Date uploaded in London – 10 February 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஜோதிடத்தை நம்பு. உனக்கு அது சரியா? தப்பா? என்று சந்தேகம் வருகிறதா? சந்தேகமே படாதே . அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதற்கு கிரகணங்களே (Eclipses) சான்று . அவர்கள் போடும் கணக்கு, சரியானதே என்பதை பஞ்சாங்கத்தில் மிகவும் முன்கூட்டி அறிவிக்கும் கிரகண விஷயங்களே காட்டிவிடுகின்றன என்கிறார் அம்பலவாண கவிராயர்.
சித்த மருத்துவர் (வாகடம்) கொடுக்கும் மருந்துகளுக்கு பலன் உண்டா, இல்லையா என்ற சந்தேகம் வருகிறதா? வேண்டவே வேண்டாமப்பா! அவர்கள் கொடுக்கும் பேதி மருந்தைச் சாப்பிட்டு பார் ; உண்மை தெரிந்து விடும்.
ஒருவன் செய்த தவப்பயனுக்கு சாட்சி வேண்டுமா? உன் ஆபீஸ்ல ஏன் ஒருவன் முதலாளி, மற்றவன் ஒருவன் ஏன் பியூன் ஆக கைகட்டி சேவகம் செய்கிறான் என்று பார். ஒருவன் ஆள் கிறான், மற்றுமொருவன் அடிமை ஆக இருக்கிறான். (இதை குறள் 25, 28-லும் காணலாம்).
எந்தக் கடவுள் முதல்வன் என்று சந்தேகம் வருகிறதா? வேண்டாமப்பா ஐயப்பாடு!
எழுதும் எழுத்துக்கு அரிச் சுவடி (ஹரி- விஷ்ணு) என்றல்லவா பெயர் வைத்திருக்கிறோம். உடனே சிவ பெருமான் பற்றி சந்தேகப்பட்டு விடாதே. யஜுர் வே தத்தில் நமச் சிவாய (நம: + சிவாய) என்ற பஞ்சாட்சரம் – ஐந்தெழுத்து –மந்திரம் வரக்கூடிய ருத்ரம், சமகம் இரண்டையும் படி. அவனே தலைவன் என்பது விளங்கும்..
நாய் போன்ற நான் கூட எப்படி நன்றாக இருக்கிறேன் என்பதற்கு சாட்சி? இறைவனின் திருப்பாதங்களை நான் வணங்குவதே. யார் அந்த இறைவன்? அவன் சதுரகிரியில் உள்ள ஆதி நாயகன், வேத முதல்வன் என்னும் சிவபெருமான். அவன் யார்? விஷ்ணுவும் பிரம்மாவும் வந்து தினமும் வணங்கும் கொல்லி மலை சதுரகிரி அரசன்! அவன் என்னைக் காத்து ரட்சிப்பானாக !
Xxx
அறப்பளீச்சுர சதகம்
அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
திருமூலர் தரும் ரகசியம் : ஆசனங்கள் 134 : அவை யாவை? இதோ பட்டியல்! (Post No.7556)
ச.நாகராஜன்
ஹிந்து தர்மம் உள்ளத்தையும் உடலையும் பண்படுத்தத் தரும் அருமையான ஒரு வழி ஆசனம்.
ஆசனம், தியானம் என்பதெல்லாம் உலகில் இன்று ஏராளமான நாடுகளில் சகஜமாகி விட்டன.
ஆசனம் என்றால் என்ன? (இதை ஆதனம் என்றும் சொல்வதுண்டு)
ஆசனேன ரஜோ ஹந்தி என்று யோக சூடாமணி விளக்கம் தருகிறது. ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.
வியாதி,
யோகத்தில் வன்மை இன்மை,
இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு
அலட்சியம்
வைராக்கியம் இல்லாமை
திரிபுணர்ச்சி
சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல்
கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பாதஞ்சல யோக சூத்திரம் கூறுகிறது.
ஆசனங்கள் எண்ணற்றவை. அனைத்தும் பயன் தருபவை.
அவற்றில் தலையாய ஆசனங்கள் எட்டு. அதைத் தொடர்ந்து சிறப்பாகக் கூறப்படும் ஆசனங்கள் மொத்தம் 126.
A B C D ………………….. X Y Z IN YOGA ASANAS
ஆக மொத்தம் ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 134.
இவற்றில் தலையாய ஆசனங்களாவன:
சுவத்திகம்
பத்திரம்
கோமுகம்
பங்கயம்
கேசரி
சொத்திரம் (சோத்திரம், சோத்திகம் என்றும் சொல்லப்படுவதுண்டு)
வீரம்
சுகாசனம் ஆக முக்கியமான ஆசனங்கள் மொத்தம் 8
திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் நான்காம் அத்தியாயமான ஆதனம் என்னும் அத்தியாயத்தில் ஆசனம் பற்றிய அற்புதமான ரகசிய விளக்கங்களைக் கூறி அருளுகிறார்.
3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் திருமூலரால் அருளப்பட்ட அதி ரகசிய நூல்.
இதில் பாடல் 563 இது:
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே
மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.
அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள் பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம்.
இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.
எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126. மொத்த ஆசனங்கள் 126.
இந்த 126 ஆசனங்கள் யாவை? இதோ இருக்கிறது பட்டியல்:
சுவஸ்திகாசனம்
கோமுகாசனம்
வீராசனம்
கூர்மாசனம்
குக்குடாசனம்
உத்தான கூர்மாசனம்
தனுராசனம்
மச்சேந்திராசனம்
பச்சிமதானாசனம்
மயூராசனம்
சவாசனம்
மச்சேந்திர சித்தாசனம்
சித்தாசனம்
வச்சிராசனம்
பதுமாசனம்
மச்சேந்திர பதுமாசனம்
முக்த பதுமாசனம்
சிம்மாசனம்
பத்திராசனம்
வல்லரியாசனம்
விருச்சிகாசனம்
குப்சிகாசனம்
பாரிசுவோபாதாசனம்
யோகாசனம்
கபாலாசனம்
டிட்டிபாசனம்
பூர்வதானாசனம்
அர்ப்பககாசனம்
காமதகனாசனம்
கேசரியாசனம்
சோபகிரியாசனம்
பரியங்காசனம்
பத்தாசனம்
லௌல்யாசனம்
பத்தயோனியாசனம்
பேகனாசனம்
மகாபேகனாசனம்
பிராணாசனம்
அபானாசனம்
சமானாசனம்
பைரவாசனம்
மண்டூகாசனம்
மர்க்கடாசனம்
ஏகபாதவாசனம்
பணீ ந்திராசனம்
யோகநித்திராசனம்
சுகாசனம்
தண்டாசனம்
சக்கிராசனம்
வர்த்துலாசனம்
அர்த்தாசனம்
பர்வதாசனம்
யோனீமுத்திராசனம்
திருடாசனம்
பவனமுக்தாசனம்
வாமபாத பவனமுக்தாசனம்
தட்சிணபாத முக்தாசனம்
தீராசனம்
சுவாசகமனாசனம்
வாதாயனாயனாசனம்
அர்த்தபாதாசனம்
ஊர்த்துவபத்மாசனம்
பூர்ணாபாதாசனம்
தட்சிணாசனம்
அத்துவாசனம்
வாமதட்சிண பாதாசனம்
திவிபாதசிராசனம்
விருட்சாசனம்
வாமபாதசிரசாசனம்
தட்சிணபாதசிரசாசனம்
தாடாசனம்
ஊர்த்துவதனுராசனம்
வாமசித்தாசனம்
விவேகாசனம்
தர்க்காசனம்
நிசுவாசாசனம்
அர்த்தகூர்மாசனம்
கருடாசனம்
திரிகோணாசனம்
பிரார்த்தனாசனம்
பாதத்திரிகோணாசனம்
புஜாசனம்
அஸ்தபயங்கராசனம்
அங்குஷ்டாசனம்
உத்தகடாசனம்
அர்த்தபாதாசனம்
அஸ்தபுஜாசனம்
வாமவக்கிராசனம்
ஜாந்வாசனம்
சாகாசனம்
திரிஸ்தம்பாசனம்
பாத அபான கமனாசனம்
அசதசதுஷ்கோணாசனம்
கூர்மாசனம்
கர்ப்பாசனம்
ஏகபாதவிருட்சாசனம்
முத்த அஸ்த விருட்சாசனம்
துவிபாதபாரிசுவாசனம்
கந்தபீடாசனம்
பிரௌடபாதாசனம்
உபாதானாசனம்
ஊர்த்துவ சம்யுக்த பாதாசனம்
அர்த்தசவாசனம்
வேறு அபானாசனம்
யோனியாசனம்
வேறு பர்வதாசனம்
பர்வதாசனம்
சலபாசனம்
கோகிலாசனம்
லோலாசனம்
உத்தமாங்காசனம்
உட்டிராசனம்
அம்சாசனம்
வேறு பிராணாசனம்
கார்முகாசனம்
ஆனந்தமந்திராசனம்
கம்புநாசனம்
கிரந்திபேதனாசனம்
சமாசனம்
புஜங்காசனம்
பவனாசனம்
மச்சாசனம்
மகராசனம்
விருஷாசனம்
சங்கடாசனம்
சர்வாங்காசனம்
ஆசனங்களின் பெயர்களை மட்டும் இங்கு பார்த்தோம். இவை பற்றிய விளக்கங்களை யோக நூலில் காணலாம்.
ஒவ்வொரு ஆசனமும் உள்ளத்தையும் உடலையும் பல்வேறு விதத்தில் பண்படுத்துபவை.
அனைத்து வியாதிகளையும் இந்த ஆசனங்களின் மூலமாகத் தீர்க்க முடியும்.
பண்டைய காலத்தில் இந்த ஆசனங்களைக் கற்றுத் தரும் குருமார்கள் ஆங்காங்கே இருந்தனர்.
அவர்கள் சிஷ்யர்களை வழி நடத்தி ஆசனங்களை உரிய முறையில் செய்கிறார்களா என்று சோதனை செய்து உயர்த்துவர்.
இன்றோ இப்படி ஆசனங்கள் பல உள்ளன என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டதோடு அவரவர் புதுப்புது யோகாவை ‘சிருஷ்டித்து’ பணம் சம்பாதிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுவிட்டது.
யோக சாஸ்திரத்தில் வல்லார் இந்த நிலையை மாற்றி பாரதத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்!
நன்றி : திருமந்திரம் புகழ் பரப்பும் திருவாவடுதுறை ஆதீனத்தைப் பாராட்டி நன்றி கூறாமல் இருக்க முடியாது. தமிழகம் செய்த தவப்பயனாக திருவாவடுதுறை ஆதீனம் தொடர்ந்து திருமந்திர மாநாடுகளை அவ்வப்பொழுது நடத்துவது வழக்கம்.
இதில் என் தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் அவர்களும் கலந்து உரையாற்றுவதுண்டு.
அவர் கூடவே செல்லும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டதால் மாநாட்டு நடவடிக்கைகளையும் பேரறிஞர்கள் ஆற்றும் உரைகளையும் வியப்புடன் கவனிப்பேன்.
திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரம் சம்பந்தமாக ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளது; மூன்றாம் தந்திரம் விளக்கத்தை பஞ்சாக்ஷரதீபம் என்னும் உரையுடன் 1960ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
அதில் உள்ள 126 ஆசனங்களின் பட்டியலே மேலே தரப்படுள்ளது.
திருமந்திரம் வளர்க்கும், திருமந்திர ரகசியம் விளக்கும், திருவாவடுதுறை ஆதீனத்தைப் போற்றி வணங்கி எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Great philosopher and former President of India Dr S Radhakrishnan gives very interesting information about the attitude towards women in ancient India. Then in the same volume R C Majumdhar, former Vice Chancellor of Dacca University adds that anti women attitude was common among the Hindu Smrti writers, Greek philosophers, Gautama Buddha and the Christian poets and monks . Christians maintained anti women attitude until very recent times.
“Indian tradition has generally respected womanhood, as the essays in this book indicate, though occasionally we find derogatory references to women ( in his introduction to Great Women of India book). Even god is regarded as half man and half woman, ‘ardha-naariiswara’. Manu declares that where women are honoured, there gods are pleased; where they are not honoured, all works become fruitless (Manu 3-56).
Women cannot do some things that men can. Their physiology prevents this. That does not prove any inferiority on their part. We must do the things for which we are made and do them well.
In early times education of women was engaged. The Goddess of Learning is Saraswati.
The Mahanirvana Tantra says
‘A girl also should be brought up and educated with great care and effort’ -8-47
The Devi Mahatmya declares,
‘All forms of knowledge are aspects of Thee; and all women throughout the world are Thy forms- 11-6. We hear of great women like Maitreyi, Gargi, Arundhati, Lilavati etc.
In the Vedic age women enjoyed equal opportunities for education and work. They were eligible for ‘upanayana’ (Sacred thread) or initiation and Study of Brahma Knowledge.
There is an interesting passage in the Durga Saptasati, where Durga who is Kumari/ virgin tells the Asuras who aspired to marry her- ‘He who conquers me in battle , he who humbles my pride ,he who is my equal in this world, he shall be my husband’. Women were not the bond slaves of pleasure. The end of marriage is spiritual comradeship. The Mahabharata says ‘ let this heart of yours be mine , and let this heart of mine be yours’- 1-3-9. Yet sex life was not despised. Its importance for human development was recognised.
Matri Devp Bhava – Treat your Mother as a Goddess – is the advice given to the young. Again Manu says,
‘One acharya excels ten Upadhyayas in glory; a father excels a hundred Acharyas in glory; but a mother excels even a thousand fathers in glory’- 2-145
Marriage without motherhood is incomplete.
Xxx
R c majumdhar says after quoting anti women references from the Smrtis (HINDU LAW BOOKS), and the following about other religions-
Varahamihira’s Brihat Samhita of sixth century CE gives all out support for women-
“Tell me truly, what faults attributed to women have not been also practised by men? Men in their audacity treat women with contempt, but they really possess more virtues than men….. men owe their birth to women: O ungrateful wretches, how can happiness be your lot when you condemn them?”
The ascetic and puritanical ideas which came into prominence about the sixth century BCE laid stress on the temptations offered by women and regarded them as the chief obstacles to salvation. Women came to be looked upon as the source of all evils and as potent instruments of destroying the souls of men. Hence the denunciation of women as a class reached a degree which is not unknown in other countries. It is well known how Christian monks gathered at the Synod of Macon in 585 CE seriously discussed whether women were human beings at all.
Even Gautama Buddha was not wholly above this spirit. For a long time, he refused to admit women to his religious order, and when he did so, he prophesied that that the purity of his religion would not endure for more than half the period that it would have otherwise done. He also imposed a far more rigorous test and placed the nuns as a class in a position of inferiority to the monks. It was laid down, for example, that a nun though hundred years old, must stand in reverence even before a young monk just initiated into the church. Such a sentiment was shared by other religious sects, and naturally reacted on the people at large, thereby creating an unfavourable view against women. These and other reasons must have produced the feeling that women were wicked and sensuous by nature and must be constantly held in check by women.
It should be remembered, however, that such a feeling was almost universally held throughout the world down to down to very recent times. Confucius, Aristotle, Milton, and even Rousseau preached that women, being inherently inferior to men, should always be in a subordinate position to men”.
Source book – Great Women of India, Advaita Ashrama, 1953.
My Comments
Tamil devotional literature and Kamba Ramayana also have lot of anti women remarks. They looked at women from three angles:
As mothers they were worshipped as Goddess.
As wives they were appreciated for the work they did;
As courtesans they were criticised. The writers who criticised women knew that every woman was a mother to someone. So only when the women acted against the norms of the day they were condemned.
The strange thing is that the Hindus were the only one race who gave them full rights in the Vedic days.
But Britain and other countries paid less wages to women than men who did the same job. While I am typing this, several women sued the BBC against lesser pay they are getting right now and winning their cases slowly.
Britain gave voting rights to British women only after India gave voting rights.
In almost all Western countries women are paid less than men while I am finishing typing this article.
Victorian novels have lot of anti -women remarks. Women were treated as dumb, arrogant, gossip mongers. They were projected as jealous anti women (one woman wont help another woman of same age or status).
Long Live Women!
Long live Bharati, Tamil poet, who fought for women’s’ rights as early as in 1900s.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சாப்பிடக் கூடாத இலைகள் எவை?
சதகம் என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம். தமிழில் நிறைய சதக நூல்கள் உள; பெரும்பாலும் இவை திருக்குறள் , நாலடியார் போல நீதிகளை உரைக்கும். ஏனைய சில பாண்டி மண்டலம் கொங்கு மண்டலம் போன்ற இடங்களின் சிறப்புகளை விதந்தோதும் . இந்துக்களுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள் பாடிய சதகங்களும் இருக்கின்றன. நமக்கு கிடைத்த மிகப் பழைய தமிழ்ச் சதகம் மாணிக்கவாசகர் பாடிய திருச் சதகம் ஆகும். ஆயினும் அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்பதால் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கார்மண்டல சதகம் தான் முதலில் கிடைத்த தமிழ்ச் சதகம் என்பர். பழமொழிகள் நிரம்பிய தண்டலையார் சதகம் படிக்கச் சுவையானது. அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீச்சுர சதகம், சதுரகிரி மலையில் உள்ள இறைவனை வேண்டிப் பாடியது. நீதிகள், அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com
நாம் எல்லோரும் வாழை இலையில் சாப்பிடுகிறோம் . தாமரை இலையில் சாப்பிடலாமா ? அரச இல்லை அல்லது புரசை இலைகளைத் தைத்து செய்யப்படும் தையல் இலைகளில் சாப்பிடலாமா இதற்கெல்லாம் கவிராயர் சொல்லும் பதில்களைப் பாருங்கள் .
(இதற்கிடையில் நாக்கில் தண்ணீர் ஊறவைக்கும் சுவையான செய்தி. அந்தக் காலத்தில் சில ரயில் நிலையங்களில் பட்டணம் பக்கோடா, போண்டா , வடை முதலியவற்றை தையல் இலையில் கட்டி விற்பார்கள். நானும் என் தம்பி சூரிய நாராயணனும் மந்த்ராலயத்தில் உள்ள ரா கவேந்திர சுவாமிகள் மடத்துக்குப் போய் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசித்தோம். முடிந்தவுடன் தையல் இலையில் சுவையான சாப்பாடு! மந்தாரை இலைகளைத் தைத்து தையல் இலை செய்வார்கள் என்று கேள்வி. நிற்க )
ஆல மரம் , அத்தி, அரசு, எருக்கு, முள் எருக்கு , தாழை , தாமரை , பாதிரி , ஆமணக்கு, சகதேவ , இத்தி மர இலைகளில் சாப்பிடக்கூடாது tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
அத்துடன் வேறு சில அறிவுரைகளையும் சேர்த்துச் சொல்கிறார் –
அடிக்கடி சாப்பிடாதே; குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடாதே . மேற்கண்ட இலைகளில் சிற்றுண்டி கூட சாப்பிடக்கூடாது; தண்ணீரும் பருகக்கூடாது .இதோ பாடலும் பொழிப்புரையும் –
அறப்பளீச்சுர சதகம்
அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
உலகில் மிகவும் அற்புதமான விஷயம் இந்தியாவின் பெண் அறிவாளிகளாகும் . உலகில் வேறு எந்த நாட்டிலும் பழங்காலத்தில் இவ்வளவு பெண் அறிவாளிகள் இருந்ததாக கிரேக்க, பாபிலோனிய, எகிப்திய வரலாறுகளில் இல்லை. அதிலும் குறிப்பாக பெண் கவிஞர்களை அங்கு விரல்விட்டு எண்ணிவிடலாம். வேதகாலம் என்பதை கி.மு.1500 அல்லது அதற்கு முந்தைய காலம் என்பதை இப்பொழுது பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழ் சங்கப் புலவர் காலம் என்பது சுமார் 2000 ஆண்டுகளு க்கு முந்தையது என்பதிலும் கருத்து ஒற்றுமை உளது. ஆக இந்தக் காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலேயே 60 பெண் கவிஞர்களின் பெயர்களும் கவிதைகளும் கிடைக்கின்றன.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பழங்கால உலகில் இந்தியாதான் பெரிய நாடு. இமயம் முதல் குமரி வரையும் . மேற்கே ஆப்கனிஸ்தான் வரையும் பரவிய பிரம்மாண்டமான நிலப்பரப்பு. அ தில் இப்படி 60 பேர் இருந்ததை எண்ணி இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படலாம். மேலும் அவர்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் பாடிய கவிதைகளிலும் பெரிய, அரிய கருத்துக்கள் உள்ளன. இதுதவிர அந்தக் காலத்தில் அரசாண்ட அரசிகள், கவிதை பாடாமல் புகழ் ஏணியின் உ ச்சியைத் தொட்ட பெண்மணிகள் என்று பட்டியலிட்டால் அது இரு நூற்றுக்கும் மேலாகப் போய்விடும் . வரலாற்றுக்கும் முந்தைய காலத்தில் ஆண்ட ஸ்த்ரீ ராஜ்ய அரசிகள் பற்றி எல்லா பழைய நூல்களும் குறிப்பிடுகின்றன.
இந்தக் கட்டுரையில் வேத கால பெண் புலவர்கள் பற்றி மட்டும் காண் போம் வேத காலம் என்பதில் சம்ஹிதை, பிராமண, ஆரண்யக, உபநிஷத்துக்கள் உருவான காலம் அடக்கம். உலகிலேயே பழமையான நூலான ரிக்வேதம், ஒவ்வொரு மந்திரத்தைக் ‘கண்ட/ கண்டுபிடித்த’ ரிஷி அல்லது ரிஷிகாவின் பெயரைச் சொல்கிறது. பெண் கவிஞர்களை ரிஷிகா என்பர்.
ரிக்வேதத்தில் 30 ரிஷிகாக்களின் பெயர்கள் இருக்கின்றன. ‘கில’/ பிற்சேர்க்கை சூக்தங்களில் காணப்படும் 5 பெயர்களும் இதில் அடக்கம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
கோஷா, லோபாமுத்ரா,அப்பால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரேயீ , ஸாஸ்வதீ , விஷ்வாவாரா முதலிய பெயர்களை ரிக் வேதத்தில் பார்க்கலாம்.
30 பெண் புலவர்களையும் கீழ்கண்டவாறு பிரிக்கலாம் —
கடவுளராகக் கருதப்படும் பெண்கள் –
இந்த்ரமாதரஹ , இந்த்ரனுசா , இந்த்ராணி , அதிதி, சூர்யா, ஸாவித்ரீ , யமீவைவஸ்வதீ, சசி பௌலோமி முதலியோர் இந்த வகையின் கீழ் வருவார்கள் .
ஒரு மந்திரத்தில் இந்திரனின் மகனான வசுக்ராவின் மனைவி பாடியது என்று வரும். அப்படியானல் இந்திரனின் மருமகள் என்று பொருள்படும். இந்திரன் என்பது அரசனா , கடவுளா , இயற்கைச் சக்தியா அல்லது, பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிப் பெயரா என்று ஆராய்ந்து முடிவு காண வேண்டும் tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் 10-86ல் 11 மந்திரங்களில் இந்திராணி துதிபாடுகிறார் .
ரிக் 10-85 என்பது கல்யாணத்தில் பயன்படுத்தும் மந்திரம் . இதன் ரிஷிகாக்கள் சூர்யா,சாவித்ரி ; இவ்விருவரும் விவஸ்வன் எனப்படும் சூரியனின் மனைவியர் என்றும், அவர்களை வ்ருஷகாபேயி என்று பல மந்திரங்கள் துதிபாடும் என்றும் பிருஹத்கதா என்னும் நூல் உரைக்கும்..
யமனுடைய சகோதரி யமீ. இருவருக்கும் இடையே நடந்த சம்பாஷணை க் கவிதை பத்தாவது மண்டலத்தில் வருகிறது.
யமி வைவஸ்வதி என்ற பெயரும் காணப்படுகிறது.
சசி பவுலோமி ஒரு கவிதை பாடியுள்ளார்
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
அரசர் தொடர்புடைய புலவர்கள்
கோஷா கக்ஷிவதீ , லோபாமுத்ரா,அபால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரே யீ , ஸஸ்வதீ ஆங்கிரஸி , விஷ்வாவாரா முதலிய பெயர்கள் அரசர் தொடர்புடைய பெண் புலவர்கள்.
அபால என்பவர் அத்ரியின் புதல்வி.
10-39, 10-40 ஆகிய இரண்டு சூக்தங்களும் கோஷா கக்ஷிவதியின் பெயரில் உள்ளன .
அகஸ்திய மகரிஷியை மணந்த லோபாமுத்ரா ஒரு மஹாராணி. இவர் பெயரிலும் மந்திரங்கள் இருக்கின்றன.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
சம்பாஷணைக் கவிதைகள்
உலகில் சம்பாஷணை (Conversational Poems) வடிவத்தில் அமைந்த ஒரே வேதப்புத்தகம் பகவத் கீதை. அர்ஜுனன் கேள்விக்கு கிருஷ்ணன் விடை தருகின்றார் . ஏனைய மதங்களின் வேதப்புத்தகங்களில் அங்குமிங்கும் கொஞ்சம் உரைநடையைக் காணலாம்.இதை சாக்ரடீஸ் பின்பற்றியதால் வெளிநாட்டினர் இதை சாக்ரடீஸ் முறை (Socratic Method) என்பர்.நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் கேள்வியில் பிறந்தவையே . முக்கிய உபநிஷதங்களும் கேள்வி-பதில் வடிவில் அமைந்தவை. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் சம்பாஷணைக் கவிதைகள் இருக்கின்றன. உலகின் பழைய நூல்களில் இதைக் காண்பது அரிது. சொல்லப்போனால் இது இந்து மதத்தின் எல்லா புராண , இதிகாசங்களிலும் உள்ளது. வேதகால உபநிஷத்துகளிலும் உண்டு. மருத்துவ, ஜோதிட நூல்கள் அனைத்திலும் உண்டு. ஒருவர் கேள்வி கேட்டவுடன் மற்றொருவர் பதில் சொல்லுவார். ரிக் வேதத்தில் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் கவிதை நடை சம்பாஷணைகள் கல்யாண நலுங்குப் பாடல்கள் போல கிண்டல் தொனியில் இருக்கும். நலுங்குப் பாடல்களில் கொஞ்சம் செக்ஸ் விஷயங்கள் வரும். அதுபோலவே இந்தக் கவிதைகளிலும் உண்டு tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
வெள்ளைக்காரர்களுக்கு இதைப் படித்தவுடன் , அடடா, குறை சொல்ல ஒரு விஷயம் கிடைத்துவிட்டது என்று மகிழ்வர் .ரிக் வேதத்தின் முதல் மண்டலத்திலும், பத்தாவது மண்டலத்திலும் வரும் கவிதைகளைக் காலத்தால் பிந்தியவை என்று சொல்லி மகிழும் வெள்ளைத்தோல் அறிர்கள் இங்கு வாய் மூடி மௌனமாகி விடுவர் . உலகப் புகழ் பெற்ற காதல் பாட்டு இங்குதான் வருகிறது. அதை எல்லாக் கல்யாணங்களிலும் பிராமணர்கள் விரிவாக ஓதுவார்கள். அது இல்லாமல் கல்யாணம் நிறைவு பெறாது. அந்த அற்புதமான கவிதை ரிக் வேதத்தில்(10-85) 47 மந்திரங்களுடன் இருக்கிறது. அது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
tags – ரிக் வேதம், பெண் புலவர்கள், சம்பாஷணை , கவிதைகள் , அறிவாளிகள்
வடலூர் வள்ளலாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவர் ஆற்றிய அற்புதங்கள் பிரமிக்க வைப்பவை. (வள்ளலார் தோற்றம் : 5, அக்டோபர் 1823, ஒளியுருவாய் மறைந்தது 30,ஜனவரி 1874).
ஆனால் இந்த அற்புதங்களுக்கெல்லாம அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அருகிலிருந்தோர் பார்த்து பிரமித்தனர்; வியப்படைந்தனர்.
சுமார் 43 அற்புதங்களை நேரில் பார்த்தும் அன்பர்கள் சொல்லக் கேட்டும் அதிகாரபூர்வமாக வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் தொழுவூர் வேலாயுத முதலியார் ‘வள்ளலாரின் சரித்திரச் சுருக்கம்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.
பிரம்மாண்டமான வேத, இதிஹாச, புராணங்களின் உட்பொருளை உணர்வது, அனாயாசமாக அற்புதமான தமிழில் ஆழ்ந்த பொருளடங்கிய தமிழ்ப் பாக்களை உடனுக்குடன் யாப்பது, வீண் வாதுக்கு வந்தோரை சில நிமிடங்களில் வெல்வது, சமரச சன்மார்க்கத்தை உலகிற்கு உணர்த்துவது என்று இப்படி ஏராளமான விஷயங்களை வள்ளலாரின் வாழ்க்கையில் காணலாம்.
ஒரு முறை திருவொற்றியூர் வடிவாம்பிகை அம்மன் சந்நிதி முன் வள்ளலார் நின்று தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு அன்பர் சதுர்வேத சார சங்கிரகம் என்று நூலின் ஏட்டுச் சுவடியைக் கொடுத்து விட்டு மறைந்தார்.
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட வள்ளலார் பலரது சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.
ஒரு முறை சங்கராச்சாரியார் சென்னைக்கு வந்த போது சம்ஸ்கிருத நூல் ஒன்றில் ஒரு பகுதியில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நூலில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்க வல்ல புலவர்கள் இங்கு உண்டோ என்று அவர் ஒரு பிராமணரை வினவ, அவர் வள்ளல் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உடனே சங்கராசாரியார் அவரிடம் நூலைத் தந்து தனக்கு சந்தேகம் ஏற்பட்ட இடத்தைக் காண்பிக்கவே அதை ஒரு முறை பார்த்தார் வள்ளலார். பின்னர் தன் முதல் மாணவராகிய தொழுவூர் வேலாயுத முதலியாரிடம் சந்தேக நிவர்த்தி செய்து வைக்குமாறு பணிக்கவே அவரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.
இது மட்டுமல்ல, பல வருடங்களாக குஷ்ட நோயினால் வருந்திய ஒருவர் அடிகளைக் கண்டு வணங்கித் தன் நோயைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினார். அவருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வலத்தால் திருநீறு கொடுத்து அதை நொடிப்பொழுதில் போக்கினார் வள்ளலார்.
இன்னொரு சமயம் வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர் பல ஆண்டுகளாகத் தன்னை வருத்தும் வாத நோயைத் தீர்த்தருளுமாறு வள்ளலாரை வேண்டினார். உடனே கருணையுள்ளம் கொண்ட அடிகளார் அவரது நோயைத் தீர்த்தருளினார்.
இதனால் மிக்க மகிழ்ச்சி கொண்ட சுப்பராய முதலியார்,
அகத்தியனோ வான்மீகியோ ஆதிசேடன் றானோ
மகத்துவமாஞ் சம்பந்த மாலோ – சகத்திலகுஞ்
சச்சிதா னந்தத்தின் தண்ணாளியோ என்னென்பேன்
மெச்சுமதி ராமலிங்க வேள்
என்று ஒரு புகழ்மாலையை அவருக்குச் சூட்டித் தன் நன்றியைத் தெரிவித்தார்.
அற்புதங்கள் ஒரு புறமிருக்க சமுதாயச் சீர்திருத்தத்தை அவர் பெரிதும் வலியுறுத்தினார்; பக்தி, ஞானம், கர்ம யோகம் உள்ளிட்ட அனைத்து ஆன்மீக விஷயங்களிலும் தெள்ளத் தெளிவாக எளிய தமிழில் அவர் தனது உபதேச உரைகளை அருளினார்.
தமிழ் மொழியின் வல்லமையை அனைவரும் உணருமாறு செய்தார்.
‘தைப்பூசம் தவறாதீர்கள்’ என்ற அவரது அருளுரை பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்தது.
தைப்பூசத்தன்று ஆண்டு தோறும் சன்மார்க்கச் சங்கத் திருக்கூட்டம் வடலூரில் நடைபெற்று வருகிறது.
அன்று ஏழு திரைகள் விலக ஜோதி தரிசனம் காணலாம்.
அவர் ஏற்றி வைத்த தீபம் இன்று வரை தொடர்ந்து எரிகிறது.
பசித்தோர்க்கு அன்னமிட வேண்டும் என்ற அவரது எண்ணப்படி இன்றளவும் அவர் மூட்டி வைத்த அடுப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்து அன்னம் வழங்கப்பட்டு வருவது உலக அதிசயங்களுள் ஒன்று.
வள்ளலாரின் வாழ்க்கையை ஊன்றிப் பார்ப்பதோடு, அவரது பாடல்களை – அருட்பாவை – படித்து ஓர்ந்து உணர்ந்தால் ஜோதி தரிசனம் கிட்டும் என்பதில் ஐயமில்லை!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
“Rastus “, said his friend who had been reading in the paper of a number of fatal incidents , “if you had to take your choice between one or the other , which would you rather be in, a collision or an explosion?”
“Man – a collision”, said Rastus.
“How come?”
“Why man , if you are in a collision, there you are, but if you are in an explosion where are you?”
Xxx
Injury Anecdote
An enthusiastic lady told a group of friends in delight of the opportunity she had had to apply the knowledge she had acquired in her First Aid class. “ It was wonderful”, she said, “it was so fortunate that I had had the training.I was crossing the Fifth Avenue at 57th street and heard a crash behind me. I turned around and saw a poor man who had been struck by a taxicab. He had a compound fracture of the leg , was bleeding terribly, was unconscious and seemed to have fractured a skull. Then all my First Aid came back to me; and I stooped right down and put my head between my legs to keep myself from fainting”.
Xxx
Accidental Death
The new foreman was puzzling over the formal papers which had to be filled out explaining the details of the casualty in which Murphy, one of his workmen, had lost his life by falling from a high scaffold. At last he managed to complete all of the task except for one more unfilled line which seemed to stump him, finally, licking his pencil, he applied himself firmly to the section headed, “Remarks”, and wrote “ He didn’t make none”.
கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் ! (Post No.7546)
RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7546
Date uploaded in London – – 7 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்ச புராணம், பாகவதம் முதலியவற்றில் கிருஷ்ணனைப் பற்றிய ஒரு உண்மைக்கதை- வரலாற்றுச் சிறப்புமிக்க கதை உள்ளது. யாதவர்களை ஓடஓட விரட்டிய நிகழ்ச்சி இது. உத்தர பிரதேச மாநிலமான மதுராவில் இருந்த ஒரு சமூகத்தை 802 மைல் — 1291 கிலோமீட்டர் தொலைவில் குஜராத் மாநிலத்தில் உள்ள துவராகா புரிக்கு விரட்டிய வரலாற்று நிகழ்வு இது – அதைவிட வியப்பான விஷயம், கிருஷ்ணனையும் யாதவர்களையும் விரட்டிய மன்னன் பெயர் ‘கால யவனன்’ . யமன் போன்ற யவனன் அல்லது கருப்பு யவநன் என்று பொருள் சொல்லலாம். அந்த யவனன் கிரேக்கனா, அராபியான , ரோமானியனா என்றும் தெரியவில்லை . இதை எல்லாவற்றையும் விட சுவையான விஷயம் கிருஷ்ணன் அனுப்பிய கறுப்புப் பாம்புக்குப் பதிலாக அவன் அனுப்பிய எறும்பு டப்பா கதை! tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதோ முழு விவரம்-
இந்த வரலாற்று நிகழ்வினைச் சொன்னால் மக்களிடையே கிருஷ்ணன் மதிப்பு குறைந்துவிடும் என்று பவுராணிகர்கள், இதை அதிகம் பிரஸ்தாபிக்கவில்லை போலும் !
கால யவனன் கதையில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. முதல் பகுதி கார்க்யர் என்ற ரிஷி பற்றிய கதை; அவர் வ்ருஷ்ணி குல, அந்தக குல (யாதவ) மக்களுக்கு குரு . அவரை ஒரு சமயம் யாதவர்கள் அவமானப்படுத்தவே அவர் 12 ஆண்டு தவம் செய்து சிவபெருமான் அருளால் ஒரு அப்சரஸ் மூலம், குழந்தை பெறுகிறார். அந்தக் குழந்தை யாதவ குலத்தைப் பழி வாங்கும் என்றும் சிவன் சொல்கிறார். இதை அறிந்த பக்கத்து தேச யவன மன்னன் அவரையும் அவரது குழந்தையையும் தனது அரண்மனையில் வளர்த்தான். காரணம்? அவனுக்குக் குழந்தை கிடையாது. அவன் இறந்தபின்னர் கார்க்யரின் மக ன் பட்டம் சூட்டப்பட்டான் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
இது ஒரு புறமிருக்க, கம்சனின் மாமனாரும் மகா சக்திவாய்ந்த மகத சாம்ராஜ்யத்தின் மன்னனும் ஆன ஜராசந்தன், கம்சனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனைக் காலி செய்ய தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது காலயவனனுடன் இமயமலைப் பகுதியில் உள்ள குட்டி நாடுகளை ஆளும் எல்லா மன்னர்களும் சேர்ந்து கொ ண்டனர். அவன், ஜராசந்தன் ஆதரவோடு மதுராபுரி மீது படையெடுத்தான். அவனுடைய படைகளுடன் வந்த குதிரைகளும் ஓட்டக்கங்களும் போட்ட லத்திகளும் மூத்திரமும் ஆறு போல பெருக்கெடுத்தது ; அந்த ஆற்று க்கு அஸ்வகிருத் என்ற பெயரும் ஏற்பட்டது.
மாபெரும் படை மதுராபுரியை நோக்கி வருவதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா யாதவ மக்களின் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி சொற்பொழிவைத் துவக்கினார்-
“எனது அருமை மக்களே, நான் சொல்லுவதைக் கேளீர் . மாபெரும் படை மதுராபுரியை சுற்றி வளைத்து இருக்கிறது. இது வெல்ல முடியாத படை. கால யவனன் , சிவ பெருமானிடம் வரம் பெற்றவன் . நானும் சமாதானத்துக்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன். இதுவரை பலன் கிட்டவில்லை. காரணம்? ஜராசந்தனின் கோபம் தணியவில்லை. அவன் காழ்ப்பு உணர்வு கொண்டுள்ளான். கால யவனனோ , ‘நானே ஆளப் பிறந்தவன்’ என்று மமதையுடன் கொக்கரிக்கிறான். இந்த செய்தியை நாரதர் என்னிடம் இயம்பினார்” tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
ஹரி வம்சத்தில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் மேலும் சொல்லப்படுவதாவது —
“கிருஷ்ணர் ஒரு டப் பியை எடுத்து அதற்குள் அதி பயங்கரமான கரு நாகப் பாம்பை உள்ளே போட்டு ஒரு தூதனிடம் கொடுத்தார் இதை காலா யவன னிடம் காட்டி நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டு வா என்று தூது அனுப்பினார் கண்ணன். தூதன் , கால யவனனி டம் சென்று டப்பாவைத் திறந்து காட்டி, யது குல நந்தன னான கிருஷ்ணன் சீறும் கரும் பாம்பு போன்றவன் என்றான். கால யவன னுக்குப் புரிந்துவிட்டது. அதி பயங்கரமான கூரிய பற்களுடைய எறும்புகளை பிடித்துவரச் சொல்லி அதை டப்பா முழுதும் போட்டு நிரப்பினான் . அந்தப் பாம்பை அவை கடித்துக் குதறி சாப்பிட்டு விட்டன.. இதைப்போய் உங்கள் கிருஷ்ணனிடம் கொடு என்றான் கால யவனன் .
எறும்புடன் வந்த டப்பாவில் அதி பயங்கர கரும்பாம்பு பிணமானதைக் கண்டு கிருஷ்ணன் பயந்தான்; யாதவகுலத்தை அழைத்துக் கோடு 800 மைல் பயணம் செய்து கடலோரப் பட்டினமான துவாரகா நகருக்கு சென்றான் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
யாதவ குல மக்கள் அனைவரும் வீ ட்டு வாசலுடன் வாழத் துவங்கிய ஒரு நாள், கிருஷ்ணன் மட்டும் தனியாக, நிராயுதபாணியாக மதுரா புரிக்கு நடந்தே சென்றான் . கா லயவனனை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வா என்றான் . அவன் இத்தகைய தருணத்தை நழுவ விடக்கூடாது .கிருஷ்ணன் கதையை இன்றுடன் முடிப்போம் என்று புறப்பட்டான். கிருஷ்ணர் ஓட்டம் பிடித்தார் எல்லாம் ஒரு திட்டத்தோடு தான் .
ஹரிவம்சத்தில் உள்ள மூன்றாவது கதை.
மாந்தாதா என்ற மாமன்னனின் மகன் முசுகுந்த சக்ரவர்த்தி. அவன் தேவாசுரப் போரில் தேவர்களுக்கு வெற்றி வாகை பெற்றுத் தந்தவன் . இனி போரே வேண்டாம் . நான் நிம்மதியாகத் தூங்க அருள்புரியுங்கள் என்று தேவர்களிடம் வேண்ட, இந்திரன் மூலமாக ஒரு வரம் பெற்றான். என து தூக்கத்தை எவனாவது கெடுப்பானாகில், நான் விழித்தவுடன் பார்க்கும் மனிதன் எரிந்து போ க வேண்டும் என்றான். இந்திரனும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்றான். அவர் ஒரு குகையில் சென்று உறங்கி விட்டார் . இந்த விஷயம் முழுவதையும் நாரத முனிவர் ஆதியோடு அந்தமாக கிருஷ்ணனிடம் இயம்பி இருந்தார் . இது எல்லாம் கிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவே முசுகுந்த மன்னன் தூங்கும் குகைக்குள் மெதுவாக சப்தமின்றி நுழைந்து முசுகுந்தனின் தலை மாட்டில் அமர்ந்தார் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
கால யவனனும் அந்தக் குகைக்குள் நுழைந்தான். கால யவனனுக்கு விநாச காலே விபரீத புத்தி; ஒரு உறங்கும் ஆசாமி அருகில், தலை மாட்டில், கிருஷ்ணன் அமர்ந்து இருப்பதைப் பார்த்து, உறங்கும் ஆசாமியை கால்களால் எத்தி உதைத்தான். கோபத்தோடு எழுந்த முசுகுந்தன் கோபப் பார்வையை அவன் மீது வீசவே கால யவனன் எரிந்து சாம்பலானான் . . கிருஷ்ணனுக்கு ‘புத்திமான் பலவான் ஆவான்‘ என்ற பழமொழி பொருந்தும்.
இதற்குப் பின்னர், முசுகுந்த மன்னனிடம், அவன் தூங்கிய காலத்தில் உலகில் என்ன என்ன நடந்தன என்ற தலைப்புச் செய்திகளை ‘புல்லட் பாயிண்டு’ (Bullet Points) களில் கிருஷ்ணன் மொழிந்தார். முசுகுந்தனும் மகிழ்ந்து, இனி சுவர்க்கம் புகும் நேரம் வந்துவிட்டது என்று சொல்லி பூவுலகில் இருந்து புறப்பட்டார்.
xxx
என் கருத்து
பைபிளில் (Bible) இரண்டாவது அத்தியாயத்தில் எக்ஸோடஸ் (Exodus) என்ற தலைப்பில் மோசஸ் என்ற தலைவன் யூத மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்து இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றான்என்ற செய்தி வருகிறது . மூன்று மதங்கள் போற்றும் மோசஸ் உண்மையில் இருந்ததற்கு இதுவரை வரலாற்றுச் சான்றுகளோ தொல்பொருட் துறை சான்றுகளோ கிடைத்தில ; ஆயினும் எக்ஸோடஸ் என்னும் மாபெரும் வெளியேற்றம் பற்றி பல சினிமாக்களும் புஸ்தகங்களும் வெளியாகியுள்ளன. அது போன்ற நிகழ்ச்சி யாதவர் வெளியேற்றமும் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
மோசஸ் இஸ்ரேலை நோக்கி சென்ற காலையில் அவருக்கு செங்கடல் வழி திறந்துவிட்டது என்று பைபிள் இயம்பும். இது எல்லாம் ஹரிவம்சத்தைக் காப்பி அடித்து எழுதியது என்பர் ஆன்றோர். கிருஷ்ணர் பற்றி சொல்லும் விஷயங்கள் அத்தனையையும் பைபிளும் காப்பி அடித்து இருக்கிறது .
1.பிறக்கும் முதல் குழந்தை குலத்துக்கு ஆபத்து என்றவுடன் ரோம மன்னர் குழந்தைகளைக் கொன்றதை கம்சன் செய்த கொடுஞ் செயல்களுடன் ஒப்பிடலாம்.
3.கூடையில் மோசஸை நைல் நதியில் மிதக்கவிட்டதை கர்ணன் கதையுடன் ஒப்பிடலாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
4..செங்கடல் திறந்து மோசஸ் முதலியோருக்கு வழிவிட்டதை யமுனை நதி திறந்து வசுதேவனுக்கு வழிவிட்டதை ஒப்பிடலாம்.
5.ஆதம் (Adam) ஏவாள்(Eve) கதை என்பது உபநிஷத்தில் உள்ள இரண்டு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஏற்கனவே ஒப்பிட்டுள்ளார் . ஆதம் (Adam=Adma) என்பது ஆத்மா என்பதன் திரிபு. ஏவாள் என்பது ஜீவ (Eve-Jeev) என்பதன் மருவு. அதாவது உபநிஷத்தில் வரும் இரண்டு பறவைக் கதை– ஒரு பறவை பழம் சாப்பிட்டது– என்பதை பைபிள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதாகக் கூறும் . இது பரமாத்மா , ஜீவாத்மா கதை
6.ஆதம் தனது இடது எலும்பை ஒடித்து பெண் இனத்தை உருவாக்கினான் என்பது அர்த்த நாரி கதை. சிவ பெருமானின் இடப்புறம் சக்தி/ பெண் இனம்.
7. ஏசு சொல்லும் குட்டிக்கதைகள் உபநிஷத் கதைகள் போன்றவை tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
8.இதுதவிர பைபிளில் ஏராளமான சம்ஸ்கிருத் சொற்கள் இருக்கின்றன.
பைபிள் என்பது இந்துமத நுல்களைக் காப்பி அடித்து எழுதியது என்பதற்கு இவைகள் சான்றுகள். மோசஸ் எக்ஸோடஸ் அத்தியாயம் எழுதப்பட்டது கி.மு ஆறாம் நூற்றாண்டு . கிருஷ்ணர் கதைகளோ கி.மு 3100க்கு முந்தையது.
xxx
Krishna appears in Yaga Fire
இதை எல்லாம் விட்டுவிட்டு ஒரிஜினல் கதைக்குத் திரும்புவோம்
கால யவனன் கருப்பு கிரேக்கனா (Black Greek?), கருப்பு அராபியனா (Black Arabian)? என்ற ஆராய்சசியும் நீடிக்கிறது. யவன என்ற சொல்லை சங்க இலக்கியம் ரோமானியர் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. அலெக்சாண்டர் படை எடுப்புக்குப் பின்னர் கிரேக்கர் என்ற பொருளில் வருகிறது. குதிரை விற்பனைக் கதைகளில் அராபியர் என்ற பொருளில் வருகிறது . யவன என்ற சொல் வரும் பல்லாயிரம் இடங்களைத் தொகுத்து ஹெல்சிங்கி (பின்லாந்து) நகர புஸ்தக வெளியீடு 2015ல் வெளியாகி யிருக்கிறது. அதில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் ஆங்கிலத்தில் அப்படியே உள்ளன. கால யவனனுடன் சேர்ந்த மன்னர்கள், இனங்கள் பெயர்கள் நிறைய உள்ளன . அத்தனையையும் ஆராய்ந்தால் புதிய இந்திய வரலாறு tamilandvedas.com, swamiindology.blogspot.com
எழுதலாம்.
இதைவிட மிக மிக சுவையான விஷயம் ஹெலிகாப்டர் பற்றியது. ஹரி வம்சத்தில் ஓரிடத்தில் கால யவனனுக்கு வானில் பறக்கும் (aerial car) வாகனத்தில் தூது விடுவோம் என்ற ஸ்லோகம் வருகிறது. போகிற போக்கில் இதைச் சொல்லுவதால் அக்கால மக்களுக்கு விமானம், ஹெலிகாப்டர் என்பன அத்துப்படி என்பதும் ஆனால் மன்னர்கள் மட்டுமே அரிதாகப் பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது.
இதை எல்லாம்விட மிக மிக அதிசயமான விஷயம் போக்குவரத்து வசதிகள். கிருஷ்ணர், துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்துக்கும், துவரகை க்கும் மதுராபுரிக்கும் இடையே சென்று வந்த செய்திகள் நிறைய உள்ளன. துவாரகா- மதுரா தொலைவு 1291 கிலோ மீட்டர். அதாவது 802 மை லகள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வதற்கு புல்லட் ரயில் (Bullet Trains) இல்லை ; அப்படியும் எப்படி கிருஷ்ணன் அடிக்கடி பயணம் செய்தார்? அதுவும் யாதவ குல மக்கள் கால் நடையாக எப்படி வந்தனர்? பின்னர் கிருஷ்ணர் மட்டும் எப்படி கால்நடையாக தனியே சென்றார்.? tamilandvedas.com, swamiindology.blogspot.com
புற நானுற்றுக்கு உரை எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன், உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர், விளம்புவது போல யாதவ குலத்தினர் தமிழ் நாட்டில் எப்படி குடியேறினர்? இரண்டாயிரம் மைல்கள் நடந்து வந்தனரா ? மதுரை அரசி மீனாடசியின் அம்மா காஞ்சன மாலை , அவளோ உக்ரசேனனின் குமாரத்தி ஆயிற்றே . அவர்கள் எப்படி தமிழ் நாட்டு மதுரைக்கு குடியேறினர் ? ஆதி சங்கரர் எப்படி இரு முறை இமயம் முதல் குமரி வரை வலம் வந்தார்? பாஹியானும் யுவாங் சுவானும் சீனாவில் இருந்து எப்படி காஞ்சிபுரம் வரை வந்தனர்? இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு புது வரலாறு எழுதுவோமாக . புரியாத பல புதிர்களை விடுவிப்போமாக .
Tags – துவாரகா , மதுரா , கிருஷ்ணன் , குடியேற்றம்,யாதவர், கால யவனன் , கார்க்யர் , ஜராசந்தன், கிருஷ்ணர்