காதல் பைத்தியமும் பக்திப் பைத்தியமும் (Post No. 2933 )

sambandar appar meet

Article written by London swaminathan

 

Date: 1 July 2016

Post No. 2933

Time uploaded in London :– 14-26

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும்.

 

IMG_4415

அஷ்டாங்க மைத்துனம்

 

ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்

சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச

 

-விருத்த வசிஷ்டர்

 

பொருள்:-

ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முதுவசிட்டன் சொல்லுகிறான்.

 

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:

 

அப்பர் தேவாரம்

 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே

—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258

 

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.

appar2

கடவுளை காதலனாக, தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானனாக,வேலைக்கரனாக பார்த்து உரிமை கொண்டாடும் அற்புதமான அணுகுமுறை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இதை அடியார்களின் பாடலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை பல மொழிகளில் இக்கருத்துகள் உள. நமது காலத்தில் பாரதியார், இதே போல கண்ணபிரானைப் பாடிப் பரவியுள்ளார்.

 

பக்தனின் ஒன்பது நிலைகளை நாரத பக்தி சூத்திரம், பாகவதம் ஆகியவற்றிலும் காணலாம்.

 

பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:

 

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)

 

அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.

 

ஆக, பக்திப் பைத்தியமும் காதல் பைத்தியமும் ஒன்றே! இவ்வளவையும் எழுதிய  நம்முடைய முன்னோர்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக எழுதிவைத்து விட்டனர்.

 

பக்திப் பைத்தியம், பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அது நித்தியானந்தம், பிரம்மானந்தம் தரும். பக்திக்கடலில் நீந்தி, முக்தி நிலையை அடைந்து விடுவர்.

 

ஆனால் காதல் பைத்தியமோ, சிற்றின்பமே; மேலும் அது சம்சார சாகரத்தில் — அதாவது பிறவிப் பெருங்கடலில்  – நம்மை மூழ்கடித்து, தத்தளிக்கச் செய்துவிடும். இது திகட்டக்கூடியது. முன்னது தெவிட்டாத சுவயுடைத்து என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி!

 

–சுபம்–

பெண்களுடன் வாதாடாதே (Post No.2913)

RelationshipFighting

Article written by London swaminathan

 

Date: 22 June 2016

 

Post No. 2913

 

Time uploaded in London :– 8-33 AM

 

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனிதனுக்கு இழிவை ஏற்படுத்தும் 6, பெருமை தரும் 4, விஷயங்கள்

donkey ride

பால சகித்வம் = சிறுவர்களுடன் நட்பு (பக்குவம் அடையாதோருடன் நட்பு)

அகாரண ஹாஸ்யம் = காரணமில்லாமல் தனக்குத் தானே சிரித்தல் (மொபைல் போன், ஐ பேட் – இவைகளைப் பார்த்து பொது இடங்களில் சிரித்தல்)

ஸ்த்ரீஷு விவாதோ= பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் (மனைவி, சஹோதரிகளுடனோ, அடுத்தவீட்டுப் பெண்களுடனோ சண்டை போடுதல்)

 

அசஜ்ஜன சேவா = கெட்டவர்களுக்குச் செய்யும் உதவி (லஞ்சம் கொடுத்தல்)

கார்தப யானம் = கழுதை சவாரி (ஓட்டை காரில் சவாரி செய்தல்)

அசம்ஸ்க்ருதவாணி = கொச்சை மொழியில் பேசுதல் (பண்பற்ற மொழி; கீழ்மக்கள் பயன்படுத்தும் மொழி)

ஷட்சு = இந்த ஆறில்

நர: – மனிதன்

லகுதாம் = சிறுமையை

உபயாதி = அடைகிறான்.

 

பாலசகித்வமகாரணஹாஸ்யம் ஸ்த்ரீஷு விவாதோ(அ)சஜ்ஜனசேவா

கார்தபயானமசம்ஸ்க்ருதவாணீ ஷட்சு நரோ லகுதாமுபயாதி

Xxxx

school boys

பெருமை தரும் நான்கு விஷயங்கள்

एको धर्मः परं श्रेयः क्षमैका शान्तिरुत्तमा।
विद्यैका परमा दृष्टिरहिंसैका सुखावहा॥

ஏகோ தர்ம: பரம்ஸ்ரேய: க்ஷமைகா சாந்திருத்தமா

வித்யைகா பரமா த்ருஷ்டிரஹிம்சைகா சுகாவஹா

 

 

தர்மம் (என்ற ‘ஒன்று’ ) மாபெரும் மேன்மையைத் தரும்

பொறுமை (என்ற ‘ஒன்று’ ) சிறந்த அமைதியைத் தரும்

கல்வி (என்ற ‘ஒன்று’ ) அளவற்ற நிறைவைத் தரும்

அஹிம்ஸை (என்ற ‘ஒன்று’ ) தொடர்ந்து சுகத்தைத் தரும்.

–உத்யோக பர்வம், மஹாபாரதம்

 

–subam–

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்! (Post No.2896)

eyeanat

Article written by S.NAGARAJAN

 

Date: 15 June 2016

 

Post No. 2896

 

Time uploaded in London :–  6-17 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

17-6-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

ச.நாகராஜன்

eye3

அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி

 

 

அறிவுஜீவியான இண்டிகோ  பையன் (மிகவும் அறிவு மிக்கவர்களை இண்டிகோ என்று அழைப்பர்) தான் முற்பிறவி ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன் என்று சொன்னதைப் பார்த்தோம். ரஷியாவைச் சேர்ந்த இந்தப் பையனின் பெயர் போரிஸ்கா (Boriska). நாளுக்கு நாள், வளர வளர, வயது ஏற ஏற, தன் வியத்தகு அறிவினால் அனைத்து விஞ்ஞானிகளையும் அசத்தி வருகிறான் போரிஸ்கா.

 

 

அறிவியலுக்குச் சவால் விடும் வகையில் உலகெங்கும் பலர் இப்படி அடிக்கடி பிறந்து கொண்டே தான் இருக்கின்றனர். விஞ்ஞானிகளால் திகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பார்ப்பதற்கு ஆதாரமாக இருக்கும் விழிகளின் கட்புல மேலுறை (Visual Cortex) இல்லாமல் ஒருவரால் பார்க்க முடியுமா? முடியும் என்று சொன்னால் விஞ்ஞானிகள் என்ன, சாமான்ய மனிதர்களே சிரிப்பார்கள்.

விழிகளின் பார்வைக்கு ஆதாரமான கார்டெக்ஸ் இல்லாமல் பார்ப்பது எப்படி என்று கேலியும் செய்வார்கள்.

ஆனால் மருத்துவ ரீதியாக “பார்வையற்ற” ஒருவர், விஷுவல் கார்டெக்ஸ் இல்லாமல் பார்க்க முடிகிறது என்றால் அதை விஞ்ஞானிகளாலேயே நம்ப முடியவில்லை!

 

 

‘பயலாஜி’ என்ற விஞ்ஞான இதழில் 2008ஆம் ஆண்டு இவரைப் பற்றிய அதிசய விவரங்கள் வெளியிடப்பட்டன.

இவரது முழுப்பயரைச் சொல்லாமல் இவர் டிஎன் (TN) என்று குறிப்பிட்ப்பட்டார்

 

டி என் ஒரு டாக்டர். துரதிர்ஷ்டவச்மாக இவர் இருமுறை பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இரு விழிகளின்  மேலுறையும் முற்றிலுமாக பழுதுபட்டன. உறுப்புகள் சிதைந்தே விட்டன. ஒன்றும் செய்ய முடியாத நிலை.

 

ஆனால் இவர் எதிரில் இருக்கும் தடைகளை எல்லாம் “பார்க்கிறார்” அல்லது உணர்கிறார்.

இதை நம்ப  மறுத்த விஞ்ஞானிகள் இவருக்கு ஒரு சோதனையை வைத்தனர்.

 

நெதர்லாண்ட்ஸ் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை முன்னின்று நடத்தியது.

 

ஒரு ஹாலில் ஏராள்மான தடைகளை ஏற்படுத்தி   – நாற்காலி,மேஜை ஆகியவற்றைக் குறுக்கும் நெடுக்குமாக  வைத்து – அதில் இவரை நடந்து போகச் சொன்னார்கள்.

என்ன ஆச்சரியம், சரியாக கண்பார்வை உள்ளவர் போல இவர் தடையின்றி எதன்  மீதும் இடிக்காமல் நடந்தார்.

இது எப்படி சாத்தியம் என்று யாராலும் விளக்கமுடியவில்லை.

மூளைக்கு இன்னொரு பாதை இருக்கிறதா – பார்ப்பதற்கு?!

பிரப்ல விஞ்ஞான இதழான, ‘தி ஸயின்டிஸ்ட்’ பத்திரிகையில் இவர் இன்னொருவரின்  முகபாவத்தில் ஏற்படும் கோபம் மற்றும் பயத்தைக் கூட உணர்கிறார் என்று எழுதப்பட்ட கட்டுரை உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது.

 

 

உலகில் பார்வையற்ற நிலையில் இப்படிப் பார்க்கும் ஒரே நோயாளி இவர் தான் என்று அறிவிய்ல் உலகம் கூறுகிறது.

இவர் எப்படிப் பார்க்கிறார் என்ற மர்மத்தை விடுவிக்க இன்னும் முடியவில்லை!

elizabeth susler

இன்னொரு அதிசயப் பெண்மணி எலிஸபத் சல்ஸெர் (Elisabeth Sulser) என்பவர். இவருக்கு இரு புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்கின்றன.

 

பதினாறு வயதிலேயே அவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். தொழில் துறையில் இவர் ஒரு இசைக் கலைஞர்.

2004, 2005ஆம் ஆண்டுகளில் ஸ்விட்ஸர்லாந்தில்  ஜூரிச் பல்கலைக் கழகம் இவரை ஆய்வுக்காக அழைத்தது.

 

ஒலியைக் கேட்கும் போது அதன் வடிவத்தை இவர் உணர்கிறார். உதாரணமாக இசை ஸ்வரத்தில் சி நோட் (C Note)

இசைக்கப்பட்டால் அதை சிவப்பாக இவர் காண்கிறார். டி நோட் என்றால் நீல நிறத்தை இவர் காண்கிறார். கலைடாஸ்கோப் போல பல்வேறு வண்ணங்களை ஸ்வர மாறுதலுக்குத் தக்கபடி இவர் தொடர்ந்து காண்கிறார்.

 

 

அதே போல இசையில் ஒரு நோட்டிற்கும் இன்னொரு நோட்டிற்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் இவர் நாக்கில் சுவையை உணர்கிறார். ஒரு சமயம் புளிப்புச் சுவை. இன்னொரு சமயம் கசப்புச் சுவை. ஒரு சமயம் நீரை அருந்தும் உணர்வு. இன்னொரு சமயம் ஐஸ் க்ரீம் சாப்பிடும் உணர்வு. ஒவ்வொரு ஸ்வர இடைவெளிக்கும் இடையே ஒவ்வொரு விதமான சுவை.

 

 

இந்த அரிய அனுப்வத்தை அறிவியல் ‘ஸினஸ்திசியா’ (Synesthesia) என்று அழைக்கிறது. உலகில் உள்ள 750 கோடி பேரில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பேருக்கே இப்படிப்பட்ட இரு புலன்களின் கலப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்! மூளையில் உள்ள சில அமைப்புகள் தீவிரமாக இணைக்கப்பட்டிருப்பதால் இப்படி புலன் கலவை ஏற்படுகிறதாம்.

 

 

ஸினஸ்தீசியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. பல்வேறு உணர்வுகளின் அனுபவம் என்று இதற்குப் பொருள்.

 

இப்படிப்பட்டவர்களில் வெளி உலகிற்குத் தெரியும் வகையில் ஆய்வுக்கு வந்த முதல் இசைக் கலைஞர் இவர் என்பதால் இவருக்கு ஏகமான புகழ். விஞ்ஞானிகளும் இவரை எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அழைத்து சோதனைகளைச் செய்து வருகின்றனர்.

7_Sulser

 

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இரு புலன் உணர்வுகளை அறிவியல் இனம் கண்டுள்ளது. சிலருக்கு எண்களை வண்ணங்கள் மூலமாக மட்டுமே அறிய  முடிகிறது! எந்த எண்ணைச் சொன்னாலும் அவர்களுக்கு அதற்குரிய வண்ணமே தோன்றும்!

 

ஆனால் இப்படி ஏன் அதீத புலன் உணர்வு சிலருக்கு  மட்டும் வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

விநோதமான உலகத்திலே வித விதமான் அதிசயங்கள்! அதைச் செய்து காட்டும் மனிதர்கள்!! அறிவியலும் விடுவதாயில்லை. அவர்களின் மீதான தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறது!!!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

இயற்பியலில் பெரும் மேதை ஜான் பர்டீன் (John Bardeen – தோற்றம் 23-5-1908 மறைவு 30-1-1991)

இயற்பியலில் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும்.

 

john bardeen

டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்ததற்காக 1956இல் முதல் முறையாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சூபர்கண்டக்டிவிடி துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக 1972இல் இரண்டாம் முறையாக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 

அதிகம் பேசாத மேதை இவர். சொற்களை யோசித்துப் பேசுவார்.

டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிப்பு மின்னணுவியலில் ஒரு பிரம்மாண்டமான மாறுதலை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் உருவாக இது பெரிதும் காரணமாக அமைந்தது.

முதல் முறை பரிசைப் பெற இவர் ஸ்வீடனுக்குச் சென்றார். சாதாரணமாக நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தன் குடும்பத்துடன் விழாவிற்குச் செல்வது வழக்கம்.

 

 

ஜான் பர்டீனுக்கு  மூன்று  மகன்கள். மூவரில் ஒருவரை மட்டும் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றார் அவர்.

அவரை வரவேற்ற ஸ்வீடன்  மன்னர் ஆறாம் குஸ்டாஃப் (King Gustaf VI) , “கூட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?: என்று அவரிடம் வினவினார். தன் மகன்களில் ஒருவர் மட்டுமே தன்னுடன் வந்திருப்பதாக பர்டீன் பதிலளித்தார்.

 

 

உடனே அவரைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் மன்னர். அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டாமா என்றார் அவர்.

எப்போதுமே மெதுவாக பதில் சொல்லும் பர்டீன் இப்போது, உடனடியாக, “அடுத்த முறை குடும்பத்துடன் வருகிறேன்” என்று பதிலளித்தார்.

 

 

அனைவரும் பிரமித்துப் போயினர். ஒருமுறை நோபல் பரிசு பெறுவதே முடியாத காரியம். அடுத்த முறை அழைத்து வருவதாவது?

 

ஆனால் மேதை தன் வாக்கை மெய்யாக்கிக் காட்டினார்.

1972இல் இரண்டாம் முறை நோபல் பரிசைப் பெற்றார்; விழாவிற்கும் குடுபத்துடன் சென்றார்!

************

 

அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792)

mother-and-baby-portrait-drawing-kate-sumners

Translated by london swaminathan

 

Date: 8 May 2016

 

Post No. 2792

 

Time uploaded in London :–  6-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

இந்தப் பகுதியில், அன்னை (மாதா) பற்றிய பழமொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருத பழமொழிகள்- பகுதி-7

(பகுதி 6 ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது)

mother baby

104.கா நாம மாதா புத்ரக அஸ்ய அபராதம் ந மர்ஷயதி – பிரதிமா நாடக

தனது குழந்தையின் தவறை மன்னிக்காத தாயும் உண்டோ?

 

105.குபுத்ரோ ஜாயதே க்வசித் அபி குமாதா ந பவதி –தேவி அபராதக்ஷமாஸ்தோத்ரம்

கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.

 

106.ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசீ

-கஹாவத்ரதனாகர்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே

 

107.ஜீவன் மாத்ருக ஏவ நூனம் அதுலம் ப்ருங்தே சுகம் ஸ்வாலயே-கஹாவத்ரதனாகர்

தாய் உயிரோடிருக்கும் வரைதான்  வீட்டில் சுகம்.

 

108.து: கம் ஹி ஜனனீனாம் சுதுஸ் சுகம் –ப்ருஹத் கதா மஞ்சரி

அம்மாக்கள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

 

109.துஹிது: ப்ரதானகாலே து:கசீலா ஹி மாதர:

பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகையில் தாயார் மனம் தவிக்கும்.

mother rangoli

110.ந மாது: தைவதம் பரம்- சாணக்ய நீதி

அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை (தாயினும் பெரிய கோயில் இல்லை)

 

111.பதிதா குரவஸ்த்யாஜ்யா நது மாதா கதாசன

மேலிருந்து கீழே வீழ்ந்த பெரியோரை விட்டுவிடலாம், ஆனால் அம்மாவை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.

 

112.பாததே ந நிஜ ஆபத்யம் மார்ஜாரீ தசன ஆவலி.

தாய்ப் பூனையின் பற்கள், பூனைக்குட்டிகளுக்கு தீங்கு செய்யா (கோழி மிதித்து குஞ்சுகள் சாகா)

 

113.மாதா கில மனுஷ்யாணாம் தேவதானாம் ச தைவதம் – மத்யமவ்யாயோக

எல்லா மனிதர்களுக்கும் அம்மாவே தெய்வத்தின் தெய்வம்.

 

114.மாதா பித்ருப்யாம்  சப்தஸ்ஸன்ன (சப்த:+சன்+ ந) ஜாது சுகமஸ்னுதே – கதாசரித்சாகரம்

பெற்றோர்களின் சாபத்துக்குள்ளான பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழமுடியாது.

 

115.மாத்ரு ஜங்காஹி வத்சஸ்ய ஸ்தம்பீ பவதி  பந்தனே – ஹிதோபதேசம்

அம்மாவின் கால்களே, குழந்தைகளைத் தாங்கும் தூண்கள் (தாயார்தான் ஆதரவு தரும் கொழுகொம்பு)

 

116.மாத்ரு தேவோ பவ பித்ருதேவோ பவ- தைத்ரீயோபநிஷத்

தாயை தெய்வமாக வணங்கு; தந்தையை தெய்வமாக வணங்கு.

 

117.மாத்ருதோஷோ ந தோஷ: -ப்ரதிமா நாடக

அம்மாவிடமுள்ள குறை, குறையாகாது

 

118.மாத்ரா சமம்  நாஸ்தி சரீர போஷணம் – சுபாஷிதாவலி

தாயைப்போல உடம்பைக் கவனிப்பவர் எவருமிலர்.

 

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை!

119.யாத்ருசீ ஜனனீ லோகே புத்ரீ பவதி தாத்ருசீ

— கஹாவத்ரதனாகர்

தாய் எப்படியோ அப்படியே மகள் இருப்பாள் (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை).

mother_love_

120.ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேனாம் அதிரிச்யதே—மனுஸ்மிருதி 2-145

தந்தையைவிட ஆயிரம் மடங்கு கௌரவுத்துக்குரியவர் தாய்.

 

121.ஹஸ்த ஸ்பர்சோ ஹி மாத்ரூணாம் அஜலஸ்ய ஜலாஞ்சலி: -ப்ரதிமா நாடக

தாயின் அரவணைப்பு, தாகத்தால் தவிப்பவனுக்குக் கிடைத்த தண்ணீர் போல சுகம் தரும்.

 

 

–சுபம்–

 

எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)

bob painting 3

Written by london swaminathan

 

Date: 6 May 2016

 

Post No. 2787

 

Time uploaded in London :– 10-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bob painting 2

கல்வி அழகு

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்

கல்வியழகே அழகு – நாலடியார் 131

 

சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)

நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.

xxx

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

 

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

Xxx

bob painting1

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

Xxx

thalai atti bommai

வள்ளுவன் கூறுகிறான்

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

 

–Subham–

 

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

மரியாதைக்குரிய ஐந்து(5): மனு அறிவுரை (Post No.2749)

IMG_5163 (2)

Translated  by London swaminathan

Date: 23 April 2016

 

Post No. 2749

 

Time uploaded in London :– 9-39 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

IMG_3259

1.வித்தம் பந்துர்வய: கர்மவித்யா பவதி பஞ்சமீ

ஏதானி மானஸ்தானானி கரீயோ யத்யதுத்தரம்

மனு ஸ்மிருதி 2-136

 

வித்தம் – பணம்/செல்வம்

பந்து- உறவினர்

வய: – வயது

கர்ம- ஒருவனுடைய தொழில்

வித்யா – கற்ற கல்வி/அறிவு

இந்த வரிசையைக் கவனியுங்கள். கடைசியில் மனு அழகாக முடிக்கிறார். முதலில் சொன்னதைவிட அடுத்தது மிகவும் முக்கியமானது. அதாவது பணத்தை விட உறவினர், உறவினரைவிட வயது, வயதைவிட ஒருவனுடைய கடமை/தொழில், அதைவிட ஒருவன் கற்ற கல்வி. அதாவது கல்விக்கும் அறிவுக்கும்தாம் முக்கியத்துவம்.

 

Xxx

 

IMG_3203

2.பூஜிக்கத் தக்க 5 பேர்

2.பஞ்சைவ பூஜயன்  லோகே யச:  ப்ராப்னோதி கேவலம்

தேவான் பித்ரூன் மனுஷ்யாஞ்ச  பிக்ஷூனதிதி பஞ்சமான்

–விதுரநீதி 1-80

 

தேவா: – கடவுள்

பித்ரு – முன்னோர்கள் (நீத்தார்)

மனுஷ்யா: – மனிதர் (மனிதனாக வாழும் மனிதன்; சிலர் மிருகம் போலவும் வாழ்கின்றனர்  அன்றோ!)

பிக்ஷு- சாது, சந்யாசிகள்

அதிதி – விருந்தினர்

Xxxx

 

3.யார் யாருக்கு விருது/பட்டம்/பரிசு கொடுத்து கௌரவிக்க வேண்டும்?

3.பூஜ்யா வித்யாபுத்திபௌருஷாபிஜனகர்மாதிசயதஸ்ச புருஷா:

–அர்த்தசாஸ்திரம் 3-20-23

வித்யா- கல்வியில் தேர்ச்சி பெற்றோர்

புத்தி- புதிய கண்டுபிடிப்புகள்; யோஜனைகள் சொன்ன புத்திமான்கள்

பௌருஷ – வீரதீரச் செயல் புரிந்தோர்

அபிஜன – உயர்குலத்தில் பிறந்தோர் (அறிஞர்கள், அரசர்களின் வாரிசுகள்)

கர்மாதிசய: – அற்புதப்பணியாற்றுவோர் (கின்னஸ் சாதனை போல சாதனை புரிவோர்)

Xxxx

IMG_4859 (2)

4.நன்கு கவனிக்கப்படவேண்டிய/உபசரிக்கப்பட வேண்டிய 5 பேர்

4.அதிதிர்பாலக: பத்னீஜனனீ ஜனகஸ்ததா

பஞ்சைதே க்ருஹிண: போஷ்யா இதரே ச  ஸ்வ சக்தித:

–சுபாஷித ரத்ன பாண்ட்காரம் 157/206

அதிதி – விருந்தினர்

பாலகா: – பாலர்கள் (சிறுவர், சிறுமியர்)

பத்னீ – மனைவி

ஜனனீ – தாயார்

ஜனக: – தந்தை

IMG_4545

–சுபம்–

 

 

‘வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை’—வால்மீகி (Post No 2744)

IMG_4384

Compiled  by London swaminathan

Date: 21 April 2016

 

Post No. 2744

 

Time uploaded in London :– 13-51

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி- பார்யா பற்றிய பொன்மொழிகள்

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 5

dance in shade

67.அடுத்தவன் மனைவி பற்றி விமர்சிப்பது பண்புடையாளர் செயலன்று

-சாகுந்தலம், காளிதாசன்

அநார்ய: பரதார வ்யவஹார:

Xxxx

68.மற்றவர் மனைவியை கூர்ந்து கவனிப்பது தவிர்க்கப்பட வேண்டியது

-சாகுந்தலம், காளிதாசன்

அநிர் வர்ணனீயம் பர  களத்ரம்

Xxxx

69.மனைவி என்பவள் அணுசரணையாக இருக்க வேண்டும்.

–க்ரந்தஸ்தகாதகாகு

அனுகூல ரசா பார்யா

Xxxx

70.மனைவி இல்லாத வீடு சூன்யமானது

(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)

–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)

அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்

Xxxx

 

bob painting 5

71.கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)

அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய

Xxxx

72.மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)

-சாணக்ய நீதி சாஸ்த்ரம்

அலோஹமயம்  நிகடம் களத்ரம்

Xxxx

73.கட்டுபடாத மனைவி  எதிரி

-சாணக்ய நீதி

அவிநீதா ரிபு: பார்யா

Xxxx

74.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்

–பாரத மஞ்சரி

காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:

Xxxx

75.க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்

–குமாரசம்பவம், காளிதாசன்

அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.

Xxxx

 

IMG_4360

76.கணவனுடைய அன்பினால், உறவினர்களையும் விட்டுவிடுவர் பெண்கள்.

த்ருணம் பாந்தவபக்ஷோ ஹி பர்த்ருஸ்நேஹேன யோஷிதாம்

—-பாரத மஞ்சரி

Xxxx

77.இல்லாள் இருப்பதால்தான் அதை இல்லம் என்கிறோம்.

ந க்ருஹம் க்ருஹம் இதி ஆஹு: க்ருஹீணீ க்ருஹம் உச்யதே

–பஞ்சதந்திரம்

Xxxx

78.மனிதனுடைய மனைவி ராக்ஷசன் மனைவியாக இருக்க் வாய்ப்பில்லை

ந மானுஷீ ராக்ஷசஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி

–வால்மீகி ராமாயணம், 5-24-8

Xxxx

79.அடுத்தவன் மனைவியைப் பார்ப்பது (உற்று நோக்குவது) அறநெறியன்று.

–ம்ருச்சகடிக, சூத்ரகர்

ந யுக்தம் பர களத்ர தர்சனம்

Xxxx

80.காதலனைக் காணப் போகும் பெண்ணை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

ந சக்யாஹி ஸ்த்ரியோ ரோத்தும் ப்ரஸ்திதா தயிதம் ப்ரதி

—-ம்ருச்சகடிக, சூத்ரகர்

 

Xxxx

 

 

81.வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை

–வால்மீகி ராமாயணம் 4-24-43

ந சூர பத்ன்ய:பரிதேவயந்தி

Xxxx

82.சுயமரியாதையுள்ள பெண்கள், தனது கணவன், மற்ற பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவதில்லை

ந சஹந்தே ஹி மானின்ய: பத்யுர் அன்யா சமாகமம்

-ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

 

IMG_4508

83.கணவன் மீது பற்றுடைய பெண்கள், அவர்களின் கணவரின் அன்புவலைக்குள் வேறு யாரும் வருவதை சகிப்பதில்லை.

ந சஹந்தே ஹி  ராகிண்யோ பர்து: ப்ரேமபதம் ஜனம்

—ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

84.சக்களத்திகளுடன் பெண்கள் போட்டி போடுவது நிரூபிக்கப்பட்ட உண்மையே

–கதா சரித் சாகரம்

நிசர்கசித்தோ நாரீணாம் சபத்னீஷு ஹி மத்சர:

Xxxx

 

85.கணவன் இல்லாமல் ஒரு பெண் வாழ்வது மிகவும் கடினம்

–வால்மீகி ராமாயணம், 2-29-7

பதிஹீனா து யா நாரீ ந, சாசக்ஷ்யதி ஜீவிதும்.

Xxxx

86.கடும் கஷ்டத்திலும் மனைவியை யார் கைவிடுவான்?

பராபவே அபி டாராணாம் உபேக்ஷாம்க்ஷமதே நு க:?

–பாரத மஞ்சரி

IMG_4885 (2)

 

–சுபம்–

 

 

ஒரு நடிகையின் விநோத ஆசை!

sarah-bernhardt-5

Compiled by London swaminathan

Date: 18 April 2016

 

Post No. 2736

 

Time uploaded in London :–  20-58

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சென்ற நூற்றாண்டின் புகழ் பெற்ற நாடக நடிகை சாரா பெர்னார்ட். அவர் நோவாய்ப்பட்டு படுத்த படுக்கையாய்க் கிடந்தார். அவர் உயிர் பிழைக்க வேண்டுமானால், ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியவுடன் நடிப்பதையே விட்டுவிட வேண்டுமென்று  டாக்டர்கள் அறிவுரை பகன்றனர்.

ஆனால் அவரோ, படுக்கையை விட்டு எழுந்தவுடன் மீண்டும் நடிப்புத் தொழிலுக்கு வந்தார்.

Sarah-Bernhardt-portrait

இவ்வாறு அவர் மீண்டும் நடிக்க வந்தவுடன் ரசிகர்களுக்கு பரம சந்தோஷம். ஒரு பணக்கார ரசிகர் அவரிடம் ,நேரில் போய் உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? சொல்லுங்கள்; எதைக் கேட்டாலும் செய்கிறேன் என்றார். அவரும் தயங்காமல் எனக்கு ஒரு சவப்பெட்டி வேண்டும். நான் நடிக்கத் துவங்கினால், எந்த நிமிடமும் சாவு நேரிடும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள் என்றார். அந்த ரசிகரும் கொஞ்சமும் தயங்கவில்லை. அதற்கு ஏற்பாடு செய்தார்.

 

அந்த ஊரிலேயே மிகவும் புகழ்பெற்ற, மரணக்கிரியை அலுவலத்திலிருந்து நடிகைக்கு தகவல் வந்தது. உங்களுக்கு சவப் பெட்டி செய்யும்படி எங்களுக்கு ஒரு ‘ஆர்டர்’ வந்துள்ளது. உங்களுக்கு எந்த மாதிரி சவப்பெட்டி வேண்டும் என்று சொல்லுங்கள்.

 

உடனே நடிகை சாரா, எனக்கு நல்ல கருங்காலி மரத்தில் சவப்பெட்டி செய்து, அதற்கு வெள்ளியில் கைப்பிடிகள் வையுங்கள் என்றார். சிறிது காலத்துக்குப் பின்னர், அந்த வெள்ளி கைப்பிடிகள், தங்கக் கைப்பிடிகளாக மாற்றப்பட்டன.

இவ்வாறு சவப்பெட்டி செய்யப்பட்ட பின்பும் அவர் நீண்ட நாட்கள் உயிரோடிருந்தார். ஆனால் ஒரு போதும் சவப்பெட்டியைவிட்டு அவர் அகலவேயில்லை. அவருடைய கால் மாட்டிலேயே ஒரு ஸ்டாண்டில் அந்த சவப் பெட்டி வைக்கப்படிருந்தது. அவர் எங்கு சுற்றுப் பயணம் செய்தாலும், அந்த சவப்பெட்டியும் அவர் பின்னாலேயே கொண்டு செல்லப்பட்டது!

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர் சொன்னார்: “என்னுடைய பூத உடல் விரைவில் மண்ணோடு மண்ணாகிவிடும். ஆனால் என் புகழ் என்றும் நீடிக்கும்” என்றார்.

Xxx

hippopotamus-meat-1

நீர்யானை!!!

லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பெண்மணி வந்தார். நீர் யானை இருக்கும் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள பாதுகாவலரிடம் கேட்டார்:-

ஐயா, இந்த நீர் யானை பெண்ணா? ஆணா?

விலங்கின் பாதுகவலர் சொன்னார்:

அம்மணி! இது என்ன கேள்வி. அது ஆணா, பெண்ணா என்பது இன்னொரு நீர்யானை கண்டறிய வேண்டிய விஷயம்” என்று!

Xxx சுபம் xxx

 

வீண் பகட்டும், டம்பமும், ஆடம்பரமும் பெண்களுக்கே அதிகம்? (Post No.2733)

girl in lotus pond

Translated by london swaminathan

Date: 17 April, 2016

 

Post No. 2733

 

Time uploaded in London :–14-36

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

நியூயார்க் நகர முனிசிபல் பெண்கள் லீக் தலைவி மிஸ் பிரான்ஸிஸ் கெல்லர், ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். இவர், பெண்ணுரிமை இயக்கத்தவர் என்று தெரிந்து ஒருவர் ஒரு ‘காமெண்ட்’ அடித்தார். பெண்கள் வீண்பகட்டு, ஆடம்பரம், டம்பம் உடையவர்கள் என்று.

உடனே அவர் சொன்னார்: உண்மைதான் மறுப்பதற்கில்லை. பெண்கள் ஆடம்பரப் பிரியர்கள்தான். இதற்கு ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. அது சரி! இந்த அறையிலேயே மிகவும் அழகான ஒரு ஆண்மகன், ஏன் தனது ‘டை’ யை தப்பாக –முன் பின்னாக –அணிந்திருக்கிறார்? என்று ஒரு குண்டு போட்டார். அந்த அறையில் ஆறு ஆண்கள் இருந்தனர். அத்தனை பேரும் யாரும் பார்க்காதபடி, மெதுவாக, லாவகமாக, தன் கையை சட்டையின் காலருக்குப் பின்னால் நகர்த்தி தடவிப் பார்த்துக் கொண்டனர்.

 

அந்தப்பெண், ஒரு புன்னகையை நெளியவிட்டாள். (அத்தனை ஆண்களையும் ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கிவிட்டாள். யாரும் ‘டை’யை தப்பாக அணியவில்லை!)

Xxx

 

IMG_4507

டார்லிங்; அது பாவம் இல்லை; மிஸ்டேக்!

 

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பாதிரியார் Fபாதர் ஹீலியிடம் ஒரு அழகான இளம் பெண் வந்தாள். பாவ மன்னிப்புக் கூண்டில் நின்றாள். அந்தப் பக்கம் பாதிரியார் அந்தப் பெண் செய்த பாவம் என்ன என்று அறிய காதை நீட்டினார்

“Fபாதர்! நான் பெரிய தப்பு செய்கிறேன். தினமும் கண்ணாடி முன் நின்று, நான்தான் மிக அழகான பெண் என்று நினைத்து கர்வமடைகிறேன். இந்தப் பாவத்தை மன்னியுங்கள்”.

பாதிரியார் சொன்னார்: இது பாவமில்லை. ஒரு தப்புக் கணக்கே!

(அந்தப் பெண்ணுக்கு ஏன்தான் கேட்டோம் என்று போய்விட்டது. அது வரை அழகி என்று எண்ணியிருந்தாள். பாதிரியாரோ பாவமில்லை.தப்பான அபிப்ராயமே/மிஸ்டேக் என்றார்)

Xxx

நான்தான் உலக மகா எழுத்தாளன்!

உலகப் புகழ் பெற்ற இதாலிய எழுத்தாளர் டி’அனன்சியோவுக்கு பிரான்ஸில் வசித்தபோது ஒரு கடிதம் வந்தது. “இதாலியின் புகழ்மிகு எழுத்தாளர்” என்று எழுதி அவர் பெயரை எழுதியிருந்தார் கடிதம் அனுப்பியவர்.

 

தபால்காரர், பெருமையாக, “பாருங்கள் உங்கள் விலாசத்தைக் கூட முழுக்க எழுதவில்லை. நீங்கள் அவ்வளவு புகழ் மிக்கவர். உங்களுக்கு கடித்தத்தைக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்.

“அவர் நான் இதை வாங்க மாட்டேன். இது எனக்கல்ல” என்றார்.

தபால்காரருக்குப் புரியவில்லை.

“நான் உலக மகா எழுத்தாளன். இதில் இதாலியின் மிகப் புகழ்பெற்ற” — என்று மட்டுமே எழுதியிருக்கிறான். எடுத்துக் கொண்டு போ” – என்றார்.

(அத்தனை அகந்தை)

Xxx

 

rail station

நகர வாழ்வு!

அமெரிக்காவில் கிராமப்புறத்தில் வாழ்ந்த ஒரு ஏழை நன்கு படித்து நகரத்துக்குச் சென்று வங்கியில் சேர்ந்து மிகப் பெரிய பதவி பெற்று செய்திப் பத்திரிகையில் எல்லாம் படங்கள் வந்திருந்தன. சரி! நம் புகழ் திக்கெட்டும் பரவிவிட்டது நம் சொந்த கிராமத்துக்குச் சென்று எல்லோருக்கும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு வருவோம் என்று புறப்பட்டார். அவர் கிராமத்துக்கு ரயில் வசதி மட்டுமே உண்டு. விமானம் கிடையாது.

 

தன்னை வரவேற்க ஏராளமானோர் மாலை மரியாதைகளுடன் காத்திருப்பார்கள் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார். ஊரும் வந்தது; ரயிலும் நின்றது. ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஈ, காகா இல்லை. அவருக்கு ஒரே ஆச்சரியம். சரி, ரயில் நேரத்தைத் தப்பாக நினைத்திருப்பாகள். கொஞ்சம் காத்திருப்போம் என்று காத்திருந்தார். பாவம்! யாரும் வரவில்லை. அந்த ரயில்வேஸ்டேஷன் போர்ட்டர் அவரிடம் வந்தான். உடனே அவன் ஏதேனும் வரவேற்பு பற்றி நல்ல செய்தி கொண்டுவந்திருப்பான் என்று ஆர்வத்துடன் அவனருகே போனார். அவன் கேட்டான்:

“என்ன ஸார், வெளியூருக்குக் கிளம்பிட்டீங்களா? எந்த ஊருக்குப் போறீங்க?”

 

–சுபம்–