டார்வினை எதிர்த்த பெண்மணி! (Post No.4448)

Written by S.NAGARAJAN

 

 

Date: 1 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-38 am

 

 

 

Post No. 4448

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 1-12-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 41வது) கட்டுரை

டார்வினை எதிர்த்த பெண்மணி!

ச.நாகராஜன்

“ஒருவன் உண்மையை அறிய முடியுமென்றால் அது கடவுளின் புத்தகத்திலிருந்து வருகிறதா அல்லது மனிதனிடமிருந்து வருகிறதா என்பது ஒரு பொருட்டே இல்லை – ஆண்டாய்னெட் ப்ரௌன் ப்ளாக்வெல்

பரிணாமக் கொள்கையை உலகிற்கு அளித்துப் பெரும் புகழ் பெற்ற டார்வினுக்கு 1869ஆம் ஆண்டு ஒரு புத்தகம் வந்தது. புததகத்தை எழுதியவர் ஒரு பெண்மணி. அவர் பெயர் ஆண்டாய்னெட் ப்ரௌன் ப்ளாக்வெல் ((Antoinette Brown Blackwell).

அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து பதில் எழுதிய டார்வின் தனது பதிலில், ‘புத்தகத்தைப் படிக்கும் போது அதில் எனது பல குறிப்புகள் காணப்படுகின்றன. இவை பொது மக்கள் அதிகம் அறியாதவை’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் செய்த ஒரே தவறு அதன் ஆரம்ப வார்த்தைகள் தான்! டியர் சார் என்று அந்தப் பெண்மணிக்கு எழுதிய கடிதத்தை அவர் ஆரம்பித்திருந்தார்!

அடுத்து ஆறு வருடம் கழித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் அவர் டார்வினை ஒரு பிடி பிடித்திருந்தார். டார்வின் எந்தக் கொள்கைகளை முன் வைத்தாரோ அவை தவறு என்று போர்க்கொடி உயர்த்தினார். அத்துடன மட்டுமின்றி புகழ்பெற்ற விஞ்ஞானியான ஹெர்பர்ட் ஸபென்ஸரையும் துணிச்சலாக எதிர்த்துக் கருத்துக்களை வெளியிட்டார்.

தி செக்ஸஸ் த்ரூ அவுட் நேச்சர் (The Sexes throughout Nature) என்ற அவரது புத்தகம் பல கட்டுரைகளின் தொகுப்பு.

டார்வின் தனது புத்தகமான ‘தி டெஸண்ட் ஆஃப் மேன் (The Descent of Man) என்ற நூலில் பரிணாமம் பெண்ணை விட ஆணை சுபீரியராக – மிக மேலாக- ஆக்கியிருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸரோ தனது நூலில் ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் – வலியது வாழும் – என்ற கொள்கையை முன் வைத்திருந்தார்.

இந்த இரண்டையும் எதிர்த்தார் ப்ளாக்வெல்.

“கலை, கவிதை, ஓவியம், சிற்பம், இசை ஆகியவற்றில் திறம்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய ஒரு பட்டியலை எடுத்தால் அது ஒப்பிடவே தக்கதல்ல என்று ஆகி விடும்” என்றார் டார்வின் தனது நூலில்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் ஒரு படி மேலே போய், ‘மனித இனம் மேம்பட வேண்டுமெனில் பெண்கள் கருத்தரித்து இனவிருத்தி செய்வதை மட்டும் கொண்டிருந்தால் போதும்’ என்று கூறி இருந்தார்.

பெண்களுக்கு சம உரிமை கேட்டுப் போராடி வந்த 44 வயதே ஆன ப்ளாக்வெல்லுக்கு வந்தது கோபம்

டார்வினை நன்கு விமரிசித்து அவர் கொள்கைகள் தவறு என்று வாதித்து டார்வினை எதிர்த்த முதல் பெண்மணி என்ற பெயரைப் பெற்றார். டார்வின் கூறிய அனைத்தும் அறிவியலுக்குப் புறம்பானவை என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.

அமெரிக்காவில் ஓஹையோவில் அவரது சகோதரர் இறையியல் படிப்பு படித்துத் தேறியிருந்தார். அதே இறையியல் படிப்பைத் தானும் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அவர். தொழில்துறை ரீதியில் மத பிரசாரகராக – வுமன் மினிஸ்டராக ஆக வேண்டும் என்பது அவரது ஆசை.

ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரு பெண்மணியை பாதிரியாக – இறையியல் பரப்புநராக அதுவரை நியமித்ததே இல்லை. இறையியல் பிரிவில் பெண்கள் படிக்க அனுமதியே கிடையாது.

சண்டை போட ஆரம்பித்தார் ப்ளாக்வெல். அவரது தீவிரத்தைக் கண்ட நிர்வாகம் அவர் படிக்க அனுமதி அளிப்பதாக ஒப்புக் கொண்டது – ஒரு நிபந்தனையுடன். அதாவது அவரது படிப்பு முடித்த பின்னர் அவருக்கு டிகிரி – பட்டம் – வழங்கப்பட மாட்டாது என்பதே நிபந்தனை!

பெண்கள் மத போதனை செய்யும் வேலையில் ஈடுபடக் கூடாது என்பதை எதிர்த்த அவர் ரகசிய சங்கம் ஆரம்பித்து பெண்களை நன்கு பேசப் பயிற்றுவித்தார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் மறையியல் பரப்புநர் வேலை எங்கு கிடைக்கும் என்று அமெரிக்கா முழுவதும் சுற்ற ஆரம்பித்தார்.

இதில் அவர் பட்ட இன்னல்கள் ஏராளம். ஒரு சமயம் பனிப்புயலில் சிக்கி சுமார் ஏழரை மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.

1850ஆம் ஆண்டு முதல் பெண்ணுரிமை மாநாடு மசாசூசெட்ஸில் நடந்தது. அதில் பேசிய அவர் பைபிளில் பெண்கள் செய்யக்கூடாது என்று சொல்லிய அனைத்தையும தாக்கிப் பேசினார்.

1853இல் நியூயார்க்கில் முதல் அமெரிக்க பெண் பாதிரியாக -வுமன் மினிஸ்டராக அவர் ஆனார். அதே சமயம் டைனோசர் பற்றிய படிமப் பாறைகள் கிடைத்தன. அவை மனிதன் தோன்றியதாக பைபிள் கூறும் கருத்துக்களுக்கு எதிரான அறிவியல் நோக்கை முன் வைத்தது.

டார்வினும் ஹெர்பர்ட் ஸ்பென்ஸரும் ப்ளாக்வெல் அறிவியல் சம்பந்தமான கொள்கைகளை எதிர்ப்பதில் பயனில்லை என்று வலியுறுத்தினர்.

தான் ஒரு முறையான விஞ்ஞானி இல்லை என்றாலும் பெண்களுக்கு இழைக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க ஒரு பெரிய தகுதி தன்னிடம் இருக்கிறது என்று முழங்கிய ப்ளாக்வெல், அந்த தகுதி, ‘நான் ஒரு பெண் என்பது தான்’, என்றார்.

ஆண்கள் ஆண்களாக இருப்பதால்யே அவர்கள் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார்கள் என்று கூறிய அவர், “அதனால் தான் அவர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் கூட ஒரு தலைப்பட்சமாக (ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவதாக) இருக்கிறது” என்று கூறினார்.

டார்வின் தந்த புள்ளிவிவரங்களில் ஆண் எவ்வளவு பெண் எவ்வளவு என்பது இல்லை என்று கூறிய ப்ளாக்வெல் தானே களத்தில் இறங்கினார். உயிரின வகைகளில் உள்ள இனங்களில் ஆண் தாவரம், பெண் தாவரம். ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகள், மீன் வகைகளில் ஆண், பெண், கடல் வாழ் உயிரினங்களில் ஆண், பெண் இனம், பறவை, மனிதர் என்று இப்படி அனைத்திலும் புள்ளிவிவரங்களைச் சேகரித்தார்.

உதாரணமாக சிங்கங்களில் ஆண் சிங்கம் உருவத்தில் பெரிதாகவும் வலிமையானதாகவும் இருந்தாலும் கூட பெண் சிங்கங்கள் தனித்துவம் மிக்க உடல் அமைப்பைக் கொண்டு இன விருத்தி செய்து தன் குட்டிகளுக்கு உணவு தருவது உட்பட்ட சிக்கலான இயக்கங்களையும் வேலைகளையும் செய்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தனது ஆராய்ச்சியின் இறுதி முத்தாய்ப்பாக அவர் பரிணாமம் சுட்டிக் காட்டுவது ஆணும் பெண்ணும் சமம் என்பதையே என்று ஓங்கிய குரலில் கூறி முடித்தார்.

ப்ளாக்வெல்லை இன்றும் கூட ஒரு விஞ்ஞானியாக அறிவியல் சமூகம் அங்கீகரிக்கவில்லை. என்றாலும் கூட பெண்களின் உரிமையை ஓங்கிய குரலில் சுட்டிக் காட்டி அதற்கெனப் பாடுபட்டவராகவும், இறையியலில் பெண்களும் போதகராக வரலாம் என்பதற்கு வழி வகுத்தவராகவும், டார்வினைத் தட்டிக் கேட்ட முதல் பெண்மணியாகவும், பெண் விஞ்ஞானிகள் வளர வழி வகுத்த முதல் பெண்மணியாகவும் உலகம் இன்று போற்றுகிறது.

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

 

கிரேக்க புராணங்களில் மாஜிக் எனப்படும் மாயாஜாலத்தின் அதி தேவதையாக சித்தரிக்கப்படும் தேவதை கிர்க் (CIRCE).இந்த தேவதையைப் பற்றி ஏராளமான கதைகள் உண்டு.

மூலிகைகளின் இரகசியங்களைப் பற்றி அனைத்தும் அறிந்த தேவதை இது. யுலிஸிஸின் தோழர்களை மயங்க வைத்ததும் இது தான். தன் எதிரிகளை மிருகங்களாக மாற்றி விடுமாம் கிர்க். கையில் எப்போதும் ஒரு மந்திரக்கோலை இது வைத்திருக்கும். ஹோமரின் ஒடிஸி உள்ளிட்ட காவியங்களில் இடம் பெறும் பிரபலமான தேவதை இது.

இதைப் பற்றி விஞ்ஞானிகளில் பலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் வில்லியம் ஜெங்ஸ் (William Jencks தோற்றம் 15-8-1927 மறைவு 3-1-2007) என்னும் அமெரிக்க உயிரியல் மற்றும் என்ஜைம் பற்றிய நிபுணராவார்.

தனது ஆய்வுகளின் மூலமாக கிர்க் பற்றிய பல கதைகளுக்கு விளக்கம் அளிக்க முடியும் என்று நம்பி அதில் அவர் தீவிரமாக முனைந்தார்.

என்ஜைம்களிள் எதிர்வினைகளைப் பற்றி ஆராய்ந்த அவர் தனது ஆய்வு ஒன்றுக்கு ‘கிர்க் எபெக்ட்’ என்றே பெயர் தந்து விட்டார்.

ஆக பிரபலமாக இன்றளவும் உலகினரால் சொல்லப்பட்டு வரும் இந்த தேவதை அறிவியலிலும் புகுந்து நிரந்தரமாகத் தன் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

****

 

 

காலக் கணக்கு: 30 முகூர்த்தம்= ஒரு நாள், மநு நீதி நூல்-5 (Post No.4431)

Written by London Swaminathan 

 

Date: 25 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-53 am

 

 

Post No. 4431

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கடந்த சில தினங்களில் வெளியான மநு நீதி நூல் கட்டுரைகளைப் படித்துவிட்டு ஐந்தாவது பகுதியைப் படிப்பது நலம் பயக்கும்; அறிவு ஒளிரும்; நூல் வேட்கை அதிகரிக்கும்!

51.பிரம்மாவானவர் தோன்றியவாறே ஒரு பகல் பொழுது கழிந்தவுடன் சகல படைப்புகளுடன் ஒடுங்கி விடுகிறார். அதாவது அந்தப் பிரம்மாவின் ஆயுள் முடிந்தது.

52.மீண்டும் படைக்கவேண்டும் என்று எப்பொழுது அந்த சக்தி வெளிப்படுகிறதோ அப்பொழுது படைப்பு துவங்கும். எப்பொழுது அதை முடிக்க திருவுளம் கொள்கிறாரோ அப்பொழுது ஒடுங்கிவிடும்.

(ஸ்லோகம் 52ல் ஒரு சிலேடை உள்ளது; ஜகத் என்றால் நகரக்கூடியது; விழிப்பு என்பதற்கான வினைச் சொல் ஜாக்ருதி)

 

53.கர்ம வினையால் படைப்பெடுத்த உயிர்கள் பிரம்மா உறங்கும் பொழுது செயலற்றுப் போவார்கள். மனதும் அதன் செயல்பாட்டை நிறுத்திகொள்ளும்

 

54.இவ்வாறு பிரம்மாவின் ஒவ்வொரு பகலிலும் இரவிலும் படைப்பு தோன்றுவதும் ஒடுங்குவதுமாக நடந்து கொண்டே இருக்கும். அவரது  ஆயுட்காலம் முடிந்த பின்னர், முழுமுதற்கடவுள் அந்த பிரம்மாவையும் அவரது படைப்புகளையும் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு, யோக நித்திரை எனப்படும் அறிதுயிலில் ஆழ்வார்.

 

 

  1. பிறவி எடுத்த உயிரினம் நீண்டகாலம் வாழ்ந்து முடிந்த பின்னர், மூச்சுவிட முடியாத நிலையில் ஸ்தூல உடலை விட்டு, சூட்சும உடலை (கண்ணுக்குத் தெரியாத) உடலை அடைகிறது.

 

56.பிறகு அணுப்போலாகி, அசையும்-அசையா பரம்பொருள் என்னும் விதையில் நுழையும். அதில் ஐக்கியமாகும் போது பூத உடல் மறைந்துவிடும். எப்போது அவன் எட்டுவகை குணங்களைப் பெறுகிறானோ, அப்போது அவன் ஸ்தூல உடல் எடுப்பான். எட்டு குணங்கள்- புரியஷ்டகம்=பஞ்ச மஹா பூதம்/பஞ்ச இந்திரியம்+மனது/புத்தி+ஜன்மாந்தர வாசனை/கர்மவினை+பிராணவாயு

  1. என்றும் அழியாத பரம்பொருள் விழிக்கும் போதும் உறங்கும்போதும் இவ்வாறு உலகைப் படைத்தும் துடைத்தும் செயல்படும். உலகை அழிப்பதில் இடைவிடாமல் ஈடுபடும்.

 

  1. அவர் முதலில் இதைக் கற்பித்தபோது, என்னை கிரஹித்துக் கொள்ளவைத்தார். நான் இதை மரீசிக்கும் மற்றவர்களுக்கும் கற்பித்தேன்.

 

  1. பிருகு உங்களுக்குச் சொல்வார். அவர் என்னிடமிருந்து முழுதும் கற்றுக்கொண்டார்.

60.இவ்வாறு மநு சொன்னது ப்ருகுவுக்கு மிகவும் மகிச்சி அளித்தது

 

61.சுயம்புவான பிரம்மாவிடம் தோன்றிய மேலும் ஆறு மனுக்கள் உண்டு. அவர்கள் மகான்கள்; மஹா வல்லமை படைத்தவர்கள்.

  1. அவர்கள் அனைவரும் சுயம் பிரகாசம் உடையவர்கள்.

 

 

அவர்களுடைய பெயர்கள்:– ஸ்வரோசிஷஸ், உத்தமர், தாமசர், ரைவதர், சக்ஷூஸ், தேஜோமயமான விஸ்வாவசு (சுவாரோசிஷன்,உத்தமன், தாமசன், ரைவதன்,சாக்ஷுசன்,வைவசுவதன்)

 

63.அவர்கள் ஆறுபேரும் சுவாயம்புவ மநுவும் அவரவர் ஆட்சிக் காலத்தில் மக்களைப் படைத்தும் பராமரித்தும் வருவர்.

காலக் கணக்கு

  1. 18 இமைகள் = ஒரு காஷ்டை எனப்படும்

30 காஷ்டை= ஒரு கலை

30 கலைகள் = ஒரு முகூர்த்தம்

30 முகூர்த்தம் = ஒரு நாள்

65.மானிடர்க்கும் தேவர்களுக்கும் பகல்-இரவை வகுப்பவன் சூரியன்; இரவு, தூங்குவதற்கும் பகல் நேரம், வேலை செய்வதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

66.முப்பது நாள் என்பது மனிதர்களுக்கு ஒரு மாதம்; அதில் 15 நாட்கள் தேய் பிறையாகவும், 15 நாட்கள் வளர்பிறையாகவும் இருக்கும்.  இவ்விரு பக்ஷங்களும் க்ருஷ்ண, சுக்ல பக்ஷங்கள் — பிதுர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேய் பிறை என்பது அவர்களுக்குப் பகல்.

67.12 மானிட மாதங்கள் தேவர்களுக்கு ஒரு நாள்; தை முதல் ஆனி வரையுள்ள உத்தராயணம் தேவர்களின் பகல்; ஆடி முதல் மார்கழி வரையான காலம் அவர்களுக்கு இரவு. ஆக, மானிட வருடங்கள் முப்பது என்பது தேவர்களுக்கு முப்பது நாட்கள். அது போல 12 மாதங்கள் தேவர்களின் ஒரு வருடம்.

68.இனிமேல் பிரம்மாவின் இரவு பகல்கள், யுகங்கள் பற்றிச் சொல்லுவேன்; கேளுங்கள்

69.கிருத யுகம் என்பது = 4000  தேவ வருடங்கள்; அதற்கு முன் அது உருவாகும் இடைவெளிப்பொழுது (யுக சந்தி), அதாவது வைகறைப் பொழுது 400 தேவ வருடங்கள். காலையிலும் மாலையிலும் இப்படி சந்தியா வேளை இருப்பதால் கிருத யுகம் என்பது 4000+400+400=4800 தேவ வருடங்கள்.

 

70.ஏனைய மூன்று யுகங்களும் குறைந்து கொண்டே வரும்; மேலும் காலை மாலை சந்திப் பொழுது என்பதும் குறையும்; இந்தக் கணக்குப்படி, திரேதா யுகம் 3600, துவாபர யுகம் = 2400, கலியுகம் 1200 தேவ வருடங்கள் என்று அறிக.

 

எனது கருத்து    —   மநு தர்ம நூலில் விண்வெளி விஞ்ஞானம்!

 

1.பிக் பேங் (Big Bang) என்பது போல பிக் க்ரஞ்ச் (Big Crunch) உண்டு என்று இந்துக்கள் கூறுகின்றனர். இதை விஞ்ஞானிகள் இன்னும் முழுதும் ஏற்கவில்லை. விரைவில் ஏற்றுக் கொள்ளுவர்.

 

  1. மநு நீதி நூல் போன்ற சட்ட நூலில் காலக் கணக்கீடு, வாய்ப்பாடு ஆகியன இருப்பது வியப்புக்குரியது. அவர் பிக் பேங், பிக் க்ரஞ்ச் பற்றிப் பேசுவது இன்னும் வியத்தற்குரியது

 

3.நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, பிரம்மாவுக்கு வேறு ஒரு காலக் கணக்கு ஆகியன வெளி உலகங்கள் (Extra Terrestrial Civilization) இருப்பதைக் காட்டும்.  வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் சுழற்சி உடைய இடத்தில் வசிப்பர்.

 

4,ஐன்ஸ்டைனையும் மிஞ்சும் விஷயங்களை மநு கூறுகிறார். பிற்காலத்தில் புராணங்களும் இதை அப்படியே சொல்லும்.

 

  1. இவ்வளவு சொல்லும் மனு, உலகிலுள்ள எல்லாப் பண்பாடுகளும், நமது புரா ண ங்களும் சொல்லும் பிரளயக் கதையைச் (Story of Great floods) சொல்லாததால், மனு ரிக் வேத காலத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது. அதாவது பைபிள் (Story of Noah) , மச்சாவதாரம் முதலியன சொல்லும் பிரளயக் கதை (deluge) ரிக் வேதத்திலோ மனுவிலோ இல்லாததால் இவை இரண்டும் காலத்தால் முந்தியவை என்பது தெரிகிறது.

6.யுக சந்தி என்று இடைவெளி கொடுப்பது குறிப்பிடத்தக்கது. உடனே அடுத்த யுகம் துவங்குவதில்லை. அதாவது முந்தைய, பிந்தைய யுகங்களின் குணங்கள் கலந்து காணப்படும் குழப்பமான காலகட்டம். தேர்தல் முடிவால், ஒரு  அரசியல் கட்சி பதவி இழந்து ,பின்னர் அடுத்த கட்சி பதவியில் அமர்வதற்குள் காணப்படும் இரண்டும்கெட்ட நிலை போன்றது இது. நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவியல் முறையில் யுக மாற்றத்தை அணுகினார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

to be continued………………………….

மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்! (Post No.4430)

Written by S.NAGARAJAN

 

 

Date: 25 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-26 am

 

 

 

Post No. 4430

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

மஹாபாரதம்

கடந்த நூறு ஆண்டுகளில் மஹாபாரதம் பற்றிய ஏராளமான, சுவாரஸியமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 2013, டிசம்பரில் வந்த ஒரு செய்தி பற்றிய கட்டுரை இது.

 

மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்!

 

ச.நாகராஜன்

1

மஹாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. பிரமிக்க வைக்கும் மர்மங்களைக் கொண்டது.

கதை ரீதியான மரமங்கள் மட்டுமல்ல, இதை இயற்றிய வியாஸ பகவான் மஹாபாரதத்தில் அடக்கி இருக்கின்ற மரமங்களும் ஏராளம்.

 

கூட ஸ்லோகங்கள் என்று கூறப்படும் சுமார் 8000 ஸ்லோகங்களின் பொருளை விநாயகரே யோசித்துத் தான் புரிந்து கொண்டார் என்றால் சாமானிய மனிதர்களால் மஹாபாரதத்தின் முழுப் பொருளையும் புரிந்து கொள்வது சுலபமில்லை.

ம்ஹாபாரதத்தை பல நூறு கோணங்களில் ஆராயலாம். ஒவ்வொரு ஆராய்ச்சியும் பிரமிக்க வைக்கும் உண்மைகளைத் தெரிவிக்கும்.

 

2

மஹாபாரதத்தில் கூறப்படும் அஸ்திரங்களைப் பற்றிய அபூர்வமான ஓலைச்சுவடி ஒன்று அஷ்டவைத்யன் வைத்யமடம் செரிய நாராயணன் நம்பூதிரி என்பவரிடம் இருந்தது. இவர் 2013ஆம் ஆண்டில் காலமானார்.

இவரது தொகுப்பில் உள்ள ஒரு மஹாபாரத நூலில் – பனை ஓலைச் சுவடி நூலில் – 63 பகுதிகளில் மஹாபாரதத்தில் கூறப்படும் அனைத்து அஸ்திரங்களும் எப்படி பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

இது சுமார் 120 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

இப்படி ஒரு ஓலைச் சுவடி இந்தியாவிலேயே இது ஒன்று தான்!

48 மந்திரங்கள் இதில் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த மந்திரங்கள் மூலமாக அஅனைத்து அஸ்திரங்களையும் இயக்க முடியும்.

 

3

செரிய நாராயணன் நம்பூதிரியிடம் 1300 கட்டு ஓலைச் சுவடிகள் இருந்துள்ளன.இதை அவர் டிஜிடல் மயமாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் எதிர்கால் ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் பயனடைவர் என்பது அவரது எண்ணம்.

சென்ட்ரல் கவுன்ஸில் ஃபார் ரிஸர்ச் இன் ஆயுர்வேதா (Central Council for Research in  Ayurveda)-வின் டைரக்டர் திரு ஏ.ஆர். கிருஷ்ணகுமார், “ரெப்ரோகிராபி (reprography) என்ற நம்பகமான முறையில் நாங்கள் டிஜிடல் வடிவமாக இதை ஆக்கும் போது இந்த நூல் அருமையான ஒரு நூல் என்பதை அறிந்தோம் என்றார்.

இந்திராகாந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ், புது டில்லியிலிருந்து இந்தப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் கிருஷ்ணகுமாரும் ஒருவர். இவர் ஐஜிஎன்சிஏ- ஐச் சேர்ந்த சீனியர் ரெப்ரோகிராபிக் அதிகாரி. (CCRASS ) Central Council for Research in Ayurdedic Sciences) – நிறுவனத்தின் ப்ராஜக்ட் மேனேஜர் கிருஷ்ணகுமார்.

இந்த மையம் பொது நிலையங்கள் மற்றும் தனியாரிடம் உள்ள அனைத்து ஓலைச்சுவடிகளையும் டிஜிடல் மயமாக்கும் பெரிய பொறுப்பை ஏற்றிருக்கிறது.

ஏன் இவை அனைத்து டிஜிடல்மயமாக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு கிருஷ்ணகுமார் பதில் அளிக்கையில், “ ஏனெனில் இது நமது பண்பாடு, வரலாறு, பழக்க வழக்கங்கள்,பழைய மதங்கள் ஆகியவை பற்றிய தகவல்களைத் தருவதோடு சுற்றுப்புறச் சூழல், உடல் நலம், புராதன கால விஞ்ஞானம் ஆகியவை பற்றித் தெரிவிக்கும்” என்கிறார்.

இது வரை ஆயுர்வேதம் பற்றிய சுவடிகளில் 15 % ஓலைச்சுவடிகள் மட்டுமே டிஜிடல்மயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறையாக உலகில் இருக்கிறது. இப்போது சற்று கற்பனை செய்து பாருங்கள். ஐந்து லட்சம் ஓலைச் சுவடி நூல்களில் எவ்வளவு பிரம்மாண்டமான அறிவுச் செல்வம் புதைந்து கிடக்கும்!இது மக்களுக்குக் கிடைத்தால் ஆயுர்வேதம் இன்னும் எவ்வளவு திறனுடன் நன்மை தரும்” என்கிறார் கிருஷ்ணகுமார்.

“கேரளாவில் உள்ள நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் உள்ள நூல்களில் ஒரு பகுதியை சில வருடங்களுக்கு முன்னர் டிஜிடலைஸ் செய்தோம்.

இப்போது இரண்டாவது கட்டப் பணியாக பாலக்காடு மாவட்டத்தில் மேழாத்தூரில் உள்ள வைத்யமடத்தில் உள்ளவற்றை டிஜிடலைஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். எங்களது அடுத்த இடம் தச்சு சாஸ்திரம் என்று கூறப்படும் கட்டிடக் கலைக்குப் பெயர் பெற்ற குன்னம் குளத்தின் அருகில் உள்ள கனிப்பையூர் மனா என்ற இடமாகும்.

இன்னும் பல மையங்களில் ஏராளமான சுவடிகள் உள்ளன” என்று கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

“இதில் ஒரு பெரிய நல்ல விஷயம் என்னவெனில் அனைத்து தனியார் வசம் உள்ள நூல்களையும் டிஜிடலைஸ் ஆக்க அனைவரும் ஒத்துழைப்புத் தருவது தான்!” என்று மகிழ்ச்சி பொங்க அவர் மேலும் தெரிவித்தார். ஆயுர்வேதம் மட்டுமின்றி இயற்பியல் விஞ்ஞானம், இரசாயனம், ஜோதிடம் உள்ளிட்ட பல பொருள்களைப் பற்றிய நூல்கள் இந்த ஐந்து லட்சத்தில் அடக்கம்!

 

4

இது 2013 டிசம்பரில் வந்த செய்தி. நான்கு வருடங்கள் ஓடி விட்டன. பல நூல்கள் டிஜிடலைஸ் ஆகி இருக்கும்..

மஹாபாரத அஸ்திர விவரங்களை நமது நாட்டு ஆராய்ச்சியாளர்களிடம் தந்தால் மிகப் பெரும் வல்லரசாக நாம் மாறி விடுவோம்.

இதே போலப் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு பொருளில் மஹாபாரத மர்மங்களை அவிழ்த்து வருகின்றனர்.

அவை அனைத்தும் சுவையானவை!

இது கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடை பெற்று வருகிறது.

அப்படியானால் இது வரை மஹாபாரதம் பற்றிய்  ஆராய்ச்சி முடிவுகள் எவ்வளவு இருக்க வேண்டும்.

மலைப்பாக இருக்கிறது.

அவை பற்றி அறிந்து கொள்வதே ஒரு ஆனந்தம் தான்!

***

கின்னஸ் சாதனை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை! (Post No.4427)

Written by S.NAGARAJAN

 

 

Date: 24 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-09 am

 

 

 

Post No. 4427

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 24-11-2017 இதழில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 40வது) கட்டுரை

 

 

கின்னஸ் சாதனை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை! 

 ச.நாகராஜன்

 

 “இன்னும் பல உலகங்களுக்கு நான் செல்ல விரும்புகிறேன். சந்திரன், செவ்வாய் ஏன் இன்னும் பல இடங்களுக்கும் நான் செல்ல விரும்புகிறேன். – 2017, ஏப்ரல் 13ஆம் தேதி விண்வெளியிலிருந்து பெக்கி விட்ஸன் கொடுத்த பேட்டியில் கூறியது

 

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்ஸன் (Peggy Whitson)  மற்ற எல்லா அமெரிக்க விண்வெளி சாதனையாளர்களையும் விஞ்சி அதிக நேரம் விண்ணில் இருந்து சாதனை படைத்திருக்கிறார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் இன்னும் பணி புரிவதால் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

 

அமெரிக்காவில் ஐயோவா மாகாணத்தில் 1960ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி பிறந்த பெக்கிக்கு இப்போது வயது 56.

உயிரியலிலும் இரசாயனத்திலும் பட்டப் படிப்பு படித்த பின்னர் அவர் நாஸாவில் ஸ்பேஸ் ரிஸர்ச் செண்டரில் சேர்ந்தார்.

தனது 29ஆம் வயதில் 1989,மே, 6ஆம் தேதி சாம்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1992இல் அனுபவமிக்க அவரை மிர் ஷட்டில் திட்டத்திற்கு திட்ட விஞ்ஞானியாக நாஸா நியமித்தது.

 

1996இல் அவர் விண்ணில் செல்லத் தகுதியானவர் என்பதை நாஸா அறிவித்து அவருக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தது.

இரண்டு வருட காலம் கடுமையான பயிற்சிக்குள்ளானார். பின்னர் விண்வெளி வீரருக்கான அலுவலகத்தில் 1998-99இல் விண்வெளியில் செல்பவர்களுக்கான உதவிக் குழுவில் தரையில் இருந்தே பணி புரிய ஆரம்பித்தார்.

 

பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அவரை அனுப்ப நாஸா முடிவு செய்தது. 2002இல் ஜூன் மாதம் 5ஆம் தேதி அவர் விண்ணில் பயணமானார். ஆறு மாதங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்தார். மனித வாழ்க்கை சம்பந்தமான 21 ஆய்வுகளை அவர் அங்கு வெற்றிகரமாக முடித்தார்.

 

     2002, டிசம்பர் 7ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார். அப்போது அவர் விண்ணில் இருந்த நேரம் 184 நாட்கள்,22 மணி 14 நிமிடங்கள்.

 

எக்ஸ்பெடிஷன் 16இல் அவர் மீண்டும் விண்வெளிக்கு 2008, அக்டோபர், 10ஆம் தேதி சென்றார்.

பமீலா மெல்ராய் என்ற பெண்மணியும் அவரோடு இணைந்து சென்றார். ஆக விண்வெளியில் முதல் ஜோடிப் பெண்மணிகளாக இவர்கள் திகழ்ந்தனர். இது ஒரு சாதனை.

 

    விண்வெளி நிலையத்தில் இருந்தபோது நிலையத்தின் விரிவாக்கத்திற்காக அவர் கடுமையாக உழைத்தார்.

191 நாட்கள்,19 மணி 18 நிமிடங்கள் விண்வெளியில் இருந்த பிறகு, 2008, ஏப்ரல் 19ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

இந்தக் கால கட்டத்தில் பல ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடைப் பயிற்சியைச் செய்து அதுவரை அதிகமாக விண்வெளி நடை நடந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்தார்.

 

 

2009 முதல் 2012 வரை மூன்று ஆண்டுக் காலம் விண்வெளி   வீ ரர்களின் தலைவியாகப் பணியாற்றி இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணியாகச் சாதனை படைத்தார்.

விண்வெளியில் செல்லும் முன்னர் அதற்கான ஆயத்தங்களைச் செய்வது,  அவர்க்ள் விண்வெளியில் ஓடுபாதையில் சுற்றும் போது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது , விண்வெளி நிலையத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்து உதவுவது போன்ற பணிகளைத் தலைவியாக இருந்து ஆற்றுவது என்பது கடுமையான வேலை மட்டுமல்ல; பொறுப்பான வேலையும் கூட. ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக்கும் இவரே காரணமாக அமைந்தார்.

 

எக்ஸ்பெடிஷன் 50/51இல் 2016 நவம்பர் 17ஆம் தேதி அவர் விண்ணுக்குப் பறந்தார். 56ஆம் வயதில் விண்வெளிக்குச் சென்ற மிக அதிக வயது கொண்ட பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார்.

 

மூன்று மாதம் தங்குவதற்காகச் சென்றவர் அங்கு ஆறு மாதங்கள் தங்கிப் பணி புரிந்தார்.

 

289 நாட்கள், 5 மணி, 1 நிமிடம் விண்வெளியில் இருந்து, இந்த 2017இல் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

  அமெரிக்க வீரர்களில் மிக அதிக காலம் – (தங்கி இருந்த நாட்களை மொத்தமாகக் கூட்டிப் பார்க்கும் போது) – இருந்தவர் என்ற சாதனையை இப்போது படைத்திருக்கிறார்.

கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்ட்ஸ் அவரைச் சாதனையாளராக அறிவித்தது. கின்னஸுக்கு விண்வெளியில் இருந்தவாறே ஜுலை 26இல் அவர் பேட்டி கொடுத்த போது,சரியான அணுகுமுறை இருந்தால் நீங்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விண்வெளியில் சந்தோஷமாக, திருப்திகரமாக விண்ணில் இருக்கலாம் என்றார்.

 

 

    விண்வெளியில் அவர் நடந்த ஸ்பேஸ் வாக் மொத்தம் 10.

இது அதிகமாக ஸ்பேஸ்வாக் செய்த பெண்மணி என்ற சாதனையோடு அதிகமான நேரம் விண்வெளியில் நடந்த பெண்மணி என்ற சாதனையையும் அவரை சாதிக்க வைத்தது.

அவர் படைத்த சாதனைகளின் பட்டியல் :-

எக்ஸ்பெடிஷன் 16

 

  • ஒரே நேரத்தில் ஜோடிப் பெண்மணிகளில் ஒருவராக விண்ணில் இருந்தது.
  • 2008, அக்டோபர், 10 – பன்னாட்டு விண்வெளி நிலைய முதல் பெண் கமாண்டராக இருந்தது
  • 2008, டிசம்பர், 16 – ஐந்தாவது ஸ்பேஸ் வாக்கை முடித்து, ஸ்பேஸ் வாக்கில் மொத்தம் 32 மணிகள்,36 நிமிடங்கள் நடந்து சாதனை படைத்தது

விண்வெளி அலுவலகத்தில் :-

  • 2009 – ராணுவத்தில் பணிபுரியாதவராக இருந்தும் விண்வெளி அலுவலகத் தலைவியாக ஆனது

 

எக்ஸ்பெடிஷன் 50/51 இல் :-

  • 2016,நவம்பர், 17 – 56 வயதில் மிக அதிக வயதான பெண்மணியாக விண்ணுக்குச் சென்று பன்னாட்டு விண்வெளி நிலையத் தலைமைப் பொறுப்பை இருமுறை ஏற்றது
  • 2017, மார்ச், 30 – மொத்தம் கூட்டிப் பார்க்கையில் அதிகமான நேரம் விண்வெளியில் நடந்தவராக ஆனது
  • 2017, ஏப்ரல், 24 – அமெரிக்காவைச் சேர்ந்தவர்களில் மிக அதிகமாக விண்வெளியில் இருந்தது. அனைத்து நாடுகளையும் எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அதிக நேரம் விண்ணில் இருந்த பெண்மணியானது ( 534 நாட்கள், 2 மணிகள், 48 நிமிடங்கள்; பூமிக்குத் திரும்பியபோது அவர் விண்ணில் இருந்த மொத்த நாட்கள் 665)
  • 2017,மே, 23 – பத்தாவது ஸ்பேஸ் வாக்கில் மைக்கேல் லோபரஸுடன் நடந்தது

 

     2017, நவம்பர், 17 – 665 நாட்கள் இருந்து சாதனை படைத்த போது விண்வெளியில் தாக்குப் பிடித்து இருக்க முடிவோரின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

 

  உலகெங்கும் வாழும் அனைத்து மங்கையருக்கும் உத்வேகமூட்டும் ஒரு பெண்மணியாகத் திகழும் இவரைப் பற்றி இந்தியப் பெண்கள் அறிவது அவசியம்.

பெண்களால் எதையும் மண்ணில் மட்டுமல்ல, விண்ணிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்த ஒரே சாதனையாளர் பெக்கி தான்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . .

 

 

40 டாலர் விலையில் (சுமார் 2600 ரூபாய்) இப்போது வெளியாகியுள்ள ‘வியூ ஃப்ரம் எபவ் (View From Above) என்ற புத்தகத்தை விண்வெளி வீரரான கமாண்டர் டெர்ரி விர்ட்ஸ் (Commaner Terry Virts) எழுதியுள்ளார்.

 

அதில் விண்வெளியில் சென்ற போது எப்படியெல்லாம் அதை அனுபவித்து உணர்ந்து கொண்டார் என்பதை அழகுற எடுத்துக் கூறுகிறார்.

 

 

நூலில் உள்ள சில சுவையான குறிப்புகள் இதோ:-

“நான் என் வாழ்நாளில் அது போன்ற ஒரு நீலச் சாயையை பார்த்ததே இல்லை. கறுப்பு-வெள்ளை உலகத்திலிருந்து மிக மிக உயர்ந்து ஒரு வண்ணத்தை முதன் முதலில் பார்ப்பது போல இருந்தது. என் மகளின் நீலக் கண்களை முதன் முதலில் பார்த்தது போல இருந்தது.

 

 

“ஒரே நாளில் உலகத்தைப் பற்றிய எனது கருத்து முற்றிலுமாக மாறிப் போனது.

200 நாட்கள் விண்வெளியில் கழித்த அவர் 2015ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடந்த ஒரு திடுக்கிடும் சம்பவத்தை நினைவு கூர்கிறார்.

 

திடீரென்று விண்வெளி நிலை அபாய எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. அந்த எச்சரிக்கை ஒலி அம்மோனியா லீக் ஆகிக் கொண்டு இருக்கிறது என்பதை அறிவிக்கத் தான்!

அலறிப் புடைத்துக் கொண்டு விண்வெளி ஸ்டேஷனில் இருந்த அனைவரும் ரஷிய பகுதிக்கு ஓடினார்கள். பல மணி நேரம் அங்கு ஆய்வை நடத்தினார்கள்! ஆனால் கடைசியில் தான் தெரிந்தது அது ஒரு “ஃபால்ஸ் அலார்ம் (தவறான எச்சரிக்கை மணி ஒலி) என்று!

 

 

நாஸாவிலிருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் பூமியின் சுற்றுப் பாதையையும் தாண்டிச் செல்லும் எதிர்கால விண்வெளிப் பயணம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் ஃபாஸ்ட் ட்ராக் பயணங்களும் இதில் அடக்கம்.

***

 

மனு தர்மத்தில் விலங்கியல், தாவரவியல்; மனு நீதி நூல் -4 (Post No.4422)

Written by London Swaminathan 

 

Date: 22 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-03

 

 

Post No. 4422

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கீழேயுள்ள ஸ்லோகங்கள் குறித்த எனது கருத் து:—-

இந்த ஸ்லோகங்களில் மிகவும் முக்கியமானது 49-ஆவது ஸ்லோகம்; தாவரங்களுக்கு உள்ளறிவு உண்டு, அவைகள் சுக துக்கங்களை அனுபவிக்கின்றன என்ற பேருண்மையை, அறிவியல் கருவிகள் இல்லாத காலத்தே உலகிற்கு அறிவித்த மாபெரும் விஞ்ஞானி மனு!

மனுதர்ம நூல் ஒரு சட்டப் புத்தகம்; அதில் தாவரங்கள் பற்றிய இப்படியொரு விஷயம் இருப்பது வியக்கத்தக்கது!

 

அதற்கு முன்னர் தாவரங்களை, பூக்கும் தாவரம், பூக்காத தாவரம், கொடிகள், புல் வகைகள் என்றெல்லாம் பிரிக்கிறார். தாவரங்களை வகைப்படுத்துவது காலம்தோறும் மாறிவருகிறது. லின்னேயஸ் என்பவர் தாவரங்களை குடும்பங்களாகவும் உப குடும்பங்களாகவும் அதில் தனித்தனி பெயர் உடையனவாகவும் (Family, Genus, Species) பிரித்ததை உலகம் இப்போது பின்பற்றி வருகிறது. இவை எல்லாம் 300, 400 வருடங்களுக்குள் வந்தவை. அதற்கு முன்னரே மனு முதலானோர் தாவரம்,பி  ராணிகளை வகைப்படுத்த முயன்றதே அவர்களின் அறிவியல் அணுகுமுறைக்குச் சான்று பகர்வனவாக உள்ளன!

 

உயிருள்ளவைகளை  நான்கு வகையாக பிரிக்கிறார் மனு. விலங்கியல் தாவரவியலைப் பொருத்த பொதுவான பிரிவினை இது.

(1)ஸ்வேதஜ= வேர்வையிலிருந்து பிறந்தவை (ஸ்வெட் என்னும் ஆங்கிலச் சொல் ஸ்வேத என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்தது; இந்த இடத்தில் ஸ்வேத என்பதை ஆவி, நீராவி என்னும் பொருளுடைத்தாய் உரைகாரர்கள் கருதுவர்),

(2)அண்டஜ (முட்டையிலிருந்து   தோன்றுபவை),

(3)ஜராயுஜஹ= கர்ப்பப்பையில் தோன்றுபவை, (4)உத்பீஜ = பூமியிலுள்ள விதையிலிருந்து   மேல் நோக்கி எழும் மரம், செடி, கொடி வகையறா.

 

அந்தக் காலத்தில் இவைகளைப் பிரிக்க வேண்டும் என்று எண்ணி அதை வகைப் படுத்தியதே இவர்கள், கைபர் கணவாய் வழி வத நாடோடிகள் அல்ல, மாபெரும் அறிவு படைத்த உலகத்தின் முதல் அறிவுள்ள குடிமகன்கள் என்பதைக் காட்டும்.

 

இன்னும் 50 ஆண்டுகளில் நாம் படித்த விலங்கியல் தாவர இயல் நூல்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு புதிய டி,என்.ஏ. பிரிவினை (D N A Classification; Genetic mapping) வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக, காலம் தோறும் மாறும் விஞ்ஞானத்தை முதலில் துவக்கி வைத்தவர்கள் நாமே. அந்தக் கால மக்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியுமோ அந்த மொழியில் எழுதப்பட்டது மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மனு நீதி நூல் என்பதை அறிக; உணர்க; தெளிவு பெறுக.

ஆரிய மாயை- திராவிட மாயை

 

கீழேயுள்ள ஸ்லோகங்களில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆரிய- திராவிட என்னும் பிரிவினை சங்கத் தமிழ் நூல்களி லோ, சமுத்திரம் போலக் கரை காண முடி யாத அளவுப் பெருகிக் கிடக்கும் சம்ஸ்கிருத நூல்களிலோ எங்கும் இல்லை; ஆனால் மதத்தைப் பரப்பி நாடு பிடிக்க வந்த பிரித்தாளும் சூழ்ச்சியினர் பரப்பிய திராவிடர்- ஆரியர் என்ற புதிய இனப்பாகுபாட்டை நாம் பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் கற்பித்து வருகிறோம். ஆனால் மனுவோ புற நானூற்றிலும், புராண இதிஹாசஙகளிலும் உள்ள பிரிவை சொல்கிறார். நாகர், கந்தர்வர், யக்ஷர், தேவர், மானுடர் இராக்ஷசர், அசுரர் என்று. இப்படி 18 வகையாகப் பிரித்த பிரிவே நம் இலக்கியத்தில் உள்ளன. அதை விட முக்கியமான உண்மை அசுரர்களும், ராக்ஷஸர்களும், மானுடரும் தேவரும் ஒரே மனுக்குலத்தில் உதித்தவர்கள் என்பதை மனுவே சொல்லும் ஸ்லோகங்களை இங்கே கொடுத்துள்ளேன்.

 

வெளி நாட்டு  “அறிஞர்கள்” (???) ம றைத்து வரும் விஷயம் இது. அவர்களே நம்மை திராவிடர்- ஆரியர் என்று பிரித்ததற்கு தமிழில், சம்ஸ்கிருதத்தில் ஆதாரமே இல்லை.

 

ஜாதிகள் உண்டு அடி பாப்பா!

ஜாதிகள் உண்டு என்பதை ரிக்வேதத்தில் உள்ள புருஷசூக்தம் (10-90) தெளிவாகச் சொல்லுகிறது; ஆனால் அவை பகவத் கீதை சொல்லுவது போல குணத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை. ஆதிகாலத்தில் அப்படித்தான் இருந்தது. நாலு வகைச் சாதிகளை 4000 வகைச் சாதிகளாகப் பிரித்ததும் நாம்தான். புராண,  இதிஹாசங்களில் வேதத்தில் ஆதாரம் இல்லை. அறிவு உடைய எல்லோரும் பிராம ணர். நாட்டைக் காப்போர் எல்லோரும் க்ஷத்ரியர்; வணிகம் செய்வோர் எல்லோரும் வைஸ்யர்; உடலுழைப்பு செய்வோர் அனைவரும் சூத்திரர். இந்த தொழில் முறைப் பாகுபாட்டை பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரித்தது நாம்தான்.

 

அதிலும் “இந்தியாவில் இரு வகை மக்களே உண்டு ஒன்று பிராமணர்; மற்றொன்று சூத்திரர்; அவர்களில் பிராமணர் எல்லோரும் ஆரியர்; மற்ற எல்லோரும் சூத்திரர்” என்று பிரித்தது வெளி நாட்டு பிரித்தாளும் சூழ்ச்சியினர்; அவர்களுக்குத் துணை போனவர்கள் நம்மூர் அரசியல்வாதிகள்; மார்கஸீய வாதிகள்!

 

சுருங்கச் சொன்னால், மக்கள் இனம் ஒன்று- வசுதைவ குடும்பகம்- யாதும் ஊர், யாவரும் கேளிர் – என்பதை மனு தர்மத்தின் முதல் அத்தியாயத்திலேயே காண்கிறோம்.

 

கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் படிப்பதற்கு முன்னால் மனுவைப் படித்து, ‘கொள்ளுன எது?, தள்ளுவன எது?’ என்பதை நாமே கற்கலாம்; காட்டலாம்.

மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு சட்டம்; நாட்டுக்கு நாடு வேறு சட்டம் உள்ள விநோத உலகத்தில் மனுவை மட்டும் கோபிப்பதில் பொருள் இல்லை.

முதல் அத்தியாயம்

 

ஸ்லோகம் 31

உலகம் வளர்ச்சி அடைவதற்காக தன்னுடைய முகத்திலிருந்து பிராமணனையும், தோளிலிருந்து க்ஷத்ரியனையும், தொடையிலிருந்து வைஸ்யனையும், காலிலிருந்து சூத்திரனையும் உண்டு பண்ணினார்.

 

  1. அந்த பிரம்மாவானவர் தனது உடலை இரண்டு துண்டமாக்கி, ஒன்றை ஆணாகவும், ஒன்றைப் பெண்ணாகவும் உண்டாக்கினார். அந்த ஆண் பெண் சேர்க்கையாலே விராட புருஷனை படைத்தார்.

 

33.அந்த விராட புருஷன் தவம் செய்து, இந்த உலகத்தைச் சிறப்பாக படைப்பதற்காக யார் ஒருவனை உருவாக்கினாரோ அவர்தான் நான் (மனு)

 

34.நானும் அனேக உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்காக, செயற்கரிய தவம் செய்து, பிராணிகளைப் படைக்கும் வல்லமை படைத்த பத்து மகரிஷிகளைப் படைத்தேன். அவர்கள் பிரஜாபதிகள் ஆவர்.

  1. அந்த ரிஷிகளின் பெயர்கள்:- மரீசி, அத்ரி, அங்கீரஸ், புலஸ்தியர், புலகன், கிரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன்

 

36.மிகுந்த ஒளிபடைத்த இந்தப் பிரஜாபதிகள் ஏழு மனுக்களையும், தேவர்களையும், சுவர்க்காதி லோகங்களையும், காந்தர்வர்களையும், தவ சீலம் உடைய மஹா முனிவர்களையும் உண்டாக்கினார்கள்

 

37.இந்தப் பிரஜாபதிகள் யக்ஷர்கள், வாசுகி முதலிய நாகர்கள்,  ரத்தவெறி கொண்ட காட்டுமிராண்டிகள், சர்ப்பங்கள், கருடன், இராக்ஷசர்கள்,  பைசாசர், அப்சரஸ்கள், அசுரர்கள், பறவைகள், பித்ருக்கள்

 

38.மின்னல், இடி, மேகம், இந்திர தனுசு எனப்படும் வானவில், தூமகேது (வால் நடசத்திரம்), பூகம்பம் (நில அதிர்ச்சி) முதலான இயற்கைச் சீற்றங்கள்

39.கின்னரர், வானரர் , மீன்கள், பலவகைப் பட்சிகள், பசுக்கள், மிருகங்கள்,  மனிதர்கள், இரண்டு பக்கத்தில் பற்களுள்ள புலி முதலிய விலங்குகள்.

 

40.புழு, உலண்டுப்பூச்சி, விளக்கணைப் பூச்சி (விட்டில்), எட்டுக்கால் பூச்சி (சிலந்தி) ஈ, முகடு,  கொசு, பலவகையான மரங்கள்

  1. இவை அனைத்தையும் பிரஜாபதிகள், என்னுடைய கட்டளைப்படி, தவம் செய்து, பிராணிகளின் தொழிலுக்கு ஏற்ப, தாவர, ஜங்கமத்தை (அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள்) உருவாக்கினர்.

42அடுத்ததாக பிராணிகளின் உற்பத்தி வரிசையும் அவற்றின் செய்கைகளையும் சொல்கிறேன்

43.பசுக்கள், மிருகங்கள், இரு புறம் பற்களை உடைய புலி முதலிய விலங்குகள், இராக்கதர் (ராக்ஷஸர்), பைசாசர் (பிசாசு), மனிதர்கள் ஆகியோர்  சராயு என்னும் கர்ப்பப் பையில் உண்டாகி   கர்ப்பப் பையுடன் பிறக்கின்றனர்.

44.பலவித பறவைகளும், நீரில் வாழும் முதலை, ஆமை, மீன், கரையில் வசிக்கும் ஓணான் ஆகியனவும் முட்டையில் இருந்து பிறக்கின்றன

 

45.கொசு, சிலந்தி, ஈ, மோட்டுப் பூச்சிகள் இவை புழுக்கதால், வேர்வையால் உண்டாகின்றன. இவைகளைப் போன்ற புழு, எறும்பு முதலியன உஷ்ணத்தால் உண்டாகின்றன.

 

  1. மரங்கள் விதைகளால், கிளைகளால் பூமியைப் பிளந்து மேல் நோக்கி வளர்கின்றன. இந்த மரங்களில் இருந்து வேறுபட்ட புடலை முதலிய கொடி, நெல் முதலிய பயிர்களும் பலன் கொடுத்தவுடன் அழிந்து போகின்றன.
  2. பூவாமல் காய்க்கும் அத்தி முதலிய மரங்களுக்கு வனஸ்பதி என்று பெயர். பூக்கும் மற்றுப் பூத்துக் காய்க்கும் மரங்கள் என மரங்கள் இரண்டு வகைப்படும்.

(பூவாது காய்ப்பன வனஸ்பதி= காட்டு ராஜாக்கள்; பூத்துக் காய்ப்பன = சாதரண மரங்கள்)

 

48.சில செடிகள் கொத்துக் கொத்தாயும் சில செடிகள் தூறாகவும் உண்டாகின்றன. புற்கள், கோரைகள், கொடிகள் இவைகள் விதைகளாலும் கொடிகளாலும் உண்டாகின்றன.

49.பாபகர்மத்துக்குக் காரணமாகிய பலவகை உருவம் படைத்த, தமோ குணத்தினால் சூழப்பட்ட இந்த தாவர ஜாதிகளுக்கு உள்ளறிவும் சுக துக்கங்களும் உண்டு.

50.பிரம்ம உற்பத்தி முதல், மரங்களின் உற்பத்தி வரை கோரமான சம்சார சாகரத்தின் உற்பத்தி சொல்லப்பட்டது.

 

  1. But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.
  2. Dividing his own body, the Lord became half male and half female; with that (female) he produced Virag.
  3. But know me, O most holy among the twice-born, to be the creator of this whole (world), whom that male, Virag, himself produced, having performed austerities.
  4. Then I, desiring to produce created beings, performed very difficult austerities, and (thereby) called into existence ten great sages, lords of created beings,
  5. Mariki, Atri, Angiras, Pulastya, Pulaha, Kratu, Praketas, Vasishtha, Bhrigu, and Narada.
  6. They created seven other Manus possessing great brilliancy, gods and classes of gods and great sages of measureless power,
  7. Yakshas (the servants of Kubera, the demons called) Rakshasas and Pisakas, Gandharvas (or musicians of the gods), Apsarases (the dancers of the gods), Asuras, (the snake-deities called) Nagas and Sarpas, (the bird-deities called) Suparnas and the several classes of the manes,
  8. Lightnings, thunderbolts and clouds, imperfect (rohita) and perfect rainbows, falling meteors, supernatural noises, comets, and heavenly lights of many kinds,

39 (Horse-faced) Kinnaras, monkeys, fishes, birds of many kinds, cattle, deer, men, and carnivorous beasts with two rows of teeth,

  1. Small and large worms and beetles, moths, lice, flies, bugs, all stinging and biting insects and the several kinds of immovable things.
  2. Thus was this whole (creation), both the immovable and the movable, produced by those high-minded ones by means of austerities and at my command, (each being) according to (the results of) its actions.
  3. But whatever act is stated (to belong) to (each of) those creatures here below, that I will truly declare to you, as well as their order in respect to birth.
  4. Cattle, deer, carnivorous beasts with two rows of teeth, Rakshasas, Pisakas, and men are born from the womb.
  5. From eggs are born birds, snakes, crocodiles, fishes, tortoises, as well as similar terrestrial and aquatic (animals).
  6. From hot moisture spring stinging and biting insects, lice, flies, bugs, and all other (creatures) of that kind which are produced by heat.
  7. All plants, propagated by seed or by slips, grow from shoots; annual plants (are those) which, bearing many flowers and fruits, perish after the ripening of their fruit;
  8. (Those trees) which bear fruit without flowers are called vanaspati (lords of the forest); but those which bear both flowers and fruit are called vriksha.
  9. But the various plants with many stalks, growing from one or several roots, the different kinds of grasses, the climbing plants and the creepers spring all from seed or from slips.
  10. These (plants) which are surrounded by multiform Darkness, the result of their acts (in former existences), possess internal consciousness and experience pleasure and pain.
  11. The (various) conditions in this always terrible and constantly changing circle of births and deaths to which created beings are subject, are stated to begin with (that of) Brahman, and to end with (that of) these (just mentioned immovable creatures).

31 to 50

ं१।३१अ/ लोकानां तु विवृद्ध्यर्थं मुखबाहूरुपादतः ।

ं१।३१च्/ ब्राह्मणं क्षत्रियं वैश्यं शूद्रं च निरवर्तयत् ॥ 31॥

 

ं१।३२अ/ द्विधा कृत्वाऽत्मनो देहमर्धेन पुरुषोऽभवत् ।

ं१।३२च्/ अर्धेन नारी तस्यां स विराजमसृजत् प्रभुः ॥ 32॥

 

ं१।३३अ/ तपस्तप्त्वाऽसृजद् यं तु स स्वयं पुरुषो विराट् ।

ं१।३३च्/ तं मां वित्तास्य सर्वस्य स्रष्टारं द्विजसत्तमाः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३४अ/ अहं प्रजाः सिसृक्षुस्तु तपस्तप्त्वा सुदुश्चरम् ।

ं१।३४च्/ पतीन् प्रजानामसृजं महर्षीनादितो दश ॥Bछ्.Sछ्॥

 

ं१।३५अ/ मरीचिमत्र्यङ्गिरसौ पुलस्त्यं पुलहं क्रतुम् ।

ं१।३५च्/ प्रचेतसं वसिष्ठं च भृगुं नारदमेव च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३६अ/ एते मनूंस्तु सप्तान् यानसृजन् भूरितेजसः ।

ं१।३६च्/ देवान् देवनिकायांश्च महर्षींश्चामितोजसः ॥ 36॥

ं१।३७अ/ यक्षरक्षः पिशाचांश्च गन्धर्वाप्सरसोऽसुरान् ।

ं१।३७च्/ नागान् सर्पान् सुपर्णांश्च पितॄणांश्च पृथग्गणम् ॥ Bछ्.Sछ्॥ %[ं।

 

ं१।३८अ/ विद्युतोऽशनिमेघांश्च रोहितैन्द्रधनूंषि च ।

ं१।३८च्/ उल्कानिर्घातकेतूंश्च ज्योतींष्युच्चावचानि च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३९अ/ किन्नरान् वानरान् मत्स्यान् विविधांश्च विहङ्गमान् ।

ं१।३९च्/ पशून् मृगान् मनुष्यांश्च व्यालांश्चोभयतोदतः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४०अ/ कृमिकीटपतङ्गांश्च यूकामक्षिकमत्कुणम् ।

ं१।४०च्/ सर्वं च दंशमशकं स्थावरं च पृथग्विधम् ॥ 40॥

 

ं१।४१अ/ एवमेतैरिदं सर्वं मन्नियोगान् महात्मभिः ।

ं१।४१च्/ यथाकर्म तपोयोगात् सृष्टं स्थावरजङ्गमम् ॥ Bछ्.Sछ्॥

ं१।४२अ/ येषां तु यादृशं कर्म भूतानामिह कीर्तितम् ।

ं१।४२च्/ तत् तथा वोऽभिधास्यामि क्रमयोगं च जन्मनि ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४३अ/ पशवश्च मृगाश्चैव व्यालाश्चोभयतोदतः ।

ं१।४३च्/ रक्षांसि च पिशाचाश्च मनुष्याश्च जरायुजाः ॥ Bछ्.Sछ्॥ %[ंंअनुषाश्च ]

ं१।४४अ/ अण्डजाः पक्षिणः सर्पा नक्रा मत्स्याश्च कच्छपाः ।

ं१।४४च्/ यानि चैवं।प्रकाराणि स्थलजान्यौदकानि च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४५अ/ स्वेदजं दंशमशकं यूकामक्षिकमत्कुणम् ।

ं१।४५च्/ ऊष्मणश्चोपजायन्ते यच्चान्यत् किं चिदीदृशम् ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४६अ/ उद्भिज्जाः स्थावराः सर्वे बीजकाण्डप्ररोहिणः ।

ं१।४६च्/ ओषध्यः फलपाकान्ता बहुपुष्पफलोपगाः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४७अ/ अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।

ं१।४७च्/ पुष्पिणः फलिनश्चैव वृक्षास्तूभयतः स्मृताः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४८अ/ गुच्छगुल्मं तु विविधं तथैव तृणजातयः ।

ं१।४८च्/ बीजकाण्डरुहाण्येव प्रताना वल्ल्य एव च ॥ Bछ्.Sछ्॥

 

 

तमसा बहुरूपेण वेष्टिताः कर्महेतुना ।

अन्तस्संज्ञा भवन्त्येते सुखदुःखसमन्विताः ॥ 49॥

 

एतदन्तास्तु गतयो ब्रह्माद्याः समुदाहृताः ।

घोरेऽस्मिन् भूतसंसारे नित्यं सततयायिनि ॥ 50॥

 

 

Tags: மனுநீதி நூல் -4, பிராணிகள் தாவரங்கள் பிரிவு, தாவரவியல்,விலங்கியல் அறிவு, திராவிடர், ஆரியர் பிரிவினை

 

–Subham–

 

 

உலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்!! (Post No.4410)

Written by S.NAGARAJAN

 

 

Date: 19 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4410

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வாரம் தோறும் வெளியாகிறது பாக்யா வார இதழ். அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 39வது கட்டுரையாக 17-11-17 இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.

 

 

 

ஸூனிஷ்! உலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்!!

 

 ச.நாகராஜன்

 

 

 

 

“எதிர்காலம் தங்கள் கனவுகளின் அழகில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே உரித்தாகுகிறது – எலினார் ரூஸ்வெல்ட்

 

 

இன்று உலகையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கும் புத்தகம் ஸூனிஷ்! (Soonish)

 

ஜாக் மற்றும் கெல்லி வெய்னர்ஸ்மித் (Zach and kelly Weinersmith) எழுதியுள்ள இந்தப் புத்தகம் 17-10-2017 அன்று தான் வெளியிடப்பட்டது.

 

உலகையே மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்களைப் பற்றி அப்படிப்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை நேரடியாகச் சந்தித்து விவரங்களைப் பெற்று இந்த நூலை எழுதியுள்ளனர் இந்த இரட்டையர். இவர்கள் தம்பதிகள் என்பது ஒரு சுவையான விஷயம்.

 

 

இதில் ஜாக் கார்ட்டுன் வரைவதில் பெயர் பெற்றவர்.  மனைவி கெல்லியோ ஒரு விஞ்ஞானி. ஒட்டுண்ணியியல் வல்லுநர். (Parasitologist). ரைஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

 

    விண்வெளியில் இனி பறக்கப்போகும்  ராக்கட்டுகளின் வடிவமைப்பு எப்படி இருக்கும், ஆஸ்ட்ராய்டுகளில் சுரங்கம் தோண்டி விலை மதிப்புள்ள தாதுப்பொருள்களை எடுத்தல், ஃப்யூஷன் பவர், கம்ப்யூட்டர் மூளை இணைப்பு, ரொபாட்டுகளின் வடிவமைப்பு, சிந்தடிக் பயாலஜி, உடலின் புது அங்கங்களை பிரிண்ட் போட்டுக் கொள்ளுதல் என்பன போன்ற பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி இந்த நூல் விரிவாக விளக்குகிறது.

விண்வெளித் தொழில்நுட்பத்தை எடுத்துக் கொண்டால் இன்று விண்ணில் செலுத்தப்படும் ராக்கட்டுகள் ஒரு முறையே செலுத்தப்பட முடியும். ஆனால் எதிர்கால ராக்கட்டுகள் மீண்டும் மீண்டும் விண்ணில் பறக்கத் தக்கவையாக அமைக்கப்படும் ஸ்பேஸ் எலிவேடர் எனப்படும் விணிவெளித் தூக்கி விண்ணில் செல்வதை எளிதாக்கும்!

 

 

ஜெர்வின் ஷால்க் (Gerwin Schalk) என்ற விஞ்ஞானியை இந்த இரட்டையர் சந்தித்தனர். ஷால்க் மூளையைக் கம்ப்யூட்டருடன் இணைக்கும் ஆராய்ச்சியில் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கிறார். அவர் சொல்லும் விவரம் யாராலும் நம்ப முடியாத அளவு பிரம்மாண்டமான விஷயம். இப்போது க்ளவுட் என்ற கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் போல உலகில் தோன்றியுள்ள மனிதர்களின் அனைத்து மனங்களும் ஒரு க்ளவுடில் இணைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு மனிதரும் அவரது மூளையை  ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் இறக்கி விடுவார். அதனால் உலகில் பிரம்மாண்டமான மாறுதல் ஏற்படும்.

 

  உடல் அங்கங்களில் குறைபாடு கொண்டவர்களுக்கு மூளை- கம்ப்யூட்டர் இணைப்பு அந்தக் குறைபாடைப் போக்கி விடும்!

       ஜெனிடிக் துறை எனப்படும் மரபியல் சம்பந்தமான முன்னேற்றங்களோ வியத்தகு அளவில் மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை நிரந்தரமாக அளிக்கும்.

 

 

     ஜோர்டான் மில்லர் (Jordan Miller) என்ற விஞ்ஞானி அங்கங்களை பிரிண்ட் (Organ printing) போடுவது பற்றி இவர்களிடம் விளக்கினார். இந்த விஞ்ஞானி திசுக்களை வளர்க்கிறார் என்பது பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.

எதிர்காலத்தில் மனிதர்களுக்கு என்ன நடக்கப் போகிறது?

ஒருவர் தனக்குத் தனது கை பிடிக்கவில்லை என்றால் அதை அவரே எரித்துக் கொண்டு, பிடித்த முறையில் கையை டிசைன் செய்து கொண்டு அதை பிரிண்ட் போட்டு கையை உருவாக்கிப் பொருத்திக் கொள்ளலாம். இப்படியே ஒவ்வொரு அங்கமும் உடலில் பொருத்தப்படப் போகிறது!

பறக்கும் கார்கள் என்பதில் மட்டும் 80 வகைகள் இன்றைய ஆய்வில் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இது சாத்தியமான ஒன்றாக ஆகி உலகின் போக்குவரத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிச் சாதனை படைக்கும்.

நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி அத்தியாயத்தின் முக்கிய விஷயத்தை விளக்கும். மூளையையும் கம்ப்யூட்டரையும் இணைப்பது என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டால் எப்படி அவை இணைக்கப்படும், இதுவரை அப்படி ஏன் இணைக்க முடியவில்லை என்பன போன்ற செய்திகள் இடம் பெறும். இரண்டாவது பகுதி இந்த முயற்சியில் தோல்விகள் எப்படி ஏற்படலாம் என்பதை விளக்கும். மூன்றாவது பகுதி இந்த ஆராய்ச்சி வெற்றி பெறும் போது அது எப்படி உலகை மாற்றும் என்பதை விளக்கும். நான்காவது பகுதி நகைச்சுவை ததும்ப கார்ட்டூன்கள் மூலம் இந்த இரட்டையர் ஆய்வின் போது எதிர்கொண்ட நிகழ்வுகளை விளக்கும். நூலில் கார்ட்டூன்களுக்குப் பஞ்சமில்லை.

இந்த மாறுதல்களால் ஒழுக்க சம்பந்தமான ஏராளமான பிரச்சினைகள் எழப் போகின்றன. அங்கங்களை டொனேஷன் தருவது, நினைத்தபடி தனது உடல் அங்கங்களை மாற்றிக் கொள்வது போன்றவை சட்ட சம்பந்தமான பிரச்சினைகளை மட்டும் தரப்போவதில்லை; வாழ்க்கை முறையின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கே ஒரு சவாலை விடப் போகின்றன.

மொத்தத்தில் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மனிதனை ஒரு புதிய வாழ்க்கை முறைக்குக் கொண்டு செல்லப் போகின்றன.

இதை ஒரே வரியில் சொல்வதென்றால் மனிதன், பிரமிக்க வைக்கும் சூப்பர் மனிதன் ஆகப் போகிறான்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

 

பிரபல ஹாலிவுட் நடிகையான ஹெடி லமார் ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, பெரிய விஞ்ஞானியும் கூட. (ஏற்கனவே இந்தத் தொடரில் இவரைப் பற்றிய சில துணுக்குச் செய்திகளைப் பார்த்திருக்கிறோம்.) ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூதரான இவர் தொலைத் தொடர்பு அமைப்பில் புதிய முறைகளைக் கண்டு பிடித்து நேச நாடுகளுக்கு உதவினார்.

அவரது தந்தை ஒரு வங்கி அதிகாரி. அவர் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி ஆர்வத்துடன் லமாருக்குச் சொல்வார்.

 

 

ஹிட்லரின் கொடுமைகள் தாங்காமல் யூதர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியது போல லமாரும் தப்பி ஓடினார். ஆனால் அவர் தனது தாயாரைப் பற்றி வெகுவாகக் கவலைப்பட்டார்.

 

யூதர்கள் ஹிட்லரின் கொடுமை தாங்காமல் தப்பித்து கப்பல் மூலமாக ஓடும் போது ஹிட்லர் குண்டுகள் வீசி அவர்கள் கப்பல்களை அழித்தான். லமார் ஒரு இரகசியமான சங்கேத முறையிலான தொலைத்தொடர்பு முறையை அமைத்து நேச நாடுகளுக்குத் தந்தார். இந்த அமைப்பில் உள்ள ரேடியோ சிக்னல் மூலமாக நேச நாடுகளின் போர்க்கப்பல்கள் தங்கள் டார்பிடோகளைக் கட்டுக்குள் வைக்கும். இந்த அமைப்பு கப்பலிலிருந்து வெளியே செல்லும் ரேடியோ சிக்னல்களின் அலைவரிசையை மாற்றிக் கொண்டே இருக்கும். அதனால் நாஜிகளின் போர்க்கப்பல்களுக்கு நேச நாட்டின்  கப்பல்கள் இருக்குமிடம் சரியாகத் தெரியாமல் போனது. அவர்களின் சிக்னலை ஜாம் செய்து, செய்தித் தொடர்பையும் நாஜிக்களால்  தடுக்க முடியாமல் போனது. இதனால் நேச நாடுகளின் கப்பல் படைகள் வலுவுள்ளதாக ஆயின.

 

 

லமாரின் கணவர் நாஜிக்களுக்கு போர் தளவாடங்களை சப்ளை செய்து வந்தவர். ஆஸ்திரியாவிலிருந்து தப்பி ஓடுவதற்கு முன்னர் தன் கணவரிடமிருந்து நாஜிக்களின் டார்பிடோ வகைகளைப் பற்றியும் அவற்றின் வடிவமைப்பையும் நன்கு அறிந்து கொண்ட லமார் தனக்கே உரிய விஞ்ஞான அறிவின் மூலமாக நேச நாடுகளுக்கு புது டார்பிடோவை வடிவமைத்துக் கொடுத்தார்.

இது நாஜிக்களின் வடிவமைப்பை விடச் சிறந்ததாக அமைந்தது.

 

நடிகை ஒருவர் உலகப் போரில் விஞ்ஞானியாக சேவை செய்தது ஒரு அதிசயமான செய்தி!

***

 

 

 

ஆஹா! அபார விஞ்ஞான வளர்ச்சி! ஆனால் மனிதன் .. ?! (Post No.4394)

Written by S.NAGARAJAN

 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-20 am

 

 

Post No. 4394

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

அறிவியல் தாக்கம்

 

ஆஹா! அபார விஞ்ஞான வளர்ச்சி! ஆனால் மனிதன் .. ?!

 

ச.நாகராஜன்

 

1

 

நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் தாக்கம் மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும், எல்லா அம்சங்களிலும் வந்து விட்டது – ஆன்ம வளர்ச்சியைத் தவிர.

இதைப் பலரும் கவலையுடன் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

சாது டி.எல்.வாஸ்வானி 365 நாளுக்குமான தினசரி சிந்தனைகளைத் தனது “Breakfast With God” என்ற நூலில் தந்திருக்கிறார்.

அதில் பிப்ரவரி 22ஆம் தேதிக்கான நற்சிந்தனை இது:

 

The Modern man is proud of his progress, his science, his commerce and mechanical inventions.

 

This scientific age is, to many, the age of wonders; yet is man unhappy still! This age of wonders is, also, an age of deep unrest.

 

There is weariness in many hearts.

 

In this mechanical age man is becoming, more and more, a machine himself.

Not until he rises above the machine into a realm of the Atman may man be truly happy.

 

பொருள் பொதிந்த சிந்தனை அல்லவா இது! இயந்திரங்களைப் பயன்படுத்தப் போய் மனிதன் இயந்திரமாகவே இதயமின்றி ஆகி விடுவானோ?!

 

ரொபாட்டில் இனி இரு வகை இருக்குமோ? ரொபாட்,மனித ரொபாட் என்று??!!

2

ஹரி கிஷன் தாஸ் அகர்வால் (Hari Kishandas Aggarwal) என்ற சிந்தனையாளர் Peace  Of Mind  என்ற இரண்டு பாகம் கொண்ட நூலில் 775 பாக்களைப் புனைந்துள்ளார்.

அதில் சில:

 

Change

 

The Stone age has gone

The Iron age has gone

The bullock-cart age has gone

The Jet age has come

Contentment has gone

Discontentment has come (Verse 409)

 

Paradoxes of Materialism – I

Inventions have increased and the wants too,

The doctors have multiplied and the diseases too,

Weapons have grown and the wars too,

Production has doubled and the population too. (Verse 548)

 

Paradoxes of Materialism – II

Science has developed and the destruction too,

Employment has increased and the strikes too,

Wealth has increased and poverty too,

Education has increased and ignorance too. (Verse 549)

 

Paradoxes of Materialism – III

Vegetables have increased and the non-vegetarians too,

Politicians have increased and the problems too,

Leaders have increased and the labels too,

Religions have increased and the repulsions too. (Verse 550)

 

இவர் இப்படிக் கூறுவதெல்லாம் சரிதானே!

 

3

விஞ்ஞானம் வளர்கிறது. அதைக் குட்டிக் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டமா, என்ன?

பார்த்தார் ஒரு கவிஞர், குழந்தைகளுக்கான் ‘ட்விங்கிள், ட்விங்கிள், லிட்டில் ஸ்டார் பாடலைக் கூட விட்டு வைக்கவில்லை. பாடினார் இப்படி:-

 

Twinkle, twinkle little star,

How I wonder where you are:

High above I see you shine,

But, according to Einstein,

You are not where you pretend,

You are just around the bend;

And your sweet seductive ray

Has been leading man astray

All these years – O, Little Star,

Don’t you know how bad you are?

 

சரி, குழந்தைகள் ஒரு புறம் இருக்கட்டும், வாலிபர்களும், பருவ மங்கைகளும் விஞ்ஞானத்தால் வளர்ந்தார்களா?

ஒரு கவிஞர் பதிலிறுக்கிறார் இப்படி:

 

A girl at college, Miss Breese,

Weighed down by B.A.’s and Litt.D’s

Collapsed from the strain

Said the doctor, “’T is plain

You are killing yourself – by degrees.

 

4

சிந்திக்க வேண்டும் சற்று!

எதை எதை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அதை அதை அந்த்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

அறிவியலுக்கு ஒரு இடம்; ஆன்மீகத்திற்கு முதலிடம்!

புரிந்தால் சரி!

****

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை! (Post No4382)

Written by S.NAGARAJAN

 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4382

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

10-11-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில்  வெளியாகியுள்ள  கட்டுரை

 

 

 

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை!

 

 ச.நாகராஜன்

 

 

“ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்றால், அதைச் செய்து விடுவது தான்! -அமிலியா எர்ஹார்ட்

Amelia Earhart

 

   உலகில் முதன் முதலாக ஒரு விமானத்தை ஓட்டிப் பல சாகஸங்களைச் செய்த துணிச்சல்காரப் பெண்மணியை உலகம் அவ்வளவாக அறிந்திருக்காது. அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தது உட்பட ஏராளமான சாகஸங்களை நிகழ்த்திய அமெரிக்கப் பெண்மயான அமிலியா எர்ஹார்ட் (பிறப்பு 24, ஜூலை 1897 மர்ம மறைவு 2, ஜூலை, 1937 – Amelia Earhart) மங்கையர் சரித்திரத்தில் மகோன்னதமான இடத்தைப் பிடிப்பவராவார்

 

 

அமிலியா மேரி எர்ஹார்ட் அமெரிக்காவில் கான்சாஸில் பிறந்தவர். இளமையிலிருந்தே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருந்தார். இளமையில் பேஸ்கட் பால் விளையாடுவார். ஆட்டோ ரிப்பேர் வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் கல்லூரியிலும் படித்தார்.

முதல் உலகப்போரில் ரெட் கிரஸில் இணைந்து நர்ஸாகப் பணி புரிந்தார். கனடாவில் டோரொண்டோவில் ராயல் ஃப்ளையிங் கிளப்பில் விமானங்கள் பறப்பதை வேடிக்கை பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

முதல் உலகப் போர் முடிந்தவுடன் அமரிக்கா திரும்பி நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  மருத்துவ ஆரம்பப் படிப்பில் சேர்ந்தார்.

கலிபோர்னியாவில் 1920இல் டிசம்பர் மாதம் புகழ் பெற்ற பைலட்டான ஃபிராங்க் ஹாக்ஸ் என்பவருடன் கூடச் சேர்ந்து அவர் விமானத்தில் பறந்தார்.

 

 

1921, ஜனவரி மாதம் நேதா ஸ்னூக் என்ற பெண் பயிற்சியாளரிடம் விமானத்தை ஓட்ட கற்றுக் கொண்டார்.

இதற்காகப் பணம் கட்ட லாஸ் ஏஞ்சலஸில் டெலிபோன் கம்பெனியில் குமாஸ்தாவாக அவர் பணி புரிந்தார்.

பயிற்சி முடிந்தவுடன் தனக்கென சொந்தமாக ஒரு பழைய விமானத்தை வாங்கிக் கொண்டார். அதற்கு ‘கேனரிஎன்று செல்லப் பெயரையும் சூட்டினார்.

 

 

டிசம்பர் 1921இல் பறப்பதற்கான லைசென்ஸை பெற்றவுடன் தைரியமாக வானில் பறக்க ஆரம்பித்தார்.

1922இல் 14000 அடி உயரத்தில் பறந்த முதல் பெண்மணி என்ற சாகஸத்தை நிகழ்த்திக் காட்டினார். 1932இல் அட்லாண்டிக்கில் தனியாகப் பறந்து அதைக் கடந்த முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார். அவர் இந்த சாதனையை நிகழ்த்தியவுடன் அமெரிக்காவில் காங்கிரஸ் அவருக்கு  ‘ஃபிளையிங் கிராஸ் என்ற அரிய விருதைக் கொடுத்து கௌரவித்தது.

 

 

அதே ஆண்டில் தொடர்ந்து 19 மணி நேரம் இடைவிடாது பறந்து, லாஸ் ஏஞ்சலஸில் கிளம்பியவர் நியு ஜெர்ஸியில் வந்து இறங்கி புது சாதனையைப் படைத்தார்.

1935இல் ஹவாயிலிருந்து தனியாகக் கிளம்பி அமெரிக்காவை அடைந்து அதிலும் முதலாவது பெண்மணியாகத் திகழ்ந்து புகழ் பெற்றார்.

 

இதனாலெல்லாம் உலகெங்கும் வாழும் மங்கையர் மனதில் ஒரு உற்சாகமும் ஆர்வமும் ஏற்பட்டது. ‘நைண்டி நைன்ஸ் (Ninety Nines)  என்ற விமான ரேஸை நடத்தும் நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்தார்.

 

தொடர்ந்த சாகஸமே அவரின் இறுதிக்குக் காரணமாக அமைந்தது.

 

1937ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்திலிருந்து உலகத்தைச் சுற்றுவது என்ற முடிவில் தன் பயணத்தைத் தொடங்கினார்.

 

 

அவருக்கு வழி காட்ட ப்ரெட் நூனன் என்பவர் உடன் சென்றார். மியாமி வழியாக தென் அமெரிக்கா சென்று பின்னர் அட்லாண்டிக்கிலிருந்து ஆப்பிரிக்கா சென்று இந்தியா வழியே தென்கிழக்கு ஆசியாவை அடைந்தார் அமிலியா.

ஜூன் 29ஆம் தேதி அவர்கள் நியூ கினியாவில் லீ என்ற இடத்தை அடைந்த போது 22000 மைல்கள் பறந்திருந்தனர். புறப்பட்ட இடத்தை அடைய இன்னும் 7000 மைல்கள் தான் பாக்கி. லீயிலிருந்து ஜூலை இரண்டாம் தேதி அமிலியாவும் நூனனும் கிளம்பினர். பிறகு அந்த இருவரையும் காணோம்.

உலகமே பரபரப்படைந்தது. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் பிரம்மாண்டமான ஒரு தேடுதல் வேட்டைக்கு ஏற்பாடு செய்தார். இரண்டு வார காலம் இந்தத் தேடுதல் பணி நடந்தது. ஆனால் பயனில்லை.

 

 

1937, ஜூலை 19ஆம் தேதி அவர்களைக் கடலில் மறைந்தவர்களாக அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அமிலியாவின் மர்மமான மறைவுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்பட்டன.

 

1937லிருந்து 2017 முடிய இந்த எண்பது ஆண்டுகளில் பல திடுக்கிடும் தகவல்களை அவரது மர்ம மறைவு பற்றி ஆராய்வோர் தந்து கொண்டே இருக்கின்றனர்.

‘விழுந்து மூழ்கிய கொள்கை என்பதை வலியுறுத்துவோர் அமிலியாவின் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய்விட்டதால் ஹௌலேண்ட் ஐலேண்ட் அருகே அவர்கள் விமானம் கீழே விழுந்து மூழ்கியிருக்கலாம் என்கிறனர். கடந்த 15 ஆண்டுகாலமாக அவர்கள் பயணித்த விமானத்தின் சிதிலமடைந்த பாகம் ஏதேனும் கிடைக்குமா என்ற ஆராய்ச்சிக்காக ஹை டெக் சோனார் தொழில்நுட்பமும் ஆழ்கடல் ரொபாட்டுகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பயணித்த ‘எலெக்ட்ரா விமானத்தின் எந்த ஒரு பகுதியும் பசிபிக் பிராந்தியத்தில் கிடைக்கவில்லை.

     

 

 

     பன்னாட்டு விமான மீட்பு வரலாற்றுக் குழு தனது ஆய்வில் அவர்கள் ஒருவேளை ஹௌலேண்ட் ஐலேண்டிலிருந்து சுமார் 350 மைல் தள்ளில் உள்ள கார்ட்னர் ஐலேண்டில் இறங்கி இருக்கலாம் என்ற கொள்கையை முன் வைக்கின்றனர். யாருமே குடியிருக்காத அந்தப் பகுதியிலும் விமானங்கள் பறந்து ஆய்வை நடத்தின. ஆனால் பலனில்லை. ஒருவேளை அவர்கள் அந்தத் தீவில் தங்கி பசியால் வாடி இறந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.

1988ஆம் ஆண்டிலிருந்து பல முறை இந்தத் தீவிற்குப் பலரும் சென்று இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தனர்.

ஜூன், 2017இல், அங்கு தொடங்கி நடத்தப்படும் ஆய்வில் ஏதேனும் மனித எலும்புக் கூடுகள் கிடைக்குமா என்று பார்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

 

ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் பெண்கள் அணிந்து வந்த மாடல் செருப்பு போல ஒரு செருப்பு அந்த ஆய்வில் கிடைத்தது. பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன குடுவை ஒன்றும் கிடைத்தது. மனித  விரல் ஒன்றும் கிடைத்தது.

 

இது தவிர இந்த மர்மம் பற்றி, வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன.

 

 

சிலர் அவர்களை ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு சென்று கொன்று விட்டனர் என்கின்றனர். இன்னும் சிலரோ அமிலியா ரூஸ்வெல்ட் நிர்வாகத்தில் உளவாளியாகப் பயன்படுத்தப்பட்டதால் அவர் இறந்தது போல ஒரு நாடகம் நடத்தப்பட்டு ‘இறந்து போன இருவருக்கும் புதுப் பெயர்கள் வழங்கப்பட்டு அவர்கள் எங்கோ வாழ்கின்றனர் என்கின்றனர்.

   

 

  ஆயிரக்கணக்கான ஆவணங்களைத் தன் ஆய்வில் சேர்த்துள்ள லெஸ் கின்னி என்பவர், கப்பல் ஒன்று உடைந்த விமானத்தை ‘டோ செய்து இழுத்துக் கொண்டு செல்வது ஒரு போட்டோவில் காணப்படுகிறது என்றும் அந்தக்  கப்பலில் காணப்படும் இருவர் அமிலியா மற்றும் நூனன் போல இருக்கிறது என்றும் கூறுகிறார்.

 

 

இந்த போட்டோ உண்மையான ஒன்று தானா என்பதை ஆய்வு செய்த ஃபோரன்ஸிக் நிபுணரான டக் கார்னர், “சந்தேகமே இல்லை; இது உண்மையான போட்டோ தான் என்கிறார்.

‘சரி, கப்பல் யாருடையது என்பதை ஆராய்ந்த அவர்கள் அது கோஷு மாரு என்ற ஜப்பானியக் கப்பல் என்று கண்டு பிடித்துள்ளனர்.

 

அமிலியாவும் நூனனும் ஜப்பானுக்குக் கடத்தப்பட்டனரா? அவர்கள் ஜப்பானில் என்ன ஆனார்கள்?

மர்மத்தைத் துலங்கிக் கொள்ள ஆய்வு தொடர்கிறது.

இதில் ஆர்வம் உள்ள உலக மக்கள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

உலக சாதனை படைத்த மங்கையை அப்படியே விட்டு விடலாமா என்ன?என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேணடாமா?

 

 

தாய்க்குலம் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் பல்வேறு ஆய்வுகளைக் கவனித்து வருகின்றனர். மர்மம் தொடர்வது போல ஆய்வுகளும் தொடர்கின்றன!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மறைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. என்றாலும் கூட அவர் அன்றாட செய்திகளில் அவ்வப்பொழுது முதலிடம் வகிக்கிறார். சமீபத்தில் விஞ்ஞானிகள் குழு நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர். அது கிராவிடேஷனல் அலைகளைப் பற்றி அவர் முன்னமேயே கூறி இருந்ததை மெய் என்று நிரூபித்தது.

 

 

   இப்போது அவர் தன் கைப்பட, ‘வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று எழுதிய அறிவுரைகளை ஏலம் போட்டதில் அது 18 லட்சம் டாலருக்கு விற்பனை ஆகி இருக்கிறது. (ஒரு டாலரின் இன்றைய மதிப்பு ரூபாய் 65)

 

ஜப்பானில் 1922இல் அவர் ஒரு சொற்பொழிவை ஆற்றச் சென்றிருந்தார். நோபல் பரிசு பெற்ற அவரது சொற்பொழிவு நான்கு  மணி நேரம் நடந்தது. 2500 பேர் அதைக் கேட்டனர். அங்கு தங்கி இருந்த போது ஒரு டெலிவரி பாய் அவரிடம் ஒரு செய்தியைக் கொடுக்கச் சென்ற போது அவனுக்கு டிப்ஸ் கொடுக்க அவர் விரும்பினார். ஆனால் போதுமான சில்லறை இல்லை. ஆகவே தன் கைப்பட அவர் குறிப்புகளை எழுதினார். அது தான் இன்று உலக பிரசித்தி பெற்ற ‘சந்தோஷக் குறிப்புகள் ஆகி விட்டன. ஒரு குறிப்பு ஹோட்டல் பேப்பரிலும் இன்னொரு குறிப்பு ஒரு துண்டுச் சீட்டிலும் எழுதப்பட்டன.

 ‘இதற்கு என்றேனும் ஒரு நாள் கொஞ்சம் மதிப்பு கிடைக்கும் என்று கூறியவாறே அவற்றை டெலிவரி பாயிடம் அவர் கொடுத்தார்.

 

அதில் ஒரு குறிப்பு இது: எப்போதும் அமைதியற்று வெற்றியை அடைய விழைவதை விட அமைதியான எளிய வாழ்க்கை சந்தோஷத்தைத் தரும் ( “A calm and modest life brings more happiness than the pursuit of success combined with constant restlessness.”)

இன்னொரு குறிப்பு இது : மனம் இருந்தால் மார்க்கம் உண்டு   ( “Where there is a will, there is a way.”)

 

ஐன்ஸ்டீன் ஆரூடம் கூறியது போலவே அவற்றின் மதிப்பு இன்று பதினோருகோடியே எழுபது லட்சம் ரூபாய் ஆகி விட்டிருக்கிறது.

பெரியோர் வாக்கு பொய்க்காது!

***

 

மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே! (Post No.4378)

Written by London Swaminathan 

 

Date: 8 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-23

 

 

Post No. 4378

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

மனு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர் கூறுவர்; இத்து தவறு; அவர் ரிக் வேத காலத்தைச் சேர்ந்தவர். அவர் சரஸ்வதி நதி பற்றிப் பேசுகிறார். இது கி.மு 2000ல் இருந்த நதி. பின்னர் மறைந்து போனது. மேலும் ரிக் வேதமும் மனு தர்ம சாஸ்திரமும் ‘சதி’ எனப்படும் உடன் கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவுமே சொல்லவில்லை. இது போன்ற பல விஷயங்களை  வைத்து கணக்கிட்டால் அவர், 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று நான் கருதுகிறேன். மேலும் மனு தர்ம சாஸ்திரத்தில் உள்ள 2000-க்கும் அதிகமான  ஸ்லோகங்களைப் படித்தால் அவர் சொன்ன விஷயங்களுக்கு நேர் மாறாக பல விஷயங்கள் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது தெள்ளிதின் விளங்கும்.

 

கி.மு முதல் நூற்றாண்டில் ஆண்ட சுங்க வம்சத்தினர் தீவிர பிராமணர்கள். அவர்களுடைய காலத்தில் தீவிரவாத பிராமணர்கள் சில விஷயங்களை சூத்திரர்களுக்கு எதிராகச் சேர்த்து இருக்கலாம். இந்துக்களின் எல்லா நூல்களும் அவ்வப்போது Update அப்டேட் செய்யப்படும் — புதுப்பிக்கப்படும் — வழக்கம் உண்டு. இதனால் கடைசி விஷயத்தை மட்டும் வைத்துக் காலக் கணக்கீடு செய்வர் வெளிநாட்டினர். ஆகவே மனுவின் தற்போதைய காலம் தவறு. மேலும் அவர் எழுதிய சாத்திரம் த்ருஷத்வதி– சரஸ்வதி நதிகளுக்கு இடைப்பட்ட மக்களுக்கானதே தவிர எல்லோருக்குமானதல்ல (அவர் எழுதிய காலத்தில்).  நிற்க.

 

சொல்ல வந்த விஷயம் மனுவுக்கு ஏன் நோபல் பரிசு தரக்கூடாது? என்பதே. மனு பேசாத பொருளல்ல; இதை சட்ட நூல் என்பதைவிட இந்துக்களின் கலைக் களஞ்சியம் என்று சொல்லலாம். 2000 க்கும் மேலான ஸ்லோகங்களில் அவர் சொல்லாத, தொடாத விஷயமே இல்லை.

 

 

இப்பொழுது தாவரவியல் விஷயங்களை மட்டும் காண்போம்:

நாங்கள் எல்லாம் B.Sc. Botany பி. எ ஸ்சி. பாடனி (தாவரவியல் படித்தபோது லின்னேயஸ் என்பவர் வகுத்த தாவரப் பகுப்பைப் (Linnaeus Classification of Plants) படித்தோம். எனக்கு 100 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் வேறு Theory ‘தியரி’ படித்திருப்பார்கள். விஞ்ஞானம் என்பது மாறிக்கொண்டே வரும். ஆக மனு சொன்னதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள  வேண்டியதல்ல. ஆனால் சில அடிப்படை விஷயங்கள் மாறாது.

காதலி மீது பூவை எறியாதீர்கள்!

ஜகதீஷ் சந்திர போஸின் முக்கிய பொன்மொழி: உங்கள் காதலி மீதுகூட ரோஜாப் பூவைப் போட்டு விளையாடாதீர்கள்; ஏனெனில் ரோஜாப் பூவுக்கு வலிக்கும்!

 

 

சர் ஜகதீஷ் போஸ் என்ற இந்திய  விஞ்ஞானிதான் தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை விஞ்ஞான முறையில் கருவிகளைக் கொண்டு நிரூபித்தார். உண்மையில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் அந்தக் காலத்தில் உள்ள இன வேற்று மையில் அவர் அமுங்கிப் போனார். ஆனால் அதற்கெல்லாம் முன்னதாகவே மனு இது பற்றிப் பேசியுள்ளார்.

 

மனு, தாவரவியல் பகுப்பு பற்றிப் பேசுகிறார்; செடி, கொடி, மரங்கள், பூவாது காய்க்கும்  மரங்கள் பற்றிச் சொல்கிறார்.

தர்ப்பைப் புல் பாய், ஆசனம், மதச் சடங்குகளில் அதன் பயன்பாடு பற்றிப் பகர்கிறார்.

தாவரங்களின் உணர்ச்சி பற்றி அவர் சொல்லுவதாவது:-

அவைகள், சுபாவத்தின்படி செயல்படுகின்றன. அவைகளுக்கு உணர்ச்சி இருக்கிறது. இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன

 

வேதங்களிலேயே மூலிகைகள் பற்றியும் அதிசயக் குளிகைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது மனு இவ்வளவு சொல்லுவதில் வியப்பில்லை. மேலும் உபநிஷத காலத்திலேயே சிறிய ஆலம் விதையிலிருந்து பிரம்மாண்ட மரம் உருவாவதை உவமையாகச் சொல்லி பாடம் நடத்தினர். தலங்கள் தோறும் புனித மரங்கள் இருந்திருக்கின்றன. நம்மாழ்வாருக்கும் தான்சேன் என்ற கவிஞருக்கும் அருள்புரிந்த புளியமரம், கிருஷ்ணன் ஆலிலைக் கிருஷ்ணனாக மிதந்த ஆலமரம், சிவன் அடிமுடி காணும் விஷயத்தில் பொய் சொன்ன தாழம்பூ, புத்தருக்கு ஞானம் கொடுத்த அரச மரம், பிராமணர்களுக்கு ஸமித்து கொடுக்கும் அரச, பலாச மரங்கள், பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த வன்னி மரம் என்று நூற்றுக்கணக்கான மரங்கள் வில்வம், துளசி போன்ற புனித தாவரங்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே — முடிவு இல்லாமல் போகும்.

 

ஜகதீஷ் போசுக்கும் மனுவுக்கும் தாவரவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு கொடுக்கலாம்.

மரங்களையோ செடி கொடிகளையோ பிராமணர்கள் வெட்டினால் ஆயிரம் வேத மந்திரம் சொல்ல வேண்டும் என்று மனு விதிக்கிறார்.

 

புனித மரங்கள் பற்றிப் பேசும் மனு, என்ன மரங்களைக் கொண்டு (staff) தடிகள் செய்ய வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார்.

 

 

ஆங்கிலக் கட்டுரையில் ஸ்லோகங்களின் எண்களையும் கொடுத்து இருக்கிறேன்.

 

Manu, not only a Law Maker but also a Great Botanist! (Post No.4375 …

https://tamilandvedas.com/…/manu-not-only-a-law-maker-but-also-a-great-botanist-p…

21 hours ago – Manu Smrti, law book written by Manu, talks about lot of subjects which makes it a Hindu Encyclopaedia. Manu was not only a law maker but …

 

‘Save the Trees’ and ‘Save the Forests’ in Manu Smrti! – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/save-the-trees-and-save-the-forests-in-…

7 Aug 2016 – ‘Save the Trees‘ and ‘Save the Forests’ in Manu Smrti!( … 255 Indian trees, herbs and flowers mentioned in Brhat Samhita Part-1, posted 21 …

 

 

–Subham–

வேதத்தில் மரங்களின் கதை (Post No.4372)

Written by London Swaminathan 

 

Date: 6 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-36

 

 

Post No. 4372

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Sacred Tree in Varanasi/ Benares

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நியக்ரோத, உதும்பர, அஸ்வத்த என்று மூன்று மரங்களின் பெயர்கள் விஷ்ணுவின் அம்சமாக வழிபடப்படுகின்றன. மஹாபாரதத்தில் உள்ளதும், ஸ்ஹஸ்ரநாமங்களில் பழையதுமான ஒரு துதியில் மூன்று மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. மேலும் இந்துக்கள் ஐரோப்பாவில் குடியேறி அவர்கள் பண்பாட்டைப் பரப்பியபோது விட்டு வந்த மிச்ச சொச்சங்களை இன்றும் ஐரோப்பாவில் காணலாம். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஹாலிவுட் (ஹோலி உட் = புனித மரம்) ஹோலிஓக் (புனித ஓக் மரம்) இப்படி நூற்றுக் கணக்கான இடப் பெயர்கள் உண்டு.

 

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவிட் (Ovid) என்னும் ரோமானியப் புலவர் மரங்களுக்கு காணிக்கை செலுத்துவது, நூல் கட்டுவது, கந்தைத் துணிகள் சாத்துவது பற்றிப் பாடியுள்ளார். இந்துக்கள் இயற்கையின் எல்லா றை அம்சங்களையும் வணங்கினர். மற்ற நாடுகளில் பழைய மர வழிபாடு இலக்கியத்திலும் மியூஸியங்களிலும் மட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இமயம் முதல் குமரி வரை இன்றும் மர வழிபாடு இருக்கிறது.

 

தமிழ் நாட்டின் கோவில்களில் தல விருட்சங்கள் இருப்பது போல வட இந்தியாவில் புனித க்ஷேத்ரம் முழுவதும் புனித மரங்கள் இருக்கின்றன. வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் வாழ்ந்தனர். பிராமணர்கள் அரச மரக் குச்சி (ஸமித்து) இல்லாமலோ தர்ப்பைப் புல் இல்லாமலோ வாழ முடியாது– அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குஸ ( தர்ப்பை) புல், அரச, பலாச மரங்கள் இணைந்து பிணைந்துள்ளன. ராமனின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் பெயருக்குக் காரணமே தர்ப்பைப் புல் (குஸ) தான்.

ஓரிரு வேதக் கதைகளைக் காண்போம்

 

பூமி, பிரஜாபதி ஆகியோரின் முடி (மயிர்) தான் தாவரங்கள் என்று சதபத பிராமணம் கூறும்; அதாவது ஒரு காலத்தில் தாவரங்களே இல்லாத பூமியில் தாவரங்கள் வளர்ந்ததை கதை போலச் சொல்லும் பகுதி இது.

 

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு- என்ற முது மொழியின்படி பூமியில் உள்ள தாவரங்கள்= மனிதனின் உடலிலுள்ள முடி

பூமியிலுள்ள ஆறுகள்= மனிதனின் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள்

 

–இவ்வாறு பல விளக்கங்கள் உண்டு.

 

கதை போலச் சொல்லுவதால் அதன் பின்னுள்ள மறை  பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

முக்கியமான விஷயம் என்ன வென்றால் தர்ப்பை (குஸ), தூர்வா (அருகம் புல்) உதும்பர, அஸ்வத்த, வட/ஆலம் மரங்கள் பற்றிய குறிப்புகள் வேத காலம் முதற்கொண்டே இருக்கின்றன என்பதே.

Kadamba Tree in Chir Ghat near Yamuna River

காட்டிலுள்ள தாவரங்களையும் மரத்திலுள்ள பழங்களையும் சாப்பிடலாம் என்று பிராமண நூல்கள் சொல்லும்.

 

பிதகோரஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞர், அவரை (Beans) விதைகளை சாப்பிடக்கூடாது என்று தடுத்ததாகச் சொல்லுவர். இந்துக்களும் இப்படிப் பல தாவரங்களைத் தவிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் , விரத காலத்தில் சில வகை உணவுகளை உண்ண மாட்டார்கள்.

 

உதும்பர என்பது அத்தி வகைத் தாவரம். இதில் செய்யப்பட்ட நாற் காலி அல்லது ஆசனத்தின் மீதமர்ந்து குளிப்பது பற்றி பல குறிப்புகள் பிராமண நூல்களில் உள.

 

உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–

 

தேவர்களும் அசுரர்களும் பிரம்மாவிடம் தோன்றினர். அவர்கள் அக்னியை முன் நிறுத்தி, அசுரர்களிடம் சென்றனர். அவர்கள் அக்னியை வெட்டி வீழ்த்தவே அது பூமியில் ‘க்ரிமுக’ மரம் ஆனது இதனால்தான் அது செந்நிற,,,,,தில் உளது.

 

பிரஜாபதி, முதல் யாகம் செய்தபோது அங்கிருந்து ‘வின்கங்கட’ மரம் வந்தது. அதன் மூலம் அவர் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.

 

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதியிடம் தோன்றினர். அவர்கள் ஒன்றாகச் செய ல்பட்ட காலத்தில் உதும்பர மரம் தவிர ஏனைய மரங்கள் எல்லாம் அசுரர் தரப்பில் நின்றன. ஆனால் தேவர்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா மரங்களும் தேவர் வசம் வந்தன. தோற்றுப்போன மரங்கள் எல்லாம் உதும்பர மரத்தில்  நுழைந்து கொண்டன. இதனால்தான் உதும்பர மரம் பால் வடியும் மரமாகவும் ஏராளமான பழங்கள் உடைய (அத்திப் பழம்) தாகவும் உளது.

Picture from Lalgudi Veda

இப்படிப்  பல கதைகள் சதபத, ஐதரேய பிராமனங்களில் இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மரங்கள் பற்றி அக்கறை செலுத்தியதும், அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த (பைகஸ்  FICUS குடும்பம்) மூன்று மரங்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் வேதம் முதலியன குறிப்பிடுவதும் தாவர இயல் அறிவைக் காட்டும்.

 

மறை பொருள் உடைய கதைகள் என்பதால் இதன் மூலம் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டனரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது.

 

எல்லாவற்றையும் விட முக்கியமானது—

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதி என்னும் பிரம்மாவிடம் தோன்றியதாக கி.மு 1000 ஆண்டைச் சேர்ந்த பிராமண நூல்கள் கூறுவதாகும். இவைகளை  மறைத்துவிட்டு ஒரு தரப்பை பழங்குடியினர் அல்லது திராவிடர் என்று சித்தரிப்பது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல வெளிநாட்டினரின் சதியாகும். சூத்திரர்களையும் கடவுளின் ஒரு பகுதி என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லும். தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் வேதம் சொல்லும்— ஆனால் இவைகளை மறைத்து அவர்களை ஆதிப் பழங்குடி போல சித்தரிப்பது விஷமிகளின் வேலை. ஆக தாவரவியல் தவிர மானுடவியலும் சமூகவியலும் இந்த நூல்களில் காணக்கிடக்கின்றன என்ப தை அறிக.

 

—சுபம்—-