POSTED BY LONDON SWAMINATHAN ON 8-7-2025;LIFTED FROM THE COMMUNE MAGAZINE.
On 30 June 2025, during a casual exploration on social media, as I came across this interesting post – the DMK Youth Wing had posted a picture of Chanakya with the caption “#DidYouKnow? The ‘Arthashastra’ written by Chanakya states that those who criticize religious superstitions should be labeled as ‘atheists’ and ‘traitors’ and kept away from the public.”
The image said, “The ‘Arthashastra’ written by Chanakya states that ‘Kings should always keep the public stupid. For that, they should spread religious superstitions. Those who criticize this should be accused of being ‘atheists’ and ‘traitors’ and kept away from the public.”
I was prompted to see if Acharya Chanakya really had said such a thing.
As I had not come across such strong statements against atheism in any traditional text in Sanskrit, I dug into the Arthashastra again.
What Is Arthashastra?
Arthashastra is a comprehensive traditional text authored by Chanakya. It deals with the subject of the monarch, their assembly, the subjects, wealth, and governance of the kingdom. Chanakya clearly cites earlier authors or schools of thought making the Arthashastra an important example of the legacy of intellectual heritage of ancient India. The Arthashastra and its contents were referred to by later texts and developed in their own way.
What Does The Text Actually Say?
Chanakya starts the text first describing the subjects that a monarch must be well acquainted with as part of the eternal discipline a Monarch must have – Anvikshiki (logical philosophy, metaphysics), Trayi (the three Vedas), Varta (agriculture, cattle breeding and trade), and Dandaniti (science of government). He mentions the differences in opinions too. Check out this table to understand it better.
Tabel 1: The accepted subjects for the monarch’s attention according to different schools of thought
Anvikshiki, according to Chanakya, comprises the subjects of Sankhya, Yoga, and Lokayata. The Sankhya philosophical tradition forms the philosophical basis of which the Yoga philosophical tradition is the practical implementation. However, Lokayata is the Nastika or the Charvaka philosophical tradition. This Lokayata tradition looked at only those which could be perceived by the sense organs as real and anything else as unreal. Direct perception is given importance. It also does not consider imperceptible concepts like God or Devas and processes such as accumulation and fructification of Punyakarmaphala (result of meritorious action) and Papa (result of unmeritorious action) as valid. Oftentimes, this tradition is called Atheism in English.
The Monarch learns Dharma (righteousness) and Adharma (non-righteousness) from Trayi, Artha (wealth) and Anartha (non-wealth) from Varta, and Naya (good governance) and Apanaya (bad governance) from Dandaniti (science of government). Thus, Chanakya’s stance is that only after learning all these four can a Monarch learn both Dharma and Artha properly so as to properly govern the kingdom.
In fact, Chanakya is all in praise of Anvikshiki because it keeps the mind steady and firm and bestows excellence of foresight, speech, and action. This is why the chapter right after introducing the contents of the Arthashastra is partly called “Anvikshikisthapana” (establishment of Anvikshiki) and the first word of this chapter is Anvikshiki.
Amongst the dozen or so existing commentaries to the Arthashastra, let us take just two.
In the Vaidikasiddhantasamrakshini, one of the commentaries to the Arthashastra, Anvikshiki, also called Hetuvidya (the science of causation, i.e. logic), helps to understand reality as it is, includes the proper analysis of means of valid knowledge, and comprises Nyaya, Vaisheshika, and Lokayata philosophical traditions.
The Jayamangalakrodapatra, another commentary to the Arthashastra, says that Anvikshiki helps in understanding oneself and also the wisdom associated with cause and effect.
Now there is a question that arises about this subject of study that has been praised as a fundamental academic eligibility for a Monarch according to a key text on governance in Sanathana Dharma – Why is the association of Nastika/Charvaka/Atheism considered against Dharma or the society?
Perhaps it is our own ignorance about the Arthashastra and associated literature that has pushed us to this state of consuming secondary information to sow doubts and malice within our minds about our heritage! Perhaps Chanakya’s own name can be used to dissuade the ignorant people of his country from studying his work!
Abhinav Rajaputra is an Indology researcher, educator, and a traditional student practitioner of Yoga.
Picture shows dead Malaiyadwaja Pandya returning to earh in Space Shuttle.மலையத்வஜனை அழைத்த படலம், அவர் விண்ணுலகத்திலிருந்து ஸ்பேஸிஷட்டிலில் ஸ் வந்து செல்லும் காட்சி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏழுவகை பருவ மங்கையர்
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) பயன்படுத்தும் மேலும் சில உத்திகளைக் காண்போம்.
திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் தங்கி இருந்தபோது, அழகான பேதை- பெதும்பை-மங்கை- மடந்தை- அரிவை- தெரிவை- பேரிளம் என்னும் ஏழுவகை பருவ மங்கையர்களெல்லாம் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு பத்து தினங்களுக்கு முன்னே வீடுகள் தோறும் போய் அழைத்துக் கொண்டு விடியற்காலத்திலே தீர்த்தத்தில் போய் ஸ்நானம் செய்வார்கள் . அவர்களைக்கண்ட மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார்.
****
சிவன் தலையில் மூன்றாம் பிறை நிலவு
தெள்ளிய மூன்றாம் பிறையைத் தரித்த சடாபாரத்தையுடைய கடவுளானவர் அன்பில்லாதவர்களேயானாலும் தன்னைப் பாடினவர்களிடத்தில் இரக்கஞ்செய்வார் என்று நினைத்து எண்ணுதல் பெற,
நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க — என்று — சிவபுராணம்– பாடினார் . இது மண்சுமந்த படலத்தில் வருகிறது .
*****
இவன்தான் வந்தி என்பவளுடைய கூலியாள் என்று காட்டிவிட பாண்டியன் கண்டு கோபித்துத் தன் கையிலே பொற்பிரம்பு(Golden Stick)கொண்டு அண்டங்களையும் அளவில்லாத உயிர்களையும் தனக்குச் சரீரமாகக்கொண்ட கடவுள் முதுகிலே ஓங்கி அடித்தான்.
இந்த அண்டம் என்ற சொல்லுக்கு முட்டை மற்றும் கோளமான என்ற பொருள் உண்டு. திருவாசகத்திலும் அதற்கு முந்தைய நூல்களிலும் இந்தச் சொற்பிரயோகத்தைக் காணலாம் ; பூமி மட்டுமல்ல ; அண்ட சராசரங்கள் அனைத்தும் வட்ட வடிவமானவை என்று இந்துக்கள் முதல் முதலில் கண்டுபிடித்ததை இது காட்டுகிறது..
****
கடற்கரையில் மீன்வியாபாரம் செய்யும் மீனவப் பெண்கள் பற்றி வலை வீசின படலத்தில் பரஞ்சோதி எழுதுகிறார் ,
பின்னும் அந்த நுளைப் பெண்கள் விலை கூறி விற்கிற கெண்டை மீனுக்கு நேராக அவர்கள் கண்களே பிறழ்ந்து விலையுயர்த்தவும் , பேசுகிற வாய் வாசமும் கூந்தலில் முடித்த தாழம்பூ வாசமும் மீனின் நாற்றத்தை ஒழித்து நல்ல மணம் வீசவும்……….
****
நால்வகைக் சொற்கள் பற்றிய உரையில் தவறு
நாமகள்
பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்
பத்திபடப் பரப்பித் திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி
பெறமுக்கண் மூர்த்தி தாளில்
தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
சூட்டவரிச் சுரும்புந் தேனுங்
கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா
ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.
(பொருள்- குற்றநீங்கிய, பெயர் –வினை –இடை –உரி என்னும் நான்கு
வகையை யுடைய சொற்களாகிய மலர்களை எடுத்து, நிலல் பெற வைத்து, எல்லாத்
திக்குகளினுஞ் சென்று, கமழ்ந்து, கூசை ஒழுகப்பெற்று, அழகுபெற, அகன்ற
பெரிய அன்பாகிய நாரினால், பாமாலையாகச் செய்து, மூன்று கண்களையுடைய
நால்வகைச் சொற்கள் என்பதற்கு உரைகாரர்கள் பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச் சொல், உரிச்சொல் என்று உரை எழுதியுள்ளனர். இது தவறு என்று நான் கருதுகிறேன் ஏனெனில் தொல்காப்பியம் சொல்லும் நான் வகைச் சொற்கள் வேறு (அடியிற் காண்க).
உண்மையில் இது சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள நான்குவகைச் சொற்கள் ஆகும் . வாதாபி கணபதிம் பாடலில் முத்து சுவாமி தீட்சிதரும் இதைப்படியுள்ளார் பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்…….
அதாவது பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.
கற்பகச் சோலையின் கிளிகளுக் கெல்லாம், குற்றம் நீங்கக் கற்பிக்கும் .
இது ஒரு நல்லகற்பனைச் சித்திரம் ; பிராமணச் சிறுவர்களிடம் கிளிகள் வேதம் கற்றன; அவைகளிடமிருந்து பூவைப் பறவைகள கற்றன ; அவைகள் தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள கிளிகளுக்கு வேதம் கற்பித்தன !
*****
பாண்டியன் திருநகரம் கண்ட படலம், (Madurai City)
நாத்தீகம் பேசுவோர்
மறையவர் வீதி
ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும்
நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக
ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித் தீர்த்தராய்
முத்தீ வேட்குஞ் செல்வர்தம் மிருக்கை சொல்வாம்.
ஆத்திகர்கள் உண்டு என்று சொல்லுகின்ற, அறம் தலிய நான்கு பொருள்களையும், நாத்திகம் பேசும் வஞ்சர்
இல்லையென்று கூறுகின்ற வஞ்சகரின், நாவினை அறுக்கின்ற வாளாக, இறைவன் அருளிய மறையீன் முடிவை
உணர்ந்து, மனந் தெளிந்து தூய்மையுடையராய், மூன்று தீ வேள்வியை முடிக்கும், மறையவரின்
தேசீய கீதத்தைக் கேலி செய்தால் PARODY நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறுகிறதே ; அப்படியானால் சண கண மண என்று எழுதுவோர் மீது கவர்னர் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது ?
இது லண்டன் சுவாமிநாதன் கேள்வி .
என்னிடமுள்ள 2002ஆம் ஆண்டு பாட புஸ்தகத்தில் தேசீய கீதம் முறையாக எழுதப்பட்டுள்ளது.
I WAS GUEST OF HONOUR AT HENDON TAMIL SCHOOL IN LONDON ON 5TH JULY 2025 AND GAVE PRIZES TO CHILDREN AND TEENANGERS. I PRESENTED ALSO TEN OF MY BOOKS TO THE SCHOOL OUT OF 148 BOOKS WRITTEN BY ME.
MR SIVARAJA, CHAIRMN, THANKED ME SPECIALLY FOR SUPPORTING THE TAMIL SCHOOL FOR OVER TWENTY YEARS. IN THE LAST TWO DECADES THIS IS MY SECOND TIME SPEAKING AT THE ANNIVERSAY EVENTS.
HERE ARE SOME PICTURES,
–SUBHAM–
LONDON SWAMINATHAN, DISTRIBUTING PRIZES, TAMIL STUDENTS , HENDON TAMIL SCHOLL, GUEST OF HONOUR
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விளங்கும் பிறை சடைமேல் உடை விகிர்தன்வியலூரை,
தளம் கொண்டது ஓர் புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்குஇல் – தமிழ் பரவித்தொழும் அடியார் அவர்,என்றும்
விளங்கும் புகழ் அதனோடு,உயர்விண்ணும் (ம்) உடையாரே.
பல பாடல்களில் அவர் தன்னைத் தமிழ் ஞான சம்பந்தன் என்றும் தமிழ் விரகன் ன்றும் அழைத்துக்கொள்கிறார்.
****
தமிழுக்கு எத்தனை பெயர்கள் ? என்று பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரை எழுதினேன். இப்பொழுது ஞானசம்பந்தரின் முதல் திருமுறையை மீண்டும் படிக்கத் துவங்கியபோது அவர் போடும் புதிர்களைக் கண்டேன் . நமது காலத்தில் தமிழையே மூச்சாகக்கொண்டு வாழ்ந்தவர் பாரதியார்; ஆனால் அவருக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஞானசம்பந்தருக்கும் தமிழே மூச்சு என்று சுந்தரமூர்த்தி நாயனார் சொன்னதை நாம் அறிவோம். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் என்று அவர் புகழ்ந்தார் .
புதிர்கள் என்ன ?
தேவார முதல் திருமுறையில் ஞானசம்பந்தர் வண்டமிழ் , தேன் நேர் ஆர் தமிழ், இன்றமிழ் , ஞானத்தமிழ் , தமிழ் மாலை என்றெல்லாம் பல பதிகங்களில் சொல்லிவிட்டு கலை மலி தமிழ் , படமலி தமிழ் என்று இரண்டு பதிகங்களில் சொல்கிறார்
இவற்றில் தமிழ் மாலை என்பதை ஆண்டாளும் முப்பதாவது திருப்பாவையில் செப்பியதை எல்லோரும் அறிவார்கள் .
சம்பந்தருக்கு சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாணிக்கவாசகர் தண்ணார் தமிழ் (அளிக்கும் தென் பாண்டி நாட்டானே) என்று சொன்னார் .
சம்பந்தர் சொன்ன தேனுக்கு நிகரான தமிழ் என்றால் புரிகிறது; கலை மலி தமிழ் என்று அவர் என் சொன்னார் ? ஏனெனில் தமிழ் மொழியில் ஆடல் பாடல் சோதிடக்கலைகள் பற்றி நிறைய இருப்பது அவருக்குத் தெரியும் ; அவருக்குப்பின்னர் வந்த வரத்தருவா ர் போன்றோர் ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொன்னதால் நமக்கு 64 கலைகள் பற்றித் தமிழர்களும் அறிந்திருந்தது தெரிகிறது. இந்த 64 கலைகளை பெண்கள் படிக்க வேண்டிய சிலபஸில் காம சூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் சொல்லியிருக்கிறார் ; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கரிகாற் சோழன் அவைக்கள புலவர் மதுரைக்கு வந்து ராஜ சேகர பாண்டியனைப் பார்த்து எங்கள் கரிகாற்சோழனுக்கு 64 கலைகள் தெரியும்; உங்களுக்குத் பரதக் கலை தெரியுமா? என்று சவால் விட்டவுடன் அவர் இறைவனிடம் மன்றாடி வெள்ளியம்பலத்தில் மன்றாடியவனை, கால் மாறி ஆட வைத்ததாக பரஞ்சோதியார் எழுதுகிறார் ஆகவே கலை மலி தமிழ் என்பது பொருத்தமே.
தேவாரத்தில் முதல் திருமுறையில் சம்பந்தர் பயன்படுத்திய மேலும் சில சொற்கள்:-
பல ஓசைத் தமிழ் – வல்லோசை,மெல்லோசை,இடையோசை முதலிய வேறுபாடுகளை உடைய தமிழ்
குன்றாத் தமிழ்- அருள் அல்லது மதிப்பு என்றும் குறையாத மொழி.
அது என்ன படமலி தமிழ் ?
இதற்குப் பொருள் எழுதியோர், பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பேசுகின்றனர்
திருவிடைமருதூர் பதிகத்தில் வரும் படம் மலி தமிழ் என்பதற்கு தருமபுரம் வெளியிட்ட பதிப்பில் படம் மலி தமிழ்= படமெடுத்தாற்போலச் சிறந்த தமிழ் என்று இருக்கிறது .
இன்று நான் ஒரு மாணவனிடம் சொன்னால் சார், எந்த சினிமாப்படம் போல என்று சொல்லுங்கள் சார்? என்பான். ஒரு பெரியவரிடம் சொன்னால் , பாம்பு படம் எடுத்தாற்போல அ ழகானதா , ஐயா? என்று கேட்பார். .பத்திரிகையாரிடம் சொன்னால் இந்தப் படம் எந்தப் போட்டோவைப் போல? என்று கேட்பார் ஒரு கவிஞரிடம் சொன்னால் சித்திரம் போல சொற்சித்திரங்கள் நிறைந்த மொழி தமிழ் என்பார்.
வர்த்தமானர் தேவாரப்பதிப்பில் இச்சொல்லுக்குப் பொருள் தரப்படவில்லை. சொல் ஓவியமாக’ என்று சைவம் இணையதளத்தில் உள்ளது .With wordy pictures என்று ஆங்கிலத்தில் உள்ளது. ‘ அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
****
இசை மலி தமிழ் – இசை மலிந்தபாடல்கள் உள்ள மொழி
செந்தமிழ் – செம்மையான மொழி ; சிறந்த மொழி
வண்டமிழ் = வளமான சொற்களுடைய மொழி
ஒண்டமிழ் – ஒளி போல பிரகாசமான
தண்டமிழ் – குளிர்ச்சி மிக்க
தனித்தமிழ் – ஒப்பற்ற ,உவமை சொல்ல முடியாத
தெய்வத்தமிழ், ஞானத்தமிழ் – அருட்கவிகள் உடைய பாக்கள் நிறைந்த
இன்றமிழ் – இனிய , என்றுமுள்ள தமிழ்
கன்னித்தமிழ் – என்றும் புதுமை ,இளமையோடு திகழும்
****
தமிழுக்கு எத்தனை பெயர்கள்? My Old Article
எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014.
தமிழுக்குத்தான் எத்தனை பெயர்கள்?
தெய்வத் தமிழ், செந்தமிழ், முத்தமிழ், கன்னித் தமிழ், தென் தமிழ், தேன் தமிழ், பழந்தமிழ், ஞானத் தமிழ், திருநெறிய தமிழ், அமுதத் தமிழ், அருந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் இசைத் தமிழ், தன்னேரிலாத தமிழ், இயற்றமிழ், தீந்தமிழ், இருந்தமிழ், நாடகத் தமிழ், பசுந்தமிழ், கொழிதமிழ், பாற்றமிழ், சொற்றமிழ், பைந்தமிழ் – இப்படி எத்தனையோ பெயர்களை உடையது நம் தாய்த் தமிழ்.
ஆயினுமிவைகளில் இன்று பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் பாடல்கள் தெய்வத் தமிழ் பாடல்களே! ஆழ்வார்களும் நாயன் மார்களும், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களும் பாரதி போன்ற தெய்வீகக் கவிஞர்களும் பாடிய பாடல்களே காலத்தை வென்ற கவிதைகளாக மிளிர்கின்றன. திரைப்படப் பாடல்கள் எல்லாம் நேற்று முளைத்து இன்று மறையும் காளான்கள் போல மறைந்து விடு கின்றன. அவைகளில் பொருள் பொதிந்த தத்துவப் பாடல்கள் மட்டுமே காலத்தை எதிர்த்து நீச்சல் அடிக்கின்றன. அவைகளையும் சற்று ஆராய்ந்தால் அவை ஒரு தெய்வீகக் கவிஞரின் கருத்துகளை சிறிது எளிமைப் படுத்திய பாடல்கள் என்பது புரியும்!!
இதோ தமிழைப் போற்றும் சில பெரியோர்களின் பாடல்கள்:ஞானத் தமிழ்
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞான சம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேடவல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்
செலுவர் சீரருளாற்பெற லாஞ்சிவ லோகமதே
திரு ஞான சம்பந்தர் 1-117-12
பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி பாடல் ௨௧௮௨
திருநெறிய தமிழ்
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே
முதல் திருமுறை
அருந்தமிழ்
அலைபுனல் ஆவடுதுறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெமிறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
முதல் திருமுறை, சம்பந்தர்
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ் நின்று
வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே (பெருந்தேவபாணி)
செந்தமிழ்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல் உலகத்து
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
………….. ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர் – பாயிரம்)
பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே
முதல் திருமுறை, சம்பந்தர்
செந்தமிழ்த்திறம் வல்லிரோ?
அந்திவானமும் மேனியோ? – (சுந்தரர் தேவாரம்)
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)தென் தமிழ்
பாரதியார், பாரதி தாசன் ஆகியோரின் பொன்மொழிகள் பாரதி பற்றிய கட்டுரைகளிலும், பாரதியுடன் 60 வினாடி பேட்டி, பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி ஆகிய கட்டுரைகளிலும் காண்க.
—Subham—
Tags- தமிழுக்கு எத்தனை பெயர்கள் , தமிழ் மொழி , பெயர்கள், சம்பந்தர், புதிர், படமலி தமிழ்
Collected from popular dailies and edited for broadcast)
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை ஆறாம் தேதி 2025-ம் ஆண்டு .
முதலில் இந்தியச் செய்திகள்!
சித்த ஆயுர் வேத மருத்துவப் பல்கலைக் கழகம் ! ஜனாதிபதி முர்மு துவக்கிவைத்தார்
குடியரசுத்தலைவர் முர்மு, ஜூலை முதல் தேதியன்று மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகம் உள்ளது
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த பல்கலைக்கழகம் நாட்டின் வளமான பண்டைய மரபுகளின் நவீன மையமாகும் என்று கூறினார். இந்தப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 100 ஆயுஷ் கல்லூரிகளும் இதன் சிறப்பால் பயனடைந்து வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பொது வாழ்வில் மக்களுக்கு சேவை செய்வதில் சுய தேவைகளை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் தலைவர் தனது சொந்த வாழ்க்கை குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.
ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.
சோன்பர்சாவில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழக ஆரோக்யதாம் வளாகத்தில் கல்விக் கட்டிடம், அரங்கம், பஞ்சகர்மா பிரிவுகள் உள்ளன பஞ்சகர்மா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சுத்திகரிப்பு மற்றும் புத்துணர்ச்சி சிகிச்சை முறையாகும்
****
ஜைன துறவி வித்யானந்த் மகாராஜ் நூற்றாண்டு விழாவில்..
பிரதமர் மோடிக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம்
ஜைன துறவி ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்ம சக்கரவர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜைன ஆன்மிகத் தலைவர்களில் ஒருவரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் 100வது பிறந்தநாளைக் கௌரவிக்கும் ஒரு வருட கால விழா தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அகிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜ் ஏப்ரல் 22, 1925 அன்று கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் கிராமத்தில் பிறந்தார். நவீன காலத்தின் தலைசிறந்த ஜைன அறிஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். இவர் 8,000-க்கும் மேற்பட்ட ஜைன ஆகம வசனங்களை மனப்பாடம் செய்தவர்.
‘ஜைன தர்ஷன்’, ‘அனேகாந்த்வாத்’, மற்றும் ‘மோக்ஷமார்க் தர்ஷன்’ உள்ளிட்ட ஜைன தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். இவரது நூற்றாண்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போதுதான் அவருக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டது.
****
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் இருவர் கைது
ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு, அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பைப் குண்டு’ வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், மதுரையில் பால் வியாபாரி சுரேஷ், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பூசாரி முருகன், வேலுாரில் பா.ஜ., மருத்துவ பிரிவு செயலர் அரவிந்த் ரெட்டி, பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
மேலும், மாநிலம் முழுதும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இது, போலீசாரை அதிர்ச்சியடைச் செய்தது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., பிரிவின் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்தனர்.
இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த அல் – உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர், ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத கும்பலின் தளபதியாக செயல்பட்டு வந்த, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் தப்பிவிட்டனர்.
மொத்த கொலைகளுக்கும் மூளையாக செயல்பட்டது அபுபக்கர் சித்திக் தான். தொடர் விசாரணையில், தெரியவந்தது.
அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் பதுங்கி இருக்கும் தகவல், மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்கள், அத்தகவலை உறுதி செய்த பின், தமிழக போலீசாருக்கு தகவலை தெரியப்படுத்தினர். ஆந்திராவுக்கு சென்ற தமிழக காவல் துறையின் ஏ.டி.எஸ்., பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
****
ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு
ராமேஸ்வரம்; ”கிராம கோயில் பூஜாரிகள் ஆன்மிக போதனைகள்மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும்” என தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 15ல் தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு விழாவையொட்டி கோசுவாமி மடத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பூஜாரிகள் பூணுால் அணிந்தனர். பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதசார்பற்ற நம்நாட்டில்அதுவும் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுதான் நம் பலவீனம். இதனை மீட்க நாம் போராட வேண்டும். அக்காலத்தில் கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்கள் தானமாக கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்று அரசியல்வாதிகள் கபளீகரம் செய்கின்றனர்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் முதல் தற்போது வரை மதமாற்றம்நடக்கிறது. இது ஹிந்து சமூகத்திற்கு பேரழிவு ஆகும். எனவே கிராமங்களில் ஆன்மிக போதனைகள் மூலம் மக்களிடம் ஹிந்து மதத்தின் புனிதம், கடவுளின் வரலாற்று கதைகளை விளக்கி தெய்வ நம்பிக்கை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். மதம் மாறியவர்களை தாய்மதமான இந்து மதத்திற்கு அழைத்து வரவேண்டும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சென்னையில் உள்ள விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் ஏராளமானோர் தாய்மதம் திரும்புகின்றனர்.
கிராம கோவில் பூஜாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்; ரூ.4 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை, ரூ.5 ஆயிரமாக்க வேண்டும். இப்போது ஊக்கத்தொகையாக ரூ.1,500 கொடுப்பதாக அறிவித்துள்ளதை அதை செயல்படுத்தவேண்டும். இவ்வாறு ஆர்ஆர். கோபால்ஜி பேசினார்.
பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பூஜை, கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடக்க வேண்டும். அதை மீறி மொழி அரசியல் கூடாது. மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்.
குழந்தை பிறப்பில் நாட்டின் சராசரி 1.9ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அது, 1.4ஆக குறைந்திருப்பது அபாய எச்சரிக்கை. இதனால், குடும்ப அமைப்பு சீரழியும்.
இந்து பெண்கள் குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வேண்டும்.
கோவில்களில் கட்டண தரிசன முறையை கைவிட வேண்டும். பென்ஷன் பெறும் கிராமக் கோவில் பூஜாரிகள் மறைவுக்கு பிறகு, அவர் மனைவிக்கு வழங்க வேண்டும்.
எல்லா கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இந்து கோவில் சொத்துக்களில் மாற்று மதத்தவருக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்ய வேண்டும். கோவில் தொடர்புடைய பணிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். மாற்று மதத்தினரை பணியமர்த்தக்கூடாது.
****
சுருக்கமான செய்திகள்
நாளை ஜூலை ஏழாம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜூலை 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்படும் .முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடு தான் திருச்செந்தூர். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் பிஆர்டிசி சார்பில் 600 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
*****
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 20 லட்சம் ரூபாய், ஆயிரத்து 30 கிராம் தங்கம் மற்றும் 15 கிலோ 405 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் சுமார் 8 மணிநேரம் நடைபெற்றது.
****
ஜெர்மனியில் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு “புளூ டங்” விருது
ஜெர்மனியில் நடைபெற்ற Greator ‘கிரேட்டர் விழா 2025’ நிகழ்ச்சியில் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக கிரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஜெர்மனியில் செயல்பட்டு “கிரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
****
இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை கருத்து… வைகோவின் முன்னாள் உதவியாளர் கைது
சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசார கருத்துகளைப் பதிவிட்டுவந்த சமூக ஆர்வலரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் முதன்மை உதவியாளருமான அருணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அருணகிரி 60. இவரது தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர்.. சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசாரத்தை தீவிரமாக செய்து வந்தார். இதனால், சங்கரன்கோவில் போலீசில் ராஜா என்பவர், இந்து கடவுள்களை அருணகிரி அவதூறு செய்து பதிவிட்டு வருவதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கனவே, போலீசார் விசாரணை நடத்தினர். அருணகிரியை ஜூலை 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.. அவர் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..
****************
அமெரிக்காவில் கோவில் மீது தாக்குதல்
அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு – இந்தியா கண்டனம்
அமெரிக்காவின் உட்டா UTAH மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடுசூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்கான் கோவிலின் உள்ளே பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள்மீது பாய்ந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஜூலை மாதம் 13 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam, World Hindu News, Tamil, 6th July 2025, Broadcast, Latha, Vaishnavi.
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
– சுந்தரர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள கொங்கு நாட்டுத் தலமான கொடுமுடி திருத்தலமாகும். இந்தத் தலம் காவேரி நதிக் கரையில் திருச்சி- ஈரோடு சாலையில் ஈரோடிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இறைவர் : கொடுமுடி நாதர், மருக்கொழுந்தீசர்
இறைவியார் : சௌந்தராம்பிகை, பண்மொழிநாயகி
தீர்த்தம் : காவிரி
ஸ்தல விருட்சம் : வன்னி மரம். இந்த மரத்தின் வயதைக் கணக்கிட முடியவில்லை. இதில் பூ பூக்கும், காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். இன்னொரு பக்கம் இருக்காது. பல அதிசயங்கள் கொண்ட மரம் இது.
லிங்கம் ஸ்வயம்பு லிங்கம்
இந்தத் தலம் வரையில் தெற்கு முகமாக வந்த காவேரி ஆறு இங்கு கிழக்கு முகமாகத் திரும்புகிறது.
இந்தத் தலத்திற்கு கரையூர் என்றும் பாண்டிக் கொடுமுடி என்றும் வேறு பெயர்கள் உண்டு.
இது மும்மூர்த்தித் தலம் ஆகும். பரமசிவன் ‘முகுடேஸ்வரர் என்றும், விஷ்ணு ரங்கசாமி என்றும் பிரம்மா ஒரு மாயாரூபியாகவும் இங்கு விளங்குகிறார்கள்.
காவேரிக்கு மத்தியில் ஒரு பாறையின் மேல் அகத்திய முனிவர் காவேரியை ஒரு குடத்தில் வைத்திருந்ததை ஒரு காகம் கவிழ்த்து விட்டதாக ஒரு கற்சித்திரம் இங்கு காணப்படுகிறது. அதனால் தான் காவேரி இங்கு கிழக்கு முகமாகத் திரும்புகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
பழனி திருமஞ்சன தீர்த்தம் இங்கிருந்து கொண்டு போவதுண்டு.
மலயத்வஜ பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டான். ஏனெனில் பிறவியிலேயே அவனது மகனுக்கு விரல்கள் சரியாக வளராமலிருந்தன. கொடுமுடி இறைவனை வேண்டியவுடன் இந்தக் குறை தீர்ந்தது . ஆகவே அடிக்கடி இந்த ஆலயத்தைப் புதுப்பித்து வந்தான். ஆகவே இந்த ஊர் பாண்டிக் கொடுமுடி என்ற பெயரைப் பெற்றது.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையைக் கட்டிப் பாதுகாக்க வேண்டும் என்றும் வாயு தேவன் தன் பலத்தினால் மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் இந்திரனால் போட்டி நிர்ணயிக்கப்பட்டது.
ஆதிசேஷன் மேரு மலையை இறுகக் கட்டி அணைக்க வாயு பலமாக வீச, மேருவிலிருந்து ஐந்து சிகரங்கள் தென் திசையில் பறந்து வந்து விழுந்தன. அவைகள் ஐந்தும் ஐந்து மணிகளாக மாறின. சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் திருவாட்போக்கி என்று இப்போது அறியப்படும் ரத்தினகிரியாகவும், மரகத மணி விழுந்த இடம் ஈங்கோய்மலையாகவும், நீலமணி விழுந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் விழுந்த இடம் கொடுமுடியாகவும் மாறி, பெரும் தலங்களாக ஆயின.
மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் இவர் மகுடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
கிழக்குப் பார்த்து அமைந்துள்ள கோவில் 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது.
கர்பக்ருஹத்தின் இரு புறமும் சூரிய சந்திரர்கள் இருப்பதானது இறைவன் அவர்களைத் தனது இரு கண்களாகக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்றும் சிவபிரானின் நெற்றியிலுள்ள அக்னி சிவலிங்கமாகவே நடுவில் திகழ்கிறது என்றும் ஐதீகம் கூறுகிறது.
இங்கு வந்து இறைவனைத் தொழுத அகத்திய ரிஷி லிங்கத்தைக் கட்டிப் பிடித்துத் தொழவே அவரது விரல் ரேகைகள் இன்றும் லிங்கத்தின் மீது காணப்படுகிறது.
விநாயகர், உமா மகேஸ்வரர், அகத்தியரால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கம், வள்ளி தெய்வசேனாவுடன் சுப்ரமண்யர், 63 நாயன்மார்கள், ஆகியோரது சிற்பங்கள் வெளி பிரகாரத்தில் உள்ளன.
உள் பிரகாரத்தில் நடராஜர் சிவகாமியுடன் காட்சி தருகிறார்.
அம்பிகையின் சந்நிதி தெற்கில் உள்ளது.
கோவிலின் பின்பக்கத்தில் அம்பிகைக்கும் சிவபிரானுக்கும் இடையில் ஆதிசேஷனின் மீது காட்சி அளிக்கும் வீரநாராயணரின் ஆலயம் உள்ளது. அருகில் ஹனுமான், விபீஷணர், பர வாசுதேவர், நாரதர், ஶ்ரீதேவி, பூதேவி, கருடர் ஆகியோர் காட்சி தருகின்றனர். வலதுபக்கத்தில் திருமங்கை நாச்சியார் இடம் கொண்டு அருள்கிறார்.
வலப்புறத்தில் ஸ்தல விருட்சமான வன்னி மரம் உள்ளது.
சமீப காலத்தில் ஆலயத்தின் புனர்நிர்மாணத்தின் போது பல வெங்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் திரிபுராந்தகர், திருஞானசம்பந்தர், திருசாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோரின் சிலைகள் இருந்தன.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதமும் பங்குனி மாதமும் சிவபிரான் மற்றும் அம்பிகையின் மீது நான்கு நாட்கள் காலை நேரத்தில் சூரிய கிரகணங்கள் விழுகின்றன. இது சூரிய பூஜை என
அறியப்படுவதாகும்.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடல்களைப் பாடி அருளியுள்ளனர். இங்கு சுந்தரர் நமச்சிவாயப் பதிகத்தைப் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இங்கு திருப்புகழ் பாடல் பாடி அருளியுள்ளார்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பண்மொழி நாயகியும் கொடுமுடி நாதரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.