இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – திருகோண மலை Part 6
17.திருகோண மலை
இலங்கையில் இந்து மஹா சமுத்திரத்தின் கரையில் அமைந்துள்ள திருகோண மலை (Trincomalee) சிவ பெருமான் தலம் என்பது மட்டுமல்ல. முக்கிய ராணுவ கேந்திரமும் ஆகும். இயற்கையான துறைமுக வசதி இருப்பதால் முக்கிய கடற்படை தளமும் ஆகும்.
சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் என்பதால் குறைந்தது 1500 ஆண்டுக்கு முந்தைய சிவ பூமி என்பது உறுதியாகிறது
கோவிலை அணுகியவுடன் பிரம்மாண்டமான சிவன் சிலை நம்மை வரவேற்கிறது ; போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்களால் சேதமாக்கப்பட்டபோதும் இன்று புத்துயிர் பெற்று விளங்குவதால் இந்து மதம் சநாதன மதம் (என்றும் உளது; அழிவே இல்லாதது) என்பதும் உறுதியாகிறது .
கொழும்பு நகரிலிருந்து சுமார் 265 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குக் கடற்கரையில் கோவில் இருக்கிறது காரில் சென்றால் 5 மணி நேரம் ஆகும் ; ஆயினும் நாங்கள் டாக்சியில் ஒரே நாளில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, வழியில் அனுராதபுரம் புத்த தூபியையும் தரிசித்துவிட்டு…………………….
ரோஜாக்களைக் கொடுக்கும் கையில் எப்பொழுதும் கொஞ்சம் நறுமணம் ஒட்டிக்கொண்டிருக்கும். நீங்கள் பெருந்தன்மையுடன் இருந்தால், நீங்கள் அனைத்தையும் அடைவீர்கள். –கன்பூசியஸ்
•பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்– தமிழ்ப் பழமொழி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் –தமிழ்ப் பழமொழி
மூதுரை –அவ்வையார்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
விளக்கம்
உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்………………………………
தானங்களில் சிறந்தது விஷய தானம்; நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்கு பிரதிபலனை எதிர்பாராது அளிப்பது நல்லது.
சில மாதங்களுக்கு முன்னர், லண்டனுக்கு வந்திருந்த தமிழ் நாடு பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பார்லிமெண்ட் கட்டிடத்திற்குள் கமிட்டி அறைகளில் ஒன்றில் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது . அதற்கு அழைக்கப்பட்ட 70 பேர்களில் நானும் ஒருவன்.
கூட்டம் துவங்குவதற்கு முன்னால், திரு. அண்ணாமலையுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது ; என்னை அறிமுகம் செய்து வைத்தவர் எனது ,……………………………………………….
கதிர்காமம் புகழ்பெற்ற முருகன் கோவில் ஆகும். 500 ஆண்டுகளுக்கு முன்னரே அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்ட தலம் . கொழும்பு நகரிலிருந்து சாலை வழியாகச் சென்றால் 270 கி.மீ. சுமார் 4 மணி நேரத்தில் அடைந்துவிடலாம். கோவிலைத் தரிசிக்க அரைமணி நேரம் போதும். அங்கே நாம் காணப்போவது வெறும் திரைச் சீலைகள்தான் . நாம் வீட்டில் தொங்கவிடும் திரைச் சீலைகள் போல ஒவ்வொரு சந்நிதிதியிலும் படங்கள் தொங்குகின்றன.. முருகன் படம் போலவே பிள்ளையார், சிவன், புத்தர், பத்ரகாளி முதலிய படங்கள் தொங்கும் தனித்தனி கோவில்கள்/சந்நிதிகள் உள்ளன. புத்தருக்கும் ஒரு சந்நிதி உண்டு. அண்மைக் காலத்தில் கிறிஸ்தவ முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களும் வளாகத்தின் ஒரு கோடியில் இருக்கின்றன.
சிங்கள மக்கள் இந்தக் கோவிலை கதிரகாம தேவியோ/ தெய்வம் என்ற பெயரில் வழிபடுகின்றனர் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஹெல்த்கேர் மாத இதழில் செப்டம்பர் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
72000 நாடிகளும் ஆரோக்கியம் தரும் ஆசனங்களும்!
ச.நாகராஜன்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப, விண்வெளி, செயற்கை அறிவு யுகத்தில் முதலிடம் பெறுவது ஆரோக்கியத்துடனான நீண்ட நாள் வாழ்க்கையை அனுபவிக்கும் வழிகளை மனிதர்கள் கடைப்பிடிப்பது தான்!
இதை முன்னிறுத்தியே இப்போது உலகெங்கும் உள்ள நாடுகளில் அனைத்து ஆராய்ச்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில் நமது நாட்டு ஆராய்ச்சிகளைக் கவனித்தோம் என்றால் நாம் ஒரு காலத்தில் மிகவும் முன்னணியில் இருந்திருப்பது தெரிகிறது.
சுஸ்ருதர் மிக நுண்ணிய கருவிகள் 122ஐக் கண்டு பிடித்துக் கையாண்டு………………………………………………………………….
PICTURES WERE TAKEN BY LONDON SWAMINATHAN WHEN HE VISITED COLOMBO MUSEUM ON SEPTEMBER 8, 2023.
Anuradhapura Gold Plates
The script of the gold plates is in Sinhala of the 9th century and the language is Sanskrit. The appropriate weight of the gold plate is 73 ozs. The plates measure 25 inches in length 2.3 inches in breath (Seneviratna, 1994).
It is in Colombo Museum
After 30 years of excavation work, the wonders of this site can once again be viewed by the people.Citing the case of the Mahayana Buddhist statues offered by the South Indian
முன்னேஸ்வரம் கோவில் பற்றி இந்து இளைஞர் மன்றம் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திகள் இதோ:
குளக்கோட்டு மகராசனின் பணி:
சோழ நாட்டின் திருவாரூரில் மனுநீதி கண்ட சோழன் வம்சத்தவரான வாமதேவ மகாராஜாவின் புத்திரரான பாலசிருங்க மகாராஜா எனப்படும் குளக்கோட்டு மகாராஜா கலியுகம் 512ல் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகைத் தந்து பல்வேறு திருப்பணிகளை செய்வித்தான். குளக்கோட்டு மன்னன் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தருகையில் மிகவும் பழம் பெருமையை ஆலயம் இழந்து அழிந்து சிதைவடைந்து இருந்துள்ளது. மன்னன் மனம் வெதும்பி திருக்கோவிலை மீண்டும் கட்டுவித்தார்.
சித்தாமிர்த தீர்த்தம், சிவதீர்த்தம், முதலான குளங்களை சுத்தம் செய்து தன்குல குருவாகிய நீலகண்ட சிவாச்சாரியார், அவரது துணைவியார் விசாலாட்சி அம்மையார், அவர்களின புத்திரர்களையும் முன்னேஸ்வரம் வரவழைத்து மற்றும் சோழ நாட்டிலிருந்து பிரமண குருமார்களையும் வரவழைத்து சுபநாளில், சுப முகூர்த்தத்தில் கும்பாபிஷேகத்தையும் நடத்திவைத்தான்.
சோழ நாட்டிலிருந்து ஆலயத்தின் அனைத்து வேலைகளையும் செய்வதற்காக பிராமணர், செட்டி, வோளர், வீரமுட்டி, சங்கமநாதர், கொல்லர்,……………………………
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 16 : ஓஸோன் தினம்!
இதையொட்டி மாலைமலர் நாளிதழில் 14-9-2023 அன்று வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் புவி வெப்பம்!
ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்!
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
காற்றுத் தரக் குறியீட்டு எண்
காற்றுத் தரக் குறியீட்டு எண் எனப்படும் ஏர் க்வாலிடி இண்டெக்ஸில் பூஜ்யம் முதல் 300க்கும் அதிகம் என ஆறு மட்டங்கள் உள்ளன. இதில் 50 என்ற எண் அளவு உலகளாவிய விதத்தில் ஏற்புடைய அளவு ஆகும். 350 என்ற எண் காற்றின் மிக மிக மோசமான நிலையைக் குறிப்பதாகும். 400க்கும் மேற்பட்ட நிலையில் ஆரோக்கியமான ஒருவர் கூட சுவாசக் கோளாறை அடைவர். 999 என்ற எண் நச்சு நிரம்பிய அறையில் இருப்பது போலாகும்.
PLEASE CONTINUE IN FACEBOOK OR SWAMIINDOLOGY.BLOGSPOT.COM