தமிழ் முட்டாளும் சம்ஸ்கிருத முட்டாளும் (Post No.2810)

blockheads

Written by london swaminathan

 

Date: 14 May 2016

 

Post No. 2810

 

Time uploaded in London :–  9-31 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து பிடிக்கலாம் என்றது போல – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதுதான் முட்டாள்களின் அடையாளம். கொக்கைப் பிடிப்பதற்கு அதே நிறமுள்ள வெண்ணையை வைத்தால் அதற்குத் தெரியாது; அது வெய்யிலில் நிற்கும் போது வெண்ணை உருகி கண்ணில் விழுந்து அதை மறைக்கும்; அப்போது நாம் போய் அதைப்பிடித்துவிடலாம் என்று முட்டாள்கள் நினைப்பர்.

 

இதனுடைய பழைய வடிவம் மயிலின் தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது என்பதாகும்:

முன்னையுடையது காவாதிகந்திருந்து

பின்னையஃதாராய்ந்து கொள்குறுதல் – இன்னியல்

மைத்தடங்கண் மாதராய் அஃதாதல் வெண்ணெய் மேல்

வைத்து மயில்கொள்ளுமாறு (பழமொழி)

 

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னால் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட ‘பழமொழி’-யில் இப்பாடல் உளது. இதன் பொருள்:–

“ஏ கண்ணழகி! தனக்கு முன்னுள்ள பொருளைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டு, கஷ்டப்பட்டு அதே பொருளைத் தேடுவது மயிலின் தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கலாம் என்று எண்ணுவது போலாகும்”

 

வான்புகழ் வள்ளுவன் தேன் தமிழ்க்குறளில் பல இடங்களில் பேதைமை எது எனப் புகல்வான்.

பாரதியாரும் முட்டாள்கள் பட்டியலைப் பல இடங்களில் தருவார்:

கோயிற்பூசை செய்வார் சிலையைக் கொண்டு விற்றல், வாயிற்காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல், கண்களிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குதல், அமிர்தம் கிடைக்கும்போது கள்ளுக்கு ஆசை கொள்ளல்,விண்ணிலுள்ள இரவி/சூரியனை விட்டு மின்மினி (ப்பூச்சி) கொளல் முதலிய பல உவமைகள் மூலம் முட்டாள்தனம் எது என்று காட்டுவார்.

Laurel and Hardy.jpg

சம்ஸ்கிருத முட்டாள்

ஆரப்பயந்தே அல்பமேவாஅஞா: காமம் வ்யக்ரா பவந்தி ச

மஹாரம்பா: க்ருததிய: திஷ்டந்தி ச நிராகுலா:

சம்ஸ்கிருத மொழியிலும் முட்டாள்கள் பற்றி நிறைய பழமொழிகள் இருக்கின்றன:–

முட்டாள்கள் சின்ன காரியங்களைத் துவக்கிவிட்டு, முடிக்க முடியாமல் தவிப்பார்கள் பெரியோர்களோவெனில் பெரிய அளவில் பணிகளைத் துவக்கி, சலிக்காமல்,தயங்காமல், மலைக்காமல் அதைச் செய்துமுடிப்பர்.

आरभ्यन्तेऽल्पमेवाऽज्ञाः कामं व्यग्रा भवन्ति च

महारंभाः कृतधियः तिष्ठन्ति च निराकुला:
எல்லோரும் செய்யக்கூடாது என்று சொன்ன செயல்களை, முட்டாள்கள் செய்வர். அதை மூடி மறைக்கவும் அவர்களுக்குத் தெரியாது. (கதசரித்சாகரம்/கதைக்கடல்)

 

அகார்யம் ஹி கரோத்யக்ஞோ ந ச ஜானாதி கூஹிதும்

 

–சுபம்–

முட்டாள்கள் பற்றிய முந்தைய கட்டுரைகள்:

முட்டாள்களை எப்படி கண்டுபிடிப்பது? (31-10-2015)

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம் (27-2-2016)

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)

pyramid3

Written  BY S NAGARAJAN
Date: 14 May 2016

 

Post No. 2809

 

Time uploaded in London :–  6-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 
அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.

அந்த குரு அவரிடம் சொன்னார். “நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே”

Pyramids1

(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)

 

“இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன”

பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.

 

“உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்….”

அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. “எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்” என்றார் அந்த குரு.

 

அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

 

தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் “பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே” என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ் நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.

 

the-sphinx-at-gizacairo-in-egypt-

ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.

தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. “மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்”

 

ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.

 

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.

 

மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை, நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும். The End.
Research Articles on Egypt written by London swaminathan in this blog:–

 

Did Indians Build Egyptian Pyramids? (Posted on 27 August 2012)

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda (Posted on 26 September 2012)

Hindu Gods in Egyptian Pyramids (Posted on 16 September 2012)

Vishnu in Egyptian Pyramids (Posted on 5 September 2012)

Vedas and Egyptian Pyramid Texts (Posted on 29 August 2012)

 

Why did Sumeria and Egypt worship Indra? (Posted on 14 September 2014)

Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams ( Posted on 31 July 2015)

Flags:Indus Valley – Egypt Similarity (Posted on 15 October 2012)

Human Sacrifice in Indus Valley and Egypt (Posted on 31-10-2012)

Magic in Hindu,Sumer, Egyptian Cultures (Posted on 2 August 2015)

Mata and Pita in Egyptian Religion (Posted on 17 November 2014)

More Tamil and Sanskrit Names in Egypt (Posted on 15 November 2014)

Hindu Mudras in Ancient Egyptian and Sumerian sculptures (posted on 7-10-2012)

Tirumular in Egyptian Pyramids (in Tamil Egiptil Tirumular Karuththukkal posted on 23-11-2013)

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் ( 23 நவம்பர் 2013)

 

–subham–

 

 

 

அஃகமும் காசும் சிக்கெனத் தேடு! (Post No.2807)

MONEY_LAUND_1337399f

Written by london swaminathan

 

Date: 13 May 2016

 

Post No. 2807

 

Time uploaded in London :–  10-43 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அஃகமும்= நிலபுலன்களையும் அதில் விளையும் தானியங்களையும்

காசும்= பணத்தையும்

சிக்கென = உறுதியாக

தேடு = முயற்சி செய்து பெறு

-என்று கொன்றைவேந்தனில் அவ்வையார் அழகாகச்சொல்லிவிட்டார்.

இது போதாதோ என்று எண்ணி, மேலும் சொல்லுவார்:-

சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

சொக்கர் = பொருளுடையவர் (சொக்கத் தங்கம் வைத்திருப்பவர்)

அத்தம் = செல்வம் (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ=அறம், பொருள், இன்பம், வீடு என்பதிலுள்ள அர்த்தம் =அத்தம்)

பெறுவர் = அடைவர்.

அதாவது ஏற்கனவே செல்வம் வைத்திருப்பவர், புத்திசாலியாக இருந்தால், அதை நல்ல விதத்தில் முதலீடு செய்து மேலும் மேலும் செல்வதராவர் என்பது அவ்வையரின் கணிப்பு.

 

அட, இவ்வளவு சொல்லியும் புரியாதோருக்கு இன்னும் ஒரு வக்கியத்தையும் சொல்லி விடுவோம் என்று கருதி,

திரைகடலோடியும் திரவியம் தேடு – என்றார் கொன்றைவேந்தனில்.

black-money-generic_ndtv

அதாவது, உள்நாட்டில் செல்வம் சம்பாதிக்க முடியவில்லையா, அல்லது போட்டி தைகமாக இருக்கிறதா, வெளிநாட்டுக்குப் போய் சம்பாதி என்றார்.

இவை அத்தனையையும் கடைப்பிடித்து வெற்றி பெற்றவர்கள் செட்டியார்களும், படேல் சமூகத்தினரும்.

வெற்றிவேர்க்கை எழுதிய அதிவீர ராம பாண்டியனும் “வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்: என்று கூறி அதை உறுதி செய்கிறார்.

 

இந்து மதம் ஒரு திட்டமிடப்பட்ட மதம்; கட்டுக்கோப்பன மதம்; காமா சோமா என்றோ கன்னா பின்னா என்றோ அமைக்கப்பட்ட மதமல்ல. பழைய சம்ஸ்கிருத நூல்களில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்று வாழ்க்கையின் தத்துவங்களை நாலே சொற்களில் சொல்லிவிட்டனர். இதை அப்படியே தொல்காப்பியரும், சம்ஸ்கிருதப் பேரறிஞன் வள்ளுவனும், புறநானூற்றுப் புலவர்களும் அப்படியே அதே வரிசையில் தொல்காப்பியத்திலும், புற நானூற்றிலும், திருக்குறளிலும் பல இடங்களில் சொல்லிவிட்டனர். (குறள் எண், தொல்காப்பிய வரி எண், புறநானூற்றுப் பாடலெண் வேண்டுவோர் என் பழைய கட்டுரைகளைப் பார்க்கவும்).

 

அறம்:- வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடி

பொருள்:- சும்மா, பொழுதைக் கழிக்காதே! எப்படி பொருள் சேர்ப்பது; முதலில் சொன்ன அறப்படி (தர்மப்படி).

இன்பம்:– நல்ல மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து; அனுபவி ராஜா, அனுபவி.

 

மோக்ஷம்:- மேற்கூறிய மூன்றும் சிற்றின்பம்தான் தரும்; மேற்கூறிய மூன்றும் ஒரு நிலையில் அலுத்துப் போகும். பேரின்பம் பெற, நிலையான இன்பம் பெற, வீடு பேறு பெறத்தான் இவையனைத்தும் பயன்பட வேண்டும்.

 

சம்ஸ்கிருத பண்டிதர்களும் அழகாகச் சொல்லுகிறார்கள்:–

“ஸ்ரேயாம்சி சகலான்யனலசானாம் ஹஸ்தே நித்யசான்னிதயானி”

யார் சோம்பேறித்தனம் இல்லாமல், எப்பொழுதும், உழைக்கிறார்களோ, அவர்களிடத்திலே எப்போதும் வளமும் நலமும் தங்கும்.

 

Shreyaamsi cha sakalaanyanalasaanaam haste nityasaannidhyaani

 

All prosperity and welfare is always in the hands of those who are always active, who do not

know laziness  

 

lakshmi in kshetras

உத்தரராமசரிதம் என்னும் சம்ஸ்கிருத நாடகத்தில், பவபூதி கூறுவார்:-

 

“சாஹசே ஸ்ரீ ப்ரதிவசதி”

பொருள்:- துணிவான செயல்களைச் செய்வோரிடத்திலே லெட்சுமி வசிக்கிறாள் (செல்வம் நிலையாகத் தங்கும்)
साहसे श्री प्रतिवसति

 

Saahase shree prativasati

 

In adventure resides Goddess Lakshmi (Only those who are adventurous can amass wealth)
Uttararaamacharitam (Bhavabhuti)

 

–சுபம்–

 

 

 

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806)

4_pyramids

Written  BY S NAGARAJAN

Date: 12 May 2016

 

Post No. 2806

 

 

Time uploaded in London :–  6-08 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

 

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. “அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது…”

 

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே

 

 

 

என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.

 

 
ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன்  தாக்குப் பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

 

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

 

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

 

“ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?”

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். “போதவில்லை”

“திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்”

“நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது”

“எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?”

“எனக்குத் தெரியவில்லை” என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

 

“சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்” என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

 

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. “மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்…”

 

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

 

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் “நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு” என்ற எண்ணம் வந்து போயிற்று.

 

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

 

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.
 
அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

 

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. “இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்.” அதே நேரத்தில் “இந்த உடலையா நான் “நான்” என எண்ணி இருந்தேன்?” என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. “அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது” என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். “உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!”

 

To be continued……………………………

 

 

 

 

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803)

search in egypt1

Written  BY S NAGARAJAN

Date: 12 May 2016

 

Post No. 2803

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

 

 

எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின் நேரடி அனுபவம்

எழுதியவர்- ச.நாகராஜன்

 

 
எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன்   ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். “நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்…”

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்.
ஸ்பிங்ஸ்
பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். “நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்”

 

அந்த உயர் அதிகாரி “அனுமதிக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் “இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்” என்றார்.

 

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி “நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?”

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

search in egypt2

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

 

 

To be continued…………………………………..

 

 

நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும் ( Post No.2801)

IMG_1652 (2)

Written by london swaminathan

 

Date: 11 May 2016

 

Post No. 2801

 

Time uploaded in London :–  17-11

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மாக கவி எழுதிய சிசுபாலவதமென்ற சம்ஸ்கிருத காவியத்தில் ஒரு அருமையான பொன்மொழி வருகிறது:

 

महीयांसः प्रकृत्या मितभषिणः

 

Maheeyamsah prakrityaa mitabhaashinah

 

Great men, by nature, do not talk much (they limit their speech to the essentials only)

மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண:

பெரியோர்கள், இயற்கையிலேயே, குறைவாகப் பேசுவார்கள் – என்பது இதன் பொருள்.

வால்மீகியும் ராமனின் புகழ் பாடுகையில் மிதபாஷி (குறைவாகப் பேசுபவன்) என்று சொல்கிறார். அத்தோடு ஸ்ருதபாஷி (உண்மை விளம்பி), ஹித பாஷி (இனிமையாகப் பேசுபவன்), பூர்வபாஷி (தானாக வலிய வந்து பேசுபவன்) என்றும் பாராட்டுகிறார்.

 

இத்தனையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லும் தமிழில் உள்ள ஒரு பழமொழி: ‘நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும்’.

 

ஆசாரக் கோவை என்னும் நூல் அழகான ஒரு பட்டியலைக் கொடுக்கிறது:

விரைந்துரையார்

மேன்மேலுரையார்

பொய்யாய் புனைந்துரையார்

பாரித்துரையார்

 

பொருள்:

விரைவாகச் சொல்லமாட்டார், சொன்னதையே திரும்பச் சொல்லார், பொய்யாக எட்டுக்கட்டிச் சொல்லமாட்டார், மிகைப்படுத்தி சொல்லமாட்டார்

பின்னர் எப்படிச் சொல்லுவார்?

சுருக்கமாகப் பொருள் முழுதும் விளங்கும்படி சொல்லுவார், காலத்திற்குப் பொருத்தமாக, விரும்பியதை மட்டும் சொல்லுவார்.

 

இதோ பாடல் முழுதும்:

விரைந்துரையார் மேன்மேலுரையார் பொய்யாய

பரந்துரையார் பாரித்துரையார் –ஒருங்கெனைத்தும்

சில்லெழுத்தினாலே பொருளடங்கக்காலத்தால்

சொல்லுக செவ்வியறிந்து.

—ஆசாரக்கோவை

 

திருவள்ளுவன் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களில் சொன்ன பொன்மொழிகளை நாம் அறிவோம்.

 

இறுதியாக உலகின் முதல் சட்ட வல்லுனனான மனு, அவருடைய மனுஸ்மிருதியில் (4-138) சொல்லுவது என்ன என்று காண்போம்:

satyam bruyat priyam bruyat na bruyat satyam apriyam
priyam ca nanrutam bruyat esha dharmah sanatanah

                 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சநாதன:

–மனு ஸ்மிருதி 4-138

உண்மையே பேசு; இனிமையாகப் பேசு;

கசப்பான உண்மையைச் சொல்லாதே;

இனிமையான பொய்களைப் பேசாதே;

இதுதான் சநாதன தர்மம் (இந்து மதம்).

 

எனது பழைய கட்டுரை:

எப்போது பொய் சொல்லலாம்? வள்ளுவர், சங்கரர் அறிவுரை !(
Post No.837            Date. 13-02-2014

–subham–

 

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 5 (Post No.2800)

HUGE BUDDHA

Written  BY S NAGARAJAN

Date: 11 May 2016

 

Post No. 2800

 

 

Time uploaded in London :–  6-30 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 5

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 58. அவருக்கு ஒரே ஒரு வருத்தம்.

 

 

தன் தாயை ஒரு முறை கூட அவர் பார்த்ததில்லை. அவர் பிறக்கும் போதே தாய் இறந்து விட்டாரே! ஒரே ஒரு முறை தன் தாயைக் காண அவர் விரும்பினார்.

 

 

தன் தாய்க்கு  முக்தி அளிக்க ஒரு கடுமையான சபதத்தை அவர் மேற் கொண்டார். அது தான் விரலை எரிக்கும் விரதம்.

இதை அசோகா மடாலயத்தில் நிறைவேற்றுவது என்று அவர் நிச்சயித்தார்.

 

 

அங்கு புத்தரின் எச்சங்கள் இருந்தன. அசோகா மடால்யம் சென்று புத்தரின் எச்சங்களுக்கு தன் மரியாதையுடன் கூடிய நமஸ்காரத்தை அவர் செய்தார்.

 

 

ஒரு நாள் இரவு திடீரென்று மிக நீளமான  கோல்டன் ட்ராகன் (தங்க கடல்நாகம்) மிக பிரகாசமாக அவர் கண்ணுக்குத் தெரிந்தது. அங்கு அறைக்கு முன்னால் இருந்த குளத்தில் அது இறங்கியது. அதன் முதுகின்  மீது  ஸு யுன்  ஏறி அமர்ந்தார். அது வானத்தில் பறந்தது.

அடடா, மலைகள், நீரோடைகள், மரங்கள், மலர்கள் என அழகுக்கு அழகு தரும் அனைத்தையும் அவர் பார்த்தார். மிக கம்பீரமான அதி அழகான அரண்மனைகள், மாளிகைகளை எல்லாம் அது கடந்தது. ஒரு அறையை அடைந்தது.

ஸு யுன்  அந்த அறையில் தன் அன்னையைக் கண்டார். “அம்மா! தயவு செய்து இந்த ட்ராகனின் மீது ஏறி மேற்கு சுவர்க்கத்தில் உள்ள அமிதாப புத்தரை அடையுங்கள்’ என்று கூறினார்.

ட்ராகன் மீண்டும் கீழிறங்க  ஸு யுன்  கண்ணை விழித்தார். மனமும் உடலும் குளிர்ந்திருக்க பார்வையோ முழுவதும் அறியத்தக்க விதத்தில் தீர்க்கமாக இருந்தது.

 

 

அந்த ஒரே ஒரு தடவை தான் அவர் தன் அன்னையைப் பார்த்தார்!

 

 

தினமும் நமஸ்காரம் செய்வது தொடர்ந்தது. ஒரு நாள் திடீரென்று உடல் நலம் சீரில்லாமல் போனது.

உட்காரக் கூட முடியவில்லை. எல்லோரும் ஸு யுன்னின் இறுதி நாள் நெருங்கி விட்டது என்றே நினைத்தனர்.

தன் விரதத்தை முடிக்காமல் சாகக் கூடாது என்று நினைத்தார் அவர்.

 

 

ஆனால் இந்த உடல் நிலையில் விரலை எரிப்பதாவது! அனைவரும் அதை எதிர்த்தனர்.

 

ஸு யுன்  கண்ணீர் ததும்ப மடாலய நிர்வாகியாக இருந்த துறவியை நோக்கி, “எனக்கு உடலும் உயிரும் தந்த அன்னைக்கு நான் செய்ய வேண்டிய க்டனைச் செய்ய விரும்புகிறேன். அதில் என் உயிர் போனால் தான் என்ன?” என்றார்.

 

 

அந்த துறவிக்கோ வயது 21 தான்.  அவர் பெயர் ஸான் லியாங். அவர் கண்ணீர் ததும்ப, “ அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நாளை தான் நிச்சயிக்கப்பட்ட நாள். அனைவருக்கும் ஆகும் உணவுக்கான செலவு என்னுடையது” என்றார்.

மறு நாள் வந்தது.அனைவரும் கூடினர். ஒருமனப்பட்ட மனதோடு புத்தரை துதித்து வணங்கி ஸு யுன் விரலை எரிக்கும் சடங்கைத் தொடங்கினார். விரல் கொஞ்சம் கொஞ்சமாக தீபத்தில் காட்டப்பட்டது!

 

 

அசோகா மடாலயத்தில் புத்தரின் எச்சங்கள் ஏராளம் இருந்தன. புத்தரின் 84000 எச்சங்களை அசோகர் வெவ்வேறு ஸ்தூபங்களில் நிறுவி அந்த எச்சங்களை பூமிக்கடியில் புதைக்குமாறு  கடவுளருக்கு ஆணையிட்டார். கிழக்கில் சீனாவில் இது 19 இடங்களில் உள்ளன. இவற்றில் இரண்டு இடங்களீல் ஒன்று மவுண்ட் வு –டாய் இன்னொன்று அசோகா மடாலயம்.

மவுண்ட் வு-டாயில் ஸ்தூபத்திற்கு அடியில் எச்சம் உள்ளது. அதைக் காண முடியாது.ஆனால் அசோகா மடாலயத்திலோ அது டாய்- காங் என்ற அரசன் அரசாண்ட போது பூமிக்குள்ளிருந்து வெளியே வந்து விட்டது. அங்கே ஒரு ம்டாலயம் ஸ்தாபிக்கப்பட்டு புத்தரின் எச்சம் ஒரு தூணில் வைக்கப்பட்டது.

வரிசையாக நின்று ஒவ்வொருவரும் ஸ்தூபத்திற்கு அருகில் சென்று வணக்கம் செலுத்த வேண்டும்.

 

 

அங்கு தரிசிப்பவரின் மனப் பக்குவத்திற்கு ஏற்ப எச்சம் சிறிதாகவோ பெரிதாகவோ அவர்களுக்குத் தோன்றும். சில்ர் ஒன்றைக் காண்பர். சிலரோ பலவற்றைக் காண்பர். வண்ணமும் மாறும் – பார்ப்ப்வர்களின் நிலைக்குத் தக்கபடி.

 

ஸு யுன் எச்சத்தை தரிசித்த பின்னர் கூடியிருந்த அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்து தன் அறைக்கு மீண்டார்.

அவர் மனம் திருப்தி அடைந்திருந்தது.

தாயை தரிசித்ததோடு  மட்டுமின்றி அவ்ரது முக்திக்கும் அவர் வழி வகுத்து விட்டார்!

-தொடரும்

ஆட்டிடையன் ராஜாவான கதை! (Post No.2798)

sheep, sun

Written by london swaminathan

 

Date: 10 May 2016

 

Post No. 2798

 

Time uploaded in London :–  15-35

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஈரான் (பாரசீக) நாட்டில் ஒரு இடையன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. ஒரு குகையில் வசித்தான். வெறும் ஆட்டு ரோமத்தை ஆடையாக அணிவான். காலை முதல் மாலை வரை “செய்யும் தொழிலே தெய்வம்” என்று வாழ்க்கை நடத்தி வந்தான். ஆடு மேய்க்கும் இடையன் ஆனாலும் அறிவில் மஹா மேதை. விக்ரமாதித்தன் போல விவேகமும் ஞானமும் பெற்றிருந்தான். அவனைப் போலவே பறவைகளின் மொழியும், பிராணிகளின் குணநலன்களையும்  அறிந்திருந்தான். ஆகையால் எந்த ஆலோசனைக்கும் மற்ற இடையர்கள் இவனையே அணுகினர். கொஞ்சம் கொஞ்சமாக அவன் புகழ் பரவியது.

 

ஆட்டிடையன் பெரிய அறிஞன் என்று அறிந்து அருகாமையிலுள்ள நகர மக்களும் அவனிடம் வந்து சண்டை சச்சரவுகளுக்குத் தீர்வு கண்டு திரும்பினர். சில ஆண்டுகளுக்குள் அவன் புகழ் பாரசீக மன்னனுக்கும் எட்டியது. அவனுக்கு ஒரே ஆச்சரியம். சிலருக்குக் காரணமில்லாமலேயே புகழ் சேரும். அது அவர்களுடைய ஜாதக விசேஷம். இவனும் அப்படிப்பட்ட ஒரு ஆளாகத்தான் இருக்கும். இருந்தபோதிலும் நாமே சென்று உண்மை அறிவாளியா? என்று பரீட்சித்து வருவோம் என்று எண்ணினான்.

 

ஒரு நாள் தனது அரச உடைகளைக் களைந்துவிட்டு, ஒரு ஏழை போலக் கந்தைகளை உடுத்திக்கொண்டு ஒரு கிழட்டு குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பட்டான். அவனது சில மந்திரிகளும் அரசனின் மாறு வேடத்திற்குத் தக மாற்று உடைகளை அணிந்து பின்பற்றி வந்தனர்.

 

குகை அருகே வந்தவுடன் அந்த ஆட்டிடையன் மன்னரின் பரிவாரத்தை அணுகி உபசார வார்த்தைகளைக்கூறி ஆட்டின் பால், பாலாடைக்கட்டி முதலியன கொடுத்து உபசரித்தான். பின்னர் இருவரும் சம்பாஷணையில் ஈடுபட்டனர். கொஞ்சம் நேரத்துக்குள் வந்திருப்பவன் பாரசீக மன்னன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டான். இடையன் அவ்வளவு பெரிய அறிவாளி. ஆளைப் பார்த்தமாத்திரத்திலேயே எடை போட்டு விடுவான்.

 

ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டும் நிலை வந்தது. நீங்கள் இவ்வளவு அறிவாளியாக இருக்கிறீர்களே. உங்களுக்குக் குரு யார் என்று மன்னன் கேட்டான். எனக்கு நானேதான் குரு, மன்னவா! என்று இடையன் பதிலளித்தான். கந்தை ஆடையில் வந்து, சாதாரண விஷயங்களைப் பேசியபோதே இவன் என்னை மன்னன் கண்டுபிடித்துவிட்டானே என்று வியந்து என்னை எப்படி மன்னன் என்று கண்டுபிடித்தாய்?என்று கேட்டான்.

 

உங்களுடைய நடை உடை பாவனை, குரல் வளம், கண் தீட்சண்யம் ஆகியன ஒரு மன்னருக்கே உரித்தானவை என்பதால் கண்டுபிடித்தேன் என்றான் ஆட்டு இடையன். மன்னன் உடனே, இவ்வளவு பெரிய அறிவாளி, இப்படி ஆடு மேய்த்து தன் அறிவை வீணடிக்கக்கூடாது. உன்னை இந்த மாகாண கவர்னராக நியமிக்கிறேன் என்று உடனடி உத்தரவு பிறப்பித்தான். இடையனுக்கும் பெரு மகிழ்ச்சி. கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுத்தது போல இருக்கிறது என்று எண்ணினான்.

sheep cycle field

காலம் உருண்டோடியது. ஆட்டிடையன் எங்கு போனாலும் ஒரு பூட்டிய பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டே செல்வதை அனைவரும் கவனித்தனர். அவனைப் பிடிக்காதவர், சில வதந்திகளை உலவ விட்டனர். இவன் பார், மன்னரின் சொத்துக்களைச் சுருட்டத் துவங்கிவிட்டான் என்றனர். இன்னும் சிலர் இவன் சம்பளம் போதாது என்று கிம்பளம் (லஞ்சம்) வாங்கத் துவங்கிவிட்டான் என்றனர். நாக்கில் நரம்பில்லாமல் பேச மக்களுக்குச் சொல்லித் தரவேண்டுமா? மன்னன் காதுக்கும் ஆட்டிடையனின் பூட்டிய ரஹசியப் பெட்டி பற்றிய செய்தி எட்டியது.

 

உடனே மன்னன் குதிரையில் பறந்தோடி வந்தான். மக்கள் சொன்னமாதிரியே ஆட்டிடையன், பூட்டிய பெட்டியோடு செல்வதைக் கண்டு படபடத்தான். கோபக் கனலைக் கொட்டினான். பெட்டியைத் திற, உடனே! என்று கூச்சலிட்டான்.

 

இடையனோ மஹா அமைதியோடு பெட்டியின் சாவியை எடுத்தான். எல்லோர் கண்களும் தாமரை மலர்வது போல மலர்ந்தன; அகல விரிந்தன. பெட்டிக்குள், அவன் கவர்னராவதற்கு முன் கட்டிய கந்தலான ஆட்டு ரோமம் இருந்தது. மன்னன் கேட்பதற்கு முன்னரே அவன் சொன்னான்:–

என் பதவியால் எனக்கு அதிகார ஆணவம் தலைக்கு மேல் ஏறிவிடக்கூடாது என்பதற்காக நான் எனது எளிமையான, தூய்மையான வாழ்வின் சின்னமான ஆட்டு ரோம ஆடையை இதில் பாதுகாத்து வைத்துள்ளேன்” என்றான்.

மன்னன் வெட்கித் தலை குனிந்தான். எவ்வளவு நல்லவனை மக்களின் சொல் கேட்டுத் தவறாக எண்ணினோம் என்று வருந்தி, கண்ணீர் சிந்தினான். உன்னுடைய எளிமையையும் நேர்மையையும் மெச்சினேன். இன்று முதல் உன்னை இன்னும் பல மாகாணங்களைக் கொண்ட பெரிய பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கிறேன் என்றான்.

மன்னவா, நன்றி; ஆனால் எனக்கு பதவியே வேண்டாம். என்னுடைய எளிமையான ஆடு மேய்க்கும் வேலையே பேரின்பம் தந்தது. கல்லடியை விட மக்களின் காரணமில்லாத சொல்லடி பொறுக்கமுடியாதது; நான் போய் வருகிறேன் என்று கவர்னரின் சீருடையை கழற்றிவிட்டு ஆட்டுரோமத்துடன் மீண்டும் ஆடுமேய்க்கப் புறப்பட்டான்.

“செய்யும் தொழிலே தெய்வம்; திறமைதான் நமது செல்வம்” – என்று பாடிக்கொண்டே போனான்.

(இந்தக் கதையின் இன்னொருவித முடிவு: அவன் மன்னன் சொன்னபடி பெரிய பகுதிக்கு அரசன் ஆனான் என்று முடியும். எப்படியாகிலும் கதையின் நீதி ஒன்றுதான்: கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு;

“அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்று பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பாடியது (புறம்.183) பாரசீகத்திலும் செல்லுபடியாகும் என்பது தெளிவு.

–சுபம்–

 

விமானத்தில் பறக்கும்போது நோபல் பரிசு கிடைத்தது!(Post No.2797)

live science

Written  BY S NAGARAJAN
Date: 10 May 2016

 

Post No. 2797

 

 

Time uploaded in London :–  6-42 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 6-5-2016 இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியான  கட்டுரை

பிரபல டைரக்டர் கே.பாக்யாராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வாரந்தோறும் வெளி வரும் சிறந்த பத்திரிகை பாக்யா.

சந்தா முதலிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி bhagyaweek@gmail.com

 

 

மன்னிக்க வேண்டுகிறேன்!

.நாகராஜன்

 

 sarh miller1

“வாழ்க்கையில் பிளவு பட்ட எதையும் ஒட்டிவிடும் சூப்பர் கோந்து மன்னிப்பு தான்! அது எதையும் ரிப்பேர் செய்து விடும்!” –லின் ஜான்ஸ்டன்

 

உலகின் பிரபல அறிவியல் இதழான லைவ் ஸயின்ஸ் (Live Science) உலகிலுள்ள அறிவியல் கட்டுரைகளிலெல்லாம் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து வாராவாரம் முத்திரைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்திய ஏப்ரல் 2016, இரண்டாவது வார இதழில் அது வெளியிட்டுள்ள கட்டுரை ‘சாரி ஸயின்ஸ்’ (Sorry Science) பற்றியது. அதாவது மன்னிப்பு பற்றிய அறிவியல் நோக்கிலான கட்டுரை தான் சாரி ஸயின்ஸ் கட்டுரை!. சாரா மில்லர் என்பவர் இதை எழுதியுள்ளார்.

 

 

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனக்கு அப்படி ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியவர் தன்னிடம் மன்னிப்பு கேட்பதைப் பெரிதும் விரும்புகின்றனர்.

ஆனால், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த மன்னிப்பில் ஆறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்கிறது அறிவியல் ஆய்வு. அமெரிக்காவிலுள்ள ஓஹையோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராய் லெவிகி (Roy Lewicki),” மன்னிப்பு நிச்சயம் வேலை செய்யும் – அதில் ஆறு அம்சங்கள் இருந்தால்” என்கிறார். அவர் தான் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய குழுவின் தலைவர்.

 

 

மன்னிப்பு கேட்பதில் முதலாவது அம்சம் தவறுக்கான பொறுப்பை தான் ஏற்பதாகும். “நான் தான் தவறு செய்தேன்.,” என்று ஒத்துக் கொள்ளும் போது பாதிக்கப்பட்டவரின் மனநிலை பெரிதும் மேம்படுகிறது; ஆறுதல் அடைகிறது.

அடுத்ததாக தவறினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய முன்வருவது. ’ஏற்பட்ட ‘டாமேஜை’ சரி செய்கிறேன் என்று சொல்லும் போது எதிராளியின் மனம் மிகவும் சமாதானப்பட்டு விடும்.

 

 

மன்னிப்பு கேட்கும் போது கேட்பவருக்குப் புரியும் அதே மொழியில் கேட்க வேண்டும். உலகில் எந்த  மொழியினராக இருந்தாலும் அனைவருக்கும் பிடிக்கும் வார்த்தைகள், மற்றவர்கள், “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று சொல்வது தான்!

மன்னிப்பை முன் வைக்கும் போது ஒரு உணர்வு பூர்வமான தொடர்பை நீங்கள் பாதிக்கப்பட்டவருடன் கொள்ள வேண்டும். உங்களின் தவறினால் அவருக்கு எப்படிப்பட்ட வலி அல்லது வேதனை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் வேதனைப்படுவதை அவர் உணர வேண்டும்,

 

 

அடுத்து பாதிக்கப்பட்டவர் சொல்வதை முழுதுமாக அமைதியாகக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

கடைசியான அம்சம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்பது தான்!

இந்த ஆய்வில் 755 பேர் பங்கேற்றனர்.

முதலாவது சோதனையில் 333 பேர்கள் பங்கேற்றனர். மன்னிப்பின் ஆறு அம்சங்களோ அல்லது அவற்றில் ஒன்றோ அல்லது இரண்டோ கொடுக்கப்பட்டு அதை எப்படி அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

இரண்டாவது சோதனையில் 422 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஒன்று முதல் ஆறு வரையிலான மன்னிப்பு அம்சங்களை படிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதோடு எப்படி அதை அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

முதல் சோதனையில் மன்னிப்பின் எத்தனை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று முன்னமேயே சொல்லப்பட்டது. ஆனால் இரண்டாம் சோதனையில் எத்தனை அம்சங்கள் மன்னிப்பு கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படவில்லை.

ஆறு அம்சங்களையும் கொண்ட மன்னிப்பே சிறந்த மன்னிப்பாக அனைவராலும் கருதப்பட்டதை சோதனை முடிவு தெரிவித்தது.

 

மன்னிக்க வேண்டுகிறேன் என்பதைச் சொல்லும் போது ஆறு அம்சங்களைச் சிந்திக்க வேண்டுகிறேன் என்று கூறிய ஆய்வின் தலைவர் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

இந்த ஆய்வின் குறையாக ஒன்றையும் இது பற்றி சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த சோதனையில் மன்னிப்பு என்பது எழுதிய வாசகங்களைப் படிப்பதாக மட்டும் அமைந்துள்ளது. நேரடியாக மன்னிப்பு கேட்பது போல அமையவில்லை.

 

 

நேருக்கு நேர் கண்ணொடு கண் பேசும் மொழி இதில் இல்லை. அந்த உணர்வு பூர்வமான வெளிப்பாடு மன்னிப்பு கேட்பதில் தலையாய அம்சமாகும் என்று அந்த ஆய்வாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்பதைப் பற்றி ஆய்வு நடத்திய இன்னொரு உளவியல் நிபுணரான ஃபெர் (Fehr) இது பற்றி ஏராளமான ஆய்வுப் பேப்பர்களை வெளியிட்டுள்ளார்.

 

 

அவர், “மன்னிப்பு என்பது ஒருவரின் செயலையும் அந்த நபரையும் இரண்டாக பிரிவு படுத்திக் காட்டும் ஒன்று” என்கிறார்.

“நான் செய்த செயல் மோசம் தான். ஆனால் நான் கெட்ட ஆள் இல்லை. இதை உளமாரச் சொல்கிறேன்.” என்று ஒருவர் சொல்லும் போது பாதிக்கப்பட்டவரின் மனம் சமனம் அடைந்து மன்னிப்பை நல்கும் மனப்பான்மையை அடைகிறது என்கிறார் அவர்.

 

 

மன்னிப்பைக் கேட்கும் சமயமும் முக்கியமான ஒன்று என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

ஆக மன்னிப்பு கேட்பதைக் கூட அறிவியல் ரீதியாகக் கேட்கலாம். மற்றவர்களைச் சுலபமாகச் சமாதானப்படுத்தலாம்!

200px-Jerome_Karle,_2009

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

இரசாயனத்தில் 1985ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி டாக்டர் ஜெரோம் கார்லே (Dr Jerome Karle- தோற்றம் 18-6-1918 மறைவு 6-6-2013)

அவர் இஸபெல்லா லுகோஸ்கி என்ற இளம் பெண்ணை இரசாயன சோதனைக்கூடத்தில் 1940 ஆண்டு சந்தித்தார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாக 1942இல் அவர் இஸபெல்லாவை மணந்தார். எக்ஸ் ரே கிறிஸ்டலோகிராபி துறையில் இருவரும் இரு வேறு ஆராய்ச்சிகளைச் செய்தனர்.

 

 

நோபல் பரிசு பெற்ற போது அதில் தன் மனைவிக்கு உரிய கௌரவம் தரப்படவில்லையே என்று வருத்தமுற்றார் அவர்.

நோபல் பரிசு பெற்ற செய்தி அவருக்கு ஒரு பெரும் ஆச்சரியமூட்டும் செய்தியாகவே அமைந்தது.

அந்தச் செய்தி அவருக்குக் கிடைத்த போது அவர் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார்.

 

திடீரென்று விமான பைலட் ஒரு செய்தியை மைக்கில் அறிவித்தார்.

“நாம் இந்த தருணத்தில் மிகவும் கௌரவப்படுத்தப்பட்டுள்ளோம். நம்முடன் இப்போது தான் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டின் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்முடன் இதோ இந்த விமானத்தில் இருக்கிறார். அவருக்கே தனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்பது இதுவரை தெரியாது”

விமானிக்குக் கிடைத்த செய்தியை அவர் சுடச்சுடச் சொல்ல அனைவரும் பரபரப்புடன் ஆரவாரித்தனர்.

 

 

விமானி தொடர்ந்தார்: “உண்மையில் இந்த நோபல் பரிசு 29-சி சீட்டில் அமர்ந்திருக்கும் டாக்டர் ஜெரோம் கார்லேக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ள செய்தியை அவர் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர் மூனிச்சிலிருந்து இன்று காலை  கிளம்பி விட்டார். ஆகவே இப்போது இந்த நல்ல செய்தியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”

 

 

பயணிகள் எல்லோரும் குதூகலப்பட ஜெரோமுக்கு விமானி சாம்பெய்ன் கொடுத்து விசேஷமாக கௌரவித்தார்.
உயரத்தில் பறந்தவருக்கு உயரிய விருது கிடைத்த செய்தியை உரிய விதத்தில் அளித்தார் விமானி!

*************

 

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்!- 4 (Post No.2794)

buddha gold

Written  BY S NAGARAJAN

Date: 9 May 2016

Post No. 2794

Time uploaded in London :–  5-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் பற்றிய நான்காவது கட்டுரை இது).

 

 

Third Part was posted on 28th April 2016.

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -4

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னின் பயணம் தொடர்ந்தது. டா-டாங் என்ற இடத்தில் உள்ள டி-கேங் என்ற துறைமுகத்தை அவர் அடைந்து ஆற்றின் கரையோரமாக நடக்கலானார். ஆற்றைக் கடக்க அவர் விரும்பினார். ஆனால் ஆற்றின் நீர் மட்டமோ உயர்ந்து கொண்டே இருந்தது. படகோட்டி ஒருவனைச் சந்தித்தார். அவன் ஆறு நாணயங்கள் கேட்டான். ஆனால் ஸு யுன்னிடமோ ஒரு நாணயம் கூட இல்லை.

அவரை ஏற்றாமல் படகு நகர்ந்தது. கரையோரமாக நடக்க ஆரம்பித்த அவர் தண்ணீரில் அகஸ்மாத்தாக காலை வைக்கவே நீர் பிரவாகம் அவரை உள்ளே இழுத்தது.

 

 

நீரில் சிக்குண்ட அவர் ஒரு பகல் ஒரு இரவு மிதந்து கொண்டே பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.காய் –ஷி துறையை நோக்கி அவர் இழுத்துச் செல்லப்பட்டார். தற்செயலாக அவரது காவி உடையைக் கண்ட ஒரு மீனவன் அவரைத் தன் வலையை வீசி இழுத்தான். அவரது காவி உடையைப் பார்த்ததால் பாவோ ஜி ஆலயத்தில் இருந்த ஒரு துறவியை அவன் அழைத்தான். அந்த துறவி ஏற்கனவே      ஸு யுன்னைப் பார்த்திருந்ததால் நன்கு அடையாளம் தெரிந்து கொண்டார்.

 

 

ஒரு சமயம் இருவரும் ஜின் – ஷான் மடாலயத்தில் சேர்ந்து தங்கி இருந்தனர். ஸு யுன்னின் நிலையைக் கண்ட அவர், “ஆஹா! இவர் மாஸ்டர் டீ – குங் அல்லவா” என்று வியந்து கூவினார். ஸு யுன்னின் மடாலயப் பெயர் டீ – குங்! அருகிலிருந்த ஆலயத்திற்கு அவரைத் தூக்கிச் சென்றனர். தொடர்ந்து நீரில் இருந்ததால் அவரது மூக்கிலிருந்து ரத்தம்; வாயிலிருந்து ரத்தம் அந்தரங்க உறுப்பு, ஆசனவாய் என்று அனைத்து துவாரங்கள் வழியாகவும் ரத்தம்!

 

 

 

பாவோ ஜி ஆலயத்தில் சில நாட்கள் ஸு யுன்  தங்கினார். பின்னர் காவோ-மின்  மடாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைக் கண்ட மடாலய நிர்வாகி அவர் வெளுத்து இளைத்து இருப்பதைக் கண்டு உடல் நலம் சரியில்லையா என்று வினவ ஸு யுன்   ஆம் என்றார். தான் நீரில் விழுந்ததை அவர் சொல்லவில்லை.

 

 

அங்கு நடக்கவிருக்கும் தியான வகுப்பை கவனித்துக் கொள்ளும் வேலையைத்  தர முன் வந்தார் அந்த நிர்வாகி. ஆனால் ஸு யுன் அதை தாழ்மையாக மறுத்தார். ஒரு மடாலயத்தில் ஒரு பெரும் பணியைத் தரும் போது மறுப்பதென்பது பெரிய குற்றமாகப் பொதுவாகக் கருதப்படும்.

 

ஆகவே அவரைத் தடி கொண்டு அனைவரும் தாக்கினர். ஸு யுன்னோ அத்தனை அடிகளையும் பொறுமையுடன் ஏற்றார்! அவர் உடல்நிலை இன்னும் மோசமானது. சிறுநீருடன் விந்து வெளியேறும் மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் ஸு யுன்னோ மிக உற்சாகமாக தியான மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார்.

 

 

உடல் உணர்வே அவருக்குப் போய் விட்டது. இருபது நாட்கள் கழிந்தன. அவர் உடல் நிலை சீரானது.

அப்போது  காய் ஷி துறையிலிருந்து வந்த துறவி ஒருவர் ஸு யுன்னைக் கண்டு அவரைப் பற்றி மிக உயர்வாகப் பேசினார். அவர் நீரில் விழுந்ததைப் பற்றியும் கூறினார்.

 

buddha in SL

இப்போது ஸு யுன்னின் உடலோ தக தகவென ஜொலித்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட அனைவரும் தங்களை மன்னிக்குமாறு கூறி அவரை எந்த வேலையும் செய்ய வேண்டாமெனக் கூறினர்.

ஒரு நாள் தியானம் முடிந்த போது மிகவும் பிரகாச்மான ஒளி ஒன்றை அவர் கண்டார். பகல் நேரத்து சூரிய ஒளியைப் போன்ற பிரகாசம்!

 

 

 

ஸு யுன்  கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம்! சுவர்களை ஊடுருவி அவரது பார்வை விரிந்தது. சுவர்களுக்கு அப்பால் உள்ள அனைத்தும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

ஊதுபத்தியை ஏத்தும் துறவி, கழிவறையில் அமர்ந்திருந்த துறவி, தூரத்தில் ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த படகுகள் – அனைத்துக் காட்சிகளையும் அருகிலிருந்து பார்ப்பது போல அவரால் பார்க்க முடிந்தது.

 

 

அவரது நடையோ பறப்பது போல அமைந்தது.

இது ஒரு தற்காலிக நிலை என்பதை ஸு யுன்  உணர்ந்தார்,

ஒரு நாள் அவரது உதவியாளர் அவருக்கு தேநீர் கோப்பையைத் தந்தார். அகஸ்மாத்தாக தேநீர் அவரது தலையில் கொட்ட கோப்பையை ஸு யுன்  கீழே தவற விட்டார்.

தடால் என ஒரு சத்தம்!

 

அவருக்கு திடீரென மனத்தின் மூலம் – வேர் பற்றிய ஞானம் உதித்தது!

ஆஹா! எந்த பெரும் நிலையை அடைய வேண்டித் தவம் இருந்தாரோ அந்த நிலை அவரை வந்து அடைந்து விட்டது.

ஒரு கணத்தில் அவருக்கு வீட்டிலிருந்து கிளம்பி அன்று வரை நடந்த காட்சிகள் மனதில் ஓடின!

அவருக்கு ஒரு ‘கதா’ உதித்தது. அவர் பாடினார் இப்படி:

 

 

“ஒரு கோப்பை தரையில் விழுந்தது!

அது விழுந்த சத்தமும் தெளிவாகக் கேட்டது!

வெளி (Space) பொடிப்பொடியானது!

பைத்தியக்கார மனம் ஒரு நிலைக்கு வந்து நின்றது!

கை பிடித்திருந்ததை விட்டு விட கோப்பை விழுந்து நொறுங்கியது!

குடும்பம் உடையும் போதோ ஒருவர் இறக்கும் போதோ பேசுவது கடினம்!

வசந்த காலம் மலர்ந்த மலர்களின் வாசத்துடன் வருகிறது!

மலைகள்,ஆறுகள், பெரிய பூமி அனைத்துமே ததாகதர் தவிர வேறொன்றில்லை!!”

 

பூரண ஞானம் பொலிந்த துறவியாகி விட்டார் ஸு யுன்!

**********    தொடரும்