இசை மேதையின் அபார ஞாபக சக்தி!

Written by  London Swaminathan 

 

Date: 14 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-26 am

 

 

Post No. 4493

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஆர்டுரோ டோஸ்கானினி  (ARTURO TOSCANINI) இசை இயக்குநர் ஆவார். ஆரம்ப காலத்தில் அவர் ஸெல்லோ (CELLO) வாத்தியம் வாசிப்பவராக இருந்தார். பிரபல வயலின் வித்வான்கள்; சாஹித்ய கர்த்தாக்ளுடன்க நல்ல தொடர்பு வைத்திருந்தார். வயலின் மேதைகள்  ரோமானினி, என்ரிகோ போலோ, இசை அமைப்பாலர் போல்சோனி ஆகியோர் ஒரு முறை சந்தித்தனர் அவர்கள் அப்பொழுது போல்சோனி எழுதிய அடாகியோ ஒன்றை வாசித்தனர்.

 

அடாகியோ (ADAGIO) என்பது ஆமைவேகத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு (ITEM) ஐட்டம். நம்மூர் தில்லானாவுக்கு எதிர்ப்பதம் என்றும் சொல்லலாம்.

 

மற்றொருத் தடவை போல்சோனி தவிர மற்ற எல்லோரும் சந்திக்கும் வாய்ப்பு கிடடைத்தது. அவர்களுக்குள் போல்ஸோனி பற்றி சம்பாஷணை எழுந்தது. அடடா! அவருக்குதான் இசை அமைப்பதில் என்ன திறமை? அவர் மட்டும் இப்பொழுது இருந்தால் அடகியோவை மீண்டும் வாசித்து இன்புறலாமே! அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்தனர்.

 

திடீரென்று டோஸ்கானினி  ஒரு பேப்பரும் பென்ஸிலும் கொடுங்கள் என்றார். காகிதம் கையில் கிடைத்தவுடனே, ம்ள மளவென்று அடாகியோவுக்கான நொடேஷன் எல்லாவற்றையும் ஸ்வரம் தப்பாமல் எழுதிக் கொடுத்தார். அனைவரும் அதை வாசித்து மகிழ்ந்தனர்.

அந்த அடாகியோவில் நான்கு பகுதிகள் உண்டு

நம்ம ஊரில் ஒரு சாகித்யகர்த்தா எழுதிய ஒரு பாடலை அவர் கச்சேரி முடிந்து திரும்பியவுடன் அவர் பாடிய புதிய பாடலை ஸ்வரம் தப்பாமல் எழுதிக்கொடுப்பது போலாகும் இது.

 

XXXX

ஆசை, அகந்தை, அலட்சியம்!!!

 

ப்ரூனோ வால்டர்ஸ் (BRUNO WALTERS) நல்ல இசை அமைப்பாளர். மிகவும் அமைதியானவர்; அடக்கம் உடையவர்; பழகுதற்கு இனியர்.

அவர் முதல் தடவை நியூயார்க் பிலார்மானிக் நிகழ்ச்சி நடத்தியபோது முதல் ஸெல்லோ வாத்யம் (CELLIST) வாசிப்பவற்கான நாற்காலியில் ஆல்ப்ரெட் வாலென்ஸ்டைன் (ALFRED WALLENSTEIN)  உட்கார்ந்து கொண்டார்.அத்தோடு நில்லாமல் ஒத்திகை நடந்தபோதும் சரி, இன்னிசை நிகழ்ச்சியிலும் சரி,  நடத்துநர் ப்ரூனோவைக் கண்டுகொள்ளவில்லை. வேண்டுமென்றே அலட்சியம் செய்தார். அங்குமிங்கும் ‘பராக்’ பார்த்துக் கொண்டிருந்தார். வேறு ஒரு இசை அமைப்பாளராக இருந்தால், கோபத்தில் அவரை திட்டியிருப்பார். ஆனால் ப்ரூனோ அவரிடம் சென்று, என்னைத் தனியாகச் சந்தியுங்கள் என்றார்.

 

வாலென்ஸ்டைனும் தனிச் சந்திப்புக்காக வந்தார்.

 

“வாலன்ஸ்டன், உங்களுக்கு என்னதான் வேண்டும்? ஒருமாதிரி இருக்கிறீர்களே, உங்கள் ஆசை அபிலாஷைகள்தான் என்ன? சொல்லுங்கள்”.

 

வாலன்ஸ்டைன் சொன்னார்: “நான் ஒரு சிறந்த இசை நடத்துநர் (CONDUCTOR) ஆக வேண்டும்”.

 

உடனே ப்ரூனோ, அமைதியாகச் சொன்னார்:

“அதற்கென்ன, ஆகுங்களேன் ஆனால் வாலன்ஸ்டைன் போன்றவரை முதல் வரிசையில் உட்கார வைத்துவிடாதீர்கள்!”

 

XXXX

சங்கீத அவுரங்கஸீப்புக்கு சிபாரிசுக் கடிதம்!

 

லியோபோல்ட் ஸ்டோகோவ்ஸ்கி (LEOPOLD TOKOWSKI) என்பவர் பெரிய இசை அமைப்பாளர் (MUSIC CONDUCTOR); அவருக்கு ஒரு பிரபல வயலின் வித்வான் சிபாரிசுக் கடிதத்துடன்,  வேறு ஒரு இளம் வயலின் வித்வானை அனுப்பி இருந்தார்.

 

அது நல்ல சிபாரிசு என்பதால், ‘இப்போதைக்கு பிலடெல்பியாவில் இசைக் குழுவில் இடம் இல்லை. சில நாட்கள் பிலடெல்பியாவில் தங்கினால் ஏதேனும் உதவி செய்வேன்’ என்றார் ஸ்டோகோவ்ஸ்கி.

 

வந்த ஆளின் அதிர்ஷ்டம், ஒரு முக்கியக் கச்சேரிக்கு முன், இசைக்குழு வயலின் வித்வானுக்கு உடம்பு சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

 

ஆகையால் சிபாரிசுக் கடிதத்துடன் வந்தவரிடம் டோகோவ்ஸ்கி வந்து, பீதோவனின் (BEETHOVEN SYMPHONY) பாட்டுக்கு நீங்கள் ஈடுகொடுத்து வாசிப்பீர்களா? என்றார். அவரும் தலையை அசைத்துவிட்டு, அவ்வாறே வாசித்தார்.

 

ஆனால் நேரம் ஆக ஆக அவர் முகத்தில் கொஞ்சமும் சுரத்து இல்லை; பிடிக்காத விஷயமாக இருந்தால் குழந்தைகள் எப்படி நெளியுமோ, முகத்தைச் சுழிக்குமோ அப்படி சுழித்தார்.

டோகோவ்ஸ்கி அவரிடம் சென்று என்ன விஷயம்? என்று கேட்டார்.

உடம்பெல்லாம் சரியா? ஏதேனும் உடம்பு கோளாறா? டாக்டரைக் கூப்பிடவா? என்று கேட்டார்.

அவர் இல்லை என்று சொன்னவுடன்,

மிகவும் கோபத்துடன், பின்னர் ஏன் இப்படி முகத்தை, குரங்கு மூஞ்சி போல வைத்துக்கொண்டு முழிக்கிறீர்கள் என்று விரட்டினார்.

 

அதுவா……….. அதுவா,,,,,,,,,,,,,,,,, எனக்கு சங்கீதம் பிடிக்கவே பிடிக்காது! — என்றார் கோணமூஞ்சி வயலின் வித்வான்!

 

 

Tags:-சங்கீத சம்பவங்கள், அபார ஞாபக சக்தி, வயலின் வித்துவான், அவுரங்கசீப், அகந்தை

 

–சுபம்–

Amazing Memory of Toscanini! Conductors Anecdotes (Post No.4489)

Compiled by  London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  11-12 am

 

 

Post No. 4489

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Conductors Anecdotes 

Amazing Memory of Toscanini!

One of the great traditions of contemporary music is the astounding and infallible memory of Arturo Toscanini. One time early in his career, when Toscanini was a cellist, he formed an acquaintance with the violinists Romanini and Enrico Polo, and with Bolzoni ,the composer.

Bolzoni once composed an Adagio which the group performed on a special occasion. More than a year later the two violinists and Toscanini again met but Bolzoni was absent.

What a pity! Someone exclaimed, that Bolzoni has the score. If he had left us a copy we might have had the quartet we liked so much.

Toscanini said, give me a pencil and paper

Whereupon he proceeded to write down all four parts of the Adagio from memory.

ADAGIO:- a piece of music that should be played slowly

Xxx

Never have a Wallenstein in front of you!

The fine conductor, Bruno Walter, is a man of gentle and sensitive temperament. The first time that he conducted the New York philharmonic the noted cellist Alfred Wallenstein, occupied the first cellist’s chair . Walter was annoyed and embarrassed by the fact that Wallenstein ignored him throughout rehearsal and concerts alike, gazing everywhere in the auditorium, except at the conductor, while playing. Where another man might have flown into rage, Walter merely asked that Wallenstein come to speak privately with him.

Tell me Mr Wallenstein, said Walter mildly, what is your ambition?

I should like some day to be a conductor

Well, said Walter gently, I only hope you never have Wallenstein in front of you.

 

Xxx

Reverence, Please

The eminent conductor. Malcolm Sargent, was conducting a Royal Choral Society rehearsal of The Messiah. He was displeased with the women’s section s rendering of For unto Us a child is born. Calling for attention, he begged, Just a little more reverence, please, and not so much astonishment.

 

Xxx

Basil Cameron

When Basil Cameron, the conductor, was starting on his musical career, he looked round for a good name and decided on Von Hindenburg. And a good name it was, up to the beginning of August 1914, when Von Hindenburg quietly disappeared like so many Germans of the period In his case, however, the public was astounded to hear that the brilliant young conductor they had admired was commanding the German army.

 

Xxx

I don’t like Music, Sir

A certain young violinist came to Leopold Stokowski with a very forceful and impressive letter of introduction from an old and respected friend of the notable conductor.

I am very sorry that there is no opening for you now in the orchestra, Stokowski  explained , but it you can stay in Philadelphia for a while, I will be very glad to place you  at the first opportunity.

The chance came little more than a week later, when the second violinist was rushed to the hospital for an appendectomy only a few hours before a concert. Stokowski called the young aspirant and said,

We are playing a Beethoven cycle. Can you manage the second violin in the Seventh and Eighth symphonies?

Eagerly the young man assured him he could. In the opening passages of the Seventh symphony that night the conductor listened sharply for the strains of the second violin and noted that the newcomer seemed to be doing well. Glancing at him, he was shocked to see an expression of great agony and anguish on the violinist’s face.

Heavens, he thought, there must be a curse on the second violin. Will he be able to last out the programme!

As the symphony progressed from movement to movement, the second violinist appeared to writhe and grimace in increasing torture. Stokowski s concern began to change to anger and irritation. At the intermission, seeking to control himself, he went to the musicians dressing room and demanded,

Are you sick?

Why, no, said the young man.

Is there anything paining you?

Not at all.

Then, shouted Stokowski angrily, you must not approve of my conducting.

Oh, sir, said the musician, it is a privilege to play under you.

Then why on earth were you making such outlandish faces?

Oh, that, said the young man,

Well, you see, sir, I just don’t like music.

 

Xxxx SUBHAM xxxx

 

 

சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)

 

சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)

 

 

Written by London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-51 am

 

 

Post No. 4488

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புகழ்பெற்ற வயலின் வித்வான் ப்ரிட்ஸ் க்ரைச்ட்லர் (FRITZ KREISTLER) தனது நண்பருடன்  கடைத் தெருவில் நடந்து சென்றார். அங்கே ஒரு மீன் விற்கும் கடை இருந்தது. அதில் வரிசையாக காட் வகை (CODFISH) மீன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மீனும் வாயைப் பிளந்து கொண்டு இமைக்காத கண்களுடன் பார்த்துக்கொன்டிருந்தன.

திடீரென்று க்ரைட்ஸ்லர் தனது நண்பரின் கைகளைப் பிடித்தார். அடடா! நான் கச்சேரி வாசிக்கப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வந்துவிட்டது! என்றார்.

 

(அவரது ரசிகர்கள் வாயைப் பிளந்து கொண்டு, கண்கொட்டாமல் இசையை ரசிப்பராம்!)

XXXXX

 

மயக்கமா? தயக்கமா?

பிரான்ஸ் லிட்ஸ் (FRANZ LITSZ) என்ற புகழ் பெற்ற பியானோ வாத்தியக் கலைஞர் காசுகொடுத்து ரஸிகர்களை ‘செட் அப்’ பண்ணுவாராம். நல்ல அழகான பெண்களைக் கூட்டிவந்து, இந்தோ பாரு  உனக்கு 25 பிராங்க் (FRANKS) பணம் தருவேன். நான் இந்தப் பாட்டு வாசிக்கும்போது நீ மயக்கம் போட்டு விழுவதாக நடிக்க வேண்டும்; நான் உன்னைக் காப்பாற்றுவதாக நடிப்பேன். ஆனால் யாருக்கும் விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது. சரியா? — என்று சொல்லி அழைத்துவருவார்.

 

அவருக்கு மிகவும் புகழ் ஈட்டித் தந்த கிருதியை வாசிக்கும்போது, பணம் வாங்கிய பெண்மணி தடாலென்ற சப்தத்துடன் மயக்கம் போட்டு விழுவாள்; உடனே மேடையில் இருக்கும்  பிரான்ஸ், திடீரென்று தனது பியானோ ஆசனத்திலிருந்து கீழே குதிப்பார். அந்தப் பெண்மணியை அலாக்காகத் தூக்கிச் சென்று மேடைக்குப்பின் சென்றுவிட்டு வருவார்.

 

உடனே ரஸிகர் அனைவரும் அடடா! என்ன வாசிப்பு! என்ன ரசனை; மயக்கமே போட்டுவிட்டாளே! என்று பேசிக்கொள்வர்.

 

ஒருமுறை இவரது கணக்கு, தப்புக் கணக்காகிவிட்டது; காசு வாங்கிய பெண் மயக்கம்போட்டு விழ மறந்து விட்டாள்! அதை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரான்ஸ், என்ன செய்வதென்று திகைத்து அவரே மயக்கம்போட்டு விழுந்துவிட்டார்!

XXXX

லண்டன் பெட்டிகோட் லேன் மார்க்கெட் (PETTICOAT LANE MARKET)

(இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் லண்டனில் ஞாயிறு தோறும் நடக்கும் ஒரு ஏமாற்று வேலை நினைவுக்கு வருகிறது. லண்டனில் நுற்றாண்டுக் கணக்கில் நடக்கும் சாலை ஓரக் கடைகள் இன்றும் உண்டு. அவர்கள் ஞாயிறுதோறும் ரோட்டில் கடை விரிப்பர். இதில் மிகவும் புகழ்பெற்றது பெட்டிகோட் லேன் எனப்படும், லிவர்பூல் ஸ்ட்ரீட் (LIVERPOOL STREET) மர்க்கெட்டாகும். நான் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர் வருகையில் அவர்களை அழைத்துச் சென்று காட்டுவேன்; கூட வருபவரிடம் இந்த வேடிக்கை பற்றிச் சொல்லிவிட்டு ஒரு மூலையில் நின்று ஓரக் கண்களால் இதைப் பாருங்கள் என்பேன்.

 

அங்கே ஒருவன் திடீரென்று வந்து துண்டை விரிப்பான். நிறைய பெர்fயூம் பாட்டில்களை (PERFUME BOTTLES) வெளியே அடுக்கிவைப்பான். எல்லாம் பிரபல பிராண்ட் நேம்ஸ் (BRAND NAMES) உடைய சென்ட்கள். ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்! போனால் வாராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது;  மூடப்பட்ட ஒரு கடையிலிருந்து வந்த  STOCK ஸ்டாக் இவை! இதோ இதைக் கடையில் வாங்கினால் 40 பவுன்; நான் தருகிறேன் 20 பவுனுக்கு; இதைப் பாருங்கள்!! இதைப் போய் கடையில் வாங்கினால் இதன் விலை 30 பவுன்; நான் உங்களுக்கு 15 பவுனுக்கு தருகிறேன் ; இதோ இதைப் பாருங்கள். நீங்கள் AIRPORT DUTY FREE SHOP ஏர்போர்ட் ட்யூட்டி ப்ரீ ஷாப்பில் வாங்குவதில் கால் பங்கு விலைக்குத் தருகிறேன்; போய்விடாதீர்கள்; இனித்தான் முக்கிய ரஹஸியத்தைச் சொல்லப் போகிறேன்; இன்று ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் SPECIAL DISCOUNT ONLY TODAY; அத்தனைக்கும் சேர்த்து 25 பவுன் கொடுங்கள் போதும் என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கு கூடியிருக்கும் பெருங்க் கூட்டத்தில் இருந்து நாலு ஐந்து இளம் வெள்ளைக்கார அழகிகள் ஓ, வாவ்! எனக்கு இரண்டு வேண்டும் என்று 50 பவுன்களை எண்ணிக் கொடுப்பர்; அதற்குள் இன்னொரு பெண்மணி எனக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்; மூன்றாவது அழகியோ அனைவரையும் விலக்கித் தள்ளிவிட்டு பிரமாதம் எனக்கும் என் நண்பிக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்.

 

அந்த பெட்டிகோட் லேன் மார்க்கெட்டுக்கு வருவோர் பெரும்பாலும் லண்டனில் ஒரு சில நாட்களே தங்கும் டூரிஸ்டுகள்; அவர்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னால் போய் ஆளுக்கு ஒன்று வாங்குவர்.

 

ஏற்கனவே வாங்கிய பெண்கள் அனைவரும் ஒரு மூலையில் சென்று ஒளிந்து கொண்டு இருந்துவிட்டு திரும்பிவந்து அவனிடம் பெர்fயூம் பாட்டில்களைத் திருப்பிக் கொடுப்பர். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் இதே காட்சி துவங்கும்; இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் அழகிகள்! ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பர்!)

 

XXX

 

 

ஒரு பாகவதரின் சோகம்!

 

உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர் படெரெவ்ஸ்கி (PADEREWSKI) ஒரு நாள் கச்சேரி முடிந்தவுடன் ஸோகம்  ததும்பிய முகத்துடன், மேடைக்குப் பின்னால் போய் அமர்ந்தார். அவருடைய உதவியாளருக்கு மனக் கவலை.

ஐயன்மீர்! உடல்நலம் சரியில்லையா? ஏன் இப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று வினவினார்.

உடனே படெரெவ்ஸ்கி பதில் கொடுத்தார்?

எனது முக்கிய ரஸிகர்கள் இருவர் இன்று வரவில்லை; அதான் ஒரே கவலை.

அட, இந்த ஊரில் உங்களுக்கு நண்பர்கள் வேறு இருக்கிறார்களா? உங்களுடன் நான் அவர்களை என்றும் பார்த்ததே இல்லை யே என்றார் உதவியாளர்.

 

இது அமெரிக்காவின் தொலைதூர ஒரு ஊரில் நடந்தது.

ஆமாம் எனக்கு இங்கே ரஸிக நண்பர்கள் உண்டு; ஆனால் நானும் அவர்களைச் சந்தித்ததே இல்லையே என்றார்.

உதவியாளருக்கு ஒன்றும் விளங்கவில்லை. நீங்கள் சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே என்றார்.

உடனே படரெவ்ஸ்கி தொடர்ந்தார்:-

 

20 ஆண்டுக் காலமாக நான் இந்த ஊரில் வந்து வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வசிக்கும்போது இரண்டாவது வரிசையில் அமர்ந்து நரைத்த தலை முடிய ஒரு  தம்பதியினர் என் வாசிப்பை ரஸிப்பர்; அவர்கள் ரஸிக்கும் விதத்தைப் பார்த்து நான் கூட வாசிப்பேன். அவர்கள் உண்மையான ரஸிகர்கள்; இன்று வரவில்லிலையே! ஏதேனும் எசகு பிஸகாக ஆகியிருக்குமோ என்று சொல்லிவிட்டு  பேசாமடந்தையாகிவிட்டார்

 

மேலும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

 

(ஒரு பாகவதருக்கு ரஸிகர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது இதிலிருந்து புரியும்; நான் லண்டனில் நான்கு சங்கங்கள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் பிரபல வித்துவான் டி.வி.கோபால கிருஷ்ணனின் (SRI T.V.G) இன்னிசையை ஏற்பாடு செய்திருந்தேன்; திடீரென்று ஏற்பாடு செய்ததால் ஒரு 75 பேருக்கும் குறைவாக ரஸிகர் இருந்தனர். கச்சேரி முடிந்தவுடன் எனக்கோ கவலை; கூட்டம் குறைந்ததற்கு ஏதேனும் சப்பைக்கட்டு காரணம், நொண்டிச் சாக்கு சொல்லுவோம் என்று அவரை மெதுவாக அணுகினேன்.

 

நான் பேசுவதற்கு முன் “எனக்கு இன்று ரொம்ப த்ருப்தி; இப்படிப்பட்ட ஆடியன்ஸுக்கு வாசிப்பதுதான் எனக்குப் பிடிக்கும்” என்றார். மேலும் தொடர்ந்து “இது போல அடிக்கடி ஏற்பாடு செய்யுங்கள்; எனக்கு பணம் முக்கியமில்லை; இப்படிப்பட்ட ரஸிகர்கள்தான் வேண்டும்” என்றார்.

 

எனக்கு வியப்பும் சந்தோஷமும் மேலிட்டாலும் இதன் பின்னனி நன்கு விளங்கியது.  லண்டனில் பல அரங்கேற்றங்கள், கச்சேரிகள் நடக்கும். அதில் வரும் பாதிக் கூட்டத்துக்கு சங்கீத ம் என்றால் அரைக் கிலோ என்ன விலை? என்று கேட்பர். அரங்கேற்றம் செய்யும் மாணவ மாணவியரும் மிலிட்டரி ட்றில் MILITARY DRILL போல அந்த ஆறு பாட்டை மட்டும் உருப்போட்டு வைத்திருப்பர்.

 

 

ஏனைய பாட்டுகளுக்கு பொருள் கேட்டாலோ, ‘ராகம் வராகம், தாளம் வேதாளம், க்ருதி ப்ரக்ருதி’ என்பர்; பெற்றோர்களோவெனில் 10,000 பவுண்ட் கடன் வாங்கி அரங்கேற்றம் நடத்திவிட்டு அதன் பொருள் விளங்காப் புதிராக — குதிராக – நிற்பர்.

 

ஆயினும் எனக்கு சந்தோஷமே; அந்த வீட்டுக் குழந்தைகள் காபரே, கூபரே என்று கிளப்புகளுக்கும் பாப் மியூஸிக் கச்சேரிகளுக்கும் போகாமல்,  ஏதோ இரண்டு தியாகராஜ கிருதிகளையும் புரந்தரதாஸர் கீர்த்தனைகளையும் பாடுகிறதே என்று மகிழ்வேன்.

 

‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை’ என்ற பழமொழி போல இங்கு யார் வேண்டுமானாலும் எந்த ஸ்கூல் வேண்டுமானாலும் நடத்தலாம். யோகா கற்பிக்கும் முக்கால் வாசிப்பேர் வெள்ளைக்காரர்கள்; ஒரு புத்தர் சிலையோ நடராஜர் சிலையோ வீட்டில் வைத்திருப்பர்!

அவர்களும் வாழ்க!

 

TAGS:- சங்கீத விநோதங்கள், ரஸிகர், காசு, படரெவ்ஸ்கி, மயக்கம் போட்ட, பாடகர் பாகவதர்

 

–SUBHAM–

சங்கீத ஞான சூன்யம்! (Post No.4447)

Written by London Swaminathan 

 

Date: 30 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  20-17

 

 

Post No. 4447

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பிரபல வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) சிறு வயதிலேயே வயலின் வாசிப்பில் சக்கைப்போடு போடுவார். ஒருமுறை ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அவரது குடும்பத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த வீட்டுக்காரர் சிறுவயது மேதை மிஸ்சாவை அழைத்து ‘வயலின் வாசித்துக் காட்டு. எல்லோரும் கேட்கட்டும்’ என்றார். அவரும் தனது முழுத் திறமையைக் காட்டுவதற்காக உலகப் புகழ்பெற்ற சங்கீத மேதை, பியானோ கலைஞர், சாஹித்ய கர்த்தாவான பீதோவனின் (Ludwik Beethoven’s Sonata) ஒரு வயலின் பாடலை வாசித்தார். அந்தப் பாட்டில் நிறைய இடைவெளிகள் (stops, Pauses) வரும். அதாவது சில வினாடிகள் அமைதி நிலவும்.அதை வாசித்தபோது எல்லோரும் மெய் மறந்து கேட்டனர். அந்தக் குழுவில் சங்கீத ஞான சூன்யப் பாட்டி ஒருத்தியும் இருந்தார். அவர் ஏன் இந்தச் சின்னப் பையன் இப்படி நிறுத்தி நிறுத்தி வாசிக்கிறான் என்று கவலைப்பட்டார். எல்லோருக்கும் முன்னால், மெதுவாக நடந்து சென்று எஸ்சாவின் முதுகில் தட்டிக்கொடுத்து “டேய் பையா, உனக்கு தெரிந்த பாட்டை வாசியேன்டா, ஏன் சிரமப்டுகிறாய்?” என்று சொன்னார்.

 

இதை எஸ்சா  எல்மானே எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். இது அவருடைய இளம் வயதில் நடந்த நிகழ்ச்சி.

 

சங்கீத சாம்ராஜ்யம்

ஜஸ்சா ஹைபிட்ஸ் (Jascha Heifitz) முதல் முதலில் நியூயார்க்கில் வாசித்த வயலின் கச்சேரிக்குப் பெரும் கூட்டம் கூடி இருந்தது. அது நல்ல சுகமான வசந்த காலம். புகழ்பெற்ற பியானோ கலைஞர் ஜோசப் ஹாப்மான் அருகில் மற்றொரு புகழ் பெற்ற வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) உட்கார்ந்திருந்தார். கச்சேரி சூடுபிடித்தது. எல்லோரும் வாயில் கொசு, ஈ புகுந்தாலும் தெரியாத அளவுக்கு மெய்மறந்து கேட்டனர். ஆனால் எல்மானுக்கு வியர்த்து விறுவிறுத்தது. உட்கார முடியவில்லை; கச்சேரி நல்ல படியாக அமைய வேண்டும் என்ற கவலை. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. கைவிரல்களை சட்டைக்குள் விட்டுக் குடைந்து கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜோசப் இதை கவனிப்பதையும் அவர் அறிவார்.

 

ஒரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு துவங்குவதற்கு முன்னர் இருந்த இடைவெளியில் ஜோசப்பைப் பார்த்து, அவர் காதில் ரஹஸியமாக,

“ஒரே புழுக்கமாக இருக்கிறதல்லாவா? ஒரே வியர்த்துக் கொட்டுகிறதல்லவா? “ என்றார்.

 

அவர் சிரித்துக் கொண்டே காதில் முனகினார்:

‘பியானோக்காரர்களுக்கு வியர்க்காது’ என்றார்.

xxxxxx

என் வயலின் காலை வாரிவிடவே விடாது

சாம் வார்ட் (Sam Ward) என்பவர் புகழ்பெற்ற இதாலிய வயலின் மேதை நிக்கலோ பகனீனி (Niccolo Paganini) பற்றி ஒரு கதை சொல்லுவார்:

 

மற்றொரு இசை மேதை ஒரு நண்பரை அழைத்து வந்திருந்தார்.

உங்கள் நண்பருக்கு சங்கீதம் பிடிக்குமா? என்றார்.

அவர் ஆமாம் என்று சொன்னவுடன், பகனீனி ஒரு கிதாரை எடுத்தார். நாளைய கச்சேரிக்கு நான் பயிற்சி செய்வதை அவரும் கேட்கட்டும் என்று சொல்லி வாசிக்க ஆரம்பித்தார். அரை மணி நேர வாசிப்பில் பூலோக சுவர்க்கத்தை உருவாக்கினார். அவருடைய கிதார் பேசியது, பாடியது, உறுமியது, கெஞ்சியது கொஞ்சியது, மிஞ்சியது, விஞ்சியது ஆனந்தக் கூத்தாடியது. கேட்டவர்கள் எல்லோரும் அசந்தே போயினர்.

  

உடனே வந்திருந்த பிரபல மேதை, அடடா, அடடா, அப்படியானால் நாளைய வயலின் கச்சேரிக்கு எப்போது பிராக்டீஸ் செய்யப்போகிறீர்கள்; அதையும் கேட்க ஆசை என்றார்.

பகனீனி சொன்னார்:

“ஆங்! தேவையே இல்லை! என் வயலின் என்னை என்றைக்கும் காலை வாரிவிடாது.”

 

அந்த அளவுக்கு வயலின் வாசிப்பு அவருடைய உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் கலந்திருந்தது. அவ்வளவு நம்பிக்கை!

 

–Subham —

 

Audience who don’t know Music! (Post No.4446)

COMPILED by London Swaminathan 

 

Date: 30 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  9-24 am

 

 

Post No. 4446

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Instrumentalists  Anecdotes -3 (In the past two days I have posted  many instrumentalists’ anecdotes)

 

PIANISTS DON’T FEEL HOT!

There is a legend which would have it that, when Jascha Heifetz made his triumphant New York debut among the audience were other violinist Mischa Elman and the distinguished pianist Josef Hofmann. The hall was crowded and it was an evening in spring. The concert progressed and the audience was spellbound by the genius of Heifetz. As the music went on, Elman became increasingly nervous and fidgety, running his finger frequently around the inside of his collar and mopping at his forehead with a hand kerchief. In the pause between two selections, he leaned over and whispered to Hofmann

“Awfully hot in here, isn’t it?”

Hofmann smiled and whispered back, “Not for pianists”.

 

Xxx

Audience who don’t know music!

Mischa Elman, the violinist, takes delight in telling the following story,

While visiting the friend of a family I was asked to play something to the assembled group of people. For an urchin of seven, as I was at that time, I flatter myself I rattled off Kreutzer Sonata of Beethoven’s finely. The sonata has in it several long and impressive rests. In one of these rests a motherly old lady leaned forward, patted my shoulder and said,

“Please try something you know, dear “

 

Xxx

I Don’t Care!

Jascha Heifetz arrived in great haste at Radio city, perilously near being late for a radio concert with the NBC Symphony Orchestra. He hastened into the elevator carrying his violin in its case.

“You will have to go in the freight elevator with that”, said the operator.

“I have no time, said Heifetz, I am in a hurry”.

“I don’t care”,said the operator.

“All musicians with instrument s have got to ride in freight elevator”.

“Look ,said the exasperated musician, I am Jascha Heifetz”.

“I don’t care if you are Rubinoff, said the operator, you have got to ride in the freight elevator”.

 

Xxx

MUSICAL CATARACTS IN NORWAY

Ole Bull, celebrated 18th century Norwegian violinist, was a man of singular and beautiful simplicity of character. He spoke English with much expression and had quaint turn s of dialect as original as they were unstudied. He was describing the grandeur of the hills and fiords of his native land and its deep forests resounding with musical cataracts when someone exclaimed,

“Did you play to them, Ole?”

“No, he replied, I listened “.

Xxxx SUBHAM xxx

புகழ்பெற்ற வயலின் ‘திருடன்!’ (Post No.4444)

Written by London Swaminathan 

 

Date: 29 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  9-38 am

 

 

Post No. 4444

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler  (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.

அவர் ஒருமுறை ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் (Hamburg) நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். மறு நாள் லண்டனில் வயலின் கச்சேரி. ஆனால் ஹாம்பர்கில் லண்டனுக்கான கப்பல் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. அருகில் இசைக் கருவிகள் கடைகள் இருப்பதை அவர் அறிவார். ஒரு கடைக்குள் போய்ப் பார்ப்போமே என்று நுழைந்தார். அவர் கைகள் இடுக்கில் வயலினை வைத்திருந்தார். அதில்  அவருடைய பெயர் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.

 

இசைக் கருவிகளின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து, அதன்

விலை என்ன? இதன் விலை என்ன? என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

அந்தக் கடைக்காரர் கொஞ்சம் நில்லுங்கள்; இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே சென்றவர், சற்று நேரம் கழித்து இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார்.

 

ஒரு போலீஸ்காரன், பிரெடெரிக்கின் தோள் மீது கையைப் போட்டு, ‘நடடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்றார்.

பிரிட்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக? என்றார்.

 

நீ ஒரு பெரியவருடைய வயலினைத் திருடிவிட்டாய். பார், உன் வயலின் மீது புகழ்பெற்ற வயலின் வித்தகர் பிரிட்ஸ் க்ரைஸ்லர் பெயர் பொறித்து இருக்கிறது’ என்றார்.

அடக் கடவுளே! நான்தான் அந்த பிரெடெரிக் க்ரைஸ்லர்’ என்றார்.

“ஏ, மாப்ளே! அந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே; நடடா, ஸ்டேஷனுக்கு என்றார். ஆனால் இந்த சம்பாஷனை எல்லாம்   கடைக்குளதான் நடந்தது. கடையின்  மூலையில் ஒரு கிராமபோன் ரிகார்டர் இருந்தது. உங்களிடம் பிரிட்ஸின் இசைத்தட்டு இருக்கிறதா? என்று கடைக்காரரிடம் கேட்டார் பிரிட்ஸ்.

 

ஓ, இருக்கிறதே என்று சொல்லி, புகழ் பெற்ற, வாசிப்பதற்கே கடினமான ஒரு இசைத்தட்டைக் கொண்டுவதார். அதை கிராமபோன் ரிகார்டரில் போடுங்கள் என்று போடச்சொல்லி எல்லோரையும் கேட்க வைத்தார். அது முடிந்தவுடன், ‘என் வயலினை இப்போது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார். கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகழ்பெற்ற சாகித்யத்தை அப்படியே வாசித்துக் காட்டினார். எல்லோரும் அசந்தே போய்விட்டார்கள்.

பெரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டு பிரிட்ஸ் க்ரைஸ்லரை மரியாதையுடன் வழியனுப்பினர். என்ன பிரயோஜனம்? லண்டனுக்கான கப்பல் புறப்பட்டு போய்விட்டது!

 

xxxxx

 

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்!

“அட நீ ஒரு பெரிய மேதை, அப்பா!”

 

டாக்டர் ஆக்ஸில் முந்தே (Dr Axel Munthe) என்ற புகழ் பெற்ற மருத்துவரிடம் சஹ மருத்துவர் ஒருவர் உடகார்ந்திருந்தார். டாக்டர் ஆக்ஸல் ஏதோ சொன்னவுடன், அந்த சஹ மருத்துவர், நீண்ட பிரசங்கம் நடத்தி, அவரை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தார். இறுதியில் அடேங்கொப்பா! நீ பெரிய மேதை டா! என்றார்.

பூ, ச்சீ, மேதையா? என்ன சொன்னாய்?

உனக்குத் தெரியுமா? புகழ்பெற்ற வயலின் கலைஞர் சாரசாதே (Pablo Sarasate) (ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்டின் மெல்டின் பாப்லோ சாரசதே) ஒருமுறை பியாரிட்ஸ் குடிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு பிரபல இசை விமர்சகர் அவரை மேதை என்று புகழ்ந்தார்.

உடனே சாரசதே சொன்னார்:

“என்ன சொன்னீர்கள்; மேதை என்றா? 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள்!!!”

 

(அவர் மனதில் நினத்தது: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை; உன் கிட்ட இன்றைக்கு மேதை என்று பெயர் வாங்கினால் என்ன? வாங்காவிட்டால் என்ன?)

இசைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால்தான் புகழ்பெற முடியும்; அவர்கள் வாசிப்பில் மெருகு ஏறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்; இசைக் கருவிகள் வாசிப்புப் பழக்கம்.

 

xxxxx

 

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!

“நான் ஒரு நாள் வாசிக்காவிட்டால் நான் கண்டு பிடிப்பேன்; நான் மூன்று நாள் வசிக்காவிட்டால்,ரசிகர்கள் கண்டுபிடிப்பர்!”– பெடெரெவ்ஸ்கி

 

போலந்து நாட்டில் பிறந்த பியானோ வாத்திய மேதை பெடெரெவ்ஸ்கி (Faderewski) ஒரு அரசியல்வாதி; முன்னள் பிரதமர். அவர் சொல்வார்:

நான் ஒரு நாள் பியானோ பயிற்சி செய்யா விட்டால் நான் தடுமாறும்போது ‘ஓ, நான் நேற்று பிராக்டீஸ் (practice) செய்யவில்லை என்று புரியும்.

 

நான் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து  பயிற்சி செய்யாவிடில், “ஐயா, தடுமாறுகிறார்; தப்புத் தப்பா வாசிக்கிறார். வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவில்லை போலும்! என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்கள்.

 

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் – என்பது தமிழ்ப் பழமொழி; வாசிக்க வாசிக்கத்தான் திறமை அதிகரிக்கும்!

 

TAGS:, பாடப்பாட ராகம், சித்திரமும் கைப்பழக்கம்

–SUBHAM–

Most Famous Violin ‘Thief!’(Post No.4443)

COMPILED by London Swaminathan 

 

Date: 29 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  6-38 am

 

 

Post No. 4443

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Violin Practice-14 hours a day for 37 years!

Dr Axel Munthe, seated in the lounge of the Victoria Louise, was enthusiastically hailed by a brother physician.

What a genius you are! Thus the brother physician ended a long eulogy .

But Dr Munthe smiled and said, “A genius,eh? Well at his villa in Biarritz, Sarasate was once called a genius by a famous critic . But Sarasate (Spansih Violinist) frowned and shook his head.

“A genius!”,he said.

“For thirty seven years I have practiced fourteen hours a day, and now they call me a genius!”

Xxx

Audience knew it!!!

Paderewski once explained that he practiced faithfully every day. If I miss one day s practice,said he, I notice it. If I miss three days, the audience s notice it.

 

Xxx

 

‘Violin Thief!’

Fritz Kreisler, the violinist,found himself in Hamburg one evening with an hour to spare before taking his boat to London.

, where he was to play the following evening. So he wandered into a music shop.

The proprietor asked to see his violin which he carried under his arm. In a moment he disappeared, to reappear with two policemen. One laid his hand on Kreisler s shoulder and said,

“You are under arrest”.

“For what?” Asked Kreisler.

“You have Fritz Kreisler’s violin.”

“Well, I am Fritz Kreisler”.

“Come,come” said the policeman,

“You can’t pull that one on us . Come to the station”.

 

Kreisler s boat sailed in an hour.

He had to do some quick thinking.

“I looked around, he says, and in the corner, I saw a victrola. I asked the proprietor if he any of Kreisler s records, he produced The Old Refrain, put it on for me and played it through.”

“Now, I said, let me have my violin. Then with whatever skill I may command I played The Old Refrain. When I was through I said, Are you satisfied now?”

With profuse apologies, they bowed him out to freedom.

 

Xxx

World’s Greatest Violinist!

It is said that Jescha Heifetz and Mischa Elman were dining together in a restaurant much frequented by artists. The waiter approached the table with an envelope which bore simply the inscription

To the worlds greatest violinist

Heifetz, who has picked it from the tray bowed and handed it across the table and said

“For you,Mischa”

Elman read it and said “No,no” and handed it back

“Something for you,Jascha”.

Thus they shilly shallied back and forth until finally Heifetz was persuaded to open it. He drew out the letter and unfolded it.

It began,” Dear Fritz”.

(Fritz Kreisler was a famous Austrian born violist)

Xxxx SUBHAM xxxx

 

My Violin Never Fails Me-Paganini (Post No.4441)

 

COMPILED by London Swaminathan 

 

Date: 28 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 18-27

 

 

Post No. 4441

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Instrumentalists Anecdotes

Dull wit becomes a Genius!

Once when Paderewski played before queen Victoria, the sovereign exclaimed with enthusiasm,

“Mr Paderewski ,you are a genius !”

“Ah, Your Majesty, perhaps, but before I was a genius , I was a drudge.”

(DRUDGE= ONE WHO DOES A MENIAL, HARD WORK)

Xxxx

Violin and Guitar

Sam Ward told this story of Paganini,

The master held a guitar across his lap,

Your young friend is musical?,enquired he.

Fanatico!, replied Gear.

Then he shall hear me practice for tomorrow night’s concert

Taking the guitar he converted that little understood instrument into an orchestra of bewildering and harmonic sonority. Now it seemed a battle, with the clash of swords, shouts of combatants, the roll of the drum. Then wails of pain and grief appeared to emerge from the sounding board over which his fingers flew like what the westerners call greased lightning. The performance lasted perhaps half an hour, and the dampness of his dishevelled locks indicate d the intensity of the emotion and the exertions that expressed it.

When the mastero received, with a sad smile, our frantic applause, I inquired whether he was going to rehearse on the violin for the morrow. He shook his head, I never rehearse the violin. My practice is the gymnastics of the guitar, to be sure of my suppleness of finger and delicacy of touch. My violin never fails me.

 

Xxx

Who is a good pianist?

Paderewski was once traveling incognito through Germany. He stopped for the night at a small in the Black Forest. In the main room of the inn was an old battered piano. Paderewski asked the landlord if he might try it. Upon doing so he found that the instrument was not only badly out of tune but that a number of the keys were stuck and would strike no sound at all. He remarked upon this to the landlord. The latter, offended  at the criticism of his piano replied, if you were a good pianist you could skip over those keys so it wouldn’t matter.

 

Xxxx

Get Married!

A young lady called one day on Rubinstein,the great pianist, who had consented to listen to her playing.

What do you think that I should do now?, she asked when she had finished.

Get married, was Rubinstein’s answer.

Xxxx Subham xxx

 

 

2 யானை மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி: ஸ்ரீ முத்தையா பாகவதர்! (Post No.4352)

Written by S.NAGARAJAN

 

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 5-19 am

 

 

Post No. 4352

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

இசை இன்பம்

இரண்டு யானைகளின் மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி செய்த ஸ்ரீ முத்தையா பாகவதர்!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள். அவருக்கு எனது நன்றி. அவரது தந்தையார் திரு ராமசுப்ரமணியன் அவர்களின் பாட்டியும் (அப்பாவின் அம்மா), முத்தையா பாகவதரின் தாயாரும் ஸ்ரீ எஸ். ஜி. கிட்டப்பாவின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள். ஆகவே திரு ராமசுப்பிரமணியனின் சித்தப்பா தான் ஸ்ரீ முத்தையா பாகவதர்.

 

 

Picture of Sri Ramasubramaniam

21-10-2017 அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் அவர் தனது பழைய நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வயது 97. தெளிவாக நுணுக்கமான விவரங்களை அவர் இடம், தேதி, பெயருடன் தெரிவித்தது ஒரு அபூர்வமான விஷயம். திரு சேஷாத்திரிநாதன் மிகவும் பத்திரமாக வைத்திருந்த ஆவணங்களைப் பார்த்ததோடு அவற்றை உடனடியாக போட்டோ எடுக்க விழைந்தேன். அந்த போட்டோக்களை திரு கார்த்திக் (சேஷாத்திரிநாதனின் புதல்வர்) நேர்த்தியாக எடுத்துத் தந்தார். அவருக்கும் நமது நன்றி.

 

 

2

 

ஸ்ரீ முத்தையா பாகவதர் (பிறப்பு : 15-11-1877 மறைவு : 30-6-1945)

20 ராகங்களை உருவாக்கியவர்.

 

1930ஆம் ஆண்டிலேயே மியூசிக் அகாடமியால் சங்கீத கலாவிதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். ஹரிகதா நிகழ்த்துவதில் வல்லவர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் ஹரிகதை செய்வதைக் கேட்பதற்காக மக்கள் திரள் திரளாகக் கூடுவது வழக்கம். பல வெளிநாடுகளுக்கும் அவர் கப்பலில் செல்வது வழக்கம். சிலோன், பினாங்கு, ரங்கூன் உள்ளிட்ட பல இடங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

 

 

3

மைசூர் மஹாராஜா ஒரு நாள் ஒரு நாதஸ்வர வித்வான் மைசூரில் முத்தையா பாகவதர் இயற்றிய வள்ளி நாயகனே என்ற பாடலை வாசிக்கக் கேட்டார். அப்போது அந்த நாதஸ்வர வித்வான் பாகவதரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் மன்னரிடம் கூற உடனே பாகவதருக்கு மைசூர் வருமாறு மன்னர் அழைப்பு விடுத்தார் மைசூருக்குச் சென்ற பாகவதர் மன்னரின் அன்புக்குப் பாத்திரராய் விளங்கினார்.

அங்கேயே வசித்து வந்தார் அவர். அவர் மறைந்ததும் மைசூரில் தான்.

 

 

அவருக்கு உரிய மரியாதை தருவதற்காக உப்பரிகையில் வீற்று கதை கேட்கும் மன்னர் தனக்குச் சமமான உயரத்தில் அவர் ஆசனம் இருக்க வேண்டும் என்பதற்காக உயரமான பெரிய இரு யானைகளை நிறுத்தி அவற்றிற்கு இடையே மேடையை அமைத்து அதில் முத்தையா பாகவதர் அமர்ந்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்த அளவுக்கு அவர் மைசூர் ராஜாவின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

 

 

அவரது நிகழ்ச்சியால் பெரிதும் கவரப்பட்ட மஹாராஜா அவருக்கு யானைக்குட்டி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதைத் தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்ற முத்தையா பாகவதரால் அது அடிக்கும் ‘லூட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

கூடக் கூட்டிச் செல்லும் போது தெரு வீதிகளில் அது ஓடுமாம். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தக் ‘கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்வராம்.

 

வீட்டிலோ தம்புரா உட்பட்ட அனைத்துமே யானையால் உடைபட்டது.

 

பொறுக்க முடியாத முத்தையா பாகவதர் மன்னரிடம் சென்று அந்த அன்புப் பரிசு அன்புத் தொல்லையாக இருப்பதைத் தெரிவித்து யானைக் குட்டியைத் திருப்பிக் கொடுத்தாராம்.

மைசூர் மன்னர் சாமுண்டீஸ்வரி கோவிலில் அவரே பூஜை செய்வது வழக்கம். சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பல கீர்த்தனைகளை முத்தையா பாகவதர் இயற்றியுள்ளார். மன்னர் பூஜை செய்யும் போது முத்தையா பாகவதர் அந்தப் பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்களையும் பாடுவது வழக்கம்.

 

திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வழக்கமாக வரும்.

முத்தையா பாகவதர் சங்கீத உலகிற்கும் ஹரிகதா ப்ரவசன கலைக்கும் ஆற்றிய தொண்டு போற்றுதற்குரியது. அவரைப் பற்றிய பல நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

 

 

4

முத்தையா பாகவதர் மதுரையில் ஒரு சங்கீத பாடசாலையை ஆரம்பித்தார். மதுரை மணி ஐயர் உள்ளிட்ட பிற்கால பிரபலங்கள் பலரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்களே.மதுரை பள்ளிக்கு சங்கர சேர்வை என்பவர் முதல்வராக இருந்தார். அவரது தம்பி முருக பூபதி பிரபலமான மிருதங்க வித்வான். அந்தப் பள்ளியில் தான் திரு டி.என்.சேஷகோபாலன் பயின்றார்.

முத்தையா பாகவதரின் தம்பி ஹரிஹர பாகவதர் அவருடைய ஹரிகதா காலக்ஷேபத்திற்குப் பின்பாட்டுப் பாடுவார். அவர் இறந்தவுடன் அவரது குமாரர் வைத்தியலிங்கம் (மூக்காண்டி என்பது அவரின் செல்லப் பெயர்) அவர்களை முத்தையா பாகவதர் தத்து எடுத்து வளர்த்தார். பாகவதர் இறந்தவுடன் அவரது அந்திமக் கிரியைகளை இவரே செய்தார். சித்தூர் இசைக் கல்லூரியை வைத்தியலிங்கம் நிர்வகித்து வந்தார்.

 

(எனது சம்பந்த்தியின் தந்தையார்) திரு ராமசுப்பிரமணியனின் தமக்கையாரின் கணவர் திரு கிருஷ்ணமூர்த்தி டோலக் வாத்தியத்தை வாசிப்பதில் பெரும் நிபுணர். டோலக் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாய் மாமன் முத்தையா பாகவதர்.

 

அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நிகழ்ச்சிகளுக்கு காசி ஐயர் ஹார்மோனியம் வாசிப்பார். டோலக்கை திரு கிருஷ்ணமூர்த்தி வாசிப்பார். அவரது இசை நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து நோட்டீஸ்களும் கூட போட்டோ எடுக்கப்பட்டது. (இணைப்பு காண்க)

 

 

 

5

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பெரிய அளவில் இசை நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன.

 

விசேஷ துண்டு பிரசுரங்கள் கச்சேரிகளுக்கென வெளியிடப்பட்டன.(இணைப்பில் காண்க)

சங்கீதமும் ஹரிகதை உபந்யாசமும் தேசபக்தி எழுச்சிக்கும் விடுதலைக்கும் எப்படி வித்திட்டன என்பதை தனியே ஆராய வேண்டும். அவ்வளவு விஷயங்கள் அதில் உள்ளன.

 

 

ஹரிகதா சக்கரவர்த்தி ஸ்ரீ முத்தையா பாகவதர் பற்றிய விஷயங்களை அறிந்த  மகிழ்ச்சியுடன் பெரியவர் திரு ராமசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

***

உலகிலேயே மிகப்பெரிய வீணையைக் கண்டேன்! (Post No. 4164)

Veena is seen behind Aum and under Adi shankara

Written by London Swaminathan

 

Date: 26 August 2017

 

Time uploaded in London- 7-49 am

 

Post No. 4164

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

கர்நாடக மாநிலம் ஏராளமான அதிசயங்களைக் கொண்ட மாநிலம். அது பற்றி பெரிய புத்தகமே எழுதலாம். சிருங்கேரிக்குச் சென்று சாரதாம்பாள் கோவிலைலயும் சங்கராச்சார்ய சுவாமிகளையும் காண நீண்ட காலமாக ஆசை. இரண்டும் ஆகஸ்ட் (2017) மாதம் நடந்தேறியது. அத்தோடு ஒரு போனஸும் கிடைத்தது. சிருங்கேரி சங்கராசார்ய மடத்தில் உலகிலேயே பெரிய வீணை உள்ளது. அது இருக்கும் கண்ணாடிப் பெட்டியை உரசிக் கொண்டு நின்ற போதும் மேடையில் சங்கராசார்ய சுவாமிகள் அருளாசி வழங்கும் நேரத்தில் அதை நெருங்கிப் புகைப்படம் எடுக்க மனது உடன்படவில்லை. தொலைவில் இருந்து ஒரு படம் எடுத்தேன்.

 

இந்த வீணை பற்றிய தகவல்கள்:

இது சார்வபௌம வீணை என்று அழைக்கப்ப்டும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு 2003ல் மடத்திற்கு வழங்கப்பட்டது.

சாதாரண வீணை 132 சென்டிமீட்டர் நீளமே இருக்கும். ஆனால் அங்குள்ள சார்வ பௌம வீணை 305 செ.மீ. நீளம் உடையது அதாவது சுமார் பத்து அடி நீளம் கொண்டது. அதன் அகலம் 76 சென்டிமீட்டர் உயரம் 74 சென்டிமீட்டர்.

எடை 70 கிலோ! சாதாரண வீணையோ 10 கிலோதான். அருகில் நின்று பார்த்தால் நாம் தூக்க முடியுமா என்று திகைத்து நிற்போம். இதை 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாரதா பீடத்தில் கொண்டு வைத்தனர்.

 

இந்த வீணை தாமரை வடிவ ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ளது, அதாவது நிற்கும்படி செய்யப்பட்டுள்ளது. ஒன்றின் மேல் சுவாமி விவேகாநந்தர் உருவமும் மற்றொன்றின் மீது ஒரு பொன்மொழியும் பொறிக்கப்பட்டுள்ளது.

“நாம் ஒன்று சேருவது துவக்கம்

நான் ஒன்றாக நீடிப்பது முன்னேற்றம்

நாம் ஒன்றாக வேலை செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்”

என்ற பொன்மொழி செதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மஹா சார்வ பௌம வீணை ஒரே மரக்கட்டையைக் குடைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட வீணை வேறு கிடையாது!

இந்த வீணையின் குடம் முதலிய பகுதிகளில் சங்கீத மும்மூர்த்திகளின் படங்கள், பிள்ளையார், சரஸ்வதி, லெட்சுமி படங்கள், எந்தரோ மஹானுபாவுலு பாடலின் முதல் வ ரி ஆகியன செத்க்கபட்டு இருக்கிறது.

கனகதாசர், புரந் தரதாசர், ராகவேந்திரர் ஆகியோர் படங்களுடன் இதை உருவாக்கிய சிவா மியூசிகல்ஸின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

சப்த ஸ்வரங்கள், அவற்றைக் குறிக்கும் ஏழு கடவுள்கள், 7 ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தும் பிராணிகள் ஆகியனவும் வரையப்பட்டுள்ளன. வெறும் இசைக் கருவியாக நில்லாமல் ஒரு சங்கீத என்சைக்ளோபீடியாவாக இது திகழ்கிறது.

 

வீணையின் கழுத்துப் பகுதியில் இதை உருவாக்கிய கர்நாடக கலாஸ்ரீ சின்னப்ப நடராஜர் பெயர், காந்திஜி, அசோகச் சக்கர உருவம் ஆகியனவும் உள்ளன. கண்ட பேரண்டம் எனப்படும் இருதலைப் பறவையும் இதை அலங்கரிக்கிறது.

 

முனைப் பகுதியில் யாளியின் பட உருவமும் காணப்படுகிறது.கர்நாடக மாநில அசெம்பிளி, வீரர் கம்பகவுட, பொறியியல் வல்லுநர் விஸ்வேரையா ஆகியோர் திரு உருவங்களும் வீணையில் இடம் பெறுகின்றன.

SARVABHOWMA VEENA 
Length – 305cm
Width (Kodam) – 76cm
Height (Kodam) – 74cm
Dimension (Kodam) – 225cm
Length of Dandi – 128cm
Frets – 12mm
Weight – 70Kg
Left Stand (Burude)
Height – 46cm
Dimension – 144cm

CONVENTIONAL VEENA

Length – 132cm
Width (Kodam) – 36cm
Height (Kodam) – 33cm
Dimension (Kodam) -115cm
Length of Dandi – 62cm
Frets – 6mm
Weight – 10Kg
Left Stand (Burude)
Height – 23cm
Dimension – 82cm 
Veena Details are  taken from Shiva Musicals site.

நல்லதோர் வீணை செய்து அதை நாடு புகழும் மண்டபத்தில் வைத்தது சிறப்பான செயல்; அதைத் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது!!

கர்நாடக மாநிலத்தில் இன்னும் பல அதிசயங்கள் இருக்கின்றன. அவைகளையும் எழுத்தில் செதுக்குவேன்!

 

TAGS: பெரிய வீணை, உலகிலேயே, சார்வபௌம, சிருங்கேரி

 

–subahm–