Face is the Index of Mind

Mirror

Great men think alike: Quotations on Mind

1.Manu on Examining witnesses
He shall discover the internal disposition of men by external sign:
by variation in their voice, colour and aspect,
as also by means of the eye and by gestures
–(Manava Dharma Shastra 8-25)

The inner mind is indicated by such variations as those of aspect, gait, gesture, speech and by changes in the eye and the face
–(Manava Dharma Shastra 8-26)

2.Face is the Index of Mind : English proverb

3. The mirror reflects nearby objects; even so the face indicates emotions throbbing in the mind (Tamil Tirukkural couplet 706)

4. The countenance is the portrait of the Soul—Cicero

looking-at-mirror

From Panchatantra:-

5.The guilty man is terrified
By reason of his crime.
His pride is gone, his powers of speaking fail
His glances rove, his face is pale.

The sweat appears on his brow,
He stumbles on, he knows not how,
His face is pale, and all he utters
Is much distorted; for he stutters.
The culprit always may be found
To shake, and gaze upon the ground:
Observe the signs as best you can
And shrewdly pick the guilty man.

While on the other hand
The innocent is self reliant
His speech is clear, his glance defiant
His countenance is calm and free
His indignation makes his plea

–(Panchatantra 151- 158 The Tale of the Weaver’s Wife)

From Hindu Legends of Justice by L.Sternback

Lady_looking_into_mirror_Belur_Halebidu
Halabedu statue: Lady looking at mirror.

In Tamil
1.அகத்தின் அழகு முகத்தில் தெரியும் (பழமொழி)
2.”அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்” (திருக்குறள் 706)
பொருள்: கண்ணாடி, தன்னை அடுத்த பொருள்களைக் காட்டும்; அதுபோல ஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை முகமே காட்டிவிடும்.

Please read my earlier 650 articles:-

1.Lie Detectors in Upanishads
2. கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி
3. Mirror Temples! Hindu Wonders!
Contact:- swami_48@yahoo.com

முன்னேறுவதற்குள்ள ஆறு தடைகள்!

knocking-down-hurdles-

17.சம்ஸ்கிருத செல்வம்
ச.நாகராஜன்

மனிதன் வாழ்க்கையில் முன்னேற உள்ள தடைகள் எவை என்று ஆராயப் புகுந்தார் கவிஞர். தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் தெளிவான விடையை இப்படித் தருகிறார்:-

ஆலஸ்யம் ஸ்த்ரீசேவா சரோகதா ஜன்மபூமி வாத்ஸல்யம் I
அபிமானோ பீருத்வம் ஷட்வ்யாகாதா மஹத்வஸ்ய II

ஆறு தடைகள் ஒருவன் மஹத்தானவன் ஆவதைத் தடுக்கின்றன.
ஆலஸ்யம் – சோம்பேறித்தனம்
ஸ்த்ரீ சேவா – பெண்களுக்கு இணங்கி இருப்பது
சரோகதா – வியாதிகளுடன் இருப்பது
ஜன்மபூமி வாத்ஸல்யம் – பிறந்த இடத்தைப் பெரிதும் நேசித்திருப்பது
அபிமானோ – கர்வம்
பீருத்வம் – பயம்

இந்த ஆறு தடைகளும் தான் ஒருவனை முன்னேறாமல் தடுப்பவை என்கிறார் கவிஞர். எவ்வளவு உண்மை!
hurdles3

சோம்பேறித்தனம் இருந்தால் எதிலும் உருப்பட முடியுமா?திருவள்ளுவர் மடி இன்மை என்ற ஒரு அதிகாரத்தையே (அதிகாரம் 61) வகுத்து பத்து முத்தான குறள்களைத் தந்துள்ளார்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து (குறள் 603)

ஒருவனது குடியை அழிக்கும் இயல்பினை உடைய சோம்பலை மடியிலே கட்டிக் கொண்டு திரியும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கும் முன்னதாகவே அழிந்து விடும் என்பதே இதன் பொருள்.

“Shun idleness. It is a rust that attaches itself to the most brilliant metals” என்று வால்டேர் கூறியதை இங்கு நினைவு கூரலாம்.

பெண்களின் நேசத்தால் பிணையுண்டு இருப்பவர் வெளியில் வேலை பார்க்கச் செல்வது எப்படி?

வியாதிகளுடன் இருக்கும் ஒருவன் அதைத் தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ளாதவரை எந்த வேலையையாவது செய்யத் தான் முடியுமா?

பிறந்த இடத்தை விட்டு நகரப் பிடிக்காமல் அதன் மீது அதிக வாத்ஸல்யம் கொண்டிருப்பவன் வெளியில் செல்வது எப்படி?’திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றல்லவா ஆன்றோர்கள் அறிவுரை பகர்ந்துள்ளனர்!

கர்வமும், பயமும் முன்னேற்றத் தடைக் கற்கள் அல்லவா!
நன்கு சிந்திக்கும் ஒருவன் இந்த ஆறு தடைகளையும் அகற்றி விட்டால் மஹத்தானவன் ஆவது நிச்சயம் தானே!

Hurdles_Bislett

Pictures are taken from various sites; thanks.
contact london swaminathan:- swami_48@yahoo.com
********

7. எல்லோர் முன்னிலையிலும் பேசத் தகுதியற்றவன்!

The Jade Buddha for Universal Peace

This is Part-7 in the Series on Buddhism written by Santanam Nagarajan for nilacharal.

ச.நாகராஜன்

“மனிதர்களிலோ பொருள்களிலோ அவை அசலாக இருக்கும் போது குப்பை என்று எதுவும் இல்லை” என்பது புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை.

புத்தர் ஒரு முறை,” என்ன அற்புதம்!என்ன ஆச்சரியம்!! சுயபுரிதல் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஒரு வித குறையுமின்றி எவ்வளவு பரிபூரணமாக உள்ளன!! மாயையால் ஏற்பட்ட தளைகளினால் உண்மை காணப்படமுடியாமல் இருக்கிறது” என்று கூறினார். .

இந்த அடிப்படை உண்மையைத் தான் ரோஷி சோகோவுக்குக் கற்பித்திருக்கிறார். ஆனால் ‘மர மண்டையாக’ அப்போது இருந்த சோகோவுக்குத் தான் அது புரியவில்லை.

நாள் செல்லச் செல்ல நம்பிக்கை கொள்வது உள்ளார்ந்த மனதுடன் ஒருவரை முணுமுணுப்பின்றியும் மறுப்புச் சொல்லாமலும் ஏற்றுக் கொள்வது என்பதை சோகோ புரிந்து கொண்டார். ஆகவே குரு எதைச் சொன்னாலும் சரி, சரி, சரி என்று சொல்ல சோகோ கற்றுக் கொண்டார். ஒரே சமயத்தில் அவர் மூன்று வேலைகளைக் கொடுத்தாலும் சரி, இதுவரை செய்தே இராத புதிய வேலையை அவர் தந்தாலும் சரி,சோகோவின் பதில் சரி, செய்து விடுகிறேன் என்பதாக ஆனது. புதிய வேலை என்றால் அதை எப்படிச் செய்வது என்பதை தன் புத்தியால் ஆராய்ந்து தன் சாமர்த்தியம் முழுவதையும் உபயோகித்து அதைக் கற்றுச் செய்யலானார் சோகோ.

அவரிடம் சேர்ந்த முதல் நாளன்று மடாலயத்தின் தாழ்வாரத்தை துடைக்கச் சொன்னார் ரோஷி. உடனடியாகக் களத்தில் இறங்கிய சோகோ முழங்காலைத் தரையில் பதித்து துணியால் தரையைத் துடைக்கத் துவங்கினார்.

“முட்டாள்” என்று கத்தினார் ரோஷி. “இப்படி எத்தனை நாளில் இதைத் துடைப்பதாக உத்தேசம். இதை இப்படியா செய்வது.கொண்டா, நான் செய்து காட்டுகிறேன்” என்று கூறிய எழுபது வயதான ரோஷி சோகோவிடமிருந்து துணியை வாங்கி தரையில் கைகளைப் பதித்து மறுபுறம் துணியை சீராகப் பறக்கவிட்டு நாலாபுறமும் அதை வீசித் துடைக்கலானார். சோகோவின் தலை கவிழ்ந்தது.

சோகோ இது வரை என்ன செய்திருந்தார்? பள்ளி நாட்களில் தத்துவத்தையும் இதர பாடங்களையும் நண்பர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் படிக்க வேண்டியது. ஒழிந்த நேரமெல்லாம் அரட்டை,அரட்டை அரட்டைதான்!கவைக்கு உதவாத வெற்றுப் படிப்பு!
தரையைச் சுத்தம் செய்வது என்ற சாதாரண வேலையைக் கூடச் சரியாகத் தன்னால் செய்ய முடியவில்லையே என்று வெட்கப்பட்டார் சோகோ.

Jade-Buddha-Temple-5

பின்னாட்களில் பெரிய ஜென் மாஸ்டராக ஆன போது சோகோ தன்னிடம் ‘ஜஜென்’ எனப்படும் தியானத்தைக் கற்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் வரும் போது அவர்களுக்குத் தரும் முதல் வேலை ‘வெந்நீர் போடுங்கள்’ என்பது தான்.’வெந்நீர் போட முதலில் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்பார் சோகோ.
மாணவர்கள் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்பார்கள்.
“இல்லை,இல்லை” என்பார் சோகோ!

“முதலில் அண்டாவில் நீரை நிரப்ப வேண்டும்” என்பார்கள் அவர்கள்.
“முதலில் அண்டாவைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அளவு பார்த்து நீரை விட வேண்டும்.அப்புறம் அண்டாவை மூடி போட்டு மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும். பின்னரே அடுப்பை மூட்ட வேண்டும்” என்று விளக்குவார் சோகோ.

சற்று நேரம் கழித்து அவர்கள் எப்படி வேலை பார்க்கிறார்கள் என்று சோகோ பார்க்கப் போனால் இரண்டு விறகும் பாதி எரிந்த பேப்பர்களும் அடுப்பில் இருக்கும்.
“இப்படி எரியவே கூடாது. சற்றுக் கிளற வேண்டும்”, என்று சொல்லித் தருவார் சோகோ.

“சின்னக் கரண்டி வேண்டுமே, கிளற” என்பார்கள் அவர்கள்.
‘அதை ஏன் கேட்கவில்லை’, என்பார் சோகோ.
கரண்டி வந்து கிளறினாலும் அடுப்பு சரியாக எரியாது.
அவர்களிடம் சோகோ,” தீ எப்படி எரிக்க உதவுகிறது” என்று கேட்பார்.
“அது ஒரு கெமிக்கல் ப்ராஸஸ்! ஒரு பொருளும் ஆக்ஸிஜனும் இணைய வேண்டும் அதற்கு என்பார்கள் அவர்கள்.
“ இவ்வளவு சாம்பல் உள்ளே இருக்கும் போது அந்த ப்ராஸஸ் நடை பெறுவது எப்படி?” என்று வினாவை எழுப்புவார் சோகோ.

அவசரம் அவசரமாக சாம்பலை அள்ளி வெளியில் கொட்டுவார்கள் மாணவர்கள்.. அத்தோடு சிம்னியில் உள்ள சாம்பலையும் எடுத்து காற்று உள்ளே புக வசதி செய்வார்கள் அவர்கள். பிறகு அடுப்பு நன்கு எரியும் அவர்களைப் பார்த்துச் சோகோ சிரிக்க முடியுமா என்ன? அவரும் ஆரம்பத்தில் அவர்களைப் போலத் தானே இருந்தார்!!

ஆரம்ப காலத்தில் மாஸ்டரை நம்பி அவருக்குக் கீழ்ப்படிவது போலக் காட்டிக் கொண்டாலும் சோகோ மனதிற்குள்ளாக அவரைக் கடுமையாக விமரிசிப்பது வழக்கம்.அவருக்கு டீ தரும் பணியாளிடம் அவர் கூறும் கடுமையான விமரிசனங்களைக் கேட்டாலேயே சோகோவிற்குப் பற்றிக் கொண்டு வரும்.

டைஷுயின் ஆலயமோ மிகச் சிறியது. அங்கு கஞ்சி தான் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து டீ ரோஷியின் அறைக்கு வரும்.அவர் டீயை அருந்திய பின்னர் மற்றவர்களுக்கும் டீ வழங்கப்படும். அப்போது ரோஷி அன்றைய தினத்திற்கான தனது திட்டத்தை விளக்குவார்.

சோகோ முதன்முதலாக டைஷுயின் ஆலயத்திற்கு வந்த போது அங்கு மிஸ் ஒகோமோடோ என்ற பெண்மணி அங்கு வசித்து வந்தார். அவர் ஒச்சனோமிஜு பெண்கள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். பெண்கள் கல்வியில் அவர் மிகுந்த அக்கறை காட்டியவர். அவர் நாற்பது வயதைத் தாண்டியவுடன் அவருக்கு புத்த மதத்தில் தீவிர ஈடுபாடு வந்தது. தனது ஆசிரியப் பணியை விட்டு விட்டு ரோஷியிடம் வந்து சேர்ந்தார். ரோஷி, சோகோ, மிஸ் ஒகோமோடோ ஆகிய மூவரும் மடாலயத்தில் வசித்து வந்தனர். எப்போதும் ரோஷி மிஸ் ஒகோமோடோவிடம் மட்டுமே பேசுவார். சோகோவை அவர் கண்டு கொள்வதே இல்லை. இதைப் பார்த்து பரிதாபப்பட்ட மிஸ் ஒகோமோடோ ஒரு நாள் பேச்சு வாக்கில்,”இதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டு சோகோவை உரையாடலில் இழுக்க முயன்றார்.

Buddhastatue

ஆனால் உடனே குறுக்கிட்ட ரோஷி, “வேண்டாம். வேண்டாம். அவனுக்கு இன்னும் எல்லோர் முன்பாகவும் பேசுவதற்குத் தகுதி வரவில்லை” என்றார்.

ரோஷியின் கருத்துப்படி ஒருவன் தன்னை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் எல்லோர் முன்னிலையிலும் பேசுவதற்குத் தகுதியானவன்.

ஜென் அகராதிப்படி “உன்னை நீ அறிவது” என்பது கென்ஷோ எனப்படும்.

அதாவது தனது இயற்கை நிலையை ஒருவன் உணர்ந்து அறிந்து அதைச் சரி பார்ப்பதே கென்ஷோ!
சோகோ கென்ஷோ நிலையை எய்தவில்லை. ஆகவே அவர் பேசுவதற்குத் தகுதி அற்றவர். என்ன செய்வது?

சின்ன உண்மை
இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரே ஜென் பிரிவை ஸ்தாபித்தவர் என கூறப்படுகிறது. அவர் ஒரு சுவரை நோக்கி ஒன்பது வருடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.பிறகு நடந்தது பெரும் வரலாறு ஆனது!

-தொடரும்

Philosopher who carried Lantern in day Time!

Philosopher who carried Lantern in day Time!

A few men in history carried lantern (lamp) in the day time to enlighten mankind. Another BLIND man carried a torch during night time! Another Tamil scholar was called ‘Day Blind’ and he got enlightened by the criticism. Read the following three anecdotes for more enlightenment.

 

Diogenes (410- 320 BC) was a Greek philosopher. He belonged to Sinope in modern Turkey, an ancient Greek colony. He came to Athens (now capital of Greece) and founded the Cynic sect with his Guru Antisthenes. The English word Cynic (doggish) came from this sect. People who belonged to this sect lived like Hindu ascetics sacrificing all comforts. Greeks thought it is a dog’s life. Diogenes was said to have lived in a big broken jar. When Alexander the Great came to him and asked what he could do for him, Diogenes asked him to move away so that his shadow would not block the sunlight! He wandered through Athens with a lamp in day time! When people laughed at him, he told that he was looking for an honest man!

The same story was attributed to many others as well.

 

Blind man carrying a lantern

A blind man was carrying a lantern during a dark night. He was carrying a staff in one hand for support and a lantern in another hand. People who saw him were puzzled. A young man could not control his laughter. He said to him, “you are blind. Why do you carry a lantern? Do you think that you could see something?”

The blind man answered him calmly, “My friend, I keep this lantern so that people like you do not bump against blind old man like me”.

A saint of South India used this story to emphasize another point. He said, Even if you don’t understand the ancient scriptures and rituals (scripturally blind), just keep on doing them. You may be blind, but at least it would help others to see something.

‘Blind leading the blind’ is another phrase we come across in Hindu and Christian scriptures.

Tamil Scholars’ Wisdom

Marai Jnana Sambandhar was a Saivite scholar of 14th century. He blindfolded himself with a cloth like the famous epic woman Gandhari of Maha Bharata. He was the author of several scholarly works including ‘Sivadharmotththaram’ and lived in Chidambaram. His Mutt (place of religious head) was called Kankatti Mutt=blindfold Mutt. The reason he blindfolded himself was to avoid seeing the evil or bad activities of men. He was thorough with all the Saivite scriptures and translated many books from Sanskrit.

There were several people with the same name Mari Njana Sambhandhar. Umapathi Sivacharyar was the disciple of one of them. He was considered an authority of Saiva Sidhdhanta. He used to go to temple in palanquin because of his high status. One day a beggar saw this and mocked at him, “look at this, a Day Blind is travelling on a Dry Wood!” ( in Tamil Patta Kattaiyil Pakal Kurudu Ekuthu Paar)

Palanquins are made up of dry bamboos. The beggar criticized him for his luxurious life in spite of his great scholarship. Wisdom dawned upon him as soon as he heard the beggar’s words. Immediately he got down from the palanquin and stopped using them as a transport for temple visit.

Blind people and lanterns can make men richer in wisdom!

N.B.Those who use my posts are requested to give the name of the author, London Swaminathan, or the blog name. My posts are simultaneously uploaded on to five or six blogs. This is the only support you can give to the writers without spending s single penny. Pictures are not mine. Thanks.

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி

கிரேக்க நாட்டில் டயோஜெனிஸ் என்ற ஒரு ஞானி இருந்தார். அவர் அலெக்ஸாண்டர் காலத்தில், 2350 ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்தவர். இப்பொது துருக்கியில் இருக்கும் சினோப் நகர் ஒரு காலத்தில் கிரேக்க காலனியாக இருந்தது. அங்கே பிறந்த டயோஜெனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகருக்குக் குடியேறினார். ஆண்டிஸ்தெனிஸ் என்ற குருவுடன் சேர்ந்து ‘’ஸினிக்’’ இயக்கத்தைத் துவக்கினார். ‘சினிக்’= எதிலும் குற்றம் காண்பவன், நன்மையில் நம்பிக்கையற்றவன்= என்ற ஆங்கிலச் சொல் இவர்கள் மூலம்தான் வந்தது.

 

இந்த ‘சினிக்’ இயக்கத்தினர் இந்திய யோகிகள், சித்தர்கள், ஆண்டிப் பண்டாரங்கள் போல வாழ்க்கை நடத்துபவர்கள். டயோஜெனிஸ் ஒரு பெரிய உடைந்த ஜாடியில், தெருவோரமாக வாழ்ந்தார். மாமன்னன் அலெக்ஸாண்டர் அவரைப் பார்க்க வந்தான். “ஐயா, பெரியவரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?” என்று பணிவோடு கூறினான். டயோஜெனிஸோ, ‘சினிக்கல்’ ஆக பதில் தந்தார்.

 

“ஐயா, மாமன்னரே, சற்றே விலகும், சூரிய வெளிச்சத்தை மறைக்காமல் விலகிப் போங்கள்” என்றார் டயோஜெனிஸ்.

அவர் பகல் நேரத்தில் தெருக்களில் போகும் போது கையில் லாந்தர் விளக்கை எடுத்துச் செல்வாராம். ‘’ஐயா ,உங்களுக்கு என்ன பைத்தியமா? பகலில் விளக்கு எடுத்துச் செல்கிறீர்களே?’’, என்று நகைப்போரிடம், ‘’நான் நேர்மையான ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்பார்.

விளக்குடன் போன குருடர்

இன்னொரு வயதான ஞானி கண் பார்வையற்றவர். அவர் இருட்டு நேரத்தில் போகும் போது ஒரு கையில் கைத்தடியும், மற்றொரு கையில் விளக்கும் கொண்டு செல்வார். எல்லோருக்கும் ஒரே புதிராக இருக்கும். இதைப் பார்த்த ஒரு இளைஞனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘’ஐயா, என்ன உங்களுக்கு பைத்தியமா? கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா? ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா?’’ என்றான்.

 

அந்தக் கிழவனார் அமைதியாக பதில் தந்தார், ‘’அன்பரே, எனக்கு கண் தெரியாது என்பது உண்மையே. உம்மைப் போன்ற பார்வையுடையவர்கள் என் மீது தடுக்கி விழக் கூடாது அல்லவா?’’ என்றார். தமிழ் நாட்டு மஹான் ஒருவர் இதே உதாரணத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு உண்மையை விளக்கினார். வேதங்கள், இந்து மத சடங்குகளுக்கு அர்த்தம் தெரியாவிடிலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்துவாருங்கள். நீங்கள் பொருள் அறியாத குருடர்களாக இருக்கலாம். எதிர் (காலத்தில்) வருவோருக்கு அது வெளிச்சம் போடும் என்று.

 

பட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் !

தமிழ் நாட்டில் பல மறைஞான சம்பந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் சிதம்பரத்தில் வாழ்ந்தார். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி போல கண்கட்டி வாழ்ந்தார். அவரது மடத்துக்கு ‘’கண்கட்டி மடம்’’ என்றே பெயர். நிறைய நூல்களை எழுதியவர். மெத்தப் படித்தவர். இருந்தும் மற்றவர்களின் தீய , நன்மையற்ற செயல்களைக் காணக்கூடாது என்று கருதியவர்.

மற்றொரு மறைஞான சம்பந்தரரின் சீடர் உமாபதி சிவாச்சார்யார்.சைவ சமய சந்தான குறவர் நால்வரில் ஒருவர். மாபெரும் அறிஞர். பல ஆதாரபூர்வ நூல்களை எழுதி சைவ சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். உமாபதி சிவம் , தினமும் கோவிலுக்குப் பல்லக்கில் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் பூஜையை முடித்துக்கொண்டு வருகையில், பிச்சைக்காரர் வடிவில் வந்த ஒரு ஞானி, உமாபதி சிவத்தின் பல்லக்கைப் பார்த்து, “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் அவருக்கு ஞானம் உதித்தது. உடனே பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அன்று முதல் கோவிலுக்கு வந்து போக அவர் பல்லாக்கைப் பயன்படுத்தவே இல்லை.

பட்ட கட்டை என்பது பல்லக்குக் கட்டையைக் குறிக்கும். பகல் குருடு என்பது படித்தும் பக்குவ ஞானம் பெறாத நிலையைக் குறிக்கும்.

ஆக, பகலில் வெளிச்சம் போட்டும், இருட்டில் வெளிச்சம் போட்டும் தத்துவப் பிரகாசத்தை உண்டாகியவர்களை உலகம் இன்றும் மறக்கவில்லை.

(தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டு கட்டுரையைப் பயன்படுத்துகையில் எழுதியோரின் பெயரையும் –லண்டன் சுவாமிநாதன்– பிளாக்–கின் பெயரையும் வெளியிடுவதுதான்)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

தமிழில் அருமையான 20,000 பழமொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையவை. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பொன்மொழி. எதையும் இளமையில் செய்தால் மிகவும் எளிதாகவும் வாழ்க்கை முழுதும் பயன் தருவதாகவும் அமையும். இன்னொரு பழமொழி ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதாகும். இதை விளக்க குமரகுருபரர் எழுதிய ‘நீதிநெறி விளக்கத்தில்’ ஒரு அருமையான பாடல் உள்ளது.

 

பல்லக்கு மூங்கில்

“ வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்

வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்

வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து

தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”

பொருள்: இளமையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமானது. கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். இதேபோல இளமையில் கஷ்டப்பட்டு கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும் கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.

குமர குருபரர், ஒரு மூங்கில் கழியை வைத்து அழகான கருத்தை விளக்குகிறார். கோவிலில் இருந்து உலா வரும் சுவாமியை பல்லக்கில் தூக்கி வருவதை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கான வளைந்த மூங்கில் எங்கே விளைகிறது? எங்கேயும் விளையாது. மூங்கில் வளரும் காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடுவார்கள். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம்.

இளைஞன் முதுகில் யானை!

ஒரு சர்கஸில் 5 அல்லது 6 டன் எடை உடைய ஒரு யானை சுமார் 100 கிலோ எடை உடைய ஒரு மனிதன் மேல் நிற்பதைப் பார்த்து எல்லோரும் வியந்தார்கள். அவன் படுத்தவுடன் அவன் மீது ஒரு பெரிய பலகையை வைப்பார்கள். அதன் மீது யானை ஏறி நிற்கும். இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் அவரைப் பேட்டி காணச் சென்றார். ‘நீங்கள் யோகாசனம் பயின்று ஏதேனும் அபூர்வ சக்தி பெற்றிருக்கிறீர்களா? எப்படி இதைச் செய்ய முடிகிறது? என்று பத்திரிகை நிருபர் கேட்டார். அதற்கு அந்த இளைஞர், நான் பள்ளிக்கூடம் கூட போனது இல்லை, எனக்கு யோகமும் தெரியாது, ஆசனமும் தெரியாது. இந்த யானை குட்டியாக இருந்தபோது இந்த சர்க்கஸ் அதை விலைக்கு வாங்கியது. அன்று முதல் என் மீது ஏறி நிற்கும் பயிற்சியைத் துவக்கினார்கள். அது சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதானபோதும் எனக்கு பாரம் தெரிவதில்லை என்றார்.

 

இது நம் வாழ்க்கையில் பெரிய உண்மையைப் போதிக்கிறது. பல்லக்கு மூங்கில் போல வளையவும், பெரிய பாரத்தைச் சுமக்கவும் இளமை முதல் பயிற்சி தேவை.

 

(20000 தமிழ் பழமொழிகள், பெண்கள் பற்றிய பழமொழிகள், யானை பற்றிய பழமொழிகள் முதலிய பழமொழிக் கட்டுரைகள் ஏற்கனவே இந்த பிளாக்கில் ஏற்றப்பட்டுள்ளன).

 

 

MAXIMUM BRAIN POWER

Book Review

MAXIMUM BRAIN POWER

By Santhanam Nagarajan

“If the brain were so simple that we could understand it, we would be so simple we couldn’t” – so said Emerson M.Pugh.

Brain is a mystery. The brain is a wonderful organ. Scientists are amazed on seeing the complexities of the brain. Earlier the brain was used to compare with the computer. Now scientists have come to the conclusion that it is beyond anybody’s imagination and could not be compared with computer that simply process, store, and route information.

 

The book Maximum Brainpower by Shlomo Breznitz and Collins Hemingway is worth reading. Each and every page of this book is giving some new information based on scientific studies. Who would not like to enhance his/her brainpower?

The readers will be benefitted by the ‘lessons in Brainpower’ given by the authors at the end of the chapters.

Shlomo Breznitz is the founder of Cognifit, a company devoted to the goal of improving cognitive fitness. Collins Hemingway is a writer and technologist.

 

The book has five major parts and consists of 18 chapters in total.

We are struck with wonder when we come to know that the experts know nothing. John brought millions of dollars in profits every month to his company by buying and selling U.S.Dollars against the German Mark. After sitting idle for many days suddenly bought eight million marks one day and the value of the mark went up. The author who was asked to study the secret behind the success of John asked him why a bet was made at that particular moment!

 

The answer was,” I suddenly felt”. This feeling is always behind the success of experts. Breznitz conclude that the experts have no idea as to how they do and what they do! And expert systems are themselves problematic if the goal is to match human thinking and behavior!

The Human Brain is unique. The thinking process is matchless!

 

A number of interesting studies and their results revealed in the book make our eyes wide open! For example note this result of an extensive study. People who have gone to college have one-third the likelihood of developing Alzheimer’s or another frightening, degenerative brain disease compared to everyone else. People who have a higher education decrease their risk of dementia by two-thirds!

The authors throw light on I.Q. and cognition. People who challenge their brains throughout life do better than those who do not!

 

Cognitive reserve which offset the effects of the brain disease could be developed through education, engaging work, and other taxing mental challenges in our lives.

Train your mind. Mental training (learning) will increase brain weight, blood supply, and the number of branches that neurons have. It also physically builds brain and helps to keep it healthy.

Daily life does not provide enough stimulation and hence we need regular exercise for brain.

 

Take any page of the book, you will find a very valuable suggestion to enhance your brainpower. The facts are enumerated with authority.

All men and women who would like to lead a very successful life with cognitive abilities should own this book and practice the suggestions given by Breznitz and Hemingway.

The books are of two types. First type- read and throw it away. Second type – keep it with you forever. This book is of the second type and I very strongly recommend everybody to get it immediately

They All Laughed : Book Review

 

Book Review

They All Laughed: Anecdotes From the Lives of the Great Scientists

By Santhanam Nagarajan

 

“Invention is a very tough business. It takes a thick skin and the ability to keep smiling after constantly hearing the word no” – Ira Flatow

Behind every invention there will be a story. Those who dig could find it!

It is indeed a pleasure to read anecdotes from the lives of the great men! And rarely we could find a good book that gives anecdotes only, especially from the lives of the great scientists.

The book under review titled ‘They all laughed’ is fulfilling our search towards that direction. Written by Ira Flatow, the book consists of 24 chapters that cover the fascinating stories behind the great inventions from light bulbs to lasers.

 

Ira Flatow was science reporter for CBS This Morning and NPR’s All Things Considered. He has written many articles and books.

There are fascinating facts about Ben Franklin, Edison, Westinghouse, George Eastman, John Baird, Chester F Carlson and Willy etc.

Read the following facts, and then you will be surprised!

Ben Franklin’s kite was never struck with lightning.

When Remington introduced the first typewriter, surprisingly most people did not find it useful!

When Carlson received a patent for electrophotography his wife yelled at him, “Move out of my kitchen”! So he moved to the back of a beauty shop. No one wanted the Xerox machine initially!

The idea for transmitting messages by laser dates backs to 1880s.

 

The fax is older than the telephone and the radio! The invention of telephone is indeed a happy accident!

Astronauts faced a unique problem during their space travel; how to keep track of all of their stuff that are floating! The answer was Velcro – derived from velvet and crochet. Velcro was first made in France and now NASA uses ribbons of unique fastening material. George de Mestral invented Velcro!

Microwave popcorn was accidentally invented in 1946 by Percy L.Spencer. Actually he patented 120 inventions!

All the above facts are written based on an extensive research by the author Ira Flatow.

The book could be used by science teachers in order to make their subject very interesting. At home, parents could tell stories behind the great inventions to their children!

 

Ira Flatow may write some more books covering more anecdotes. It would be better to keep them brief to make them more interesting to read!

I recommend this book to those likeminded persons like me who constantly search for good anecdotes!

 

(My brother S. Nagarajan has written more than 3000 articles in Tamil in 18 magazines and published 52 books. He has written hundred articles in EzineArticles.com so far. He reviews the best books also regularly for the benefit of book lovers– : london swaminathan)

 

சினம் காக்க!

12.ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 12 ச.நாகராஜன் 

சினம் காக்க!

 

இலங்கையைக் கொளுத்திய பின்னர் அனுமன் சற்று சிந்திக்கிறார்.

ஆஹா! என்ன காரியம் செய்து விட்டேன் என்று நினைத்த அவருக்கு மனதில் பயம் உண்டாயிற்று. அப்போது அவர் கூறிய நான்கு ஸ்லோகங்கள் சுந்தரகாண்டத்தில் ஐம்பத்தைந்தாவது ஸர்க்கத்தில் 3,4,5,6வது ஸ்லோகங்களாக அமைகின்றன.

 

தன்யாஸ்தே புருஷ ச்ரேஷ்டோ யே புத்யா கோபமுத்திதம்

நிருந்தந்தி  மஹாத்மானோ தீப்த மக்னி மிவாம்பஸா

 

யே – எவர்கள்

உத்திதம் கோபம் – சீறி வரும் சினத்தை

புத்யா – அறிவைக் கொண்டு

தீப்தம் அக்னி –பற்றி எரியும் தீயை

அம்பஸா – நீரைக் கொண்டு

இவ – எப்படி அணைக்கிறார்களோ அப்படியே

நிருந்தந்தி – அடக்கிக் கொள்கிறார்களோ

தே – அவர்களே

தன்யா: – தன்யர்கள்

புருஷ ச்ரேஷ்டா – புருஷ ச்ரேஷ்டர்கள்

மஹாத்மான: – மஹாத்மாக்கள்

 

எவர்கள் சீறி வரும் சினத்தை அறிவைக் கொண்டு பற்றி எரியும் தீயை ஜலத்தால் அணைப்பது போல அடக்கிக் கொள்கிறார்களோ அவர்களே தன்யர்கள்; புருஷர்களில் உயர்ந்தவர்கள்; மஹாத்மாக்கள்.

 

க்ருதத: பாபம் ந குர்யாத்க: க்ருத்தோ ஹன்யாத் குரூநபி

க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூநதிக்ஷிபேத்

 

க்ருதத: – கோபத்திற்காளாகிய

க: – எவன் தான்

பாபம் – பாவத்தொழிலை

ந குர்யாத் – செய்யாதிருப்பான்?

க்ருதத: – கோபம் கொண்டவன்

குரூன் அபி – பெரியோர்களையும் கூட

ஹன்யாத் – கொலை புரிவான்

க்ருதத: – கோபத்திற்காளான

நர: – புருஷன்

பருஷயா – கடுமையான

வாசா – மொழியால்

சாதூன் – சாதுக்களை

அதிக்ஷிபேத் – எடுத்தெறிந்து பேசுவான்

 

கோபத்திற்காளாகிய எவன் தான் பாவத் தொழிலைச் செய்யாதிருப்பான்? கோபம் கொண்டவன் பெரியோர்களைக் கூடக் கொலை செய்வான். கோபத்திற்காளான புருஷன் கடுமையான மொழியால் சாதுக்களை எடுத்தெறிந்து பேசுவான்,

 

வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித்

நாகார்யமஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித்

 

ப்ரகுபித: – கோபம் தலைக்கேறியவன்

வாச்யாவாச்யம் – எது சொல்லத் தகுந்தது எது சொல்லத்தகாதது என்பதை

கர்ஹிசித் – எப்பொழுதும்

ந விஜானாதி – பகுத்தறிய முடியாது

க்ருத்தஸ்ய –கோபம் கொண்டவனுக்கு

அகார்யம் – தகாத செயல் என்பது

ந அஸ்தி – இல்லை

க்வசித் – இந்த ஸ்திதியில்

அவாக்யம் – தகாத சொல்லென்பதும்

ந வித்யதே – கிடையாது

 

கோபம் தலைக்கேறியவனுக்கு எது சொல்லத் தகுந்தது எது சொல்லத் தகாதது என்பதைப் பகுத்தறியவே முடியாது. கோபம் கொண்டவனுக்குத் தகாத செயல் என்பது இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் தகாத சொல் என்பதும் அவனுக்குக் கிடையாது,

 

ய ஸமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி

யதோரக ஸ்த்வசம் ஜீர்ணாம் ஸவை புருஷ உச்யதே

 

ய: – எவனொருவன்

ஸமுத்பதிதம் – தலைக்கு மேலேறிய

க்ரோதம் – சினத்தை

க்ஷமயா – பொறுமையைக் கொண்டு

உரக: – சர்ப்பம்

ஜீர்ணாம் – ஜீர்ணமான

த்வசம் – தோலை

யதா – எப்படி விடுகிறதோ அப்படி

நிரஸ்யதி – விட்டு விடுகிறானோ

ஸ: வை – அவன் தான்

புருஷ: ஏவ – ஆண்பிள்ளையென

உச்யதே – சொல்லப்படுகிறான்

 

எவனொருவன் தலைக்கு மேலேறிய கோபத்தை பொறுமையின் மூலம் சர்ப்பம் ஜீரணமான தோலை எப்படி விட்டு விடுகிறதோ அதே போல விட்டு விடுகிறானோ அவனே ஆண்பிள்ளை என்று சொல்லப்படுகிறான்.

கோபத்தைப் பற்றிய அனுமனின் இந்த சிந்தனை மனித குலத்திற்கே உரியது அல்லவா!

செல்லிடத்துக் காப்பான்  சினம் காப்பான்அல்லிடத்துக்

காக்கின் என்? காவாக்கால் என்? (குறள் 301) என்று எங்கு கோபம் செல்லுபடியாகுமோ அங்கே தான் முக்கியமாக சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது பொருள் பொதிந்ததல்லவா!வெகுளாமை அதிகாரத்தில் அவர் கூறும் 10 குறள்களும் கருத்தூன்றிப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டியவை.

 

தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)

சினம் காக்கப்படாவிட்டால் அது தன்னையே அழித்து விடும் என்பது வள்ளுவரின் எச்சரிக்கை.

இலங்கையில் அனுமன் சினம் பற்றி நன்கு சிந்தித்து அதன் பாதகங்களை நன்கு தெளிவாக்குகிறான்!

 

அனுமனின் சிந்தனை மனித குலத்திற்கான பொதுவான சிந்தனை அல்லவா!

**********  

 

எல்லோருக்கும் திறமை இருக்கிறது!

 

சம்ஸ்கிருதச் செல்வம்- Part 13

 

வீணான அக்ஷரமோ வேரோ கிடையாது! வீணான மனிதனும் இல்லை!

ச.நாகராஜன்  

 

     ஸ்வாமி விவேகானந்தர் இந்திய சமூகத்தைப் பற்றி அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த மாபெரும் மகான். இந்தியரைப் பொருத்த மட்டில் ஒரு பெரும் பிழை இருக்கிறது என்பது அவரது கணிப்பு.

 

“ஒரு நிரந்தர அமைப்புக்கு கட்டுப்பட்டு இருக்க முடியாது; எதையும் ஒழுங்காக திட்டமிட்டு ஒழுங்காக அமைத்தல் இந்தியருக்குக் கூடி வராத ஒன்று.” என்பது அவரது கணிப்பு.

 

முதலில் ‘ஆர்கனைஸ்’ (organize) என்ற சொல்லை இந்தியர் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவரது அன்புரை! யார் யாருக்கு எது எது முடியும் என்பதை உணர்ந்து அவரவர் பணியை மேற்கொண்டு பணிகளைப் பிரித்துக் கொள்ளல் வேண்டும் என்பது அவரது அறிவுரை.

அவரது ஆங்கில உரையை அப்படியே காணலாம்:

“We Indians suffer from a great defect, viz. we cannot make a permanent organization: and the reason is that we never like to share power with others and never think of what will come after we are gone.

 

If one man dies, another – why another only, ten if necessary – should be ready to take it up. Secondly if a man’s interest in the thing is not roused he will not work whole-heartedly; all should be made to understand that every one has a share in the work and property; and a voice in the management. Give a responsible position to everyone alternatively, but keep a watchful eye so that you can control when necessary, thus only men be trained for the work. Set up such a machine as will go on automatically, no matter who dies or lives.

Skillful management lies in giving everyman, work after his own heart.”

இதையே பண்டைய நாட்களிலேயே எழுந்த அற்புதமான ஒரு ஸ்லோகம் விளக்குகிறது:-

 

நாக்ஷரம் மந்த்ரஹிதம் ந மூலம்நௌஷதிம்

அயோக்ய புருஷம் நாஸ்தி யோஜகஸ்த்த்ர துர்லப:

 

நாக்ஷரம் மந்த்ரஹிதம் – மந்திரத்தில் பயன்படுத்த முடியாத எந்த எழுத்தும் இல்லை (There is no letter that cannot be used as a mantra)   

                                                                                                                                          

ந மூலம்நௌஷதிம் – மருந்தாகப் பயன்படுத்த முடியாத எந்த வேரும் இல்லை (There is no root without some medicinal Value)

 

அயோக்ய புருஷம் நாஸ்தி – எந்த மனிதனும் உபயோகமற்றவன் என்று ஒதுக்கக் கூடியவன் அல்ல (There is no person who is absolutely useless)

 

யோஜகஸ்த்த்ர துர்லப: – யோஜகன் – ஒருவரது தகுதியைக் கண்டுபிடித்து அதை சரியான விதத்தில் பயன்படுத்தக் கூடிய திட்டமிடுபவனே அரிதாக இருக்கிறான் (A yojaka i.e. a person who can identify their utility and put them to proper use is, however, always rare.)

 

உரிய இடத்தில் உரிய விதத்தில் பயன்படுத்தப்பட்டால் அனைத்து எழுத்துக்களும் மந்திர எழுத்துக்களே; அதே போல மஹிமையை உணர்ந்து உரிய விதத்தில் பயன்படுத்தினால் அனைத்து வேர்களும் ஔஷத மூலிகைகளே; எந்த மனிதனும் உபயோகமற்றவன், எதற்கும் லாயக்கற்றவன் என்பதில்லை. உரிய விதத்தில் பயன்படுத்தப்பட்டால் ஒவ்வொருவனும் பெரிய காரியத்தை அவனளவில் சாதிக்க வல்லவனே! யாருக்கு என்ன தகுதி என்பதை உணர்ந்து திட்டமிடும் யோஜகன் தான் உண்மையில் அரிதானவன் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.

 

இந்திய சரித்திரத்தில் ஆயிரக் கணக்கானோரை இந்த ஸ்லோகத்திற்கு உதாரணமாக்க் கூறலாம். சத்ரபதி சிவாஜி பெரிய மொகலாய படை வைத்திருந்த ஔரங்கசீப்பையே திணற அடித்து தோற்கடித்தார். அவரிடம் இருந்த படை தளகர்த்தர்கள், படை வீர்ர்களை அவரவர்கேற்ற தகுதிப்படி அவர் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். சிறந்த யோஜகராக சிவாஜி திகழ்ந்ததை வரலாறு கூறுகிறது.

 

இதே போல ஒவ்வொருவரும் யோஜகனாகத் திகழ வேண்டும் என்பதை அற்புதமான இந்த ஸ்லோகம் கூறுகிறது!

 

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல்” (குறள் 517)

************

  Contact:- swami_48@yahoo.com