Caste Divisions in Ancient Tamil Nadu

Pyramid_of_Caste_system_in_India

Research article written by London Swaminathan
Post No. 1148; 4th July 2014.

Caste divisions existed in ancient Tamil Nadu like other parts of India. Tamils were divided on the basis of four castes and on the basis of work they did. There were references about ‘high born’ and ‘low born’ in the Sangam Tamil Literature.

There were mentions about four types of soldiers: Chariot, Elephant Brigade, Cavalry and Foot soldiers (Ratha,Gaja,Thuraga,Pathathi) as well. When we look at the whole picture with such divisions of castes, soldiers, Eight Types of Marriages, Nava Rasa, Six Seasons and so on in the Sangam literature, we have to accept that there was no difference between Tamils and other communities 2000 years ago.

There was a mischievous propaganda by people with vested interests that all these divisions were “imported” from the “Aryan North” into Tamil Nadu. But great saints like Kanchi Paramacharya, Aurobindo and great Tamil scholars like U V Saminathaiyer have pointed out that pure Tamil words coined from Tamil roots were used for Yaga, Veda and Castes from the days of the oldest Tamil book Tolkappaiam. It shows that they were part and parcel of Tamil society and nothing was brought into Tamil Nadu from outside.

The surprising thing about the ancient Tamil community of Sangam period is each of the five landscape divisions had Upper Castes and Lower castes. Even the poets of Sangam and Post Sangam period did not hesitate to call them “Hey, Ye Low Born!”

Following are the five landscape divisions according to ancient commentators:

1.Kurinchi (Mountainous Areas)
Higher castes: Poruppan, Verpan, Silamban, Kodichy
Lower castes: Kuravar, Kurathiyar, Kanavar

2.Mullai (Forest regions)
Higher castes: Nadan, Thonral, Manaivi, Kizathi
Lower castes: Idaiyar, Idaichiyar, Ayar, Aychiyar

3.Marutam (Countryside
Higher castes:Uran, Makiznan, Manaivi, Kizathi
Lower castes: uzavar, Uzaththiyar, Kadaiyar, Kadaichiyar
4.Neytal (Seashore)
Higher castes:Serppan, Thuraivan, Pulamban, Parathi, Nulaichi
Lower castes: Nulaiyar, Nulaichiyar, Parathar, Parathiar, Alavar, Alathiyar

5.Palai (Wasteland/arid lands)
Higher castes:Vidalai, Igulai, Meeli, Eyitri
Lower castes:Maravar, Eyinar, Eyitriar, Marathiyar

Nobody now knows what these caste names meant. We have explanations for some words.

The Caste System During Vedic Civilisation

Foreign “scholars” have mischievously deleted them from the table of Five Landscapes in English books. They have mentioned only such things that suited their wishful thinking. But the ancient list is still available in all the old Tamil commentaries. Old Tamil commentators have clearly mentioned them as “low and high” castes and explained them in their commentaries.

There are many more names like Kuyavar,Kollan, Thachan, Kuthan,Vanikan which are based on the work they did. But Tamils did not hesitate to use Sanskrit words such as Thachan, Vanikan etc.

The word for Brahmin occurs in hundreds of places with different epithets. Brahmins had the highest number of references. Too many to list here! (I have given in my post “No Brahmin! No Tamil!!” all the contributions made by great Brahmin poets like Kabilar, Paranar, Nakkirar and Mamulanar.

Maya-society-Castes-as-in India
Caste System in the Mayan Civilization of South America.

Manu Sloka in Purananauru!!

Pandya King Nedunchezian has composed a beautiful (Purananuru 183) verse about the value of education 2000 years ago. He says even if a person of the lowest caste among the four castes is educated, the high caste person would salute (pay respects to) him. Even a mother would show more affection towards the educated son than the illiterate one.

Manu said the same in the Manu Smriti:–

“A man who has faith may receive good learning even from a man who is lower, the ultimate law even from a man of the lowest castes, and a jewel of a woman even from a bad family”–2-239

“Ambrosia may be extracted even from poison,
And good advice even from a child,
Good behaviour even from enemy
And gold even from something impure “– 2-240

“Women, jewels, learning, law, purification, good advice and various crafts may be acquired from anybody” – 2-241

“In extremity, it is permissible to learn Veda from someone who is not a priest and to walk behind him and obey him like a Guru as long as the instruction lasts”- 2-242

Tiruvalluvar also said the same in Tamil Veda Tirukkural (409)
“Though high born, an unlettered man is deemed lower than a learned man of lower birth. “—Kural 409.
During Krita Yuga (Golden Age), there was only one caste i.e. Brahmins, according to Santi Parva chapter 186 of Mahabharata.

Non Hindu foreign “scholars” deliberately spread a lie that Shudras are non-Aryans. But Vedas clearly say that they are part of the same Mahapurusha in the Purushasuktam of Rig Veda.

Chanakya of Arthashastra (3rd century BCE) treats all the four Varna as Aryans (not a word with racial meaning as foreigners used, but meaning ‘cultured’).

Those who read Rig Veda, Manu and Arthashastra would know that all the four castes were part of one community. Untouchability and modern caste differences were unknown in the Vedic period.

egyptian-social-structure

Caste System in Egyptian Civilization.

Hey! Ye Low Born! In Purananuru

Tudiyan caste is addressed as low born (Izisina in Tamil) in the verses 82 and 287 of Purananuru by poet Sathanthaiyar.

Poet Damodaran of verse 170 and Kazathalaiyar of verse 289 also used this word “low born” (Izisina).
Mangudi Kizar of verse 335 mentioned all the four lower castes :Tudiyam Panan, Paraiyan and Kadampan.
Lowest caste Pulaiyas did all the works at crematorium, according to verse 360.
Since Purananuru is considered the oldest section in the Sangam literature, I have quoted above verses from the same. Other sections of Sangam literature have a lot of references. Silappadikarm, Tamil epic of fifth century CE, mentioned the caste system and in which part of the city each and every caste lived etc.
In short it was the same caste system throughout India. But no one was discriminated against on the basis of caste in Tamil Nadu. In a vast geographical region each and every community lived in their own sphere happily with all the basic needs like food, shelter and clothing. If at all there was poverty, it had nothing to do with the caste system.

Oldest Tamil book Tolkappaiam also refer to the caste system in several places.
The word “Four Varna” is used in Tamil epic Silappadikaram: 6-164, 14-183, 14-212, 22-10; Manimekalai 6-56.

caste-system-in-hinduism

Silappadikaram 8-41 used the word “Jathi” (Saathi).
Words Varna and Jathi are used in Silappadikaram for the first time.

Maduraikanchi of Sangam Literature mentioned the “four different streets” for four different castes.
Brahmin streets known as Agraharam existed till 75 years ago in Tamil Nadu. Brahmins only lived in that area. Whole villages given to Brahmins by the kings were mentioned in thousands of Tamil inscriptions.
Some people who study the constructions and structures in the Indus Valley Cities believe that the caste system originated there. It is debatable.

Contact swami_48@yahoo.com

Interesting Brahmin Story in Tamil Epic

kannaki-cooking
Kannaki cooking for Kovalan

Written by London Swaminathan
Post No.1140; Dated 30th June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

Silappadikaram (also written as Cilappadikaram) is one of the five Tamil epics. Silappadikaram and Manimekalai are called Twin Epics. These two epucs are based on purely Tamil stories. But those who read them in full will find out the culture is same as in the Northern parts of India. Silappadikaram is a Tamil encyclopaedia covering all subjects including music, dance, history, art, architecture and culture. This is the most popular epic. There are several stories concerning Brahmins including a Panchatantra story:The Brahmin and the Mongoose’ and the Golden Hand Pandya and Keeranthai.

tamil-penkal
Tamil women in ancient Tamil Nadu

Here is one of the Brahmin stories from the most famous Tamil epic:–
Source: Katturai Katai, Silappadikaram

Parasara was a Brahmin who lived in Pumpukar of Choza territory. He heard about the valour and philanthropy of the Cera King and decided to see him. He passed through jungles and several cities and reached Malaya hills. He was a great scholar well versed in Vedas and defeated scholars of different sects on his way. He got lot of gifts and returning home with the gifts. He reached a place called Tankal (identified with Tirutankal near Sivakasi). He took rest under a Bodhi tree with his water bowl, staff and white umbrella (only Brahmins who did great Yagas and kings are allowed to take white umbrellas in ancient India).

tamil culture

Some Brahmin children with coral lips, black tufts, curly hair and some with lisping mouths were playing there. Parasara called them and challenged them to recite Vedas after him. He promised them to give some valuable jewels. At once a boy called Alamarselvan (One who is under the banyan tree =
Dakshinamurthy), son of famous Brahmin Vartika of the town, recited the Vedas with perfect pronunciation and intonation. He was a little boy still retaining the fragrance of his mother’s milk. Parasara was wonderstruck with his knowledge and gave him a big present.

Some jealous people told the royal servants that the Brahmin got a treasure trove which naturally should go to the king. The royal servants threw him into prison without any proper enquiry. His wife Kartika became furious at the injustice. She wept and threw herself to the ground rolling and fulminating. Seeing this goddess Durga refused to open her door for the regular Pujas (daily offerings). The Pandya King was wondering whether there was any injustice done to anyone in his territory. Then the king was informed by some messengers of the injustice done to Vartikan.

The king then begged to the Brahmin to forgive him. As a compensation for the false imprisonment, the king gave him the Tankal and Vayalur villages with all the paddy fields as a gift. Then the goddess who rode the stag (Durga’s Vahana is Stag) opened her temple doors. The big noise that was produced when the goddess opened the doors, was heard throughout the broad streets of mountain like mansions of that ancient city, says the author of the epic Ilango Adikal.

silambu book

At that time, the triumphant king issued the following proclamation by beating a drum placed upon the back of an elephant which was sent though out the city, “Release all prisoners from the prison. Remit all those taxes from those who owe them. Let all who find unclaimed things and discover treasure trove enjoy them.”

“Listen how even such a king committed this act of injustice. There was a prediction that, in the month of Adi, on the Tithi of Ashtami, in the dark fortnight (Krishna Paksha), on a Friday, with Kartikai and Barani in the ascendant, a great fire would envelop renowned Madurai to the ruin of its king”, says Ilango Adikal.
(Part of Madurai was burnt down by the heroine Kannaki. Goddess of the city Madurapati narrated the above story, according to Ilango Adikal.)

20120502-Student_learning_Veda_132
Brahmin child learning Veda.

தமிழ் இலக்கியத்தில் அதிசய உத்தர குரு!!

map_mountains_central_asia_small

One of the probable location for Uttarakuru

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

ஆய்வுக் கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:– 1137; தேதி 29 ஜூன் 2014

(இக்கட்டுரை என்னால் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டது)

உத்தரகுரு பற்றி வேதகாலம் முதல் சங்க காலம் வரை உள்ள கருத்துக்கள் மிகவும் சுவையானவை. சர் தாமஸ் மூர் (1516) என்பவர் எழுதிய ‘உடோபியா’ என்ற கற்பனை உலகம் போன்றது இதுவா? அல்லது உண்மையிலேயே ஒருகாலத்தில் இப்படி இருந்ததா என்பது பலருடைய கேள்வி. வேதகாலத்தில் இப்படி உண்மையில் ஒரு இடம் இருந்தது உண்மையே.

வேதத்தில் காணப்படும் எல்லா விஷயங்களையும் வெளிநாட்டினர் கூட உண்மை என்றே நம்பி அதன் அடிப்படையிலேயே பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வருவதே இதற்குச் சான்று பகரும்.

சிலப்பதிகாரம் (2-10)
முதலில் தமிழில் உள்ள சில குறிப்புகளைக் காண்போம்:-
தமிழர்களின் கலைக்களஞ்சியமான “நெஞ்சை அள்ளும்” சிலப்பதிகரத்தில் மனையறம்படுத்த காதையில் பூம்புகார் நகரத்தின் செல்வ வளத்தினை உத்தரகுருவுக்கு ஒப்பிடுகிறார் இளங்கோ அடிகள்.

“அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தரகுருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற்கொழுநனும்
மயன் வித்தித்தன்ன மணிக்கால் அமளிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி”—

வாழ்க்கையில் பெரும் தவம் செய்தவர்கள் அவர்களின் தவ வலிமையால் உத்தரகுரு என்னும் இடத்தில் வசிப்பர் (பிறப்பர்). அந்த உத்தரகுரு போலத் தோன்றிய பூம்புகாரில் கண்ணகியும் கோவலனும் வாழ்ந்தனர் என்கிறார் இளங்கோ. இதற்கு முந்திய வரிகளில் பூம்புகாரின் செல்வ வளம் வருணி க்கப்படுகிறது. அரசர்களும் விரும்பும் செல்வ வளம்— கடல் வழியாகவும் தரை வழியாகவும் குவிந்த புதிய பொருள்கள்— பண்பு குறையாத உயர்குல மக்கள்— ஏழடுக்கு உடைய மாடிக்கட்டிடம் என்று வருணிக்கிறார் அடிகள்.

பதிற்றுப்பத்து (9-14)
இந்த வருணனை உத்தரகுரு பற்றி நமக்கு ஓரளவுக்கு சித்திரம் கொடுக்கிறது. இதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த பதிற்றுப்பத்தில்

நாமம் அறியா ஏம வாழ்க்கை
வடபுல வாழ்நரின் பெரிதமர்ந்து அல்கலும்
இன்னனகை மேய பல்லுறை பெறுபகொல் — (ஏழாம் பத்து, கபிலர்)

பொருள்:– கள்ளுக்கடைகளில் கொடிகள் பறந்தன. பகை மன்னர்களின் யானைகளின் தந்தங்களை ஒடித்து கள்ளுக் கடைகளில் கொடுத்து மக்கள், ‘’கள்’’ வாங்கிச் சாப்பிட்டனர். அவர்களுடைய பயமே இல்லாத இன்ப வாழ்வு உத்தரகுரு (வடபுல வாழ்நர்) மக்கள் வாழ்க்கை போல இருந்தது என்று கபிலர் பாடுகிறார். பழைய உரையாசிரியர் இதை போகபூமியாகிய உத்தரகுரு என்பர்.

stairway-to-heaven

வேதத்தில் கூறுவதைச் சுருக்கமாகக் காண்போம்:
ஐதரேய பிராமணத்தில் (8-14), இமயமலைக்கு அப்பால் ஓரிடத்தில் உள்ள இடம் — (பரேன ஹிமவந்தம்) –என்று சொல்லப்பட்டுள்ளது. வாசிஷ்ட சாதஹவ்யா (8-23) என்பவர் இதை கடவுள் நாடு (தேவ க்ஷேத்ர) என்று அழைக்கிறார். ஜானம்தபி அத்யராதி என்பவர் அதை வெல்ல விரும்புவதாகவும் வேத இலக்கியம் கூறுவதால் உண்மையில் இப்படி ஒரு நாடு இருந்தது என்பது உறுதியாகிறது. வடபுல வாழ் ‘குரு’ இன மக்கள் கஷ்மீருக்கு குடியேறி பின்னர் குருக்ஷேத்ர பகுதிக்கு வந்ததாக சிம்மர் என்பவர் கூறுகிறார். இதிலிருந்து தழைத்ததே கௌரவ- பாண்டவ குரு குலம்.

மஹாபாரத சபா பர்வம்
அர்ஜுனனுக்கு உள்ள முக்கியமான பத்து பெயர்களில் ஒன்று தனஞ்செயன். உத்தர குரு வரை சென்று தனத்தை வென்று (ஜயித்து) வந்ததால் அவன் தனஞ்செயன் என்று அழைக்கப்பட்டான். சபாபர்வத்தில் யுதிஷ்டிர (தர்மர்) மஹாராஜாவுக்கு ராஜசூய யாகம் செய்து முடிசூட்டும் வைபவம் வருகிறது. ஒவ்வொரு சஹோதரரும் பூமியின் ஒருபகுதியை வெல்லச் சென்றனர். வட திசை நோக்கிச் சென்ற அர்ஜுனனை உத்தரகுரு வாசலில் நிறுத்தி ‘’இது மனிதர் புகமுடியாத இடம். அப்படியே புகுந்தாலும் அவர்கள் கண்களுக்கு எதுவும் புலப்பாடாது’’ என்கின்றனர். உடனே அர்ஜுனன் தர்மரின் ஆளுமையை ஏற்று அவருக்குக் கப்பம் செலுத்தினால் திரும்பிப் போவதகக் கூறுகிறான். அவர்களும் தெய்வீக அணிகலன்கள், ஆடைகள், தோல் முதலியன தந்து அனுப்புகின்றனர்.

Utopia

இதுதவிர ஆதிபர்வத்திலும் உத்தரகுரு வருகிறது. ராமாயணத்தில் வால்மீகி முனிவரும் இது பற்றிப் பேசுகிறார். ஆக இது ஒரு இன்ப பூமி, போக பூமி,, செல்வ வளம் கொழிக்கும் பூமி, ஆண்களும் பெண்களும் சுதந்திரமாக பாலியல் உறவு கொள்ளும் சுகபோக பூமி, தவ சீலர்கள் வசிக்கும் பூமி, சாதாரண மக்கள் புக முடியாத பூமி என்ற பல அரிய ஆச்சர்யமான தகல்கள் கிடைக்கின்றன. இதைப் பார்த்துதான் பிளாட்டோவின் ‘ரிபப்ளிக்’, தாம்ஸ்மூரின் ‘உடோபியா’ ஆகிய நூல்கள் எழுந்தனவோ என்று வியப்போரும் உண்டு!!

உத்தரகுரு பற்றி கிரேக்க ஆசிரியர் அமோதேயஸ் ஒரு புத்தகமே எழுதியதாக ப்ளினி சொல்கிறார். அது கிடைக்கவில்லை. டாலமியும் இந்த தேசத்தைக் குறித்துள்ளார்.

புத்த, ஜைன மத நூல்களில் பூகோள வர்ணனைப் பகுதிகளில் உத்தர குரு வடக்கில் உள்ளதேசமாகக் குறிப்பிடப்படுகிறது. பலரும் இதை இந்துகுஷ், பாமீர் பீடபூமியில் இருந்த இடம் என்றே கருதினர். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருந்தது என்பதில் கருத்தொற்றுமை காணப்படுகிறது.

நாம் புதிய உத்தரகுருவை சமைப்போம் ‘நாமம் அறியா ஏம வாழ்க்கை” – வாழ்வோம்!!
–சுபம்–

பிரம்மசர்யம் பற்றி சங்க இலக்கியத்தில் வியப்பான தகவல் !!

ramana's pose
Sri Ramana Mharishi

ஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:—1135; தேதி:— 28th June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று 18 நூல்கள் உள்ளன. இவைகளை மேல் கணக்கு நூல்கள் என்பர். திருக்குறள், நாலடியார், பழமொழி முதலிய 18 நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். இவை அனைத்தையும் படிப்பவர்களுக்கு பல அதிசயச் செய்திகள் கிடைக்கும். பாரதீய கலாசாரம் ஒன்றே, பல அல்ல என்ற உண்மையும் விளங்கும். பத்துப்பாட்டில் முதலில் வைக்கப்பட்டுள்ள திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் ஒரு அதிசயத் தகவலை அளிக்கிறார்:–

இருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
யறுநான் கிரட்டி யிளமை நல்லியாள்
டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை (முருகு 177-180)

பொருள்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் ஈதல், ஏற்றல் என்னும் (பிராமணர்களின் ஆறு தொழில்கள்) ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல், தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த (இருபிறப்பாளர்) இருபத்துநான்கின் இரட்டியாகிய (6x4x2=48) நாற்பத்தெட்டு ஆண்டு நல்லிளமையை வேதம் போக்கிய நெறியிலே போக்கிய இருபிறப்பாளர் (பிராமணர்) – என்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் வெளியிட்ட உரை கூறும்.

அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் 48 ஆண்டுக்கு சொல், செயல், சிந்தனை ஆகியவற்றில் பெண்கள் பற்றிய பாலியல் உணர்வு இன்றி திரிகரண சுத்தியுடன் — (மனோ, வாக், காயம்= சிந்தனை, சொல், செயல்) —- பலர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தது தெரிகிறது.

Sri_Ramakrishna
Sri Ramakrishna Paramahamsar

இதற்கு விளக்கம் நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தில் கிடைக்கிறது:–
பிரம்மசாரிகள் கடவுளின் நண்பர்கள் என்னும் சாமவேதம்
24 ஆண்டு பிரம்மசர்யம் அனுஷ்டிப்போர் ‘வசு’ என்றும்
36 ஆண்டு பிரம்மசர்யம் அனுஷ்டிப்போர் ‘ருத்ரர்’ என்றும்
48 ஆண்டு பிரம்மசர்யம் அனுஷ்டிப்போர் ‘ஆதித்யர்’ என்றும் – கூறும்.

மேலும் பிரம்மசாரிகளை ‘ஊர்த்வரேதஸ்’ ((சக்தியை மேல்நோக்கி செலுத்துவோர்) என்றும் புகழும்.

சுவாமி விவேகாநந்தர்

பிரம்மசாரிகள் அடையும் அபூர்வ சக்திகள் பற்றி சுவாமி விவேகாநந்தர் பல அரிய செய்திகளைக் கூறுகிறார். அபார நினைவாற்றல், பிறர் மனதில் ஓடும் எண்ணங்களைக் கண்டுபிடித்தல் முதலிய சக்திகள் கிடைக்கும். அவரது வாழ்வில் நடந்த சில அற்புதச் செயல்களே இதற்கு ஆதாரம். நூல் நிலயத்துக்குச் சென்று இவர் புத்தகம் புத்தகமாகக் கேட்டுப் பெற்றது நூலகருக்கே எரிச்சல் ஊட்டியது. ‘’ஐயா, நீங்கள் புத்தகத்தைப் பார்க்க வாங்குகிறீர்களா அல்லது படிக்க வாங்குகிறீர்களா என்று கேட்டும் விட்டார். உடனே எந்தப் பக்கத்தில் உள்ள எந்த விஷயத்தையும் கேளுங்கள் என்று சுவாமிஜி சொன்னார். நூலகர் கேட்ட கேள்விகளுக்கு பக்கம் மாறாமல் விடையும் பகன்றார். இதனால்தான் அந்தக் காலத்தில் மாணவர்கள் குருவின் வீட்டிற்குச் சென்று வேறு எதிலும் சிந்தனையைச் செலுத்தாமல் குறைந்தது 12 ஆண்டு பிரம்மச்சர்யம் அனுஷ்டித்து பின்னர் கிருஹஸ்தன் (குடும்ப வாழ்வு) ஆக வேண்டும் என்று விதிக்கப்பட்டது.

பிரம்மசாரி, கிருஹஸ்தன், வானப்ப்ரஸ்தன், சந்யாசி என்ற நால்வகை வாழ்க்கை அமைப்பும் விதிக்கப்பட்டது.

ஒருமுறை வெளிநாட்டுக்காரர் ஒருவர் நீங்கள் என் மனதில் உள்ளவற்றைச் சொல்ல முடியுமா? என்று சுவாமி விவேகாநந்தரைக் கேட்டார். ‘நான் என்ன? இதோ என் சிஷ்யன் கூடச் சொல்லுவான்’– என்று பக்கத்தில் அமர்ந்திருந்த சீடனைக் காட்டினார். அவன் பயந்து நடுநடுங்கிப் போனான். ஏனெனில் அவனுக்கு அந்தச் சக்தி கிடையாது. சீடனை நோக்கி சுவாமி விவேகாநந்தர், ‘எங்கே இவர் மனதில் உள்ளதைச் சொல்’ என்ற வுடன் அவன் கட கட வென்று சொன்னான். இது எல்லாம் பிரம்மசர் யத்தினால் செய்ய முடியும்— மேதா நாடியின் – அபூர்வ சக்தி இது என்றார்.

இளமைக் காலத்தில் ஒருவர் 12 ஆண்டு பிரம்மசர்யம் பின்பற்றினால் அபூர்வசக்திகள் கிடைக்கும்— (பிற தீய பழக்கங்களும் கூடாது என்பது சொல்லாமலே விளங்கும்)— காமினி, காஞ்சனா ( பெண், பொன் ஆசை) பற்றில்லாதோருக்கு ‘மேதா நாடி’ என்று உடம்பில் தோன்றும் என்றும் இது தோன்றினால் கடவுள் பற்றிய பேருண்மைகள் புலப்படும் என்றும் சுவாமிஜியின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூறுகிறார். அவர் மேலும் பல கதைகள் மூலம் பிரம்மசர்யத்தின் பெருமையை விளக்குகிறார். ( காண்க:– ஸ்ரீ ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி, கிடைக்குமிடம், சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்).

kanchi japam
Sri Kanchi Paramacharya Swamikal

பகவத் கீதையில் பிரம்மசர்யம்

கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் (6—14) பிரம்மசர்யமத்தின் பெருமையைப் பேசும் இடத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் –(முன்னாள் ஜனாதிபதி, தத்துவப் பேராசிரியர்) —அழகிய உரை எழுதி இருக்கிறார். பிரஸ்ன உபநிஷதத்தில் பிப்பலாடன் என்பவர், மேலும் ஓராண்டு பிரம்மசர்யம் அனுஷ்டிப்போருக்கு அரிய பெரிய ஞானத்தை அளிப்பதாக உறுதி கூறுகிறார். சாந்தோய உபநிஷதத்தில் 101 ஆண்டுக் காலம் பிரம்மசர்யம் அனுஷ்டித்த இந்திரனுக்கு பிரம்ம தேவன், ஞானத்தை அளித்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதுமட்டுமல்ல தேவர்கள் பிரம்மசர்யம் அனுஷ்டித்து மரணத்தை வென்றனர் என்ற அதர்வ வேத வரிகளையும் எடுத்தாளுகிறார்.

தமிழில் சித்தர் பாடல்கள் திருமூலரரின் திருமந்திரத்திலும் பல விஷயங்கள் உள்ளன. ஆக வேத காலம் முதம் சங்க காலம் வரையும் அதற்குப் பின்னரும் பாரதம் முழுதும் பிரம்மசர்யத்தின் பெருமை கொடிகட்டிப் பறந்தது.

valluvar_big

Sri Tiruvalluvar

இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.

திருவள்ளுவர் யார்? என்ற தலைப்பில் நான் முன்னரே எழுதிய கட்டுரையில் இந்திரனை அதர்வவேதம், புத்தர், வள்ளுவன் ஆகியோர் புகழ்ந்தது ஏன் என்றும் காட்டினேன். இதுவரை படிக்காதோருக்கு இதோ அந்தக் கட்டுரையில் ஒரு பகுதி:_-

தமிழ் வேதமான திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் பரிமேலழகர் எழுதிய உரையே மேலானது என்பது அறிஞர் உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட முடிவு. ஆயினும் ‘’யானைக்கும் கூட அடி சறுக்கும்’’ — என்பது போல அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இன்று ஒரு குறளை மட்டும் காண்போம்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)

‘ஐம்புல ஆசைகளை அறவே ஒழித்த ஒருவனுடைய ஆற்றலுக்கு தேவர் கோமான் இந்திரனே சான்று பகர்வான்’ என்பது இதன் பொருள்.

இந்தப் பொருளை எழுதி அதற்குப் பின் ஒரு ஆச்சர்யக் குறியையோ கேள்விக்குறியையோ போட்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். பரிமேலழகர் இது இந்திரனைக் ‘கிண்டல்’ செய்து எழுதிய இகழ்ச்சிக் குறிப்பு என்று கொண்டுவிட்டார். அவன் அகல்யை இடத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை வைத்துப் பலரும் இந்திரனை தவறாக எடை போட்டுவிட்டனர்.

இந்துமத நூல்களிலும் புத்தமத வேதப் புத்தகமான தம்மபதத்திலும் இந்திரனை உயர்வாகவே கூறியுள்ளனர். பதின்மர் உரையில் மணக்குடவர் எழுதிய உரையில் இதை இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாகவே எழுதியுள்ளார். இதை டாக்டர் எஸ்.எம்.டயஸ் அவர்கள் எழுதியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு மணக்குடவர் உரையே திருவள்ளுவரின் மொத்த அணுகுமுறைக்கு இசைவாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார்.

எனது கருத்து:

“இந்திரன் அவனுடைய பிரம்மசர்யத்தால் தேவர்களுக்கு தேஜஸை (ஒளியை) உண்டாக்கினான்”- என்று அதர்வ வேதம் கூறுகிறது ( அதர்வணம் 11-5-19).

“இந்திரன் மிகவும் கவனமாக/விழிப்பாக இருந்ததால் தேவர்களுக்கு எல்லாம் இறைவன் ஆனான்” – என்று புத்தர் தம்மபதத்தில் (2—10) கூறுகிறார்.

பூமியில் யாராவது தவம் செய்தாலோ, நூறு அஸ்வமேத யாகம் செய்தாலோ, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று இந்திரன் நடுங்கத் துவங்கி மண், பெண், பொன் ஆசைகளால் துறவிகளைக் கவிழ்த்து விடுவான். ஆகையால் மணக்குடவரும் மற்றவர்களின் தவ வலிமை இந்திரனை நடுங்கச் செய்வதே “ இந்திரனே சான்று பகர்வான்” என்பதன் பொருள் என்கிறார். பரிமேலழகர் சொல்லுவது போல இந்திரனை வள்ளுவர் ‘’பகடி’’ செய்யவில்லை.

மணக்குடவர் உரை: ஐந்து= நுகர்ச்சியாகிய ஐந்து. இந்திரன் சான்று என்றது இவ்வுலகின் கண் மிகத் தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு.

பரிமேலழகர் உரை: ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றர்க்கு என்னும் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல் உணர்த்தினானாகலின் ‘இந்திரனே சாலுங் கரி’ என்றார்.

பிரம்மசர்யத்தின் பெருமைதனை மாணவர்ளுக்குச் சொல்லிக் கொடுத்தால் நாடு நலம் பெறும்!

–சுபம் —

சங்கத்தமிழ் முழங்கும் ஜோதிட உண்மைகள்!

chinese zodiac
Picture of Chinese Zodiac Sign

by ச.நாகராஜன்

Post No. 1086 ; Dated 5th June 2014.

((First part of this article is published yesterday. Post No.1084: ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!))

சனி தப்பினாலும் செங்கோல் மழை தரத் தப்பாது!

சங்க இலக்கியக் கடலில் அற்புதமான ஜோதிட முத்துக்கள் ஏராளம் உள்ளன.மாதிரிக்குச் சில உண்மைகளைப் பார்ப்போம்.
சனி கிரகத்தை மைம்மீன் என சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அது புகையின் மழை பெய்யாதாம். ஆனால் அப்படிப்பட்ட மழை பெய்யாச் சூழ்நிலையிலும் கூட மன்னன் தனது செங்கோல் தப்பாது அரசாள்வதால் அவன் செங்கோல் சிறப்பாலேயே மழை பெய்கிறதாம்! இதைப் புறநானூறு (பாடல் 171) கூறுகிறது.பாடல் வரிகள் இதோ:-

மைம்மீன் புகையினும்.. .. பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே!

தூமகேதுவும் மழையும்

தூமகேதுவைப் பற்றித் தொன்று தொட்டு வழி வழியாக ஏராளமான நம்பிக்கைகள் உலகெங்கும் உண்டு. தமிழ் இலக்கியம் தூமகேது தோன்றின் மழை பெய்யாது;ஆனால் மன்னனின் செங்கோல் சிறப்பினால் மழை பெய்யும் என்று ‘செங்கோல் அறத்தின்’ சிறப்பினை எடுத்துக் கூறுகிறது. இந்தச் செய்தியை அதே பாட்டில் காணலாம். “தூமந் தோன்றினும்.. பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே!”

வைகை நதி அஷ்டமி போலச் சுருங்கும் அமாவாசை போல வறளாது!

வைகை நதியைப் பற்றிய சுவையான செய்தியைப் பரிபாடல் (பாடல்11;37-36)கூறுகிறது.

“எண்மதி நிறை யுவா இருண்மதி போல நாள்குறை படுதல் காணுநர் யாரே”

இதன் பொருள்: வைகை நதியின் நீர் அஷ்டமி போலச் சுருங்கும்;ஆனால் அமாவாசை போலச் சுருங்காது!

BurmeseZodiacWheel-Large
Picture of Burmese Zodiac Sign

வாஸ்து ஜோதிடம்

மன்னன் அரண்மனை கட்டக் கால் கோள் நாள் பார்த்தல்
மன்னனின் அரண்மனையைக் கட்ட வாஸ்து பார்த்து ஜோதிடம் மூலம் நாள் பார்த்துக் கட்டக் கால்கோள் நாளைப் பற்றி நெடுநல்வாடை (73-78 வரிகள்) அழகுறச் சொல்லுகிறது.

“விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோள் குறிநிலை வழுக்காது குடக்கோ
பொருதிறஞ் சாரா அரை நாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து”

பெரும்பெயர் அரசனுக்கு நூலறி புலவர் கயிறிட்டு, தெய்வம் நோக்கி அரண்மனை கட்டுவதை எப்படி அழகுறச் சொல்கிறார் புலவர்!

பூரி ஜகந்நாதர் ஆலயமும் கில்லாரி நீலகண்டர் ஆலயமும்
ஜோதிடம் மூலம் நாள் கணித்து வாஸ்து சாஸ்திரப் படி அரண்மனைகளையும் கோவில்களையும் இதர கட்டிடங்களையும் பாரத தேசம் முழுவதும் அனைவரும் கட்டி வந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எப்படி வலிமை வாய்ந்தவையாக இருந்தன என்பதற்கும் சமுதாய மக்களுக்கு எப்படி உதவின என்பதற்கும் உதாரணமாக (இடத்தைக் கருதி) இரு சம்பவங்களை மட்டும் இங்கு எடுத்துக் காட்டலாம்.

பழைய வானியலானது ககோளம் என நமது சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்படுகிறது.இதையும் கருத்தில் கொண்டே கட்டிடங்கள் அமைக்கப்பட்டன!ஜோதிட சாஸ்திரத்தின் படி நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்டிட வேலைகளை தெய்வீகப் பணியாகக் கருதி ஸ்தபதிகளும் பணியாளர்களும் அதில் ஈடுபடுவது வழக்கம். இப்படிக் கட்டப்பட்ட ஒன்று தான் பூரி ஜகன்னாதர் கோவில்.

30-10-99 தேதியிட்ட டெலகிராப் பத்திரிகை தரும் அதிசயச் செய்தி அறிக்கையில்.”மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் புயல் (இந்த வேகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தல் அவசியம்) ஒரிஸாவைச் சேர்ந்த ஜகத்சிங்பூர், பூரி, பலோசோர், பட்ரக், கஞ்சம், குர்தா,, கட்டாக், கேந்த்ரபாரா உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களைத் தாக்கியதாகவும், வேகமான காற்று பூரி ஜகந்நாதர் ஆலயத்தை நோக்கி வீசத் தொடங்கிய போது ஒரு நீல ஒளி ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து கிளம்பி புயல் காற்றை வெட்டித் தடுத்து ஆலயத்தைக் காத்ததாகவும் கூறுகிறது. ஒவ்வொரு புயலின் போதும் ஆலயங்களையே புகலிடமாக மக்கள் சென்று அடையும் ஒரு உண்மையே அந்த ஆலயங்கள் எவ்வளவு வலிமை வாய்ந்தவையாக அமைக்கப்பட்டன என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

star chart

1993ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி லட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்தை பிரிட்டிஷ் நிபுணர்கள் ஒரு ஹைட்ரஜன் குண்டு போடப்பட்டதற்கு சமமாக ஒப்பிடுகின்றனர். இந்த பூகம்பத்தில் பூகம்பம் ஏற்பட்ட மையத்தின் அருகில் இருந்த கில்லாரி என்ற சிற்றூரில் இருந்த நீலகண்டர் ஆலயம் மட்டும் சேதம் அடையாமல் இருந்தது எப்படி என்பதை எண்ணி விஞ்ஞானிகள் மற்றும் பூகம்ப நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் வியக்கின்றனர்.

ஆக சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வாஸ்து பார்த்து கட்டப்பட்ட வலிமை வாய்ந்த அரண்மணைகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள் விரும்பி அமைத்தது சரிதான்! அதையே நெடுநல்வாடை சுட்டிக் காட்டுகிறது!

நிமித்தமும் சகுனங்களும்

இன்னும் ஜோதிடத்துடன் தொடர்பு கொண்ட சாமுத்திரிகா லட்சணம்,நிமித்தம்,திருமணச் சடங்குகள் போன்ற பல ஹிந்து வாழ்க்கை முறை சம்பந்தமான பொருள்களை எடுத்துக் கொண்டால் மேலும் பல நூற்றுக் கணக்கான குறிப்புகளைச் சங்க இலக்கியம் தருகிறது.

நிமித்தங்களில் தான் எத்தனை வகை! பொழுது நிமித்தம் (புறநானூறு-204), நாள் நிமித்தம் (தொல்காப்பியம் 1037) பறவை நிமித்தம் (தொல்காப்பியம் 1037) இவை போன்றவற்றை ஏராளமான பாடல்களில் காணலாம். அசரீரி என சொல்லப்படும்‘யாரிடமிருந்தோ வரும் நல்ல சொல்லை’ நன்மொழி என முல்லைப்பாட்டு (16-17)சுட்டிக் காட்டுகிறது.

astrologer

காக்கை கரைந்தால் விருந்து வரும் (குறுந்தொகை 210), ஆண் ஓந்தி வலம் வந்தால் வழிப்பயணம் நலம் பயக்கும் (குறுந்தொகை 140),கனவில் படைக்கலம் கட்டிலுடன் கவிழுதல்,எட்டுத்திக்கிலும் எரிகொள்ளி விழுதல்,மரக்கிளை வற்றுதல் (புறம் 41),கனவில் தலையில் எண்ணெய் தேய்த்தல்(புறம் 41) போன்றவை தீமை பயக்குமாம்! பெண்களின் இடதுகண் துடித்தால் நல்ல நிமித்தமாம்.

(ஐங்குறுநூறு 218); பெண்களின் வளை இறுகினால் நல்ல நிமித்தமாம் (ஐங்குறுநூறு 218) இப்படி நூற்றுக்கணக்கான குறிப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அடுத்து கிரகணத்தைப் பற்றிய தமிழரின் அறிவு உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளே வியக்கும் ஒன்று. இதைக் கணிக்கும் பஞ்சாங்கம் பற்றிப் பகுத்தறிவாளர்களுக்கு எப்போதுமே ஒரு இளப்பம் தான்!

இதற்கு அடுத்த கட்டுரை தமிழனின் பஞ்சாங்கம் பற்றியது. அது ஏற்கனவே இங்கே வெளியிடப்பது.

rk narayan

ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!

india
Zodiac signs on Indian postage Stamps

Post No.1084 ; Dated 4th June 2014.

சங்க இலக்கியக் கூற்றின் படி ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!

by ச.நாகராஜன்

சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிடக் குறிப்புகள்!

பகுத்தறிவாளர்கள் தமிழன் பண்பாட்டிற்கு ஒவ்வாத ஜோதிடத்தின் பக்கம் போகலாமா என்று கேட்டு இதற்கு எதிராக ‘முழங்கி’ வருவதை எண்ணிப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது! தமிழர்களின் பாரம்பரியத்தின் படி ஜோதிடம் மகத்தான ஒரு இடத்தை அவர்கள் வாழ்வில் கொண்டிருந்ததை சங்க இலக்கியம் நன்கு விளக்குகிறது.

அஸிரிய, பாபிலோனிய, மாயா, கிரேக்க,எகிப்திய நாகரிகத்தை விடப் பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை! தமிழர்களின் சங்க இலக்கியம் காலத்தால் முற்பட்ட கருத்துக் கருவூலம் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று! இந்த சங்க இலக்கியங்களில் சுமார் 154க்கும் மேற்பட்ட குறிப்புகள் ஜோதிடத்தைப் பற்றி உள்ளன!

அனைத்துத் தமிழ் இலக்கியத்தையும் ஆராயப் புகுந்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வாழ்வை மேம்படுத்தும் சிறந்த ஜோதிடக் குறிப்புகள் இருப்பதைப் பார்க்கலாம். அகத்தியரில் ஆரம்பித்து பல சான்றோரால் இயற்றப்பட்ட ஆயிரக் கணக்கான அற்புதமான ஜோதிட நூல்கள் தமிழில் உள்ளன. சரஸ்வதி மஹால் வெளியிட்ட மிகச் சில நூல்களைத் தவிர பல நூல்கள் அச்சேறாது சுவடி வடிவிலேயே இருக்கும் அவல நிலையும் நம்மிடத்தில் மட்டுமே உண்டு!

ஒவ்வொரு பழந்தமிழனும் ஜோதிடத்தைப் பார்ப்பவனே!
நாள்தோறும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு நாளும் ஒரையும் பார்த்தவர்கள் பழந்தமிழர்கள். நாள் என்ற தமிழ் வார்த்தையே நட்சத்திரத்தைக் குறிக்கும் என்பது ஒரு சுவையான செய்தி! களவொழுக்கத்தில் தலைவனுக்கு தீய ராசி, தீய நாள் இல்லை என்பதை “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” என்று தொல்காப்பியம் (1081) கூறுகிறது.
இதனாலேயே களவொழுக்கம் இல்லாத இயல்பான ஒழுக்கம் உடைய தமிழர் நாளும் ஒரையும் பார்த்து வாழ்ந்தவர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது இல்லையா!

israel
Zodiac Signs on Israel Stamps

கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிட மேதை!

பழந்தமிழில் ஜோதிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. மாறாகக் கணியம் என்ற சொல் பல இடங்களிலும் பயிலப் படுகிறது. உலகமே இன்று போற்றி வியக்கும் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிடர்; வான நூல் விற்பன்னர். அதனால் தான் அவர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற அடிப்படை ஜோதிட உண்மையைக் (அவனவன் கர்மமே அவனுக்கு நன்மையையும் தீமையையும் தருகிறது!) கூறினார்! கணியன் பூங்குன்றனாரை தலை சிறந்த உலகனாகச் சுட்டிக் காட்ட விழையும் பகுத்தறிவாளர்கள் அவர் ஒரு கணியன் என்பதால் ஜோதிடத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அல்லவா?

நற்றிணை (373.6), காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கை என்றும் அகநானூறு (151.15)கணிவாய்ப் பல்லிய காடிறந்தோரே” என்றும் கூறுகின்ற வரிகளால் கணி என்ற வார்த்தை பயிலப்படுவதைப் பார்க்கலாம். கணிப்பது ஜோதிடம்; அதைக் கணிப்பவர் கணி அதாவது ஜோதிடர். இன்றும் கூட நாம் ஜாதகத்தைக் கணித்துத் தாருங்கள் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்!

கணிவாய் வேங்கை என்றால் என்ன?

மேலே கண்ட வரியில் வரும் கணிவாய் வேங்கை என்றால் என்ன? வேங்கை பௌர்ணமியன்று தான் பூக்கும்!அந்த தினத்தில் சந்திரன் ரோஹிணி நட்சத்திரத்தைச் சேரும்.ஆகவே அது காதலர் அல்லது புதுமணம் செய்யப் புகும் யுவதியும் வாலிபனும் கடிமணம் செய்து கொள்வதற்கு உகந்த நாளாகத் தமிழரால் கொள்ளப்பட்டது. கணியர் போல (ஜோதிடர் போல) நல்ல நாள் இதுவெனப் பூத்துக் காட்டுவதால் அது கணிவாய் வேங்கை எனச் சொல்லப்பட்டது! பல்லி சொல்வதை கேட்டு நம்பும் பழக்கமும் பழந்தமிழரிடம் பரவலாக இருந்தது!தன்னைப் பிரிந்து இருந்த தலைவன் வருவான் என்பதை பல்லி சொல் கேட்டுத் தலைவி உணர்ந்து கொள்வாள்! இப்படிக் கணித்துச் சொல்வதால் அதுவும் ‘கணிவாய்ப் பல்லி’எனப்பட்டது.

ஜோதிடம் இன்றித் தமிழரின் தொன்மம் இல்லை!

அன்று தமிழரின் வாழ்வில் (ஏன், இன்றும் தான்!) எப்படி ஜோதிடம் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதற்கு இன்னும் ஏராளமான சுவையான செய்திகளைச் சுட்டிக் காட்டலாம் – சங்க இலக்கியத்தின் மூலம்! ஆகவே ஜோதிடத்தை மறுத்தால் தமிழனின் பாரம்பரியமே கேள்விக்குறியாகி விடும்!அவ்வளவு தொன்மம் தமிழர் வாழ்வில் ஜோதிடத்துடன் இணைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு உண்மை!

நாள்மீனும் விண்மீனும்
அசுவனி முதலாக ரேவதி ஈறாக பெயர் சூட்டப்பட்ட 27 நட்சத்திரங்கள் நாண்மீன்கள் என்றும் பெயர் சூட்டப்பெறாத இதர நட்சத்திரங்கள் விண்மீன்கள் என்றும் தமிழ் இலக்கியத்தில் குறிக்கப் படுகின்றன.
maldive stamps

Zodiac Signs on Maldives Stamps

அருந்ததியின் சிறப்பு

அருந்ததியை புது மணம் புரிந்தோர் பார்ப்பது சம்பிரதாயமாக இருந்தது. அருந்ததியை சங்க இலக்கியம் வடமீன்,செம்மீன்,மீன்,சிறுமீன்,சாலினி,வானத்து அணங்கு எனப் பலவாறாகச் சுட்டிக் காட்டுகிறது! சில சங்க வரிகளைக் கீழே காணலாம்:

வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலி 221)
வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை (புறம் 228-9)
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி (பதிற்றுப்பத்து 3127-28)
கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாதரும்
கார்த்திகை நட்சத்திரம் அறுமீன் என்றும் ஆரல் என்றும் குறிப்பிடப்படுகிறது!
அறுமீன் பயந்த (நற்றிணை 202-9)
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் (அகநானூறு 141-8)

என்பதோடு அறுவர் பயந்த ஆலமர் செல்வ (முருகு 255) என்பதன் மூலம் கார்த்திகை மகளிர் அறுவரும் சுட்டிக் காட்டப்படுவதையும் கண்டு மகிழலாம்!

சுக்கிரனும் மழையும்

சுக்கிரன் மழை தரும் கிரகமாக தமிழர் தமது ஜோதிட -விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்திருந்தனர்! அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட” என்று அற்புதமாகக் குறிப்பிடுகிறது!இதே கருத்தை புறநானூற்றின் மேலும் ஐந்து பாடல்கள் வலியுறுத்துகின்றன! (ஆர்வமுள்ளோர் பாடல்கள்172,383,384,386,388 ஐப் படித்துணரலாம்)
-தொடரும்

சங்கத் தமிழில் ராமன், பலராமன், பரசுராமன்

baladevakrishna

பலராமர், கிருஷ்ணர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

Written by London Swaminathan
Post No. 1083 ; Dated 4th June 2014.

நாத்திக வாதம் பேசும் தமிழர்களும், தங்களுக்கு முன் திராவிடர் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட சில தமிழர்களும் நூறு வருடங்களாக உலகை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு தமிழ் இலக்கியம் பற்றிய அறியாமையே காரணம். ஏமாறுபவன் இருக்கும் வரை உலகில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது இயற்கை நியதி. “இளிச்ச வாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்”, “குனியக் குனியக் குட்டுவார்கள்” என்ற பழமொழிகளே இதற்குச் சான்று.

வெள்ளைக் காரர்கள் அவர்களுடைய மதத்தைப் பரப்பவும், ஆட்சியை நிலை நாட்டவும் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பி இந்து தெய்வங்களை இரு கூறுபோட்டு ஒரு கோஷ்டி ஆரிய தெய்வங்கள் என்றும் மற்றொரு கோஷ்டி திராவிட தெய்வங்கள் என்றும் ‘அக்மார்க்’ முத்திரை குத்தினர். இதை சில திராவிடங்களும் பற்றிக் கொண்டு பொய்ப் பிரசாரம் செய்துவந்தனர்.

தமிழர்களுக்கு தெய்வங்களே கிடையாதென்றும் ஆரியர்கள்தான் இப்படி இந்து மத தெய்வங்களைப் “புகுத்தினார்கள்” என்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார்கள். ஆங்கிலமும் தெரியாத, தமிழும் படிக்காத, பாமர ஜனங்கள் அதை நம்பி ஏமாந்தனர். காஞ்சிப் பெரியவர் போன்ற சிலர் மட்டும் அன்பான முறையில் அறிவுபுகட்ட முயன்றனர். ராக்காயி, மூக்காயி, மஹமாயி, சாத்தன், ஐயனார் என்பன எல்லாம் வேத கால தெய்வங்கள் என்றும், அந்தப் பெயர்கள் அனைத்தும் சம்ஸ்கிருதப் பெயர்கள் என்றும் சொற்பொழிவாற்றி உதரணங்களையும் கொடுத்தார்.

சங்க இலக்கியத்தில் உள்ள 2389 பாடல்களைப் பயின்றவருக்கு ஆரிய, திராவிட என்ற சொல் எல்லாம் நகைப்பைத் தரும். திராவிட என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆரிய என்ற சொல் இருந்தாலும் அது இனவாதப் பொருளில் பயிலப்படவில்லை.

தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய பகுதிகளில் ராமன், பலராமன், பரசுராமன், சிவன், கொற்றவை (துர்கை), முருகன் ஆகிய எல்லோரும் மதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான இடங்களில் பிராமணர்கள், வேதங்கள், இந்து மத நம்பிக்கைகள், மறு ஜன்மம், தகனம், கர்ம வினைக் கொள்கை, இந்திரன் வருணன், அக்னி, சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், சுவர்க்கம், நரகம் முதலியவையும் குறிப்பிடப்படுகின்றன.

800px-Heliodorus-Pillar2
பெஸ்நாகர் என்னும் இடத்தில் கிரேக்க மன்னன் எழுப்பிய கருட ஸ்தம்பம்.

தொல்காப்பியத்தில் இந்திரன், வருணன், துர்க்கை, அக்னி, பலராமன், விஷ்ணு ஆகியவர்களைத் தமிழர் தெய்வங்களாகப் போற்றி இருப்பதை ஏற்கனவே மூன்று கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.
இதோ சங்கத் தமிழ் நூல்களில் இருந்து சில பகுதிகள்:

புறநானூறு:
ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல (புறம் 55)

பொருள்: மலையையே வில்லாகவும் பாம்பை நாண் ஆகவும் கொண்டு ஒரே வில்லில் அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழித்த சிவபெருமானைப் போற்றும் பாடல் இது. கழுத்தில் கறை ஏற்பட்டு நீலகண்டனாக விளங்கும் சிவனுக்கு நெற்றியில் ஒற்றைக் கண் இருப்பது தலையில் நிலவின் பிறை இருப்பது ஆகியவற்றையும் புலவர் மருதன் இள நாகன் குறிப்பிடுகிறார்.

முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பழைய பாண்டிய மன்னனைப் பாராட்டும் பாடலில் காரி கிழார் என்னும் புலவரும் சிவனின் மூன்று கண்களையும், சடையையும் பாடுகிறார்:-முக்கட் செல்வர், நீணிமிர் சடை (புறம் 6)

சிவபெருமான் தான் ஆதிசிவன், முதற் கடவுள் என்று புறம் 166 கூறும்: ‘’முது முதல்வன்’’.

அகநானூறு:
ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வ
னாலமுற்றங்கவின் பெறத்தை இ (அகம் 181)
பொருள்:–உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! என்று பரணர் என்னும் புகழ்மிகு புலவர் பாடுகிறார். இதே பாடலில் ஆய் எயினன் என்பவன் முருகப் பெருமான் போல வீரம் உடையவன் என்றும் போற்றப் படுகிறான்.

பரணரும் கபிலரும் இரட்டைப் புலவர் போல சங்க நூல்கள் முழுதும் வியாபித்து நிற்கின்றனர். அவர் தம் திரு வாயால் மலர்ந்தருளிய சொல்லில் வேதத்தை, நான்மறைகளை ‘’முதுநூல்’’ என்று போற்றுவதைக் கவனிக்கவேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பரணருக்கே அது மிகப் பழைய நூல் என்றால், வேதங்களின் காலத்தை யாரே கணிக்க வல்லார்?

azakaana sivan

நக்கீரர் பாடிய பாடலில் (புறம் 56) இந்துமதம் பற்றிய ஏராளமான கருத்துகளை அளிக்கிறார்:-
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனுங்
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல் வெந் நாஞ்சிற் பனைக் கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணிமயி உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் (புறம் 56, நக்கீரர்)

பொருள்:–காளையைக் கொடியாகக் கொண்ட தீயைப் போல விளங்கும் சடையையும் மழு என்ற ஆயுதத்தையும் உடைய நீலமணி போன்ற கழுத்தை உடையவனும், கடலில் வளரும் வெண்மையான சங்கு நிறம் கொண்ட, கொல்லும் கலப்பை என்ற ஆயுதத்தை உடைய பனைக்கொடி உடைய பலதேவனும் தூய்மை செய்யப்பட்ட நீலமணி போன்ற மேனியயும் கருடக் கொடியையும் உடைய வெற்றியை விரும்பும் கண்ணனும் , நீலமணி போன்ற மயில் கொடி உடைய மாறாத வெற்றி பொருந்திய மயில் ஊர்தியை உடைய முருகப் பெருமானும் உலகம் காக்கும் வலிமையும் தோற்காத நல்ல புகழும் உடையவர்கள்.

இந்துமத தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள், வருணனைகள் எல்லாம் ஆப்கனிஸ்தான் முதல் கன்னியாகுமரி வரை இதே காலத்தில் ஒரே மாதிரியாக இருப்பது எண்ணி எண்ணி இறும்பூது எய்ய வைக்கும். குஷான மன்னர்கள் கட்பீஸசும், கனிஷ்கரும் காளைவாகனத்துடன் சிவன் இருக்கும் நாணயங்களை வெளியிட்டனர். வடமேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட கிரேக்க வம்சாவளி மன்னர்கள் பலராமனுக்கும் கண்ணனுக்கும் (Bactrian coins of Agathocles 180 BCE) நாணயம் வெளியிட்டதும், (Greek King Heliodorous 113 BCE) விஷ்ணுவின் கருட வாகன தூண் அமைத்ததும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தன. அதற்கு 200 வருடங்களுக்குப் பின் 4000 மைல்களுக்கு அப்பால் வாழ்ந்த நக்கீரரும் அதையே செப்புவது இந்து மதத்தின் பரந்த தாக்கத்தை நிலைநாட்டுகிறது.

avatars6only
பல ராமன் & கண்ணன்
நக்கீரர் பாடலில் பலராமனை பனைக்கொடியோன் என்று பாடியதைக் கண்டோம். தொல்காப்பியரும் இந்த பனைக்கொடியைக் குறிப்பிட்டவுடன் உரைகாரர்கள் இது பலதேவனுடைய கொடி என்று உரை கண்டுள்ளனர். புறம் 58ல் இதைவிட உறுதியான ஒரு செய்தி வருகிறது. கண்ணனும் பலதேவனும் இணைபிரியாமல் இருப்ப்பது எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழ் நாட்டில் கண்ணனுக்கும் பலதேவனுக்கும் சேர்ந்தே சந்நிதிகள் இருந்தன. காலப்போக்கில் பலதேவன் மறைந்துவிட்டார். காரிக்கண்ணன் பாடிய புறம் 58ல் இரண்டு மன்னர்கள் ஒன்றாக இருந்ததைக் கண்டவுடன் அவருக்கு ‘’கண்ணன் – -பலதேவன்’’ நினைவே வந்தது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தாரை காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடல் இதோ:–

“பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?”
இந்தப் பாடலில் ‘’இரு பெரு தெய்வங்கள்’’ என்ற சொற்றொடரைக் கவனிக்கவும். இனி சில ராமாயணக் காட்சிகள்:

தமிழ் ராமாயணம்
வால்மீகி, கம்பன் சொல்லாத விஷயங்களை சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்:-
புறம் 378 ஊன்பொதி பசுங்குடையார்:–
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
. . . . . . . . .
பொருள்:– இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின் , சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், அந்த அணிகளை அணிந்து விளங்கிக் கண்டவர் நகைத்து மகிழ்ந்தது போல……..

பெண் குரங்குகளுக்கு (மந்தி) எந்த நகையை எந்த உறுப்பில் அணிய வேண்டும் என்று தெரியாததால் வெவ்வேறு இடங்களில் தாறு மாறாக அணிந்தனவாம்!

ராவணன் ஒரு தமிழன் என்று சிலர் பொய்ப் பிரசாரம் செய்கையில் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஊன்பொதி பசுங்குடையார், ராவணன் ஒரு அரக்கன் என்று தெள்ளத் தெளிவாக உரைப்பது படித்துச் சுவைக்க வேண்டியது ஆகும்.

அகம் 70 மதுரைத் தமிழ்கூத்தனார் கடுவன் மள்ளனார்:–

. . . . . .
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீஷ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

பொருள்:– வெற்றிவேலை ஏந்திய பாண்டிய மன்னரின் மிகுந்த பழமை உடைய திருவணைக்கரையின் (தனுஸ்கோடி) அருகில், ஒலிக்கும் பெரிய கடல் துறையில், பறவைகள் ஆரவாரம் செய்தன. வானரங்களுடன் போர் திட்டத்தை வகுப்பதற்காக இராமன் அங்கே வந்தான். ஆல மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கை அசைத்து பேசாதே என்று சைகை செய்தவுடன் பறவைகள் பேசாமல் இருந்தன. அதே போல இவ்வூரும் ஆரவாரம் அடங்கி அமைதியாகி விட்டது.

இராம பிரானின் அபூர்வ ஆற்றல் பற்றிக் கூறும் இப்பாடல் போலவே பிற பாடல்களில் கிருஷ்ணனுடைய அபூர்வச் செயல்களையும் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டின் தென்கோடி வரை, மாய மந்திரம், அபூர்வ ஆற்றல்கள் பற்றி நம்பிக்கை ஏற்பட்டத்தானது பகுத்தறிவு என்ற பெயரில் பொய் பிரசாரம் செய்வோருக்கு சரியான சவாலாக அமையும்.

aghora and agni veerabhadra
அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்திரர்

கண்ணனின் அபூர்வ ஆற்றல்

அகம் 59 (மதுரை மருதன் இளநாகன்)
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்
மரம் செல மிதித்த மா அல் போல
புன் தலை மடப்பிடி உணீ இயர்

கண்ணன் குருந்த மரத்தை ஆய மகளிர்க்கு (கோபியர்) வளைத்துத் தந்தாற் போன்று ஆண்யானை ஒன்று, தன் பெண் யானை உண்ணும்படியாக மரத்தின் கிளையை வளைத்துத் தந்தது.
இதே பாடலில்,

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
என்ற வரிகள் திரு முருகனின் சூரபதுமன் வதையையும், திருப்பரங் குன்றத்தின் பெருமையையும் கூறுகிறது.

புறம் 174 (மாறோக்கத்து நப்பசலையார்):–
அணங்குடை அவுணர் கணங்கொண்டி ஒளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தடுத்து நிறுத்தாங்கு

—— . . .
பொருள்:–மற்றவரை வருத்தும் அச்சம் பொருந்திய அரக்கர் ஞாயிற்றை எடுத்துக் கொண்டுபோய் மறைத்தனர். தொலைவில் விளங்கக் கூடிய அந்த்த ஞாயிற்றைக் காணாததால் இருளன்னது உலகத்தாரின் கண்ணை மறைத்தது. அப்பொழுது உலகத்தாரின் நோய்கொண்ட துன்பம் நீங்குமாறு மிகுந்த வன்மை உடைய மை போன்ற கரிய நிறம் உடைய மேனியனான திருமால், அந்த வட்டமான ஞாயிற்றைக் கொண்டுவந்து இந்த உலகத்தின் இருள் நீக்குவதற்காக வானத்தில் நிறுத்தினான் – என்று புறநானூற்று உரை கூறும்.

இது சூரிய கிரகணம் பற்றிய பாடலென்றும் மஹாபாரதத்தில் ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கலாம் என்றும் நான் ஏற்கனவே எனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டேன். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் தென் கோடி வரை கண்ண பிரானின் மாயச் செயல்கள் பற்றிய கதைகள் பாமர மனிதனுக்கும் தெரிந்ததை இப்பாடலின் வாயிலாக அறிகிறோம்.

19.-Marichi-Vadh,Large-Vishnu-temple,-Janjgir
ராமாயண சிற்பங்கள்

அகம் 175 (ஆலம்பேரி சாத்தனார்)
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர்கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
பொருள்:– கதிர்கள் ஒழுங்காக அமைந்த சக்கரத்தை உடைய திருமாலின் பகைவர் போர் ஒழிவதற்குக் காரணமான மார்பிலுள்ள மாலை போல பல நிறம் உடைய வான வில்லை உண்டாக்கியது. கண்ணன் கையில் உள்ள சுதர்சன சக்ரம் தமிழ் நாடு வரை புகழ் எய்தியதைக் காண்கிறோம்.

புறம் 198 (வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்):–
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் – என்று புலவர் குறிப்பிடுவதை சிலர் ஆலமரத்துக்கு அடியில் அமர்ந்த சிவன் என்றும் இன்னும் சிலர் ஆல் இலையில் மிதந்த திருமால் என்றும் உரை கண்டுள்ளனர்.

பரசுராமன் அகம் 220 (மருதன் இளநாகன்):–

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக்
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்

பொருள்:– என்றும் நீங்காத வேள்வித் தீயை உடைய செல்லூரில், மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையிலே அழித்த மன்னர் பரம்பரையை அழித்தவர் பரசுராமன். அவர் முன்காலத்தில் அரிதாய் முயன்று செய்த வேள்வியில் கயிற்றால் கட்டப்பட்ட வேள்வித் தூணைப் போல அரிதில் காண முடியாதது என் தலைவியின் மார்பு.

கேரள மக்கள் பரசுராமனை முழுமுதற் கடவுளாக வழிபடுவதும் மேலைக் கடற்கரை முழுதும் பரசுராமன் தந்த பூமி என்று கொண்டடுவதும் எல்லோரும் அறிந்ததே. அவர் சங்கப் பாடலில் மழுவாள் நெடியோன் என்று போற்றப்படுவது படித்து இன்புறத் தக்கது.

தமிழர்கள் 2000 ஆண்டுகளாக வணங்கும் ராமன், பலராமன், பரசுராமனை நாமும் வணங்கி தமிழ் பண்பாட்டைத் தழைக்கச் செய்குவோம்.

ஆரியக் கழைக் கூத்தாடி

acrobat chennai

கட்டுரை எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் :- 1081; தேதி ஜூன் 3, 2014.

தமிழ் நாட்டில் பல நகரங்களிலும் தெருக்களில் வித்தை செய்து காட்டும் கழைக் கூத்தாடிகளைப் பார்க்காதவர் யாரும் இருக்கமுடியாது. இது தமிழ் நாடு மட்டும்மின்றி வட இந்தியா, பாகிஸ்தான் முதலிய இடங்களிலும் நடை பெறுகிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டங்களிலும் இப்படி தெரு வித்தை செய்வோர் உண்டென்றபோதிலும் உத்திகள் மாறுபடும். ஆனால் இதியா முழுதும் இது ஒரே மாதிரி இருப்பது வியப்புக்குரியது. அதைவிட வியப்பான விஷயம் இது சங்க காலம் முதல் தமிழ் நாட்டில் நடை பெற்று வருவதாகும். அதையும் விட வியப்பான விஷயம் இவர்களை ஆரியக் கூத்தாடிகள் என்று அழைப்பதாகும்.

சங்க இலக்கியத்தில் திராவிட என்ற சொல் எங்குமே இல்லை. ஆயினும் ஆரியர் என்ற சொல் மிகச் சில இடங்களில் கையாளப்படுகிறது. ஆரிய என்ற சொல்லுக்கு வெள்ளைக்கரன் கொடுத்த புதிய இனத்வேஷ பொருள் கிடையாது. ‘வட பகுதி’, ‘இமயம்’, ‘முனிவர்’கள் என்ற நற்பொருளில் மட்டுமே பயிலப்படும் சொல். ஆனால் கூத்தர்களுக்கு முன்னும், பொருநர்களுக்கு ( மல்யுத்த வீரர்கள் ) முன்னும் இரண்டு இடங்களில் ‘’ஆரிய’’ என்ற சொல் முன்னொட்டாக வருகிறது. வடக்கே இருந்து வந்த பொருநனை ஆரியப் பொருநன் என்று அழைப்பதில் வியப்பொன்றும் இல்லை.

PakIndia056

கழைக்கூத்தை ஆரியக் கூத்து என்று அழைப்பது ஏன்? இது பழமொழியிலும் இப்படி வருகிறது. உ.வே.சாமிநாத ஐய்யர் போன்றோரும் அப்படியே உரை கண்டுள்ளனர். தமிழ் நாட்டில் இவ்வகைக் கூத்தே இல்லையா? இதில் குறவன், குறத்தி இனத்தாரே பெரும்பாலும் ஈடுபட்டும் இதை ‘’ஆரிய’’ என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தியது ஏன் என்று தெரியவில்லை.

2000 ஆண்டுகளாக இது தமிழ் நாட்டில் நடந்து வருவதை அறியும் போது இதைப் பாடியுள்ள சங்கப் புலவர் இருவரும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகின்றனர். இதோ முதல் பாட்டு:–

குறுந்தொகை 7 ,பெரும்பதுமனார்

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார் கொல்? அளியர்தாமே ஆரியர்
கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெல் ஒலிக்கும்
வேல் பயில் அழுவம் முன்னியோரே.

பொருள்: ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும்பொழுது கொட்டப்படும் பறையைப் போல, மேல் காற்று வீசியதால் நிலைகலங்கி வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுகள் ஒலிக்கும், மூங்கில் மரங்கள் நிறைந்த, பாலை நிலப்பரப்பைக் கடக்கும் இந்த வில்லேந்திய ஆடவன் காலில் வீரக் கழல்களும் தோள்வளை அணிந்த பெண்ணின் காலில் சிலம்பும் இருப்பதால் இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெளிவு. இவர் யாரோ?

acrobat domaba
விளக்கம்:—“ஆரியர்—ஆரிய நாட்டிலுள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும் கூத்து ஆரியக் கூத்தெனப்படும். “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்”– என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்”. (ஆதாரம்: குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சமிநாதையர் பதிப்பு)
இது பதினான்கு வகைக் கூத்துகளில் ஒன்று. சிலப்பதிகார உரையாசிரியர் இது பற்றி விவரித்துள்ளார்.(சிலப்.3-12-25,அடியார்க்கு நல்லார்).

ஆடியற் பாணிக் கொக்குமாரிய வமிதப் பாடற், கோடியர் –(கம்பராமாயணம். கார் காலப்.33) என்று கம்பரும் இக்கூத்து பற்றிக் கூறியுள்ளார்.

dip_girl_1772571gvishak

நற்றிணை 95, கொட்டம்பலவனார்

கழைபாடு இரங்க, பல் இயம் கறங்க
ஆடு மகள் நடந்த கொடும்புரி நோன் கயிற்று
அதவத் தீம்கனி அன்ன செம்முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்து எழுந்து
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே……………………….

பொருள்: ஒரு பக்கத்தில் புல்லாங்குழல் ஒலிக்கிறது; மறு பக்கத்தில் இசைக் கருவிகள் முழங்குகின்றன.முறுக்கான புரிகளால் ஆன வலிமையான கயிற்றில் கழைஏறி விளையாட்டுகள் நடத்தி விளையா யாடினாள். இனிய அத்திப் பழம் போல சிவந்த முகத்துடைய குரங்குக் குட்டி அதைப் பார்த்துக் கொண்டிருந்தது; மெல்லிய தலை உடைய பெண் குரங்கின் வலிமையான அக்குட்டி கயிற்றில் தொங்கி விளையாடியது. மலைவாழ் குறவரின் சிறு பிள்ளைகள் மூங்கில் கணுக்கள் மீது ஏறி தாளம் கொட்டினர்.
street-performer_1527213i

ஆரியக் கூத்தைக் கண்டு நாமும் மகிழ்வோம்; ஆரிய—திராவிட பிரிவினை இனவாதப் பேச்சைக் கண்டு நகைப்போம்!

தமிழ் இந்து இளங்கோ!

kannaki cooking
Kannaki cooking for Kovalan (Picture from World Tamil Conference Souvenir)

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்-1051 ; தேதி -19 May 2014.

தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உண்டு. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பன அவை. முதல் மூன்று காப்பியங்களும் முழுதாகக் கிடைத்தது நம் தவப் பயனே. இமூன்றில் சிலப்பதிகாரம் தனிப் பெரும் இடத்தை வகிக்கிறது. தமிழர்களுக்கு உரிய ஒரே கதை கண்ணகி கதை ஒன்றுதான். இதை எழுதிய இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும் அவர் துறவியானதாகவும் பல கதைகள் உண்டு. ஆனால் ஒன்றுக்கும் மறுக்க முடியாத ஆதாரம் எதுவும் இல்லை. சிலர் அவரை சமணத் துறவி என்பர். அதை நிரூபிக்கக் கிடைக்கும் சான்றுகளைவிட அவர் இந்து என்று சொல்லச் செய்யும் சான்றுகளே அவரது காப்பியத்தில் அதிகம் இருக்கின்றன. இதை வாசகர்களே முடிவு செய்ய போதுமான சான்றுகள் உதவும்.

முதலாவது சமணர்களுக்கு தெய்வம் இல்லை. ஆனால் இளங்கோவோ :”தெய்வம் தெளிமின்”- என்று அறிவுரை புகல்கிறார்.
இரண்டாவதாக “நாராயணனை ஏற்றாத நாவென்ன நாவே” என்று பாடுகிறார். இராம பிரானைப் புகழ்கிறார். சிவனுடைய நடனங்களையும் காளிக்கூத்தையும் நமக்குத் தருகிறார். கொற்றவையின் புகழ் பாடுகிறார். செங்குட்டுவன் தலைமேல் சிவபெருமானின் பாதங்களைச் சுமந்து சென்றதாகச் சொல்கிறார். தெய்வமே வழிபடாத புத்த, சமண வழக்கங்களை ஒதுக்கித் தள்:ளிவிட்டு, இந்துமத முறையில் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வழிபட வைக்கிறார். முதல் முதலில் பிராமணர் களைக் கொண்டு நடத்திய கல்யாணத்தை கண்ணகி, கோவலன் கல்யாணத்தில் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். தீ வலம் வந்து கல்யாணம் முடித்ததை தமிழில் முதல் முறையாக அவர்தான் நமக்குக் கூறுகிறார். கரிகாலன் நல்ல நாள் பார்த்து, ‘’புண்ணிய’’ திசையான வடதிசை போகியது இப்படித் தடுக்கி விழுந்த இடமெல்லாம் சிலம்பு முழுதும் இந்துமதம்!!

இந்துக்களின் புனித நதியான கங்கையையும் புனித மலையான இமயத்தையும் போற்றுகிறார். புண்ய இமயத்தில் கல் எடுத்து புண்ய கங்கையில் நீராட்டி கோவில் சமைத்ததைக் காட்டுகிறார். காவிரியை ‘’தெய்வ’’க் காவிரி என்று துதிக்கிறார். இப்படி மலையையும் நதியையும் தெய்வமாகக் கும்பிடுவது இந்துக்களால் மட்டுமே முடியும். புத்தரும் மஹாவீரரும் தெய்வம் பற்றியே பேசவில்லை.. கண்ணகி, கோவலன் இருவருக்கும் உண்மையிலேயே கவுந்தி அடிகள், வழிகாட்டித் துணையாக இருந்ததற்கு நன்றிக் கடனாக அவரது அருகதேவனையும் போற்றினார்.

கதை போகும் போக்கில் வேதம் சொல்லும் பார்ப்பனச் சிறுவர்கள், புனித யாத்திரை செய்யும் பார்ப்பனன், நாரதரின் வீணை, பூரண கும்பம், இந்துக்களின் 64 கலைகள், ஜம்புத்வீபம் (நாவலம் தண்பொழில்) திருவிளையாடல் புராணக் கதைகள், சிபிச் சக்கரவர்த்தி கதை, பஞ்ச தந்திரக் கதைகள் என ஏராளமான விஷயங்களைத் தருகிறார். ஆனால் கவுந்தி அடிகள் என்பவர் வாயிலாக சமணர்களின் பெருமையையும் பாடுகிறார். அந்த ஒரு காரணத்திற்காக இளங்கோ மீது சமணர் என்று முத்திரை குத்திவிட முடியாது.

அர்த்தநாரீஸ்வரர், மஹிஷாசுரமர்த்தனி, வாலகீய மகரிஷிகள், மும்முறை வலம் வருதல், விமானத்தில் கோவலன் வந்து கண்ணகியை அழைத்துச் செல்லல், இந்துக் கடவுளரின் வாகனங்கள், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருமாலிருஞ்சோலை மகிமை – இப்படி சிலப்பதிகாரம் முழுதும் இந்துமதக் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது!!!

இளங்கோ என்பவர் தமிழ் இந்துவா? தமிழ் சமணரா? என்று பட்டிமன்றம் நடத்தினால் இந்து என்ற கட்சி எளிதில் வெற்றி பெரும் அளவுக்கு இந்து மதக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இளங்கோ.

kannaki
Kannaki giving her anklet to Kovalan.

உலகில் ஒரு இந்து மட்டுமே மற்ற கடவுள்களைப் புகழ்வான். ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகாநந்தர், மஹாத்மா காந்தி போன்றோர் பிற சமயக் கடவுளையும் போற்றினர். இந்துவைத் தவிர உலகில் வேறு எந்த மதத் தலைவரும் இப்படிச் செய்ததில்லை. வேறு எந்த மத நூல்களிலும் இந்துக் கடவுள்களைப் புகழ்ந்ததைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை, படித்ததும் இல்லை. அப்படியே உவமைக்காக இந்துக் கடவுளரை ‘வம்புக்கு இழுத்தாலும்’ தங்களுடைய சமயக் கருத்துக்கு முரணான விஷயங்களைப் போதிக்க மாட்டார்கள்.

இளங்கோ சொல்லும் ‘விதி மிகவும் வலியது’ என்ற கருத்தும் இந்துக்களின் கர்ம வினைக் கொள்கைதான். வடமொழி நாடகங்களிலும் மஹாபாரதத்திலும் விதி பற்றி நூற்றுக்கணக்கான மேற்கோள்கள் உண்டு. ஆக அந்தக் கொள்கை காரணமாகவும் இளங்கோவுக்கு சமண மத முத்திரை குத்த முடியாது. இதோ இளங்கோவின் வாசகங்கள்:–

“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(வரந்தரு காதை)

தானம், தவம் போன்ற பகவத் கீதை சொற்களை வள்ளுவனும் இரண்டு இடங்களில் பயன் படுத்தியதை ‘வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் என்ற கட்டுரையில் ஏற்கனவே காட்டியுள்ளேன். இளங்கோவும் ‘’வெஜிட்டேரியன்’’ உணவு சாப்பிடுதல், கள் குடிப்பதைக் கைவிடல், மறுமைக்காக இப்போதே தருமம், புண்ணியம் செய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறார்.

இவ்வளவு சொன்ன பிறகும், யாராவது தனக்கு தப்பான முத்திரை குத்திவிடப் போகிறார்களே என்று பயந்து பகிரங்கமாக ராமனையும் கிருஷ்ணனையும் புகழ்ந்து தள்ளுகிறார்:–

“வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
—————————–
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே?

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?”
–சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்.
tamil makal
Tamil queen in Sangam age.

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?

எல்லோர்க்கும் மூத்தவன் — உலகம் எல்லாம் அவன் உந்தியிடத்தில் தோன்றிய தாமரையில் விரிந்தது — கண்கள், கைகள், வாய். காலடிகள் ஆகியன சிவந்து தோன்றும் அந்தக் கருப்பனை (கிருஷ்ணனை) காணாத கண்களை யாராவது கண் என்று அழைப்பார்களா! அவனைக் கண்கொட்டாமல் பார்க்கவேண்டும். அதை மீறி கண்களை இமைத்தால் அவைகள் கண்களே இல்லை!

அறியாமையின் ஒட்டுமொத்த வடிவம் கம்சன். அவனுடைய வஞ்சனை எல்லாவற்றையும் கண்ணன் சமாளித்தான். பாண்டவர்க்காக அவன் கௌரவர்கள் இடத்தில் தூது சென்றபோது வேதங்கள் எல்லாம் அவனோடு சென்றன. அத்தகையவனின் பெருமையைச் சொல்லாத நாக்கும் ஒரு நாக்கா? நாராயணா என்று சொல்லாத நாக்கை எவரேனும் நாக்கு என்று சொல்ல முடியுமா?

மதுரை பற்றி வியப்பான தகவல்!

மதுரையில் மன்னவனிடம் குறைகளை முறையிட அடிக்கப்படும் ஆராய்ச்சிமணி ஒலித்ததே இல்லை என்றும் பிராமணர்களின் வேத ஒலி மட்டுமே ஒலிக்கும் என்றும் சொல்கிறார்:-
“மறை நாஓசை அல்லது; யாவதும்
மணி நாஓசை கேட்டதும் இலனே”

பிராமணர்களை எரிக்காதே!!
மதுரைக்கு தீயூட்ட விரும்பிய கண்ணகி ஒரு முலையைத் திருகி வீசவே அக்னி தேவன் அவள் முன் தோன்றுகிறான். உடனே யார், யாரை எரிக்கக் கூடாது என்று சொன்னதில் பிராமணர்களை எரிக்காதே என்று உத்தரவிடுவதாக இளங்கோ பாடுகிறார்:–
“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க”— (அழற்படு காதை)

என்று உத்தரவு போடுகிறாள். புத்த மதத்தை உலகம் முழுதும் பரப்பிய அசோகன் கல்வெட்டிலும் பிராமணர் பெயருக்கு அடுத்தே சிரமணர்கள் பெயர் வரும்.இளங்கோவும் காவியம் முழுதும் பிராமணர்களையும் வேதங்களையும் புகழ்கிறார்.

ஆய்ச்சியர் குறவையில் கண்ண பிரானின் லீலைகள் எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறார். பாற்கடல் கடைந்தது, கன்றால் விளா எறிந்தது, யமுனையில் விளையாடியது, கதிரவனை சுதர்சன சக்கரத்தால் மறைத்த மாபாரதக் கதை இப்படிப் பல.

விருந்தினரை உபசரித்தல் இந்துக்கள் நாள்தோறும் கடைப்பிடிக்கும் பஞ்ச மஹாயக்ஞங்களில் ஒன்று. அது பற்றியும் கண்ணகியின் வாயிலாகக் கருத்துரைக்கிறார்:

“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக் காதை)

–என்று கண்ணகி வருத்தப்படுவதைக் காட்டுகிறார். அறவோர், துறவியர், அந்தணர், விருந்தினர் என்று குறிப்பிடுதல் காண்க.

சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய மூன்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தக்க காரணங்களுடன் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். சிலம்பில்தான் முதல்முதல் யாழ் மறைந்து வீணை தோன்றுகிறது. ஏராளமான வடமொழிச் சொற்கள், புராண, இதிஹாசக் கதைகள் வருகின்றன. தொல்காப்பிய விதிகள் பழமையானவை. அதை நூல் வடிவில் தந்தவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததை சொல் வழக்குகளே (அதிகாரம்) காட்டிவிடுகின்றன.

தமிழில் உள்ள எல்லா சமய நூல்களும் மறைந்தாலும் சிலப்பதிகாரம் ஒன்றில் இருந்தே சைவ வைணவப் பெருமைகளை அறியமுடியும். சுருங்க்ச் சொன்னால் சிலப்பதிகாரம், ஒரு இந்து மதக் கலைக் களஞ்சியம் ( என்சைக் ளோபீடியா). கையில் ஒரு பென்சில் அல்லது ஹைலைட்டர் பேனாவை வைத்துக் கொண்டு சிலப்பதிகாரத்தில் இந்துமதம் பற்றிய விஷயங்கள் வரும்போதெல்லாம் அடிக்கோடு இடுங்கள். புத்தகம் முழுதும் கோடு மயம்தான்!!!

வாழ்க இளங்கோ! வாழ்க தமிழ் இந்து இளங்கோ!

contact swami _48 @yahoo.com

இராமன் பற்றிய தமிழ் பழமொழிகள்

jaya sri ram

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—968 தேதி 10 ஏப்ரல் 2014

அனுமார் வால் போல நீளுகிறதே or அனுமார் வால் போல நீண்டதாம்!
இந்தப் பழமொழி ராமாயண சுந்தர காண்ட நிகழ்ச்சியில் இருந்து வந்தது. ராவணனால் துன்புறுத்தப்பட்ட அனுமன், இலங்கைக்கு தீ வைத்தான். அப்பொழுது அவன் வால் திரவுபதியின் புடவை வற்றாது வந்தது போல நீண்டு கொண்டே போனது. அதாவது ஆஞ்சநேயனை தீயானது சுடவே இல்லை. இந்தியாவின் ‘’சூப்பர்மேன்’’ Superman மாருதி. அவன் செய்யாத சாகசம் இல்லை. அத்தனையையும் இன்று வெள்ளைக்காரர்கள் ‘காப்பி’ அடித்து காமிக்ஸ் Comics ஆக (சூபர்மேன், superman ஸ்பைடர்மேன் Spiderman, போகேமான் Pokeman, பேண்டம் Phantom) என்றெல்லாம் எழுதி, விற்றுக் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இன்னொரு சம்பவமும் சுந்தர காண்டத்தில் உண்டு. ஆஞ்சநேயனக்கு ஒரு தூதருக்கு (ambassador) உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.ஆனால் அது கொடுக்கப்படவில்லை இன்று சர்வதேச ‘ப்ரோடோகோல்’Protocol (சம்பிரதாய விதிகள்) என்ற பெயரில் தூதர்களை எப்படி நடத்த வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதை உலகிற்குக் கற்பித்தது இந்தியர்கள்! சாணக்கியன் எழுதிய விதிகளை திருவள்ளுவனும் ஒரு அதிகாரம் முழுதும் பாடியிருக்கிறான். அப்படி மரியாதை தர ராவணன் மறுத்தான். ஆசனம் கூட கொடுக்கவில்லை. அனுமார் தன் வாலை நீட்டி அதன் மூலம் ஒரு ஆசனம் அமைத்து ராவணனைவிட உயரத்தில் உட்கார்ந்து ‘பதில் மரியாதை’ செய்தான்!

Proverbs

இராம பாணம் பட்டு உருவினாற் போல
அந்தக் காலத்தில் ஒருவர் வீரத்தை மெய்ப்பிக்க ஏழு பொருள்களை ஒரே அம்பினால் துளைக்கச் சொல்லுவார்கள். இந்த ஏழு மர துளை போடும் போட்டி வேறு கலாசாரங்களிலும் உண்டு. இதை ஒட்டியே ராமனின் திறமையைக் கண்டுபிடிக்க ஏழு மரா மரங்களைத் துளைக்கும் அம்பைவிடச் சொன்னான் சுக்ரீவன். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் துளை போட்டது. இதே போல ஒரு வகைப் பூச்சியும் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பாக்கம் வரை குண்டு துளைத்தாற்போல துளை போடும் அந்த பூச்சிக்கும் இந்தியர்கள் ராமபாணம் என்று பெயர் வைத்தனர்.

இராமர் இருக்கும் இடம் அயோத்தி
மக்களுக்கு குணம் மிக்க ஒரு தலைவன் இருந்தால் போதும்; ஒரு ஆபத்தும் வராது என்று தெரியும். முறையாக ஆட்சி செய்யும் மன்னவன் இறைவனுக்கு சமம் என்று வள்ளுவனும் கூறுவான். இதனால்தான் மக்கள் அனைவரும் இரண்டு முறை இராமனைப் பின் தொடர்ந்து சென்றனர். முதல் முறை அவன் காடேகிய நாள் அன்று. ஆனால் இராமனே அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டான். இரண்டாவது முறை ராமன் ஆற்றில் ஜல சமாதி அடைய இறங்கிய போது அயோத்தியில் உள்ள அத்தனை மனிதர்களும், ஜீவராசிகளும் ராமனுடன் சரயு நதியில் இறங்கி மோட்சம் அடைந்தனர். அவர்களைப் பொறுத்த மட்டில், இராமன் எங்கே இருக்கிறானோ அதுதான் அயோத்தி! (Ayodhya now in Uttar Pradesh was the capital of Kingdom of Kosala)

rama color

இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம,லெட்சுமணன்—ஆகிய இருவரும் இணை பிரியாத ஜோடிகள். எல்லா படங்களிலும் இதைக் காணலாம். அவர்கள் ஒற்றுமையை உவமையாக கூறும் போது, இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது என்று சொல்லுவர்.

இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
இராமன் சத்ய தர்ம பராக்ரமன். சொன்ன சொல்லை மீறாதவன். ஆயுதம் இழந்த ராவணனைக் கூட கொல்லாமல் ‘’இன்று போய், நாளை வா!’’ என்று இயம்பினன். ஆகையால் ராமனின் சொல்லுக்கு மறு சொல் கிடையாது. இலட்சுமணன் மிகவும் (short tempered) கோபக்காரன். எதற்கும் பொங்கி எழுவான. ஆனால் அண்ணன் ஒரு சொல் சொன்னால் போதும். அடங்கிவிடுவான். இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?

இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்
மனம் போல மாங்கல்யம். தலைவன் எவ்வழி அவ்வழி தொண்டன். ஆகவே இராமன் போல ஒரு ராஜா (Truthful, honest, sincere, amicable, easily accessible,heroic, people friendly) இருந்தால் உலகமே அவனுக்கு அடங்கி நடக்கும். இராம சேது என்னும் பாலம் கட்டும் போது அணில் கூட உதவி செய்யவில்லையா?

15173-yiddish-proverb-

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
உலகில் நிறைய பேர் சுயகாரியப்(Selfish, self centred) புலிகள். தங்களுக்கு வேண்டியது கிடைத்தால் போதும். வாயை மூடிக்கொண்டு அநியாயங்களைக் கண்டும் காணாமல் இருந்து விடுவர். மஹாத்மா காந்தி, பல சத்தியாக் கிரகம், பாத யாத்திரை என்று அறைகூவல் விடுத்தபோதும் சிறை சென்றவர்கள் எண்ணிக்கை சில ஆயிரம்தான். எனக்கு என்ன? வெள்ளைக்காரன் ஆண்டால் என்ன? இந்தியர் ஆண்டால் என்ன? என்று இருந்தவர்களைக் கண்டு பாரதியும் பாடி இருக்கிறான். “நெஞ்சில் உரமும் இன்றி” என்ற பாடலைப் படித்தால் புரியும். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று இருப்போரே உலகில் அதிகம்.

இராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமனுடைய மங்கை சீதை. அவளுடன் இராவணன் வாழ நினைத்தது தவறு. இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.

இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?
ராமனுடைய பெயரைச் சொல்லுவதே அமிர்தம் என்று உண்ணாவிரதம் இருந்தோரைக் குறித்து சொன்ன சொல் இது. மனிதனாகப் பிறந்துவிட்டால் உடலையும் பேணித்தான் ஆகவேண்டும். இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் உள்ளம் பெருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்.

hindi rama

இரா முழுதும் இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும்? என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்)

சொன்ன சொல்லை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் ஒரு செயலை சடங்கு போல செய்வோரைக் குறிக்கும் வசனம் இது. அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையான ஆர்வத்தோடு ஒரு செயலை செய்ய வேண்டும். எதைப் படித்தாலும் கேட்டாலும் சிரத்தையோடு செய்தால் உண்மைப் பொருள் விளங்கும். வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்து முடித்த பின்னர் அடிப்படையே புரியாமல் ஒரு கேள்வி கேட்டல் அவருக்கு எப்படி இருக்கும்! ஒரு கச்சேரிக்குப் போனவர் வித்துவானைப் பார்த்து, உங்கள் தோடி ராகத்தைக் கேட்க அல்லவா நான் வந்தேன் என்று ஒருவர் சொன்னாராம். அவர் அப்போதுதான் தோடி ராகம் பாடி முடித்திருந்தார்!

இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல
சனி பகவான் யாராக இருந்தாலும் ஏழரை ஆண்டுக் காலம் பிடித்தே தீருவான். அதை மூன்று இரண்டரை ஆண்டுகளாகப் (3X2.5 years=7.5 years) பிரிப்பர். ஒரு குறிப்பிட்ட இரண்டரை ஆண்டு, சொல்ல முடியாத துயரம் கொடுப்பான. அவரவர் ஜாதகத்தைப் பொறுத்து இதன் உக்கிரம் அமையும். அப்போது அவர்கள் காசி ராமேஸ்வரம் சென்றாலும் கர்மவினை தொடர்ந்தே வரும். இதையே மற்ற விஷயங்களுக்கும் மக்கள் உவமையாகப் பயன்படுத்துவர். என்னதான் பரிகாரம் செய்தாலும் ஒரு கெட்டது விலகவில்லையானால் அப்பொழுது இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவர். தொடர்ந்து வரும் கஷ்டங்களை இது குறிக்கும். புராணத்தில் அரிச்சந்திரன் பட்ட பாட்டை நினைத்தால் இது சட்டென விளங்கும்.

Clash between Shiva and Saturn

சிவ பெருமான் பற்றியும் ஒரு கதை சொல்லுவர். சனி பகவானிடம் “நான் மும்மூர்த்திகளில் ஒருவன். என்னை நீர் ஒன்றும் செய்ய முடியாது” என்றார் சிவன். சனைச்வரன் (Sanai:= slow, Charan= Moving; slow moving) சிரித்துக் கொண்டே “இதற்கு யாரும் விதி விலக்கு அல்ல” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சிவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. சரி இந்த ஆள் கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டுமானால் யாராலும் கற்பனை செய்ய முடியாத இடத்தில் ஒளிந்து கொள்வோம் என்று ஒரு சாக்கடையில் ஒளிந்து கொண்டாராம். சனிச்சரன் மறு முறை சிவனை சந்தித்தபோது, “பார்த்தாயா, என்னை நீ ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று சிவ பெருமான பெருமையாகச் சொன்னாராம்.

சனைச்சரன், “இல்லையே, சோதிட விதிகளுக்கு கடவுளும் விதி விலக்கல்ல. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?” என்று சிவனை சனி பகவான் கேட்டார். சிவன் பெருமையாக “நீங்கள் கண்டு பிடிக்கமுடியாத பாதாள சாக்கடையில் ஒளிந்திருந்தேன். நீங்கள் ஏமாந்து போனீர்கள்” என்று பதில் சொன்னார். சனி பகவான் சிரித்துக் கொண்டே கைலாசத்தில் பாரிஜாதம் முதலான புஷ்பங்கள் கமழும் இடத்தில் இருக்கவேண்டிய நீவீர் சாக்கடையில் காலம் தள்ளினீர் அல்லவா? அதுதான் உமக்கு சனி திசை” என்று சொன்னவுடன் சிவன் முகம் சிவந்து போனது!!!

71792-Famous+Proverbs+

தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)
இராமனுக்கு பெரிய பலம் அவன் தம்பி லெட்சுமணன். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராம லெட்சுமணர்கள். 14 ஆண்டுக் காலமும் இமைப் பொழுது சோராமல் அண்ணனைக் காத்தவன் லெட்சுமணன். உலக இலக்கியத்தில் இப்படி ஒரு சகோதர ஜோடியை எங்கும் பார்க்கமுடியாது. இரட்டையரைக் காணலாம். ஆனால் இரு வேறு தாயாருக்குப் பிறந்து ஒரு சேர ஜோடி சேர்ந்த சகோதரர் இவர்கள். அப்பேற்பட்ட தம்பி உடைய ஒரு வீரன் எப்பேற்பட்ட படை வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்பான்; வெற்றியும் பெறுவான்!

இராவண சந்யாசி போல இருக்கான்
ராவணன் ஒரு ‘ருத்திராட்சப் பூனை’ (Hypocritical Cat). துணிச்சலாக வீரன் போல வந்து சீதையைக் கவரவில்லை. ஏனெனில் ராமனை வெல்ல முடியாது என்பது அவனுக்குத் தெரியும். சந்யாசி வேடத்தில் வந்து ஏமாற்றியவன். யாரேனும் ஒருவன் வேடம் தரித்து ஏமாற்றுகிறானோ என்ற சந்தேகம் வந்தால் உடனே மக்கள், “ஜாக்கிரதை இவன் ஒரு ராவணன்” என்று சொல்லி உஷாராகி விடுவர்.

rama thai

இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி போலும்
துரியோதனன் கெட்டுக் குட்டிச் சுவராகப் போக அவன் மாமன் சகுனிதான காரணம் சூதாட்டத்தில் மாயா ஜாலம் செய்து வெற்றி பெற்றுப் பின்னர் போர் ஏற்பட வழி செய்தவன். இதே போல ராவணனிடம் மகோதரன் என்பவன் முதல் மந்திரியாக (Chief Minister) இருந்தான். மகா மாயாவி (Cheat). இந்திரன் போல வேடம் கொண்டு வெள்ளை யானை மேல் ஏறி லெட்சுமணனுடன் போரிட வந்தவன். ராமன் பற்றி உளவு (Spy) வேலைகளில் ஈடுபட்டவன். சீதையை அனுப்பவேண்டாம் என்று கெட்ட யோசனை(wrong Advice) கூறி ராவணன் அழிய வழிவகுத்தவன்.(ஆதாரம்: அபிதான சிந்தாமணி-Tamil Encyclopaedia)
ஆக யாராவது ஒருவர் குடியைக் கெடுக்கும் வேலைகளையோ, மற்றவர்கள் அழிய துர் போதனை செய்தாலோ அவர்களை சகுனி, மகோதரன் ஆகியோருக்கு ஒப்பிடுவர்.

படிப்பது ராமாயணம் இடிப்பது சிவன் கோவில் / ராமன் கோவில்
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் செய்பவர்களைக் குறை கூறும் பழமொழி இது. நல்ல விஷயங்களைப் பேசிவிட்டு, கேட்டுவிட்டு அதற்கு நேர் மாறான செயல்களைச் செய்வோர் ராமாயணத்தைப் படித்துவிட்டு கோவிலையே இடித்தது போல இது.
தேசத்தையே வைத்து சூதாடிய தருமபுத்திரனைக் குறைகூறும் பாரதி

“கோயிற்பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி – அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் சீச்சீ சிறியர் செய்கை செய்தான்”
என்று சாடுகிறான். சொல் ஒன்று செயல் வேறு என்பதற்கு, இது நல்ல எடுத்துக் காட்டு. இப்படிப்பட்டவர்களை ‘படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில்’ எனலாம்.

rama,hampi
ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.

“இந்த இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்”- (Kamba Ramayanam Quote) என்று சபதம் செய்தவன் ராமன். அந்தக் க லத்தில் அரசர்கள் நிறைய பேரைக் கல்யாணம் செய்வது இந்திய மரபு. நாடுகளுடன் நட்புறவு வேண்டும் என்பதற்கும், வேற்று நாட்டான் படை எடுக்கையில் அருகிலுள்ள நாடுகள் படை அனுப்பி உதவி செய்யவேண்டும் என்பதற்காகவும் பல நாட்டுப் பெண்களை மணப்பது ராஜ நீதி (diplomacy), சாணக்கிய நீதி! இதனல்தான் ஆப்கனிஸ்தானத்தில் உள்ள காண்டஹார் (காந்தாரம்) நகரில் இருந்து வந்த பெண்ணை காந்தாரி என்றும் பஞ்சாபில் இருந்து வந்த பெண்ணை பாஞ்சாலி என்றும், சோழதேசப் பெண்ணை சோழமாதேவி என்றும், பாண்டிய தேச இளவரசியை பாண்டிமாதேவி என்றும் அழைப்பர். அவர்களுடைய அம்மா அப்பா வைத்த பெயர் எல்லாம் காலப் போக்கில் மறைந்துவிடும். இப்படிப் பல தேசப் பெண்களை மணக்கும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததற்கு இலக்கியமும் கல்வெட்டுகளும் சான்று பகரும் .ஆனால் ராமன் மட்டும் ஒரே பெண்ணைக் கல்யாணம் செய்ததோடு மட்டுமின்றி மனதாலும் வேறு ஒரு பெண்ணை நினைக்கமாட்டேன் (சிந்தையாலும் தொடேன்) என்றான். இதனால் அவன் உயிர் வாழ்ந்த காலத்திலேயே, அவனை கடவுள் நிலைக்கு உயர்த்தினர் மக்கள். அந்த ராமனின் நாமத்தைச் சொன்னாலேயே காம எண்ணங்கள் பறந்தோடிப் போகும்.

வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன்! என்னிடம் வாலாட்டாதே!
அனுமனைப் பார்த்து ராவணன் சொல்லிய சொல் இது. ஆனால் அனுமனோ இலங்கைக்கே தீவைத்து “ராவணன் வாலை” ஒட்ட அறுத்து விட்டான். வால் என்பதும் அஹம்காரம் என்பதும் ஒன்றே. நாமெல்லாரும் யான் எனது என்னும் செருக்கில் ( I-ness, My-ness) ஆடாத ஆட்டம் ஆடுகிறோம். இதுதான் நமது வால். இதை நாய்வால் மாதிரி நிமிர்த்தவே முடியாது. ஒட்ட வெட்டி எறியவேண்டும். நாமும் நமது அகந்தை(Ego & Arrogance) என்னும் வாலை நோக்கி தினமும் “என்னிடம் வாலாட்டாதே ஒட்ட நறுக்கிவிடுவேன்”– என்று சொல்லச் சொல்ல ஞானம் பிறக்கும்.

இந்தப் பழமொழிகளை மட்டும், விளக்கம் எழுதாமல், நான் ஏற்கனவே “இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்”– என்ற தலைப்பின் கீழ் கொடுத்து உள்ளேன்

famous proverbs

பழமொழிகள் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:—-
1.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்
2.இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் (பகுதி 1,2)
3.பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3)
4.யானைகள் பற்றிய நூறு பழமொழிகள்
5.ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
6.உடம்பைக் கடம்பால் அடி
7.பாரதி பாட்டில் பழமொழிகள்
8.அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது)
9.20,000 Tamil Proverbs (English article)

Contact swami_48@yahoo.com

There are over 960 posts here in this blog touching all topics On Hinduism, Tamil Literature and Sanskrit Literature.

I welcome your feedback. Please post your comments. In addition to my two blogs, my English articles are posted in the speakingtree.com (Times of India website)