How did Rare Indian Animal ‘Asunam’ become extinct?

Mythical_Creatures_by_Jesteppi
Chart of mythical animals around the world

Written by London Swaminathan
Post No. 981; dated 15th April 2014

Sonic boom and Sonic bomb
Tamil literature gives us very interesting information about a rare animal called ‘Asunam’. It is phonophobic. It has got a good taste for melodious music. It is more musical than most men. But the minute someone plays on a big drum it dies at once. Sangam Tamil literature is 2000 year old. We have three references to this ‘Asunam’and later literature gives more information. It is not a mythical animal like griffin or Makara or Yali. Somehow palaeontologists and paleo zoologists missed this. Now we get more scientific information about sonic bombs and low frequencies emitted by submarines that killed even giant squids. Dolphins and whales commit mass suicides because of sonar disturbances. So we may look into this extinct animal again armed with all the scientific facts.

homa-bird-2

Mysterious Vedic Bird ‘Homa’

Tamil literature

‘Natrinai’ is one of the anthologies of Sangam Tamil literature and verses 244 and 304 give the following information:
In the mountainous ‘Kurinji’ area, ‘Asunam’ lives in the caves. It listens keenly to the buzzing sound (music) of the bees and beetles. The heroine of a love poem says, “My lover is like an Asunam. When he is near me it gives pleasure. When he is temporarily separated it gives me great sorrow. I am like Asunam attracted by melodious music and then killed by loud beating of the drums.

The commentator explains that the Tamils played on lyre to attract the Asunams from the caves and suddenly played on drums to kill them. Another verse from another Sangam Tamil anthology called ‘Akananuru’ (verse 88) gives similar information. The only difference is that the commentator describes Asunam as a bird here.
‘Nammanik kadikai’– is one of the 18 minor Tamil works. Verse three of the book is very clear about Asunam. It described it as an animal. It compares Asunam with several other people in public life.
The celebrated author Kamban of Kamba Ramayanam compared himself to Asunam! He said, “Among the stalwarts of Tamil language, probably my poems may be like playing drums to Asunams”. Kamban was so humble that he said his poems may not be of good quality, but the fact of the matter is that he is considered one of the great poets of the Tamil speaking world.

homa-bird-1
Homa bird is the logo of Iran Airlines

My Research Findings on ASUNAM:–

My research on the Asunam based on the above verses and Tamil encyclopaedia Abhidana Chintamani has found out the salient features of Asunam stories. I can summarise them as follows:–
1.Though there are only three references in the ancient Sangam literature, we know that it is not a bird, but an animal.
2.It lived in the caves of the mountains which ancient Tamils called ‘Kurinji ‘lands.
3.Asunam loved mellifluous music but susceptible to harsh music particularly high decibel noise. Modern research shows that sounds of 185 decibels or more can kill human beings.
4.Tamils deliberately played on lyre to attract it and killed them by playing on big drums. It may be one of the reasons for its extinction. The other reason is noise pollution. It might have slowly disappeared.
5. Very few references in the 2000 year old Sangam Tamil literature show that it was a rare animal even at that time. Other animals like tigers, elephants and bears are referred to hundreds of times.
6.Ancient Tamils knew the power of sound waves. Modern research in this field has led into the development of sonic bombs. We already knew the effect of sonic booms emitted by supersonic jets. We now know the effect of sonar waves on dolphins and whales.
7.It will be good that if Tamils do more research and find out the fossils from mountainous area.
8.I have given the full details of the poets names with full quotes in the Tamil version of this article and we know where those poets lived in ancient Tamil Nadu. So we can narrow down the area of our search.
9.Adi Shankara who lived in the first century BC or before, adds some interesting details ( I follow Kanchi Paramacharya in dating Adi Shankara, which is supported by Tamil literature. Please read my earlier article for the dating)

China,_testa_di_makara,_
Mythica Hindu Makara in China

Adi Shankara on Deer Hunt
Verse (sloka) 76 of Viveka Chudamani of Adi Shankara says,
The deer, the elephant, the moth, the fish and the honey bee —- these five are annihilated because of their slavery to one or the other of the senses such as sound etc., through their attachment. What then is the condition of a man who is attached to all these five?
The commentators add the following information about deer:
“The deer is always fascinated by melodious sound and the deer hunter sings to charm the deer. Attracted by the melody of sound, the deer has no awareness of the danger it is in and turns in the direction of the music; the hunter soon makes it his target”.
Asunam may belong to the family of deer.

Makara-1thailand
Makara in Thailand

Contact swami_48@yahoo.com

My other articles on related topics:

https://tamilandvedas.wordpress.com/2013/02/16/hindu-eagle-mystery-deepens/

Four Birds in One Sloka: Adi Sankara and Nature | Tamil …
tamilandvedas.wordpress.com/…/four-birds-in-one-sloka-adi-sankara-an…‎
9 -7- 2012

The Mysterious Vedic Homa Bird – Tamil and Vedas
tamilandvedas.wordpress.com/…/the-mysterious-vedic-homa-bird-does-it…‎
10 Dec 2011 –

The Mysterious Vedic Homa Bird: Does It Exist?
1

சப்தம் கேட்டால் இறந்துவிடும் அதிசய மிருகம் ‘அசுணமா’!!

Mythical_Creatures_by_Jesteppi

கட்டுரையாளர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—980; தேதி— 15 ஏப்ரல் 2014.

(This article is available in English)

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஒரு அதிசய விஷயம் இருக்கிறது. அசுணமா என்னும் ஒரு மிருகம் பற்றிய தகவல் இது. இப்போது இந்த விலங்கு உலகில் இல்லை. எவ்வளவோ விலங்குகள் இப்படி அழிந்து போய்விட்டன. படங்களில் மட்டுமே காணலாம். தொல்விலங்கியல் (Paleontolgy or Paleo zoology) என்னும் துறை இது போன்ற விலங்குகளின் எலும்புக்கூடுகள் ,படிம அச்சுக்கள் (Fossils) ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தில் உள்ள அசுணமா பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தடயங்களும் கிடைக்கவில்லை.

வேதத்திலும் ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையிலும் வரும் ஹோமா பறவை (Homa Bird) பற்றி முன்னர் எழுதினேன். அதைப் போன்றே இதுவும் காலப்போக்கில் அழிந்து போய் இருக்கவேண்டும். இதோ அந்த அதிசய அசுணமா பற்றிய விவரம்:–

நற்றிணைப் பாடல் 244, பாடியவர் கூற்றங்குமரனார்
“விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றே”

பொருள்:—மழை கொட்டும் குளிர்ந்த மலைப்பகுதி. அங்கே கூதிர்க் காலத்தில் கூதாளி பூ மலர்ந்து மணம் வீசும். அழகிய வண்டு மிக இனிமையாக ரீங்காரம் செய்யும். அதை நறுமணம் வீசும் குகையில் இருந்து அசுணம் என்னும் விலங்கு கூர்ந்து கேட்கும்.

நற்றிணைப் பாடல் 304, பாடியவர்:- மாறோக்கத்து நப்பசலையார்

“மணிமிடை பொன்னின் மாமை சாய, என்
அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.

பொருள்:– (என் காதலன் என்னோடு இருந்தால் என் அழகு குன்றாது). அவர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டால், தங்கத்தையும் நீலமணியையும் சேர்த்துக் கட்டிய மாlலையில், தங்கத்தின் அழகு குன்றுவது போல என் மேனி அழகு குன்றும். பசலை தோன்றி அழகைக் கெடுத்துவிடும். அதனால் குளிர்ந்த மணம் கமழும் மாலை அணிந்த என் காதலன் மார்பு அசுணம் என்னும் விலங்கைக் கொல்பவர் கை போன்றது. அதாவது இன்பம் தந்து பின்னர் துன்பத்தைக் கொடுக்கும்.

இதன் விளக்கம் என்ன கூறுகிறது என்றால், அசுணம் என்னும் சங்கீத ஞானம் ( இசையறி விலங்கு ) உடைய விலங்கைக் கொல்வோர் முதலில் யாழ் என்னும் கருவியை வாசிப்பர். அதைக் கேட்டு அது மகிழ்ந்து அருகில் வரும். பின்னர் பெரிய டாமாரம், முரசு முதலியவைகளை வாசிப்பர். அந்த சப்தம் தாங்காமல் அது அப்படியே இறாந்துவிடும். இது போல என் காதலர் பிரிந்தால் என்னை வாட்டி வதைத்து கொல்வது போலாகும் என்று தலைவி உவமை காட்டுகிறாள்.

homa-bird-2
Picture of Vedic Homa bird in Iran

அகநானூற்றிலும் ஒரு பாடல் உண்டு.

பாடல் 88; பாடியவர்:– ஈழத்துப் பூதந்தேவன்
இரும்புலி தொலைத்த பெருங் கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி.
கொடுவிரல் உளியம் கெண்டும்
வடி ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?

பொருள்:—“புலியைக் கொல்லும் பெரிய கை உடையது யானை. அதன் கன்னத்தில் இருந்து மத நீர் வடியும். அதில் வண்டின் கூட்டம் மொய்க்கும். அதன் ரீங்காரத்தை யாழின் ஒலி என்று கருதி பெரிய குகைகளில் உள்ள அசுணப் பறவைகள் உற்றுக் கேட்கும். அத்தகைய காட்டில் பாம்புகள் இறந்து போகும் படி கரடிகள் புற்றுகளைத் தோண்டும். என் காதலன் இப்படிப்பட்ட கஷ்டமான வழியில் சென்றானோ?”

நான்மணிக் கடிகை என்ற பிற்கால பதினென் கீழ்க்கணக்கு நூலிலும் ‘அசுணமா’ வருகிறது. இதில் முதல் தடவையாக அசுணம்+மா (மிருகம், விலங்கு) என்ற சொல் வருவதால் அசுணம் என்பது பறவை இல்லை என்பதும் தெரிகிறது:

பறைபட வாழா அசுணமா உள்ளம்
குறைபட வாழார் உரவோர் – நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாம் சால்பு (நான்மணிக்கடிகை, பாடல் 3)

பொருள்:— பறையின் ஒலி செவியில் விழுந்தால் ‘அசுணமா’க்கள் உயிர் வாழாது. அறிவுடையோர் ஊக்கம் குறைந்துவிட்டால் உயிர்வாழ மாட்டார் (காண்க-1). மூங்கில்கள் நெல் (தானியம்) தோன்றியவுடன் அழிந்துவிடும். மானமுள்ளவன் அவச்சொல் ஏற்பட்டால் உயிர்வாழ மாட்டான் (காண்க–2).

(1).அதாவது பயனுடைய செயல்களைச் செய்யும் வலிமை போய்விட்டால் தர்மன் முதலிய பஞ்ச பாண்டவர்கள் மேரு மலையை நோக்கி நடந்தே உயிர்விட்டது போல.. (2.)அதாவது சிறைவைக்கப்பட்ட சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை தண்ணீர் கேட்டவுடன் அவமானப் படுத்தப்பட்டான். உடனே உயிர் துறந்தான், கோவலனுக்கு மரணதண்டனை விதித்தது தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டியவுடன் பாண்டிய மன்னனும் அவனது மனைவியும் உடனே உயிர்விட்டனர்.

homa-bird-1
Mythical Vedic Homa Bird is the emblem of Iran Airlines

அசுணம் பற்றி எனது ஆராய்ச்சி முடிவுகள்

1.மூன்று சங்க இலக்கியப் பாடல்களில் அகநானூற்று உரையில் மட்டும் பறவை என்று வருகிறது. பாட்டில் விலங்கா பறவையா என்ற சொல் இல்லை. உரைகாரர்தான் அவ்வாறு கூறுகிறர். குகையில் வாழக்கூடியது விலங்காகத்தான் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
2.இது குறிஞ்சி நிலப் பாடல்களில் மட்டும் மூன்று புலவரால் பாடப் படுவதால் இது மலையும் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்த ஒரு விலங்கு என்றே கருத வேண்டும்.
3.மேலும் யாழ் வாசித்து பின்னர் பெரிய பறை (முரசு) ஒலி எழுப்பி கொன்ற செய்தியும் இருப்பதால் தமிழர்கள் இதை மாமிசத்துக்காக வேட்டையாடியே கொன்றிருக்கலாம்.
4.ஒலி அலைகளுக்கு எவ்வளவு சக்தி உண்டு என்பதை இது காட்டுகிறது. இப்படிப்பட்டதொரு விலங்கு,— சப்தம் அதிகரிக்கும் உலகில்— தாமாகவே அழிந்து போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.
5.இது மலைக் குகைகளில் வாழும் என்பதை எல்லா புலவர்களும் கூறுவதால் அந்தத் தகவல் சரியாகவே இருக்கும்.
6.இதைப்பற்றி சங்க நூல்களில் மூன்றே குறிப்புகள் மட்டும் வருவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது அபூர்வ விலங்கு ஆகியிருக்க வேண்டும்.
7. நவீன கால ஆராய்ச்சிகள் இது உண்மை என்றே காட்டுகின்றன. 185 டெசிபல் சப்தத்துக்கு மேல் கேட்டால் உடனே மரணம் சம்பவிக்கும். அதை அடிப்படையாக வைத்து சோனிக் பாம்ஸ் (சப்த வெடிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து வெளியாகௌம் கீழ்மட்ட அலைவரிசை ஒலிகள் டால்பின், திமிங்கிலம் போன்ற பிராணிகளைக் கொன்றதௌ அல்லது குழப்பிவிட்டது தற்கால ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டால்பின் எனப்படும் மிக புத்திசாலியான கடல் விலங்கும் திமிங்கிலங்களும் கூட்டமாகக் கடற்கரைக்கு வந்து “தற்கொலை” செய்துகொள்வதற்கு நீர்மூழ்கிக் கப்பலின் ஒலி அலைகளே காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

China,_testa_di_makara,_
Hindu Mythical animal Makara in China

கம்ப ராமாயணத்தில் அசுணம்

கம்பனும் ராமாயணத்தில் அசுணமா பற்றிப் பாடுகிறான்.
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பாஅரோ.
பொருள்:–சான்றோர்கள் பல விருத்தப் பாக்களைக் கேட்டிருப்பார்கள். அந்தப் பாக்களுக்கு உறைவிடமாகத் திகழும் சான்றோர்களுக்கு என் பாடலை ஓதினால் இசை என்னும் தேனைச் சாப்பிட்ட சிறந்த விலங்கின் காதுகளில் பறை ஒலி விழுந்தது போல இருக்கும்.

அபிதான சிந்தாமணியில் சிங்காரவேலு முதலியார் கீழ்கண்ட செய்தியை எழுதி வைத்துள்ளார்.:–
அசுணம் : இது பேடையை விட்டு நீங்காத பறவை இதனிறம் உருவம் முதலிய நன்றாக விளங்கவில்லை. இதன் ஓசையை தலவனீக்கத்தில் தலைவி பொறாமைக்குத்த் தமிழ்நூலார் உவமை கூறுவர்.. (இந்தத் தகவல் பறவை என்று சொல்லுவது சரியெனப் படவில்லை).

Makara-1thailand
Hindu Makara in Thailand

மான் வேட்டை பற்றி ஆதி சங்கரர்

ஆதி சங்கரர் பாடிய விவேக சூடாமணி தோத்திரத்தில் பாடல் 76-ல் மான்களை இசை பாடி பிடிக்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறார். ஆக அசுணமா என்பது இது தொடர்புடைய ஒரு விலங்காக இருக்கலாம்.
பாம்புகளுக்கு செவிகளே இல்லை என்று உயிரியல் நிபுணர்கள் கூறியபோதும் மகுடி ஊதி பாம்பு பிடிக்கும் பாம்புப் பிடாரர் பற்றி இந்தக் காலம் வரை செய்திகள் கிடைக்கின்றன.( பாம்புக்கு கட் செவி= கண்களே செவி என்று தமிழில் ஒரு சொல் உண்டு. இது பற்றி நான் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் முழு விவரம் காண்க.)

My Articles related to this topic:—

Mysterious Tamil Bird Man | Swami’s Indology Blog
SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

Four Birds in One Sloka: Adi Sankara and Nature | Tamil …
tamilandvedas.wordpress.com/…/four-birds-in-one-sloka-adi-sankara-an…‎
9 -7- 2012

The Mysterious Vedic Homa Bird – Tamil and Vedas
tamilandvedas.wordpress.com/…/the-mysterious-vedic-homa-bird-does-it…‎
10 Dec 2011 –

https://tamilandvedas.wordpress.com/2013/02/16/hindu-eagle-mystery-deepens/

contact swami_48@yahoo.com

Hindu View: What is the use of Hands and Feet?

hands for worship

Swamiji praying with his hands.

This article is posted already in Tamil with all the original quotes: swami.
By London Swaminathan
Post No. 979; Date 14th April 2014

Vedic Prayer to Bharati’s poems

Bhadram karnebei srnu yama deva:……………. Devahitham yadayu: (Yajur Veda 25/21).

Hindus believe that the limbs of the body are given for worshipping God. Hands are raised to pray to God. Mouths sing the glory of God. Ears listen to all that is good. Feet are given to go on pilgrimage. Head and heart are there to think about God. These are daily routines which one should do in addition to the house chore.

We read such lofty thoughts in the ancient Vedas and the Upanishads. The above mantra Bhadram Karnebi…….. is in Yajur Veda and other Upanishads attached to Atharva Veda.

Meaning of the Mantra

“O Gods ! May we ever hear with our ears such words which are beneficial to all.
O Adorable ones, may we see with our eyes what is auspicious.
May we sing praises to you and enjoy with strong limbs and body the life allotted to us by the Gods” (Yajur Veda 25/21)

mouth for singing

Sri Sathya Sai Baba singing Bhajans.

Tamil Epic Silappadikaram

Ilango was a post Sangam Tamil poet. He wrote an epic on an incident that happened in the second century AD, but the language of the epic shows that he lived in a later period around fifth century AD. He praised Rama and Krishna in one of the verses in the epic:–

“Vain are the ears which do not hear the glory of the doughty champion, who measured the three worlds with his two feet and yet found them too small; who penetrated with his younger brother into the wild jungle to the reddening of his lotus feet; who pulled down in the battle the ‘SO’ fortress and deprived ancient Lanka of its protection. Vain are the ears which do not hear the glory of TIrumal.

“Vain are the eyes which do not see the dark-hued lord, the great god, Mayavan, the god in the blossomed lotus of whose navel appeared all the great worlds, and who has red eyes, red feet, red hands and red lips. Vain are the eyes of those who while looking must wink.

“Vain is the tongue that will not praise him who triumphed over the deceit of the foolish schemer Kamsa and who went as the messenger of the five Pandavas to the hundred Kauravas, praised in all four directions, to the accompaniment of Vedic chanting. Vain is the tongue which does not say ‘Narayana’.

datta speaking

Devotees are listening to Sri Ganapati Sachidananda Swamiji

Poets of Devotional Movement

Later Tamil poets, Appar of the Seventh Century and Kulasekara Alvar of later period also pray to God that all their limbs, from foot to head, must be utilised in the service of God.
Tamil Saivite saint Appar alias Tirunavukkarasu went to every temple with a spade and axe in his hand to remove the weeds on the towers and on the temple grounds. Appar, in his Thiru Anga Malai (Hymn of Garland of Limbs) sings that every limb of his body should worship god. Kulasekara Alvar, one of the 12 Vaishnava saints, in his Mukundamala (sloka 16) addresses each of his limbs to pray to God

akhandabhajan2001_1

Baba devotees singing Bhajans.

Bharatiyar

Bharati has sung the longest poem on this theme. C.Subramanya Bharati (1882-1921), the greatest Tamil poet of the modern times, has mentioned all the limbs in his poem on Sakti. He prayed to goddess Sakti to give strength to all his limbs and make him an instrument of Sakti. It is a long poem with 46 stanzas. Following few stanzas give us some idea of the intensity of his prayer. We can clearly see the influence of the Vedic hymn “ Bhadram Karnebi srunuyama Deva:”.

(Sakti means Mother Goddess and Power)
(In Tamil the poem begins with “Sakti thanakke karuviyaakku……………”)

Stanza1
Of hands make an instrument of Sakti,
They will sure with all achievements be linked;
Of hands make an instrument of Sakti
They will grow powerful even to smite a stone.

Stanza 2
Of eyes make an instrument of Sakti,
They will ken the way by Siva Sakti shown;
Of eyes make an instrument of Sakti
They will grow with truth and beauteous grace.

Stanza 3
Of ears make an instrument of Sakti,
They will hearken to the words of Sakti;
Of ears make an instrument of Sakti
They will long for hymns of Sakti divine

From stanza 13 to 23 he prays for mind, from 24 to 29 on ‘chitta’, from 30 to 41 on intellect and finally from 41 to 45 on soul.

His final stanza is very interesting and shows how much energy he has gained by chanting this hymn:–
Stanza 46

‘’Praise to be Siva Sakti’’ may you sing;
Chant “Siva Sakti Sakti “ jump and dance;
‘’Praise to be Siva Sakti’’ may you sing;
Play you, singing Siva Sakti Sakti.’’

(Bharati Poems–Translated from English into Tamil by Dr T N Ramachandran)

Contact swami_48@yahoo.com

தியானத்துக்கு மிகவும் அவசியம் பூனை!!!

SONY DSC

மூட நம்பிக்கைகள் தோன்றுவது எப்படி? 4 கதைகள்
Post No. 978 ; Date 14th April 2014
By London Swaminathan

பேராசிரியர் ராமானுஜ சீனிவாசன் இந்திய கலாசாரம் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றில் இசையில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தது பற்றி நான்கு கதைகள் சொல்லுகிறார். இவை இசைக்கு மட்டுமின்றி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

முதல் கதை: தியானத்துக்கு மிகவும் அவசியம் பூனை!!!

ஒரு ஊரில் ஒரு குரு இருந்தார். ஒரு நாள் அவருடைய ஆஸ்ரமத்தில் திடீரென்று ஒரு பூனை புகுந்தது. அது நோய்வாய்ப்பட்ட பூனை. ஆகையால் குரு அதை அன்புடன் கவனித்து நோயைக் குணப்படுத்தினார். இப்போது பூனைக்கு துணிச்சல் வந்துவிட்டது. குருநாதர் தியானம் செய்கையில் கூட அவர் மடியில் உட்கார்ந்து கொஞ்சத் துவங்கியது.

இந்த அன்புத் தொல்லை பொறுக்காததால், பூனையை குருநாதர் தினமும் தனது கட்டில் காலில் கட்டிப் போட்டுவிட்டு தியானம் செய்யத் துவங்கினார். குருநாதரின் சீடர்கள் இதை உன்னிப்பாகக் கவனித்தனர். நாளடைவில் குருநாதருக்கு வயதாகி இறந்தும் போனார்.

ஆஸ்ரமத்தின் பிரதம சீடர் குருநாதர் பதவிக்கு வந்தார். அவரும் பூனையின் கட்டில் கால் ‘’மர்மத்தை’’ அறியாமல் தினமும் அதைக் கட்டிலின் காலில் கட்டிப் போட்டுவிட்டுத் தியானம் செய்யத் துவங்கினார். நாளாக நாளாக எல்லோரும், தியானத்தைவிட பூனையைக் கட்டில் காலில் கட்டிப் போடும் சடங்கை பயபக்தியுடன் செய்யத் துவங்கினர். அந்தப் பூனைக்கு வயதாகியதால் அது இயற்கை மரணம் எய்தியது. உடனே புது பூனை ஒன்றை வாங்கி கட்டில் காலில் கட்டத் துவங்கிவிட்டனர்!
பிரதம சீடரும் இறந்தவுடன் சீடர்கள் ஆள் ஆளுக்கு ஒரு பூனையை வாங்கி கட்டில் காலில் கட்டத் துவங்கினர்! இப்படியாக தியானத்தைவிட பூனை முதலிடம் பெற்றது!

Tambourine_21787

கதை 2: ஆஹிரி பாடினால் சாப்பாடு கிடைக்காது!!!

ஆஹிரி ராகத்தைப் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று கர்நாடக சங்கீத உலகில் ஒரு மூட நம்பிக்கை உண்டு! இதற்கும் ஒரு சம்பவமே காரணம். அந்தக் காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போவோர் ஒரு கம்பின் நுனியில் கட்டுச் சாத மூட்டையைக் கட்டிக் கொண்டு அதைத் தோளில் சார்த்திக்கொண்டு வழிநடைப் பயணம் போவார்கள். ஒரு பாகவதர் இப்படிப் போகும் போது களைப்பால் அந்தக் கம்பை மரத்தில் சார்த்திவிட்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார். பல ராகங்கள் பாடினார். அவர் தன்னை மறந்து பாடிக்கொண்டே இருந்ததில் கம்பு சூடாகி திடீரென்று எகிரிக் குதித்தது. அப்போது அவர் ஆஹிரி ராகம் பாடிக்கொண்டிருந்தார். எட்ட முடியாத உயரத்தில் சோற்று மூட்டை இருந்தது. இந்த சம்பவத்தை அவர் சாதாரணமாக எல்லோரிடமும் கூறிச் சிரித்துக் கொண்டிருப்பார். மக்கள் அதிலிருந்து ஆஹிரி ராகம் என்ற விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , ஆஹிரி ராகம் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று வதந்தி கிளப்பினர். அது மூட நம்பிக்கையாக வளர்ந்து விட்டது!!

good tabla

கதை 3: சாவேரி பாடினால் சோகம் வரும்!!!

நான் ஒரு சங்கீதப் போட்டியை வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். யார் மிகவும் நன்றாகப் பாடினாரோ அவருக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை! போட்டியின் நீதிபதிகளாக வந்தவர்களில் ஒருவர் மிகவும் பிரபலமான சங்கீத நிபுணர்! அவர் நடுவராக இருந்தும் நன்றாகப் பாடியவருக்கு பரிசு கிடைக்காதது எனக்கும் ஆச்சர்யத்தைத் தந்தது. இறுதியில் அந்த நடுவர் பேச எழுந்தார். “ஒருவர் மிக நன்றாகப் பாடினார். ஆனால் ராகமாலிகையில் ஒரு பாட்டுப் பாடியதில் சாவேரி ராகத்தைக் கடைசியாக வைத்துவிட்டார். இது தவறு. கடைசியாகப் பாடவேண்டிய ராகங்கள் மங்களகரமான மத்யமாவதி, சௌராஷ்டிரா ராகங்கள் ஆகும். இதை அவர் பின்பற்றவில்லை என்றார். இதைக் கேட்கவே எனக்கு விநோதமாக இருந்தது. இப்படி ஒரு விதியும் கிடையாது என்பது பழைய பாடகர்களின் பாடல் வரிசையைப் பார்த்தாலேயே தெரியும்.

Musical Instruments3

கதை 4: கணபதியா? ஹம்சத்வனியா? எது முக்கியம்?

இன்னொரு கச்சேரிக்குப் போயிருந்தேன். அவர் ஹம்சத்வனியில் ‘ரகுநாயகா’ கீர்த்தனையில் துவங்கி ராமன் புகழ் பாடினார். அந்தக் காலத்தில் எல்லோரும் பிள்ளையார் மீது முத்துசுவாமி தீட்சிதர் பாடிய ஹம்சத்வனி க்ருதியான வாதாபி கணபதிம் பாடி கச்சேரி யைத் துவக்குவர். இதற்குக் காரணம் கணபதி பிரார்த்தனையுடன் எந்த ஒரு செயலையும் துவங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் ஆகும். அது மட்டுமல்ல. கம்பீரமான ஹம்சத்வனியும் அந்த சபையில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும்..
இது போல ஹம்சத்வனி ராகத்தில் கச்சேரியைத் துவக்காத சிலருடன் நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் கணபதியை மறந்துவிட்டு ஹம்சத்வனிதான் முக்கியம் என்று நினைத்தது தெரியவந்தது. எனக்கு இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!!
மேற்கூறிய விஷயங்கள் பேராசிரியர் சீனிவாசன் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இருந்து நான் தமிழில் மொழி பெயர்த்தேன்.

trimurti

மூட நம்பிக்கைகள் உருவாவது ஏன்?

1. எல்லோரும் செய்கிறார்கள் என்று நாமும் செய்வது.
2. ஒரு செயலின் காரணத்தை முன்னோர்கள் சொல்லாமல் மறைப்பது. அல்லது அந்தப் பெரியோர்களிடம் நாம் பயந்துகொண்டு காரணத்தை வினவாமல் விடுவது.
3. இப்படிச் செய்யாவிடில் ஏதேனும் எதிரிடை விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுவது அல்லது நாலு பேர் நம்மை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவது.
4. யாரோ ஒரு பெரியவர் செய்த செயலை நாமாகத் தவறுதலாகப் புரிந்துகொண்டு பின்பற்றுவது அல்லது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல தவறாக விளக்கம் கொடுப்பது.

Musical Instruments

மூட நம்பிக்கை இல்லாத துறையோ இடமோ இல்லை. வெளிநாடுகளில் வாழும் பெரிய பெரிய எழுத்தாளர்களும் நடிகர், நடிகைகளும், அரசியல்வாதிகளும் விளையாட்டு வீரர்களும்— எண், வர்ணம், தேதி, கிழமை—- ஆகியன பற்றிப் பலவகையான மூட நம்பிக்கைகளை வைத்திருப்பது அவ்வப்போது பத்திரிக்கை பேட்டிகளில் வெளி வருகிறது!!!

contact swami_48@yahoo.com

சங்கீதம் தோன்றிய கதை: ஒரு புராண வரலாறு

Musical Instruments3

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 976 தேதி- 13th April 2014

மனிதன் என்பவன் வெறும் வயிறு, மூளை மட்டும் படைத்தவன் அல்ல; அவனுக்கு இருதயம் என்ற ஒன்றும் இருக்கிறது. அதுதான் அந்த இரண்டையும் விட அதிக முக்கியப் பங்காற்றுகிறது.. அர்ஜுனன் வெறும் வீரனாகவும் வில் வீச்சு நிபுணனாகவும் மட்டும் இல்லை. அவன் இசையிலும் நடனத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான். விராடனுடைய சபையில் (அஞ்ஞாதவாச காலத்தில்) அவன் பிருஹன்னளை என்ற பெயரில் மாறுவேடம் பூண்டு தங்கிய காலத்தில் அந்நாட்டு இளவரசிக்கு இரண்டு கலைகளையும் கற்பித்தான்.

இசைக்கு பாம்புகளும் மிருகங்களும் மயங்குகின்றன என்றால் மனிதர்கள் மயங்குவதில் வியப்பு என்ன? மிருகங்களைவிட கூடுதலாக மனிதன் ரசிக்காததே வியப்பான விஷயம்.

கல் மனத்தையும் கரைக்க வல்லது சங்கீதம். இறைவனை அடையவும் உயர்ந்த சிந்தனை ஏற்படவும் சங்கீதம் உதவும். இறைவனை அடைய சம்சார சாகரம் என்னும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேண்டும் என்று வள்ளுவர் முதல் நேற்றுவந்த கவிஞர்கள் வரை பாடி வைத்துள்ளனர். இந்தக் கடலைக் கடக்க பல வழிகள் உண்டு. ஞானக் கப்பல் அல்லது ஞானப் பாலம் என்பன சில வழிகள்.

good tabla

சங்கீதம் என்னும் பாலம் சுருக்கு வழியில் இறைவனை அடைய உதவுவதால் “நாளும் இன்னிசையால் தமிழ் (தேவாரம்) பரப்பிய” ஞான சம்பந்தர் முதலானோர் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தனர். ஊர் ஊராக அவர் பாடிக் கொண்டு செல்லுகையில் அவரைத் தொடர்ந்து 5000 பேர் வரை பாடிக் கொண்டு சென்றதாக நூல்கள் மூலம் அறிகிறோம்.

வேதத்தில் இருந்து தோன்றியது இசை என்றும் சொல்லுவர். சாமவேதம் இசையுடன் ஒதப் பட்டது. இராக்ஷசனாகிய ராவணன் சாமவேதத்தில் வல்லவன். தன் நாட்டுக் கொடியில் வீணைச் சின்னத்தைப் போட்டு இசைக்கு பெருமை சேர்த்தவன். சாம வேதம் இசையின் தோற்றுவாய். சாம வேதத்துக்கும் மூத்தவன் சிவன். அவனுக்குப் பிடித்த இசை சாமகானம்.

இந்த சங்கீதம் தோன்றியது பற்றி பிரம்ம புராணம் கூறும் கதை சுவையானது மட்டுமல்ல. ஒருவரை சிந்திக்கவும் வைக்கிறது. சிவனை “மகிழ்விக்க” சங்கீதம் தோன்றியதாம்! அப்போது அதை நம்மையும் மகிழ்விக்கும் தானே? இதோ கதை:–

தட்சனின் யாகத்தில் சிவனை அவமதித்ததைக் கண்டித்து பார்வதி தீக்குளித்த கதையும் அந்த சதி தேவியை சிவன் உயிர்ப்பித்த கதையும் அனைவரும் அறிந்த கதை.

Tambourine_21787

கைலாசத்துக்கு சிவனும் உமையும் திரும்பி வரும் செய்தியை தேவ லோக பத்திரிக்கை நிருபரான நாரதர் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தெரிவித்தார். கோபக் கனல் பொங்க திரும்பிவரும் சிவனுக்கு ஆறுதல் தர அவர்கள் ஒரு வரவேற்பு உபசாரமும் இன்னிசை நிகழ்ச்சியும் ஏற்பாடு முடிவு செய்தனர். சங்கீதத்தில் நிபுணன் என்று தனக்குத் தானே பெருமை பாராட்டும் நாரதர் முந்திக் கொண்டு நான் தான் பாடுவேன் என்றார். தேவர்கள் எல்லோரும் சரி என்று சொல்லவே அவர் பாடத் துவங்கினார். ஒரே அபஸ்வரம்.

ராகங்கள், ராகினிகள் ஒவ்வொன்றும் மனிதன் போலவே உருவம் பெற்றவை. நாரதர் பாடிய அபஸ்வரத்தில் அவைகளின் முகம் நாணிக் கோணியது. தலைகள் அறுந்து விழுந்தன. எல்லோருக்கும் தர்மசங்கடம் ஆகிவிட்டது. ஒரு நல்ல பாடகரைக் கொண்டு இதைச் சரிக்கட்ட வேண்டும் என்று தேவர்கள் சபை ஏக மனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. நல்ல பாடகருக்கு எங்கே போவது?

trimurti

அட, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு யாராவது நெய்க்கு அலைவார்களா? இதோ நமது மாட்சிமை தங்கிய சிவபெருமானையே கேட்கலாமே என்று யோசனை கூறினர். கடவுள்களில் எளிதில் திருப்திப்படுத்தக் கூடியவர் சிவன் தான். கொஞ்சம் புகழ்ந்தாலும் போதும் வரங்களை அள்ளி வீசிவிடுவார். இதனால் இவருக்கு ‘ஆசுதோஷ்’ என்று பெயர். எளிதில் மகிழக்கூடியவர் என்று இதற்கு அர்த்தம்.

எல்லோரும் சிவனைத் தோத்தரித்து வேண்டவே அவரும் இசைந்தார். ஆனால் என் பாட்டை ரசிக்கக்கூடிய நல்ல ‘ஆடியன்ஸ்’ (ரசிகர் குழு) வேண்டும் என்று ஒரு நிபந்தனை போட்டார். உடனே உலக மகா ரசிகன், புல்லாங்குழல் வித்வான் விஷ்ணுவை (கிருஷ்ணாவதாரத்தில் ப்ளூட்) அழைத்து முதல் வரிசையில் உட்கார வைத்தனர். கச்சேரி களை கட்டியது. ஆடல் வல்லானாகிய நடராஜனுக்கு சங்கீதம் என்பது ரத்தத்தில் ஊறிய கலை. சாமகானப் ப்ரியன் வேறு. அவர் பாடப் பாட ராகங்களும் ராகினிகளும் முழு உருப்பெற்றனர். புதுப் பொலிவும் பெற்றனர்.

Musical Instruments

இது பிரம்ம புராணத்தில் உள்ள கதை. யாரோ ஒருவர் மிகைப் படுத்தி எழுதியதாக சிலர் சொல்லக்கூடும் ஆனால் இதில் இந்துக்களின் சிந்தனைப் போக்கு தெளிவாகத் தெரிகிறது. அது என்ன?
1. இசை என்பது இறைவனிடம் தோன்றியது.
2. இசை– துன்பம் கோபம் இவைகளைப் போக்கி ஒருவரை மகிழச் செய்யும்
3. இசைக்கு உயிர் உண்டு. இசை என்பதை சரியான ஸ்வரத்தில் பாடாவிடில் உரு மாறும். நன்றாகப் பாடினாலோ திரு ஏறும்.
4. சப்தம் என்பது சக்தி வாய்ந்தது. அஷ்டாவக்ரன் கதையில் தவறான வேத ஸ்வரம் எப்படிக் கருவில் இருந்த குழந்தையை அஷ்ட (எட்டு) வக்ரம் (கோணல்) அடையச் செய்ததோ அது போல ஒலி அலைகளுக்கு சக்தி உண்டு.
5. தேவலோகத்தில் இசையும் நடனமும் ஒரு முக்கியக் கலை.
இவ்வளவு விஷயங்களையும் இந்தக் கதையிலிருந்து உணரலாம். இந்த உண்மைகளைப் புகட்டவே ஒருவர் இப்படிப் புராணக் கதையை எழுதினார் என்று சொன்னாலும் மிகை இல்லை.

beautiful saraswati

இந்துக் கடவுள்களும் இசைக் கருவிகளும்

எகிப்து நாட்டு சிற்பங்கள், கிரேக்க நாட்டு சிற்பங்கள் ஆகியவற்றில் இசைக் கருவிகளைக் கண்டபோதிலும், அந்த தெய்வங்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கும் முன் சாமவேதத்தில் தோன்றிய இசையை இந்துக் கடவுள் கைகளில் உள்ள இசைக் கருவிகள் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆயுத பூஜை அன்று அத்தனை இசைக் கருவிகளையும் இறைவன் முன்னிலையில் சந்தனம் குங்குமம் இட்டுப் பூப்போட்டு பூஜை செய்யும் வழக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை!!

சரஸ்வதி கையில் வீணை
சிவன் கையில் உடுக்கை
விஷ்ணு கையில் சங்கு
கண்ணன் கையில் புல்லாங்குழல்
நந்தி கையில் மிருதங்கம்
நாரதர் கையில் வீணை
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிருங்கி, தும்புரு….. என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

நடராஜர் ஆடும் போது யார் யார் என்ன வாத்தியங்கள் இசைத்தனர் என்பதை சில ஸ்லோகங்களில் படித்தால் தேவலோக ‘ஆர்க்கெஸ்ட்ரா’ பற்றி நன்கு விளங்கும்.
Contact swami_48@yahoo.com

கடவுள் ஏன் கை, கால்களை கொடுத்தார்?

akhandabhajan2001_1

கடவுள் ஏன் கை, கால்களை கொடுத்தார்? வேதம் முதல் பாரதி வரை தந்த பதில்கள்

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 973; தேதி 12th April 2014

உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றும் இறைவனை வணங்குவதற்கே என்று முதல் முதலில் வேத கால ரிஷிகள் பாடினார்கள். இதில் அற்புதம் என்னவென்றால் தமிழில் இளங்கோ அடிகள், அப்பர், குலசேகர ஆழ்வார், பாரதியார் ஆகிய எல்லோரும் இதே கருத்தை மேலும் மேலும் சுவைபடப் பாடியுள்ளனர்.

வேதத்தில் ரிஷிகள் பிரார்த்தனை

ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா:
பத்ரம் பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா:
ஸ்திரை ரங்கைஸ் துவஸ்டுவாம்ஸஸ் தனூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு:
ஓ தேவர்களே! நல்ல மங்களகாரமான செய்திகள் எங்கள் காதுகளில் விழட்டும். போற்றுதலுக்குரிய பெரியோர்களே, எங்கள் கண்கள் மங்களகரமான விஷயங்களைக் காணட்டும். நாங்கள் (வாயால்) உன் புகழைப் பாடிக் கொண்டிருப்போமாக. கடவுளால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் கட்டுடலும் வலிமையான அங்கங்களும் எங்களுக்கு இருக்க அருள் புரிவாயாக (யஜூர் வேதம்)
இதே பிரார்த்தனை அதர்வ சீர்ஷோபநிஷத் முதலிய பல இடங்களிலும் வருகின்றன.

datta speaking
People are listening to Sri Ganapati Sachidanada Swamiji

சிலம்பில் நாராயணன்

முதலில் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் பாடப்பட்ட சிலம்பில் இளங்கோ கூறுவதைப் பார்ப்போம்.

இறைவன் நமக்கு நாக்கைக் கொடுத்ததே நாராயணன் புகழ் பாடத்தான் என்று இளங்கோ அடிகள் பாடுகிறார்.

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
—————————–
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே?

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?

சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?

எல்லோர்க்கும் மூத்தவன் — உலகம் எல்லாம் அவன் உந்தியிடத்தில் தோன்றிய தாமரையில் விரிந்தது — கண்கள், கைகள், வாய். காலடிகள் ஆகியன சிவந்து தோன்றும் அந்தக் கருப்பனை (கிருஷ்ணனை) காணாத கண்களை யாராவது கண் என்று அழைப்பார்களா! அவனைக் கண்கொட்டாமல் பார்க்கவேண்டும். அதை மீறி கண்களை இமைத்தால் அவைகள் கண்களே இல்லை!

அறியாமையின் ஒட்டுமொத்த வடிவம் கம்சன். அவனுடைய வஞ்சனை எல்லாவற்றையும் கண்ணன் சமாளித்தான். பாண்டவர்க்காக அவன் கௌரவர்கள் இடத்தில் தூது சென்றபோது வேதங்கள் எல்லாம் அவனோடு சென்றன. அத்தகையவனின் பெருமையைச் சொல்லாத நாக்கும் ஒரு நாக்கா? நாராயணா என்று சொல்லாத நாக்கை எவரேனும் நாக்கு என்று சொல்ல முடியுமா?

mouth for singing

Sri Sathya Sai Baba singing Bhajan songs

குலசேகர ஆழ்வாரின் முகுந்தமாலா

குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்த மாலையில் 40 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதில் 16ஆவது ஸ்லோகம் கடவுளை வணங்குவதே கை, கால்களின் பணி என்று காட்டுகிறது. ‘’ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ’’ என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு இதோ:

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே முராசுரனைக் கொன்ற கண்ணனை தியானம் செய்.
கைகளே திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே தன்னையடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணனுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! கண்ணனைக் கண்டு அனுபவியுங்கள்!
கால்களே! எம் பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துளசியை நுகரு!
தலையே! எம்பருமானை வணங்கு!

வேதத்தில் அவர்கள் படித்த ‘’பத்ரம் கர்ணேபி ஸ்ருனுயாம தேவா” என்ற கருத்துக்களை எல்லோரும் பதிகங்களிலும் பாசுரங்களிலும் பாடுவதைப் படிக்கையில் பேரின்பம் கிட்டும்.

அப்பர் பாடிய திரு அங்க மாலை

தலையே நீ வணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டம் தன்னை
எண்தோள் வீசி ஆடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ
செவிகாள்! கேண்மின்களோ! – சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள்! கேண்மின்களோ!
வாயே! வாழ்த்து கண்டாய் – மதயானை யுரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே! வாழ்த்து கண்டாய்

மேலும் பல பாடல்களில் — மூக்கே, நெஞ்சே, கை, ஆக்கை, கால் என்று பல உறுப்புகளும் இறைவனையே வணங்கவேண்டும் என்று பாடுகிறார்..
திருவங்க மாலை 4-9-5 தேவாரத் திருமுறை 4

hands for worship

Swamiji praying with hands

பாரதி பாடல்

நமது காலத்தில் வாழ்ந்த பாரதியும் வேதக் கருத்துக்களை எதிரொலிக்கும் பாடலைப் பாடுகிறார். அவர் பாடிய பாடல்தான் மிக நீண்ட பாடல். 46 பகுதிகளைக் கொண்டது :–
பாடலின் தலைப்பு: சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

கையைச், சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சாதனைகள் யாவினையும்ங் கூடும் – கையைச்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்.

கண்ணைச், சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி வழியினை அது காணும் – கண்ணைச்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.

செவி, சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் – செவி
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி திருப்பாடலினை கேட்கும்.

இதைத் தொடர்ந்து மனம், சித்தம், மதி, அகம் என்று எல்லாவற்றையும் சேர்த்துப் பாடுகிறார். இறுதியாக:-

“சிவ, சக்தி என்றும் வாழி என்று பாடு – சிவ
சக்தி சக்தி என்று குதித்தாடு – சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று விளையாடு” —- என்று சொல்லி முடிக்கிறார்.

பாரதி ஆடுவதும் பாடுவதும் விளையாடுவதும் இறைவனைக் குறித்தே!
bodypartsadaptivebook
Body Parts are for worshipping God

Contact swami_48@yahoo.com

இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை

lord-rama

இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 971; தேதி- 11th April 2014

கம்ப ராமாயண கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

பொருள்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை முடிவேயில்லாத விளையாட்டாகச் செய்யும் தலைவன் எவனோ அவன் காலில் சரணடைகின்றேன்.

மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான். அடடா! ராமன் கையினால் மரணம் சம்பவித்தால் எனக்கு நேரடி மோட்சம்தான் என்று மகிழ்கிறான்.

இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.

lord-rama-43a

சிவபெருமான் கூற்று
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு
ஈஸ்வரோ உவாச

“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”

காந்திக்குப் பிடித்த ரகுபதி ரகவ ராஜா ராம்!
மஹாத்மா காந்திஜி, துப்பாக்கி ரவையால் சுடப்பட்டு உயிர் இழந்த போது அவர் கூறிய கடைசி சொல் ‘’ஹே ராம்!’’ ஒருவர் வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தால்தான் கடைசி நிமிடத்தில் அவன் பெயர் நினைவுக்கு வரும்! அவர் எல்லா பஜனைகளிலும் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பாடியதோடு மட்டுமின்றி, உலகிற்கே அப்பாட்டை அறிமுகம் செய்தார்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தார். 21 ஆண்டுகளில் 96 கோடி முறை அவர் ராம நாமம் சொன்னதாக அவர் வரலாறு கூறுகிறது. வாயினால் சொல்லும் வேகத்தைவிட மனதினால் கூடுதலாகச் சொல்லமுடியும்.

maha mantra

தர்ப்பண மந்திரம்
பிராமணர்கள் செய்யும் தர்ப்பணத்தில் க்ஷத்ரிய அரசனான ராமனின் பெயரைச் சொல்லுகிறார்கள்:
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:
ஸ்ரீ ராம ராம ராம

பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.
மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.

இராமனுடைய பெயரை மூன்று முறை சொன்னவுடனேயே எல்லாப் பாவங்களும் அகன்று பரிசுத்தனாகி விடுவான்.
நாமும் ராம நாமம் சொல்லி பரிசுத்தம் அடைவோம்!!

rama shantham

சுவாமி விவேகாநந்தர் சொற்பொழிவு!

ஆங்கிலத்தில் சுவாமி விவேகாநந்தர் பேசியதை தமிழில் தருகிறேன். குறை இருப்பின், அது எனது மொழி பெயர்ப்பின் பிழையே அன்றி அவர் குற்றம் ஆகாது.

“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

சீதா தேவி பற்றி நான் என்ன சொல்ல! அடடா!! அது போன்ற ஒரு சீதையைக் காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் —- இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் —– வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும் — நீங்கள் இன்னும் ஒரு சீதையைக் காண்பது அரிது! அவள் ஒப்பற்றவள். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய பெண்ணைப் படைக்க முடியும். இராமர்கள் பலர் இருக்க முடியும். ஆனால் ஒரு சீதாதேவிக்கு மேல் காண முடியாது”.

rama color

— சுவாமி விவேகாநந்தரின் சொற்பொழிவுகள். ஆங்கிலத்திலும் கீழே கொடுத்துள்ளேன். ஆங்கில வாசகம் அவர் சொன்னது:–

“Rama, the ancient idol of heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all the ideal king, this Rama has been presented before us by the great sage Valmiki. No language can be purer, none chaste, none more beautiful, and at the same time simpler, than the language in which the great poet has depicted the life of Rama. And what to speak of Sita? You may exhaust the literature of the world that is past, and I may assure you that you will have to exhaust the literature of the world of the future, before finding another Sita. Sita is unique; that character was depicted once and for all. There may have been several Ramas, perhaps, but never more than one Sita!”
—-Swami Vivekananda

Contact swami_48@yahoo.com

ராமம் ஸத்யபராக்ரமம்!

rama shantham

ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 21
கட்டுரையாளர்: ச.நாகராஜன்
கட்டுரை எண்- 969; தேதி ஏப்ரல் 10, 2014

ராமாயண மஹா காவியத்தில் ஏராளமான ரிஷிகள் நம் கண் முன்னே நிறுத்தப்படுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள்.

தேவரிஷியில் சிறந்தவரான நாரதரால் தான் கதை ஆரம்பிக்கப்படுகிறது.
பிரம்மரிஷியில் சிறந்தவரான வசிஷ்டரால் தான் கதை வழி நடத்தப்படுகிறது.
ராஜரிஷியில் சிறந்தவரான விசுவாமித்திரரால் தான் ராமரின் வாழ்வில் திருமணம் என்னும் திருப்பு முனை ஏற்படுகிறது.

சீதையின் தந்தையும் ராமரது மாமனாரும் ஆன ஜனகரோ ராஜரிஷி.
இவர்கள் தவிர நாஸ்திக வாதத்தை ராமரிடமே பேசிய (!) ஜாபாலி உள்ளிட்ட ஏராளமான ரிஷிகளின் பட்டியலை நாம் காவியத்தில் காண்கிறோம். சில ரிஷிகளின் அதிசயச் செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

விசுவாமித்திரர் ராமரை இன்னார் என்று முதலில் அறிவிக்கும் ஸ்லோகம் பால காண்டத்திலேயே இடம் பெற்று விடுகிறது.
அவர் கூறிய முக்கியமான ஸ்லோகத்திற்கு இன்றும் தேர்ந்த பிரவசனகர்த்தாக்கள் முடிவில்லா விரிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!.அவ்வளவு பொருள் பொதிந்த சொற்களை வால்மீகி விசுவாமித்திரர் வாயிலாக ஒரே ஸ்லோகத்தில் கூறி விட்டார்.
ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-

அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்யபராக்ரமம் I வசிஷ்டோபி மஹதேஜா யே சேமே தபஸி ஸ்திதா: II
– பால காண்டம், பத்தொன்பதாம் ஸர்க்கம், 15ஆம் ஸ்லோகம்

அஹம் – நான் ராமம் – ராமரை மஹாத்மானம் – மஹாத்மாவாக ஸத்யபராக்ரமம் – ஸத்யபராக்கிரமராக வேத்மி – உண்மையாய் அறிகிறேன் மஹாதேஜா – மஹா தேஜஸ்வியான வசிஷ்டோபி – வசிஷ்டரும் கூட யே – எவர்கள் தபஸி – தவம் புரிவதில் ஸ்திதா – நிலை கொண்டவர்களோ: இமே ச – அந்த இவர்களும் அறிவார்கள்

அஹம் வேத்மி என்ற வார்த்தைகள் வேதம் கூறும் வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று புருஷ ஸுக்தத்தில் வரும் வேத வாக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. புருஷம் இங்கு ஸத்ய பராக்ரமாகவும் மஹாந்தம் மஹாத்மாவாகவும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

வசிஷ்டரும் என்ற வார்த்தையில் வரும் ‘உம்’ பெரிய நீண்ட உரைக்கு இடம் தரும் ‘உம்’ ஆகும். வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையில் நடந்த போட்டியை புராண இதிஹாஸங்கள் நன்கு விளக்குகின்றன. இருவருக்கும் இடையே இருந்த அந்த இயல்பான பழைய வரலாற்றினால் வசிஷ்டரும் கூட அறிவார் என்று விசுவாமித்திரர் சொல்லும் போது அதில் உள்ள சுவாரசியத்தை நன்கு ரசிக்க முடிகிறது. அவரே மஹா தேஜஸ்வீ என்று வசிஷ்டரைப் புகழ்ந்து கூறுவது பொருள் பொதிந்தது.

அங்கு தசரதனின் ராஜ சபையில் கூடியுள்ள இதர தபஸ்விகளும் ரிஷிகளும் இதை அறிவர் என்று விசுவாமித்திரர் கூறுவது உலகிற்கே இந்த உண்மையை அறிவிக்கத் தான்!

ram business

இனி கம்ப ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் பால காண்டத்தில் கம்பன் விசுவாமித்திரரை ‘எண்ணிலா அருந்தவத்தோன்’ என்று குறிப்பிடுகிறான்.

இந்த ஒரே ஒரு சொற்றொடருக்கும் ஏராளமான அர்த்தங்கள் கூறப்பட்டு நம்மை வியக்க வைக்கின்றனர் அறிஞர்கள்!

எண்ணிலா அருந்தவத்தோனை எண் + இலா + அரும் + தவத்தோன் என்று பிரித்து எண் என்பதற்கு ஆலோசனை என்று பொருள் கொண்டு இந்த முனிவர் அருந்தவத்தர் ஆயினும் இன்னாரிடத்தில் இன்ன பொருளை இன்ன இடத்தில் இன்ன காலத்தில் கேட்கலாம் என்பதை ஆலோசனை புரிந்து அறியாதவர் என்று பொருள் கொண்டு தசரதனின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொள்ளலாம்.

எண் + நிலாவு + அரும் + தவத்தோன் என்று பிரித்து ராமாயணத்தைப் படிப்பவரின் எண்ணத்தில் அதாவது நினைவில் நிலாவு அதாவது நிலவி இருக்கும் படியான அரும் தவத்தோன் – பெரும் தவத்தைப் புரிந்த மஹரிஷி என்று பொருள் கொண்டு படிப்பவர் மனம் மகிழலாம். விசுவாமித்திரர் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவரது வரலாற்றுச் சிறப்பினையே இப்படிப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

எண்ணில் + ஆ + வரும் + தவத்தோன் = நினைத்துப் பார்த்தால், ஒரு பசுவாகிய காமதேனுவினால் வந்த தவத்தோன் என்று கொண்டு வசிஷ்ட – விசுவாமித்திர வரலாறை நினைவு கூரலாம்.
இன்னும் எண்ணில் + ஆ + வருந்து + அவத்தோன் என்றும்,
எண்ணில் + ஆ+ அருந்து + தவத்தோன் என்றும்,
எள் + நிலா + அரும் + தவத்தோன் என்றும்,
எள் + நிலா + வரும் + தவத்தோன் என்றும் பிரித்துப் பொருள் கூறலாம்.

ராமரை மஹாத்மாவாகச் சுட்டிக் காட்டும் விசுவாமித்திரரின் இந்த ஸ்லோகம் ஆழ்ந்த பொருள் கொண்டது எனில் விசுவாமித்திரரை யார் என்று இனம் காட்டும் கம்பனின் ஒரு சொற்றொடரும் அற்புதமானது என்றே கூறலாம்.

ராமாயணம் ஒரு தங்கச் சுரங்கம். வேண்டுமட்டும், வெட்டிய மட்டும் தங்கம் பெறலாம்!
தொடர்பு முகவரி: swami_48@yahoo.com

இராமன் பற்றிய தமிழ் பழமொழிகள்

jaya sri ram

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—968 தேதி 10 ஏப்ரல் 2014

அனுமார் வால் போல நீளுகிறதே or அனுமார் வால் போல நீண்டதாம்!
இந்தப் பழமொழி ராமாயண சுந்தர காண்ட நிகழ்ச்சியில் இருந்து வந்தது. ராவணனால் துன்புறுத்தப்பட்ட அனுமன், இலங்கைக்கு தீ வைத்தான். அப்பொழுது அவன் வால் திரவுபதியின் புடவை வற்றாது வந்தது போல நீண்டு கொண்டே போனது. அதாவது ஆஞ்சநேயனை தீயானது சுடவே இல்லை. இந்தியாவின் ‘’சூப்பர்மேன்’’ Superman மாருதி. அவன் செய்யாத சாகசம் இல்லை. அத்தனையையும் இன்று வெள்ளைக்காரர்கள் ‘காப்பி’ அடித்து காமிக்ஸ் Comics ஆக (சூபர்மேன், superman ஸ்பைடர்மேன் Spiderman, போகேமான் Pokeman, பேண்டம் Phantom) என்றெல்லாம் எழுதி, விற்றுக் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இன்னொரு சம்பவமும் சுந்தர காண்டத்தில் உண்டு. ஆஞ்சநேயனக்கு ஒரு தூதருக்கு (ambassador) உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.ஆனால் அது கொடுக்கப்படவில்லை இன்று சர்வதேச ‘ப்ரோடோகோல்’Protocol (சம்பிரதாய விதிகள்) என்ற பெயரில் தூதர்களை எப்படி நடத்த வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதை உலகிற்குக் கற்பித்தது இந்தியர்கள்! சாணக்கியன் எழுதிய விதிகளை திருவள்ளுவனும் ஒரு அதிகாரம் முழுதும் பாடியிருக்கிறான். அப்படி மரியாதை தர ராவணன் மறுத்தான். ஆசனம் கூட கொடுக்கவில்லை. அனுமார் தன் வாலை நீட்டி அதன் மூலம் ஒரு ஆசனம் அமைத்து ராவணனைவிட உயரத்தில் உட்கார்ந்து ‘பதில் மரியாதை’ செய்தான்!

Proverbs

இராம பாணம் பட்டு உருவினாற் போல
அந்தக் காலத்தில் ஒருவர் வீரத்தை மெய்ப்பிக்க ஏழு பொருள்களை ஒரே அம்பினால் துளைக்கச் சொல்லுவார்கள். இந்த ஏழு மர துளை போடும் போட்டி வேறு கலாசாரங்களிலும் உண்டு. இதை ஒட்டியே ராமனின் திறமையைக் கண்டுபிடிக்க ஏழு மரா மரங்களைத் துளைக்கும் அம்பைவிடச் சொன்னான் சுக்ரீவன். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் துளை போட்டது. இதே போல ஒரு வகைப் பூச்சியும் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பாக்கம் வரை குண்டு துளைத்தாற்போல துளை போடும் அந்த பூச்சிக்கும் இந்தியர்கள் ராமபாணம் என்று பெயர் வைத்தனர்.

இராமர் இருக்கும் இடம் அயோத்தி
மக்களுக்கு குணம் மிக்க ஒரு தலைவன் இருந்தால் போதும்; ஒரு ஆபத்தும் வராது என்று தெரியும். முறையாக ஆட்சி செய்யும் மன்னவன் இறைவனுக்கு சமம் என்று வள்ளுவனும் கூறுவான். இதனால்தான் மக்கள் அனைவரும் இரண்டு முறை இராமனைப் பின் தொடர்ந்து சென்றனர். முதல் முறை அவன் காடேகிய நாள் அன்று. ஆனால் இராமனே அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டான். இரண்டாவது முறை ராமன் ஆற்றில் ஜல சமாதி அடைய இறங்கிய போது அயோத்தியில் உள்ள அத்தனை மனிதர்களும், ஜீவராசிகளும் ராமனுடன் சரயு நதியில் இறங்கி மோட்சம் அடைந்தனர். அவர்களைப் பொறுத்த மட்டில், இராமன் எங்கே இருக்கிறானோ அதுதான் அயோத்தி! (Ayodhya now in Uttar Pradesh was the capital of Kingdom of Kosala)

rama color

இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம,லெட்சுமணன்—ஆகிய இருவரும் இணை பிரியாத ஜோடிகள். எல்லா படங்களிலும் இதைக் காணலாம். அவர்கள் ஒற்றுமையை உவமையாக கூறும் போது, இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது என்று சொல்லுவர்.

இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
இராமன் சத்ய தர்ம பராக்ரமன். சொன்ன சொல்லை மீறாதவன். ஆயுதம் இழந்த ராவணனைக் கூட கொல்லாமல் ‘’இன்று போய், நாளை வா!’’ என்று இயம்பினன். ஆகையால் ராமனின் சொல்லுக்கு மறு சொல் கிடையாது. இலட்சுமணன் மிகவும் (short tempered) கோபக்காரன். எதற்கும் பொங்கி எழுவான. ஆனால் அண்ணன் ஒரு சொல் சொன்னால் போதும். அடங்கிவிடுவான். இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?

இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்
மனம் போல மாங்கல்யம். தலைவன் எவ்வழி அவ்வழி தொண்டன். ஆகவே இராமன் போல ஒரு ராஜா (Truthful, honest, sincere, amicable, easily accessible,heroic, people friendly) இருந்தால் உலகமே அவனுக்கு அடங்கி நடக்கும். இராம சேது என்னும் பாலம் கட்டும் போது அணில் கூட உதவி செய்யவில்லையா?

15173-yiddish-proverb-

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
உலகில் நிறைய பேர் சுயகாரியப்(Selfish, self centred) புலிகள். தங்களுக்கு வேண்டியது கிடைத்தால் போதும். வாயை மூடிக்கொண்டு அநியாயங்களைக் கண்டும் காணாமல் இருந்து விடுவர். மஹாத்மா காந்தி, பல சத்தியாக் கிரகம், பாத யாத்திரை என்று அறைகூவல் விடுத்தபோதும் சிறை சென்றவர்கள் எண்ணிக்கை சில ஆயிரம்தான். எனக்கு என்ன? வெள்ளைக்காரன் ஆண்டால் என்ன? இந்தியர் ஆண்டால் என்ன? என்று இருந்தவர்களைக் கண்டு பாரதியும் பாடி இருக்கிறான். “நெஞ்சில் உரமும் இன்றி” என்ற பாடலைப் படித்தால் புரியும். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று இருப்போரே உலகில் அதிகம்.

இராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமனுடைய மங்கை சீதை. அவளுடன் இராவணன் வாழ நினைத்தது தவறு. இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.

இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?
ராமனுடைய பெயரைச் சொல்லுவதே அமிர்தம் என்று உண்ணாவிரதம் இருந்தோரைக் குறித்து சொன்ன சொல் இது. மனிதனாகப் பிறந்துவிட்டால் உடலையும் பேணித்தான் ஆகவேண்டும். இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் உள்ளம் பெருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்.

hindi rama

இரா முழுதும் இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும்? என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்)

சொன்ன சொல்லை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் ஒரு செயலை சடங்கு போல செய்வோரைக் குறிக்கும் வசனம் இது. அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையான ஆர்வத்தோடு ஒரு செயலை செய்ய வேண்டும். எதைப் படித்தாலும் கேட்டாலும் சிரத்தையோடு செய்தால் உண்மைப் பொருள் விளங்கும். வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்து முடித்த பின்னர் அடிப்படையே புரியாமல் ஒரு கேள்வி கேட்டல் அவருக்கு எப்படி இருக்கும்! ஒரு கச்சேரிக்குப் போனவர் வித்துவானைப் பார்த்து, உங்கள் தோடி ராகத்தைக் கேட்க அல்லவா நான் வந்தேன் என்று ஒருவர் சொன்னாராம். அவர் அப்போதுதான் தோடி ராகம் பாடி முடித்திருந்தார்!

இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல
சனி பகவான் யாராக இருந்தாலும் ஏழரை ஆண்டுக் காலம் பிடித்தே தீருவான். அதை மூன்று இரண்டரை ஆண்டுகளாகப் (3X2.5 years=7.5 years) பிரிப்பர். ஒரு குறிப்பிட்ட இரண்டரை ஆண்டு, சொல்ல முடியாத துயரம் கொடுப்பான. அவரவர் ஜாதகத்தைப் பொறுத்து இதன் உக்கிரம் அமையும். அப்போது அவர்கள் காசி ராமேஸ்வரம் சென்றாலும் கர்மவினை தொடர்ந்தே வரும். இதையே மற்ற விஷயங்களுக்கும் மக்கள் உவமையாகப் பயன்படுத்துவர். என்னதான் பரிகாரம் செய்தாலும் ஒரு கெட்டது விலகவில்லையானால் அப்பொழுது இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவர். தொடர்ந்து வரும் கஷ்டங்களை இது குறிக்கும். புராணத்தில் அரிச்சந்திரன் பட்ட பாட்டை நினைத்தால் இது சட்டென விளங்கும்.

Clash between Shiva and Saturn

சிவ பெருமான் பற்றியும் ஒரு கதை சொல்லுவர். சனி பகவானிடம் “நான் மும்மூர்த்திகளில் ஒருவன். என்னை நீர் ஒன்றும் செய்ய முடியாது” என்றார் சிவன். சனைச்வரன் (Sanai:= slow, Charan= Moving; slow moving) சிரித்துக் கொண்டே “இதற்கு யாரும் விதி விலக்கு அல்ல” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சிவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. சரி இந்த ஆள் கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டுமானால் யாராலும் கற்பனை செய்ய முடியாத இடத்தில் ஒளிந்து கொள்வோம் என்று ஒரு சாக்கடையில் ஒளிந்து கொண்டாராம். சனிச்சரன் மறு முறை சிவனை சந்தித்தபோது, “பார்த்தாயா, என்னை நீ ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று சிவ பெருமான பெருமையாகச் சொன்னாராம்.

சனைச்சரன், “இல்லையே, சோதிட விதிகளுக்கு கடவுளும் விதி விலக்கல்ல. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?” என்று சிவனை சனி பகவான் கேட்டார். சிவன் பெருமையாக “நீங்கள் கண்டு பிடிக்கமுடியாத பாதாள சாக்கடையில் ஒளிந்திருந்தேன். நீங்கள் ஏமாந்து போனீர்கள்” என்று பதில் சொன்னார். சனி பகவான் சிரித்துக் கொண்டே கைலாசத்தில் பாரிஜாதம் முதலான புஷ்பங்கள் கமழும் இடத்தில் இருக்கவேண்டிய நீவீர் சாக்கடையில் காலம் தள்ளினீர் அல்லவா? அதுதான் உமக்கு சனி திசை” என்று சொன்னவுடன் சிவன் முகம் சிவந்து போனது!!!

71792-Famous+Proverbs+

தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)
இராமனுக்கு பெரிய பலம் அவன் தம்பி லெட்சுமணன். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராம லெட்சுமணர்கள். 14 ஆண்டுக் காலமும் இமைப் பொழுது சோராமல் அண்ணனைக் காத்தவன் லெட்சுமணன். உலக இலக்கியத்தில் இப்படி ஒரு சகோதர ஜோடியை எங்கும் பார்க்கமுடியாது. இரட்டையரைக் காணலாம். ஆனால் இரு வேறு தாயாருக்குப் பிறந்து ஒரு சேர ஜோடி சேர்ந்த சகோதரர் இவர்கள். அப்பேற்பட்ட தம்பி உடைய ஒரு வீரன் எப்பேற்பட்ட படை வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்பான்; வெற்றியும் பெறுவான்!

இராவண சந்யாசி போல இருக்கான்
ராவணன் ஒரு ‘ருத்திராட்சப் பூனை’ (Hypocritical Cat). துணிச்சலாக வீரன் போல வந்து சீதையைக் கவரவில்லை. ஏனெனில் ராமனை வெல்ல முடியாது என்பது அவனுக்குத் தெரியும். சந்யாசி வேடத்தில் வந்து ஏமாற்றியவன். யாரேனும் ஒருவன் வேடம் தரித்து ஏமாற்றுகிறானோ என்ற சந்தேகம் வந்தால் உடனே மக்கள், “ஜாக்கிரதை இவன் ஒரு ராவணன்” என்று சொல்லி உஷாராகி விடுவர்.

rama thai

இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி போலும்
துரியோதனன் கெட்டுக் குட்டிச் சுவராகப் போக அவன் மாமன் சகுனிதான காரணம் சூதாட்டத்தில் மாயா ஜாலம் செய்து வெற்றி பெற்றுப் பின்னர் போர் ஏற்பட வழி செய்தவன். இதே போல ராவணனிடம் மகோதரன் என்பவன் முதல் மந்திரியாக (Chief Minister) இருந்தான். மகா மாயாவி (Cheat). இந்திரன் போல வேடம் கொண்டு வெள்ளை யானை மேல் ஏறி லெட்சுமணனுடன் போரிட வந்தவன். ராமன் பற்றி உளவு (Spy) வேலைகளில் ஈடுபட்டவன். சீதையை அனுப்பவேண்டாம் என்று கெட்ட யோசனை(wrong Advice) கூறி ராவணன் அழிய வழிவகுத்தவன்.(ஆதாரம்: அபிதான சிந்தாமணி-Tamil Encyclopaedia)
ஆக யாராவது ஒருவர் குடியைக் கெடுக்கும் வேலைகளையோ, மற்றவர்கள் அழிய துர் போதனை செய்தாலோ அவர்களை சகுனி, மகோதரன் ஆகியோருக்கு ஒப்பிடுவர்.

படிப்பது ராமாயணம் இடிப்பது சிவன் கோவில் / ராமன் கோவில்
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் செய்பவர்களைக் குறை கூறும் பழமொழி இது. நல்ல விஷயங்களைப் பேசிவிட்டு, கேட்டுவிட்டு அதற்கு நேர் மாறான செயல்களைச் செய்வோர் ராமாயணத்தைப் படித்துவிட்டு கோவிலையே இடித்தது போல இது.
தேசத்தையே வைத்து சூதாடிய தருமபுத்திரனைக் குறைகூறும் பாரதி

“கோயிற்பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி – அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் சீச்சீ சிறியர் செய்கை செய்தான்”
என்று சாடுகிறான். சொல் ஒன்று செயல் வேறு என்பதற்கு, இது நல்ல எடுத்துக் காட்டு. இப்படிப்பட்டவர்களை ‘படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில்’ எனலாம்.

rama,hampi
ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.

“இந்த இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்”- (Kamba Ramayanam Quote) என்று சபதம் செய்தவன் ராமன். அந்தக் க லத்தில் அரசர்கள் நிறைய பேரைக் கல்யாணம் செய்வது இந்திய மரபு. நாடுகளுடன் நட்புறவு வேண்டும் என்பதற்கும், வேற்று நாட்டான் படை எடுக்கையில் அருகிலுள்ள நாடுகள் படை அனுப்பி உதவி செய்யவேண்டும் என்பதற்காகவும் பல நாட்டுப் பெண்களை மணப்பது ராஜ நீதி (diplomacy), சாணக்கிய நீதி! இதனல்தான் ஆப்கனிஸ்தானத்தில் உள்ள காண்டஹார் (காந்தாரம்) நகரில் இருந்து வந்த பெண்ணை காந்தாரி என்றும் பஞ்சாபில் இருந்து வந்த பெண்ணை பாஞ்சாலி என்றும், சோழதேசப் பெண்ணை சோழமாதேவி என்றும், பாண்டிய தேச இளவரசியை பாண்டிமாதேவி என்றும் அழைப்பர். அவர்களுடைய அம்மா அப்பா வைத்த பெயர் எல்லாம் காலப் போக்கில் மறைந்துவிடும். இப்படிப் பல தேசப் பெண்களை மணக்கும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததற்கு இலக்கியமும் கல்வெட்டுகளும் சான்று பகரும் .ஆனால் ராமன் மட்டும் ஒரே பெண்ணைக் கல்யாணம் செய்ததோடு மட்டுமின்றி மனதாலும் வேறு ஒரு பெண்ணை நினைக்கமாட்டேன் (சிந்தையாலும் தொடேன்) என்றான். இதனால் அவன் உயிர் வாழ்ந்த காலத்திலேயே, அவனை கடவுள் நிலைக்கு உயர்த்தினர் மக்கள். அந்த ராமனின் நாமத்தைச் சொன்னாலேயே காம எண்ணங்கள் பறந்தோடிப் போகும்.

வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன்! என்னிடம் வாலாட்டாதே!
அனுமனைப் பார்த்து ராவணன் சொல்லிய சொல் இது. ஆனால் அனுமனோ இலங்கைக்கே தீவைத்து “ராவணன் வாலை” ஒட்ட அறுத்து விட்டான். வால் என்பதும் அஹம்காரம் என்பதும் ஒன்றே. நாமெல்லாரும் யான் எனது என்னும் செருக்கில் ( I-ness, My-ness) ஆடாத ஆட்டம் ஆடுகிறோம். இதுதான் நமது வால். இதை நாய்வால் மாதிரி நிமிர்த்தவே முடியாது. ஒட்ட வெட்டி எறியவேண்டும். நாமும் நமது அகந்தை(Ego & Arrogance) என்னும் வாலை நோக்கி தினமும் “என்னிடம் வாலாட்டாதே ஒட்ட நறுக்கிவிடுவேன்”– என்று சொல்லச் சொல்ல ஞானம் பிறக்கும்.

இந்தப் பழமொழிகளை மட்டும், விளக்கம் எழுதாமல், நான் ஏற்கனவே “இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்”– என்ற தலைப்பின் கீழ் கொடுத்து உள்ளேன்

famous proverbs

பழமொழிகள் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:—-
1.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்
2.இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் (பகுதி 1,2)
3.பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3)
4.யானைகள் பற்றிய நூறு பழமொழிகள்
5.ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
6.உடம்பைக் கடம்பால் அடி
7.பாரதி பாட்டில் பழமொழிகள்
8.அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது)
9.20,000 Tamil Proverbs (English article)

Contact swami_48@yahoo.com

There are over 960 posts here in this blog touching all topics On Hinduism, Tamil Literature and Sanskrit Literature.

I welcome your feedback. Please post your comments. In addition to my two blogs, my English articles are posted in the speakingtree.com (Times of India website)

பஜனைப் பாடகருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை !

ramadasu

By London Swaminathan
Post No.966 Date 9th April 2014

இராமபிரான் 14 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்தார். பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்தனர். பத்ராசலம் ராமதாசர் 12 ஆண்டுகள் சிறையில் வாடி வதங்கினார். இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்று உயிர்விட எண்ணிய நிலையில் ராமனும் லெட்சுமணனும் மாறுவேடத்தில் வந்து உதவிய அதிசயம் நடந்தது.

மஹாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாசர், பஞ்சாபில் சுவாமி இராம தீர்த்தர், கேரளத்தில் சுவாமி ராமதாஸ் என்று பல சாது சந்யாசிகள் இராமன் பெயரில் வாழ்ந்தனர். இவர்களில் பத்ராசலம் ராமதாசர் (1620 – 1680) ஆந்திரப் பிரதேசத்தில் கோல்கொண்டா ,பத்ராசலம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர் ஆவார்.
லிங்கண்ணா என்ற பிராமணருக்கு புத்திரனாக அவதரித்த ராமதாசரின் உண்மைப் பெயர் கோபண்ணா. அவர் கமலம்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு பஜனைப் பாடல்கள் பாடிக் காலம் கழித்து வந்தார். இவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் கபீர்தாசர் என்ற புனிதர் வாழ்ந்து வந்தார். ராமதாசர் கனவில் வந்த கபீர்தாசர் அவருக்கு இராம நாமத்தை உபதேசம் செய்து இராமனை சிக்கெனப் பிடித்துக் கொள் என்று அருளுரை பகன்றார். அவ்வாறே கோபண்ணாவும் செயல்பட்டார். கோபண்ணாவுக்கு இராமதாசர் என்று பெயர் சூட்டியதும் கபீர்தாசர்தான்.

ஒரு சமயம், ராமதாசர் வீட்டில் பெரிய விருந்து நடந்தது. அப்போது அவர்களுடைய குழந்தை தாய் தந்தையரை விட்டுச் சென்று சமையல் அறையில் இருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மூழ்கியது. குழந்தை இறந்ததை அறிந்தும், விருந்து கெடக் கூடாதென்பதற்காக தாயார் யாருக்கும் தெரியாமல் மரணத்தை மறைத்து வைத்தார். எல்லோரும் வெளியே சென்றவுடன் துக்கம் வெடித்தது. ஓவென்று கதறி அழுதார். ராமதாசருக்கும் நிலைமை புரிந்தது. குழந்தையின் சடலத்தை இராம பிரான் விக்கிரகத்தின் முன்னால் கிடத்தி மனம் உருகப் பிரார்த்தித்தனர். அதிசயம் நடந்தது. தூக்கத்தில் விழித்தெழுந்த குழந்தை போல அந்தக் குழந்தை உயிருடன் திரும்பி வந்தது.

ராமதாசர், அவரிடமிருந்த பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதில் செலவழித்தார். வறுமையின் எல்லைக் கோட்டைத் தாண்டியபோது வயிறு காயத் துவங்கியது. இராமனே வந்து உதவுவார் என்று காத்திருந்தார். ‘’முயற்சி திருவினை ஆக்கும்’’– என்பதை மனைவி நினைவு படுத்தினார்.
உடனே ஹைதராபாத்தில் இருந்து ஆட்சி புரிந்த தானி ஷா (1674-1699) என்ற முஸ்லீம் மன்னரை அணுகினார். அவரிடம் மாடண்ணா, அக்கண்ணா என்ற இரண்டு பிராமண அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் ராமதாசுக்கு சொந்தக்கார்கள். அவர்கள் மூலமாக பத்ராசலத்தில் தாசில்தார் பதவி கிடைத்தது. அரசாங்கத்துக்கான வரிப் பணத்தை வசூலித்து ஹைதாராபாத்துக்கு அனுப்பவேண்டியது இவர் பொறுப்பு.
பக்தி முற்றிய நிலையில், மாணிக்கவாசகரைப் போல , இவரும் அரசாங்க பணத்தை கோவில் கட்டப் பயன்படுத்தினார். பத்ராசலம் இராமர் கோவிலுக்கு எல்லா வசதிகளையும் செய்து சுவாமிக்கு நகை, நட்டுக் களையும் வாங்கினார். பெரிய ஒரு தொகையை மன்னருக்கு பாக்கி வைத்தார். உண்மை நிலையை அறிந்த மன்னன் தானி ஷா, ராமதாசருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.

bhadrachalam-sree-rama-temple-andhrapradesh

கடவுள் எப்போதும் அரசாங்க விதிகளை மீறச் சொல்வதே இல்லை. பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை, பூ, பழம், நீர்) இவைகளை அளித்தாலே தமக்கு பரம திருப்தி என்று பகவத் கீதையில் கடவுளே சொல்லி இருக்கிறார். ஆகவே மாணிக்கவாசகர், ராமதாசர் போன்றோர் நாட்டின் சட்ட விதிகளை மீறுகையில் கடவுள் உதவிக்கு வாராமல் வாளா விருக்கிறார். இருந்தபோதிலும் இனியும் பக்தன் உயிர்வாழ மாட்டான் என்னும் நிலை வரும்போது, ஓடி வந்து உதவத் தவறுவதில்லை! தயங்கினதும் இல்லை!

ராமதாசர் 12 ஆண்டுக் காலம் சிறையில் வாடி வதங்கினார். மாணிக்கவாசகர் போலவே அரசாங்க ஊழியரின் சித்திரவதைக்குள்ளானார். பக்தரின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய இராம பிரான், தனது தம்பி லெட்சுமணனையும் அழைத்துக் கொண்டு பூமிக்கு இறங்கிவந்தார். ஒரு ரெவின்யூ அதிகாரியின் சேவகர்கள் போல வேஷம் போட்டுக் கொண்டு பெரிய தொகையை எடுத்துக் கொண்டு மன்னர் தானி ஷா அரண்மனைக்கு வந்து கதவைத் தட்டினர். அர்த்த ராத்ரியில் இருவர் வந்தவுடன் அந்தப்புரப் பெண்களை அனுப்பிவிட்டு சேதி என்ன என்று கேட்டார்.

ரெவின்யூ அதிகாரி ராமதாசர் பாக்கி செலுத்தவேண்டிய பெருந் தொகையை கொடுத்து அனுப்பியதாகச் சொன்னார்கள். பணத்தைக் கொடுத்துவிட்டு அத்தாட்சிப் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கினர் ராம லெட்சுமணர். உடனே ராமதாசரை விடுதலை செய்யவும் வேண்டினர். ராமதாசர் விடுதலை செய்யப்பட்டவுடன் நடந்த அதிசயத்தை அறிந்தார்.

தானிஷாவுக்கு தரிசனம் கொடுத்தனையே, எனக்கு தரிசனம் தரவில்லையே என்று ஒரு தெலுங்கு கீர்த்தனையும் பாடினார். தானி ஷாவுக்கு ஒரே மகிழ்ச்சி. முஸ்லீம் மன்னராக இருந்தபோதிலும் கோவில்களுக்கு வாரி வாழங்கிய மன்னர்களில் இவரும் ஒருவர். அவருடைய மன்னர்களில் இருவர் பிராமணர்கள். பின்னர் ராமதாசருக்கும் இராம பிரான் தரிசனம் கொடுத்தார்.
rama color

இராமதாசர் பாடிய நூற்றுக் கணக்கான தெலுங்கு கீர்த்தனைகள் தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் இன்னிசைக் கச்சேரிகளில் இன்றும் பாடப்படுகின்றன. அவருடைய கீர்த்தனைகளில், “இராமா, நீ நாமம் ஏமி ருசிரா, எந்த ருசிரா என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும். நாமும் பாடி மகிழ்வோம்:—

சுருக்கமான பொருள்: உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா! தேன், தயிர், நெய், திராட்சை, கரும்பு, வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றை விட சுவையானது உன் நாமம். அனுமனும், சிவனும் உன்னை துதித்து ஆனந்தம் அடைகின்றனர். நாரதனும் தும்புருவும் பாடி மகிழ்கின்றனர். சரணடைந்தவர்களைக் காப்பாற்றுபவன் என்பது உன் பெயரிலேயே இருக்கிறது. சீதை, விபீஷணன், பிரகலாதன், கஜேந்திரன் போன்ற எவ்வளவு பெயரை நீ காப்பாற்றி இருக்கிறாய். பத்ராசல ராமதாசிடத்திலும் அன்பு காட்டி அரவணைத்தாயே உன் நாமம் எவ்வளவு ருசியானது!!

girls singing

ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா?
ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா?
மதுரசமுல கண்டெ ததி க்ருதமுல கண்டெ அதிகமொ
நீ நாமம் ஏமி ருசிரா?
த்ராக்ஷாரசமுல கன்ன இக்ஷு ரசமுல கன்ன
பக்ஷி வாஹன! நீ நாமம் ஏமி ருசிரா?
அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச தளமுலண்டு ரஞ்சிலு
நீ நாமம் ஏமி ருசிரா?
சதா சிவுடு மடி சதா பஜிஞ்சேதி சதானந்தமாகு
நீ நாமம் ஏமி ருசிரா?
சரநன்ன ஜனமுல சரகுண ரக்ஷிஞ்சு
பிருது கலிகின நீ நாமம் ஏமி ருசிரா?
கரிராஜ ப்ரஹ்லாத தரணீஜா விபீஷணகுல காசின
நீ நாமம் ஏமி ருசிரா?
கதலி கர்ஜூரபல ரசமுல கதிகமு
பதித பாவன, நீ நாமம் ஏமி ருசிரா?
தும்புரு நாரதலு டம்பு மீராக
கானம்பு சேசேதி, நீ நாமம் ஏமி ருசிரா?
அரய பத்ராசல ஸ்ரீ ராமதாசுனி ப்ரேம நெளின
நீ நாமம் ஏமி ருசிரா?

rama kudai

இந்தப் பாட்டை பிரபல பாடகர்கள் பாடியது ‘’யூ ட்யூபிலும்’’ கிடைக்கும். கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். இராமன் அருள் கிட்டும்!

contact swami_48@yahoo.com