கப் பணிக்கப்பட்டவர் அடர்ஹோல்ட்.  அவரே ரகசிய செய்திகளின் “கோடை (Code) உடைத்து” உண்மைச் செய்தியைத் தர வேண்டும்.

 

ஜப்பானிலிருந்து நிபந்தனையற்ற சரணாகதி என்ற செய்தி ஸ்விட்சர்லாந்தில் பெறப்பட்டது. இதை இடைமறித்துக் கேட்ட அடர்ஹோல்ட் ஓடோடிச் சென்று அனைவருக்கும் செய்தியைச் சொன்னார்.

உடனடியாக செய்தி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹாரி எஸ். ட்ரூமனுக்குப் பறந்தது. 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி. கோடைக்காலத்தின் அழகிய மாலை நேரம்.

ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு இந்தச் செய்தியைச் சொன்னார் :” இரண்டாவது உலக மகா யுத்தம் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.”

இதைக் கேட்ட அமெரிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வந்து குதித்தனர்; ஆனந்த நடனமாடினர்; கூவினர்; ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

 

ஆனால் உலக மகா யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரச் செய்ய அரும் பணி ஆற்றிய ஒரு பிரிவே மறக்கப்பட்டு விட்டது.

அந்தப் பிரிவு தான் கோட் ப்ரேகிங் பிரிவு. அதாவது கோட் எனப்படும் சங்கேதச் செய்திகளை உடைத்து உண்மைச் செய்தியை அறியும் பிரிவு.

இதில் மட்டும் பத்தாயிரம் பெண்கள் வேலை பார்த்தனர். ஆரம்பத்தில் பெர்ல் ஹார்பரில் ஜப்பான் தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா இரண்டாம் உலக மகா யுத்தத்தில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

அப்போது பிரிட்டனில் இந்த இரகசியச் செய்திகளை உடைக்கும் பிரிவில் பல்லாயிரக் கணக்கானோர் பணியாற்றினர். ஆனால் அமெரிக்காவிலோ வெறும் 200 பேர்கள் மட்டுமே இதில் பணியாற்றினர்.

 

ஆனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்க ராணுவம் ஏராளமான பெண்களை இந்தப் பணியில் அமர்த்தியது.

ஒரு வித வசதியுமின்றி வெயிலில் சொட்டச் சொட்ட வியர்வை நனைய வேலை பார்த்த இவர்களுக்கு கெட்ட பெயரும் கூட! ராணுவ உடையில் வேலை பார்க்கும் வேசிகள் என்று இவர்களைப் பற்றிய வதந்தி பரவியது. ஆனால் இவர்களோ தேச நலனை மனதில் கொண்டு அமைதியாகப் பணியாற்றினர்.

இவர்கள் தந்த செய்திகளால் ஜெர்மனி மற்றும் ஜப்பானைச் சேர்ந்த கப்பல்கள் நேச நாட்டுப் படையினரால் மூழ்கடிக்கப்பட்டன.

 

பெர்ல் ஹார்பரைத் தாக்க திட்டமிட்ட இசோரோகு யமமோடோ என்ற ஜப்பானியரின் விமானத்தைச் சுட்டு வீழ்த்த உதவியதும் இந்த ‘கோட் கேர்ள்ஸ்” தான்!

எதிரியின் கப்பல்கள் எங்கு நிலை கொண்டுள்ளன, எதிரிகளின் விமானம் எந்தத் திசையில் எப்போது வரும், எதிரியின் ராணுவம் எந்தப் பகுதியில் எப்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பன போன்ற தகவல்களை ஒரு உளவுப் படை போல இந்த ரகசிய செய்தி தரும் படை பணியாற்றியது.

ஆனால் இரகசியம் காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் இவர்களைப் பற்றி உலகம் இன்றளவும் அறிந்திருக்கவில்லை.

பிரபல எழுத்தாளரான லிஸா முண்டி (Liza Mundy) என்ற பெண்மணி இதை ஆராயக் களத்தில் இறங்கினார். அதன் விளைவாக அரிய பல செய்திகளையும், உண்மைச் சம்பங்களையும் அடக்கிய “கோட் கேர்ள்ஸ்” (Code Girls) என்ற புத்தகத்தை எழுதி இப்போது வெளியிட்டுள்ளார்.

20 கோட் ப்ரேக்கர்ஸ் எனப்படும் புதிர்களை அவிழ்த்த பெண்மணிகளை இவர் நேரில் சந்தித்து பல அரிய விஷயங்களைச் சேகரித்துத் தொகுத்தார்.

 

“Loose lips sink ships” (உளறும் வாய் கப்பல்களை மூழ்கடிக்கும்) என்பதை அந்தப் பெண்மணிகள் தினமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்களாம். அவ்வளவு இரகசியமாக ஒரு அனாவசிய வார்த்தையையும் பேசாது, உளறாமல் பணியாற்றினார்களாம் அந்தப் பெண்மணிகள்!

இவர்கள் அனைவரும் மிக இள வயதில் இப்பணிக்கு வந்தவர்கள். கணிதம், புள்ளி விவரம், பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் நிபுணத்வம் பெற்றவர்களால் தான் சங்கேதச் செய்திகளை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை ரேடியோவில் இடைமறித்துக் கேட்டு அதன் உண்மையை அறிந்து தக்கபடி இராணுவம், கடல் படை,விமானப் படை ஆகியவற்றிற்கு உதவ முடியும்!

 

“Climb Mount Nitaka” என்ற வார்த்தைகள் ஜப்பானிய போர் விமானங்களுக்குத் தரப்பட்டது. பேர்ல் ஹார்பரைத் தாக்கலாம் என்பதற்கான சங்கேத வார்த்தைகள் இவை. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பி.பி.சி பல தனிநபர்களுக்கான செய்திகளை ஒலிபரப்பியது. ஆனால் இவை உண்மையில் ராணுவத்தினருக்கான சங்கேத செய்திகள்.

 

The Princess wears red shoes  என்றோ Mimi’s Cat is asleep under the table என்றோ ஒலிபரப்பப்பட்ட செய்திகள் உண்மையில் மிக ரகசியமாக ராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்ட கட்டளைகளாகும்.

இரகசியமாக இப்படிச் செய்திகளைப் பரிமாறிக் கொள்வது என்பது பண்டைய காலம் தொட்டே இருந்து வரும் ஒரு விஷயம்.

யுத்த காலத்தில் ஒற்றர்கள் செய்திகளை இப்படி சங்கேத மொழியில் தான் அனுப்புவார்கள்.

அதுமட்டுமல்ல, மற்றவர்கள் எதிரில் இருக்க காதலர்கள் எப்படி செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்கள்? சமிக்ஞைகள் மூலமாக! முன்னரே தீர்மானித்துக் கொண்டபடி கையைத் தலையில் தொட்டால் ஆற்றங்கரைக்கு வா, இரண்டு கைகளையும் கோர்த்தால் வராதே என்பன போன்ற சமிக்ஞைகள் பழங் காலத்திலேயே உண்டு.

என்றாலும் கோட் என்பது ஒரு பெரும் தொழில்நுட்பக் கலையாக மாறியது இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தான்!

 

நேச நாடுகளின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த இந்தப் பெண்மணிகளை உலகம் ‘கோட் கேர்ள்ஸ்’ புத்தகம் மூலமாக ஒரு சிறிது அறிகிறது, இன்று!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கரோல் இசை 2017இல் ஒரு புது வடிவம் பெற்றது.

பிரபல கம்ப்யூட்டர் மேதையான ஆலன் டூரிங் (Allan Turing) தனது கம்ப்யூட்டரில் இசை அமைத்த இரண்டு பாடல்களை இப்போது (2017இல்) நியூஜிலாந்தில் உள்ள காண்டர்பெர்ரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மீண்டும் உருவாக்கி இருக்கிறார்கள்.

1951ஆம் ஆண்டு. டூரிங் கம்ப்யூட்டரில் இசை நோட்ஸ்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு கம்ப்யூட்டரில் இசையை உருவாக்க அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. முதல் இசை நோட்ஸ்களை உருவாக்கி விட்டதோடு சரி, பேசாமல் இருந்து விட்டார். ஆனால் பள்ளி ஆசிரியையான கிறிஸ்டோபர் ஸ்ட்ராச்சி (Christopher Strachey) என்பவரைத் தன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த அனுமதித்தார். ஒரு நாள் ஸ்ட்ராச்சி அமைத்த இசையைக் கேட்டு  டூரிங் மகிழ்ந்து போனார். நல்ல ஷோ என்று பாராட்டினார். அந்தப் பாடல்கள் ஒலிபரப்பப்பட மக்கள் அதை வரவேற்றனர்.

 

ஆக 67 வருடங்களுக்கு முன்னதாகவே கம்ப்யூட்டர் இசை தொடங்கி விட்டது. பெருமையெல்லாம் டூரிங்கிற்கும் ஸ்ட்ராச்சிக்கும் உரியது!

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி …

https://tamilandvedas.com/…/காதல்-கடிதம்-எழுத-ர…

Translate this page

19 Mar 2013 – காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழிபோர்க் காலங்களிலும், படை மற்றும் ராணுவ தளவாட நகர்த்தல் பற்றித் தளபதிகளுக்கு தகவல் அனுப்பும் போதும் படைத் தலைவர்கள் ரகசிய சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவர். இது எகிப்தில் துவங்கியதாகக் கலைக்களஞ்சியங்கள் …

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி …

swamiindology.blogspot.com/2013/03/blog-post_8896.html

19 Mar 2013 – போர்க் காலங்களிலும், படை மற்றும் ராணுவ தளவாட நகர்த்தல் பற்றித் தளபதிகளுக்கு தகவல் அனுப்பும் போதும் படைத் தலைவர்கள் ரகசிய சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவர். இது எகிப்தில் துவங்கியதாகக் கலைக்களஞ்சியங்கள் கூறியபோதும் இந்தியாவில் துவங்கியது …

Techniques of Secret Writing in India | Tamil and Vedas

Techniques of Secret Writing in India

19 Mar 2013 – Techniques of Secret Writing in India. During war times and military expeditions, army personnel use coded language so that the enemies wouldn’t understand the message. But in the ancient world thissecret language was used for different purposes. According to encyclopaedias it was used in Egypt 5000 …

 

பனங்காட்டு நரியும், பணம் காட்டும் நாயும் (Post No.4610)

Pictures are from newspapers

Written by London Swaminathan 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London  19-33

 

 

 

Post No. 4610

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

நரி முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அட! பனங்காட்டு நரி பணம் தருகிறதோ இல்லையோ நாய் பணம் தரும்; அதுவும் லண்டன் நாய் பணம் தரும்!

 

உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் ஒன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையம். அங்கு ஜெஸ்ஸி என்ற பெயருள்ள ஒரு நாயை கள்ளப் பணத்தைக் கண்டு பிடிக்கப் பயன்படுத்துகிறார்கள்; அதாவது பணம் அடிக்கப் பயன்படுத்தும் மையை (INK) முகர்ந்து பார்க்கும் சக்தி இதற்கு உண்டு. இதனால் யார் பணம் கடத்தி வந்தாலும் இது கண்டு பிடித்து வாலாட்டும். கடத்தல்காரர்களின் வாலை ஒட்ட நறுக்கிவிடும்.

 

ஹீத்ரோ விமான நிலையத்தில் ஐந்தே மாதங்களுக்குள் இது பத்து லட்சம் ஸ்டெர்லிங் பவுண்டு (Sterling Pounds) மதிப்புள்ள கரன்ஸி நோட்டுகளைக் கண்டு பிடித்துவிட்டது. இந்த நாயின் வயது — குட்டி நாயின்- வயது இரண்டுதான்!

 

ஒருமுறை சரக்குப் பிரிவில் அனுப்பப்பட்ட மூன்றரை லட்சம் பவுன்களைக் கண்டுபிடித்தது. யாரேனும் கைப் பைகளில் அதிகம் பணம் வைத்திருந்தால் கண்டு பிடித்துவிடும். அதற்கு நியாயமான விளக்கம் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும்.

இது தவிர வேறு வழிகளிலும் கள்ளக் கடத்தல் பணம் கண்டு பிடிக்கப்படுவதால் கடந்த ஓராண்டில் மட்டும் 80 லட்சம் பவுன்களை பார்டர் ஸெக்யூரிட்டி ஃபோர்ஸ் (Border Security Force) கண்டுபிடித்துள்ளது. ஒருவர் பெருந்தொகையைக் கைப் பையில் கொண்டு சென்றார்; ஜெஸ்ஸி பார்த்து விட்டது; அந்தப் பயணியிடம் விளக்கம் கேட்டபோது லாட்டரிப் பரிசு விழுந்தது என்றார். அது பொய் என்று தெரிந்தவுடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ஜெஸ்ஸியின் புகழ் பரவத் துவங்கிவிட்டது; லண்டன் பத்திரிக் கைகளின் முதல் பக்கத்தில் ஜெஸ்ஸிக்கு பிரதான இடம்;

நாய்க்கு அடித்தது யோகம்!

 

–சுபம்–

காப்பிகுடித்தால் 100 ஆண்டுகள் வாழலாம்! (Post No.4608)

Einstein image in Coffee!

 

Written by London Swaminathan 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London  6-32 AM

 

 

 

Post No. 4608

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

பிரான்ஸ் நாட்டின் கல்வி நிபுணர், நூல் ஆசிரியர் பாண்டநெல் (Fontenelle) என்பவர் ஆவார். அவருடைய முழுப் பெயர் பெர்னார்ட் லெ பொவியர் தெ பாண்டநெல் என்பதாகும். அவர் 1657 முதல் 1757 வரை வாழ்ந்தார்.

 

பாண்டநெல் மிகவும் காப்பி குடித்ததால் டாக்டர்களுக்கு மிகவும் கவலை. அவருக்கு 80 வயதானபோது டாக்டர்கள் அவரைச் சந்தித்தனர். அவருக்குப் புரியும்  வகையில், மெதுவாக, அழகாக டாக்டர்கள் பேசினர்.

 

“அன்பரே, இந்தக் காப்பி இருக்கிறதே. அது ஒரு விஷம்– உமது உடலை மிகவும் பாதிக்கும்; விஷம் என்று சொன்னால் போதாது. அது ‘மெதுவாக’க் கொல்லும் விஷம்– என்றெல்லாம் விளக்கினர்.

 

அவர் இதைப் புரிந்து கொண்டாரா, இதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அறிய டாக்டர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

அவர் மெதுவாக வாய் திறந்தார்– சரியாகச் சொன்னீர்கள்; மெதுவாகக் கொல்லும் விஷம் என்று; கொஞ்சம் தப்பு விட்டு விட்டீர்கள். அது மெதுவாகக் கொல்லும் விஷம் இல்லை; ‘மிக மிக மிக மெதுவாகக் கொல்லும்’ விஷம்! பாருங்கள்! தினமும் எவ்வளவு காப்பி குடிக்கிறேன்;  80 வயது வரை நன்றாக இருக்கிறேனே! என்றார்.

டாக்டர்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. ஈதென்னடா, செவிடன் காதில் சங்கு ஊதிய கதை ஆகி விட்டதே என்று எண்ணி வெளியேறினர்.

 

டாக்டர்கள் சொன்னது பிழை ஆகிவிட்டது. அதற்குப் பின்னரும் பாண்டநெல் 20 ஆண்டுகள் வாழ்ந்தார். நூறு வயதை நெருங்க ஒரு மாதம் இருக்கையில் உயிர் நீத்தார்.

 

காப்பி குடிப்போருக்கு எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!

 

காப்பி  குடியுங்கள்! நன்றாகக் காப்பி குடியுங்கள்! குடித்துக் கொண்டே 100 ஆண்டுக் காலம் வாழுங்கள்! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

xxxx

நீண்ட காலம் வாழ சுருட்டு குடியுங்கள்!

 

பிரிட்டனில் பிரதமராக இருந்தவர் ஜோசப் சாம்பர்லைன் (Joseph Chamberlain): 70 வயதிலும் இளமை ததும்பும் எழில் மிகு தோற்றம்! அவர் மேனி அழகின் ரஹசியத்தை அறிய பலருக்கும் ஆசை. அவரை நெருங்கினர்; தைரியமாகக் கேட்டனர்.

 

“ஐயன் மீர்! உங்கள் மேனி அழகின் ரஹசியம் என்னவோ?”

 

இந்தக் கால நடிகைகளாக இருந்திருந்தால் அவர் என் மேனி அழகிற்கு நான் பாவிப்பது  xyz –  சோப்புதான் என்று சொல்லி இருப்பர்.

 

ஆனால் சாம்பர்லைனோ சற்றும் தயக்கம் இன்றி பதில் கொடுத்தார்.

 

இளமைத் துடிப்புடன் வாழ வேண்டுமா?

 

அதிகம் நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம்  காரில் செல்ல முடியுமோ அங்கெல்லாம் காரிலேயே செல்லுங்கள் நடந்து தொலையாதீர்கள்!!!

சுருட்டு குடிக்கும் வழக்கம் இருந்தால் இரண்டு சுருட்டுகளில் எது சக்தி வாய்ந்ததோ, எது நீளமானதோ அதைக் குடியுங்கள்; அது மட்டுமல்ல அனாவசியமாக நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம் காரில் போக முடியுமோ அங்கெல்லாம் காரில் செல்லுங்கள்– என்றார்.

கேட்க வந்தவர்களுக்கு ஏனடா கேட்க வந்தோம் என்பது போல ஆயிற்று!

 

xxx

மாக்ஸிம் கார்க்கி

சோவியத் ரஷ்யாவின் புகழ் பெற்ற  எழுத்தாளர் (Maxim Gorky) மாக்ஸிம் கார்க்கி. அவர் சோஷலிஸ அறிஞர். அவரை அமெரிக்காவுக்கு அழைத்த நண்பர்கள் அவரை (Coney Island) கோனி தீவிலுள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வீர தீர சாஹசச் செயல்கள் நடந்தன. இவருக்கு எல்லாவற்றையும் நன்கு காட்டிவிட வேண்டும் என்று எண்ணி பாதாள அறை, நிலத்தின் மேலுள்ள மண்டபம் ஆகியவற்றுக்கு எல்லாம் அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர்.

 

 

அவர் பார்க்காத சர்கஸ் காட்சிகளே இல்லை; அந்தர் பல்டி, குட்டிக்கரணம், வேகப் பாய்ச்சல், மேலிருந்து கீழே குதித்தல் தாவுதல் எல்லா வற்றையும் நண்பர்கள் காட்டினர். கார்க்கியின் நண்பர்களுக்குப் பரம த்ருப்தி.

கார்க்கிக்கு????????

 

எல்லோரும் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியது. மாக்ஸிம் கார்க்கியிடம் அவருடைய நண்பர்கள் வினவினர்.

அன்புடையீர், எங்களுக்கு எல்லாம் இன்று உங்களுடன் இருந்தது மிகவும் பிடித்து இருந்தது; உங்களுக்கும் மகிழ்ச்சிதானே?

 

அவர் உடனே பதில் தராமல் சற்று நேரம் யோசித்தார்; பின்னர் சொன்னார்.

 

அட தோழர்களே; நீங்கள் எல்லோரும் எவ்வளவு துயரத்துடன் வாழ்கிறீர்கள்!!

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சுபம் —–