Find out 8 famous towns in India beginning with letter U. Here are the clues:
1.Jyotirlinga shrine in Madhya Pradesh; Maha Kaleshwar is the name of Lord Shiva here.
2. This was ancient Choza town, now part of Trichy; Ther was a famous judicial court where from Karikal Choza settled the cases.
3.Town in Uttarakhand state on the banks of River Bhagirathi; Shive temple like Kashi is here. Mountaineering institute is popular.
4.Town in Uttar Pradesh ; famous for leather goods, ,Leather Factories, mosquito net, Zardozi and chemical industries.A historical town.
5. Major attractions in thisr city in Jammu- Kashmir include Gole Market, Devika Ghats, Jakahni Park, Ramnagar chowk (Pandav mandir and Kachalu), Salain Talab, and the Main Bazar.
6.Most famous Krishna temple in Karnataka and Madhwa was born very near this town.
7.This town in Tamil Nadu became famous when the Choza inscription describing the democratic process of election at village level was discovered. That even gives the qualifications for a candidate.8. THE CITY OF LAKES AND PALACES in Rajasthan.Often referred to as the ‘Venice of the East’. The famous Lake Palace, located in the middle of Lake Pichola is one of the most beautiful sights .
சங்கீதக் கச்சேரிகளினால் சின்ன கிராமங்களும் புகழ் பெற்றன ; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் .
1.புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி எப்படிப் புகழ் அடைந்தது?
xxxx
2.காருக்குறிச்சி என்றால் யார் நினைவுக்கு வருவார்? ஏன் ?
xxx
3.வயலின் வித்வான் வைத்யனாதானால் பிரபலமான கிராமம் எது?
Xxxx
4.கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களும்தான் இசை உலகில் பெயர்பெற்றன. பாம்பே என்று ஒருவர் சொன்னால் எந்த கர்நாடக இசை மேதையின் பெயரைச் சேர்ப்பீர்கள் ?
xxxx
5.உமையாள்புரம் வாசிக்கிறார் என்றால் என்ன பொருள்? அது வெறும் ஊர்ப்பெயர் ஆயிரன்றே!
Xxxx
6. கர்நாடக இசை ரசிகர்கள், கீழ்கண்ட ஊர்களுடன் யார் பெயரைச் சேர்ப்பார்கள்?
6.நாமகிரிப்பேட்டை–
பாபநாசம் –
பாலக்காடு —
காரைக்குடி —
xxxx
7.மதுரை நகரைப் பெயருடன் இணைத்து மதுரைக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்த 2 கர்நாடக இசைப் பாடகர்கள் யார் ?
xxxx
8.ஊத்துக்காட்டிற்கு புகழ் சேர்த்த வேங்கடசுப்பையர் எப்படிப்புகழ் சேர்த்தார் ?
Xxx
9.திருவாரூர் என்றால் சங்கீத முமூர்த்திகள் நினைவுக்கு வருவது ஏன்?
xxxx
10.ஜனவரியில் எல்லா பிரபல சங்கீதக் கலைஞர்கர்களும் திருவையாருக்குப் பயணம் செய்வது ஏன்?
xxxx
விடைகள்
Xxxx
1.வலையப்பட்டி தவில் :வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார் .2014ல் சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றார்.
xxxx
2.காருக்குறிச்சி அருணாசலம் சிறந்த நாதசுரவித்வான்.
xxxx
3.குன்னக்குடி ; வைத்யநாதன் சிறந்த வயலின் வித்வான்
xxxx
4.பாடகி பாம்பே ஜெயஸ்ரீ
xxxx
5.உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் (பி. டிசம்பர் 17, 1935), ஒரு மிருதங்க வித்வான் , பத்ம விபூசண் விருதை 2010-ஆம் ஆண்டு பெற்றார்;
xxxx
6.நாமகிரிப்பேட்டை– கிருஷ்ணன்
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் (2 ஏப்ரல் 1924 – 30 ஏப்ரல் 2001)[1], தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர்
பாபநாசம் – சிவன்
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 – அக்டோபர் 1, 1973) கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசை அறிஞர் ஆவார்.
பாலக்காடு –மணி ஐயர்
பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் (10 ஜூன் 1912 – மே 30, 1981) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். இவரை நேயர்கள், ‘கலியுக நந்திகேசுவரர்’ என்று செல்லப் பெயரால் அழைத்தனர்.
காரைக்குடி மணி– மிருதங்க கலைஞர்
xxxx
7.மதுரை சோமு
பாரத ரத்னா பட்டம் பெற்ற மதுரை எஸ் சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி;16 September 1916 – 11 December 2004)
xxxx
8.ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (1715 – 1775) 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர். தமிழிலும் வடமொழியிலும் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், ஜாவளி, தில்லானா, காவடிச்சிந்து போன்ற பல்வகை இசைவடிவங்களையும் இயற்றியவர் (வாக்கேயகாரர்)
xxx
9.கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்..
Xxxx
10.தியாகராஜர் சமாதி திருவையாற்றில் உள்ளதால் அவர் இறந்த திதியில் அங்கு ஆராதனை நடக்கும் . எல்லோரும் அதில் காலத்து கொண்டு பஞ்ச ரத்னக் கீர்த்த னைகளைப் பாடுவார்கள்.
—subham—
Tags– சங்கீதத்தில் , ஊர்கள் பத்து , Quiz, தியாகராஜர் சமாதி, ஊத்துக்காடு, பாபநாசம் சிவன், காருக்குறிச்சி காரைக்குடி மணி-, மிருதங்க கலைஞர்
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28
119.கனககிரி கனகாசலபதி கோவில் (Kanakachalapathi Temple)
இது ஒரு விஷ்ணு கோவில். இந்தப் பெருமாள் கோவில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது கொப்பல் Koppal என்னும் ஊருக்கு அருகில் உள்ளது கொப்பலிலிருந்து 3 கி.மீ. பழங்காலத்தில் சுவர்ண கிரி என்று அழைக்கப்பட்டது கனகம், ஸ்வர்ணம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு தங்கம் என்று பொருள்.
கனக முனி என்பவர் தவம் செய்தஇடம் ஆதலால் இந்தப்பெயர். பண்டைய கல்வெட்டுகளில் கோபனா என்று அழைக்கப்பட்டது. இதன் அருகிலுள்ள கிராமங்களான பாலிகுண்டு மற்றும் கவிமாதா ஆகிய இடங்களில் பேரரசர் அசோகரின் (BCE . 3 ஆம் நூற்றாண்டு) இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது.
முதலாம் அமோகவர்சனால் (CE 814-878) எழுதப்பட்ட மிகப்பழைய கன்னட இலக்கியமான ‘கவிராஜமார்க ‘ என்ற நூலில், ‘விதித மகா கோபன நகரம்’ என்ற வாக்கியத்தில் இந்த ஊர் உள்ளது
கோயில் அமைப்பு
கனகாசலபதி கோயில் விஜயநகரக் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். கோவில் விசாலமான மண்டபம், பிரம்மாண்டமான யாளி தூண்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூன்று நுழைவாயில்களில் நன்கு கட்டப்பட்ட கோபுரங்கள் காணப்படுகின்றன கோயிலில் உள்ள சிற்பங்களில் புராண உருவங்களும், கருங் கல்லில் மன்னர்களும், இராணிகளும் செதுக்கப்பட்டுள்ளனர். கன்னட பழமொழி : “கண்கள் உள்ளவர்கள் கனககிரியையும், கால்கள் உள்ளவர்கள் ஹம்பியையும் பார்க்க வேண்டும்.” என்று கூறுகிறது பங்குனி மாதத்தில், “கனகாசலபதி திருவிழா” என்ற பிரபல திருவிழா நடைபெறுகிறது.
xxx
120.தார்வாட் வட்டார கோவில்கள்
அம்ருதேஸ்வர் கோவில் Amruteshwara temple
இது சிவன் கோவில்.; இங்குள்ள கோவில்கள் சாளுக்கியர் கால கோவில்கள ஆகும். சுமார் 1000 ஆண்டு வரலாறு உடையவை.; ஹூப்ளி நகரிலிருந்து 35 கி.மீ.
கருங் கல்லில் அமைக்கப்பட்ட 76 தூண்கள் உள்ளன. கல்யாணி சாளுக்கிய வம்ச கால சிற்பிகளின் கைவண்ணத்தைக் காணலாம் .
சோமேஸ்வரர் கோவில் Someshwara temple
இதுவும் சிவன் கோவில் இது சுமார் 800 ஆண்டு பழமையானது . இரு புறத்திலும் பச்சைப் பசேலென்ற பயிர்களைக் காணலாம்.ஷால்மல நதி அருகில் ஓடுகிறது. சதுர் புஜ கணபதியையும், மஹிஷாசுர மர்தனியையும் தரிசிக்கலாம்..
நுக்கிகேரி என்னும் இடத்தில் உள்ள ஹனுமார் கோவிலுக்கும் Hanuman temple at Nuggikeri பக்தர்கள் வருகின்றனர்.
xxxx
ஷண்முக லிங்கேஸ்வரர் கோவில் Shambhulingeshwara temple
சிவன், பார்வதி சிலைகளை வழிபடலாம் 11 ஆம் நூற்றாண்டு சாளுக்கியரின் அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன .நுழை வாயிலில் உள்ள சிங்கத்தின் சிலை அனைவரையும் கவரும் .
மஹாலக்ஷ்மி கோவில் Mahalaxmi temple situated in Kalghatagi sub division
ஆண்டு முழுவதும் லெட்சுமியை வழிபட்டு அனுக்கிரஹம் பெற பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர் .
தார்வாட் – ஹூப்ளி (பழைய தமிழ்ப் பெயர் பூப்பள்ளி ) ஆகிய இரண்டு நகரங்களும் சுமார் 20 கி.மீ
இடைவெளியில் அமைந்துள்ளதால் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன ; இந்த வட்டார ராய்பூரில் ஹரே கிருஷ்ணா கோவில் இருக்கிறது ISCKON temple at Rayapur . ஹூப்ளி சித்தாரூட மடம் Siddharoodha Math தார்வாட் ஸ்ரீ முருக மடம் Sri Murugu Math , சங்கர மட ம் , Shankara Math , தபோவனம் , பசவண்ண கோவில் Basavanna temple ஆகியன பக்தர்களைக் கவரும் இடங்கள் ஆகும்.
Xxxxx
121. சந்திரமெளலீஸ்வர கோவில் Chandramouleshwara Temple
சந்திரமௌலீசுவரர் கோவில் (Chandramouleshwara Temple) சிவன் கோவில்.உன்கால் ஏரிக்கரையில் அமைந்துள்ளது Unkal lake உன்கால் ஏரி, ஒரு அழகான, இயற்கையான நீர்நிலை.
கோவிலின் நான்கு திசைகளிலும் நான்கு கதவுகள் உள்ளன. மொத்தம் பன்னிரண்டு கதவுகள் உள்ளன. இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. சன்னதியின் பிரதான தெய்வமான சந்திரமௌலீசுவர் கிழக்கு நோக்கி உள்ளார் . மற்றொரு லிங்கமானது நான்கு முகங்களைக் கொண்டிருப்பதால் இது சதுர்முகலிங்கேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது, சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்
xxxx
122.நாகரேசுவர் கோவில் Nageshwar temple Bankapura
ஹூப்ளி- தார்வாட்டிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் ஹவேரி Haveri நகரம் உள்ளது இங்குள்ள நாகேஸ்வரர் கோவில் கோட்டை, அருகிலுள்ள மயில்கள் சரணாலயம் (Peacock Sanctuary) ஆகியன பிரசித்தமானவை .
அடில்ஷா என்ற மன்னனின் முஸ்லிம்படைகள் இங்குள்ள கோவில்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன.
கோட்டைப் பகுதியில் 66 தூண்களைக் கொண்ட நாகரேசுவர் கோயில் உள்ளது (உள்ளூர்வாசிகள் இதை ஆரவட்டு கம்படா குடி என்று அழைக்கின்றனர் – அதாவது கன்னடத்தில் 60 தூண்கள் கோயில் என்று பொருள்) இது சிவன் கோவில் . முஸ்தபா கானின் ஆட்சியின் போது, அதிகமாகச் சேதமடைந்தன. ஆனால் தூண்கள், கலைச் செதுக்கல்கள் , கூரை வடிவமைப்புகள் அப்படியே உள்ளன.
xxxx
123.ஹூலி (HOOLI )வட்டார கோவில்கள்
பெல்காம் மாவட்டத்தின் சௌந்தட்டி(Saundatti) யிலிருந்து சுமார் 9 கி.மீ.தொலைவிலுள்ள ஒரு நகரம். இங்கு, பஞ்சலிகேசுவரர் கோயில், திரிகூடேசுவரர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன . , ஏராளமான கோவில்களையும் கோட்டையையும் கொண்டுள்ளது. முன்காலத்தில் மகிசிபதிநகர் என்று அழைக்கப்பட்டது.
இங்குள்ள பஞ்சலிங்கேசுவரர் கோயிலின் அழகிய கட்டிடக்கலை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்தக் கோயிலுக்கு எதிரே நவீன ஹரி மந்திர் ஒன்று உள்ளது. ஞானேஷ்வரால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ள சாந்த் கலாச்சாரம் அல்லது நாத சைவப் பாரம்பரியம் இங்கு செழித்தது.
ஹூலியில் உள்ள பிற கோவில்கள் பின்வருமாறு:
அந்தகேசுவரர் கோயில்
பவானிசங்கர கோயில்
காலமேசுவரர் கோயில்
காசி விசுவநாதர் கோயில்
மதனேசுவரர் கோயில்
சூர்யநாராயணன் கோயில்
தாருகேசுவரர் கோயில்
ஹூலி சங்கமேசுவர் அஜ்ஜனாவரு கோயில்
பீர்தேவர் கோயில், ஹூலி
xxxxx
124. குந்தோல் சம்புலிங்கேஸ்வர கோவில் Shambulingeshwara Temple Kundgol
ஹூப்ளியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு.
பாரத் ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷியால் மேலும் புகழ் பெற்ற ஊர் இது .
பண்டிட் பீம்சென் ஜோஷி ஒரு குருவைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்தார். கடைசியாக ஒரு குந்தோலில் சவாய் கந்தர்வன் என்ற இசைக்கலைஞரை கண்டறிந்து அவரிடம் சீடராக சேர்ந்தார்.
11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கும் இடம்.
மேலைச் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது. . தூண்களில் உள்ள சிற்பங்களும் உருவங்களும் நன்கு வெட்டப்பட்டுள்ளன.
கோயிலின் கதவு படிகளின் பக்கத்தில், சிங்கத்தின் செதுக்கல்கள் அதன் வாயிலிருந்து ஒரு நீண்ட சுருளை வெளியிடுகின்றன.
இந்த கோயில் சிவன் மற்றும் பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது சேதமடைந்தாலும், கோயிலின் வெளிப்புறம் தாமரை மற்றும் கீர்த்திமுக முகங்களாலும், நூற்றுக்கணக்கான உருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் படைகாளால் சேதப்படுத்தப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று .xxxx
Someswara temple at Lakshmaneswaram
125. லக்ஸ்மேஷ்வரர் சிவன் கோவில் Lakshmaneshwara Temple
இது கடக்GADAG கிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், ஹூப்ளி HUBLI யிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் உள்ளது.
முஸ்லீம்களால் கடுமையாக சேதமாக்கப்பட்ட கோவில் இது. இப்போது கோபுரங்கள் இல்லை
த்ரிகூட அமைப்புடையது; அதாவது மூன்று கருவறைகளையும் ஒரே மண்டபம் இணைக்கும் ஒன்றில் சிவலிங்கம் இருக்கிறது மற்ற இரண்டில் இல்லை
பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன; ஆயிரம் ஆண்டுக்கும் மேலான வரலாறு உடைத்து .
எஞ்சியுள்ள கட்டிடங்களின் சுவர்களில் சப்த மாத்ரிகா, கஜலட்சுமி, அன்னப் பறவைகள், பூ வேலைப்பாடுகள், அப்சரஸ்கள் குறிப்பிடத் தக்கவை
.xxxx
To be continued……………………………..
Tags: கர்நாடக மாநில, கோவில்கள் – Part 28, ஹூப்ளி, தார்வாட், கனககிரி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் மாத இதழில் ஆகஸ்ட் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
உடலுக்குச் சக்தி தரும் உணவுத் துணைப்பொருள்கள்!
ச.நாகராஜன்
ஆற்றலைக் கூட்டும் உணவுத் துணைப் பொருள்கள்
நல்ல ஆரோக்கியத்துடனும் சக்தியுடனும் செயல்பட வேண்டும் என்ற முனைப்பு உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வேக யுகத்திலோ, நாம் உண்ணுகின்ற உணவிலோ இதற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துப் பொருள்களும் குறித்த விகிதத்தில் எப்போதும் சேர்ந்திருப்பது என்பது இயலாத ஒன்றாக அமைகிறது.
ஆகவே இந்தக் குறையை ஈடு செய்ய உணவுத் துணைப் பொருள்கள் இப்போது சந்தைக்கு வந்து விட்டன.
இவற்றைப் பற்றி முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் நமது குடும்ப மருத்துவரை நாடி அவரின் அறிவுரையையும் பெற்று உணவுத் துணைப்பொருள்களை உட்கொள்ளலாம்.
அப்போது சக்தியும் கூடும்; திறனும் கூடும்; வாழ்க்கையும் ஒளிரும்.
உடல் திறன், மனத்திறன் கூடும்
உடல் திறனும் மனத்திறனும் கூட ஒரு அருமையான மாத்திரை – Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகிய அனைத்தும் இணைந்த மாத்திரை.
அனைத்து ஊட்டச் சத்துக்களும் ஒருங்கிணைந்த அற்புதமான ஒரு மாத்திரையாக இது அமைகிறது.
இது நமது ஆற்றலைக் கூட்டுகிறது. நரம்பு மண்டல இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மூளையை நன்கு செயல்பட வைக்கிறது. இதய சம்பந்தமான் ஆரோக்கியத்தை நல்குகிறது. மொத்தமாக மனித உடலின் ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது.
மனோசக்தி, உடல் சக்தி மேம்பட!
மனதையும் உடலையும் ஆற்றல் வாய்ந்ததாக ஆக்க Methylcobalamin இல் விடமின் பி 12 சக்தி உள்ளது. இது ஆற்றல் வளர்சிதைமாற்றத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உணவைப் பயன் தரும் ஆற்றலாக மாற்ற இது வழி வகுக்கிறது. உடல் மற்றும் மன பலத்தை அதிகரிக்கிறது.
Alpha Lipoic Acid ஒரு நல்ல சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகும். இது Methylcobalaminஇன் ஆற்றலைத் தூண்டும் விளைவுகளுக்குத் துணை செய்கிறது. மைட்டோகாண்ரியா இயக்கத்தை விரிவாக்கி இன்னும் அதிக ஆற்றலுக்கு வழி வகுக்கிறது.
இந்த ஊட்டச்சத்துக்களின் சேர்க்கையானது ஒரு மாத்திரை வடிவில் எளிதில் கிடைக்கிறது. அது மனதையும் உடலையும் வலுவாக்கி களைப்பு மற்றும் சோர்வை அகற்றுகிறது.
நரம்பு மண்டல இயக்கத்திற்கு உதவி செய்கிறது
விடமின் பி 1 என்று பொதுவாக அறியப்படும் Thiamine Monohydrate நரம்பு மண்டல இயக்கத்திற்குத் தேவையான இன்றியமையாத ஒன்று. கார்போஹைட் ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி நரம்பு சமிக்ஞைகளை அனுப்புவதற்கு இது துணை செய்கிறது. விடமின் பி 6 அல்லது Pyridoxine HCl என்று அறியப்படுவது நரம்பு இயக்கத்தில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் கூட்டுத்தொகுப்பால் முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்த இரண்டும் இணைந்து மாத்திரையாக வரும்போது அனைத்தும் இணைந்த வலுவான ஒரு உதவியானது நரம்பு மண்டல அமைப்பிற்குக் கிடைக்கிறது. இது மூளை சார்ந்த மற்றும் உடலின் பொதுவான ஆரோக்கியத்திற்கு நல்ல பங்கை அளிக்கிறது.
உள்ளத்தால் உணரும் தன்மையை ஊக்குவித்தல்
காக்னிடிவ் ஹெல்த் என்று சொல்லப்படும் உள்ளத்தால் உணர்ந்து அறியும் தன்மையை ஊக்குவிப்பது Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவற்றின் கூட்டிணைப்பே. இந்த ஊட்டச் சத்துக்கள் மூளை ஆற்றலை ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகின்றன.இவற்றிற்கு மூளை ஆற்றலைப் பாதுகாக்கும் தன்மைகள் இருக்கலாம். குறிப்பாக Methylcobalamin மற்றும் Folic Acid ஆகிய இந்த இரண்டும் மனநிலையையும் முளை செயல்பாட்டு முறைகளையும் காப்பாற்றி நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் உற்பத்திக்கு உறு துணை செய்கிறது. மூளைக்குத் தேவையான சத்தைக் கொடுத்து மூளை தகவல் பரிமாற்றத்தைச் செய்வதன் மூலம், இந்த மாத்திரைகள் மூளைச் செயல்பாட்டையும் மனத் தெளிவையும் நன்கு இருக்குமாறு செய்ய உதவுகிறது.
இதயக் குழலியின் ஆரோக்கியம்
Cardiovascular எனப்படும் இதயக் குழலியத்தின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று. இதை ஆரோக்கியமாகப் பாதுகாப்பது உடலின் முழு ஆற்றலுக்கு இன்றியமையாததாகும். மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்டான Alpha Lipoic Acid ஆக்ஸிஜன் குறைபாட்டால் வரும் மன அழுத்தத்திலிருந்து (oxidative stress) ஒருவரைப் பாதுகாக்கிறது. இது இதயக் குழலிய பிரச்சினைகளுக்கு காரணமான ஒன்றாகும்.
Thiamine Monohydrate மற்றும் Pyridoxine HCl ஆகியவை இதயக் குழலிய ஆரோக்கியத்திற்கு ஹோமோசிஸ்டெய்ன் வளர்சிதைமாற்றத்திற்கு (metabolism of homocysteine உறுதுணையாக இருக்கிறது. இதயநோய்க்குக் காரணமாக உள்ள அமினோ அமிலம் மேலெழும்போது அதைச் சரி செய்கிறது. இதயக்குழலிய ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தி இரத்தம் உறைதல் மற்றும் ரத்தக் குழாய்களின் இயக்கம் ஆகியவற்றில் Folic Acid முக்கியபங்கை வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்களின் கூட்டு, ஒரு மாத்திரை வடிவில் இருக்கும் போது அது இதயத்தை முழுமையாக ஆரோக்கியமாகச் செயல்பட வைப்பதோடு ரத்தஓட்ட அமைப்பையும் நன்கு இருக்குமாறு செய்கிறது.
உடலின் மொத்த வலிமையைக் கூட்ட வழி
உடலின் மொத்த வலிமையைக் காப்பதோடு கூடுதல் வலிமையுள்ளதாக அதை ஆக்க Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவை தக்க படி இணைக்கப்பட்டு மாத்திரையாக ஆகிப் பயன்பாட்டிற்குத் தரப்படும் போது அது உடலை மிக்க வலிமையாக்கும் டானிக்காக ஆகிறது.
ஆற்றல் உற்பத்தி, நரம்பு மண்டல இயக்கம், மூளை ஆற்றலின் ஆரோக்கியம், இதயக் குழலியத்தின் நலத்தன்மை ஆகியவை அனைத்திற்கும் உறுதுணையாக இருந்து இந்த மாத்திரைகள் மொத்தமான உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமையை உறுதி செய்கின்றன. இவை உடலின் முக்கியமான இயக்கங்களைத் தேவையான அளவு மட்டுமே இயங்க வழி வகுக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதரும் உயிர்த்துடிப்புள்ள, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க இந்த மாத்திரைகள் உதவுகின்றன.
பல நன்மைகளைப் பெற ஒரு மாத்திரை
சுருக்கமாகச் சொல்லப்போனால் Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவை சேர்ந்துள்ள மாத்திரைகள் மூளை ஆற்றல், பொதுவான மொத்த உடல் நலம், உடல் வலிமை, இதயக் குழலிய ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தையும் நல்குகின்றன. பல நன்மைகளை ஒருங்கே பெற இவை வழி வகுக்கின்றன.
என்றாலும் கூட இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன்னர் உங்களது குடும்ப வைத்தியரைக் கலந்து ஆலோசிப்பது இன்றியமையாதது. சரியான வழிகாட்டுதல் கிடைக்கப்பெற்றால் உடல் ஆரோக்கியத்திற்கான முழு அணுகுமுறையைப் பெற்றவர்களாவோம். வாழ்க்கையை அனுபவிக்கும் திறன் படைத்தவர்களாவோம்!
கன்பூசியஸ் CONFUCIUS ஒரு சீன தத்துவ ஞானி. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் சொன்ன பொன்மொழிகள் அனலெக்ட்ஸ் THE ANALECTS என்ற நூலில் உள்ளன. தமிழில் பாரதியார், இவரது மதத்தையும் தனது பாடலில் சேர்த்து தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இவரை அறிமுகம் செய்துவைத்தார் செப்டம்பர் 28ம் தேதி(CONFUCIUS BIRTH DAY SEPTEMBER 28) இவரது பிறந்த தினத்தை.ஆண்டுதோறும் தேசீய சீனா எனப்படும் குட்டி நாடு தாய்வான் (TAIWAN) ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது..
சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு கதை கேட்டிருப்பீர்கள் . வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம் ; ஒரு மாணவன் அதைக் கவனிக்காமல் வேறு ஏதோ ஒன்றை சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண் டிருந்தானாம். வாத்தியார் , அவனை சுட்டிக்காட்டி, டேய் பையா! எழுந்திரு , இவ்வளவு நேரமாக நான் கத்திக்கொண்டிருக்கிறேனே ; உனக்கு இதுவரை என்ன தெரிந்தது ? சொல்.! என்றாராம் .
சார் ! பொந்துக்குள் எலி போய்விட்டது; ஆனால் இன்னும் வால் மட்டும் போகவில்லை என்றானாம் ; அவன் சொல்லைக் கேட்டு மற்ற மாணவர்கள் கொல் என்று சிரித்தார்களாம்.
அவன் அவ்வளவு நேரம் கவனித்தது ஓரி எலியின் நடமாட்டத்தை தான்!
இதே போல கன்பூசியஸ் CONFUCIUS வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது
அவர் உடனே சொன்னார் :
யாருக்கு உண்மையை அறிய பிரியமில்லையோ அவனுக்கு நான் சத்தயத்தைப் போதிப்பதில்லை.
எந்த ஒரு ஆர்வமுள்ள மாணவனையும் நான் திருப்பி அனுப்பியதில்லை ; அவன் காய்ந்த மாமிசத் துண்டுகளை தட்சிணையயாக கொண்டு வந்தாலும் அதை ஏற்பேன்
என்றார் .
நான் சொன்ன பாடத்தை திரும்பவும் சொல்லவும் மாட்டேன். 4 மூலைகள் உள்ள காகிதத்தின் ஒரு முனையைக் காட்டினால் அவனுக்கு மற்ற மூன்று முனைகளும் சொல்லாமலேயே தெரிய வேண்டும் .
xxx
இப்படியெல்லாம் அவர் உபதேசம் செய்து கொண்டிருந்த ஒரு வகுப்பில் ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருந்தான் . கன்பூசியஸ் CONFUCIUS ஒரு நல்ல ஆசிரியர் உடனே அவர் சொன்னார் :
உளுத்துப்போன மரத்தில் எந்த உருவத்தையும் செதுக்க முடியாது ; சாணியைக்கொண்டு சுவர் எழுப்ப முடியாது. அவனை நான் ஏன் கண்டிக்கவேண்டும்?
இவ்வாறு சொல்லி அவனைக் கண்டிக்கவும் இல்லை. அந்தப்பையன் சுகமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான்.
xxxxx
இன்னொரு சுவையான சம்பவம்,
கன்பூசியஸ் CONFUCIUS பல வேலைகளைச் செய்தார்; வெறும் ஆசிரியர் வேலையோடு நிற்கவில்லை. அவர் சீன அரசாங்க அதிகாரியாகவும் இருந்தார் அவர் விரும்பிய பெரிய பதவிகள் அவருக்குக் கிடைக்கவில்லை; அதில் அவருக்கு ஏமாற்றம்தான்.
கற்றோருக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு
உண்டோ குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு என்று தமிழில் படித்திருக்கிறோம் ; அது போல கன்பூசியஸுக்கும் சென்றவிடமெல்லாம் பெரியாத மரியாதை கிடைத்தது ; ஆனால் சீனாவின் குட்டி நாடுகளை ஆண்ட எந்த மன்னனும் இவருக்குப் பெரிய பதவியைக் கொடுக்கவில்லை; அவர் மிகவும் வருத்தப்பட்டு பிறந்த Qufu கூஃபு என்ற இடத்துக்கே (QUFU in China) சென்று 72ஆவது வயதில் இறந்தார் .
இதே போல வருத்தப்பட்டு இறந்த பாரதியாருக்கு நாம் கோவில் கட்டியது போல சீனாவும் இன்று அவருக்குக் கட்டப்பட்ட கோவிலை பெரிய சுற்றுலாத் தலமாக பராமரித்துவருகிறது
அவர் பிறந்த இடம் சீனாவில் உள்ள Qufu என்னும் நகரம்.
சுவையான சம்பவம் இதோ ,
கன்பூசியஸ் CONFUCIUS சிடம் பாடம் கேட்டப் பலருக்கு அரசாங்கத்தில் பெரிய பதவிகள் கிடைத்தன.. அட, இந்த அதிகாரி கன்பூசியஸை விட பெரியவர் என்று ஒருவர் சொன்ன காமெண்ட்/ விமர்சனம் காதில் விழுந்தது . அப்போது ஒருவர் சொன்னார்
நான் நம்முடைய நிலை என்ன என்பதை ஒரு வீட்டின் உவமையைக் காட்டி சொல்கிறேன். நான் கட்டிய சுவர் ஒருவனுடைய தோள் உயரம்தான். யாரும் எட்டிப்பார்த்து உள்ளே என்ன நடக்கிறது என்பதை எளிதில் அறியலாம். ஆனால் என்னுடைய குருநாதன் கட்டிய வீட்டின் சுவரோ மதில் போல உயர்ந்தது. யாரும் எட்டிப்பார்க்க முடியாது. ஆனால் அந்த வீட்டிற்குக் கதவுகள் உண்டு ; கதவைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதனுள்ளே அழகை யாரும் ரசிக்கமுடியாது; சிலரே அந்தக் கதவு இருக்கும் இடத்தைக் காண்கிறார்கள் .
என்னுடைய மாஸ்டர் / குருநாதன் சூரியன், சந்திரன் போன்றவர்.; அவரை யாரும் குறை சொல்லமுடியாது; அவருடன் ஏனையோரை ஒப்பிட்டால் அவர்கள் வெறும் மணல் மேடுகள் தான் .
xxxxx
கன்பூசியஸ் ஒரு வேத கால ரிஷி போலவே பேசினார்
நான் எதையும் புதிதாகச் சொல்லவில்லை; பழங்கால அறிவினை, ஞானத்தை மீண்டும் உங்களுக்கு அளிக்கிறேன்
வேத கால ரிஷிகளும் இதையே சொன்னார்கள் நாங்கள் மந்த்ர த்ருஷ்டாக்கள். அதாவது காலத்தால் அழியாத உண்மைகளைக் காண்பவர்கள்; அதை உங்களுக்கு அப்படியே சொல்கிறோம்.என்றனர் ரிஷி முனிவர்கள்.
இதனால் வேதங்களுக்கு அபெளருஷேயம் என்று பெயர்; அதாவது புருஷர்களால் / மனிதர்களால் உண்டாக்கப்பட்டதல்ல .
இன்னும் ஒரு பெயர் ச்ருதி ; அதாவது கேட்கப்பட்டது; கேள்வி ஞானம் ;
சங்கத் தமிழ் புலவர்களும் வேதங்களை எழுதாக் கிளவி என்று போற்றினர்.
XXX
இன்னும் ஒரு சுவையான விஷயத்தைக் கேளுங்கள்
கன்பூசியஸ் தன் வாழ்க்கையை சுருக்கி வரைந்தார் ,
15 வயதில் கற்பதில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது; கற்க கசடறக் கற்றேன்
30 வயதில் கற்றபின் அதற்குத் தக நின்றேன் ;
40 வயதில் ஐயங்கள் அகன்றன ;
50 வயதில் ஆன்மீக வாழ்வில் நுழைந்தேன்;
60 வயதில் ஆண்டவன் கட்டளையை மீறாமல் நின்றேன்;
70 வயதில் என்னுடைய வழிப்படி சென்றேன் ; ஒரு தவறும் நடக்கவில்லை .
XXXX
கன்பூசியஸ் சொன்னது எப்படி கிடைத்தது?
தேவாரம், திருவாசகத்தை நால்வரும் எழுதவில்லை. நால்வரைச் சூழ்ந்து நின்ற அடியார்கள் அவைகளை நினைவில் வைத்து நமக்கு எழுதி வைத்தனர். புத்தரும் புஸ்தகம் எழுதவில்லை; முக்கிய சீடர்கள் அவர் சொன்னதை தம்மபதம் என்ற நூலாக நமக்குத் தந்தனர். அதுபோலவே கன்பூசியஸும் நூல் எதையும் எழுதவில்லை அவர் சொன்ன பொன்மொழிகளை, உபதேசங்களை அவரது சீடர்கள் தொகுத்து அனலெக்ட்ஸ் என்ற ப்புஸ்தகமாக நமக்கு அளித்தனர். அவரோ தன் வாழ்நாளில் லூ மாகாணம் பற்றிக் கொஞ்சம் எழுதினார்.
கன்பூசியஸ் சொன்னதோடு அவரது பிரதான சீடர் மென்சியஸ் MENCIUS சொன்னதையும் சேர்த்து நமக்கு அனலெக்ட்ஸ் ANALECTS என்ற புஸ்தகமாக அளித்தனர் ; இதை தமிழில் தத்துவ முத்துக்கள் என்று மொழிபெயர்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 27
117. கடக் GADAG வட்டார கோவில்கள்
கடக் மாவட்டம் தார்வாட் மாவட்டத்திலிருந்து பிரித்து உண்டாக்கப்பட்டது . கடக் நகரில் இரண்டு பழைய கோவில்கள் இருக்கின்றன. இவைகளில் பழமையானது
த்ரிகூடேஸ்வர சிவன் கோவில் Trikuteshwara Temple சாளுக்கியர்களால் 1050 CE–க்குப்பின்னர் கட்டப்பட்டது . இதன் சிறப்பு சரஸ்வதிக்கும் சந்நிதி இருப்பதாகும் மும் மூர்த்திகளை குறிக்கும் வகையில் மூன்று சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன . இப்போதும் வழிபாடு நடக்கிறது அருகில் மூன்று கர்ப்பக்கிரகங்கள் காயத்ரி, சாரதா, சரSவதிக்காக இருக்கின்றன . சரஸ்வதி சிலையை விஷமிகள் சேதப்படுத்தி விட்டதால் வழிபாடு இல்லை.
அடுத்ததாக முக்கியத்துவம் பெரும் கோவில் ஶ்ரீ வீர நாராயணர் Veeranarayana Temple திருக்கோயில் ஆகும். இதை விஷ்ணுவர்தனர் என்ற மன்னர் 1100 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்டினார். இங்குள்ள முக்கிய தெய்வம் விஷ்ணு. . ஹொய்சாள இளவரசியை , ஶ்ரீராமானுஜாச்சாரியார் நோயிலிருந்து குணப்படுத்திய பிறகு, பிட்டி தேவா என்று அழைக்கப்பட்ட மன்னன் தனது பெயரை விஷ்ணுவர்த்தனா என்று மாற்றியது மட்டுமல்லாமல், ஜைன மதத்திலிருந்து ஸ்ரீ வைஷ்ணவ மதத்திற்கு மாறினார்.
இத்திருத்தலம் கர்நாடகா மாநில கடக் மாவட்டத்தில் கடக் நகரில் அமைந்துள்ளது.
ஶ்ரீவீர நாராயணர் கோயில் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். மற்ற நான்கு கோவில்கள் மேல்கோட்டில் திருநாராயணருக்கும், தோன்னூரில் விஜயநாராயணருக்கும், தலக்காடு கீர்த்தி நாராயணருக்கும், பேலூரில் உள்ள சென்னகேசவ நாராயணருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வீரநாராயண கோவில், இந்திய தொல்லியல் துறையின் கர்நாடக மாநிலப் பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்
ஸ்ரீ வீரநாராயண கோவிலில் சாளுக்கியர், ஹொய்சாளர் மற்றும் விஜயநகர சிற்பிகளின் அழகிய கலை வேலைப்பாடுகளை ஒருங்கே காணலாம் . கிழக்கு நோக்கிய பிரதான நுழைவு வாயிலில் நுழையும் போது கருட கம்பம் நிற்கிறது. கருவறையில் கருநீலக் கல்லில் செதுக்கப்பட்ட வீரநாராயணர் சிலை அனைவரையும் கவர்கிறது. கிரீடம், கர்ணகுண்டலம், சங்கம், சக்ரம், கதா, பத்மம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, வீரகச்சேரி அங்கியில், வீரநாராயணன் அபயஹஸ்தாவுடன் தனது பக்தரைக் காக்கிறார். அவரது அகன்ற மார்பில் லக்ஷ்மியும், இருபுறமும் லட்சுமியும் கருடனும் நிற்கின்றனர்.
இந்த கோவிலின் முற்றத்தில், லட்சுமி-நரசிம்மர் கோவில், சரபேஸ்வர கோவில் மற்றும் பல தெய்வங்களின் சிறிய கோவில்கள் உள்ளன.
கடக் நகரத்திலிருந்து,
பெங்களூரு 416 கி.மீ., ஷிமோகா 261 கி.மீ., ஹுப்பிலி 58 கி.மீ. , தார்வாட் 76 கி.மீ., பல்லாரி 58 கி.மீ. , ஹம்பி 109 கி.மீ. நவபிருந்தாவனம் 115 கி.மீ, . கொப்பல் 64 கி.மீ.தூரம்.
கடக் நகரத்திற்கு ரயில் வசதி உள்ளது.
Xxxx
118. முஸ்லீம்கள் அழித்த ஐம்பது கோவில்களும், 100 ஆழ் கிணறுகளும் Step Wells of Lakkundi
கடக் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள லக்குண்டி என்னும் இடத்தில் 50 கோவில்களை முஸ்லீம் படைகள் தாக்கி அழித்துவிட்ட இடிபாடுகளை இன்றும் காணலாம். முஸ்லீம்கள் தாக்கி அழித்த கோவில்களில் வெளவால்கள் சுகமாக வசிக்கின்றன; சமண ஆலயங்களும் உள்ள பகுதி கடக் மாவட்டம்.
100 STEP WELLS
லக்குண்டியின் சிறப்பு அங்குள்ள படிக்கட்டு STEP WELLS ஆழ்கிணறுகள் ஆகும். அந்தக்காலத்தில், தண்ணீரை சேர்த்துவைக்க நம்மவர்கள் என்ன பாடுபட்டனர் என்பதை இந்தக் கிணறுகள் காட்டுவதோடு அழகிய பொறியியல் வேலைப்பாடுகளையும் காட்டுகின்றன. இவைகளை கல்யாணி (Kalyani) என்று அழைத்தனர் .
மேலை சாளுக்கிய மன்னர்கள் தங்க நாணயங்களை வெளியிட்டுப் புகழடைந்தவர்கள். அவர்கள் இந்த இடத்தில் 100 ஆழ் கிணறுகளையும் (STEP WELLS) 50 கோவில்களையும் கட்டினார்கள்.
இங்கு மாணிக்கேஸ்வரர் கோவில் இருக்கிறது Manikeshwara Temple. கலைவேலைப்பாடுமிக்க stepwell called Musukina Bavi முசுகின பாவி ஆழ் கிணறு இங்கே வெட்டப்பட்டுள்ளது அந்தக்காலத்தில் பெண்களின் அரட்டைக் கச்சேரிக்கும், சமூக உறவாடலுக்கும் இந்தக் கிணறுகள் மையமாக விளங்கின. மன்னர்களோ கோடைக்காலத்திலும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க இவைகளை அமைத்தனர். சிற்பிகளோ தங்கள் கைவண்ணத்தைக் காட்டுவதற்கு இந்தக் கிணறுகளை பயன்படுத்தினர். இந்தியா முழுதும் இது போன்ற கலை வேலைப்பாடு மிக்க ஆயிரக்கணக்கான ஆழ் படிக் கட்டுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. கர்நாடக பெண்கள் இன்றும் கிணறுகளை வழிபடுகின்றனர்
ஒவ்வொரு கிணற்றுச் சுவர்களிலும் நடன அழகிகள், இசைக்க கலைஞர்கள் , தேவதைகள், பிராணிகள் ஆகியவற்றைக் காண முடிகிறது
1087ஆம் ஆண்டு ஹொய்சாளர்கள் கட்டிய காசி விஸ்வேஸ்வரர் கோவிலின் நுழை வாயிலும் லேத் LATHE முறையில் கடையப்பட்ட ஸ்தம்பங்களும் நமக்கு ஹொய்சாளர்களை நினைவுபடுத்தும் Kashi Vishveshwara Temple built in 1087 CE has carved doorways and polished lathe-turned pillars,இது சிவன் கோவில் ; மேற்கில் சூரியன் கோவிலும் கிழக்கில் நன்னேஸ்வரர் கோவிலும் உள்ளன . To its west is a Surya temple, and towards its east is the Nanneshwara temple.
Lathe Polished Pillar of Hoyshala Temples
Veera Narayana Perumal
xxxx
Brahma JInalya, Lakkundi
1007 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்ட பிரம்ம ஜினாலய என்னும் சமண கோயில் குறிப்பிடத்தக்கது தான சிந்தாமணி அத்திமபே Danachintamani Attimabbe என்னும் இளவரசி நூற்றுக்கணக்காண சமண ஆகலயங்ககளை எழுப்பி எண்ணற்ற தானங்களை செய்ததால் கர்நாடக மக்கள் அவளை அன்புடன் நினைவு கூறுகிறார்கள் பிரம்ம சமணர் ஆலயத்தில் பிரம்மா , ஸரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
கொப்பல் என்னும் ஊர்தான் அருகிலுள்ள பெரிய ஊர். 53 கி.மீ தொலைவுதான்
லக்கண்டியில் தொல்பொருட் துறை மியூசியமும் உளது.
கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற பாதாமி குகைகள், ஐஹோல், பட்டடக் கல் கோவில்களை அடுத்ததாகக் காண்போம்
To be continued…………………………………….
Tags- லக்குண்டி, ஆழ் கிணறுகள், படிக்கட்டு கிணறுகள், கடக் கோவில்கள் , சமண இளவரசி , ஜினாலயம், கர்நாடக மாநில, 108 புகழ்பெற்ற , கோவில்கள் , Part 27 , GADAG, STPP WELLS
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas
எல்லாம் அறிந்த சர்வக்ஞரை மடக்கிய சிறுவன் யார்?
ச.நாகராஜன்
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.
தென்னிந்தியாவில் நன்கு படித்த ஒரு பிராமணர் தன் படிப்பினால் மிகவும் அகந்தை கொண்டார்.
தன்னை எல்லாவற்றையும் பார்க்கக் கூடிய எல்லாவற்றையும் அறியக் கூடிய சர்வக்ஞர் என்று கூறிக் கொண்டார்.
ஒவ்வொரு ஊராகச் சென்று அங்கு இருந்த பண்டிதர்களை வாதுக்கு இழுத்து அவர்களை மடக்கி அவர்களது படிப்பை ஏளனம் செய்வதை அவர் பழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர் படித்த புத்தகங்களை அனைத்தும் பல வண்டிகளில் ஏற்றப்பட்டு அவருக்கு முன்னே போய்க் கொண்டிருக்கும்.
அவர் பின்னால் வருவார்.
அவரது புத்தகக் குவியலைப் பார்த்த எவரும் அவருடன் வாதுக்கு வரத் தயங்கி தமது தோல்வியை முன்னதாகவே தெரிவிப்பது வழக்கமானது.
வழக்கம் போல ஒரு நாள் ஒரு கிராமத்தில் அவர் சென்று கொண்டிருந்தார்.
அவரது புத்தக மூட்டைகள் முன்னால் சென்றன. அவரது சீடர்கள் ஆரவாரத்துடன் யாராவது சர்வக்ஞருடன் இங்கு வாதிடத் தயாரா?’ என்று கூவி அழைத்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர்.
சர்வக்ஞர் அகம்பாவத்துடன் பீடு நடை போட்டுப் பின்னால் வந்து கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் முன்னே வந்த ஒரு சிறுவன் கீழே கிடந்த ஒரு பிடி மண்ணை எடுத்தான். அவர் முன்னே நீட்டினான்.
“சர்வக்ஞரே! எல்லாம் அறிந்தவரே! எதையும் பார்க்கக் கூடியவரே! என் கையில் எவ்வளவு மணல் இருக்கிறது? சரியான பதிலைக் கூறுங்கள்” என்றான்.
சர்வக்ஞர் திகைத்தார். “பையா! கையில் மூடி இருக்கும் மணல் துகள்களைப் பார்க்கவே முடியாதே! அதன் எண்ணிக்கையை எப்படிச் சொல்வது?” என்றார்.
உடனே அந்தச் சிறுவன், “என் கையில் இருப்பது கைப்பிடி மண்” என்று பதில் அளித்தான்.
பிறகு அவன் தொடர்ந்து கூறினான்: ”சின்னக் கையில் இருக்கும் மணல் துகள்களின் எண்ணிக்கையையே சரியாகச் சொல்ல முடியாது என்கிறீர்கள். ஆனால் எதையும் அறிந்தவன் – சர்வக்ஞர்- என்ற பட்டத்தை மட்டும் சூட்டிக் கொண்டு உலா வருகிறீர்கள். இது நியாயமா? எல்லையற்ற பிரம்மாண்டமான படைப்பில் ஒரு சிறு புழு பூச்சி போல இருக்கும் மனிதன் தன் எதிரில் கையில் இருப்பதையே சரியாக அறிய முடியவில்லை. அனைத்தையும் படைத்த இறைவன் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன் அல்லவா? அவனே அல்லவா உண்மையில் சர்வக்ஞன்!
இந்தப் பட்டப் பெயர் உமக்கு எப்படித் தகும்?” என்று கேட்டான்.
சர்வக்ஞர் தலை குனிந்தார். தனது ‘சர்வக்ஞர்’ பட்டத்தை அன்றே துறந்தார்.
அவரை அப்படி மடக்கி அவருக்கு உண்மையை உணர்த்தியவர் பின்னால் பெரும் மகானாக ஒளிர்ந்தார்.
அவர் தான் பராசரர்!
***
அவர் பல நூல்கள் இயற்றி இருந்தாலும் நமக்கு இப்போது கிடைத்திருப்பவை ஐந்து நூல்களே! அவை:
பராசர பட்டர் வாழ்ந்த காலத்தைப் பற்றி இருவிதக் கருத்துகள் உள்ளன. சிலர் அவர் 1078 முதல் 1175 வரை வாழ்ந்தார் என்று கூற இன்னும் சிலரோ அவரது காலம் 1123-1151 என்று தங்கள் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
வைணவ சித்தாந்தத்தில் மாபெரும் மகானாக அவர் ஒளிர்ந்தார்.