மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை! (Post No.2924)

Stephen Hawking

rticle Written by S Nagarajan

Date 27th June 2016

Post No.2924

 

பாக்யா 24-6-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை!
ச.நாகராஜன்

“30 நாட்களில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில் உங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” – ஜீனியக்ஸ் மாத்திரையைத் தயாரிக்கும் கம்பெனி

உலகின் புரட்சிகரமான மாத்திரை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. பெயர் ஜீனியக்ஸ் (Geniux) .இதைப் பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பிரப்ல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் கூறுகையில், “இது மனித குலத்தையே மாற்றப் போகிறது” (This pill will change humanity) என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

 
ஸ்டீபங் ஹாகிங் நரம்பு மண்டலக் கோளாறினால் பேச முடியாமல் அவஸ்தைப் படும் நோயாளி என்பதை உலகமே நன்கு அறியும்.
மூளையில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க விரும்பும் அவர் இப்படிப்பட்ட நற்சான்றிதழை ஒரு மாத்திரைக்குத் தந்துள்ளார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா!
தனது மூளை முன்பை விட கூர்மையாக செயல் பட ஜீனியக்ஸ் தான் காரணம் என்று கூறும் அவர், “மூளையானது ஒரு தசை போல. நீங்கள் அதை செயல்படுத்த சில துணைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்” என்கிறார். இந்த மாத்திரையை உட்கொண்ட டாம் பிராடி என்ற விளையாட்டு வீரரும் கன்யே வெஸ்ட் என்ற இசைக் கலைஞரும் இதைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாத்திரையே தனது வணிகத்தில் தான் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
“இது ஒரு மாயாஜால மாத்திரை (This pill is the real magic) என்பது அவரது புகழுரை!
இதை உட்கொள்வது பாதுகாப்பானது தானா? இதற்கு பதிலை, ஏழு வருட கால ஆய்வுக்குப் பின்னர் இந்த மாத்திரையை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று ஹார்வர்ட் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..
இது நுண்ணறிவைக் கூட்டுகிறது. “இதைச் சாப்பிட்டவுடன் வானத்தை மறைத்திருக்கும் மேகக் கூட்டம் விலகுவது போல இருக்கிறது; மூளை கூர்மையாகிறது” என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வின் தலைவர் டாக்டர் ரோஸன்ஹ்வுஸ் (Dr Rosenhouse), “இந்த மாத்திரையில் மூளைக்குத் தேவையான வைட்டமின்களும், இதர முக்கிய கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உடனடி நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல், பிரச்சினனகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளிட்ட அனைத்து மூளை சக்தியையும் வழங்குகிறது” என்கிறார்.
பூமியில் மனித குலத்தை அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் மாத்திரை இது என்கிறது ஆய்வுக்குழு.
இதைத் தயாரிக்கும் நிறுவனம் 5 பாட்டில்கள் மாத்திரைக்கு 100 டாலர் (சுமார் 6600 ரூபாய்) என விலையை அதிகமாக நிர்ணயம் செய்துள்ளது. என்றாலும் விற்பனை அமோகம் தான்! .
ஆய்வு மைய சோதனைகள் கீழ்க்கண்ட பலன்களை உறுதிப்படுத்தியுள்ளன :
கவனக்குவிப்பை 312 சதவிகிதம் அதிகரிக்கும்
படைப்பாற்றலை ஊக்குவிக்கும்
ஆற்றலை அதிகரிக்கும்
நினைவாற்றலை அதிகரித்து எதையும் உடனடியாக நினைவு கொள்ளும்படி செய்கிறது
நுண்ணறிவை 77 % அதிகரிக்கிறது.

ஜீனியக்ஸின் சூடு பறக்கும் விற்பனைக்கு சில விமரிசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இதன் விலை மிகவும் அதிகம்
இதில் உள்ள 19 மூலப் பொருள்களில் ஒன்றை மட்டுமே நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற 18பொருள்கள் என்னென்ன? இவற்றில் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்?
இந்த மாத்திரைக்கு பதிலாக தினமும் எட்டு மணி நேர உறக்கம், ஆரோக்கியமான உணவு, அளவான தினசரி உடற்பயிற்சிகள் போதுமே. மூளை நன்கு செயல்படுமே!” என்று இதை எதிர்க்கும் விமரிசகர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

ஜீனியக்ஸை உட்கொண்ட ஒருவர் எனது வேலைத்திறன் மிக அதிகமானது உண்மை. ஆனால் தூக்கம் போச்சு என்று அலட்டிக் கொள்கிறார். ஒரு மாணவரோ, “ ஐந்து பக்க ஆய்வுக் கட்டுரையை மூன்றே மணி நேரத்தில் முடித்து விட்டேன். ஜீனியக்ஸின் சக்தி அபாரம்”, என்கிறார்.
இதைப் பயன்படுத்திய ஒருவர் “எந்த இலட்சிய இலக்கை நான் நிர்ணையித்தாலும் அதை உடனே முடித்து விடுகிறேன். இனி பெரிய லட்சியம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது தான்!” என அங்கலாய்க்கிறார்.
உச்ச பட்ச புகழ் மொழியாக இதை “மூளையின் வயாக்ரா” என்று சொல்லிப் புகழ்கின்றனர், இதனால் பயன் பெறுவோர்!

எது எப்படியென்றாலும் ‘ஸ்மார்ட் பில்’ என்று அறிமுகப்படுத்தப்படும் ஜீனியக்ஸின் வருகை எதிர்கால மனித உலகை மாற்றப்போகும் மருந்துகளுக்கு ஒரு முன்னோடி என்று சந்தேகம் இல்லாமல் சொல்லலாம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

ரஷியாவைச் சேர்ந்த டிமிட்ரி ஃபெடொரோவிச் ஈகோரோவ் (Dimitri Fedorovich Egorov) பிரப்லமான கணித மேதை. (தோற்றம் 2-12-1869 மறைவு 10-9-1931)ரஷியாவில் கணித சங்கத்தின் தலைவராக இருந்த இவரை அனைவரும் பெரு மதிப்புடன் போற்றுவர். இவருக்கு கணித நூல்களின் மீது எவ்வளவு பற்றோ அவ்வளவு பற்று பைபிளின் மீதும் உண்டு. தேவாலயங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமாகப் பங்கேற்பார். ஆனால் ரஷிய புரட்சி தோன்றியவுடன் மார்க்ஸீய புரட்சிவாதிகள் இவருக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். கணித சங்கக் கூட்டத்தில் மதவாதிக்கும் கணிதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வியை எழுப்பினர். இதனால் பெரிதும் மனம் நொந்து போனார் அவர். தேவாலயங்கள் மாணவர்களின் உடற்பயிற்சிக்க் கூடங்களாக மாற்றப்பட்டன. வெவ்வேறு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாயின. அவர் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்து விட்டார்.
மாஸ்கோவில் சிவில் எஞ்ஜினியரிங் இன்ஸ்டிடியூட்டில் கணிதம் கற்பித்து வந்த அவரை மார்க்ஸீயவாதியான எர்னஸ்ட் கோல்மேன் என்பவர் “மாணவர்களைக் கவரும் அபாயகரமான மதவாதி” என்று ஏசினார். இதைத் தொடர்ந்து அவர் இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்தப் பணிக்கு நிகொலாய் கிரிகோரிவிச் செபொடார்யோவ் (Nikolai Grigorievich Chebotaryov) என்னும் மேதை நியமிக்கப்பட்டார். அவர் தனக்கு எப்படி அந்தப் பணி கிடைத்தது என்பதைத் தெரிந்து கொண்ட போது திடுக்கிட்டார். மாமேதையான ஈகோரோவுக்குப் பதிலாகத் தானா என்று திடுக்கிட்ட அவர் அந்தப் பணியை ஏற்க மறுத்து ராஜிநாமா செய்து விட்டார்.
அடுத்து 1930ஆம் ஆண்டு கணித சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். “பழ்மைவாதியான” அவரை புரட்சி அர்சாங்கம் சிறையில் அடைத்தது. சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் மாமேதை. நாளடைவில் அவரது உட்ல் நலிந்தது. அங்கு சிறையில் டாக்டராக இருந்தவர் செபொடார்யோவின் மனைவி. மரியா.
அவர் மாபெரும் கணித மேதையைச் சிறையில் கண்டு திடுக்கிட்டதோடு அவர் இருந்த நிலையைப் பார்த்து வருந்தினார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடையை மரியா மேதையின் சவத்தைத் தன் வீட்டிற்கே எடுத்துச் சென்று தன் கணவருடன் அவருக்கு ம்ரியாதை செலுத்தி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.
மாபெரும் மேதையான அவர் இன்றும் அனைவராலும் மதிக்கப்படுகிறார்.
*********

 

உடலூனமுற்றோருக்கு உதவுக: தமிழ்ப் புலவர்கள் அறைகூவல்!

Post No. 2922
Date 27th June 2016
Written by london swaminathan
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெண்மணி போரில் காயமடைந்தோருக்கு உதவி செய்து
புகழ் பெற்றதை அறிவோம். மேலை நாடுகளில் இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு ‘ஹாஸ்பிஸ்’Hospice
என்ற அமைதியான தங்கும் இடங்கள் இருப்பதை அறிவோம். முதியோர் காப்பகங்கள் இப்போது பல்கிப் பெருகி வருகின்றன. ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தும் அறக்கொடை நிறுவனங்களும்
பெருகி வருகின்றன. ஆனால் இவையனைத்தையும் பாரத நாடுதான் முதல், முதலில் உலகிற்குக் கற்பித்தது என்பதற்கு அசோகனின் கல்வெட்டுகளும், மணிமேகலை முதலிய காப்பியங்களும்,
புராணக் கதைகளும் சான்றாகத் திகழ்கின்றன.
உடலூனம் அடைந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்றோர், ஆதரவற்றோர் ஆகியோருக்காக
இன்று நிறைய அறக்கொடை நிறுவனங்கள் உதவி அளித்து வருகின்றன. அதே போல அரசாங்கமும் பல சலுகைகலை அறிவிக்கின்றன. ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இது பற்றி சிந்தித்து எழுதிவைத்திருப்பது வியப்பானது; மற்றும் தமிழர்களின் மனிதாபிமானத்துக்கும் இது ஒரு
எடுத்துக்காட்டு.

இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்போர் பின்ன்வரும் பாடல்களைப் படித்தாலே போதும்:–

காணார் கேளார் கால்முடமானார்
பேணுதலில்லார் பிணிநடுக்குற்றார்
யாவரும் வருக —
என்று அழைத்து மணிமேகலை உணவளித்ததை மணிமேகலை காப்பியம் மூலம் அறிகிறோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – என்பது பாரத நாடு முழுதும் போற்றப்படும் கொள்கை.

இதோ இன்னும் ஒரு சான்று:–

புண்பட்டார் போற்றுவார் இல்லாதார் போகுயிரார்

கண்கெட்டார் காலிரண்டு இல்லாதார் – கண்பட்டாங்

காழ்ந்து நெகிழ்ந்தவர்க்கீந்தார் கடைபோக

வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து (சிறுபஞ்சமூலம்)

பொருள்:- போரில் காயம் அடைந்தவர்களுக்கும், காப்பாற்றுவார் இல்லாத அனாதைகளுக்கும், உயிர்போகும் தருவாயில் இருப்பவர்க்கும், கண் தெரியாதவர்களுக்கும், இரண்டு காலும்
இல்லாமல் முடமானோருக்கும், மனம் உருகி, நெகிழ்ந்து உதவி செய்தவர்கள்,  சாகும் வரைக்கும் கஷ்டம் இல்லாமல் இன்புற்று இருப்பார்கள் என்று சிறுபஞ்சமூலம்
சொல்லும்.

ஏலாதி என்னும் நூலிலும் ஒரு பாடல் வருகிறது:-

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கால்

முடம்பட்டார் மூத்தார் மூப்பில்லார்க் – குடம்பட்

டுடையராயில்லுளு ணீத்துண்பார் மண்மேல்

படையராய் வாழ்வார் பயின்று (ஏலாதி)

பொருள்:– பெரும் கடனில் சிக்கித் தவிப்போருக்கும், பாதுகாப்பவர் இல்லாத குருடர்  முதலியோர்க்கும், எளியவர்களுக்கும், முடவர்க்கும் வாழ வழியற்ற முதியவவர்களுக்கும் அனாதைச் சிறுவர்களுக்கும் உதவுவோர் இந்த மண்ணுலகில் நால் வகைப் படைகளையுடைய
அரசர்கள் போல வாழ்வார்கள் என்று ஏலாதி கூறும்.

இறுதியாக அதே நூலில் இருந்த இன்னொறு பாடலையும் காண்போம்:–

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி

வாயிழந்த வாழ்வினார் வாணிகம் — போயிழந்தார்

கைத்தூண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கீந்தார்

வைத்து வழங்கி வாழ்வார்

.

பொருள்:–
அனாதைப் பிள்ளைகட்கும், கணவனை இழந்து தவிக்கும் விதவையர்க்கும், ஊமைகளுக்கும், வியாபாரத்தில் முதல் முழுதையும் இழந்தோருக்குமுணவுப் பொருளை இழந்தவர்க்கும், குருடர்களுக்கும் உதவியவர்கள் பிற்காலத்துக்கு புண்ணியம் சேர்த்து
வைப்பவராவர். போகும் வழிக்குப் புண்ணியம் தேடியவர் ஆவர்

–சுபம்–

 

இறந்த பின்னும் வாழ்கிறோம்: அறிவியல் ஆராய்ச்சி அளிக்கும் உண்மை!! (Post No.2917)

newscientist-30602015feb13

Article written by London swaminathan

 

Date: 24 June 2016

 

Post No. 2917

 

Time uploaded in London :– 8-33 AM

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

‘நியூ ஸயின்டிஸ்ட்’ NEW SCIENTIST என்ற பிரபல விஞ்ஞான பத்திரிக்கையில் இந்த வாரம் ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. ‘இறந்தபின்னும்” நம்முடைய ஜீன்கள், அதவது மரபணுக்கள் கொஞ்ச நேரத்துக்கு உயிர்வாழ்கின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

 

இதை நம்முடைய யோகிகளின் வாழ்க்கையுடன் ஒப்பிடுவது, இந்துமதத்தின் அறிவியல் பின்னணியை நன்கு விளக்கும்.

 

இறந்து போன மீன்களின், சுண்டெலிகளின் ஜீன்களை ஆராய்ந்ததில் அவைகளின் மரபணுக்கள் இரண்டு நாட்களுக்கு உயிரோடிருந்தது தெரிய வந்தது.

 

ஒருவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் அறிவித்த பின்னரும் இப்படி ஜீன்கள்/ மரபணுக்கள் வாழ்வதால் அவர் ‘இறந்தது’ உண்மையா? சட்ட பூர்வமானதா? என்ற புதிய கேள்விகளை இது எழுப்பும். இறந்து போனவர்களின்  மாற்று உறுப்புக்ளை மற்றவர்களுக்கு அளிப்பதிலும் புதிய அணுகுமுறை வரும்.

 

சியாட்டில் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக டாக்டர் பீட்டர் நோபிள்ஸ் நடத்திய ஆய்வில் மீன்களின் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் 548 ஜீன்களும், எலிகளின் 515 ஜீன்களும் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின்னரும் உயிரோடிருந்ததைக் கண்டார். நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் , செத்துப் போன பின்னர் அவர்களின் உடலில் 12 மணி நேரத்துக்கு பல ஜீன்கள் சுறு சுறுப்புடன் செயல்பட்டதையும் கண்டார்.

2kanchi on mat

எனது கருத்து:-

நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் விஷயத்திலேயே 12 மணி நேரத்துக்கு மரபு அணுக்கள் உயிரோடிருக்குமானால், வாழ்நாள் முழுதும் யோகம், ஆசனம் செய்தவர்களின் உடலில் இறந்த பின்னரும் ஜீன்கள், சுறுசுறுப்புடன் செயல்படுவதில் வியப்பில்லை.

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற முஸ்லீம் பெரியவரின் வாழ்க்கையில் , அவர் புதைக்கப்பட்ட பின்னரும் , தானம் வாங்க வந்த புலவருக்கு, அவர் கை நீட்டி மோதிரத்தைக் கொடுத்ததாக அறிகிறோம். இதுபற்றி முன்னரே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். மஹாபாரத அதிசயங்கள் பற்றிய கட்டுரையில் இறந்தவர்களின் உடலிலிருந்து, உயிர்கள் உண்டாக்கப்படதை எழுதிவிட்டேன்.

ஒரு யோகியின் சுய சரிதை என்ற புத்தகத்தில் பராஹம்ச யோகானந்தா(1893-1952) பற்றிய அதிசய செய்தி உள்ளது. அவர் இறந்து போய் இருபது நாட்களுக்குப் பின்னரும் அவர் உடல் அழுகவில்லை; அத்தோடு ஒளிவீசிக்கொண்டு திவ்ய தேஜசுடன் விளங்கியது என்று அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் மார்ச்சுவரி/ சவக் கிடங்கு டைரக்டர் ஹாரி டி.ரோவ் எழுதியுள்ளார்.

 

திருக்கோவிலுர் சுவாமி ஞானானந்தா சமாதி அடைந்த போது, அவர்களுடைய சிஷயர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது; சுவாமிகள் அடிக்கடி சமாதி நிலைக்குச் சென்று 150 ஆண்டுகளாகியும் இறக்காததால், இந்த முறையும் இப்படி அதிசயம் நடக்குமோ என்று காத்திருந்தனர். ஆனாலப்படி சமிக்ஞைகள் ஏதும் வராததால், காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் (1894-1994) சென்று கேட்டனர். அவரும் சில நாட்கள் பொறுத்திருந்து அடக்கம் செய்யலாம் என்று கருத்து தெரிவித்தார்.

 

அதர்வவேத, ரிக் வேத மந்திரங்களில் மரணம் பற்றிய மந்திரங்களில் உள்ள கருத்துகள் எதிர்காலத்தில் உண்மை யென்று நிரூபிக்கப்படும். இவை எகிப்திய மரணப் புத்தகத்தில் (THE BOOK OF DEAD தி புக் ஆப் டெட்) உள்ளதைப் போல இருப்பதையும் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.

 

ஒருவன் மரணம் அடைந்தவுடன் அவன் ஆவி உடலில் இருப்பதாகவும், சிதைத்தீ உடலில் பட்ட பின்னரே ஆவி வெளியேறும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

மேலும் 12 நாட்களுக்குப் பின்னரே அது பூமியைவிட்டு மேலுலகம் செல்லும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இதனால்தான் உலகம் முழுதும் 13 நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

 

உடலில் இருந்து வெளியேறும் ஆவிக்கு, இருளில் எங்கு செல்வது என்று தெரியாதாகையால், ஒருவர் இறந்த இடத்தில் விளக்கு ஏற்றிவைப்பதும் இந்துக்களின் வழக்கம். இதை மற்ற மதங்களும் பின்பற்றி மெழுகு வர்த்தி ஏற்றிவைக்கின்றனர். ஒருவர் இறந்த இடத்தில், இந்துக்கள் 12 நாட்களுக்கு விளக்கு ஏற்றிவைப்பதும் இதனால்தான். 13ஆவது நாளன்று ஆவி, இறந்த இடத்திலிருந்து மேலுலகத்துக்குப் பறந்துவிடும். கருடபுராணம் மற்றும் புரோகிதம் செய்துவைக்கும் பிராமணர்களின் செவிவழிச் செய்திகள் இதுபற்றி நிறைய தகவல்கலைத் தருவர். எதிர்காலத்தில் இவை அனைத்தும் விஞ்ஞான உண்மைகளாகி விடும்.

நியூ ஸைன்டிஸ்ட் – பத்திரிக்கையில் இப்போது வந்துள்ள செய்தி அதில் முதல் படி என்றால் மிகை இல்லை.

–சுபம்–

 

 

லெட்சுமி தங்காத இடங்கள் (கட்டுரை எண். 2916)

THANGA LAKSHMI

Article written by London swaminathan

 

Date: 24 June 2016

 

Post No. 2916

 

Time uploaded in London :– காலை 8-34

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சிலாஸ்சகந்தலேபஸ்ச மார்ஜாரோச்சிஷ்ட போஜனம்

ப்ரதிபிம்பேக்ஷணம் நீரே சக்ரஸ்யாபி ஸ்ரியம் ஹரேத்

சிலாஸ்சகந்தலேப: – கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்பவன்

மார்ஜார: உச்சிஷ்ட போஜனம் – பூனை சாப்பிட்ட மிச்சத்தை உண்பவன்

ப்ரதி பிம்பேக்ஷணம் நீரே – தண்ணீரில் தனது நிழலைப் பார்ப்பவன்

சக்ரஸ்யாபி ஸ்ரியம் ஹரேத்- விஷ்ணுவாக இருந்தாலும் (அவனது) செல்வத்தை லெட்சுமி நீக்குகிறாள்.

Xxx

 

lakshmi in kshetras

குசேலினம் தந்த மலாபஹாரிணம் பஹ்வாசினம் நிஷ்டூரவாக்ய பாஷிணம்

சூர்யோதயே சாஸ்தமயே ச சாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ரதாரிணம்

 

குசேலினம் – அழுக்காடை அணிபவன்

தந்த மலாபஹாரிணம் – பல்லை நோண்டி அழுக்கெடுப்பவன்

பஹ்வாசினம் – பெருந்தீனிக்காரன்

நிஷ்டூரவாக்ய பாஷிணம் – கடும்/ சுடு சொற்களைப் பேசுபவன்

சூர்யோதயே சாஸ்தமயே ச சாயினம்- சூரியன் உதிக்கையிலும், அஸ்தமிக்கையிலும் படுக்கையில் இருப்பவன்

விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ரதாரிணம் – விஷ்ணுவேயானாலும், லெட்சுமி விட்டுவிட்டுப் போய்விடுவாள்.

–சுபம்–

பெண்களுடன் வாதாடாதே (Post No.2913)

RelationshipFighting

Article written by London swaminathan

 

Date: 22 June 2016

 

Post No. 2913

 

Time uploaded in London :– 8-33 AM

 

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனிதனுக்கு இழிவை ஏற்படுத்தும் 6, பெருமை தரும் 4, விஷயங்கள்

donkey ride

பால சகித்வம் = சிறுவர்களுடன் நட்பு (பக்குவம் அடையாதோருடன் நட்பு)

அகாரண ஹாஸ்யம் = காரணமில்லாமல் தனக்குத் தானே சிரித்தல் (மொபைல் போன், ஐ பேட் – இவைகளைப் பார்த்து பொது இடங்களில் சிரித்தல்)

ஸ்த்ரீஷு விவாதோ= பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் (மனைவி, சஹோதரிகளுடனோ, அடுத்தவீட்டுப் பெண்களுடனோ சண்டை போடுதல்)

 

அசஜ்ஜன சேவா = கெட்டவர்களுக்குச் செய்யும் உதவி (லஞ்சம் கொடுத்தல்)

கார்தப யானம் = கழுதை சவாரி (ஓட்டை காரில் சவாரி செய்தல்)

அசம்ஸ்க்ருதவாணி = கொச்சை மொழியில் பேசுதல் (பண்பற்ற மொழி; கீழ்மக்கள் பயன்படுத்தும் மொழி)

ஷட்சு = இந்த ஆறில்

நர: – மனிதன்

லகுதாம் = சிறுமையை

உபயாதி = அடைகிறான்.

 

பாலசகித்வமகாரணஹாஸ்யம் ஸ்த்ரீஷு விவாதோ(அ)சஜ்ஜனசேவா

கார்தபயானமசம்ஸ்க்ருதவாணீ ஷட்சு நரோ லகுதாமுபயாதி

Xxxx

school boys

பெருமை தரும் நான்கு விஷயங்கள்

एको धर्मः परं श्रेयः क्षमैका शान्तिरुत्तमा।
विद्यैका परमा दृष्टिरहिंसैका सुखावहा॥

ஏகோ தர்ம: பரம்ஸ்ரேய: க்ஷமைகா சாந்திருத்தமா

வித்யைகா பரமா த்ருஷ்டிரஹிம்சைகா சுகாவஹா

 

 

தர்மம் (என்ற ‘ஒன்று’ ) மாபெரும் மேன்மையைத் தரும்

பொறுமை (என்ற ‘ஒன்று’ ) சிறந்த அமைதியைத் தரும்

கல்வி (என்ற ‘ஒன்று’ ) அளவற்ற நிறைவைத் தரும்

அஹிம்ஸை (என்ற ‘ஒன்று’ ) தொடர்ந்து சுகத்தைத் தரும்.

–உத்யோக பர்வம், மஹாபாரதம்

 

–subam–

 

 

இமயமலையில் அதிசய ஏரி: கம்பனும் பாடிய புகழ்மிகு ஏரி (Post No.2911)

12-gurla-mandhata-and-lake-manasarovar-from-seralung-gompa

Research Article written by London swaminathan

 

Date: 21 June 2016

 

Post No. 2911

 

Time uploaded in London :– 13-53

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இமயமலையிலுள்ள அதிசய ஏரி பற்றி கம்பனும் பாடியிருக்கிறான்! இன்று You Tube யூ ட்யூப், Whats up வாட்ஸ் அப், Facebook Fபேஸ் புக், Google கூகுள் மூலம் அரை நொடியில் பார்க்கக்கூடிய இமய மலை அதிசய ஏரி பற்றி தமிழர்களுக்கு 2000 ஆண்டுகளாகத் தெரியும்! ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத, காட்டு மிருகங்கள் நிறைந்த பாதை வழியாக அந்தக் காலத்திலேயே ஆதிசங்கரரும் சாது சந்யாசிகளும் சென்ற புனித மலை இமய மலை. அதிலுள்ள கயிலை மலைக்கு நம்மவர் 2000 ஆண்டுகளாகச் செல்வது தேவாரம், திருவாசகம் மூலம் தெள்ளிதின் விளங்கும்.

 

இப்பொழுது கஞ்ஜன் ஜங்கா என்று அழைக்கப்படும் இமயமலைச் சிகரம் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டிருக்கிறது. காஞ்சன ஸ்ருங்கம் என்ற அருமையான சம்ஸ்கிருதச் சொல்லை இப்படிக் கஞ்சன் ஜங்கா ஆக்கிவிட்டனர். ஆனால் புறநானூற்றில் அழகாக பொற்கோடு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இமயமலை பற்றி முடிநாகராயர் பாடியது அப்படியே காளிதாசனின் குமார சம்பவத்தில் இருக்கிறது. இதுதவிர பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை காரிகிழார் பாடிய ஆறாவது பாடலிலும் இமயமலை வருணனை வருகிறது. இவையெல்லாவற்றையும் காளிதாசன், சங்க காலத்துக்கும் முந்தைய புலவன் என்ற எனது  ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி விட்டேன். அரைத்த மாவையே அரைக்காமல் கம்பன் சொன்னதைக் காண்பிக்கிறேன்.

கயிலை மலைபற்றியும், சிவபெருமான் பற்றியும் கம்ப ராமாயணத்தில் நிறைய குறிப்புகள் உள்ளன. ஆனால் அவன் உலக இயற்கை அதிசயங்களில் ஒன்றான மானச சரோவர் குறித்தும் பாடியது வியப்பை ஏற்படுத்தும்.

 

மானசமடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே

மேல்முறை அமரர் போற்றும் விழுநதி அதனினோடும்

ஆன கோமதிவந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால்

போனபின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்

-பால காண்டம், கம்ப ராமாயணம்

 

ராம லெட்சுமணர் ஆகிய இரண்டு டீன் ஏஜ் பாய்ஸ்களை “உலக நண்பன்” (விஸ்வாமித்ரன்) என்ற முனிவன் அழைத்து செல்கிறான். பெரிய இரைச்சல் கேட்டவுடன் இருவரும் அது என்ன சப்தம் என்று கேட்கின்றனர். விஸ்வாமித்ரர் (உலக நண்பன்) தனது பூகோள அறிவைக் காட்டுகிறான். ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டையே ஒன்றுபடுத்தினான், அவன் வந்தபிறகுதான் நாம் ‘டிராவல் செய்யவே துவங்கினோம் என்று பல அரைவேக்காடுகள் பிதற்றியதுக்கெல்லாம் கம்பன் பதில் சொல்கிறான்:–

பாடலின் பொருள்:–

மானஸம் என்னும் பொய்கையில் (மானஸ ஸரஸ்) உற்பத்தியாகிப் பாய்வதால் சரயூ நதி என்ற பெயரைப் பெற்று, மேன்மைமிகு வாழ்க்கை படைத்த தேவர்களால் போற்றப்பட்டது. அச்சிறந்த நதியோடு கோமதி நதி வந்து கலப்பதால் எழும் ஒலி இது – என்று உலகநண்பன்/விஸ்வாமித்ரன் செப்பினான். மூவரும் தொடர்ந்து சென்று, குளித்தவர்களின் பாவங்களையெல்லாம் போக்கும் நதியை (கங்கை) அடைந்தனர்.

 

அந்தக் காலத்தில் எவ்வளவு ஜியாக்ரபி/ புவியியல் அறிவு இருந்திருக்கிறது! வால்மீகி செப்பியதை கம்பனும் மொழிந்ததிலிருந்து அவர்களுடைய புவியியலறிவு புலப்படும்.

manasarowar-see

ஏரியின் அதிசயங்கள் பற்றிச் சொல்வதற்கு முன் இன்னும் இரண்டு பாடல்களைக் காண்போம்:-

அருவலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர்

வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திவரும் மேருப்

பருவரையும் நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்

இருவரையும் இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள்.

 

இலக்குவன் (லெட்சுமணன்), சத்துருக்கனன் ஆகிய இருவரையும் சுமித்திரை பெற்றெடுத்த செய்தியைச் சொல்லும் பாடல் இது. ஒருவரை பொன் மயமான மேரு மலைக்கும், மற்றொருவரை வெள்ளி நிறத்துடைய கயிலை மலைக்கும் ஒப்ப்டுகிறான் கம்பன்.

 

இன்னொரு பாடலில் கங்கை, கயிலை மலை பற்றிப் பாடுகிறான்:–

ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம்

கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம்

ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி

வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே

பொருள்:-

நிலவொளி பரவியதால், ஆறுகள் அனைத்தும் வெள்ளை நிறமுள்ள கங்கை ஆறுபோல் தோன்றின; கடல்கள் யாவும் பாற்கடலை ஒத்திருந்தன; மலைகள் எல்லாம் முடிவு என்று ஒன்றில்லாத சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் போலிருந்தன. இவற்றுக்கு மேலே சந்திரனின் மிகுதியைப் பற்றி நான் சொல்ல  என்ன இருக்கிறது?

pic-yatra-map

 

Lasha- Kailash 1400 kilometres by road

 

ஏரி பற்றிய அதிசயச் செய்திகள்:-

இந்த அதிசய ஏரியில் நிர்மலமான, மேகமற்ற வானத்திலிருந்து பனி பெய்வதால் இந்தியில் ஒரு பொன்மொழி உண்டு:-

மானஸரோவர் மைன் பரசே (முதல் ‘ப’)

பின் பாதல் ஹிம் பரசே (மூன்றாவது ‘ப’)

 

மேகமே இல்லாமல் பனி மழை பெய்யும் மானசரோவரை யார் அணுக முடியும்? என்பது இதன் பொருள்.

இரவு நேரத்தில் ஏரியில் நட்சத்திரங்கள் விழுவதூ போலத் தோன்றும். வானியல் அறிஞர்கள் இவைகளை விண்கற்கள் என்று சொல்வர். பக்தர்கள், புண்யாத்மாக்கள் பூமியில் இறங்குவதாகச் சொல்வர்.

1.மானச சரோவர் என்பது பிரம்மாவின் மனதில் தோன்றிய ஏரி என்னும் பொருளுடைத்து.

2.இந்தியாவின் இதய இரத்தக் குழாய் போன்ற கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா ஆகிய மூன்று ஜீவநதிகளும் இந்த ஏரிக்கு அருகில் அல்லது ஏரியில்தான் உற்பத்தியாகின்றன. அதாவது அந்த ஜீவநதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் உபநதிகள் இங்கேதான் தோன்றுகின்றன.

  1. இது 54 மைல் சுற்றளவும் 320 சதுர மைல் பரப்புமுடையது. 300 அடிவரை ஆழம் கொண்டது.

4.நிர்மலமான, ஸ்படிகம் போன்ற அமைதியான நீர்ப்பரப்பு. கண்ணாடித் தொட்டிகளில் நீந்தும் மீன்களைப் பார்ப்பதுபோல தண்ணீருக்கடியில் உள்ள மீன்களைப் பார்க்கலாம்.

  1. இந்த ஏரியில் அழகிய, பெரிய அன்னப் பறவைகள் (ராஜ ஹம்சம்) இருக்கின்றன.
  2. உலகில் அதிகமான உயரத்திலுள்ள சுத்த நீர் ஏரிகளில் இது முதலிடத்தில் நிற்கிறது.

7.ஏரியைச் சுற்றி எட்டு பௌத்த துறவிகளின் மடாலயங்கள் இருக்கின்றன.

  1. இது திபெத் பிராந்தியத்தில் இருந்தாலும், அது இப்பொழுது சீனாவின் ஆக்ரமிப்பில் இருக்கிறது

9.இந்த ஏரி பனிக்காலத்தில் ஐஸ்கட்டியாக மாறிவிடும். கோடைகாலத்தில் அந்தப் பனி உடைவதன் பேரொலிகளைக் கேட்கலாம்.

 

  1. ஏரியின் நீரில் கயிலை மலையின் பிம்பங்களைப் பார்த்து ஒரே நேரத்தில் இரண்டு கயிலை மலைகளை தரிசிக்கமுடியும்

11.ஏரிக்கரையில் அழகிய கூழாங்கற்களையும், வேறு எங்கும் காண முடியாத தாவர வகைகளையும் பார்க்கலாம்.

  1. உத்தரப்பிரதேசத்திலுள்ள அல்மோராவிலிருந்து 240 மைல் தூரத்திலும் திபெத்தின் தலைநகர் லாசாவிலிருந்து 800 மைல் தொலைவிலும் கயிலை மலையும் மானசரோவரும் உள்ளன. இமயமலையின் அற்புதமான இயற்கைக் காட்சி இது. கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிக்கு மேல் இது இருக்கிறது. ஒரு புறம் கைலாஷ் மறுபுறம் மாந்தாதா சிகரங்கள் காட்சி தரும்.

13.திபெத்திய பௌத்தர்களுக்கும் இந்த ஏரி முக்கியமானது. ட்சோ மவாங் என்று அழைப்பர். மன அமைதியையும், ஆன்மீக உணர்வையும் தூண்டும் இடம் இது.ஒரு மிகப்பெரிய நீலக்கல் ரத்தினம் அல்லது மரகதப்  பச்சைக் கல் போலத் தோன்றும்.

14.காங்ரி கஞ்சாக் என்ற பெயரில் திபெத்திய மொழியில் இரண்டு கைலாஷ் புராணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  1. மானச ஏரியின் நீர் சுவையானது. ஏரிக் கரையில் குகைகளும் உண்டு. சாது, சந்யாசிகள் தவம் செய்ய ஏற்ற இடம். ஏரிக்கரையில் வெப்ப நீர் ஊற்றுகளும் காணப்படுகின்றன.

15.ஒரு புத்த மடாலயத்திலிருந்து கயிலை மலையின் அற்புதமான தோற்றமும், மற்றொரு மடாலயத்திலிருந்து ராக்ஷச தல் ஏரியின் அழகிய தோற்றமும் கண்கொள்ளாக் காட்சி ஆகும்

16.காலை முதல் இரவு வரை வெவ்வேறு நேரத்தில் இது வெவ்வேறு அழகில் தோன்றும். நிறமும் சூரிய வெளிச்சத்தில் வேறுபடும்.

17.மூன்று வகையான அன்னப் பறவைகள் இங்கே வசிக்கின்றன. அவைகளில் ஒன்று ஒரிஸ்ஸாவில் சில்கா ஏரி வரயும், மற்றொரு திசையில் மால்வா வரையும் பறந்து செல்லும். இன்னொரு வகை சதபத பிராமணம் என்னும் கி.மு எட்டாம் நூற்றாண்டு நூலில் காணப்படுகிறது. ஆகவே குறைந்தது 3000 ஆண்டுகளாக பறவைகள் பற்றிய அறிவு இருந்திருக்கிறது. காளிதாசனும் மேக தூதத்தில் இதுபற்றிக் கூறியுள்ளான்.

18.இங்கே நடக்கும் அற்புதங்களில் ஒன்று ஜனவரி முதல் நடக்கும் பனி வெடிப்புகளாகும். சில நேரங்களில் பெரிய பனிப்பாறைகள் கரையிலுருந்து 60 அடிக்கு அப்பால் விழுந்து கிடக்கும்.

திடீரென்று பனிக்கட்டிகளிடையே நீர் ஊற்றுகள் தோன்றும். ஏரிக் கரைக்கு அப்பால் சிலமைல் தொலைவில் மூன்று வெப்ப நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.

19.தூமா என்ற அற்புத மூலிகைக் கிழங்கு இங்கே கிடைக்கிறது. மலை எலிகள் இவற்றைச் சேமித்துவைக்கும். இது காமசுகம் தரும் செக்ஸ் மூலிகை.

simikot-to-kailash-manasarowar-trekking

20.ராக்ஷச தல்

ராக்ஷச தல் அல்லது ராவண ஹ்ருதா (லாங்காகி ட்ஸோ) என்னும் மற்றொரு ஏரி அருகில் இருக்கிறது. மானசரோவரிலிருந்து 2 முதல் 5 மைல் தொலைவில் ராக்ஷச ஏரி உள்ளது. லாங்காகி ட்சோ என்றால் ஐந்து மலைகளை உள்ளடக்கிய ஏரி என்று பொருளாம். (லா என்றால் மலை, ங்கா என்றால் ஐந்து, ட்ஸோ என்றால் ஏரி) இங்குதான் இலங்கை மன்னன் ராவணன், சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். பூகம்பத்தில் ஐந்து மலை அடுக்குகள் உள்ளே சென்று இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும். இதன் சுற்றளவு 77 மைல். இதில் இரண்டு தீவுகளும் உண்டு. மானச ஏரியின் அதிகத் தண்ணீர் வழிந்தோடி இங்கே வந்துவிடும்.

கயிலை மலை பற்றி மற்றொரு கட்டுரையில் காண்போம். 1949-ல் வெளியான ஒரு ஆங்கில நூலிலிருந்து தொகுத்த விஷயங்களிவை.

 

-சுபம்-

 

கம்ப ராமாயணத்தில் அதிசயச் சங்கு! (Post No.2909)

valampuri 1

Compiled by London swaminathan

 

Date: 20  June 2016

 

Post No. 2909

 

Time uploaded in London :– 10-34 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்தை ராம பிரானின் புனித வாழ்வைப் போற்றும் காவியமாகப் பார்ப்பர் பலர்; இலக்கிய இன்பத்துக்காக நுகர்வர் பலர்; ஆராய்ச்சி நோக்குடன் அணுகுவர் சிலர். இவ்வாறு அணுகி முன்னரே பல கட்டுரைகளில் மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் மின்சார பல்புகள் போல அவைகளின் கூடுகளில் வைத்துப் பயன்படுத்துதல் முதலியன பற்றி எழுதியுள்ளேன். இன்று வலம்புரிச் சங்குகளில் மிகவும் அதிசயமான சலஞ்சலம் பற்றி கம்பன் சொன்னதைக் காண்போம்.

 

செங்கண் அங்க அரவின் பொரு இல் செம்மணி விராய்

அங்கண் அங்கவலயங்களும் இலங்க அணியச்

சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்

கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே

–விராதன் வதைப் படலம், ஆரணிய காண்டம்,கம்ப ராமாயணம்

பொருள்:-

விராதன் என்னும் அரக்கன் எப்படி வந்தான்? சிவந்த, செம்மையான உடம்புடைய பாம்புகள் கக்கிய மாணிக்க வளையங்களையும், சங்குகள் வருந்திப் பெற்றெடுத்த சலஞ்சலம் எனும் சங்குகளினால் ஆன வளையல்களையும் அணிந்த கரங்களை முன்னும் பின்னும் வீசியவாறு வில் வீரர்களுக்கு எதிரே விராதன் வந்தான்.

valamum itamum

 

பாம்புகள் கக்கும் நாகரத்தினம் (மாணிக்கம்) பற்றி முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறிவிட்டேன். இப்பொழுது அதிசய சலஞ்சலம் பற்றிப் பார்ப்போம்.

 

வலம்புரிச் சங்கு என்பது இந்து மஹா சமுத்திரத்தில், மிகவும் அபூர்வமாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலான சங்குகளுக்கு உள்ள சுழிக்கு எதிர்ப்புறமாக இதன் சுழி இருக்கும். ஆங்கிலத்தில் இதை இடம் சுழிச் சங்கு என்பர். சங்கை மேல் புறத்திருந்து பார்க்கிறோமா, கீழ்ப் புறத்திலிருந்து பார்க்கிறோமா என்பதைப் பொருத்து இடம், வலம் என்ற மாறுபாடு வருகிறது.

கம்பன் ஏன் சலஞ்சலம் என்னும் சங்கினால் ஆன வளையல் என்று சொன்னான்? மாணிக்கத்துக்கு நிகரான விலை கொண்டது அது. நாகரத்தினம் போல அபூர்வமானது அது.

ஆயிரம் இடம்புரிச் சங்குகளால் சூழப்பட்ட சங்கு வலம்புரிச் சங்கு என்றும், அதுபோன்ற 1000 வலம்புரிச் சங்குகளால் சூழப்படது சலஞ்சலம் என்றும் நூல்கள் செப்பும். இது போன்ற சங்குதான் கிருஷ்ணன் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கு ஆகும்.

 

பகவத் கீதையிலேயே ஐந்து பாண்டவ வீரகளின் கையிலுள்ள ஒவ்வொரு சங்கிற்கும் தனித் தனி பெயர் கொடுத்திருப்பதால் இந்துக்கள்தான் முதல் முதலில் சங்கைப் பயன்படுத்திய நாகரீகம் வாய்ந்த சமூகம் என்று சொல்லவேண்டும்.

 

பகவத்கீதை முதல் அத்தியாயத்தில் பாண்டவர்கள் கையிலும் கிருஷ்ணன் கையிலும் உள்ள சங்குகளின் பெயர்கள் காணப்படுகின்றன:

பாஞ்சஜன்யம் ஹ்ருஷீ கேசோ தேவதத்தம் தனஞ்ஜய:

பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீம கர்மா வ்ருகோதர:

 

அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:

நகுல: ஸஹதேவஸ்ச ஸுகோஷ மணிபுஷ்பகௌ (1-15/16)

 

கிருஷ்ணன் – பாஞ்சஜன்யம்

அர்ஜுனன் – தேவதத்தம்

தர்மன் – அனந்தவிஜயம்

பீமன் – பௌண்ட்ரம்

நகுலன் – சுகோஷம்

சஹாதேவன் – மணிபுஷ்பகம்

 

(‘அபூர்வ வலம்புரிச் சங்கு’ என்ற தலைப்பில் நான் எழுதி 17 செப்டம்பர் 2012-ல் இங்கே வெளியிட்ட கட்டுரையில் சங்குகள் பற்றிய சுவையான விவரங்களையும் காண்க)

–சுபம்–

 

குரு யார்? ஆசிரியர் யார்? என்ன வேறுபாடு? (Post No.2907)

mdu school

Compiled by London swaminathan

 

Date: 19  June 2016

 

Post No. 2907

 

Time uploaded in London :– 9-51

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

devakottai school

தமிழிலும் ஆங்கிலத்திலும் குரு, ஆசிரியர் (டீச்சர்), உபாத்யாயர் போன்ற சொற்கள் வேறுபாடின்றி வழங்கப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொன்றுக்கும் தெளிவான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

டீச்சர், ஆசிரியர் ஆகிய சொற்கள் சம்ஸ்கிருதச் சொல்லான ‘ஆசார்ய’ என்பதிலிருந்து வந்தவை.

 

வட இந்தியாவில் இப்பொழுது பல்கலைக்கழகத் துணைவேந்தரை குலபதி என்று அழைக்கின்றனர். வேத காலத்தில் 10,000 மாணவர்களைக் கொண்ட ஆசிரியருக்கு மட்டுமே குலபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

உலகின் முதல் சட்டப்புத்தகமான மனு ஸ்மிருதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்.

உபநீயது ய: சிஷ்யம் வேதமத்யாபயேத் த்விஜ:

சகல்பம் சரஹஸ்யம் ச தமாசார்யம் ப்ரசக்ஷதே (மனு 2-140)

உபநயனம் (பூணூல்) செய்வித்து வேத வேதாந்தங்களை ஓதிவைப்பவன் ‘ ஆசார்யன்’ என்று அழைக்கப்படுகிறான்.

xxx

 

SCHOOL CHILDREN jr

ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்கான்யபி வா புன:

யோ அத்யாபயதி வ்ருத்தர்தமுபாத்யாய: ச உச்யதே

பணம் (தட்சிணை) வாங்கிக் கொண்டு வேத வேதாங்கங்களைக் கற்பிப்பவன் உபாத்யாயன் என்று சொல்லப்படுகிறான்.

xxx

நிஷேகாதினி கர்மாணி ய: கரோதி யதா விதி

சம்பாவயதி சான்னேன ச விப்ரோ குருர் உச்யதே

விதிப்படி, கர்ப்பாதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப்பவன் குரு என்று அழைக்கப்படுகிறான்

xxx

பிதா மாதா ச ததாசார்யோ மஹாகுருரிதி ச்ம்ருத:

தந்தை, தாய், ஆசிரியர் ஆகியோர் மஹா (பெரிய) குருக்கள் என்று கருதப்படவேண்டும்.

xxx

 

school tree

முனீனாம் தசசாஹஸ்ரம் யோ அன்னதானாதி போஷணாத்

அத்யாபயதி விப்ரர்ஷிரசௌ குலபதி: ஸ்ம்ருத:

10,000 சிஷ்யர்களுக்கு உணவு அளித்து, போதிக்கும் (கற்பிக்கும்), ரிஷிக்கு ‘குலபதி’ என்று பெயர். (பத்தாயிரம் முனிவர்களுடைய கூட்டத்துக்கு எவன் அன்னதானம் முதலியன கொடுத்து ஆதரிக்கிறானோ அவன் குலபதி என்று அறியப்படுகிறான்)

xxxx

ஆசிரியனின் இலக்கணம்:  ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்றும் இந்துமத நூல்கள் செப்புகின்றன:–

 

ஜிதேந்த்ரிய ஜித த்வந்த்வஸ் தபோ தான பராயணா:

சத்யவாக் ஊர்ஜித: ராக்ஞோ மேதாவீ நியதஸ் சுசி:

புலனடக்கம், இருமைகளை (வெற்றி தோல்வி, சுக துக்கம் போன்றவை இருமைகள்) வென்றவன், தானம்-தவம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவன், உண்மை விளம்பி, வீர்யமுடையவன், கற்றறிந்தவன், புத்திகூர்மையுள்ளவன், ஒழுங்கு கட்டுப்பாடு உடையவன், தூய்மையானவன் (ஆசிரியன் ஆவான்)

xxxx

நிஸ்சம்திக்த: குலீனஸ்ச ஸ்ரௌதகர்மணி தத்பர:

நிக்ரஹானி க்ரஹேதக்ஷஸ் சர்வ தோஷ விவர்ஜித:

காயத்ரீமந்த்ர குசல ஆசார்ய ஸமுதாஹ்ருத:

 

அப்பழுக்கற்ற குலத்தில் பிறந்தவன், வேத அனுஷ்டானம் உடையவன், செய்யத் தக்கது-செய்யத்தகாதது எது என்ற விவேகம் உடையவன், மாசுமருவற்ற ஒழுக்கம் உடையவன், எல்லாம் அறிந்தவன், காயத்ரீ மந்திரத்தில் தேர்ச்சியுடையவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

xxxx

Skt at school level

Sanskrit instructor conducting a contact class for professionals at Rashtriya Sanskrit Sansthan on Tuesday. Photo by K Asif 26/09/12

ஆசினோதி ஹி சாஸ்ரார்தான் ஆசாரே ஸ்தாபயத்யபி

ஸ்வயமாசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆசார்ய உச்யதே

சாத்திரங்களை அறிந்து பிறரையும் அனுசரிக்கச் செய்பவனே ஆசார்யன்.

(சாத்திர நூல்களின் பொருளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அறிந்துஆராய்பவன், பிறரையும் ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபடச் செய்பவன், தானும் அதைக் கடைப்பிடிப்பவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

–சுபம்–

 

 

 

கண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், நாக்குக்கு வருணன் கடவுள் (Post No. 2905)

body parts

Compiled by London swaminathan

 

Date: 18  June 2016

 

Post No. 2905

 

Time uploaded in London :– 13-26

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

எந்த உடல் உறுப்புக்கு யார் தேவதை என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல் வழக்கு உள்ளது.

 

காது – திசை

தோள் (த்வக்) – காற்று

கண் – சூரியன்

நாக்கு –வருணன்

க்ராணம்(முகர்தல்/மூக்கு) – அஸ்வினி

வாக்கு – அக்னி (வன்னி)

கை (ஹஸ்த) – இந்திரன்

கால்( பாத)  – உபேந்திரன்

பாயு: (குதம்) – மித்ரன்

ஜனன உறுப்பு – பிரஜாபதி

மனது – சந்திரன்

 

இந்திரிய அதிஷ்டான தேவதைகள்:-

ஸ்ரோத்ரஸ்ய திக், த்வசோ வாத:, நேத்ரஸ்ய அர்க:, ரசனாயா வருண:, க்ராணஸ்ய அச்வினௌ, வாகிந்த்ரியஸ்ய வன்னி:

 

elephant

Xxx

 

உறவினர்கள் (ஆத்ம பந்துக்கள்) யார், யார்?

 

ஆத்மமாது: ஸ்வசு: புத்ரா ஆத்மபிது: ஸ்வசு: சுதா:

ஆத்ம மாதுல புத்ராஸ் ச விக்ஞேயா ஹி ஆத்மபாந்தவா:

–சப்தகல்பத்ருமம்

சொந்த தாயார், தந்தை, மாமன், அத்தை, சித்தி (சின்னம்மா), பெரியம்மா, அம்மான் பிள்ளைகள் ஆகியோர் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

 

பகவத் கீதையிலும் உறவினர்கள் பட்டியல் இருக்கிறது:-

 

ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:

மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ஸ்யாலா: (1-34)

(ஆசார்யா: – ஆசிரியர்கள்), பிதர: – தகப்பன்மார்கள், புத்ரா: – பிள்ளைகள், பிதாமஹா: – பாட்டன்மார்கள், பௌத்ரா: – பேரன்மார்கள், மாதுலா: – அம்மான்மார்கள், ஸ்வசுரா: – மாமனார்கள், ஸ்யாலா: – மைத்துனர்கள், ஸம்பந்தின: – சமபந்திமார்கள்

 

(இவ்வளவு உறவினர்களையும் கொல்ல விரும்பவில்லை; அதனால் போர் வேண்டாம் என்கிறான் அர்ஜுனன்)

என் குடும்பம்

Xxx

ஆத்ம யாஜீ யார்?

சர்வ பூதேசு ச ஆத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

சமம் பஸ்யன் ஆத்ம யாஜி ஸ்வராஜ்யம் அதிகச்சதி (மனு 12-91)

 

எல்லா உயிர்களிடத்திலும் தன்னையும், தன்னிடத்தில் எல்லா உயிர்களையும் சமமாகப் பார்ப்பவனே தன்னை அறிந்தவன். அவன் முக்தி பெறுகிறான்

ஆத்மயாஜி= தன்னையே தியாகம் செய்பவன், வேள்வி செய்பவன்

 

கீதையிலும்

இதே போன்ற ஸ்லோகங்கள் பகவத் கீதையிலும் இருப்பது ஒப்பிடற்பாலது:-

சர்வபூதஸ்தமாத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

ஈக்ஷதே யோக யுக்தாத்மா சர்வத்ர சமத்ர்சன:

ப.கீதை 6-29

பொருள்:–

யோகத்தில் ஈடுபட்டவன், எங்கும் சம நோக்குடன், எல்லா உயிர்களிடத்திலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லா உயிர்களும் உறைவதாகவும் காண்கிறான்

இதே கருத்து அடுத்த இரண்டு ஸ்லோகன்களிலும் வலியுறுத்தப்படுகிறது.

–சுபம்–

 

 

 

புண்ய காரியங்களைச் செய்து, நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்! (Post No.2904)

Article written by S.NAGARAJAN

 

Date: 18 June 2016

 

Post No. 2904

 

Time uploaded in London :–  5-37 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் ஏப்ரல் 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

செல்வந்தனாக, புண்ய காரியங்களைச் செய்து, நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்!

 

.நாகராஜன்

 

 

 

மூன்று ஆசைகள்

 

வாழ்வாங்கு வாழ் ஹிந்து மதம் காட்டாத வழியே இல்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று ஆசைகள் நிச்சயமாக வேண்டும்.

  • நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்
  • செல்வந்தனாக வாழ ஆசைப்படுங்கள்
  • நல்ல புண்ணிய காரியங்களைச் செய்ய ஆசைப்ப்டுங்கள்

வெறுமனே ஆசைப்படுங்கள் என்று சொல்லி விட்டுப் போய்விட்வில்லை ந்ம் அருளாளர்கள்.

இந்த மூன்று ஆசைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதையும் மிகத் தெளிவாக வழிமுறைகளுடன் விளக்கியுள்ளனர்.

 

சரக சம்ஹிதா என்று வாழ்வாங்கு வாழ வழி உரைக்கும் நூலில் சரகர் ஆரோக்கியம் சம்பந்தமாகச் சொல்லாத விஷயமே இல்லை.

 

பதினோராம் அத்தியாயத்தில் ஆரம்பித்திலேயே இதைச் சொல்லி விடுகிறார்.

 

இஹ கலு புருஷேணானுபஹதசத்வ, புத்தி, பௌருஷ, பராக்ரமேண ஹிதமிஹ சாமுர்ணிமிச்ச லோகே சமநுபஷ்யதா திஸ்ர ஏஷணா: பர்யேப்ருதிவ்யா பவந்தி | தத்யதா – ப்ராணைஷனா, தநைஷனா,பரலோகைகஷணேதி ||

 

 

சாதாரண திறமையுடன், புத்திசாலித்தனம், பலம், ஆற்றல் உள்ளவனாக, இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நலமாக  இருக்க ஆசைப்படும் ஒரு சாமானியன் மூன்று ஆசைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

1)நீண்டநாள் வாழ, 2) நன்கு சம்பாதிக்க, 3)நல்ல புண்ணிய காரியங்களைச் செய்ய ஆசைப்பட வேண்டும்.

 

 

 

நீண்ட நாள் வாழ ஆசைப்படு!

 

அடுத்து சரகர் அதிரடியாகச் சொல்வது:

இந்த மூன்று ஆசைகளிலும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

ஏன்?

ஏனெனில் இந்த வாழ்வு முடிந்து போனால் எல்லாம் முடிந்து போகும்.

 

 

இப்படி நீண்ட நாள் வாழ்வதற்கு, ஆரோக்கியமாக வாழும் மனிதர்களுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வியாதி வரும்போது அதை அலட்சியப்படுத்தாமல் (உடனடி) சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை நாம் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளோம். அதைப் பின்பற்றுங்கள். ஆக நீண்ட நாள் வாழ்வது பற்றி இப்போது விளக்கப்பட்டுள்ளது.

 

செல்வந்தனாக ஆசைப்படு!

 

 

அடுத்து வருவது செல்வந்தனாக வாழ ஆசைப்படும் இரண்டாவது ஆசைஒருவன் ஏன் செல்வந்தனாக வாழ ஆசைப்பட வேண்டும்? ஏனெனில் நீண்ட நாள் வாழும் போது பணமில்லாமல் வாழ்வது போன்ற துக்ககரமான விஷயம் வேறொன்றுமில்லைஆகவே பணம் வரும் வெவ்வேறு வழிகளையும் ஒருவன் நாட வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் என்ன? விவசாயம் செய்வது, பசு போன்றவற்றை வளர்ப்பது, வணிகம் செய்தல், அரசாங்க சேவை உள்ளிட்ட பல உத்தியோகங்களில் ஈடுபடுதல் உள்ளிட்டவையே வழிகளாகும். நல்ல பெரியோர்களால் நிந்திக்கப்படாத, ஒதுக்கப்படாத எந்த ஒரு வேலையையும் ஒருவன் மேற்கொள்ளலாம். இப்படி நீண்ட நாள் வாழ்வதால் ஒருவன் தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழலாம். இப்படியாக இரண்டாவது அடிப்படை ஆசை விளக்கப்படுகிறது

வையகம் காப்பவரேனும் சிறு                             வாழைப்பழக்கடை வைப்பவரேனும்                     பொய்யகலத் தொழில் செய்தே பிறர்

போற்றிட வாழ்பவர் பூமியில் எங்கணும் மேலோர்

 

 

என்ற மஹாகவி பாரதியாரின் வாக்கும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

 

இங்கு கஞ்சனாக வாழாதே என்பதும் மறைமுகமாக சரகரால் சொல்லப் படுகிறது. பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக கெட்ட வேலைகளில் ஈடுபடாதே என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

 

 

மேலுலக சந்தோஷத்துக்கும் சேர்த்து ஆசைப்படு!

 

அடுத்து சரகர் கூறுவதைப் பார்ப்போம்:

 

அடுத்து வருகிறது மேலுலக சந்தோஷத்திற்கு ஆசைப்படுவது.

இதில் சில சின்ன சந்தேகங்கள் எழுகின்றன. இறந்த பின்னர் மறு உலகம் உண்டா என்ன? ஆனால் ஏன் இந்த சந்தேகம் எழுகிறது? ஏனெனில் இந்த உலகில் பலரும் பிரத்யட்சமாகக் காண்பதையே நம்ப முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் தான். ஆகவே பிரத்யட்சமாக காணமுடியாத மறு உலக வாழ்க்கையை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். இதற்கு மாறாக மறு உலக வாழ்க்கையை நம்புகின்றவர்கள் சாஸ்திரங்கள் சொல்வதில் நம்பிக்கைக் கொண்டிருப்பதால் அதை நம்புகின்றனர். இதிலும் பல்வேறு கொள்கைகள் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன. பெற்றோர், இயற்கை, அழிவற்ற ஆன்மா”, “மதி (Free will) ஆகியவை மறுபிறப்புக்கு காரணம் என பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன.

முதலில் இறப்புக்குப் பின்னர் மறு பிறப்பு உண்டா என்பதை ஆராய்வோம்.

 

 

இதை அடுத்து மறுபிறப்பு உண்டா, உண்டு என்றால் காரணங்கள் என்னென்ன என்று அலசி ஆராய்கிறார் சரகர்.

சரகர் சொல்லாத ஆரோக்கிய விஷயமே இல்லை என்று தோன்றும் சரக சம்ஹிதையைப் படித்தால்!

 

                                 _தொடரும்