தீபாவளி குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,133)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,133

Date uploaded in London – –  14 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx


தீபாவளி பற்றிய 24 சொற்களைக் கண்டு பிடியுங்கள் ; கலர், எண்கள், மேல் , கீழ் , இடவல அம்புக்குறிகள் மற்றும் , நாங்கள் கொடுத்துள்ள துப்புத் தகவல் உங்களுக்கு உதவி செய்யும்.

1    2 3 
  4     5
     6 7  
       
     8 9 
 10     11
   12      13 
  14 15    
  16    17
 18     19. 
20      

Across

2. left to right அதிகாலையில் தலையில் இதைத் தேய்த்துக்கொண்டு குளிப்பார்கள்

3.சிறுவர்களுக்கும் கிழவர்களுக்கும் இதைக் கண்டால் பயம்

4.ஆண்களுக்கு புது …………. கிடைக்கும்

6. வேலைக்காரர்கள் முதலாளி முன்னர் தலையைச் சொரிந்துகொண்டு நின்று எதிர்பார்ப்பது ………  left to right

8.எல்லா அரசியல்வாதிகளும் தெரிவிப்பது. நாமும் இந்த அட்டையை வாங்கி போஸ்ட் செய்யலாம்  left to right

10அப்பா ! எப்பப்பா ……….. கடைக்குப் போகலாம்? இருடா அங்கே ஒரே கூட்டம்.

11.தொழிலாளர்கள் இதை எதிர்பார்த்து காத்திருப்பர் , left to right

12.பெண்களுக்கு புடவையும் ஆண்களுக்கு ………. யும் கிடைக்கும்

13.எங்கு பார்த்தாலும் ஒரே ….. மண்டலம்; புறச்சூழல் கெட்டுவிட்டது

15.சின்னப் பையன்களை மகிழ்விப்பது  இந்தப் ‘பூ’

16.வடக்கில் இதை ஏற்றி வரிசையாக வைப்பதால்தான் பண்டிகைக்கு இப்பெயர் வந்தது

18.பெண்களுக்கு இது  கிடைக்கும் ; அந்தக் கடைகளில் நவராத்திரி முதலே கூட்டம் வரத் துவங்கும்

20.புதுசா கல்யாணம் ஆனால் அவர்கள் இதைச் சொல்லி அதிகம் எதிர்பார்ப்பார்கள் ;பெண் வீட்டார் பயந்துகொண்டே அழைப்பார்கள்

Xxxx

Down

1.குளியல் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

5.காதை செவிடாக்குவது இதுதான்

7.இன்று எங்கு குளித்தாலும் இந்த நதியில் குளித்த புண்ணியம்

9.அப்பாடா ; நாளைக்கு ஸ்கூல் கிடையாது, ஆபீஸ் கிடையாது ; நாளைக்கு…………. go up

10.வெறும் வேஷ்டி அல்லது புடவை போதாது…………. புடவை, வேஷ்டி வேண்டும்

13.வெடி வெடிக்காமல் போனால் இப்படிச் சொல்லுவார்கள்  go up diagonally

14.பிராமணர் வீடுகளில் ஜீரணத்துக்காக இந்தப் பொருளை சாப்பிடத் தருவார்கள்  go up

14.எல்லா பத்திரிக்கைகளும் ஏராளமான பக்கங்களுடன் வெளியிடுவது  go down

17.எத்தனை சுவீட்SWEETS  இருந்தாலும் தீபாவளிக்கே உரித்தானது இது; திருப்பதியிலோ எப்போதும் கிடைக்கும்

19.தீபாவளியன்று  இதைச் சாப்பிட்டு கஷ்டப்பட்ட DIABATES டயபடீஸ் காரர்கள்  எண்ணிக்கை ஏராளம். go up

 answers

ஸ்1ய்ணெண்எ 2வெ  3டி
னாச 4ட்டை றைச 5
ம்னாஇ 6க 7முப்
ம்  ங்டு
துத்ழ்வா 8காவி9ம்
ந்ப 10ட்டாஸ்போ11
ருட்வே 12ஷ்டிபு 13கை
ம14டும 15 த்தாப்பு
ப்தீ 16ம்னில 17
ர்பு 18வை இ 19.ட்
த20லைதீபாளிடு

—subham—-

Tags – தீபாவளி, குறுக்கெழுத்துப் போட்டி,

சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது என்பது சரியே — காந்திஜி (Post No.12,132)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,132

Date uploaded in London – –  14 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அஹிம்சை என்பது என்ன? போர்க்கள நூலான பகவத் கீதை அஹிம்சை நூலாகுமா? என்று ஒரு அன்பர் கேட்டதற்கு காந்திஜி அவரது பத்திரிகையான யங்  இந்தியா’-வில் நீண்ட பதில் கொடுத்துள்ளார் . அதில் மனைவியரையும்  சூத்திரர்களையும்  அடிப்பது பற்றி உலகப் புகழ்பெற்ற கோஸ் வாமி துளசிதாஸ் செய்த கவிதைக்கும் விளக்கம் கொடுக்கிறார். தான் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தியது பற்றியும் சொல்கிறார் ; சொற்களை மட்டும் ஆராயாமல், அதன் பின்னுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார் ; இதோ காந்திஜியின் பதில் :-

“இந்தக் கேள்வி என்றும் நீடித்து நிற்கும் கேள்விதான் . பகவத் கீதையைப் படித்த ஒவ்வொருவரும் தானே பதில் கண்டுபிடிக்க வேண்டிய கேள்வி ; என்னுடைய பதிலை நான் சொன்னாலும், ஒருவரின் அறிவை  விட இருதயத்தில் எழும் உணர்வுகளே ஒருவரை வழி நடத்துகிறது என்பதை நான் அறிவேன்;  உள்ளம் ஏற்கும் ஒரு விஷயத்துக்குப் பின்னர், புத்தியே காரணம் கற்பிக்கும்; வாதங்கள் வரத்தான் செய்யும். மனிதன் என்பவன் தான் செய்வதற்கும், தான்  நம்புவதற்கும் ஆதரவாக காரணங்களைக் கண்டுபிடிக்கிறான்.

XXXX

1889-ம் ஆண்டில்தான் எனக்கு கீதை நூல் கிடைத்தது. அப்பொழுது எனக்கு கிட்டத்தட்ட இருபது வயது. அப்போது அஹிம்சை என்பதை நான் அறியேன் . குஜராத் கவிஞர் சாமல்பட்டாவின் கவிதை வரிகள் என் மனதில் ஆழமாக வேரூன்றியது . ஒரு எதிரியைக்கூட அன்பினால் வெல்ல முடியும் என்பது அது. ஆனால் காலத்தால் அழியாத அஹிம்சை எனும் கொள்கை  அதிலிருந்து வரவில்லை. ஏனெனில் அது பிராணிகள் பற்றி சொல்லவில்லை ; அதற்கு முன்பு நான் மாமிசம் சாப்பிட்டும் வந்தேன். பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களைக் கொல்வது மனிதனின் கடமை என்றும் நம்பினேன் . இப்பொழுது நான் நம்புவது விஷப்பிடராணிகளையும் கூட அஹிம்சாவாதி கொல்லத் தேவை இல்லை என்பதே . மேலும் அந்தக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க நான் என் உடலைத் தயார்  செய்துவந்தேன் . புகழ் பெற்ற குஜராத்தி கவிஞரின் வரிகளை முனுமுனுத்தேன் :

வெள்ளைக்காரன் ஆட்சி செய்வத்தில் என்ன அதிசயம் …………

என்ற வேடிக்கைப் பாடல் அது.

ஆங்கிலேயரை எதிர்க்க உடல் வலிமை அவசியம் என்பதால் முதல்படியாக மாமிசம் சாப்பிட்டேன் ; இங்கிலாந்த்துக்குப் போவதற்கு முன்னிருந்த நிலைமை இது. பின்னர் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினேன். என் அம்மாவுக்கு நான் செய்துகொடுத்த சத்தியத்தை வாழ்நாள் முழுதும் பின்பற்ற எண்ணி இப்படிச் செய்தேன் . சத்தியத்தின் மீது எனக்கிருந்த அபார நம்பிக்கை என்னைப்  பல  தவறுகளிலிருந்து காப்பாற்றியது.

இங்கிலாந்தில் வசித்த போது இரண்டு ஆங்கிலேய  நண்பர்களின் சகவாசத்தால் கீதை எனும் நூலை படிக்க நேரிட்டது. படிக்க நேரிட்டது என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், நானாக விரும்பி அதைப் படிக்காமல் அவர்களுக்காகப் படித்தேன். அதைப் படிக்கச் சொன்னபோது என் அறியாமையை எண்ணி நான் வெட்க்கப்பட்டேன். என்னுடைய மத நூல் பற்றி எனக்கு தெரியவில்லை என்பது வேதனையாக இருந்தது. ஏனெனில் அதைப்புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு சம்ஸ்க்ருத அறிவு கிடையாது. என்னுடைய நண்பர்களுக்கும் ஸம்ஸ்க்ருதம் தெரியாது. என் மானத்தைக் காப்பாபற்றிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உதித்தது . அவர்கள் எட்வின்  ஆர்னால்ட்  அற்புதமாக மொழிபெயர்த்த பகவத் கீதை பிரதியை என் முன்னே வைத்தனர். அதை அப்படியே கரைத்துக் குடித்துவிட்டேன்; என்னை அது முழுதும் ஆட்கொண்டுவிட்டது . இரண்டாவது அத்தியாயத்தின் கடைசி 19 ஸ்லோகங்கள் என்னுடைய இருதயம் என்னும் பலகையில் சாச்வதமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது . என்னைப் பொருத்த வரையில் அது ஞானத்தின் சாரம். அவை போதிக்கும் விஷயம் காலத்தால்  அழிக்கப்படமுடியாத சத்தியங்கள்;  காரண காரியங்களை ஆராய்ந்து சொன்னாலும் அது முதிர்ச்சிபெற்ற அனுபவ அறிவு ஆகும்.

அதற்குப்பின்னர் கீதையின் பல மொழிபெயர்ப்புகளையும் ,  பாஷ்யங்களையும் (விளக்க உரை) படித்துவிட்டேன் . என் மனதுக்குள் பல கேள்விகளை எழுப்பி, அந்தத் தடைகளுக்கு எல்லாம் விடையும் கண்டேன் ; ஆயினும் முதல் தடவை நான் அதைப் படித்தபோது ஏற்படுத்திய  பிரமிப்பை அழிக்கவே முடியாது.அந்த ஸ்லோகங்கள்தான் என்னுடைய கீதா பாஷ்யத்தின் ஆணிவேர். அந்த 19 ஸ்லோகங்களுக்கு முரணாக ஏதேனும் ஸ்லோகக்ங்கள் வந்தால் அவைகளை ஒதுக்கித்தள்ளுங்கள் என்று கூட சொல்வேன். ஆனால் அடக்கம் மிக்க ஒரு மாணவன் எதையும் ஒதுக்கமாட்டான் அவன் சொல்வான் – ஓஹோ இந்த முரண்பாடுகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு ஞானம் இன்னும் ஏற்படவில்லை.; இன்னும் முதிர்ச்சி ஏற்பட்டவுடன் எனக்கு இது விளங்கும்- என்று. இப்படித்தான் பணிவான ஒருவன் தன்னையும் பிறரையும் அணுகுவான்.

சூத்திரன் ‘அஹம் பிராம்மாஸ்மி’ சொன்னால் !!!!!!

சாஸ்திரங்களை விளங்கிக்கொள்ள அதை பயபக்தியுடன் பயிலவேண்டும் அப்போதுதான் சரியான அர்த்தம் புரியும். சூத்திரர்கள் இவைகளைப் படிக்கக்கூடாது  என்று தடை வித்தித்தில் பொருள் இல்லாமல் இல்லை சூத்திரன் என்றால் ஆன்மிகம் அறியாத  அப்பாவி என்று பொருள். அவன்  சாஸ்திரங்களை , அறியாத விஷயங்களை விளக்க முடியாது அல்ஜீப்ரா கணித சமன்பாடுகளை எல்லோருமா செய்ய இயலும் ? இவற்றுக்கெல்லாம் அடிப்படை அறிவு அத்தியாவசியம் ஆகிறது . பாவமே உருவமாக வந்த ஒருவன் வாயில் அஹம் பிராம்மாஸ்மி ( நானே கடவுள்) என்ற மஹா வாக்கியம் என்ன படாத பாடு படும் !!! அதை அவன் எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்ய முடியும் ? அப்படிப்பட்டவன் கைகளில் அது எப்படியெல்லாம் கசங்கிப் போகும்!!!

Xxx

ஆகையால் சாத்திரங்களை வியாக்கியானம் செய்ப்பவனுக்கு ஆன்மீக கட்டுப்பாடு தேவை . அவன் யம – நியம விதிகளைப் பின்பற்ற வேண்டும் . அது ஒழுக்க நடைமுறைகளின் சாசுவதமான வழிகாட்டி. மேலோட்டமாக எதையும் பின்பற்றுவது பயனற்ற செயல். இதற்காகத்தான் சாஸ்திரங்களை க் கற்பிக்க  குரு அவசியம் என்று சொன்னது . தற்காலத்தில் குரு என்பவர் கிடைப்பது அரிது என்பதால் பக்தி இருந்தால் போதும் என்று தற்கால புஸ்தகங்கள் மூலம் சாது சன்யாசிகள் சொன்னார்கள். பக்தி இல்லாதவர்கள்கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் சாஸ்திரங்களை வியாக்கியானம் செய்ய அருகதை அற்றவர்கள் .

xxx

சத்தியத்தை அறிவதற்கு மாமிச உணவைக் கைவிட வேண்டும்

Xxx

மனைவியையும் சூத்திரனையும் அடியுங்கள் — துளசிதாஸ்

சொற்களை ஆராயாமல் அதன் பின்னுள்ள தாத்பர்யத்தை (கருத்தை) ஆராயவேண்டும் என்பது மற்றும் ஒரு விதி ஆகும். புனிதமும், தூய்மையும் , இரக்கமும் உடைய பரிபூரண நூல் துளசிதாஸ் எழுதிய ராமாயணம் ஆகும். சூத்திரர்கள்மனைவிமார்கள் , முட்டாள்கள் , டமாரங்கள் ஆகியன அடிப்பதற்குரியவை என்ற பொருள்படும் ஒரு கவிதை அதில் வருகிறது . இந்த ஸ்லோகத்தைக் காட்டி ஒருவன் தன் மனைவியை அடித்தால் அவனுக்கு விமோசனமே இல்லை. ராமபிரான் அவருடைய மனைவியை அடித்ததும் இல்லை. அவளுக்குத் துன்பமும் கொடுத்ததில்லை . துளசிதாஸ், அவரது காலத்தில் நிலவிய ஒரு பழமொழியை தனது ராமாயணத்தில் நுழைத்துவிட்டார்; அவ்வளவுதான் . இந்த ஸ்லோகத்தைக் காட்டி கொடூர புத்தியள்ளவர்கள் தன்னுடைய மனை வியை அடிப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் . ஒரு வேளை , அவரது காலத்தில் நிலவிய ஒரு வழக்கத்தின்படி துள சிதாஸ் , அவருடைய மனைவியை அடித்திருந்தால் ….. அதுவும் தவறுதான் கணவன்மார்கள் மனைவிகளை அடிப்பது நியாயமே என்பதை அறிவிக்க துளசிதாஸ் ராமாயணம் எழுதவில்லை .மனிதர்களில் பூரணத்துவம் எய்திய ராமபிரானை வருணிக்கவும் உதாரண மனைவியாக விளங்கிய சீதையைப் போற்றவும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்கிய பரதனைக் காட்டவுமே அவர் ராமாயணத்தைப் படைத்தார் . அதில் ஏதேனும் தவறான பழக்க வழக்கங்கள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் . துளஸி தாஸ்  பூகோள புஸ்தகமும் எழுதவில்லை. ராமாயணத்தில் ஏதேனும் தவறான பூகோள விஷயம் வந்தால் அதையும் அறவே நீக்க வேண்டும்” .

Xxx

இதற்குப்பின்னர் கீதையின் ஸ்லோகங்களை விளக்கி நீண்ட கட்டுரை எழுதியுள்ளார் காந்திஜி

ஆதாரம் Young India, 12-11-1925.

—-subahm —–

Tags- காந்திஜி, சூத்திரர் , வேதம், துளசிதாஸ், மனைவியை அடித்தல், மாமிச உணவு, shudras

யமனின் 14 பெயர்கள்! (Post No.12,131)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,131

Date uploaded in London –  14 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 யமனின் 14 பெயர்கள்! 

ச.நாகராஜன்

யமனின் 14 பெயர்கள்!

 ம்ருத்யு என்றும் காலன் என்றும் யமன் என்றும் அழைக்கப்படும் தர்மதேவதையை நினைத்தால் பயப்படாதவர் யார்?

நரக சதுர்த்தசி அன்று யமனை அவனது 14 பெயர்களைச் சொல்லி நாம் வணங்குவது வழக்கம்.

அந்த 14 பெயர்கள் இதோ:

1) யமன் 2) தர்மராஜன் 3) ம்ருத்யு 4) அந்தகன் 5) வைவஸ்வதன் 6) காலன் 7) சர்வபூதக்ஷயன் 8) ஔதும்பரன் 9) தத்னன் 10) நீலன் 11) பரமேஷ்டி 12) வ்ருகோதரன் 13) சித்ரன் 14) சித்ரகுப்தன்

மதன பாரிஜாதத்தில் (ப்ரு 296) வரும் ஸ்லோகம் இது:

யமாய தர்மராஜாய மிருத்யவே சாந்தகாய ச |

வைவஸ்வதாய காலாய சர்வபூதக்ஷயாய ச ||

ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே |

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: ||

சந்த்யாவந்தன காலத்தில் தெற்கு திசையை நோக்கி இந்த மந்திரங்களைச் சொல்லி யமனை வழிபடுவது காலம் காலமாக இருந்து வரும் மரபாகும்.

இன்னொரு 14 பெயர்களாலும் யமன் அழைக்கப்படுகிறான்.

அவையாவன 1) காம 2) க்ருபணதா 3) சந்தாப 4) அஜஸ்ர 5) க்ரோத 6) அக்னி 7) பாப 8) ஹீனதா 9) ஈர்ஷ்யா-நிந்தா 10) தரித்ரதா 11) அபயஷ 12) குசங்க 13) தனபோஷண 14) தத்காலி இந்த பதிநான்கும் கூட 14 யமன்கள் என்று கூறப்படுகின்றன. இவற்றோடு அகங்காரத்தையும் சேர்த்துக் கொள்வர்.

பதினான்கு லோக மாதாக்கள்

லோகமாதாக்கள் பொதுவாக ஏகாதச லோகமாதாக்கள் என்று அழைக்கப்படுவர். அதாவது 11 லோகமாதாக்களை ச்ராத்த தத்வம் கூறுகிறது:

கௌரி பத்மா சசி மேதா சாவித்ரி விஜயா ஜயா |

தேவசேனா ஸ்வதா ஸ்வாஹா மாதரோ லோக மாதர: ||

மாதரோ என்றால் குல தேவதைகள் என்று பொருள் கொள்வர்.

இந்த 11 லோகமாதாக்களுடன் 1) த்ருதி 2) புஷ்டி 3) துஷ்டி ஆகிய மூவரையும் சேர்த்து 14 லோகமாதாக்கள் என்று சொல்கிறது கோபில ஸ்ம்ருதி (1/11-12)

ஆடைகளை அணிவிக்க வேண்டிய 14 நக்ஷத்திரங்கள்!

வஸ்த்ராபரண நக்ஷத்திரங்கள் என்று கூறப்படுபவை 14.

இதை ப்ருஹத் சம்ஹிதா 71 அத்தியாயத்தில் காணலாம்.

அஸ்வினி நக்ஷத்திரத்தில் புதிய ஆடை அணிந்தால் ஏராளமான ஆடைகள் பெருகும்.

ரோஹிணி நக்ஷத்திரத்தில் அணிந்தால் தன ப்ராப்தி அதாவது செல்வம் சேரும்.

புனர்வசு நக்ஷத்திரத்தில் புத்தாடை அணிந்தால் சுபம்.

புஷ்யம், பல்குனி நக்ஷத்திரங்களில் அணிந்தால்  செல்வம் சேரும்.

ஹஸ்த நக்ஷத்திரத்தில் அணிந்தால் கர்ம சித்தி அதாவது காரிய வெற்றி உண்டாகும்.

சித்திரை நக்ஷத்திரத்தில் அணிந்தால் சுபம் உண்டாகும்.

ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அணிந்தால் உத்தம போஜனம் அதாவது நல்ல சாப்பாடு கிடைக்கும்.

விசாக நக்ஷத்திரத்தில் அணிந்தால் ஜனபிரியராகலாம். அதாவது மக்களால் போற்றப்படுவர்.

அனுராதா நக்ஷத்திரத்தில் அணிந்தால் நண்பர்களின் சேர்க்கை ஏற்படும்.

உத்தராஷாடா நக்ஷத்திரத்தில் அணிந்தால் பிஷ்டான்னம் கிடைக்கும்.

தனிஷ்டா நக்ஷத்திரத்தில் அணிந்தால் உணவு கிடைக்கும்.

உத்தராபாத்ர நக்ஷத்திரத்தில் அணிந்தால் புத்ரப் பேறு ஏற்படு.

ரேவதி நக்ஷத்திரத்தில் அணிந்தால் ரத்ன லாபம் ஏற்படும்.

நட்சத்திரங்களை நாம் தமிழில் அழைப்பது இப்படி:

புனர்வசு – புனர்பூசம்

புஷ்யம் – பூசம்

பல்குனி – பூரம்

அநுராதா – அனுஷம்

உத்தராஷாடா – உத்தராடம்

தனிஷ்டா – அவிட்டம்

உத்தராபாத்ரா -உத்திரட்டாதி

***

QUIZ பஞ்சமிப் பத்து QUIZ (Post No.12,130)

Manasa Devi Temple Chandigarh

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,130

Date uploaded in London – –  13 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பஞ்சமி என்றால் என்ன ?

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ஐந்தாவது  நாள். இந்துக்கள் நிலவின் இயக்கத்தைப்  பின்பற்றி ஒவ்வொரு மாதத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள் . அமாவாசைக்குப்  பின்னர் வரும் 14 நாட்கள்  சுக்ல பட்ச இருவாரம் (14 நாட்கள் ); அதே போல பெளர்ணமிக்குப் பின்னர் வரும் 14 நாட்கள்  கிருஷ்ண பட்ச இருவாரம் ( 14 நாட்கள்). இந்தக் கணக்குப்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு பஞ்சமி (5ஆம் நாள்) வரும்.

10 பஞ்சமிக்களை இந்துக்கள் கொண்டாடுவது ஏன் ?

கீழேயுள்ள 10 பஞ்சமிக்களையும் நீங்கள் கண்டுபிடித்தால் உங்களுக்கு பஞ்சமி ரத்தினம் என்ற பட்டத்தை வழங்குகிறோம் .

1.ரிஷி பஞ்சமியை ஏன், எப்போது கொண்டாடுகிறார்கள் ?

2.ஸ்ரீ பஞ்சமி என்றால் என்ன?

3. பாம்புகளை வழிபடும் நாள் எது?

4.வசந்த பஞ்சமி எந்த காலத்தில் வரும்? எப்படிக்கொண்டாடுவார்கள்?

5. ரங்க பஞ்சமி என்பதன் மற்றொரு பெயர் என்ன

6.புஷ்ய பஹுல பஞ்சமியன்று  தமிழ்நாட்டில்  என்ன நடக்கும்?

7.மானஸ பஞ்சமி நாளை யார் அதிகம் கொண்டாடுகிறார்கள் ஏன்?

8.பரணி பஞ்சமி என்ற சொல்லிலிருந்து நீங்கள் அறிவது என்ன?

9.கார்த்திகேய பஞ்சமி என்றால் என்ன?

10. அந்தப் பஞ்சமியின் வேறு பெயர் என்ன?

Manasa Devi from Bangladesh

விடைகள்

1.விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

2.மாக (மாசி) சுக்ல பஞ்சமியில் சரஸ்வதியை வழிபடுவர்; இது ஸ்ரீ பஞ்சமி எனப்படும் ; அன்றைய தினம் நேபாளி இந்துக்கள், தங்கள் குழந்தைகளுக்கு அக்ஷர அப்பியாசம் செய்விப்பர்.

3.நாக பஞ்சமி ; இது சிராவண (ஆவணி) சுக்ல பஞ்சமியில் கொண்டாடப்படுகிறது ; மகாராஷ்டிரா இந்துக்கள் இதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

4. வசந்தம் என்பது வசந்த காலம் ஆகும். ஆனால் அது துவங்கும் முன்னரே அதைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்குகிறார்கள் வட நாட்டில் அப்போது சரஸ்வதி பூஜையும் நடைபெறும்.. மாசிமாதம் சுக்ல பஞ்சமியின் மறு  பெயர் இது.

5.ரங்க என்றால் வர்ணம். ஹோலி போலவே அன்றும் சாயம் பூசுவார்கள். ஆனால் இதில் கலர் நீரையும் பாய்சசுவர். இது பங்குனி மாதம் கிருஷ்ண பக்ஷ பஞ்சமியில் வரும்

6.தமிழ்நாட்டில் திருவையாறு தியாகராஜர் சமாதியில் புஷ்ய பஹுல பஞ்சமியன்று  தியாகராஜ ஆராதனை நடக்கும் . பிரபல இசைக்கலைஞர்கள் வந்து பஞ்ச ரத்தினக் கிருதிகளைப் பாடுவார்கள்

7.மனசா தேவி என்பவள் பூமிக்கும் பாம்புகளுக்கும் அதிபதி. வங்கா ளத்திலும் வட இந்தியாவிலும் இவள் வழி படப்படுகிறாள் ஆஷாட கிருஷ்ண பட்ச பஞ்சமி மனசா பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது

8.புரட்டாசி மாதம் வரும் மாளய பட்ச காலத்தில் கிருஷ்ண பட்ச பஞ்சமி  பரணி பஞ்சமி எனப்படும் ; கடந்த ஒரு வருட காலத்தில் நெருங்கிய சொந்தக்காரர் இறந்திருந்தால் அன்றைய தினம் தர்ப்பணம் செய்வார்கள்

9 & 10. கார்த்திகேய பஞ்சமியின் மறுபெயர் ஸ்கந்த பஞ்சமி; கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமி நாளன்று வங்காளிகள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள் 24 மணி நேரம் நீடிக்கும் விரதம் இது. இரவில் 4 ஜாமங்களிலும்  பூஜையும் செய்வார்கள்

—subham—

Tags- ரிஷி பஞ்சமி, ஸ்ரீ , பஞ்சமி, நாக ,வசந்த ,ரங்க,புஷ்ய பஹுல, மனஸ ,

பரணி பஞ்சமி

‘Demons killed by Krishna’ Crossword (Post No.11,129)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,129

Date uploaded in London – –  13 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1  2   
      3
    4    
 5     
       
      6 
7      
       
   8      
       
       

Across

1. – She had poison in her body – She is same as Tataka (ताड़का), who gets killed by Sri Rama in Tretayuga.

4. maternal uncle of Lord Sri Krishna. Tried to kill Krishna by sending various demons.

5.Demon who came as a horse

7.It means cart. He came in the guise of a cart

Xxxx

Down

2.In the guise of a snake

3.in the guise of a tornado

5.kuvalayapeeda

6.came as a calf

8.it meant a stork; any demon with that shape. Bhima also killed one by that  Name.

Answers :

P1UTA2NA 
   G  T3
ASMAK4   R
 K 5ESHII
 U    N
 VA  V 6A
S7AKATAV
 LA  TA
 AB 8    SR
 Y   AT
 APEEDA

–subham—

Tags- Krishna, Demons, Asura

Gandhi on Saint Tulsidas Controversy (Post No.12,128)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,128

Date uploaded in London – –  13 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

One person has written a letter to Gandhiji asking him to clarify whether Bhagavad Gita teaches Himsa (violence) or Ahimsa(Non-Violence). Gandhi replied to him and it was published in Young India on 12-11-1925.

“The question put is eternal and everyone who has studied the Gita must needs find out his own solution. And although I am going to offer mine, I know that ultimately one is guided not by the intellect but by the heart. The heart accepts a conclusion for which the intellect subsequently finds reasoning. Argument follows conviction. Man often finds reasons in support of whatever he does or wants to do.

Xxx

My first acquaintance with the Gita was in 1889, when I was almost twenty. I had not then much of an inkling of the principle of Ahimsa. One of the lines of the Gujarati poet Shamalbhatta, had taught me the principle of winning even an enemy with love, and that teaching had gone deep into me. but I had not deducted the eternal principle of non violence from it. It did not, for instance, cover all animal life. I had before this, tasted meat whilst in India. I thought it is a duty to kill the venomous reptiles like snake. It is my conviction today that even venomous creatures may not be killed by a believer in ahimsa. I believed in those days preparing ourselves for a fight with the English. I often repeated a Gujarati poet’s famous doggerel:

What wonder if Britain rules! etc.

My meat eating was as a first step to qualify  myself for the fight with the English. Such was my position before I proceeded to England, and there I escaped meat eating etc. because of my determination to follow unto death the promise that I had given to my mother. My love for truth has saved me from many a pitfall.

Now whilst in England my contact with two English friends ‘made me to read the Gita’. I say ‘made me read’ because it was not my own desire that I read it. But when these two friends asked me to read the Gita with them, I was ashamed of my ignorance. The knowledge of total ignorance of my scriptures pained me. Pride, I think, was at the bottom of this feeling. My knowledge was not enough to enable me to understand all the verses of Gita unaided. The friends, of course, were quite innocent of Sanskrit. They placed before me Sir Edwin Arnold’s magnificent rendering of the Gita. I devoured the contents from cover to cover and was entranced by it. The last nineteen verses of the second chapter have since been inscribed on the tablet of my heart . they contain, for me, all knowledge. The truth they teach are the ‘eternal verities’. There is reasoning in them but they represent realized knowledge.

I have since read many translations and many commentaries, have argued and reasoned to my heart’s content but the impression that the first reading gave me has never been effaced. Those verses are the key to the interpretation of the Gita. I would even advise rejection of the verses that may seem to be in conflict with them. But a humble student reject nothing. He will simply say, “ it is the limitation of my own intellect that I cannot resolve this inconsistency. I might be able to do so in the time to come.” That is how he will plead with himself and others.

 A prayerful and study and experience are essential for a correct interpretation of the scripturesThe injunction that a Shudra may not study is not entirely without meaning. A Shudra means a spiritually uncultured ignorant man . He is more  likely than not to misinterpret the Vedas and ignorant scriptures. Everyone cannot solve an algebra equation. Some preliminary study is sine qua non . How ill the grand truth ‘I am Brahman’ lie in the mouth of a man steeped in sin! to what ignoble purposes would he turn it! What a distortion it would suffer at his hands!

 A man, therefore, who would interpret the scriptures must have the spiritual discipline. He must practise the yamas and niyamas– the eternal guide of conduct. A superficial practice thereof is useless. The shastras have enjoined the necessity of a Guru. But a Guru being rare in these days, a study of modern books inculcating bhakti has been suggested by the sages. Those who are lacking in bhakti, lacking in faith, are ill-qualified to interpret the scriptures.

Xxxx

Renunciation of flesh is essential for realizing truth.

Xxx

Tulsidas on beating wives by husbands

Another canon of interpretation is to scan not the letter but to examine the spirit. Tulsidas’ Ramayana is a total book because it is informed with the spirit of purity, pity and piety. There is a verse in it which brackets drums, shudras, fools and women together as fit be beaten. A man who cites that verse to beat his wife is doomed to perdition. Rama did not only not beat his wife, but never even sought to displeasure her. Tulsidas simply inserted in his poem a proverb current in his days, little dreaming that there would be brutes justifying beating their wives on the authority of the verse. But assuming Tulsidas himself followed a custom which was prevalent in his days and beat his wife, what then? The beating was still wrong. But the Ramayana was not written to justify beating of wives by their husbands. It was written to depict Rama, the perfect man and Sita, the ideal wife, and Bharata  the ideal of a devoted brother. Any justification incidentally met with therein of vicious customs should therefore be rejected. Tulsidas , did not write his priceless epic to teach geography, and any wrong geography that we come across in Ramayana should be summarily rejected.

Xxx

After this Gandhi goes deeper into Gita slokas and Arjuna’s decision not to kill his own kins.

Source-Young India, 12-11-1925.

—subham—

Tags- Meat eating, Tulsidas, wife beating, 17 verses, Bhagavad Gita, Edwin Arnold, Gandhi

லண்டனில் கோவில் பற்றி ஆங்கில நூல் வெளியீட்டு விழா- பகுதி 2 (Post No.12,127)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,127

Date uploaded in London – –  13 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது 

லண்டன் சுவாமிநாதன் தொடரந்து பேசுகையில் கூறியதாவது 

புத்தகத்தை எழுதிய டாக்டர் சிவ லோக நாதன், நான்கு  வயதிலேயே தன்னை இந்து சமயக் கதைகளுக்கு அறிமுகப்படுத்திய அப்பாச்சி (பாட்டி) பற்றிக் கூறுகிறார்.  நமது தாய் தந்தையர் நம்மை சிறு வயதிலேயே கோவிலுக்கு அழைத்துச் சென்றதால்தான் நமக்கும் ஆழமான பக்தி வந்தது;  இன்று அதையே நாம் நமது குழந்தைகள், பேரப்பிள்ளைகள் விஷயத்தில் கடைப்பிடிப்பதில்லை. நாம் வாழும் கால, தேச, சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்னுடைய பேரக்குழந்தைகளுக்கு நான் தமிழில் கதையைச் சொல்லும்போது கூட பாதியில் நிறுத்தி, ‘’தாத்தா ஆங்கிலத்தில் சொல்லுங்கள்’ என்று சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஆங்கில நூல்கள் மிகவும் தேவை. 178 கதைகளை டாக்டர் சிவலோக நாதன் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஆங்காங்கே கொடுத்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

மேலும் ஒவ்வொரு கோவில் பற்றிய கட்டுரையின் இறுதியிலும் எபிலாக் EPILOGUE என்ற பெயரில் முத்தாய்ப்பு வைக்கிறார். அதிலும் சில அரிய தகவல்கள் கிடைக்கின்றன.

கோவிலில் தற்காலிக நூலகங்கள்

எனக்கு ரொம்பநாளாக ஒரு ஆசை. லண்டன் கோவில்களில் மதிய நேரத்தில், தற்காலிக  நூலகங்கள் அமைய வேண்டும் என்பதே அந்த ஆசை. கோவில் சந்நிதி அடைத்த நேரத்தில்  அந்த மண்டபத்தில் சமய நூல்களை லைப்ரரி  போல படிக்க வைக்க வேண்டும். ஆண்களுக்காக ஒதுக்கப்படும் நாளில் ஆண் தொண்டர்களே அதை நிர்வகிக்க வேண்டும். பெண்களை அனுமதிக்கும் நாளில் பெண் தொண்டர்களே அந்த நூலகத்தை நிர்வகிக்கலாம். இவ்வாறு கோவில் மண்டபத்தில் தற்காலிக நூலக வசதி செய்தால் டாக்டர் சிவலோகநாதன் எழுதிய புஸ்தகம் போன்ற சமயம் தொடர்பான நூல்களை மக்கள் படிக்க வசதி செய்யலாம் .

இதன் விலை 25 பவுன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலுக்கு நன் கொடையாக 250ம் கொடுக்கலாம்; 2500ம் கொடுக்கலாம். அவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளன.

இந்த  இந்த நிகழ்ச்சிக்கு கோவில் அறங்காவலர் சீனி. சம்பத்குமார் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழுத் தலைவர் ராமதாஸ் அறிமுக உரை ஆற்றினார். பிள்ளையார் பட்டி தலைமை குருக்களும், உலக இந்து ஆன்மீக கலாசார கேந்திர நிறுவனருமான திரு பிச்சை குருக்கள், லணடன் முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் திரு. நாகநாத சிவம் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள். ஏனைய அறங் காவலர்களான திரு தட்சிணாமூர்த்தி, திரு.அன்பானந்தர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தனர். நூல் வெளியீட்டு விழா என்றால் 20, 25 பேர்தான் வருவார்கள். இங்கோ சபை நிறைந்த  கூட்டத்தைப் பார்க்கிறேன் என்று திரு.நாக நாத சிவாச்சார்யார் குறிப்பிட்டார்.. கோவில்  அறங்காவலரான திருமதி லெட்சுமி ராஜகோபால் மற்றும் பலர், திரு பிச்சை சிவாம்சசார்யாரிடமிருந்து நூலைப் பெற்றார்கள். அற ங் காவலர் குழுவின் செயலாளர் திருமதி பத்மா சேகர் நன்றி நவின்றார்.

கூட்டம் முடிந்தவுடன் ஆசிரியர் டாக்டர் சிவலோகநாதனிடமிருந்து கையெழுத்திட்ட நூலைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர் . இறுதியில் சுவையான  பிரசாதங்களும் வழங்கப்பட்டன . குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தைத் துவக்கி, குறிப்பிட்ட நேரத்துக்குள் கூட்டத்தை முடித்தது இதை ஏற்பாடு செய்தோரின் திறமைக்கு சான்றாக அமைந்தது.

.— SUBHAM —–

TAGS- லண்டன் சுவாமிநாதன், கோவில் அறங்காவலர், நூல் வெளியீட்டு விழா

சிறந்த ஒருவனுக்கு என்ன லக்ஷணம்? (Post.12,126)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,126

Date uploaded in London –  13 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ராமாயண வழிகாட்டி!

சிறந்த ஒருவனுக்கு என்ன லக்ஷணம்?

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் சிறந்த ஒரு வீரனாக அங்கதன் சித்தரிக்கப்படுகிறான்.

அவனைச் சிறந்தவனாக ஹனுமர் தீர்மானிக்கிறார்.

அதற்கான காரணங்களையும் அவர் தீர்க்காலோசனை செய்து நிர்ணயிக்கிறார்.

இதை கிஷ்கிந்தா காண்டம் 54வது ஸர்க்க்கம் இரண்டாவது ஸ்லோகம் விவரிக்கிறது இப்படி:

புத்தயா ஹ்ருஷ்டாங்கயா யுக்தம் சதுர்பலசமன்விதம் |

சதுர்தசகுணம் மேனே ஹனுமான்வாலின: சுதம் ||

வாலின: – வாலியின்

சுதம் – புதல்வனை

அஷ்டாங்கயா – எட்டு வித அங்கங்கள் சேர்ந்த

புத்தயா – புத்தியுடன்

யுக்தம் – கூடியவனாக

சதுர்பல சமன்விதம் – நான்கு வித பலத்தையும் பெற்றவனாக

சதுர்தசகுணம் – பதினான்கு குணங்களையுடைவனாக

ஹி – சந்தேகமின்றி

ஹனுமான் மேனே – ஹனுமார் தீர்க்காலோசனை செய்தார்.

இதில் புத்திக்கு எட்டு வித அங்கங்கள் உண்டு என ஹனுமார் நிர்ணயித்துச் சொல்கிறார்.

அவையாவன:

1) பிறர் சொல்வதை சீக்கிரமாக கிரஹித்தல்

2) அதை மனதில் தரித்தல் (ஏற்றிக் கொள்ளல்)

3) சமயத்தில் ஞாபகத்திற்குக் கொண்டு வருதல்

4) அதை பிறருக்கு விளங்க உரைத்தல்

5) யுக்தியாகப் பேசுதல்

6) பிறருடைய தப்பான யுக்திகளைக் கண்டித்தல்

7) பிறர் சொல்வதின் நிஜமான அர்த்தத்தை அறிதல்

8) விஷயங்களின் தத்துவங்களை உள்ளபடி அறிதல்

அடுத்து ஒருவனுக்கு நான்கு வித பலங்கள் உண்டு என நிர்ணயிக்கிறார் ஹனுமார்.

அவையாவன

1) பாஹுபலம் அதாவது தோள் வலிமை

2) மனோபலம்

3) உபாயபலம் (தகுந்த உத்திகளைத் தேர்ந்தெடுத்து வெல்லும் திறமை)

4) பந்து பலம் (உறவினர், நண்பர்களின் ஆதரவு)

அடுத்து ஒருவன் சிறந்து விளங்க பதினான்கு குணங்கள் உண்டு என நிர்ணயிக்கிறார் ஹனுமார்.

அந்த 14 குணங்கள் :

1) தேசம், காலம், இடம் இவைகளை அறிதல்

2) மன உறுதி

3) சகல கஷ்டங்களையும் பொறுத்தல்

4) சகல விஷயங்களையும் அறிதல்

5) அறிய வேண்டியது, செய்ய வேண்டியது ஆகியவற்றில் சமர்த்தனாக (திறமைசாலியாக) இருத்தல்

6) விடாமுயற்சி

7) ஆலோசனைகளை மறைத்து வைத்தல்

8) சொன்ன சொல் தவறாமை

9) சௌரியம்

10) திறமையின் எல்லையை அறிதல்

11) நன்றி மறவாமை

12) நம்பினோரைக் கைவிடாதிருத்தல்

13) க்ஷமா (மன்னிக்கும் குணம்)

14) கலவரமின்மை

ஆகவே இப்படி தீர்க்காலோசனை செய்த ஹனுமார் அங்கதனைத் தன் பக்கம் சேர்க்க நினைக்கிறார்.

அங்கதன் சுக்லபக்ஷத்தின் ஆதியில் காந்தியினால் வளரும் சந்திரனைப் போன்ற தேஜஸ், பலம், பராக்ரமம் கொண்டவன்

புத்தியில் பிரஹஸ்பதிக்கு நிகரானவன்

ஆண்மையில் அவன் தந்தை வாலிக்கு ஒப்பானவன்

பிருஹஸ்பதிக்கு இந்திரனைப் போல தாரனுடைய சொல்படி நடப்பவன்.

எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவன்.

வால்மீகி ராமாயணத்தில் அங்கதனை முன்னிட்டு சிறந்தவனின் இலக்கணத்தை அறிகிறோம் இப்படி!

**

QUIZ கிருஷ்ணன்-அசுரர் மோதல் பத்து QUIZ (Post No.12,125)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,125

Date uploaded in London – –  12 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கிருஷ்ணரைக் கொல்வதற்குப் பல அசுரர்கள்,  பல வடிவில் வந்ததாகப் பாகவத புராணம் கூறும். உங்கள் பாகவத அறிவைச் சோதிக்க இதோ பத்து அசுரக் கேள்விகள் .

1. கிருஷ்ணன், குழந்தையாக இருந்தபோது தாய்ப்பால் கொடுக்கும் வடிவில் வந்த அரக்கி யார் ?

2. வண்டி வடிவில் உருண்டு வந்து கிருஷ்ணனைக் கொல்ல முயன்ற அசுரன் யார் ?

3.த்ருண வார்தா என்ற அரக்கன் எந்த வடிவில் வந்தான் ?

4.கன்று வடிவில் வந்த அசுரனின் பெயர் என்ன ?

5.பீமன் கொன்ற அசுரன் பெயரும் கண்ணன் கொன்ற சூரன் பெயரும் ஒன்றே; அது என்ன?

6. மலைப்பாம்பு வடிவில் வந்த அசுரனின் பெயர் என்ன?

7. கிருஷ்ணனைக் கொல்லவந்த கழுதை அசுரனை பலராமன் கொன்றான். அவன் பெயர் என்ன ?

8.கேசி அசுரன் எந்த வடிவில் வந்தான் ?

9. கிருஷ்ணன் என்னும் எட்டாவது குழந்தை தன்னைக் கொல்ல ப்போகிறது என்பதை அசரீரி மூலம் கேட்டு , பல அசுரர்களை ஏவிய  மன்னன் யார் ?

10.குவலயாபீடம் என்பது என்ன?

Xxxx

Answers

1.பூதனா

2.சகடாசுரன் ; சகடம் என்றால் வண்டி

3.புயல் வடிவில் வந்தான் ; கிருஷ்ணன் அவனைத் தூக்கிச் சென்று பாறையில் மோதச் செய்து கொன்றான் .

4.வத்ஸாசுரன் ; வத்ச என்றால் கன்று .

5.பகாசுரன் என்ற பெயருள்ள அசுரர்கள் பாகவதம், மஹாபாரதம் இரண்டிலும் வந்தாலும் அவர்கள் வெவ்வேறு அசுரர் கள்தான்.

பக என்றால் கொக்கு அல்லது அதுபோல வடிவுள்ள பயங்கர அசுரன்.

6.அகாசுரன்

7. தேனுகாசுரன் . தேனுக என்றால் கழுதை ; டாங்கி (Dhenuka= Donkey) என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்ததே .

8.குதிரை வடிவில்

9.கம்சன்

10.மதுரா நகரில் நுழைந்தபோது கண்ணனைக் கொல்ல வந்த யானையின் பெயர் குவலயாபீடம் ; அதையும் கிருஷ்ணன் கொன்றான்.

–subham —- 

Tags– கிருஷ்ணன் , கம்சன், அசுரர்கள், குதிரை, யானை, கழுதை , கன்று

பிள்ளையாரைத்  தெரியுமா crossword ?(Post .12,124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,124

Date uploaded in London – –  12 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிள்ளையார் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருபவை :

 1      2
 3     
      
4  5 6 7
      
  8 ⇡   
  8 A  9 ⇡ 
  10   
      11 
 12     

ACROSS

2.கணங்களுக்கு எல்லாம் தலைவர்  ⇠ 

3. பிள்ளையாருக்கு பிடித்த பூ

8.A. இங்கிருந்துதான் சிறுத்தொண்டர் பிள்ளையாரைக் கொண்டுவந்ததாக ஒரு கதை

10.பூனை மீது யானை என்று சொல்லும்படியாக பிள்ளையாருக்கு  பிடித்த ஒரு வாஹனம்

11.பிள்ளையாருக்கு பிடித்த திதி  ⇠ 

12.தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த விநாயகர் பெயர்; ஆனால் வடக்கில் தெரியாது

XXXXX

DOWN

1.பிள்ளையாருக்கு பிடித்த புல்

4. பிள்ளையாருக்கு பிடித்த பலகாரம்

5.ஆலயம்

6.பிள்ளையாருக்கு பிடித்தது ; எண் ஒன்பதுடன் இணைக்கவும்

8.ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில்   xxxxx  ⇡

9பிள்ளையாருக்கு பிடித்தது ;எண் ஆறுட ன் இணைக்கவும்

7தமிழ்நாட்டில் பிள்ளையார் உள்ள கிராமம்

XXXX

ANSWERS

ACROSS

2.கணபதி  

3. எருக்கம் பூ

8.வாதாபி

10.மூஞ்சூறு

11.சதுர்த்தி  

12.பிள்ளையார்

XXXXX

DOWN

1.அருகம்புல்

4. கொழுக்கட்டை

5.கோவில்

6.மரம்

8.ஆண்டி 

9.அரச

7.பட்டி

 அ 1திக   2
எ 3ருக்ம்பூ
    
கொ4ம்டிகோ5ம 6ப 7
ழுபுண்விட்
க்ல்ஆ8ல்டி
வா 8 Aதாபிஅ 9 
ட் மூ10ஞ்சூறு
டைதித்ர்துச 11 
பி 12ள்ளையார் 

–subham—

Tags-  கணபதி , விநாயகர், சதுர்த்தி, கொழுக்கட்டை