உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772)

cartoon-ladder-5

Compiled by london swaminathan

 

Date: 1 May 2016

 

Post No. 2772

 

Time uploaded in London :– 21-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

HitchYourWagonToAStar-jpg

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து ‘Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

 

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

 

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

 

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 

நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

2lotus bloom

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

 

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

 

எனது முந்தைய கட்டுரைகள்:–

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் …(31 Mar 2012) என்ற பதிவிலும், புறநானூற்றில் பகவத் கீதை- பகுதி 2-லும் (31-3-2012) இக்கருத்துகளை முன்னரே தொட்டுக்காட்டி இருக்கிறேன்

 

–சுபம்–

 

அந்தரத்தில் நிற்பதை அனைவருமே கற்கலாம்!

d meade2

By ச.நாகராஜன்
Post no. 1356; dated 19th October 2014
This article was written by my brother S Nagarajan for Tamil Magazine Bhagya:swami

‘மனம் ஒரு ட்ரங்க் பெட்டி போல! அது நன்கு பேக் செய்யப்பட்டிருந்தால் (well packed) அதனுள் எல்லாமே அடங்கி விடும். அது தவறாக பேக் செய்யப்பட்டிருந்தால் ( ill packed) அது ஒன்றுமில்லாததற்குச் சமம். – அகஸ்டஸ் வில்லியம் ஹேர்

வட அயர்லாந்தின் பிரதானமான நகரம் (Belfast) பெல்ஃபாஸ்ட்.. அதில் இருக்கும் விக்டோரியா ஸ்குயரில் 2013ஆம் ஆண்டில் டேவிட் மீட் (David Meade) என்பவர் நிகழ்த்திய சாகஸம் உலகையே வியப்பில் ஆழ்த்தி விட்டது. 29 வயதே ஆன மீட் விக்டோரியா ஸ்குயரில் உள்ள கட்டிடத்தின் இரண்டாம் மாடியின் சுவரிலிருந்து 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இதைப் பார்த்துத் திகைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.
இப்படி செய்யப்படும் நிகழ்ச்சி இதுவே உலகில் முதல் தடவை எனச் சொல்கிறார் மீட். காலை எட்டு மணிக்கு அந்தரத்தில் தொங்குவதை ஆரம்பித்த மீட் பல மணி நேரம் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தார்.

இப்படி அந்தரத்தில் நிற்பது எகிப்தில் உள்ள பழைய கால பிரமிடுகளில் நிகழ்த்தப்பட்ட ஒன்று. ஆனால் அங்கே பூமிக்கு மேலே 3 அடி உயரத்தில் மட்டுமே நின்று காண்பிப்பர். இந்திய யோகிகளும் தரைக்குச் சிறிது மேலே அந்தரத்தில் மிதப்பது சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. மீடோ 30 அடி உயரத்தில் இருந்தார்.

david meade1

இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்குப் பின்னர் மீட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானார். பிபிசி இவரது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. மேக் பிலீவ் (Make Believe)என்ற இவரது தொடர் மிகவும் பிரசித்தமான ஒன்று.

நிஜமாகவே இதைச் செய்கிறேனா அல்லது செய்வது போல நம்ப வைக்கிறேனா என்று மக்கள் மனதில் கேட்கும் கேள்வியின் அடிப்படையிலேயே எனது தொடரின் தலைப்பு அமைக்கப்பட்டது என்கிறார் அவர்.

உலகெங்கிலிருமிருந்து எனது நிகழ்ச்சிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு என்னை பிரமிக்க வைக்கிறது என்கிறார் அவர்.

அயர்லாந்தில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றி சொற்பொழிவுகளை ஆற்றி வரும் மீட் ஒரு ஆராய்ச்சியாலரும் கூட. வாடிக்கையாளர் எப்படிப் பொருள்களை வாங்குகின்றனர், அதில் என்ன சைக்காலஜி அடங்கி இருக்கிறது என்பதைப் பற்றி நிறைய ஆய்வு நடத்தி உள்ள அவர் கூட்டமாகச் சேர்ந்து விட்டால் அந்தக் கூட்டத்தில் ஏற்படும் மக்களின் மனப்பான்மை பற்றியும் ஆராய்ச்சிகளை நடத்தி உள்ளார்.

இதில் அவரது மெண்டலிஸம் (mentalism) வேறு சேர்ந்து விட்டது.அவர் பேசுகின்ற இடங்களில் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும். மெண்டலிஸம் என்பது மாஜிக்கை விட வேறுபட்ட ஒன்று. சாதாரணமாக மாஜிக் நிகழ்த்துவோர் செய்யும் ஸ்டேஜ் வித்தைகளை மெண்டலிஸ்ட் செய்வதில்லை. மனத்தை மயங்க வைக்கும் வித்தைகளையே அவர்கள் காண்பிப்பர்.

உங்கள் கார்டில் உள்ள பின் கோட் நம்பரை நீங்கள் படித்தால் உங்கள் மாமியாரின் பெயரை அவர் கூறி விடுவார்! அல்லது அவரது பிறந்த தேதியைச் சரியாகக் கூறி விடுவார்! இது சாத்தியமா, என்ன! அன்றாடம் செய்து காண்பிப்பதால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்!

புவி ஈர்ப்பு விசையை எதிர்த்துச் செய்யப்படும் அந்தரத்தில் மிதக்கும் சாகஸ செயலுக்கு விஞ்ஞானம் என்ன பதில் சொல்கிறது என்பதே அனைவரது கேள்வியும். இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கும் போதெல்லாம், புன்முறுவலுடன், “ அது என்னுடனேயே ரகசியமாக இருக்கட்டும்” என்கிறார் மீட்.

d meade3

யூரி கெல்லர், ஹெய்ம் கோல்டன்பெர்க், டெர்ரன் ப்ரவுன், ஜேம்ஸ் ராண்டி, அல் கொரான், ரிச்சர்ட் ஆஸ்டர்லிண்ட், மார்க் பால் உள்ளிட்ட ஏராளமானோர் மனத்தின் மூலம் மற்றவரைக் கட்டுப்படுத்தி மனோசக்தி மூலம் செய்யும் ஏராளமான சாகஸ செயல்களைச் செய்து காட்டி உலகையே வியப்பில் ஆழ்த்தினர், மீட் செய்யும் மனோ வித்தைகளைப் பார்ப்பவர்கள் அவர் ஜனங்களின் மனதைக் கட்டுப்படுத்தி விடுகிறார் என ஒரு மனதாகச் சொல்கின்றனர். இதனால் வட அயர்லாந்து ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக பிபிசிக்காக ஜனத்திரளைக் கட்டுப்படுத்தும் ஒரு டாகுமெண்டரி எடுக்கவும் அவர் ஒப்புக் கொண்டார். இதற்காக ஒரு பேஸ்கட்பால் குழுவை அவர் தேர்ந்தெடுத்து விளையாட்டு வீர்ர்களின் மனதைக் கட்டுப்படுத்தி விளையாட வைத்தார், பேஸ்கட்பால் விளையாடும் இரண்டு குழுவினருள் ஒரு குழுவினரை அவர்கள் விசேஷமானவர்கள், நிச்சயம் ஜெயிக்க வல்லவர்கள் என்ற நம்பிக்கையை விதைக்க அவர்கள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.

பாஸிடிவ் எண்ணங்கள் எப்போதுமே நல்ல பலன்களைத் தரும் என்கிறார் மீட். பெரிய நிறுவனங்களை அணுகி அவர்களிடம் வேலை பார்ப்போரிடம் அதிகத் திறமையை எப்படி வளர்ப்பது என்பதையும் அவர் சொல்லித் தருகிறார். பொருள்களை எப்படி அடுக்கி வைப்பது என்பதில் கூட வாடிக்கையாளரைக் கவரும் ஒரு பெரும் ஆற்றல் உள்ளது என்பதை அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.

தனது ஆற்றல்கள் எல்லாம் தொடர்ந்த பயிற்சியின் மூலம் வந்தவை தான் என்று கூறும் அவர், இது அனைவரும் பெறக் கூடிய ஒன்று தான் என்றும் விஞ்ஞானத்தை விஞ்சிய விஷயம் எதுவும் இல்லை என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

எது எப்படி ஆனாலும் ஆகாயத்தில் அந்தரத்தில் தொங்குவதை எத்தனை பேரால் செய்ய முடியும்! யோசித்துப் பார்த்தால் மீட் ஒருவரால் தான் முடிகிறது. அதனால் தான் அவரை உலகம் வியப்புடன் பாராட்டுகிறது!

d meade4
Images of David Meade

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

விஞ்ஞானிகளுள் ஏராளமானோருக்கு தீவிரமான கடவுள் நம்பிக்கை உண்டு.இவர்களுள் ஒருவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான சார்லஸ் டவுன்ஸ் (Charles Townes). டி.டிமிட்ரோவ் என்பவர் அவரிடம்,”உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?கடவுள் இருக்கிறாரா” என்று கேட்டார். அவருக்கு டவுன்ஸ் கொடுத்த பதில் இது:” நான் கடவுள் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறேன்.உள்ளுணர்வு, என்னுடைய பார்வைகள், தர்க்கம் மற்றும் அறிவியல் ரீதியிலான அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கடவுள் இருப்பதை நம்புகிறேன்.” (“I strongly believe in the existence of God, based on intuition, observations, logic, and also scientific knowledge.”) .
டவுன்ஸை ஆன்மீகவாதிகளும் அறிவியல் அறிஞர்களும் பாராட்டுகின்றனர்!

contact swami_48@yahoo.com

****************

ஓஷோ கூறிய பக்கா திருடன் கதை!

bigstock-Burglar-8487742

ச.நாகராஜன்
Post No 1221; Dated 8th August 2014

ஜென் கதைகளில் ஒன்று!

வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது? ஜென் குருமார்கள் இதற்கு கதை மூலம் பதில் கூறியுள்ளனர். ஜென் பிரிவில் வழங்கி வரும் இதை ஓஷோ கூறியுள்ளார். கதை இது தான்:

ஜப்பானில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். அவன் திருடுவதில் நிபுணன் அவனை யாராலும் பிடிக்க முடியவில்லை.நாடு முழுவதும் அவன் பெயர் பிரசித்தமாகி விட்டது. ராஜாவின் பொக்கிஷத்திலிருந்தே அவன் திருடி விட்டான். தான் வந்ததற்கு அடையாளத்தையும் அவன் விட்டுச் செல்வதால் அவனது திருட்டுகள் பிரபலமாயின. மக்கள் அவனை வியந்து பாராட்டி நேசிக்கவே தொடங்கி விட்டனர் எந்த திருட்டு நடந்தாலும் என் வீட்டிற்கு பக்காத் திருடன் நேற்று வந்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறும் நிலையை அவன் உருவாக்கி விட்டான்.

ஆனால் காலம் சென்றது. அவனுக்கும் வயதாகி விட்டது. அவனது மகன் ஒரு நாள் அவனிடம்,’ தந்தையே! உங்களுக்கு மிகவும் வயதாகி விட்டது. உங்கள் கலையை எனக்குச் சற்று கற்பியுங்களேன்” என்று வேண்டிக் கொண்டான்.

பக்காத் திருடன் தன் மகனை அன்புடன் பார்த்து,” சரி, மகனே, இன்று இரவு என்னுடன் வா! ஏனென்றால் இது சொல்லிக் கொடுத்து வருவதில்லை. தானே வர வேண்டியது! நீயே என்னைப் பார்த்தால் கலையை பிடித்துக் கொள்ளலாம். கற்பிக்க முடியாத ஒன்று இது.” என்றான்.

மகனுக்கோ ஒரே பயம்! அவனது முதல் திருட்டு இது. ஒரு வீட்டின் சுவரில் கன்னம் வைத்து அதை உடைத்தான் பக்கா திருடன். நேர்த்தியாக அவன் கைகள் வேலையைத் திறம்படச் செய்தன.அவனிட்த்தில் பயம் இல்லை; பரபரப்பும் இல்லை. நிதானமாக வேலையை முடித்தான்.ஏதோ, தன் வீட்டின் சுவரை உடைப்பது போல உடைத்து உள்ளே நுழைந்தான். மகனுக்கோ உடல் எங்கும் நடுக்கம். கால்கள் தள்ளாடின. யாராவது பிடித்து விட்டால் என்ன செய்வது?

Jewelry-Thief-Walkthrough

கும்மிருட்டில் சர்வ சாதாரணமாக பக்கா திருடன் வீட்டில் நுழைய மகனும் பின் தொடர்ந்தான். வீட்டின் உள்ளே நகைகள் இருக்கும் அறைக்குள் சென்று ஆள் நுழையக் கூடிய அளவில் இருந்த பெரிய பீரோவைத் திறந்தான். மகனை நோக்கி,” விலை மதிப்புள்ள எதை வேண்டுமானாலும் எடு” என்று கூறினான். பீரோவினுள் மகன் நுழைந்தான். உடனே பக்கா திருடன் பீரோவின் கதவுகளை நன்கு மூடி விட்டு, “திருடன் திருடன், வாருங்கள், எல்லோரும் வாருங்கள்’ என்று கத்தி விட்டு தான் கன்னமிட்ட துவாரத்தின் வழியாகத் தப்பிச் சென்று விட்டான்!

மகனுக்கு வேர்த்து விறுவிறுத்தது. தனது தந்தை இப்படிச் செய்வார் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை இப்படி மாட்டி விட்டு விட்டாரே, மஹா பாவி! அப்பனா இவன்! பீரோ கதவை வேறு பூட்டி விட்டான்! பிடிபட்டால் மரணம் தான் பரிசு. அடித்தே கொன்று விடுவார்கள். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

ஒரு மணி நேரம் கழிந்து வீட்டிற்கு வந்த மகனை அன்புடன் பக்காத் திருடன் வரவேற்றான். மகனோ தனது மேலிருந்த போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு,” என்ன அநியாயம் இது! இப்படியா செய்வது?” என்று கோபத்துடன் கூவினான்.

பக்காத் திருடன் கூறினான்:” ஓ! நீ ஒன்றுமே சொல்ல வேண்டாம். தூங்கப் போ. உனக்கு நமது கலை புரிந்து விட்டது! அதைப் பற்றிப் பேச வேண்டாம்”

மகனோ,”இல்லை இல்லை, என்ன நடந்தது என்று நான் கூறுகிறேன்” என்றான்.

“உனக்குச் சொல்ல வேண்டுமென்றால் சொல். எனக்குக் கேட்க வேண்டுமென்பது இல்லை. நாளை முதல் நீ தனியாகவே திருடச் செல்லலாம். உனக்குத் திறமை இருக்கிறது. அதைப் பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றான் பக்கா திருடன்.

மகனோ,” தந்தையே! நடந்ததைச் சொல்லாவிட்டால் எனக்குத் தூக்கமே வராது. நீ என்னைக் கொன்றே விட்டாய்! அதிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். நடந்ததைக் கேள்!” என்றான்,
“அப்படியா! ஒரு நிபுணன் என்றால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பித்துத் தான் வரவேண்டும். இது சகஜமப்பா. சரி என்ன நடந்தது அதைச் சொல்” என்றான் தந்தை.
Jewel_Thief_poster

“எப்படியோ அது நடந்தது. தப்பி விட்டேன். எனது மனமோ, புத்தியோ எதுவும் அதற்குக் காரணமில்லை. ஆனால் நடந்து விட்டது” என்றான் மகன்.

தந்தை கூறினான் ” இது தான் வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி, அது எந்தத் துறையாக இருந்தாலும் சரிதான். திருடுவதோ, ஓவியம் வரைவதோ, கவிதை இயற்றுவதோ எந்த துறையாக இருந்தாலும் சரி தான்! திருடனாக இருந்தாலும் சரி, யோகியாக இருந்தாலும் சரி. தலையிலிருந்து எதுவும் உதிப்பதில்லை வேறு எங்கோ கீழே இருந்து தான் அனைத்தும் உதிக்கிறது. அதற்கு உள்ளுணர்வு என்று பெயர் கொடு, தியானம் என்று சொல். பல பெயர்களைச் சொன்னாலும் விஷயம் ஒன்று தான். உன் முகத்தில் ஒரு தேஜஸ் ஜொலிக்கிறது நீ ஒரு மாஸ்டர் திருடனாக பக்கா திருடனாக ஆகி விடுவாய் பக்கா திருடனாக நான் ஆனதால் எனக்கு தியான ஒருமைப்பாடு சித்தியாகி இருக்கிறது. ஆகவே உனக்கு தியானம் சித்திக்க வேண்டுமென்றால் இது தான் வழி!”

நடந்ததை மகன் கூறலானான்:” நான் பீரோவின் உள்ளே நடுநடுங்கியவாறு ஒளிந்திருக்கையில் நீங்கள் போட்ட கூச்சல் சத்தத்தைக் கேட்டு ஒரு வேலைக்காரி மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிக் கொண்டு வந்தாள். அதை சாவி துவாரம் வழியே பார்த்தேன். திடீரென எனக்கு ஒன்று தோன்றியது. பூனை போல மியாவ் மியாவ் என்று கூவினேன்.இதுவரை நான் பூனை போல சத்தமிட்டதே இல்லை. பூனை தான் இருக்கிறதென்று பீரோ கதவை வேலைக்காரி திறந்த போது பூவென்று ஊதி மெழுகுவர்த்தியை அணைத்து அவளைத் தள்ளி விட்டு வெளியே ஓடினேன்.

எல்லோரும் என்னைத் துரத்திக்கொண்டு பின்னால் ஓடி வந்தார்கள் திடீரென அங்கு ஒரு கிணறு வழியில் இருந்ததைப் பார்த்தேன். அதன் அருகே ஒரு பெரிய பாறை இருந்தது. அசைக்க கூட முடியாத அளவு பெரிய பாறை அது. கஷ்டப்பட்டு அதைத் தூக்கி கிணற்றில் வீசினேன். பின்னர் ஓட ஆரம்பித்தேன். எல்லோரும் கிணறு அருகே வந்து நின்றனர். நான் கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக அவர்கள் நினைத்துக்கொண்டனர். ஒரு வழியாகத் தப்பி வீட்டுக்கு ஓடி வந்தேன்.”

பக்கா திருடன் கூறினான்:”மகனே நீ தூங்கப் போ! என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். நீயாகவே உனது வேலையைத் தொடங்கலாம்!”

ஓஷோ கூறுகிறார்: சும்மா இரு; அனைத்தையும் அறி!

******************

சென்னையிலிருந்து வெளிவரும் முதல் ஓசை நாளிதழில் 29-6-2014 அன்று வெளியான கட்டுரை

Pictures are used from different sites, not related to this story;thanks.

நிகழ்காலத்தில் வாழ்க!

ramana stamp

ஜென் காட்டும் வாழ்க்கை நெறி:-
நிகழ்காலத்தில் வாழ்க!
By ச.நாகராஜன்

Post No 1211; Dated 3rd August 2014.

ஜென் நெறி – நிகழ்காலத்தில் வாழ்க!
அமைதியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜென் காட்டும் வாழ்க்கை நெறிகளில் மிக முக்கியமான ஒன்று –“நிகழ்காலத்தில் வாழ்க” என்பது தான்!

ரமண மஹரிஷியிடம் ஒரு கேள்வி!
இதே நெறியைத் தான் இந்து மதமும் வலியுறுத்தி வருகிறது.பகவான் ரமண மஹரிஷியை தரிசிக்க அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான கிரிதாரிலால் என்பவர் (18-3-1946 அன்று) வந்தார். இந்த யுகம் எப்போது முடியும் என்ற கேள்வியை அவர் பகவானிடம் கேட்டார்.

உடனே ரமண மஹரிஷி” நான் காலத்தை உண்மையெனக் கருதுவதில்லை இறந்த காலத்தைப் பற்றியும் முன்பிருந்த யுகங்களைப் பற்றியும் நமக்குத் தெரியாது. எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குத் தெரியாது ஆனால் நிகழ்காலம் இருக்கிறதென்பது தெரியும் அதை முதலில் தெரிந்து கொள்வோம். அப்போது எல்லா சந்தேகங்களும் தீரும். தூக்கத்தில் இந்த உலகமும் இறந்த காலம் அல்லது எதிர்காலம் ஆகிய ஒன்றுமே நமக்கு இருப்பதில்லை. ஆனால் “நாம்” இருக்கிறோம்! மாற்றமில்லாததும் சாஸ்வதமுமானதையும் முதலில் தெரிந்து கொள்வோம்” என்றார்.

கிரிதாரிலால் புராணங்களில் ஒவ்வொரு யுகத்திலும் இத்தனை வருடங்கள் எனத் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்று மேலும் வினவினார்.

அதற்கு பகவான், : அப்படிக் குறிப்பிடப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கக் கூடும். அல்லது உலகத்தின் பிரமிப்பூட்டும் காலத்திற்கு முன்னர் மனிதனின் முழு ஆயுளான நூறு வருடங்கள் கூட எவ்வளவு அற்பமானது என்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு உத்தியாகவும் அது இருக்கக் கூடும்” என்று அருளினார்.

.பிரபஞ்ச வயதின் முன்னர் மனிதனின் வாழ்வு எவ்வளவு அற்பமானது! நான்கு யுகங்கள் கொண்ட சுற்று வரிசை எத்தனை வந்தனவோ! நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொண்டால், தூக்கத்தில் உள்ளதைப் போல காலம் என்பதே இல்லையென்றால் இந்தக் கேள்விகளால் நம்மை நாமே தொந்தரவு செய்து கொள்வதால் என்ன பயன்!

ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து அமைதியாக வாழக் கற்றுக் கொண்டால் நாளடைவில் அனைத்தும் புரிய ஆரம்பிக்கும் என்பதே ரமண மஹரிஷியின் அருளுரையின் சாராம்சம்.

EmptyBoat

காலிப் படகு மோதிய கதை

ஜென் பிரிவில் புத்த துறவிகளும் எல்லையற்ற கால வெள்ளத்தின் முன்னர் இறந்த காலத்தையோ எதிர் காலத்தையோ பற்றி எண்ணாமல் நிகழ் காலத்தில் வாழ்வதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டுள்ளனர்.

ஜென் பிரிவில் அடிக்கடி கூறப்படும் ஒரு போதனை காலியான படகு பற்றிய ஒரு சம்பவம். பெரிய ஜீவ நதியில் நீங்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென காலியான படகு ஒன்று உங்கள் படகின் மீது மோதி விடுகிறது என வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள். கோபப் பட மாட்டீர்கள். ஆனால் அதிலேயே படகோட்டி ஒருவன் இருந்தால் அவன் மீது எவ்வளவு கோபம் வரும்!

அதே போலத்தான் உங்கள் வாழ்வின் நிகழ்வுகளும்! உங்களை உங்கள் அண்டை அயலார் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். மற்ற தோழர்கள் உங்களைச் சீண்டி விளையாடி இருக்கலாம். நேற்று உங்களின் மீது அபாண்டமான பழியை உங்களின் அலுவலக சகா சுமத்தி இருக்கலாம்.! இவர்கள் அனைவரும் காலியான படகு தான்! அவர்கள் தங்களது செய்கைகளை ஏதோ ஒரு உந்துதல் பேரில் தான் செய்திருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது!

கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியினால் காலியான படகு உங்கள் படகின் மீது மோதுவது போல தங்கள் வலியினாலும் காயத்தினாலும் உங்கள் மீது அவர்கள் மோதுகிறார்கள்.

இதை உணரும் வரை நாம் நமது துக்கம், இறந்த காலம் ஆகியவற்றின் கைதிகளாக இருப்போம். நிகழ் காலத்தின் சக்திகளுக்குக் கட்டுப்பட்டு எப்போதும் பாய்ந்து பெருகும் அன்பை உளத்தில் ஏற்றுக் கொண்டால் யார் மீதும் கோபம் கொள்ள மாட்டோம்.காலிப் படகுகளை ஒதுக்கி விடுவோம்.

26-parrot1

ஒவ்வொன்றாகச் செய் நண்பனே!
நிகழ் காலத்தில் வாழ்வது உடனடி பயனைத் தரும் ஒரு அற்புதமான நெறி. வில்லியம் ஆஸ்லர் என்பவரிடம் ஒரு நண்பர் சென்றார்.எப்போதும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் தான் அதிக வேளைப் பளுவினாலும் ஏராளமான விஷயங்களைச் செய்ய வேண்டியிருப்பதால் மன இறுக்கம் கொண்டவராக இருப்பதாகவும் கூறி மனம் நொந்தார். அப்போது வில்லியம் ஆஸ்லர் வளர்த்து வந்த கிளி ஒன்று அந்த நண்பரை நோக்கி வணக்கம் கூறியது. இதனால் ஆச்சரியப்பட்ட நண்பர் அந்தக் கிளி பற்றி அவரிடம் விசாரித்தார்.

“இது ஒரு அற்புதமான கிளி..உங்கள் பிரச்சினைக்கு இந்தக் கிளி சுலபமான தீர்வைத் தரும்” என்று வில்லியம் ஆஸ்லர் சொல்லவே.அதன் விலை எவ்வளவு என்று கேட்டார் நண்பர்.

:இதன் விலை நூறு டாலர்” என்றார் வில்லியம் ஆஸ்லர். “இவ்வளவு விலையா?” எனத் திகைத்தார் நண்பர் ஆனால் தனது பிரச்சினையோ பெரிது என்பதால் நூறு டாலர் கொடுத்து அதை வாங்கி வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்குச் சென்றவுடன் கிளி அவரை நோக்கி “ஒன் அட் எ டைம். ஃப்ரண்ட் ஒன் அட் எ டைம்” (One at a time, friend! one at a time) -“ஒவ்வொன்றாகச் செய், நண்பனே ஒவ்வொன்றாகச் செய்” என்று கூறியது.

திருப்பித் திருப்பி அந்த வார்த்தைகளைக் கேட்ட நண்பர் தன் கையிலிருந்த முதல் காரியத்தை முடித்தார். ஆச்சரியமாக இருந்தது அவருக்கு. இப்படி விரைவாக ஒரு காரியத்தையும் அவர் முடித்ததே இல்லை. அடுத்தாற் போல அடுத்த விஷயத்தைத் தொடங்கினார். அதுவும் விரைவாக முடிந்தது. “ஒரு சமயத்தில் ஒரு வேலை” என்று நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொள்ளும் பழக்கத்தால் ஒரே வாரத்திலேயே அவரது எல்லா வேலைகளும் முடிந்தன. தாமதமான காரியங்களும் இல்லை; தடைப்பட்ட காரியங்களும் இல்லை!வில்லியம் ஆஸ்லருடன் நேராக வந்த நண்பர், “கிளி கோடி டாலர் பெறும்” என்று உளமாரக் கூறினார்.

நிகழ்காலத்தில் வாழ்வது அதிசயமான மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் உருவாக்கும். வெற்றி மேல் வெற்றி வரும். உங்கள் மீது மோதுபவர்களை காலிப் படகாக எண்ணி சிரித்தவாறே முன்னேறுங்கள். அற்புதங்கள் மலரும்! இதுவே ஜென் காட்டும் வாழ்க்கை நெறி!

Article was written by my brother S Nagarajan of Bangalore for Muthal Osai tamil Daily. Contact swami_48@yahoo.com

**************

முயற்சி திருவினை ஆக்கும்: தவளைக் கதை

frog-300x230

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1191; தேதி 24 ஜூலை, 2014.

ஒரு வீட்டில் தயிர்ப் பானையில் தயிர் வைத்திருந்தார்கள். அதை மூட மறந்து விட்டனர். இரவு நேரத்தில் தாவிக் குத்தித்து வந்த இரண்டு தவளைகள் அதில் தவறி விழுந்துவிட்டன. ஒரு பெரிய தவளை தன்னால் முடிந்த மட்டும் காலால் உதைந்து வெளியே குதிக்கப் பார்த்தது. முடியவில்லை. அலுத்துப் போய் அப்படியே அமைதியானது. சிறிது நேரத்தில் பானையின் கீழே போய் மாண்டு போனது.

மற்றொரு தவளை உருவில் சிறியது. அது முயற்சியைக் கைவிடாமல் உதைந்து கொண்டே இருந்தது. இரண்டு தவளைகளும் முன்னர் நீந்தி உதைத்ததிலும், குட்டித் தவளை கடைசி வரை உதைத்ததாலும் தயிர்ப் பானையில் வெண்ணை திரண்டது. கொஞ்சம் கொஞ்சமாக உருண்டு திரண்டு கட்டியாகியது. குட்டித் தவளை அதன் மீதேறித் தாவி வெளியே குதித்து தப்பி ஓடியது.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!

surfacing Frog

கடவுளை அடைய விரும்புவோரும் இடை விடாமல் சாதகம் செய்தால் இறைவன் வெண்ணை போல திரண்டு வந்து உதவுவான் என்பார் இக்கதையைச் சொன்ன சுவாமி ராமதாஸ்.

திருவள்ளுவரும் இதையே சொன்னார்; சொல்லப்போனால் இதற்கு மேலே ஒரு படி சென்று, முயற்சிக்கான பலனைத் தெய்வமே கூட தடுக்க முடியாதென்றார்:

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் – (குறள் 619)

அதாவது இறுதி வெற்றி என்பது தர்மமா, அதர்மமா என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் அதற்கு முன் வரை அவரவர் முயற்சிக்குத் தக முன்னேற்றம் அமையும். கடவுள் உங்களுக்கு உதவாவிட்டாலும் முயற்சிக்கான பலன், முயற்சியின் அளவுக்கேற்ப அமையும்.

‘முயற்சி திருவினை ஆக்கும்’ — முயற்சியினால் செல்வம் பெறலாமென்று சொன்ன வள்ளுவர், விதியையும் கூட வெல்லலாம் என்பார்:

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர் (620)

frog 3

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பர். கல்லே நகரும் போது நம் முயற்சிகளும் பயிற்சிகளும் பலன் தராமல் போகுமா?

–சுபம்–

Those who struggle win

surfacing Frog

Compiled by London Swaminathan
Post No.1188; Dated 22nd July

In a house there was a pot of curds kept in the kitchen. The pot was not covered. Two frogs, one big and the other small, while hopping about, fell into the pot of curds. Both of them struggled for some time to get out, but could not do so. The bigger frog gave up all hopes, kept quiet, and sank to the bottom and died.

The smaller frog did not want to give in easily. He struggled and struggled for hours together. He was now completely exhausted and kept quiet for some time. By the frog’s continuous struggles and his constant movements in the curds pot, the curds were churned and the butter was formed on its surface.

frog 3

When the frog stopped struggling through exhaustion and became still, the butter gradually formed in to a lump. This gave a chance for the frog to leap out of the pot.
It is clear from this story that struggle or ‘sadhana’ is essential to secure from the toils of worldly life.

You should strive hard to get God and when you are completely exhausted in the effort and lie still in surrender at His feet, He comes to you as your saviour.
-Story told by Swami Ramdas.

Tiruvalluvar’s Maxims

Tamil poet Tiruvalluvar says
Even if Providence in hot helpful
Personal efforts will bear proportionate results (couplet 619)

People who labour hard wih ceaseless industry
Will overcome even relentless fate (Kural 620)

Let not the magnitude of any task unman you
Strenuous effort ever brings victory

frog-300x230

Napoleon rose to his eminence because he was convinced that nothing was impossible. He is believed to have said, “Impossible in not French. Everything can be achieved by a systematic and persistent all-out effort, says Dr S M Diaz in his commentary on Tirukkural.

contact swami _ 48@yahoo.com

Priest who changed New Moon Day to “Full Moon Day”!!

Abhirami-and-Bhattar-painted-by-Keshav

Written by London Swaminathan
Post No.1144; Dated 2nd July 2014.

Tamils bless newly married couple with auspicious yellow rice (akshathai) greeting them with the words “Let you get Sixteen and Long Live”. Even villagers people, though illiterate, know the ‘sixteen’ does not mean sixteen children, but sixteen essential things in life. Of the three Tamil poets listed the good things that needed in life the most famous sixteen came from a saitly devotee who composed a verse with all the sixteen essentials. It is part of Abhirami Ammai Pathikam- a decad on Goddess Abirami of Tirukkadavur in Tamil Nadu.

There is a very interesting story behind that poet. Subramanya Iyer was his original name, but became popular with the new name Abhirami Bhattar after a miracle. Subramanyam lived in the later part of the 18th century. His father Amirthalinga Iyer was a great scholar and musician. Subramanyam studied music, Tamil and Sanskrit. He did not seek any employment because his mind was after spiritual things. He became a great devotee of the local deity Goddess Abhirami, another name for Shiva’s wife.

He lived mostly in the temple meditating upon the glory of the goddess. After seeing his strange behaviour, people thought he became mad. King Sarabhoji of Thanjavur used to visit the temple. One day he visited the temple when all except Subramanyam paid respect to the king. The king became angry and asked who that arrogant fellow was. People gave him different versions, with both positive and negative things about Subramanyam. King wanted to test him and so asked him what day was it? Was it a full moon day or new moon day?

He replied at once, “It is a full moon day”. Actually it was a new moon day (Amavasya in Hindu calendar). The king thought that he deliberately insulted him and ordered that he should be executed if he did not show the moon on that day. The man who always saw the glorious light of the goddess thought that it was full moon. Later he realised his mistake and prayed to goddess to save him.

Abirami

His prayer was a beautiful hymn with 100 verses. It is called Abhirami Andhathi. When he sang the 79th verse, goddess took off her ear stud and threw it in the air. And lo, the full moon appeared on the sky and bathed the village in bright light. He continued his composition and finished at 100 verses.

King Saraboji who was camping in the nearby town also saw the sudden light in the sky. He rushed to the temple and fell at the feet of Subramanyam and begged his pardon. The king honoured him with the title Abhirami Bhattar. Andhathi is a genre where the last word of the first stanza will be the first word of the next verse. It will go on like this up to 100. And the last word of the 100th stanza should be the first word of the first stanza! It is a garland of words to a God or Goddess.
Abhirami Bhattar composed also Abhiramai pathikam and prayed for the sixteen. The sixteen things he wanted are as follows:

indian_family1
Everybody needs a Happy Family.

English Translation

O, God of old Kadavur, Sister of Vishnu who is ‘sleeping’ on the ocean, who is inseparable from Amutheesar, O Abhirami, please bless me with the following:–

1)Good and Proper Education,2) Long life, 3)Good friends, 4)Prosperity forever 5)Youthfulness, 6)Disease free (healthy) body, 7)Calm mind (tranquillity), 8)Affectionate wife, 9)Children with good character 10)Name and Fame, 11)Truthfulness, 12)Philanthropy, 13)Theft free Wealth, 14)Good government, 15)Worry free life and 16) Association with your great devotees.

There is one more list of good things in Prabodha Chandrothayam. There is another list given by Kalameham, who is famous for poems with double entendre. It would be appropriate here to list two English poems that follow the Tamils in demanding good things in life:–

arusuvai uNti
Everone needs his Daily Bread!

A Prayer Found in Chester Cathedral

Give me good digestion, Lord,
And also something to digest;
Give me a healthy body, Lord,
With sense to keep it at its best.

Give me a healthy mind, good Lord,
To keep the pure and good in sight;
Which, seeing sin, is not applauded,
But find a way to set it right.

Give me a mind that is not bored,
That does not whimper, wine and sigh;
Don’t let me worry overmuch
About the fussy thing called “I”.

Give me a sense of humour, Lord,
Give the grace to see a joke;
To get some happiness from life,
And pass it on to other folk.

By an Unknown author

Currency_1728545g
We need lot of money!

One more list:

What We Need

A little dash of purpose,
An effort made to cheer,
A little more of courage,
And less of doubt and fear;
A little more of lifting,
And pulling all our weight,
A little less of leaning,
And leaving it to fate.

A little less of grabbing,
Of selfishness and greed,
A little more of helping,
A fellow that’s in need;
A little more of working,
With smiles instead of frowns,
A little less of kicking,
A fellow when he down.

A little less complaining,
About the things that mar,
A little more adapting,
To all the things that are;
A little more of caring,
And willingness to fight,
A little more of daring,
For what we feel is right.

A little splash of humour,
To brighten up the way,
A little joy to follow,
And linger through the day;
A little touch of laughter,
To cause a little mirth,
Is simply what we’re needing,
To gladden this old earth.

Hope Spencer

about life

Let us all pray for the Sixteen!!
(Pictures rae taken from facebook and various websites;thanks).

கல்லுக்குள் தேரை, பெட்டிக்குள் எறும்பு: உணவு கொடுப்பது யார்?

Fire_ants

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1119; தேதி:—- 20 ஜூன் 2014

ஒரு முறை பார்வதிக்கும் பரமசிவனுக்கும் இடையே ஒரு காரசார விவாதம்:
பார்வதி:– என்ன இது? இப்படி எப்போது பார்த்தாலும் ‘டான்ஸ்’ (நடராஜன் ) ஆடியே பொழுதைக் கழிக்கிறீர்களே. கொஞ்சம் பசியால் வாடும் உயிரினங்களுக்கு உணவு அளிக்கக்கூடாதா?
பரமசிவன்:- அன்பே! ஆருயிரே ! அதைத்தான் ‘’இமைப்பொழுதும் சோராமல்’ அல்லும் பகலும், அனுவரதமும் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

பார்வதி:– அப்படியா! எனக்கு என்னமோ நீங்கள் ‘’நடராஜ’’னாகப் பொழுது போக்குவதே கண்களுக்குத் தெரிகிறது!

Ramdas Shivaji
Picture of Shivaji and Samarth Ramdas.

பரமசிவன்:- நீ ஒரு பெண்; கருணையின் வடிவம்; ‘பால் நினைந்தூட்டும் தாய்’! ஆகையால் பசியில் வாடும் உயிரினங்களின் மேல் எப்போதும் கருணை பொழிகிறாய். எனது நடனம்தான் இந்த உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது. உனது கருணை அதை மறைக்கிறது போலும்!

இப்படி சிவன் கொடுத்த தத்துவ விளக்கம் எதுவும் பார்வதிக்கு நம்பிக்கை தரவில்லை. தன் கணவனை ‘’கையும் களவுமாகப்’’ பிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்குத் திட்டம் போட்டாள். விறு விறு என்று வெளியே போய் அங்கே ஓடிக்கொண்டிருந்த சில எறும்புகளைப் பிடித்து ஒரு டப்பாவுக்குள் போட்டு மூடி வைத்தாள்.

மீண்டும் அதே நாளன்று பொழுது சாயும் நேரத்தில் சிவன் ஆடத் தொடங்கினார். பார்வதிக்கோ ஒரே ஆத்திரம். ஆட்டம் முடிந்தவுடன் சிவனை மீண்டும் வம்புக்கு இழுத்தாள்.

பார்வதி:– அன்பரே! இன்று எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைத்தீரா?
பரமசிவன்:- ஆமாம், தேவி! ஒரு உயிரினத்தையும் விடவில்லை. எல்லோருக்கும் உணவு அளித்துவிட்டேன்.

பார்வதி:– ஓ,அப்படியா? இனி நீர் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. காலை முதல் என் முந்தானைக்குள் முடித்துவைத்த இந்தச் சின்னப் பெட்டியில் எறும்புகள் இருக்கின்றன. நீர் இந்தப் பக்கமே வரவில்லையே! இவைகளுக்கு ஏனைய்யா உணவு படைக்கவில்லை?

பரமசிவன்:- தேவி! அவசரப் படாதே, ஆத்திரப் படாதே. பெட்டியைத் திறந்து பார்.
பார்வதி, பெட்டியைத் திறந்தாள். எறும்புகள் இன்பமாக அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. சிவன் வாயில் புன்சிரிப்பு நெளிந்தது. பார்வதி முகத்திலோ அசடு வழிந்தது. “எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த” இறைவனை வெறும் ஆட்டம் (நடராஜன்) போடுபவன் என்று நினைத்து விட்டோமே, உலகையெல்லாம் ஆட்டிப்படைக்கும் ஆட்டம அல்லவா தம் கணவனுடைய ஆட்டம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

shivajipg21

சிவாஜியை மடக்கிய ராமதாசர்

தென்னாட்டில் முஸ்லீம் படை எடுப்பாளர்களை ஒடுக்கியது விஜய நகரப் பேரரசு. அதற்குப் பின்னும் வட நாட்டில் அவுரங்கசீப்பின் அட்டஹாசம் நீடித்துக் கொண்டே இருந்தது. அப்பொழுது மஹாராஷ்டிரத்தில் மலைப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை ஒன்று திரட்டி உலகின் முதலாவது ‘கெரில்லா’ போரை நடத்தியவர் சிவாஜி. வீர சிவாஜியின் இந்து சாம்ராஜ்ய ஸ்தாபிதம் அவுரங்கசீப்பையும் மொகலாய சாம்ராஜ்யத்தையும் விழுத்தாட்டியது. வீர சிவாஜியின் வெற்றிக்குக் காரணம்—பவானி தேவி கொடுத்த வாளும், சமர்த்த ராமதாஸர் கொடுத்த ஆசியும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சிவாஜியின் மனதில் இருந்து அகலத் தொடங்கியது.
அஹங்காரமும், மமகாரமும் ( ‘யான்’, ‘எனது’ என்னும் செருக்கு—குறள்) பெருகவே, சிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். நல்ல தருணமும் வந்தது. ஒரு நாள் மாபெரும் கோட்டை கட்டும் வேலையில் ஆயிரம் தொழிலாளிகள் ஈடுபாடிருந்தனர். சிவாஜி, பெரும் மமதையுடன் அதை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். நான் இல்லாவிடில் இந்த மலை ஜாதி மக்களுக்கு சோறும் தண்ணீரும் கிடைத்து இருக்குமா? என்ற எண்ணம் அவரது மனதில் இழை ஓடியது. அப்போது அங்கே ராமதாசரும் வந்து சேர்ந்தார்.

“சிவாஜி! ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டும். நாலைந்து தொழிலளிகளைக் கூப்பிடு” என்று குரு ராமதாசர் உத்தரவு இட்டார். குருவின் இந்த விநோத வேண்டுகோள் வியப்புக் குறியை எழுப்பியது. இருந்த போதிலும் குரு விஷயத்தில் கேள்விக் குறியை எழுப்பி அறியாத மாபெரும் பக்தன் வீர சிவாஜி. உடனே உத்தரவு பறந்தது.

வந்தனர் தொழிலாளிகள்– வெட்டி உடைத்தனர் பாறையை– என்ன அதிசயம்!! அதற்குள் சிறிய தூவாரங்களில் தண்ணீர். அதில் சில தேரைகள்! எல்லோரும் வியப்புடன் பார்த்தனர்.
சிவாஜி! இவைகளுக்கும் நீதான் உணவு படைக்கிறாயா? என்றார் குருதேவர்.

சிவாஜிக்குப் புரிந்தது. அகந்தை அகன்றது. குருதேவரின் காலில் விழுந்தார். கண்ணிர் மல்கினார். குருவின் ஆசி பெருகியது. காவிக் கொடிகள், மேலும் பல மொகலாயர் கோட்டைகளை வென்று, அவைகளின் மீது பட்டொளி வீசிப் பறந்தன!

tad in rock

(தவளை வகையைச் சேர்ந்த தேரைகள் மூடிய கல் பாறக்கிகுள் வசிப்பது இயற்கை அதிசயங்களில் ஒன்று. மேலை நாடுகளில் உள்ளோர் இதை நம்புவதில்லை. ஆனால் இந்தியாவில் வசிப்போருக்கு இது நன்கு தெரிந்த உண்மை.)

“அடக்கம் அமரருள் உய்க்கும்”— வள்ளுவன் குறள்.—சுபம்–.

Baba’s Story on Humility

baba sun

Compiled by London Swaminathan
Post No.1111; Dated 16th June 2104.

Sri Sathya Sai Baba, in one of his lectures, stressed the importance of humility. He said that one of the methods to cultivate humility is not only to bow before god but also prostrate before holy saints and obtain their blessings. Baba narrated a story from the life of Emperor Asoka.

“Once Asoka went round the capital city with his minister. When he saw a Buddhist monk, he placed his head at the feet of the monk and bowed. But his minister did not like this. Asoka knew what was going on in the mind of his minister. He asked him to fetch the heads of a goat, a tiger and a man’s. When they were brought he asked the minister to sell them in a market. While the heads of animals had buyers, no one came to purchase that of the human being. There was none even to take it free.

The king then said, “This head is valued only when there is life in the body. Hence, when there is an opportunity, place your head at the feet of the noble men and secure their good wishes.”

Tamil King who had Siva’s Feet on His Head
Seran Senguttuvan was a powerful Tamil king who ruled Tamil Nadu about 2000 years ago. He decided to go to holy Himalayas to bring a stone for making a statue for the chaste woman Kannaki. On the eve of his expedition to North India, he went to the Siva temple and bore the feet (sandals) of Lord Siva on the head as a mark of respect to Him (See Kalkot Katai, Silappadikaram).

Kings of those days were so humble that they did not hesitate even to take bricks on their head to build temples.

Another powerful Pandya king Muthu Kudumi Peruvazuthi was praised by one of the Sangam poets that his head would bow on two occasions only:
1.When the king goes round the temple of Lord Siva and
2.When Brahmins raise their hands to bless him.
(See Karikizar’s poem on Mudukudumi, Purananuru verse 6)
baba ratha

Varaguna Pandyan was another great Pandya king who saw God in everything and I have narrated eight incidents that happened in his life time (Please see “The King who saw God in Everything”- posted April 26, 2013).
Another Saivite saint fell at the feet of a Dhobi (washer man) because his body was smeared with white sand. The saint saw holy ash ‘Vibhuti’ in everything that looked white!

Ramakrishna Paramahamsa’s Story
A man went to a saint and said with a great show of humility, “Sir, I am a very low person. Tell me, O Master, how I am to be saved”. The saint reading the heart of the man, told him, “Well, go and bring that which is meaner than you”. The man went out and looked all around, but found nothing whatsoever meaner than himself. At last he saw his own excrement and said, “Well here is something worse than myself”. He stretched forth his hand to take it up and carry it to the saint when suddenly he heard a voice say from within the ordure, “Touch me not, O Sinner, I was a sweet and delicious cake, fit to be offered to the Gods, and in appearance so pleasing to all the spectators. But my ill-fortune brought me to you. And by your evil contact I have been reduced to such a detestable condition that men runaway from me with handkerchiefs covering their noses. Once only did I come in contact with you and this has been my fate. What deeper degradation may I not be thrown into if you touch me again”. The man was thus taught humility and became the humblest of the humble. As a result he attained the highest perfection.
(See page 311, Sayings of Sri Ramakrishna , Sri Ramakrishna Math, Chennai)

aseervatham

“Humility is good for all, it is an ornament for the rich in particular”, says Tamil poet Tiruvalluvar in Tirukkural (125).

“Before destruction a man’s heart is haughty,
And before honour is humility”, says the Bible (Proverbs 18-12).

XXXX***XXXX***XXXX

Everybody is a Genius!

Everybody is a Genius

everybidy-is-a-genius