ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்! (Post No. 2466)

ragamala2

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 7 January 2016

 

Post No. 2466

 

Time uploaded in London :–  5-54 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

இந்திய சங்கீதம்

ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்!

 

ச.நாகராஜன்

 

 

ஹரிதாஸரின் சீடர்

 

இந்திய சரித்திரத்தில் பாடகர்களின் வரிசையில் இணையிலா இடத்தை வகிப்பவர் தான்ஸேன்.

 

இவரைப் பற்றி ஏராளமான சுவையான சம்பவங்கள் பல்வேறு நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் உண்மையா பொய்யா என்பதை அறிவது முடியாத காரியம்.

தான்ஸேனின் தந்தையின் பெயர் முகுந்த மிஸ்ரா.

ஐந்து வயதிலேயே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவராக ஆகி இருந்தார் தான்ஸேன். அவரது இளமைக்காலப் பெயர் ராமதனு.

அவரது குருநாதர் பிருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த பெரிய மகானான ஸ்வாமி ஹரிதாஸ்.

 

காடு வழியே சென்று கொண்டிருந்த குருநாதர் புலி போல குரல் (மிமிக்ரி) கொடுத்த ராமதனுவின் திறமையை மெச்சி அவருக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்ததாக ஒரு கதை.

அவரது தந்தையின் ஏற்பாட்டின் படி குருகுலவாஸம் செய்து தான்ஸேன் சங்கீதம் கற்றுக் கொண்டதாக இன்னொரு கதை.

எது எப்படியானாலும் ஹரிதாஸர் தனக்கு இணையாகப் பாடும்படி தான்ஸேனுக்கு அருளைப் பொழிந்தது வரலாற்று உண்மை. அனைத்து ராக தேவதைகளும் தான்ஸேன் மீது அருளைப் பொழிந்ததும் உண்மை!

 

ragamala3

அக்பரின் அழைப்பு

 

தான்ஸேனின் புகழைக் கேட்ட அக்பர் எப்படியும் அவரைத் தன் அரசவைக்கு அழைத்து வர விரும்பினார். அப்போது அக்பருக்கு வயது 20.

 

ரேவாவின் மஹாராஜாவான ராமச்சந்திராவின் அரசவையில் இருந்த தான்ஸேன் ஒருவாறாக அக்பர் அரசவைக்குச் சென்று தன் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். அப்போது அவருக்கு வயது 57.

 

அடுத்த 27 வருடங்களுக்கு அக்பர் தான்ஸேனை விடவே இல்லை. (1589ஆம் ஆண்டு வாக்கில் தான்ஸேன் மறைந்தார்)

அப்படி ஒரு மோகம், மரியாதை அக்பருக்கு தான்ஸேன் மேல் ஏற்பட்டது.

 

முதல் கச்சேரிக்கு ஒரு லட்சம் தங்க நாணயங்களை அக்பர் தான்ஸேனுக்கு வழங்கியதாக கர்ண பரம்பரைச் செய்தி தெரிவிக்கிறது.

 

தனது நவரத்தினங்களில் முக்கியமான இடத்தை அக்பர் தான்ஸேனுக்கு அளித்தார்.

 

ragamala1

நரபதியும் தான்பதியும்

 

தன்னை புலவர்கள் நரபதி என்று அழைத்த போது தான்ஸேனை தான்பதி என்று அழைக்க வைத்தார் அக்பர்.

பாரத சாம்ராட் என்று கவிஞர்கள் அக்பரைப் புகழ்ந்த போது தான்ஸேனை சங்கீத சாம்ராட் என்று அவர் அழைத்தார்.

 

அவர் மேக மல்ஹார் ராகத்தைப் பாடினால் மழை பொழியும்!

(தான்ஸேன் தீபக் ராகம் பாடிய போது தீ ஜுவாலை எழுந்ததையும் குருநாதர் ஹரிதாஸைப் பார்க்க அக்பர் விரும்ப அவரை அழைத்துச் சென்ற போது நடந்த சுவையான சம்பவங்களையும் ஏற்கனவே கட்டுரைகளில் எழுதி இருப்பதால் அவற்றை இங்கு மீண்டும் எழுதவில்லை)

 

 

ஒரு அழகிய பாடல் நரபதி-தான்பதி விஷயத்தை விளக்குகிறது.

முராரே த்ரிபுவநபதே, இந்த்ர சுரபதே,, சேஷநாக் ஹை ஃபநபதே |

(முராரி மூன்று உலகங்களுக்கும் அதிபதி

இந்திரன் தேவலோகத்திற்கு அதிபதி

ஆதிசேஷன் நாகங்களுக்கு அதிபதி)

க்ஷீர உததி சலிலபதே, கௌஸ்துப மணி ரத்னபதே தினகர் தீனனபதே, கமலாபதே ||

(க்ஷீர சமுத்ரம் கடல்களுக்கு அதிபதி, கௌஸ்துப மணி  ரத்னங்களுக்கு அரசன், தினகரனும் விஷ்ணுவும் தீனர்களுக்குத் துணைவர்)

சசி உட்கணபதே, ஹநுமான் பலிநபதே, நாரதாதி பக்தநபதே, சாஜன் வீணா ம்ருதங்கபதே |

(நட்சத்திரங்களின் தலைவன் சந்திரன், ஹநுமான் பலசாலிகளின் அதிபதி, நாரதர், பக்தர்களின் தலைவர், வாத்தியங்களில் வீணை முதன்மையானது)

 

சிரஞ்சீவௌ சாஹ் அக்பர் நரபதே, தான்ஸேன் தான்பதே ||

இது போலவே சிரஞ்சீவி அக்பர் நரர்களுக்கு அதிபதி, அது போலவே தானபதி தான்ஸேன் தான்!

 

 raga1

சங்கீத ரஸிகர்கள் சென்று காணும் வட விருக்ஷம்

 

அக்பரின் அந்தப்புரத்தில் அக்பரைத் தவிர உள்ளே நுழையக் கூடிய உரிமையை தான்ஸேன் மட்டுமே பெற்றிருந்தார்.

அங்கு அவரது கச்சேரிகளை அந்தப்புரத்தில் இருக்கும் அரசமகளிருடன் அக்பரும் கேட்டு மகிழ்வது வழக்கம்.

தீபக் ராகம் பாடியபோது எழுந்த அக்னி ஜுவாலையில் தான்ஸேன் இறந்ததாக கர்ண பரம்பரைச் செய்தி தெரிவிக்கிறது.

அவரது அந்திமக் கிரியையின் போது கண்ணீருடன் அக்பர கலந்து கொண்டார் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

 

 

தான்ஸேனின் சமாதி, அவர் சங்கீதத்தை சாதகம் செய்த வட விருக்ஷம் முதலிய அனைத்தும் இன்றும் சங்கீத ரஸிகர்கள் செல்லும் இடங்களாக இன்றும் திகழ்கின்றன.

சுவையான சம்பவங்கள் நிறைந்த தான்ஸேனின் வாழ்க்கை இந்திய சங்கீதத்தின் பெருமைக்கான ஒரு வரலாறே. ஹிந்து(ஸ்தானி) ராகங்கள் பற்றியும் ராக தேவதைகளைப் பற்றியும் அறிய விரும்புவோர் தான்ஸேனின் வரலாறைப் படிப்பது பயன் தரும் ஒன்றாக அமையும்!

 

*******

இதைப் படிக்கும் அன்பர்கள் நேற்று வெளியான அக்பரும் சூரிய நமஸ்காரமும் கட்டுரையையும் படித்து மகிழலாம்.

What is Dance, Drama?-1 (Post No. 2459)

natyashastr2

COMPILED LONDON SWAMINATHAN

 

Date: 4 January 2016

 

Post No. 2459

 

Time uploaded in London :–  9-52 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

natyasastra

“In it (Natya) there is no exclusive representation of you or of the gods; for drama is a representation of the state (Bhaavaanikiirtana) of the three worlds.

 

In it sometimes there is a reference to duty, sometimes to game, sometimes to money, sometimes to peace, and sometimes laughter is found in it, sometimes fight, sometimes love making and sometimes killing of people.

 

This teaches duty to those bent on doing their duty, love to those eager for its fulfilment and it chastises those who are ill-bred or unruly, promotes self-restraint, in those who are disciplined, gives courage to cowards, energy to heroic persons, enlightens men of poor intellect and gives wisdom to the learned.

 

This gives diversions to kings, and firmness (of mind) to persons afflicted with sorrow, and (hints of acquiring) money to those who are for earning it, and it brings composure to persons agitated in mind.

 

The drama as I have devised it, is a mimicry of actions and conducts of people, which is rich in various emotions, and which depicts different situations. This will relate to actions of men good, bad and indifferent, and will give courage, amusement and happiness as well as counsel to them all.

 

The drama will thus be instructive to all, through actions and States (Bhaava) depicted in it, and through Sentiments arising out of it.

 

It will give relief to unlucky persons who are afflicted with sorrow and grief or over work, and will be conducive to observance of duty (dharma) as well as to fame, long life, intellect and general good, and will educate people.

 

There is no wise maxim, no learning, no rt or craft, no device, no action that is not found in the drama (natya)

 

Hence I have devised the drama in which meet all the departments of knowledge, different arts and various actions.so (O daityas) you should not have any anger towards the gods;for a mimicry of the world with its Seven Divisions (Sapta Dvipa) has been made a rule of, in the drama.

 

Stories taken out of Vedic works as well as semi historical tales (Itihasa) so embellished that they are, capable of giving pleasure, is called drama (natya).

 

A mimicry of the exploits of gods, Asuras, kings as well as house-holders in this world, is called drama.

 

An when human nature with its joys and sorrows, is depicted by means of Representation through Gestures, and the like (Words, Costume and Temperament) it is called Drama”.

 

—Bharata’s Natya Sastra (200 BCE)

abhinava darpana

What is Drama?-2

“Brahma explains to the Daanavaas:-

This play is not merely for your pleasure or the pleasure of the Devas, but exhibits mood (bhava) for all the Three Worlds. I made this play as following the movement f the world, whether in work or play, profit, peace, laughter, battle, lust or slaughter; yielding the fruit of righteousness to those who follow the moral law, pleasure to those who follow lust, a restraint for the unruly, a discipline for the followers of a rule, creating vigour in the impotent, zeal in warriors, wisdom in the ignorant, learning in scholars, sport to kings, endurance to the sorrow-smitten, profit to those who seek advantage, courage to the broken-willed; replete with diverse moods (Bhaavas), informed with the varying passions of the soul, linked to the deeds of all mankind, the best, the middling, and the low, affording excellent counsel, pastime, weal and all else.

This drama shall be the source of all counsel in matters of flavour (rasa), mood (Bhaava), and every rite; it shall serve as a timely resting-place for those who are grieved, weary, unhappy, or engaged in an arduous discipline; bestowing righteousness, renowned, long life, fortune, increase of reason; affording counsel to the world. That which is not found to be herein in not knowledge, nor craft, nor wisdom, nor any art, nor deeds, nor Union (yoga).

 

I made this drama according to the Seven Lands, and so you should not feel resentment towards the immortals. The drama is to be understood as witnessing the deeds of gods and Titans, kings of the sphere, and Brahma-prophets. Drama is that which accords with the nature (Svabhaava) of the world, with its weal and woe, and it consists in movements of the body and other arts of expressive gesture (Abhinaya). The theatre is such as to afford a means of entertainment in the world, and a place of audience for the Vedas, for philosophy, for history and other matters.

 

He adds that no performance should be begun without fulfilling the Office of the Stage (Ranga-Puja), and those that neglect this ritual will be ruined”.

Abhinaya Darpana

 

FROM THE BOOK ‘ASIA THROUGH ASIAN EYES’, YEAR 1959,SOAS,UNIVERSITY OF LONDON LIBRARY

 

–Subham–

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! வசுதைவ குடும்பகம்!! (Post No. 2458)

best bharat mata

Written by London swaminathan

Date: 4 January 2016

 

Post No. 2456

 

Time uploaded in London :–  8-30 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

“எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர், வாழ்க!” (பாரதியார்)

barati stat3

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனையுடைய நாடு பாரதம். இங்கு வாழ்ந்த சாது சந்யாசிகள், பெரியோர்கள், உத்தமர்கள், சத்யசந்தர்கள், உண்மை விளம்பிகள், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், மஹநீயர்கள், ஞானிகள் — 3500 ஆண்டுகளாக ஒரே கருத்தை வலியுறுத்துவது, படித்துப் படித்து இன்புறத்தக்கது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –

என்ற புறநானூற்று வரிகளை (புறம் 192) அறியாதோர் யாருமில்லை; கனியன் பூங்குன்றன் இக்கருத்தைச் சொல்லுவது போலவே வடமொழி வாணவர்களும் செப்பி மகிழ்வர். வசுதைவ குடும்பகம்= உலகம் ஒரே குடும்பம் என்பது அவர்கள் கண்ட உண்மை.

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்

உதராசரிதானாம் து வசுதைவ குடும்பகம்

—ஹிதோபதேசம், பஞ்ச தந்திரம்

பொருள்:- இது தன்னுடையது, அது பிறருடையது என்பது சின்ன புத்தியுடையோரின் செய்கையாகும்; நற்குணம் பொருந்தியோருக்கோவெனில் இந்த உலகமே ஒரு குடும்பம்.

kanchi best anbe sivam

இந்தக் கருத்து பஞ்சதந்திரத்திலும், ஹிதோபதேசத்திலும் வலியுறுத்தப்படுவதால் இதன் முக்கியம் மேலும் தெளிவாகிறது.

 

பண்டிதா: சமதர்சின:

ஆனால் இதற்கெல்லாம் மூலக் கருத்து கண்ணபிரான் சொன்ன பகவத்கீதையில் இருக்கிறது. ஞான பண்டிதர்களுக்கு நாயும் பசுவும், யானையும் ஒன்றுதான்! அந்தணர்களும் புலையர்களும் ஒன்றுதான். காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதியின் வரிகள் – அவர்களுடைய கருத்தைப் பிரதிபலிக்கிறது.

இதோ பகவத் கீதை ஸ்லோகம்:

வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின:

(பகவத் கீதை 5-18)

வித்யா விநய ஸம்பன்னே = கல்வியும் அடக்கமும் நிறைந்த

ப்ராஹ்மணே = பிராமணனிடத்தும்

கவி ஹஸ்தினி = பசுவினிடத்தும், யானையினிடத்தும்

சுனி ச = நாயினிடத்தும்

ஏவ ச்வபாகே = அவ்வாறே நாயை உண்ணும் புலையனிடத்தும்

பண்டிதாஹா = ஆத்ம ஞானிகள்

ஸமதர்சினஹ = சமநோக்கு உடையவர்கள்.

baba closwe up

இதையே தாயுமானவரும்

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும்  அவ்வுயிராய்

அங்கிருப்பது நீ யன்றோ பராபரமே – என்பார்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்……..

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

 

இது எவ்வளவு உண்மை; சிறு வயதில் எத்தனை கதைகள் கேட்டிருக்கிறோம்; ஒரு பெரிய பணக்காரனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லது ஒரு ராஜாவுக்கு இரண்டு குமாரர்கள்; ஒருவர் உயர்ந்தார்; மற்றொருவர் தாழ்ந்தார் என்றும் அதற்கான காரணம் என்னவென்றும் விதவிதமாக கதைகள் உள்ளன. அவரவர் செய்தொழிலால்தான் இந்த வேற்றுமைகள். இந்தக் கருது வள்ளுவனுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பிருஹதாரண்யக உபநிஷத்திலுமுள்ளது (பிருஹத் = பெரிய, ஆரண்யக = காட்டு).

 

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை.

சிறுவயதில் ஒரு கதை கேட்டிருப்போம்; உடலின் ஒவ்வொரு உறுப்பும் தான் தான் முக்கியமான வேலையைச் செய்வதாகச் சொல்லி தனகே முதல் மரியாதை வேண்டும் என்னும் கதை அது. தான் ரத்தத்தை எல்லா உறுப்புகளுக்கும் அனுப்பாவிடில் உடலே இயங்காது என்று இதயம் சொல்கிறது. நுரையீரலோ தான் ஆக்சிஜனைக் கொடுத்து, கரியமிலவாயுவை வெளியேற்றாவிடில் உடலில் நீலம் பாய்ந்து இறக்க நேரிடும் என்கிறது. மூளையோ தந்து உத்தரவுப்படியே நரம்புகள் செயல்படுகின்றன; ஒருவனுடைய மூளை இறந்துவிட்டால் இதயம் என்ன செய்ய இயலும்? என்று சொல்கிறது. இதே போல கை, கால், கண், மூக்கு, வாய், செவி, தோல் எல்லாம் சண்டையிடுகின்றன. ஆனால் இக்காலத்தில் ஒரு சிறுவனுக்குக் கூடத் தெரியும் உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவை; ஒன்றில் குறைபாடு இருந்தாலும் அவன் உடலூனமுடையவனே என்று.

 

இதை ரிக்வேதமும் புருஷசூக்தத்தில் (10-8-90) அழகாகச் சொல்லும்; பிராமணன் என்பவன் சிந்திப்பவன்; க்ஷத்ரியன் என்பவன் தோள்வலியால் நாட்டையும் மக்களையும் காப்பவன்; வைஸ்யன் என்பவன் தொடை வலிமையால் வணிகம் செய்து காப்பான்; சூத்திரன் என்பவன் கால் வலிமையால் உழைத்துக் காப்பான் என்று.

ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத்,

பாஹூ ராஜன்ய க்ருத:

ஊரு ததஸ்ய யத் வைச்ய:

பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத

பொருள்: பிரம்மாவை தேவர்கள் பலியிட்டபோது அவருடைய முகம் பிராமணனாகவும், கைகள் க்ஷத்ரியனாகவும், தொடைகள் வைச்யனாகவும், பாதங்கள் சூத்ரனாகவும் ஆயின.

 

at_the_feet_of_god_medium

எப்படி ஒரு உறுப்பில்லாமல் உடல் நன்கு செயல்படாதோ அப்படியே இந்த நான்கு வர்கமும் எந்த நாட்டிலும், எப்போதுமிருக்கும்! ஆனால் பிறப்பின் அடிப்பையிலன்றி செய்தொழிலின் அடிப்படையில்.

பிற்காலத்தில் இது வேறுபட்டது. முன்காலத்தில் சேர,சோழ, பாண்டிய மன்னன் மகன்கள் தான் ராஜாவாக இருக்கமுடியும். இன்றும் பிரிட்டனில் ராஜா அல்லது ராணி மகன் தான் அரசுகட்டிலில் ஏற முடியும். இன்றும்  நார்வே, சுவீடன், மொனாகோ என்று ஏராளமான நாடுகளில் இந்த வழக்கமுளது.பிரிட்டனில் பிரபுக்கள் மகன்தான் பிரபுவாகிறான். பரம்பரை மூலமே பிரபுக்கள் சபையில் இடம் பெறமுடியும். இந்திராகாந்தி, ராஜமான்யத்தை ஒழித்தபின்னர்தான் ஒவ்வொரு நாடாக அதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற பலநாட்டு மக்கள் இன்றும் பிரிட்டிஷ் ராணியை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது பிறப்பே, பதவியை முடிவு செய்கிறது! அதில் யாரும் தவறு கானவில்லை. ஒவ்வொரு தடவைக் கருத்துக் கணிப்பு நடக்கையிலும் ராஜா ராணிக்குப் பெரும்பானமை மக்கள் அதாரவு இருக்கிறது!

எதுவுமே மக்கள் பார்க்கும் பார்வையிலும், ராஜ குடும்பத்தினரின் செயல்பாட்டிலும்தான் இருக்கிறது. ஆக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது கூட காலத்துக்கு காலம், நாட்டுக்கு நாடு வேறு படும். ஆனால் இந்திய ஆன்ம ஞானிகளுக்கு எல்லாம் எப்போதும் ஒன்றே.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் (திருமூலர்)

 

894_Bhagwat_Gita_thumb[13]

–சுபம்–

 

ஒரு குட்டிக் கதை: “நுணலும் தன் வாயால் கெடும்”(Post No. 2455)

frogs

Date: 3 January 2016

 

Post No. 2455

 

Time uploaded in London :–  7-41 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

செல்லும், செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார்!

 

(விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நூலிலிருந்து; புத்தகம் தந்தவர்: ச.சீனிவாசன், சென்னை).

திருடனுக்குப் பயந்து ஒரு ரோட்டின் ஓரத்தில் மணியகாரன் ஒருவனும்,  செட்டியார் ஒருவனும் கத்தாழைப் புதருக்கு மறைவில் படுத்திருந்தார்கள். திருடர்கள் அவ்வழியே வேகமாகச் செல்லுகையில் படுத்திருந்த மணியக்காரன் காலில், திருடனின் காலிடறியது.

 

அப்போது இவர்கள் படுத்திருப்பதையறியாத திருடன், ‘இதென்ன பாதையில் கட்டை விழுந்து கிடக்கிறது? என்றான். அதற்கு மணியகாரன் சும்மாவிராமல், “உங்கள் வீட்டுக் கட்டை இப்படித்தான் ஐந்து பணத்தை முடித்துக்கொண்டு படுத்திருக்குமோ?’ என்றான். இதைக் கேட்ட திருடர்கள், அவனிடமிருந்த ஐந்து பணத்தை அபகரித்துக்கொண்டனர்.

 

இது செல்லுமோ, செல்லாதோ? என்று ஒரு திருடன் கேட்கப் பறிகொடுத்த மணியகாரன், “செல்லும், செல்லாததைப் பார்க்க இதோ செட்டியார் படுத்திருகிக்கிறாரே; அவரிடம் கேட்டால் போச்சு “ என்றான். உடனே திருடர்கள், அந்த செட்டியையும் பிடித்து அவனிடமிருந்த நூறு பவுன்களையும் அடித்துப் பறித்துக்கொண்டு இருவரையும் செம்மையாய்ப் புடைத்துவிட்டுச் சென்றார்கள்.

“நுணலும் தன் வாயால் கெடும்” – தமிழ்ப் பழமொழி (நுணல்= தவளை)

-சுபம்-

 

 

 

 

சென்னை மழையில் உலராத மன ஈரம் (Post No. 2454)

chennai rain 9

Date: 3 January 2016

 

Post No. 2454

 

Time uploaded in London :–  6-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஹிந்து இந்தியா

 

 

ஹிந்து பரம்பரையின் நற்பண்புகள் எந்நாளும் தொடரும்!

 

.நாகராஜன்

 

சென்னை மழையில் உலராத மன ஈரம்

 

 Suruji-Chennai

சமீபத்திய சென்னை மழை ஒன்றை உலகிற்கு உணர்த்தி விட்டது. பெரு வெள்ளத்தால் ஈரமான பூமி கூட ஒரு நாள் உலர்ந்து விடும், ஆனால் ஹிந்து பரம்பரையில் ரத்தத்தில் ஊறி உள்ள அவனது ஈரத்தை யாராலும் அகற்ற முடியாது.

ஈர மனம் என்றுமே ஈர மனம் தான் என்பதை ஹிந்து இந்தியா நிரூபித்து விட்டது.

 

 

உ;பியிலிருந்து பண உதவி, கேரளத்திலிருந்து பல கார்களில் ஏராளமான உதவிப் பொருள்கள், கர்நாடகத்திலிருந்து அலை அலையாக கார்களில் வந்த தன்னார்வத் தொண்டர்கள் துன்பப்பட்டவர் யாராயிருந்தாலும் சரி அவர்களுக்குத் தேவையான பொருள்களைத் தருதல் என இப்படி மதம், ஜாதி, அந்தஸ்து, மாநிலம், மொழி என எதையும் பாராது உதவி செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர் அனைவரும்!

 

 

இன்றைய அரசியல்வாதிகளில் மோசமானோர் சிலர் இந்த நிலையிலும் ஒட்டை மனதில் நினைத்து இயற்கைச் சீற்றத்திலும் கூட அரசியல் ஆதாயம் பார்த்த நேரத்தில் மக்கள் தாங்கள் ஒரு பெரும் ராஜ பரம்பரையில் வந்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்.

 

 

ஹிந்து மண்ணின் வாசனையை எந்த முகலாயப் படையெடுப்பு ஆக்கிரமிப்பினாலும். எந்த ஆங்கிலேய ஆட்சியினாலும் போக்க முடியவில்லை; முடியாது என்பதை இந்த ஈர நெஞ்சங்கள் நிரூபித்து விட்டன.

chennai rss

இது ஒன்றும் புதிதில்லை.

 

 

வரலாறு நெடுக லட்சக்கணக்கான சம்பவங்கள் ஒரே பாரதம் என்ற உணர்வை மக்கள் தொன்று தொட்டுக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன.அவர்களின் அறப்பண்புகள் இந்தியா முழுவதும் பரவி ஒரே மாதிரியாக இருப்பவை என்பதையும் நிரூபிக்கின்றன.

 

 

அனைத்தையும் தொகுத்தால் பல கலைக்களஞ்சியங்களாகி விடும்.

மாதிரிக்கு ஒரு சில சம்பவங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

 

chennai rss2

சுனாமியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்

 

சுனாமி சென்னையைத் தாக்கிய சமயம் அது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி நாகைப்பட்டினமே அல்லோலகல்லோலப் பட்டது.தொடுவை என்ற ஊரிலிருந்த ராஜலக்ஷ்மி- ஜயகுமார் தம்பதி தங்கள் அருமைக் குமாரனை சுனாமிக்கு பலி கொடுத்து விட்டனர்.தமிழ்நாடு அரசு இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் தந்தது. ஜயகுமாருக்கும் ஒரு லட்சம் கிடைத்தது.

 

 

ஆனால் 2005 மார்ச் மாதம் 5ஆம் தேதியன்று ஜயகுமாருக்கு ஒர் நற்செய்தி கிடைத்தது.அவரது நண்பர் ஒருவர் தான் அந்த நற்செய்தியை அவரிடம் கூறினார்.

 

 

ராட்சஸ அலையினால் தூக்கிச் செல்லப்பட்ட ஜயகுமாரின் புதல்வர் வேளாங்கண்ணியில் 50 மைல் தூரத்திற்கு அப்பால் உயிருடன் பிழைத்துக் கொண்டார்.

இதைத் தெரிந்து கொண்ட தம்பதியினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

 

 

உடனடியாக அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா? அந்த ஏழை தம்பதியினர் நாகை மாவட்ட கலெக்டர் ஜே.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். தங்கள் மகன் உயிருடன் இருக்கும் செய்தி கிடைத்து விட்டதாகவும் ஆகவே அரசு தந்த ஒரு லட்ச ரூபாயைத் திருப்பித் தர வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

 

அனைவரின் மனமும் கசிந்தது. யாரும் அவர்களிடம் பணத்தைக் கேட்கவில்லை.

 

அந்தப் பணம் இன்னொருவருக்கு உதவட்டும் என்ற நோக்கில் அங்கு உடனே வந்த அவர்களைத் தூண்டியது எது?

அவர்கள் உடலில் ஓடுகின்ற ஹிந்து சக்தி!

khrushchev DDR STAMPS_zpsugatzps9

குருஷேவின் வியப்பு

 

ரஷியாவில் கொடி கட்டிப் பறந்த ரஷிய பிரதம மந்திரி நிகிதா குருஷேவ் 1954இல் டெல்லிக்கு வந்தார். தனது பேண்டுகள் இரண்டை துவைத்து அயர்ன் செய்ய சலவைக்காரரிடம் தந்தார். துணிகளைத் திருப்பித் தர வந்த சலவைக்காரர் அவர் பையில் நானூறு ரூபாய் இருந்ததாகக் கூறி அதைத் தந்தார். “உங்கள் நாட்டின் பாரம்பரியத்தை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்” என்று உணர்ச்சி ததும்பக் கூறினார் குருஷேவ்.

 

 

பொய் சொல்லாத ஹிந்து

 

சுமார் நூற்றிஅறுபது ஆண்டுகளுக்கு முன்னர் துக்கீயர்களைக் கொடுமைப்படுத்துவதற்கு பெயர் பெற்ற ஸ்லீமன் (SLEEMAN), “ “ஒரே ஒரு பொய் சொன்னால் போதும், வீடு, மானம், மரியாதை, அனைத்தும் காப்பாற்றப்படும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களை என் வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு ஹிந்து எந்தக் காலத்திலும் எதை இழப்பதாயிருந்தாலும் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை” என்றான்.

 

chennai4

போர்த்துக்கீசியரின் வியப்பு

 

500 ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கீய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டின் ஒரு ப்குதியைப் பிடித்த போது அவர்கள் பிடித்து வைத்த ஹிந்து போர் வீரர்களை பரோலில் ஆறு மாதம் அனுப்ப பிணைத்தொகை கட்டி விட்டுத் தான் போக வேண்டும் என்று ஆணையைப் பிறப்பித்தனர். ஆனால் அப்படி பிணைத்தொகையைக் கொடுக்க ஆளில்லாத போர்வீரர்கள் பணம் கொடுக்க தங்களுக்கு யாரும் இல்லை என்று கூறித் தாமாகவே போர்த்துக்கீசியரிடம் திரும்ப வந்ததை அவர்கள் வியப்புடன் நோக்கினர்.

ஒரு ஹிந்துவை யாராலும் பொய் சொல்ல வைக்க முடியாது; அதை விட மரணத்தை அவன் ஏற்பான் என்று எழுதி வைத்தனர்.

 

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கிரேக்க வரலாற்றாசிரியன் மெகஸ்தனிஸ் ஒரு ஹிந்து எப்போதுமே, எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டான் என்று எழுதி வைத்தான். அது இன்று வரை தொடர்வதைப் பார்க்கும் போது நமக்கு பெருமிதம் பொங்குவது இயல்பே!

 

 

ஹிந்துவின் அறப்பண்புகள் பொய் சொல்லாமை, திருடாமை, நாணயத்துடன் இருத்தல், ஹிந்து காலம் மாறலாம்; மோசமான அரசியல்வாதிகள் மாறி மாறி வரலாம்.

 

ஆனால் ஒரு நாளும் அவனது அடிப்படை அறப்பண்புகள் மாறாது.

ஆஸேது ஹிமாசல் – சேது முதல் இமயம் வரை ஹிந்து இந்தியா ஒன்று தான்.

 

ஹிந்துவின் தர்மம் ஒன்றே தான்!

 

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது தான் நமது தேசீய தர்மம். இது உலக தர்மமும் கூட.

 

சொல்லவொணாத் துன்பத்தைச் சென்னையில் தந்த இயற்கைச் சீற்றம் நமக்கு ஆறுதலாக விட்டுச் செல்லும் செய்தி நமது பண்டைய அறப்பண்புகள் நம்மை விட்டு நீங்கவில்லை என்பதே!

–Subham-

 

 

A Novel Fortune-Teller (Acche Din aane waale hain)! (Post No. 2446)

IMG_1652 (2)

நல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்

Poem by Tamil Poet Subrahmanya Bharati (1882-1921)

 

Compiled by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2446

 

Time uploaded in London :–  00-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

  1. Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Auspicious days are ahead; Auspicious days are ahead;

Castes combine; conflicts cease

Speak up, speak up, Sakti, Durga!

Predict, predict propitious days for Vedapura.

 

  1. Destitution disappears; affluence is attained

Learning spreads apace; sin ceases to be;

If the learned take to trickery and commit crimes,

They will be ruined, alas, utterly ruined

 

  1. Commerce expands in Vedapura

Industry grows; workers prosper;

Sciences flourish, secrets come to light.

Power-plants multiply; know-how develops;

Fertile ideas arise in abundance.

 

 

4.Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Speak up, speak up, Malayala Bhavati:

Antari, Veeri, Chandika, Sulini;

Kudukudu Kudukudu;

 

  1. Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Masters are becoming brave;

Paunch sharinks; diligence spreads;

All forms of wealth grow apace;

Fear dies; sin perishes;

Scinces grow; caste declines;

Eyes open; justice is perceived;

Old madness vanishes all of a sudden;

Heroism is attained; so is honour;

Speak up, Sakti, Malayala Bhagavati

Virtue flourishes, virtue thrive.

 

-translated from Tamil into English by Prof. S Ramakrishnan (SRK)

Note: The original is from Kothaik kotthu (1939)

Bharati died on 11th September 1921 at the age of 39.

1960-Subramanya_Bharati

நல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்

 

புதிய கோணங்கி

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம்போகுது; செல்வம் வருகுது;

படிப்பு வளருது; பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான், போவான் ஐயோவென்று போவான்!

 

வேதபுரத்திலே வியபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்

சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’

யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது

மந்திரமெல்லாம் வளருது, வளருது;

 

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!

அந்தரி, வீரி, சண்டிகை, சூலி

குடு குடு குடு குடு

 

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது;

தொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;

எட்டு லட்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது;

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வளருது, மேன்மை கிடைக்குது;

சொல்லடி சக்தி, மலையாள பகவதி;

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

–பாரதியார்

–SuBham–

விகடன் பள்ளியிற் படித்த விநோதம் (Post No. 2441)

IMG_9805 (2)

Compiled  by London swaminathan

Date: 30 December 2015

 

Post No. 2441

 

Time uploaded in London :– காலை 8-58

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன், சென்னை).

 

பழைய தமிழ்நடை; பழைய நகைச்சுவை!!

 

“ஐயா! நான் பள்ளியிற் வாசித்த வைபவத்தைக் கூறுகிறேன் கேளும். நான் பிறந்தது வெயிலடிச்சான்பட்டி. என் தகப்பனாருக்கு நான் ஒருவனே ஏகபுத்திரன். எங்கள் ஜாதியோ துடைதட்டி வெள்ளாளர். என் தகப்பனார் சுத்த கர்நாடகம். ஒருநாள் என் தகப்பன் வழக்கம்போல் அதிகாலையிலெழுந்து ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டுக் கரையில் வந்து வேஷ்டி கட்டிக்கொள்ள மடிசஞ்சியைப் பார்க்க, எவனோ அப்பிக்கொண்டு போய்விட்டான். அங்கு தோட்டக்காரனின் வெள்ளை நாயொன்று படுத்திருந்தது.

மையிருட்டாயிருந்தமையாலும்,கண்பார்வை மத்தியமாதலாலும் மடிசஞ்சியென்றெண்ணி நாயைப் பலமாய்த் தூக்கினார். அப்போது வயிரவர் தீர விசாரித்துவிட்டார். சிலநாளைக்கெல்லாம் அவர் வெறிநாய் கடித்த கிறுக்கால் வலி பொறுக்கமாட்டாமல் நாய் போல் ஊளையிட்டே இறந்தார்.

 

அதன்பின் என் தாய் என்னைப் பள்ளியில் வைக்கத் தொடங்கினாள். நான், “ஆனகுலத்திற் பிறந்து ஆடுமாடு மேய்க்காமல் ஓலைவாரிக் கழுதையாய்ப் போகிறதா?” என்றெண்ணிப் படிப்பும் வேண்டாம், பிடிப்பும் வேண்டாம்” என்றேன். அது என் தாயாருக்கு மனம் பொறாமல் நான்கு ஐந்து புளியமரங்களும், பத்துப் பதினைந்து வீடுகளுமுள்ள பெரியபட்டணமாகிய ஆடுசாபட்டியில் ஓர் உபாத்தியரிடம் கொண்டுபோய் என்னை ஒப்புவித்தார். நான் அங்கேயே உபாத்தியாயர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன்.

 

என் வாத்தியார் சம்சாரமோ வெகு வக்கணைக்காரி. அவள் அழகோ சொல்லவேண்டியதில்லை; வர்ணிக்கத்தான் வேண்டும்

 

(சிந்து)

“இளிச்ச பல்லுக்காரி

இடிபோல் சொல்லுக்காரி

வெளிச்ச மூஞ்சிக்காரி

வெட்கங்கெட்ட நாரி

டொக்கு கன்னக்காரி

டக்குக் கண்ணுக்காரி

ஈன நடைக்காரி

ஆனைக் கழற்காரி

IMG_9805 (3)

இப்பேற்பட்ட அற்புதம் வாய்ந்து சுப்ரதீபமாய் விளங்கும் வல்லாளகண்டி என்பவள் அனுதினமும் உபாத்தியாயர் தலையில் ஒரு சட்டி அல்லது ஒரு பானை உருட்டமலிருக்கமாள். அப்படி சட்டிப்பனைகளை அவர் தலையில் உருட்டும்போது நான் பசுமூத்திரம் குடித்த காளைபோல் பல்லை யிளித்துக்கொண்டிருப்பேன். அப்போதவர், “அடே பையா! இவளைக் காட்டிலும் பட்டிமுண்டையாய் உனக்கு வாய்க்கவேணும். அப்போது இளிக்கமாட்டாய் என்பார். இப்படியிருக்க ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்துவிடவேண்டுமென்று எனது வாத்தியார் மனைவி என்னை ஏவினார். அப்போது,

 

நெடுமால் திருமுருகா

நித்த நித்தமிந்தெழவா

வாத்தியாரும் சாகாரோ

வயிற்றெரிச்சல் தீராதா”

என்று ஓயாமல் கடவுளைப் பிரார்த்திக்கொண்டிருக்கும்போது, ‘போதாக்குறைக்கு பொன்னியம்மன் குறை’ என்பதுபோல வாத்திச்சியும் மோட்டுத் தவளைபோற் கட்டளையிடவே நான் கிணற்றண்டை சென்று ஒரு கூர்மையான கல்லொன்றெடுத்து அந்தத் தோண்டியை ஆயிரம் பொத்தலாக்கி ஒரு குடம் தண்ணீர் எடுத்துவந்தேன். அதற்கவள், ‘அடிமாண்டு போக’, கரியாய்ப் போக என்று தனது வசவு அரிச்சுவடியை வரிசையாயொப்பிவித்தாள்.

மற்றொரு நாள் அவள் நெல்லுக் குத்திக்கொண்டிருக்கையில் என்னையும் ஒரு உலக்கை எடுத்து வந்து குந்தாணியில் குத்தும்படி சொன்னாள். நான் இதுதான் சமயமென்று  என் பலமெல்லாம் சேர்த்து அவள் கைவிரல் நசுங்கும்படி ஒரு போடு போட்டேன். அம்மாடி, அப்பாடி, நான் சாகலாச்சு, போகாச்சு என்று அவள் தாய் தந்தை பாட்டன் பூட்டன் இறந்த துக்கத்தையெல்லாம் எண்ணி ஒப்பாரி வைத்தாள். பின்னர் வாத்தியார் வந்து சமாதானம் பண்ணப்பட்ட பாடு ‘மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது’ போலாயிற்று.

 

வேறொரு நாள் குரு என்னைப் பார்த்து, வெந்நீர் போடும்படி சொன்னார். ஆகட்டும் குருபராக்கென்று வெகு வணக்கத்துடனும், விரைவுடனும், வாத்தியார் பாட்டன் பூட்டென்களெல்லாம் அருமையாய்க் கைபாடுபட்ட மூளை பிறள, எழுத்தாணி முனைதேய வறட்டு வறட்டென்று எழுதிய  ஏட்டுச் சுவடிகளாகிய பாகவத, பாரத இதிஹாச புராணங்களையெல்லாம் தூக்கிவந்து அடுப்பில் உருவியும், உருவாமலும் போட்டு வெந்நீர் காய வைத்துக் குருவை வணக்கத்துடன் ஸ்நானம் செய்ய அழைத்தேன்.

 

குருவும் முப்பத்திரண்டு பற்கள் தெரியும்படி தன் மனைவியைக் கூப்பிட்டு, பார்த்தாயடி! சீஷப் பிள்ளை விரைவில் வெந்நீர் போட்டுவிட்டான். நீ வெந்நீர் போட ஊரடங்கிவிடும் என்று சொல்லி வெந்நீர் ஸ்நானஞ் செய்து, மடி வஸ்திரம் தரித்துப் பலகைமீதமர்ந்து பாராயணஞ் செய்ய ராமாயணம் கொண்டுவா” என்று தன் மனைவியையேவ அவள் பரணெல்லாம் தேடியும் ஒரு ஏட்டுத் துணுக்குங்கூட கிடைக்கவில்லை. அப்போது பரண்மீது அந்த அம்மாள் கையில் ஒரு கொள்ளித்தேளிருந்து கொட்டிவிடவே அலறியடித்துக்கொண்டு, “ஏட்டுக் கட்டையும் காணோம், சுடுகாட்டையும் காணோம். உமது ராமாயணம் பாழாய்ப்ப் போக, நீர் அடிமாண்டு போக” என்று வைய ஆரம்பித்தாள். உடனே வாத்தியார் எழுந்து, துஷ்டை, பிரிஷ்டை என்று வைதுகொண்டு தேடிப் பார்த்தார். அது அங்கே ஏனிருக்கும்?

 

பின்பு என்னைப் பார்த்து, சிஷ்யா! ஏடுகளெல்லாமெங்கே? என்றார். உடனே பரமானந்த சீஷனான நான், “ஒரு அண்டா வெந்நீர்  ஐந்து நிமிஷத்திலெப்படிக் காய்ந்ததென்றெண்ணுகிறீர் என்றேன். அதற்கவர், சபாஷ்! பிள்ளையாண்டான், கெட்டிக்கரனென்று மெச்சி என்னை ஊருக்கனுப்பிவிட்டார். பின்பு சிறிது நாளைக்கெல்லாம் எனக்கு விவாகம் நடந்தேறி, துபாஷ் வேலியிலிருந்தேன். அப்போது மனைவியால் பட்ட பாட்டைக் கேளும்.

 

சூத்ரதாரர்:- நண்பா! உன் அன்பார்ந்த கதைகளைக் கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது. விளம்புவாய்

–சுபம்—

நகைச் சுவைக் கதைகள் தொடரும்………………………………………….

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை (Post No. 2440)

KRISHNA MUSLIM

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 30  December 2015

 

Post No. 2440

 

Time uploaded in London :– 6-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகப்போக்கு

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் முஸ்லீம் தீவிரவாதிகள்!

 

ச.நாகராஜன்

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் முஸ்லீம் தீவிரவாதிகள் இப்போது அகலக்கால் வைத்துள்ளனர். கிறிஸ்தவ மதம் சார்ந்த மேலை நாடுகளையும் தீவிரவாதத்தால் நடுநடுங்கச் செய்ய வேண்டும் என்ற ‘பரந்த நோக்கத்தை’ இப்போது அவர்கள் கொண்டுள்ளதால் அவர்கள் அடையப் போவது என்ன?

 

இஸ்லாமே அழிந்து போக அல்லது செல்வாக்கு இழந்து போக வழிவகை செய்தவர்கள் ஆகப்போகின்றனர்.

இந்தியாவின் சகிப்புத்தன்மை எல்லையற்றது. உலக சரித்திரத்தில் இதற்கு உவமையாக இன்னொரு நாட்டைக் காண்பிக்க முடியாது.

 

ஹிந்து மதத்தின் பரந்த நோக்கம் ஒப்பற்ற தனி இலக்கணம் கொண்ட ஒன்று. இதற்கு ஒப்பான சர்வமத சமரஸம் என்னும் பரந்த நோக்கத்தைக் கொண்ட இன்னொரு மதம் இல்லை என்பதே உண்மை.

 

இதை ஆர்னால்ட் டாய்ன்பி போன்ற உலக சர்த்திர வல்லுநர்கள் முத்தாய்ப்பாக தங்கள் நூலின் இறுதி உரையில் எழுதி வைத்துள்ளனர்.

 

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி, தாங்கள் நாட்டை விட்டு வெளியேறப் போகிறோம் என்று தெரிந்தவுடன் முழு முனைப்பு கொண்ட ஒன்றாக் ஆனது. இதன் விளைவே பாகிஸ்தான்.

அந்த பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்களும் கூட   இஸ்லாம் கூறும் சுவர்க்கத்தைக் காணவில்லை. மாறாக தீராத வறுமையையும் ஓயாத சண்டையையும் எப்போதும் திகில கலந்த வாழ்க்கையையுமே கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் ஹிந்துக்களுடன் வாழ்ந்த முஸ்லீம்களின் நல்ல போக்கிற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அந்த நல்லை போக்கை பிரிட்டிஷார் கெடுத்தது உண்மை. அதைத் தீவிரப்படுத்தியது முஸ்லீம் தீவிரவாதிகள்.

 

diparadana muslims

சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

 

 

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் (TRUTH) அதன் பத்தாம் தொகுதியில் 11-12-1942 தேதியிட்ட இதழில் தரும் செய்தி இது:

 

 

ஒரு முஸ்லீம் டெபுடி மாஜிஸ்ட்ரேட் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றும் நல்லவர். மாமிசத்தை அவர் தொட்டதே இல்லை. கல்கத்தாவில் நடந்த துர்கா பூஜைக்கு அவரும் மற்றவர்க்ளுடன் அழைக்கப்பட்டார்.

 

“நீங்கள் அனைவரும் துர்க்கையின் அருளை வேண்டுகிறீர்கள். அதற்காக இந்த பூஜையை நடத்தி அதற்குத் தங்களால் இயன்ற அளவு உதவி செய்கிறீர்கள். என்னையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் துர்க்காதேவியின் அருளைப் பெறுகிறேன்” என்று கூறிய அவர் பத்து ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

(1942இல் பத்து ரூபாய் என்பது பெரிய தொகை!)

 

கிருஷ்ணர் பிறந்த ஜன்மாஷ்டமி அன்று அழைப்பு ஏதுமின்றி விழாவிற்குச் சென்ற அவர் கீர்த்தனையில் கலந்து கொண்டார். கடைசியில் கரமயோகம் பற்றி கீதை உபநிடதங்களை மேற்கோள் காட்டி அரிய சொற்பொழிவு ஒன்றையும் நிகழ்த்தினார்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் தனித்த ஒன்றாக அந்தக் காலத்தில் அமையவில்லை.ஊருக்கு ஒன்றிரண்டு இது போன்ற எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

 

பிரிட்டிஷாரின் திட்டமிட்ட சதி வேலையே தீவிரவாதத்தை விதைத்தது. அது இப்போது வளர்ந்து அவர்களையே தாக்குகிறது.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக!

 

ஹிந்துக்களும் முஸ்லீம்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்ததை ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ என்ற பிரபல ஆங்கில வாரப் பத்திரிகை ஒரு கட்டுரையாக வெளியிட்டது. இதை  மேலே கூறிய கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் (TRUTH) அதன் ஆறாம் தொகுதியில் 16-12-1938 தேதியிட்ட இதழில் வெளியிட்டது

 

அந்தக் கட்டுரை தரும் செய்தி இது:-

 

மைசூர் மாநிலத்தில் சித்ரதுர்க் மாவட்டத்தில் தவளப்பன குட்டா மலை என்ற செங்குத்தான மலை ஒன்று உள்ளது. இது ஹிந்துக்களாலும் முஸ்லீம்களாலும் போற்றி வணங்கப்படும் ஒரு இடம். தவளப்பா என்ற சிவ பக்தர் கடைசியில் இங்கு வாழ்ந்த இடம் என்பதாலும் அவர் தவளப்ப லிங்கத்தை வழி பட்டு வந்ததாலும் இந்த இடம் ஹிந்துக்களுக்குப் புனித இடமானது. முஸ்லீம்களுக்கோ சியாதுல்லா என்ற முஸ்லீம் சாதுவின் இடமாக அமைந்ததால் வழிபடும் இடமானது.

அடுத்து அனந்தப்பூர் மாவட்டத்தில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாக உள்ள ஒரு ஹிந்துக் கோவிலும் மசூதியும் உள்ளது. மொஹரம் மாதத்தில் ஹிந்துக் கோவிலிலிருந்து அதிகாரிகள் சுண்ணாமபுடன் பிரஷ்களை எடுத்துக் கொண்டு கொஞ்சம் பணத்துடன் மசூதிக்குச் சென்று அதை வெள்ளை அடித்துக் கொடுப்பது வழக்கம். மசூதியில் உள்ளோர் அனைவரும் அன்புடன் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் வழக்கமானது.

 

 

அதே அனந்தப்பூர் மாவட்டத்தில் சந்த்ரவதன மொஹியார் என்பவரது சமாதி உள்ளது. அதை ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வழிபடுகின்றனர்.

 

மதுரையின் அருகில் உள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில்    ஒன்றான திருப்பரங்குன்றத்தில் மலை மீது காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. அதன் அருகிலேயே சிக்கந்தர் என்ற முஸ்லீம் பெரியாரின் சமாதியும் உள்ளது. இங்கும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வழிபடுகின்றனர்.

 

பெனுகொண்டா மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு இரு குருமார்கள் உள்ளனர்., ஒரு குரு ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இந்த வகுப்பினர் “ஹொன்னூர் ஃபகீர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இப்படி ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இந்த இணக்கத்தை மாற்றியது பிரிட்டிஷாரின் சூழ்ச்சி. அதனால் ஏற்பட்டது பாகிஸ்தான்!

 

தவறான வழிகாட்டுதலால் முஸ்லீம் இளைஞர்கள் தங்களின் ஒற்றுமை வழியை மறந்தனர். தீவிரவாதிகளோ அவர்களை மூளைச் சலவை செய்து தங்க்ள் வலையில் “அகப்பட்டவர்களை” இழுத்து நாசகார வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர்.

அனைத்து ஹிந்துக்களும் எளிய முஸ்லீம்களும் பெரும்பாலும் ஒற்றுமையுடனேயே இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இதை எந்த கிராமத்திலும் நகரத்திலும் நேரடியாகச் சென்று எவரும் காணலாம்.

 

இவர்களைப் பிளவுபடுத்துவது இஸ்லாம் கொள்கைகளைத் தவறாகச் சித்தரிக்கும் கெடுமதியாளர்களே!

 

இவர்களால் இஸ்லாம் தன் பெருமையை இழப்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

 

இழந்து வரும் இந்தப் பெருமையை மீட்பது யார் கையில் உள்ளது?

 

நல்ல இஸ்லாமியர்களின் கையிலேயே உள்ளது.

இழந்த பெருமையை மீட்பார்களா? அல்லது இருப்பதையும்  இழப்பார்களா?

 

காலம் பதில் சொல்லும்!

*****

 

 

 

ஆத்திச்சூடி படித்த அதிகப் பிரசங்கி! (Post No. 2439)

IMG_9826

Compiled  by London swaminathan

Date: 29 December 2015

 

Post No. 2439

 

Time uploaded in London :– 13-39

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன்,சென்னை).

 

ஒரு வைத்தியர் மருந்து கொடுக்க ஒரு வீட்டுக்குச் சென்றார். அதுசமயம் நோயாளி வாசல் நிலை (படி)யில் உட்கார்ந்தான். அப்போது…………………….

வைத்தியர்:– அப்பா! படியிலுட்காராதே; தோஷம்.

பையன்:என்னங்காணும்! “நிலையிற் பிரியேல்” என்று அவ்வை கூறியிருக்க நீர் அதிலிருக்கபடாதென்கிறீர்?

வைத்தியர்: சரி, எதற்காக உன் அம்மா கூப்பிட்டார். உடம்பின் நிலை என்ன? உள்ளதைச் சொல்.

பையன்: என்னய்யா? “உடையது விளம்பேல்” என்று அவ்வை கூறியிருப்பதை உணராமல் உள்ளது கூறென்கிறீர்?

வைத்தியர்: சரி, கையையாவது நீட்டு பார்ப்போம்.

பையன்: அட போமையா! நீர் ஆத்திச்சூடி படியாமல் என்ன வைத்தியர்காணும்? “ஏற்பது இகழ்ச்சி: என்று அவ்வை கூறியிருப்பதையறிந்தும் யாசகன் போல கையை நீட்டச் சொல்கிறீர். நான் என்ன பைத்தியமா?

வைத்தியர்: சரி, அது போகட்டும்;இந்த மருந்தையாவது சாப்பிடு

 

பையன்: ஐயா, இதில் பாதி நீர் சாப்பிடும்

வைத்தியர்: பையா, நான் எதற்காக………………….?

பையன்:ஐயமிட்டுண் – என்று அவ்வைப்பாட்டி கூறியிருப்பதால் உமக்குப் பாதி கொடுத்துவிட்டு, மீதியை நான் உண்ணுவேன்.

வைத்தியர்: பையா, இன்று மருந்து சாப்பிடாவிடினும், ராத்திரி கொள்ளைக் கஷாயம் போட்டு அதிலிந்த பஸ்பத்தைக் கலந்து சாப்பிடு.

பையன்: ஐயா, கொள்ளை விரும்பேல் –என்று ஆத்திச் சூடி சொல்கிறது. நீர் கொள்ளைக் கஷாயம் போடச் சொல்கிறீர். ஆத்திச் சூடியை அடியோடு மறந்துவிட்டீர் போலும்?

 

வைத்தியர்: சரி, சரி, நாளைக்கு நோன்பு என்பதால், கண்டதைக் கடியதைத் தின்னாமலாவது இரு; எல்லாம் சரியாகப் போகும்

பையன்: சீ, சீ, நீர் போங்காணும்; ஆத்திச் சூடி சுத்தமாகத் தெரியவில்லையே. “நோன்பென்பது கொன்று தின்னாமை”  (கொன்று+ தின்னு+ ஆமை) என்பதை அறியீரோ?

நோன்பென்பது- விரதமாவது

ஆ- பசுவையும்

மை-ஆட்டுக் கடாவையும்

கொன்று- வதைத்து

தின்னு- சாப்பிடு

என்று அர்த்தமாகிறது. இன்னொரு அர்த்தம் ஆமையைக் கொன்று தின்னு (கொன்று+தின்னு+ ஆமை)! உமது வைத்தியமும் பைத்தியமும் எனக்கு வேண்டாங்காணும்.

வைத்தியர்: தம்பி, உனக்கு ஆத்திச்சூடி நல்ல பாடமென்று தெரிகிறது. இனி இந்த நோய் அதிகப்படும் முன்னால், தயவு செய்து கொன்றை வேந்தனையும் பாடம் பண்ணிவிடு!!நான் வருகிறேன்!!

–சுபம்–

 

 

 

 

 

தஞ்சாவூர் தமாஷ்! சுங்கிடிசேலை வெங்கடசுப்பி கதை!

kali

Compiled  by London swaminathan

Date: 28 December 2015

 

Post No. 2434

 

Time uploaded in London :– 5–34 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நகைச்சுவை புத்தகத்திலிருந்து; கொடுத்துதவியவர்: சென்னை எஸ். சீனிவாசன்

 

எங்கள் பக்கத்து வீட்டில் வெங்கடசுப்பி என்றொரு பெண் புருடன்கூடி இல்லறம் நடத்தி வந்தாள். புருடன் மண்டூதரன். மனைவிக்குப் பயந்த மரியாதை ராமன். பெண்சாதியோ “மூக்குப் பிடிக்க யாரடா சோற்றின் மறைவிலே! என்றால் நான் தான் நோயாளி பத்தியம் பண்ணுகிறேன்” என்றவனையும் ஜெயிக்கப்பட்ட பேர்வழி. பண்டுபலாதிகளை வேண்டியமட்டும் தண்டிக்கொள்பவளும் “உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு” என்ற வாக்கியத்தை அபத்தம் செய்யக்கூடியவளுமாகையால் சதாகாலமும் மொக்குவதிலேயே முழுப் ப்ரீதி

 

ஒருநாள் சுங்கிடிசேலையுடுத்தும் வெங்கடசுப்பம்மாளுக்கு வயிர்வீங்கத் தின்று தெறிக்க எண்ணமுண்டாச்சுது. ஆகையால் ஏழையாகிய தன் கணவனை நோக்கி, “நாளைய தினம் புரட்டாசி சனிக்கிழமை, மலையப்பனுக்கு, அதாவது வெங்கடாசலபதிக்கு சமாராதனை செய்ய வேண்டும். சென்ற வருஷத்தைக்காட்டிலும் இவ்வருஷம் திறமாயிருக்கவேண்டும்” என்றாள். அதற்குக் கணவன், “அடியே! கையிலொரு காசுமில்லை; கடன் கொடுப்பாருமிலை. ஆகையாலினி வருஷத்துக்கு நான்கு புரட்டாசி சனிக்கிழமைகளையும் விட்டுவிட எண்ணியிருக்கிறேன்” என்றான்.

 

மனைவியோ எப்போதும் திண்டிப்போத்தாதலால் ஆவேசம் வந்தவள் போல் நடித்து உதட்டை மடித்துக் கண்விழி பிதுங்குமாறு உற்றுநோக்கி, “ அட பயலே! என்னை யாரென்று நினைத்தாய்? நான் தான் மலையப்பன். வருடா வருடம் செய்துவந்ததை மறந்து இவ்வருடம் அபராதம் செய்யாதே”- என்றாள். கண்வன் மனைவியின் சூழ்ச்சியை நிஜமென நம்பி, “அம்மா, தாயே! அடியேனைக் காவாய்” என்று பயந்து வேண்டிக்கொண்டு வீட்டிலுள்ள தட்டுமுட்டு சாமான்களை அடகுவைத்துச் சம்பிரமமாய் மலையப்பனுக்கு பூஜை நடந்தேறியது. அங்கு வந்திருந்த பேர்க்குக் கொஞ்சம் போட்டுவிட்டு மனைவியாள் தன் குக்ஷி நிறைய பக்ஷித்துவிட்டு மீதியை அடுக்குப் பானையிலிட்டாள். அடுத்த சனிக்கிழமையன்று கணவன் கையில் பணமில்லாததால், இந்தச் சனிக்கிழமை பூஜையை கணவன் விட்டுவிடுவானோ என்று எண்ணி, ஆ, ஊ, என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள்.

 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அடுத்தவீட்டு ஆம்பிளை, இவள் கொட்டத்தை அடக்க வேண்டுமென்று எண்ணி, அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது கணவன், மனைவியின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு, “ஸ்வாமி! நான் அபராதம் செய்யவில்லை. மலையேற வேண்டும்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். அடுத்தவீட்டுக்காரர் ஆவேசம் வந்தாற்போல தலையை விரித்துக்கொண்டு, “தாட் பூட், தெற்காலே வடக்காலே என்று ஆர்ப்பரித்து நின்றான். புருடன் பயந்துபோய் “நீங்கள் யார்?” என்றான்.

 

“என் பேர் அலர்மேல் மங்கை. பொழுதுவிடிந்தால் என் புருஷன் மலையப்பன் உன் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அழைத்துப்போக வந்தேன்”என்று அடுத்த வீட்டுக்காரர் சொன்னார். அத்தோடு மனைவியைப் பரபரவென அடுத்தவீட்டுக்கு இழுத்துப் போய் அவள் கொட்டமடங்குமட்டும் நையப் புடைத்தனுப்பினான். அந்த அம்மாளுக்கு நாக்கு நீளமென ஏற்கனவே சொல்லியிருப்பதால் மற்றொரு சனிக்கிழமையும் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள். புருஷனுக்குக் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது.

 

“சுவாமீ! மரியாதையாய் மலையேறுகிறீரா? இல்லாவிட்டால் அடுத்தவீட்டு அலர்மேல் மங்கையைக் கூப்பிடட்டுமா?” என்றான். உடனே அவள், “வேண்டாம், வேண்டாம். நானே போய் விடுகிறேன்” என்று அன்றுமுதல் தன் கொட்டத்தை அடக்கிக்கொண்டாள்.

–சுபம்–