திருவாரூர் தேவதாசி கொண்டியம்மாள் கதை (Post No 2610)

aazhi-ther

திருவாரூர் தேவதாசி கொண்டியம்மாள் கதை (Post No 2610)

Article written by london swaminathan

Date:  8 March, 2016

 

Post No. 2610

 

Time uploaded in London :–  20-11

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் இலங்கை ருத்ர கணிகை அஞ்சுகம், 1911ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் கிடைத்தது. அதில் கிடைத்த திருவாரூர் ருத்ர கணிகை கொண்டியம்மாளின் கதையைக் கீழே கொடுக்கிறேன். பக்கங்களைப் படிக்க முடியாதவர்கள் அல்லது பழைய தமிழ் நடை புரியாதவர்கள் முதலில் சுருக்கக் கதையைப் படியுங்கள்:-

 

கதைச் சுருக்கம்:

திருவாரூர் ருத்ர கணிகை (கோவிலில் ஆடும் தேவதாசி) பரம பக்தை; ஒரு முறை பங்குனி உத்திரத்தின் போது தேர் நகர மறுத்தது. எவ்வளவோ பேர் வந்து இழுத்தும் தேர் நகர வில்லை. பின்னர் சோழ ராஜாவின் கனவில் சிவபெருமான் தோன்றி கொண்டியம்மாள் தேரில் ஏறி சாமரம் வீசினால் தேர் நகரும் என்று கூறினார். மறு நாள் கொண்டியம்மாளை தக்க மரியாதையுடன் அழைத்து வந்து சாமரம் வீசச் செய்யவே தேர் புறப்பட்டு, பவனி வந்து நிலையை அடைந்தது.

 

ஆனால் தேரில் ஏறுமுன் , கொண்டியம்மாள் ஒரு நிபந்தனை போட்டார். தனது செயல் வெற்றி பெற்றால், தான் இறந்த பின்னர் தன் சடலத்தைக் காவேரிக் கரையில் தகனம் செய்யவேண்டும் என்றும் திருவாரூரில் ஒரு மைலுக்கு ஒரு பிள்ளையார் கோவில் கட்ட வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். மன்னர் அதை ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் கொண்டியம்மாள் இறந்த பின்னர் அப்படியே செய்தான். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதைய பிள்ளையார் கோவில்கள் இன்றும் உள்ளன.

 

kondi7

 

 

 

kondi9

 

kondi missing

kondi10

 

kondi11

 

kondi12

 

kondi13

 

kondi14

kondi15

–subham

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607)

charles-yaga

படம்: பிரிட்டிஷ்  இளவரசர் சார்ல்ஸ், கெமில்லா பார்க்கர், சுவாமி ச்தானந்த சரஸ்வதி

Research article written by london swaminathan

Date: 7 March, 2016

 

Post No. 2607

 

Time uploaded in London :–  9-26 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

எனது பிளாக்கிலுள்ள 2600 கட்டுரைகள் குறித்து, நாள் தோறும் எனக்கு  ஈ மெயில் மூலம் வரும் பல கடிதங்களில் ஒன்று இதோ:–

 

சார்,
அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,    (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர,     (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,     (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்

சார்,

இந்த பாடலின் பொருள் என்ன?
உயிர் பலியிடுதலை (ஆமை) சொல்கிறதா?

 

Yours sincerely

XXXX

rudra-baba

படம்: அதிருத்ர மஹா யக்ஞம், ஸ்ரீ சத்ய சாய் பாபா

 

இந்தப் பாடல் எனக்கும் பல ஆண்டுகளாகப் பொருள் விளங்காத பாடல். டாக்டர் இரா. நாகசாமி போன்ற சம்ஸ்கிருதமும், தமிழும் நன்கறிந்த ஒருவர்தான் இதற்கு சரியக விளக்கம் தர முடியும்.நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

 

இபோதுள்ள பொருள்:

வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல

 

—என்பது நூல்கள் தரும் விளக்கம். ஆனால் இந்த உவமை அங்கு பொருத்தமாகவுமில்லை. மேலும் மக்கள் நன்கறிந்த ஒரு விஷயத்தைத்தான் உவமையாகக் கொடுக்கவேண்டுமென்பது செய்யுள்விதி. அவ்வகையிலும் இது பொருத்தமில்லை. ஏனெனில் அஸ்வமேத யாகத்தில் பலியிடப்படும் நூற்றுக் கணக்கான தாவரங்கள், பிராணிகள், ஹோமத் திரவியங்களில் ஒன்று , ஆமை, எனப் படித்திருக்கிறேன்.

 

மனு தர்ம சாஸ்திரத்தில், இறந்து போன முன்னோர்களுக்கு திதியில் (திவசத்தில்) வழங்கக்கூடிய மாமிசப் பொருட்களில் ஆமை மாமிசமும் ஒன்று. ஆனால் இதை மூன்று வருணத்தாரில் யார் வழங்கினர், எப்படி வழங்கினர் என்பதற்கு விளக்கமில்லை. வேள்வியில் வழங்கினரா, அல்லது, கண்ணப்ப நாயனார் செய்ததுபோல நைவேத்தியம்/படையல் செய்தனரா என்பதையும் அறியோம்.

 

அகநானூற்றுப் பாடலோ ஒரு ‘செக்ஸி’ (sexy) பாடல் (அவளுடைய வார் (Bra ப்ரா) அணிந்த முலைப்பரப்பு முயக்கத்தை ஒரு நூல், இடையில் தடுப்பதாயினும் அதை வெறுக்கும் மிகப் பெரிய காதலுடன் இன்பம் அனுபவிக்கும் ) . அதிலும் பிராமணரல்லாத ஒரு புலவர் (?) இப்படிப் பாடியதை, நாம் ஒப்புக்கொண்டால் தமிழ் நாட்டில் யாக யக்ஞங்கள் மிக, மிகப் பெரிய அளவில் – குறிப்பாக மன்னர்கள் மட்டுமே நடத்தும் அஸ்வமேத யாகம் — நடந்திருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது செக்ஸி கவிதையில் இப்படி ஒரு உவமை வராது!

 

(முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் அஸ்வமேத யாகம் நடத்தி, குதிரைப் படத்துடன் நாணயம் வெளியிட்டது பற்றியும், பாண்டியர்கள் இப்படி அஸ்வமேத யாகம் நடத்தி அவப்ருத ஸ்நானம் செய்வது பற்றி காளிதாசன் ‘ரகுவம்ச’ காவியத்தில் பாடியது பற்றியும் எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சொல்லியிருகிறேன்)

பாடல் வரி ‘கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள். இவர்கள் வெளி உலக (Extra Terrestrials எக்ஸ்ட்ரா டெர்ரெஸ்ட்ரியல்) மனிதர்களா? என்றும் ஒரு ஆர்ச்ச்ய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். தேவர்களுக்கு வியர்க்காது, தேவர்கள் செக்ஸ் (Sex) செய்ய முடியாது, தேவர்களின் கால்கள் நிலத்தில் படியாது, தேவர்கள் போட்டுக்கொண்ட பூ மாலைகள் வாடாது, தேவர்கள் நினைத்த மாதிரத்தில் காற்று வழியாக பல உலகங்களுக்குச் செல்ல முடியும், தேவர்கள் கண் சிமிட்டமாட்டார்கள் –என்று நமது புராணங்கள் வருணிப்பதால் இவர்கள் – வெளி உலக வாசிகள் (ET) என்றும் முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.

தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது! இது சம்ஸ்கிருதச் சொல்லா என்பதையும் ஆராய வேண்டும். ‘தைத்ய’ என்றால் திதி என்னும் பெண்ணின் மைந்தர்களான தைத்யர்கள், அதாவது அசுரர்கள். அந்தப் பொருளும் இங்கே பொருந்தாது.தித்தி, தித்தன் – என்ற சொற்கள் பல இடங்களில் வருகிறது. அவற்றின் பொருளும் இங்கே பயன்படா.

–subham–

 

பஞ்சாமிர்தம், பஞ்சாங்கம், பஞ்சகவ்யம் பஞ்சயக்ஞம் என்றால் என்ன?(Post No.2596)

buy-palani-panchamirtham-online

Compiled by london swaminathan

Date: 4 March,2016

 

Post No. 2596

 

Time uploaded in London :–  14-57

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

(Already published in English a few days ago)

 

1.பஞ்சாமிர்தம்

ஐந்து வித பொருட்களைக் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் ‘ஜாம்’ பொன்ற பொருள் இது. ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள்; பஞ்ச பண்டவர் என்றால் ஐந்து பாண்டவர் என்பதை ஒவ்வொரு இந்துவும் அறிவர்.

பஞ்சாமிர்தம் பற்றிய ஸ்லோகம்:-

துக்தம் சசர்கரஞ்சைவ க்ருதம் ததி ததா மது

பஞ்சாம்ருதமிதம் ப்ரோதம் விதேயம் சர்வகர்மசு (சப்தகல்பத்ரும:)

துக்தம் – பால்

சர்கரா – சர்க்கரை

க்ருதம் – நெய்

ததி – தயிர்

மது – தேன்

தற்காலத்தில் இத்துடன் பலவகை பழங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

 

urine of cow

2.பஞ்சகவ்யம்

கோமூத்ரம், கோமயம், க்ஷீரம் ததிசர்பிஸ்ததைவ ச

கவாம் பஞ்ச பவித்ராணி புனந்தி சகலம் ஜகத் —(சப்தகல்பத்ரும:)

 

கோ மூத்ரம் – பசுவின் மூத்திரம்

கோ மயம் – சாணி

க்ஷீரம் – பால்

ததி – தயிர்

சர்பி – நெய்

Cow-Urine-Article

3.பஞ்சாங்கம்

ஐந்து அங்கம் என்பது இதன் பொருள்; அவையாவன: திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம்

திதி- ஒரு மாதத்தை இரண்டு பகுதிகளாக பிரித்திருக்கிறோம்; பிரதமை (முதல்) திதி முதல் 15ஆவது நாள் அமாவாசை வரும். மீண்டும் பிரதமை முதல் கணக்கிட்டு 15 ஆவது நாள் பௌர்ணமி வரும். சுருக்கமாகச் சொல்லப்போனால் சந்திரனனின் நிலை.

வாரம்: ஞாயிறு முதல் சனி வரையுள்ள ஏழு நாட்கள் அல்லது கிழமைகள்.

நட்சத்திரம்:- நிலவு அதன் வட்டப்பாதையில் எந்த நட்சத்திரத்துடன் கூடியிருக்கிறதோ (உண்மையில் கூடியிருப்பதாகத் தென்படுகிறதோ) அது அந்த நாளின் நட்சத்திரம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.

யோகம்:- சேர்க்கை என்று பொருள்; இரண்டு நட்சத்திரங்களின் சேர்க்கைக் காலம். ஒரு கிழமையும், ஒரு நட்சத்திரமும் கூடும் போது அது நல்லதா, கெட்டதா (அமிர்த யோகம், மரண யோகம், சித்த யோகம்) என்று அறிய உதவும். இந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உள்ளதால் 27 யோகங்களிலெது என்றும் சொல்லலாம்.

கரணம்- திதியில் பாதி

panchangam

4.பஞ்சயக்ஞம்

பிரம்மயக்ஞோ ந்ருயக்ஞஸ்ச தைவயக்ஞஸ்ச சத்தம

பித்ருயக்ஞோ பூத யக்ஞ: பஞ்சயக்ஞ: ப்ரகீர்திதம்

பிரம்ம யக்ஞம் – வேத பாராயணம்

நர யக்ஞ – ஏழைகளுக்கும், விருந்தினர்களுக்கும் உனவு படைத்தல்

தைவ யக்ஞம்- இறைவனுக்குப் படைத்துவிட்டு உண்ணுதல்

பித்ருயக்ஞம் – தென்புலத்தார்க்கு நீர்க்கடன் செலுத்தல் (முற்காலத்தில் தினமும் செய்தனர். இப்பொழுட்து ஆண்டுக்கு 12 முறை முதல் 96 முறை வரை செய்கின்றனர்)

பூதயக்ஞம்: – எறும்பு முதல் யானை வரைக்கும் உணவளித்தல்; குறிப்பாக பசு மட்டுக்கு இலை, தழை அளித்தல்

மனு தர்ம சாஸ்திரத்தில் இது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வள்ளுவர் குறளிலும் (எண் 43) காண்க.

5mahayagna

–சுபம்–

மரணத்தை முன்னறிவித்த கோயம்புத்தூர் செட்டியார்!(Post No.2591)

IMG_3563 (2)

Compiled by london swaminathan

Date: 2 March,2016

 

Post No. 2591

 

Time uploaded in London :–  14-35

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் பல பழைய புத்தகங்களைப் புரட்டுகையில் கோயம்புத்தூர் ஸ்ரீ கிரந்தி வேங்கட கோபலார்யா பற்றிய ஒரு அதிசய விஷயம் கடைசி பக்கத்தில் இருந்ததைப் படித்தேன். தான் இன்ன தேதியில் இறப்பேன் என்பதை அறிவித்து, அதே தினத்தன்று பலர் சூழ இறந்தார். இது போல எத்தனையோ பேர் முன்கூட்டி மரணத்தை அறிவித்த சம்பவங்கள் இந்துமத பெரியோர்கள் சரித்திரத்தில் இருக்கின்றன. இதோ அந்தப் பக்கங்கள்:–

 

 

IMG_3578

 

 

IMG_3577

 

IMG_3576 (2)

 

IMG_3575

 

–சுபம்–

 

 

 

கருகத் திருவுளமோ? (Post No. 2589)

green field, hare krsna

Written by S Nagarajan

 

Date: 2 March 2016

 

Post No. 2589

 

Time uploaded in London :–  6-00 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நாட்டு நடப்பு

கருகத் திருவுளமோ?

 

ச.நாகராஜன்

 

கெட்டதிலும் நல்லதைப் பார் என்று கூறுகின்றன ஹிந்து அற நூலகள்.

 

இது சாத்தியம் தானா? முயல்கிறோம். பார்க்கிறோம்!

சமீபத்தில் ஜவஹர்லால நேரு பல்கலைக் கழகத்தில் தலை தூக்கி கோர தாண்டவம் ஆடிய சக்திகள் இரண்டு விஷயங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன:

 

 

  • தாங்கள் தேச துரோக சக்திகள் என்பது.
  • தாங்கள் ஹிந்து விரோத சக்திகள் என்பது.

 

 

இந்த இரண்டையும் இணைத்து ஒரு தூண்டுதலைச் செய்தால் ஆங்காங்கு விதைக்கப்பட்டிருக்கும் இந்த தீய சக்திகளின் ஆதரவுகள் தலை தூக்கி ஆடும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்தக் கெடுதலிலும் ஒரு நல்லதையே நாம் பார்க்கிறோம்.

 

 

நமது நாட்டின் இராணுவம் உலகின் தலை சிறந்த ராணுவம் என்றாலும் தனித் தனியாக தேச துரோக சக்திகளை இனம் காண நாட்கள் ஆகும்.

 

 

நமது நாட்டின் போலீஸ் அற்புதமான நுண்ணறிவுத் துறையைக் கொண்டிருக்கிறது என்றாலும் அதால் கூட அனைத்து ரவுடிகளையும் தேச துரோக சக்திக்ளையும் ஒரே இடத்தில் கூட வைக்க முடியாது.

 

இந்த அரிய காரியத்தை ஜவஹர்லால நேரு பல்கலைக் கழகம் செய்துள்ளது.

 

ஜவஹர்லால் நேருவுக்கு நன்றி. அவர் வாரிசுக்கு வாரிசு வழை வந்த ராகுல் காந்திக்கு நன்றி.

 

ஏன்?

 

இந்த நிகழ்வு மூலம் இவர்களை ஆதரிக்கும் தீய சக்திகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன என்பதையும் சுலபமாகத் தெரிந்து கொள்ள முடிந்து விட்ட்து.

 

ஜவஹர்லால நேரு தந்த வாரிசுச் செல்வம் தேசத் துரோகிகளை நேரில் சென்று பார்த்து ஆதரவை வழங்கியது தீய சக்திக்குத் துணை போவது என்ற குற்றத்தின் பால் படாதா?

 

இந்த தேச துரோகிகளை ஆதரிக்கும் ஊடகங்களை சுலபமாக இப்போது அறிய முடிந்து விட்டதே!

field, HT

இதற்கு வரிந்து கட்டும் காம்ரேடுகள் எங்கெல்லாம் பாக்கட் பாக்கட்டாக குழுமி இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டதே!

மொத்தத்தில் தேச துரோக செயல்களைத் தூண்டி விடும் மோசமான அறிவு ஜீவிகள், அன்னிய சக்திகளிடமிருந்து பணமும் தளவாடமும் வாங்கி இந்த நாட்டைத் துண்டாட நினைக்கும் சதிகாரர்கள் ஆகிய அனைவரையும் நன்கு இனம் காண முடிகிறதே!

 

சாமர்த்தியமாக இதை காங்கிரஸ் ப்ளஸ் கம்யூனிஸ்டுக்கும்  பாரதீய ஜனதாவிற்கும் உள்ள கருத்து மோதலாகச் சித்தரிக்கப் பார்த்தால் அந்த  ஊடகங்களை மக்கள் ஒரேயடியாகப் புறக்கணித்து அழித்து விடுவர்.

 

ஏனெனில் கற்பில் ஒரு சதவிகிதக் கற்பு 99 சதவிகிதக் கற்பு என்று கிடையாது. கற்பு என்றால் அது 100 சதவிகிதம் தான்!

அதே போல,

 

தேச பக்தியிலும் விகிதாசார பக்தி கிடையாது.

தேச பக்தி என்றால் அதில் 100 சதவிகிதம் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கும்.

 

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தர பாடுபட்ட காங்கிரஸ் இன்று இருக்கலாம். ஒரு வேளை காந்திஜியின் கனவை மெய்ப்பிக்க நாளையே இல்லாமல் போகலாம்.

 

பி.ஜே.பி என்பது சில காலம் முன்னால் ஜனதா கட்சி. அதற்கும் முன்னர் ஜன சங்கம். நாளை ஒருவேளை இதன் பெயர் இன்னமும் ஒரு முறை மாறலாம். ஆனால் மக்கள் இந்தக் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தேசத்தை நேரிக்கிறார்கள்..

இன்று பிஜேபிக்கு இந்தியாவே ஒட்டு மொத்தமாகத் தரும் ஆதரவு அந்தக் கட்சிக்காக அல்ல; இந்த தேசத்திற்காக.

இந்த தேசத்தை எதிர்க்கும் தீய சக்திகளை அகற்றுவதற்காக.

இந்த தீய சக்திகளுக்கு காங்கிரஸும் காம்ரேடுகளும் துணை போவார்கள் என்றால் அவர்களை மக்கள் புறக்கணித்துப் புறம் தள்ளி விடுவார்கள்.

 

சட்டம் இவர்கள் மீது தன் கடமையைச் செய்யட்டும்.

யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதைக் கண்ட நீதி அரசர் சுமோடோ அடிப்படையில் தானே வழக்கைப் பதிவு செய்கிறார்.

மாபெரும் தேசத்திற்கு எதிராக சில சின்ன பொடிசுகள் ஆட்டம் ஆட நினைக்கும் போது அதற்குத் தூபமிட ‘பெரிய தல’கள் முன் வரும் போது நாட்டின் உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் தாமே வழக்கைப் பதிவு செய்து விடலாமே

 

இதை சமீபத்தில் 33 வருடம் கழித்துத் தீர்ப்பளித்ததைப் போலத் தீர்ப்பளிக்க கூடாது. ஒரு சில நாட்களிலேயே விசாரித்து இந்த தீமையைச் செய்தவர்களுக்கும் ஆதரவு அளித்தோருக்கும் எதிர்மறை ஊடக சக்திகளுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்.

டிவி சானல்களை உடனடியாக மூடி விட உத்தரவிட வேண்டும்.இதற்கென அப்பீலுக்கும் தடை விதிக்க வேண்டும்.

 

கட்சிகளை விட தேசம் பெரிது! தேசத்திற்கென பாடுபடும் கட்சிகள் மட்டுமே நிலைக்கும் அல்லாதவை அகலும்  அல்லது அழியும்.

 

இந்த வகையில் தேசத்தைக் காக்கும் பிஜேபிக்கு மக்களின் நல்லாதரவு கூடுகிற; இன்னும் கூடும்.

 

ஜ.நே.ப. போன்றவை இந்தியாவிலிருந்து அகலும். இனியும் தேச துரோக சக்திகளை அனுமதிக்க முடியாது.

 

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா?

இப்பயிரைக் கண்ணீரார் காத்தோம்

கருகத் திருவுளமோ?

கருக விடமாட்டோம்!

ஃபேஸ் புக் நல்லனவற்றைப் பரப்ப ஒரு நல்ல சக்தி. அதன் மூலம் வலுவான இந்தியவை உருவாக்குவோம். தேச துரோகிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவொம்.

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்? (Post No 2586)

happy 3

Written by S Nagarajan

 

Date: 1st March 2016

 

Post No. 2586

 

Time uploaded in London :–  8-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஹிந்து வாழ்வியல்

 

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்!

.நாகராஜன்

 IMG_2726

ஹிந்து இலக்கியம் வெற்றி இலக்கியமே

ஹிந்து இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான வாழ்வியலாகும்.

ஆனால் அவை பல லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் பொதிந்துள்ளபடியால் எளிதில் பெறுதல் சிறிது கடினம்! ஆகவே, அவற்றை அன்றாடம் அறவோர் மக்களுக்குக் கூறி வந்தனர்.

 

ஆனால் இன்றைய நடைமுறையில் அந்த பழைய கால குரு குல முறை மற்றும் கதா ப்ரவசனங்கள் இல்லை. காடுகளும் பாழ்பட்டுப் போயின; கதை சொல்லும் மண்டபங்களும் பாழாகி இடிந்து வீழ்ந்துள்ளன.

ஆகவே ஆர்வமுள்ளோர் தேடித் தேடி அவற்றைத் தாமே தொகுக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

 

 

நான் ஏன் சந்தோஷமாகவே இருக்கிறேன்!

ஒரு சின்ன எடுத்துக் காட்டாக, ஒரே ஒரு பொருள் பற்றி சில அறிவுரைகளைஅறவுரைகளை இங்கு பார்ப்போம்.

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

இது சாத்தியம் தானா? சாத்தியமே!

 

 happy4

நாரதர்ஸமங்கர் ஸம்வாதம்

பீஷ்மரிடம் தர்மர் ஏராளமான விஷயங்களை அவர் மரணப்படுக்கையில் இருக்கும் சமயம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

அதில் சாந்தி பர்வத்தில் 292ஆம் அத்தியாயத்தில் வரும் ஒரு சிறிய பகுதி இது.

நாரதருக்கும் ஸமங்கருக்கும் நடந்த ஸம்வாதத்தில் (ஸம்வாதம் என்றால் அர்த்தமுள்ள உரையாடல்!) நாரதர், ஸமங்கரை நோக்கி, “எப்பொழுதும் மனதில் சந்தோஷமடைந்து சோகமற்றவர் போல இருக்கிறீர்என்று சொல்லவே அவர் பதிலாகச் சொல்வதில் ஒரு பகுதி:-

 

நான் சகலமான பிராணிகளிடமும் நடந்ததையும் நடக்கின்றதையும் நடக்கப் போகின்றதையும் அவைகளின் தத்துவங்களையும் அறிகின்றேன். அதனால் நான் மன வருத்தமில்லாதவனாக இருக்கின்றேன்.”

நான் உலகத்தில் காரியங்களின் ஆரம்பங்களையும், மறுபடி பயன்களின் உற்பத்திகளையும் நானாவிதமான பயன்களையும் அறிவேன். அதனால் நான் மன வருத்தமில்லாதவனாக இருக்கின்றேன்.”

அவருடைய பயன் தரும் விளக்கம் தொடர்கிறது.

 

 IMG_2750

ஹிந்து ஞானம்சந்தோஷமடையும் வழி பற்றி!

ஹிந்து இலக்கியங்களின் சாரத்தை மைசூரிலிருந்து வெளியான வாரப் பத்திரிகையான ரேஷனலிஸ்ட் (Rationalist) இதழில் ஜி.ஆர். ஜோஸ்யர் (G.R.Josyar) தொகுத்து வெளியிட்டு வந்தார். இதைப் படித்தவர்கள் வியந்தனர். இப்படி ஒரு ஹிந்து பொக்கிஷம் இருக்கிறதா என்று!

 

மைசூர் மஹாராஜா, சர் சி.பி.ராமஸ்வாமி ஐயர் போன்றோர் இதைப் புத்தகமாக வெளியிட ஆலோசனை கூறினர். அதை ஏற்று ஜி.ஆர், ஜோஸ்யர்சான்ஸ்க்ரீட் விஸ்டம்’ (Sanskrit Wisdom) என்ற சிறு நூலை (160 பக்கம்) வெளியிட்டார்.

அதில் இடம் பெறும் ஒரு விஷயம்நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

 

“I do not get feverishly concerned with what is happening to me now, or what may happen to me tomorrow. Therefore I live quite happily.”

“I do not fear the approach of old age or death, or rejoice over conquests and achievements. Therefore I live quite happily.”

“I look upon gains as they come and losses as they come as the same as my two hands. Therefore I live quite happily.”

 

“When I acquire some fresh knowledge from time to time, it brings me wisdom, and not conceit. Therefore I live quite happily.”

“Though I am powerful I do not forcefully defraud others. Though poor I do not cherish wants. Therefore I live quite happily.”

 

“I rejoice in the happiness of others, and sympathize with the miserable. The proud find in me a companion. Therefore I live quite happily.”

“I do not look on anyone as my own or any as aliens. Therefore I live quite happily.”

 

“I view all things with steadfast, genuine and friendly interest. Therefore I live quite happily.”

 the_laughing_buddha_by_mdhamka-d5qlx26

இதற்கான எமது தமிழாக்கம்:-

எனக்கு இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியோ அல்லது நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியோ நான் பதட்டத்துடன் கவலைப்படுவதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

முதுமை அல்லது சாவு வருகிறதே என்று நான் பயப்படுவதும் இல்லை, அல்லது வெற்றிகளையும் சாதனைகளையும் பற்றி எண்ணி மகிழ்வதுமில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

வருகின்ற லாபங்களையும் வருகின்ற நஷ்டங்களையும் என் இரு கைகளைப் போல நான் பார்க்கிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

அவ்வப்பொழுது நான் புதிய விஷயம் பற்றிய அறிவைப் பெறும் போதெல்லாம் அது எனக்கு ஞானத்தை நல்குகிறது. இறுமாப்பை அல்ல. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

நான் சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை. நான் ஏழையாக இருந்த போதும் கூட தேவைகளை மனதில் வைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

நான் மற்றவர்களின் மகிழ்ச்சியில் சந்தோஷப்படுகிறேன். துன்பப்படுவோரின் மீது இரக்கமுறுகிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

 

நான் யாரையும் எனக்குச் சொந்தமானவராகவோ அல்லது எனக்கு அன்னியராகவோ நினைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

நான் அனைத்தையும் நேர்மையுடனும், சுத்தமாகவும், நட்புடன் கூடிய ஆர்வத்துடனும் பார்க்கிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 happy2

சந்தோஷமாக வாழ வழி தெரிகிறதல்லவா!

வாழ்வோம்; வளர்வோம்; அனைவரையும் சந்தோஷமாக வாழ வைப்போம்!

****************

 

 

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம் அழைப்பு! (Post No 2578)

kakakaka

Written by S Nagarajan

 

Date: 27  February 2016

 

Post No. 2578

 

Time uploaded in London :–  5-38 AM

 

( Thanks for the Beautiful Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

kaka2

நையாண்டி மடல் எண் 2

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம்: மெய் சிலிர்க்க வைக்கும் அழைப்பு!

.நாகராஜன்

 

 

அன்புடையீர்.

நிச்சயமாக உடனே அடுத்து ஒரு மடலை அனுப்பும் எண்ணமே எமக்கு இல்லை. ஆனால் முதல் மடல் வெளியானவுடன் எமக்கு வந்த தொலைபேசி அழைப்பு அந்த எண்ணைத்தை மாற்றி விட்டது.

தொலைபேசியில் பேசியதும் அவரோ இவரோ இல்லை. நீதியைக் காப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நீதித்துறையில் களம் இறங்கியவர்.

 

அவர் உலக நீதித் துறை வரலாற்றிலேயே ‘தனி ஒரு” இடத்தைப் பிடித்தவர்.

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இப்போது உலக அரங்கிலும் கூட அனைவரும் அவரைக் கண்ணெடுத்துப் பார்க்கின்றனர்.

உலக நீதித்துறை வரலாற்றில் யாருமே சாதிக்க முடியாதபடி அப்படி இவர் சாதித்த “தனி ஒரு” சாதனை என்று ‘முட்டாள்தனமாகக்’ கேள்வி கேட்கிறீர்களா?

 

 

நமது கழகத்தின் முதல் விதியே கேள்வி யாரும் கேட்கக் கூடாது என்பது தான்!

யாமே கேள்விகளை எழுதி யாமே பதில் எழுதி சாமானியனுக்கு அறிவுறுத்துகிறார் போல அதை ஊடகங்களுக்கு கொடுப்பதே எமது வாடிக்கை.

இருந்தாலும் போனால் போகிறது என்று இந்த ஒரு முறை உங்களை மன்னித்து விடுகிறேன்.

 

 

இவர் சாதித்த சாதனை என்ன தெரியுமா?தன் மீதிருந்த குற்றச்சாட்டுகளைத் தானே விசாரித்து தானே தனக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டது தான்! தான் நிரபராதி என்று அந்தத் தீர்ப்பில் இருப்பது நியாயம் தானே!)

இப்படி உலக வரலாற்றில் தன்னைத் தானே விசாரித்து அற்புதமாகத் தீர்ப்பு வழங்கியதாகச் சரித்திரம் உண்டா?

கோட்டா முறைப்படி உள்ளே வந்து சகல சலுகைகளையும் இவர் கடந்த பல்லாண்டுகளாக அனுபவித்தவர்.

 

 

இவர் மீது பல வயிற்றெரிச்சல்காரர்கள் ஊழல் புகார்களை அனுப்பவே நீதியரசர்கள் இவர் மீது வழக்கைப் பதிவு செய்து இவர் எந்த வேலையையும் செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டனர்.

ஆனால் வேலை ஒன்றையே தாரக மந்திரமென்று கொண்ட இவர் தன்னைத் தானே விசாரித்துக் கொண்டார்.

இவர் எம்மை அழைத்து முமு,கவில் தம்மை இணைத்துக் கொள்வதாகச் சொன்னவுடன் மெய் சிலிர்த்துப் போனோம். உடம்பெல்லாம் புல்லரித்தது..

 

கழகத்தில் வக்கீல் பிரிவு உண்டா, அதற்கான தலைமைப் பதவி தனக்கு கிடைக்குமா என்று கேட்டார்.

 

kaka4

பிரமித்துப் போன யாம்  ‘உடனே தந்தோம்’ என்றோம். பிரிவு  உண்டா என்று கேட்காதீர்கள். கழகத்தின் முதல் நோக்கமே பிரிவினைக்கு வித்திடுவது தான். இதற்கு எத்தனை பிரிவுகள் வேண்டுமோ அத்தனை பிரிவுகளும் இங்கு உண்டு. பிரிவில் ஏற்படும் விளைவுகளினால் நம் கஜானா நிரம்ப வேண்டும்; அதிகாரம் வர வேண்டும் என்று பதில் தந்தோம். அவர் மகிழ்ந்து போனார்.

 

 

இனி கழக உடன்பிறப்புகள் இவர் காட்டிய வழியின் படி எந்த ஊழல், இதர சிவில் கிரிமினல் குற்றங்களைச் செய்தாலும் நீதி மன்றம் செல்ல வேண்டாம்.

தமக்குத் தாமே விசாரித்து  (நிரபராதி என்று) நீதி வழங்கிக் கொள்ளலாம். இது எப்படி ஒரு ஆறுதலான செய்தி!

முட்டாள்களே! இந்த இனிய செய்தியை வேண்டி விரும்பி உங்களுடன் பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறோம்.

 

அன்புடன்

தலைவர்

தமிழகத்தில் புதிய கட்சி மு.மு.க. — தேர்தலில் போட்டியிடுமா?(Post No 2575)

fool

Written by S Nagarajan

 

Date: 26  February 2016

 

Post No. 2575

 

Time uploaded in London :–  4-44 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

நையாண்டி மடல்  (மடல் எண் 1)

 

முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்!

 

ச.நாகராஜன்

 

 

அன்புடையீர்,

 

நீஙகள் வெகு ஆவலுடன் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முமுக ( முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்) ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

 

இதை ஏன் தமிழகத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும்.

 

இங்கு இதன் உறுப்பினர்கள் ஒரே நாளில் ஆயிரக் கணக்கில் சேர்ந்து விடுவார்கள் என்பதே காரணம்.

 

இதில் சேர எந்த விதமான தகுதியும் தேவையில்லை என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

 

brit parties

தமிழகத்தின் ஒரு சில துர்பாக்கியசாலிகளைத் தவிர மற்ற அனைவருமே இதில் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

நான் முட்டாள் இல்லையே என்று சொன்னால், ஹ.. ஹ.. ஹ.., நிச்சயமாக நீங்கள் முட்டாள் தான்!

 

நான் முட்டாள், என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொன்னால், அப்புறம் என்ன, நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள், நீங்கள் கழகத்தின் ஆயுள் கால உறுப்பினர் தான்!

 

 

நீங்கள், ‘நான் முட்டாளா, இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என்ற முட்டாள் குழப்பத்தில் இருந்தால், கவலைப் பட வேண்டாம். சேர்க்கப்பட்டவுடன் கியாரண்டியாக நீங்கள் முட்டாள் ஆகி விடுவீர்கள்.

 

ஆக, சேருவதைப் பற்றிய பிரச்சினை இத்தோடு தீர்ந்தது.

அடுத்து நமது கழகத்தின் ஆலோசகர்களாக யார் வேண்டி விரும்பிச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

 

இந்தியாவின் தலை நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் தாம் நமது ஆலோசகர்கள்.

 

 

இவர்களது அபார அறிவுத் திறனையும் அனைவரையும் வழி நடத்தும் பாங்கையும் கண்டு உலகமே வியக்கிறது; அதிசயிக்கிறது.

 

நமது கொள்கைகளை வீடு வீடாக எப்படிக் கொண்டு சேர்க்கிறது என்ற கவலையே எந்த முட்டாளுக்கும் (அது தான் நீங்கள் உறுப்பினர் ஆகி விட்டீர்களே) வேண்டாம்.

 

 

டெல்லியில் உள்ள அனைத்து டெலிவிஷன் சானல்களும் நம்மை வெகுவாக விளம்பரப்படுத்த ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

இதற்காகவே, நரைத்த விக் வைத்த தடியர்( சற்று உடல் பருமனைக் குறிப்பிடுகிறோம்) கீச்சுக் குரலில் கத்திப் பேசும் பேராசிரியர், எதிராளியைப் பேச விடாமல் தானே காச் மூச் என்று கத்திக் கொண்டே இருக்கும் காம்ரேட், மற்றும் அழகிய சல்வார் கமீஸ், நல்ல லிப்ஸ்டிக் மற்றும் மேக்-அப்பில் கவனம் செலுத்தி ஸ்டுடியோவுக்கு வருகை புரியும் பெண்ணியப் போராளி ஆகிய அனைவரும் இந்த டெலிவிஷ சானல்கள் வாயிலாக நமக்கு நல்லாதரவு தினமும் தருவது உறுதி.

 

 

“இந்தியா அறிய விரும்புகிறது” என்ற கர்ஜனைக் குரலுடன் தினமும் நமது நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படும்.

நீங்கள் அறிவாளிகள் (யாராவ்து இருந்தால்) பற்றிப் பயப்பட வேண்டாம்.

 

நமது புதிய அகராதியை அவர்கள் முன் வீசி எறியுங்கள். அவர்கள்  சற்று மறுத்துப் பேசினால்..  .. ஹ. ஹ. அவர்களையே வீசி எறியுங்கள்.

 

 

எடுத்துக் காட்டாக ஒரு வார்த்தையைச் சொல்லி இந்த எமது முதல் மடலை  முடிக்கிறோம்.

 

செகுலரிஸம் என்றால்  மதச்சார்பின்மை என்று அந்த ஆக்ஸ்போர்டும் இதர அகராதிகளும் சொல்வது சுத்தப் பத்தாம் பசலித்தனம். செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தையும் அதைச் சார்ந்த தொன்மத்தையும் நம்பிக்கையையும் அதில் இருக்கும் உறுப்பினர்களையும் இழிவு படுத்துவதே! கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய கொள்கைகளைப் பற்றியோ அவர்களின் தொன்மம், நம்பிக்கை பற்றியோ பேசவே கூடாது. (நமக்கு எதற்கு உடல் ரீதியான விபரீதம்?) இதுவே செகுலரிஸம்.

 

IMG_9517 (2)

இப்படிப் பல புதிய விஷயங்களை நமது ஆலோசகர்கள் அவ்வப்பொழுது கூறிக் கொண்டே இருப்பார்கள். அதனால் நமது முட்டாள்தனம் நீண்ட நெடு நாளாய் இருக்கப் போவது உறுதி.

யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்த மடல் விரைவில் வரும்.

 

அன்புடன்

முமுக தலைவர்

 

 

மூன்றாம் கடிதம்:மாமிகளின் துயரமும் மருமக்களின் கொண்டாட்டமும் (Post No. 2570)

ATTU URAL

Compiled  by London swaminathan

 

Date: 24 February 2016

 

Post No. 2570

 

Time uploaded in London :–8-25 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 
(குறைந்தது 75 ஆண்டு பழமையான விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுத்தது; நேற்றும், அதற்கு முந்திய நாளும் 2 மாமிகளின் கடிதங்கள் வெளியானது. இது மூன்றாவது கடிதம்)

 

 

என்னருமைக் குமாரத்தியே,

 

நான் இக்கடிதம் எழுதும்போது என் மனம் என்னை விட்டுச் சென்று எங்கெங்கோ அலைகின்றது. இவ்விடத்தில் நான்படும் துயரங்களையெல்லாம் கடிதத்தின் மூலம் எப்படித் தெரிவிக்க முடியும்? ஆயினும் யானடைந்திருக்கும் துன்பங்களைப் பிறரிடம் கூறினால் என் மனது சற்றே தேறுதலடையுமென்றே இச்சிறு கடிதத்தை வரையலானேன்.

 

என்னுடன் பிறந்த அண்ணனுக்கு நான் தேடிவைத்த தேவியால் நான் அடைந்த துன்பம் போதும். அதை நினைக்க நினைக்க என் மனம் பகீர் பகீரென்று திடுக்கிடுகின்றது.

 

கல்யாணமாகுமுன் நீங்கள் எனக்குச் சொன்ன நற்புத்திகளெல்லாம் துற்புத்திகளாகத் தோன்றின. பட்டபின் புத்தி வந்துவிட்டது,.ஐயோ என் தலைவிதியை என் சொல்வேன்? நமது பந்துக்களில் ஒரு பெண்ணைக் கட்டியிருந்தால் அவள் மாமியார் என்னும் பக்தி விசுவாசத்தை வைத்து சற்று கீழ்ப்படிந்து  நடந்து எனக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்திருப்பாள். அல்லது நாட்டுப் புறங்களிலிருந்து ஒரு பெண்ணைக் கொண்டுவந்திருந்தால் அவள் கள்ளம்,கபடின்றி இருந்திருப்பாள். உன் அண்ணன் நாட்டுப்புறங்கள் எல்லாம் உதவாது, ‘நான்சென்ஸ்’ என்று சொல்லிவிட்டபடியால், பட்டினத்தில் பெண்ணைக்கொள்ள வேண்டியதாயிற்று.

 

அவள் யாதொரு வீட்டு வேலையும் செய்கிறது கிடையாது .எல்லாம் நானே செய்துதீர வேண்டும். அதிகாலையில் எழுந்து மற்ற பெண்களைப்போல அலுவலைப் பார்க்காமல், , அவள் நன்றாகப் பொழுது விடிந்த பின், சுமார் எட்டு மணிக்கு எழுந்து, பள்ளியறையை விட்டு வெளியே வந்து பல் துலக்கிக்கொண்டு, ஒழுங்காகத் தலையைச் சீவி மினுக்கி, தளுக்குப் பொட்டிட்டுக்கொண்டு, அண்டை அயலார் பெர்ரியோர், சிறியோர் என்ற மரியாதையை கிஞ்சிற்றேனும் கவனியாமல் உன் அண்ணன் எதிரே நின்று கொஞ்சிக் குலாவி வார்த்தையாடிய பின், பலகாரம் சாப்பிட வருவாள்.

 

இதற்குள்ளாக நான் அதிகாலையில் எழுந்திருந்து, வீடு பெருக்கி, பாத்திரம் சுத்தம் செய்து, காப்பி போட்டு, ஏதேனும் பலகாரம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் உடம்பு சரியில்லாததால், அதிகாலையில் எழுந்து காப்பிபோடாவிட்டாலும், என்னை முகத்தால் சுட்டு, ஜாடை மாடையாகத் திட்ட ஆரம்பிப்பாள். இதென்ன இழவு, தின்கிறதற்கு ஆட்கள் இருக்கிறார்களேயொழிய, வேலை செய்வதற்கு ஆட்கள் கிடையாதா? ஒருதரம் சொன்னால் உரைக்காதா? எந்நேரமும் இந்த வீட்டில் பெரிய ரோதனயாய்விட்டது. படுக்கையிலிருந்து எழுந்தவுடன் காப்பி சாப்பிட்டோம், சந்தோஷமாக இருந்தோம் என்பதே இல்லை. இங்கே நாங்கள் என்ன லட்சாதிபதிகளா? கையால் உழைத்தால் தானே கூலி கிடைக்கும். காலை நீட்டிக்கொண்டு, கணக்கு வழக்குப் பார்க்காமல் உனக்கென்ன, எனக்கென்ன, கணக்கென்ன, வழக்கென்ன என்று இப்படி இருந்தால் குடும்பம் எப்படி நடக்கும்? என்று சரமாரியாகப் பொழிவாள். இன்னும் சொல்லொணாத வார்த்தைகளையும் பொழிவாள். நானவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு, “பகவானே! என் தலைவிதி இப்படியாயிற்றே,மருமகள், மருமகளென்று மகிழ்ந்தேனே. இப்போது என் மகிழ்ச்சியெல்லாம் இகழ்ச்சி ஆய்விட்டதே. சர்வ ஜீவ தயாபரனே! என்னை இரட்சித்தல் வேண்டும்” என்று வேண்டி காலத்தைக் கழித்து வருகிறேன்.

bags on back of women

அதிகாலையிலெழுந்து யான் காப்பி, பலகாரம் தயாராக வைத்திருந்தால், அவள் அதை எடுத்துக்கொண்டு அன்ன நடை நடந்து, அலங்காரமாகத் தன் பள்ளியறைக்குச் சென்று மேஜை மீது வைத்துவிட்டு, எதிர் எதிராக உன் அண்ணனுடன் உட்கார்ந்து ஆனந்தமகத் தின்று தாம்பூலமருந்தியபின், இருவரும் அவ்வறையைவிட்டு வெளியே வருவார்கள். யான் வேலைக்காரியைப் போல, அவ்வறைக்குள் போய் சுத்தம் செய்யவேண்டும்.பிறகு சமையல் வேலை.

 

உன் அண்ணன், என்னைத் தாயார் என்று சற்றேனும் யோசியாமல், வேலையாளை நியமிக்காமல், துரை போலத் தன் மனைவியுடன் ஆனந்தமாகக் காலம் கழித்துவருகிறான். ஈசன், இறுதி நாளில் எனக்கு இந்தக் கஷ்டத்தை வைத்தான். மாமியார் என்ற பட்டம் எனக்குக் கிடையவே கிடையாது. ஏதாவது நற்புத்தி கூறப்புகின், உனக்கென்ன பெரியதனம்? மூலையில் நாரிக்கிட, இதற்காகவா உன்னை அழைத்தது? என்று உன் அண்ணன் சொல்லி விடுகிறான். அப்புறம் அச்சிறுக்கி என்னை எப்படி மதிப்பாள்? அவளும் என்னை அலட்சியம் செய்கிறாள்.

 

அந்தச் சிறுக்கியோ பட்டினத்துப் பெண்ணாகையால் தினமும் தவறாமல் ஒழுங்காக ஸோப் பூசிக்கொண்டு குளித்துவிட்டு நைஸாக உடையை உடுத்திக்கொண்டு சல்லா முந்தாணியைப் பின்புறம் சொருகாமல் தாசிகளைப்போல

தொங்க விட்டுக்கொண்டு, முழங்கைக்குக் கீழ் குச்சி ரவிக்கையை அணிந்து மேனா மினுக்கியைப்போல காலம் கழிக்கிறாள். நான் புழுக்கைச் சிறுக்கியைப்போல கரித்துணியைக் கட்டிக்கொண்டு அடுப்பண்டையி லிருக்கவேண்டியதுதான். எனக்குத் துணிமணி இருக்கிறதா என்று கவனிப்பதேயில்லை. யானே அச்சிறுக்கிக்குத் தெரியாமல் உன் அண்ணனிடம் என் மனக்கவலையைச் சொன்னாலும் “டுஷ், டாம், கூஸ், அதெல்லாம் என் காதில் போடாதே. உனக்கிஷ்டமிருந்தால் இங்கேயிரு. இப்படி வீண் கதையை வளர்த்துக்கொண்டு என் மானத்தை வாங்குவதாயிருந்தால் வீட்டை விட்டு ஒருவரிடமும் சொல்லாமல் வெளியே போய்விடு” என்கிறான். என் பிள்ளையே எனக்கு சத்ருவாக இருந்தால் என்னை யார் காப்பாற்றுவார்கள்? யான் இவ்விடத்தில் இருக்கும் துன்பங்களையொழித்துவிட்டு, உன்னிடம் வந்து, இருக்கும் பணக்காசுடன் வாழலாமென்றாலோ பிள்ளையைப் பிரிந்திருக்க மனம் வரவில்லை. ஒரே பிள்ளை யென்று யான் சீராட்டி பாலூட்டி வளர்த்த பெருமை எனக்குத் தெரியுமேயொழிய வேறு யாரறிவார்கள்? அவந்தான் அவள் மாய்கையில் மூழ்கி தாய் என்ற விசுவாசம் இல்லாமலிருந்தால் யான் அப்படியிருக்க என் மனம் சகிக்கவில்லையே. பிறரை நோவானேன்? அவரவர் வினையை அவரவர் அனுபவிக்க வேண்டு மாகையால் யானிதைப்பற்றி வருத்தப்படுவதால் என்ன பயன்?

a aa i ii

 

அழுதாற் பயனென்ன, நொந்தால் பயனென்ன வாவதில்லை 

தொழுதாற் பயனென்ன நின்னையொருவர் சுடவுரைத்த

பழுதாற் பயனென்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோ

னெழுதாப்படி வருமோ சலியாதிரு யென்னேழை நெஞ்சே!

 

என்றன்றோ ஆன்றோர் கூறியிருக்கின்றனர். என்றைக்கு என் துன்பமொழியுமோ, என்னைக் கடவுள் ரட்சிப்பாரோ? யானறியேன். என் பிள்ளையைப் பற்றி பலரிடம் இகழ்ச்சியாகக் கூறினால் எனக்கே அவமானம். ஆகையால் ஒருவரிடமும் சொல்லாமலும், இவ்விடத்தைவிட்டு நீங்காமலுமிருக்கின்றேன்.

 

உன் அன்புள்ள தாயார்

மாணிக்கவல்லி

 

–சுபம்–

 

இரண்டாவது மாமியின் கடிதம்! (Post No 2567)

beauty with muram

Compiled  by London swaminathan

 

Date: 23 February 2016

 

Post No. 2567

 

Time uploaded in London :– 8-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

(குறைந்தது 75 ஆண்டு பழமையான விநோத விகட சிந்தாமணி – என்ற நூலிலிருந்து தொகுத்தது; நேற்று முதல் மாமி கடிதம் வெளியானது)

 

எனதருமை அக்காள்,

இதுவரை எனது ஆயுள் பரியந்தம் யான் எங்கும் காணாத அதிசயங்களை யெல்லாம் கண்டிருப்பதால், அவற்றையெல்லாம் உனக்குத் தெரிவிக்க வெண்ணியே இக்கடிதத்தை எழுதலானேன். இதை நீ வாசிக்க ஆரம்பிக்கும்போதே அதிசயப்படாதே. முழுதும் வாசித்த பின், மறுபடியும் வாசித்துப் பார்த்து ஆச்சரியப்படு. அஃதென்னவென்றால், அம்மாள் சுமார் ஒரு மாதத்திற்குமுன்பு, பெங்களூருக்கு அண்ணாத்தையைக் காணச் சென்றிருந்து நேற்றையதினம்தான் வந்தார்கள்.

 

அண்ணியைக்கொண்ட பிறகு அம்மாள் அங்குச் சென்றது இதுதான் முதல் தடவை. அம்மாள் இங்குக் காலை ஏழு மணி பெங்களூர் பாசஞ்சர் வண்டியேறி, மாலை சுமார் ஆறு மணிக்கு பெங்களூர் தண்டு ஸ்டேஷனில் இறங்கினார்களாம்.

(தண்டு =கண்டோன்மெண்ட்)

 

முன்னதாகவே கடிதமெழுதியிருந்ததால் அண்ணாத்தை ஆபீஸிலிருந்து நேராக ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்து அம்மாளை இட்டுக்கொண்டு சுமார் ஏழு மணிக்கு வீடு போய்ச் சேர்ந்தார்களாம். அப்போது அண்ணி, மேஜையின் மீது ஒரு ஹார்மோனியப்பெட்டியை வைத்து ஒரு நாற்காலியின்மீது உட்கார்ந்து கூடத்தில் பாடிக்கொண்டிருந்ததாம். அம்மாள் வந்ததைப் பார்த்தும், அண்ணி நாற்காலியைவிட்டு எழுந்திருக்காமல், அப்படியே அசட்டையாய் பாடிக்கொண்டிருந்ததாம்.

IMG_4425

அம்மாளை, எப்போது வந்தீர்கள்? காப்பி சாப்பிடுகிறீர்களா? உடம்பு சௌக்கியமா? என்று ஒரு பேச்சுக்குக்கூட கேட்க வில்லையாம். அம்மாள், வேடிக்கையை யெல்லாம் பார்த்துக்கொண்டே கூடத்தில் உட்கார்ந்தார்களாம். பிறகு இரவு ஒன்பது மணியானதும் அண்ணி, தன் முத்தான வாயைத் திறந்து, ‘அடீ, வேதவல்லி, என்ன சந்தடியே காணோம். சாப்பாடு தயாராய் விட்டதா? மணியென்ன தெரியவில்லையா?’ என்று வேலைக்காரியைக் கேட்டதாம்.

 

உடனே அவள் இரண்டு பாத்திரங்களில் வெந்நீர் கொண்டு வைத்தபின், கைகாலலம்பிக்கொண்டு, ‘என்னாங்கோ! கைகாலலம்பிக்கொண்டு சாப்பிட வங்கோ என்றதும், அண்ணாத்தை மறுபாத்திர ஜலத்தில் கையை மட்டுமலம்பிக்கொண்டு மீதி ஜலத்தை அம்மாளிடம் கொடுத்ததாம். அம்மாள், இந்த ஆச்சரியத்தையெல்லாம் உள்ளேயடக்கிக்கொண்டு, கைகாலலம்பிக்கொண்டபின் சாப்பிட உட்கார்ந்தார்களாம். அண்ணியும், அண்ணாத்தையும் மேஜயின்மீது ஒரு பெரிய வெள்ளிக் கிண்ணியில் அன்னம் போட்டுக்கொண்டு நாற்காலியிலுட்கார்ந்து சாப்பிட்டார்களாம். அம்மாள் கீழே உடகார்ந்து, ஒரு இலையில் வேலைக்காரியிட்ட அன்னத்தை சாப்பிட்டார்களாம். பிறகு அண்ணியும், அண்ணாத்தையும் ஊஞ்சலின் மீதுட்கார்ந்து தாம்பூலமருந்தி இரவு பத்து மணிக்கு சயனித்தார்களாம்.

(சயனி = படு)

 

மறுநாள், அண்ணி நம்மைபோல் அதிகாலையில் எழுந்திருக்கவில்லையாம். காலை எட்டு மணிக்கு எழுந்திருந்து முகம் கழுவி, வேலைக்காரி கொண்டுவந்த பலகாரத்தைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்ததாம். இதையெல்லாம் கேட்கக்கேட்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இவற்றை அண்ணாத்தை கவனித்தும் மௌனமாயிருக்கிறதாம். அது என்ன காரணமோ அறியேன். நிற்க.

 

அம்மாள், அங்கு இருந்த ஒரு மாதமும், அண்ணி படுத்தியபாடு இவ்வளவு அவ்வளவு என்று சொல்லமுடியாது. வேலைக்காரியுடன், அம்மாள் அருகிலிருந்து வேலை செய்யவேண்டுமாம்.

IMG_3322

இல்லாவிடில், “ஆ! இதென்ன, என்னைப்போல ஒன்றுமறியாத மொட்டைப் பெண்ணா, எல்லாம் தெரிந்து போன, பேத்தியெடுத்து நரைத்த கிழவிக்கு எப்படி வேலை செய்யாமலிருக்க மனம் சகிக்கிறது? வேலை என்றால் மாட்டேன், சோறு என்றால் தின்பேன் என்ற கணக்காயிருக்கிறதே இம்மாதிரி மாமியார் இருந்தால், மருமகளுக்கு குறைவேயில்லைதான்! வயதாய்விட்டால் மட்டும் போதுமா? அதற்கேற்ற குணமும் மனமும் வேண்டாமா? என்று ‘பாரதம்’ படி முடிக்குமாம்.

 

அம்மாள்  பதில் பேச பயந்து சும்மாய் இருந்துவிடுவார்களாம். ஒருநாள், மனம் தாளாமல், “ என்னடீ! மாமியார் ஆச்சுதே என்கிற மட்டுமரியாதை இல்லாமல்  என்னை வேலை செய்யும்படி அதிகாரம் செய்கிறாயே. இதற்குத் தானா நான் உன்னைக் கொண்டது? புழுக்கைச் சிறுக்கி! அவ்வளவு தூரம் என்னிடம் வாலாட்டாதே. நீ பணக்காரன் வீட்டுப் பெண்ணாயிருந்தால் எனக்கென்ன?” என்றார்களாம்.

 

உடனே அண்ணி, அம்மாளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, “ நாக்கை உள்ளே வைத்துப் பேசு. என்னையா அடீ, புழுக்கைச் சிறுக்கியென்று ஏசுகிறாய்? என் தகப்பனிடம் சொன்னால் உன் உடம்பிலுள்ள எலும்பைப் பொறுக்கிவிட்டுப் பல்லைத்தட்டிவிடுவார். ஜாக்கிரதை. என்ன, மாமியார் என்றால் இரண்டு கொம்பு முளைத்திருக்கிறதா? அந்த வெங்காய அதிகாரம் எல்லாம் இங்கே செல்லாது” – என்று வாயில் வந்தபடியெல்லாம் பேசி முடித்ததாம்.

அம்மாள், இதைக்கேட்டு நடுநடுங்கிப் போய், பேயிடம் அகபட்டுக் கொண்டது போல திகிலடைந்து, தலை மயிரை விடுவித்துக் கொண்டு ஒரு மூலையில் போய் படுத்துக்கொண்டார்களாம்.மற்றவைகளைப் பிறகு எழுதுகிறேன்.”

 

உன் அன்புள்ள சகோதரி

கமலா