Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
பாக்யா 1-9-19
இதழில் அறிவியல் துளிகள் பகுதியில்
வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினைந்தாம் கட்டுரை – அத்தியாயம் 431
ஜப்பானியப் பெண்மணியான மாரி காண்டோ சந்தோஷம் அடைவதற்கான
வழிமுறையைக் காண்பித்துப் புகழ் பெற்ற நிலையில், இன்னொரு பெண்மணி பழக்கவழக்கத்தை
நல்ல விதமாக மாற்றினால் சந்தோஷம் அடையலாம் என்கிறார்.
சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நம் கையில் தான்
இருக்கிறது, வாரீர், அது சுலபமானதும் கூட என்கிறார் அமெரிக்கப் பெண்மணியான க்ரெட்சென்
ரூபின் (Gretchen Rubin)
இவரது பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல லட்சம் பிரதிகள்
விற்பனையாகி விட்டன; முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது முக்கியமான புகழ்பெற்ற இரு புத்தகங்கள் : The Four
Tendencies, Better Than Before ஆகியவை.
க்ரெட்சென் மிஸௌரியில் உள்ள கான்ஸாஸ் நகரில் 1965ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். இளமையிலிருந்தே ஒருவரின் பழக்கவழக்கங்கள்
அவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தார்.
சட்டம் படித்து பிரபல நீதிபதி ஒருவரிடம் வேலை பார்த்த அவர் பழக்க வழக்கங்களைப்
பற்றிய தனது கண்டுபிடிப்புகளை புத்தக வடிவில் தந்ததோடு அதற்கான கருத்தரங்கம்,
பயிற்சி உள்ளிட்டவற்றை நடத்த ஆரம்பித்தார். மக்கள் ஆவலுடன் அவர் சொல்வதைக்
கேட்டுத் தங்களுக்கு உதவாத பழக்கங்களை உதறி விட்டுத் தங்களை மாற்றிக் கொள்ள
ஆரம்பித்தனர்.
மனிதனின் அன்றாட வாழ்க்கை 40 விழுக்காடு பழக்கத்தின்
அடிப்படையிலேயே அமைகிறது என்கிறார் க்ரெட்சென்.
மனிதர்கள் ஒருவர் போல இன்னொருவர் இல்லை; ஆக இவர்கள் தங்களை
மாற்றிக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில்
தாங்கள் எந்த வகையைச் சேர்ந்தவ்ர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார் க்ரெட்சென்.
UPHOLDER
(திட்டமிட்டு உயர்பவர்)
இந்த வகை மனிதர்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகிறோம் எப்போது
செய்யப் போகிறோம் என்ற திட்டம் மிகவும் முக்கியம். காலை முதல் இரவு வரை, திங்கள்
முதல் ஞாயிறு வரை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய திடமான திட்டம் கொண்ட
இவர்களுக்குச் சற்று தூண்டுதல் தேவை.
தங்களது உள்ளார்ந்த விருப்பங்களை
நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால் இவர்கள் எப்படியாவது உந்தப் பட வேண்டும்.
தங்களின் செயல்பாடுகளை இவர்கள் அவ்வப்பொழுது மதிப்பீடு செய்து கொண்டே
இருப்பார்கள். இவர்கள் வெற்றி பெற ஒரு சிறந்த உத்தி இவர்கள் இன்னொருவருடன் கூட்டு
சேர்வது தான். அடிக்கடி கூட்டாளியால் உந்தப்பட உந்தப்பட இவர்கள் முன்னேறலாம்.
தங்கள் வாழ்க்கை சிறப்பதைக் கண்டு ஆனந்தம் அடையலாம்.
QUESTIONER
(கேள்வி கேட்பவர்)
எதையும் கேள்வி கேட்டுத் தெளிந்து கொண்ட பின்னரே செயலைச் செய்ய
முற்படும் இவர்களுக்கு எதிலும் தெளிவு தேவை. எதைச் செய்ய வேண்டும், எதற்காகச்
செய்ய வேண்டும் – இது தெரியாவிட்டால் இவர்கள் ஒன்றையும் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கான
சரியான உத்தி மேற்பார்வையிடல் (Monitoring) தான்!
தனக்குத் தானே கூட இவர்கள் அவ்வப்பொழுது தங்களைச் சரி பார்த்துக் கொண்டால்
இவர்களுக்கு அமைவது சந்தோஷமான வாழ்க்கையே. எதிலிருந்தும் தப்பிக்கும் வழியைப்
பார்ப்பது இவர்கள் பழக்கம்; அதைக் கண்காணித்து அலசி ஆராய்ந்தால் போதும் இவர்கள்
தங்களது கெட்ட பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு வெற்றி பெறலாம்.
உடல் பயிற்சி செய்வது அவசியம் தான், எனக்கும் அது
பிடிக்கும்; ஆனால் வெளியில் ஒரே குளிராக இருக்கிறதே – இது தான் இவர்களின் தப்பிக்க
முயலும் வழி. இதை உன்னிப்பாகப் பார்த்துத் தவிர்த்தால் இவர்கள் வெற்றி நிச்சயம்.
OBLIGER
(சொன்னால் கேட்பவர்)
இந்த வகை மனிதர்கள் கணக்குக் காட்டும் பொறுப்புடமை என்ற
பழக்கத்தை மேற்கொண்டால் அவர்களின் வாழ்க்கை மாறும். கெட்ட பழக்கத்திலிருந்து
மீண்டு வர கடமை பற்றிய பொறுப்புணர்வு தேவை. எந்த காரியத்தை எப்போது முடிக்க
வேண்டும், அதற்கு உதவுபவர் யார், மருத்துவரா, பயிற்சியாளரா, அல்லது நண்பர்களா, (ஏன்
குழந்தைகளாகக் கூட இருக்கலாம்) – அவர்களை இனம் கண்டு இவர்கள் முன்னேறலாம்.
தங்களுக்காக இல்லாதது போலவும் மற்றவர்களுக்காக செய்வது போலவும் இவர்கள்
சொல்வார்கள் – குழந்தை பிறக்கட்டும் பார், சிகரட் பிடிப்பதை நிறுத்தி விடுவேன்! -இது
இவர்களின் போக்கு.
இவர்களுக்கு
கண்காணிப்பும் மேற்பார்வையும் தேவை. இவர்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை
முக்கியமாகக் கவனிக்க வேண்டும். நல்ல நட்பு, நல்ல சுற்றத்தார் என்ற வட்டத்தை
அமைத்துக் கொண்டால் போதும் வெற்றிகரமான சந்தோஷ வாழ்க்கை இவர்களுக்கு அமைவது
நிச்சயம். இவர்களுக்கு ஊக்குவிக்க அவ்வப்பொழுது ஒரு பாராட்டு விருந்து தேவை.
REBEL
(புரட்சியாளர்)
எதிலும் புரட்சியை விரும்பும் இவர்களின் முதல் ஆசை தன்னை
அனைவரும் மதிக்க வேண்டும் என்பது தான். எதிலும் தெளிவு தேவை என்பதால் எதற்காக, ஏன்
என்ற கேள்விகளுக்கு இவர்கள் விடை கண்டால் போதும், செயல் பட ஆரம்பிப்பார்கள்.
எதையாவது செய்யச் சொன்னால் அதற்கு உடனே மறுப்பு தெரிவிக்கும் சுபாவத்தை இயல்பாகவே
கொண்டிருக்கும் இவர்களுக்கு, திட்டமிடல், கணக்குக் காட்டல் உள்ளிட்ட எதுவும்
வேலைக்கு ஆகாது. எதையும் வித்தியாசமாகச் செய்ய விரும்பும் இவர்களுக்கு காரண காரியத்துடன்
எதையும் விளக்கினால் தங்கள் பழக்க
வழக்கங்களை மாற்றிக் கொண்டு இவர்கள் வெற்றி பெறுவார்கள்.
இனி பிடிவாதமாக நம்மை ஆட்டிப் படைக்கும் கெட்ட
பழக்கங்களிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் நன்கு ஆராய்ந்து 21 உத்திகளை
க்ரெட்சென் நமக்கு வழங்குகிறார்.
நான்கு வகை மனிதர்களில் நாம் எந்த வகை என்பதை நமக்கு நாமே
கேட்டுத் தெரிந்து கொண்டால் இந்த உத்திகளில் நாம் முன்னேறுவதற்கான வழிகளைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிப்படையானவை நல்ல பழக்க வழக்கங்களே.
அவற்றைக் கைக்கொள்வதற்கான உத்திகளில் முக்கியமான சில:
முதலில் நான்கு வகை
மனிதர்களில் நீங்கள் எந்த வகை என்பதைக் கண்டுபிடியுங்கள்.
எது உங்களுக்கு உதவும் வழி
என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் (அடுத்தவருக்கு உதவும் ஒரு வழி உங்களுக்கு உதவ
வேண்டும் என்பதில்லை)
பழக்க வழக்கங்களை அன்றாடம்
மேற்பார்வையிடுங்கள்
நல்ல பழக்கங்களுக்கான
அஸ்திவாரம் அமையுங்கள்
அதற்கான திட்டத்தை வகுத்துக்
கொள்ளுங்கள் (‘புரட்சியாளர்களுக்கு’ இது
உதவாது)
கணக்குக் காட்டும் பொறுப்பை
– கடமைப் பொறுப்பை கடைப்பிடியுங்கள் (‘சொன்னால் கேட்பவருக்கு’ இது
சந்தோஷமாக இருக்கும்)
பழக்கவழக்க மாற்றத்தை
மேற்கொள்ளும் முதல் வாய்ப்பைப் பாருங்கள்; அதைப் பயன்படுத்துங்கள். தொடர்ந்து
வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்
தப்பிக்க வழியைக்
கண்டுபிடிக்கும் மனப்பான்மை பற்றி கவனத்தோடு இருங்கள்
உங்கள் கவனத்தைச் சிதற விடுபவை எவை என்பதைக்
கண்டு பிடித்து அவற்றின் மீது கவனமாக இருங்கள்
மாறிய வாழ்க்கை முறை
சந்தோஷத்தைத் தருவதாக இருப்பின் உடனடியாக உங்களுக்கு நீங்களே ஒரு பாராட்டு
விருந்தை அளித்துக் கொள்ள மறவாதீர்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்
உங்களுக்கு உதவும்
கூட்டாளியுடன் சேருங்கள்
எதிலும் தெளிவாக இருங்கள்
உங்களின் தனி அடையாளத்தை
உறுதிப் படுத்துங்கள்
தேவையற்ற பழக்கங்களை அகற்ற ஒரு தினசரி டயரி கூட
ஏற்படுத்திக் கொண்டு நமது முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரலாம்.
ஆயிரக்கணக்கானவர்கள் உலகெங்கும் இந்த உத்திகளால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது நம்மால் முடியாதா என்ன?
அறிவியல் அறிஞர் வாழ்வில்
.. ..
ஆடிஸம் (Autism)
என்னும் தன் பித்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர் பிரபல
அறிவியல் பெண்மணியான டெம்பிள் க்ராண்டின் (Temple
Grandin). 1947, ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்த இவருக்கு வயது
72. சிறு குழந்தைகளில் சில குழந்தைகள், தங்கள் கற்பனை உலகில் வாழ்ந்து தன் பித்த
நோயினால் மன இறுக்கத்தைக் கொள்வதைக் கண்டு கொண்ட இவர் அதைப் போக்க தன் 17ஆம்
வயதிலேயே ஹக் மெஷின் (Hug Machine) எனும்
அழுத்தம் கொடுத்து அணைக்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார்.
ஒரு நாள் மாட்டுத்
தொழுவத்தில் மாடுகளுக்கு ஊசி போடும் போது அவைகளை இப்படி அழுத்தம் கொடுத்து அணைத்து
அவைகளின் இறுக்கத்தைப் போக்கும் வழிமுறையைக் கண்டார். ஏன், அதை மனிதர்களுக்கும்
பயன்படுத்தக் கூடாது என்று நினைத்த டெம்பிள் தனது புது சாதனத்தைக் கண்டு
பிடித்தார். இன்று ஆடிஸம் நோயினால் பாதிக்கப்படுவோருக்கு இந்த சாதனம் பெரிதும்
பயன்படுகிறது. இவரைப் பற்றிய Temple Grandin என்ற திரைப்படம்
புகழ் பெற்ற ஒன்று. 2010இல் டைம் பத்திரிகை உலகின் சிந்தனைப் போக்கை மாற்ற வல்ல
நூறு பேரில் இவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. விலங்கியலில் மிகவும் புகழ்
பெற்ற இவரின் இன்றைய சொத்து மதிப்பு 10 லட்சம் டாலர்கள்! ‘Calling
All Minds’ என்ற இவரது புத்தகம் மிகவும் புகழ் பெற்ற
ஒன்று. ஆடிஸம் நோயினால் பாதிக்கப்பட்டோரைச் சுற்றி இருப்பவர்கள் படும் மன வேதனை
சொல்லி மாளாத ஒன்று. அவர்களுக்கு ஆடிஸம் நோயைப் போக்க என்ன செய்ய வேண்டும்
என்பதைக் கற்பித்த இவர் உலகின் தலை சிறந்த மனிதாபிமானியாகக் கருதப்படுகிறார்.
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பழைய பத்திரிக்கைகளில் பாம்புக்கடிக்கு சில மருந்துகள் சொல்லப்படுகின்றன. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. வசம்பைக் கண்டால் பாம்பும் நடுங்கும் என்பது பத்திரிக்கை மொழி; எந்த அளவுக்கு உண்மை என்பது பாம்புப் பிடாரர்களுக்கே தெரியும்.tamilandvedas.com, swamiindology.blogspot.com
நஞ்சு முறிப்பான், வசம்பு பற்றிய செய்திகளுடன் கொஞ்சம் மருத்துவ துணுக்குகளும் இதோ:-
TAMIL TABLE- WEIGHTS, KUNDUMANI, VARAHAN
tags- பாம்பு விஷம், வசம்பு, நஞ்சு முறிச்சான், மண் ட் ரேக், மாசக்காய், குங்குமப்பூ
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
I have already given a list of 255 plants. Here is a list of sexy plants, I mean, listed in the book about aphrodisiacs (drugs, herbs, chemicals stimulating sexual feelings).
23 Feb 2015 – (Sapta parna,
Ezilai Palai in Tamil). Compiled by London swaminathan. Post No.1670; Dated 23
February 2015. In the first part posted on 21st …
If a Brahmin cuts
the fruit trees, shrubs, vines, , creepers or flowering plants , a … 255 Indian trees, herbs and
flowers mentioned in Brhat Samhita Part–1, posted …
3 Oct 2014 – Studying about
the plants mentioned in ancient literature helps us to … We have Pippaladan
and other names in Upanishads meaning Mr Pipal …
இந்தப்
பிரபஞ்சத்தைக் கட்டுவதற்கு இறைவன் 118
விதமான செங்கற்களைப் பயன்படுத்தினான். அவைகளை நாம் மூலகம் என்றும் தனிமம் (ELEMENT) என்றும் அழைக்கிறோம். நாம்
சுவாசிக்கும் ஆக்ஸிஜன் ஒரு மூலகம். நாம் பயன்படுத்தும் இரும்பு, வெள்ளி, தங்கம், வைரம்,பிளாட்டினம் தாமிரம் ஆகியனவும் மூலகங்களே. அணுகுண்டு
தயாரிக்கப்பயன்படும் யுரேனியம், ப்ளூட்டோனியம்
ஆகியவையும் மூலககங்களே.
இவ்வகையில்
பிஸ்மத் (BISMUTH)
என்னும் மூலகம் ஒரு உலோகம் ஆகும். வெள்ளை நிறக்கட்டி(WEISSE MASSE= WISMUTH= BISMUTH) என்ற ஜெர்மன் சொல்லிலிருந்து வந்தது இந்த
பிஸ்மத். நமது உடலில் இது மிக மிக மிகக் குறைந்த அளவே உள்ளதால் இது உடலுக்குத்
தேவை இல்லை என்று சொல்லலாம். ஆயினும் ஆரோக்கியமாக வாழவும், அழகுடன் வாழவும் பிஸ்மத் உதவுகிறது.
பெண்களின் நகங்களில் போடும் நெயில் பாலிஷ் பள,பள (PEARL EFFECT) என்று பிரகாசிக்கும். இதற்கு அதிலுள்ள பிஸ்மத் ஆக்ஸி க்ளோரைட் உதவுகிறது இது போல அவர்கள் பூசும் உதட்டுச் சாயமும் பள பள என்று இருக்க வேண்டுமானால் அதில் பிஸ்மத் இருக்கும்!
வயிற்று
வலிக்கு பிஸ்மத் மருந்து
வயிற்றில்
புண் ஏற்படுவதை அல்சர் (PEPTIC ULCER & GASTRIC ULCER) என்போம். இப்படிப் புண் ஏற்பட்டால் வயிற்று வலி இருக்கும்; காரமான பொருட்களைச் சாப்பிட்டால் வலி
அதிகமாகும். இதை வயிற்று எரிச்சல் என்றும் சொல்வர். இது குடலின் முன்பகுதி வரையும்
பரவ வாய்ப்பு உண்டு. ஒரு காலத்தில் இதைத் தீர்க்க பிஸ்மத் மிக்ஸர் (BISMUTH MIXTURE) கொடுத்தனர். இப்போது மில்க் ஆப்
மக்னீஷியா, மற்றும்
சோடியம், கால்சியம்
கார்பனேட் கலந்த மருந்துகள் பிரபலமாகிவிட்டன. ஆயினும் இப்போதும் பிஸ்மத்
பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றில் அமிலத்தன்மை (ACIDIC) உடைய திரவங்கள் சுரந்து பொருட்களை
ஜீரணம் செய்ய உதவுகின்றன. இந்த அமிலம், புண்களுள்ள பகுதிகள் மீது படும்போது
வலியோ எரிச்சலோ ஏற்படும். பிஸ்மத் சப்சிட் ரேட் (BISMUTH SUBCITRATE) கலந்த கரைசல் இதற்கு தீர்வு தரும்.
அதாவது வயிற்றுச் சுவரில் பதிந்து, புண்கள் ஏற்பட்ட பகுதி மீது அமிலம்
படாதபடி பார்த்துக்கொள்ளும்.
மேலும்
வயிற்றில் சுரக்கும் பெப்டிக் என்ஸம் (PEPTIC ENZYME) எனப்படும் திரவத்தைச் செயல்பட விடமல் தடுக்கிறது
தற்போதைய ஆராய்ச்சிகள் குடலில் வரும் புண்ணுக்கு —அல்சருக்கு—ஹெலிகோபாக்டர் பைலோரி (HELICO BACTER PYLORI) என்னும் பாக்டீரியா காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது . நமது உடலுக்குள் நன்மை செய்யும், தீமை செய்யும் – இரண்டு வகை பாக்டீரியாக்களும் இருக்கின்றன. தீமை செய்யும் — வயிற்றில் புண் ஏற்படுத்தும் –ஹெலிகோ பாக்டர் பைலோரி எளிதில் போகாது. இவைகளை அகற்ற பிஸ்மத் பொருளுடன் வேறு சில சக்திவாய்ந்த ஆண்ட்டிபயாடிக்ஸ் (பாக்டீரியா கொல்லி) உடன் அளிப்பர்.
இந்த
பிஸ்மத்துக்கு வேறு ஏதேனும் உபயோகம் உண்டா?
உண்டு.
இந்த உலோகத்துக்கு உருகு நிலை (271 டிகிரி
சி) குறைவு. ஆகையால் மற்ற உலோகங்களுடன் இதைச் சேர்க்கையில் அவைகளையும் எளிதில்
பயன்படுத்த முடிகிறது. எலெக் ட் ரி க் ப்யூஸ், தீயை அணைக்கும் தண்ணீர் தெளிப்பான் (AUTOMATIC SPRINKLE
SYSTEM) , ரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் பிஸ்மத் பயன்படுகிறது..
கண்டுபிடித்தவர்
யார்?
1400ம் ஆண்டில் பெயர் தெரியாத ஒருவர் இதைக் கண்டு பிடித்தார். அதற்குப் பின்னர் இதையும் ஈயத்தையும் ஒன்றோ
என்று எண்ணிக் குழம்பினர். பின்னர் ஜார்ஜியஸ் அக்ரிகோலா, காஸ்பர் நியூமான், கிளாட் பிரான்ஸ்வா ஜெப்ப்ராய் ஆகியோர்
வெவ்வேறு காலத்தில் இது ஒரு மூலகம் என்றனர்.
அமெரிக்கா, பொலிவியா, பெரு, ஜப்பான், மெக்ஸிகோ, கனடா முதலிய நாடுகளில் நிக்கல், கோபால்ட், வெள்ளி, தகரம் ஆகியவற்றை எடுக்கும் போது பிஸ்மத்தும் கிடைக்கிறது.
ரசாயனத்
தகவல்கள்
இதனால்
புறச் சூழலுக்கு ஆபத்து இல்லை.
இது கனமான, வெள்ளி போன்றநி றம் உடைய உலோகம். கொஞ்சம் இளம் சிவப்பு சாயல் இழை ஓடும்.
இதன்
மூலக அட்டவணை எண்- 83
குறியீடு-
பி ஐ — Bi
கொதி
நிலை- 1560 டிகிரி C ஸி
உருகு
நிலை 271 டிகிரி C
இதன்
ஐஸ்டோப்புகளுக்கு கதிரியக்கம் கிடையது.
இது
எளிதில் உடையக்கூடிய உலோகம் என்பதால் பிற உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகமாகவே
பயன்படுகிறது.
இதை
யுரேனியத்துக்கு மேல்வைசையில் வரும் உலோகங்களுடன் சேர்ந்து பயன்படுத்தியபோது போஹ்ரியம் (BOHRIUM)
, மெய்ட்நே ரியம்
(MEITNERIUM) முதலிய புதிய தனிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
அதாவது திரைப்படத்தில் புதுமுகங்களை
அறிமுகப்படுத்தும்
டைரக்டர் போலச் செயல்பட்டது.
உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை
நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 2
கட்டுரை ஆக்கம் : Mark Hyman MD
மொழியாக்கம் ச.நாகராஜன்
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
உங்கள் குடல் நாளம் சீராக இல்லை
என்பதை எப்படி உணர்வது?
உங்கள் ஜீரண அமைப்பைச் சரியாக இருக்குமாறு செய்ய முதலில் உங்கள் உடலின் குடல்நாளத்தை சீரற்றதாகச் செய்யும் எந்தப் பொருள்கள் குடலுக்கு அனுப்பப் படுகின்றன என்பதை அறிய வேண்டும். பட்டியல் இதோ:
பைபர் சத்து குறைவாக
உள்ளவை, அதிக இனிப்புள்ளவை , பதப்படுத்தப்பட்டவை, சத்துக் குறைவானவை, அதிக கலோரி
உணவுத் திட்டம் ஆகியவை தப்பான பாக்டீரியாக்களையும், நுரைமங்களையும் (wrong Bacteria abd
yeast) குடல் நாளத்திற்கு அனுப்புவதால் குடலானது பாதிப்புக்குள்ளாகிற்து.
அதிக
மருந்துகளை உட்கொள்வதால், அமிலத் தடைகளைப் போல (acid blockers – Prilosec,
Nexium etc.), அவை குடல்நாளத்தின் ஜீரண வேலையைத்
தடுக்கிறது – வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளான ஆஸ்பிரின், அட்வில். ஆலிவ்
(Aspirin, Advil and Aleve) மற்றும் அதிக அளவில் ஆன்டி
– பயாடிக்ஸ், ஸ்டிராய்ட்கள், ஹார்மோன்கள் ஆகிய மருந்துகளையும் குறிப்பாகச்
சொல்லலாம்.
*
கண்டுபிடிக்கப்படாத குளூட்டன் சகியாமை (Gluten intolerance), குளூட்டன் ஒவ்வாமை, (Celiac disease) அல்லது
பால் பொருள்கள், முட்டைகள் அல்லது சோளம் போன்ற குறைந்த கிரேடு உணவு ஒவ்வாமைகள்
*
தொடர்ந்து இருக்கும் குறைந்த கிரேடு தொற்று வியாதிகள் அல்லது சிறுகுடலில்
பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க அதனால் ஏற்படும் குடல் நாளத்தின் சீரற்ற தன்மை,
ஈஸ்டின் அதிக வளர்ச்சி (Overgrowth of Yeast),
பாராசைட்டுகள் (Parasites) அல்லது இன்னும் மோசமான
குடல்நாளத் தொற்றுக்கள்
*
குடல் நாளத்தைச் சேதப்படுத்தும் மெர்க்குரி (Mercury – பாதரஸம்)
மற்றும் பாசி (mold toxins) போன்ற விஷங்கள்
*
அமிலத்தைத்தடை செய்யும் மருந்துகளின் உபயோகத்தால் ஏற்படும் ஜீரணத்திற்கான போதுமான
என்ஜைம் இயக்கம் இல்லாமை அல்லது துத்தநாகம் போதுமான அளவு இல்லாமல் இருப்பது (Zinc
deficienty)
*
குடல்நாள நரம்பு மண்டலத்தை மாற்றக் கூடிய மன அழுத்தம், ஒழுகக்கூடிய குடல் நாளத்தை
உருவாக்குகிறது. சாதாரணமான பாக்டீரியாக்களை குடல்நாளத்தில் மாற்றுகிறது.
பிறகு என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டியதே இல்லை; நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள்.
குடல் நாளத்திற்குக் கொஞ்சம்
கூடச் சம்பந்தமில்லாதது போலத் தோன்றும் எக்ஸிமா, சொரியாஸிஸ் அல்லது ஆர்த்ரிடிஸ் (eczema, psoriasis, or arthritis) ஆகியவை
உண்மையில் குடல்நாளப் பிரச்சினைகளாலேயே ஏற்படுகின்றன என்பதை முக்கியமாக அறிந்து கொள்ள
வேண்டும். குடல்நாளத்தை நன்கு கவனித்தால் நீங்கள் நலமுடையவராக ஆகி விடுவீர்கள். இதோ
ஒரு சின்ன எடுத்துக்காட்டு:
எக்ஸிமா குடல்நாளத்தில் ஆரம்பிக்குமா?
அலிஸன் எனது நோயாளிகளில் ஒருவர்.
அவர் எக்ஸிமாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். செம்மையான, ஒழுகும், கறை படிந்த, அரிப்புக் கொண்ட தடிப்புகள்
அவளது உடல் முழுதும் பரவி இருந்தது. உங்கள் குடல்நாளம் சீரற்றிருந்தால் என்ன நடக்கும்
என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு இது தான். உங்கள் ஜீரணத்தை சரியாக ஆக்கி விட்டால்
எப்படிப்பட்ட அசாதாரணமான பரிபூரண குணத்தை நீங்கள் அடைய முடியும் என்பதற்கான உதாரணமும்
இவர் தான்.
ஒரு டாக்டர், இன்னொரு டாக்டர் என்று ஒவ்வொருவரையாக இந்தப் பெண் பார்த்துக் கொண்டே இருந்தார். பூச்சுத் தைலங்கள், லோஷன்கள், திரவ மருந்துகள் (slves, lotions and potions) ஆகியவற்றைத் தன் தோலின் மீது தடவிக் கொண்டிருந்தார். அத்துடன் ஸ்டிராய்டுகள் , ஆன்டி பயாடிக் மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்த்த டாக்டர்களில் ஒருவராவது அவரது நோயின் அடிப்படையான காரணத்தை அறிந்து கொண்டு சிகிச்சை செய்யவில்லை.
அலிஸனுக்கு
வயது 57. தொடர்ந்து எட்டு வருட காலம் கடுமையான, கொஞ்சம் கூட குணமடையாத, எக்ஸிமாவினால்
அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அவர் அதிக இனிப்புக் கொண்ட உணவுத் திட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
அடிக்கடி ஜனன உறுப்பில் ஈஸ்ட் தொற்றுக்களைக் கொண்டவராகவும் இருந்தார் (frequent vaginal yeast infections).
நான் அவரைப்
பார்த்த போது அவரது குடல்நாளத்தைச் சோதனை செய்தேன்; ஒழுகும் குடல்நாளத்தை அவர் கொண்டிருப்பதையும்
கண்டேன். அவரது குடல்நாளத்தில், ஒரு செல் கனத்தைக் கொண்ட பூச்சு உடைபட்டு சரியாக இயங்காமல்
இருந்தது. அவர் 24 lg G என்ற உணவு ஒவ்வாமையைக் கொண்டிருந்தார்; அவரது
மலமோ ஆரோக்கியமான பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கவில்லை, பல வருடங்களாக ஆன்டி பயாடிக்
மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தமையால் ஈஸ்டின் அதிக வளர்ச்சியையும் கொண்டிருந்தார்.
ஈஸ்டிற்கு எதிராக அதிக அளவில் ‘ஆன்டி பாடிஸ்’(Antibodies) அளவுகளையும் இரத்தத்தில் கொண்டிருந்தார்.
ஆகவே அவரது
குடல்நாளம் சரியாக ஆவதற்கு நான் உதவி செய்தேன். அவருக்கு எதிர்வினை செய்த அனைத்து உணவுகளையும்
அவரை நிறுத்தச் சொன்னேன். இனிப்பைத் தவிர்த்து அவரது கேஸ்ட்ரோ இண்டெஸ்டினல் பாதையில்
ஈஸ்டையும் பதப்படுத்தப்பட்ட கார்போஹடிரேட்டுகளையும்
அளிப்பதை நிறுத்தச் சொன்னேன் (to stop
feeding the yeast in her gastrointestinal tract by cutting sugar and refined
carbohydrates). அவரது குடல் நாளத்தில் இருந்தஈஸ்டைக் கொல்ல, பூசண எதிர்ப்பு மருந்துகளையும்(antifungal
medications) மூலிகைகளையும் அளித்தேன்.
பின்னர் ப்ரோபயாடிக்ஸ்களை அளித்து (probiotics)
அவர் உடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள்
இருக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன். அத்துடன் குடல்நாளத்தை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்களை அளித்து
அவரது குடல்நாள பூச்சைச் சரி செய்து இயல்பான உடல் இயக்கம் அவருக்கு வருமாறு செய்தேன்.
விளைவு?அவரது
எக்ஸிமா எட்டு வருடங்களில் முதல் தடவையாக மறைந்தே போனது. அது மீண்டும் வரவே வராமல்
ஒழிந்தது!
அலிஸனுக்கு
ஏற்பட்ட அனுபவத்தை நீங்களும் அனுபவிக்கலாம். உங்களது ஜீரணத்தைச் சரியாக ஆக்குவதன் மூலம்
உங்கள் தொடர் வியாதி அடையாளங்களை நீக்கிக் குணமாகலாம்.
நல்ல ஜீரண ஆரோக்கியத்திற்கான
ஏழு படிகள் இதோ:
உங்களது உள் குழாயைச் சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:
பதப்படுத்தப்படாத முழுமையான உணவுகளை உண்ணுங்கள். அதிகமான பைபர் இருக்கும்படியான
கறிகாய்கள், பீன்ஸ், பருப்புகள்,
விதைகள் முழுமையான தானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உணவு ஒவ்வாமையை நீக்குங்கள். சில உணவுகள் சேராவில்லை
என்ற நிலை இருந்தால் அதைத் தவிர்த்து வேறு உணவுத் திட்டத்தை மேற்கொள்ளுங்கள். க்ளூடன்,
பால் பொருள்கள், ஈஸ்ட், சோளம், சோயா, முட்டைகள் ஆகியவற்றை ஒரு வாரம் நிறுத்துங்கள்.
(cut out gluten, dairy, yeast,
corn, soy and eggs). உங்கள் குடல்நாளம்
எப்படி இருக்கிறது என்று பாருங்கள். மற்ற நோய்க்குறிகளின் அடையாளங்கள் எப்படி இருக்கிறது
என்பதையும் பாருங்கள்.
பூச்சிகள் அதிகமாக இருக்கிறதா என்பதையோ அல்லது தொற்றுக்கள்
இருக்கிறதா என்பதையோ பார்த்து அதற்குத் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பாராசைட்டுகள்,
சின்ன குடல்பகுதி பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவை சரியாக குடல்நாளம் இயங்குவதைத் தடைப்படுத்தும்.
நீங்கள் குணமடைய விரும்பினால், இந்தத் தொற்றுக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
உங்கள் ஜீரண என்ஜைம்களை மீண்டும் நிறைவு செய்யுங்கள்.
போதுமான அளவு ஜீரண என்ஜைம்கள் உங்கள் குடல்நாளத்தில் இல்லையென்றால் உங்கள் உடல் மற்றும்
மூளை சரியாக இயங்குவதற்கான மூலப்பொருள்களை உங்கள் உணவுகள் சரியாக மாற்றித்தரச் செய்ய
முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சரியான ஜீரண என்ஜைம்களை உங்கள் உணவுடன் சேர்த்துக்
கொள்ளுங்கள் (take a
broad – spectrum digestive enzymes with your food).
நட்பான
பாக்டீரியாக்களைக் கொண்டு உங்கள் உடல் மண்டலத்தை அருமையாக ஆக்கி மீண்டும் நிர்மாணியுங்கள்.
ப்ரோபயாடிக் துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் (Take
probiotic supplements). அவைகள் நல்ல
குடல்நாளத்திற்கான ஆரோக்கியமான் பாக்டீரியாக்களை மீண்டும் அடைய உதவும்.
நல்ல கொழுப்பைக்
கொள்ளுங்கள். ஒமேகா -3 துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது குடல்நாளத்தில் இருக்கும்
வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
உங்கள் பூச்சை (lining) குணப்படுத்துங்கள்.
குடல்நாளத்தைக் குணப்படுத்தும் க்ளூடாமைன் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை
உங்களின் குடல்நாள பூச்சைச் (gut
lining)சரி செய்வதற்காக உண்ணுங்கள். அது தனது இயல்பான இயக்கத்தை
அடையும்.
இப்படி ஜீரணத்தைச் சரி செய்ய சில காலம் பிடிக்கும், ஆனால் அதில்
நிச்சயம் வெற்றி உறுதி. நீங்கள் துடிப்பான ஆரோக்கியத்தை விரும்பினால் அது மிக மிக அவசியமானது.
ஆகவே உங்கள் உள் குழாயை சரி செய்ய மேற்கொண்ட சிகிச்சை வழிமுறைகளைக் கடைப்பிடித்து உங்கள்
நோய் அறிகுறிகள் மறைவதைக் கண்டு மகிழுங்கள்!
இப்போது நான் உங்களிடம்
கேட்க விரும்புவது : –
உங்களின் குடல்நாளம் உங்களின் முழு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு
முக்கியமானது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?
உங்கள் ஜீரணத்தைச் சரியாக்க என்னென்ன வழிமுறைகளை நீங்கள் எடுக்கிறீர்கள்?
எப்படி அவை வேலை செய்கின்றன?
ஏன் மருத்துவக் கம்பெனிகள்
குடல்நாளத்தின் சரியான இயக்கத்தைத் தடை செய்யும் மருந்துகளைத் தயார் செய்து
அவற்றை தீவிரமாக விளம்பரப்படுத்துகின்றன? உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன?
உங்கள் எண்ணங்களைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாமே!
உங்கள் ஆரோக்கியத்தை விரும்பும் நலம் விரும்பி
மார்க் ஹைமேன்
MD
****
நன்றி : மார்க் ஹைமேன் MD – க்ளீவ்லாண்ட் க்ளினிக் சென்டர் ஃபார் ஃபங்ஷனல் மெடிசின் – இன் டைரக்டர். அல்ட்ரா வெல்னெஸ் சென்டரின் நிறுவனர்.