திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post No.3036)

260px-Japanesethieves

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3036

Time uploaded in London :– 7-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

kili 2

சம்ஸ்கிருதத்தில் திருட்டுக் கலை பற்றி தனி நூல்களே இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அளவுக்கு பரந்த வீச்சு உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. காம சாஸ்திரம், விமான சாஸ்திரம், ஆயுர்வேதம், மூலிகை விஷயங்கள், திருட்டு சாஸ்திரம்,  ஜோதிட சாஸ்திரம், இலக்கணம், இலக்கியம், தர்க்க சாஸ்திரம், நாடகம், கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள், சட்ட நூல்கள்,  நிகண்டு, மொழியியல்  என பல நூறுவகை விஷயங்கள் அதில் அடக்கம். எனக்குத் தெரிந்தவரை, கிரேக்க மொழி இதற்கு கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் கிரேக்க மொழி சம்ஸ்கிருதத்தை விட குறைந்தது 600 வருடமாவது வயது குறைந்த மொழி.

நிற்க.

 

திருடர்கள் இரண்டு வகை என்கிறார் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதிய மனு. அதில் சோதிடர்கள், குறி சொல்லுவோர், ரேகை சாத்திரக்காரர் கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்!

 

இதோ அவர் எழுதிய மனு ஸ்மிருதியில் உள்ள சில பாக்கள் (ஸ்லோகங்கள்):–

 

ப்ரகாச வஞ்சகா: தேஷாம் நானா பண்ய உபஜீவின:

ப்ரச்சன்ன வஞ்சகா: து ஏதே யே ஸ்தேன ஆடவிகாதய:

 

உத்கோச  காஸ்ச: பதிகா: வஞ்சகா: கிதவா: ததா

மங்களாதேசவ்ருத்தா: ச பத்ரா ச ஏகக்ஷணிகை: சஹ

 

அசப்ய காரிணை: ச ஏவ மஹாமாத்ரா சிகித்சகா:

சில்யோபசாரயுக்தாஸ்ச நிபுணா: பண்யயோஷித:

மனு 9-258 -260

 

 kili 5

மனு 9-256

உளவாளிகள்தான் அரசனுக்குக் கண்கள்; அவர்கள் மூலமாக மக்களின்  உடைமைகளைத் திருடும்  வெளிப்படைத் திருடர்கள், மறைமுகத் திருடர்கள் ஆகிய இரண்டு வகைத் திருடர்களையும் அரசன் கண்டுபிடிக்க வேண்டும்

 

மனு 9-257

வணிகத்தில் மோசடி செய்யும் அனைவரும் வெளிப்படைத் (தெரிந்த) திருடர்கள்; வீடு புகுந்து திருடுவோர், காடுகளில் வழிப்பறி செய்வோர் முதலியோர் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-258

லஞ்சம் வாங்குவோர், மோசடிப் பேர்வழிகள், ஏமாற்றுப் பேர்வழிகள், சூதாட்டக்காரர்கள்,  மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவோர், குறி சொல்லுவோர்…………..

 

மனு 9-259

முறையற்ற வழியில் ஈடுபடும் மந்திரிகள், டாக்டர்கள், கலைகள் மூலம் சம்பாதிப்போர், வேசிகள்………….

 

மனு 9-260

இப்படிப்பட்டோர் வெளிப்படைத் திருடர்கள்; நல்லோர் வேஷம் போட்ட கீழ் ஜாதியார் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-261

இப்படிப்பட்ட திருடர்களை ரகசிய உளவாளிகள் மூலம் கண்டுபிடித்தவுடன் அவர்களைக் குற்றம் செய்யும் சூழ்நிலையை உருவாக்கி அதில் சிக்கவைத்து  கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும்.

மனு 9-262

ஒவ்வொருவர் செய்த தவறு என்ன என்பதைச் சொல்லி, தவற்றுக்கு ஏற்ற அளவு தண்டணை கொடுக்கவேண்டும்.

மனு 9-263

இந்தப் பூமியில் அமைதியாக உலவிவரும் தீயோரின்  நடவடிக்கைகளை  தீயோரைத் தண்டிப்பது ஒன்றினால்தான் செய்ய இயலும்.

மனு 9-264— மனு 9-266

சபைகள், சாலை ஓர நீர் குடிக்கும் இடங்கள், தாசி வீடுகள், உணவு விடுதிகள் (ஆப்பக் கடைகள்), மதுபானக் கடைகள், முச்சந்திகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடும் இடங்கள், புனித மரங்கள், தோட்டங்கள், கலைஞர் வீடுகள், காலியாக இருக்கும் மனைகள், பொட்டல் காடுகள், புதர் மண்டிய பிரதேசங்கள் ஆகிய இடங்களில் உளவாளிகளையும் துருப்புகளையும் நிறுத்தி வைப்பதாலோ, அல்லது ரோந்து (காவல் சுற்று) செய்வதாலோ திருட்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

kili 7

மனு 9-267

ஏற்கனவே திருட்டில் ஈடுபட்டு, இபோது திருந்தியவர்களைக் கொண்டு  புதிய திருடர்களைப் பிடிக்க வேண்டும் . அவர்களுடன் பழக வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து, அந்தத் திருடர்களை அடியோடு அழிக்க வேண்டும்

மனு 9-268

சாது சந்யாசிகளை சந்திக்க அழைப்பது போல அழைத்தோ, உணவு, கேளிக்கைக்காக கூப்பிடுவது போல கூப்பிட்டோ அல்லது அவர்களது சாகச செயல்களைப் பாராட்டுவது போல பாசாங்கு செய்தோ அவர்களை வளைத்துப் பிடிக்க வேண்டும்.

மனு 9-269

 

இந்த வலையில் சிக்காமலோ, அல்லது இதை அறிந்தோ தப்பித்து ஓடும் திருடர்களையும் , அவர்களுடைய தாய்வழி, தந்தை வழி உறவினர்களை  யும், நண்பர்களையும் அழிக்க வேண்டும் (உறவினர் நண்பர் மூலம் தான் செய்தி தெரிந்திருக்கும் என்பதால்)

 

(திருக்குறள் 550–ம் கொலையில் கொடியாரை மரண தண்டனை கொடுத்து தீர்த்துக் கட்டுங்கள் என்று செப்பும்.)

 

ஒரு திருடனிடம், அவன் திருடிய பொருட்கள் இல்லை என்றால் அவனைத் தண்டிக்கக்கூடாது. திருடிய பொருட்களோ திருட்டுச் சாதனங்களோ இருந்தால் தயக்கமின்றி தண்டணை கொடுக்க வேண்டும்.

 

இதற்குப் பின்னர், திருட்டுகளை ஒழிப்பதில் உதவாத அதிகாரிகளைத் தண்டிப்பது பற்றி பகர்கிறார்.

 

அதற்குப்பின்னுள்ள ஒரு ஸ்லோகம் குறிப்பிடற்பாலது:–

ஒரு கிராமம் கொள்ளை இடப்படுகையிலோ, ஒரு அணை உடைந்தபோதோ, சாலை வழிப்பறி நடக்கும்போதோ, அவர்களுக்கு உதவாதபடி, வேடிக்கை பார்ப்பவர்களை நாடுகடத்த வேண்டும்.

 

இரவில் திருடுபவர்களின் இரண்டு கைகளையும் வெட்டுங்கள். பிக் பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடர்களின் விரல்களை வெட்டுங்கள் என்றும் மனு உத்தரவு இடுகிறார்.

 

ஒன்பதாவது அத்தியாயம் திருடர்கள் பற்றி இன்னும் பல விசயங்களை இயம்புகிறது. அக்காலத்தில் திருடர்கள் விஷயத்தில் எவ்வளவு கடுமையான விதிகள் இருந்தது என்பதை அறிவது அவசியம். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் – குப் தர் காலத்தில் — இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் பாஹியான், இந்தியாவில் திருட்டு பயமே இல்லை, மக்கள், வீடுகளின் கதவுகளைப் பூட்டாமல்தான் தூங்குவார்கள் என்று எழுதியுள்ளான்.

 

வாழ்க மனு! வளர்க மனு நீதி!

 

டர்பாவின் அதிசய ஆய்வுகள்!(Post No.3034)

b.myers

Article Written S NAGARAJAN

Date: 4th  August 2016

Post No. 3034

Time uploaded in London :– 8-25AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 5-8-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பாவின் அதிசய ஆய்வுகள்!

.நாகராஜன்

durpa

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் மருத்துவ துணை சாதனம் தேவையாக இருக்கிறது. உங்கள் கண்களுக்கான கண்ணாடிகள், அல்லது இடுப்பு அல்லது  முழங்கால் மூட்டை பொருத்துதல் என இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. செயற்கை அங்கங்கள் பொருத்தப்பட்ட தலைமுறை நம்மைச் சுற்றிலும் உள்ளது – எய்மி மல்லின்ஸ்

 

 

அமெரிக்காவின் இராணுவத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆராய்ச்சி செய்து வழங்கும் ஒரு அமைப்பின் பெயர் தான் டர்பா!  டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜக்ட்ஸ் ஏஜன்ஸி (Defense Advanced Research Projects Agency) என்பதின் சுருக்கமே டர்பா!

 

 

1957 ஆம் ஆண்டு ரஷியா ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவியதும் பதறிப் போன அமெரிக்கா தொழில்நுட்பத்தில் தான் மேம்பட வேண்டும் என்று எண்ணியது. ஜனாதிபதி ஐஸன்ஹோவர் உடனடியாக 1958இல் உயரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவினார். பல முறை பெயர் மாற்றப்பட்டு இப்போது டர்பா என அழைக்கப்படும் ஆய்வு நிறுவனம் முதலில் விண்வெளி சம்பந்தமான ஆய்வைத் தொடங்கினாலும் நாஸா அமைக்கப்பட்டவுடன் விண்வெளி சம்பந்தமான அனைத்துத் திட்டங்களையும் அதன் செயல்பாட்டிற்கு விட்டு விட்டது. இதர துறைகளில் கவனம் செலுத்திய அது பல்வேறு அதிசயக் கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்துள்ளது.

 

சுமார் 240 ஆய்வாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். இதன் பட்ஜெட்டோ கற்பனைக்கு அப்பாற்பட்ட பல கோடி ரூபாய்கள்!

 

defense-advanced-research-projects-agency

ஆரம்ப காலத்தில் எதிரிகளின் ஆயுதங்களைக் கண்டுபிடித்து இலக்கை நிர்ணயித்து அழிக்கும் தானியங்கி இலக்கு நோக்கிகளை அது கண்டு பிடித்தது.

 

பின்னர் மனத்தைக் கட்டுப்படுத்தும் ஏராளமான அதிசயக் கண்டுபிடிப்புகளை அது கண்டு பிடித்து வருகிறது.

தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தெரிவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை அவ்வப்பொழுது டர்பா ஏற்பாடு செய்து வருகிறது. செப்டம்பர் 2015 மற்றும் மே 2016இல் டர்பாவின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்த பத்திரிகையாளர்கள் அசந்து பிரமித்து நின்றனர்!

 

 

பத்திரிகையாளர்கள் பார்த்தது ஒரு செயற்கை கையை! 45 பவுண்டு எடையுள்ள ஒரு கர்லாக் கட்டையை நாள் முழுவதும் அது சுழற்றிக் கொண்டே இருந்தது – அதன் பாட்டரியின் சார்ஜ் போகும் வரை! எந்த வலுவுள்ள  மனிதனாலும் இப்படித் தொடர்ந்து கர்லாக் கட்டையை 24 மணி நேரம் தொடர்ந்து சுழற்ற முடியாது!

 

 

இந்த கையின் செயல்பாட்டை விளக்கினார் ஜானி மாத்னி என்ற விஞ்ஞானி. அந்தச் செயற்கை கையை ஒரு  பெண் நிருபரின் கையைப் பிடித்து  குலுக்க வைத்ததோடு டர்பாவின் கண்டுபிடிப்பைப் பற்றி எழுதவும் வேண்டுகோள் விடுத்தார்!

வலிமையிலும் நெளிவு சுளிவுகளுடன் லாகவமாக செயல்படுவதிலும் உலகிலேயே திறமை வாய்ந்த ஒரே கை இது தான் என்றார் ஜானி மாத்னி!

 

 

உலகின் பல இடங்களிலிருந்தும் போர்களில் ஈடுபட்டுத் திரும்பிய கை இழந்த அமெரிக்க வீரர்களுக்கு கரம் கொடுப்பது இனி சுலபம் என்றார் டர்பாவின் உயிரியல் தொழில்நுட்ப டைரக்டரான ஜஸ்டின் சி. சான்செஸ் (Justin C. Sanchez).

 

 metallic cheetah

Metallic Cheetah by Darpa

மூளையின் இயக்கங்களையும் அதன் நுட்பமான செயல்பாட்டையும் அறிந்த பின்னரே இந்த செயற்கைக் கையை உருவாக்க முடிந்தது என்று கூறிய ஜஸ்டின் இயற்கையான கையைப் போலவே இது செயல்படும் என்றார்.

விபத்துக்களில் கைகள் துண்டிக்கப்பட்டோருக்கு இனி இந்தத் தொழில்நுட்ப மேம்பாடு உடலில் பதிக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் தசைகள் செயல்பட வேண்டிய விதத்தை அது பதிக்கப்பட்டவரின் எண்ணத்திற்கு ஏற்ப அவரது மூளைக்கு அறிவிக்கும்.

 

 

கைகள், கால்கள் இழந்தவருக்கு இந்த செயற்கை அங்கங்கள் இனி கிடைக்க இருப்பது அறிவியலின் ஒரு மாபெரும் வெற்றியாகும்.

 

 

எதிர்பாராத விபத்துக்களில் கைகளையும் கால்களையும் இழந்தவர்கள் வாழ்க்கையையே இழந்ததாக இனி கருத வேண்டாம் என்பதை எடுத்துக்காட்ட வீரர்கள் பலர் உள்ளனர்!

இரண்டு கால்களையும் சர்ஜரி மூலம் அகற்ற நேர்ந்த ஹ்யூ ஹெர் செயற்கைக் கால்களைப் பொருத்தி உயரமான மலைகளில் ஏறி சாகஸம் செய்கிறார்! செயற்கை கால்களைச் செய்யும் ஒரு லாபரட்டரியையும் அவர் இயக்கி வருகிறார்.

இறுதிச் சுற்றுக்கான தகுதியை இழந்தாலும் கூட 400 மீட்டர் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கால்களை இழந்து நொந்து கொண்டிருப்பவர்களுக்கான ஒரு ரோல் மாடல்! இவரைப் பார்த்து உத்வேகம் பெறாத ஆட்களே உலகில் இல்லை!

 

 

ஆப்கானிஸ்தானத்தில் ஒரு சாலையில் குண்டுத் தாக்குதலில் தனது இரு கால்களையும் கைகளையும் இழந்தார் ஸ்காட் ஷ்ரோடெர். மனம் கலங்காத அவர் செயற்கை அங்கங்களைப் பொருத்திக் கொண்டார். இப்போது ஸ்கூபா டைவிங் அடிக்கிறார்!

 darpa_02

 

நம்ப முடியாத இவரின் சாகஸ செயல்கள் கை, கால்களை இழந்தவர்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமூம் ஊட்டும் செயல்பாடுகள்!

 

 

எய்மி மல்லின்ஸ் ஒரு அழகான வலிமையான உத்வேகமூட்டும் பெண்மணி. பிறக்கும் போதே அவருக்கு கால்களில் குறைபாடு. அதனால்  மனம் தளரவில்லை அவர். முழங்காலுக்கு கீழே ஆம்புடேட் செய்யப்பட்டது. இரண்டு வயதாகும் போதே செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு நடக்க ஆர்மபித்தார். பின்னர் வயதானவுடன் நீந்த அரம்பித்தார். சைக்கிள் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்றார். மாடலாகக் கூட மாறினார். அவரைப் பார்த்து உத்வேகம் பெறாதவர்களே இல்லை என்ற நிலையில் அவரது செயல்பாடுகள் இப்போது உள்ளன! பிரபலமான பீப்பிள் பத்திரிகை உலகின் 50 அழகிகளில் அவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்து உள்ளது.

 

 

இந்த வீரர்களையும் வீராங்கனைகளையும் பார்த்து விட்டு அமெரிக்க டர்பாவின் கண்டுபிடிப்பையும் நினைத்துப் பார்த்தால் மனித குலத்தில் அங்கங்களை இழந்தவர்கள் இனி வருத்தப்பட வேண்டியதில்லை என்ற நிலை தோன்றி விட்டதை அறிந்து மகிழலாம்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

 

இன்று நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஒரு காலத்தில் வெள்ளியை விட விலை அதிகமாக விற்கப்பட்ட உலோகமாகும். பிரான்ஸ் மன்னனான நெப்போலியன் ராஜாங்க விருந்துகளில் சிறப்பு விருந்தினர்களுக்கு அலுமினிய பாத்திரங்களில் தான் உணவுப் பொருள்களைப் பரிமாறச் செய்வானாம். அதுமட்டுமல்ல, விழாக்காலங்களில் அவன் அணியும் கிரீடமும் அலுமினியத்தால் செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.

அப்படி அலுமினியம் விலை உயர்ந்த பொருளாக இருந்ததன் காரணம் அதைத் தாதுப் பொருளிலிருந்து பிரித்தெடுக்கும் முறை எளிதாக இல்லை என்பது தான்.

 

 Charles_Martin_Hall_1880s  Paul-Heroult-1863-1914-Chemist

Charles Martin and Paul, who made Aluminium cheaper.

ஆனால் அலுமினியத்தை எப்படி எளிதாகப் பிரித்தெடுப்பது என்பதை இரு வேறு விஞ்ஞானிகள் தனித்தனியே ஒருவர் செய்வதை இன்னொருவர் அறியாமல் ஆராய்ந்து வந்தனர். ஒருவர் சார்லஸ் மார்டின் ஹால் (Charles Martin Hall) என்ற அமெரிக்கர். இன்னொருவர் பால் ஹெரால்ட் (Paul Heroult) என்ற பிரான்ஸ் தேசத்து விஞ்ஞானி. எலக்ட்ராலிஸிஸ் முறை மூலமாக அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது எளிதாக ஆகவே அதன் விலை வீழ்ந்து, இன்று மிகவும் மலிவாகக் கிடைக்கும் உலோகமாக ஆகியுள்ளது..

 

 

அட்லாண்டிக்கின் வெவ்வேறு  பக்கங்களில் இருந்து ஆராய்ந்த இந்த இருவரும் 1886ஆம் ஆண்டு – அதாவது ஒரே ஆண்டில் –  தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றனர். ஒரே ஆண்டில் இருவரும் வெற்றி பெற்றது மட்டுமல்ல, இவர்கள் இருவரும் 1863 ஆம் ஆண்டு – ஒரே ஆண்டில் பிறந்தனர். அது மட்டுமல்ல, இருவரும் 1914ஆம் ஆண்டில் – ஒரே ஆண்டில் மரணமடைந்தனர்.

 

என்ன அதிசய ஒற்றுமை!

 

Tags: டர்பா, செயற்கைக் கை, கால்கள், கர்லாக் கட்டை, அலுமினியம்

-Subham-

 

 

 

 

கம்ப ராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’ (Post No.3033)

Big-Crunch-to-Be-the-

Written by london swaminathan

Date: 4th    August 2016

Post No. 3033

Time uploaded in London :–  6-00 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

From the book, “Life and Labour of The People of India” by Abdullah Yusuf-Ali, Barrister at Law, Year 1907, London)

 

 

வால்மீகி என்னும் ஆதி கவி சம்ஸ்கிருத மொழியில் எழுதிய ராமாயணத்தை கம்பன் தமிழில் எழுதியதை நாம் அறிவோம்.

 

காஸ்மாலஜி/ COSMOLOGY-யை பெரும்பாலோர் அறியோம். காஸ்மாலஜி என்றால் என்ன? பிரபஞ்ச இயல். அதாவது இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? அதன் அமைப்பு என்ன? அதன் தற்போதைய நிலை என்ன? என்பனவற்றை ஆராயும் ஒரு துறை. முதலில் பட்டாணி அளவுக்கு இருந்த பிரபஞ்சம் திடீரென  வெடித்து (BIG BANG) பல்வேறு உலகங்களை உருவாக்கி, இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது என்பது இதில் விளக்கப்படுகிறது.

bigbang_expansion

இப்படி விரிந்துகொண்டே போக்கும் பிரபஞ்சம் ஒரு நாள் சுருங்கிவிடும் (BIG CRUNCH-பிக் க்ரஞ்ச்) என்று இப்பொழுது எழுதத்துவங்கியுள்ளனர். ஆனால் இதை கம்பனும் அவனுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புராண முனிவர்களும் செப்பிவிட்டனர்.

 

உலகில் முதல் முதலில் காஸ்மாலஜி பற்றிப் பாடியவர்கள் ரிக்வேத முனிவர்களே! ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129, 130 ஆகிய இரண்டு மந்திரங்களும் (நாசதீய சூக்தம்) இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைக் கண்டு வியக்கும் பாடல்கள் —  விளக்கும் பாடல்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இப்படி ஒரு அருமையான கவிதை இருப்பதைப் பற்றி நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின.

 

 

நாம் கம்ப ராமாயணப் பாடலுக்கு வருவோம்:–

 

ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி

உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி

சென்று ஆசறும் காலத்து அந்நிலையது ஆகி

திறத்து உலகம்தான் ஆகி செஞ்சவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே எங்கள்

நவைதீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி

நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே

–ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்:–

 

ஆதிகாலத்தில் ஒன்றாக இருந்து, பின்னர் பலவேறு (BIG BANG) வடிவங்களாகி, அவ்வடிவங்களில் அறிவும், உயி ரும் வெவ்வேறாகி, ஊழிக் காலம் மஹா பிரளயத்தால் முடியும் போது, முதலில் இருந்த ஒன்றாகும் நிலையைப் பெற்று (BIG CRUNCH) , மீண்டும் படைப்பு நிகழும்போது பலவகைப்பட்ட உலகங்களாகி, செம்மையாய் நின்ற ஞானக் கொழுந்தே! நீ புண்ணிய செயல்களை மேற்கொண்டவர்களைக் காக்கின்றாய், பாவம் செய்பவர்களை அழிக்கின்றாய் (பரித்ராணாய சாதூனாம், விநாசாய ச துஷ்க்ருதாம் – கீதை 4-8). நிலையில்லாத அப் பாவமும் நீ படைத்தது அல்லவா?

 

big-crunch-theory-big-bounce

உலக விஞ்ஞானிகள் சொல்லாததை எல்லாம் இந்து மதம் முன்னரே சொல்லிவிட்டது. நாம் சொன்ன பேரண்ட வெடிப்பு, பேரண்டச் சுருக்கம் (மஹா பிர்ளயம்) ஆகியவற்றை பிரபஞ்சவியல் (COSMOLOGISTS) அறிஞர்கள் இப்போது ஒப்புக் கொண்டனர். இனி இது சுழற்சியாக நடை பெறும் ஒரு செயல் பாடு (CYCLICAL) என்பதையும் ஒப்புக்கொள்வர்!

 

–subham—

 

நாசதீய சூக்தம், காஸ்மாலஜி, ரிக் வேதம்,பேரண்ட வெடிப்பு, சுருக்கம், மகா பிரளயம்

முப்பது கோடி உலகங்கள்: கம்பன் தரும் அதிசயத் தகவல்! (Post No.3031)

PLANETS VIEWS

Research Article written by london swaminathan

Date: 3RD   August 2016

Post No. 3031

Time uploaded in London :–  16-02

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பூமியைப்போல பல்லாயிரக் கணக்கில் கிரகங்கள் இருப்பதும், பால்வெளி மண்டலம் (MILKY WAY –மில்கி வே)  போல கோடிக் கணக்கில் பிரபஞ்சங்கள் இருப்பதும் இப்பொழுது விஞ்ஞானிகள் வெளியிடும் தகவல்கள். ஆனால் இது இந்துக்களுக்கு எப்பொழுதோ தெரிந்த விஷயம்!

 

நக்கபிரான் அருளால் இங்கே நடைபெறும்

உலகங்கள் கணக்கிலவாம்!

தொக்கன அண்டங்கள் — வளர்

தொகைபல கோடிபல்கோடிகளாம்

இக்கணக்கெவர் அறிவார் – புவி

எத்தனையுளதென்பது யார் அறிவார்?

— என்று பாரதி பாடியதில் வியப்பில்லை. அவர் நம் காலத்தவர்

 

ஆனால் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னால் வாழ்ந்த மாணிக்கவாசகரே — அதாவது இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரே — இந்த அரிய உணமையைப் பாடியுள்ளார். கலிலியோ, கோபர்நிகசுக்கு முன்னதாக வானத்தை அளந்தவர்கள் நாம்!

GALAXI

இதோ திருவாசகப் பாடல்:–

 

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்                               

 அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி                               

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்                                    

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன                                  

இல் நுழை கதிரின் துன்அணுப் புரையச்     

–திரு அண்டப் பகுதி, திருவாசகம்

 

இதில் அண்டம் என்பது உருண்டை வடிவானது, அது நூற்றுக்கணக்கான கோடி அண்டங்களாக விரிவடைகிறது என்ற வானவியல் கருத்துகள் சொல்லப்படுகிறது.

 

இந்தப் பிரபஞ்சம் காற்றால் ஊதப்படும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் தற்காலக் கண்டுபிடிப்புகள். ஆனால் இதை சம்ஸ்கிருத நூல்களும் , தமிழ் நூல்ல்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டன.

 

நமக்கு 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பனும் எல்லோருக்கும் தெரிந்த  — எல்லா இந்துக்களுக்கும் தெரிந்த — இவ்வுண்மையை போகும் போக்கில் சொல்லிவிடுகிறான்:–

தோன்றல் நீ முனியின் புவனத் தொகை

மூன்று போல்வன முப்பது கோடி வந்து

ஏன்ற போதும் எதிர் அல என்றலின்

சான்று வேதம் தவம் பெரும் ஞானமே

–ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்

 

இதன் பொருள்:-

தலைவனே நீ சினம் கொண்டால், இம் மூவுலகங்கள் போல முப்பது கோடி உலகங்கள் ஒன்றாகக்கூடி எதிர்த்தாலும், அவை உன் ஆற்றலுக்கு ஏற்றவை அல்ல. இவ்வாறு கூறுவதற்கு வேதங்களும், எமது தவமும், தத்துவ ஞானமும் சான்றுகள் ஆகும்.

 

முப்பது கோடி உலகங்கள் என்பதை அப்படியே அர்த்தம் (LITERAL MEANING)  கொள்ளாமல் பல கோடி உலகங்கள் என்று படிக்க வேண்டும்.

 

ஆக கம்பன் காலத்திலேயே இப்படி வானியல் அறிவு இருந்தது. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சூரிய மண்டலம் போன்றவை எ து அவர்களுக்குத் தெரியும்.

 planets_image

பிற கிரகங்களில் உயிரினங்கள்

 

விஞ்ஞானிகள் இதுவரை பிற கிரகங்களில் உயிரினங்களைக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் இந்து புராணங்கள் மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதையும் அவர்களுடைய நிலையையும் தெளிவாகக் கூறியுள்ளன:–

 

பிற கிரகங்களில் வாழ்வோருக்கு கண்கள் இமைக்காது

1.கால்கள் நிலத்தில் பதியாது

2.அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர்.

3.நினைத்த மத்திரத்தில் கிரகம் விட்டு (INTER GALACTIC TRAVEL) கிரகம் செல்வர்.

4.வேண்டிய உருவங்கள் எடுக்கவல்லவர்.

5.அவர்கள் போட்டுக்கொண்ட மாலைகள் வாடா.

6.அவர்கள் மேல் உலகில் செக்ஸில் (NO SEX REGION) (உடல் உறவில்) ஈடுபடமுடியாது.

7.அவர்களுக்கு ஒளிமிகுந்த (PHOSPHOROUS) உடல் உண்டு.

 

கம்பனும் புற அண்டம் (EXTRA TERRESTRIAL) பற்றிப் பாடுகிறான்:–

கம்பன் காலத்திலேயே புற அண்டங்களில் உயிரினங்கள் வாழ்பவது தெரியும்!

புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்

அகல்வரேனும் எம் அம்பொடு வீழ்வரால்

தகவு இல் துன்பம் தவிருதிர்  நீர்  எனா

பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்

–ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்

 

இதன் பொருள்:-

 

முனிவர் உரைத்ததைக் கேட்ட சூரிய குல ராமன், அவரிடம், இவ்வரக்கர்கள் இனிமேல் தீங்கு செய்ய மாட்டோம் என்று கூறி என்னிடம் அடைக்கலம் அடையாவிட்டால், அவர்கள் இந்த அண்டத்தை விட்டு வேறோர் அண்டத்துக்கு ஓடிப்போனாலும் என் அம்பால தாக்கப்பட்டு அழிந்தொழி வார்கள் எனவே நீங்கள் துன்பத்தை ஒழியுங்கள்.

 

இப்பாட்டில் சொல்லப்படும் அறிவியல் கருத்துகள்:–

1.புற அண்டம் உண்டு

2.அவற்றுக்கு பயணம் செய்வதும் சாத்தியமே.

 

இந்த அறிவியல் கருத்துகள் இல்லாவிடில் இத்தகைய சொற்கள் பாடலில் இடம்பெறா.

IMG_4976

இல்லாத ஒன்றை கற்பிப்பது புலவர்க்கு இயலா.

இருப்பதையே அவர்கள் சொல்லுவர்.

 

ஆக கம்பராமாயணம் முழுதும் வரும் வானில் கருத்துகளை ஒட்டு மொத்தமாக தொகுத்துப் பார்த்தால் அக்காலத்தில் மக்களுக்கு எவ்வளவு தெரிந்தது என்பதை அளவிட முடியும்

 

 

கோள், கோளம், அண்டம்

 

அண்டம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு முட்டை என்று பொருள்.

 

இந்த பிரபசம் , விண்வெளியில் உலவும் கிரகங்கள் இவறுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய இச்சொல்லிலிருந்து அவர்களுக்கு அக்காலத்திலேயே பூமி, பிரபஞ்சம் எல்லாம் வட்டவடிவமானவை என்பது தெரிந்திருந்தது என்பது தெளிவாகிறது.

 

பூகோளம், மண்டலம், கோள் என்பன எல்லாம் வட்ட வடிவத்தையே குறிக்கும்.

 

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் கோள், கோளம் என்பன கி கங்களுடன் தொடர்புடைய சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்டுவெல்களும், மாக்ஸ்முல்லர்களும் பிதற்றிய ஆரிய– திராவிட மொழிக் கொள்கைகளை உதறிவிட்டுப் பார்த்தால் அற்புதமான மூல  மொழி– உலகிற்கெல்லாம் தாய்மொழி தெரியும்.

–சுபம்–

அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Hermann's tortoise shutterstock_78129739

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Post No. 3028

Time uploaded in London :–  6-26 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை  (தித்தியம் ஆமை )  பற்றி சொல்லப்படுகிறதே; அப்படியானால் யாகத்தில் ஆமையும் உயிர்ப்பலியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று ஒரு வாசகர் கேள்வி கேட்டவுடனே, எனக்கும் முழுப் பொருள் தெரியாது, அதுவும் அகத்துறைப் பாடலில் இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்துவது பொருளற்றதாக இருக்கிறது என்று மார்ச் மாதக் கட்டுரையில் வியப்பு தெரிவித்திருந்தேன். இப்பொழுது யாக, யக்ஞங்கள் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கையில் திடீரெனப் புதுப் பொருள் கிடைத்தது. அது, பாட்டில் உவமைக்கும் பொருத்தமாக இருக்கிறது.

அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,    (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர,     (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,     (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்

yaha kunda

 

“வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல………………………”

பாடல் வரி கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள்

தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது!

 

நான் கண்ட புதுப் பொருள்:-

யாக குண்டம் கட்ட  செங்கற்களைப் பயன்படுத்துவர். இந்த நிகழ்ச்சிக்கு ‘அக்னிசயனம்’ என்று பெயர்’. பிரஜாபதியை உருவகப்படுத்தி ஆகவனீயம் என்ற தீயை அமைப்பர்; இது முத்தீக்களில் ஒன்று. ஐந்து மிருகங்களின் தலைகளும் அதில் பொருத்தப்படும்; அவைகளின் உடல்கள் நீரில்   எறியப்படும். அந்த நீரைக்கொண்டு செங்கற்கள் செய்யப்படும். எறும்புப்புற்று மண்ணையும், ஒரு குழியிலிருந்து கிடைத்த மண்ணையும் கொண்டு யாகம் நடத்துவோரின் மனைவி முதல் செங்கலைச் செய்வாள்.

 

யாகம் செய்பவர் மூன்று செங்கற்களையும் சட்டியையும் செய்வார். அதன் மீது புதிய செங்கற்கள் செய்யப்படும்.

தீட்சைக்குப் பின்னர், பல வகை வடிவங்களில்– கழுகு, பருந்து, தண்ணீர்த் தொட்டி வடிவங்கள்– யாக குண்டங்கள் அமைக்கப்படும். செங்கற்களும் பலவகை வடிவங்களில் செய்யப்பட்டு மந்திரபூர்வமாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கப்படும். இதற்கு கணித அறிவு தேவை.  மொத்தமுள்ள ஐந்து அடுக்குகளில் 1, 3, 5- அடுக்குகள ஒரு விதமாகவும் 2,4 அடுக்குகள  மற்றொருவிதமாகவும் இருக்கும்..

 

நூலை வைத்து அளப்பார்கள் (எகிப்திய பிரமிடுகளிலும் இம்முறை பின்பற்றபட்டதாலும் அங்கும் சூத்ர (நூல்) என்ற சொல் பயன்பட்டதாலும் எகிப்திய பிரமிடுகளைக் கட்டுவதிலும் இந்தியர்கள் உதவினார்கள் என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.

இதற்குப் பின்னர் ஏர் கொண்டு உழுவார்கள்.

கீழ் மட்டத்தில் ஒரு மனிதன் உருவம் தங்கத்தில் செய்து வைக்கப்படும். ஐந்து அடுக்குகளிலும் சேர்த்து, 10,800 செங்கற்கள் இருக்கும்.

ஒரு அடுக்கில் ஒரு உயிருள்ள ஆமை வைக்கப்படும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது. மற்ற பல பொருட்கள் வெ வேறு இடங்களில் வைக்கப்படும். இவை எல்லாம் எட்டு முதல் 12 மாதங்களில் முடிவடையும்.

ஐந்தே நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம்.

பல நூல்கள் இதுபற்றி உரைத்தாலும் சதபத பிராமணம் என்னும் நூலே விரிவாகப் பேசுகிறது அதனுடைய 14 காண்டங்களில் ஐந்து காண்டங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

tortoise

அகநானூற்றுப் பாடலின் பொருள்

இப்போது அகநானூற்றுப் பாடலின் பொருள் நன்கு விளங்கும்.

அதாவது பாலை நிலத்திலுள்ள தலைவனுக்கு யாக குண்டம் உவமை. அதிலிருந்து குளிர்ச்சியான சென்ற ஆமைக்கு தலைவன் உவமை. அது எப்படி குளிர்ச்சியான குளத்துக்குச் சென்று இன்பம் துய்க்கிறதோ, அது போல நீயும் இன்பம் துய்க்க இப்போது நினைக்க வேண்டாம் என்கிறார் புலவர்.

இதில் இன்னொரு விஷயமும் தெளிவாகிறது. உயிருள்ள ஆமையை அவர்கள் பலி இடுவதில்லை. அதை குளிர்ந்த நீர் நிலைக்குச் செல்ல யாகம் நடத்துவோர் அனுப்பினர். அப்படி பலியிட்டிருந்தால் அதை தலைவனுக்கு ஒப்பிடமாட்டார் புலவர்!

சங்க காலத்தில் யாக யக்ஞங்கள் ஆயிரக் கணக்கில் நடந்ததால் காதல் பாட்டில் கூட  யாக குண்ட ஆமை (யாமை) இடம் பெற்றுள்ளது!

ஆமை ரகசியம் அம்பலமானது!

buildings

சிந்து சமவெளி செங்கற்கள்!

சதபத பிராமணத்தில் மூன்றில் ஒரு பகுதி யாக குண்டம் அமைப்பது பற்றியது என்பது செங்கற்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில்  காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் போற்றப்படுவதாலும் அதை வேத கால நாகரீகம் என்று சொல்லத் தூண்டுகிறது.

மேற்கூறிய சடங்குகளில் பல தகவல்களுக்கு இப்போது பொருள் சொல்லக்கூட ஆள் இல்லை. வேதங்களை நன்றாகப் படி தால் சங்க இலக்கியத்துக்கு மேலும் தெளிவான பொருள் காணலாம்.

முந்தைய கட்டுரை/ Previous Article

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607) Research article written by london swaminathan

Date: 7 March, 2016

–subham–

 

 

 

சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! ராமாயண இன்பம் (Post No.3026)

350px-Shiva_Tripurantaka

Written by london swaminathan

Date: 1st August 2016

Post No. 3026

Time uploaded in London :–  11-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணம் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது. இதை பல்வேறு கோணங்களில் படிக்கவேண்டும். ஒவ்வொரு கடவுளுக்கும் கதா பாத்திரத்துக்கும் கம்பன் கொடுத்த அடைமொழிகளை மட்டும் தனியாக படித்து ரசிக்கலாம்.

 

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்

ஊர்  அறுத்த ஒருவனும் ஓம்பினும்

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்

 

பொருள்:-

சூர் அறுத்தவன் – முருகன்

சுடர் நேமி – திருமால்

ஊர் அறுத்தவன் – சிவன்

சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.

surasamharan

தாரகன் என்ற அரக்கனுக்கு மூன்று பிள்ளைகள்: தாரகாக்க்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி. மூவரும் பிரம்மாவிடம் வரம் பெற்று மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள், நல்லோருக்குத் தொல்லை கொடுக்கவே சிவன் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார். அதனால் அவருக்கு திரிபுராந்தகன் என்று பெயர்.

 

இக்கதை 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இருக்கிறது:-

 

ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி,

பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி

—– மதுரை இளநாகன், புறம்.55

 

முக்கண்ணன் (சிவன்) பூமியாகிய தேரில் சென்றான்; வேதங்களே குதிரையாக வந்தன. ஆதி அந்தணனாகிய பிரமன் தேர்செலுத்திச் செல்கிறான்; இமயமலையை வில்லாகவும், ஆதிசேடன் என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு வளைத்து தீ என்னும் அம்பால் மூன்று கோட்டைகளை எரித்தான். சங்க இலக்கியத்தின் நூல்களில் பல இடங்களில் சிவனின் திருவிளையாடல் இடம்பெறுகிறது.

 

இந்த த்ரிபுரம் எரித்த வரலாறு நமக்குப் பல உண்மைக  யும் உணர்த்தும்:–

 

அசுரர்களும் தவம் செய்தனர்; வரம் பெற்றனர்; அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவந்தான் கடவுள். ஆகவே தேவர்கள் ஆரியர் என்றும், அசுரர்கள் திராவிடர் என்றும் வெளிநாட்டினர் சொன்ன கதைகள் யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின.

tripura

அசுரர்களின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழில் இல்லை.

மேலும் சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ் இந்துக்களுக்கு ராமாயண, இதிஹாச புராணங்கள் நன்கு தெரிந்திருந்தன.

 

மேலும் ரஷியாவும் அமெரிக்காவும் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் கட்டுவதற்குமுன் நாம் ‘ஸ்பேஸ் ஷட்டில்’ வைத்திருந்தோம். திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளும் வானில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

 

–Subham–

கீதையின் மஹிமை: சிருங்கேரி ஆசார்யர்!(Post No.3025)

34thjagadguru

Article Written S NAGARAJAN

Date: 1st August 2016

Post No. 3025

Time uploaded in London :– 5-27 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஞான ஆலயம், இந்த மாத இதழில் (ஆகஸ்ட் 2016) வெளியாகியுள்ள கட்டுரை

முன்னுக்குப் பின் முரணாக இருப்பது அல்ல கீதை; முக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்துவது கீதை என்பதை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யாளின் மஹிமை பொருந்திய சம்பாஷணை காலத்தை வென்ற ஒன்று!

 

கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!

 

ச.நாகராஜன்

 

அறிஞர்கள் போற்றும் கீதை

கீதையின் பெருமையைப் போற்றாத உலக அறிஞர்களே இல்லை. எமர்ஸன், தோரோ, எட்வின் ஆர்னால்ட் உள்ளிட்ட மேலை நாட்டு அறிஞர்கள் கீதைக்கு உயரிய புகழாரம் சூட்டியுள்ளனர்.

மஹாத்மா காந்திஜிக்கு கீதையே வாழ்க்கை வழிகாட்டி. குறிப்பாக கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள கடைசி 19 ஸ்லோகங்களில் (ஸ்தித் ப்ரஜ்ஞஸ்ய என்பது முதல் ப்ரஹ்ம நிர்வாணம்ருச்சதி என்பது முடிய உள்ள ஸ்லோகங்கள்) தான் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் அனைத்தும் அடங்கி விட்டது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

“கீதை பிரபஞ்ச தாய். அவள் யாரையும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப மாட்டாள். அவளது கதவைத் தட்டுக்கின்ற யாருக்கும் கதவு அகலத் திறந்தே இருக்கும்”  (The Gita is the universal mother. She turns away nobody. Her door is wide open to anyone who knocks.) என்று உளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளால் அவர் கீதையின் பெருமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஸ்வாமி விவேகானந்தர் பாரதநாடெங்கும் சுற்றுப் ப்யணம் செய்யும் போதும் வெளி நாட்டிற்குச் சென்ற போதும் அவர் கையில் உடன் எடுத்துச் சென்றது கீதையே.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன்னுடன் இறுதி வரை வைத்திருந்தது பகவத் கீதையே.

 

 

கீதையைத் தினமும் படித்து வர வேண்டும் என்பது ஸ்வாமி விவேகானந்தரின் கட்டளை.

 

ஆதி சங்கரரோ பகவத் கீதா கிஞ்சித் தீதா என்று பகவத் கீதையைக் கொஞ்சமாவது படித்தவனுக்கு யம பயம் இல்லை, ஆண்டவனின் அனுக்ரஹம் உண்டு என்று பஜகோவிதத்தில் உறுதி பட அருளியிருக்கிறார்.

 

தினமும் கீதையைப் படிக்கும் போது தோன்றும் சந்தேகங்கள் பல. அவற்றை உரிய ஆசார்யர்களிடம் தெளிவு படுத்திக் கொண்டால் உத்வேகம் பிறக்கும். கீதை காட்டும் பாதையை நன்கு உணரவும் முடியும்.

sringeri 14a

sringeri Sharda Peetham temple to the right and the vidyashankara temple in sringeri. credit T. NARAYAN

 

ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹா ஆசார்யாள்

 

ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிருங்கேரி பீடம் சரஸ்வதி அன்றாடம் நர்த்தனம் ஆடும் ஞான பீடம் என்பதை அனைவரும் அறிவர். அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்களோ வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள்.

 

 

34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954).இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கும் ஒன்று!

சதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது.

 

 

அவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது.

 

 

சிறந்த உளவியல் நிபுணரான அவர்  ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன  முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு  முந்தைய தினம் ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார்.

 

அவரைப் பார்த்த ஆசார்யாள்,”அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும்? வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே!” என்றார்.

 

 

திகைத்துப் போன டாக்டர் குழப்பத்துடன் மௌனமாக நின்றார்.

“என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா? என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப்படுத்தக்கூடியது தானா?” என்று ஆசார்யாள் வினவினார்.

 

 

டாக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது. டாக்டர் சேகரித்த தகவல்களை நினைவுபடுத்தும் வண்ணம் அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது! இது என் பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார்.

 

 

கண்களில் நீர் மல்க விடை பெற்றுக் கொண்ட டாக்டர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’,. என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகராக இருந்த அவர் ஆத்திகராகவும் மாறி விட்டார்.

 

sathyamurthy

சத்தியமூர்த்தியின் சந்தேகங்கள்

 

மைசூர் ராஜ்யத்தில் பருவமழை பொய்த்துப் போக அனைவரும் ஆசார்யரை வேண்ட அவர் அருளினால் பெய்யோ பெய்யென்று  மழை கொட்டித் தீர்த்தது. அண்டை ராஜ்யமாக அமைந்த மதராஸ் பிராந்தியமும் பயனடைந்தது.

 

 

இதையெல்லாம் உணர்ந்த தேசபக்தரான தீரர் சத்தியமூர்த்தி ஆசார்யரைச் சந்தித்து நன்றி தெரிவித்து தன் மரியாதையைச் செலுத்தினார்.

 

அவரை உட்கார்த்தி வைத்த ஆசார்யார் கீதையின் பெருமையையும் அதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் விளக்கலானார். சத்தியமூர்த்தி கட்டாயமாக திரும்பிச் செல்ல வேண்டிய

ஷிமோகா செல்லும் பஸ் நேரமும் தாண்டியது. “நாளை போகலாம்” என்று கட்டளையிட்டு விட்டார் ஆசார்யர்.

பின்னால் தான் தெரிந்தது அந்த பஸ் பெரும் விபத்துக்குள்ளானது என்று!

 

சத்தியமூர்த்தி ஆசார்யரின் சம்பாஷணையால் திகைத்துப் போனார். ஏனெனில் அவர் கீதையை தினமும் படிப்பவர். அதில் தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு வந்திருந்தார். அவற்றை ஆசார்யரிட்ம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்பது அவரது எண்ணம்,

 

 

ஆனால் அவர் அதைச் சொல்லாத போதே அதற்கான சந்தேக விளக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஆசார்ய்ர் தன் உரையில் சொல்லி விட்டார்.

 

 

இதைச் சத்தியமூர்த்தி நாத் தழுதழுக்க சொல்ல ‘என்ன சந்தேகங்கள், நான் என்ன விளக்கம் சொன்னேன்’ என்றார் ஆசார்யர்.

 

 

சத்தியமூர்த்தியின் மனதில் எழுந்த சந்தேகங்களும் அதற்கு ஆசார்யரின் விளக்கமும் எந்த ஒரு கீதை பக்தரையும் மகிழச் செய்யும். அவற்றில் சில:

 

  • அர்ஜுனன் கர்மயோகத்தைச் செய்ய வேண்டியவன். போர் புரியும் தருணத்தில் கர்ம யோகத்தை மேற்கொள்ள வேண்டிய அவனிடம் கண்ணபிரான் ஏன் சாங்கிய யோகத்தையும் சந்நியாச தர்மத்தையும் கூறினார். அவசியமே இல்லையே

 

பதில்: கீதை அர்ஜுனனுக்காக மட்டும் சொல்லப்படவில்லை.அவனை முன் வைத்து உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியதை கண்ணன் எடுத்துரைத்தார்.

  • கர்மண்யேவாதிகாரஸ்தே (கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் இருக்கிறது கீதை 2-47) என்றும் ஸ்வகர்மணா த்வமர்ப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ (பரம்பொருளைத் தம் கட்மையைச் செய்தலென்ற பூஜையினால் மகிழ்ச்சிபெறச் செய்து சித்தி பெறுகிறான் கீதை 18-46) என்றும் கூறி கர்மாக்களால் தான் மோக்ஷ பலன்கள் கிடைக்கும் என்று கூறிய பகவானே ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (எல்லா தர்மங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரண் அடை கீதை 18-66) என்று சொல்வது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே

 

பதில் : முன்பு சொன்ன அதிகாரி பேதம் என்ற காரணமே இங்கும் பொருந்தும். ஸித்தி என்பதை சித்த சுத்தி என்று வைத்துக் கொண்டால் அது கர்மங்களைச் செய்பவருக்கு என்று ஆகும். சர்வதர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மங்களையும் துறத்தல்) என்றால் அது ஞானாதிகாரிக்கான விஷயமாக ஆகி விடும்.

  • முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனின் விஷாதம் (துக்கம்) சொல்லப்பட்டிருக்கும் போது இறுதியில் தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி (அங்கு ஸ்ரீ என்னும் லக்ஷ்மி,ஜயம்,நீதியும் நிலைத்திருக்கும் கீதை 18-78), என்று சொல்லப்படுகிறது.. ஆரம்பம் முடிவுடன் பொருந்தவில்லையே!

 

பதில் : கீதையின் முதல் அத்தியாயம் ஒரு அறிமுக முகவுரை தான். இரண்டாவது அத்தியாயத்தில் அஸோஸ்யானஸ்ய சோகஸ்த்வம் (வருந்தத் தகாதவர்களைப் பற்றி நீ வருந்துகிறாய் கீதை 2-11) என்பதில் தான் கீதா சாஸ்திரம் துவங்குகிறது. அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:” (உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே கீதை 18-66) என்பதுடன் கீதை  முடிகிறது. அஸோஸ்யானய (வருந்தத் தகாதவர்கள்) என்று ஆரம்பித்து மாஸுச (வருந்தாதே) என்று முடிவதால் ஆரம்பமும் முடிவும் அற்புதமாகப் பொருந்தி வருவது தெளிவாக விளங்குகிறது.

 

 

கேள்வி: இப்படி எடுத்துக் கொண்டால் அர்ஜுனனைப் பார்த்து நீ என்றும் உன்னை என்றும் கூறுவதால் அது அர்ஜுனனுக்கு மட்டும் தானே பொருந்தும். மற்றவர்களுக்கு கீதோபதேசம் இல்லையா? அது அர்ஜுனனுக்கு மட்டும் தானா?

பதில் : அர்ஜுனன் என்ற பதத்திற்கு அமரகோசத்தில் வெளுப்பானவன்,பரிசுத்தன், சித்த சுத்தி உடையவன் என்று அர்த்தங்கள் கூறப்படுகிறது. முக்கிய்மானவ்னை முன்னிலைப்படுத்திச் செய்வதே உபதேசம். ஆகவே அர்ஜுன பதத்தின் அர்த்தத்துட்ன் பொருந்தும் அனைவருக்கும் இது பொருந்தும்.

 

 

இப்படி ஒவ்வொரு கேள்வியாக சத்தியமூர்த்தி கூறி அதற்கான பதிலைப் பெற்றதையும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அங்கு குழுமியிருந்த அனைவரும் இந்த உரையினால் கிருஷண – அர்ஜுன சம்வாதத்தை நேரில் கேட்டது போல மகிழ்ந்தனர்.

 

 

காலத்தை வென்ற கீதையை அனுதினமும் ஒதி வந்தால் அர்த்தமும் புரியும்; அனுக்ரஹமும் கிடைக்கும்!

*************

 

ஆகஸ்ட் 2016 காலண்டர் (Post 3023)

yasotha feeding krishna,fb

உலக அறிவு பற்றி 31 பொன் மொழிகள்

Compiled by london swaminathan

Date: 31 July 2016

Post No. 3023

Time uploaded in London :–  16-38

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஆகஸ்ட் மாத (துன்முகி ஆடி-  ஆவணி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– ஆகஸ்ட் 2-ஆடிப் பெருக்கு/ஆடி அமாவாசை;

5 -ஆடிப்பூரம்; 7- நாக பஞ்சமி; 12-வரலட்சுமி விரதம்; 15-சுதந்திர தினம்

18-ஆவணி அவிட்டம்/யஜூர் உபாகர்மா/ரக்ஷா பந்தன்;

25-ஜன்மாஷ்டமி/கோகுலாஷ்டமி

 

அமாவாசை – 2

பௌர்ணமி – 18

ஏகாதசி – 14, 28

ஆகஸ்ட் முகூர்த்த நாட்கள் – 21, 22, 29

when_is_Nag-Panchami_in_2016

ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் – குறள் 140 (உலக மக்கள் செய்வதைப் பின்பற்றாதவன் முட்டாள்)

 

ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்  வையத்து அலகையா வைக்கப்படும்– குறள் 850 (கடவுள் இல்லை என்று சொல்பவன் பேய்)

 

ஆகஸ்ட் 3 புதன்கிழமை

ஊரோடு ஒத்து வாழ்

 

ஆகஸ்ட் 4 வியாழக்கிழமை

காணாதான் காட்டுவான் தான் காணான் –குறள் 849 (முட்டாளுக்கு உபதேசம் செய்பவன் முட்டாள் ஆகி விடுவான்)

 

ஆகஸ்ட் 5 வெள்ளிக் கிழமை

ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.

 

ஆகஸ்ட் 6 சனிக்கிழமை

ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்

 

ஆகஸ்ட் 7 ஞாயிற்றுக்கிழமை

தனியாகச் சிரிக்காதே (ந கல்வேகாகின்யா ஹஸிதவ்யம்)

krishna flute, fb

ஆகஸ்ட் 8 திங்கட்கிழமை

பூனை இல்லாத போது, எலிகள் விளையாடும் ( ந பிடாலோ பவேத்யத்ர  தத்ர க்ரீடந்தி மூஷகா:)

 

ஆகஸ்ட் 9 செவ்வாய்க்கிழமை

தெரியாத இடத்தில் தனிமையில் சுற்றாதே (நைகாகீ சஞ்சரேத்வீபினம்)

 

ஆகஸ்ட் 10 புதன்கிழமை

அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றைப் புகழ்வர் (சேஷ்டிதம் சகலை: சர்வம் ச்வானுரூபம் ப்ரசஸ்யதே)

 

ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை

ஆடு போல தின்னு, யானை போல குளி ( அஜவச்சவர்ணம் குர்யாத்கஜவத் ஸ்நானமாசரேத்)

 

ஆகஸ்ட் 12 வெள்ளிக் கிழமை

குருடர்களின் ராஜ்யத்தில், ஒற்றைக்கண் உடையோன் ராஜா ( அந்தகானாம் காணோ ராஜா)

 

ஆகஸ்ட் 13 சனிக்கிழமை

மரியாதை தெரியவனுக்கு மரியாதை காட்டினால் சோபிக்காது ( அமர்யாதேஷு மர்யாதா க்ரியமாணா ந சோபதே)

 

ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக்கிழமை

மேற்பார்வையிடாத விவசாயம் நஷ்டமடையும்  (அவஸ்யம் விபலா யாதி க்ருஷி: ஸ்வேனானவேக்ஷிதா)

RAKSHABANDAN1

ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை

மருந்துக்குதவாத வேரும் இல்லை, மந்திரத்தில் பயன்படாத எழுத்தும் இல்லை (உருப்படாதவன் என்று எவனும் இல்லை)

அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்

 

ஆகஸ்ட் 16 செவ்வாய்க்கிழமை

தெய்வீக செயல்களையும், முன்னோர் செய்ததையும் கேள்வியால் துளைக்காதே (திவ்யானுபாவம் பூர்வேஷாமவிசார்யம் ஹி சேஷ்டினாம்)

 

ஆகஸ்ட் 17 புதன்கிழமை

நிலவு வானில் வலம் வந்தால், நட்சத்திரங்கள் அவைகளை தானாகப் பின்பற்றும் (ஆகதே சந்த்ரே சமாகதானி சர்வ நக்ஷத்ராணி)

 

ஆகஸ்ட் 18 வியாழக்கிழமை

கட்டளையிட்டாலும் தனது கழுதை மீது ஏறமாட்டான் வண்ணான் ( ஆக்ஞாபிதஸ்து ரஜகோ நைவாரோஹதி கர்தபம்)

 

ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை

காற்றடிக்காலத்தில் இடி இடித்தாலும் மின்னல் வெட்டினாலும் மழை பெய்யாது ( உச்சை: சரத்ஸு கர்ஜந்தோ நைவ வர்ஷந்தி வாரிதா:)

 

ஆகஸ்ட் 20 சனிக்கிழமை

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு

 

ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமை

ஒரு முள்ளால் மற்றொரு முள்ளை எடு ( கண்டகேநைவ கண்டகம்)

upa2005_2

ஆகஸ்ட் 22 திங்கட்கிழமை

அழைக்காத இடங்களுக்குப் போகாதே (க்வாபி ந கச்சேத் அனாஹூத:)

 

ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை

ராஜ பாட்டையில் நடை போடு (கந்தவ்யம் ராஜ பதே)

 

ஆகஸ்ட் 24 புதன்கிழமை

நீரில் குதிக்காமல் நீந்தக் கற்க முடியாது (ஜலாவகாஹனம் த்யக்த்வா ந கோபி தரணக்ஷம:)

 

ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை

ஜாதியின் பேரில் யாரையாவது மதிக்க முடியுமா? மிதிக்க முடியுமா? (ஜாதிமாத்ரேன கிம் கசித்தன்யதே பூஜ்யதே க்வசித்)

 

ஆகஸ்ட் 26 வெள்ளிக் கிழமை

இரண்டு கட்சிகளும் அவன் சமரசம் செய்வதை ஏற்கவில்லை; அவனோ தீர்ப்பு சொல்லத் துடிக்கிறான் (அஸ்வீக்ருதோபி பக்ஷாப்யாம் ந்யாயம் கர்தும் சமுத்யத:)

 

ஆகஸ்ட் 27 சனிக்கிழமை

அடடா! மரத்தின் உச்சியில் பலாப்பழம்; நாவில் நீர் சுரக்கிறது(ஓஷ்டே தைலம் தரௌ சாஸ்தே சுபக்வம் பனசம் பலம்)

krishna in sky

ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்

 

ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை

(கழுத்தைச் சுற்றி தங்கச் சங்கிலி; கோவில் மாடத்தில் போய்த் தேடுகிறார்கள் (கண்டே ஹிரண்மயீ மாலா ம்ருக்யதே மந்திரே தரே)

 

ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை

படத்திலுள்ள சிங்கம், நிஜ சிங்கம் செய்யும் வேலையைச் செய்யுமா? (கிம் சித்ரோ லிகித: சிம்ஹ: சத்ய சிம்ஹ க்ரியாம் ஸ்ப்ருசேத்)

 

ஆகஸ்ட் 31 புதன்கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.

 

–Subham–

 

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10 (Post No.3022)

nps2000buddha_colored

Article Written S NAGARAJAN

Date: 31 July 2016

Post No. 3022

Time uploaded in London :– 5-38 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10

ச.நாகராஜன்

 

coin buddha

ஆலயத்தை புனருத்தாரணம் செய்வதற்காக பல காத தூரம் நடந்து ஹேமு மரம் என்ற இடத்தை ஸு யுன் அடைந்தார்.

அங்கு செல்லும் சாலை மிகவும் கரடு  முரடாக இருந்தது. ஒரே வளைவுகள். பல வருடங்களாக அது கேட்பாரற்று கவனிப்பாரற்று இருந்திருக்கிறது போலும்!

அங்கிருந்த உள்ளூர்வாசிகள் அங்கு ஒரு துறவி இருக்கிறார் என்றும் தனியாக தான் ஒருவராகவே அந்த சாலையை அவர் சீர் படுத்தி வருகிறார் என்றும் ஸு யுன்னிடம் கூறினர்.

அவர் எந்த ஒரு நன்கொடையையும் கேட்பதில்லை என்றும் தான் உயிர் வாழத் தேவையான குறைந்த ப்ட்ச உணவை  மட்டும் அவர்களிடமிருந்து பெற்று வருகிறார் என்பதையும் ஸு யுன் அறிந்தார். பல பத்து ஆண்டுகளாக அந்த நீண்ட நெடுஞ்சாலையை அவர் சீர் படுத்தி வருகிறாராம்!

இப்போது 90 சதவிகிதம் அந்தப் பணி முடிந்து விட்டதாம்!

அங்குள்ள ஆலயத்தை உள்ளூர்வாசிகள் புனருத்தாரணம் செய்வதாகச் சொன்ன போதும் அவர் தன் வேலையான சாலைப் பணியில் ம்ட்டுமே ஈடுபட்டு வந்தாராம்.

அவரைப் பார்க்க ஸு யுன் விரைந்தார்.

ஒரு மண்வெட்டி கூடையுடன் அந்தத் துறவி சாலையில் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கூப்பிய கரங்களுடன் ஸு யுன் அவரிடம் விரைந்து சென்றார். நமஸ்கரித்தார்.

அவர் ஸு யுன்னைக் கண்டு கொள்ளவே இல்லை.. ஸு யுன்னைப் பார்த்த அவர், எதுவும் பேசாமல் தனது தங்குமிடமான ஆலயம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்.

ஆலயத்தில் தன் கருவிகளை வைத்த அவர் அமர்ந்தார். ஒன்றுமே பேசவில்லை. அவர் எதிரேயே ஸு யுன்னும் அமர்ந்தார்.

அடுத்த நாள் காலையில் அரிசியைக் களைந்து உலையில் போட்ட போது ஸு யுன் அடுப்பை மூட்டினார்.

சாப்பிடும் போது அவர் ஸு யுன்னை அழைக்கவில்லை. ஸு யுன்னோ தனக்கு வேண்டிய உணவைத் தானே எடுத்துக் கொண்டு உண்டார்.

மண்வெட்டியை  எடுத்துக் கொண்டு அவர் சாலையை நோக்கி விரைய ஸு யுன்னும் கூடையை எடுத்துக் கொண்டு அவர் பின்னால் போனார்.

சாலையில் பள்ளங்கள் சீராக்கப்பட்டன. வேலை தொடர்ந்தது.

 

இப்படியாக 10 நாட்கள் கழிந்தன. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

ஒரு நாள் மாலை ஆலயத்திற்கு வெளியே இருந்த பாறை ஒன்றில் அமர்ந்த ஸு யுன் தியானம் செய்ய அமர்ந்தார்.நேரம் கழிந்தது.

ஆனால் ஸு யுன் உள்ளே செல்லவில்லை. வயதான அந்த துறவி பின்னால் வந்து கூப்பிட்டார்: “அங்கே நீங்கள் என்ன செய்து  கொண்டிருக்கிறீர்கள்?”

கண்ணை மெதுவாகத் திறந்து பார்த்த ஸு யுன் பதில் கூறினார் இப்படி:-“ நான் சந்திரனைப் பார்க்க விரும்பி இங்கு அமர்ந்திருக்கிறேன்.”

 

“சந்திரன் எங்கே இருக்கிறது?”

“அற்புதமான ரோஜா வண்ண ஒளியாக இருக்கிறது!”

அவர் கூறினார்: “பொய்மைக்கு இடையில் மெய்யை அரிதாகவே தான் காண முடியும்!  வானவில்லைப் பார்த்து பிரகாசமான ஒளி என்று தவறாக நினைத்து விடக் கூடாது!”

ஸு யுன் பதில் கூறினார்:” என்னைத் தழுவும் ஒளி இறந்த காலமும் அல்ல; நிகழ்காலமும் அல்ல, இடையறாமல் வரும் அது எதிர்மறையானதும் அல்ல; உடன்மறையானதும் அல்ல!”

 

அதைக் கேட்ட அவர் கலகலவென்று சிரித்தார்.

ஸு யுன்னின் கரங்களைப் பற்றினார். “மிகுந்த நேரம் ஆகி விட்டது. ஆலயத்தினுள் செல்ல்லாம்” என்றார் அவர்.

மறு நாள் உற்சாகமாக அவர் பேசத் தொடங்கினார்.

அவர் பெயர் சான் ஸியூ.24 வயதிலேயே அவர் உலகைத் துறந்து விட்டார்.  ஜின் சான் மடாலயத்தில் சேர்ந்த அவர் தன் அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்தினார்.

பின்னர் சீனாவில் உள்ள புனித மலைத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

திபெத்திற்குச் சென்ற அவர் பர்மா வழியே மீண்டும் சீனா திரும்பினார்.

 

இங்குள்ள சாலை மிக மோசமாக இருந்ததைப் பார்த்த அவர் அங்குள்ள மக்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்டார். தரணிம்தார போதிசத்துவரால் நிர்மாணிக்கப்பட்ட அந்த சாலையை சீர்திருத்த கங்கணம் பூண்டார்.

பல பத்து வருடங்கள் ஓடி விட்டன. சாலை சீரடையும் பணி முடியும் தருவாய் வந்து விட்டது. இப்போது அவருக்கு வயது 83!

 

எந்த ஒரு நல்ல நண்பரையும் அவர் இதுவரை காணவில்லை.

நல்ல கர்ம பலன்களைக் கொண்ட ஸு யுன்னை இப்போது அவர் கண்டு விட்டார்.

ஆகவே மனம் திறந்து தன்னைப் பற்றி இது வரை யாரிடமும் கூறாத விஷயங்களை ஸு யுன்னிடம் அவர் கூறினார்.

ஸு யுன்னும் மகிழ்ந்து தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறினார்.

மறு நாள் காலை. பொழுது புலர்ந்தது. காலை உணவை அருந்தி விட்டு ஸு யுன் விடை பெற்றார். இருவரும் கலகலவெனச் சிரித்தனர். சிரித்தவாறே ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

-தொடரும்

மூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்! (Post No.3020)

constituition

Article Written S NAGARAJAN

Date: 30 July 2016

Post No. 3020

Time uploaded in London :– 9-18 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

85 சதவிகிதம் ஹிந்துக்களைக் கொண்ட இந்தியா தன் பாரம்பரியத்தை அரசியல் சாஸனத்தில் ஏன் பிரதிபலிக்க வைக்கவில்லை என்பது புரியாத புதிர்!

 

எல்லா தேச அரசியல் சாஸனங்களையும் எடுத்துப் படித்துப் பார்த்தால் நமக்கு வியப்பு மேலிடும்.

 

அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் தங்கள் நம்பிக்கையையும் தெள்ளத் தெளிவாக அரசியல் சட்டத்தில்  முன்னுரையிலேயே (Preamble) புலப்படுத்தி விடுகிறார்கள்.

மூன்று நாடுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

 sl constitution.jpg

ஸ்ரீ லங்காவின் அரசியல் சட்ட முன்னுரை (Sri Lanka Preamble SLP) ஸ்வஸ்தி என்று ஆரம்பிக்கிறது. (நமது சோழர் கால கல்வெட்டுக்கள் உட்பட ஸ்வஸ்தி என்றா மங்களகர்மான சம்ஸ்கிருத வார்த்தையிலேயே ஆரம்பிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு நினைவு கூரலாம்)

 

தங்களது வீரம் கொண்ட போராட்டங்களை அது சொல்கிறது. பாரம்பரியப் பண்பாட்டை நன்றியுடன் நினைவு கூர்கிறது. புத்தமதத்தையும் புத்த சாஸனைத்தையும் 9ம்பிரிவில் கூறுகிறது. இப்படி புத்தமதத்தை அது ஏற்றுக் கொண்டதால் பெருமை அல்லவோ பெறுகிறது!

வாழ்க ஸ்ரீலங்கா!

 

அடுத்து அயர்லாந்து ஏசு கிறிஸ்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறது. தங்களது மூதாதையரின் தியாகங்களை அது நன்றியுடன் நினைவு கூர்கிறது. கிறிஸ்தவ நாடு என்று சொல்லிக் கொள்வதில் அது பெருமை கொள்கிறது!

வாழ்க அயர்லாந்து!

 

அடுத்தது நாம் வியக்கும் நேபாளம். ஹிந்து நாடு என்பதில் பெருமை கொள்ளும் ஒரே நாடு அது தான். உலகின் ஒரே ஹிந்து நாடு அது தான்!

 

அங்கு 2007இல் ஏற்பட்ட அரசியல் சட்டம் அதை செகுலர் நாடு என்று சொல்ல வைத்தாலும் அதனுடைய தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதன் தேசீய மிருகம் பசு! புனிதமான பசுவின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ!

 

ஹிந்து மதம் எதையெல்லாம் புனிதமாகக் கருதுகிறதோ அதையெல்லாம் நேபாளம் புனிதமாகக் கருதி அறிவிக்கிறது – அதிகார பூர்வமாக!

 

வாழ்க நேபாளம்!

 nepal-constitution

ஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, அனைத்து நல்லனவற்றையும் தாயகமாகக் கொண்ட இந்தியா …  ??

 

ஹிந்து என்று சொல்லிக் கொள்ளத் தயங்கி விட்டது.

ஒரு ஹிந்து நாடு என்று சொல்லிக் கொண்டாலேயே மற்ற மதங்களை அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையாகி விடும்.

ஒரு ஹிந்து செகுலரை விட அதிகம் செகுலர் இல்லையா?

 

(More secular than the so called secular in real sense, is it not?)

 

மத வழிபாட்டில் சுதந்திரம் தரும் ஒரே மதம் ஹிந்து  மதம் தான், இல்லையா!

 

சிந்திக்க வேண்டும்!

**********