Agni in the Oldest Tamil Book ‘Tolkappiam’

durga from indonesia

Durga from Java, Indonesia in US museum

By London Swaminathan
Post no.946 Dated 31st March 2014.

The oldest Tamil book available today is Tolkappiam, a grammatical treatise. It is dated around first century BC. It has got clear references to Vedic Gods Indra and Varuna along with Vishnu, Skanda and Durga. They have the Tamil names Venthan, Varunan, Mayon, Seyon and Kotravai respectively. But the reference to Agni is not that clear. Tolkappiar mentioned three deities Kodinilai, Kanthazi and Valli in one of his Sutras in the third chapter ( Porul Adhikaram—Purath thinai Iyal).

According to the oldest commentator Ilampuranar, Kodinilai is the Sun, Kanthazi is Fire (Agni) and Valli is the Moon. It is mentioned in his rule/Sutra on the prayer. Anyone will readily agree with him given the mention of the Vedic gods Indra and Varuna by Tolkappiam. But the strangest thing about these words Kodinilay and Kanthazi is that they are not found anywhere in the Sangam Tamil literature. Another strange thing about this book is that it never mentioned about Lord Shiva. Foreigners who wrote about the Indus Valley civilisations wrote that Dravidians worshipped Lord Shiva. But the oldest book never mentioned it. Sangam Tamil literature has many references to Shiva without using the word ‘’Shiva’’. His attributes as we in the Yajur Veda such as Trinetra, Neelakanda etc, are there in the Sangam Tamil literature.

three_fires_1

Brahmin’s Three Fires: Kanchi Paramacharya’s Talk

Another interesting reference to Fire God is in another Tamil book. It is about the Three Fires that are found in Brahmin’s house. But this is from Sangam Tamil literature, not from Tolkappiam. I will give it in the words of Kanchi Paramacharya Swamiji (1894—1994):–

“In a Tamil work as ancient as the Purananuru, there is a reference to God with his long matted hair chanting the Vedas all the time, the Vedas with the six limbs (Sadanga). I read this in an article recently. The following appears in another Purananuru passage: The rulers of three Tamil Kingdoms – Cera, Cola and Pandya – were always at war. But on one occasion the three were seen together as friends in the same place. The old lady Avvai saw the three kings together and was immensely delighted. She wished to compare the scene to something worthy. And how did she express her idea? “The three of you”, she said, “seen together remind me of the three sacred fires in a Brahmin’s household, garhapatyagini, ahavaniyagni and dakshinagni.”
Even after the Sangam period, the Tamil rulers continued to give away gifts of lads free of tax to Brahmins. They promoted scriptural learning by establishing Vedic schools throughout the land.
(Tamil version of this article carries all the original references).

ajanta Cave14_DurgaSamhara
Durga in Ajanta Cave

‘No Basis for Aryan –Dravidian Race theory’

Kanchi Paramacharya said,

“Researchers in modern times propagate the view that the Vedas came to the south from the north, that the south had another religion and religious texts. This view of theirs, along with the theory that Northerners are Aryans and the Southerners are Dravidians, had created a conflict among the people. But if you truly examine Sanskrit and ancient Tamil texts you will find no basis for such a view or for the race theory. The researchers say that one should not be deceived by placing blind faith in the Shastras. But, in the end, what obtains today? Many people have come to accept the view of these researchers without examining it properly; merely because the research scholars concerned claim that their view is ‘rational; and ‘scientific’.

In the Vedas and Shastras there are indeed matters that have to be accepted in faith. But there are also scriptural aspects that can be examined rationally. If we inquire into such texts together with the ancient works in Tamil we will realise that the race theory is baseless. The fact that there was such a thing as Tamil religion will also be seen to be unfounded. It is a matter for regret that wrong notions have arisen with regards to subjects of great value, along with lack of faith in the Shastras. All these must go and the Vedic culture flourishes again, a culture that brings good to all the worlds and all the creatures. This is the prayer we must always make to the Lord”.

Kanchi Paramacharya’s Talk as in pages 741 and 745/6 of Hindhu Dharma, Bharatiya Vidya Bhavan, Mumbai. Year of Publication 2000.

Durga in Dulmi (Jharkhand)
Durga in Dulmi,Jharkand.

Please read my earlier posts:
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book
Three Tamil Sangams: Myth or Reality
Contact swami_48@yahoo.com

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!

durga in MBPuram
Durga (Mahishasura Mardhani) in Mahabalipuram,Tamil Nadu

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 945 தேதி- 31st March 2014.

முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும் எழுதியிருந்தேன். இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன. அவர் பயன்படுத்திய கொடிநிலை, கந்தழி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலோ பிற்கால பக்தி இலக்கியத்திலோ இல்லை. அவர் என்ன அர்த்தத்தில் இந்தச் சொற்களைப் பிரயோகித்தார் என்பதிலும் உரைகாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.

சிவன் பற்றி அவர் யாங்கனுமே செப்பாதது வியப்பானது. சிந்து சமவெளியில் இருக்கும் பசுபதி முத்திரைதான் ஒரிஜினல் “திராவிட” சிவன் என்று ‘ஆரிய திராவிட’ இன பேதம் பேசுவோருக்கு தொல்காப்பியம் அறைகூவல் விடுக்கிறது. சிவனைப் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே இருக்கின்றன. அப்பரும் சம்பந்தரும் இதை உறுதியும் செய்கின்றனர்.

தொல்காப்பியக் கடவுளரைக் காண்போம்:–

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயதீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)

என்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் (கந்தழி) குறிப்பிடுகிறார்.

முல்லை= திருமால்
குறிஞ்சி = முருகன்
மருதம் = இந்திரன்
நெய்தல் = வருணன்

durga from indonesia

Durga from Java, Indonesia in US Museum.

கீழ்வரும் சூத்திரத்தில் காளி வழிபாடு பற்றிப் பாடுகிறார்.

கொற்றவை = துர்கை = காளி (பாலை நிலக் கடவுள்)
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர்.

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

three_fires_1

புறநானூற்றில் பிராமணர் வீட்டு மூன்று தீ

இந்த தருணத்தில் வேறு ஒரு முத்தீயை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம். இதோ புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:

“ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இவ்வே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)

((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))

சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம்!! தமிழ் மன்னர்களை போர்க்களம் தவிர வேறு எங்கும் ஒருங்கே பார்க்க முடியாது. இங்கு அதிசயமாக , மஹா அதிசயமாக, உலக அதிசயமாக, மூன்று தமிழ் தலைவர்கள் இருந்தவுடன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் தலை, கால் புரியவில்லை. ஏனெனில் உவமையாகக் கூறப்படும் பொருள் மன்னர்களைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது செய்யுள் இலக்கண விதி. இவர்களை என்னதைச் சொல்லி திருப்திப் படுத்துவது? என்று திகைத்தார்.

இமய மலை, பொதிய மலை, விந்திய மலை என்று புகழலாமா? அதுவும் பொருத்தம் இல்லை. ஏனெனில் மூன்றும் ஒரே இடத்தில் இல்லை. கன்னியாகுமரி சரியான பொருத்தம். ஏனெனில் மூன்று கடல்களும் ஒருங்கே கூடுகின்றன. ‘’அடா, அடா, உப்புக் கடல்களைப் போய் இந்த தருணத்தில் ஒப்பிடுவது பொருந்தாதே’’– என்று எண்ணிக் கொண்டிருந்தார். திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. மூன்று மன்னர்களும் க்ஷத்ரிய வம்சத்தினர்; சூரிய, சந்திர, அக்னி குலத்தைச் சேர்ந்தவர்கள். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியர் ‘ஸ்டைலில்” ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் அதைவிட உயர்வாக எதையாவது சொல்ல வேண்டும் என்று துடியாய்த் துடித்தார் அவ்வையார்.

பிராமணர் வீடுகளில் முத்தீ – அதாவது ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கினீயம் — என்று மூன்று தீ எரியும். உடனே சேர சோழ பாண்டியர்களை—- “ஐயர் வீட்டு முத்தீ போல அருமையாக ஒருங்கே இருக்கிறீர்களே!! நீங்கள் மழைத்துளிகளின் எண்ணிக்கையை விட, வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக வாழ்நாட்களோடு வாழுங்கள்”— என்று வாழ்த்தினார். மேலே கொடுத்த பாட்டை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

ajanta Cave14_DurgaSamhara
Durga in Ajanta Caves

கண் இமைக்காத தேவர்கள்

தேவர், இமையோர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில் வருகின்றன.
தேவர் என்பது சம்ஸ்கிருத சொல். அதுமட்டுமல்ல, இமையோர் என்ற சொல் ,புராணச் செய்திகளைக் கூறும் சொல்— கண் இமைக்காதவர்கள் தேவர்கள்.

இதுபற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவர்கள் வெளிக் கிரகவாசிகளாக இருக்கலாம் என்று எழுதி இருக்கிறேன். நம் எல்லோ ருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். அந்தக் காலத்தில் தேவர்கள், நாரதர் முதலானோர் பூமிக்கு அடிக்கடி வந்தார்களே. இப்போது ஏன் வருவதில்லை என்று. இதற்கு ஆதிசங்கரர் பதில் கொடுத்து இருப்பதை எம்.ஆர்..ஜம்புநாதன் எழுதிய யஜுர் வேதக் கதைகள் என்ற புத்தகத்தில் படித்தேன்:–

“பிராமணன், ராஜசூய யாகத்திலே க்ஷத்ரியனுக்குக் கீழாகவே உட்காரவேண்டும்…….. ஆனால் அவர்களைவிட ஒழுக்கம் நிறைந்தவர்களை நாம் பார்ப்பது அரிது. அவர்களின் ஒழுக்கங்களைக் கண்டு தேவர்களும் மனிதர்களுடன் சேர்ந்து புசித்தார்கள். ஆனால் நாளடைவில் ஒழுக்கம் குன்றி ‘’எனக்கு அதுவேணும், இதுவேணும்’’ என சனங்கள் சொல்லவே பிச்சை எடுப்பவர்களை விரும்பாமல் தேவர்கள் பிற்காலத்தில் புவி நீங்கினார்கள் என ஆதி சங்கரர் கூறுகிறார்”. (பக்கம் 12, யஜுர்வேதக் கதைகள், எழுதியவர் எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004)

இதுதவிர பலராமனின் பனைக் கொடி பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்தில் உண்டு. ஆகையால் கண்ணன், பலராமன் வழிபாடும் இருந்திருக்கவேண்டும். எனது முந்திய கட்டுரையில் முழு விவரம் காண்க.

Durga in Dulmi (Jharkhand)
Durga in Dulmi (Jharkahand)

தென்புலத்தார் வழிபாடு

இறந்தோர்கள் தெற்கு திசைக்குச் செல்வர் என்ற இந்துமதக் கோட்பாட்டை வள்ளுவர் பாடியதை எல்லோரும் அறிவோம் (குறள்–43). தொல்காப்பியரும் இறந்தோர் (நடுகல்) வழிபாடு பற்றிப் பேசுகிறார்.

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்தரு மரபின் பெரும்படை, வாழ்த்தல்
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
இது ஆறு கட்டங்களாக செய்யப்படும்:–

1.காட்சி= கல்லைக் கண்டு தேர்ந்தெடுத்தல் (சேரன் செங்குட்டுவன் புனிதமான இமயமலைக்குச் சென்று கல் எடுத்தான். ஒரு முறை தனது தாய்க்கும் மறுமுறை கண்ணகிக்கும் 3000 மைல் பயணம் செய்து கல் எடுத்தான் என்றால் அவன் பக்தியை என்னவென்று மெச்சுவது)
2.கால்கோள்= மரியாதையாக எடுத்து வருதல்
3.நீர்ப்படை=புனித நீரில் நீராட்டுதல் (சேரன் செங்குட்டுவன் புண்ய கங்கை நதியில் நீராட்டினான்)
4.நடுகல்= குறித்த இடத்தில் நடுதல்
5.வீரனுடைய பெயரும் பெருமையும் கல்லில் பொறித்தல்
6.தெய்வமாகக் கொண்டாடி விழா எடுத்தல் (கண்ணகி கற்சிலை துவக்க விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்களை (Special Invitations) செங்குட்டுவன் அழைத்தான். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் (கஜபாகு) ஒரு பிரதம (Chief Guest) விருந்தினர். அந்தக் காலம் முதல் நாமும் இலங்கையும் அவ்வளவு நெருக்கம்!. முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி!!)

நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் 67)

என்ற அகநானூற்றுப் பாடல் அக்கற்களுக்கு மக்கள் மயில் பீலி சூட்டி வழிபட்டதைக் கூறுகிறது.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பாட்டுக்குப் பாட்டு இந்துமதக் கடவுளர்கள் பவனி வருவதைக் காணலாம்.. சிவன் என்ற சொல் திருமுறை-தேவார காலம் வரையில் கையாளப்படாவிடினும், தொல்காப்பியத்தில் இல்லாவிடினும், புறநானூற்றின் மிகப்பழைய பாடல்களில் நீலகண்டனையும் முக்கண்ணனையும் காண்கிறோம்.

சங்க காலத்துக்குப்பின் வந்த சிலப்பதிகாரத்தை இந்து மத ‘என்சைக்ளோபீடியா’ (கலைக் களஞ்சியம்) என்று சொல்லும் அளவுக்கு இந்து கலாசாரம், கடவுளர்கள் பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book

Contact swami_48@yahoo.com

அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!!

neela vannan

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 943 தேதி 30 March 2014

பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் உள்ளன. அதில் அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள், அவைகளின் பொருள் என்ன என்று பார்ப்போம். ஒரே நூலில் கண்ட பெயர்கள் இவை.

நாம் எல்லோரும் நம் நண்பர்களைப் பட்டப் பெயர்கள் சொல்லி அழைப்போம். அதில் முக்கால்வாசி அர்த்தம் இல்லாத கேலிப் பெயர்களாகவே இருக்கும். நாம் பள்ளிக்கூடத்திலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு வைத்த பெயர்களோ வெளியே சொல்ல முடியாது!! ஆனால் அர்ஜுனனும் கண்ணனும் நண்பர்கள் தான். எவ்வளவு அழகாக ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கிறார்கள் என்று பாருங்கள்!

ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு கீதையில் அமைந்துள்ள 18 பெயர்கள்:

ஹ்ருஷீகேசன் = இந்திரியங்களுக்கு ஈசன்
அச்யுதன் = தன் நிலையிலிருந்து வழுவாதவன்
கிருஷ்ணன் = கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார்படும் துயரம் துடைப்பவன்
கேசவன் = அழகிய முடியுடையவன், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்
கோவிந்தன் = ஜீவர்களை அறிபவன்
மதுசூதனன் = மது என்ற அசுரனை அழித்தவன்
ஜநார்தனன் = மக்களால் துதிக்கப்படுபவன் (அஞ்ஞானத்தை அழிப்பவன்)
மாதவன் = திருமகளுக்குத் தலைவன்
வார்ஷ்ணேயன் = வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
அரிசூதனன் = எதிரிகளை அழிப்பவன்
கேசிநிஷூதனன் = கேசின் என்ற அசுரனை அழித்தவன்
வாசுதேவன் = வசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்
புருஷோத்தமன் = பரம புருஷன்
பகவான் = ஷட்குண சம்பன்னன்
யோகேச்வரன் = யோகத்துக்குத் தலைவன்
விஷ்ணு = எங்கும் வியாபகமாய் இருப்பவன்
ஜகந்நிவாசன் = உலகுக்கு இருப்பிடம்
யாதவன் = யதுகுலத்தில் தோன்றியவன்

krishna_arjun

அர்ஜுனனுக்கு கீதையில் அமைந்துள்ள 13 பெயர்கள்:

அர்ஜுனன் = தூய இயல்பு உடையவன்
பாண்டவன் = பாண்டுவுக்கு மைந்தன்
தனஞ்ஜயன் = அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைச் சேகரிப்பவன்
கபித்வஜன் = குரங்குக் கொடியுடையவன்
குடாகேசன் = தூக்கத்தை வென்றவன்
பார்த்தன் = பிரிதாவின் மைந்தன்
அனகன் = பாபமற்றவன்
பரந்தபன் = எதிரிகளை வாட்டுபவன்
கௌந்தேயன் = குந்தியின் மைந்தன்
பாரதன் = பரத குலத்தில் உதித்தவன்
கிரீடி = கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் = குருகுலத்தின் தோன்றல்
ஸவ்யஸாசின் = இடது கையால் அம்பு எய்பவன்

ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் தந்த பட்டியல் இது. நான் ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் இணைத்திருக்கிறேன்.
Contact swami_48@yahoo.com

தமிழ், சம்ஸ்கிருத மொழிகளின் அழகே அழகு!

siva uma

Lord Shiva with Uma (Parvati)

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 942 தேதி 30 மார்ச் 2014.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு: ‘நெய்யப்பம் தின்றால் ரெண்டுண்டு காரியம்’; அதாவது நெய்யப்பம் சாப்பிட்டால் சுவையான அப்பத்தை சாப்பிட்ட பலன் ஒன்று. இரண்டாவது பலன் என்ன? மீசையுள்ள ஆண்பிள்ளைகள் அந்த நெய்யை மீசையில் உரசும்போது மீசை அழகாக கண்ணங்கரேல் என்று வளரும்! அதே போல தமிழனாகப் பிறந்தவனுக்கும் இரண்டு பலன்கள் கிடைக்கின்றன. சம்ஸ்கிருத மொழியின் அழகை ரசிக்கும் போது அதை தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரு மடங்கு இன்பம் எய்தலாம்.

வடமொழியும் தென் மொழியும் நம் இரு கண்கள். இந்த இரண்டையும் அறிந்த ஒருவனால் மட்டுமே பாரதீய கலாசாரத்தை நூறு விழுக்காடு அறிய முடியும். தமிழில் இருண்ட மேகம் மழை பொழிவதைப் போல கவி மழை பொழிந்தவர் காளமேகப் புலவர். அவர் வாயைத் திறந்தாலே, சிலேடை மழை பொழிவார். எல்லாம் இரட்டுற மொழிவார். சில நேரங்களில் புகழ்வது போல இருக்கும் ஆனால் அது இகழ்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் இகழ்வது போல இருக்கும் ஆனால் அது புகழ்ச்சியாக இருக்கும்.

WhitePumpkins

இதோ ஒன்று:-

சிவ பெருமானும் பூசுணிக்காயும் ஒன்றே !!
அடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும் ஒரு பக்கத்தில் கொண்டு — வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசுணிக்காய் ஈசனைப் போன்று.

பொருள்:- பூசணிக்காய்க்கு அடியில் காம்பு உடையது. மேல் பாகம் வெள்ளை நிற சாம்பல் பூசப்பட்டது போல இருக்கும். கொடியில் படர்வது. வளைந்த தழும்புகளுடன் அதன் உடல் இருக்கும்.(மாசுணம்=சாம்பல்).

சிவன் தன் கால்களை நந்தியின் மீது (காளைவாகனம்) வைத்திருப்பார். திரு நீறு பூசி உடல் வெளுப்பாகக் காணப்படுவார். பூங்கொடி போன்ற உமை அம்மையை ஒருபுறம் வைத்திருப்பவர். வளைந்த பாம்பை (மாசுணம்=பாம்பு) அணிந்தவர். காஞ்சி காமாட்சியின் வளைத் தழும்பை உடலில் தாங்கியவர். ஆகையால் பூசணிக்காயும் சிவனும் ஒன்றே!!

rada krisna

இதோ ஒரு சம்ஸ்கிருத சிலேடைக் கதை:

ராதா ராணி வீட்டுக்கு கிருஷ்ணன் வந்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை என்பதை உலகமே அறியும். இருந்தபோதிலும் உடனே கதவைத் திறந்துவிட்டால் காதலின் சுவையே போய்விடும் அல்லவா! ஆகையால் ராதா ஒரு நாடகம் ஆடினாள்:–

ராதா: யாரது? கதவைத் தட்டுவது?
கண்ணன்: நான் தான் ஹரி (வந்திருக்கிறேன்).

ராதா: இங்கு நீ சாப்பிடக் கூடிய மிருகங்கள் எதுவும் இல்லை. இங்கு ஏன் வந்தாய்? (வடமொழியில் ஹரி என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு)

க: — அட என்னைத் தெரியவில்லையா? நான் மாதவன்.
ரா:– வசந்த காலம் வர இது உரிய தருணம் இல்லையே? (மாதவ என்றால் வசந்த காலம் என்ற பொருளும் வடமொழியில் உண்டு)

க:- ராதா! நான் ஜனார்தனன். உனக்கு என்னை நன்றாகத் தெரியுமே!
ரா:– உன்னைப் போன்ற ஆசாமிகளுக்கு எல்லாம் காடுதான் லாயக்கு. போய் யாரை வேண்டுமானாலும் தொல்லைப் படுத்து.

(ஜனார்தனன் என்றால் அஞ்ஞானத்தையும் அநீதி செய்வோரையும் அழிப்பவன் என்று ஒரு பொருளும் அநாவசியமாகத் தொல்லை கொடுப்பவன் என்று ஒரு பொருளும் உண்டு. விக்ன விநாயகனைக் கூட கஷ்டங்களைப் போக்குபவன், தீயோருக்கும் தன்னை வணங்காதோருக்கும் கஷ்டம் கொடுப்பவன் என்று நாம் சொல்லுவோம். முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரன் என்று அருணகிரி பாடியதையும் அறிவீர்கள்))

க: இளம் கன்னியே! தயவு செய்து கதவைத் திற. நான் மதுசூதனன் வந்திருக்கிறேன்.
ரா:- ஓஹோ! நீதான் த்விரேபனா? ( மதுசூதனன் என்ற பெயர் மது என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணனுக்கு வந்தது. இன்னும் ஒரு பொருள் மதுவை உண்ணும் தேனீ. கிருஷ்ணன் ராதாவிடம் மட்டுமின்றி மற்ற கோபியருடனும் போவது ராதாவுக்குப் பிடிக்காது. ஆகையால் தருணம் பார்த்து இப்படி வடமொழியில் தாக்கினார். ‘த்விரேப’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தேனீ என்றும் ஜாதியைவிட்டு விலக்கப்பட்டவன் என்றும் பொருள். அதாவது உன்னை வீட்டை விட்டு விலக்கிவிட்டோம். வீட்டின் கதவு திறக்காது, போ, போ!!

(அம்மா, அப்பாவுக்குப் பிள்ளைகள் மீது கோபம் வந்தால் சீ, வெளியே போ! என்று சொல்லிவிட்டு, பின்னர் கொல்லைப்புறம் வழியாக வந்தாலும் ‘உள்ளே வந்து சாப்பிடு, சனியனே!’ என்று அன்பு காட்டுவது போல ராதாவும் கொஞ்சம் ‘பிகு’ செய்துகொண்டாள்).

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள பழைய நூல்கள் அனைத்தையும் ஒருவர் படித்து முடிக்க நூறு பிறவிகள் எடுத்தாலும் போதாது. சரஸ்வதி தேவி சொன்னாள், “கற்றது கை மண் அளவு; கல்லாதது உலக அளவு” என்று. நாம் எல்லோரும் சொல்லலாம், ”கற்றது கடுகு அளவு; கல்லாதது இமய மலை அளவு” என்று!

contact swami_48@yahoo.com

புத்தர் செய்த தவறு: சுவாமி விவேகாநந்தர்

my_tattoo_by_kiyannaori

Compiled by London Swaminathan
Pot No 939 dated 28th March 2014.

சம்ஸ்கிருதம் பற்றி பல அறிஞர்கள் சொன்ன பொன் மொழிகளில் சுவாமி விவேகாநந்தர் சொன்ன விஷயம் மிகவும் முக்கியமானது:

“ என்னுடைய ஐடியா (எண்ணம்/விருப்பம்) என்னவென்றால் காடுகளிலும், மடாலயங்களிலும் மறைந்து கிடக்கும், புத்தகங்களில் உள்ள நம்முடைய ரத்தினக் குவியலை வெளிக் கொணர்வதுதான். ஒரு சிலரின் உடைமைஅகளாக உள்ள அவற்றை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை அவைகள் பாமர மக்கள் எளிதில் அணுகமுடியாத நூற்றாண்டுக் கணக்கில் பழமையான சம்ஸ்கிருத மொழியில் இருக்கின்றன. சம்ஸ்கிருத மொழி அறிந்தவர், அறியாதவர் ஆகிய எல்லோரின் பொதுச் சொத்தாக இதை ஆக்க வேண்டும்.

இதில் கஷ்டம் என்ன வென்றால் நமது பெருமைமிகு சம்ஸ்கிருத மொழிதான். நாம் எல்லோரையும் சம்ஸ்கிருத அறிஞர்களாக்கும் வரை இந்தக் கஷ்டம் நீடிக்கும். முடிந்தால் இதைச் செய்யலாம். நான் என் அனுபத்தைச் சொன்னால் இது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கும் புரியும். வாழ்நாள் முழுதும் இந்த மொழியைப் படித்து வருகிறேன். ஆயினும் ஒவ்வொரு புத்தகமும் புதிதாகவே தோன்றுகிறது. அப்படியானால் கொஞ்சமும் இதைப் படிக்க நேரமில்லதவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் பாருங்கள்.ஆகையால் தாய் மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதோடு சம்ஸ்கிருதமும் சொல்லித் தரவேண்டும். ஏனென்றால் சம்ஸ்கிருதச் சொற்களின் கம்பீரமும் ஒரு சமூகத்துக்கு பலத்தையும், கௌரவத்தையும், சக்தியையும் தரும்.

paninin big

கீழ்மட்டத்தில் இருந்தவர்களை மேல்நிலைக்குக் கொண்டுவர ராமானுஜர், சைதன்யர், கபீர் போன்றோர் செய்த அரிய பெரிய பணிகள் அபூர்வமான பலன் தந்தன. ஆனாலும் அந்த மஹாபுருஷர்கள் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்குள் அவைகள் அடைந்த தோல்விகளையும் விளக்க வேண்டும். இத்தான் ரகசியம். அவர்கள் கீழ்ஜாதி மக்களை உயர்த்தினர். ஆனால் சம்ஸ்கிருதத்தைப் பரப்பவில்லை. மாபெரும் மஹான் புத்தன் கூட பொது மக்கள் சம்ஸ்கிருத படிப்பதை நிறுத்தியன் முதல் தவறான பாதையில் அடி எடுத்துவைத்தார். உடனடியாக கை மேல் பலன் வேண்டும் என்று எண்ணி மக்களின் பேச்சு மொழியான பாலி மொழியில் சொற்பொழிவாற்றினார். மக்களுக்கும் நன்றாகப் புரிந்தது. மகத்தான பணி! அகல நெடுக விரிந்தது, பரந்தது அவர்தம் பணி. ஆனால் அத்தோடு சம்ஸ்கிருதத்தையும் அவர் கற்பித்திருக்க வேண்டும்.

என்ன நடந்தது? அறிவு பெருகியது. ஆனால் மதிப்பு போய்விட்டது. அவர்களிடையே பண்பாடு இல்லை. ஒரு நாட்டின் கலாசாரம்தான் பயங்கரமான அதிர்ச்சிகளை சமாளிக்க வல்லது. அறிவு எக்கச்சக்கமாக இருக்கலாம்.. அது நல்லது செய்யாது. ரத்தத்தில் பண்பாடு இருக்க வேண்டும். நாமும் பார்க்கிறோம். நவீன காலத்தில் சில நாடுகளில் அபாரமான அறிவு வளர்ச்சியை. என்ன கண்டோம்? அவர்கள் எல்லாம் புலிகள், காட்டுமிராண்டிகள். காரணம் பண்பாடு இல்லை.”

ஆதாரம்: சுவாமி விவேகாநந்தரின் முழு சொற்பொழிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், ஆங்கில வெளியீடு, அத்வைத ஆஸ்ரம, கல்கத்தா, 700 014. வெளியீடு 1990

sanskrit-tattoo

“ இந்தியாவிடமுள்ள மிகப் பெரிய பொக்கிஷம் என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால், இந்தியாவின் மிகச் சிறந்த பாரம்பர்யச் சின்னம் என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால், உடனே தயங்காமல் பதில் சொல்வேன்: சம்ஸ்கிருத மொழியும், சம்ஸ்கிருத இலக்கியத்தில் அடங்கி இருக்கும் எல்லா விஷயங்களும் என்று.
—இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முள் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பரோ
(கம்ப ராமாயணம் தற்சிறப்புப் பாயிரம், செய்யுள் 10)

சம்ஸ்கிருதத்தை தெய்வ மொழி என்றும் மூன்று ராமாயணங்களில் தான் பின்பற்றுவது வால்மீகி ராமாயணத்தையே என்றும் கம்பர் சொல்கிறார்).

sound creation

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

இதில் வடமொழியும் தமிழ் மொழியும் சிவனிடமிருந்து தோன்றின. ஒன்றை பாணினிக்கும் மற்றொன்றை அகத்தியனுக்கும் அருளினார். இரண்டும் தொடர்புடைய மொழிகள் என்று பரஞ்சோதி முனிவர் கூறுகிறார்.

இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலிவ்
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம் என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

“சம்ஸ்கிருத மொழி – எந்தத் தொல் பழங்காலத்தில் வேண்டுமானாலும் தோன்றியிருக்கட்டும் — அதன் அமைப்பு அற்புதமானது. கிரேக்க மொழியை விட சிறப்புடையது — லத்தீன் மொழியை விட வளம் பெற்றது – இந்த இரண்டு மொழிகளுடனும் சொல்லமைப்பிலும், இலக்கணத்திலும் சம்ஸ்கிருதம் நெருக்கமானது, ஆனால் கட்டமைப்பில் அவற்றை விட செம்மைப் படுத்தப்பட்டது – இதை தன்னிச்சையாக நடந்ததென்று சொல்லலாம் – ஆயினும் மொழிவரலாறு தெரிந்த எவரும் ஒரே மூலத்தில் இருந்து இவை மூன்றும் வந்தன என்பதை ஒதுக்கமுடியாது –மூன்றையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கும்—மூல மொழி இப்போது இல்லாமற் போயிருக்கும்.– இதே போல வேறு ஒரு வகையில் காதிக், கெல்டிக் மொழிகளையும் சொல்லலாம். பாரசீக மொழியையும் இந்த அணியில் சேர்க்கவேண்டும்.
–வில்லியம் ஜோன்ஸ் (1744 – 1796 ), மொழியியல் அறிஞர்

sanskrit-latvian similar words

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894 – 1994)

“காஞ்சீபுரத்தில் காமாக்ஷி ஸந்நிதியில் ஊமை ஒருவர் உபாஸனை செய்து மஹா கவி ஆனார். அவர் அம்பிகையின் விஷயமாக 500 ச்லோகம் செய்திருக்கிறார். மூகபஞ்ச சதி என்று அவற்றின் பெயர். அவை மிகவும் சுவையுள்ளனவாக இருக்கும். ஸம்ஸ்க்ருதம் தெரியாவிடின் அவைகளின் ரஸத்தை அனுபவிக்கமுடியாது. ஸம்ஸ்க்ருதம் தெரிந்தால் மூககவி, காளிதாசன் முதலியவர்களுடைய வாக் மாதுர்யத்தை ( சொல் இனிமை) அனுபவிக்கலாம். பகவத் பாதளுடைய (ஆதி சங்கரர்) வாக் மஹிமையை அனுபவிப்பதற்கும் ஸம்ஸ்க்ருத ஞானம் வேண்டும். இந்த மூன்றுக்காகவாவது எல்லோரும் சம்ஸ்கிருதம் வாசிக்க வேண்டும்.

“நம்முடைய மதம் எப்படிப் பொது மதமோ அது போல ஸம்ஸ்க்ருதம் பொதுப்பாஷை. அதற்கும் ஊர் இல்லை.தெலுங்கு, தமிழ், இந்துஸ்தானி முதலியவற்றிற்குத் தேசம் உண்டு. ஸம்ஸ்க்ருதத்துக்குத் தேசமே இல்லை. இந்த ஸம்ஸ்க்ருதத்தைச் செத்துப்போன பாஷை என்று சிலர் சொல்லுகிறார்கள்.

எங்கள் அம்மாவுக்கு எனக்கு முன் ஒரு குழந்தை இருந்தது. அவள் ஒரு ஞானி. அந்தக் குழந்தை செத்துப் போய்விட்டது. அதற்காக அவள் அழவில்லை. அம்மாவுக்கு என்னிடம் நிரம்பப் பிரியம். ஒரு நாள் நான் அவளைப் பார்த்து, “ அம்மா பெரியவன் செத்துப் போனதற்கு நீ அழவில்லை; நான் செத்துப் போனால் அழுவாயோ மாட்டாயோ?” என்று கேட்டேன் “நீயும் அவனைப் போல பிள்ளைதானே; அவன் உடம்பில் செத்துப் போனான், நீ மனசில் செத்துப் போ” என்றாள். செத்துப்போன மனசை உடையவனாக வேண்டும் என்பது அவள் எண்ணம். அந்த மாதிரிதான் ஸம்ஸ்க்ருதம் செத்துப் போயிற்று.

தனக்கு என்று ஒரு இடம் இருந்தால் பயம் இருக்கும். எல்லாம் தன்னுடைய இடமாக இருப்பது ஸம்ஸ்க்ருதம் . இப்பொழுது லோகத்திலுள்ள பாஷைகள் எல்லாவற்றிலும் ஸம்ஸ்க்ருதம் கலந்திருக்கிறது. அவற்றில் பெரும்பலானவை ஸம்ஸ்க்ருதத்திலிருந்து உண்டானவை. நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் கலந்திருக்கின்றன. தமிழ் செய்யுளாக இருந்தால் அதற்கு உரை ஸம்ஸ்க்ருதம் ஸம்பந்தம் உடையதாக இருக்கிறது. குற்றம் என்ற தமிழ் வார்த்தைக்கு, தோஷம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் அர்த்தம் சொல்லுகிறோம். தேச பாஷையிலுள்ள கடினமான சொற்களுக்கு ஸம்ஸ்க்ருத வார்த்தைகளால் அர்த்தம் சொல்லி விளங்க வைக்கிறோம்.

சாவு என்பது என்ன? எதற்குச் சாவு உண்டு? உடம்புதானே சாகிறது. அது உயிரோடு இருக்கிறது. பின்பு சாகிறது. உயிர் இல்லாதபோது அது செத்துப் போகிறது. உயிருக்கு மற்றோர் உயிர் ஏது? அது எப்பொழுதும் செத்ததுதான். ஸம்ஸ்க்ருதம் எல்லா பாஷைக்கும் உயிராக இருக்கிறது.
sanskrit comparative chart

இத்தகைய நமது மதமும் பாஷையும் லோகம் முழுவதும் பரவியிருந்தன. நமது மதத்துக்கு வேதம் பிரமாணம். எல்லா மதமும் நம்முடைய மதங்களே. எல்லாம் சேர்ந்து மறுபடியும் ஒன்றாகிவிடலாம். அஹம்பாவம் இல்லாமல் அன்பொடே சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியமாகக் கேட்பார்கள். மனஸும் ஒன்றாகும். அப்பொழுது இந்த மதம் பழையபடி அகண்டமான மதமாக ஆகும்”.
— (12-10-1932-ல் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு).

இந்த சொற்பொழிவு 15 ஜூலை 2012–ல் சம்ஸ்கிருதத்துக்கு உயிர் இருக்கிறதா? என்ற தலைப்பில் நான் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி..

contact swami_48@yahoo.com

sanskrit-letters

“நாம் மேல்நாட்டு வித்வான்களுடன் வாதம் செய்ய முடியாது”- பகுதி-3, அரியநாயகிபுரம்

63950-640x360-london-icons2-640

“நாம் மேல்நாட்டு வித்வான்களுடன் வாதம் செய்ய முடியாது”- பகுதி-3, அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவப் பயணம்

Post No 936 Date 27th March 2014.
புத்தகத்தின் பெயர்: மகா மேரு யாத்திரை, ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரியினால் யாத்திரை செய்து எழுதப்பட்டது, ஜனவரி 1936.

புத்தகத்தில் பின் அட்டையில் உள்ள விஷயம்: “ இச் சிறு புத்தகத்தின் விலை தனம் அரியநாயகிபுரம் ஹிந்து எலிமெண்டரி பள்ளிக்கூட பண்டுக்குச் சேருகிறபடியினால் புஸ்தகம் வேண்டுபவர்கள் மேற்படி பள்ளிக்கூட கரஸ்பாண்டெண்டினிடத்தில் பெற்றுக்கொள்ளலாம். விலை அணா எட்டு. அரியநாயகிபுரம், பேட்டை போஸ்ட், திருநெல்வேலி ஜில்லா.

முதல் இரண்டு பகுதிகளில் பல சுவையான விஷயங்களைக் கண்டோம். இதோ மூன்றாவது பகுதி:—
நாம் ரோமாபுரியில் இறங்கியவுடன் ஹோட்டல் தலைவருக்கு என் ஆகார நியமங்கள் குறித்தும், பிராதஃகாலத்தில் சீதஜல ஸ்நானத்தைக் குறித்தும், நோடீஸ் கொடுத்தேன்; தினந்தோறும் புதிய பச்சைக் காய்கறி, பழம், பால் முதலானவைகளைப் புசிப்பதைப் பார்த்த அந்த தேசத்தாருக்கு இது புதிதான அனுபவமானதினால் என்னிடத்தில் ஒரு அபூர்வமான தெய்வபக்தி உண்டாயிற்று; ஆகையினால் நான் தங்கியிருந்த இடத்தை ஒரு வாரத்திற்குப் பிறகு விட்டு வரும்பொழுது எஜமானன் முதல் வேலைக்கரர்கள் வரைக்கும் எல்லாரும் அந்த தேச வழக்கப்படி மண்டி போட்டு நமஸ்காரம் செய்து தமது தலையைத் தொட்டு அனுக்கிரகஞ் செய்யச் சொன்னார்கள். எஜமானன் முதலானவர்கள் என் ஞாபகார்த்தமாக ஏதாவது கொடுக்கச் சொன்னார்கள். நான் அவர்கள் எந்த மதத்தினர் என்பதைக் கேட்டு உடனே அவர்களுடைய வாழ்க்கையுடன் ஸம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகம் செய்து, அதற்குரிய பொருளை இங்கிலீஷில் மொழிபெயர்த்து ஒவ்வொரு ஓலையில் என் பெயருடன் எழுத்தாணியினால் எழுதி மஞ்சளைத் தடவி அனுக்கிரகித்துக் கொடுப்பேன். அதை அவர்கள் தங்கள் தங்கள் பூஜை சாமான்களுடன் சேர்த்து வித்துக்கொள்ளுவார்கள். இவர்களிற் சிலரும் கலாசாலை மாணவர் சிலரும் தங்கள் பக்தியைக் காண்பிக்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து வழியனுப்புப் பாட்டைப் பாடி வாழ்த்துவதுமுண்டு.

கேட்கிறவர்களுக்கு இப்பெரியோர் கீழ்நாட்டிற் றோன்றிய ஒரு ஆசாரியர். குளிர்ந்த ஜலத்தில் காலை நாலு மணிக்கே ஸ்நானம் செய்கிறவர். பால், பழங்களினால் ஜீவிக்கிறவர். என்று புகழ்ந்து கூறுவார்கள். இதைக் கேட்கும் ரயில் பிரயாணிகளிற் சிலர், நானிருக்கிற இடத்தைவிட்டு, கௌரவத்தைக் காட்ட வேறு வண்டிக்குப் போய்விடுகிற வழக்கமும் உண்டு. இவ்விதம் நான் திரும்பி பம்பாய் வருகிற வரையில், கப்பல்களிலும், ரயில்களிலும், ஆகாய விமானத்திலும் நடந்தது. எல்லாம் ஈசன் செயல்.

*****

ஸ்விஸர்லாண்டு தேசமானது யூரோப் மாகாணத்தில் மத்திய பூமி என்று சொல்லலாம். ஸம்ஸ்கிருத புஸ்தகசாலையும் பண்டித்ர்களு மில்லாத ஸ்விஸர்லாண்டிற்கு நான் போன நோகம், “ஆச்சர்யமான பூப்பிரதேசங்கள் எல்லாம் என் அம்சம் என்று ஸூதஸம்ஹிதையிலும் எந்த எந்த இடங்களில் அதிகாரமும் பலமும் செல்வமும், முயற்சி முதலானவைகளு மிருக்கின்றனவோ அவைகளை என் அம்சமாகத் தெரிந்துகொள் என்று பகவத் கீதையிலும் கூறியுள்ளதை நினைத்தே. என்னிடத்தில் பல வருஷம் வேதாந்தம் படித்த சீடரும், ஸமீப காலத்தில் ஸ்வர்கயாத்திரை செய்தவர்களுமான கனம் கொச்சி மஹாராஜா அவர்கள் பார்யையுமான , ராணி அவர்கள் பர்த்தா வியோகத்தினால், துக்கத்துடன் ஸ்விஸர்லாண்டில் லூஸேன் நகரத்தில் வசித்துவருவதைப் பார்த்து முடித அளவு அவர்களுக்கு ஆருதல் சொல்லவிரும்பியும் அவ்விடம் போக நேர்ந்தது.

பாரீஸ் நகரத்தில் ஸம்ஸ்கிருத பாஷை
paris

அங்கிருந்து பாரீஸ் நகரம் 200 மைல் இருக்கலாம். இந்த நகர் வித்யாசாலையில் நீண்டநாளாக ஸம்ஸ்கிருத பாஷை வளர்ந்து, வேத சாஸ்திரங்கள் பல அச்சிடப்பட்டு 100 வருஷகாலமாக வித்வான்கள் பலருக்கு இருப்பிடமாகும். இப்பொழுது அவ்வித்யாசாலை ஸம்ஸ்கிருதப் பேராசிரியர் கனம் ஸில்வான் லெவி (Sylvain Levy) என்ற பெயர்பெற்ற வயதான கிருகஸ்தர் ஒருவர். நம் பூர்வீக ரிஷிகளை யொப்ப அவர் விளங்கி வருகிறார். அந்த வித்யாசாலை மாணவர்களுக்காக நான் உபந்நியாஸஞ் செய்ய நேர்ந்தது. அப்போது வேத ஸ்வரங்களைப் பற்றிய ஆராய்ச்சி நிகழ்ந்தது . அதை உடனே கிராபோனில் ரிகார்ட் செய்ய விரும்பினர். அப்படிச் செய்ய உடன்பட்டேன். உடனே அந்நாட்டு வழக்கப்படி தக்ஷிணை கொடுக்க விரும்பினார்கள். உணவுக்குச் சிறிது வகையிருந்தால் கல்வியை விற்கக் கூடாதென்று நம் ஆபஸ்தம்பர் கூறியபடி நான் நீண்ட காலமாக கல்வியை விற்று வாழ்வதை நிறுத்திவிட்டேன். கிராமபோன் ரிகார்டிற்காகக் கிடைத்த ரூபாயை அந்நகரத்தில் ஏதேனும் தருமத்திற்கு உபயோகித்துக்கொள்ளக் கொடுத்துவிட்டேன். ஐரோப்பா கண்டத்திலிருக்கிற வித்யாசாலைகளில் உபந்நியாசஞ் செய்வதற்கு முன்னமேயே, டிக்கட் வைக்கக் கூடாதென்றும், எனக்கு விருந்து முதலானவை செய்யக்கூடாதென்றும் கேட்டுக்கொள்வது என் வழக்கம். எல்லாப் பாடச்சலைப் புலவர்களும் அப்படியே நடத்திவந்தார்கள். இது நம் தேசத்தினிடம் மேற்கு திசையாருக்கு மிக்க கௌரவத்தை உண்டாக்கியது.

பிறகுசெல்வத்திலும் அரசாங்கச் சிறப்பிலும் முதன்மையான லண்டன் நகரம் போய்ச் சேர்ந்தேன். நான் போனவுடனவ்விடத்தில் வாரப் பத்திரிகை யொன்றில் காலை நாலு மணிக்கே நான் தண்ணீரில் ஸ்நானம் செய்வதையும், என் ஆகார நியமத்தையும் நாள்தோறும் என் வேலைக்காக வண்டியில்லாமல் நடந்துபோவதையும் குறித்து கட்டுரை யொன்றை ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்த பலர் என்னை பார்க்க வந்தார்கள்.

என் தலையில் ஒரு பட்டுத் தலைப் பாகையும் கழுத்தில் ஒரு சால்வையும் அணிந்திருப்பதைப் பார்த்து ரஸ்தாவிலும் ஆபீஸுகளிலு முள்ளவர் கௌரவத்துடன் நடத்தலாயினர். ரயில் வண்டியிற் செலும்பொழுது ஒரு வெண்கலக் கூஜாவும் என்னிடம் இருக்கும்.

லண்டனில் வித்வான்களுக்கு எல்லா இடங்களிலும் அதிக சிறப்பு உண்டு. பிரிட்டிஷ் மியூசியம் லைப்ரேரியில் நம் தேசத்து புஸ்தகசாலைகளில் இல்லாத அபூர்வ கிரந்தங்கள் பல சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. அப்படியே இந்தியா ஆபீஸ் புஸ்தகசாலையிலும், இந்தியர் ஏட்டுப் பிரதிகளைக் கவனியாதிருந்த காலத்தில் மேனாட்டார் இந்தியாவிற்குவந்து கிராமம் கிராமமாகச் சுற்றிச் சுமார் 50 வருஷத்துக்குள் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் லைபிரிகளை ஸ்தாபித்து ஸம்ஸ்கிருத மொழியைத் தம் முயற்சியாலே படித்து ருக்வேதம் முதல் காவ்யம் வரையில் அம்மொழி நூல்களைப் பிழையில்லாமல் பதிப்பித்தும் அவரவர் தேஷ பாஷையில் மொழிபெயர்த்தும் அவ்வந்நாட்டுப் பத்திரிகைகளில் வைதிக விஷய விசாரஞ் செய்து மிருக்கிறார்கள்.

இந்தியாவின் பூர்வீக நாகரீகத்திற்கும், சரித்திரத்திற்கும், உலகத்தில் உயர்ந்த கௌரவம் உண்டாகச் செய்திருப்பதை யாரும் அறிவார்கள். இந்தக் கௌரவம் வேறு எந்த ஜனஸமூகத்திற்கும் இல்லை. ஆனால் இப்பொழுது நம் இந்தியர்கள் சாஸ்திரம் காவ்யம் இவைகளை மிகுதியாகப் படிக்கிறார்களே ஒழிய வேதார்த்தங்களையும் ச்ரௌதார்த்தங்களையும் படிப்பதில்லை. அதனால் நாம் மேல்நாட்டு வித்வான்களுடன் வாதம் செய்ய முடியாது இதைக் குறித்து நம் தேச வித்வான்கள் மூலமாகவும் பத்திரிக்கைகள் மூலமாகவும் நீங்கள் அறிந்திருக்கலாம். தெ இந்தியர்கள் மேனாட்டு வித்வான்களுக்கு உச்சாரண சுத்தமில்லை என்று சொல்லுவது வழ்க்கம்; நீங்கள் வங்காளம் முதலான தேசங்களுக்குப் போய் அவர்களுடம் ஸம்ஸ்கிருதம் பேசினால் அவர்கள் உச்சாரணம் ஆங்கிலேயருச்சரிப்பதைச் சிறப்பாக்கிவிடும் லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் சில ஆஸ்ரீஅமங்களில் யோகம், தியானம் முதலானவர்களைப் பயின்றவர்கள் பிறருக்குப் பயிற்சி செய்விக்கிறார்கள். அவ்விடங்களுக்கு நானும் போயிருந்தேன். நான் மொழிபெயர்த்து வெளியிட்ட லலிதா சஹஸ்ரநாம முதலானவைகளைப் படித்திருந்ததினால் அவ்விஷயமான ஆராய்ச்சிகளை என்னுடன் பலர் பல இடங்களில் நடத்தினர்.

“காடலாகஸ் காடலாகோரம்
நான் லண்டன் போன நோக்கம் இந்தியா ஆபீஸ் உத்தியோகஸ்தரைப் பார்க்கவே. “காடலாகஸ் காடலாகோரம்” Catalogus catalogorum என்ற ஜாபிதா ஒரு ஜர்மன் வித்வானால் தொகுக்கப்பட்டிருந்தது. அது மூலமாகப் பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து வேலைகள் செய்யப்படுகின்றன. திருஷ்டாந்தமாக ஸாயணாச்சார்யர் வேத பாஷ்யகர்த்தா என்ற பெயரை எடுத்தால்அதன் கீழ் அவர் எந்தக் காலத்திலிருந்தார், எந்தஎந்தப் புஸ்தகங்களை எழுதினார் என்று ஆதாரத்துடன் அவர் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டிருக்கும். ஏதாவது ஒரு அரிய பெயரை எடுத்து “பகவா வாசஸ்பதி: பாஷியகாரர் என்பதைப் பார்த்தால் உடனே அவர் அதர்வவேதத்திற்குப் பாஷ்யம் செய்த வரலாறு முதலியன அதில் குறிக்கப்பட்டிருக்கும். ஏட்டுப் பிரதிகளை ஆராய்கிறவர்களுக்குஇந்தப் புஸ்தகம் ஒரு சிறந்த கருவியாகும்.

இந்த “காடலாகஸ் காடலாகோரம்: எழுதினவர் ஜர்மன் தேச மகாவித்வான். இவர் பெயர் ஆபி ச் ரட்டு என்று வழங்கும். இவர் 1903ம் வருஷம் வரை கிடைத்த ஏட்டுப் பிரதிகளுக்கு முறையான ஜாபிதா எழுதினவர். 1904ம் வருஷம் முதல் இதுவரை (30 வருஷ காலமாக) இந்தியாவில் பல இடங்களில் ஏட்டுப் பிரதிகள் பல கிராமங்களில் கிடைத்து உள்ளன. அவை அங்அங்கேயுள்ள புஸ்தகசாலைகளில் சேமித்துவைக்கப்பட்ட்டிருக்கின்றன. அவைகளில் ஆபி ச் ரட் காடலாகில் வராத பல நூல்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றைச் சோதித்து வெளியிட வேண்டுவது அவசியம். இதைச் செய்ய நம் இந்தியா கவர்மெண்டாரால் இயலவில்லை; ஏனென்றால் இந்த ஸம்ஸ்கிருத ஏட்டுப் பிரதிகள் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என்ற மூன்று தேசங்களிலுள்ள பொதுப் புஸ்தகசாலைகளிலும் ஒவ்வொருவருக்கே யுரிய புஸ்தகசாலைகளிலும் அடங்கியுள்ளன; அப்புஸ்தகசாலைக்குரியார் உதவி வேண்டும் அவர்கள் உதவியைப் பெற லண்டனிலிருக்கிற இந்தியா மந்திரியாலேயே முடியும். அம்மந்திரியை ஸந்தித்து “காடலாகஸ் காடலாகோரம்” பூர்த்தி செய்யவேண்டிய அவசியத்தைத் தெரிவித்துக்கொள்வதுதான் என் யாத்திரையின் முக்கிய கருத்து. இரண்டு தினங்கள் இந்தியா மந்திரியுடன் சாம்பாஷித்தேன். அவர் இந்திய அரசாங்கத்தாருக்கு எழுதி என்னையும் டில்லியில்போய் கல்வி இலாகா அதிபதியையும் ஸெகிரிடெரியையும் நேரிற்பார்க்கும்படி அந்த ஆபீஸர் சொன்னார். அதன் பலனே இப்பொழுது சென்னை ஸர்வ கலாசாலையார் அக்காரியத்தை மேற்கொண்டிருப்பதாக அறிகிறேன். (மகாமேரு யாத்திரை, பக்கம் 44)

contact swami_48@yahoo.com

மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1

draupadi gandhari kunti

Gandhari, Draupadi, Kunti

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 934 தேதி 26 மார்ச் 2014

(ஆங்கிலக் கட்டுரையில் பத்து மர்மங்களையும் ஒரே கட்டுரையாக கொடுத்துள்ளேன். தமிழில் மொழி பெயர்க்கையில் இரட்டிப்பு நீளம் வரும் என்பதால் தமிழ்க் கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளியாகிறது.)

நான் லண்டன் பி.பி.சி. தமிழோசையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய போது வாரம்தோறும் ஒரு பிரமுகரை பேட்டி காணும் நிகழ்ச்சி இருந்தது. இந்தியாவில் இருந்து வருவோரை பெரும்பாலும் நான் அல்லது சங்கர் அண்ணா என்பவர் பேட்டி கண்டு ஒலிபரப்புவோம். ஒரு இந்திய டாக்டர் வந்திருந்தார். பேட்டியின் ஒரு கேள்வியாக மஹாபாரத கால மருத்துவம் பற்றியும் நான் கேட்டேன். காந்தாரி பிரசவத்தை டெஸ்ட் ட்யூப் பேபி (சோதனைக் குழாய் குழந்தை) என்று கருதலாமா? என்று கேட்டேன். இளப்பமாகச் சிரித்து முடியவே முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார். பின்னர் ‘சோ’ அவர்கள் எழுதிய மஹாபாரதத் தொடரில் என்னைப் போலவே அவரும் கருத்து தெரிவித்ததைக் கண்டு மகிழ்ந்தேன்.

மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். பத்துலட்சம் சொற்களைக் கொண்ட மாபெரும் பொக்கிஷம். உலகில் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாம் உள்ளன. ஐன்ஸ்டைன் சொன்ன பெரிய சார்பியல் கொள்கைக்கு மேலான விஷயங்களும் உள்ளன. இனி வரப்போகும் கண்டு பிடிப்புகளை நான் எனது இரண்டு பகுதி ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே கொடுத்துள்ளேன். இந்த இதிஹாசத்தில் இருபதுக்கும் மேலான பிறப்பு மர்மங்கள் உள்ளன. இதையே பத்து வருடத்துக்கு முன் படித்தபோது அவ்வளவு விளங்கவில்லை. இப்போது நான் லண்டனில் வாரந்தோறும் வரும் அறிவியல் சஞ்சிகைகளைப் படிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக புதிர் விடுபட்டு வருகிறது. ஒரு பத்து அதிசயங்கள், புரியாப் புதிர்கள், விடுகதைகள், சங்கேத மொழிகளை மட்டும் இப்போது ஆராய்வோம்.

முதலில் மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில் வந்த இரண்டு விநோதச் செய்திகள்:

satyavati gandhari draupadi

பாட்டியே பேத்தியைப் பெற்றாள்!
ஒரு பெண் மலடி. அவள் ஒரு கரு முட்டையை கணவனின் விந்துவுடன் சேர்த்து அவளுடைய தாயாரின் கர்ப்பப் பையில் பதியம் வைத்தாள். அதாவது தனது தாயையே வாடகைத் தாயாகப் பயன்படுத்தினாள். அவள் குழந்தையையும் பெற்றுக் கொடுத்தாள். பாட்டிக்குப் பிறந்த இந்தக் குழந்தை அவளுடைய மகளா? பேத்தியா? யார் தாய்? என்ற பிரச்சனைகள் எழுந்துவிட்டன. ஆக யார் கருவையும் எந்த ஆண்மகனின் விந்துவுடனும் சேர்த்து எந்தப் பெண்ணுடைய கர்ப்பப்பையிலும் வைத்து குழந்தை பெறலாம். யார் உண்மையான தந்தை, யார் தாய் என்ற புதிய சட்டப் பிரச்சனைகள் மேலை நாடுகளில் உருவாகி வருகின்றன.

இன்னொரு தமிழ்ப் பெண் மலடி. செயற்கைக் கருத்தரிப்பு மூலம் பல ஆயிரம் பவுண்டுகள் செலவழித்து குழந்தை பெற்றாள். பிறந்ததோ கருப்புத் தோலுடைய குழந்தை! அந்த ஆஸ்பத்திரி மீது வழக்குப் போட்டுள்ளாள். ஏனெனில் அற விதிகளின்படி (எதிகல் ரூல்ஸ்) ஆஸ்பத்திரிகள் அந்த்தந்த இனத்துடன் கருவைச் சேர்த்து குழந்தைகளை உருவாக்கவேண்டும். இது மீறப்பட்டுவிட்டது.

ஆண்கள் குழந்தை பெற்றதாக மஹாபாரதத்தில் இரண்டு மூன்று கதைகளில் வருகிறது. இதுவும் நடக்குமா என்று பகுத்தறிவுப் பகலவன்கள் எள்ளி நகையாடிய காலம் உண்டு. ஆனால் இங்கு ஆண்களும் குழந்தை பெறத் துவங்கிவிட்டனர்!! ஒரு ஆணும் மற்றொரு ஆணும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பது பிரிட்டன் உள்பட பல நாடுகளில் சட்டம் ஆகிவிட்டது. ஆக அவர்கள் தங்கள் விந்துவைப் பயன்படுத்தி வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்று விடுகிறார்கள். அரசாங்கம் ஒரு கணவன் — மனைவி ஜோடிக்கு என்ன சலுகை கொடுக்கிறதோ அத்தனையும் ஆண்—ஆண் குடும்பத்துக்கும் உண்டு. இந்தக் குழந்தை பள்ளியில் சேரும்போது “அப்பாவும் நீயே, அம்மாவும் நீயே” என்ற திரைப்படப் பாடலைத்தான் பாட வேண்டியிருக்கும்!!

இந்த விநோதங்கள், வக்ரங்கள், குதர்க்கங்கள் ஒரு புறம் இருக்க மஹாபாரதத்தில் உள்ள பத்து வியத்தகு விஷயங்களுக்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பதைக் காண்போம். வேத கால ரிஷிகள் “நாங்கள் வெளிப்படையாக எதையும் சொல்வதை விரும்ப மாட்டோம். மறை பொருளாகப் பாடுவதிலேயே எங்களுக்கு இன்பம்” — என்று பாடுகிறார்கள். இதை நன்கு அறிந்த சங்க காலத் தமிழர்கள் வேதங்களுக்கு ‘மறை’ (ரகசியம்) என்றும் ‘எழுதாக் கற்பு’ என்றும் அற்புதமான பெயர்களைச் சூட்டினார்கள். வேதம் என்றால் அறிவு , ஞானம் என்று பொருள். ஆனால் தமிழ் பெரியோர்கள் மறை (பரம ரகசியம்) என்றே மொழி பெயர்த்த்னர். எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவார்கள். அடையாள, சங்கேதச் சொற்களைப் பயன்படுத்துவர். ஆகையால் வியாசர் எழுதிய மஹாபாரதத்திலும் இப்படி மறை பொருள் இருப்பதில் வியப்பில்லை.

மர்மம் 1 திரவுபதி பிறந்தது தீயில்!!!

மஹாபாரத திரவுபதி மஹா அழகி, ஆனால் கருப்பாயி! அதனால் அவர் பெயர் கிருஷ்ணா. கிருஷ்ண என்றால் கருப்பன். இதையே நெடிலாக உச்சரித்தால் – கிருஷ்ணா—கருப்பாயி. அவளுடைய மற்றொரு பெயர் பஞ்சாபி. அந்தக் காலத்தில் பஞ்சாபுக்குப் பெயர் பாஞ்சாலம் என்பதால் இந்தப் பெயர்—பாஞ்சாலி. அவளும் அவருடைய சகோதரனும் பிறந்தது யாக குண்டத்தில். அவளுடைய தந்தை துருபதன் இந்த யாகத்தை ஏற்பாடு செய்தான். அவர்கள் யாக குண்டத்தில் இருந்து வெளியே வந்தனர். இந்தப் பிறப்பில் அவளுடைய அம்மாவுக்குப் பங்கு பணி உண்டா என்று தெரியவில்லை. எப்படி ராமாயணத்தில் ராம- லெட்சுமண- பரத- சத்ருக்னனின் தாயார்கள், யாக குண்டத்தில் இருந்து வந்த பாயசத்தைச் சாப்பிட்டு கர்ப்பம் அடைந்தார்களோ அப்படி துருபதனின் மனைவி கர்ப்பம் அடைது பெற்றதைதான் இப்படிச் சொன்னார்களோ என்று கருத வேண்டி உள்ளது.

Kunti_Gandhari_Dhrtarashtra

மர்மம் 2 : மந்திரத்தில் பிறந்த அறுவர்!!

குந்தி என்ற பெண்ணீன் உண்மைப் பெயர் ப்ருதா. அவள், குந்திபோஜன் என்ற மன்னனின் வளர்ப்பு மகள். கோபத்தின் மொத்த உருவமாகத் திகழந்த துருவாசர்க்கு அவள் பணிவுடன் பணிவிடை செய்தாள். அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்த துருவாச மஹாமுனி, குந்திக்குச் சில மந்திரங்களை சொல்லிக் கொடுத்து பிள்ளை வேண்டும்போது பயன் படுத்து என்றார். அவளோ அவசரப்பட்டு மந்திரத்தைப் பிரயோகித்தாள். சூரிய தேவன் வந்தான். கர்ப்பமாகி கர்ணனைப் பெற்றாள். அவனை ஆற்றில் விட்டாள். பின்னர் இதே போல மேலும் மூவரைப் பெற்றாள். சக மனைவி மாத்ரிக்கும் இந்த மந்திரப் பிரயோகத்தைச் சொல்லிக் கொடுத்தாள். அவளும் நகுல சகாதேவனைப் பெற்றாள். ஆக ஆறு பேரும் மந்திரத்தில் உதித்தவர்கள். மந்திரத்தில் குழந்தைகள் உருவாகுமா? அல்லது கணவன் பாண்டுக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதென்பதால் செயற்கை முறையில் சோதனைக் குழாய் குழந்தை பெற்றாளா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

ஏசு கிறிஸ்துவும் ஆண் தொடர்பில்லாமல் மேரிக்குப் பிறந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
மர்மம் 3 ஜராசந்தன் – ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை!

ஜராசந்தன் பிறந்த விஷயம் ‘சயாமிய இரட்டையர்’ கதை போல உள்ளது. இதை நான் ஏற்கனவே இரண்டு முறை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். குழந்தைகள் ஒட்டிப் பிறந்தால் பல மணி நேரம் ஆபரேஷன் செய்தே பிரிக்கமுடியும். ஜராசந்தன் இப்படிப் பிறந்ததால் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டாள் மஹாராணி. — அதை வேடிக்கைப் பார்த்த நாட்டு மருத்துவச்சி ஜரா என்பவள் அதை எடுத்து ஆபரேஷன் செய்து இரண்டு பகுதிகளை ஒட்டிக் கொடுத்தாள். உடனே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் அந்தப் பிள்ளைக்கே ஜரா- சந்தன் என்று பெயர் வைத்தனர். சங்க இலக்கியத்தில் சயாமிய இரட்டையர் பற்றி வரும் தகவல்களை இரட்டைத் தலைக் கழுகு: சுமேரிய- இந்திய தொடர்பு’ என்ற ஆங்கிலக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்

சிபிச் சக்ரவர்த்தியிடம் வேலை பார்த்த டாக்டர் சீவகன், கண்ணப்ப நாயனார் சரித்திரம் முதலிய பல கதைகளில் கண் அப்பரேஷன் பற்றி வருவதையும், பொற்கைப் பாண்டியன் கதையில் கை ஆபரேஷன் பற்றி வருவதையும் முன்னரே விரிவாக எழுதிவிட்டேன். சுஸ்ருதர் என்ற மாபெரும் அறிஞர் வடமொழியில் எழுதிய நூலில் செயற்கை மூக்கு முதலிய ‘காஸ்மெட்டிக் சர்ஜரி’ பற்றியும் இருப்பதால் இதில் ஒன்றும் வியப்பில்லை. சுஸ்ருதர், நூற்றுக் கணக்கான ஆபரேஷன் (சர்ஜரி) கருவிகள் பெயரை சம்ஸ்கிருதத்தில் கொடுக்கிறார்!!

mahabharata

மர்மம் 4: காந்தாரிக்கு 100 டெஸ்ட் ட்யூப் பேபீஸ்
காந்தாரி பத்து மாதம் சுமந்த பின்னரும் டெலிவரி நேரம் வரவில்லை. இடுப்பு வலி வராத கோபத்தில் வயிற்றில் ஓங்கிக் குத்தினாள். நூறு துண்டுகள் வெளியே வந்தன. வியாசர் வந்து அவளைத் திட்டினார். இருந்த போதிலும் நூறு துண்டுகளையும் நெய் ஜாடியில் பதியம் வைக்கச்சொல்லி நூறு குழந்தைகளை உருவாக்கினார் என்பது கதை. இது மந்திரத்தில் மாங்காய் உண்டாக்கியது போல் இருக்கிறது . ஆனால் இப்போது மேல் நாட்டில் ‘ஸ்டெம் செல்’ என்னும் மூல ‘செல்’- ல்லை வைத்தே ஒரு உறுப்பு அல்லது ஒரு உயிரை உருவாக்க முடியும் என்று கண்டு பிடித்து விட்டனர். ஆக 100 துர்யோதணாதிகளும் சோதனைக் குழாய் குழந்தைகளாகவோ, ஸ்டெம் செல் டெக்னிக் மூலம் பிறந்தவர்களாகவோ இருக்கலாம். காலம் செல்லச் செல்ல மேலும் விளக்கம் கிடைக்கலாம்.
காந்தாரி, ஆப்கனிஸ்தானைச் சேர்ந்த பெண். இப்போது காண்டஹார் என்று அழைக்கப்படும் ஆப்கன் நகரமான காந்தாரத்தில் இருந்து வந்தவர்.

மர்மம் 5 : குழந்தை பெற விஷேச உணவு!!
பிருகு என்ற முனிவர் இரண்டு பெண்களுக்கு இரண்டு குவளைகளில் விஷேச உணவு கொடுத்து இதைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்றார். இரண்டும் அவரவர் குண நலன்களை ஒட்டி தயாரிக்கப்பட்ட தனி உணவு. இதை அறியாத இருவரும் குவளையை மாற்றீக் கொண்டனர். கோபத்தில் பிருகு சபித்துவிட்டார். இதனால் அந்தக் குலத்தில் உதித்த பிராமணர் பரசுராமருக்கு, க்ஷத்ரிய குணங்கள் இருந்தன. 21 அரசர்களைக் கொன்றுவிட்டார். இது போன்ற விஷேச உணவு மட்டும் நமக்குத் தெரிந்தால் கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம். மேல் நாட்டில் கர்ப்பம் அடையத் தவிக்கும் பெண்களுக்கு ‘’பாலிக் ஆசிட்’’ தருவார்கள். ஆனால் மலடியைக் கர்ப்பம் அடைய வைக்கும் எந்த உணவும் கண்டு பிடிக்கப் படவில்லை. ராமாயண, மஹாபாரதக் கதைகளைப் படிக்கையில் இப்படி ஒரு உணவு இருந்தது தெரிகிறது. மேல் நாட்டில் மலடிகளாக இருப்போர் பல்லாயிரக கணக்கில் செலவு செய்து எப்படியாவது கர்ப்பம் அடையத் துடிக்கிறார்கள். நமது ரிஷி முனிவர்கள் நமக்குச் சொலித் தராமல் போய்விட்டார்களே!!
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் ஐந்து சுவையான பிறப்புகள் ஆராயப்படும்.

தொடரும்………………………..
contact swami_48@yahoo.com

பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்தது!

mahabaharat

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 935 தேதி 26 மார்ச் 2014

முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும். முதல் பகுதியில் மஹாபாரத கதா பாத்திரங்களின் ஐந்து மர்மப் பிறப்புகள் பற்றி ஆராய்ந்தோம். இதோ மேலும் ஐந்து சுவையான மர்மப் பிறப்புகள்:–

மர்மம் 6: மாந்தாதா – தந்தையிடமிருந்து பிறந்தவர்
மாந்தாதாவின் தந்தை பெயர் யவனஷ்வா. அவர், மஹாராணிகளுக்காக விஷேஷமாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த ‘’தண்ணீரைக்’’ குடித்துவிட்டார். இதைத் தொடர்ந்து மாந்தாதா, அவரது தந்தையின் உடலில் இருந்து தோன்றினார். விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட ‘’தண்ணீர்’’ என்பது ஏதோ மருந்தாக இருக்கலாம். இப்போதுள்ள ‘’ஸ்டெம் செல்’’ உத்திகள் அல்லது ‘’க்ளோனிங்’’ உத்திகள் முதலியவைகள் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம்.

மர்மம் – 7: கபோடரோமா – மாமிசத்தில் இருந்து பிறந்தார்!
சிபிச் சக்ரவர்த்தி கதை எல்லோருக்கும் தெரியும். இந்த வட இந்தியச் சக்ரவர்த்தியை தங்கள் முன்னோர்கள் என்று சோழ வம்ச அரசர்கள் கூறினர். சிபி, ஒரு புறாவைக் காப்பதற்காக தனது சதையை அறுத்துக் கொடுத்தார். அந்த சதையிலிருந்து கபோடரோமா வந்தார். இதுவும் மாந்தாதா கதை போலவே உள்ளது. ‘’க்ளோனிங்’’ முறை மூலம் இவர் உருவானதையே இவர்கள் இப்படிச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

ரக்த பீஜன் கதை என்னும் புராணக் கதையில் ரக்த பீஜ அசுரனின் ரத்தம் சிந்தியவுடன் ஒவ்வொரு துளியில் இருந்தும் ஒரு அசுரன் தோன்றினான் என்று கூறுவர்.
ஸ்டெம் செல் உத்தியைப் பயன் படுத்தி சில குறிப்பிட்ட உறுப்புகளை வளர்க்கலாம். இது வரை ஆடு, எலி போன்ற பிராணிகள் ‘க்ளோனிங்’ மூலம் உருவாக்கப்பட்டன. அவை ஒன்றின் அச்சுப் போல் மற்றொன்று தோன்றும்.
mahabharata-and-jaya

மர்மம் 8 :பழ விதைகளில் இருந்து குழந்தைகள்!!
சகரன் என்ற மன்னனின் மனைவி வைதர்பி. அவளுக்கு ஒரு பூசணிக்காய் குழந்தை பிறந்தது. அதிலுள்ள விதைகளைப் பல கலசங்களில் பதியம் வைக்கவே 60,000 குழந்தைகள் உருவாயின. 60,000 என்பது ஒரு மரபுச் சொற்றொடர். அதிகமாக என்பதற்குப் பதிலாக 60,000 என்று சொல்வது வடமொழி வழக்கு. தசரதனுக்கு 60,000 மனைவி, கிருஷ்ணனுக்கு 60,000 கோபியர் பெண்கள் நண்பர்கள் என்றெல்லாம் வடமொழி இலக்கியம் சொல்லும். இதற்கு ‘’வழக்கத்துக்கும் மேலாக’’ என்றே பொருள். பழ விதைகளப் பானையில் நட்டு குழந்தைகளை உற்பத்தி செய்தார்கள் என்பது ஒரு ரகசிய சங்கேத மொழி. அந்தக் காலத்தில் இருந்தவர்களுக்கு இதன் அர்த்தம் விளங்கி இருக்கும். காலப் போக்கில் நமக்கு அது புரியாமல் போய்விடும் பின்னர் வந்த உபந்யாசகர்கள் அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் செய்து அதை அனர்த்தம் ஆக்கிவிட்டனர்.

இதுவும் காந்தாரி கதை போலவே இருக்கிறது. ஆக அந்தக் காலத்தில் ஏதோ ஒரு டெக்னிக் மூலம் ‘அபார்ஷன்’ ஆன சிசுவின்பகுதிகளைக் கொண்டும் பிள்ளைகளை உருவாக்க முடிந்தது என்றே ஊகிக்க வேண்டி இருக்கிறது.

gandhari

Gandhari and Kunti

மர்மம் 9: மாமிசப் புகையிலிருந்து குழந்தைகள் பிறப்பு!!
மஹாபாரதத்தில் வரும் சோமகன் கதை மிகவும் சுவையானதும் வியப்பானதும் ஆகும். சோமகன் என்ற மன்னனுக்கு 100 மனைவியர். ஆனால் ஒரு ராணிக்கும் குழந்தை பிறக்கவில்லை. ரொம்ப நாளைக்குப் பின்னர் ஒரு ராணிக்கு மட்டும் ‘’ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’’– என்று ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு ஜண்டு என்று பெயர் வைத்தனர். எல்லோரும் அதைக் கொஞசத் துவங்கினர். அதனிடம் உள்ள அன்பைக் காட்டுவதற்காக ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு ராஜாவிடம் ஓடிப்போய் எறும்பு கடித்தது, கொசு கடித்துவிட்டது, கரப்பு கடிக்கப் பார்த்தது என்று முறையிட்டனர். அன்புத் தொல்லை பொறுக்க மாட்டாத ராஜா, குருவிடம் போய் ஆலோசனை கேட்டார்.

குரு சொன்னார்: ‘’அந்தக் குழந்தையை தீயில் எறிந்து விடுங்கள். நூறு மஹாராணிகளையும் அந்த மாமிசப் புகையை முகரட்டும். அவர்கள் கர்ப்பம் அடைந்து ஆளுக்கு ஒரு குழந்தையைப் பெறுவர்.’’ ராஜாவும் குரு சொன்னபடியே செய்தார். மாமிசப் புகையை முகர்ந்த மஹாராணிகள் குழந்தைக்குத் தாயாயினர்! இந்தக் கதை நமக்கு சொல்லும் செய்தி என்ன என்று தெரியவில்லை. புகை மூலம் கர்ப்பம்? யார் கண்டது. விஞ்ஞானம் வளர வளர நமது புராண, இதிஹாசக் கதைகளுக்கு புதுப்புது விளக்கம் கிடைக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

M Bharat

மர்மம் 10: இறந்த கணவனுக்குப் பிறந்த குழந்தை!
வியுஷிஷ்டஷ்வா என்ற மன்னனுக்கு பத்ரா என்ற மனைவி இருந்தாள். கணவனிடம் பேரன்பு கொண்டவள். இருவரும் அன்றில் பறவைகள் போல இணை பிரியாதவர்கள். ஒரு நாள் மன்னன் திடீரென்று இறந்துவிட்டான். குழந்தையும் கணவனும் இன்றி வாழவதில் பொருள் ஏதும் இல்லை என்று கருதிய அவர் இறந்துவிடத் துணிந்தார். கணவன் சடலத்தில் இருந்து ஒரு அசரீரி கேட்டது. உனக்குக் குழந்தை பிறக்கும் என்று. உடனே கணவன் சடலத்தை கட்டிக் கொண்டு படுத்தார். அவருக்குப் பல குழந்தைகள் பிறந்தன. இந்தக் காலத்தில் இது நடக்கக் கூடியதே. ஏனெனில் லண்டனில் புற்று நோய்க்காக இளைஞர்கள் ‘’கீமோதெரபி’’ பெற வந்தால் நாங்கள் அவர்களை எச்சரிப்போம். ஆறு முறை ‘’கீமோதெரபி’’ முடிந்தவுடன் நீங்கள் குழந்தைகள் பெற முடியாமல் போக வாய்ப்புண்டு. ஆகையால் முதலில் விந்துவைப் போய் சேகரித்துவிட்டு வாருங்கள் என்று. அதற்கும் ஆஸ்பத்திரியே வசதி செய்து கொடுத்துவிடும். இதற்குப்பின் திடீரென்று கணவன் இறந்தாலும் அவரது விந்து மூலம் மனைவி குழந்தை பெற முடியும். இதே போல, ஒருவர் இறப்பதற்கு முன் மனைவியுடன் குடும்ப உறவு வைத்துக் கொண்டாலும் அவள் கர்ப்பமுற வாய்ப்பு இருக்கிறது.

மேலை நாடுகளில் இன்றும் கூட ஒருவர் கணவன் இல்லாமல் கர்ப்பம் அடைந்தால் கிசுகிசுக்கள் பரவத் துவங்கும். இந்தியா போன்ற நாடுகளில் கேட்கவே வேண்டாம்!! ஆகையால் அந்தக் காலத்தில் இப்படிச் சுவையான கதை சொன்னார்களா அல்லது நவீன கால கேன்ஸர் ஆஸ்பத்திரி போல் அந்தக் காலத்தில் இந்தியாவிலும் நாம் அறியாத டெக்னிக் இருந்ததா என்று சொல்ல முடியவில்லை.

மேற்கூறிய பத்து சம்பவங்கள் போல இன்னும் எவ்வளவோ சுவையான கதைகள் மாபாரதத்தில் இருக்கின்றன. நேரம் கிடைக்கையில் அவைகளை ஆராய்வோம். அதிலுள்ள ஒவ்வொரு கதையும் நம் சிந்தனையைத் தூண்டும். தொட்டனைத்தூறும் மணற் கேணி போல படிக்கப் படிக்க புதுப்புது அர்த்தம் தோன்றும். விஞ்ஞானம் வளர வளர, புராண, இதிஹாச கதா பாத்திரங்களையும் நாம் மிக மிக அதிக வெளிச்சத்தில் காண முடிகிறது!!

Contact swami_48@yahoo.com

வாழைப்பழம் வாழ்க !

banana(1)green

வாழையின் மருத்துவ குணங்கள் என்ன?
கட்டுரை எண் 932 தேதி மார்ச் 26, ஆண்டு 2014.

எப்போதோ ‘மூலிகை மணி’ என்ற பத்திரிகையில் இருந்து எடுத்துவைத்த பேப்பர் கட்டிங்-ஐ மீண்டும் படித்தேன். பழுப்பு நிறக் காகிதம் கிழிந்துவிடும் போல இருந்தது. தூக்கிப் போட மனசில்லை. வாசகர்களுடன் பகிர்ந்தால் எழுதிய ஆசிரியரும் மனம் குளிர்வார் அல்லவா?

வாழ வைக்கும் வாழை
எழுதியவர்: மருத்துவப் புலவர் டாக்டர் ச. ஆறுமுகநாதன்

இலையின் குணம்
வாழை மரம் பார்த்திருப்பாய் தம்பி – அது
வழங்கும் நலம் சொல்லுகிறேன் கேள் தம்பி!
வாழை இலை போட்டு உண்ணு தம்பி — அது
வாதபித்தம் போக்குமடா தம்பி

banana_leaf

பூவின் குணம்
வாழைப் பூ இரத்த மூலம் போக்கும் – மேக
வெட்டை கைகால் எரிச்சல்களை நீக்கும்
கோழையோடு வயிற்றுக் கடுப்போட்டும்
மற்றும் குணபேதம் நீக்கி தாது ஊக்கும்

vazaipu

பிஞ்சின் குணம்
வாழைப் பிஞ்சு இரத்தக் கடுப்போட்டும்
வந்த மூலம் நீரிழிவை மாற்றும்
பாழாகா வயிற்றுப் புண்ணை யாற்றும் மூத்திரம்
பக்குவமாய் மிகப்படாமல் போக்கும்

banana benefits

காயின் குணம்
வாழைக்காயால் பித்த வாந்தி போகும், பைத்தியம்
வயிற்றளைச்சல் இருமல் சூடு நீங்கும்
சூழும் இரத்தம் அதிகரிக்கும் வாயில் – சும்மா
சுரந்திடும் நீர் நிற்கும் பசி தூண்டும்

பழத்தின் குணம்
வாழைப்பழம் பித்தப் பிணி ஓட்டும் – உடல்
வரட்சியாலே வெளுப்பதினை மாற்றும்
தாழச் செய்யும் கொழுப்பு மூர்ச்சை போக்கும், மேனி
தளராத வடிவத்தினைச் சேர்க்கும்
OLYMPUS DIGITAL CAMERA

கிழங்கு நீர் குணம்
வாழைக் கிழங்கில் ஊறும் நீரு — தட்பம்
வாய்ந்ததிது குளிர்ச்சி தரும் தம்பி
கோழையுடன் எலும்புருக்கி பாண்டு – மற்றும்
கொடிய வெப்ப நோயகற்றும் தம்பி

தண்டின் குணம்
வாழைத் தண்டு குடலில் சேர்ந்த கல்லை – வெளி
வரவழைக்கும் வேலை செய்யும் தம்பி
வாழைத் தண்டு சாற்றினாலே தம்பி – சிறுநீர்
வாதையெல்லாம் போகுமடா தம்பி
stem

கூட்டுப் பொரியல்
வாழைப் பூ, பிஞ்சு காய்கள் தண்டு – தினம்
வருவல் கூட்டுச் செய்து உண்ணு தம்பி
வாழவைக்கும், நோய்கள் பல நீக்கும் – இந்த
வகை தெரியார் உணரச் சொல்லு தம்பி

14 வகைகள்
வாழை வகை பதினான்கு உண்டும் – அதில்
வரும் செவ்வை, இரசுத்தாளி, வெள்ளை மொந்தை
வாழ்வளிக்கும் வகைகள்; கரு வாழை மேன்மை
வாய்ந்ததென்று சொல்லிடுவார் தம்பி

red-banana

உணவுக்குப் பின் பழம்
உணவுக்குப் பின் வாழைப்பழம் உண்ணுட மலம்
உடந்திளகிப் போகச் செய்யும் கண்ணு
குணத்தை நல்கி பலமளிக்கும் என்று, முன்னோர்
கூறியதை யானும் சொன்னேன் கண்ணு

red-banana-500x500

நன்றி: ஆறுமுக நாதனுக்கு !!

என்னுடைய முந்தைய மருத்துவக் கட்டுரைகள்:–

தென்னையின் பெருமை, தக்காளி ரசத்தின் மகிமை, நோய் நீக்கும் தாமிரம்
இளநீர் மகிமை, இந்திய அதிசயம் ஆலமரம், சிந்துவெளியில் அரச மரம்
வாழை மரம், ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே, உடம்பைக் கடம்பால் அடி, மரத் தமிழர் வாழ்க!, யானைக் காப்பி, ஒருவேளை உண்பான் யோகி, மருத்துவப் பழமொழிகள், பொற்கை பாண்டியன் கை சர்ஜரி, ஆமையைப் போல 300 ஆண்டு வாழமுடியுமா?, இசை தரும் நோயற்ற வாழ்வு, நோய் நீக்க ராகங்கள், அருகம்புல் ரகசியங்கள், மருத்துவப் பழமொழிகள், கண்ணப்பர்-விஷ்ணு–சிபி கண் தானம்/ சர்ஜரி, தமிழர்களின் அபார மருத்துவ அறிவு —- முதலிய இருபதுக்கும் மேலான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் இந்த பிளாக்—கில் உள்ளன. படித்து மகிழ்க!

contact swami_48@yahoo.com

Did Agastya drink ocean?

agastya+in+London

Agastya in London Victoria and Alburt Museum. The statue was brought from from Indonesia.

By S Swaminathan
Post No 931 Dated 25th March 2014

(This article written by me was first published in Nilacharal. Com
On 22 November 2004. Still its is available on their website)

Did Agastya drink ocean?

Agastya was one of the greatest travellers of ancient India. He was mentioned in Rig Veda and the Ramayana. He slowly moved southward and established an ashram at the Western Ghats-Pothya malai. There are lot of myths about him. All this can be explained scientifically. He did divert the river Cauvery to the present Chola Mandala like Bagheeratha. But in thousands of years it became a myth and we read a crow tilted the’ Kamandalam’ of Agastya and thus came the River Cauvery.

Another story told about Agastya is that he travelled to south at the behest of Lord Siva. It is true that either Siva or a Saivaite saint requested him to go to the south to disperse the population. The story of Siva’s (Menakshi) Tirulkalyanam makes it clear by saying the overcrowding of the earth tilted the balance and Siva requested Agastya to go south. Our fore fathers were such a great planners that they did what we are doing today-building satellite cities! This story is in Tiruvilayadal puranam and other books.

Did Agastya drink the ocean? Agastya was the first person to cross the Indian Ocean for the first time to establish a great Hindu Empire in South East Asia. We now knew that there was a flourishing Hindu colony in Laos, Vietnam, Cambodia (Angor vat temple) Malaysia, Singapore and Indonesia (Borobudur Stupi) for 1300 years. Now they are all converted as Muslims. Like Columbus and Magellan, he crossed the ocean- that is he ‘drank’ the ocean! It is a symbolic story. Agastya’s statues are displayed throughout South East Asian countries even today.

One another myth about Agastya is that he made the Vindhya Hill not to grow again. This is another symbolic story to say that he crossed the Vindhyas for the first time through the ‘land route’. Before him, North and South Indians used coastal sea routes. Sangam Tamil literature also makes it very clear in several places that Agastya came to the south with 18 groups of people and he was the one who codified a grammar for Tamil.

agstya pranam

Jarasandhan-Siamese Twins?

Jarasandhan was born to two mothers and he came as two balls of flesh. The left and right sides (child) were thrown into a dustbin by the queens in disgust and fear. Later a Rakshasi (wild woman or a medicine woman of forest tribes) by name Jara picked it up and gave it to the king after joining both the parts. The fact is one woman gave birth to a Siamese twins (two children joined together physically) and threw it in to the bin. Somebody did some surgery successfully and gave the child back to the king in good condition.

I have counted and listed more than 20 abnormal children in the Mahabharata. Several of them are stories of cloning. Mandhata was born out of his ‘father’ says the epic. Another story says that Vaidharbi gave birth to a squash fruit and it was divided into several parts and kept in urns. They became sons. The stories of Shisupala, Sikandi and Sthunakarna talk about organ changes. Vashista and Agastya were born in ‘pots’(Kumba Muni or Kumba Yoni). If we remove all the myths about all these miracle children we see clear medical treatment or operations!

Miracle or Solar eclipse?

On the fourteenth day of the 18 day Mahabharata war, Arjuna vowed that he would kill Jayadratha before sunset or commit suicide. Unfortunately Arjuna couldn ‘t kill him. But the story is that Krishna created false sunset using his Sudarsana charka (a big disc). If we look closely at this event it is nothing but a solar eclipse. The sun light faded for some time because of the eclipse. When all prepared for the withdrawal of the army for the day, the sun came out and Arjuna killed the unguarded Jayadratha. In those days they didn’t fight after sunset.

What I have given here is only very little. If we take the fields of Medicine, Mathematics, Psychology, The power of mind/brain, Extra Sensory perception etc. we may write volume after volume. But I wish someone analyses all such events and publish their findings well before the western scientists reveal them. No one will appreciate if we keep on comparing every new invention with the writings in our old literature.

Read my other articles where Agastya legend is analysed:

Is Brahmastra a Nuclear Weapon?
Hindu Goads Naval Attacks against Pirates posted on 26-4-2012
Population Explosion: Oldest Reference in Hindu Scriptures Posted 2-2-2013
Contact swami_48@yahoo.com
********