How ‘Non Brahmins’ became ‘Brahmins’

415px-Raja_Ravi_Varma_-_Mahabharata_-_Birth_of_Shakuntala

Viswamitra and Menaka

Compiled by by London Swaminathan;
Post No.848 dated 18th February 2014

I have already written how Ramanuja converted lot of people from non Brahmins to Brahmins. I have also written another post ‘Who is a Brahmin?’

Now see what Sarvapalli Radhakrishnan, a great scholar, philosopher and former President of India, says about non Brahmins becoming Brahmins:

“Caste divisions are based on individual temperament, which is not immutable. In the beginning there was only one caste. We were all Brahmins or Sudras. A Smriti text says that one is born a Sudra, and through purification he becomes a Brahmin. People were divided into different castes according to social needs and individual action.

The Brahmins are the priests. They should have neither property nor executive power. They are the seers who constitute the conscience of society.

392px-Menaka_Vishwamitra_by_RRV
Viswamitra and Menaka

The Kshatriyas are the administrators, whose principle is reverence for life.
The Vaisyas are traders and craftsmen, men of technical ability who aim at efficiency.
The routine workers, the proletariat are the Sudras. They take no interest in their work as such, where they carry instructions and contribute only a fraction. They lead a life of innocent impulse and adopt traditional ways.

“Hinduism has a bewildering variety of racial elements at all levels of development. The four orders supersede the original racial elements. It is a classification based on social facts and psychology. The recognition of the spirit in man is the essential feature of Hindu religion, and in this respect all men are equal.
india_brahimns_map_20070604
Brahmin Poulation of India Map

In the Mahabharata , we are told that the Yavanas (Greeks), the Kiratas, the Dardaras (Dards), the Chinas (Chinese), the Sakas (Scythians), the Pahlavas (Parthians), the Savaras (Pre Dravidian Tribes) and several other non Hindu peoples, belonged to the one or the other of the four classes. These foreign tribes were absorbed into the Hindu society.

“The great empire builders, the Nandas, the Mauryas and the Guptas were according to the orthodox view, low-born. The Gupta emperors married the Licchavis, who were regarded as Mlecchas.

The basis of the Varna dharma is that every human being must try to fulfil the law of his development.

Non Brahmins who became Brahmins:

“While it was the intention of the scheme to develop the requisite spirit and tradition in the members of the classes by a proper employment of the forces of heredity and education, it was not viewed in a rigid way. In special cases individuals and groups changed their social class.

Visvamitra, Ajamidha and Puramidha were admitted to the status of the Brahmin class, and even composed Vedic hymns.

Yaska in his Nirukta, tells us of two brothers Santanu and Devapi , one became a Kshatriya king and the other a Brahmin priest.

Kavasa, the son of a slave girl Ilusa, was ordained as a Brahmin priest at a sacrifice.
Janaka, a Kshatriyas by birth, attained the rank of a Brahmin by virtue of his ripe wisdom and saintly character.

The Bhagavatham tells us the elevation of the Kshatriya clan named Dhastru to Brahminhood.
Jatyutkarsa is provided for. Even though a Sudra, if you do good, you become a Brahmin. We are Brahmins not on account of birth or the performance of rites, not by study or family, but on account of our behaviour. Even if we are born Sudras, by good conduct we can raise ourselves to the highest status.

“The human being is always becoming. His essence is movement, not arrested movement. Megasthenes gives us a division different from the caste groupings. He puts the class of statesmen and officials at the top and hunters and jungle men as the sixth division.

Patanjali refers to Brahmin kings, and Manu to sudra rulers. There were Brahmin soldiers in the time of Alexander, as there are today.

“Manu’s unfortunate references to Sudras were perhaps motivated by his opposition to Buddhism. Manu limits the right to study the dharma sastras to Brahmins, while Sankara holds the members of all castes can read them.

A famous verse of Mahabharata makes out that we are all born Brahmins, and happen to belong to different classes on account of our conduct and occupation.

The Bhagavad Gita points out that there are only four Varnas based on natural aptitude and vocation, and two classes of persons, divine (Deva) and demoniac (Asura)”.

From the book Radhakrishnan Reader- An Anthology, published by Bharatiya Vidya Bhavan.

Brahmin_boy_ritual

Picture of Present day Brahmin

King Baliraja’s wife was Sudeshna. Bali persuaded her to produce a son through Dirghatama. She had five sons named Anga, Vanga, Kalinga, Pudrya and Suhya. Each of them started a separate dynasty and ruled over different parts. This anecdote describing how Kshatriyas kings were sometimes born of Brahmana fathers, was related by Bhishma to Satyavati to support his suggestion that a Brahman be invited to produce sons in the wives of Vichitravirya who had died childless (MB 1/104)

Yajur Veda prays for all the Four Castes:

“Give lustre to our Brahmanas
Give lustre to our Kingly men
Give lustre to our Vaisyas and Sudra” (Y.V. VS 18-48)

Buddha and Asoka on Brahmins:

Buddha has one full chapter on Brahmins in The Dhammapada. That was the last chapter, probably to emphasise their importance. He admired the ascetic virtues of the Brahmanas. Buddha talked about building a new type Brahminhood irrespective of one’s heredity.

Emperor Asoka showed respect to Brahmins by mentioning them first and then other sects like Sramans etc. in his edicts. (E.g Girnar Edict No-13).

Buddha had two Brahmin Teachers :
Gautama’s search led him to become the disciple of the Brahmin ascetics Aalaara Kaalaama and Uddlaka Raamaputta who instructed him in their own doctrine and discipline.

Brahmins
Picture of Brahmins at present.

Brhad- aranyaka Upanishad

Knowing him, the atman, the Brahmins relinquish the desire for posterity, the desire for possessions, the desire for worldly prosperity and go forth as mendicants (bhikshacaryam caranti)iii-5

Brahmins in Ancient Tamil Nadu

There were two types of Brahmins in ancient Tamil Nadu, those who followed the Srutis (Vedas) and Smritis (Law Books) and others who did not follow the Vedic strictures. Prof. V R RAMACHANDRA DIKSHITAR in his commentary on The Cilappatikaram (Purancheri iruththa katai lines 37,38) adds the following details:

“A community of Brahmanas , but coming low in the social hierarchy. They are said to be ‘ambanavar’ who took to the profession of acting and dancing. As they did not pursue their swadharma society regarded them as inferior. The position which the Brahmanas held in the society in the age of the Cankam classics is clear. There was the Vedic Brahmana engaged in reading and teaching the Vedas and also in performing Vedic sacrifices. He evoked respect from every one. There was the laukika Brahmana who strayed from the prescribed path and took to professions other than those enjoined by the law of the land.

“In the Akananuru (24) we have the expression ‘velaparppan’ meaning Brahmana engaged in making bangles. Among the laukikas come the ‘ambanava’ also. The term ‘ur parppan’ in South Indian inscriptions is another reference to the laukika members of the Brahmana community. This only shows that in addition to the Vedic Brahmanas there also existed Brahmanas who took to worldly professions, and to whom society did not give the same status as that enjoyed by the Vedic Brahmanas”.

My comments: Nakkirar was a well known Tamil poet of Sangam Age. Though he was a Brahmin ,he did not follow the Brahminical customs. He was making bangles cut out of white Chanks (conches). When he questioned another poor Brahmin by name Dharumi in the Royal Court of Pandyas, Shiva himself came in support of the Brahmin poet. But Nakkirar challenged even Lord Shiva. When Shiva laughed at his challenge, he asked him “At least I belong to the sect of Bangle makers. You don’t even have a clan, or caste or creed.”
(Sangu Aruupathu Engal Kulam, Sankaranaarkku Ethu Kulam? In Tamil)
This shows that there were a s group of Brahmins doing other types of jobs. This historical incident was referred to in Thevaram by Appar and in Tiru Vilayatal Purana by Paranjothi.

Quotes from Katha Sarit Sagara (Largest Story Collection in the World)
On Brahmanas:–
Brahmanas are always soft hearted (Story of Vararuci)
Brahmanas can accomplish all things in the world by means of ceremonies in accordance with the scriptures (Story of Devasmita)
Brahmanas who live by chanting Samaveda are the home of timidity, boorishness and ill- temper (Story of Vidusaka)

Contact swami_48@yahoo.com

My previous posts:
1. Ramanuja and Non Brahmins; posted on 15 May 2013
2. Who is a Brahmin?; Posted on 4 June 2013
3. No Brahmins! No Tamil ! (posted on 14 January 2012)
4. Foreign Travel banned for Brahmins (posted 26 November. 2013
5. Who are Dravidians? Posted on July 17,2013
6. Brahmins deserve an entry into Guinness Book of Records (26 January 2012 in this blog and earlier as a series in a Tamilbrahmin site)

Contact swami_48@yahoo.com

Pictures are taken from various sites.Thanks.

மனைவிகளின் பெருமையும், லேக தோஷமும்!

gossip at village well

சம்ஸ்கிருத செல்வம் அத்தியாயம் 29

ச.நாகராஜன்

இரண்டு பெண்மணிகள் ஓரிடத்தில் கூடினர். தங்கள் தங்கள் கணவன்மார் ‘பெருமையைப்’ பேசி மகிழ்ந்தனர்.

ஒருத்தி சொன்னாள்: “ எனது அன்பிற்குரிய கணவர் எப்படி எழுதுவார் தெரியுமா? பெரிய புத்திசாலி! அவர் எழுதுவதை அடுத்தவர் யாராலும் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதுவார்”.

இதற்கு அடுத்தவள் பதில் சொன்னாள்: “ஹூம்! இவ்வளவு தானா! என் புருஷர் இன்னும் அதிக புத்திசாலி. அவர் எழுதுவதை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது.

இந்தக் காட்சியைக் கண்ட கவிஞர் அப்படியே நையாண்டிப் பாடலாக எழுதி விட்டார். பாடலைப் பார்ப்போம்:-

சதுர: சகி மே பர்த்த யத் லிகதி

தத் பரோ ந வாசயதி I

தஸ்மாத் அபி அதிக: மே ஸ்வயம் அபி

லிகிதம் ஸ்வயம் ந வாசயதி II

gossiping

சகி – ஹே! சகியே
மே பர்த்த சதுர: – எனது கணவர் மிகவும் திறமைசாலி
யத் லிகதி தத் பரோ ந வாசயதி – அவர் எதை எழுதுகிறாரோ அதை வேறு யாராலும் படிக்க முடியாது

மே தஸ்மாத் அபி அதிக: – அதைக்காட்டிலும் என் கணவர் இன்னும் அதிக புத்திசாலி.

ஸ்வயம் அபி லிகிதம் ஸ்வயம் ந வாசயதி – தான் எழுதியதை அவரால் தன்னாலேயே படிக்க முடியாது!

சரி, எழுதுவதை எப்படி எழுத வேண்டும்?

இதைச் சொல்வதற்கு சாணக்கியரை விடத் தகுதி வாய்ந்தவர் யார்? அவர் ‘லேக தோஷ:’ என்று எழுதுவதில் உள்ள ஐந்து தோஷங்களைக் கூறுகிறார்.

1) அகாந்தி – எளிதில் புரியாதபடி எழுதுதல்
2) வ்யாகத – முரண்பட்டு எழுதுதல் (முன்னுக்குப் பின் முரணாக எழுதல்)
3) புனருக்த – சொன்னதைத் திருப்பிச் சொல்வது போல எழுதியதையே திருப்பி எழுதுதல்
4) அப சப்த – இலக்கணமின்றி வார்த்தைகளை கண்டபடி எழுதுதல்
5) சம்ப்லவ – ஒழுங்கான வரிசையின்றி மாற்றி மாற்றித் தொடர்பில்லாது எழுதுதல்

two women tying

அகாந்திர்வ்யாகாத: புனருக்தமபசப்த:
சம்ப்லவ இதி லேக தோஷா: I
அர்த்த சாஸ்திரம் II – 10 – 57
இந்த ஐந்து எழுத்து தோஷங்களையும் நீக்கி எழுதினால் வெற்றி தான்!

**********

Pictures are used from different sources.Thanks.
swami_48@yahoo.com

‘மனம் ஒரு பெண்’, ‘மனம் ஒரு புலி’

manm oru kurangu

Compiled by London Swaminathan.
Post No. 845 Date: February 2014
(This article is available in English in two parts: Hindu Encyclopaedia of the Mind)

‘மனப் பெண்’ என்ற தலைப்பில் பாரதியார் ஒரு அருமையான கவிதை யாத்துள்ளார். மனம் எனும் குரங்கு பற்றி “பாயிண்ட் பாயிண்டாக” அடுக்குகிறார். இதை படிக்கும்போது நமக்கு திருப்தி ஏற்படுகிறது. அட! நம்மைப் போன்ற சாதாப் பேர்வழிகளுக்கு………………. சோதாப் பேர்வழிகளுக்கு …………………மட்டுமே இப்படி எண்ணங்கள் வருகிறதோ என்று பயப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பாரதி பாட்டு தைரியம் கொடுக்கும். நம் எல்லோருக்கும் மனம் என்பது ஒரு புரியாப் புதிர். அதைக் கட்டுபடுத்துவது எளிதல்ல.

சீனாவிலும் ஜப்பானிலும் மனதைக் குரங்காக வருணிக்கும் வசன மொழிகள் வழக்கத்தில் உள்ளன. பாரதியோ மனதைப் பெண்ணாக உருவகித்து அதன் சலன புத்தியைப் பாடுகிறார், சாடுகிறார். பின்னர் மது உண்ணும் வண்டு என்றும் பேசுகிறார், ஏசுகிறார்.

பாட்டு இப்படித் துவங்குகிறது:

“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்
அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்
.நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீள மீளவும் தொடுவாய்
புதியது காணில் புலன் அழிந்திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல
பழமையாம் பொருளினில் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையேயன்றிப் பார்மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய், சீச்சீ!
.பிணத்தினை விரும்பும் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழி பொருள் காணில் விரைந்து அதில் இசைவாய்
அங்ஙனே

swinging2
என்னிடத்து என்றும் மாறுதலில்லா
அன்பு கொண்டிருப்பாய், ஆவி காத்திடுவாய்
கண்ணிணோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்’
இன்பம் எல்லாம் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி எண்ணிலாப் பிழை செய்வாய்
இன்பம் காத்துத் துன்பமே அழிப்பாய்
இன்பம் என்று எண்ணித் துன்பத்து வீழ்வாய்
தன்னை அறியாய் சகத்தெலாந் தொளைப்பாய்,
தன் பின்னிற்கும் தனிப் பரம்பொருளைக்
காணவே வருந்துவாய், காண் எனில் காணாய்,

சகத்தின் விதிகளைத் தனித் தனி அறிவாய்,
பொது நிலை அறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்;
இத்தனை நாட்போல இனியும் நின்னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத்திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியும் தேடுவேன்;
உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட
சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்.

மனம் பற்றி பகவத் கீதை

“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)

“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

மனம் ஊசலாடிகொண்டுமோய்வற்றும் இருக்கும் அதைக் காப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம். அம்பு செய்பவர்கள் அதை எப்படிக் கூராகச் செய்வார்களோ அதே போல அறிவாளிகளும் அதை நேராகவும் கூராகவும் வைப்பர் (33)

தண்ணீரில் இருந்து வெளியே தூக்கிப்போட்ட மீன் எப்படி மரணத்தில் இருந்து தப்பிக்கப் போராடுமோ அதே போல மனமு மரணத்தில் இருந்து விடுதலைப் பெற் போராடும். (34)

மனம் அலை பாயக்கூடியது; நிலையற்றது. அது இஷ்டப் பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.(35)

நம்முடைய உடலானது, உடையக்கூடிய மண்பானை போன்றது.அதை கோட்டை போலப் பலப்படுத்தி மாரனை (தீய சக்திகளை) எதிர்த்துப் போராடவேண்டும். வெற்றி பெற்றவுடன், விழிப்புடன் இருந்து , கிடைத்த வெற்றியைப் பாதுகாக்க வேண்டும்(40)

ஒரு எதிரி மற்றொரு எதிரியைத் தாக்கி காயப்படுத்தலாம்.ஒரு வெறி பிடித்தவ மற்றொரு வெறியனைத் தாக்கி காயப்படுத்தலாம்.ஆனால் ஒருவனுடைய மனமானது தவறான வழியில் செல்லுமானால் அது இதை விடப் பெரிய தீங்கு செய்யமுடியும்.(42)

மனம் ஒரு புலி

ஆதிசங்கரர் மனதையும் எண்ணத்தையும் புலிக்கு ஒப்பிடுகிறார். ஐம்புலன்கள் செயல்படும் அடர்ந்த காட்டில் மனது என்னும் கொடும் புலி வசிப்பதால், முக்தியை நாடுவோர் அந்தக் கட்டுக்குள் அகப்படாமல் இருக்க வேண்டும் (விவேக சூடாமணி 176)
ஆதிசங்கரரின் வினா – விடை துதியிலும் (பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா) மனதைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன.

மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமான செயல் எது என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் “ எப்போதும் மனதைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே” என்பார்.
விஷம் எங்கே இருக்கிறது? என்பதற்கு தீயோர் மனம் என்றும் மதுவைப் போல மனதை மயக்குவது? எது என்பதற்கு விரும்பத்தகாதோரின் ஸ்நேஹம் (தொடர்பு) என்றும் பதில் தருகிறார்.

மனது பற்றி தாயுமானவர் பாடல்

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம் புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்
கண் செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்
வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன் நிகரில் சித்தி பெறாலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது சத்தாகி என்
சித்தமிசை குடி கொண்ட
தேசோ மயானந்தமே. — தாயுமானவர்.

வள்ளுவர் வாய்மொழி

வள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில் வரும் 2 குறள்களில் மன உற்சாகத்தினால் அடையக்கூடிய சாதனைகளை விளக்குகிறார். ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்றும் ‘வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்றும் தேனாகப் பொழிகிறார்.

‘சிற்றினம் சேராமை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களிலும் மன நலம் பற்றிப் பேசுகிறார். பெரும்பாலான குறள்களில் மனம் என்ற தூய சம்ஸ்கிருதச் சொல்லை அப்படியே பயன்படுத்துகிறார். ஆனால் மன நலம் என்பது ‘சேருவார் சேர்க்கையைப் பொறுத்ததே’ என்பது அவரது துணிபு. சத்சங்கத் தொடர்பு — நல்லோர் சேர்க்கை – இருந்தால் மனம் தூய்மையாக இருக்கும் என்கிறார். அதிகாரத்தின் தலைப்புக்கு ஏற்ப பொருத்தமாக அமைந்துள்ளன இந்தப் பாக்கள்.
வீட்டுக்கு வீடு வள்ளுவர் குறள் இருப்பதால் 12 குறட்பாக்களின் பொழிப்புரையைத் தரவில்லை.

Contact swami_48@yahoo.com

ரகசியத்தில் செய்த பாவம்: ஆதிசங்கரர்

secrecy

ரகசியத்தில் செய்த பாவம்: ஆதிசங்கரர்
By London swaminathan
Post No.843 Date 16th February 2014.

ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர) ரத்ன மாலிகா. இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் வரும் யக்ஷப் ப்ரஸ்னம் போல வினா–விடை பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். இதில் ஒரு கேள்வி—
ஒருவனை சாகும் வரை வாட்டிவதைப்பது எது? அம்பு போலப் பாய்ந்து நெஞ்சில் உறுத்துவது எது?
அதற்கு அவரே சொல்லும் பதில்: ஒருவன் ரகசியத்தில் செய்த பாவம்.

இது அருமையான கேள்வி, அருமையான பதில்! நல்ல உளவியல் (சைகாலஜி) தெரிந்த ஒருவர் எழுப்பி விடை கூறிய கேள்வி. இதையே தமிழ்ப் புலவன் திருவள்ளுவனும் கூறுவது இன்னும் வியப்புக்குரியது.

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும் (293)

பொருள்:– தன் மனதுக்கு பொய் என்று தெரிந்த பின்னரும், மற்றவருக்குத்தான் தெரியாதே என்று பொய் சொல்லக் கூடாது. அப்படிச் செய்தால் மனச் சாட்சியே ஒருவரை சுட்டுப் பொசுக்கும்.

அதாவது அது அவன் மனதை எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும். இதைத்தான் மனச் சாட்சி உறுத்துகிறது என்பர்.

tent large

சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்திலும் “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்” என்று கற்பிக்கின்றனர்.

மனத்திலும் (உள்ளம்=உண்மை), வாயிலும் (வாய்=வாய்மை) ஒரே எண்ணம் இருக்குமானால் தானம் தவம் செய்வாரைவிட உயர்ந்தவர் ஆவர் என்று வள்ளுவன் கூறுவான் (295)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை (295)

அரிச்சந்திரன், ராமன், சத்ய காமன் ஜாபாலா, தர்மன் ஆகியோரின் கதைகள் இதற்கு உதாரணம்.

திருவள்ளுவர் அதிகாரம்தோறும் சம்ஸ்கிருத சொற்களை கூசாமல் பயன்படுத்துவார். இங்கே தானம், தவம் என்ற சொற்களை பயன்படுத்துதுகிறார். குறள் 19 லும் இதைக் காணலாம். ராமாயணத்திலும், மஹா பாரதத்திலும் நூற்றுக்கணக்கான இடங்களில் வரும் தானம், தவம் என்ற சொற்களை அவர் பயன்படுத்துவது வள்ளுவரும், சங்கரரும் ஒரே சிந்தனை உடைய இரண்டு ரிஷிகள் என்பதைக் காட்டும்.

குறுந்தொகையில் மனச் சாட்சி

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் (184) ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடிய பாடல் ஒன்று வருகிறது. அவன் ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்றும் ‘பொய்யா நாவில் கபிலன்” என்றும் பலராலும் போற்றப்பட்ட கபிலரிடம் தமிழ் கற்றவன். அவனும் இதே கருத்தைக் கூறுகிறான்:
“ கடற்கரைச் சோலையில் வாழும் பரதவர் மகள் பேரழகி. மயில் போல் கூந்தல் உடையாள். மடப்பம் பொருந்திய மகள். அவளுடைய கண் வலையில் விழுந்தவர்கள் தப்ப முடியாது. நானும் அவள் கண் வலையில் சிக்கினேன் (மயங்கிவிட்டேன்). சான்றோரிடம் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் வழக்கம் இருக்காது. ஆகையால் நான் உள்ளதைச் சொல்லிவிட்டேன்:
‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை’ —என்பான்.

behind-curtain

நற்றிணையில் வெள்ளைக்குடி நாகனாரும் (196)

‘அறிகரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே’ என்று நிலவைப் பார்த்து தலைவி பாடுகிறாள். “என் தலைவன் பற்றி அறிந்தும் சொல்லாமல் இருந்தால் நீ தேய்ந்து போவாய்” என்று சந்திரனைச் சபிக்கிறாள்.
கலித்தொகை, அறநெறிச்சாரம் ஆகிய நூல்களிலும் இதே போன்ற வரிகளைக் காணலாம்.
ராமலிங்க சுவாமிகளும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பது இதைத்தான்.

ஆதி சங்கரரின் வினா—விடை துதியில் இன்னும் இது போல நிறைய ரத்தினங்கள் உள்ளன. தனித்தனியே காண்போம்.

contact swami_48@yahoo.com
Photos are taken from different sites.Thanks.

ல, ல, ல, ல, ல = ஐந்து ‘ல’ கார மனைவி!

women are illusions

Post No.842 Dated 15th February 2014

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 27
Compiled by S Nagarajan

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 28

ஐந்து ‘ல’ கார மனைவியும் பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பும்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். Marriages are made in heaven என்ற ஆங்கிலப் பழமொழியும் உண்டு. மனைவி அமையும்போது குணவதியாகவும் அழகியாகவும் அமைந்து விட்டால் அந்த அதிர்ஷ்டத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

ஐந்து ‘ல’ கார பார்யாவைப் (மனைவி) பற்றி கவிஞர் அழகுறத் தொகுத்துக் கூறி அவளை அடைபவன் புண்யவசத்தினாலேயே அடைகிறான் என்கிறார்.

01) அநுகூலம் – புருஷனுக்கு அநுகூலமாக இருப்பவள் (காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கை கொடுத்து என்றார் புதுமைப் பெண்ணைப் பற்றி பாரதியார்)

02) விமலாங்கி – கறை படாதவள் அல்லது குற்றம் இல்லாதவள்

03) குலஜா – நல்ல குடியில் பிறந்தவள்

04) குசலா – திறமை வாய்ந்தவள்

05) சுசீலா – நல்ல ஒழுக்கம் உடையவள்

இந்த ஐந்து லகாரம் அமையப் பெற்றவள் மனைவியாக வாய்த்தால் நிச்சயமாக அது இறைவன் கொடுத்த நல்ல வரம் தானே!

facebook karthgai

பாடலைப் பார்ப்போம்:-

அநுகூலாம் விமலாங்கீம் குலஜாம் குஷலாம் சுசீலசம்பன்னாம் I
பஞ்சலகாராம் பார்யா: புருஷ புண்யோதயால்லபதே II

அநுகூலாம் – அநுகூலமுடையவளாயும்
விமலாங்கீம் – கறைபடாதவளாயும்
குலஜாம் – நல்ல குலத்தில் பிறந்தவளாயும்
குஷலாம் – திறமை வாய்ந்தவளாயும்
சுசீலசம்பன்னாம் – சீலம் உடையவளாயும்
பஞ்சலகாராம் – ஆக இந்த ஐந்து ‘ல’காரம் உடைய
பார்யா: -மனைவி
புருஷ புண்யோதயால்லபதே – புருஷனின் புண்யத்தால் கிடைக்கப் பெறுகிறாள்.

பாரத நாட்டில் பெண்ணுக்குரிய மதிப்பே தனி. அவள் விலை மதிக்க முடியாத ரத்தினம் என்பதால் அவளுக்கு எப்போதுமே பாதுகாப்பு வேண்டும் என்பதை நமது அற நூல்கள் வலியுறுத்துகின்றன.

பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே I
புத்ரஸ்து ஸ்தாவிரே பாவே ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யமார்ஹதி II

பிதா ரக்ஷதி கௌமாரே – இளமையில் தந்தை பாதுகாக்கிறார்
பர்தா ரக்ஷதி யௌவனே –யௌவனத்தில் (வாலிப பருவத்தில்) கணவன் பாதுகாக்கிறான்

புத்ரஸ்து ஸ்தாவிரே பாவே –வயதான காலத்தில் புத்திரர்கள் பாதுகாக்கின்றனர் (பாதுகாக்க வேண்டும்)
ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யமார்ஹதி – பெண் ஒரு போதும் அவள் வாழ்க்கையில் பாதுகாப்பற்று (சுதந்திரமாக) இருக்கக் கூடாது.

சுதந்திரமாக இருக்கக் கூடாது என்ற வார்த்தைக்கு அவள் விலை மதிப்பில்லா மாணிக்கம் என்பதால் எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே உண்மைப் பொருள்.

பெண்ணைப் போற்றி வணங்கும் நாடு நமது நாடு என்பதை உணர்ந்து மகிழ்வோம்!

Contact : swami _ 48@ yahoo. com

*********************

Pictures are used from different websites:thanks.

ஐந்து ‘ஜ’ காரமும் ஐந்து ‘வ’ காரமும்!!

bharat matha

Picture of Janma Bhumi (Motherland)

Post No. 841 Dated15-02-14

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 27
Compiled by S Nagarajan

சில விஷயங்களை எளிதில் நினைவு கொள்ள கவிஞர்கள் கையாளும் உத்தியே தனி! எண்ணிக்கையால் சிலவற்றைச் சேர்த்துத் தருவார்கள். சந்தத்தால் அதாவது ஒலியால் சிலவற்றைச் சேர்த்துத் தருவார்கள். சில சமயம் ஒரு எழுத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைச் சேர்த்துத் தருவார்கள்.

படிக்கவும் இனிமை; நினைவில் வைத்துக் கொள்வதற்கும் சுலபம். பிறரிடம் எடுத்துக் கூறவோ அதி சுலபம். பாராட்டையும் பெறலாம். கல்வி கேள்விகளில் இதனால் மேன்மையும் பெறலாம்.

இந்த வகையில் கிடைப்பதற்கு அருமையான ஐந்தைச் சேர்த்துத் தர விரும்பிய கவிஞர் அவை அனைத்துமே ‘ஜ’வில் ஆரம்பிப்பதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அற்புதமான கவிதை ஒன்றைத் தருகிறார்.

1) ஜனனி – ஒருவனைப் பெற்றெடுத்த தாய்
2) ஜன்ம பூமி – ஒருவன் பிறந்த தாய் நாடு
3) ஜாஹ்னவி – கங்கையின் மறுபெயர் ஜாஹ்னவி
4) ஜனார்தனன் – ஜனார்தனன் அதாவது விஷ்ணு
5) ஜனகன் – ஒருவனது தந்தை

இந்த ஐந்துமே கிடைப்பதற்கு அரிய விஷயங்கள் என்கிறார் கவிஞர்.
தாயும், தந்தையும், விஷ்ணு பக்தியும், கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியமும், பாரத தேசத்தில் பிறக்கும் பாக்கியமும் கிடைப்பது அரிதிலும் அரிது!

பாடலைப் பார்ப்போம்:-

ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஜாஹ்னவி ச ஜனார்தன: I
ஜனக: பஞ்சமஸ்சைவ ஜகாரா: பஞ்ச துர்லபா: II

ஜனனீ – பெற்றெடுத்த தாய்
ஜன்மபூமி – தாய் நாடு
ஜாஹ்னவி – கங்கை
ஜனார்தன: -ஜனார்தனன் (மீது பக்தியும் அவன் அருளும்)
ஜனக: – தந்தையும்
பஞ்சமஸ்சைவ – ஆகிய ஐந்து
ஜகாரா: – ‘ஜ-காரங்களும்
பஞ்ச துர்லபா: – துர்லபமாக அமையும் ஐந்து (விஷயங்கள்) ஆகும்.I

இது சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்னும் சுபாஷித நூலில் தொகுக்கப் பெற்ற அருமையான கவிதையாகும்.

mummy at work
Picture of Janani (Mother)

இதே போல ‘வ’ காரத்தில் ஆரம்பிக்கும் ஐந்து வார்த்தைகள் மனிதனுக்கு மதிப்பைத் தருவதாக அமைவதைப் பார்த்த கவிஞர் அதை அப்படியே அழகுறத் தொகுத்து அளிக்கிறார்:-

1) வஸ்த்ரம் – ஆடை (ஆள் பாதி,ஆடை பாதி அல்லவா!)
2) வபு: – வபு என்றால் வடிவம்
3) வாக் – பேச்சு
4) வித்யா – கல்வி அறிவு
5) வினயா – வினயம் அல்லது எளிமை அல்லது பணிவு
இந்த ஐந்தும் ஒருவனின் மதிப்பைக் கூட்டுகின்றன. கௌரவம் அடையக் காரணமாக அமைகின்றன.

வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா வினயேன ச I
வகாரை: பஞ்சாபி: ஹீன: நரோ நாயாதி கௌரவம் II

வஸ்த்ரேண – ஆடையும்
வபுஷா – வடிவமும்
வாசா – வாக்கும்
வித்யா – அறிவும்
வினயேன ச- பணிவும் ஆகிய
வகாரை: பஞ்சாபி: – வ’-காரத்தில் ஆரம்பிக்கும் இந்த ஐந்தும்
ஹீன: நரோ -இல்லாத மனிதன்
நாயாதி கௌரவம் –கௌரவம் பெற மாட்டான்

எளிதில் நினைவு கொள்வதோடு இவற்றை முயன்று அடையப் பார்ப்பதே நமது முதல் வேலையாக அமைய வேண்டும் இல்லையா!

Contact swami_48@yahoo.com

***************

காதலர் தினமும் இந்துமதமும்

nargis-fakhri3

By London Swaminathan
Post No.839 Date 14-02-14 (valentine day)

பிப்ரவரி 14 காதலர் தினம் (வாலன்டைன் டே)
உலகிலேயே காதல், குடும்ப வாழ்வு, செக்ஸ் ஆகிய எல்லாவற்றையும் மத நூல்களின் ஒரு பகுதியாக்கிய ஒரே மதம் இந்துமதம் தான். வேத மந்திரத்தில் ‘செக்ஸ்’ இருக்கிறது. கல்யாண மந்திரங்களில் அழகான காதல் கீதங்கள் இருக்கின்றன. வியாசர், பகவத் கீதையில், காதலன் காதலி உவமையைப் பயன்படுத்துகிறார். காம சூத்ரம் நூல் எழுதிய வாத்ஸ்யாயனரை ஒரு மகரிஷியாகக் கருதுகிறது இந்து மதம்.

தமிழ் வேதமான திருக்குறளில் காமத்துப் பால் ஒரு தனிப் பெரும் பகுதியாக விளங்குகிறது. ஆயினும் மேலை நாட்டு வாலன்டைன் தினம் (காதலர் தினம்) போன்ற பகிரங்கமான காதல் சேட்டைகளை இந்து மதம் அங்கீகரிக்கவில்லை. அது நாய், புறா போன்று பகிரங்கமாகச் செய்யும் மிருகங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுவிட்டது.

காதலைக் குறிப்பதற்கான இருதய (ஹார்ட்டின்) அடையாளத்தை உலகிற்கு ஈந்தது அதர்வண வேதம். இது பற்றி எனது ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். காண்க: Sex Mantras and Talismans in Atharva Veda (posted on 26 September 2012)

47 ஆண்டுகளுக்கு முன்னால், மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலில் (ரீகல் டாக்கீஸ்) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறை பேராசிரியர் டாக்டர் உஷர்புத் (இப்பொழுது அவர் ஒரு சந்யாசி) உரை ஆற்றினார். வேதத்தில் உள்ள காதல் மொழிகளை வரிசையாகக் கூறி எந்த திரைப் பாடப் பாடல்களிலாவது இவ்வளவு அழகான கீதங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று சவால் விட்டார். கூட்டத்தில் ஒரே கரகோஷம்!

கல்யாண மந்திரங்களில் ஒன்றிரண்டு மட்டும் இதோ:
“நீ என்னுடன் 7 அடிகள் நடந்துவிட்டாய். என் நண்பனாக (நண்பி) இரு. நானும் நீயும் ஏழு அடிகள் நடந்துவிட்டோம். நாம் நண்பர்களாக இருப்போம். நீ என்னைவிட்டுப் பிரியாதே. நான் உன்னைவிட்டுப் பிரிய மாட்டேன்.”
(ஏழு அடி நடப்பது ஏன்? என்றும் கரிகால் சோழன் ஏன் ஏழு அடி நடந்து பாணனை வழி அனுப்பினான் என்றும் முன்னரே “கரிகால் சோழனின் பருந்து வடிவ யாகக் குண்டம்” என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்).

இன்னொரு மந்திரம்:
நான் வானம்—நீ பூமி
நான் சக்தி கொடுப்பவன் – நீ சக்தி பெறுபவள்
நான் சிந்தனை- நீ சொல்
நான் இசை – நீ பாட்டு
நானும் நீயும் ஒருவரை ஒருவர் பின் தொடர்வோம்.
இப்படி எவ்வளவோ மந்திரங்கள்.

பாரதியின் காதல் கீதம்

இதைப் பின்பற்றி பாரதியும் பாடி இருக்கிறார்:
“பாயும் ஒளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நான் உனக்கு
வான மழை நீ எனக்கு, வண்ண மயில் நான் உனக்கு
…………………………………………………………..
……………………………………………………….. (கண்ணம்மா என் காதலி)

இது ஒரு நீண்ட பாட்டு. வேதம் படித்த பாரதி தனது பாடல்களில் ஏராளமான இடங்களில் வேதத்தை (குறிப்பாக அதர்வண வேதத்தை) மொழிபெயர்த்தும் தழுவியும் பாடி இருக்கிறார்.

nargis-fakhri2
திருக்குறளில் காமத்துப் பால்
200 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக தமிழின் மீது அன்பு பாராட்டிய பெஸ்கி பாதிரியார் முதலியோர் திருக்குறளின் காமத்துப் பாலைக் கண்டு அசந்தே போய்விட்டனர். “அபசாரம், அபசாரம்”, இதை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தால் தமிழர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்று அந்தப் பகுதியை தீண்டத் தகாத பகுதியாக ஒதுக்கி விட்டனர்.

திருவள்ளுவர் ஒரு மாபெரும் ஹிந்து. ஹிந்து ஒருவன் மட்டுமே ‘செக்ஸை’யும் கூட அறநூலில் சேர்க்கும் துணிச்சல் பெற்றவன். அவர் மஹாபாரதத்தில் பல இடங்களில் காணப்படும் தர்ம (அறம்), அர்த்த (பொருள்), காம (காமம்) என்ற அதே வரிசையில் தனது திருக்குறளை அமைத்தார். துணிச்சலாக ‘காம’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லை குறள் முழுவதும் பயன்படுத்தினார். இதே போல சங்க காலப் புலவர்களும் பரத்தை (பர ஸ்த்ரீ= ப்ராஸ்டிட்யூட்) என்ற சம்ஸ்கிருத சொல்லை நூற்றுக் கணக்கான பாடல்களில் பயன்படுத்தினர். பௌத்தர்களும் சமணர்களும் தொடுவதற்குத் தயங்கிய, பயந்த ஒரு “சப்ஜெக்ட்டை” தீவிர இந்துவாகிய திருவள்ளுவன் மட்டுமே தொட முடிந்தது.

நாயகன் நாயகி பாவம்

திருப்பாவை, திருவெம்பாவையில் நல்ல கணவன் அமைய நோன்பு நூற்கும் பெண்கள் அந்தப் பாடல்களில் காதல் மொழிகளையும் பயன்படுதுகின்றனர். ஜெய கோவிந்தரின் கீத கோவிந்தத்தில் உள்ள அஷ்ட பதிகளில் மிகவும் ‘விரசமான’ பகுதிகள் என்று கருதப்படும் வசனங்களும் உண்டு. அதாவது கடவுளை நாயக நாயகி பாவத்தில் வழிபடும் ஒரு சிறந்த அணுகுமுறை. உலகில் வேறு எந்த மதத்திலும் இந்த சுதந்திரத்தைக் காணமுடியாது.

ஆனால் கோபியரின் காதல் பற்றி சுவாமி விவேகானந்தர் அற்புதமான சொற்பொழிவாற்றி இருக்கிறார். “முட்டாள்களே (Fபூல்ஸ்) இதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தெய்வீக அன்புக்கு ஈடு இணையானது எதுவும் உலகில் நிகரில்லை” என்று இடி முழக்கம் செய்கிறார். அது உடல் ரீதியான சிற்றின்ப அன்பு இல்லை. உள்ளம் ரீதியான பேரின்ப அனுபவம். அதைப் புரிந்து கொள்ள வியாசருடைய சுகர் போல உள்ளத் தூய்மை இருக்கவேண்டும்”.

nargis-fakhri1

ஞான முதிர்ச்சி வேண்டும்.”வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு”– என்று சும்மாவா சொல்லி வைத்தான் வள்ளுவன்.

( இந்திய இலக்கிய வரலாற்றில் மிக அதிசயமான விஷயம்—கோபியர்களை முதல் முதலில் குறிப்பிடுவது சங்க கால இலக்கியம்தான்!! இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் சம்ஸ்கிருதத்தில் கோபியர்கள், ராதா எல்லோரும் வருகின்றனர்! ).

காமசூத்ரம்

உலகின் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணியை அவருக்குப்பின் உரை எழுதிய பதஞ்சலி மகரிஷி, ’பகவான் பாணிணி’ என்று போற்றுகிறார். அதே போல உலகின் முதல் செக்ஸ் (காமசூத்ரம்) புத்தகம் எழுதிய வாத்ஸ்யாயனரையும் மகரிஷி வரிசையில் வைக்கிறது இந்துமதம். காமத்துப் பால் எழுதிய வள்ளுவனையும் தெய்வப் புலவன் என்று போற்றுகிறது இந்து மதம்.

(புலவர்களை முதலில் தெய்வ நிலைக்கு உயர்த்திவதும் இந்துக்கள் மட்டுமே. கிரேக்க நாட்டில் ஹோமருக்கும் தெய்வீக அந்தஸ்து இருந்தாலும், அவரெல்லாம் வேத உபநிஷதத்துகளுக்குப் பின்னால் வந்தவர்களே. வியாசர் இமய மலை என்றால் ஹோமரை திருப்பரங்குன்றம் குன்று அல்லது சுவாமி மலை என்று சொல்லலாம்.)

கிரேக்க மொழியில் ஒரு காமப் புத்தகம் உண்டு. பைபிளில் சில காதல் வசனங்கள் உண்டு. எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அவை நம்மிடம் உள்ள சர்க்குக்கு உறைபோடக் காணாது!!!

tamil pennum kiliyum

கீதையில் காதலன், காதலி

கீதையில் (11-44) கூட காதலன் காதலி உவமை வருகிறது. அர்ஜுனன், கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்கிறான். உன்னை சாதரண நண்பனாக நினைத்து பல நேரங்களில் வாடா, போடா என்று பேசி அவமதித்து இருக்கிறேன்: “மகன் பிழையைத் தந்தை போலும், நண்பன் பிழையை சக நண்பன் போலும், காதலியின் பிழையை காதலன் போலும் பொருத்தருளல் வேண்டும்”– (ப்ரியாயா: ப்ரிய இவ ஸோடும் அர்ஹஸி— கீதை 11-44).

எட்டுவகைத் திருமணங்கள்

காதல் திருமணம், கடத்தல் திருமணம், ஸ்வயம்வரம் உள்பட எட்டு வகை திருமணங்களுக்கு ‘அப்ரூவல்’ கொடுத்த ஒரே மதம் உலகில் இந்துமதம்தான். அத்தனை வகைகளையும் உலகின் மிக நீண்ட நூலான மஹாபாரத்தில் படித்து வியப்புறலாம்.

வீட்டுக்கு வரப் போகும் மணப் பெண்ணை நீயே என் வீட்டு மஹாராணி என்று போற்றுகிறது வேத மந்திரம். அவளை ஒரு கல்லின் மீது காலைப் பதிய வைத்து அதை வருங்காலக் கணவன் பிடிக்கிறான். இதைப் போல (கற்பில்) உறுதியாக இரு என்கிறான்.

ஆக, செக்ஸ் என்பது இந்து மதத்தில் ஒரு ‘டாபூ’ இல்லை (தொடாதே, காணாதே, பேசாதே என்பது taboo டாபூ). ஆனால் அது புனிதமானது, போற்றத்தக்கது, மதிக்கப் பட வேண்டியது. மிருக அணுகுமுறை இன்றி மனித அணுகுமுறை கொடுக்கப்படவேண்டியது என்று பறை சாற்றுகின்றன வேத, இதிஹாச, ஸ்மிருதி, புராணங்கள்.

(ஸ்மிருதிகள்= இந்து மத சட்டப் புத்தகங்கள்).

Contact swami_48@yahoo.com

பத்திரிக்கை மற்றும் மலர்களில் இருந்து படங்கள் எடுக்கப்பட்டன; நன்றி.

எப்போது பொய் சொல்லலாம்? வள்ளுவர், சங்கரர் அறிவுரை !

tn_state_emblems_over_time

By London Swaminathan
Post No.837 Date. 13-02-2014

திருக்குறளில் வள்ளுவரும், பிரஸ்ன உத்தர ரத்ன மாலிகாவில் (பிரஸ்னோத்த்ரரத்னமாலிகா ஸ்தோத்திரம்) ஆதி சங்கரரும், கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோவும் எப்போது பொய் சொல்லுவது அனுமதிக்கப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றனர்.
மஹாபாரத்திலும் சில கதைகள் உண்டு. பொய் சொன்னாரா இல்லையா என்று தீர்மானிக்க முடியாத தர்ம சங்கடமான நிலைமைகள் அவை.

வள்ளுவர் கூற்று

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)

பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் (292)

பொருள்: குற்றமில்லாத நன்மையைத் தரும் என்றால் பொய் கூட வாய்மையாகக் கருதப்படும்
அதாவது ஒரு பொய்யானது மாசு மருவற்ற தூய நன்மையை உண்டாக்குமானல் அது உண்மை எனவே கருதப்படும்.

“சத்யமேவ ஜயதே= வாய்மையே வெல்லும்” என்ற உபநிஷத் வாசகம் தமிழ்நாடு அரசின் மற்றும் இந்திய அரசின் சின்னங்களில் காணப்படுகிறது. குருகுலத்துக்குப் போகும் பையனுக்கு வாத்தியார் சொல்லித் தரும் முதல் பாடம் “சத்யம் வத= உண்மையே பேசு” என்பதுதான். தமிழ், வடமொழி இலக்கியங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் இதே கருத்து திரும்பத் திரும்ப வருகிறது. அப்படி இருந்தும் ஆதி சங்கரர் சொல்லுகிறார்:

சங்கரர் கூற்று

யார் நம்பத் தகாதவன்?
எப்போதும் பொய் சொல்பவன்.
எப்போது பொய் சொன்னால் பாபம் ஆகாது?
தர்மத்தைக் காக்கச் சொல்லும் போது.

இந்தக் கேள்வி பதில் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா துதியில் வருகிறது. இது ஒரு அற்புதமான துதி. மஹா பாரதத்தில் வரும் யக்ஷப் பிரஸ்ன பாணியில் அவர் எழுதி உள்ளார். 67 பாடல்கள் இருக்கின்றன. ஏறத்தாழ 200 கேள்வி பதில்கள். பிரஸ்ன என்றால் கேள்வி, உத்தர என்றால் பதில். பாடல் 46, 47–ல் இந்த இரண்டு கேள்விகளும் பதில்களும் வருகின்றன.

ஆதி சங்கரரின் கூற்றுப்படி தர்மத்தைக் காக்க பொய் சொல்லலாம். அது பாவமில்லை. ஒருவேளை அவர் மஹாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமா கதையை மனதில் வைத்து இப்படிச் சொல்லி இருக்கலாம்.

‘அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா’:

பொய்யே சொல்லாத தர்மனையும் பொய் சொல்ல வைத்தார் கிருஷ்ணன். எதற்காக? தர்மயுத்தம் வெல்ல வேண்டும் என்பதற்காக. தர்மன் பொய் சொல்ல மாட்டான் என்று தெரிந்த கிருஷ்ணன் ‘அஸ்வத்தாமா’ என்ற பெயருள்ள ஒரு யானையைக் கொல்லச் செய்கிறார். பீமன் அதைக் கொன்றவுடன் அஸ்வத்தாமாவுக்கு சாவு என்று கூச்சல் இடுகிறான். துரோணர் காதில் அது விழவே தர்மனிடம் உண்மையா என்று அறிய வருகிறார். அவன்‘அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா’: = அஸ்வத்தாமா சாவு………. யானையோ மனிதனோ– என்று சொல்கிறான்.

அதாவது யானையோ மனிதனோ ஒரு‘அஸ்வத்தாமா காலி! யானையோ மனிதனோ என்பது சம்ஸ்கிருத வாக்கியத்தில் பின்னால் வரும். அந்த நேரத்தில் பாண்டவ சேனை பெரிய டமார துந்துபி ஒலிகளை உண்டாக்கி துரோணர் காதில் விழமுடியாதபடி செய்கின்றனர். துரோணர் மகனின் “மரணச் செய்தி” கேட்டு ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தியானத்தில் அமர்கிறார். அவரை திருஷ்டத்யும்னன் கொல்கிறான்.

Emblem_of_India.svg

ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தைச் செய்யலாம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஒரு நல்ல காரியம் நடக்கத் தீமை இல்லாத பொய்களைச் சொல்லலாம். பையன் அழகானவனா, பெண் அழகானவளா என்று கேட்கும்போது ஆம் அழகானவர் என்று சொல்வதில் தப்பில்லை. அழகு என்பது பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது.!!

கௌசிகர் கதை

மஹாபரதத்தில் இன்னொரு சுவையான கதையும் உண்டு. வாழ்நாள் முழுதும் பொய் சொல்ல மாட்டேன் என்று கௌசிகர் என்ற பிராமணர் சபதம் செய்கிறார். அவர் காட்டில் இருக்கையில் வழிப்போக்கர் குழு ஒன்றைத் திருடர்கள் துரத்தி வருகின்றனர். அந்த வழிப்போக்கர்கள் கௌசிகர் இருக்கும் இடத்தைக் கடந்து ஓரிடத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். திருடர்கள் சற்று நேரத்துக்குப்பின் அங்கே வந்து கௌசிகரிடம் யாராவது இப்படி வந்தார்களா? என்று கேட்டனர். அந்த ‘உண்மை விளம்பி’ (!) ‘ஆமாம் அதோ அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்’ என்று உண்மையைக் கூறுகிறார். பின்னர் வழிப்போக்கர்களைத் திருடர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை. இது வாய்மை அல்ல என்பது வள்ளுவனின் கருத்து.

பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை (291) என்பது வள்ளுவன் துணிபு.

சத்யகாம ஜாபாலா கதை

உபநிஷதத்தில் இன்னும் ஒரு அற்புதமான கதை உண்டு. சத்யகாமன் என்ற சிறுவன், குருவிடம் போய் வகுப்பில் சேர ‘அப்ளிகேஷன்’ கொடுக்கிறான். அவரோ தம்பி மனுவை சரியாக பூர்த்தி செய்யவில்லையே. அப்பா பெயர், குலம், கோத்ரம் எல்லாம் எழுதாமல் ‘பிளாங்க்’ ஆக இருக்கிறத- என்றார். அவன் எங்கள் அம்மா பெயர் ஜாபாலா என்கிறான். வீட்டுக்குப் போய் காலியான இடங்களை நிரப்பி உங்கள் அப்பா பெயர், குலம், கோத்ரம் எல்லாவற்றோடும் வா என்கிறார். அவன் அம்மாவிடம் போய் நடந்த கதையைச் சொல்கிறான். அவளும் ‘மஹா உத்தமி!’ (!) ‘உன் அப்பா யார் என்று எனக்கே தெரியாது’ என்கிறாள். அவனும் உடனே குருவிடம் போய் அம்மா சொன்னதை அப்படியே சொல்கிறான்.
குரு அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இன்று முதல் உன்பெயர் ‘சத்ய காமன் (உண்மை நாடுவோன்)’. நீ எனது சீடன். பிராமணன் பொய்யே பேசமாட்டான். ஆகையால் நீயும் ஒரு பிராமண குலத்தில் உதித்தவனே என்று சொல்கிறார். உண்மைக்கு அவ்வளவு மதிப்பு (அந்தக் காலத்தில்!!!)

546px-TamilNadu_Logo.svg
பிளாட்டோ கூற்று

கிரேக்க நாட்டு அறிஞர் சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ. அவர் Noble Lie “நோபிள் லை” (உன்னத பொய்) சொல்லலாம் என்று ‘ரிபப்ளிக்’ புத்தகத்தில் எழுதி இருக்கிறார். எஸ். எம். டயஸ் எழுதிய ஆங்கில திருக்குறள் விளக்கத்தில் இதைக் கூறுகிறார்.அதாவது கல்வி மற்றும் ராஜாங்க விஷயங்களில் இப்படி உன்னத காரியங்களுக்குப் பொய் சொல்லலாம் என்பது அவரது கருத்து. சாக்ரடீஸ் போன்றோர் இந்திய கலாசாரத்தை நன்கு அறிந்தவர்கள்.

சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ. அவருடைய சீடர் அரிஸ்டாடில். அவருடைய சீடர் அலெக்ஸாண்டர். இந்தியாவை எப்படியாவது பார்த்து ரிஷி முனிவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று அலெக்ஸாண்டர் துடியாய்த் துடித்தார். (இது பற்றிய விஷயத்தை சுவாமி விவேகானந்தர், பரமஹம்ச யோகானந்தர் புத்தகங்களில் இருந்து ஏற்கனவே விரிவாகக் கொடுத்துவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க விருப்பம் இல்லை!).

தொடர்பு கொள்க: swami_48@yahoo.com

மொட்டையும் குடுமியும்

India Hindu Festival

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 835 தேதி 12-02-14

ஆதி காலத்தில் இந்து, புத்த, சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடுடையோர் வெளிச் சின்னங்கள் மூலம் அதைக் காட்டினர். காவி உடை, மஞ்சள் உடை, வெள்ளாடை இப்படி வெளிப்புறத்திலும் நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம், கோபி, நாமம் இப்படிப் பல சின்னங்களாலும் யார் என்பதைக் காட்டினர். இது போலவே தலை முடி விஷயத்திலும் பல பாணிகள் (ஸ்டைல்) நிலவின. முன் குடுமி, பின் குடுமி, மொட்டை (பௌத்தர்), மயிர் ஒவ்வொன்றாக பறித்து மொட்டையாகுதல் (சமணர்) என்று பல வகைகள் இருந்தன. முற்றிலும் உணர்ந்த ஞானிகள் இந்த வெளி வேஷத்தைப் பொருட்படுத்தாமல் தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைத்தனர். ஏனெனில் காலப்போக்கில் இது எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகளுக்கு வசதியாகப் போயின.

வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.

Young-Buddhist-Monks

1400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மஹேந்திர பல்லவ மன்னன் சம்ஸ்கிருதத்தில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இருக்கிறான். மத்தவிலாசப்ரஹசனம் என்ற அந்த நாடகத்தில் இந்து, புத்த, ஜைன (சமண) மத போலி சந்யாசிகளைக் கிண்டல் செய்துள்ளான். சங்க்ரரின் பஜகோவிந்தத்தில் சொல்லும் விஷயம், மஹேந்திர வர்மன் நேரில் கண்ட காட்சியுடன் இணைகிறது!

முடி விஷயத்தில் பல வகையான ‘ஸ்டைல்கள்’ வேத காலம் முதலே இருந்திருக்கின்றன. ஏதோ இந்தக் காலத்தில் ரவிவர்மா வரைந்த படங்களில்தான் சிவனுக்கு மீசை, விஷ்ணுவுக்கு மீசை இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். சிவபெருமானை வருணிக்கும் யஜூர் வேத ருத்ரம்/சமகத்தில் சிவனை மொட்டையன் என்றும் நீண்ட சடையன் என்றும் போற்றுகின்றனர்.

நீண்ட சடையன் (கபர்தீன்)
வ்யுப்தகேச (முண்டம்/ மழித்த) – ருத்ரம் (யஜூர் வேதம்)
வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்ற தமிழ்ப் பழமொழி இந்த ருத்ர மந்திரத்தில் இருந்துதான் வந்ததோ என்னவோ!

வள்ளுவர் கூறுகிறார்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
Maha Kumbh Mela. Man. Skull. Shaved. Worship.

சங்கரரும் சாடுகிறார்

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.

tonsure Swastik_on_head
திருமூலரின் திருமந்திரம்

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே

பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.
jain
Picture shows a Jain Monk

புத்தர் பேருரை

நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்.

புத்தரும் தனது மதத்தினரின் வெளி வேஷங்களை அபோழுதே கண்டித்துள்ளார். அவரது மதம் எப்படித் தேய்ந்துபோகும் என்பதை அவர் பிரதம சீடரான ஆனந்தனுடன் நடத்திய சம்பாஷணையில் கூறினார். அவர் இறந்தவுடன் நடந்த மூன்று மஹா நாடுகளில் வாதப் பிரதிவாதங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களைக் கட்டாயம் புத்த மதத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆனந்தன் மன்றாடியபோது, 1000 ஆண்டுகள் நிலைக்கக்கூடிய என்னுடைய மதம், பெண்களை (புத்த பிட்சுணிகளாக) அனுமதித்தால், 500 ஆண்டுகளே இருக்கும் என்றார் புத்த பிரான். இது பற்றிய விரிவான விளக்கத்தை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க: Two Interesting Conversations about Women, posted on 5th February 2014.

Contact swami_48@yahoo.com

27. வாழ்வையும் சாவையும் புரிந்து கொள்ளுங்கள்!

Buddha Borobudar (1)

Post 833 Date 11th February 2014

ஸ்வர்ண லோகம்

27. வாழ்வையும் சாவையும் புரிந்து கொள்ளுங்கள்!
ச.நாகராஜன்

தூய்மையே ஜென் வாழ்க்கை முறை!
தூய்மை. தூய்மை.தூய்மை. எதிலும் தூய்மை.எப்பொழுதும் தூய்மை. இதைத் தான் ஜென் கற்பிக்கிறது.வாழ்வு என்றால் என்ன, மரணம் என்றால் என்ன என்பதில் ஒரு தெளிவைக் காண்பிக்கிறது ஜென்.
ஜப்பானைச் சேர்ந்த ஜென் மாஸ்டரான டோஜென் ஜென்ஜி சீனாவில் படித்துக் கொண்டிருந்த சமயம் அவரை ஒரு குரு அணுகினார்.”ஏன் இந்த புத்தமத நூல்களை நீ படித்துக் கொண்டிருக்கிறாய்/” என்று கேட்டார்.

“எனது முன்னோர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை நான் கற்க விரும்புகிறேன்” என்று பதில் சொன்னார் டோஜென் ஜென்ஜி.

“எதற்காக அதைக் கற்க வேண்டும்?” என்று கேட்டார் அந்த குரு.
“ஏனெனில் மனித துன்பங்களிலிருந்து நான் விடுதலை பெற விரும்புவதால்” என்றார் டோஜென் ஜென்ஜி
“ஏன் விடுதலை பெற வேண்டும்?” என்று கேட்டார் குரு.
“எல்லா மனிதர்களும் துன்பம் அடைவதால் சுயபுரிதல் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் நான் உதவ விரும்புகிறேன்” என்றார் டோஜென் ஜென்ஜி.
“எதற்காக?” என்று கேட்டார் குரு.

வெகு சீக்கிரமே நான் ஜப்பானுக்குத் திரும்பவிருக்கிறேன். அங்குள்ள என் கிராம மக்களுக்கு உதவ விரும்புகிறேன்” என்றார் டோஜென் ஜென்ஜி.
“எதற்காக?” என்று மீண்டும் கேட்டார் குரு.
டோஜென் ஜென்ஜி பதில் எதையும் இப்போது கூறவில்லை.

சொல்வதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை. இப்படி கேள்வி கேள்வியாகக் கேட்டு அவரால் பதில் சொல்ல முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

மனித வாழ்க்கையின் தன்மையைச் சரியாக அவர் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தினாலேயே இந்த கேள்வி மேல் கேள்வி கேட்கும் அணுகுமுறை குருவால் கையாளப்பட்டது. இறுதியில் வாழ்க்கையின் உள்ளார்ந்த அம்சத்தையே அது சுட்டிக் காட்டுகிறது.
அது தான் மரணம்!

எல்லோருமே ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனுமே இருக்க விரும்புகிறார்கள். எதற்காக ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்? எதற்காக ஒருவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்?

buddha india

ஆனால் கடைசியில் இறக்கும் போதோ யாரும் மகிழ்ச்சியுடனும் இல்லை, ஆரோக்கியத்துடனும் இல்லை. நிச்சயமாக இன்றோ அல்லது நாளையோ அல்லது நாளைக்குப் பிறகு இன்னொரு நாளோ இறக்கப் போகிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே தான் வாழ்க்கை மிக அழகிய ஒன்றாக இருக்கிறது.
இதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் பிரபல அமெரிக்க ஜென் மாஸ்டரான டைனின் கடகிரி.

ஜென் பயிற்சிகளின் மீதோ அல்லது புத்த மத தத்துவத்தின் மீதோ நம்பிக்கை கொள்வது என்பது ‘ அது ஏதோ ஒரு வழிமுறை; அதைப் பற்றி நாம் சிந்திக்கிறோம்’ என்பதில்லை. வாழ்க்கையின் அடி ஆழத்திலிருந்து அதை பயிற்சி செய்வது என்பதே நாம் உண்மையாகக் கொள்ள வேண்டிய நிலையாகும்!. எப்படி பயிற்சி செய்வது? அதைப் பழகிப் பழகி வாழ்ந்து காட்டுவதே!

உள்ளார்ந்த விருப்பம், மனதில் ஊறும் விழிப்புணர்ச்சி,முயற்சி,தியானம் (ஜஜென்),ஞானம்,கட்டுப்பாடு,நம்பிக்கை,தர்மத்தைக் கடைப்பிடிப்பது,அனைத்திலிருந்தும் விலகாமல் இருத்தல்,உறுதி பூண்டு வாழ்தல் ஆகிய இந்த முக்கியமான பத்து படிகளே நம்மை ஒரு புத்தராக ஆக்கும். இதில் ஐயமில்லை.

மனதில் உள்ளார்ந்த சபதத்தை மேற்கொண்டு புத்தராவோம்; அனைவரும் புத்தராக சேவை செய்வோம்!

laos buddha

ஸ்வர்ண லோகம்

28. முடிவுரை

ச.நாகராஜன்

ஜென் வாழ்க்கை முறை என்பது புத்த மதம் உலகிற்கு அளித்த ஒரு கொடை.
ஜென் என்றால் என்ன என்பதை விளக்குவது கஷ்டம். சில சொற்களால் விளக்க முயன்றால் அது ஜென் அல்ல. வாழ்ந்து காட்டுவது தான் ஜென் வாழ்க்கை முறை. சொற்களுக்கு அப்பாற்பட்டது ஜென்.
தியானத்தின் மூலம் உள்ளுணர்வாக அனுபூதி மூலம் அனுபவிக்கப்படுவது ஜென்.

வீட்டைக் கோவில் போலச் சுத்தமாக வைத்துக் கொள்வது, உடலை ஒழுங்காகப் பராமரிப்பது, உள்ளத்தில் எப்போதும் சந்தோஷம் பொங்க இருப்பதுடன் அதை மற்றவர்களுக்கும் பாய்ச்சுவது – இவற்றில் ஜென் மிளிரும்.

சின்னச் சின்ன விஷயங்களிலும் விழிப்புணர்வோடு இருப்பது ஜென் எல்லாப் பொருள்களிலும் அதன் உபயோகத்தைக் காண்பது ஜென். எல்லோரிடமும் நல்ல அம்சங்களைக் காண்பது ஜென் – இப்படி விளக்கிக் கொண்டே போகலாம். இதற்கு ஒரு எல்லை இல்லை என்பதால் தான் விளக்க முடியாத வாழ்க்கை முறை ஜென் என்று கூறப்படுகிறது.

விளக்க முடியாத வாழ்க்கை முறை ஜென், வாழ்ந்து காட்ட வேண்டிய வாழ்க்கை முறை ஜென் என்பதை விளக்குவதற்காகவே இது வரை பல ஜென் மாஸ்டர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளையும் பார்த்தோம். ஜென் மாஸ்டர்களின் பட்டியலுக்கு எல்லை இல்லை. அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கோ முடிவே இல்லை. அவற்றில் ஒரு ஆர்வத்தைத் தூண்டவே புத்த மதத்தின் பெருமைகளை விளக்கும் இந்தத் தொடரில் ஜென் பற்றிய சில விஷயங்களை இது வரை பார்த்தோம்.

ஜென் மட்டுமே புத்த மதம் அல்ல. அறிஞர்களை ஈர்க்கும் புத்த மதம் சாமான்யர்களைப் பற்றிக் கவலைப்படுகிறது. நிர்வாண நிலை அனைவருக்கும் பொது என்று கூறி அனைவரும் புத்தரே என திடமாக அறிவிக்கிறது.

புத்தரைப் பற்றியும் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் அடுத்த பாகத்தில் காணலாம். புத்த மதத்தில் மிளிர்ந்த சூத்திரங்களின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்ளலாம்.

buddha nepal

முதல் பாகத்தைப் படித்து ஊக்கமூட்டிய நண்பர்களுக்கும் தொடரை வெளியிட்ட நிலாச்சாரல் இதழுக்கும் ஆசிரியர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் நிலாச்சாரல் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அடுத்த பாகத்தில் மீண்டும் சந்திப்போம்

அன்பன்
ச.நாகராஜன்

மின்னஞ்சல் முகவரி: snagarajans@gmail.com

முற்றும்

This is the concluding part of my brother Santanam Nagarajan’s articles on Zen Buddhism:- london swaminathan.