ராமாயணம் தோன்றியது எப்படி? அற்புதமான கதை

rama rama
Post No 1015; Date 2nd May 2014.

எழுதியவர் ச.நாகராஜன்
ராமாயண வழிகாட்டி- அத்தியாயம் 26

சிலேடைக் கவிதையில் ராமாயண உதயம்!!

ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!

இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்

இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!

ramachandra swami

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

மாநிஷாத – ஸ்ரீனிவாஸ! க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட ஏகம் – ஒருவனை அவதீ: – கொன்றீர்; யத் ஸ்வே – அதனால் நீர் ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை மா அகம::-அடைந்தீராக!

ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!
சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!

rama flowering sita

பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I
ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்

சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை

தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!

அப்போது வால்மீகி முனிவரைப் பார்க்க தாமே வந்த பிரம்மாவை அவர் உபசரித்து வரவேற்றார். ஆனாலும் மனதிலே க்ரௌஞ்ச பக்ஷியைப் பற்றிய எண்ணம் அவருக்கு இன்னும் போகவில்லை.
பிரம்மா அவர் எண்ணத்தை அறிந்து சிரித்தார்.பிறகு கூறினார்:-

kothanda raman

மச்சாந்தாதேவ தே ப்ரஹ்மண் ப்ரவ்ருத்தேயம் சரஸ்வதி I
ராமஸ்ய சரிதம் சர்வ குரு த்வம்ருஷிசத்தம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியிரண்டாம் ஸ்லோகம்

ப்ரஹ்மன் – பிராம்மணரே தே – உம்முடைய இயம் சரஸ்வதி – இந்த வாக்கானது மச்சாந்தாத் ஏவ – என்னுடைய அபிப்ராயத்தினாலேயே ப்ரவ்ருத்தா – உண்டானது ருஷிசத்தம – முனி ச்ரேஷ்டரே த்வம் – நீர் ராமஸ்ய சரிதம் –ராமருடைய சரித்திரத்தை சர்வம் – முழுவதையும் குரு – செய்யும்.

இவ்வாறு ராம சரிதத்தை முழுவதுமாகச் செய்ய பிரம்மா அருளுரை புகல ராமாயணம் உருவானது. வால்மீகி முனிவருக்கு உலகம் உய்ய வேண்டும் என்ற பிரம்மாவின் சங்கல்பம் மகிழ்ச்சியைத் தரவே அற்புதமான காவியத்தை உள்ளது உள்ளபடி செய்தார்.

உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.

யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I
தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்

பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!

Golden_Globe_awards_logo

மஹீதலே – உலகத்தில் கிரய: – மலைகளும் சரிதஸ்ச – நதிகளும் யாவத் – எதுவரைக்கும் ஸ்தாஸ்வந்தி – இருக்குமோ தாவத் – அதுவரை ராமாயணகதா – ராமாயண கதை லோகேஷு – உலகங்களில் ப்ரசரிஷ்யதி –விளங்கப் போகின்றது.

வால்மீகி முனிவரின் இந்த ஆதி காவியம் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமேது! இதைப் படிக்கும் பேறு பெற்றோரின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் அல்லவா!!

contact swami_48@yahoo.com

உபநிஷத அற்புதங்கள்– Part 2

upanishads (1)

உபநிஷத அற்புதங்கள்– Part 2 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 996; தேதி—23 April 2014.

13.பிருஹத் ஆரண்யக உபநிஷத்
மிகவும் பழைய உபநிடதம் இதுதான். கி.மு 800 என்பது வெளி நாட்டினர் கணிப்பு. மிகவும் பெரியதும் இதுதான். இதில் 400 பாடல்கள் உள்ளன. பிற்கால உபநிஷதத்தில் காணப்படும் எல்லா கருத்துகளும் இதில் விதை ரூபத்தில் இருப்பதை உணரலாம்.

அஸ்வமேத குதிரை உருவகம் இதில் காணப்படுகிறது
.(1-1-1)
கண்- சூரியன், மயிர்/முடி—மரம் செடி, கொடி, மூத்திரம் – மழை என்ற ஒப்பீடும் உள்ளது. இது ரிக்வேத புருஷ சூக்தத்திலும் வருவதால் பல்லாயிரம் ஆண்டுகளாக பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் கடவுளாக காண்பது இந்துக்களின் சிந்தனை மரபு என்று காட்டுகிறது.

14.ஒன்றாகக் காண்பதே காட்சி

ஒன்றாகக் காண்பதே காட்சி (அவ்வை பாடல் வரி) என்ற வாசகம் — இரண்டு இருக்குபோதுதான் பயம் இருக்கும் என்ற உபநிடத வாக்கியத்தில் இருந்து உண்டானதே. 1-4-1

கடவுள் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டார்: கணவன் மனைவி என்று. மனைவியை கணவனின் மற்றொரு பாதி (தி அதர் ஹாப்) என்று கூறுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். பிற்காலத்தில் வந்த அர்த்தநாரீஸ்வரன் உருவத்துக்கு (மாதொருபாகன்) மூர்த்திக்கு இதுவே மூலம். இதையே பைபிள் ஆதாம் என்பவர் இடது பக்க விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கியதாகச் சொல்லுகிறது. இடது பக்கத்தில் தேவி இருப்பது இந்து மதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆதாம் என்பது ஆத்மா என்பதன் திரிபு. பரம ஆத்மா தன்னை ஜீவ ஆத்மா என்று இரண்டாக வேறு படுத்தியதே இக்கதை. இதையே உபநிடதத்தில் இரண்டு பறவைகள் கதையாகவும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்துள்ளார். நானும் ஏற்கனவே ‘த்ரீ ஆப்பிள்ஸ் தட் சேஞ்ட் தெ ஓர்ல்ட்’ என்ற கட்டுரையிலும் , ‘பைபிளில் சம்ஸ்கிருதம்’ என்ற கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.

புதிய பரிணாமக் கொள்கையையும் இந்த உபநிடதத்தில் காணலாம்: பசு, குதிரை, கழுதை, ஆடு, காளை, எறும்பு, மனிதன் ,மற்ற மிருகங்கள்

upanishad book

1000 பொற்கிழி
15.ஜனகர் நடத்திய யாகத்தின் இறுதியில் ஒரு போட்டி நடத்தப்படுகிறது 1000 பசுக்களின் கொம்புகளில் சுற்றப்பட்ட பொற்கிழிகளுடன் முதல் பரிசு என்று அறிவிக்க ப்படுகிறது. இதில்தான் யாக்ஞவல்க்யர் – கார்க்கி வாதம், யாக்ஞவல்க்யர் – மைத்ரேயி சம்பாஷணை எல்லாம் வருகிறது. (3-1-1)
(1000 பசுக்கள் ஒவ்வொன்றிலும் பத்து வீதம் 10,000 பொற்காசுகள்).
இதே போல திருவிளையாடல் புராண தருமி- நக்கீரன் சம்பவத்திலும் ஆயிரம் பொற்கிழி வருவதால் போட்டி நடத்தி இப்படிப் பரிசு வழங்குவது இந்தியாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அறிகிறோம்.

16.இதில் தெரியும் விஷயங்கள்
யாராவது ஒருவர் அறிவாளி என்று அறிவித்தால் அவர் சபையில் அதை நிரூபிக்க வேண்டும். அதை எதிர்த்து அறிஞர்கள் கேள்வி கேட்கலாம். இதில் பெண் அறிஞர்களும் கலந்து கொண்டனர். உலகில் இல்லாத புதுமை!
தமிழ் சங்கமும் இதே பணியைச் செய்து வந்ததை திருக்குறள் அரங்கேற்றம் மற்றும் தருமி—நக்கீரன் மோதலில் படிக்கிறோம்.

17.ஆண்டு, பட்சம்
இந்த உபநிஷத்தில் 12 மாதம் ,பட்சம் எல்லாம் வருகிறது. ஆனால் வாரம் என்ற கணக்கு இல்லை. காலத்தை சக்கரமாக உருவகித்து 12 கம்பிகள் என்று 12 மாதங்களும் வருணிக்கப்படுகின்றன.

18.கடவுள் விஷயத்தில் அதிக கேள்விகள் கேட்கக்கூடாது என்று யாக்ஞவல்கியர் கார்க்கியைக் கண்டித்தது—கடவுள் பட்டிமன்ற விவாதத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற உண்மையைப் புலப்படுத்தும்.

purmada

19.பணமும் கடவுளும் வெகுதூரம்
யாக்ஞவல்கியருக்கு இரண்டு மனைவியர்: மைத்ரேயி, காத்யாயனி. அவர், என் சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டு நான் தவம் செய்யப் போகிறேன் என்று சொன்னார். உடனே பணத்தின் மூலம் என்ன பயன்? என்று மைத்ரேயி கேட்கிறார். பணத்தின் மூலமாக கடவுளை அடைய முடியாது என்று கேட்டவுடன் தனக்கு சொத்தின் ஒரு பகுதி வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். உலகில் முதல் முதலில் பணமும் சுகமும் வேண்டம் என்று சொன்ன பெண்மணி இவராகத்தான் இருக்க வேண்டும்!

20.உன்னையே நீ அறிவாய் என்ற வாசகம் வருவதும் இங்கேதான் (4-5–1). சாக்ரடீஸ் இதை நம்மிடம் கற்றுக் கொண்டார்.

‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்’ என்று பாரதி பாடியது ஏன் என்று இப்போது தெரிகிறது.
21.பெண்களுக்கு சொத்தில் ஒரு பகுதி உண்டு என்பதும் இதில் இருந்து தெரிகிறது.

இது எல்லாம் 3000 ஆண்டுகளுக்கு முன்!!! மற்ற நாடுகளில் நாகரீகம் என்றால் என்ன என்றே தெரியாத காலம். பிரம்மாண்டமான பிரமிடுகள் இருந்தனவே அன்றி ‘’உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’’— என்ற தத்துவம் இல்லை!

22.சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா
சத்ய சாய் பாபா பாடும் ‘’சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா’’ பஜனையின் வாசகம் இந்த உபநிஷத்தில்தான் இருக்கிறது. இது அற்புதமான ஒரு வாக்கியம்.(3—9—28)
இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஆராய்ச்சி விஷயம்.

முதல் பகுதி வெளியிட்டது 22 ஏப்ரல் 2014
sohum-upanishad

Contact: swami_48@yahoo.com

உபநிஷத அற்புதங்கள் – Part 1

GuruShishya

உபநிஷத அற்புதங்கள் – 1 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—994; தேதி—22 ஏப்ரல் 2014.

12-3-1995- முதல் சுமார் ஓரிரு மாதங்களுக்கு உபநிஷத புத்தகங்களில் இருந்து சில நோட்ஸ்- Notes எடுத்து வைத்திருந்தேன். சில ஆராய்ச்சி யாளர்களுக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில் அவற்றை அப்படியே தருகிறேன். இது மதம் அல்லது தத்துவ விஷயங்களைப் பற்றியது அல்ல. பொதுவான, சுவையான விஷயங்கள்.

1.சாந்தோக்ய உபநிஷத்
வெளி நாடுகளில் முதல் பெயர்/ First name or fore name, குடும்பப் பெயர்/surname என்று இரண்டு பெயர்கள் இருக்கும். அமெரிக்கர்களுக்கு நடுப் பெயரும்(Middle name) உண்டு. இந்த வழக்கம் வேத காலம் முதல் நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது மாறி வெறும் ஜாதிப்பெயரை குடும்பப் பெயர் இடத்தில் எழுதும் வழக்கம் தோன்றிவிட்டது சாந்தோக்ய உபநிடதத்தில் உத்தாலக ஆருணன் என்ற பெயரைக் காண்கிறோம் உத்தாலகன் என்பது அவருடைய பெயர் (முதல் பெயர்). ஆருண என்பது குடும்பப்பெயர். அதாவது ஆருணன் மகன் உத்தாலகன்.

24 வயதுவரை படிப்பு!
2.சாந்தோக்ய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்பவரைப் பற்றி பேசப்படுகிறது. அவர் உத்தாலக ஆருணனின் மகன். 24 வயதில் வேதம் முழுதும் படித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதில் கவனிக்க வேண்டியது 24 வயது வரை கல்வி. அநேகமாக ஐந்து வயதில் அவருடைய அப்பா குருகுலத்தில் (ஸ்கூலில்) சேர்த்திருப்பார். ஆக 19 வருடம் குரு வீட்டில் தங்கிப் படித்திருக்கிறார். என்ன ஆசர்யம் பாருங்கள். ஒரே குருவிடம் 19 வருஷம் கல்வி!

அபூர்வ சக்தி
3.இவ்வளவு வருஷம் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் பிரம்மசர்யம் அனுஷ்டித்தால் அவர்களுக்கு மந்திர சக்தி, அபூர்வ சக்திகள் வந்துவிடும். 12 ஆண்டுகளே போதும், அபூர்வ சக்திகள் பெற என்பது சுவாமி விவேகாநந்தரின் அருள் வாக்கு.

4.இயற்கை உவமைகள்
சாந்தோக்ய உபநிஷத்தில் இயற்கை நடனமாடுவதையும் படித்து இன்பமுறலாம்.
தேனீ—தேன் உவமை
ஆறு – கடல் உவமை
மரம் — சத்து உவமை
ஆலமரம் – விதை உவமை
உப்பு – நீர் உவமை
குருடன் — குரு உவமை
எவ்வளவு இயற்கையோடு இயைந்த வாழ்வு!

இயற்கையுடன் இணைந்து விட்டால் புத்தகமே வேண்டாம். அதை விட நிறைய ஞானம் பெறலாம் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் (William Wordsworth):

One impulse from a vernal wood
May teach you more of man,
Of moral evil and of good,
Than all the sages can.

Guru_Shishya

5.விஞ்ஞான சோதனைச் சாலை !
இந்த உபநிஷதத்தில் நாம் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் சோதனைச் சாலையில் Laboratory என்ன செய்கிறோமோ அதை குரு சொல்லித் தருகிறார்.
தம்பி, கொஞ்சம் உப்பைக் கொண்டு வா. அந்த கோப்பையில் உள்ள தண்ணீரில் போடு. உப்பு எங்கே போனது?

தம்பி, அந்த ஆலமர பழத்தைக் கொண்டுவா. அதைப் பிரி. சிறு விதைகளைப் பார்க்கிறாயா? இவ்வளவு பிரம்மாண்டமான மரத்தை அது எப்படி உண்டாக்கியது?

இப்படி கேள்விகளை எழுப்பி பிரம்ம ஞானத்தைப் போதிக்கின்றனர் ரிஷிகள்!
இதை ஆங்கிலத்தில் — Socratic Method — சோக்ராடிக் மெதட் என்று சொல்லுவார்கள். அதாவது சாக்ரடீஸ் என்ற அறிஞர் உருவாக்கியது என்று.

சாக்ரடீஸ், இதை நமிடம் கற்றுக் கொண்டார் என்பது மேல் நாட்டு மக்களுக்குத் தெரியாது! சாக்ரடீஸ், அலெக்சாண்டர் ஆகியோர் இந்து சந்யாசிகளிச் சந்தித்தது பற்றி சுவாமி விவேகாநந்தரும் பரமஹம்ச யோகாநந்தாவும் எழுதி இருப்பதை ஏற்கனவே கொடுத்து விட்டேன்.

6.கடோபநிஷத்
இதில் தான் நசிகேதன் என்ற சின்னப் பையன் கதை வருகிறது. உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு இந்தியாதான் என்பதற்கு இரண்டே உதாரணங்கள் போதும்!

ஒன்று நசிகேதன் என்ற சின்னப் பையன்
இரண்டு கார்க்கி என்ற பெண்மணி

இந்த இருவரும் உபநிடதத்தில் சக்கைப்போடு போடுகின்றனர். வாக்குவாதத்தில் மன்னர்கள்!!! 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் மேதா விலாசம் ஆயிரம் கோடி சூர்யப் ப்ரகாசத்தில் ஜொலித்தது.

அந்தக் காலத்தில் தமிழில் நூல் கிடையாது. கிரேக்கத்தில் நூல் கிடையாது. லத்தீன் மொழியில் நூல் கிடையாது. எபிரேய (ஹீப்ரு) மொழி, சீன மொழியில் கொஞ்சம் கொஞசம் துண்டு துண்டாக ஏதோ சில எழுத்துக்கள் உண்டு. (பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியது கி. மு ஆயிரத்தை ஒட்டித்தான்.
புத்தரும், மஹாவீரரும், சொராஸ்தரும், ஏசுவும், கன்பூஷியஸும், லாவோட்சேயும் தோன்றுவதற்கு முன்னால் இந்துப் பெண்களும் சின்னப் பையன்களும் எமனுடன் வாதித்து வெற்றி கண்டிருக்கின்றனர்.
நசிகேதன் என்ற வாண்டு பயல் எமனை வாக்குவாதத்தில் வென்று — சாவித்திரி போல — மூன்று வரங்கள் வாங்கி வருகிறான்.

பகவத் கீதையிலும், பாரதி பாட்டிலும். திருமந்திரத்திலும், முதல் மூன்று ஆழ்வார்களின் பாடல்களிலும் வரும் ஞானச் சுடர், ஞானத் தீ, ஞான தீபம், ஞான வாள், ஞானப் படகு முதலிய எல்லாம் உபநிடதத்திலேயே வந்துவிட்டன.
purmada

7.உடல் தேர் உருவகம்
கடோபநிடதத்தில் உடல் – தேர் உருவகம், புலன்கள்= குதிரைகள் என்ற உவமை உருவகம் எல்லாம் எடுத்தாளப் படுகின்றன. பிற்காலத்தில் இதை புத்தரும் பயன் படுத்தினார் (காண்க—தம்மபதம்).

8.ஆங்கிலத்தில் கத்தி போல கூரானது என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவர். அது எல்லாம் கடோபநிடதத்தில் இருந்து வந்த மரபுத் தொடர்!

9.இந்த உபநிடதம் இருதயம்- மூளை தொடர்பு பற்றியும் இருதயத்தில் உள்ள 101 நாடிகள் குறித்தும் பேசுகிறது. இருதயத்துக்குள் ஒரு கட்டை விரல் அளவுக்கு ஒளிரும் பிரம்மன் குறித்தும் படிக்கலாம்.

10.கௌசீதகி உபநிஷத்
கௌசீதகி உபநிஷதத்தில் பிராணன் பற்றிப் படிக்கிறோம்
அறிஞர்கள் இதை மற்ற கலாசாரங்களுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்:
Taoists = Chi
Jews = Ruach
Greeks = Pneuma

11.பெயர்கள்: தேவ நாசன் மகன் பிரதர்தனன் (இதே பெயரில் ஒரு மன்னனை, சிரியா – துருக்கி எல்லைப் பகுதியில் ஆட்சி புரிந்த மன்னர்கள் பட்டியலிலும் காண்கிறோம். புராண மன்னர் பட்டியலிலும் பிரதர்தனன் உண்டு. ஆக மிட்டனி (கி.மு 1300) நாகரீகத்தில் காணப்படும் பிரதர்தனன் உண்மையான சம்ஸ்கிருதப் பெயரே.

த்வஷ்ட்ரியின் முன்று தலை உடைய விஸ்வரூபா, மற்றும் அருண்முகாஸ், பிரகலாதன், பௌலோமன், காலகஞ்சன் எனப் பல பெயர்கள் இயற்கைச் சக்திகளால் கொல்லப் பட்டதாகக் கூறுவது வேதப் பாடல்களை நினைவு படுத்துகிறது.

12.ஒரு மயிரிழை கூட எனக்குத் தீங்கு நேரிடாது என்ற வாசகம் இங்கே வருவது குறிப்பிடத்தக்கது.

To be continued——

contact swami_48@yahoo.com

புறநானூற்றில் முனிவர்களும் ஆஸ்ரமங்களும்

animal fables

எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் :–992; —தேதி 21st April 2014.

இந்து மத முனிவர்கள், கானகங்களில் ஆசிரமங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை வனப்பு மிக்க மலைச் சாரல்களில் அமைக்கப்பட்டன. அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். காய்கறிகள், கனி வகைகள், பால் தயிர், கொஞ்சம் தானியம் ஆகியவைதான் அவர்களுடைய அன்றாட உணவு.

மான்கள், கிளிகள் முதலியன அவர்களுடைய குடில்கள் அருகே வசித்தன. நெய் மணக்கும் ஹோமப் புகை அவர்கள் குடில்களில் இருந்து காலையும் மாலையும் எழும். அவர்களுடைய அன்றாட உடற்பயிற்சி ஆறுகளுக்குச் சென்று நீராடி வருவதும். செடிகொடிகளுக்குத் தண்ணீர் விடுவதும் ஆகும். அத்தோடு ஹோமத்துக்குத் தேவையான குச்சிகளைப் பொறுக்கிக்கொண்டு வருவர்.

ஆசிரமங்களில் அமைதி தவழ்ந்தது. அவர்களுடைய தவ வலிமையால் அங்கு வரும் புலியும் மான்களும் ஒரே துறையில் தண்ணீர் குடிக்கும். அங்கு வரும் மன்னர் முதலானோருக்கு தாராளமாக விருந்து உபசாரம் கிடைக்கும். யாரேனும் தங்க வேண்டுமானால் அங்கு தங்கவும் அனுமதி உண்டு. மேலும் பிராணிகளும் கூட அவர்களுக்கு ஹோமத்துக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தன. பெண் துறவிகளும் அங்கே இருந்தனர்.

ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான முனிவர்களையும், ஆசிரமங்களையும் பற்றிய செய்திகள் இருக்கின்றன. அவைகளைப் படிக்கும்போதே மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். சம்ஸ்கிருத நாடகங்களில் இந்த ஆஸ்ரமங்கள் பற்றி இன்னும் பல புதிய செய்திகள் கிடைக்கின்றன. உலகின் மிக மூத்த நாடக ஆசிரியர்களில் ஒருவர் பாஷா. அவர் எழுதிய 13 சம்ஸ்கிருத நாடகங்கள் நமக்குக் கிடைத்தது நாம் செய்த தவப் பயனே.
lotus beauty

நாடக உலகில் மிகவும் சிறப்புமிக்க இடத்தைப் பிடிக்கும் காளிதாசனின் மூன்று நாடகங்களில் சாகுந்தலம் என்னும் நாடகம் உலகப் புகழ்பெற்றுவிட்டது. இவைகளில் உள்ள வருணனைகள், ஆஸ்ரமங்களின் அற்புதமான காட்சிகளை நம் மனக் கண்ணுக்கு முன்னே கொண்டு வருகின்றன. மாபெரும் மன்னர்களும் கூட ஆஸ்ரமத்துக்கு தொலை விலேயே ரதங்களை நிறுத்திவிட்டு நடந்து வந்து முனிவர்களின் கால் களில் விழுகின்றனர். ஆயுதங்களையும், அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்களையும் கூடக் கழற்றிவிட்டு சாதாரண உடையில் வருகின்றனர். ஆசிரமத்தின் அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

இமயமலை ஆஸ்ரமங்களின் காட்சிகள் புறநானூற்றின் மிகப் பழைய பாடல்களில் இருக்கின்றன. அவர்கள் காளிதாசனின் நூல்களைப் படித்து அதைப் பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மீது முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய (புற.2) பாடலில்:–

“ நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அறுங்கடன் இறுக்கும்
முத்தீ விளகிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே !”

பொருள்:– பாலானது புளித்துப் போனாலும், கதிரவன் ஒளி நீங்கினாலும், நால்வேத நெறி மாறுபடினும் நீ இமயமலை போல நீண்டகாலம் வாழ வேண்டும். அந்த இமயமலைச் சாரலில் பெரிய கண்களை உடைய பெண் மான்கள் இருக்கின்றன. அவைகளின் பக்கத்தில் சின்ன மான் குட்டிகள் இருக்கும் அந்தணர் வீடுகளில் எரியும் முத்தீயில் இருந்து எழும்புகையில் அவை தூங்கும். அந்த இமய மலையோ சூரிய ஒளியில் தக தகவென தங்கம் போல ஒளிவீசும் (பொற்கோட்டு இமயம்= காஞ்சன ஸ்ருங்கம்= தற்போதைய பெயர் கஞ்ஜன் ஜங்கா). அப்பேற்பட்ட இமயமலை போல் நீ நீண்ட நெடுங் காலம் வாழ்வாயாக.
beatles-ashram-huts-II

அந்தணர் வீட்டு முத்தீ= ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கியம்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் வேள் ஆய் அண்டிரன் மீது பாடிய பாடலில்

“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகம்”.

இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும் தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும். அந்த இமய மலை வானத்தைத் தொடும் அளவு உயர்ந்தது.

இதில் முனிவர்கள் பற்றிய குறிப்பு இல்லாவிடினும் முந்தைய புலவர் முடிநாகராயர் சொன்னதை ஒப்பிட்டால் இவரும் அதையே சொல்கிறார் என்பது தெள்ளிதின் விளங்கும்.

okhla bird sanctuary,hindu

மாற்பித்தியார் வழங்கும் அற்புதக் காட்சி

புறநானூற்றுப் பாடல்கள் 251, 252ம் ஒரு இளைஞன் துறவியான அற்புதக் காட்சியை வருணிக்கின்றன. மாற்பித்தியார் என்ற புலவர் பாடிய பாடல்கள் இவை:–

“ஓவத்தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற்கண்டிகும்—
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீவேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்துவோனே?”

பொருள்:– ஓவியத்தில் வரைந்தது போன்ற அழகான வீடு. அதில் சித்திரப் பாவை போல ஒரு அழகி இருந்தாள். அவள் வளையல்கள் கழன்று விழுமாறு காதல் கனலை மூட்டினான் ஒரு கட்டழகுக் காளை போன்ற இளைஞன். இப்போது அவன் எங்கே?

அதோ பாருங்கள், மலையில் ஒரு நீர்வீழ்ச்சி. அதில் நீராடிவிட்டு அனல் மூட்டி ஹோமம் செய்துவிட்டு இப்போது நீண்ட சடையை அந்தத் தீயின் வெப்பத்தில் உலர்த்திக் கொண்டு நிற்கிறான்.

இதோ அவர்பாடிய இன்னும் ஒரு பாடல்:

“கறங்கு வெள்ளருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையொடு
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே”

பொருள்:– அதோ பாருங்கள்! அருவியில் குளிப்பதால் தில்லை நிறம் போன்ற சடையாக மாறிப் போனான். இப்போது தாளி மரத்தின் இளம் தளிர்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறான். இவன் முன்னர் பேசிய காதல் பேச்சில்—அவன் வீசிய சொல் வலையில் — மயில் போன்ற அத்தனை அழகிகளும் மயங்கி வீழ்ந்தனர்.
desert_elephant.jpg

இந்த இரண்டு பாடல்களும் முன்னர் இளைஞனாக வாழ்ந்த ஒருவன் சந்யாசியாகி காட்டில் வாழும் காட்சியையும் அவன் நீண்ட சடையுடன் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வையும் நம் முன்னே சித்திரம் போலப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நற்றிணைப் பாடலில் ஒரு காட்சி

சல்லியங்குமரனார் பாடிய நற்றிணைப் பாடல் (141) ஒரு முனிவரின் தோற்றத்தை அழகாக வருணிக்கிறது:-

“இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழற்காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடாமேனிக்
குன்றுரை தவசியர் போல”

பொருள்:– மண் சேறு படிந்த கன்னத்தையும் பெரிய வாயையும் மேகம் போன்ற தோற்றமும் உடையது யானை. அந்த யானை உரசி உரசி பொரிந்த அடிமரம் உடையது கொன்றை மரம். அவை நீண்ட சடையும், நீராடாத உடம்பையும் உடைய தவசியர் போல இருக்கின்றன. (தவசியர் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் கவனிக்க).

ஒரு கொன்றை மரத்தை வருணிக்க முனிவர்களைக் கூறும் அளவுக்குத் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் ஆன்மீகம் வளர்ச்சி பெற்றி ருந்தது!! மக்களுக்குத் தெரிந்த பொருள்களையே உவமையாகக் கூறவேண்டும் என்பதும் உயர்ந்த பொருள்களையே உவமையாகக் கூறவேண்டும் என்பதும் நூல் மரபு. தமிழ் மக்களுக்கு இத்தகைய முனிவர் காட்சி அவ்வளவு சர்வ சாதாரணம்!

elephant_1703752f

காளிதாசனின் ‘சாகுந்தல’ நாடக வருணனையும், பாஷாவின் ‘ஸ்வப்ன வாசவதத்தா’ நாடக வருணனையும் இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் கொடுத்துள்ளேன்.

Please read:
“Beautiful and Tranquil Hermitages of Ancient India’– posted on 20th April (Post No 991).
Contact swami_48@yahoo.com

சேரவாரும் ஜெகத்தீரே! ஞானிகள் அறைகூவல்!!

sages bommais

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–990; தேதி:— 20th April 2014.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஆற்றுபடை இலக்கியம் என்று ஒரு பிரிவு உண்டு. திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்று ப் படை, பொருநராற்றுப்படை எனப் பல. ஒரு புலவன் பரிசு பெற்றவுடன் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”– என்ற எண்ணத்துடன் மற்ற புலவர்களுக்கும் இந்த அரசன் இடத்தில் சென்றால் உங்களுக்கும் இந்தச் செல்வம் எல்லாம் கிடைக்கும் என்று கூறி வழிப்படுத்துவான். திருமுருகா ற்றுபடையில் அறுபடை வீடுகளின் அருமை பெருமைகளை நக்கீரர் விளக்குகிறார். முருகனுக்குள்ள அறுமுகங்களும் பன்னிரு கைகளும் பக்தர்களுக்கு எவ்வறெலாம் உதவுகின்றன என்றும் கூறுகிறார்.

இதே போல ஞானிகளும் தாங்கள் கண்ட பேரின்பத்தை எப்படியாவது உலகிற்குச் சொல்லிவிடவேண்டும்; எல்லோருடனும் பகிர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள். இது அவர்களுடைய பாடல்களைப் படித்தால் சொல்லாமலேயே விளங்கும்.

இன்று மாலை ஒரு சிறந்த உணவு விடுதிக்குப் போய் சாப்பிட வேண்டும் என்று நாலு நண்பர்கள் தீர்மானிக்கிறார்கள். ‘சின்னக் கடைத் தெருவில் இருக்கும் ஐயர் கடை சாப்பாடுதான் மிக பிரமாதம் என்று கோடி வீட்டு குப்புசாமி சொன்னார். ‘இல்லை, இல்லை, பெரிய கடைத் தெருவில் உள்ள கோபி ஐயங்கார் மெஸ்-ஸில்தான் சாப்பாடு மிகப் பிரமாதம்’ என்று மாடி வீட்டு மாடசாமி சொல்கிறார். ‘பஸ் நிலையம் அருகில் உள்ள உடுப்பி பவன் சாப்பாடு தேவாமிர்தம்’ என்று அடுத்தவீட்டு அங்கு சாமி சொல்கிறார். உங்களுக்கு உலகமே தெரியவில்லையே! நான் நீங்கள் சொன்ன எல்லாக் கடைகளிலும் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ரயில் நிலையம் அருகில் உள்ள ராமராஜ் பவன் தான் உலகிலேயே சிறந்தது என்று மேஜையில் அடித்துப் பேசினார் எதிர்வீட்டு எத்திராஜ். எல்லோரும் அவர் கூறியபடியே சென்று சாப்பிட்டனர்.

இனி இந்த ஹோட்டலைத் தவிர வேறு எதற்கும் போகக் கூடாது என்று அன்று இரவே முடிவு எடுத்தனர். அவ்வளவு நல்ல சாப்பாடு! மறுநாள் முதல் அவரவர் அலுவலகத்தில் இந்தச் செய்தியைப் பரப்பினர். அன்றுமுதல் ராமராஜ் பவனில் உட்கார இடம் கிடைக்காத கூட்டம்!!

இதே போல ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகள் நம்மிடம் கெஞ்சுகின்றனர். தயவு செய்து நான் சொல்லுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன். ப்ளீஸ்! ப்ளீஸ்! ஒருமுறை இந்த சாப்பாட்டை அனுபவித்துவிட்டால் திரும்பி வீட்டிற்குப் போக மனம் வராமல் ‘வீடுபேறு’ அடைய ஓடுவீர்கள் என்று பாடுகின்றனர். உணவு விடுதிச் சாப்பாட்டில் கிடைத்தது எல்லாம் சிற்றின்பம். நாங்கள் சொல்லுவதோ பேரின்பம் என்று சொல்லி நமக்கு ‘’இன்னும் புரியவில்லையே’’– என்று கதறுகின்றனர். இருந்தபோதிலும் நாம் கேட்பதாகத் தெரியவில்லை. இதோ பாருங்கள்:–

தாயுமானவர் அறைகூவல்:–
காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு
ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை
தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!

மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் போன போக்கில் போய்’ நேரத்தை வீண் அடிப்பதில் என்ன பயன்? எல்லை இலாத கருணயுடைய அன்பு நிறைந்த கடவுளின் அருளைப் பெற அருமையான மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. வாருங்கள் ! என்னுடன் சேருங்கள் ! நாம் எல்லோரும் சேர்ந்து பயணம் செய்வோம் என்று தாயுமானவர் கூப்பிடுகிறார்.

chaitanyam
Picture of Sri Chaitanya

நம்மாழ்வார் துடிப்பு !
கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்; தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி, பரந்து திரிகின்றனவே.
நம்மாழ்வார் திருவாய்மொழி

நம்மாழ்வாரோ எனில் “கண்டுவிட்டேன், இது போன்ற இனிய காட்சி உலகிலேயே கிடையாது எல்லோரும் ஓடி வாருங்கள் என்று கூத்தாடுகிறார். வண்டுகள் மொய்க்கும் துளசிமாலை அணிந்த மாதவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி அவருக்கு!

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்!

பெரியாழ்வார் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று உலக அற்புதம் ஒன்றைக் கண்டு பிடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடுகிறார். அவர் பார்த்த அற்புதத்தை நாமும் பலமுறை பல இடங்களில் பார்த்திருக்கிறாம். ஆனால் கண்டும் காணவில்லை. அதனால் அவர் போல பூரிப்பு அடையவில்லை!. அனுபவித்தவர்க்கல்லவா அதன் அருமை பெருமைகள் தெரியும்! கண்ணன் ஊதிய புல்லங்குழல் ஓசை செவிக்கு உணவாகக் கிடைத்தது. அதை அருந்த வானவர் (தேவர்கள்) எல்லாம் வந்துவிட்டனர் என்கிறார்.

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்!
பூணிமேய்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து அணையான் குழல் ஊத
அமரலோகத்தளவும் சென்றிசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி,
செவியுள் நாவின் சுவைகொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.
-பெரியாழ்வார்

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்,
திருமூலர் ஒருபொதுவுடைமைவாதி. கிடைத்ததை எல்லோருக்கும் சமமாகக் கொடுக்கவேண்டும் என்று கருதி நான் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லி பேரின்பம் அடைந்தேன். அது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று பாடுகிறார்.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்,
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்,
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
—————திருமூலர், திருமந்திரம்

appar1
Image of Appar

மனிதர்காள் இங்கே வாருங்கள் !! ஒன்று சொல்லுகிறேன்!!!

அப்பர் பெருமான் மிகவும் தெளிவாகப் புரியும்படி சொல்லுகிறார். ஏ, மனிதர்களே இங்கே வாருங்கள். ஒன்றே ஒன்றுதான் சொல்லப்போகிறேன். நான் மிக மிக இனிப்பான மாம்பழம் தந்தால் மாம்பழம் சாப்பிடுவீர்களா? சரி, நெய் மணத்துடன் இருக்கும் செவ்வாழைப் பழம் தருகிறேன் சாப்பிடுவீர்களா? இதைக் கேட்ட கூட்டம் ஆமாம் ,சாப்பிடுவோம் என்றது. இதைவிட இனிப்பான இறையருள் என்னும் கனி தருகிறேன். வாருங்கள் என்கிறார்.

மனிதர்காள் இங்கேவம் ஒன்று சொல்லுகேன்
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசன் னும் கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே.
—————திருக்குறுந்தொகை, 5ஆம் திருமுறை, அப்பர்.

இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்னரும் புரியவில்லை என்றால் நாம் எல்லோரும் நாடகத்திலோ திரைப்பத்திலோ நடிக்கத்தான் தகுதி உடையவர்கள். அதாவது நாம் புரிந்தும் புரியாதது போல நாடகம் ஆடுகிறோம்!!

contact swami_48@yahoo.com

தியானத்துக்கு மிகவும் அவசியம் பூனை!!!

SONY DSC

மூட நம்பிக்கைகள் தோன்றுவது எப்படி? 4 கதைகள்
Post No. 978 ; Date 14th April 2014
By London Swaminathan

பேராசிரியர் ராமானுஜ சீனிவாசன் இந்திய கலாசாரம் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றில் இசையில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தது பற்றி நான்கு கதைகள் சொல்லுகிறார். இவை இசைக்கு மட்டுமின்றி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

முதல் கதை: தியானத்துக்கு மிகவும் அவசியம் பூனை!!!

ஒரு ஊரில் ஒரு குரு இருந்தார். ஒரு நாள் அவருடைய ஆஸ்ரமத்தில் திடீரென்று ஒரு பூனை புகுந்தது. அது நோய்வாய்ப்பட்ட பூனை. ஆகையால் குரு அதை அன்புடன் கவனித்து நோயைக் குணப்படுத்தினார். இப்போது பூனைக்கு துணிச்சல் வந்துவிட்டது. குருநாதர் தியானம் செய்கையில் கூட அவர் மடியில் உட்கார்ந்து கொஞ்சத் துவங்கியது.

இந்த அன்புத் தொல்லை பொறுக்காததால், பூனையை குருநாதர் தினமும் தனது கட்டில் காலில் கட்டிப் போட்டுவிட்டு தியானம் செய்யத் துவங்கினார். குருநாதரின் சீடர்கள் இதை உன்னிப்பாகக் கவனித்தனர். நாளடைவில் குருநாதருக்கு வயதாகி இறந்தும் போனார்.

ஆஸ்ரமத்தின் பிரதம சீடர் குருநாதர் பதவிக்கு வந்தார். அவரும் பூனையின் கட்டில் கால் ‘’மர்மத்தை’’ அறியாமல் தினமும் அதைக் கட்டிலின் காலில் கட்டிப் போட்டுவிட்டுத் தியானம் செய்யத் துவங்கினார். நாளாக நாளாக எல்லோரும், தியானத்தைவிட பூனையைக் கட்டில் காலில் கட்டிப் போடும் சடங்கை பயபக்தியுடன் செய்யத் துவங்கினர். அந்தப் பூனைக்கு வயதாகியதால் அது இயற்கை மரணம் எய்தியது. உடனே புது பூனை ஒன்றை வாங்கி கட்டில் காலில் கட்டத் துவங்கிவிட்டனர்!
பிரதம சீடரும் இறந்தவுடன் சீடர்கள் ஆள் ஆளுக்கு ஒரு பூனையை வாங்கி கட்டில் காலில் கட்டத் துவங்கினர்! இப்படியாக தியானத்தைவிட பூனை முதலிடம் பெற்றது!

Tambourine_21787

கதை 2: ஆஹிரி பாடினால் சாப்பாடு கிடைக்காது!!!

ஆஹிரி ராகத்தைப் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று கர்நாடக சங்கீத உலகில் ஒரு மூட நம்பிக்கை உண்டு! இதற்கும் ஒரு சம்பவமே காரணம். அந்தக் காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போவோர் ஒரு கம்பின் நுனியில் கட்டுச் சாத மூட்டையைக் கட்டிக் கொண்டு அதைத் தோளில் சார்த்திக்கொண்டு வழிநடைப் பயணம் போவார்கள். ஒரு பாகவதர் இப்படிப் போகும் போது களைப்பால் அந்தக் கம்பை மரத்தில் சார்த்திவிட்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார். பல ராகங்கள் பாடினார். அவர் தன்னை மறந்து பாடிக்கொண்டே இருந்ததில் கம்பு சூடாகி திடீரென்று எகிரிக் குதித்தது. அப்போது அவர் ஆஹிரி ராகம் பாடிக்கொண்டிருந்தார். எட்ட முடியாத உயரத்தில் சோற்று மூட்டை இருந்தது. இந்த சம்பவத்தை அவர் சாதாரணமாக எல்லோரிடமும் கூறிச் சிரித்துக் கொண்டிருப்பார். மக்கள் அதிலிருந்து ஆஹிரி ராகம் என்ற விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , ஆஹிரி ராகம் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று வதந்தி கிளப்பினர். அது மூட நம்பிக்கையாக வளர்ந்து விட்டது!!

good tabla

கதை 3: சாவேரி பாடினால் சோகம் வரும்!!!

நான் ஒரு சங்கீதப் போட்டியை வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். யார் மிகவும் நன்றாகப் பாடினாரோ அவருக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை! போட்டியின் நீதிபதிகளாக வந்தவர்களில் ஒருவர் மிகவும் பிரபலமான சங்கீத நிபுணர்! அவர் நடுவராக இருந்தும் நன்றாகப் பாடியவருக்கு பரிசு கிடைக்காதது எனக்கும் ஆச்சர்யத்தைத் தந்தது. இறுதியில் அந்த நடுவர் பேச எழுந்தார். “ஒருவர் மிக நன்றாகப் பாடினார். ஆனால் ராகமாலிகையில் ஒரு பாட்டுப் பாடியதில் சாவேரி ராகத்தைக் கடைசியாக வைத்துவிட்டார். இது தவறு. கடைசியாகப் பாடவேண்டிய ராகங்கள் மங்களகரமான மத்யமாவதி, சௌராஷ்டிரா ராகங்கள் ஆகும். இதை அவர் பின்பற்றவில்லை என்றார். இதைக் கேட்கவே எனக்கு விநோதமாக இருந்தது. இப்படி ஒரு விதியும் கிடையாது என்பது பழைய பாடகர்களின் பாடல் வரிசையைப் பார்த்தாலேயே தெரியும்.

Musical Instruments3

கதை 4: கணபதியா? ஹம்சத்வனியா? எது முக்கியம்?

இன்னொரு கச்சேரிக்குப் போயிருந்தேன். அவர் ஹம்சத்வனியில் ‘ரகுநாயகா’ கீர்த்தனையில் துவங்கி ராமன் புகழ் பாடினார். அந்தக் காலத்தில் எல்லோரும் பிள்ளையார் மீது முத்துசுவாமி தீட்சிதர் பாடிய ஹம்சத்வனி க்ருதியான வாதாபி கணபதிம் பாடி கச்சேரி யைத் துவக்குவர். இதற்குக் காரணம் கணபதி பிரார்த்தனையுடன் எந்த ஒரு செயலையும் துவங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் ஆகும். அது மட்டுமல்ல. கம்பீரமான ஹம்சத்வனியும் அந்த சபையில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும்..
இது போல ஹம்சத்வனி ராகத்தில் கச்சேரியைத் துவக்காத சிலருடன் நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் கணபதியை மறந்துவிட்டு ஹம்சத்வனிதான் முக்கியம் என்று நினைத்தது தெரியவந்தது. எனக்கு இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!!
மேற்கூறிய விஷயங்கள் பேராசிரியர் சீனிவாசன் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இருந்து நான் தமிழில் மொழி பெயர்த்தேன்.

trimurti

மூட நம்பிக்கைகள் உருவாவது ஏன்?

1. எல்லோரும் செய்கிறார்கள் என்று நாமும் செய்வது.
2. ஒரு செயலின் காரணத்தை முன்னோர்கள் சொல்லாமல் மறைப்பது. அல்லது அந்தப் பெரியோர்களிடம் நாம் பயந்துகொண்டு காரணத்தை வினவாமல் விடுவது.
3. இப்படிச் செய்யாவிடில் ஏதேனும் எதிரிடை விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுவது அல்லது நாலு பேர் நம்மை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவது.
4. யாரோ ஒரு பெரியவர் செய்த செயலை நாமாகத் தவறுதலாகப் புரிந்துகொண்டு பின்பற்றுவது அல்லது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல தவறாக விளக்கம் கொடுப்பது.

Musical Instruments

மூட நம்பிக்கை இல்லாத துறையோ இடமோ இல்லை. வெளிநாடுகளில் வாழும் பெரிய பெரிய எழுத்தாளர்களும் நடிகர், நடிகைகளும், அரசியல்வாதிகளும் விளையாட்டு வீரர்களும்— எண், வர்ணம், தேதி, கிழமை—- ஆகியன பற்றிப் பலவகையான மூட நம்பிக்கைகளை வைத்திருப்பது அவ்வப்போது பத்திரிக்கை பேட்டிகளில் வெளி வருகிறது!!!

contact swami_48@yahoo.com

‘India – Most Important Country for Students of Religion’

13 p

Compiled by London Swaminathan
Post No. 974 Date:- 12th April 2014

Professor Moriz Winternitz (1863—1937) was an Austrian Orientalist. He assisted Max Muller in the preparation of the second edition of the Rig Veda.

PROFESSOR WINTERNITZ wrote in 1916:—

“ India remains still the most important country on earth for the student of religion. In India we meet with all forms religious thought and feeling which we find on earth, and that not only at different times but also all together even today. Here we find the most primitive belief in ancestral Spirits, in Demons and Nature Deities with a primeval imageless sacrificial cult. Here also is a polytheism passing all limits, with the most riotous idolatry, temple cult, pilgrimages and so forth. And, side by side with and beyond these crudest forms of religious life, we find what is deepest and most abstract of what religious thinkers of all times have ever thought about the deity, the noblest pantheistic and the purest monotheistic conceptions.

MORIZ_WINTERNITZ_1863-1937

In India we also find a priest craft as nowhere else on earth side by side with a religious tolerance which lets sect after sect, with the most wonderful saints, exist together. Here there were and still are forest recluses, ascetics and mendicant monks, to whom the renunciation of this world is really and truly a matter of deepest sincerity, and together with them idle mendicant monks, vain fools and hypocrites, to whom religion is only a cloak for selfish pursuits for the gratification of greed for money, of greed for fame or the hankering after power.

From India also a powerful stream of religious ideas has poured forth over the West , and especially over the East, has flooded central Asia , has spread over Tibet, china, Korea and Japan, and has trickled through the further East down to the remotest islands of the East Indian Archipelago. And finally, in India as well as outside India, Indian religions have often mixed with Christianity and with Islam, now giving and now taking.

poets of india

Indeed, sufficient reasons exist to welcome every work which contributes in one way or other to a richer, or deeper or wider knowledge of Indian religion. I would like, therefore, to draw attention in what follows to recently published works of this nature.

There are the exceedingly meritorious publications of Arthur Avalon with reference to the literature of the Tantras………………..

Source: Page 117 of Arthur Avalon’s ‘Shakti and Shakta’

contact swami_48@yahoo.com

இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை

lord-rama

இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 971; தேதி- 11th April 2014

கம்ப ராமாயண கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

பொருள்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை முடிவேயில்லாத விளையாட்டாகச் செய்யும் தலைவன் எவனோ அவன் காலில் சரணடைகின்றேன்.

மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான். அடடா! ராமன் கையினால் மரணம் சம்பவித்தால் எனக்கு நேரடி மோட்சம்தான் என்று மகிழ்கிறான்.

இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.

lord-rama-43a

சிவபெருமான் கூற்று
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு
ஈஸ்வரோ உவாச

“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”

காந்திக்குப் பிடித்த ரகுபதி ரகவ ராஜா ராம்!
மஹாத்மா காந்திஜி, துப்பாக்கி ரவையால் சுடப்பட்டு உயிர் இழந்த போது அவர் கூறிய கடைசி சொல் ‘’ஹே ராம்!’’ ஒருவர் வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தால்தான் கடைசி நிமிடத்தில் அவன் பெயர் நினைவுக்கு வரும்! அவர் எல்லா பஜனைகளிலும் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பாடியதோடு மட்டுமின்றி, உலகிற்கே அப்பாட்டை அறிமுகம் செய்தார்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தார். 21 ஆண்டுகளில் 96 கோடி முறை அவர் ராம நாமம் சொன்னதாக அவர் வரலாறு கூறுகிறது. வாயினால் சொல்லும் வேகத்தைவிட மனதினால் கூடுதலாகச் சொல்லமுடியும்.

maha mantra

தர்ப்பண மந்திரம்
பிராமணர்கள் செய்யும் தர்ப்பணத்தில் க்ஷத்ரிய அரசனான ராமனின் பெயரைச் சொல்லுகிறார்கள்:
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:
ஸ்ரீ ராம ராம ராம

பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.
மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.

இராமனுடைய பெயரை மூன்று முறை சொன்னவுடனேயே எல்லாப் பாவங்களும் அகன்று பரிசுத்தனாகி விடுவான்.
நாமும் ராம நாமம் சொல்லி பரிசுத்தம் அடைவோம்!!

rama shantham

சுவாமி விவேகாநந்தர் சொற்பொழிவு!

ஆங்கிலத்தில் சுவாமி விவேகாநந்தர் பேசியதை தமிழில் தருகிறேன். குறை இருப்பின், அது எனது மொழி பெயர்ப்பின் பிழையே அன்றி அவர் குற்றம் ஆகாது.

“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

சீதா தேவி பற்றி நான் என்ன சொல்ல! அடடா!! அது போன்ற ஒரு சீதையைக் காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் —- இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் —– வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும் — நீங்கள் இன்னும் ஒரு சீதையைக் காண்பது அரிது! அவள் ஒப்பற்றவள். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய பெண்ணைப் படைக்க முடியும். இராமர்கள் பலர் இருக்க முடியும். ஆனால் ஒரு சீதாதேவிக்கு மேல் காண முடியாது”.

rama color

— சுவாமி விவேகாநந்தரின் சொற்பொழிவுகள். ஆங்கிலத்திலும் கீழே கொடுத்துள்ளேன். ஆங்கில வாசகம் அவர் சொன்னது:–

“Rama, the ancient idol of heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all the ideal king, this Rama has been presented before us by the great sage Valmiki. No language can be purer, none chaste, none more beautiful, and at the same time simpler, than the language in which the great poet has depicted the life of Rama. And what to speak of Sita? You may exhaust the literature of the world that is past, and I may assure you that you will have to exhaust the literature of the world of the future, before finding another Sita. Sita is unique; that character was depicted once and for all. There may have been several Ramas, perhaps, but never more than one Sita!”
—-Swami Vivekananda

Contact swami_48@yahoo.com

Man Who ‘Recited’ 640 Million Names!

goddess-parvati-

Written by London Swaminathan
Post No. 970; Dated 10th April 2014

Hindus always think about big numbers. ‘Aim High’ was their motto. Looking at the tallest peak in the world, they thought only lofty things. From the Rig Veda, the oldest scripture in the world, we read hymns with big decimal numbers. Their Yuga calculation and the life span of one Manu or one Brahma give us mind boggling numbers. This shows that they were not primitive nomads, but great mathematicians. Later scriptures support this view. Here is one more amazing figure of 640 million (64 Crore) women in another hymn!!

Bhaskara Raya (1690 – 1785) was a great devotee of Mother Goddess. Born In Maharashtra and educated at Kasi (Varanasi), he attained fame in Tamil Nadu by writing a commentary to the Lalita Sahasranamam. It is a monumental work. He wrote and explained the meaning of all the 1008 names of goddess with great insight and scholarship. Normally a person cannot write such a work unless there is divine grace. His life shows he was a blessed one.

sri_chakra400

Bhaskara’s father Gambira Rayar was a scholar and he taught him a Mantra on Sarasvati which helped him to get the gift of the gab. He mastered many subjects in his early age under Narasimhananda nath in Varanasi. But Gangadhara Vajpayee is the one who taught him Gauda sastras. He learnt Atharvan Veda and started giving discourses about Devi Mahatmiya. It is one of the Upa Puranas that describes the greatness of Goddess (Devi in Sanskrit).

He married Anandhi and later Parvati. He initiated his first wife into the worship of the goddess. She also mastered the subject and was instrumental in building a temple for her husband after his death.

Bhaskararaya, before migrating to Tamil Nadu at the invitation of Marathi King of Thanjavur, went to Gujarat and other places and won many awards. He defeated many scholars in debates. Marathi king of Thajavur (Tamil Nadu) gifted him a village near Thiruvalankadu and he died at the ripe old age in Thiruvidaimarudur. The village that was given to him is called Bhaskararayapuram.

goddess-kamakshi-stotram

Maha Chathushashti Koti Gana Sevitha (worshipped by 640 million)

A few miracles are also attributed to him. When he was living in the holy city of Kasi, some scholars who were jealous or who don’t like his way of Tantrik worship, challenged him in the public. They wanted to tarnish his image. Bhaskararaya wanted to settle the score once and for all and so invited them for a Yaga he performed. His opponents who were waiting for an opportunity attended the fire ceremony (Yaga). They tried to trap him by asking some unanswerable questions. One of the names in the list of 1008 names, describes the Goddess surrounded 640 million Yoginis (devoted women assistants). The scholars asked him to explain the term .He explained it immediately. Then they asked him to recite the names of all the 640 million Yoginis and explain their appearance, origin and history. With the help of his intuition he got ready and asked them to copy whatever he says. The challengers were ready with pen and paper (in those days it was palm leaves and ink or stylus). He kept on giving names one after another with minute descriptions. They realised his greatness before long and fell at his feet. Another enlightened soul in the crowd, Kunkumananda Swami, warned all the challengers not to test him. The reason was that he could see the goddess herself sitting on his shoulder reciting the 640 million names.

goddess-madurai-meenakshi-picture

The Lalita Sahasranamam commentary known as “Sowbagya Sagaram” is an authority on Goddess Worship. In addition to his monumental commentary on the 1008 names of the goddess, he wrote some Sanskrit books. It is said that he was inspired by goddess herself to write the commentary. The commentary is divided into twelve parts named after 12 aspects of the sun. He said in his introduction that this commentary will be appreciated by all from Gandhara (Afghanistan) in the West to Kamarupa (Assam) in the East and Kedar (Himalayas) in the North to Ram Setu in the South. He knew all the secrets and deep mysteries of Mantra sastras.

Another miracle attributed to him was burning a Danda (holy stick of another saint) of an ascetic. The saffron clad ascetic used to go to Shiva temple through the street where Bhaskararaya was living. Everyone in the street fell at the feet of that ascetic except Bhaskara. One day in the presence of ascetic someone questioned his behaviour. Then he asked the ascetic to place his Danda and his saffron cloth on the ground. Holy men should carry the holy stick whenever they go out. As soon as Bhaskara prostrated before the cloth and stick to pay his respects, they were in flames. Then he told the crowd that this was the reason he did not prostrate before the ascetic. It was very clear that he was more powerful than the ascetic.
His commentary stands as a proof for his immense scholarship. From North to South it is the Veda for all the Devi Upasakas (Worshippers of Mother Goddess).

SRECHAKRA

Contact swami_48@yahoo.com

Rama’s Trick! Three Stories!!!

34 Hazara Rama Temple Ramayana Carvings

Rama sculptures, Hazara Temple,Karnataka.

Compiled by London swaminathan
Post No 959 dated 6th April 2014.

1.See God Everywhere

During the fight between Rama and Ravana, there came a time when all the monkeys who formed the army of Rama were attacked by the Rakshasas with such a terrible destructive force that their condition was most precarious. Sri Rama seeing the pain and panic of his monkeys, decided to do something to save the situation. By his divine power, he suddenly changed the combatants on both the sides into His own form. All the monkeys of Sri Ram’s army and all the Rakshasas of Ravana’s army now appeared as Sri Rama himself.

Thus each monkey saw the other monkey on the battlefield as Lord Sri Rama and so embraced him and danced with joy whereas every Rakshasa saw the other Rakshasa as Sri Rama – his avowed enemy. So, they fought ferociously among themselves in the battlefield and killed one another.

If, like his monkeys, you also see Rama everywhere with the eye of devotion and faith, fear will vanish from you. You will have nothing but love flowing from your hearts. You will love all alike and swim in an ocean of bliss.

rama,hampi
Ramayana sculptures in Hampi, Karnataka.

2.Kings Secret was out

There lived a king and a queen. The queen was a very devoted woman, engaged most of the time in the worship of God and repetition of His name. She was happy in every way except in one thing, namely, that her husband was not devoted to god. She wished so much that her husband should also have faith and devotion. She never saw sitting him for prayers or repeating God’s name.

Once when the queen woke up at midnight from sleep, she heard the king, who was sleeping by her side, uttering “Ram, Ram” in his sleep. This gave her a pleasant surprise. To hear her husband repeating God’s name even in sleep was not an ordinary joy to her. To celebrate the great event, she arranged for a festival and grand feast the next day. When the king found the great preparations going on for an unusual festival, he enquired of the queen what the matter was.

The queen replied that it was a very important day in her life as she heard him uttering God’s name the previous night in his sleep. Hearing this, the king was taken aback. He was extremely sorry that the spiritual discipline, which he had carried on so long in secret, was then revealed to others.

indonesia rama conf

Muslim Country Indonesia issued stamps on Ramayana characters.

3.The Devil and the Pole

A man wanted to propitiate a devil to make it do whatever he wanted. So he did the necessary ‘Sadhana’ (spiritual practice) to that end and by the power of Mantra (magic spell), he was able to summon the devil before him. The devil said that it would obey his commands, but on one condition: “If at any time you do not give me work, I will devour you. You must keep me engaged all the twenty- four hours”. The man agreed.

He immediately gave an order to build a palace for him. To his great wonder, the palace was built in no time. Then he gave an order for a long road to be made ready. That work was also executed in a short time. Next minute, the devil was standing before him, asking for more work. He had no time even to think. He gave an order to build a big town. It was ready within ten minutes. Now the man was perplexed and afraid. He did not know what orders to give. If he did not give any work, he would be eaten by the devil.

He hastened to a holy man and asked for advice. The holy man suggested that he might get a bamboo pole, plant it in the ground and ask the devil to climb it up and down until further orders. This meant no rest whatever for the devil. Finally it got disgusted and ran away.

Now , in your case, Ram Mantra is the pole and the ego is the evil that teases you. Ask him to go up and down the pole repeatedly and he will soon get tired and run away. Ramnam ( Ram’s Name) is given to you in order to subdue the ego. The ego must be made to disappear by its own endeavour.

The above stories are taken from the book “STORIES AS TOLD BY SWAMI RAMDAS”, Published for Anandashram by Bharatiya Vidya Bhavan, Chowpatty, Bombay 7, year 1969.
rama thai

Rama in Thailand.

Contact swami_48@yahoo.com