எகிப்திய மன்னன் 94 ஆண்டுகள் ஆண்டானா? எகிப்திய அதிசயங்கள்- பகுதி 23 (Post No.3743)


Written by London swaminathan

 

Date: 21 March 2017

 

Time uploaded in London:- 9-43 am

 

Post No. 3743

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

எகிப்து நாட்டின் வரலாற்றை 5000 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கி, அதை ஆஹா ஓஹோ என்று வெளிநாட்டினர் புகழ்கின்றனர். எகிப்து சுற்றுலாத் தொழில் (Tourism Industry) உலகில் மிகப்பெரிய சுற்றுலாத் தொழில். அங்குள்ள பிரமிடுகள் (Pyramids) உலகின் ஏழு அதிசயங்களில் எஞ்சி நிற்கும் ஒரே அதிசயம். ஆயினும் எகிப்து நாட்டின் வரலாறோ சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன் மனீதோ (305-285 BCE) எழுதிய குறிப்புகளில் இருந்து கிடைத்ததுதான். அதுவும் முழுதும் கிடைக்காததால் ‘அவர் சொன்னார், இவர்  சொன்னார்’ என்றெல்லாம் கிடைத்தனவற்றை ஒட்டுப்போட்டு, தட்டிக்கொட்டி ஆயிரக்கணக்கில் புத்தகம் எழுதி, அதை மில்லியன் கணக்கில் விற்பனை செய்து, பில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர் மேலை நாட்டினர்.

 

ஆனால் கரிகால் சோழன் 83 ஆண்டுகள் ஆண்ட பாடலை மு. ராகவ அய்யாங்கார் எடுத்துக் காட்டியும் நாம் இன்னும் பழைய வெள்ளை க்காரன் எழுதிய அசோகன் காலம் முதலான வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறோம்!

 

எகிப்து நாட்டு அரசர்களின் ஆட்சிக் காலத்தைப் பாருங்கள்!

Picture of King Narmer

இரண்டாம் பெபை (Pepi II ) 94 ஆண்டுகள் ஆண்டார்

 

இரண்டாம் ராமசெஸ் ( Ramsess I I ரமேசன்) 64 ஆண்டுகள் ஆண்டார்

 

நர்மெர் (Narmer நர மேரு) 64 ஆண்டுகள் ஆண்டார்

 

ஆஹா (AHA ஹோர்/HOR ஹரன்) 64 ஆண்டுகள் ஆண்டார்!

 

 

இவ்வாறு பல அரசர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு அல்லது 50 ஆண்டுகளுக்கு மேலாக தாராளமாக வாரி வழங்கியுள்ளனர்! அப்படியும் கிறிஸ்துவுக்கு முந்தைய 3000 ஆண்டுகளுக்கு மன்னர் பெயர்கள் கிடைக்கவில்லை. வம்சாவளிகளின் (1 to 30 Dynasties) ஆட்சிக்கு இடைப்பட்ட ( INTERMEDIATE PERIOD குழப்ப) காலம் என்று நிறைய ஆண்டுகளை ஒதுக்கி ஒரு வாராகத் தட்டிக்கொட்டி, பூசி மெழுகி, கட்டி முடித்து, ஒரு “முழு” வரலாற்றைத் தருகின்றனர்!!!

 

யாரோ ஒருவர் நீண்ட காலம் ஆண்டார் என்றால் எல்லோரும் ஒப்புகொள்வர். ஏராளமான மன்னர்கள் இப்படி ஆட்சி செய்ததாகச் சொன்னால் நம்ப முடியுமா?

 

கரிகால் சோழன் 83 ஆண்டுகள் ஆண்டானா?

 

இதை இப்பொழுது இந்தியாவுடன் ஒப்பிடுவோம். கல்யாண சோழன் 63 ஆண்டு ஆட்சி செய்ததாகவும் கரிகால் சோழன் 83 ஆண்டு ஆட்சி செய்ததாகவும் நாம் அறிகிறோம். ஆனால் இவை எல்லாம் இன்று வரை சரித்திரப் புத்தகத்தில் இடம்பெறவும் இல்லை, மூன்று கரிகால் சோழ மன்னர்கள் பற்றி முறையான ஆராய்ச்சியும் நடை பெறவில்லை. பதிற்றுபத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் காலம் கொடுக்கப்பட்டுள்ளது

 

((என்னுடைய பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க; பழைய கட்டுரையின் தலைப்பு– வெளியிடப்பட்ட தேதி :–

நீண்ட காலம் ஆண்ட மன்னன் கரிகாலன்? கட்டுரையாளர் லண்டன் சுவாமினாதன்; ஆராய்ச்சிக் கட்டுரை எண் – 1592; தேதி-  21 ஜனவரி 2015))

Longest Ruling Indian Kings! Post No: 1593: Dated 21 January 2015

 

Picture of King Ramsess

எகிப்துக்கு ஒரு நீதி! இந்தியாவுக்கு அநீதி!!

 

எகிப்திய மன்னர்களுக்கும் சுமேரிய மன்னர்களுக்கும் அதிக காலம் ஒதுக்கிவிட்டு இந்திய மன்னர்களுக்கு மட்டும் சராசரி ஆட்சிக் காலம் 18 அல்லது 20 ஆண்டுகள்தான் என்று கணக்கிட்டுள்ளனர். அப்படியும்கூட நந்தர்கள், மௌர் யர்களுக்கு முந்தைய மன்னர்களின் பெயர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆகையால் நமது வரலாற்றுப் புத்தகங்களை விரைவில் முழு அளவுக்குத் திருத்தி எழுதவேண்டும்

 

நமது ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களிலும் புராணங்களிலும் அராஜக காலம் பற்றி — ராஜா இல்லாத காலம் KINGLESS PERIODS – பற்றிய ஸ்லோகங்கள் நிறைய உள்ளன. இது பயங்கரமானது, கொடூரமானது என்று வருணித்துள்ளனர். முன்னர் இப்படி குழப்ப காலங்கள் இருந்ததால்தான் இது பற்றி இவ்வளவு எச்சரிக்கை.– ஆனால் இது பற்றி நமது வரலாற்று புத்தகங்களில் ஒரு குறிப்பும் இல்லை. எகிப்தில் மட்டும் சேர்த்துள்ளனர். இதையும் நாம் கருத்திற்கொண்டு புது வரலாறு எழுத வேண்டும்.

 

இன்னும் சில இடங்களில் ஒரே நேரத்தில் 2 சேர மன்னர் வம்சங்கள்,  5 பாண்டியர்கள்,  2 சோழர்கள் என்றும் ஆட்சி செய்துள்ளனர். இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

 

இவையும் குப்த மன்னர்களின் ஆட்சிக் காலமும் நம்முடைய மன்னர்களும் 40 முதல் 60 ஆண்டுகள் ஆ ண் டதை உறுதி செய்கின்றன. மேலும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகர் படையெடுத்தது முதல் 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் போர் வரை,  இந்தியா தொடர்ந்து வெளிநாட்டாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளது. கி.மு. ஆறாம்  நூற்றாண்டுக்கு முன்னர் ஒவ்வொரு மன்னரும் 60 முதல் 80 ஆண்டுகள் வரை ஆட்சி செ ய் துள்ளனர்.

காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் மன்னர்கள் தாங்களாக ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வனத்தில் தவம் (வானப் பிரஸ்தம்) செ ய்யச் சென்றதாகவும், புகழ் பெறுவதற்காக மட்டும் போர் செய்ததாகவும் எழுதி இருக்கிறான். அதவது எதிரி நாட்டு அரசனைக் கொல்லாமல் தோற்கடித்துவ்ட்டு அவன் கையிலேயே அரசை ஒப்பைத்துவிட்டு கப்பம் மட்டும் வசூலித்தனர். இதனால் இந்திய மன்னர்கள் மற்ற நாட்டு மன்னர்களைவிட நீண்ட காலம் வசித்தனர்; ஆண்டனர். இதையெல்லாம் கணக்கிற் கொள்வோமானால் கலியுகம் முதலான அரசர்களை கால வரிசைப்படுத்திவிடலாம்.

 

ஆர்.மார்டன் ஸ்மித் (Dates and Dynasties in earliest India by R Morton Smith)  எழுதிய புத்தகத்தில் புராண அரசர்களின் பட்டியலை ஒருவாறு கால வரிசைப்படுத்தியுள்ளார். அவர் நம் மன்னர்களுக்கு கி.மு 1800 முதல் வரிசையாகக் கொடுக்கிறார். ஆனால் இதையே ஒரு மன்னருக்கு 40 ஆண்டு சராசரி ஆட்சி என்று வைத்தால் கி.மு 3600-க்குப் போய்விடும். அராஜக – அரசன் இல்லாத — காலத்துக்குக் கொஞ்சம் ஒதுக்கினால், நம் வரலாறு கி.மு 4000 க்குப் போய்விடும்.

 

எல்லாப் பல்கலை,க் கழகங்களும் இந்த கால ஆராய்ச்சிக்கு– வரலாற்று ஆராய்ச்சிக்குத் தனித் துறைகளை ஏற்படுத்த வேண்டும். கல் ஹணர் என்பவர் எழுதிய ராஜத்தரங்கிணி என்ற நூல்தான் இந்தியாவின் முதல் வரலாற்று நூல் என்று வெள்ளைக்காரகள் கதைத்தனர். அவர் கலியுகம் துவக்கம் கி.மு.2600 என்று காட்டி புதிர் போடுகிறார். இவையெல்லா வற்றையும் தீர ஆராய்தல் வேண்டும்.

King Pepi

 

ராமாயணத்திலும் மஹாபரதத்திலும் பரசுராமர் பங்கு பணி பற்றி வருகிறதே! இது எப்படி முடியும்? பல அகத்தியர்கள், பல வசிட்டர்கள் இருந்தது போல பல பரசுராமர்கள் இருந்தனரா என்றும் ஆராய்தல் வேண்டும்.

எகிப்து நாட்டில் ராமசெஸ் (ராம சேஷன் அல்லது ரமேசன்) என்ற பெயரில் மட்டும் குறைந்தது பதினோரு பெயர்கள்.

ராம்செஸ் என்ற பெயரில் 11 மன்னர்கள் இருந்தது போல இந்தியாவில் ஏராளமான விக்ரமாதித்தன்கள் இருந்தனர். அவர்களைப் பிரித்து ஆராய்ந்தால் காளிதாசன் போன்றோரின் காலக் குழப்பம் அகலும்.

 

வரலாற்றில் ஏராளமான புதிர்கள்

 

இந்திய உள்ளன. உலகில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கும் ஒரே இனம் இந்திய இனம் மட்டும்தான். உலகில் மற்ற எல்லா நாடுகளும் அதனதன் வரலாற்றை அழகாக மாற்றி எழுதிப் பெருமை பேசுகின்றனர். ஆனால் வெள்ளைக்காரர் எழுதிய சரித்திரத்தை இன்று வரை படிக்கும் முட்டாள்கள் இந்தியர்கள் மட்டுமே.

 

மாயன் நாகரீகம் 5000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்று எழுதி எல்லா மன்னர் பெயர்களையும் வரிசைக் கிரமமாகப் போட்டு புத்தகம் வந்து விட்டது. இதுபோல எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சீன நாகரீகங்களில் கூட கி.மு.2000த்தில் ஆண்டவர் யார், கி.மு. 3000ல் ஆண்டவர் யார் என்றெல்லாம் புத்தகம் எழுதி உலகமே படித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய சரித்திரம் மட்டும் புத்தர் கால (சுமார் கி.மு.600) மன்னர் முதல்தான் துவங்குகிறது. அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி, அதற்கு முன்னர் சரஸ்வதி சமவெளி நாகரீகத்தில் ஆண்டவர்கள் யார்? 2000 ஆண்டுகளுக்கு இந்தியாவில் மன்னரே இல்லையா?

இருந்தார்கள்!! வெள்ளைக்காரர்கள் எழுதாததால் நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை!!!!

உண்மையில் உலகில் முதல் முதலில் சரித்திரத்தை எழுதியவர்களே இந்துக்கள்தான். புராணங்களில் 5 பகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதில் ஒரு பகுதி மன்னர் வம்சாவளி. இதில் தெளிவாக மன்னர் வரிசை கொடுக்கப்பட்டுள்ளது. 2300 ஆண்ட்களுக்கு முன் வந்த மெகஸ்தனீஸ் கூட தனக்கு முன் வாழ்ந்த 140-க்கும் மேலான மன்னர்களின் பெயர்களைக் கொண்ட பழமையான நாடு என்று எழுதிவைத்திருக்கிறான். நமது பஞ்சாங்கத்திலும், பல கல்வெட்டுகளிலும் கலியுக ஆண்டு குறிக்கப்பட்டுள்   ளது. இதன்படி கி.மு 3102ல் கலியுகம் துவங்கியது. ஆக அத்தனை அரசர் பெயர்களும் வரிசையாக புராணத்தில் உள்ளன. விரைவில் வரலாற்றைப் புதுப்பிப்போம்!

 

–Subham–

 

 

எது கவிதை? (Post No.3742)

Written by S NAGARAJAN

 

Date: 21 March 2017

 

Time uploaded in London:-  5-36 am

 

 

Post No.3742

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

மார்ச் 21 உலக கவிதை தினம் – சிறப்புக் கட்டுரை

எது கவிதை?

 

ச.நாகராஜன்

 

எது கவிதை? இதற்கான இலக்கணத்தை நூற்றுக் கணக்கான அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிக்ள் சொல்லி விட்டனர்.

இவ்ர்கள் சொன்ன இலக்கணத்தின் படி இது தான் கவிதை என்பதோடு இதற்கு அப்பாலும் கவிதை இருக்கிறது என்பது தான் உண்மை!

 

 

எதார்த்ததைச் சொல்வது கவிதை என்பது ஒரு கட்சி; கற்பனையை அழகுறச் சொல்வது கவிதை என்பது இன்னொரு கட்சி.
எதார்த்தம் தான் கவிதை என்றால்.

 

பாக்காவது கமுகம் பழம் பருப்பாவது துவரை

மேற்காவது கிழக்கே நின்று பார்த்தால் அது தெரியும்

நாற்காதமும் முக்காதமும் நடந்தால் அது எழு காதம்

ராக்கா உண்மை சொன்னேன் இனி ரட்சிப்பயோ அல்லது பட்சிப்பயோ”

என்ற இதுவும் கவிதை தானே என்கிறார் பேராசிரியர் முத்துசிவன் தனது அசோகவனம் என்ற புத்தகத்தில் கவிதை என்ற கட்டுரையில்.

 

வெறும் ய்தார்த்தம் மட்டும் கவிதை ஆகாது.

இது போல்வே வெறும் கற்பனை மட்டும் கவிதை ஆகாது.

நிலவு போன்ற முகம், வீனஸ் போன்ற தேவதை என்று சொல்லிக் கொண்டே போவது மட்டும் கவிதை அல்ல.

பின்னர் கவிதை என்பது தான் என்ன?

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுகிறார்:-

 

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை

 

 

கவிதைக்கான அழகான இலக்கணம் தான் இது!

ஆனால் கம்பனோ கவிதையில் ஒளி வேண்டும் என்கிறான்.

கோதாவரி ஆற்றின் பிரவாகத்தைப் பார்த்த அவனுக்கு அதை கவிதையுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.

 

 

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி

அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளவில்

சவியுறத் தெளிந்து த்ண்ணென் ஒழுக்கமும் தாங்கிச் சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்.

 

 

இதை விட அற்புதமாக எது கவிதை என்பதை விவரிக்க முடியுமா?

 

புவியினுக்கு அணியாய் அமைவது சான்றோரின் கவி.

அது ஆன்ற பொருளைத் தரும்.

தேவ்ர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும்

 

அவியகத் துறைகள் தாங்கி இருக்கும்,

அதில் ஒளி இருக்கும் (சவி – ஒளி)

 

தண்ணென குளிர்ந்த ஒழுக்கம் நிரம்பி இருக்கும்.

அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும் (கோதாவரியைப் போல)

இது கம்பனின் வாக்கு.

இது தான் கவிதையா?

இதை மிஞ்சி ஒரு படி செல்கிறான் காலத்தை வென்ற கவி மஹாகவி பாரதி!

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்

இது தான் பாரதியின் தொழில்.

 

கம்பன் இசைத்த கவியெலாம் நான் என்பது தான் கவிதைத் தொழில் மன்ன்னின் சுய சரிதைச் சுருக்கம்!

 

 

பாட்டினில் அன்பு செய்

நூலினைப் பகுத்துணர்

இது பாரதியின் புதிய ஆத்திசூடி கட்டளைகள்

 

காலத்திற்குத் தக்கபடி பாழும் கலியில் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் அனைவரையும் மேலேற்றி, குருடரை எல்லாம் குருடு நீக்கி விழி கொடுத்துப் பதவி பெற வைப்பது கவிதை என்கிறான் அவன்.

கவிதையே தொழிலாகக் கொண்ட கவிஞன் க்விதா சக்தி பற்றிய விளக்கம் இது தான்:-

 

உள்ளத்தில் ஒளி உண்டாயின்

   வாக்கினிலே ஒளியுண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப் போற் கலைப்பெருக்கும்

   க்விப்பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்

    விழிபெற்றுப் பதவி கொள்வார்

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

 இங்கமரர் சிறப்புக் கண்டார்

 

 

என்ற் கவிதா வரிகளில் கம்பனின் ச்வி என்னும் ஒளியை பாரதி முன் நிறுத்துகிறான். வாக்கினிலே ஒளி வந்து வெள்ளம் போல கலையும் கவிதையும் பெருகுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் விழி பெற்று உன்னதமான நிலையை எய்துவர். அமிழ்தம் நிகர் தமிழின் சுவை கண்டார் தேவர் ஆகிடுவர்.

என்ன அழகிய வார்த்தைகள்! கவிதையின் மகத்தான் சக்தியை ப்ளீரென்று சொல்கிறார் பாரதியார்.

 

 

இது தான் கவிதை! இதைத் தாண்டியும் இருப்பது கவிதை!

எது ஆன்மாவை உயரத்தில் ஏற்றுகிறதோ அது கவிதை!

எது ஆன்மாவைப் போல அழியாமல் இருக்கிறதோ அது கவிதை!

எது இறைவனின் விளக்க முடியா விந்தையை விளக்க முயன்று ஒளிர்கிறதோ அது கவிதை.

இது தான் கவிதையா! இது  க்விதை; இதற்கு அப்பாலும் உள்ள விளக்கத்தைக் கொண்டிருப்பதும் கவிதை!

 

விண்டுரைக்க முடியா விந்தையே கவிதை!!

****

 

Rationing Anecdotes (Post No.3741)

Compiled by London swaminathan

 

Date: 20 March 2017

 

Time uploaded in London:- 19-59

 

Post No. 3741

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

Tackling Tyre ration!

 

A motorist driving through the back country of Vermont stopped at a little gas station and asked for a tankful. He remarked casually to the proprietor

I guess you fellows are all pretty sore at Leon Henderson.

Leon Henderson,? said the old timer

Who is he?

The motorist, looking at him for a moment and then thinking quickly said

Do you sell tyres?

“Sure”, the proprietor said.

“You want some?”

The motorist said, I will take four, paid his money and drove hastily away thanking Providence.

 

Xxxx

Prophet Flying with Tyre!

 

A small boy, keenly aware of the transportation problems created by rationing, was looking at a book of Bible illustrations. One of these depicted the Prophet Elijah, Ascending to Heaven in a chariot of fire. He noted the halo above the prophet’s head and cried ,

 

“Oh ,Mother, Look he is carrying an extra tyre.

 

Xxx

 

Sugar Ration

 

“Does anyone here” , asked the teacher of the Night School for Adult Education, administering a vocabulary test, “know the meaning of ratiocination?”

 

“I know, said the young stenographer in the class.

It is what they are doing to sugar”.

 

((Definition of ratiocination. 1 : the process of exact thinking : reasoning. 2 : a reasoned train of thought)).

 

Xxxx

 

 

 

எகிப்தில் பேய் விரட்டல்: எகிப்திய அதிசயங்கள் -22 (Post No.3740)

Picture:– டென்டெராவிலுள்ள ஹதோர் (சவிதுர்) கோவிலின் வாசல்

 

Written by London swaminathan

 

Date: 20 March 2017

 

Time uploaded in London:- 8-41 am

 

Post No. 3740

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பிடிக்காத அரசியல் தலைவர்களின் கொடும்பாவிகளை கொளுத்துவதைப் பார்க்கிறோம். கந்த சஷ்டிக் கவசம் போன்றவற்றில் பில்லி சூனியம், பூமியில் புதைத்து வைக்கும் பாவைகள் (பொம்மைகள் பற்றிப் படிக்கிறோம். இந்த நம்பிக்கைகளுக்கெல்லாம் முன் உதாரணங்கள் அல்லது ஆதாரம் எகிப்தில் உள்ளது. பிடிக்காதவர்களின் ஆவியை ‘ஒழிக்க’ அவர்கள் என்ன என்ன செய்தனர் என்பது எழுத்து வடிவில் உள்ளது.

 

கந்த சஷ்டிக் கவசத்தில் வரும் வரிகளை முதலில் படியுங்கள்:

பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

…………………………………………………..

 

பேய்கள், பில்லி, சூன்யம், ஒருவர் வீட்டிற்கு அடியில் தீமை தரும் விஷயங்களைப் புதைத்து வைத்தல் முதலியவற்றில் இந்துக்களுக்கு இருந்த நம்பிக்கையை இந்த வரிகள் நிரூபிக்கின்றன., அவைகளை அகற்ற கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்கள் உதவும் என்பதில் ஐயமில்லை.

 

எகிப்திலும் இது போன்ற பல நம்பிக்கைகள் இருந்தன.

இறந்த கெட்ட மனிதர்களின் ஆவிகள் கோபமடைவதால், வாழும் உறவினர்களுக்குப் பலவித நோய்கள் வருவதாக பழங்கால எகிப்தியர் நம்பினர். நல்ல ஆவிகளும்கூடக் கோபம் அடைந்தால், தீங்கு விளைவிக்கும் என்று இறந்தோருக்கு எழுதிய கடிதங்களிலிருந்து (Letters to the Dead) தெரிகிறது.

இத்தகைய கெட்ட ஆவிகளை அடக்கிவைக்க பலவகையான சடங்குகளும், மந்திரங்களும் கையாளப்பட்டன.

நாம் கொடும்பாவி செய்து அவைகளை எரித்து நம் கோபத்தைக் காட்டுவதுபோல, கெட்ட ஆவிகளின் உருவங்களைச் செய்து அவர்களைத் தாக்கினர். அல்லது கல்லறைகளை உடைத்தனர். அவர்களுடைய பெயர்களை அழித்தனர்.

Picture: -இந்தப் பொம்மையில் பல ஆசிய நாட்டு எதிரிகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன

எகிப்தில் பெரிய கலாசாரப் புரட்சி அல்லது சமயப் புரட்சி செய்தவன் அக்நதன் (ஏகநாதன்) என்ற மன்னன் ஆவான். இவன் எகிப்தில் இருந்த நூற்றுக் கணக்கான கடவுளரை “ஒழித்து” ஏக நாதன் = கடவுள் ஒன்றே என்று ஒரே கடவுள் கொள்கையைப் பரப்பினான். இவனது காலம் கி.மு.1352-1336.

இவன் ஆதன் (SUN) ஒருவரே கடவுள் என்றான். ஏக நாதன் என்ற சம்ஸ்கிருதப் பெயர்தான் இப்படி மருவியதோ என்று எண்ணி நான் வியப்பேன்.

இதை ஏக நாதன் என்றோ ஏகன் ஆதவன் (சூரியன்) என்றோ படிக்கலாம். ஏனெனில் அவன்  சூரியக் கடவுள் ஒருவனே கடவுள் என்றான்.

ஏகநாதனின் கல்லறைகள் பிற்காலத்தில் அழிப்பட்டன; அவனுடைய கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டன.

கெட்ட ஆவிகள் மீது சாபம் போடும் ஆயிரம் சாபங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் எழுதிய  ஆயிரம் பானைகள் அல்லது பாவைகள் (உருவங்கள் ) கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அதை உடைப்பர் அல்லது பானைகளில் பெயர் எழுதி உடைப்பர்.

பைபிளில் ஜெர்மியா 19/ 1-11 பகுதியில் இந்த பானை உடைக்கு,,, சடங்கு விவரிக்கப்பட்டுளது.

எகிப்தில் டென்டெரா (Dendera) என்னுமிடத்தில் ஹதோருக்கு எழுப்பிய கோவிலுக்கு முன் கிறிஸ்தவர் காலத்தில் ஒரு வளைவு எழுப்பப்பட்டுள்ளது. அதில் எகிப்திய மன்னர்களின் உருவங்களும் கடவுளரின் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கும் முறை அவர்களை அழிக்க கொடுக்கப்பட்ட சாபம் என்றுதெரிகிறது. அதாவது பழைய கடவுளரை ஒழிக்க கிறிஸ்தவர் செய்த வேலை இது.

 

இந்த பேய் ஓட்டும் வழக்கம் பழைய சாம்ராஜ்ய காலத்திலிருந்து கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு இருந்துள்ளது. பலவகையான வழிகளில் கெட்ட ஆவிகளை ஒழித்தாலும் பெரும்பாலான இடங்களில் சிவப்பு பானையின் மீதோ ஒரு உருவத்தின் மீதோ அவைகளின் பெயரை எழுதி அதை உடைப்பதே வழக்கமாக இருந்திருக்கிறது; அல்லது எரிப்பர் அல்லது பூமிக்கடியில் புதைப்பர்.

 

இது பெரும்பாலும் ஒரு அரசாங்க சடங்காகவே (State Ritual) இருந்தது. அதாவது அருகாமை நாடுகளின் எதிரி மன்னர்களின் பெயர்களை எழுதி உடைத்தனர். அதோடு கெட்ட (இறந்த) ஆவிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. மிகவும் அபூர்வமாக, உள்ளூரிலுள்ள பிடிக்காத ஆட்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்தகையோர் உள்ளூர் குற்றவாளிகள் அல்லது அரசுக்கு எதிராகச் சதிசெய்தவர்களாக இருப்பர்.

Picture: –ஆய் என்ற எகிப்திய மன்னரின் கல்லறயில், அவருடைய முகம், உடல் முதலியவற்றை அழித்து விட்டனர் (தமிழில் கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஆய். இந்தப் பெயர் உள்பட பல தமிழ் , சம்ஸ்கிருதப் பெயர்கள் எகிப்த்தில் இருப்பது பற்றி முன்னரே எழுதியுள்ளேன்)

சில இடங்களில் இறந்துபோன ஒருவரின் பெயரை எழுதி அவரது குடும்பத்தையும் சேர்த்து சபிக்கும் எழுத்துகளுடன் பாவைகள் காணப்படுகின்றன. இவைகள் பெரும்பாலும் பழைய கல்லறைகளில் புதைக்கப்பட்டன. கெட்ட ஆவிகளை அடக்க, ஏற்கனவே இருந்த நல்ல ஆவிகளின் உதவியும் கோரப்பட்டன.

 

மொத்தத்தில் எகிப்தியர்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு இந்த ஆவி பிஸினஸில் நேரத்தைச் செலுத்தியது தெரிகிறது. பழைய சாம்ராஜ்ய காலத் திலிருந்து, எகிப்தை கிரேக்கர்கள், ரோமானியர் ஆண்டவரை இந்த நம்பிக்கை நீடித்திருக்கிறது!

 

நம் நாட்டில் அதர்வண வேதத்தில் காணப்படும் மந்திரங்களை இன்றும் கேரளத்தில் பயன்படுத்துவதைக் காணும்போது இதில் வியப்பில்லை. அதர்வண வேத மந்திரங்கள் எகிப்திய நாகரீகத்துக்கும் முந்தையதாக இருக்கலாம்.

 

–Subham–

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! முடிவுரை Part – 39 (Post No.3739)

Written by S NAGARAJAN

 

Date: 20 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3739

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 39

ச.நாகராஜன்

 

முடிவுரை

 

நூறு வயது வாழ்ந்த பெரியோரின் வரிசையில் காஞ்சி பரமாசார்யர் மஹா பெரியவாள், பண்டிட் சாத்வலேகர், யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசார்யா, அரவிந்த மஹரிஷியின் சீடரான நிரோத்பரன் ஆகியோரைப் பற்றி எழுதி முடித்தவுடன் அடுத்து 120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி மாஸ்டர் ஸு யுன் பற்றி எழுத முனைந்தேன்.

 

Empty Cloud  என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அது அவரது அற்புதமான சுய சரிதம். அது 320 பக்கங்கள் கொண்ட பெரிய நூல்..

 

ஏராளமான அருமையான புத்த மத நூல்களை எனக்கு இலவசமாக தபால் செலவையும் தாமே ஏற்று அனுப்பி வரும் பெரிய புத்த மத தர்ம நிறுவனம்

 

The Corporate Body of the Buddha Educational Foundation

Taipei, Taiwan.

 

Xu Yun (Picture from Wikipedia,thanks.)

இந்த நிறுவனம் வெளியிடும் புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது, இந்த நிறுவனம் தான் எனக்கு ‘எம்ப்டி க்ளௌட்’ புத்தக்கத்தையும் அனுப்பி உதவியது.

 

 

இவர்களுக்கு வெறும் வார்த்தையால் நன்றி என்று சொல்வது மட்டும் போதுமா? என் உளமார்ந்த அன்பும் வணக்கமும் கலந்த ந்ன்றியினை இங்கு பதிவு செய்கிறேன்.

 

இந்தப் பெரியாரின் சரிதத்தை ஒரு கட்டுரையில் தருவது தான் முதலில் எனது எண்ணமாக இருந்தது. .ஆனால் எழுத எழ்த இது இந்த 39வது அத்தியாயம் வரை நீண்டு விட்டது.

இது புத்தரின் கருணையே.

 

இந்தத் தமிழாக்கம் பெரிய புத்தகத்தின் சொல்லுக்குச் சொல், வரிக்கு வரியான தமிழாக்கம் அல்ல இது. திரண்ட சுருக்கம் என்றே சொல்லலாம். பல நீண்ட சொற்பொழிவுகளை இங்கு சேர்க்கவில்லை.

நெருடலான மொழிபெயர்ப்பு பற்றி ஒரு வார்த்தை.

சீன நகர்களின் பெயர்கள், சீன பெரியோரின் பெயர்கள். புத்த மத கலாசாரம் சம்பந்தமான் கலைச் சொற்களை ஆகியவற்றை அப்படியே எழுதியதால், படிப்பதில் சிரமம் இருக்கலாம். சம்பிரதாயமான புத்த தம்ம கலைச் சொற்கள் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டவை. அதன் விளக்கம் புத்த தர்மத்தைப் பற்றி ஆழ்ந்து படித்த்வர்களாலேயே நன்கு உணர முடியும்.

என்றாலும் இந்த வார்த்தைகள் தமிழ் அன்பர்களிடையே ஒரு ஆர்வத்தைத் தூண்டி விட்டு அவற்றைப் பற்றி மேலும் அறிய அவர்களை ஊக்குவிக்கும் என்றே நம்புகிறேன்,

 

புத்தமதம், ஜென், கோயன்கள் பற்றி பல கட்டுரைகளை எழுத தைவான் புத்தகங்களும் எனது சேகரிப்பில் உள்ள இதர புத்த மத நூல்களுமே காரணம்.

 

யோக வாசிஷ்டம் உள்ளிட்ட ஆழ்ந்த அத்வைதக் க்ருத்துக்கள் அடங்கிய நூல்களில் அதிகம் ஈடுபாடுள்ள எனக்கு சூன்ய வாத  கொள்கையை உடைய புத்தமத நூல்களின் மீதும் புத்த தர்ம ஆசார்யர்களின் மீதும் எப்படி ஈடுபாடு வந்தது எப்படி என்ற கேள்விக்கு எனது எளிமையான பதில் ஒன்று உண்டு.

 

எதையும் ஆராய்ந்து பார்த்து ஒத்துக் கொள் என்கிறது புத்த மதம்.

இதனாலேயே அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு (அம்பேத்கர் என்ற ‘அ’வில் ஆரம்பித்து ‘ஜ’ வழியே சென்றால் ஆயிரக்கணக்கான பெயர்களைப் பட்டியலிடலாம்) உள்ளிட்ட சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள், நாத்திகர்களாகவும் ஆக முடியாமல் ஆத்திகர்களாகவும் ஆக முடியாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் அக்னாஸ்டிக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் அறிவால் எதையும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் புத்தரின் உபதேசங்களால் கவரப்படுகின்றனர்,

 

அருணகிரிநாதர் திருப்புகழில்,

 

“அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே

என முருகனைப் பற்றிப் பாடுகிறார்.

 

அறிவால் அறிதலையும் புத்தரின் மீதான பக்தியையும் புத்த தர்மம் வலியுறுத்துகிறது..

 

இப்படி அறிவு வழியே பக்தியுடன் சரியாகச் சிந்திப்பவர்கள் இறுதியில் சரியான, இறுதியான பேரறிவை அடைந்தே தீருவர் என்பது நமது அறநூல்களின் முடிபு

 

ஆகவே புத்தமத நூல்களும் அதைப் பின்பற்றும் பெரியோர்களின் சரிதமும் கூட ஒரே உண்மையை அடையும் வழிகளுள் ஒன்றே!

 

தவறாமல் புத்த மத நூல்களை நான் படிக்க இன்னும் ஒரு காரணமும் உண்டு.

இந்து மதத்தின் முக்கிய கொள்கையான கர்மா மற்றும் மறு பிறப்பு உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தும் மதம் புத்த மதம். சீலமே அடிப்படை என்கிறது புத்த மதம். இதுவே இந்து மத தத்துவமும் கூட.

 

ஆகவே இதைப் படிப்பதிலும் புத்தரின் அறவுரைகளைப் பின்பற்றுவதிலும் யாருக்கும் எந்த வித சிக்கலும் உருவாகாது.

சீலத்திற்கு பிரபஞ்சமே அடி பணியும்.

 

 

பிறந்த நாட்டிலேயே அழிந்து ஒழிந்த கம்யூனிஸ்டு கொள்கை சீனாவில் அடியெடுத்து வைத்தவுடன் கம்யூனிஸ்டு குண்டர்களால் சீனா சீரழிந்ததையும் மாஸ்ட்ர் ஸு யுன்னின் வரலாறில் காணலாம்.

 

புத்தரின் கருணையால் கம்யூனிஸம் அழிந்து பட்டு அஹிம்சை வழியே சீனா அறப்பண்புகளைப் பெற்று  பாரதத்துடன் பழைய நாட்களில் கொண்டிருந்த பெரும் நட்புடன் மீண்டும் இணக்கமாக செய்லப்டும் அற்புதமான் நாட்கள் வந்தே தீரும்.

 

அதை அருளுமாறு புத்தரை இறைஞ்சுகிறேன்.

 

 

இந்த நெடுந்தொடரை http://www.tamilandvedas.comஇல் வெளியிட்ட திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இதைப் படித்த அனைத்து வாசகர்களுக்கும் புத்தரின் அருள் உரித்தாகுக;

 

புத்தம் சரணம் கச்சாமி!

ச.நாகராஜன்

பெங்களூரு

12-3-2017

துர்முகி வருடம் மாசி மாதம் 28ஆம் நாள்  –  பௌர்ணமி தினம்

முற்றும்

Censorship anecdotes (Post No.3738)

Compiled by London swaminathan

 

Date: 19 March 2017

 

Time uploaded in London:- 19-02

 

Post No. 3738

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

We never open letters!

 

According to John Gunther, an American journalist in Japan wrote to a friend and added the note, “Don’t know if this will ever arrive because the Japanese censor may open it.”

A few days afterward, he received a note from the Japanese post office saying,

“The statement in your letter is not correct. We do not open letters”.

 

Xxxx

 

Censored Love Letter

 

A young lady received a letter from her soldier sweetheart from

‘Somewhere in the Pacific area’.

Upon opening the envelope, she found, instead of a letter, a thin strip of paper bearing the brief message:

“Your boyfriend still loves you, but he talks too much.”

Signed, Censor

 

Xxxx

Banned Books

 

The book of Helviteus De l’ Espirit and Voltaire’s poem of La Pucelle d’Orleans were prohibited in Switzerland at the same time. A magistrate of Berne, after a strict search for these two works, wrote the Senate:

“We have not found in the whole province either wit or maid”.

 

Xxx

Cervantes’ Whisper

 

The French ambassador to Spain complemented Cervantes on the great reputation he had acquired by his Don Quixote .

Cervantes whispered in his ear, “Had it not been for the Inquisition, I should have made my book much more entertaining”.

 

Xxx

 

Sales Tricks!

 

A grim lesson for the exponents of bigoted censorship is contained in the characteristic American press agent story of how the famous picture ‘September Morn’ was popularised.

 

An art dealer, stuck with a formidable surplus of this lithograph of a nude girl, consulted a well-known press agent Harry Reichenbach .

 

Reichenbach had many of the pictures placed in the shop window. He then hired a crowd of small children and grouped them around the front of the store. Next, he phoned to Anthony Comestock and hysterically demanded that he come and witness the sordid exhibition of vice and corruption. Comestock came and immediately opened one of his inimitable litigations. In consequence of the publicity resulting from this, 7,000,000 copies of this picture were sold.

 

–Subham–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 38 (Post No.3737)

Written by S NAGARAJAN

 

Date: 19 March 2017

 

Time uploaded in London:-  6-23 am

 

 

Post No.3737

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 38

ச.நாகராஜன்

 

120ஆம் வயது – (13-10-1959)

மாஸ்டர் ஸு யுன்னின் மஹா நிர்வாணம்!

ஸு யுன்னுக்கு இப்போது வயது 120.  வசந்த காலம் வந்தது.மாஸ்டர் ஸு யுன்னின் 120வது பிறந்த நாளும் வந்தது. சீனாவிலுள்ள அனைத்து ஆலயங்கள் மற்றும் மடாலயங்களில் உள்ள மாஸ்டரின் சீடர்களுக்கும் மக்களுக்கும் ஒரே மகிழ்ச்சி.

பழைய காலத்தில் வாழ்ந்த மாஸ்டர் ஜாவோ ஜோவு இதே போல 120 ஆண்டுகள் (778-897) வாழ்ந்தவர்

சீடர்கள் மிக பிரமாதமாக பிரம்மாண்டமான் அளவில் பிறந்த தின கொண்டாட்டம் கொண்டாட விரும்பினர் இதை அறிந்த ஸு யுன் அனைவருக்கும் இப்படி பதில் எழுதினார்:

‘நான் எவ்வளவு நாள் வாழப்போகிறேன் என்று எனக்கே தெரியாது. இருந்த போதிலும் உபாசகர் வூ ஜிங் ஸாய் எனது பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக்களை அனுப்பி உள்ளார். அவருக்கு நான் நன்றி தெரிவித்து இது போல செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன்.

எனது பூர்வ கர்மாக்கள் எனக்கு இந்தப் பிறவி முழுவதும் ஏராளமான துன்பங்களைத் தந்துள்ளன. காற்றில் அலைக்கழிக்கப்படும் மெழுகுவர்த்தி போல நான் இருக்கிறேன். இதை நினைக்கும் போது ஒரு சாதனையும் செய்யாத என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன்.

நூறு ஆண்டுக்கால உலகத் துயரங்கள் ஒரு கனவு போல; ஒரு மாயை போலத் தான்!; அதன் மீது பற்றுக் கொள்ள உகந்தது அல்ல. மேலும் பிறப்பானது இறப்பிற்கு வழி வகுக்கிறது. ஆகவே ஒருவன் டாவோ மீது தன் மனதைச் செலுத்த வேண்டும்.

என்னால் எப்படி இந்த (பிறந்த நாள் என்னும்) உலகியல் சடங்கில் ஈடுபட முடியும்? உங்களின் அன்பிற்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து எழும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் கூட நான் எனது தாயின் அகால மரணம் பற்றி வருந்திக் கொண்டிருக்கிறேன்.

 

தயவு செய்து எனது பாவத்தை அதிகரிக்கச் செய்யும் பயனற்ற பிறந்த நாள் கொண்டாடும் திட்டத்தைக் கை விடுங்கள்.”

மூன்றாம் மாதம் ‘பூல் ஆஃப் தி பிரைட் மூன்’ மற்றும் ஸ்தூப வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அவர் தானே நேரில் நின்று அவற்றை முடிவு பெறச் செய்ய முனைந்தார். சில மாதங்களில் அவை முடிவுற்றன

1956ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாஸ்டரின் சீடரான பிக்ஷுணி திருமதி ஜான் வாங்கும் அவரது கணவரும் கனடாவில் பெரிய வர்த்தகருமான ஜான் லி வூவும் பிரதான ஹாலைக் கட்டுவதற்காக நிதி அளிக்க விரும்பினர். ஆனால் அது முடிந்து விட்டதால் ஒரு ஸ்தூபம் அமைக்கவும் லியூ யுன் –அதாவது மாஸ்டரைக் குறிக்கும் பெயர் அது – என்று அழைக்கப்படும் சான் தியான மண்டபம் ஒன்றையும் அமைக்க விரும்பினர். இதன் மூலம் மாஸ்டர் உலகில் இன்னும் இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

மாஸ்டரோ நான் ஹுவா மற்றும் யுன் மென்னில் ஸ்தூபங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஜென் ருவுக்கும் அது போல ஒரு ஸ்தூபம் அமைக்க வேண்டும். மாஸ்டர்கள் மற்றும் ம்டாலயத் தலைவர்கள் எங்கெல்லாம் புதைக்கப்பட்டார்களோ அவர்களின் எச்சங்களை இங்கு கொண்டு வந்து ஸ்தூபத்தை முழுமையாக்கி சீடர்கள் அனைவரும் அங்கு வந்து தங்கள் அஞ்சலியைச் செலுத்தும் வண்ணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஜான் லி ஏற்கனவே 10000 ஹாங்காங் டாலர் அளித்திருந்தார். இப்போது இன்னும் 50000 ஹாங்காங் டாலர் (மொத்தம் 10000 கனடிய டாலர்கள்) அளிக்க முன் வந்தார்.

மாஸ்டர் அதை மனமுவந்து ஏற்றார்.1956 இல் ஸ்தூப வேலைகள் ஆரம்பித்தன.1959ஆம் ஆண்டு ஏழாம் மாதம் அது நிறைவுற்றது.

இதுவே மாஸ்டர் ஸு யுன்னின் இறுதியான் பணியாக அமைந்தது.

 

அதே மாதம் கனடாவைச் சேர்ந்த உபாசகர் வாங் ஷெங் ஜியும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஜெங் குவான் பியும் க்ஷிதிகர்ப போதிசத்வர் சிலையை அவரது 120வது பிற்ந்த நாளை ஒட்டி அமைக்க வேண்டும் என்று விரும்பினர்.

இதை ஏற்றுக்கொண்ட மாஸ்டர் உடனடியாக இரண்டு சிலைகளை இரண்டே மாதங்களில் செய்து பெல் டவரில் ஒன்றையும் ஸ்தூபத்தில் இன்னொன்றையும் பிரதிஷ்டை செய்தார்.

இந்த இரண்டு சிலைகளே அவர் கடைசியாக பிரதிஷ்டை செய்தவை ஆகும்.

மூன்றாம் மாதத்திலிருந்து நாளுக்கு நாள் அவர் உடல் நிலை நலிவடைந்து வந்தது. ஏழாம் மாதம் அவருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டது. எதையும் சாப்பிட முடியாத நிலையில் சிறிது கஞ்சி மட்டுமே அவர் உட்கொண்டார்.

பீஜிங் அரசு மாஸ்டரின் நிலையை அறிந்து ஒரு டாக்டரை அவரிடம் அனுப்புமாறு உத்தரவிட்டது. ஆனால் மாஸ்டர் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

புவியுடனான எனது தொடர்பு ஒரு  முடிவுக்கு வந்து விட்டது என்றார் அவர்.

அவர் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து அனைத்து சீடர்களும அவரது பசுந்தொழுவத்தில் ஒரு நாள் குழுமினர்

அப்போது அவர், ‘நம்மிடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாலேயே நாம் அனைவரும் இங்கு ஒன்றாக இணைந்துள்ளோம். இந்த ம்டாலயங்களை எனக்குப் பின்னர் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். நான் இறந்த பிறகு என்னை மஞ்சள் ஆடை அணிவித்து சவப்பெட்டியில் வைத்து ஒரு நாள் கழித்து மலையின் அடிவாரத்தில் பசுந்தொழுவத்தின் மேற்குப் ப்குதியில் எரியூட்டுங்கள். பிறகு எனது சாம்பலுடன் சர்க்கரை, மாவு, எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து ஒன்பது உருண்டைகளைச் செய்து உயிரினங்கள அனைத்திற்குமாக அவற்றை ஓடும் நதியில் எறிந்து விடுங்கள்.இந்த உதவியை எனக்குச் செய்தீர்களானால் நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடைய்வனாக இருப்பேன்” என்றார்.

அவர்கள் அனைவரும் மாஸ்டருக்கு அன்பு மொழிகளைக் கூறினர். தர்மம் பற்றிய மூன்று கதா கீதங்களை இசைத்தனர்.

எட்டாம் மாதம அவரது பிறந்த நாளை ஒட்டி அனைவரும் வந்து அவரை தரிசித்து பாராட்டுகளை நல்கினர்.

அக்டோபர் மாதம் நிலைமை மோசமடைந்தது.

அக்டோபர்மாதம் ஏழாம் தேதி மார்ஷல் லி ஜெ ஷென் மறைந்ததாக ஒரு தந்தி வந்தது. அதைக் கேட்ட மாஸ்டர், “லி, எனக்கு முன்னதாக ஏன் சென்றீர்கள்? நானும் போக வேண்டும்” என்றார்.

இதைக் கேட்ட சீடர்கள் அனைவரும் வருந்தினர்.

 

அக்டோபர் 12ஆம் நாள் மாஸ்ட்ர் புத்தரின் சிலையை இன்னொரு அறைக்குக் கொண்டு செல்லப் பணித்தார். இந்த  அசாதாரணமான் உத்தரவைக் கேட்ட மடாலயத் தலைவர் உள்ளிட்டோர் அவரிடம் வந்து இன்னும் சில காலம் அவர் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

“ஏன் இந்த உலகியல் நோக்கைக் கொண்டுள்ளீர்கள்? எனக்காக பிரதான ஹாலில் புத்தரின் நாமத்தை உச்சரியுங்கள்” என்றார் மாஸ்டர்.

அவரது இறுதி உத்தரவையும் ஆசையையும் கூறுமாறு அனைவரும் வேண்ட மாஸ்டர் கூறினார்:

“ சில தினங்களுக்கு முன்னர் நான் இறந்த பின்னர் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறினேன். ஆகவே திருப்பி அதைச் சொல்ல வேண்டியதில்லை. க்டைசி வார்த்தைகள் வேண்டும் என்றால் சொல்கிறேன்,கேளுங்கள்.

சீலத்தைக் கடைப்பிடியுங்கள்; ஆசை, கோபம் முட்டாள்தனம் ஆகியவற்றை ஒழிக்க தியானம், பிரக்ஞா செய்யுங்கள்”

ஒரு கணம் கழித்து அவர், “உலகம் முழுமைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பயமற்ற நிலையை உருவாக்க நல்ல எண்ணத்தையும் நல்ல மனத்தையும் மேம்படுத்துங்கள்” என்றார்.

 

அக்டோபர் மாதம் 13ஆம் நாள் அவரது உதவியாளர்கள் அவரை தியான நிலையில் அமர்ந்திருக்கக் கண்டனர்.. அவரது கன்னங்கள் சிவப்பாக இருந்தன. நடுப்பகலில் அவர் படுக்கையிலிருந்து கீழே இறங்குவதை அவர்கள் பார்த்தனர்,

அவர் கீழே விழுந்து விடக் கூடாது என்று உதவியாளர்கள் உள்ளே நுழைய மாஸ்டர் கூறினார்: “எனது கனவில் பசுந்தொழுவம் ஆடி அசைந்து இடிந்து விழுவதைக் கண்டேன். புத்தா பாலம் உடைவதைப் பார்த்தேன். நதி ஓடுவது நின்று விட்டது”

12.30 மணிக்கு அவர் கூறினார்: “நீங்கள் பல காலம் என்னுடன் இருந்துள்ளீர்கள். உங்களது துன்பம் கண்டு நான் மிகவும் நெகிழ்கிறேன். எங்கு சென்றாலும் சங்க ஆடையை பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். சீலத்தைக் கடைப்பிடியுங்கள்” என்றார்.

மணி 1.45. சீடர்கள் மாஸ்டரைப் பார்த்த போது அவர் வலது பக்கம் சாய்ந்திருந்தார். அனைத்தும் முடிந்து விட்டது என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

உடனே ஏராளமானோர் அங்கு குழுமினர்.

18ஆம் நாளன்று அவர் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.

19ஆம் நாளன்று எரியூட்டப்பட்டது.

அந்தச் சமயத்தில் சுற்றியிருந்த இடமெங்கும் நறுமணமுள்ள காற்று வீசியதை அனைவரும் உணர்ந்தனர்.

வெள்ளைப் புகை வானத்தை நோக்கி விரைந்தது.

சாம்பலிலிருந்து ஐந்து வண்ணங்களில் நூறு பெரிய மற்றும் எண்ணற்ற சிறிய எச்சங்கள் காணப்பட்டன. அனைத்தும் தூய்மையாக இருந்தன. ஒளியுடன் விகசித்தன.

 

21ஆம் நாளன்று சாம்பல் ஸ்தூபத்தில் வைக்கபப்ட்டது.

மாஸ்டர் ஸு யுன் 120 ஆண்டுகள் வாழ்ந்து தர்ம வயதான 101ஆம் வயதில் மறைந்தார்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

ச்ங்கம் சரணம் கச்சாமி

(அடுத்த கட்டுரை முடிவுரை: அத்துடன் இந்தத் தொடர் முற்றும். இந்தக் கட்டுரையை முடிக்கும் போது திடீரென்று அருகில் உள்ள ஆலயத்தின் மணியோசை அடிப்பதைக் கேட்டு வியப்புறுகிறேன். ஏனெனில் மாலையில் இந்த நேரத்தில் சாதாரணமாக மணி ஒலிக்காது. இன்று அர்த்தமுள்ள மணியோசை ஒலிக்கிறது.)

****

 

 

 

இறந்து போனவர்களுக்கு எழுதிய கடிதங்கள்! எகிப்திய அதிசயங்கள் 21 (Post No. 3736)

Written by London swaminathan

 

Date: 18 March 2017

 

Time uploaded in London:- 18-48

 

Post No. 3736

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

இறந்துபோன முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தும் வழக்கம், ஆண்டுக்கு ஒரு முறை நினைவு கூறும் வழக்கம் அல்லது மீடியம் ஒருவர் மூலம் இறந்தோருடன் பேசும் வழக்கம் — இவை எல்லாம் உலகின் பல பகுதிகளில் உண்டு. ஆனால் எகிப்தியர்கள், இறந்தோருக்குக் கடிதம் எழுதினார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?

இதோ சில சுவையான விஷயங்கள்:–

 

நீத்தாருக்கு அவர்களுடைய உறவினர் எழுதிய கடிதங்கள், இறந்துபோனோரின் கல்லறைகளிலோ, சவப்பெட்டிகளிலோ இடப்பட்டன. இத்தகைய ஒரு கடிதம், பாரீஸிலுள்ள புகழ்பெற்ற லூவர் மியூசியத்தில் (Louvre Museum) உள்ளது. அதன் வாசகம்:

 

“இங்கே படுத்திருக்கும்,  ஓ, ஆசிரிஸின் (Chest of the Osiris) மாண்புமிகு மார்பே! (இறந்தவரின் பெயர் இது!) நான் சொல்வதைக் கேள். என்னுடைய செய்தியை அனுப்புக”

 

 

இதன் பொருள் என்னவென்றால் கடிதம் எழுதியோர், பதில் கடிதம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தன்னுடைய கனவில் தோன்றி, தனது ஆசை, விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும். இவ்வித நம்பிக்கை எகிப்தில், கிரேக்கர்களின் (Hellenistic Egypt)  ஆட்சிக் காலத்தில்  இருந்தது. அவர்கள் ஒரு கோவிலில் போய் தூங்குவார்கள். அப்பொழுது வரும் கனவு மூலம் அவர்களுக்கு நோய் குணமாகும் அல்லது நினைத்தது நடக்கும். குறிப்பாக இம்ஹோதேப் (மஹாதேவ் Imhotep) கோவிலில் போய்த் தூங்குவார்கள்.

 

இம்ஹோதேப் ( IMHOTEP மஹாதேவன்) என்பவர் மூன்றாவத் வம்ச ஆட்சிக்காலத்தில் வசித்த கட்டிடக் கலை நிபுணர்; கோவில் அதிகாரி. இவரது காலம் கி.மு2667- 2648. இவரை இந்தியாவின் சாணக்கியரோடு ஒப்பிடலாம். பிற்காலத்தில் நாம் வியாச மஹரிஷியைக் கடவுள் ஆக்கியது போல இமதேவனை அல்லது மஹா தேவனைக் கடவுள் ஆக்கிவிட்டனர். ஆகையால்  தான் இவருடைய கோவிலில் தூங்கி,  கனவுக்காகக் காத்திருந்தனர்.

 

ஆசிரிஸ் (OSIRIS) என்னும் கடவுள் பாதாள உலகின் அரசன். இறந்தோருக்கு நீதி வழங்கும் எம தர்மராஜன். நாம் கடவுளின் பெயர்களைச் சூட்டிக்கொள்வது போல எகிப்தியர்களும் குழந்தைகளுக்குக் கடவுளின் பெயர்களைச் சூட்டுவர். வெறும் பெயரை வைக்காமல் நாம் சிவ+ப்ரியா, கண்ண+தாசன் என்றெல்லாம் வைப்பது போல அவர்கள் ஆசிரிஸின் மார்பு, கண், பிரியன் என்றெல்லாம் பெயர் வைப்பர்!

இதுவரை 20 கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெர்லினில் ஒரு கிண்ணத்தில் இப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கிண்ணம் இரண்டாவது உலக மஹா யுத்ததின்போது அழிந்துபோனது. அந்தக் கிண்ணத்தில் , இறந்து போனவருக்கு உணவு முதலியவற்றை வைத்து கல்லறையில் இறக்கிவிடுவர்.

 

இன்னொரு விந்தை என்னவென்றால் இந்தக் கடிதங்களில்—- அனுப்புவோர் பெயர், விலாசம் ஆகியன கூட இருக்கும். வழக்கமாக நாம் குசலம் (நலம்) விசாரிப்பதுபோல இறந்தவரையும் நலம் விசாரிப்பர். “எப்படி இருக்கிறீர்கள்? மேற்கு திசை உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறதா? உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுகிறதா?”

அது என்ன மேற்குதிசை?

 

இந்துக்களுக்கு, இறந்தோர் செல்லும் திசை தெற்கு. வேதங்களிலும், சங்கத் தமிழ் நூலகளிலும், திருக்குறளிலும் இது எழுதப்பட்டுள்ளது (தென்புலத்தார்). ஆனால் எகிப்தியர்களுக்கு இறந்தோர் செல்லும் திசை சூரிய அஸ்தமன திசை யான மேற்கு.

 

நாம், “அன்புள்ள நண்பா! நீ நலமா? நலம் அறிய நனி அவா” என்றெல்லாம் உபசாரத்துக்காக எழுதுகிறோம். அவர்கள் இப்படி எழுதவில்லை. உண்மையில் சீரியஸாக எழுதினர்.

 

அது எப்படித் தெரியும்?

 

மரணப் புத்தகத்தில் 148 ஆவது உச்சாடனமும் 190ஆவது உச்சாடனமும் (Spells 148 and 190 of the Book of the Dead) விரிவான விளக்கங்களை அளிக்கின்றன. அதாவது இறந்தோரின் ஆவி, அதன் நிலையை உங்களுக்குத் தெரிவிக்குமாம்.

 

பெரும்பாலான வேண்டுகோள்கள் தன்னுடைய குடும்பத்தை, தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேணும் என்றே எழுதப்பட்டுள்ளது. பாதாள உலக நீதிமன்றத்தில் தனக்காக வாதாடும் படியும் இறந்தோருக்கு மனுப்போடுவர். லூவர் மியூசியத்திலுள்ள ஒரு கடிதம் சொல்கிறது: “இதோ பார்! நீ பூவுலகில் நல்லவனாய் இருந்தாய் ஆகையால் எமலோகத்திலும் உனக்கு நல்ல செல்வாக்கு இருக்கும்”.

 

குடும்பத்தில் யாருக்கோ பேய் பிடித்த விஷயம், சொத்துப் பிரிவினை விஷயம், தான் செய்த தவறுகள், குடும்பத்தில் யாருக்கோ குழந்தை பிறக்காத குறை என்றெல்லாம் பல்வேறு விஷயங்களை விஸ்தாரமாக எழுதுவர். சில கடிதங்கள் நாம் டெலிபோனில் அரட்டை அடிப்பது போல இருக்கும்!

 

“இதோ பார்; நீ என்னிடம் எவ்வளவு கோழிக்கறி கேட்டாய்; அப்போது நான் அன்பாகக் கொடுத்தேனே, அம்மா! இப்பொழுது உன் பிள்ளை இங்கே காயம் பட்டிருப்பதை நீ பொறுப்பாயோ? “ என்றெல்லாம் உணர்ச்சிவசமாக கடிதம் எழுதுவர்.

 

தன் சார்பில் பாதாள உலகில், ஆஸிரிஸின் நீதி மன்றத்தில் வாதாட வேண்டும் என்று மன்றாடுவர்

 

சிகாகோ மியூசியத்தில் ஒரு ஜாடி இருக்கிறது. அதிலுள்ள வாசகம்: “எனக்கு நல்ல ஆரோ க்கியமான ஆண்பிள்ளை பிறக்கட்டும்; ஏனெனில் நீ ஒரு நல்ல ஆவி”.

ஹாலந்தில் லெய்டென் மியூசியத்தில் ஒரு கடிதம் மனைவி மீது வசை மாறி பொழிகிறது. இது 19ஆவது வம்ச (19th Dynasty) காலத்திய கடிதம். பேப்பரில் (பபைரஸ் புல்) எழுதப்பட்டுள்ளது. “ஏண்டி பேயே! நீ உயீரோடிருந்தபோது நான் உன்னை எவ்வளவு நன்றாகக் கவனித்தேன்.அதையெல்லாம் மறந்துவிட்டு இப்பொழுது எனக்கு கவலையைக் கொடுத்திருக்கிறாயே? என் மனம் பரிதவிக்கிறதே! நான் உனக்கு என்னடி கெடுதல் செய்தேன்?”

இந்தக் கடைசி வாசகம் திரும்பத் திரும்ப வருகிறது. (பரிதாபத்துக்குரிய கணவன்!!)

 

எகிப்தியர் நம்பிக்கையும் இந்துக்கள் நம்பிக்கையும்

 

கிட்டத்தட்ட இந்துக்கள் திதி, சிரார்த்தம், தர்ப்பணம் செய்வது எதற்காக, அப்படிச் செய்யாவிடில் குடும்பத்தில் என்ன என்ன நிகழும் என்று சொல்வதெல்லாம் அந்தக் கடிதங்களில் காணப்படுகிறது. பித்ருக்களின் (இறந்துபோனோர்) நல்லாசி இல்லவிடில் குடும்பத்தில் பல கெடுதல்கள் வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பிராமணர் அல்லாதோரும் கூட ஆண்டூக்கு இரு முறை ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற காலங்களில் நீர்க்கடன் செலுத்துகின்றனர். வீட்டில் இறந்துபோன தாய் தந்தையர், தாத்தா பாட்டி ஆகியோரின் படங்களை வைத்து மரியாதையுடன் வணக்கம் செலுத்துகின்றனர்.

 

இறந்து போன ஆவிகள் ஒரு கல்லறையிலிருந்து இன்னொரு கல்லறைக்கும், நாம் வசிக்கும் உலகிற்கும் கின்னரர் ரூபத்தில் (மனிதமுகம்+ பறவை உடல் = பா Ba என்று பெயர்) வரமுடியும் என்று எகிப்தியர் நம்ம்பினர். நாம் சிராத்த, திதி தினங் ளில் இறந்தோர் ஆவி வருவதாக எண்ணுகிறோம். பிராமணர்கள் வருடத்திற்கு 90 முறைக்கு மேலாகத் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் தர்ப்பைப் புல்லிலான கூர்ச்சத்தை வைத்து இறந்த முன்னோரின் ஏழு தலை முறைகளை ஆவாஹனம் செய்வர் (எழுந்தருளும் படி இறைஞ்சுவர்; எள்ளும் நீரும் இரைத்த பின்னர். உங்கள் இருப்பிடத்திற்கு வந்த வழியாகவே சுகமாகத் திரும்பிச் செல்லுங்கள் என்று பக்தியோடு வேண்டுவர். ஆக இந்துக்களும் அவர்கள் இப்படி பூலோகத்துக்கு வந்து செல்ல முடியும் என்று நம்புகின்றனர். யார் யார் யாருக்கெல்லாம் உறவினர இப்படி நீத்தார் கடன் செய்ய இயலவில்லையோ அவர்களுக்கும் சேர்த்து நான் எள்ளும் நீரும் அளிக்கிறேன் என்று சொல்லி நிறைவு செய்வர். இப்படி எல்லோர் நலனுக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பதால் (லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து) அந்தக் காலத்தில் மன்னர்கள் பிராமணர்களுக்கு வாரி வழங்கினர்.

எகிப்தியர், இறந்தோர் பற்றி எழுதியதை எல்லாம் வால்யூம் வால்யூமாக எழுதலாம். இன்னும் பல கட்டுரைகளில் மரணப் புத்தகம் (Book of the Dead), பேய் (Exorcism) ஓட்டல், பிரமிடுச் சுவர் வாசகங்கள் (Pyramid Texts) , மேலும் சில இறந்தோருக்கான (Letters to the Dead) கடிதங்கள் பற்றிச் சொல்லுவேன்.

 

-சுபம்–

அறம் வெல்லும், பாவம் தோற்கும்: கம்பன் பொன்மொழி (Post No.3735)

Written by London swaminathan

 

Date: 18 March 2017

 

Time uploaded in London:- 8-51 am

 

Post No. 3735

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒவ்வொரு புலவனும் ஒரு பேருண்மையை உலகிற்கு உணர்த்த கவிதையைப் படைக்கிறான். கம்பனின் நோக்கம் இராம நாமத்தின் புகழைப் பரப்புவதும், தர்மம் இறுதியில் வெல்லும் என்பதையும் பறை அறிவிப்பதே. இடையிடையே தமிழையும் தமிழ் வளர்த்த அகத்தியனையும் வாயார வாழ்த்திச் செல்வான்.

 

சுந்தர காண்டத்தில் அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்று பாடி, ராமாயணத்தின் முடிவை முன் கூட்டியே அறிவித்து விடுகிறான்:-

 

அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும்

என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்றும் உன்னால்

உன்னிய எல்லாம் முற்றும்  உனக்கும் முற்றாதது உண்டோ?

பொன் நகர் புகுதி என்னாப் புகழ்ந்த அவள் இறைஞ்சிப் போனாள்

ஊர்தேடு படலம், சுந்தர காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:-

ஐயனே! பிரம்மா சொன்னபடியே நடந்தது விட்டது. அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பதை இன்னமும் சொல்ல வேண்டுமோ? நீ நினைப்பன யாவும் நிறைவேறும். உன்னால் செய்து முடிக்க முடியாதது எதுவும் இல்லை. பொன்னகரான இந்ந்கருக்குள் செல்க – என்று லங்காதேவி கூறினாள். அனுமானை வணங்கி வாழ்த்திவிட்டுப் பிரம்மலோகத்துக்குப் போனாள்.

 

அனுமனும் இலங்காதேவியும் முதலில் சண்டையிட்டு, வாக்குவாதம் செய்தபின்னர் அவள் வாயிலிருந்தே வந்த மொழி இது.

 

இதற்கு முந்தைய பாடலில்

சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் – என்ற வரி மூலம் ராவணனின் இலங்கை அழியப்போவது பற்றியும் கம்பன் பாடிவிட்டான்.

 

இதைப் படித்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பகவத் கீதை வரிகளாகும்; அங்கும் கிருஷ்ணன், முன்கூட்டியே கௌரவர்களின் அழிவைச் சொல்லி விடுகிறான்.

 

பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ் க்ருதாம்

தர்ம சம் ஸ்தாபனார்தாணாய ஸ்ம்பவாமி யுகே யுகே (4-8)

 

நல்லோரைக் காப்பாற்றுவதற்கும் தீயோரை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதாரம் செய்வேன் – என்பது கண்ணன் மொழி.

 

தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்

 

பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியும் மஹா பாரதக் கருத்தை — நோக்கத்தை, அழகாக இயம்புவான்:

 

தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;

தருமம் மறுபடி வெல்லும்” எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்

வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்;

கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று

கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

தனு உண்டு காண்டீவம் அதன்பேர் என்றான்

 

-அர்ஜுனன் சொல்வது, பாஞ்சாலி சபதம், பாரதியார் பாடல்

 

சிலப்பதிகாரத்தின் கருத்தை சொல்லில் வடிக்கும் இளங்கோ அடிகள் பகர்வார்:

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,

சூழ் வினைச் சிலம்பு காரணமாக,

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்

 

— பதிகம், சிலப்பதிகாரம்

 

பொருள்:

அரசியல் நெறியில் தவறு செய்தாரை தர்மமே, எமன் உருவில் வந்து தண்டிப்பதும், பத்தினிகளை உயர்ந்தோர் போற்றுவது உண்மை என்பதும், முன்வினைப் பயன் ஒருவரைத் தொடர்ந்து வந்து மறுபிறப்பிலும்  பயன் தரும் என்பதும் அறநெறிகள். இங்கே சிலம்பு மூலம் வினை வந்து தண்டித்தது. அதனால் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் பாட்டுடைச் செய்யுள் இயற்றுவோம்.

 

மணிமேகலையின் காவியக்கருத்தை

 

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (11-92)

 

என்று சீழ்தலைச் சாத்தானார் செப்புவார்.

 

பசிப்பிணியால் வாடுவோருக்கு அன்னதானம் அளிப்பதே சிறந்த அறம்.

 

–Subham-

 

Refugees Anecdotes: Hitler’s Rule! (Post No.3734)

Compiled by London swaminathan

 

Date: 18 March 2017

 

Time uploaded in London:- 5-51 am

 

Post No. 3734

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

Many and devious have been the devices employed by refugees seeking to escape from occupied France. It is reported from hitherto unreliable sources, that such a man threw himself upon the mercy of the proprietor of a small travelling menagerie (a collection of wild animals kept in captivity for exhibition.).

 

“I am afraid to disguise you as an employee”, said the man.

“You might be discovered too easily. It happens that our gorilla died a little over a week ago and we preserved his hide, thinking that we might recoup the loss by having it stuffed some day.

 

If you want to put it on, you can travel with us in the cage”.

 

Faced by his desperate need, the refugee did so. And whenever the menagerie was on exhibition he put on as good a show as he could manage.

 

One night when no one was around, he was horror struck to discover that the bars had become loosened between his own and the adjoining cage on the same truck. One of them had fallen out, and through the opening came his neighbour, the lion. As the animal slunk toward him, the gorilla cringed in the corner and began to cry

“Help! Help!”

“Shut up, you damn fool”, growled the lion

“You aren’t the only refugee.”

Xxxx

 

Prisoners Anecdotes : Jewish blood to a Nazi Soldier!

 

Some of the Nazi airmen invite mistreatment by their belligerent attitude. There is the case of the wounded Nazi airman who panned English doctors, bemoaning the fact that he had no good German doctors to fix him up. In the middle of his tirade he had the misfortune to faint.

“Don’t worry”, the doctors told him when he came to.

“You will be alright. The chances are that you will have better manners too, now that you have got a couple of pints of good Jewish blood in you”.

 

–Subham–