Do you know Indra?

statue_indra_bali
Statue of Indra from Indonesia

Compiled by London Swaminathan
Post No. 1171; Dated:14th July 2014.

Indra is the greatest God and hero in the world. No other ancient literature has any one equal to him. The epithets he carries are too many. He is praised in 250 hymns in the oldest scripture in the world – Rig Veda. Apart from that he is mentioned in 50 more hymns along with other Vedic Gods. Neither Gilgamesh nor Hercules can beat him in his heroic deeds.

Moreover he is more ancient than other old heroes. He is mentioned in the Bogazkoy inscription in 1400 BC in Turkey (150 kms from Ankara). He was worshipped even before this date in India. He is mentioned a few times in Zend Avesta as well.

Indra is a historical figure as well as a title like Emperor,President Pope, Dalai Lama and Prime Minister. Indra is a godly figure to whom rain, thunder and lightning are attributed. One must be careful when one studies Hindu literature. If you avoid books written by “Foreign Non Hindu Scholars” and follow “ancient Hindu scholars” a lot of confusion can be avoided. You will get a better picture. You won’t find anything like concocted Aryan or Dravidian Racist theories in ancient writers or in books written by great Swamijis (Seers and Saints) of Modern India.

art_indra_is_attacked_by_jambasura_1998
Picture shows Jambasura’s attack on Indra.

Answer the following questions to find out how much you know about Indra:

1.What is the name of the white elephant of Indra?

2.What is the name of Indra’s white horse?

3.What is his wife’s name?

4.What is Vajra?

5.What is Indradhanus?
Colnect-1292-111-Scepter-of-Indra
Indra’s weapon in Mongolia Stamps.

6.What is Indra’s capital city?

7.Who is Indra’s son?

8.What is his favourite juice?

9.What is Paran-ja?

10.What is the name of his palace?
indra on elephant
Indra on his elephant

11.What is the name of Indra’s garden?

12.Who is Indra’s Charioteer?

13.Where does Indra reside?

14.Who are Indra’s parents?

indra3

ANSWERS: 1.Airavata: Name of his elephant 2.Uchchaisravas: Name of his horse/chariot 3. Saci: Name of his wife also known as Indrani 4. Vajra: Name of his weapon thunderbolt 5. Sakradhanus: Rainbow also known as Indradhanus is his bow 6. Amaravati: Name of his capital City 7. Jayanata: Indra’s son 8.Soma Juice: The drink he likes the most 9. Paranja: Name of his sword 10. Vaijayanta: Name of his palace 11. Nandana :Name of his garden (also known as Kandasaara, Paarushya) 12.Matali: His Charioteer 13. Swarga : Heaven, the place under his jurisdiction 14.Aditi and Kasyapa: Indra’s mother and father.
airavata
Indra’s elephant on Laos Stamps.

Twenty Four more quiz posts in English and Tamil are available in my blogs: swami_48@yahoo.com

நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!

lakshmi_narayana2

Wriiten by S Nagarajan
Post No.1170; Dated 14th July 2014

This is the eleventh and last part of S Nagarajan’s article from his Tamil book “Honey Drops from the Puranas”. First ten parts were published in this blog:- swami.

சூரியனுடைய சஞ்சாரம்

முன்னோர்கள் வானியல் நிபுணர்கள் என்பதை நிரூபிக்கும் ஏராளமான கருத்துக்கள் புராணங்களில் உள்ளன.
சூரியனுடைய சஞ்சாரம் பற்றி மத்ஸ்ய புராணம் கூறுவது இது:
உத்தராயணத்தில் 18 முகூர்த்தத்தில் 13 நக்ஷத்திரங்களின் இடையே சூரியன் சஞ்சரிக்கிறான். தக்ஷிணாயனத்தில் 12 முகூர்த்தத்தில் 13 ½ நக்ஷத்திர மண்டலங்களில் சூரியன் சஞ்சரிக்கிறான்
– மத்ஸ்ய புராணம்

மாசி, பங்குனி, சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் சூரியன் உத்தராயணத்தில் சஞ்சரிக்கிறான்.

ஆவணி,புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை,மார்கழி, தை ஆகிய மாதங்களில் சூரியன் தக்ஷிணானயத்தில் சஞ்சரிக்கிறான்.
– வாயு புராணம்

பவித்ர நதிகள்
கங்கை, யமுனை, கோமதி, சரயு, சரஸ்வதி, சந்த்ரபாகா,சர்மண்யவதி ஆகிய நதிகள் பவித்ரமான புண்ய நதிகளாகும்
– நரசிம்ஹ புராணம்

surya-namaskar2

தேவர்களை சந்தோஷம் அடையச் செய்பவை!
1)கார்த்தவீர்ய தீப தானம் 2) சூர்ய நமஸ்காரம் 3) விஷ்ணு ஸ்துதி 4) கணேச தர்பன் 5) துர்கா அர்ச்சனா 6) சிவ அபிஷேகம் ஆகிய இந்த ஆறினாலும் தேவர்கள் சந்தோஷம் அடைகின்றனர்.
-நாரதீய புராணம்

ப்ரளயம் நான்கு வகைப்படும்
1) நித்யம் 2)நைமித்திகம் 3) ப்ராக்ருதம் 4) ஆத்யந்திகம் என இவ்வாறு பிரளயம் நான்கு வகைப்படும்.
-கூர்ம புராணம், அக்னி புராணம், சூர்ய புராணம்

துர்கா ஸப்த சதி!
துர்கா ஸப்த சதி மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது.
துர்கா ஸப்த சதியில் 13 அத்தியாயங்களே உள்ளன.
முதல் அத்தியாயத்திலிருந்து 13 அத்தியாயம் முடிய ஒவ்வொரு அத்தியாயத்திலும் முறையே 104,69,44,42,129,24,27,63,41,32,55,41,29 ஸ்லோகங்கள் உள்ளன. இவற்றை மொத்தம் கூட்டினால் வருவது 700 ஆகும். (ஸப்த சதி என்றால் எழுநூறு என்று பொருள்)
துர்கா ஸப்த சதியின் ப்ரவக்த ரிஷி சுமேதா.
– மரீசி கல்பம்

narayan

நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!

முன்னொரு காலத்தில் ஜல பிரளயம் ஏற்பட்டது. அந்த பிரளய வெள்ளத்தில் உலகமெல்லாம் முழுகிப் போயிற்று. சராசரங்களெல்லாம் ஒழிந்து போயின. ஜலத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரம தேவர் ஆயிரம் கண்களும் ஆயிரம் கால்களும் கொண்டு மஹாவிஷ்ணு ரூபம் கொண்டார். மூன்று கண்களை உடைய சிவ பெருமானுடைய திருவடிகளைத் தியானம் செய்து கொண்டு அந்தப் பிரளயத்தில் அவர் படுத்துக் கொண்டிருந்தார். நரன் என்று பெயர் கொண்ட சிவ பெருமானால் உண்டாக்கப்பட்டபடியால் ஜலத்துக்கு நாரம் என்று பெயர் உண்டாயிற்று. அந்த ஜலத்தில் பள்ளி கொண்டிருந்தபடியால் அந்த பிரம்மாவுக்கு நாராயணன் என்று பெயர் உண்டாயிற்று.

அப்போது சிவ பெருமான் அந்தப் பிரமனுக்கு தகுந்த பலத்தைக் கொடுத்து பாதாளத்தில் அழுந்தி இருந்த பூமியை ‘எடுத்து நிறுத்து என்று கட்டளை இட்டார். அந்த நாராயணன் உடனே ஆகாயமளாவும்படியான ஒரு பெரிய வராக ரூபம் கொண்டான். பின்னர் பாதாளம் போய் அங்குள்ள பூமியைக் கொம்பினால் ஏந்திக் கொண்டான். அதைப் பார்த்துத் தேவர்கள் எல்லோரும், “உலகங்களையெல்லாம் உள்ளங்காலுக்குள் அடக்குவாய். ஒரு கவளம் சோறு போல் உண்டு விடுவாய். இது உனக்குப் பெரிதாகுமா, என்ன!” என்று புகழ்ந்து கொண்டாடி, ‘இத்தகைய மஹிமையை உடைய உமக்கு நமஸ்காரம் பண்ணுகிறோம்’ என்று துதித்தார்கள்
திருமால் பூமியை முன் போல நிலை நிறுத்தி மறுபடியும் முன் போலப் பிரம்மாவாய் விட்டார்.

ஸ்கந்த புராணம், சூத சம்ஹிதை, சிவமான்மிய காண்டம், எட்டாவது அத்தியாயம்


Bathing.

தூய்மை (சௌசம்) எதனால் ஏற்படும்?

1.சத்யம் – உண்மை
2.மன: – மனம்
3.இந்த்ரிய நிக்ரஹ – இந்திரியங்களை அடக்குதல்
4.தயா – தயை (அல்லது இரக்கம்)
5.ஜலம் – நீர்
ஆகிய இந்த ஐந்தால் தூய்மை ஏற்படும்.

சத்யசௌசம் மன: சௌசம் சௌசமிந்த்ரியாணிநிக்ரஹ: I
சர்வபூதே தயா சௌசம் ஜலசௌசம் ச பஞ்சமம் II

சத்யசௌசம் –வாய்மையால் தூய்மை
மன: சௌசம் மனத்தால் தூய்மை
சௌசமிந்த்ரியாணிநிக்ரஹ: -இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதால் தூய்மை
சர்வபூதே தயா சௌசம் – அனைத்து உயிர்களிடமும் தயையுடன் இருப்பதால் தூய்மை
ஜலசௌசம் – நீரினால் தூய்மை
ச பஞ்சமம் –ஆகிய இந்த ஐந்தும் தூய்மை (தரும்)
-கருட புராணம் 113- 37

நான்கை வைத்து ஒரு மனிதனை எடை போடு!

ஸ்ருத – அறிவு
சீலம் – ஒழுக்கம்
குலம் – குலம்
கர்மம் – செய்கை
ஆகிய நான்கையும் வைத்து ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை எடை போடுங்கள்!

த தா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே
ஸ்ருதேன ஷீலேன குலேன கர்மணா,

த தா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே – நான்கை வைத்து மனிதனை பரிட்சை செய்தல் வேண்டும்.
ஸ்ருதேன ஷீலேன குலேன கர்மணா – அறிவு, ஒழுக்கம், குலம், செய்கை (ஆகியவற்றின் மூலம் நிர்ணயித்து விடலாம்).
கருட புராணம், 112-3

Surya-Namaskar-Tamilnadu-Madurai-5
Surya Namaskar

மேலே உள்ள லோகங்கள் ஏழு! கீழே உள்ள லோகங்கள் ஏழு!!

கீழே ஏழு உலகங்கள் உள்ளன.
1)அதல 2) விதல 3) நிதல 4) ரஸாதல 5) தலாதல 6) சுதல 7) பாதாள முதலிய ஏழு லோகங்கள் கீழே உள்ளன.,
-ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம்,
ப்ரம்மவைவர்த புராணம், நாரதீய புராணம், ப்ரஹ்ம புராணம், ஸ்ரீமத் பாகவதம்.

மேலே ஏழு உலகங்கள் உள்ளன. 1) பூலோகம் 2) புவ லோகம் 3) ஸ்வ லோகம் 4) மஹ லோகம் 5) ஜனக லோகம் 6) தப லோகம் 7) சத்ய லோகம்

ஸ்கந்த புராணம், ப்ரம்மவைவர்த புராணம்,
நாரதீய புராணம், ப்ரஹ்ம புராணம், ஸ்ரீமத்
பாகவதம், விஷ்ணு சம்ஹிதா, சாம்ப
புராணம், ஆருணிகோபநிஷத்

முற்றும்

பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை

bhishma-pitamah
Bhisma on Bed of Arrows.

Wriiten by S Nagarajan
Post No.1169; Dated 13th July 2014

This is the nineth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First nine parts were published in this blog:- swami.

காலமே ஈஸ்வரனுக்குச் சமம்!

காலத்தை ஒழிய சிருஷ்டி முதலியவை எவையும் சம்பவிக்க மாட்டா. ஆகையால் அந்தக் காலம் ஈஸ்வரனைப் போல் எல்லாத் திறமைகளும் அமைந்திருக்குமாகையாலும் அந்த ஈஸ்வரனுக்கு உடலாகி அவனுக்கு உட்பட்டிருக்குமாகையாலும் அதை ஈஸ்வரன் என்றே சொல்லலாம்..அக்காலம் என்னும் பொருள் நேரடியாக அறிய முடியாத ஸ்வரூபம் உடையது. காரியங்களைப் பற்றியே அதை ஊகிக்க வேண்டும். அத்தகைய காலத்திற்கு அவ்யக்தமான அந்த பிரகிருதியும் உட்பட்டே இருந்தது. ஆகையால் ப்ரளயத்திலும் காலம் உதவியாகவே இருந்தது. சிருஷ்டியிலும், சம்ஹாரத்திலும் காலம் தொடர்ந்து வருவதே.

விதுரருக்கு மைத்ரேயர் விளக்குவது
-ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம், பத்தாம் அத்தியாயம்

யார் யாரை வதம் செய்தனர் – 2

(புராணத் துளிகள் முதல்பாகத்தில் 30வது பொருளாக அமைந்த முதல் பகுதியைத் தொடர்ந்து வரும் பட்டியல் இது)

1) கார்த்திகேயன் தான் பிறந்த ஆறாம் நாளன்றே தாராகாசுரனை வதம் செய்தார்
– சிவ புராணம், விஷ்வகர்மா புராணம்
2) கிருஷ்ணர் கம்ஸனையும், பூதனையையும் வதம் செய்தார்
– ஸ்ரீமத் பாகவதம்
3) சால்வ தேசத்து அரசன் ப்ரஹ்மதத்தனை ஸ்ரீகிருஷ்ணர் வதம் செய்தார்.
– ஸ்ரீமத் பாகவதம்
4) ஸ்ரீகிருஷ்ணர் பால்ய காலத்திலேயே பகாசுரன் மற்றும் காகாசுரன் ஆகியோரை வதம் செய்தார்.
– ஸ்ரீமத் பாகவதம், ப்ரஹ்ம வைவர்த புராணம்,
கோவிந்தலீலாம்ருதம்
5) கணேசர் (பிள்ளையார்) லோபாசுரனை வதம் செய்தார்.
– முத்கல புராணம்

bhisma-arrows-bed

பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை

அற்புதமான கீழ்க்கண்ட துதியைச் செய்து பீஷ்மர் சுவாசம் அடங்கப் பெற்றார்:-

யாதவர்களில் சிறந்தவனும், பாகவதர்களுக்கு நாதனும், சேதனாசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு, எல்லையில்லாத மஹிமை உடையவனும் அளவிறந்த ஸ்வபாவ சித்தமான ஆனந்தமுடையவனும், ஓரிடத்தில் விளையாடுவதற்காக வடிவம் கொண்டவனும், தன் ஸங்கல்பத்தினால் சேதனர்களுக்கு சம்சார ப்ரவாஹத்தை விளைவிப்பவனுமாகிய கிருஷ்ண பகவானிடத்தில் என் புத்தி மற்றொன்றிலும் விருப்பமின்றி நிலை நின்றிருக்குமாக!

மூன்று லோகங்களும் காண ஆசைப்படத் தகுந்ததும் பச்சிலை நிறமுடையதும், சூரிய கிரணம் போல பொன் நிறம் அமைந்த மேலான பீதாம்பரம் உடுத்தி இருப்பதும், முன் நெற்றி மயிர்களின் வரிசைகளால் மறைந்து அழகான தாமரை மலர் போன்ற முகமுடையதுமான உருவம் தரித்தவனும், அர்ஜுனனுக்கு நண்பனுமாகிய ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் எனக்குப் பரிசுத்தமான – ப்ரயோஜனங்கள் ஒன்றையும் விரும்பாத – ப்ரீதி உண்டாகுமாக!

யுத்தத்தில் குதிரைகளின் குளப்படிகளால் கிளம்பின தூசுகள் படிந்து அழுக்கடைந்து நாற்புறமும் தொங்குகின்ற முன் நெற்றி மயிர்களாலும், பெருகி வழிகின்ற வேர்வை ஜலங்களாலும் அலங்காரமுற்ற முகம் உடையவனும், நான் பிரயோகித்த கூரான பாணங்களால் பிளவுண்ட தோலுடையவனும் ரத்தத்தினால் விளங்கும் கவசம் அமைந்தவனுமாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்தில் என் மனம் அங்குமிங்கும் பெயராமல் நிலையுற்றிருக்குமாக!

யுத்தம் தொடங்குகின்ற அந்தக் கணத்தில் நண்பனான அர்ஜுனன் மொழிந்த சொற்களைக் கேட்டு தன்னுடையவரான பாண்டவர்களுடையதும் எதிரிகளான கௌரவர்களுடையதுமான இரண்டு சைன்யங்களுக்கு இடையில் ரதத்தை நிறுத்தி, நின்று, கண் பார்வையினாலேயே எதிரி சைன்யத்தில் இருந்தவர்களுடைய ஆயுளைப் பறித்தவனும் அர்ஜுனனுக்கு நண்பனுமான ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!

கொஞ்ச தூரத்தில் மறைந்திருக்கும் சைன்யத்தின் முன்பாகத்தைக் கண்டு அங்கிருப்பவர் உறவினர்களாயிருப்பதை அறிந்து உறவினர்களைக் கொல்வது தோஷமென்னும் புத்தியால் அதினின்று முகம் மாற வைத்த அர்ஜுனனுடைய குத்ஸித புத்தியைக் கண்டு ஆத்ம ஸ்வரூபத்தை அறிவிக்கின்ற கீதையாகிற உபநிஷத்தை எவன் உபதேசித்து அந்த துர்புத்தியைப் போக்கினானோ அப்படிப்பட்ட ஸர்வாதிகனான எல்லோரிலும் சிறந்த பகவானுடைய சரணாரவிந்தங்களில் எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!

நிரபராதியைக் கொல்லும் தன்மையுள்ள என்னுடைய பாணங்களால் அடியுண்டு கவசம் முறிந்து ரத்தத்தினால் உடம்பு முழுவதும் நிறைந்தவனாகி, ‘ஆயுதம் எடுக்க மாட்டேன்’ என்ற தன் பிரதிக்ஞையை துறந்து ‘ஆயுதம் எடுக்கச் செய்கிறேன்’ என்ற என் பிரதிக்ஞையை சத்யம் செய்வதற்காக, ரதத் தலிருந்தவன் அதிலிருந்து கிளம்பிக் குதித்து சுதர்ஸன சக்கரத்தை ஏந்திக் கொண்டு, யானையை வதம் செய்யும் பொருட்டு கிளம்பிப் பாயும் சிங்கம் போல, பலாத்காரமாக என்னை வதிக்கும் பொருட்டு பூமி நடுங்கும்படி எவன் என்னை எதிர்த்து வந்தானோ, அந்த முகுந்தனே -ஸ்ரீ கிருஷ்ண பகவானே- எனக்குக் கதி ஆவானாக!

kamsa killed
Kamsa killed by Sri Krishna.

அர்ஜுனனுடைய ரதமே குடும்பமாகப் பெற்றவனும் உழவுகோலையும் குதிரைகளின் கயிறுகளையும் பிடித்துக் கொண்டு அந்த சோபையினால் ஆயிரம் கண்கள் கொண்டு காணும்படி மிகவும் அழகானவனுமாகிய பகவானிடத்தில், மரணம் அடைய முயன்றிருக்கிற எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!

த்வந்த்வ யுத்தத்தில் மாண்டவர் அனைவரும் எவனைப் பார்த்த மாத்திரத்தில் தமக்கு ஸ்வபாவ சித்தமான பாபமிற்றிருக்கை முதலிய குணங்கள் தோற்றப் பெறுகையாகிற மோக்ஷத்தை அடைந்தார்களோ, அப்படிப்பட்ட பகவானிடத்தில் எனக்குப் ப்ரீதி உண்டாகுமாக்
!

அழகிய நடையாலும், விலாஸத்தினாலும், அழகான புன்னகையாலும் அன்பு பெருகி வழிகின்ற கண்ணோக்கத்தினாலும் மிகுந்த வெகுமதி செய்யப்பெற்ற இடைப் பெண்கள் காமம் தலைக் கொண்டு விவேகமற்று ஸ்ரீ கிருஷ்ணனை சாதாரணமாக நினைத்து அவன் செய்த பூதனா சம்ஹாரம் முதலிய சேஷ்டைகளை அனுபவித்தவர்களாகி எவனுடன் ஒற்றுமை அடைந்தார்களோ, அப்படிப்பட்ட பகவானிடத்தில் எனக்குப் ப்ரீதி உண்டாகுமாக!

kesi asuran
Krishna killing Kesi Asua

யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்தில் முனிவர் கூட்டங்களும், ராஜ ச்ரேஷ்டர்களும் நிறைந்த சபையின் மத்தியில் எவன் இந்த யுதிஷ்டிரன் முதலியோர் நடத்தினதும் முனிகணங்கள் அனுமதித்தது மான அக்ர பூஜையைப் பெற்றானோ அப்படிப்பட்டவனும் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி மிகவும் அழகியவனும் எனக்கு அந்தராத்மாவுமான இந்த ஸ்ரீ கிருஷ்ணன் நான் சரீரத்தை விடும் வரையில் என் கண்களுக்குப் புலப்பட்டுக் கொண்டு என் முன்னே இருப்பானாக!

அங்ஙனம் கீழ்ச் சொன்ன இயற்கையுடையவனும் தான் அவரவர் செய்த புண்ய பாப ரூப கர்மங்களுக்குத் தகுந்தபடி சிருஷ்டித்த பிராணிகளின் இதயந்தோறும், சூர்யன் தான் ஒருவனே ஆயினும், கண்ணுக்குப் புலப்படுகிற ஜலம் முதலிய வஸ்துக்களில் வெவ்வேறாகத் தோன்றுவது போல, இயற்கையில் தான் ஒரே தகையனாயினும் பலவாறு தோற்றுகின்றவனுமாகிய பரம புருஷனைப் பெற்றேன்.

இப்படி இறுதியாக பிரார்த்தனை செய்த பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்தில் மனம் வாய், கண் ஆகிய இவற்றின் வியாபாரங்களுடன் ஆத்மாவைப் புகச் செய்து சுவாசம் அடங்கப் பெற்றார்,

-ஸ்ரீமத் பாகவதம், முதல் ஸ்கந்தம் , ஒன்பதாம் அத்தியாயம்

To be continued…………………………….

Contact swami_48@yahoo.com

பலன் தரும் யந்திரங்கள்!

ganesha400

Wriiten by S Nagarajan
Post No.1167; Dated 12th July 2014

This is the nineth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First eight parts were published in this blog:- swami.

நாரத புராணம் பல யந்திரங்களை விவரிக்கிறது. அவற்றில் சில:
த்ரைலோக்ய மோஹன யந்த்ரம் – இதை முறையாக வழிபட்டால் ஒருவன் நினைத்ததெல்லாம் கை கூடும்.

நாரசிம்ஹ யந்த்ரம் – வெற்றி, செல்வாக்கு, பாதுகாப்பு ஆகியவற்றைத் தரும்.

சர்வ வசங்கர யந்த்ரம் – அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

காலாந்தக யந்த்ரம் – சாவை முறியடிக்கும் யந்த்ரம்

ஒரு யந்த்ரம் குறிப்பிட்ட ஜியாமெட்ரி வடிவமைப்புடையது. அதை சொல்லப்பட்ட உரிய முறைப்படி கல்லிலோ அல்லது உரிய உலோகத்திலோ அல்லது ஒரு பேப்பரில் வர்ணத்தினாலோ அமைத்து அதற்குள் உரிய மந்திர பீஜங்களை எழுத வேண்டும். பிறகு அந்த தேவதையை ஒரு மண்டலம் வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்று புராணம் தெரிவிக்கிறது.

யந்திரம் அமைக்கும் முறை அதை வழிபடும் முறை ஆகியவற்றை அதில் சித்தி பெற்ற குரு முகமாக மட்டுமே பெற வேண்டும்.

Jainism-Ahimsa-Hand-icon
Symbol of Jainism which propagated Ahimsa.

அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்

அஹிம்சா பரமோ தர்ம: என்பதை பத்ம புராணம் அறிவிக்கிறது. மஹாத்மா காந்தி அடிகளின் வாழ்க்கையின் உயிர் மூச்சாக அஹிம்சா தத்துவம் இழைந்தோடியது.
அஹிம்சையின் உயர்வைத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது:-

அஹிம்சா பரமோதர்மோஹ்யஹிம்சவைவ பரம் தப: I
அஹிம்சா பரம்ம் தானமித்யாஹுர்முனஸ்ய: சதா II

அஹிம்சையே தர்மங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தர்மம். அஹிம்சையே தவங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தவம். அஹிம்சையே தானங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தானம். என்று முனிவர்கள் எப்போதும் சொல்லி வருகின்றனர்.
– பத்ம புராணம் , ஸ்வர்க்க காண்டம், 31ஆம் அத்தியாயம் 26ஆம் ஸ்லோகம்

saptarishis (1)

சப்த ரிஷிகள் யார் யார்?

கஸ்யபர், அத்ரி.வசிஷ்டர். விஸ்வாமித்திரர்,கௌதமர். ஜமதக்னி,பரத்வாஜர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.

– ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம்,வாமன புராணம், கூர்ம புராணம்
மரீசி, அங்கீரஸர், அத்ரி, புலஸ்த்யர், புலகர், க்ரது, வசிஷ்டர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.
– வாயு புராணம், அக்னி புராணம்

மரீசி ஆகிய ஏழு ரிஷிகளும் பிரம்மாவின் புத்திரர்கள் என சிவ புராணம் கூறுகிறது.

சப்த ரிஷிகளின் ஒரு வருடமானது தேவர்களின் ஏழு வருடங்களுக்குச் சமமாகும் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

சப்த ரிஷிகளின் பெயர்கள் மாறி மாறி கூறப்படுகிறதே என்று பலரும் சந்தேகம் கொள்வர். ஆனால் ஒவ்வொரு கல்பத்திலும் சப்தரிஷிகள் மாறுவர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த சந்தேகம் எழாது.

saptarishis

சிவனைத் துதிக்கும் பாக்கியம் ஏன் ஏற்படுகிறது?

தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல் அத்தியயனம் செய்வித்தல், வேதார்த்த பக்தி, வேதத்துக்கு விரோதமான நூல்களை விலக்குதல், சாந்தி, தாந்தி முதலியவை ஞானாங்கமாகும் என்று கற்றோர் சொல்வார்கள்.

ஞானங்கள் எல்லாவற்றுள்ளும் சிவலிங்க பூஜை செய்தல், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தல்,சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தல், சிவனடியார்களைப் பூஜித்தல், விபூதி, ருத்ராக்ஷம் தரித்தல், ஞானாசிரியன் சேவடி தரிசனம் செய்தல், பஞ்சாட்சரம் உள்ளிட்ட மந்திரங்களை ஜபித்தல் இவைகள் மேலானவை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

சிவத் தலங்கள் பலவற்றுள்ளும் காசி, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகியவை விசேஷமாகும்
ஸ்கந்த புராணம், சூத சம்ஹிதை,யக்ஞ வைபவ காண்டம், எட்டாவது அத்தியாயம்

sankara narayana

சிவனும் விஷ்ணுவும் ஒருவரே!

சிவ பெருமானை லக்ஷ்மி துதி செய்தவுடன் மனம் மகிழ்ந்து சிவபிரான் லக்ஷ்மியை நோக்கிக் கூறுவது:-

“ஓ! கமலாக்ஷீ! நீ சொல்லி வந்த நியாயப்படி எனக்கும் விஷ்ணுவுக்கும் அபேதம் என்பது சத்தியமே! இந்த நியாயம் உனக்கு எப்படித் தெரிய வந்தது? யான் எல்லாமாய் இருக்கும் தன்மையாகிய ஏகத்வத்தைத் தேவர்களும், முனிவர்களும், வேதாந்தம் உணர்ந்த ஞானிகளும் குதர்க்கத்தால் அறியாமல் பேத புத்தி உடையவர்களாகி துவேஷிக்கின்றனர். இவர்கள் இங்ஙனம் இருக்க, உலகில் எனக்கு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் விஷ்ணுவைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும், விஷ்ணு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் என்னைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும் இருக்கின்றனர். இதற்குக் காரணம் தேவியின் மாயையினால் அவர்கள் கவரப்பட்டிருக்கும் தன்மையே ஆகும்.

ஏனெனில் பக்தர்கள் என்று சொல்லப்பட்ட இவர்கள் ஸ்தூல உருவங்களைக் கண்டு பக்தி செய்ய வந்தார்களேயன்றி சொரூப உண்மையை அறிந்து பக்தி செய்ய வந்தவர்கள் அல்லர். சொரூப உண்மையை அறியப் புகுவாராயின் துவேஷம் உடையவர் ஆகார். ஸ்தூல உருவம் பல வேற்றுமை உள்ளது. சொரூபம் வேற்றுமையாகாது ஒரே தன்மையாக உள்ளது. ஆகவே ஒரு தன்மையாய் இருக்கும் சொரூப உண்மையை விட்டு விட்டுப் பல தன்மையாய் இருக்கும் வடிவத்தைப் பற்றினாராதலின் கண்ட ஞானமுடையவராகி பேதவாதத்துக்கு உள்ளாகின்றனர். என்னுடைய வேற்றுமை இல்லாத ஏகத்வத்தை அறிவதென்றால் அகண்ட ஞானமும் புண்ணிய விசேஷமும் பெற்றவராக இருப்பின் அறிவர். அவர்களிட்த்தில் தேவியின் மாயா விலாசம் போய் ஞான விலாசம் உண்டாகும். இது யாவர்க்கும் கிடைத்தல் அரிது. கஷ்டப்பட்டு அறிதல் வேண்டும்.

Brit Museum

இவ்வாறு லக்ஷ்மி தேவியிடம் சிவ பிரான் அருளுவதை தேவி பாகவதம் ஆறாம் ஸ்கந்தம் 18 ஆம் அத்தியாயம் விளக்குகிறது.

To be continued………………………………………………

Contact swami_48@yahoo.com

The Sleepless Four: Garuda Purana List

Awaken man

Written by London Swaminathan
Pot No.1166; Dated 11th July 2014.

Anxiety, grief, stress and worrying play a major role in sleeplessness, says doctors. There are other causes such as ageing, depression, alcoholism, shift work, diseases, sleeping during much part of the day and illicit drug use. But Garuda Purana approaches this problem from a different angle: moral angle. What it says is very true and it covers many causes such as anxiety, worry, stress etc.

Here is the list given by Garuda Purana (115-68):
Following four can’t have good sleep:
1.Those who suffer from poverty
2.Those who have gone abroad for spying
3.Those who desire for another man’s wife
4.Those who desire for another person’s property

How true the list is! We ourselves know that these caused big problems in our life or in the lives of our family members or friends. Stress due to on coming exams, job interviews, weddings, health check up results etc. are temporary. When the event is over, we are relieved of the stress. But the Garuda Purana list is more important because three of the four listed problems are immoral or illegal and resulting in permanent damages. Even the first one, poverty, may lead one to do immoral things. Those who have watched spy movies or James Bond films would have noticed the risks involved in spying, particularly the activities undertaken during the night.

Here is the sloka (verse) from the Garuda Purana:
Kuto nidra dharidrasya parabreshya charasya cha
Para nari prasakthasya para dravya harasya cha
-Garuda Puranam, chapter 115, verse 68

sleepless

Three Gateways to Hell
Krishna tells us about the three Gateways (16-21) to Hell in the Bhagavad Gita:
“The gateway of this hell leading to the ruin of the soul is threefold, lust, anger and greed. Therefore one should abandon these three” — (16-21).

Lust, Anger and Greed lead to grief, stress, anxiety and worries. Then we lose inner peace and sleep.

Adi Shankara also mentioned six sorrows common to all men which rise one above the other like waves and toss everyone about on the waters of their tumultuous restlessness. The six sorrows are 1.Hunger 2.Thirst 3.Grief 4.Delusory fascination for pleasurable objects 5.Old Age/decay and 6.Death (Viveka Choodamani, verse 256).
This list nearly coincides with the list of causes (for sleeplessness) given above.

The more we read, the more we learn.
The more we learn, the more we remember.
The more we remember, the more we practise.
The more we practise, the more we benefit.

contact swami_48@yahoo.com

தூக்கம் வராத நான்கு பேர் யார்?

sleepless

Wriiten by S Nagarajan
Post No.1165; Dated 11th July 2014

This is the eighth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First seven parts were published in this blog.

சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!

ஜனக மஹராஜனை சுகர் அவனது அரண்மனைக்கு வந்து சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஜனக ராஜன் கூறியது:-

சுகரே! இந்திரியங்கள் வலுப் பெற்றிருக்கும் காலத்தில், அதை அடக்குவது ஒருவராலும் முடியாது.அது அசாத்தியம். இந்திரியங்கள் பரிபாகம் இல்லாதவனைத் தாம் செல்லும் வழியில் எல்லாம் ஈர்த்து ஆசையை எழுப்பி, அறிவை ஆகர்ஷித்துக் கொண்டு பல விதமாகக் கெடுத்து விடுகின்றன. எப்படி என்றால், ஆகாரத்தின் மீதுள்ள ஆசையினாலும் சுகத்தின் மீதுள்ள இச்சையினாலும், சயனத்தின் மீதுள்ள ஆசையினாலும் எண்ணம் உண்டாக்கிக் கெடுக்கின்றன. ஆகையால் இந்திரியங்களை வைத்துக் கொண்டு சந்யாசியாக சென்றால் பயன் என்ன?

பிராரப்த வாசனா பலத்தை ஜெயிப்பது என்பது பெரும் கஷ்டம். அது ஒருபொழுதும் சமனம் அடைகிறதில்லை.ஆதலால் வரிசையாக ஒவ்வொரு ஆசிரமத்திலும் ஈடுபட்டு அவைகளைப் பற்று அறத் துறக்க வேண்டும்.

சுகரே! உன்னதமான பிரதேசத்தில் தூங்குபவன் கொஞ்சம் சலிப்பை அடைவானாயின் கீழே வீழ்ந்தே தீருவன். கீழே தூங்குபவன் எவ்வளவு சலித்தாலும் விழ மாட்டான். அது போல சந்நியாச ஆசிரமத்தை அடைந்த பின் சபல புத்தி உண்டாகுமானால் அதிலிருந்து நழுவி விடுவான். மீண்டும் அவன் ஈடேற வழியில்லை.

சுகரே! எறும்புகள், பழமுள்ள ஒரு மரத்தில் அண்டி மெல்ல ஊர்ந்து உச்சியில் ஏறி சுவையுள்ள கனிகளைச் சிறிது சிறிதாகச் சாப்பிடுகின்றன. பறவைகளோ அக்கனிகளைச் சாப்பிடுவதற்கு வேகமாய் ஒரே பாய்ச்சலில் கனிக்குச் சமீபத்தில் சென்றும் கூட அங்கு நேரிடும் சில இடையூறுகளினால் மொத்துண்டு சிரமப்பட்டும் பயனற்றுப் போகின்றன. எறும்புகளோ அப்படியன்று. அங்கங்கு சிரமத்தைப் பரிகாரம் செய்து கொண்டும் யாதொரு இடையூறில்லாமலும் அந்தப் பழங்களை அனுபவிக்கின்றன.

ஆதலால் எவருக்கும் மனத்தை வெல்ல முடியாது. ஏனென்றால் மனத்தைக் காலம் விடாது. ஆதலால் அந்த மனத்தை ஆசிரமம் தோறும் சிறிது சிறிதாக அடக்கி வர வேண்டும். சாந்தனாயும், ஞானவானாயும், ஆத்ம விசாரமுடையவனாய் உள்ள புருஷன் கிருஹஸ்த ஆசிரமத்தில் இருப்பவனாயிருந்தபோதிலும் இலாபத்தில் சந்தோஷமும் நஷ்டத்தில் துக்கமும் அடைய மாட்டான்.இவ்விரண்டிலும் சமபுத்தியை உடையவனாக இருப்பான்.

ஆதலால் எவனாயினும் வேதத்தில் விதித்த கர்மங்களைச் செய்து அதன் பலனை விரும்பாமல் ஈசுவர அர்ப்பணம் செய்கின்றானோ அவன் ஆத்மானுபவத்தை அடைந்து ஆனந்தமூர்த்தியாய் சம்சார பந்தத்த்திலிருந்து விடுபடுவான். இதில் சந்தேகமில்லை.

என்னைப் பாரும், யான் ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டு, யதேச்சையாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றிலும் சுகம் துக்கம் என்பது சிறிதுமில்லை. அப்படி பற்றற்று இருக்கின்றமையால் ஜீவன் முக்தனாய் இருக்கிறேன்.

– தேவி பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 18ஆம் அத்தியாயம் – சுக ஜனக சம்வாதம்
பல ரகசியங்களை விளக்கும் அற்புதமான இந்த உரையாடல் தொடர்கிறது.

Exif_JPEG_PICTURE
Trimurti at Ellora Caves

மும்மூர்த்திகளும் ஒருவரே!

ஏக மூர்த்திஸ்த்ரயோ தேவா: ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸ்வர: I
த்ரயாணாமந்தரம் நாஸ்தி, குணாபேத:ப்ரகீர்தித: II

ப்ரம்மா, விஷ்ணு,,சிவன் – ஆகிய இந்த மூன்று தேவர்களும் ஒருவரே. இந்த மும்மூர்த்திகளின் ஸ்வரூபத்தில் ஒரு விதமான பேதமும் இல்லை. குணங்களில் மட்டுமே பேதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-பத்ம புராணம், பூமி கண்டம், அத்யாயம் 71

மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

சில விஷயங்களில் நிதானம் தேவை. மெதுவாகச் செய்ய வேண்டிய காரியங்களை ‘சனை: கர்தவ்யானி’ (மெதுவாகச் செய்யவேண்டியவை) என்று குறிப்பிடுவர். கருட புராணம் தரும் அறிவுரை இது:

வித்யா – கல்வி கற்பது
அர்த்தா – செல்வம் சேகரிப்பது
பர்வதாரோஹணா – பர்வதம் அதாவது மலையில் ஏறுவது
தர்மா – தர்மம்
காமம் – காமம்
ஆக இந்து ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது
இதைக் கூறும் கருட புராண ஸ்லோகம் இது:

சனைர்வித்யா சனைர் அர்த்தா சனை: பர்வதமாருஹேத் I
சனை: காமம் ச தர்மம் ச பஞ்சதானி சனை: சனை: II

கல்வியில் மெதுவாக முன்னேறு. பொருள் சேகரிப்பதில் மெதுவாக முன்னேறு. மலை மீது ஏறுவதை மெதுவாகச் செய். காமத்திலும், அதே போல தர்மம் செய்வதிலும் மெதுவாகச் செய்! இந்த ஐந்து விஷயங்களையும் மெதுவாகவே செய்ய வேண்டும்.
-கருட புராணம் 109ஆம் அத்தியாயம் 46ஆம் ஸ்லோகம்

goddess-bhuvaneswari

மாயைக்கு மருந்து

உலகமெல்லாம் மாயா சொரூபமாய் இருக்கிறது. பரமேஸ்வரி அம்மாயா சொரூபமான உலகத்திற்கு எஜமானியாக இருக்கிறாள். ஆதலால் மூன்று லோகத்தாராலும் சுந்தரமான தேவியே புவனேஸ்வரி என்று சொல்லப்படுகிறாள்.

ஓ! அரசனே! மனம் புவனேஸ்வரி ரூபத்தில் சம்பந்தித்து இருக்குமாயின் இந்த சம்சாரத்தில் சதசத்ரூபமான மாயை என்ன செய்யும்? ஆதலால் மாயையை ஒழிப்பதற்குச் சதானந்தரூபியான தேவியைத் தவிர வேறொரு தேவதாந்தரங்கள் சக்தி உள்ளனவல்ல. தமோராசியை நாசம் செய்வதற்கு தமசே காரணமாக மாட்டாது. சூரியன், சந்திரன், அக்னி, மின்னல் இவைகளுடைய காந்தியல்லவோ இருளைப் போக்கடிக்க வல்லமை உள்ளவை. ஆதலால் சம்வித்ரூபமாய்த் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிற மாயேஸ்வரியான அம்பிகாதேவியை மாயையைக் கழிப்பதற்காக மிகப் பக்தியோடு பூஜிக்க வேண்டும்.

-வியாஸ முனிவர் ஜனமேஜய மஹராஜனிடம் கூறியது
– தேவி பாகவதம், ஆறாம் ஸ்கந்தம், 36ஆம் அத்தியாயம்.

Awaken man

தூக்கம் வராத நான்கு பேர்!

நான்கு பேர்களுக்குத் தூக்கம் வராது என்று கூறுகிறது கருட புராணம்.
1) தரித்ரன் – ஏழ்மையில் வாடுபவனுக்குத் தூக்கம் வராது.
2) பரப்ரேஷ்ய சர – (சர என்றால் ஒற்றன் என்று பொருள்) அயல் தேசத்தில் உளவு பார்க்கச் சென்ற ஒற்றன்
3) பர நாரி ப்ரசக்த – அடுத்தவன் மனைவி மீது காதல் கொள்பவன்
4) பர த்ரவ்ய ஹர: – அடுத்தவன் பொருளை அபகரிக்கும் திருடன் ஆகிய இவர்களுக்கு நித்திரை வராது.

குதோ நித்ரா தரித்ரஸ்ய பரப்ரேஷ்யசரஸ்ய ச I
பரநாரிப்ரசக்தஸ்ய பரத்ரவ்யஹரஸ்ய ச II

– கருட புராணம் 115ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 68

To be continued………………………..

Doubting Thomas Perishes: ‘Samsayatma Vinasyati’

blue-head-man-question-mark

Written by London Swaminathan
Post No. 1164; Dated 10th July 2014.

A man suspects his wife if she speaks to another man; a wife suspects her husband if he comes late in the night most of the days in a week. If something is not found in a room, immediately we suspect even our closest friend. Then we feel ashamed to allow such a thought into our mind. If some asks for some help or someone does some favour to us we suspect that person. The world is full of doubting Thomasses. Arjuna had lot of doubts. Krishna patiently answered every one of his questions and cleared all his doubts. Faith is Life, Doubt is Death, says Sri Ramakrishna.

Sri Ramakrishna Pramahamsa says a story about the dangers of doubtfulness:
A man wanted to cross a river. A sage gave him an amulet and said, “This will carry you across”. The man taking it in his hand, began to walk over the water. Before he had gone half the way, he was seized with curiosity and opened the amulet to see what was in it. Therein he found, written on a piece of paper, the sacred name of Rama, the Lord. At this the man said depreciatingly, “Is this the whole secret?”. No sooner this scepticism entered his mind than he sank down. It is faith in the ‘name’ of the Lord that works wonders; for faith is life and want of faith is death.

–Sayings of Sri Ramakrishna, Sri Ramakrishna Math, Mylapore, Chennai, 600 004.
Ramakrishna Paramahamsa says elsewhere a person who went to dig a well for water first dug out for ten feet. When he could not find water he went to another place and dug out for 20 feet. He could not get water. Then he moved further away and dug out for 30 feet. There was no water. People who doubt are like him. They don’t have firm conviction in anything.

He that is ignorant, unbelieving, agnostic, perishes; for doubting Thomasses, there is neither this world nor the word beyond, nor happiness: Bhagavad Gita 2-40

The old religions said that he was an atheist who did not believe in God. The new religion says that he is an atheist who does not believe in himself — Swami Vivekananda.

To those who have conquered doubts and reached the truth
The heavens are nearer than this earth itself: Tiruvalluvar, Kural 353 (Tamil)

doubting-Thomas

A Story from the Bible
The doubting Thomas story is in the Bible. When followers of Jesus were hiding in a house, Jesus who was crucified suddenly appeared before them. They thought that it was a ghost. Jesus told them that they should not have doubted what Mary Magdalene told them already. When he ate with them they all believed him. Afterwards Thomas, another disciple entered the house. When they told him about Jesus’ visit, he did not believe them. He told them that he would not believe it unless he himself sees Jesus with his nail wounds in the fingers. Eight days after this, Jesus came again and showed his wounds to him. Then he believed him. So anyone who does not believe in anything unless one gets a personal experience is called a doubting Thomas.

Betrand Russel rightly said:
The whole problem with the world is that fools and fanatics are always so certain of themselves, and wiser people so full of doubts: Bertrand Russel

The moment there is suspicion about a person’s motives, everything he does becomes tainted: Mahatma Gandhi

Suspicion always haunts guilty mind: Shakespeare

Suspicion is the cancer of friendship: Petrarch

krishna-arjuna
Krishna clarifies Arjuna’s Doubts.

There are some sayings, proverbs about doubt, uncertainty and irresolution in Sanskrit books:

Following quotes are taken from the book, “Suktisudha”, by Chinmaya International Foundation, Ernakulam, India, 2010.

Nothing will be fruitful for the doubtful – Brhatkathakosa 4-42

Doom is definite for the doubtful – samsayatma vinasyati- Baghavad Gita 4-40

That alone deserves enquiry which is riddled with doubt and promises a result.

Being ever sceptical I know no solace in this world or the next.

When the mind is in a dilemma the enterprise is sure to be a fiasco –
Kahavatratnakar

A genuine iron coin is better than a fake gold coin.

Contact swami_48@yahoo.com

நாஸ்தீகர் இல்லாத நகரம்: அயோத்தி !!

rama10

Written by London Swaminathan
Post No. 1163; Dated 10th July 2014.

வடநாட்டில் இருந்த கோசல நாட்டின் தலை நகரம் அயோத்தி. இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரசாட்சி செய்தவன் தசரத மாமன்னன். அவனுடைய மகன் ராமனின் புகழை வால்மீகி, கம்பன், துளசிதாஸ், எழுத்தச்சன் உள்பட பல நூறு புலவர்கள் பாடி இருக்கின்றனர். 300 வகையான ராமாயணங்கள் இருப்பதை நாம் அறிவோம். அவைகளுடன் புறநானூற்றுப் புலவர்கள், சிலப்பதிகார இளங்கோ, பன்னிரு ஆழ்வார்கள், திருப்புகழ் பாடிய அருணகிரி, தேவாரம் பாடிய மூவர் ஆகியோரும் அவரவர் பக்திப் பாடல்கள் இடையே ராமன் புகழ் பாடி இருப்பதை சிலரே அறிவர்.

ராமன் புகழ் இப்படிப் பரவக் காரணம் ரகு குல மன்னர்களின் நல்லாட்சி. அதைக் கேட்டுவிட்டுத்தான் ‘’ராமராஜ்யம்’’ அமைய வேண்டும் என்று காந்திஜி போன்ற தலைவர்கள் பரப்புரை செய்தனர்.

கட்டிட, பொதுப்பணித் துறை, விவசாயத் துறை, இசை நடனத் துறை, போக்குவரத்துத் துறை, நிர்வாகத் துறை, கல்வித் துறை, பாதுகாப்புத் துறை, சமயத்துறை, சமூக நலத் துறை, வணிகத் துறை, அறநிலையத் துறை, மகளிர் நலத் துறை ஆகிய அத்தனை விஷயங்களையும் வால்மீகி சிந்தித்துக் கவி புனைந்திருப்பதைப் படிக்கும் போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா நன்றாக முன்னேறி இருந்ததை அறிய முடிகிறது. எந்த ஒரு நாட்டு இலக்கியத்திலாவது இப்படி ஒரு முன்னேறிய சிந்தனை இருக்குமா என்பது ஐயப்பாடே.

இதைப் பார்த்துதான் கம்பன்
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை,பல் கேள்வி ஒங்கலால். –(பால. 85)
என்று வால்மீகிக்கும் மேலாக ஒரு படி முன்னே சென்று பாடினான்.

இதோ அந்த நல்லாட்சியின் சில அம்சங்கள்:

1.மநுநா மாநவேந்த்ரேண யா புரீ நிர்மிதா ஸ்வயம்:—-
மனிதர்களில் தலைவனான ( மானவ இந்திரன் ) மநு, தான் நினைத்த மாத்திரத்தில் நிறுவிய நகரம் அயோத்தி!

2.ஆயதா தஸ ச த்வே ச யோஜனானி மஹா புரீ:—
12 காத நீளம் (அறுபது மைல்) 3 காத அகலம் உடையது. இரு புறமும் மரங்கள் நிறைந்த நகரம்.

3.ராஜ மார்கேன மஹதா—
பல நகரங்களுக்குச் செல்ல பெரிய ராஜ பாட்டைகள் (பெரிய ரோடுகள்) இருந்தன. பூச்செடிகளுக்கு எப்போதும் தண்ணிர் கிடைத்தது. அரணமனையில் இருந்து ராஜ வீதிகள் சென்றன.

4.கவாட தோரணவதீம்:–
சிறந்த அலன்கரிக்கப்பட்ட வாயிற் கதவுகள் இருந்தன. பல கடைத் தெருக்கள் இருந்தன. சகல விதமான இயந்திரங்களும் ஆயுதங்களும் இருந்தன

5.சூத மாகத சம்பாதாம் ஸ்ரீமதீ மதுல ப்ரபாம்:–
அரசனின் குலம், வீரதீரச் செயல்களைப் பாடும் சூதர்கள், மாகதர்கள் — (யாழ்ப் பாணர்கள்), தன தான்யம்— கொடிகள் பறக்கும் உயர்ந்த மாளிகைகள் — பலரைக் கொல்லும் மதில் சுவர் ஆயதங்கள் ஆகியனவும் அங்கே உண்டு.

6. வதூ நாடக சங்கை ஸ்ச சம்யுக்தாம் சர்வதாம் புரீம்:–
நகரத்தின் நான்கு புறங்களிலும் நடன மாதர்களும் நட்டுவாங்கர் கூட்டமும் காணப்பட்டனர். தோட்டங்களும், மாந்தோப்புகளும் உள்ளன. பெரிய கோட்டை வாயில்கள் பெண்களின் இடுப்பை அலங்கரிக்கும் ஒட்டியாணமாக அலங்கரித்தன.

7.துர்க கம்பீர பரிகாம் துர்கா ம் அந்யைர்து ராஸதாம்:—
எதிரிகள் நுழைய முடியாத ஆழமான அகழிகள் உடைய துர்கங்கள் (கோட்டைகள்), குதிரைகள், யானைகள், பசுக்கள், ஒட்டகங்கள் நிறைந்திருந்தன.

8. ஸாமந்த ராஜ சங்கைஸ்ச பலை கர்மபி ராவ்ருதாம்:–
கப்பம் கட்டவந்த அரசர்கள் கூட்டமாக நின்ற (வரி செலுத்த ‘க்யூ’!!) கூட்டம் ஒரு புறம் — பல தேச வைஸ்யர்கள் (வெளி நாட்டு வணிகர்கள்) மற்றொரு புறம்.

9.ப்ராஸாதை ரத்ன விக்ருதை: பர்வதை ரூப ஸோபிதாம்:–
நவரத்னக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகள், —விளையாடுவதற்கான பர்வதங்கள்— அதாவது—- விளையாட்டு மலைகள், மேல் மாடிக் காட்டிடங்கள் இருந்ததால் இந்திரனின் அமராவதிக்கு நிகராக விள்ங்கியது.

ram profile

10.சித்ராம் அஷ்டபதாகாராம் வர நாரீகணைர்யுதாம்:–
நடுவில் அரண்மனை, நாற்புறமும் ராஜவீதிகள் ( சொக்கட்டான, பல்லாங்குழி போல நடுவில் தோற்றம்), பெண் ‘மணி’ கள், நவமணிகள், விமாநம் உடைய வீடுகள் (விமாந குஹ சோபிதாம்) இருந்தன.

11.குருஹாடாமவிச்சித்ராம் சம பூமௌ நிவேசிதாம்:–
வீடுகள் நெருக்கமாக இருந்தன. குற்றமில்லாத சம தளத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அவைகள் — மற்றும் சம்பா, சிறுமணி நெல் அரிசி (ஸாலி தண்டுல ஸம்பூர்ணாம்) குறைவில்லாமல் இருந்தன.

12.துந்துபீர் முதங்கை ஸ்ச வீணாபி பணவைஸ் ததா:–
பேரிகை, மிருதங்கம், வீணைகள், உடுக்கைகள் ஆகிய முழக்கம் கேட்டவண்ணம் இருந்தன. பூவுலகில் இதைவிடச் சிறந்த நகரம் இல்லை என்று விளங்கியது.

13.விமாநமிவ சித்தானாம் தஸாதி கதம் திவி:–
சித்தர்களும் தவ வலிமை மிக்கோரும், சுவர்க்கவாசிகள் போல காணப்பட்டனர். அவர்கள் எங்கும் செல்லத்தக்க விமானங்கள் உடையவர்கள்
14.சிம்ம, வ்யாக்ர, வராஹானாம் மத்தானாம் நர்ததாம் வநே:–
சுறு சுறுப்பனவர்கள்; கைத்தொழில் வல்லவர்கள்; தந்தையின் பாதுகாப்போடு சேர்ந்தே புதல்விகள் வசித்தனர்; பயந்து ஓடுபவர்கள் யாரும் இல்லை; சிங்கம் புலி, காட்டுப் பன்றிகளை கூரான அம்புகளாலும், வெறும் கைகளாலும் கொல்லக் கூடிய வீரர்கள் வசித்தனர்.

15.ஸஹஸ்ரதை: ஸத்யபரதைர் மஹாத்மபிர் மஹர்ஷி கல்பைர் ருஷிபிஸ்ச கேவலை: :—–
வேதங்கள், அதன் ஆறு அங்கங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள்—ஆயிரம் ஆயிரமாகத் தானம் செய்பவர்கள், ஸத்தியத்தில் நாட்டம் உடையவர்கள் – சிறந்த புத்தி உள்ளவர்கள்—ஸாதாரண ரிஷிகள், மஹரிஷிகள் ஆகியோருக்குச் சமமானவர்கள், இது போன்ற பிராமணர்கள் ஆகியோர் அயோத்தியில் இருந்தனர்.

((ஆதாரம்:—வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், ஐந்தாம் சர்கம்))

16.தஸ்மின் புரவரே ஹ்ருஷ்டா தர்மாத்மாநோ பஹுஸ்ருதா: :—-
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அறச் சிந்தனை மிளிர்ந்தது; சாத்திரங்களில் தேர்ச்சி பெற்று இருந்தனர்; பேராசை இல்லை; அயோத்தி மக்கள் போதும் என்ற பொன் மனம் படைத்தவர்கள்,; உண்மை விளம்பிகள் (ஸத்யவாதீ)

17. ந அல்பஸம்நிசய: கஸ்சித் ஆஸீத்தஸ்மின் புரோத்தமே:–
அல்ப (கொஞ்சம்) செல்வம் படைத்தவர் என்று யாரும் இல்லை; குதிரை பசுக்கள் இல்லாதவர் கிடையாது. பணம் இல்லாத காரணத்தால் கண்டதை வேண்டும் குடும்பத் தலைவன் இல்லை.
ram gem

18.காமி வா ந கதர்யோ வா ந்ருஸம்ஸ: புருஷக் வசித்
த்ரஷ்டும் ஸக்யமயோத்யாயாம் நாவித்வாந்ந ச நாஸ்திக:
பேராசை, கருமித்தனம் ஆகியவற்றால் பிறரைக் கொடுமைப் படுத்துவோர் அயோத்தியில் இல்லை, சாஸ்திர நம்பிக்கையற்ற நாத்திகர் இல்லை. ஏனெனில் எல்லோரும் சாஸ்திரம் அறிந்தவர்.

19.ஸர்வே நராஸ்ச நார்யஸ்ச தர்மஸீலா: ஸுஸம்யதா: :–
ஆண்களும் பெண்களும் ஒழுக்கசீலர்கள்; புலனடக்கம் உடையவர்கள் பிறந்தது முதல் இறுதிவரை பண்பாடு உடையவர்கள் மஹரிஷிகள் போல வாழ்க்கை நடாத்தினர்.

20. நாகுண்டலீ நாமகுடீ நாஸ்ரக்வீ ந அல்ப போகவான் :—
காதில் குண்டலம் அணியாதோர் கிடையாது; தலையில் மகுடம் (கிரீடம்) இல்லாதவர் இல்லை (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)— மாலை தரிக்காதவன் இல்லை; எண்ணை தேய்த்து குளிக்காதவனோ, உடலுக்கு வாசனைத் தைலங்கள், பூச்சுகள் (அத்தர், புனுகு) உபயோகிக்காதவர்களோ ஒருவரும் இல்லை — எல்லோரும் சுகபோகத்தில் மிதந்தனர்.

atheism-poster-rsr-org

21.நாம்ருஷ்டபோஜீ நாதாதாநாப்யநங்கத நிஷ்கத்ருக்:–
சிறந்த உணவை வயிறு புடைக்கத் தின்னாதவர் இல்லை; பிறருக்குத் தானம் செய்யாவனும் (அயோத்தியில்) இல்லை. தோள் வளையமோ மார்பில் பதக்கமோ அணியாதனோ இல்லை கையில் காப்பு அணியாதவனோ, புலன் டக்கம் இல்லதவனையோ பார்க்கமுடியாது.

22.ந தஸ்கர:—
அயோத்தியில் திருடர்கள் கிடையாது. கொஞ்சம் படித்தவன் (அரை வேக்காடுகள்), கொஞ்சம் செல்ம் உடையவன், யாக, யக்ஞங்கள் செய்யாதோர், ஜாதிக் கலப்புடையோர் இல்லை.

23.ஸர்வ கர்ம நிரதா நித்யம் ப்ராஹ்மணா விஜிதேந்த்ரியா: :—
அந்தணர்கள் ஜிதேந்த்ரியர்கள் — (புலனழுக்கற்ற அந்தணாளர்: புறநானூறு); —-கர்மங்களில் கண்ணுடையோர் (அந்தணர் என்போர் அறவோர்: திருக்குறள்)— விருந்தினருக்கு வேண்டியதைக் கொடுத்து மகிழ்வித்தனர்- வேதம் ஓதிக் காலத்தைக் கழித்தனர். பேராசை இன்றி தட்சிணை வாங்கினர்- பிறன் மனை நோக்காத பேராண்மையோடு வாழ்ந்தனர்.

24.ந நாஸ்திகோ நாந்ருதகோ ந கஸ்சித பஹுஸ்ருத:
நாஸ்தீகன் இல்லை—கொஞ்சமாவது பொய் பேசும் வகை கூட இல்லை- படிக்காதவன் இல்லை- பொறாமை உள்ளவன், முட்டாள்கள் கிடையாது

25.நா ஷட் அங்கவ்தத்ராஸ்தி நாவ்ரதோ நாசஹஸ்ரத: :—
ஆறு அங்கங்களை (சடங்கு) கற்காதவ்ன் இல்லை; பட்டினி கிடந்து விரதம் அனுஷ்டிக்காதவன் கிடையாது. ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்காத சத்திரங்களே இல்லை. தானியம் குறைந்து போயிற்றே என்று கவலைப் பட்டோர் இல்லை. நல்ல பிள்ளைகளைப் பெறாதோரும் இல்லை; நோயாளிகளும் கிடையாது

26. குஹா கேஸரிணாம் இவ: —
குஹைகளில் ஆண் சிங்கம் இருந்தால் எப்படி நெருங்க முடியாதோ அது போன்றவீரகள் உடைய அயோத்தியை யாரும் நெருங்கமுடியாது, வீர வித்தைகளைக் கற்று இருந்தனர். அவமதிப்பைப் பொறுக்கமாட்டார்கள்; கோணல் புத்தி கிடையாது.
ram green

27. காம்போஜ விஷயே தாஜைர் பாஹ்லீக ஸ்ச ஹயோத்தமை: :–
காம்போஜம், பாலீகம், வநாயு, சிந்து தேசம் ஆகியவற்றில் பிறந்த சிறந்த குதிரைகள், மலை போன்ற விந்திய மலை, இமய மலையில் பிறந்த யானைகளும் அயோத்தியில் பவனி வந்தன.
((ஆதாரம்:—வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், ஆறாம் சர்கம்))

-subham–
contact swami_48@yahoo.com

வைரம், தர்ப்பை பற்றி புராணம் என்ன சொல்கிறது?

dharba

Written by S Nagarajan
Post No. 1162; Dated:- 10th July 2014.

This is the seventh part of S Nagarajan’ article on the Puranas. First five parts were published in the past few days.

தர்ப்பம் ஏன் புனிதமானது?

தர்ப்பத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறோம். தர்ப்பம் ஏன் புனிதமானது என்பதை ஸ்ரீமத் பாகவதம் விளக்குகிறது.

மன்னனாகிய மனுவின் பட்டணம் பர்ஹிஷ்மதி என்ற பெயர் பூண்டு புகழ் பெற்றது. அந்நகரம் அனைத்து ஸம்பத்துகளினாலும் நிறைந்திருக்கும். யஜ்ஞ ஸ்வரூபியாகிய ஆதி வராஹ பகவான் தன் சரீரத்தை உதறும் காலத்தில் அந்தச் சரீரத்திலுள்ள ரோமங்கள் எந்த இடத்தில் உதிர்ந்தனவோ அந்த இடத்தில் இந்த பர்ஹிஷ்மதி நகரம் உருவானது. அங்ஙனம் உதிர்ந்த ரோமங்களே பச்சை நிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன. அந்த தர்ப்பங்களாலும் நாணல்களாலும் யஜ்ஞங்களுக்கு விரோதிகளான ராக்ஷஸர்களை அழித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். ஆகவே தான் அவைகள் பகவானுடைய ஆராதனத்திற்கு உபயோகப்படுகின்றன.

மஹானுபாவனாகிய அந்த மனு சக்கரவர்த்தி பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை இந்த ஆதி வராஹன் மேலே எடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின் மீது நிலை நிற்கச் செய்த காரணத்தினால் அந்த உதவியை நினைத்து பர்ஹிஸ் என்று கூறப்படுகின்ற தர்ப்பங்களையும் நாணல்களையும் பரப்பி அந்த யஜ்ஞ புருஷனை யாகங்களால் ஆராதித்தான். ஆகவே அந்த நகரம் பர்ஹிஷ்மதி என்று பெயர் பெற்றது.
ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது,
– ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் 22ஆம் அத்தியாயம்

diamonds

வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்?

வைரத்தைச் சேகரிப்பதோ அல்லது அணிவதோ நன்கு பரிசோதித்த பின்னரே வளத்தை விரும்பும் ஒரு மன்னனால் செய்யப்பட வேண்டும்.

அதைப் பற்றிய தொழில்நுட்ப அறிவு உள்ளவரும் அதில் நன்கு பரிச்சயம் உள்ளவரும் ஆகிய ஒருவரே அதன் விலை மற்றும் தரம் பற்றி அறிந்தவராக இருக்கும் தகுதி வாய்ந்தவர் ஆவர்.
நிபுணர்கள் வைரத்தை மிகவும் செல்வாக்கு படைத்தது என்று கூறுகின்றனர். ஆகவே நமது விவரங்களும் வைரம் பற்றிய விவரமான விவரணத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது.

-கருட புராணம் 68ஆம் அத்தியாயம்

வைரத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உரைக்கும் அத்தியாயத்தில் வருவது. இதைத் தொடர்ந்து வைரம் கிடைக்கும் இடங்கள், அதன் குணாதிசயங்கள், தரத்தைச் சோதிக்கும் முறைகள் விளக்கப்படுகின்றன.

yanai4

வாஹனம் – 2

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உள்ள வாஹனம் பற்றிய தொடர்ச்சி:-

ஷீதளா தேவியின் வாஹனம் கழுதை – ஸ்கந்த புராணம் ,ருத்ர
யாமளம்
(ஷீதளா தேவி வட இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சக்தியின் அம்சம்)
கேதுவின் வாஹனம் புறா (மத்ஸ்ய புராணம் கேதுவின் வாஹனம் ராஜாளி என்று குறிப்பிடுகிறது)
ப்ரம்மாவின் வாஹனம் ஹம்ஸம் – நாரதீய புராணம், ஸ்ரீமத் பாகவதம்
ராகுவின் வாஹனம் புலி
செவ்வாயின் வாஹனம் குதிரை
அக்னியின் வாஹனம் ஆடு – நாரதீய புராணம்
குபேரனின் வாஹனம் நரன் – நாரதீய புராணம் (மனிதனே குபேரனுக்கு வாஹனம். சில நூல்கள் மனிதனின் ஆவி அல்லது ப்ரேதம் என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால் பொதுவாக அவன் நர வாஹனன் என்றே குறிப்பிடப்படுகிறான்)
சந்திரனின் வாஹனம் மான் – நாரதீய புராணம் (மத்ஸ்ய புராணத்தில் சந்திரனின் வாஹனமாக வெண்குதிரை குறிப்பிடப்படுகிறது)
வருணனின் வாஹனம் மகரம் – விதி மார்க்க ப்ரபா

MERCURY_1991356g

நவ கிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ரன், சனி, ராகு,கேது ஆகிய இவைகள் உலகத்தினருக்கு இதம் செய்யும் நவ கிரகங்கள்.
-வாமன புராணம்,மார்க்கண்டேய புராணம், நாரத புராணம்,மத்ஸ்ய புராணம்,அக்னி புராணம், விஷ்ணு தர்மோத்தர புராணம், மஹாபாரதம், யாக்ஞவல்ய ஸ்மிருதி,வைகானஸ ஸ்மிருதி சூத்ரம்

சூரியனின் அதி தேவதை – சிவன்
சந்திரனின் அதி தேவதை – பார்வதி
செவ்வாயின் அதி தேவதை – ஸ்கந்தன்
புதனின் அதி தேவதை – விஷ்ணு
குருவின் அதி தேவதை – ப்ரஹ்மா
சுக்ரனின் அதி தேவதை – இந்திரன்
சனியின் அதி தேவதை – யமன்
ராகுவின் அதி தேவதை – பசு அல்லது காலம்
கேதுவின் அதி தேவதை – சித்ரகுப்தன்
-மத்ஸ்ய புராணம்

அழகாபுரியின் வர்ணனை!

குபேரனுடைய பட்டணமான அழகாபுரியைப் பற்றிய ஒரு சிறிய வர்ணனை இது:

ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது:-

அந்த அழகாபுரிக்கு வெளியில், தீர்த்தபாதனான ஸ்ரீ மஹாவிஷ்ணு வின் பாதாரவிந்தங்களில் படிந்ததனால் மிகவும் பரிசுத்தமான நந்தை என்றும் அலக்நந்தை என்றும் இரண்டு நதிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

வாராய்! விதுரனே! தேவஸ்தீரிகள் தமது விமானங்களிலிருந்து இறங்கி மன்மத க்ரீடைகளால் இளைப்புற்றவராகி இந்நதிகளுக்கு வந்து தமது காதலர்களை ஜலங்களால் நனைத்துக் கொண்டு ஜலக்ரீடை செய்வார்கள். அந்த தேவ ஸ்த்ரீகள் ஸ்நானம் செய்யும் போது அவர்களது தேகங்களிலிருந்து நழுவிய புதிய குங்குமங்கள் பட்டு, பொன்னிறம் உடையதான இந்நதிகளின் ஜலத்தைக் கண்ட யானைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்னும் விருப்பம் இல்லாதிருப்பினும் அந்த ஜலத்தைத் தாமும் குடித்துத் தமது பெண் யானைகளையும் குடிக்கச் செய்கின்றன. அந்த அழகாபுரியில் வெள்ளியாலும் பொன்னாலும் விலையுயர்ந்த ரத்தினங்களாலும் செய்த பற்பல விமானங்கள் ஆங்காங்கு நிறைந்திருக்கும். புண்ய ஜனங்களும் அவர்களது பெண்மணிகளும் அந்நகரில் உலவிக் கொண்டிருப்பார்கள். அத்தைகையதான அந்த நகரம் மின்னல்களும் மேகங்களும் சூழப்பெற்ற ஆகாயம் போல விளங்கும்.

-ஸ்ரீமத் பாகவதம் நான்காம் ஸ்கந்தம் ஏழாம் அத்தியாயம்

தொடரும்…………………………………………………

pictures are taken from face book and other websites for non commercial use;thanks.

contact swami_48@yahoo.com

No Atheists in Ayodhya!!

atheism-poster-rsr-org

Written by London Swaminathan
Post No. 1161; Dated 9th July 2014.

Valmiki Ramayana gives very interesting details about the kingdom of Koshala and its capital Ayodhya. It gives us an idea of values they upheld and of an ideal kingdom, what was popularised later as Ram Rajya by leaders like Mahatma Gandhi.

ARCHITECTURE
“Ayodhya was founded by Manu, a lord among men.
The city’s thoroughfares extended for sixty miles. It had massive gates and numerous markets.
It’s fortifications were planned by skilful engineers and artificers.
Its inhabitants were rich and had spacious houses with high arched porticos decorated with flags and banners.
The capital was filled with extensive buildings and beautiful gardens and surrounded by mango groves, tall trees enhancing the outskirts, giving it the appearance of a lovely girl wearing a girdle of greenery.
It was enclosed by strong fortifications and a deep moat which no enemy, by any expedient whatsoever, could penetrate.
Countless elephants, horses, cattle, camels and mules were to be seen in the city.

COMMERCE
Innumerable ambassadors dwelt there and people from many lands traded peacefully within its walls.
Ayodhya, like Indra’s city Amaravati, was resplendent with gilded palaces, the walls of which were set with precious stones, the domes resembling mountain peaks.
The dwellings of the artisans were so constructed that no space was left between them, and the ground on which they stood was perfectly levelled.

ram green

FOOD & HOSPITALITY

All were abundantly stocked with rice and the juice of the sugarcane was employed instead of water.
The inhabitants were said only to eat Shali Rice (that is rice produced in the cold season which is accounted the best).
None ate impure food; none allowed his neighbour to suffer from hunger.
Those who dwelt there worshipped Gods and the uninvited guest; they were both magnanimous and charitable.

MUSIC
On every side, the sound of trumpets, bugles, lutes and gongs was constantly heard.
The city had no rival on earth but resembled the abode of the gods attained through austerities.

HONESTY
The city was inhabited by the noblest of men, those who did not slay a fleeing foe or one without defence, warriors who were skilled archers, able to pierce opponent by sound alone, who with sharp arrows loosed by their strong arms had singlehandedly slain lions, tigers and infuriated boars in the forest.
Hosts of illustrious Brahmins performing the fire ceremony were also to be seen there, who were endowed with the virtues of their caste, versed in the Vedas and the six branches of learning, who increased the offerings immeasurably, magnanimous sages, who sought their pleasure in the welfare of others and resembled Divine Rishis.
——Balakandam Chapter 5

rama10

GOD FEARING
The people were happy, virtuous, learned, experienced, each satisfied with his state, practising his own calling, without avarice and of truthful speech.
None was indigent or dwelt in a mean habitation, all lived happily with their families, possessing wealth, grain, cattle and horses.
None was a miser or a swindler, none was mean spirited, proud, rash, worthless or an atheist.
None denied the existence of God, none uttered falsehood or were enamoured of worldly pleasure and none were guilty of slander.

JEWELS
None lacked earrings, coronets or necklaces.
They bathed daily and rubbed their bodies with oil, using attar of roses and sandal paste.
All possessed ornaments and gold, and there was none who not learnt to subdue his mind.
The marvellous city where gold abounded and beautiful women wandered about in groups, rich in jewels of every kind, was adorned with luxurious palaces and mansions.

ram profile

FASTING
No one was mean, impious or failed to discharge his duties.
The Brahmins were devoted to their respective duties, firm in self control and authorized to accept gifts.
No Brahmin was unversed in the six systems of philosophy nor did neglect to fast at the full moon at the appointed days.

CRIME FREE STATE
There were no thieves and none were born of mixed castes.
There were none who suffered from mental or physical infirmities and none were unhappy in that city.
Men and women were of righteous conduct, fully self controlled, and in their pure and chaste behaviour, they equalled the great sages.

PRO GOVERNMENT
Among the inhabitants of Ayodhya, there was no man or woman who was not endowed with beauty and wealth and non who were not devoted to the king and the state.

All attained to a ripe age as virtuous and truth-loving people, their homes were filled with children, grand children and virtuous women.
The warriors were subject to the learned Brahmins and the merchants to the warrior castes; in accordance with their caste the people served the Brahmins, the warriors and the merchants.

ram gem

HEROISM
Ayodhya abounded in warriors undefeated in battle, fearless and skilled in the use of arms, resembling lions guarding their mountain caves.
The city was full of excellent horses and mighty elephants.

In the next chapter Valmiki described the virtues of Dasaratha, the emperor and his ministers.

THE RAMAYANA OF VALMIKI, Volume 1, Translated by Hari Prasad Shastri.

(I have slightly jumbled the paragraphs to put them under respective group headings:swami)

swami_48@yahoo.com