இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை

lord-rama

இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 971; தேதி- 11th April 2014

கம்ப ராமாயண கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

பொருள்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை முடிவேயில்லாத விளையாட்டாகச் செய்யும் தலைவன் எவனோ அவன் காலில் சரணடைகின்றேன்.

மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான். அடடா! ராமன் கையினால் மரணம் சம்பவித்தால் எனக்கு நேரடி மோட்சம்தான் என்று மகிழ்கிறான்.

இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.

lord-rama-43a

சிவபெருமான் கூற்று
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு
ஈஸ்வரோ உவாச

“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”

காந்திக்குப் பிடித்த ரகுபதி ரகவ ராஜா ராம்!
மஹாத்மா காந்திஜி, துப்பாக்கி ரவையால் சுடப்பட்டு உயிர் இழந்த போது அவர் கூறிய கடைசி சொல் ‘’ஹே ராம்!’’ ஒருவர் வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தால்தான் கடைசி நிமிடத்தில் அவன் பெயர் நினைவுக்கு வரும்! அவர் எல்லா பஜனைகளிலும் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பாடியதோடு மட்டுமின்றி, உலகிற்கே அப்பாட்டை அறிமுகம் செய்தார்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தார். 21 ஆண்டுகளில் 96 கோடி முறை அவர் ராம நாமம் சொன்னதாக அவர் வரலாறு கூறுகிறது. வாயினால் சொல்லும் வேகத்தைவிட மனதினால் கூடுதலாகச் சொல்லமுடியும்.

maha mantra

தர்ப்பண மந்திரம்
பிராமணர்கள் செய்யும் தர்ப்பணத்தில் க்ஷத்ரிய அரசனான ராமனின் பெயரைச் சொல்லுகிறார்கள்:
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:
ஸ்ரீ ராம ராம ராம

பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.
மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.

இராமனுடைய பெயரை மூன்று முறை சொன்னவுடனேயே எல்லாப் பாவங்களும் அகன்று பரிசுத்தனாகி விடுவான்.
நாமும் ராம நாமம் சொல்லி பரிசுத்தம் அடைவோம்!!

rama shantham

சுவாமி விவேகாநந்தர் சொற்பொழிவு!

ஆங்கிலத்தில் சுவாமி விவேகாநந்தர் பேசியதை தமிழில் தருகிறேன். குறை இருப்பின், அது எனது மொழி பெயர்ப்பின் பிழையே அன்றி அவர் குற்றம் ஆகாது.

“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

சீதா தேவி பற்றி நான் என்ன சொல்ல! அடடா!! அது போன்ற ஒரு சீதையைக் காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் —- இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் —– வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும் — நீங்கள் இன்னும் ஒரு சீதையைக் காண்பது அரிது! அவள் ஒப்பற்றவள். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய பெண்ணைப் படைக்க முடியும். இராமர்கள் பலர் இருக்க முடியும். ஆனால் ஒரு சீதாதேவிக்கு மேல் காண முடியாது”.

rama color

— சுவாமி விவேகாநந்தரின் சொற்பொழிவுகள். ஆங்கிலத்திலும் கீழே கொடுத்துள்ளேன். ஆங்கில வாசகம் அவர் சொன்னது:–

“Rama, the ancient idol of heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all the ideal king, this Rama has been presented before us by the great sage Valmiki. No language can be purer, none chaste, none more beautiful, and at the same time simpler, than the language in which the great poet has depicted the life of Rama. And what to speak of Sita? You may exhaust the literature of the world that is past, and I may assure you that you will have to exhaust the literature of the world of the future, before finding another Sita. Sita is unique; that character was depicted once and for all. There may have been several Ramas, perhaps, but never more than one Sita!”
—-Swami Vivekananda

Contact swami_48@yahoo.com

இராமன் யார்? கம்பன் பதில்

hanuman 4

2014 ஏப்ரல் 8-ஆம் தேதி இராம நவமி; ‘மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரம் இராமன்’ என்று கம்பன் புகழ்கிறான். அத்தகைய இராமன் புகழை நாமும் பாடுவோம்.

கட்டுரையாளர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–956 தேதி ஏப்ரல் 5, 2014

இந்தியப் பண்பாட்டின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்பவன் இராம பிரான். ‘தர்மத்தின் சின்னம் ராமன்’ (ராமோ விக்ரஹவான் தர்ம:, ராமாயணம் 3-37-13) என்று வால்மீகி முனிவன் முன் மொழிவதை கம்பனும் அப்படியே வழி மொழிகிறான். ஒரு பாட்டில் அல்ல, இரண்டு ஒரு பாட்டில் அல்ல; பல பாடல்களில்:–

“குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌளி கவித்தனன் வரும் என்றென்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்”

பரதனே நாட்டை ஆள வேண்டும், இராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போக வேண்டும் என்று கைகேயி உத்தரவிட்டவுடன் ராமன் சென்ற காட்சி மேற்கூறிய பாடலில் உள்ளது. மன்னருக்கே உரித்தான சாமரம் இல்லை, வெண்ணிறக் குடையும் இல்லாமல் ‘விதி’ முன்னே செல்ல, தருமம் போன்ற ராமன் பின்னே சென்றானாம். அவனுடைய விதி — தலை விதி — கைகேயி உருவத்தில் வந்தது. தரும வடிவில் நிற்கும் இராமன், ‘விதியே என்று’ பின்னால் நடந்து செல்கிறான் தன் அம்மாவிடம் விடை பெற்றுக் கொள்ள.

அயோத்தியா காண்டத்தில் ‘தர்ம மூர்த்தி’ என்றே அழைக்கப்படுவதை பின்வரும் பாடல் காட்டும்:–

“புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகழ்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்து, யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத் திறலோன்.

பொருள்:– தரும மூர்த்தியாகிய திருமாலே இராமனாக வந்து அவதரித்தான் என்று சொல்வதைத் தவிர, நாம் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது? அந்தத் திறமை மிகுந்த இராமன், எல்லாப் பொருள்களையும் உண்டாக்கி— காப்பாற்றி முடிவில் அழிக்கும்– மும்மூர்த்திகளின் செயல்கள் செம்மை அடையும்படி திருத்துபவன் ஆவான். (இந்தப் பகழுரை வசிட்ட முனிவன் வாயிலாக வரும் பாடல்)

ramabronze
Bronze idol of Sri Rama

இன்னொரு பாடலில் சீதையுடன் இராமனை ஒப்பிடுகிறான் கம்பன்:

மண்ணினும் நல்லள் மலர்மகள் கலைமகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்.
(கலை ஊர் பெண்= மான் வாகனம் உடைய பார்வதி; மலர்மகள்=லெட்சுமி)

பொருள்:– பூமா தேவியைவிட சீதை நல்லவள்; அலைமகள் (லெட்சுமி), கலைமகள் (சரஸ்வதி), மலைமகள் (பார்வதி) ஆகிய மூவரையும் விட நல்லவள் சீதை; அவளுடைய கண்களைக் காட்டிலும் நல்லவன் இராமன். பருகுவதற்கான தண்ணிரை விட, பாதுகாக்கும் உயிரை விட, இராமனையே விரும்புவர் கற்றாரும் கல்லாதவரும்.

இறுதியாக வசிட்டன் புகழுரையாக அமைந்த ஒரு பாடலில்,

மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்
இனிய மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை
என்ற வரிகளும் படித்து இன்புறத் தக்கது.
(அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்)

”மனிதர்களும் தேவர்களும் மற்றுமுள்ளவர்களும் துன்பப்படாமல் தடுத்துக் காப்பதில் இராமனைக் காட்டிலும் சிறந்தவர் யாரும் இல்லை”.

மேலும் பல கட்டுரைகளில் இராமன் புகழ் பாடுவோம்…………..தொடரும்
contact swami_48@yahoo.com

உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா?

valluva nayanar

தமிழ் வினா – விடை (க்விஸ்)
உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா?

திருவள்ளுவரை தினமும் புகழ்கிறோம். திருக்குறளை தமிழ் வேதம் என்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

தொகுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 937 தேதி 27 மார்ச் 2014

இது நான் வெளியிடும் 27ஆவது க்விஸ். ஏனையவற்றையும் படித்து மகிழ்க. முந்தைய 26 தலைப்புகளைக் கடைசியில் கொடுத்துள்ளேன்.

1.திருக்குறளில் பல சம்ஸ்கிருத சொற்கள் உள்ளன. முதல் குறளிலும் முடிவுக் குறளிலும் உள்ள ஒரு சம்ஸ்கிருத சொல்லையாவது சொல்லுங்கள். (மதிப்பெண் 1)

2. வான் சிறப்பு அதிகாரத்தில் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” (குறள் 12) என்கிறார். துப்பு என்றால் என்ன? (மதிப்பெண் 1)

3. “அச்சமே கீழ்களது ……………..” என்ன சொன்னார் (குறள் 1075) என்று ஒரு சொல்லை மட்டும் நிரப்புங்கள். (மதிப்பெண் 1)

4.வெஃகாமை, வெருவந்த செய்யாமை, மடி இன்மை, இரவு, நல்குரவு என்ற ஐந்து அதிகாரத் தலைப்புகளின் பொருள் என்ன? ( 5 மதிப்பெண்கள் )

5.திருக்குறளின் மூன்று பால்களும் (அறம், பொருள், இன்பம்) இந்துமத புராண இதிஹாசங்களில் புழங்கும் மூன்று சம்ஸ்கிருதச் சொற்களின் மொழிபெயர்ப்பு. அவை என்ன? (மதிப்பெண் 1)

bharathy

தமிழா, தமிழா!! உனக்கு பாரதியாரைத் தெரியுமா?

பாரதியின் பெயரை அறியாத தமிழன் இல்லை. பாரதியின் பெயரை அறியாதவன் தமிழனே இல்லை! பாரதி பாடலைப் படியாதவன், படியாதவனே. உங்களைச் சோதிக்க இதோ சில கேள்விகள்.

6.யாமறிந்த புலவரிலே …….. போல், ………..போல், ……….. போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை – என்று தமிழின் பெருமையை முரசு கொட்டுகிறார். யார் இந்த மூன்று புலவர்கள்? (மதிப்பெண் 1)

7. வாழ்க ——— நாமம் வாழ்கவே! நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே ! நரகமொத்த அடிமை வாழ்வி நைந்து கழிகவே என்ற பாட்டில் யாருடைய நாமம் வாழ்கவே என்று வாழ்த்துகிறார். (மதிப்பெண் 1)

8.ஒரு ராஜாவுக்கு பாரதி இப்படி கடிதம் எழுதினார். யார் அந்த ராஜா?
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன் தேசமெல்லாம் புகழ் விளங்கும் இளசை ————–(மதிப்பெண் 1)

9. என்றும் இருக்க உளங் கொண்டாய் —- என்று துவங்கும் பாட்டில் ஒரு தமிழ்ப் பெரியாரை “இறவாய் தமிழோடு இருப்பாய் நீ? என்று வாழ்த்துகிறார். யார் அந்த புகழுக்குரியவர்? (மதிப்பெண் 1)

10. பொதிய மலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில், துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே என்று பாரதியார் போற்றும் தமிழர் யார்? (மதிப்பெண் 1)

11. வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம் என்று பாடத் துவங்கிய பாரதி, பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த —– ——– நீ வாழ்க! வாழ்க! என்கிறார். யாரை இப்படிப் புகழ்கிறார்?

12. தமிழ்த் தாய் என்ற பாடலில் “ ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை ஆரிய மைந்தன் ———– என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே — நிறை மேவும் இலகணஞ் செய்து கொடுத்தான். யார் அந்த ஆரிய மைந்தன்?

13. வந்தே மாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் – முடி – தாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ? — அவ — மானமோ? என்று விஞ்ச் துரைக்கு பதில் கூறும் தேசபக்தர் யார்?
(11, 12, 13 கேள்விகளுக்கும் தலா மதிப்பெண் 1.)

14.ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன், வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் வீரர் நாயகன், மேதினி காத்த ———— இப்படி பாரதி போற்றும் பாஞ்சாலத்துச் சிங்கம் யார்? (மதிப்பெண் 1)

15.ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்! ஜய ஜய மாதா! ஜய ஜய துர்க்கா என்று யார் பாடுவதாக பாரதியார் எழுதியுள்ளார்? (மதிப்பெண் 1)

விடைகள்:– 1) உலகு, ஆதி பகவன், அகரம் (முதல் குறள்) காமம் (1330 கடைசி குறாள்) 2) துப்பு=உணவு, உண் 3) ஆசாரம் 4) வெஃகாமை= பிறர் பொருள் கவராது இருத்தல், வெருவந்த செய்யாமை= குடிமக்களை வருத்தாமல் இருத்தல், மடி இன்மை= சோம்பல் இல்லாமை, இரவு=பிச்சை எடுத்தல், நல்குரவு=வறுமை 5) அறம்=தர்ம, பொருள் = அர்த்த, இன்பம் =காம 6) கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் 7) திலகன், சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றவர். 8) ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அல்லது ரெட்டசிங்கன் 9) தாயுமானவர் மீது பாரதி பாடிய பாடல் 10) மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் 11) வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க! வாழ்க! 12) அகத்தியன் 13) தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை 14) குருகோவிந்தசிம்மன் 15)சத்ரபதி சிவாஜி

Earlier Quiz posted by me:
(1&2)27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?
Contact swami_48@yahoo.com

காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!!

shiva kicking yama,singapore

Painting at Singapore temple (from twcenter.net)

காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!!

கட்டுரையாளர் ; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 925 தேதி: 23 March 2014.

ஞானிகளுக்கு மரணம் என்பது உடைகளை மாற்றுவது போல.

“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

என்கிறார் பட்டினத்தார்.”ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச” (2-27) என்று பகவான் கிருஷ்ணன் கூறியதன் விளக்கமே இது.

உலகில் எதையும் இரண்டாகப் பார்ப்பவர்களுக்குதான் பயம் என்பது உண்டு என்று ஞானிகள் பகர்வர். இதைப் படிப்பது எளிது. ஆனால் செயலில் கொண்டுவருவது எளிதல்ல. இந்து மதத்தின் எல்லா சடங்குகளும், ஒருவரை, இந்த திசையில் அழைத்துச் செல்லும்.

sculpture yama

Shiva kicking Yama to save Markandeya.

உலகிலேயே மிக வினோதமான பிரார்த்தனை இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது! எல்லோரும் தன்னலம், குடும்ப நலம், நாட்டு நலத்துக்குப் பிரார்த்திப்பர். ஆனால் இந்துக்கள் மட்டும் இந்த மூன்று நலத்தோடு வேறு ஒன்றையும் சேர்த்துக் கொள்வர். எந்தக் காலத்திலும் எனக்கு ஜன்ம, ம்ருத்யு (பிறப்பு,இறப்பு) வர்க்கூடாது என்று. இதை பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், ஆழ்வார் பாடல். தேவாரத் திருவாசகப் பாடல்கள் எல்லாவற்றிலும் காணலாம்.”இனி பிறவாமை வேண்டும், பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்”– என்று பிரார்த்திப்பதில் எல்லோரும் முன்னிற்பர்.

ஆகையால் ஞானிகளுக்கு எமதர்மனை எள்ளி நகையாடும் பக்குவம் வந்துவிடுகிறது. இதைப் படிக்கும் நமக்கும் மரண பயம் நீங்கி விடுகிறது. நான் லண்டனில் ஒரு மருத்துவ மனையில் பகுதி நேர மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்தேன். ஒரு விஷயத்தை வெள்ளைக்கார டாக்டர்கள் புரிந்துகொள்ள முடியாவே இல்லை.

yama kicked

பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒருவர் இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவார்கள் என்று தெரிந்தால் அதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுவர். ஆனால் மிகவும் பக்குவமாக, பீடிகை போட்டு, மெதுவாக, அழகாகச் சொல்லுவர். இப்படிப் பலருக்கு மரணச் செய்தி அறிவிக்கும் கட்டியங்காரனாக வேலை பார்ப்பது எனது வேலையின் ஒரு சிறு பகுதிதான். இப்படிப்பட்ட ஒரு கெட்ட செய்தியைக் கொடுத்தபிறகு அவர்கள் “தொச்சு” கொட்டிக்கொண்டு, அலட்சியமாக நான் “இப்பவே ரெடி, காடு வா என்கிறது, நாடு போ போ”– என்கிறது என்பர். இதை நான் அப்படியே மொழி பெயர்த்தால் வெளி நாட்டு டாக்டர்களுக்குப் புரியாது. கொஞ்சம் கலாசாரப் பின்னனி வசனங்களைப் பேசிவிட்டு விளக்குவேன். நோயாளிகளின் முகத்தில் பயங்கரமான அதிர்ச்சி (ஷாக்) வரும் என்று எதிர்பார்த்த டாக்டரின் முகத்தில் நான் ஷாக்கையும் வியப்பையும் ஒருங்கே காண்பேன்.

இதுதான் இந்து மதத்தின் மிகவும் வியப்பான பகுதி. வேதத்தில் உள்ள எல்லாப் பிரார்த்தனைகளும் நமக்கு ‘பாஸிட்டிவ்’ எண்ணங்களை உண்டாக்குவதோடு நமக்கு உள்ளே “ஷாக் அப்சார்பர்” களையும் பதித்துவிடும். ஆகையால் எந்தக் கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்ள முடிகிறது. இதை உலகம் முழுதும் நாம் பரப்பினால் தற்கொலைகள் குறைந்துவிடும். ‘சைக்கியாட்ரிஸ்ட்’, ‘சைகாலஜிஸ்ட்’ எல்லோருக்கும் வேலை மிக மிகக் குறைந்துவிடும்.

(‘சைக்கியாட்ரிஸ்ட்’ என்பவர் மன நோயை மருந்து மூலம் குணமாக்குபவர். ‘சைகாலஜிஸ்ட்’ என்பவர் மன நோயை ஆறுதல்–ஆலோசனை வழங்கல் மூலம் குணமாக்குபவர்.)
நமது ஞானிகளின் ஆவேசத்தைக் கீழ்கண்ட பாடல்களில் பாருங்கள்:

1.திருமூலர் என்ன சொல்கிறார்: ‘ஞான வாளால் எமனை வெட்டுவேன்!’
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே (Tirumanthiram)

எமன் வந்தால் ஞான வாளால் அவனை வெற்றி கொள்வேன். சிவன் வந்தாலோ தயக்கமின்றி அவரோடு போவேன். பிறவிப் பிணி தொடர்வதற்கான காரணங்களை முன்னரே துண்டித்து விட்டேன். இனி தவ வலிமை பெற்றவர்களுக்கு எதிராக யாராவது நிற்கமுடியுமா? எனக்கு எதிரி எவரும் இல்லை.(Tirumanthiram)

2.பாரதியின் வீரம்! ‘’உன்னைப் புல் போல மிதிப்பேன்!’’

‘’காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்’’ — என்பார் பாரதி.

அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? அதற்கு அவரே கூறும் பதில்:

“ஆன்ம ஒளிக்கடலில் மூழ்கித் திளைப்பவருக்கு
அச்சம் உண்டோடா? – மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா.”—(பாரதி பாடல்)

shiva killas yama

நம்மாழ்வார் திருவாய் மொழி
3.பாரதியாக்கு மிகவும் பிடித்த நம்மாழ்வாரும் நமன் எதிர்ப்பு அணியில் சேர்ந்து பாடுகிறார்:
பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்;
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை;
கலியும் கெடும்; கண்டுகொண்மின்;
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மையப் புகுந்து, இசை பாடி,
ஆடி, உழிதரக் கண்டோம் (திருவாய்மொழி)

3.அருணகிரிநாதர் பாடுவார்: ‘’முருகன் அருகில் இருக்க பயமா?’’

“நாள் என் செயும், வினைதான் என் செயும், எனை நாடிவந்த
கோள் என் செயும் , கொடுங்கூற்று என் செயும், குமரேசர் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்
தோளும்,கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
(39, கந்தர் அலங்காரம்)

4.அப்பர் சூளுரை: ‘’சிந்தையில் சிவன் இருந்தால் பயமேது?’’

நாமார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை –(6-961)

5.பட்டினத்தார் பாடுகிறார்: ‘’நமனை வெல்ல மந்திரம்!’’

நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள், நோக்கங்கள் நோக்குதற்கே (43,பொது)

கையில் கம்பு இருந்தால் நாய் பற்றிய பயம் போய்விடும். பிச்சை கேட்டுக் கொஞ்சம் உணவு கிடைத்தால் போதும். சோறு பற்றிய கவலையே இல்லை. நமச்சிவாய என்ற மந்திரத்தை சொல்லுவோருக்கு எம பயம் இல்லை. திரு நீறு அணிவோருக்கு பேய் பயமில்லை. பிறவிப் பிணிக்கு கடவுளின் அருள் இருந்தால் போதும். இந்தப் பிறவிப் பிணியைத்தான் வள்ளுவன் திருக்குறளின் முதல் அதிகாரத்திலேயே செப்பிவிட்டான். இதுதான் இந்துக்களின் தனிச் சிறப்பு.

நசிகேதன் என்ற சிறுவனும், சாவித்திரி என்ற பத்தினிப் பெண்ணும் எமனுடன் வாதாடி வெற்றி பெற்றனர். மார்க்கண்டேயன் என்ற 16 வயதுச் சிறுவன் சிவ பக்தியால் — என்றும் 16 வயது — என்ற வரம் பெற்றான் என்பதையும் இத்தருணத்தே நினைத்தால், மரண பயம் நீங்கி, அப்பர் சொல்வது போல ‘’இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்று நாமும் பாடி ஆடலாம்.

Please read my earlier post: முன்னர் எழுதிய கட்டுரையும் காண்க:
தமிழில் யமன்

contact swami_48@yahoo.com

‘மனம் ஒரு பெண்’, ‘மனம் ஒரு புலி’

manm oru kurangu

Compiled by London Swaminathan.
Post No. 845 Date: February 2014
(This article is available in English in two parts: Hindu Encyclopaedia of the Mind)

‘மனப் பெண்’ என்ற தலைப்பில் பாரதியார் ஒரு அருமையான கவிதை யாத்துள்ளார். மனம் எனும் குரங்கு பற்றி “பாயிண்ட் பாயிண்டாக” அடுக்குகிறார். இதை படிக்கும்போது நமக்கு திருப்தி ஏற்படுகிறது. அட! நம்மைப் போன்ற சாதாப் பேர்வழிகளுக்கு………………. சோதாப் பேர்வழிகளுக்கு …………………மட்டுமே இப்படி எண்ணங்கள் வருகிறதோ என்று பயப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பாரதி பாட்டு தைரியம் கொடுக்கும். நம் எல்லோருக்கும் மனம் என்பது ஒரு புரியாப் புதிர். அதைக் கட்டுபடுத்துவது எளிதல்ல.

சீனாவிலும் ஜப்பானிலும் மனதைக் குரங்காக வருணிக்கும் வசன மொழிகள் வழக்கத்தில் உள்ளன. பாரதியோ மனதைப் பெண்ணாக உருவகித்து அதன் சலன புத்தியைப் பாடுகிறார், சாடுகிறார். பின்னர் மது உண்ணும் வண்டு என்றும் பேசுகிறார், ஏசுகிறார்.

பாட்டு இப்படித் துவங்குகிறது:

“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்
அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்
.நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீள மீளவும் தொடுவாய்
புதியது காணில் புலன் அழிந்திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல
பழமையாம் பொருளினில் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையேயன்றிப் பார்மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய், சீச்சீ!
.பிணத்தினை விரும்பும் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழி பொருள் காணில் விரைந்து அதில் இசைவாய்
அங்ஙனே

swinging2
என்னிடத்து என்றும் மாறுதலில்லா
அன்பு கொண்டிருப்பாய், ஆவி காத்திடுவாய்
கண்ணிணோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்’
இன்பம் எல்லாம் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி எண்ணிலாப் பிழை செய்வாய்
இன்பம் காத்துத் துன்பமே அழிப்பாய்
இன்பம் என்று எண்ணித் துன்பத்து வீழ்வாய்
தன்னை அறியாய் சகத்தெலாந் தொளைப்பாய்,
தன் பின்னிற்கும் தனிப் பரம்பொருளைக்
காணவே வருந்துவாய், காண் எனில் காணாய்,

சகத்தின் விதிகளைத் தனித் தனி அறிவாய்,
பொது நிலை அறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்;
இத்தனை நாட்போல இனியும் நின்னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத்திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியும் தேடுவேன்;
உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட
சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்.

மனம் பற்றி பகவத் கீதை

“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)

“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

மனம் ஊசலாடிகொண்டுமோய்வற்றும் இருக்கும் அதைக் காப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம். அம்பு செய்பவர்கள் அதை எப்படிக் கூராகச் செய்வார்களோ அதே போல அறிவாளிகளும் அதை நேராகவும் கூராகவும் வைப்பர் (33)

தண்ணீரில் இருந்து வெளியே தூக்கிப்போட்ட மீன் எப்படி மரணத்தில் இருந்து தப்பிக்கப் போராடுமோ அதே போல மனமு மரணத்தில் இருந்து விடுதலைப் பெற் போராடும். (34)

மனம் அலை பாயக்கூடியது; நிலையற்றது. அது இஷ்டப் பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.(35)

நம்முடைய உடலானது, உடையக்கூடிய மண்பானை போன்றது.அதை கோட்டை போலப் பலப்படுத்தி மாரனை (தீய சக்திகளை) எதிர்த்துப் போராடவேண்டும். வெற்றி பெற்றவுடன், விழிப்புடன் இருந்து , கிடைத்த வெற்றியைப் பாதுகாக்க வேண்டும்(40)

ஒரு எதிரி மற்றொரு எதிரியைத் தாக்கி காயப்படுத்தலாம்.ஒரு வெறி பிடித்தவ மற்றொரு வெறியனைத் தாக்கி காயப்படுத்தலாம்.ஆனால் ஒருவனுடைய மனமானது தவறான வழியில் செல்லுமானால் அது இதை விடப் பெரிய தீங்கு செய்யமுடியும்.(42)

மனம் ஒரு புலி

ஆதிசங்கரர் மனதையும் எண்ணத்தையும் புலிக்கு ஒப்பிடுகிறார். ஐம்புலன்கள் செயல்படும் அடர்ந்த காட்டில் மனது என்னும் கொடும் புலி வசிப்பதால், முக்தியை நாடுவோர் அந்தக் கட்டுக்குள் அகப்படாமல் இருக்க வேண்டும் (விவேக சூடாமணி 176)
ஆதிசங்கரரின் வினா – விடை துதியிலும் (பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா) மனதைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன.

மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமான செயல் எது என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் “ எப்போதும் மனதைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே” என்பார்.
விஷம் எங்கே இருக்கிறது? என்பதற்கு தீயோர் மனம் என்றும் மதுவைப் போல மனதை மயக்குவது? எது என்பதற்கு விரும்பத்தகாதோரின் ஸ்நேஹம் (தொடர்பு) என்றும் பதில் தருகிறார்.

மனது பற்றி தாயுமானவர் பாடல்

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம் புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்
கண் செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்
வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன் நிகரில் சித்தி பெறாலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது சத்தாகி என்
சித்தமிசை குடி கொண்ட
தேசோ மயானந்தமே. — தாயுமானவர்.

வள்ளுவர் வாய்மொழி

வள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில் வரும் 2 குறள்களில் மன உற்சாகத்தினால் அடையக்கூடிய சாதனைகளை விளக்குகிறார். ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்றும் ‘வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்றும் தேனாகப் பொழிகிறார்.

‘சிற்றினம் சேராமை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களிலும் மன நலம் பற்றிப் பேசுகிறார். பெரும்பாலான குறள்களில் மனம் என்ற தூய சம்ஸ்கிருதச் சொல்லை அப்படியே பயன்படுத்துகிறார். ஆனால் மன நலம் என்பது ‘சேருவார் சேர்க்கையைப் பொறுத்ததே’ என்பது அவரது துணிபு. சத்சங்கத் தொடர்பு — நல்லோர் சேர்க்கை – இருந்தால் மனம் தூய்மையாக இருக்கும் என்கிறார். அதிகாரத்தின் தலைப்புக்கு ஏற்ப பொருத்தமாக அமைந்துள்ளன இந்தப் பாக்கள்.
வீட்டுக்கு வீடு வள்ளுவர் குறள் இருப்பதால் 12 குறட்பாக்களின் பொழிப்புரையைத் தரவில்லை.

Contact swami_48@yahoo.com

பாரதி தரிசனம் – Part 2

bharati new

ச.நாகராஜன்
Post No 743 dated 12th December 2013

வினா: புண்ணியன் யார்?
விடை: பக்கத்திலிருப்பவர் துன்பம் – தன்னைப்
பார்க்கப் பெறாதவன் புண்ணியமூர்த்தி
வினா: எது சுகம்?
விடை: வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலை போம் – மேலறிவு
தன்னாலே தான் பெற்று, சக்தி சக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்

வினா: பூமியில் மனிதனின் கடமைகள் என்ன?
விடை: தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல்
பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்
பிறநாட்டிருப்போர் பெயர் பலக் கூறி
அல்லா! யெஹோவா! எனத் தொழுதன்புறும்
தேவரும்தானாய், திருமகள், பாரதி,
உமை எனுந் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமை எனப்படும்

வினா: இதனால் விளையும் பயன்கள்?
விடை பயன் இதில் நான்காம்!
அறம், பொருள், இன்பம், வீடெனும் முறையே
வினா: (குழந்தையின் குரல்) வாழும் முறை எது?
விடை: உயிர்களிடத்தில் அன்பு வேணும்;
உண்மை என்றுதானறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும்
இது வாழும் முறைமையடி பாப்பா.

வினா: தெய்வம் என்பது…?
விடை: உண்மையின் பேர் தெய்வம் என்போம்
வினா: தெய்வம் எப்போது எல்லோரையும் வாழ்த்தும்?
விடை: அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
வினா: பாரை உயர்த்திட வழி சொல்லுங்களேன்.
விடை: வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து — இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்!

வினா: கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, அரசனாக, சேவகனாக்க் கண்டீர்களே, அவனைப் பற்றி ஒரு வரி சொல்லுங்களேன்!
விடை: மழைக்குக் குடை; பசி நேரத்து உணவு;
என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்
வினா: கண்ணன் அருளிய கீதையின் சாரத்தை இரு வரிகளில் கூறுங்களேன்!
விடை: பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்
பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

வினா: ஆணும் பெண்ணும் நிகர் தானா?
விடை: ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்
தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!

வினா: நீங்கள் வேண்டுவது என்ன?
விடை: எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்

வினா: நீங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள் என்னென்ன?
விடை: இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி – முழு உலகின் முதற்பொருள் – அதனையே தியானம் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
பொழுது வீணே கழிய இடம் கொடேன்.
லௌகிக கார்யங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மையுறச் செய்வேன்.
மறந்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றி பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
சர்வசக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகழச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மைம் இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, ந்டிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத் தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன்.இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன்.

bharathy and Chelamma
Bharati with his beloved wife Chellamma

வினா: இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லுங்களேன்.
விடை: அறமொன்றே தரும் மெய்யின்பம் என்ற
நல்லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்.
பிற விரும்பி உலகினில் யான் பட்ட
பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
திறனழிந்தென் மனம் உடைவெய்துமால்
தேசத்துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன்றே தரும் மெய்யின்பம்; ஆதலால்
அறனையே துணை என்று கொண்டு உய்திரால்

வினா: மஹாத்மா காந்தியைப் பற்றி….?
விடை: வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!!
வினா: உங்களுக்குப் பிடித்த உங்கள் பாட்டு ஒன்று கேட்க ஆசைப்படுகிறோம்.
விடை: வந்தேமாதரம் என்போம்… எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்!

வினா: உங்கள் தரிசனம் கிடைக்கும் பேறு பெற்றோம்; மகிழ்ச்சி; ஒரு தீர்க்க தரிசனம் சொல்லுங்களேன்!
விடை: எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ணபெருமான்
எல்லாரும் அமர நிலையை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க!
வந்தே மாதரம்; வந்தே மாதரம்; வந்தே மாதரம்!

முடிவுரை:
பாரதி தரிசனம் கேட்டீர்கள். மஹாகவி பாரதியாரின் கவிதை, கட்டுரைகளிலிருந்து எடுத்து இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு.

contact swami_48@yahoo.com
*******************************

Quotes from the Greatest Tamil Poet Bharati

bharathy 4

Compiled by Santanam Swaminathan; Post No 742 dated 11th December 2013.
11th December is Bharati’s Birth Day

Bharathiyar was born on 11 December 1882; Died on 11th September 1921.

Quotes about Bharati:

“Bharati kindled the souls of men by million to a more passionate love of freedom and a richer dedication to the service of the country”—Poet Sarojini Naidu

“Bharati is not only the poet of Tamil Nadu, he belongs also to the whole of India. His verses should be published in all the languages”—Jawaharlal Nehru, First Prime Minister of India.

Bharati’s vastitudes can be known only when the poems of the great one, are translated in to the languages of the world”- Poet Bharatidasan

“In the course of his evolution from Shellydasan as he used to describe himself earlier, to Saktidasan ( Devotee of Goddess Shakti), Bharati reflected the great change which transformed India, a British dependency into a self reliant power”- Prof. K.Swminathan

(Bharati was influenced by English poets Shelly and Byron. Later he changed his name from Shelly Dasan to Shaktidasan).

Bharati was the greatest of the modern Tamil poets. No one has surpassed him in the past 125 years. He was a great patriot, devoted Hindu and ardent supporter of Tamil Language. His poems touch all the subjects from Astronomy to Zoology. His poem on Halley’s Comet is beautiful. He has sung about all the domestic animals. He composed poems on world leaders like Mazini and Indian freedom fighters such as Gandhi, B.G.Tilak and Dadabai Nauroji. All Tamil poets and greatest Sanskrit poet Kalidasa– are all in his poems. His poems are vast. No one can translate his poems. The beauty of his pomes is lost in translation. But for Non Tamils it will give some idea about his poems. He was rightly called Amara Kavi ( Immortal Poet). He knew Tamil, English, French, Hindi and Sanskrit.

bharathy

Here are some samples from ‘Bharati Patalkal’ published by Tamil University, Thanjavur, Edited by Sekkizar Adippodi Dr T N Ramachandran. It contains English translations of Bharati poems by several eminent writers including Dr TNR.

Great Upanishads

Himachal is our mountain
The world hath not its fellow;
Ganga is our fountain
Pellucid, sweet and mellow.
Our Upanishads are twelve
Unknown to any other clime
Deep into our minds they delve,
And soar aloft sublime
Praise we Bharat, golden fair,
Our own land beyond compare! (Tanslated by TNR)
(In Tamil Mannum Imaya Malai engal Maliye——–)

On Liberty
1.Come, that we may sing
For Freedom’s bliss is ours;
Come, that we may dance
For Liberty is ours!

2.A Brahmin no more will be hailed
As “Lord, Lord” again
No more a white man in our land
As “Master” shall remain;
No more to those who receive
Of such their alms, we bow,
Or bend to those who us deceive
Never from Now!
(In Tamil aaduvome Pallup Paaduvome; Paarppaanai ayar endra kaalamum poche…………)

bharati

Our Mother
1.When was our mother born—
Who can hazard a guess?
Not even the learned that discern
What happened in the days of yore.

2.Though our Mother’s age
No one can compute,
Alone on earth does she shine
For ever in virgin bloom.

3.Three hundred million*
Her faces are;
But all, all of them
Throb with one vibrant life.

4. Eighteen are the languages
That she speaks
But animating them all
Is only one thought.

(First 4 stanzas of 12 stanzas translated by S Ramakrishnan ( SRK)
*When Bharati composed this poem the population of India was 300 million.
(In Tamil Thondru Nikaznthathu anaiththum Arinthitum…….)

On Halley’s Comet
1.Like a palm tree set on a millet plant,
With a growing tail on a little star,
You blaze forth in kinship with eastern moon
Oh, lustrous comet! I bid you welcome

2.You range over countless crores of Yojanas
They say your endless tail wrought of gas
The softness of which is indeed peerless

3. They say that yourtail touches the earth too
An you fare forth with no harm to the poor;
The wise talk of your myriad marvels.
( I have given only 3 stanzas from 7 stanzas of translation by Dr T N Ramachandran)
bharati color

In Praise of Saraswati
She dwells in the white lotus
And the sound the Vina makes;
In the poet’s heart whose song
Our inmost being takes;
She is the light at the end
Of the tunnels the Vedas explore;
And of the frank and compassionate words
Of sages, the essence and core.
(First stanza of the 10 Stanza poem translated by Prof.P S Sundaram)
(In Tamil Vellai Thaamarai Puuvinil IruppaL……….)

Advice to Children
Fear not at all my little child
When you meet with evil doers;
Smite them and kick them, oh my child!
And lo, at their face you shall spit.

When thronging sorrows assail us
We should drop not, my little child;
God is there full of compassion
To quell all troubles oh my child!
(Tanslation by Dr TNR; 14 stanza poem)

( In Tamil Paathakam Seyvoraik Kandaal Bayam Kollalaakaathu paappaa………Odi Vilaiyaatu Paappaa)

His poems Panchali Sabhadam (Panchali’s Vow from Maha Bharata), Kannan songs (about Lord Krishna) and Koel Paatu ( Blackbird’s Song) are all great additions to Tamil literature. His songs have been used in lot of Tamil feature films. His name is a house hold name in Tamil Nadu. He simplified the language and style and gave a new direction to Tamil. His name will live as long as the Tamil language exists. In Sanskrit they used to say ‘his name will be on earth as long as the sun and moon shines’. Let Bharati’s name shine as long as the sun and moon shine.)

392223_211304678950415_100002126524506_465523_1961550213_n

My earlier articles on Bharati:
1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
(11). வாழ்க்கையில் வெற்றிபெற பாரதி அட்வைஸ்

Contact swami_48@yahoo.com

வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி ‘அட்வைஸ்’

bharati color

Post No. 741dated 10th December 2013 (11th December is Bharati’s Birth Day)

டிசம்பர் 11 தேசிய கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள்; அவனை சிரம் தாழ்த்தி வணங்குவோம்.

லண்டன் சுவாமிநாதன்

“அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை கூடுவோம்”– பாரதி

நான் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி மாணவன். எங்கள் ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன், மஹா கவி பாரதியின் பரம பக்தர். பாரதியாரும் எங்கள் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்ததால், முன்னனியில் நின்று பாரதியின் சிலையையும் நிறுவினார் விஜி.எஸ். “பாரதியின் சிலையைச் சுற்றுங்கள் நீங்கள் பரீட்சையில் பாஸ் ஆவீர்கள், பாரதி பாடல்களைப் படியுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்” என்று வகுப்புக்கு வகுப்பு புலம்பித் தீர்ப்பார்.

மாணவர்களாகிய நாங்கள் எல்லாம் பின் ‘பெஞ்ச்’சில் உட்கார்ந்துகொண்டு , வாத்தியாருக்கு பாரதி பைத்தியம் முத்திவிட்டது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ‘காமென் ட்’ அடிப்போம். ஆனால் தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் அவர் மீது அளவுகடந்த மரியாதையும் உண்டு. இப்போது பாரதி பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெளிவாகிறது.

வேத மந்திரங்கங்களைப் போலவே பாரதி பாட்டிலும் சோகச் சுவை என்பதே இருக்காது. எல்லாம் ‘பாசிட்டிவ் திங்கிங்’– POSITIVE THINKING– பாடல்களாகவே இருக்கும். பாரதியும் தமிழை எத்தனை புகழ்ந்தானோ அத்தனை வேதங்களையும் புகழ்ந்திருக்கிறான். வேதத்தைச் சொன்னாலும் கேட்டாலும் எத்தனை சக்தி பிறக்குமோ அத்தனை சக்தி பாரதி பாட்டிலும் பிறக்கும். பாரதி ஒரு பெரும் தமிழ்க் கடல். அவனை ஆழம் காணும் அறிவோ சக்தியோ எனக்கில்லை. இதோ சில பாடல்களைப் படித்தால் நீங்களே அவன் பெருமையை எடை போடலாம்.

வெற்றி முழக்கம்

(இன் டெர்வியூ முதலிய போட்டிகளுக்குச் செல்லுகையில் இதைச் சொல்லிக் கொண்டே போகவேண்டும்):
“ எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வமதேனும்
சாரும் மானுடம் ஆயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறுமாறே

நல்ல சிந்தனை

(கீழ்கண்ட இந்தப் பாடலை தினமும் காலையில் சொல்லுங்கள்; நல்ல எண்ணங்கள் பெருகும்):
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

ஒளிபடைத்த கண்கள்
(கண்ணாடிக்கு முன் உங்கள் உருவத்தைப் பார்த்வாறே சொல்ல வேண்டிய பாடல்):

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா

சிறுவர்களுக்கு சொல்லித் தரவேண்டியது
துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும்போக்கிவிடும் பாப்பா!

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

மனக் கஷ்டம் நீங்க
(மனதில் கஷடம் ஏற்பட்டால் படிக்க வேண்டிய பாரதி பாடல்)
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.

இறைவா ! எனக்கு நீ தர வேண்டியது
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்கவேண்டும்
துணை என்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்வழி சேர்ப்பித்துக் காக்கவேண்டும்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நன்றே!

அச்சமில்லை

(பயம் நீங்க பின்வரும் பாடலைப் படியுங்கள்)
‘நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’ என்று இடி முழக்கம் செய்தார் அப்பர் பெருமான். ‘நாள் என் செய்யும் வினை தான்’ என் செய்யும் என்று முழங்கினார் அருணகிரிநாதர். ‘ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன் வியாழன்,வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே’ என்று கோளறு பதிகம் பாடினார் சம்பந்தர்.
பாரதி சொல்கிறான்:

அச்சமில்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்”

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமுண்டோடா? – மனமே
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!”

பாரதி வாழ்க ! தமிழ் வெல்க !!

My earlier articles on Bharati:
1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
Contact swami_48@yahoo.com

பாரதி தரிசனம்

Post No 740 dated 19th December 2013 (11th December is Bharati’s Birth Day)

By ச.நாகராஜன்

உரைச் சித்திரம்

முன்னுரை

கம்பீரமான ஆண்குரல் : மஹாகவி பாரதியின் தரிசனம்
நவயுகத்து நாயகனின் மேலாம் எண்ணங்களை அவரது கவிதைகள், கட்டுரைகளிலிருந்தே எடுத்துக் கோர்க்கப்பட்ட ஒரு மணியாரம். வினாக்களை நாம் கேட்க விடைகளை பாரதியார் அளிக்கிறார்.
வினா: மஹாகவி பாரதியாரே, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலவே, காலத்தை வென்ற கவிக் குயிலே, புது யுகத்தின் எழுச்சியே, புதிய அறம் பாட வந்த அறிஞனே, உம்மைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

உம்மை அறிமுகப்படுத்திக் கொள்வீர்களா?

விடை: கவிராஜ சி.சுப்பிரமணிய பாரதி
சக்திதாசன் எனப் புகழ் வளரும் சுப்ரமண்ய பாரதி

வினா: உமக்குத் தொழில் யாது?
விடை: நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்

வினா: தவறாக எண்ணாதீர்கள், உங்கள் கவிதையின் பெருமையை உங்கள் வாயாலேயே கேட்க ஆசைப்படுகிறோம்.
விடை: “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது, ஜோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத கவிதை” என்று நன்கு, பிரான்ஸென்னும் சிறந்த புகழ் நாட்டிலுயர் புலவோரும், பிறரு மாங்கே விராவு புகழாங்கிலத் தீங்கவியரசர் தாமு மிகவியந்து கூறிப் பராவி யென்றன் தமிழ்க் கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்.

வினா: கவிப் பெருக்கினால் பயன் என்னவோ?
விடை: உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்

வினா: நாட்டிற்கு உழைத்தல் என்றீர்களே, நம் நாட்டைப் பற்றிக் கூறுங்களேன்.
விடை : “ஞானத்திலே பர மோனத்திலே உயர்
மானத்திலே அன்ன தானத்தி;லே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு”
“ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாடு”
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு!

வினா: நாட்டிற்கு உழைக்கும் விதம்?
விடை: இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே!
வினா: உங்களுக்குக் காளி மேல் பக்தி அதிகமா? பாரத தேவி மேல் பக்தி அதிகமா?
விடை: “காளியும் நமது கனக நன்னாட்டுத் தேவியும் ஒன்று”
வினா: உங்கள் வாழ்வை யாருக்கு அர்ப்பணம் செய்வீர்கள்?
விடை: தேவி நம் பாரத பூமி – எங்கள்
தீமைகள் யாவும் தீர்த்தருள் செய்வாள்
ஆவி உடல் பொருள் மூன்றும் – அந்த
அன்னை பொற்றாளினுக் கர்ப்பிதமாக்கி
வந்தே மாதரம் என்போம்

வினா: பாரத்த் தாயைப் பற்றி அற்புதமாகக் கவிதை படைத்துள்ளீர்களே இவை உருவாகக் காரணம் என்ன?

விடை: “இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்மனகோசரமாகிய ஸௌந்தர்யத்தைப் பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாது குதூஹலமடைகிறது. சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருத மட்டுமேயன்றி அசேதன பிரகிருதியும், புதிய ஜீவனையும், உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை ஒப்பவே, நாட்டில் ஓர் புதிய ஆதர்சம் – ஓர் கிளர்ச்சி ஓர் தர்மம், ஓர் மார்க்கம், தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர் போல, அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன.சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய ‘”தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெலாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறைவுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சில கவிதை மலர் புனைந்து பாரத மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன்.”

வினா: சொல் எப்படி இருக்க வேண்டும்?
விடை: மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்!
வினா: சொல்லில் சிறந்த சொல்?
விடை: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!

வினா: ஆங்கிலம், வடமொழி,ஹிந்தி, உருது, பிரெஞ்சு,லத்தீன், ஜெர்மன், வங்காளம், தெலுங்கு, அரபி, தமிழ் இப்படிப் பல மொழிகள் அறிந்திருக்கின்றீர்கள்.உங்களைக் கவர்ந்த இனிய மொழி எது?
விடை: யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்
வினா: தமிழனுக்கு உங்கள் அறிவுரை என்ன?
விடை: ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்;
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்!

வினா: (ஒரு குழந்தையின் குரல்) சாதிகள் உண்டா?
விடை: சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

வினா: நிற வேற்றுமை இருக்கிறதே
விடை : வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை; -அவை
பேருக்கொரு நிறமாகும்
சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் – அவை
யாவும் ஒரே தரமன்றோ!
இந்த நிறம் சிறிதென்றும் – இஃது
ஏற்றமென்றும் சொல்ல்லாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமையில்லை
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்!

வினா: எதைப் போற்ற வேண்டும்?
விடை: கைத் தொழில் போற்று
வினா: எதை எதிர்க்க வேண்டும்?
விடை: கொடுமையை எதிர்த்து நில்!
வினா: மேலோர் யார்?
விடை: வையகம் காப்பவரேனும் – சிறு
வாழைப்பழக் கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்வோ
பூமியில் எங்கணும் மேலோர்

வினா: வேலை செய்ய வேண்டிய நேரம்
விடை: நாளெலாம் வினை செய்!
வினா: செய்தால்…?
விடை: நினைப்பது முடியும்!
வினா: (பெண் குரல்) நரகம் எது?
விடை: கவலைப் படுதலே கரு நரகம்மா!

வினா: சொர்க்கம்?
விடை: பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே!
வினா: யோகம் எது?
விடை: ஊருக்கு உழைத்திடல் யோகம்

வினா: யாகம்?
விடை: நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
வினா: மெய் ஞானம்?
விடை: போருக்கு நின்றிடும் போதும் – உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய் ஞானம்
– தொடரும்

Articles on Bharati by London Swaminathan posted earlier in this blog:

1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
Contact swami_48@yahoo.com

பாரதியின் பேராசை!

old bharathi

“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”

–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை

என்ன ‘பேராசை’ பாருங்கள் பாரதிக்கு!!

 

எல்லோருக்கும் ஆசை உண்டு. அது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே இருக்கும். அது சின்ன ஆசை. நாட்டைப் பற்றியும் மனித குல முன்னேற்றத்தைப் பற்றியும் சதா சர்வ காலமும் அல்லும் பகலும் அனவரதமும் ஆசைப்பட்டால் அதை என்ன என்று அழைக்கலாம்? அது பெரிய ஆசை= ‘பேராசை’ அல்லவா?

படித்துப் பாருங்களேன். நீங்களே சொல்லுவீர்கள்

பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலை இருக்குமானால் பிரம்மாவே நாசமாகப் போகட்டும் என்று சபித்தான் வள்ளுவன் (இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்.  குறள் 1062)

பாரதி என்ன வள்ளுவனுக்கு சளைத்தவனா?

“தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறான். இதெல்லாம் வெட்டிப் பேச்சு, வீராப்பு என்று நினைப்பவருக்கு அவனே வழியும் சொல்லிக் கொடுக்கிறான்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்—வீணில்

உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”.

உழைத்து வாழ வேண்டும். லாட்டரி பரிசு மூலமோ அரசாங்க நிதி உதவி மூலமோ பணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது.

அவனுக்கு இன்னும் ஒரு ஆசை!

செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்

செம்மை ஏறி வாழ்வேன்

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை!

 

இன்னொரு இடத்தில்

“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

இந்த நிலத்துக்குச் சுமையென வாழாமல் பிறருக்கு உதவி செய்து வாழ அருள்புரி என்று இறைவனிடம் மன்றாடுகிறார். அல்லும் பகலும் நம்மைப் பற்றியும் நம் குடும்பத்தையும் பற்றி சிந்திக்கும் நம்மையும் நம்ம ஊர் அரசியல் தலைவர்களையும் பாரதியுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவனிடம் இருந்து ஊற்றுணர்ச்சி பெற வேண்டும்.

 

எப்போதும் ‘பாஸிடிவ் திங்க்கிங்’ (Positive Thinking) உடையவன் பாரதி.

மனப் பெண் என்னும் பாடலில் மனதை நோக்கிச் சொல்கிறான்:

“நின்னை மேம்படுத்திடவே

முயற்சிகள் புரிவேன்; முக்தியும் தேடுவேன்

உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட

சிவமெனும் பொருளை தினமும் போற்றி

உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்”

கடந்த கால கஷ்டங்களை எண்ணிக் கவலைப் படுவோருக்கு ஒரு அறிவுரையும் வழங்குகிறான்

“இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்

தீமை எல்லாம் அழிந்து போம் திரும்பிவாரா”

. . . .. . . . .

‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடத் துவங்கியவன் திடீரென்று

“பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும்”

என்று ஆசைப்படுகிறான். பெண்கள் கல்வி கற்றால்தான் முன்னேற முடியும் என்பது அவன் துணிபு.

stamp of bharathy

 

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனி அரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை அருளாய்

குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்

குலவிடும் தனிப் பரம் பொருளே!

………………………

என்றும் இன்னொரு பாட்டில்

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்

கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்

தொல்லைதரும் அகப் பேயைத் தொலைக்க வேண்டும்

துணையென்று நின்னருளைத் தொடரச்செய்தே

நல்வழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்

நமோ நம ஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே! என்று பாடுகிறான்.

…………..

வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ் பாட்டில்………….

“இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக ! என்று வேண்டி

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !  வாழிய பாரத் மணித்திரு நாடு என்றும் வாழ்த்துகிறான்.

…………………..

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி

மனத்திற் சலனம் இல்லாமல்

மதியில் இருளே தோன்றாமல்

நினைக்கும்பொழுது நின்மவுன

நிலை வந்திட நீ செயல் வேண்டும்

கனக்கும் செல்வம் நூறு வயது

இவையும் தர நீ கடவாயே!

………………….

என்றும் இன்னொரு பாட்டில்

அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்

நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்

அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்

உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்

வேண்டாதனைத்தையும் நீக்கி

வேண்டியயதனைத்தும் அருள்வது உன் கடனே”  என்பான்

…………………

ஒரு கோடி தமிழ் பாட ஆசை

விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே

தொண்டுனது அன்னை பராசக்திக்கென்றும் தொடர்ந்திடுவேன்

பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவை

தெண்டமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!

…………………………..

கலியுகத்தைக் கொல்வேன்

பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண் முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே (பாரதி) என்பான்.

 

அவனுக்குள்ள பல ஆசைகளில் ஒன்று வேதத்தை தமிழில் பாடவேண்டும் என்பதாகும்:

“அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்—நித்தம்

அனலைப் பணிந்து  மலர் தூவுவோம்

தமிழில் பழ மறையைப் பாடுவோம்

தலைமை பெருமை புகழ் கூடுவோம்”

 

இப்போது எனக்கும் பாட வேண்டும் போல இருக்கிறது:

பேராசைக் காரனடா பாரதி—அவன்

ஏது செய்தும் தமிழை வளர்க்கப் பார்ப்பான்!

பேராசைக் காரனடா பாரதி—அவன்

ஏது செய்தும் மனித குலம் செழிக்க வைப்பான்!

வாழ்க பாரதி, வளர்க தமிழ்! செழிக்க வையகமே!

……………….