நிலவைக் கவர்ந்த ரோஹிணி! நட்சத்திர அதிசயங்கள்

Aldebaran= star Rohini

நட்சத்திர அதிசயங்கள்

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம். நிலவைக் கவர்ந்த நிலவின் காதலி ரோஹிணியைப் பற்றிப் பார்ப்போம்

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – Part 1

By ச.நாகராஜன் Santanam Nagarajan

 

சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதை

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் படைப்பு மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம்.

தட்சன் தனது புத்திரிகள் 27 பேரை சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் பால் தீராத காதல் கொண்டான்.மற்ற இருபத்தி ஆறுபேரையும் புறக்கணித்து ரோஹிணியை மட்டும் பிரியாமல் எப்போதும் அவள் கூடவே இருந்தான்.இதனால் மனம் வருந்திய இருபத்தி ஆறு பேரும் தங்கள் தந்தையான தட்ச ப்ராஜாபதியிடம் சென்று முறையிட்டனர்.தட்சனுக்கு எல்லையற்ற கோபம் உண்டானது. அவன் சந்திரனை அழைத்துக் கடுமையாக எச்சரித்தான். ஆனால் சந்திரனோ அந்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை. தீராத மையலில் ரோஹிணியுடன் கூடவே இருந்தான்.இரண்டு முறை எச்சரித்தும் பயனில்லை.

தனது புத்திரிகளின் புலம்பலை மூன்றாவது முறை கேட்ட தட்சன் பெரிதும் வெகுண்டான்.சந்திரனை க்ஷயரோகம் பிடிக்கக் கடவது என்று சாபம் இட்டான். சாபத்தினால் சந்திரன் நாளுக்கு நாள் இளைத்துப் பொலிவை இழக்க ஆரம்பித்தான். சந்திரனே மூலிகைகளின் அதிபதி. அவன் இளைத்ததால் மூலிகைகள் வாடி வதங்க ஆரம்பித்தன.அவைகள் தொடர்ந்து வீரியத்தை இழக்கவே தேவர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.சந்திரனை அடைந்து காரணத்தைக் கேட்டனர். சந்திரனும் தட்சனின் சாபம் பற்றிக் கூறினான். தேவர்கள் தட்சனை அடைந்து சந்திரனை மன்னிக்குமாறு வேண்டினர். சிவனின் அருளால் சரஸ்வதி தீர்த்தத்தில் சந்திரன் மூழ்கி எழுந்தால் அவன் க்ஷய ரோகத்திலிருந்து விடுபடுவான் என்று சாப நிவிர்த்திக்கான வழி பிறந்தது. மனம் மகிழ்ந்த சந்திரன் சரஸ்வதி தீர்த்தத்தில் குளித்து வளர ஆரம்பித்தான். மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து        மீதிப் பாதி நாட்கள் வளர்வதுமாக இருக்க ஆரம்பித்தான். அமாவாசையும் பௌர்ணமியும் தோன்றக் காரணமான இந்தக் கதையை விளக்கமாகச் சிவ புராணம் விளக்குகிறது!

 

புராதன நாகரிகங்கள் புகழும் ரோஹிணி

ரோஹிணி என்றால் சிவந்தவள் என்று பொருள். ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதி ரோஹிணி மண்டலம்! அருகே இருக்கும் ஐந்து நட்சத்திரங்களையும் சேர்த்து இதைச் சகடம் எனக் குறிப்பிடுகின்றனர். சிவந்த குதிரை என்று பொருள் படும் லோஹிதாச்வ என்ற பெயராலும் இதைக் குறிப்பிடுவர். அராபிய மொழியில் அல்டிபெரான் என்று இந்த நட்சத்திரத்தை அழைக்கின்றனர். இதற்கு வரிக்குதிரை அல்லது குதிரை என்று பொருள். சந்திரனின் பிறை தரிசனத்தை எப்படி இந்து மதம் வலியுறுத்துகிறதோ அதே போல பிறை தரிசனத்தை இஸ்லாமும் வலியுறுத்துகிறது!

ரோஹிணி நட்சத்திரம் புராதனமான எல்லா நாகரிகங்களாலும் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம். சீனர், பாபிலோனியர், எகிப்தியர்,அராபியர், இந்தியர், கிரேக்கர் என அனைவரும் போற்றிய நட்சத்திரம் இது என்பதோடு அனைத்து நாகரிகங்களிலும் இதைப் பற்றிய ஏராளமான கதைகளும் உண்டு என்பது குறிப்பிடத் தகுந்தது. சந்திரன் – ரோஹிணி பற்றி அகநானூறு, மலைபடுகடாம்,நெடுநல்வாடை உள்ளிட்ட ஏராளமான சங்க நூல்கள் புகழ்ந்து பாடுகின்றன!

எடுத்துக் காட்டாக ‘அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங்கொடி போல’ என இணை பிரியாத காதலர்கள் சந்திரனும் ரோஹிணியும் என்று புகழும் சங்கப் பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டலாம்! தமிழ் ஆர்வலர்கள் நெடுநல்வாடையில் வரும் 159 முதல் 163 வரிகள் சுட்டிக்காட்டும் ‘உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா’ உள்ளிட்ட பல பாடல் வரிகளைப் படித்து மகிழலாம்.

மஹாபாரதக் கதை

இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை பிரஜாபதி, மஹாபாரதத்தில் வன பர்வத்தில் வரும் ஒரு முக்கியக் கதை ரோஹிணியைப் பற்றி விளக்குகிறது.

அனைவரது பார்வையிலிருந்து  சில காலம் ரோஹிணி மறைந்து விட்டாள் என்றும் ரோஹிணி மேலிருந்து கீழே விழுந்து விட்டாள் என்றும் பிறகு சிறிது காலம் கழித்து ரோஹிணி தன் இடத்தை மீண்டும் பிடித்தாள் என்றும் கதை கூறுகிறது.  இந்தக் கதை கூறும் மர்மத்தைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்

-தொடரும்

இந்தக் கட்டுரை ஸ்ரீஜோஸியம் வாரப் பத்திரிக்கையில் வெளியானது. இதை விரும்புவோர் இந்தக் கட்டுரை ஆசிரியர் S. Nagarajan எழுதிய அஸ்வினி, கார்த்திகை, திருவாதிரை உள்ளிட்ட அனைத்து நட்சத்திர அதிசயங்களையும் படித்து மகிழலாம்.

 

நட்சத்திர அதிசயங்கள்! கார்த்திகை

Pleiades Constellation (Karthikai Nakshathram)

கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!

By ச.நாகராஜன்

 

மாத்ரி மண்டல நட்சத்திரம்

 

நானூறு நட்சத்திரங்கள் கொண்ட மாத்ரி மண்டலத்தில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஆறு நட்சத்திரங்களான அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி,மேகயந்தி,வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர். கந்தனை வளர்த்தவர்கள்!

 

மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது! சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றான் என்று புராணம் கூறுவதை அனைவரும் அறிவோம்!

 

ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்குத் தமிழர் கார்த்திகை மாதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.தமிழரின் தெய்வம் முருகன் என்பதாலும் கார்த்திகை தமிழர் மனதில் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது!

 

கத்தி போல உள்ளதால் கார்த்திகை என்ற பெயரை இந்த நட்சத்திரம் பெற்றது. ப்ளையாடீஸ் என்று மேலை நாடுகளில் புகழ் பெற்றுள்ள இந்த கார்த்திகை நட்சத்திரம் அக்னி,தீபம் என  ஒளி சம்பந்தமான எல்லாவற்றுடனும் புராணத்திலும் விஞ்ஞானத்திலும் தொடர்பு படுத்தப்படும் ஒரு அபூர்வ நட்சத்திரம்!

 

அறிவியல் வியக்கும் அதி உஷ்ண பகுலா

ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்களாக உள்ளன என அறிவியல் அறிவிக்கிறது. இந்த அதிக பட்ச உஷ்ணம் பூமி வாழ் மக்களின் ‘மித்ரன்’ என்று வர்ணிக்கப்படும்  சூரியனுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற காரணத்தை நோக்கினால் அது கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்வதால் தான் என்று தெரிய வருகிறது.

 

வெறும் கூட்டணியிலேயே சூரியனுக்கே இந்த உஷ்ணத்தைக் கொடுக்கிறது என்றால் கார்த்திகையின் உஷ்ணம் எப்படிப்பட்ட அதி பயங்கரமானதாக இருக்க வேண்டும்? நினைத்து நினைத்து பிரமிக்க வேண்டியது தான்!. சதபத பிராமணம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல, நான்கல்ல, கார்த்திகை பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது என்று வியக்கிறது. ஆகவே  இதற்கு பகுலா (பல நட்சத்திரம் கொண்டது )என்ற பெயரையும் சூட்டுகிறது.

 

கார்த்திகையின் அதி தேவதை  அக்னி!

 

இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி (க்ருத்திகா நட்சத்திரம் அக்னிர் தேவதா) என்று தைத்திரீய சம்ஹிதா (நான்காம் காண்டம்) கூறும். அக்னியே ஸ்வாஹா; க்ருத்திகாம்யஹ ஸ்வாஹா என தைத்தீரிய ப்ராஹ்மணம் (III 1.4.2) கார்த்திகை நட்சத்திரத்தைப் புகழும்!:

81000 சுலோகங்கள் கொண்ட ஸ்கந்த புராணம் தான் 18 புராணங்களிலேயே மிகப் பெரிய புராணம்.

 

இதில் ஸ்கந்தனின் பெருமை விவரிக்கப்படும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் பெருமையும் விவரிக்கப்படுகிறது. அதன் மர்மமும் விளக்கப்படுகிறது.

இதைப் பற்றி வேதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான குறிப்புகளைக் காணலாம்.வால்மீகி “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும்” என்று உறுதியாகக் கூறி கார்த்திகேயனின் மகிமையை வியக்கிறார்!

 

மஹாபாரதம் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் அக்னியின் தோற்றம் மற்றும் மகிமையை விளக்குவதாக ஆரம்பித்து சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விளக்கமாகக் கூறுகிறார். மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வத்தில் இருநூற்றிருப்பத்தோராவது அத்தியாயம் தொடங்கி இருநூற்றுமுப்பத்து மூன்றாவது அத்தியாயம் வரை ஸ்கந்த சரித்திரம் இடம் பெறுகிறது.

 

ஸ்கந்த ஜனனம்

 

ஒரு சமயம் அக்னி ஸப்த ரிஷிகளின் பத்தினிகளின் மீது ஆசைப்படுகிறான்.அந்த அக்னியின் மீது ஸ்வாஹா தேவி ஆசைப்படுகிறாள். அவள் அருந்ததியைத் தவிர ஏனைய ஆறு பேரின் திவ்ய உருவத்தை எடுத்துக் கொள்கிறாள்.அருந்ததியின் தவத்தினாலும் அவளது பதிபக்தியினாலும் அவள் உருவத்தை ஸ்வாஹா தேவியால் தரிக்க முடியவில்லை.அக்னியோடு சேர்கிறாள்.

 

கந்தனின் ஜனனத்தை மஹாபாரதம் “காமமுள்ள ஸ்வாஹா தேவியினால் அந்த ஸ்வர்ணகுண்டமென்னும் தடாகத்தில் பிரதமா திதியில் அக்னியினுடைய வீரியமானது ஆறு தடவை போடப்பட்டது. அந்தக் குண்டத்தில் நழுவி விழுந்த அந்த வீர்யமானது தேஜஸினால் சூழப்பட்ட ஒரு புத்திரனை உண்டுபண்ணியது.பிறகு ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட அந்த வீர்யமானது ஸ்கந்தனாயிற்று. அந்த வீர்யத்தில் ஆறுதலைகளுள்ளவரும் பன்னிரெண்டு காதுகளும் கண்களும் கைகளும் பாதங்களுமுள்ளவரும் ஒரு கழுத்தோடும் ஒரு தேகத்தோடும் கூடியவராக குமாரர் தோன்றினார்.” என்று விவரிக்கிறது.

 

 

விசுவாமித்திரர் பதிமூன்று மங்கள கர்மங்களைச் செய்வித்து ஸ்கந்தருக்கு நாமகரணம் செய்து வைக்கிறார். இந்திரன் தேவ ஸேனாபதியாக ஸ்கந்தனுக்கு முடி சூட்டி தேவசேனையை திருமணம் செய்விக்கிறார். சிவனின் கட்டளைக்கிணங்க தேவ ஸேனையை அணிவகுத்துத் தலைமை தாங்கிச் சென்ற கந்தன் மகிஷாஸ¤ரனைக் கொல்கிறார்.மாத்ரு கண மாதரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு எல்லா உலகங்களும் பூஜிக்கத் தக்க உயர் நிலையை அருளுகிறார்.

 

ஸ்வாஹா தேவி எப்போதும் அக்னியுடன் சாஸ்வதமாக சேர்ந்து வஸிக்க தன் விருப்பத்தைத் தெரிவிக்க  ஸ்கந்தர் ,”தேவியே! நன்னடையுள்ள அந்தணர்கள் மந்திரங்களால் நன்றாகத் துதிக்கப்பட்டிருக்கிற ஹவ்யமோ கவியமோ எதையும் எடுத்து இன்று முதல் ஸ்வாஹா என்கிற மந்திரத்தை அக்னியில் ஹோமம் செய்து கொடுப்பார்கள். அக்னி பகவான் இவ்வண்ணம் உன்னோடு கூட எப்போதும் வாஸம் செய்வான்” என்று அருளுகிறார்! இவை அனைத்தையும் விரிவாக மஹாபாரதம் விளக்குவதைப் படித்து விட்டு வானத்தை நோக்கினால் பிரமித்துப் போவோம்.

 

கம்பீரமான கார்த்திகை நட்சத்திரத் தொகுதியில் அக்னி, ஸ்வாஹா மற்றும் தேவசேனை உள்ளிட்ட நட்சத்திரங்களின் ஜொலி ஜொலிப்பு,ஸோமதாரை என்று புராணம் விவரிக்கும் காலக்ஸி, நானூறு நட்சத்திரங்களைக் கொண்ட மாத்ரு மண்டலம்,அதன் மேற்கில் ஸப்த ரிஷிகளில் ஆறு ரிஷிகளின் பத்னிகளான நட்சத்திரங்கள், சுரபி என்னும் தெய்வீகப் பசு, அதன் தென் கிழக்கில் விஸ்வாமித்திர நட்சத்திரம் ஆகியவற்றைப் பார்த்து பிரமிக்கலாம்.

 

அத்தோடு பிரம்மாண்டமான தேவ ஸேனை அணிவகுப்பை கந்தன் தலைமை தாங்கிச் சென்றார் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் ஜொலிக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் அணிவகுப்பாகக் கூட்டம் கூட்டமாக கார்த்திகைக்குப் பின்னால் இருப்பதையும் பார்த்து அதிசயிக்கலாம்.இவற்றின் பல்வேறு அதிசய உருவங்களையும் ஜொலிஜொலிப்பில் உள்ள பல்வேறு தரங்களையும் பார்த்து சுப்ரமண்ய சேனையின் மகிமையை முற்றிலுமாக உணரலாம்!

 

மயில்வாகனன் முருகன் 

முருகனின் வாகனமான மயிலையும் வானத்தில் கண்டு மகிழலாம். இதைப் பற்றி ஜே.பென்ட்லி என்ற ஆங்கிலேயர் வியந்து,                          “கார்த்திகேயன் மயிலின் மீது ஏறி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவனே கார்த்திகை நட்சத்திரத்தில் தலைமையாக இருப்பதையும் அவன் பின்னால் அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் தொடர் வரிசையாக அணிவகுப்பதையுமே இது குறிக்கிறது” என்று கூறுகிறார்!

புகழ், ஒளி, கீர்த்தி, காந்தி,ஆயுள் ஆகிய அனைத்தையும் முருகன் அருளுவான் என்ற வேத மற்றும் மஹாபாரத வாசகத்தை மனதில் இருத்தி கார்த்திகை மாந்தரையும் கார்த்திகேயனையும் வானத்தில் பார்த்துத் தொழுது மகிழலாம்!

****************

இந்தக் கட்டுரை ஸ்ரீஜோஸியம் வாரப் பத்திரிக்கையில் வெளியானது. இதை விரும்புவோர் இந்தக் கட்டுரை ஆசிரியர் S Nagarajan எழுதிய அஸ்வினி, ரோஹிணி, திருவாதிரை உள்ளிட்ட அனைத்து நட்சத்திர அதிசயங்களையும் படித்து மகிழலாம்.

நட்சத்திர அதிசயங்கள் -Part 3

நட்சத்திர அதிசயங்கள் -Part 3

அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை சென்ற வாரம் பார்த்தோம். அஸ்வினியின் அதிசய ஆற்றல்களை மேலும் பார்ப்போம்
அஸ்வினி ரஹஸ்யம்! தொடர்ச்சி…….

எழுதியவர்: ச.நாகராஜன்

ஆயுர்வேதம் அருளும் தேவர்கள்

அஸ்வினி தேவர்களே யோகம் மற்றும் ஆயுர்வேதத்திற்கு சக்தியைத் தரும் தேவர்கள். ‘எங்களுக்கு வலிமையை அருள்க’, என அஸ்வினி தேவர்களை நோக்கி செய்யப்படும் துதி ரிக் வேதத்தில் காணப்படுகிறது. அஸ்வின் எனப்படும் ஐப்பசி மாதத்தின் பெயர் இந்த நட்சத்திரத்தில் நிறைமதி (பௌர்ணமி) சேர்வதை ஒட்டி அமைந்திருக்கிறது.

எந்த வியாதியையும் குணப்படுத்தும் இவர்களுக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தத்தை ரிக் வேதத்தில் காணலாம். சூரிய தேவதையான உஷையிடமிருந்து வரும் சூர்ய ரஸ்மியால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் அஸ்வினி தேவர்களே செய்கின்றனர்!

முதுமையை இளமையாக்கும் சியவன ப்ராசம் என்னும் லேகியம் சியவன மஹரிஷி கண்டுபிடித்த ஒரு ஆயுர் வேதத் தயாரிப்பு. நெல்லிக்கனியிலிருந்து இது தயாரிக்கப்படும் விதத்தை அஸ்வினி தேவர்களே சியவனருக்குக் கற்றுத் தந்தனர். அவரும் அதை உண்டு இளமையை அடைந்தார்.
இரசாயனங்களையும் மூலிகைகளையும் இவற்றால் தயாரிக்கப்படும் மருந்துகளையும் பற்றி ரிக் வேதம் கூறுகிறது. வேதம் கூறும் சோமரஸம், சஞ்சீவனி மந்திரம் போன்ற அனைத்திற்கும் தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்களே மூலவர்கள் என்பதும் இவர்களின் எல்லையற்ற ஆற்றலைச் சுட்டிக் காட்டுகிறது!

குதிரை முகத்தால் சித்தரிக்கப்படும் அஸ்வினி தேவர்கள் அளப்பரிய ஆற்றலையும் வாகனங்களின் அதிபதியாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.காலை,மாலை, மூச்சை உள்ளிழுத்தல் வெளியிடுதல் ஆகிய இரண்டிரண்டு விஷயங்களாக உள்ளவற்றை இவர்கள் குறிப்பிடுகின்றனர்.மதுவுக்கு இவர்களே அதிபதி என்பதால் இனிமைக்கும் இவர்களே அதிபதி என்பது தானாக விளங்கும்! அஸ்வதி, அஸ்வத்தா,அஸ்விஜா,வஜபா,ஷ்ரோணா, என்று பற்பல காரணப் பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுவதால் ஒவ்வொரு பெயரும் ஒரு வித ஆற்றலை இரகசியமாகக் குறிப்பதை உணரலாம்!

வாக்கிற்கும் ரத்ன சிகிச்சைக்கும் அஸ்வினி

இவர்களுடன் வாக் தேவியான சரஸ்வதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சரஸ்வதியைத் துதிக்கும் போது இவர்களையும் சேர்த்து வேதங்கள் புகழ்கின்றன. சரஸ்வதி தேவிக்கு ‘சோமர்’ வாக் சித்தியைத் தந்ததாக ரிக் வேதம் கூறுகிறது. அத்தோடு ரத்னக்கற்களையும் அதன் ரகசிய ஆற்றல்களையும் சரஸ்வதிக்கு சோமரே தந்ததாக அது தெரிவிக்கிறது. ஆகவே இந்த ரத்ன சிகிச்சை ஆயுர் வேத சிகிச்சை ஆகிய அனைத்தும் அஸ்வினி தேவர்கள் உலகிற்குத் தந்து அருளியவையாகும்!

அஸ்வினி தேவர்கள் மூன்று சக்கரங்கள் உள்ள தங்க ரதத்தில் பயணம் செய்வதாகவும் அவர்களின் ரதத்தை மனமே கட்டுப்படுத்துகிறது என்று வேத கவிதைகள் தெரிவிக்கின்றன. எல்லையற்ற ஆற்றலையும் சித்திகளையும் அவர்கள் கொண்டுள்ளதை இந்தப் பாடல்கள் அழகுறத் தெளிவாக விளக்குகின்றன.

இழந்த அங்கங்களை மீண்டும் தருவர்

இழந்த அங்கங்களை மீண்டும் பெறவும் இவர்களையே துதிக்க வேண்டும். விஷ்பலா என்ற ராணிக்கு உலோக கால்கள் அஸ்வினி தேவர்களால் அருளப்பட்டது.கால்களை இழந்தவர்கள் அஸ்வினி அருளால் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர் (ரிக் வேதம் I-117-19). மூன்று பாகங்களாக வெட்டுண்டு கிடந்த ‘ச்யவ’ என்ற ரிஷிக்கு இவர்களே ஆயுளை அளித்து உயிர்ப்பித்தனர்.
இப்படி ஜெம் தெராபி, அகுபங்சர், ஆயுர்வேதம், ப்ராணிக் ஹீலிங் என்று இன்று நவீன பெயர்களில் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் இவர்களே மூலம் என்பதை ரிக் வேதத்தின் பல கதைகளாலும் துதிகளாலும் நன்கு அறியலாம்.

இவ்வளவு விஷயங்களையும் தெரிந்த கொண்ட பின்னர் இவர்களின் ஆற்றலுக்கும் அருளுக்கும் ஒரு எல்லையே இல்லை என்பது சுலபமாகப் புரிந்து விடும்!உதவத் துடிக்கும் இந்த தேவதைகளை தினமும் துதித்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும்!

*****************************
(இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் வார இதழில் வெளி வந்தது. இதை விரும்பியோர் ச.நாகராஜன் எழுதிய இதர நட்சத்திரக் கட்டுரைகளையும் படிக்கலாம்.)

நட்சத்திர அதிசயங்கள் -Part 2


Written by S Nagarajan

ரிக் வேதத்தில் உள்ள உபமன்யுவின் அஸ்வினி தேவர்களைக் குறித்த துதி :-

வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் உபமன்யு அஸ்வினி தேவர்களை துதித்த ரகசியமான மறைந்த அர்த்தங்களுடன் கூடிய ரிக் வேதத்தில் உள்ள முழு துதியும் கீழே தரப்படுகிறது:
“நீங்கள் பிரபஞ்ச சிருஷ்டிக்கு முன்னே இருந்தவர்கள்.நீங்களே ஆதியில் பிறந்த ஜீவர்கள்.பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட இந்த அதிசயமான பிரபஞ்சத்தை நீங்கள் வியாபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.கேள்வியினாலும், சிந்தனையினாலும்,எனக்குக் கிடைத்திருக்கும் ஞானத்தில் உதவியினால், நான் உங்களை அடைய விரும்புகிறேன். ஆனால் நீங்களோ ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள்.இந்தப் பிரபஞ்ச இயற்கையும் அதை வியாபித்திருக்கும் பரமாத்மாவும் மரம் போல விளங்கும் இந்த தேகத்தில், அமர்ந்திருக்கும் அழகான இறகுகளுடன் கூடிய பக்ஷ¢கள் நீங்களே.ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உள்ள பொதுவான குணங்கள் உங்களுக்கு இல்லை.நீங்கள் ஒப்பற்றவர்கள்.நீங்கள் உலகத்திலுள்ள ஒவ்வொரு ஜீவன்களுடைய ஆத்மாவின் மூலமாய் இந்த உலகத்தை வியாபித்திருக்கிறீர்கள்.

தங்க நிறம் போன்ற கழுகுகள் நீங்களே.உலகத்திலுள்ள வஸ்துக்கள் யாவும் எதை அடைகின்றனவோ, அந்த சத்தும் நீங்களே.

நீங்கள் எந்த வித குற்றமும் இல்லாதவர்கள்.க்ஷ£ணித்தல் என்பது உங்களுக்குக் கிடையாது. நியாய விரோதமாய் ரணப்படுத்தாதனவும், அழகியவையுமான மூக்குகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.எந்த யுகத்திலும் ஜெயசீலர்கள் காலத்தின் அளவைக் கடந்தவர்கள். சூரியனை சிருஷ்டித்து, பகல் என்ற வெள்ளை நூலினாலும், இரவு என்ற கறுப்பு நூலினாலும், வருஷமாகிற அற்புத வஸ்திரம் உங்களால் நெய்யப்படுகிறது! அவ்விதமான வஸ்திரத்தால், தேவர்களுக்கும்,பிதுர்களுக்கும் உரிய இரண்டு விதமான பிரவர்த்திகளை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். அளவிடமுடியாத பரமாத்மாவின் சக்தியைக் குறிக்கும் காலம் என்ற அளவால் பீடிக்கப்பட்டுள்ள, ஜீவாத்மாக்களாகிய பக்ஷ¢களை, நீங்கள் அவைகள் பேரானந்தம் அடையும் பொருட்டு சுயேச்சையாக விடுதலை செய்கிறீர்கள். அஞ்ஞானிகளாக இருப்பவர்கள், இந்திரியங்களுடைய மயக்கங்களுக்கு வசப்பட்டவர்களாய், பந்த சம்பந்தமில்லாமல் பரிசுத்தர்களாக இருக்கும் உங்களை ஏதோ ரூபத்துடன் இருப்பது போல மதிக்கிறார்கள்.

முன்னூற்றறுபது நாள்கள் ஆகிற முன்னூற்றறுபது பசுக்கள் ஒரு வருஷம் என்கிற கன்றை உண்டாக்குகின்றன.எல்லாவற்றையும் சிருஷ்டிப்பதும் அழிப்பதும் அக்கன்று தான். சத்தியமானதை அறிய விரும்புபவர்கள் அநேக வழிகளை அனுசரித்து அக்கன்றினுடைய உதவியால் உண்மை ஞானமாகிற பாலை அடைகிறார்கள்.ஹே! அஸ்வினி தேவர்களே!! அக்கன்றுக்கு சிருஷ்டிகர்த்தாக்கள் நீங்களே!

இரவுகளும் பகல்களும் .ஆகிய எழுநூற்றிருபது ஆரக்கால்கள், அமைந்த சக்கரத்திற்கு, வருஷமானது, ஒரு ஆதாரக்கட்டையாக இருக்கின்றது.பன்னிரண்டு மாதங்களாகிற இந்த சக்கரச்சுழல்களுக்கு முடிவு கிடையாது.இச்சக்கரம் மாய்கைகள் நிறைந்தது.அதற்கு அழிவு கிடையாது.இவ்வுலகத்திலும் மற்றெந்த உலகத்திலும் இருக்கும் எல்லா ஜீவன்களையும் அது பிரிக்கின்றது.ஹே! அஸ்வினி தேவர்களே!! இக்காலச்சக்கரத்தை சுழலச் செய்கிறவர்கள் நீங்களே!
வருஷமாகிற இந்த காலச்சக்கரத்துக்கு ஆறு ருதுக்களாகிய வட்டக் கைகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த வட்டக் கைகளில் பொருந்தி இருக்கின்ற பன்னிரண்டு ஆரக்கால்களும் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கின்றன.இந்தக் காலச்சக்கரமானது எல்லா கர்மபலன்களைத் தெரிவிக்கிறது.காலத்துக்குக் கர்த்தாவாக இருக்கும் தெய்வங்கள் அச்சக்கரத்தில் உறைகின்றார்கள்.அந்தச் சக்கரத்தின் நிர்ப்பந்தத்துக்குள் கட்டுப்பட்டிருக்கிற என்னை அதிலிருந்து விடுவியுங்கள். ஹே! அஸ்வினி தேவர்களே!! நீங்களே பஞ்ச பூதங்கள் நிறைந்த இந்த பிரபஞ்சமாயிருக்கின்றீர்கள்.இம்மையிலும், மறுமையிலும் அனுபவிக்கப்படும் வஸ்துக்களும் நீங்களே. பஞ்சபூதங்களுக்கு வசப்படாமல் என்னைச் செய்யுங்கள். நீங்கள் பரப்பிரம்ம மூர்த்தியேயாகிலும் இந்திரியங்களால் அடையக் கூடிய, இன்பங்களை அனுபவிக்கும் ரூபங்களை எடுத்துக்கொண்டு , இவ்வுலகத்தில் சஞ்சரிக்கிறீர்கள்.

ஆதியில் இப்பிரபஞ்சத்தினுடைய பத்து திக்குகளையும் சிருஷ்டித்தீர்கள்.பிறகு சூரியனையும் ஆகாயத்தையும் உயர விளங்கும்படி அமைத்தீர்கள்.ரிஷிகளும் சூரியனுடைய மார்க்க முறையை அனுசரித்தே யாகாதிகளை செய்கிறார்கள்.தேவர்களும், மனிதர்களும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் விதிப் பிரகாரம் யாகங்களைச் செய்து அவைகளின் பலன்களை அனுபவிக்கின்றார்கள்.
மூன்று வித வர்ணங்களையும் கலந்து கண்ணுக்குத் தோன்றும் எல்லா வஸ்துக்களையும் நீங்கள் சிருஷ்டித்திருக்கிறீர்கள். அந்த வஸ்துக்களிலிருந்து தான், இந்தப் பிரபஞ்சமானது உற்பவித்திருக்கின்றது.அப்பிரபஞ்சத்தின் மீது தேவர்களும், மனிதர்களும், மற்றெல்லா ஜீவராசிகளும் அவரவர்களுக்கு ஏற்பட்ட கர்மங்களைச் செய்து வருகிறார்கள்.
ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை.

நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.”

(இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் வார இதழில் வெளி வந்தது. இதை விரும்பியோர் ச.நாகராஜன் எழுதிய இதர நட்சத்திரக் கட்டுரைகளையும் படிக்கலாம்.)

****************

நட்சத்திர அதிசயங்கள்- பகுதி 1

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களில் முதலிடத்தைப் பெறுவது அஸ்வினி! இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! எத்தனை ரஹஸ்யங்கள் இதற்குள் உள்ளன தெரியுமா? அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை இந்த வாரம் பார்ப்போம்!
அஸ்வினி ரஹஸ்யம்! – 1

எழுதியவர்: ச.நாகராஜன்

அதி ரஹஸ்ய அஸ்வினி

இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும் ரஹஸ்யங்களும் ஏராளம், ஏராளம்! மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா,பீடா ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்குமானால் அது அஸ்வினி தான்! அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள் ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 18 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன.

அயோதௌம்யரின் கட்டளை

அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரிதத்தை இங்கு பார்ப்போம்.இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக் காலம். அயோதௌம்யர் என்ற மஹரிஷிக்கு உபமன்யு, ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர்.தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்டவர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் தௌம்யர் உபமன்யுவை அழைத்து,” நீ என் பசுக்கூட்டத்தை ரக்ஷ¢த்துக் கொண்டு வா” எனக் கட்டளையிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு, உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே, நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார்.உபமன்யு,” குருவே! நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார், அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குருவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார்.

அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் ஒரு கவளம் கூடக் கொடுக்கவில்லையே! என்றாலும் கூட நீ உடல் வாடாமல் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார்.அதற்கு உபமன்யு, “குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார்.தௌம்யர், “உபமன்யு, நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பி¨க்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துராசை உள்ளவனென்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு “ என்ன உபமன்யு, நீ வாடாமல் கொழுத்துத் தான் இருக்கிறாய், என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு,”ஐயனே, நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார்.

உடனே தௌம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே!” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி உபமன்யு திரும்பினார். மறு நாள் மாலை ஆயிற்று.உபமன்யு வந்தார். குரு அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு,”உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா, என்ன?பாலை அருந்தவில்லையே!” என்று கேட்டார். “ஐயனே! பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்தபின்னர் கீழே விழும் நுரைத் துளிகளை அருந்தினேன்” என்றார், உடனே தௌம்யர்,” இந்தக் கன்றுக்குட்டிகள் பாலை போதிய அளவு அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் துளிகளை இனி அருந்தமாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மாடுகளை மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல் எருக்க இலைச் சாறை அருந்தினார்.காரம் நிறைந்த எருக்க இலைச் சாறின் விஷத்தினால் அவர் கண்கள் உடனே குருடாயின.

அஸ்வினி தேவர்களை நோக்கி துதி

கண் தெரியாததால் காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார்.அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து உபமன்யு எங்கே என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. ‘வாருங்கள், அவனைச் சென்று தேடுவோம்’ என்று கூறிய தௌம்யர் காட்டை நோக்கிச் சென்றார். ‘உபமன்யு, நீ எங்கே இருக்கிறாய்’ என்று கூவிய வாறே ஒவ்வொரு பகுதியாக அவர் தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, “ குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் வீழ்ந்து கிடக்கிறேன்!” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க உபமன்யு, தான் எருக்கஞ்சாறை அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தௌம்யர், “உபமன்யு! தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை நீ ஸ்தோத்திரம் செய்! அவர்கள் உனக்கு கண்களை மீண்டும் அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது. அதன் இறுதி வாக்கியங்களில் அவர், “ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை செய்தார்.

மீண்டும் கண்பார்வை கிடைத்தது

எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் உபமன்யுவின் முன் தோன்றி.”நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ, இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு,”நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அசுவனி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார்.நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் தந்தோம்.அதை அவர் தன் குருவுக்குக் கொடுக்காமலேயே சாப்பிட்டார். ஆகவே உன் குரு முன் செய்த பிரகாரமே நீயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம்” என்று கூறினர்.

உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே! என்னை மன்னிப்பீர்களாக! இதை என் குருவுக்குக் கொடுக்காமல் நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “ உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம்.உன் குருவினுடைய பற்கள் காரிரிரும்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர்.” இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினிதேவர்கள் மறைந்தனர்.

குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார்.தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர்,”நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல §க்ஷமத்தையும் அடைவாய்! எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங்களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார்.
அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று. மேலும் அஸ்வினியைப் பற்றிப் பார்ப்போம்
-தொடரும்

*****************

27 Hindu Stars (Nakshatras) & Western Names

(Please click on the pictures to see them in full view)

27 நட்சத்திரங்களின் விஞ்ஞானப் பெயர்கள்

The twenty seven Nakshatras of Hindu System and western equivalents for the benefit of western readers by Santhanam Nagarajan

While the Indian Star System or Hindu Nakshatra system is a scientifically designed one, some doubt whether the 27 nakshatras physically exist in the sky. They do exist. For the benefit of the western readers, the 27 nakshatras and western equivalents are given below:

1) Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி
2) Bharani – No 28,29,41 Taurus பரணி
3) Krittika – Pleiades கார்த்திகை
4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி
5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்
6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை
7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
10) Maagha – Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
19) Mula – Scorpio, tail stars மூலம்
20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
23) Dhanishtha – Delphinus அவிட்டம்
24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
27) Revathi – Zeta Piscum ரேவதி

The above stars can be seen with the help of the star maps. The Vedic Rishis (seers) have very clearly indicated the size and shape of the stars. There were a number of books available in the past. The Nakshatra vidya or the Science of the Stars or descriptive astronomy is lost due to the continuous invasions on India. However Vedic Scholars are able to find out the real science now and we may hope the full benefit of this science will be passed on to the future generation. In our next article we will look into the wonders of the stars.

Out of the Zodiac signs we have some stars with common names and they are Abijit – Vega, Agastya- Canopus,Trisanku- Southern Cross, Sapatarishi Mandala-Ursa Major and Dhruva- Pole Star.

(This article is written by my brother S Nagarajan)
*************

அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி! – Part 2

ச.நாகராஜன்
ஜோதிடம் மட்டுமல்லாமல் வானவியல், பௌதிகம், இரசாயனம், உலோகவியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் ரிஷிகள் இயற்றிய நூல்களை அப்படியே ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி கூறியது அனைவரையும் வியக்க வைத்தது. அவர் சுட்டிக் காட்டிய நூல்கள் கணக்கில் அடங்கா. சில நூல்களின் தலைப்பையும் அவற்றில் என்ன அடங்கி உள்ளது என்பதையும் கீழே பார்ப்போம்.
1)அக்ஷர லக்ஷ கணித சாஸ்திரம் :- வால்மீகி முனிவர் அருளியது. இதில் 64 கணித சித்தாந்தங்கள் விளக்கப்படுகின்றன.
2) அனுகரன சப்த சாஸ்திரம் :- கண்டிக ரிஷி அருளியது.எதிரொலிகள் பற்றியும் ஒவ்வொரு சப்தமும் என்ன பிரதிபலிப்பை உருவாக்குகிறது என்பது  பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
3) ஸ்த்ரீ¢ லக்ஷண சாஸ்திரம் :- சகதாயன ரிஷி அருளியது.உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிலும் பெண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது?இதை அற்புதமாக விளக்கும் நூல் இது.
4) புருஷலக்ஷண சாஸ்திரம் :- பப்ரு ரிஷி அருளியது. மிருகங்களில் ஆண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது. இதை விளக்கும் நூல் இது.
5) கன்யா லக்ஷண சாஸ்திரம்:- பப்ரு ரிஷி அருளியது.ஒரு பெண் கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா என்பதை எப்படி அறிவது? இதை விளக்கும் நூல் இது.
6)சகுன சாஸ்திரம்:- கர்க மஹரிஷி அருளியது. பறவைகளின் வெவ்வேறு ஒலிகளாலும் அவை பேசுகின்ற பாஷைகளின் மூலமும் மனிதர்களுக்கு நன்மை உண்டாகுமா அல்லது தீமை உண்டாகுமா என்று விளக்கும் சகுன சாஸ்திரம் இது.
7)சில்ப சாஸ்திரம்:- மயன் அருளியது.32 விதங்களாகக் கூறப்படும் தேவ சில்பி,கந்தர்வ சில்பி, யக்ஷ சில்பி, பைசாசிக சில்பி,அசுர சில்பி, மானுஷ சில்பி, முதலிய சில்பிகளை விவரிப்பதோடு  முழு விவரங்களையும் தரும் நூல் இது.
8)சுப சாஸ்திரம்:- சுகேசர் அருளியது.128 விதமான சுவையான சமையல்களைப் பற்றி விவரிக்கும் ருசியான நூல் இது.சுவையான நூல் மட்டுமல்ல இது; செய்முறையைச் சொல்லித் தரும் நூலும் கூட!
9)மாலினி சாஸ்திரம்:- ரிஷ்ய சிருங்க முனி அருளியது.உருமாற்றம், மாயத் தோற்றம், கானல் நீர் மாயைகள் ஆகியவை பற்றி விளக்கும் நூல் இது.
10) ப்ரளய சாஸ்திரம்:- மஹரிஷி வியாஸர் அருளியது.மஹா பிரளயங்கள் நான்கைப் பற்றியும் சிறு பிரளயங்களில் உள்ள 64 வகைகளையும் விளக்கும் நூல் இது.
11) கால சாஸ்திரம்:-ஷண்முகர் அருளியது.ஜோதிடம், வானவியல், பௌதிகம் ஆகிய துறைகளுக்கு ஆதாரமான மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான நூல் இது.காலம் என்றால் என்ன என்பதை பிரமிக்கத் தக்க விதத்தில் விளக்கும் இது அறுபத்திநான்காயிரம் காலபுருஷர்களின் விவரத்தையும் தருகிறது!
12)மாயா வாத சாஸ்திரம்:-ஆஞ்சனேயர் அருளியது. பெயர் சுட்டிக்காட்டுகின்ற படியே மாயா வாதத்தை விளக்கும் நூல்.
13) தாது வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது.கனிமங்கள், கூட்டுப் பொருள்களைப் பற்றி விளக்கும் நூல்!அதிலிருந்து என்னென்ன பொருள்களை உருவாக்கலாம் என்பதையும் கூட இது விளக்குகிறது!
14)விஷ வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது. வெவ்வேறு விதமான விஷங்களைப் பற்றியும் அதில் அடங்கிய விஷத்திற்கான மூலப் பொருளையும் விளக்கும் நூல் இது.செயற்கை விஷம் எது, இயற்கை விஷம் எது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
15) காருடம்: வைல ரிஷி அருளியது.இந்திய மாயாஜால நிபுணர்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கும் 32 விதமான மாயாஜாலங்களை விளக்கும் நூல் இது. எந்த விஷத்தை எப்படி முறிப்பது என்பதையும் கற்றுத் தருகிறது!
16)சித்ர கர்மா:பீமர் அருளியது. வர்ணம் பூசுவது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது எப்படி என்பதைக் கற்றுத் தரும் நூல் இது.
17)மல்ல சாஸ்திரம்:-மல்லர் அருளியது. மல்யுத்தம் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி விளக்கும் நூல் இது.
18)பரதம்:-கணபதி அருளியது. நாட்டியம், அதற்கான இசை, தாளம்,அதற்கான கால நுட்பம் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
19)பரகாய ப்ரவேசம்:-வால்கீய ரிஷி அருளியது.இன்னொரு உடலில் எப்படிப் புகுவது என்பதை விளக்கும் நூல் இது!
20)அஸ்வ ஹ்ருதயம்:-சுக்ரீவர் அருளியது. குதிரைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது. (சரஸ்வதி மஹால் நூல்நிலையம் வெளியிட்டுள்ள அஸ்வ சாஸ்திரத்தைப் படிப்பவர்கள் பிரமித்துப் போவார்கள் என்பதை இங்கு நினைவு கூரலாம்.)
21)கஜ ஹ்ருதயம்:- குமாரசுவாமி அருளியது.யானைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது.
22)ரத்ன பரிக்ஷ¡:-வாத்ஸாயன மஹரிஷி அருளியது.நவரத்னங்களை இனம் பிரித்து அறிந்து அவற்றை சோதிக்கும் முறையைக் கூறும் அபூர்வ நூல் இது!
23)இந்த்ரஜாலம்:-வீரபாகு முனிவர் அருளியது.மாயாஜால வித்தைகள், மாஜிக், புதிய பொருள்களை உருவாக்கிக் காட்டல் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
24)மஹேந்திரஜாலம்:- வீரபாகு முனிவர் அருளியது ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் உள்ளிட்ட116 விதமான ஸ்தம்பங்கள் இதில் விளக்கப்படுகிறது.
25)அர்த்த சாஸ்திரம்:-மஹரிஷி வியாஸர் அருளியது. தர்ம வழியில் செல்வம் சேர்க்கும் முறையை விளக்கும் நூல் இது. இதே துறையில் இன்னும் 24 சாஸ்திரங்கள் தனியே உள்ளன. அவற்றை முற்றிலுமாக விளக்க இங்கு இடம் இல்லை.ஆகவே அதி நுட்பமான சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
அ) அகஸ்திய மஹரிஷி அருளிய சக்தி தந்திரம்:-மூல பிரகிருதியில் அடங்கியுள்ள 32 விதமான ஆற்றல்கள் அல்லது சக்திகளைப் பற்றி விளக்கும் நூல் இது.
ஆ)மஹரிஷி மதங்கர் அருளிய சௌதாமினி கலா:-அயல் கிரகவாசிகள், வானில் உள்ள வஸ்துக்கள் மற்றும் தேவதைகளை எப்படி போட்டோ எடுப்பது என்பதை விளக்கும் நூல் இது.இன்று நாம் கூறும் எலக்ட்ரானிக்ஸ் நூல் இது!
இ)மஹரிஷி ஆஸ்வாலயனர் அருளிய சுத்த வித்யா கலா:- பிரபஞ்சம் தோன்றியது எப்படி,நம்முடைய பிரபஞ்சம் தவிர வேறு எத்தனை பிரபஞ்சங்கள் உள்ளன, எங்கே உள்ளன, பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் என்பதை விளக்கும் ஆச்சரியமான நூல்.
உ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய மேகோற்பத்தி ப்ரகரணம்:- 12 விதமான மேகக் கூட்டங்கள், அவை ஒன்பது விதமாக உருவாகும் விதம் உள்ளிட்ட ஏராளமான மேக ரகசியங்களை விளக்கும் அபூர்வ நூல் இது!
ஊ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய காரக ப்ரகரணம்:- சூரிய கிரணங்கள் மேகங்களின் ஊடே செல்லும் போது அண்டஜம், ஸ்வேதஜம்,உத்பிஜம் ஆகிய வித்துக்கள் உருவாகின்றன.நவரத்தினங்கள், சங்கு,முத்து ஆகியவையும் உருவாகின்றன. இவை எப்படி உருவாகின்றன என்பதை விளக்கும் அபூர்வ நூல் இது.
எ)மஹரிஷி பாரத்வாஜர் அருளிய ஆகாச தந்த்ரம்:- ஆகாசத்தில் இல்லாத மர்மங்களே இல்லை.ஏழு விதமான ஆகாயங்கள் மனித குலத்தின் மீது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கும் நூல் இது.
1940ம் ஆண்டு தனது 74ம் வயதில் மறைந்த ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி அவர்களின் மேதைத் தன்மை ஆகாயம் போல விரிந்தது, கடலை விட ஆழமானது. சூரியனை விட பிரகாசமானது, சந்திர ஒளியை விட மனதிற்குக் குளுமை தருவது. பாரத அறிவை முற்றிலும் ஜொலிக்க வைப்பது. சில ஜோதிட நூல்களுக்கு அவர் விளக்கவுரைகளும் எழுதியுள்ளார். அவரைப் பற்றிய நூல்களும் வெளி வரத் தொடங்கி உள்ளன. இந்த மாமேதை அருளிய நூல்கள் அனைத்தையும் படிக்க முயன்று அதில் நமக்கு உகந்த துறையில் நாம் திறமை பெற்று உலக அரங்கில் அதை ஜொலிக்கச் செய்வது ஒன்றே அவருக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறாகும்.

This is written by my brother S Nagarajan.
*****************

பல்லாயிரம் கோவில்களைக் காத்த ஜோதிடம்!

திப்புவின் ஆட்சி

18ம் நூற்றாண்டின் இறுதியில், தான் சென்ற வழியிலெல்லாம் நூற்றுக் கணக்கான கோவில்களை இடித்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவன் திப்பு சுல்தான்!1782ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதியிலிருந்து 1799ம் ஆண்டு மே 4ம் தேதி முடிய சுமார் பதினாறரை ஆண்டு காலமே ஆட்சி புரிந்த திப்பு சுல்தான் தன் வாளில் “எனது வெற்றி வாள் (இஸ்லாமை) நம்பாதவர்களை அழிக்கவே ஒளிர்கிறது” என்று எழுதிப் பொறித்தான். போர்த்துக்கீசிய பயணியான •ப்ரா பார்டாலோமாகோ மற்றும் மலபார் கலெக்டராக இருந்த வில்லியம் லோகன் உள்ளிட்ட ஏராளமானோர் திப்புவின் நடுநடுங்க வைக்கும் சித்திரவதைகளையும் கோவில் இடிப்புகளையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதியுள்ளனர்.

 

வேத ஜோதிடம் காத்த கோவில்கள்!

இருந்த போதும் அவனது அக்கிரமத்திலிருந்து பல கோவில்களையும் ஆயிரக்கணக்கான மக்களையும் வேத ஜோதிடம் காத்தது என்பது சரித்திரம் கூறும் அதிசய உண்மை! அந்த உண்மையான வரலாற்றைப் பார்ப்போம்.

திப்புவுக்கு ஜோதிடத்தின்  மீது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஒரு காரணத்தினால் தான் ஸ்ரீ ரங்கநாதரின் ஆலயத்தை அழிக்காமல் விட்டு வைத்தான். ‘அதை அழித்தால் உன் ஆசை நிறைவேறாது’ என்று கடுமையாக ஆஸ்தான ஜோதிடர்கள் அவனை வலியுறுத்தி எச்சரிக்கவே எப்படியாவது “பாத்ஷா” (சக்கரவர்த்தி) ஆக வேண்டுமென்று விரும்பிய திப்பு அந்த ஆலயத்தை விட்டு வைத்தான். இது தவிர அவனது தாயாரும் அந்த ஆலயத்தை அழித்து விடக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தாள். அவனிடம் 90000 போர் வீரர்கள் அடங்கிய மாபெரும் முரட்டுப் படை ஒன்று இருந்தது. தனது படையில் 60000 வீரர்களை அழைத்துக் கொண்டு கொச்சி மீது படையெடுக்கப் புறப்பட்டான்

 

திப்பு சந்தித்த ஜோதிடர்

திப்பு. வழியில் படையை ஒரு கிராமத்தில் இளைப்பாறத் தங்க வைத்திருந்தான். அந்த கிராமத்தில் என்ன விசேஷம் என்று ஆராயுமாறு தன் படை வீரர்களைப் பணித்தான். அவர்களுள் ஒருவன் அங்கு ஒரு பிரபல ஜோதிடர் இருப்பதாகவும் அவர் கூறுவதெல்லாம் நூறு சதவிகிதம் பலிக்கும் என்று அறிய வருவதாகக் குறிப்பிட்டான். ஜோதிடத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த திப்பு உடனடியாக அந்த ஜோதிடரை அழைத்து வருமாறு ஆணையிட்டான்.

ஜோதிடரும் நடுங்கியவாறே வந்து சேர்ந்தார். தன் கையில் ஒரு கிளியை வைத்த வாறே அந்த ஜோதிடரை நோக்கி திப்பு, “நீ பெரிய ஜோதிடன் என்று கேள்விப்படுகிறேன். நீ சொல்வதல்லாம் அப்படியே பலிக்குமாமே. இது உண்மையா? அப்படி என்றால் நான் உன்னை ஒன்று கேட்கலாமா?” என்று கேட்டான். தான் ஜோதிடர் என்பதை ஒப்புக்கொண்ட அவர்,”மன்னா! எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று பயந்தவாறே பதில் அளித்தார். திப்பு தன் கையிலிருந்த கிளியைச் சுட்டிக் காட்டி.” இதன் ஆயுள் எவ்வளவு என்று சரியாகக் கூறு!” என்றான்.

 

அது உடனடியாகச் சாகும் என்றால் அதை திப்பு உயிருடன் அப்படியே வைத்திருப்பான் என்பதையும் அது நீண்ட ஆயுளுடன் இருக்கும் என்றால் அவன் அதை உடனடியாகக் கொலை செய்து தன்னையும் தண்டனைக்குள்ளாக்குவான் என்பதையும் ஜோதிடர் நன்கு அறிந்து கொண்டார். இருந்தாலும் கிரக நிலைமைகளை நன்கு ஆராய்ந்து துணிந்து திப்புவை நோக்கி,” மன்னா! இந்தக் கிளிக்கு நீண்ட ஆயுள் உண்டு. இது தான் என் கணிப்பு” என்றார். இதைக் கேட்டுச் சிரித்த திப்பு உடனடியாக அதைக் கொல்வதற்காக தன் வாளை வேகமாக உறையிலிருந்து உருவினான். அவையினர் என்ன நேரப் போகிறதோ என்ற திகிலுடன் அவனைப் பார்த்தனர். வாளை வேகமாக உருவிய போது அதன் நுனி திப்புவின் கட்டை விரலைப் பலமாகக் கீறி விட ரத்தம் கொப்பளித்தது. வலியால் ஆவென்று அலறிய

 

திப்பு கிளியைத் தன் கையிலிருந்து விட்டு விட்டான். கிளி பறந்து வானில் போயிற்று. ஒரு கணம் திகைத்த திப்பு ஜோதிடரை நோக்கி, “ஆஹா! நீர் சிறந்த ஜோதிடர் தான்! ஆனால் இது தற்செயலாக நேர்ந்த ஒரு செயல் என நான் நினைக்கிறேன். இப்போது உண்மையாக உன்னிடம் ஒரு ஜோதிடப் பலன் கேட்க விரும்புகிறேன்.நான் கொச்சி மீது படையெடுத்துள்ளேன். இந்தப் போரில் நான் ஜெயிப்பேனா? சொல்லும்” என்றான். ஜோதிடர் நன்கு ஆராய்ந்து தன் முடிவைச் சொன்னார் இப்படி:”நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் கொச்சியை வெற்றி பெற முடியாது!” இதைக் கேட்ட திப்புவுக்கு பெரும் கோபம் வந்தது. அந்த ஜோதிடரை அந்த கிராமத்திலேயே சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். ‘ஜெயித்து விட்டு வரும் போது உம்மிடம் பேசுகிறேன்’ என்று கூறிய அவன் படைகளுடன் போருக்குச் சென்றான். கொச்சி மீதான போர் 15 நாட்கள் நீடித்தது. திப்பு படு தோல்வி அடைந்தான். மீண்டும் அதே கிராமம் வழியே வந்த திப்பு அந்த ஜோதிடரை விடுவித்து அவருக்கு மரியாதைகளையும் செய்தான்.

 

மனம் மாறிய திப்பு

தன்னால் பாதுஷாவாக ஆக முடியாது என்பதை ஜோதிடர்கள் சொன்னதை அவனால் ஏற்க முடியவில்லை.ஆலயங்களை இடித்ததற்கு தீய பலன் சேரும் என்பதையும் அவன் நம்பவில்லை. ஆனால் இறுதி இரண்டு ஆண்டுகளில் நிதர்சனமான உண்மையை அவன் உணர்ந்தான். அந்தக் காலத்தில் தான் கோவில்களுக்கு நன்கொடைகளை அளிக்க ஆரம்பித்தான். (இதைத் தான் தவறாக திப்பு கோவில்களுக்கு எப்போதுமே  பெரும் நன்கொடை அளித்து வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் பின்னால் எழுதி மக்களை நம்ப வைத்தனர்!)

 

நஞ்சுண்டேஸ்வரருக்கு மரகத லிங்கம் காணிக்கை!

மைசூருக்கு 30 மைல் தொலைவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் அவனது வேண்டுதலுக்கு இணங்க அவனுக்கு மிகவும் பிரியமாக யானையின் கண் பார்வை மீண்டும் வந்தது. அதனால் மனம் மகிழ்ந்த அவன் நஞ்சுண்டேஸ்வரருக்கு ஒரு மரகத லிங்கத்தை காணிக்கையாக அளித்தான். இன்றும் அது நஞ்சுண்டேஸ்வரருக்கு பக்கத்தில் இருக்கிறது!

800 கோவில்களை அழித்த திப்புவை, வேத ஜோதிடத்தைக் கூறும் ஜோதிடர்கள் தயங்காது  பலமுறை எச்சரித்ததால் மேலும் பல நூறு கோவில்கள் அழிக்காமல் காக்கப்பட்டன! பல்லாயிரம் மக்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டனர்.

நமது வரலாற்றின் ஒரு ஏடு ஜோதிடத்தின் இந்த அபூர்வ ஆற்றலை எடுத்துக் கூறுகிறது!

 

This article was written by my brother S Nagarajan.

************************

டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்

கிரேக்க (Greece) நாட்டில் உள்ள டெல்பி ஆரூடம் ( Delphi Oracle ) உலகப் புகழ் பெற்றது. காரணம் என்னெவென்றால் கிரேக்க நாட்டின் அறிஞர்களும் ரோமானிய மன்னர்களும் இங்கு வந்து ஜோதிடம் கேட்டனர். அது மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்கள் இதில் (கி.மு 800 முதல் கி.பி.300 வரை) நம்பிக்கை வைத்து அங்கே போனார்கள். இப்போதும் இது ஒரு பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.

 

தமிழ் நாட்டில் குறிசொல்லும் குறத்திகள், சாமி ஆடுவோர், கோடங்கி அடித்து சோதிடம் சொல்லுவோர், நாடி சோதிடக் குறிப்புகள் எழுதுவோர் என்ன என்ன எல்லாம் செய்தார்களோ அத்தனையும் இங்கே செய்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் இது போல பல குறி சொல்லும் இடங்கள் இருந்தபோதும் பிதகோரஸ், ஹெரோடாட்டஸ், ஈடிபஸ், ப்ளூடர்ச், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ரோமானிய மன்னர்கள்  மற்றும் பல தலைவர்கள் வந்த இடம் டெல்பியே. அங்கு இசைப் போட்டி நடத்தி பரிசு கொடுப்பதும் வழக்கம்.

 

பர்னாசஸ் மலைப் பகுதியில் ஒரு குகை போன்ற அறையில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பாள். அங்கு புகை வரத் துவங்கும். பின்னர் வந்திருப்பவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு தெளிவில்லாத, விளங்கிக் கொள்ள முடியாத வகையில் பதில்கள் கிடைக்கும். அம்மையார் ஓரிரு வரிகளில் பதில் தருவார். பல விஷயங்கள் இரு பொருள்பட இருக்கும். பக்கத்தில் உள்ள ஒரு பூசாரி, அந்த அம்மையார் கூறிய ஆரூடத்தை விளக்குவார். அங்கு பூமியிலிருந்து வந்த புகை “எதிலின்” என்ற ரசாயன வாயு என்றும் அது போதையை உண்டாக்கவே இப்படி அம்மையார் உளரத் துவங்கினார் என்றும் சில ஆராய்ச்சியாளர் சொன்னதெல்லாம் இது வரை நிருபணமாகவில்லை.

டெல்பியில் நடந்ததை ஒவ்வொரு அம்சமாகப் படியுங்கள். நீங்களே தமிழ் நாட்டில் நடந்த, நடக்கும் விஷயங்களுடன் ஒப்பிட முடியும். (சிலப்பதிகாரத்தில் இதே போல கேள்வி கேட்கும் பூதங்கள் பற்றி வருகிறது. அப்பர் பெருமானுக்கும் சுந்தரருக்கும் பூதங்கள் வந்து உதவி செய்தன. அவைகளை ஏற்கனவே தனிக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன்).

1.இங்கே அபல்லோ தெய்வத்தின் கோவில் உள்ளது. அவர் பைதான் என்னும் பாம்பைக் கொன்று உலகைக் காப்பாற்றினார். அவர் டால்பின் வடிவு எடுத்து, முதுகில் கிரீட் தீவு பூசாரிகளை ஏற்றிக் கொண்டு வந்தார். (கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனமும் மச்சாவதரக் கதையும் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும்).

2.இங்கே மூன்று பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும் 1.உன்னையே நீ அறிவாய். 2.அளவுக்கும் மிஞ்சாதே (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் 3. உறுதி எடு, விஷமம் செய்யாதே. இந்தப் பொன்மொழிகள் ஏழு முனிவர்கள் கொடுத்தது. (இப்போது சப்த ரிஷிக்களும், உபநிஷத வாக்கியங்களும் நம் நினைவுக்கு வரும்)

3. சாமி ஆடும் பெண் வேகமாகப் பேசுவார். அதை பூசாரிகள் விளக்கி அர்த்தம் சொல்லுவார்கள் (இதுவும் நம் ஊர் மாதிரிதான். நாடி சோதிடத்தில் அவர் ஒன்று செய்யுள் வடிவில் சொல்ல பக்கத்தில் உள்ளவர்கள் வேறு ஒன்று உரை நடை வடிவில் சொல்லுவார்கள்.)

4. பூசாரினி சொல்லுவதில் ஒரு சொல்லையோ, கமா (காற்புள்ளி) வையோ இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். “Go Return Not Die in War”. என்று பூசாரினி கூறுவாள். இதில் ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்கு முன் காற்புள்ளியை (,,,,,) ப் போட்டால் போருக்குப் போ, திரும்பி வா, போரில் இறக்க மாட்டாய் என்று அர்த்தம் வரும். ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்குப் பின்னால் காற்புள்ளியை வைத்தால் போருக்குப் போ,,திரும்பி வராதே, செத்துத் தொலை என்று பொருள் வரும். ஆக எப்படியும் பொருள் கொள்ளக் கூடிய நாட்ர்தாமஸ் எழுதிய செய்யுள் வடிவ சோதிடம் போல குழப்பத்தோடு வீடு திரும்புவார்கள் (இதுவும் நம் ஊர் ஜோதிடர்களையும் அவர்கள் கூறும் பரிகாரங்களையும் நினைவு படுத்தும்

5. பூசாரினி இருக்கும் இடத்துக்குக் கீழேயிருந்து நறுமணப் புகை வருவதாக அங்கே பூசாரியாக வேலை பார்த்த ப்ளூடார்ச் எழுதி வைத்துள்ளார். இது இயற்கையான ஊற்றிலிருந்து எழுந்த ரசாயன வாயு என்றும் செயற்கையாகப் போட்ட போதை ஊட்டும் பொருள் என்றும் கூறுவர் ( இதுவும் நம் ஊர் வேத கால சோம பானம் பற்றி மேல் நாட்டார் எழுதி வைத்தது போல எல்லோரையும் குழப்பும்).

6. பூசாரினிகளை இளம் வயதுப் பெண்களிலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் பிரம்மசர்ய விரதத்தைக் கடுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும். இது நம் ஊர் சந்யாசினிகளை நினைவுக்குக் கொண்டு வரும்.

7. ஒரு மன்னன் வந்து “நான் எதனால் சாவேன் என்று கேட்டானாம். பூசாரினி சொன்னாள்: மூஸ், மூஸ், மூஸ் என்று. பக்கத்தில் இருந்த பூசாரி எலி என்று மொழி பெயர்த்தானாம். கிரேக்க மொழியில் எலி (மூஷிகம்),தசை (மஸில்), மனிதனுடைய பெயர் (எடுத்துக் காட்டு: மோசஸ்) என்று பல பொருள்கள் உண்டு. ஆகையால் அந்த மன்னன் எலிகளை எல்லாம் ஒழித்தானாம். மூஸ் என்ற பெயருடையவர் எல்லோரையும் விரட்டிவிட்டானாம். கடைசியில் தசைப் (மஸில்) பிடிப்பால் இறந்தானாம். இதே போல கம்சன்–கிருஷ்ணன், இந்திரன் – விருத்தாசுரன், ஹிரண்யகசிபு—பிரஹ்லாதன் கதைகளில் நாம் படிக்கிறோம்.

8. ஒரு நாள் ஒரு ஆட்டிடையன் பர்னாசஸ் மலை அடிவாரத்துக்குப் போனான் என்றும் ஆடுகள் குகைக்குள் போகவே அவை வினோதமாகக் கூச்சலிட்டன என்றும் அவன் உள்ளே போனபோது சாமி ஆடி வருங்காலம் உரைக்கும் கணியன் ஆக மாறினான் என்றும் எழுதி வைத்துள்ளனர். (இது நம் ஊர் ஸ்தல புராணக் கதகள் போல இருக்கிறது!!)

சுருக்கமாகச் சொன்னால் கிரேக்க நாட்டு பழக்க வழக்கங்கள் இந்திய, அதிலும் குறிப்பாக, தமிழ் நடைமுறைகளை ஒத்து இருக்கும். (கிரேக்க—தமிழ் மொழி தொடர்பு பற்றிய வேறு இரண்டு கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)

 

 

Hindu’s Magic Numbers 18, 108, 1008

By S Swaminathan

In Hinduism numbers have a lot of significance. In some places it is used as a symbol or metaphor. Vedas also have a lot of numbers and their meanings are still mysterious. One example is the odd and even numbers up to 33 and 44 respectively in the Chamakam (a part of the Rudram in the Krsna Yajur Veda). But 108 and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008), particularly in all the South Indian Temples on day to day basis.

Hindu epic Mahabharata is associated with number 18 in several ways. The Mahabharata is divided in to 18 books (parvas) and the Bhagavad Gita also has 18 chapters. The original name of the  Mahabharata was JAYA and according to Sanskrit numerical system (Ka Ta Pa Yathi sankhya) Jaya is 18. The architect of the war Sri Krishna’s Yadava caste – which had 18 clans. The army number of divisions that took part in the war were also 18 (11 divisions/Akshauni of Kauravas and 7 Akshauni of Pandavas).

There is a beautiful description about the number 18 in the Tamil epic Cilappatikaram: The war between the Devas and Asuras went for 18 YEARS. The fight between Rama and Ravana went on for 18 MONTHS. The war between the Pandavas and Kauravas went on for 18 DAYS, but the battle between the King Cheran Senguttuvan and Kanaka Vijayan went on only for 18 NAZIKAS! (A day consists of 60 Nazika and one Nazika is 24 minutes). Cheran Senguttuvan was a great Chera (Kerala) king who went up to the Himalayas and brought a stone from the holy Himalayas to erect a statue for the Tamil heroine Kannaki. He washed the stone in the holy Ganges and brought it on the heads of Kanka and Vijayan who were defeated by him in seven hours (Ref. Cilappatikaram, Neerpataik kaathai lines 8-9).

The Number 10,008

The priests who did havan/yagna erected the yaga kund (fire altar) with 10,008 bricks in the shape of an eagle. The reason for this may be the Deva year was equivalent to (360 X 30) 10,800 days and Brahma’s kalpa was 40 times of this i.e. 432,000 years. If we add any of these figures and bring it to one digit it will always be 9.

Number 9 and its multiples are in Sanskrit and Tamil literature. Planets are nine-Nava Grahas, Gems are nine- Nava Ratnas and the scholars in the assembly of Vikramaditya were also called Navaratnas.

Another reason for this is a man breathes 21,600 (half of 43,200) times a day, on average. The book written by Romarishi calculated this on the basis of 15 breaths for every minute. This is reflected in the famous Nataraja temple in Chidambaram, Tamil Nadu where the Golden Roof of the temple contains 21,600 gold tiles. They used 72,000 nails to fix them.

Sathya Sai Baba’s interpretation

Sri Sathya Sai Baba went one step ahead of others in explaining the significance of these numbers. A man breaths 21,600 time a day (at the rate of 15 a minute and 900 times an hour). During the day time he breaths 10,800 times. During this day time one must say the mantra ‘soham’ ( sa=He, aham=I;  in other words – God and I are one) and to signify this we have 108, 1,008 and 10,008. Baba added by saying that number nine represents Brahman and number 8 represents Maya (illusion). He demonstrated that Nine remains intact after multiplying by any number (e.g. 9×12=108,8×9=72,3×9=27 if  we bring them down to one digit it is always 9) Where as if we multiply 8 with other numbers it will go down when we bring them down to single digit (e.g. 1×8= 8, 2×8=16,3×8=24,4×8=32,5×8=40,6×8=48 etc. One digit numbers will be 8, 7, 6, 5, 4, 3, 2, 1).

“With each breath you are positively affirming ‘Soham (I am He)’. Not only you, every being thus affirms it. … When you watch your breath and meditate on that grand truth, slowly the ‘I’ and the ‘He’ will merge; Soham will become transformed into Om, the primal sound, which the Vedas (ancient scriptures) proclaim as the symbol of the formless, all-knowing God.” 

-Sathya Sai Speaks X, ‘Meditation’

The Devas spent 10,800 days (in other words 29 years and 5 months) to churn the Ocean of Milk to extract Amrit (ambrosia). The planet Saturn, which plays a significant role in our lives, also takes the same time to complete one circuit of the Solar System.

Tamils have divided their 2,000 year old Sangam Literature in to 18 books (Pathu Paattu & Ettu Thokai) and the post-Sangam ethical literature in to another 18 books! (Pathinen Keez Kanakku).

These numbers have also got some significance in the Buddhist and Greek literatures as well.

 

Send comments and feedback to: swami_48@yahoo.com.

 

Please visit my blogs: swamiindology.blogspot.com and tamilandvedas.wordpress.com.