பிராணாயாம ரஹஸியங்களும் அற்புதங்களும் (Post No.4743)

Muslim Yoga in Abu Dhabi

 

Date: 14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-15

 

Written by London swaminathan

 

Post No. 4743

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

Yoga picture from : sheela Govindaraj post

1915 ஆம் ஆண்டில் வெளியான சித்தர் களஞ்சியம் என்ற நூலில் மூச்சுப் பயிற்சி எனப்படும் பிராணாயாமம் பற்றியும் ஆறுவகையான ஷ்ட்கருமப் பயிற்சிகளும் எட்டுவகையான மூச்சடக்கப் பயிற்சிகளும் — அஷ்டவித கும்பகம்– விளக்கப்பட்டுள்ளன. அதை அப்படியே நூலில் இருந்து எடுத்துத் தருகிறேன். இதைச் செய்யாதவர்களும் இப்படியெல்லாம் செய்யும் சித்த புருஷர்கள் இந்த நாட்டில் தெருவுக்குத் தெரு இருந்த காலம் ஒன்று இருந்தது என்பதை அறிதல் நலம்.

 

ஷட் கருமங்கள்

 

 

Picture from Sandhya manoj post

 

 

அஷ்டவிதகும்பகங்கள்

Picture from Ma Nithya’s post

 

 

 

 

 

 

 

Picture from Ma Nithya post

— SUBHAM —

TAGS: பஸ்தி, தௌதி, கபாலபாதி, பிராணாயாமம், அஷ்டகும்பகம், ஷட்கருமம், சித்தர் ரகசியம், சூரியபேதி, உஜ்ஜாயினி.

‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ (Post No.4742)

Date: 14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 14-10

 

Compiled by London swaminathan

 

Post No. 4742

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

அவ்வையாரும் சாணக்கியனும்- பாரதீய சிந்தனை ஒன்றே
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

பெரியோர் சிந்தனை ஒன்றே (Great men think alike)  என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். ஆனால் பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை , காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, 3000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சிந்தனை  இருப்பது உலகம் காணாத புதுமை. ‘தூது’ என்ற தலைப்பில் வள்ளுவன் செப்பியதும், ‘விருந்தோம்பல்’ என்று அவன் உரைத்ததும், காமத்துப் பாலில் அவன் பாடியதும், ‘கொல்லாமை’யை அவன் போற்றியதும் சம்ஸ்க்ருதச் செய்யுட்களில் அப்படியே உள்ளது. கௌடியர் எனப்படும் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரப் பொருளாதாரக் கருத்துக்கள் வள்ளுவனின் பொருட்பாலில் உள. ஒருவரை ஒருவர் ‘காப்பி’ அடித்தாரோ என்று வியக்க வேண்டியதில்லை. பாரத நாட்டின் சிந்தனைப் போக்கு ஒன்றே .உலகத்துக்கெல்லாம் மூலாதாரமான கருத்துகள் அவை.  கொடி ஆனாலும், கடவுளின் வாஹனம் ஆனாலும் புறநானூற்றில் உள்ள விஷயங்கள் சம்ஸ்க்ருத நூல்களிலும் காணக்கிடக்கின்றன.

 

அவ்வைப் பாட்டியை அறியாத தமிழன் இல்லை. ஆனால் இறைவனை நாடி அறம் பாடிய  முதுமைப் பெண்கள்       எல்லோரையும் அவ்வையார் என்று அழைத்ததால் தமிழில் ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் புத்தகம் எழுதியுள்ளார். ஆனால் எனது மொழியியல் ஆராய்ச்சியின் படி குறைந்தது மூன்று ஔவையார் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் பாடல்கள் இடைக் கால அவ்வையாரின் பாடல்கள்தான்; சங்க கால அவ்வையார் அல்ல.

 

சாணக்கியன் பகர்வான்

காகம் கருடன் ஆகுமா?

 

குணருத்தமதாம் யாதி நோச்சைராஸன ஸம்ஸ்திதஹ

ப்ராஸாத ஸிசிகரஸ்தோபி காகஹ கிம் கருடாயதே

அத்யாயம் 16, ஸ்லோகம் 6

 

ஒருவன் குணத்தினால் உயர்கிறானே தவிர பதவியாலோ அந்தஸ்தினாலோ அல்ல;

அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?

 

அவ்வையார் மொழிவார்

 

கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?

 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி 

மூதுரைப் பாடல்/வாக்குண்டாம்

 

(மூதுரை என்பதும் வாக்குண்டாம் என்பதும் ஒரே நூல்தான்)

 

முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது, காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.

கல்லாதவன்= வான் கோழி

கற்றவன்= கான மயில்

 

தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு

இலக்கணக் கவிதைகள்=  மயில்தோகை

 

xxx

சாணக்கியன் புகல்வான்

த்யஜ துர்ஜன ஸம்ஸர்கம் பஜ சாது ஸமாகமம்

குரு புண்ய மஹோராத்ரம் ஸ்மர நித்யம் அநித்யதாம்

சாணக்கிய நீதி,அத்யாயம்14 ஸ்லோகம் 20

 

தீயவரைத் தீண்டாதே

நல்லவரை நாடித் தேடி ஓடு

நன்றே செய்க, இன்றே செய்க

நிலையாமையை எப்போதும் தப்பாமல் நினை.

 

துராசாரீ ச துர்த்ருஷ்ட்டி த்ராவாஸீ ச துர்ஜனஹ

யன் மைத்ரீ  க்ரியதே பும்பிர்நரஹ சீக்ரம் விநஸ்யதி

 

சாணக்கிய நீதி,  அத்யாயம் 2      ஸ்லோகம் 19

 

தீயவர்களுடன் சேர்ந்தாலோ

தீயதைக் கண்டாலோ

தீயோர் இடைடயே வசித்தாலும்

தீயவன் தீமையே அடைவான்; அழிவான்

 

அவ்வைப் பாட்டி சொல்லுவார்

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–

 

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதே – வாக்குண்டாம், அவ்வையார்.

 

கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே.

xxxx

சாணக்கியன் புகல்வான்

 

 

சகடம் பஞ்ச ஹஸ்தேன தச  ஹஸ்தேன வாஜினம்

ஹஸ்தினம் சத ஹஸ்தேன தேசத்யாகேன துர்ஜனம்

7-8

 

மாட்டுவண்டி வந்தால் ஐந்து முழம் தள்ளிப்போ

குதிரை வந்தால் 10 முழம் தள்ளிப்போ

 

யானை வந்தால் 100 முழம் தள்ளிப்போ

 

துஷ்டனைக் கண்டால் தூரப் போய்விடு (கண்காணாத வரை)

 

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன. விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

 

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

 

 

xxxxx

சாணக்கியன் நுவல்வான்

சின்னோபி சந்தனதருர்ன ஜஹாதி கந்தம்

வ்ருத்தோபி வாரணபதிர்ன ஜஹாதி லீலாம்

யந்த்ரார்பிதோஒ மதுரதாம் ந  ஜஹாதி சேக்ஷுஹு

க்ஷீர்ணோபி ந த்யஜதி சீலகுணான் குலீனஹ

சாணக்கிய நீதி,அத்யாயம்15 ஸ்லோகம் 18

 

அரைக்கும் சந்தனம் தன் மணம் குன்றா

யானை வயதானாலும் விளையாடுவதை விடுவதுண்டோ

யந்திரத்தில் நசுக்கினும் கரும்பு இனிக்குமன்றோ

வறுமையில் வீழ்ந்தாலும் உயர் குணதோன் தன் நற்குணங்களில் இருந்து நழுவுவதில்லை; வழுவுதல் இல்லை.

 

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

 

அதிவீர ராம பாண்டியனுக்கு (வெற்றி வேற்கை)

 

முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:

 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

 

 

சான்றாண்மை என்னும் அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் முத்து முத்தாகக் கருத்துகளைத் தொகுத்து அளிக்கிறார்:

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படுவார் – குறள் 989

 

உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல் கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.

 

சாணக்கியன் நுவல்வான்

 

யுகாந்தே சலதே மேருஹு கல்பாந்தே சப்த ஸாகராஹா

சாதவஹ ப்ரதிபன்னார்த்தான் ந சலந்தி கதாசன

சாணக்கிய நீதி,அத்யாயம்13 ஸ்லோகம் 19

யுக உடிவில் மேரு பர்வதமும் நிலை குலையுன்

கல்ப முடிவிலேழு கடல்களும் சுனாமியால் பொங்கி எழும்

நல்லோரோ தன் பாதையில் இருந்து எப்போதும் தப்பார்

 

xxx  Subham xxxxx

 

 

 

 

இருந்தும் இறந்தவர் யார், யார்? -1 (Post No.4741)

Date:14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4741

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ச.நாகராஜன்

 

1

இரண்டு கைகள், கால்கள், முகத்துடன் கூடி உயிருடன் உலவுகின்ற அனைவரும் மனிதர்கள் தானா?

இல்லை என்கின்றனர் மேலோர்.

 

இதற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்களைக் கொண்டு தான் மனிதன் தானா என்று நிச்சயிக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

 

உயிரோடு இருந்தாலும் இறந்தவர்கள் போலத்தான் என்று பல அறிஞர்கள் கூறுகின்ற பட்டியலைப் பார்த்தால் மனிதனாக வாழ்வதற்கான இலக்கணம் நன்கு புரிய வரும்.

சில பெரியோர்கள் இது பற்றிக் கூறியதைப் பார்க்கலாம்.

 

 

2

முத்து மீனாட்சிக் கவிராயர் என்பவர் குமரேச சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலாகும். இவர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு குருபாத தாசன் என்ற பெயரும் உண்டு.

குமரேச சதகத்தில் வரும் அவரது பாடல் ஒன்று இருந்தும் இறந்தோர் யார் என்பதைத் தெளிவுறக் கூறுகிறது.

 

மாறத வறுமையோர் தீராத பிணியாளர்

வருவேட் டகத்திலுண்போர்

மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்

மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்

சுமந்தே பிழைக்கின்றபேர்

தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்

சோர்வுபட லுற்றபெரியோர்

வீ றாக மனையாள் தனக்கஞ்சி வந்திடு

விருந்தினை ஒழித்துவிடுவோர்

வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு

மிக்கசபை ஏறும் அசடர்

மாறாக இவரெலாம் உயிருடன் செத்தசவம்

ஆகியொளி மாய்வர் கண்டாய்

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

மலைமேவு குமரேசனே

(குமரேச சதகம் – பாடல் எண் 32)

 

 

இதன் பொருள்: மயிலில் அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல் வயலில் உயர்ந்த மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் குமரக் கடவுளே!

 

நீங்காத வறுமையில் உழல்வோர்

நோய் தீராத பிணியாளர்

மாமனார் வீட்டில் நீண்ட நாள் தங்கி உணவுண்போர்

மனைவியைத் தீய ஒழுக்கத்தில் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவித்திருப்போர்

தாம் இருக்கும் அரச சபையில் வீணான பழியைக் கூறி அதனால் வாழ்வோர்

 

மனிதன் அமர்ந்திருக்க அந்தப் பல்லக்கைச் சுமந்து வாழ்வோர்

நீங்காத கவலையில் அழுந்தி இருப்போர்

சொன்ன சொல்லிலிருந்து வழுவும் பெரியோர்கள்

மனைவியின் அகம்பாவத்திற்குப் பயந்து வருகின்ற விருந்தினரை விலக்கி விடுவோர்

நடக்காத வழக்கை ஆதரவாகக் கொண்டு பெரிய நியாய ஸ்தலங்களிலே பிடிவாதமாகச் செல்லும் அசடர்கள்

இவர்கள் அனைவரும் உலகியலுக்கு எதிராக உயிரோடிருந்தும் செத்த பிணமாகிப் புகழ் குன்றுவர்!

 

3

திருவள்ளுவர் இருந்தும் இறந்தவர் பற்றி இரு குறள்களில் கூறுகிறார்.

 

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது;

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்   (குறள் 214)

உலக நடையினை அறிந்து வாழ்பவனே உயிரோடு வாழ்பவன் ஆவான். அப்படிச் செய்யாதவன் உயிரோடு இருந்தாலும் கூட செத்தவருள் ஒருவனாக வைக்கப்படும்.

உலக நடை என்பது வேத நடையைப் போல என்கிறார் பரிமேலழகர் தம் உரையில்.

 

நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது:

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃது உண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்       (குறள் 1001)

 

தன் வீடு முழுவதும் நிரம்பி வழியும் அளவு பெரும் பொருளை ஈட்டியும் கருமித்தனத்தால் அதனை அனுபவிக்காது இருக்கும் ஒருவன்  உயிர் வாழ்ந்தாலும் கூடச் செத்தவனே!

 

 

4

ஸ்வாமி விவேகானந்தர் மிக அழகுறக் கூறிய வார்த்தைகள் இவை:

 

THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS

THE REST ARE MORE DEAD THAN ALIVE!

மற்றவருக்குச் சேவை புரிந்து வாழ்பவனே வாழ்பவன்;

மற்றவர்கள் உயிரோடிருந்தாலும் இறந்தவரே!

 

( அடுத்த கட்டுரையுடன் முடியும்)

***

பாரதி போற்றி ஆயிரம் – 51 (Post No.4740)

Picture posted by Manion cgs; Isaikkavi Ramanan acting as Bharati

 

Date:14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-28 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4740

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 333 முதல் 350

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

பாரதிக்கு சிறப்பு என்ற அத்தியாயத்தில் உள்ள பதினெட்டு பாடல்கள்

 

பாரதிக்கு சிறப்பு

 

முதல்வர் தமிழக முதன்மையவர் .பி.

   இராம சாமி ரெட்டியாரே!

இதமாய்ப் பாரதி படைத்தவற்றி விசுவ

   இளவலி டமிருந் துபெற்றாரே!

பதிப்பு உரிமை அச்சேற்றி பாரதி

   படைப்பை வெளியிடும் தொண்டேற்றார்

உதித்த புரட்சிக் கவிஞர்சீர் மத்தியில்

   ஓங்கச் செய்தார் பெருந்தலைவர்!

 

பெருந்த லைவர் காமராசர் ஆவடி

   பெருவிழா மகாசபை நடத்தினார்காண்

திருவுடன் பாரதி நவின்றபாடல் அதுவே

   “தனியொரு வனுக்குநல் உணவிலையேல்

கருதிய செகத்தினை அழிப்போமே” – இதனைக்

   கூறி முழங்கினார் காமராசர்!

ஒருங்கிணை சமூகம் சமதர்மம் அமைக்க

   ஏகினார் ரஷியா சோவியத்து!

 

சோவியத் ரஷியா சென்றாரே அங்கண்

   பிரதமர் கோஜிஸன் வரவேற்றார்!

மேவிய ரஷியப் புரட்சிபற்றி பாரதி

   பாடிய பாடலைக் காமராசர்

கூவியே ஒலித்தார் ரஷியாவில் சபையோர்

   கொண்டனர் மகிழ்வு! போற்றினர்காண்

ஏவிய காமராஜர் தூண்டுதலால் பாரதி

   அஞ்சல் தலையும் எளிதேற்றோம்

 

எளிய கவியால் பாரதியை கலைஞர்

   கருணா நிதியும் போற்றினார்காண்!

தெளிந்த அரிமாக் கவிஞனவன் பாரதி

   தீரன் பெரிய மருதுபோன்றோன்!

ஒளிமிகு கவியணி இரசவாதி பாரதி

   யாப்பு அணியின் போர்க்கவிஞன்!

பளிங்குசால் பாரதியின் கவித்திறத்தான் அவனே

   அடலே றுகவியின் மன்னவனாம்.

 

மன்னவன் பாட்டின் தலைவனவன் பாரதி

   மகிமை வழியில் கவியியற்றி

நின்றவன் பாரதி தாசனென்போன் என்றே

   இருவரைப் போற்றினார் கலைஞருமே!

ஒன்றிய இருவர் வாழ்வாலே நாமும்

   வளமும் வாழ்வும் பெற்றோமே!

நன்றே பாரதி சிறப்போங்க நடந்தது

   உலகத் தமிழர் மாநாடு!

 

மகாநா டோங்க மாண்புமிகு அறிஞர்

   முதல்வர் அண்ணா பணியேற்றார்

மகாநாட் டையொட்டி சென்னைகடற் கரையிலே

   தமிழ்மகான் பலர்க்கு சிலைவைத்து

மகோற்சவம் சிறப்பாய் நடத்தினாரே! – அதிலே

   மகாகவி பாரதி சிலையேற்றார்!

மகாகவி பாரதிமுழு உருவச் சிலையை

   மாண்புடன் காண்கிறோம் என்றென்றும்!

 

என்றும் பாரதி நினைவோங்க எட்டய

   புரத்தில் உள்ள அவர்வீட்டை

ஒன்றிய அரசு உடைமையாக்கி பாரதி

   நினைவு இல்லமாய்ச் செய்ததுகாண்!

இன்னிசை யோடு திறப்பு விழாவும் நடத்தி

   ஏற்புறு கூடமாய் அமைந்தது காண்!

நன்றே பின்னர் சீர்திருத்தி பொற்புறு

   விழாவும் நடந்தது நூற்றாண்டில்

 

நூற்றாண் டுவிழா பாரதிக்கு இனிதே

   எட்டய புரத்திலே நடந்ததுகாண்

ஏற்ற முடனே மூன்றுநாட்கள் நினைவு

   இல்லம் முன்னே நடந்ததுகாண்!

ஆற்றிய அரசு பணிகண்டு மக்கள்

   அலைக டலெனத் திரண்டனர்காண்!

ஆற்றல் மிக்க கவிஞர்கள் பாரதி

   கவிதா வேள்வி இசைத்தனர்காண்

 

இசைத்து பாரதி கீர்த்தியோங்க பாரதி

   மணிமண் டபமும் விரும்பியதே!

மிசைந்த தனிக்குழு வசமிருந்து அதனை

   அரசு தனது உடைமையாக்கி

நசையுறு அமைப்புடன் வளர்த்ததுகாண் நளின

   காட்சி யகமும் அமைத்ததுகாண்

இசைபட விழாக்கள் நடத்துவதற்கு முன்புறம்

   அரங்கம் எழிலுறப் பெற்றதுகாண்!

 

பெற்ற தவத்தின் பயனாக எட்டய

   புரத்தில் மிளிர்ந்தது தொழிற்கல்வி!

உற்ற பாரதி நூற்றாண்டு நினைவாய்

   எழுந்தது கல்வி தொழிற்கூடம்

பொற்புறு நாற்பது ஏக்கரிலே உருவம்

   பெற்றது மகளிர் பாலிடெக்னிக்!

கற்றுத் தொழிலில் உயர்வேற்ல பெண்கள்

   கண்டநற் பயன்தொழிற் சாலைஎன்போம்!

 

சாலையும் தவப்பயன் பெற்றதுகாண் பாரதி

   சாலையை சென்னை ஏற்றதுகாண்!

ஓலைபோல் நீண்ட பைக்ராஃப்ட்ஸ் வீதி

   அண்ணல் பாரதி பெயரேற்று

மாலை மதிபோல் ஒளிவீசி சென்னை

   மாநகர் தன்னில் ஒளிர்வதுகாண்!

சாலை பாரதிசாலை என்போம் பாரதி

   தாசன் பாரதி பெயரேற்றார்!

 

பெயர்சீர் பாரதி பெயரெங்கும் நாட்டில்

   பெட்புடன் ஒலிக்கக் கேட்கின்றோம்!

இயல்பாய யாவரும் கற்றுயர பாரதி

   ஞானப் பெயரை உவந்துவைப்போம்

உயர்ந்த தொழிலகம் அனைத்திற்கும் பாரதி

   உன்னதப் பெயரை பொருந்தவைப்போம்

இயன்ற பள்ளிகள் பாரதியின் பெயரால்

   இயங்கக் காண்போம் நேயமுடன்

 

நேய முடனே அரசாங்கம் பாரதி

   பெயரால் நிறுவனம் அமைத்துகாண்

கோயம் புத்தூர் பாரதியார் பல்கலைக்

   கழகம் செயல்பட யாம்கண்டோம்!

ஆய கலைகளைத் தருபவளே பாரதி

   அவள்தரு செல்வமே கல்வியாகும்!

தேய சுதந்தர தமிழுணர்வை சாற்றப்

   பாரதி பிறவி எடுத்தாரே!

 

எடுப்பா யமைந்த பாரதியின் வெண்கல

   உருவச் சிலையைத் தமிழரசு

கொடுக்க அதனைப் பெற்றாரே மேற்கு

   வங்க முதல்வர் ஜோதிபாசு!

தொடுத்த தலைமை ஜோதிபாசு ஏற்கத்

   தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.

உடன்மகிழ் வுற்றுப் பாரதியின் வெண்கலச்

   சிலையைத் திறந்து வாழ்த்தினர்காண்!

 

வாழ்த்தினார் புரட்சிக் கவிஞரையே புரட்சி

   நடிகர் முதல்வர் எம்.ஜி.ஆர்.

தாழ்ந்து பணிந்து பாரதியின் சிலைக்கு

   வணக்கம் செய்தார் மகிழ்வுடனே!

ஆழ்ந்த உணர்வுடன் பாரதியின் வேடம்

   ஏற்று நடித்தார்  சிவாஜிகணேசன்

வாழ்ந்து காட்டிய பாரதிக்கு சிறப்பு

   வளமை தந்தனர் மத்தியிலே

 

மத்தியிலுள்ள புதுடில்லி ஆங்கண்

   மாண்புறு பாரதி நகர்கண்டோம்!

பத்தடி உயர பாரதியின் சிலையை

   வடித்தது அங்கு தமிழரசு!

வித்தகர் இந்தியப் பிரதமராம் ராஜீவ்

   காந்தி அதனைத் திறந்து வைத்தார்!

உத்தம முன்னிலை வகித்தவரே முதல்வர்

   எம்.ஜி. இராமச் சந்திரனார்.

 

சந்திர வதனங் கொண்டவராம் குடியர

   சின்துணைத் தலைவர் மாண்புமிகு

வெங்கட் ராமன் தலைமையேற்றார்! – அவரும்

   சிங்கக் கவிஞனைப் போற்றினார்காண்!

சிந்து கங்கை நதிபோற்றிப்  பாடிய

   சிந்து கவிஞரை வாழ்த்தினாரே!

வந்தே மாதரம் இசைத்தவரே பாரதி

   நன்மகன் பாரத அன்னைக்கு

 

அன்னை முதல்வர் ஜெயலலிதா பாரதி

  அவர்புகழ் ஓங்கத் தொண்டேற்றார்!

சென்னை திருவல் லிக்கேணி பாரதி

   வாழ்ந்த வீட்டை விலைக்குவாங்கி

ஒன்றிய அரசு உடைமையாக்கிப்  பாரதி

   நினைவு இல்லமாய்ச் செய்தார்காண்!

நன்றே திறப்பு விழாநடத்தி பாரதி

   நினைவு நாளும் நடத்தினார்காண்!

 

(மகாகவி பாரதி அந்தாதி அடுத்த அத்தியாயத்துடன் முடியும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு கவிச் சுடரொளிஎன்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணிபட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

 

Chanakya and Tamil Poetess Avvaiyar (Post No.4739)

Date: 13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-46

 

Written by London swaminathan

 

Post No. 4739

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Who is Chanakya?

A Brahmin scholar, statesman, author of the first economics book in the world (Arthasastra), a king maker and author of several didactic works. He lived 2300 years ago.

 

Who is Avvaiyar?

There were at least three poetesses by the name Avvaiyar. Some people even say that there were six Avvaiyars. Most famous Avvaiyar lived 2000 years ago in Tamil Nadu during Sangam age. But the Avvaiyar who wrote Muuthrai belonged to the middle ages. Her Athichudi is taught to the infants in the school.

 

Chanakya says,

If people make friends with a person of evil conduct, evil eye, evil habitation, the wicked one, the person doing so comes to naught quickly.

Duraacaariivca durdushtirduraavaasii ca durjanah

Yanmaitrii kriyate pumbirnarah siighram vinasyati

Chapter 2, sloka 19

Avoid contact with the wicked, associate with the good, engage in good deeds day in day out, keep in mind impermanence all the time.

Tyaja durjanasamsargam bhaja saadhusamaagamam

Kuru punya mahoraatram smara nityamanityataam

Chapter 14, sloka 20

 

Tamil Poetess Avvaiyar says,

To see the vicious is bad; to give ear to the words of the wicked is evil. To voice forth the base qualities of the evil or vulgar is wicked. To associate with them as friends is sinful.

Muuthurai 9

xxxxxx

 

Bull 5 metres, Horse 10 metres, elephant 1000 metres!

 

One should keep away from a cart to the distance of five hastas ( a measure of length equal to 24 angulas or about 18 inches) from a horse ten hastas, an elephant 100 hastas and for a wicked man even by leaving the country

Chapter 7, sloka 7

Sakatam pancahastena dasahastena vaajinam

Hastinam satahastena desatyaagena durjanam

 

This is in Tamil work ‘Neethi Venba:’ Keep away from horned animals to the distance of 5 hastas, from a horse ten hastas, for an elephant 1000 hastas and for a wicked man run away as long as he disappears from your sight.

Neethi Venba is by an anonymous author.

 

xxxxxx

 

Sandalwood and Sugar cane

Chanakya says,

The sandal wood tree, even when cut, does not give up its fragrance, a lordly elephant, even when old, does not give up its playfulness; sugarcane, even when inserted in machine, does not give up its sweetness. One born in a high family, even when reduced to poverty, does not give up the qualities going with good conduct.

Chapter 15, sloka 18

Chinnopi candanatarurna jahaati gandham

Vruddopi vaaranapatirna jahaati liilaam

Yantraarpito madhurataam  na jahaati  cekshuh

Kshiinopi na tyajanti siilagunaan kuliinah

 

Avvaiyar says,

Though the milk be boiled, it does not lose taste. Though enemies move sociably, they are enemies. The noble-hearted be reduced in circumstances, they are ever noble. The conch shell, though burnt is white nevertheless.

Muuthurai 4

The fragrance of the soft sandal wood, even when ground down, does not abate. Though wreathed kings suffer defeats and have less revenues, will they thereby become less generous or less resolute?

Muuthurai 28

 

xxxxxxxxxx

 

Can crow become an eagle?

Chankaya says,

 

One goes up by one’s qualities and not by occupying a high seat. Does a crow by sitting on top of a place turn into Garuda?

Gunairuttamataam yaati noccaira asanasamsthitah

Praasaadasikharasthopi kaakah kim garudaayate

Chapter 16, verse 6

Avvaiyar says,

The turkey cock, seeing the wild peacock dance, fancies itself to be and spreads its own unattractive wings and dances. So is the little learning of the ignorant man.

Muuthurai 14

 

xxxxxx

Good are always Good!

Meru may shake at the end of the Yuga, the seven oceans may turn rough at the end of the Kalpa. The good however, would not turn away from what they had undertaken.

Chapter 13, sloka 19

 

Yugaante calate meruh kalpaante sapta saagaraah

Saadhavah pratipannaarthaan na calanti kadaacana

 

Avvaiyar

The great, though fallen, are great and those who are not great, when they fall are non-entities. Though a precious gold pot breaks it is still god (valuable). What will be mud pot worth when it is broken? –

Muuthurai 18

 

—- Subham—

 

சித்தர்கள் செய்த எட்டு வகை அற்புதங்கள் (Post No.4738)

Date: 13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-43 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4738

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

1915 ஆம் ஆண்டில்    வெளியான சித்தர்   களஞ்சியத்தில் அஷ்ட  மா சித்திகளின் விளக்கம் நன்றாக உள்ளது; அதைக் கீழே காண்க.

 

 

 

 

 

 

–SUBHAM–

96 தத்துவங்கள் எவை? (Post No.4737)

Date:13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-41 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4737

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

1915 ஆம் ஆண்டில் வெளியான தாயுமான சுவாமி பாடல் புத்தகத்தில் 96 தத்துவங்களின் பட்டியல் உளது; அதைக் கீழே காண்க:-

 

–subham–

சிவாகமங்கள்- என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு?! (Post No.4736)

Date:13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-15 am

 

WRITTEN by S Nagarajan

 

Post No. 4736

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

இணையிலா இந்து மதம்

சிவாகமங்கள் 28; என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு?!

ச.நாகராஜன்

1

சிவாகமங்கள் 28. சிவ வழிபாட்டை நியமத்திற்குத் தகவும், ஆங்காங்குள்ள தொன்மத்திற்குத் தகவும் உரியவர்கள் இதைக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான ஆலயங்களில் நடத்தி வருகிறார்கள்.

விக்கிபீடியா மற்றும் இதர சைவ இணைய தளங்களில் இவற்றைப் பற்றி முழுவதுமாக அறியலாம்.

28 சைவ ஆகமங்களின் பட்டியல் இது:

The Sivabheda Agamas

1) Kamika, 2) Yogaja, 3) Chintya, 4) Karana, 5) Ajita, 6) Dipta, 7) Sukshma, 8) Sahasraka, 9) Amshumat and 10) Suprabheda.

The Rudrabheda Agamas

(1) Vijaya, 2) Nihshvasa, 3) Svayambhuva, 4) Anala, 5) Vira (Bhadra), 6) Raurava, 7) Makuta, 8) Vimala, 9) Chandrajnana (or Chandrahasa), 10) Mukhabimba (or Bimba), 11) Prodgita (or Udgita), 12) Lalita, 13) Siddha, 14) Santana, 15) Sarvokta (Narasimha), 16) Parameshvara, 17) Kirana and 18) Vatula (or Parahita).

 

இதில் பகுத்தறிவுவாதிகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை.

 

2

எல்லா பிராமணர்களும் பூஜையைச் செய்து விட முடியாது.அலங்காரங்களைச் செய்ய முடியாது. தெய்வ உருவங்களைத் தொட்டு விட முடியாது.சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள்,சிவாலயங்களில் உரிய சிவாசாரியார் என்று ஒரு வரைமுறை உண்டு.

அவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

சில ஆலயங்களில் பிராமணர்கள் பூஜை செய்ய முடியாது.

பாரம்பரியத்திற்குத் தக்கபடி யார் பூஜை செய்ய வேண்டுமோ அவர்களே செய்வார்கள்.

ஆக இது தான் உண்மை.

3

இந்தச் சடங்கைச் செய்யக் கூடாது, அந்தச் சடங்கை செய்யக் கூடாது என்று முழங்கும் பகுத்தறிவுவாதிகள் தாங்களே சடங்குகளில் எப்படிக் கட்டுண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்.

இவர்களின் தலைவர் சமாதிக்கு எதற்கு ஊதுபத்தி? செருப்பை ஏன் வெளியில் கழட்டிப் போட வேண்டும்?கொடி எதற்காக?

சீருடை எதற்காக?

பகுத்தறிவுக்கு ஒத்ததா இது?

ஆஸ்பத்திரிகளில் சர்ஜன்கள் ஏன் பச்சை உடை அணிய வேண்டும்?

ஏதோ நினைத்த சட்டையை ஏன் போடக் கூடாது?

வக்கீல்களுக்கு எதற்குக் கறுப்பு கோட்டு.

நீதிபதிகளுக்கு (அயல்நாட்டில்) எதற்கு விக்?

இந்தப் பட்டியல் முடிவற்ற ஒன்று.

 

4

பகுத்தறிவுச் செல்வங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

பள்ளி மாணவன் கூட சற்று யோசித்தால் இவர்களின் கலாட்டா நோக்கத்தைப் புரிந்து கொள்வான்.

திருஞானசம்பந்தரை இழிவு படுத்து. சிறிது நாள் ஆனால் ஆண்டாளை இழிவுபடுத்து.

இதன் மூலம் தாங்கள் பொதுவாழ்க்கையில் பரபரப்பாக இருப்பதை உறுதி செய்வது தான் இவர்களின் நோக்கம்!

ஆமாம், இதே அளவு சடங்குகள், ஏன் இன்னும் அதிகமாகக் கூட சடங்குள் கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும்  உள்ளனவே.

பகுத்தறிகவு மனித குலம் அனைத்திற்கும் பொதுவானது தானா,அல்லது ஹிந்து  மதம், கோவில்களுக்கும் மட்டுமான ஒன்றா?!

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியரிடம் கொஞ்சம் பகுத்தறிவை இவர்கள் சொல்லட்டுமே. இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது இவர்கள் அவர்களைச் சீண்டவில்லையே!

இந்த போலி பகுத்தறிவுவாதிகளை ஒவ்வொருவரும் சமயம் கிடைத்த போதெல்லாம் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

அது ஒன்றே நல்ல வழி!

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 50 (Post No.4735)

DATE – 13 FEBRUARY 2018

Time uploaded in London- 5-59 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4735

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 327 முதல் 332

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

பாரதி பாடல் சிறப்பு மற்றும் பாரதி மணி மண்டபம்  ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஆறு பாடல்கள்

பாரதி பாடல் சிறப்பு

 

பாரதி கவிதை பாக்களின்று – இசையுடன்

   பாங்குற ஒலிக்கக் கேட்கின்றோம்!

பாரத சுதந்திர விழாக்களிலே – பாரதி

   பாக்களே முதன்மை வகிப்பதுகாண்

வீரர் தியாகிகள் அணிவகுப்பில் – பாரதி

   உணர்ச்சிப் பாக்கள் ஒலிப்பதுகாண்

பாரதி பாடிய ஆத்திசூடி – பள்ளியில்

   பிரார்த்தனை பாடலாய்த் திகழ்வதுகாண்

 

திகழ்தரு பாப்பா பாட்டுக்கள் – பள்ளித்

   தொடக்க வகுப்பில் சிறப்பதுகாண்!

மகத்துவ பாஞ்சாலி சபதமே – பள்ளி

   மேனிலை வகுப்பில் கமழ்வதுகாண்!

நிகரிலா பாரதி கட்டுரைகள் – பல்கலை

   கல்லூ ரிகளிலே களமேற்கும்

மிகப்பல பக்திப் பாடல்கள் – பலப்பல

   மொழிகளில் ஆக்கம் ஏற்பதுகாண்.

 

ஏற்புறு பாரதி துதிப்பாடல் – விழாவாம்

   நவராத் திரியில் இசைப்பதுகாண்

போற்றி தேவியர் மூவரையும் – விழாவில்

   பாடிடப் பாரதி கவிதந்தார்!

காற்றில் பறக்கும் தூசுகூட – பாரதி

   கவிதை கேட்டுக் கிறுகிறுத்து

தோற்றம் அசையா நிலையேற்கும் – மலர்ந்து

   தெய்வ சிலையும் முகங்காட்டும்

 

பாரதி மணிமண்டபம்

  

முகமே காட்டி கவர்ந்திடுவார் – பாரதி

   மீசை, பாகை கோட்டுடனே!

புகழ்தரு திரைப்படக் கதைகளிலே – பாரதி

   பாடல், நிகழ்ச்சி மாண்பேற்கும்!

புகலரு கவிஞர் வரிசையிலே – புரட்சிப்

   பாரதி பெயரே முன்னிற்கும்!

நிகழும் மாறு வேடத்தில் – பாரதி

   நடிப்பு வேடமே சிறப்பேற்கும்!

 

சிறப்புடன் அமரர் கல்கியவர் – மணிமண்

   டபத்தை எழுப்பினார் பாரதிக்கு

இறவாப் புகழுடன் பாரதியார் – எட்டய

   புரத்தில் சிலையாய் நிற்பதுகாண்

அறந்தரு சிந்தை இராசாசி – தமிழக

  முதல்வர் மண்டபம் திறந்து வைத்தார்

திறமிகு அனுபவ மூதறிஞர் – பாரதி

   பிறந்த வீட்டைக் கண்டார்காண்.

 

கண்டார் பாரதி பிறந்தவீடு – கவினுறு

   அரண்மனை கண்டு வியப்புற்றார்!

எண்டிசை போற்றஎட் டயபுரமும் – இன்று

   எழிலுடன் காட்சி தருவதுகாண்!

வண்ண பாரதி படைப்புகளின் – குவியலை

   அடைக்கலங் காத்தவர் விசுவநாதர்

தொண்டர், பாரதி இளவலர் – விசுவ

   நாதரை அழைத்தார் முதல்வருமே

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது! (Post No.4734)

Date:12 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-26 am

 

Written by London swaminathan

 

Post No. 4734

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

Kaka Vahana from Tirunallaru Temple; Lalgudi Veda Picture

காகத்திடம் நல்ல குணங்களும் உண்டு; தீய வழக்கங்களும் உண்டு; அவரவர் பார்வையில் எது தென்படுகிறதோ அதை வைத்து அதனைப் பாராட்டவும் செய்வர்; இகழவும் செய்வர்; காகம் எல்லாரையும் அழைத்து உண்பதையும், மறைவாக செக்ஸ் செய்வதையும் தமிழ்ப்புலப்வர்கள் பாடினர். ஆனால் சாண்க்கியனோ அதிரடிட் தாக்குதலில் இறங்கிவிட்டார். இது 2300க்கு முந்தைய பாடல்; தமிழர்கள் பாடியதோ அவருக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்!

 

எனது முந்தைய காகக் கட்டுரைகளில் நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றையும் காண்க.

 

சாணக்கியன் உரைப்பான்

 

நராணாம் நாபிதோ தூர்த்தஹ பக்ஷீணாம் சைவ வாயஸஹ

சதுஷ்பதாம் ஸ்ருகாலஸ்து ஸ்த்ர்ரீணாம் தூர்த்தா மாலினீ

 

ஸ்லோகம் 21, அத்யாயம் 5, சாணக்கிய நீதி

பொருள் என்ன?

மனிதர்களில் தந்திர சாலி நாவிதன்

பறவைகளில் தந்திர சாலி காகம்

மிருகக்ங்களில் தந்திர சாலி நரி

பெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி

 

XXXX

 

கெட்ட பறவை! சண்டாளன்!

இன்னொரு ஸ்லோகத்தில் காகத்தை சண்டாளன் என்று சாடுகிறான் சாணக்கியன்:

பக்ஷீணாம் காகஸ் சாண்டாளஹ பசூனாம் சைவ குக்குரஹ

கோபீ முனீனான் சாண்டாளஹ சர்வேஷாம் சைவ நிந்தகஹ

 

பொருள் என்ன?

பறவகளில் தாழ்ந்தது  காகம்

மிருகங்களில் தாழ்ந்தது நாய்

முனிவர்களில் தாழ்ந்தவர் கோபக்காரர்

மனிதர்களில் தாழ்ந்தவன் பிறரைத் தூற்றுபவன்

அத்யாயம் 6, ஸ்லோகம் 2

 

XXXX

கவிஞர்களும் காகமும்

கவயஹ கிம் ந பஸ்யந்தி கிம் ந குர்வதி யோஷிதஹ

மத்யபாஹா கிம் ந ஜல்பந்தி கிம் ந பக்ஷந்திவாயஸாஹா

அத்யாயம் 10, ஸ்லோகம் 4

 

பொருள்

கவிஞர்கள் கண்களுக்குப் புலப்படாதது ஏதேனும்  உண்டா?

பெண்கள் செய்யாதது ஏதேனும்  உண்டா?

 

குடிகாரர்கள் உள றாதது ஏதேனும்  உண்டா?

 

காகங்கள் சாப்பிடாதது ஏதேனும்  உண்டா?

 

xxxxx

 

காகம் கருடன் ஆகுமா?

 

க்ணருத்தமதாம் யாதி நோச்சைராஸன ஸம்ஸ்திதஹ

ப்ராஸாத ஸிசிகரஸ்தோபி காகஹ கிம் கருடாயதே

அத்யாயம் 16, ஸ்லோகம் 6

 

ஒருவன் குணத்தினால் உயர்கிறானே தவிர பதவியாலோ அந்தஸ்தினாலோ அல்ல;

அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?

 

MY OLD ARTICLES

கா கா பராசக்தி பாடல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/கா-கா-பராசக்தி-பாட…

Translate this page

கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) !!!!!! காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …

 

 

காகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காகம்/

Translate this page

5 May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.

 

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் …

https://tamilandvedas.com/…/பிரிட்டனில்-கா-கா-…

Translate this page

27 Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி …

 

 

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு …

https://tamilandvedas.com/…/காகத்திடம்-கற்க-வே…

Translate this page

5 May 2017 – எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …


(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

–Subham —