ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்! (Post No.3753)

 

Written by London swaminathan

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:- 20-41

 

Post No. 3753

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

 

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், “சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம்” என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர் ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறார். அசோகனுக்குப் பின்னர் காஷ்மீரை ஆண்ட இரண்டாவது தாமோதரன், திவச தினத்தன்று குளிக்கப் போனபோது பசியுடன் இருந்த சில பிராமணர்கள் உணவு படைத்துவிட்டுச் செல்லும்படி கோரினராம். விடஸ்தா நதியில் குளித்த பின்னரே அவ்வாறு செய்வேன் என்று அரசன் சொல்லவும், பிராமணர்கள், விதஸ்தா நதியை அவனுக்கு முன்னால் கொண்டு வந்தனராம். அதனை அவன் மாயத் தோற்றம், உண்மயல்ல என்று சொல்லி நிராகரிக்கவே, பிரமணர்கள் அவனைப் பாம்பாகப் போகும் படி சபித்தனர். அவன் வருந்தவே, ஒரே நாளில் ராமாயணம் முழுவதையும் கேட்டால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று அவர்கள் சாப விமோசனம் கொடுத்தனர். இந்த தாமோதரன் ஹுஸ்கர், ஜுஸ்கர், கனிஷ்கர் முதலிய மன்னர்களுக்கு முன் — 2200 ஆண்டுகளுக்கு முன் —வாழ்ந்தவன்..

2500 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் தென் குமரி வரை பரவிவிட்டது. புத்தமத்த ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் முதலியன    இருப்பதும் , சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் வால்மீகி சொல்லாத 2 கதைகள் இருப்பதும்,  காதா சபத சதியில் கோதவரி நதிக்கரையில் ஒரு வீட்டில் ராமாயண  ஓவியம் இருப்பதாகப் பாடி இருப்பதும் இதன் பழமைக்கு சான்று பகரும். ஆழ்வார் பாடல்களில் பல புதிய விஷயங்கள் உள்ளன. வால்மீகி என்ற பெயரில் புறநானூற்றுக் கவிஞர், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளார்!

 

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம் சமண ராமாயணம், பௌத்த ராமாயணமென்று எல்லோரும் ராமன் கதை பாடி மகிழ்ந்தனர்.

 

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம், நிறைய மொழிகளில் இதை இயற்றி இருப்பதாகும்.தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கூட ராமன் கதை உண்டு.

 

பல ராமாயணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அது பற்றிய குறிப்புகள் உள. மஹா ராமாயணம் மூன்றரை லட்சம் ஸ்லோகங்கள் உடையது. இப்போதுள்ள இதிஹாசங்களில், நூல்களில் உலகில் மிகப் பெரியது மஹாபாரதம்- அதில்கூட ஒரு லட்சம் ஸ்லோகம்தான்!

 

நாரதர் எழுதிய சம்வ்ரத ராமாயணம் 24,000, லோமசர் எழுதிய லோமச ராமாயணம் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டவை. 60, 000 ஸ்லோகங்களுக்கு மேலக உடைய இரண்டு ராமாயணங்கள் இருந்தனவாம்..

 

சமண ராமாயணம் பிராக்ருத மொழியிலும், பௌத்த ராமாயணங்கள் பாலி மொழியிலும், இந்து ராமாயணங்கள் சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளிலும் இருந்தன.

 

ப உ ம சரிய (பதும சரிதம்) என்ற சமண ராமாயண த்தை விமல சூரி என்பவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக ச் சொல்லுவர்– அதில் 118 பருவங்கள் உள்ளன. ராவணனின் 10 தலை, கும்பகர்ணனின் ஆறுமாத தூக்கம் முதலியன பொய் என்று இதன் ஆசிரியர் அப்போதே எழுதியுள்ளார்

 

பௌத்தர்களின் ஜாதக் கதையான தசரத ஜாதகத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ஒரே மாதிரியான பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. அக்காலத்திலேயே ராமன் கதை பற்றிப் பல பொதுவான விஷயங்கள் உலவி வந்தது இதனால் தெரிகிறது

 

பழமைக்கு உவமைச்  சான்று

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி  ராமாயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

சீதையை விஷப் பாம்புக்கு ஒப்பிடுவது, இந்திர த்வஜம் போல அவன் வீழ்ந்தான் என்று உவமிப்பது முதலியன வால்மீகியின் பழமையை காட்டுகிறது ஏனெனில் பிற்காலத்தில் பாம்பை தீய விஷயங்களுக்கு மட்டுமே உவமை கூறினர்; இந்திர விழாவில் இந்திர த்வஜ கம்பத்தை அடித்துச் சாய்க்கும் உவமை எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

 

சுந்தர காண்டத்தில் 19 ஆவது அத்தியாயத்தில் தொடர்ந்து 30 உவமைகள் வருகின்றன. இது ஒரு புதுமை.

உவமைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர் இதில் குறைந்தது 13 வகை உவமைகள் இருப்பதாகப் பட்டியல் தருகிறார்.

3462 உவமைகளில்

2240 பூர்ண வாக்யா ச்ரௌதி

548 தர்மலுப்தா சமாசக

257 சமாசக பூர்ண ஆர்த்தி

174 தர்ம வசக லுப்தா பூர்ணா உவமை வகைகள் என்பார்.

 

 

வால்மீகி குறைந்தது 200 வகை தாவரங்களையும், 135 வகை ஆயுதங்களையும் குறிப்பிடுகிறார்.

 

எனது பழைய கட்டுரை:

வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்! கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்; ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1491; தேதி 16 டிசம்பர், 2014.

 

–Subham–

 

Book Review: A Journey towards the Infinite Absolute… (Post No.3752)

Written by S NAGARAJAN

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:-  6-12 am

 

 

Post No.3752

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தக மதிப்புரை : எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி ..

 

Book Review

A Journey towards the Infinite Absolute…

Santhanam Nagarajan

 

The book under review titled,’A Journey towards the Infinite Absolute’ is written in Tamil language by a retired professor of mathematics, Mr M.Subbiah Doss.

 

Many mathematics professors, scholars have tried successfully in describing and measuring God with their mathematical stick.

 

We have Swami Ramathirtha who was a great advadic scholar as well as a mathematics professor.

In his eight volumes ‘In the Woods of God Realization’ we have beautiful mathematical analogies explaining God.

The great genius Ramanujan declared that ”An equation for me has no meaning unless it represents a thought of God”.

 

The present work is also trying to measure the immeasurable things.

The book has three parts with eighteen chapters. Six chapters explain the various principles of spirituality with the help of simple mathematical principles.

Mandukya Upanishad explains the three dimensional world and four dimensional world

 

The ancient sages have discovered everything with their intuition. Even though the physical heart is on the left side of the body the spiritual heart is in the right side of the body.

When the author emphasize this point we remind ourselves about the saying of Bhagawan Ramana Maharishi, the sage of Arunachala, who also emphasized this point with his own experience.

The fourth dimension is always a curious subject. The great author J.W.Dunne (1875-1949)  has explained it in his world famous book, ’An Experiment with Time’.

 

 

The author explains three dimensional world and four dimensional world with many simple sketches.

Man is determined by his karma which in turn is due to his own thoughts. The next birth is determined by his own thoughts of previous birth, this birth and the balance one brings from previous karmas.

The ancient sages by their inner vision have seen the hexagonal symbol in the northern pole of the planet Saturn and arranged to carve it in the Saturn temples roof. Now the spacecraft Cassini sent by Nasa proves this by sending photos of Saturn.

 

After illustrating the above points the author narrates an incident from Sri Sathya SaiBaba’s divine life. Once a girl met Baba in the river Chitravathi at Puttaparthi, in Andhra Pradesh, India. Baba had taken a statue from the river. That was the statue which was worshipped by the girl’s grandfather. Including this statue everything is being saved as a thought form.

Living within the limits of Space and Time and Cause and Effect is one thing. In order to free from these things one has to choose the spiritual path.

 

To understand God, mathematics is a helpful tool.

 

All the above points are all very interesting. In 147 pages the author gives us a complete picture about the hitherto unexplained principles.

A fitting foreword has been given by R.Panneerselvam, a Scholar in his own rights.

 

Many quotes from Swami Vivekananda, Swami Yogananda, Swami Chitbavananda and Ramakrishna mutt sages makes the book interesting reading.

The book is neatly printed and I congratulate the author for his painstaking research.

 

புத்தக விவரம்:

எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி ..

எம்.சுப்பையாதாஸ்

147 பக்கங்கள்

விலை ரூ 150/

கிடைக்குமிடம்:

THAASU PUBLICATIONS

14, II CROSS STREET, VISWANATHAPURAM

MADURAI 625014  TAMILNADU INDIA

PHONE  0452 2641945

EMAIL : subdoss2014@gmail.com

 

Summary

The book under review titled,’A Journey towards the Infinite Absolute’ is written in Tamil language by a retired professor mathematics, Mr M.Subbiah Doss. To understand God, mathematics is a helpful tool. Many mathematics professors, scholars have tried successfully in describing and measuring God with their mathematical stick. The author explains three dimensional world and four dimensional world with many simple sketches. Many quotes from Swami Vivekananda,Swami Yogananda, Swami Chitbavananda and Ramakrishna mutt sages makes the book interesting reading.

Keyword

Mathematics is a tool to explain the absolute, three dimension and four dimensional wonders, explained

  1. Nagarajan has written more than 3000 articles in Tamil in 18 magazines and published 52 books. He is revealing Eastern Secret Wisdom through T.V. Programmes, magazine articles, seminars, courses. He has covered various subjects in his wide range of articles which include Mantras, Yantras, Yoga, Meditation, Astrology, Astronomy, Space Science, Science and Spirituality, Hollywood cinema, Women’s progress, Aura, Significance of Colors, Reincarnation, Divine Geometry, Power of Prayer etc. As an ardent seeker of Truth, he has collected scientific experiments on mantras, mind, Auto suggestion etc. He has written many articles on para psychology also. His email id is snagarajans@gmail.com

 

எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி … (Post No.3751)

Written by S NAGARAJAN

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3751

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தக மதிப்புரை

 

எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி …

 

by ச.நாகராஜன்

 

மதுரை யாதவர் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு எம்.சுப்பையா தாஸ் அவர்கள் எழுதியுள்ள ‘எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி..’ என்ற நூல் அளக்கமுடியா விஷயங்களை கணிதக் கோல் வைத்து அளந்து காண்பிக்கிறது.

 

சூத்திரத்திற்கு அப்பால் இருக்கும் விளக்க முடியாத ஆன்மீக விஷயங்களை நம்மை கணித சூத்திரங்கள் மூலம் வழி நடத்திக் கொண்டு சென்று விளக்குகிறது.

 

கணிதத்திற்கு ஆன்மீகத்திற்கும் காலம் காலமாகத் தொடர்பு உண்டு. காலமும் கணக்கும் நீத்த காரணனனை கணிதம் மூலம் விளக்கியவர் லாகூரில் கணிதப் பேராசிரியராக வேலை பார்த்த சுவாமி ராமதீர்த்தர். அவரது எட்டு தொகுதிகள் கொண்ட இன் தி வுட்ஸ் ஆஃப் காட் ரியலைசேஷன் (In the Woods of God Realisation) நூலில் கணிதம் மூலமாக அவர் விளக்கும் வேதாந்த விஷயங்கள் மிகவும் சுவை பயப்பவை.

அதே போல கணித மேதை ராமானுஜனின் பிரசித்தி பெற்ற வாக்கியமான், “An equation for me has no meaning unless it represents a thought of God” என்பதிலிருந்து கணிதமே கடவுள்; கணிதத்தின் மூலம் கடவுளைக் காணலாம் என்பது நிதரிசனமாகப் புலனாகிறது.

 

 

இந்த அடிப்படையில் கணிதப் பேராசிரியர் ஒருவர் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு 147 பக்கம் அடங்கிய நூலில் மூன்று பிரிவுகளில் 18 அத்தியாயங்களில் அற்புதமான விஷயங்களை விளக்குகிறார். ஆறு அத்தியாயங்களில் கணித சூத்திரங்களும் விளக்கங்களும் நர்த்தனம் புரிகின்றன!

மாண்டூக்ய உபநிடதத்தில் மூன்று பரிமாண உலகமும் நான்கு பரிமாண உலகமும் சுட்டிக் காட்டப்படுவதை நூலாசிரியர் நன்கு விளக்குகிறார்.

 

 

நமது ரிஷிகள் எதையும் உள்ளுணர்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தங்கள் தவ வலிமையால் அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் கண்டவர்கள் அவர்கள்.

உடலில் நமது இதயம் இடப்பக்கம் இருப்பதை நாம் உணர்கிறோம். அவ்ர்கள் ஆன்மீக இதயம் வலப்பக்கத்தில் உள்ளது என்று கூறுகின்றனர்.

 

 

இதை ஆசிரியர் விளக்கும் போது சமீப காலத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்து அரிய உபதேசங்களை அருளிய பகவான் ரமண மஹ்ரிஷியும் இதை அடிக்கடி கூறியுள்ளதையும் இதை அவர் தனது அனுபவத்தின் மூலமாக உணர்ந்து நமக்கு அருளியிருபப்தையும் நாம் அறிந்து பிரமிக்கிறோம்.

 

 

நான்காவது பரிமாணம் என்பது ஒரு அதிசயமான விஷயம். இதைப் பற்றி மேலை நாட்டு அறிஞர்களும் ஆராய்ந்து பல நூல்களை இயற்றியுள்ளனர். குறிப்பிட்த்தகுந்த பல புத்தகங்களில் ஜே.டபிள்யூ. டன் (1875-1949) எழுதிய “An Ezperiment with Time” குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆங்கிலத்தில் உள்ள இது போன்ற புத்தகங்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் விதத்தில் நூலாசிரியர் சுப்பையா தாஸ் சில எளிய சித்திரங்கள் மூலம் நான்காம் பரிமாணத்தை விளக்குகிறார்.

 

நானோ வினாடியில் பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அந்த குறிப்பிட்ட நானோ வினாடியில் மட்டும் நமது மூன்று பரிமாண உலகில் நடக்கும்.

 

இந்தச் செயல்கள் நடந்து முடிந்தவுடன்  செயல்கள் அனைத்தும் நான்காம் பரிமாண உலகில் ஒரு குறிப்பிட்ட பதிவகத்தில் சேமித்து வைக்கப்படும்.

 

ஆகாம்யம்,சஞ்சிதம், பிராரப்தம் ஆகிய மூன்று க்ர்ம அல்லது எண்ணத் தொகுப்புகளை ஆசிரியர் அழகுற மூன்று பக்க முக்கோணத்தின் மூலம் விளக்குகிறார்.

 

பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தால் மிஞ்சுவது பூரணம் என்பதை கணித மூலம் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.

 

பிரபஞ்ச ஒடுக்கம், பிரபஞ்ச வெடிப்பு போன்ற அறிவியல் விஷய்ங்களை ஆன்மீக ரீதியில் ஆசிரியர் விளக்குகிறார்.

 

சனி கிரகத்தின் வடதுருவ பகுதியில் அறுகோண வடிவ அடையாளத்தை தங்கள் ஞானக்கண்ணால் கண்டுணர்ந்த முனிவர்கள் அதை சனீஸ்வரன் கோவிலின் மேற்கூரையில் பொறிக்கச் செய்தனர். நாஸா அனுப்பிய காஸினி விண்கலம் இந்த அறுகோண அமைப்பை போட்டோ எடுத்து அனுப்பியிருப்பதால் முனிவர்களின் அபூர்வ ஆற்றல் உறுதி செய்யப்படுகிறது.

 

 

இது போல ஓம் என்ற பிரணவத்தின் அற்புத ஆற்றலையும் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.

 

ஸ்ரீ சத்யசாயிபாபாவின் அழகான முத்திரை வாக்கியங்களையும் அவர் தெய்வீக வாழ்வில் ஒரு சிறு பெண்ணுக்கு அவர் அருளால் விளைந்த அற்புத சம்பவத்தையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இது எல்லையற்ற அபூர்வமான ஆற்றலையும் அவதார மஹிமையையும் விளக்க சுவையாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 

காலம் மற்றும் வெளி, காரண- காரியம் இவற்றிற்கு உட்பட்ட மனிதன் இதை  மீறி வெளி வருவதற்கு ஆன்மீக வாழ்வில் அடியெடுத்து வைத்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர் கூறும் செய்தி.

 

 

இந்த அரிய குறிக்கோளை அடைய இறை தத்துவத்தை உணர வேண்டும்.அதை கணிதம் மூலம் விளங்கிக் கொள்ள்லாம் என்பதை இந்தக் கணிதப் பேராசிரியர் சுவையுடன் கூறுகிறார்,

நூலுக்கு யாதவர் கல்லூரியின் முன்னாள் செயலர் திரு பன்னீர்செல்வம் அழகான் மதிப்புரையைத் தந்துள்ளார்.

நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள் பட்டியலும் கலைச்சொற்கள் விளக்கமும் தரப்பட்டுள்ளன.

 

அழகுற அச்சிடப்பட்டுள்ள இந்த் புத்தகம் கிடைக்கும் இடம்:

 

THAASU PUBLICATIONS

14, II CROSS STREET,

VISHWANATHAPURAM

MADURAI 625014

TAMILNADU

INDIA

PHONE 0452 2641945

Email subdoss2014@gmail.com

 

நூலின் விலை ரூ 150/ (147 பக்கங்கள்)

 

கணிதம் மூலம் கடவுளை விளக்கும் ஆசிரியருக்கு எமது பாராட்டுக்கள்.

***

Hunchback Manthara, Bird caught in a Noose! (Post No.3750)

Written by London swaminathan

 

Date: 23 March 2017

 

Time uploaded in London:- 22-24

 

Post No. 3750

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

There is a very interesting episode in Valmiki Ramayana, which many of you would have missed. Shatrugna, brother of Rama and Lakshmana, was about to slay Manthara, the hunchback. But Bharata who was equally angry at her, saved her. He gave two reasons for saving her:

 

1.Women should not be killed, however evil they were, according to Hindu Law Books.

2.If Rama knew that we have killed Manthara, the hunchback, then he would not even meet us.

 

But before Bharata admonished Shatrugna, what happened there was interesting.

It is in chapter 78 of Ayodhya Kanda of Ramayana. Shatrugna was the younger brother of Lakshmana. He wondered how come Lakshmana allowed this unjust thing to happen (banishing Rama for 14 years). When he was fuming with anger, this wretched woman Manthara appeared before him with all the bling on her body. This infuriated Shatrugna.

Everyone in the palace knew that she was the main cause for this misfortune. So the guards roughed her and brought her before Shatrugna. He said Let this woman receive the ‘fruit of her action’. He seized hold of her with his strong hands. she rent the palace with her shrieks. The women who were with her fled in different directions in fear. They thought Shatrugana would kill all of them and went to Kausalya for protection.

 

In the meantime, enraged Shatrugna gave her severe blows. When he showered blows on Manthara, she fell down on the ground. Then he redoubled his strokes and her ornaments were scattered. Valmiki says the floor with her bling looked like the autumn sky with stars!

 

Shatrugna holding her with his strong hands started scolding Kaikeyi, who fearing him, ran to Bharata.

Bharata said to Shatrugna: “one should avoid slaying any woman, therefore control yourself. I would have killed even Kaikeyi for her heinous conduct. But if Rama hears that this hunchback Manthara was slain, he would not approve it.

 

Hearing this he let her go and she fell at the feet of Kaikeyi, breathless and weeping. The hunchback looked like a Krauncha bird that was  caught in a noose!

When we read this, we ourselves feel that we should punch on the face of Manthara. Had we lived at that time, given an opportunity, we would have done so!

 

–Subham–

லண்டன் ‘பூங்கா’ பார்க்க வாறீங்களா? (Post No.3749)

Written by London swaminathan

 

Date: 23 March 2017

 

Time uploaded in London:- 21-11

 

Post No. 3749

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

லண்டனுக்குப் போய்விட்டு வந்தேன் என்று யாராவது சொன்னால், உடனே அந்த நகரைப் பற்றி அறிந்தவர்கள், “ஓ! பக்கிங்ஹாம் பாலஸ் (அரண்மனை) பார்த்தீர்களா? பிக் பென் (BIG BEN), டவர் பிரிட்ஜ் பார்த்தீர்களா (TOWER BRIDGE), டவர் மியூசியத்துக்குப் போய் கோஹினூர்  வைரம் உள்பட மஹாராணியாரின் நகைகளைப் பார்த்தீர்களா?  மெழுகு பொம்மை (MADAM TUSSAUDS) மியூசியம், சயன்ஸ் மியூசியம்,  விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், இயற்கை வரலாற்று மியூசியம் முதலிய மியூசியங்களுக்குப் போனீர்களா? லண்டன் ஐ- யில் ஏறினீர்களா? டிரஃபால்கர் (TRAFALGAR SQUARE) ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ் (PICCADILLY CIRCUS) வழியாகச் சென்றீர்களா? என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்.இங்குள்ள புகழ்பெற்ற, பெரிய ஐந்து பூங்காக்களைப் (Parks) பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

 

அடுத்த முறை லண்டனுக்கு வந்தீர்களானால் இந்த 7 பூங்கா (PARKS) க்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.

 

லண்டனுக்கு வந்த எனது அமெரிக்க நண்பர் ஒருவர் விமானத்திலிருந்து லண்டனைப் பார்த்துவிட்டு அசந்தே போனார். நன் ஏதோ எங்கள் அமெரிக்க நகரங்கள் போல வானளாவிய கட்டிடங்களுடன் கான்க்ரீட் ஜங்கிள் (CONCRETE JUNGL)E போல இருக்கும் என்று நினைத்தேன். பச்சைப் பசேல் என்றல்லவா இருக்கிறது? என்றார்.

 

நான் சொன்னேன்: “நல்ல வேளையாக எங்கள் லண்டனில் திராவிட அரசியல்வாதிகள் இல்லை. எல்லா நிலங்களையும், பூங்காக்களையும் பினாமி பெயரில் முக்காத் துட்டுக்குப் பட்டா போட்டு, ஆட்டையைப் போடும் அசிங்கங்கள் இங்கு இல்லை. வெள்ளைக்காரன் கொள்ளை அடிப்பான்; உலகத்தையே; ஆனால் தனக்குத் தானே யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல புறச் சூழலைக் கெடுக்க மாட்டார்கள் என்றேன்.

 

உண்மையிலேயே இது வியப்பான விஷயம்தான். தெருப்பெயர்களை நூற்றாண்டுக் கணக்கில் மாற்றவில்லை. பூங்காக்களை அழிக்கவில்லை. லண்டனில் பூங்கா இல்லாத பேட்டையே இல்லை. புகழ்பெற்ற 7 பூங்காக்கள் அல்லது தோட்டங்களை மட்டும் வரிசைப் படுத்துகிறேன்:

Speakers’ Corner, Hyde Park

1.ஹைட் பார்க் (Hyde Park)

இதன் சிறப்பு என்ன? இங்கே சொற்பொழிவாளர் மூலை (Speakers’ Corner) என்று ஒரு பகுதி இருக்கிரது அங்கு நின்று கொண்டு மஹாராணி, மஹாராஜ உள்பட யாரையும் வசை பாடலாம், குறைகூறலாம் என்று ஒரு வழக்கம் இருக்கிறது. அதாவது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், மான நஷ்ட, அவதூறு வழக்குப் போட மாட்டார்கள் என்று ஒரு ஐதீகம் உளது. இதே பூங்காவில் இளவரசி (Dian, Princess of Wales Memorial) டயானா நினைவுச் சின்னத்தையும் காணலாம். 350 ஏக்கர் பரப்புள்ள இந்தப் பூங்கா லண்டனின் இதயப் பகுதியில் பல ரயில் நிலையங்களைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது. மூங்கில் பாதை (Bamboo Walkway) வழியாக சிறுவர்கள் ஓடி விளையாடலாம்.

 

நாட்டின் தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாளில் 21 முறை பீரங்கிக் குண்டு (Royal Gun salutes) முழக்கம் அளிப்பதும் இவ்விடத்தில்தான். எடுத்துக்காட்டாக மஹாராணியாரின் பிறந்த நாள் (ஏப்ரல் 21), அவர் பட்டமேற்ற நாள் (ஜூன் 2) என்று பல தினங்கள்!

 

இந்தப் பூங்காவுக்குப் பக்கத்திலுள்ள ரயில் நிலையங்கள்:-

மார்பிள் ஆர்ச் Marble Arch, ஹைட் பார்க் கார்னர் Hydepark Corner, நைட்ஸ்பிரிட்ஜ் Knightsbridge

 

2.க்ரீன் பார்க் (Green Park)

இதன் பரப்பு 40 ஏக்கர். மஹாராணியாரின் அரண்மனைக்கு எதிரே உள்ளது (Green Park) க்ரீன் பார்க் ஸ்டேஷனில் இறங்கினால், பூங்காவின் குறுக்கே நடந்து போய் ராணியாரைத் தரிசிக்கலாம். அல்லது அவரைப் பார்க்க வந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்கலாம். அவ்வப்பொழுது அணிவகுக்கும் சிப் பாய்களையும் பார்க்கலாம். உலகப் போர் தொடர்பான பல நினைவுச் சின்னங்களையும் காணலாம்.

Green Park

அருகிலுள்ள ரயில் நிலையம்: க்ரீன் பார்க் Green Park

 

3.கென்ஸிங்டன் தோட்டம் (Kensington Gardens)

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் இங்கு உண்டு. பீட்டர் பானின் வெண்கலச் சிலை (Bronze Statue of Peter Pan), எல்பின் ஓக் (ELFIN OAK STUMP )மரத்தின் (அடிப்பகுதி, டயானா விளையாட்டுத் திடல், பெரிய கொள்ளையர்(PIRATE SHIP) கப்பலின் மாதிரி முதலியன சிறுவர்களைக் கவர்ந்திழுக்கும்.

அருகிலுள்ள ரயில் நிலயம்: குஃயீன்ஸ்வே Queensway

4.செயின்ட் ஜேம்ஸ் பூங்கா St Jame’s Park

இந்தப் பூங்காவைச் சுற்றித்தான் முக்கியமான இடங்களான பக்கிங்ஹாம் அரண்மனை, பிக் பென் கடிகாரக் கூண்டு முதலியன உள்ளன. முக்கியமான அணிவகுப்புகள் இங்கே நடைபெறும் 1664 ஆண்டு முதல் இங்கு பெலிகன் நாரைகள் வசிக்கின்றன. ஒவ்வொரு நாளும்cமதியம் இரண்டரை மணிக்கு அவைகளுக்கு மீன் இரை கொடுப்பதைக் காண ஒரு கூட்டம் காத்து நிற்கும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் –வெஸ்ட்மின்ஸ்டர் Westminster, செய்ன்ட் ஜேம்ஸ் பார்க் St Jame’s Park

 St Jame’s Park

5.ரீஜெண்ட்ஸ் பூங்கா Regent’s Park

இங்குதான் லண்டன் மிருகக்காட்சி (London Zoo)சாலை இருக்கிறது. இதைத் தவிர ரோஜாத் (Rose Gardens) தோட்டம், பறவைகள்  நடைப் பகுதி (Birds Walk) எனப் பல கவர்ச்சிகள் இருக்கின்றன. அன்னம், நாரை, வாத்து, குள்ள வாத்து என நீர்ப்பறவைகள் வாழும் இடம் இது. சிறுவர்களுக்கு மன மகிழ்ச்சி தரும் பூங்கா.

 

அருகிலுள்ள ரயில் நிலையம்—ரீஜென் ட் ஸ் பார்க்( Regent’s Park)

Regents Park

6.ரிச்மண்ட் பூங்கா (Richmond Park)

லண்டனின் தென் மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தப் பூங்கா மான்களுக்கு — குறிப்பாக சிவப்பு நிற கலை மான்களுக்குப் (Red and fallow deer) பெயர் பெற்ற இடம். எப்போதும் மான்கள் கூட்டம் கூட்டமாகத் திரியும். இங்குள்ள இசபெல்லா தோட்டத்தில் வெளிநாட்டுத் தாவரங்களை வளர்க்கின்றனர்.

 

அருகிலுள்ள ரயில் நிலையம் –ரிச்மண்ட் (Richmond)

Richmond Park

7.க்ரீனிச் பூங்கா (Greenwich Park)

அரச வம்சத்தினரின் பெயரிலுள்ள பூங்காக்களில் இதுவே பழமையானது 1427 ஆம் ஆண்டு முதல் இதன் வரலாறு எழுதப்பட்டுளது. தேசிய கடல் மியூசியம் (National Maritime Museum), க்ரீனிச் எல்லைக் கோடு மியூசியம், வானாராய்ச்சிக் (Royal Observatory) கூடம், உலகத்தைன் நேரத்தைக் கணக்கிட உருவாக்கப்பட்ட கற்பனைக் கோடு (Greenwich Meridian) முதலியவற்றைக் காண ஏராளமானோர் வருகை தரும் பூங்கா. மான்கள், ஆந்தை, வெவால்கள் என்று பலவகை உயிரினங்களின் அடைக்கலம் இது.

Greenwich Park

அருகிலுள்ள ரயில் நிலையம் –க்ரீனிச்; தேம்ஸ் நதிப் படகு மூலமும் செல்லலாம்.

 

இதுதவிர உலகப் புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவான கியூ (Royal Botanical Gardens at Kew) கார்ட ன் ஸ் இருக்கிறது. அது தாவரவியல் பூங்கா என்னும் வகையில் வந்துவிடும்.

 

ராயல்பார்க்ஸ் என்ற பெயரில் வெப்சைட் (www.royalparks.org.uk )இருக்கிறது. அதில் மேலும் பல தகவல்களை அறியலாம். பூங்காக்களுக்குள் நுழைய கட்டணம் கிடையாது. ஆனால் அவகளில் இடம்பெற்ற மியூசியங்களுக்குக் கட்டணம் கொடுக்கவேண்டும்.

 

–Subham–

 

மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள்! (Post No.3748)

Written by S NAGARAJAN

 

Date: 23 March 2017

 

Time uploaded in London:-  5-43 am

 

 

Post No.3748

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள் என்று கூறிய விஞ்ஞானி இல்யா!

by .நாகராஜன்

 

நீடித்த வாழ்க்கையின் ரகசியம் இரண்டு தொழில்துறை வாழ்க்கையைக் கொள்வது தான்! 60 வயது வரை ஒன்று, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இன்னொன்று!”டேவிட் ஒகில்வி

 

மனிதன் இயல்பாகவே 150 ஆண்டுகள் வாழலாம் என்று அடித்துக் கூறிய விஞ்ஞானி ஒருவர் உண்டு. அவர் பெயர் இல்யா இலிசி மெக்னிகோவ் (Ilya Ilyich Mechnikov). (தோற்றம் 15-5-1845 மறைவு 15-7-1916)

 

இள வயதிலேயே அனைவரையும் அசர வைக்கும் அபார மேதையாக அவர் திகழ்ந்தார்.

 

ரஷியாவில் கார்கோப் என்ற நகரின் அருகில் உள்ள குக்கிராமம் ஒன்றில் பிறந்த அவர் சிறு வயதிலேயே இயல்பாகவே அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் செலுத்தி வந்தார். தன் சகோதரர்கள், இதர சிறு குழந்தைகளை தன் முன்னே உட்கார வைத்து சொற்பொழிவாற்றுவார்.

 

 

தாவரவியல், நிலவியல் ஆகிய இரண்டும் அவருக்குப் பிடித்த விஷயங்கள். நான்கு வருடம் படிக்க வேண்டிய படிப்பை இரண்டு வருடங்களிலேயே முடித்த அவரிடம் அவரது பேராசிரியர்கள் உனக்குச் சொல்லிக் கொடுக்க ஒன்றுமே இல்லை என்று கூறி விட்டனர். 16ஆம் வயதில் நிலவியலில் ஒரு பெரிய பாட புத்தகத்தையே எழுதி முடித்தார். பல் ஆய்வுப் பேப்பர்களை எழுதி விஞ்ஞானிகளின் உலகில் தனக்கென ஒரு பெய்ரை ஏற்படுத்திக் கொண்டார்.

 

 

இவரது மண வாழ்க்கை சற்று சோகமானது. செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் தனது முதல் மனைவியான லுட்மிலாஃப்யோடோரோவிட்சை அவர் சந்தித்தார். காச நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த லுட்மிலாவை திருமண தினத்தன்று சர்ச்சுக்கு ஒரு நாற்காலியில் அமர வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தனர். அவரைக் காப்பாற்ற ஐந்து ஆண்டுகள் அரும்பாடு பட்டார் இல்யா. ஆனால் பலனில்லை அவர் இறந்து போகவே அந்த சோகத்தாலும் கண்பார்வை மங்கிப் போனதாலும் தான் வேலை பார்த்த பல்கலைக் கழகத்தில் பல வித பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் மனமுடைந்து போனார். அளவுக்கு அதிகமாக போதைப் பொருளான ஓபியத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். ஆனால் மரணமடையவில்லை.

 

 

1880இல் இரண்டாம் முறையாக மணந்து கொண்டார். இந்த இரண்டாம் மனைவிக்கு டைபாய்டு ஜுரம் வரவே அவர் உடல்நிலை மிக மோசமானது. ஆகவே இந்த முறையும் மனமுடைந்து போன இல்யா புது விதமாக மரண்மடையத் தீர்மானித்தார். ஜுரத்தை மீண்டும் வருவிப்பதற்காக டைபாய்டு கிருமிகளை உடலில் ஏற்றிக் கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தார்.

 

 

ஆனால் இந்த  முறையும் அவர் பிழைத்தார். இரண்டாம் அலெக்ஸாண்டர் கொலை செய்யப்பட்டு நாட்டு நிலவரம் சரியில்லாமல் போகவே ரஷ்யாவை விட்டு மெஸினா என்ற இடத்திற்குச் சென்றார். பின்னர் வியன்னவில் பேராசிரியர் க்ளாஸ் என்பவரைக் கண்டு தன் ஆராய்ச்சிகளைப் பற்றிக் கூறி அவரால் உத்வேகம் பெற்றார்.

 

 

அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்றை அவர் கண்டு பிடித்தார்.பாகோஸிடோஸிஸ் எனப்படும் நோய்க்கிருமி விழுங்கி அழிக்கப்படும் முறையை அவர் கண்டு பிடித்தார்.

ஒடிஸா என்ற நகரில் வாழத் தொடங்கிய அவர் உலகின் முதல் பாக்டீரியா சோதனைக் கூடத்தை ஆரம்பித்தார். ஆனால் அரசியல் நிலைமையின் காரணமாக அவர் இருந்த நகரான ஒடிஸாவில் அவரால் நீடித்து வாழ முடியவில்லை.

நிலைமை மிக மோசமாகவே லூயி பாஸ்டர் இருந்த பாரிஸ் நகரம் நோக்கிச் சென்று அவரது லேபரட்டரியிலேயே ஆய்வைத் தொடர்ந்தார். இறுதி வரை அங்கேயே இருந்தார்.

 

 

முதுமையின் மீது அவரது ஆராய்ச்சி திரும்பியது. முதுமையும் தொடர்ந்து வரும் மரணமும் உடலில் மைக்ரோப்களாலு மற்றும் இதர நச்சுப் பொருள்களாலும் விஷ சத்து ஊட்டப்படுவதாலேயே என்பதைக் கண்ட அவர் வெவ்வேறு நாடுகளில் வாழும் மக்கள் எவ்வளவு ஆண்டுகள் வாழ்கின்றனர் என்ற ஒரு பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

 

உடலில் நச்சுத் தன்மை ஏற்படாமல் இருக்க என்ன வழி என்று அவர் ஆராய்ந்தார்.  நீண்ட ஆய்வின் முடிவாக, தயிரைச் சாப்பிட்டு ஒரு மனிதன் 150 ஆண்டு காலம் வாழலாம் என்ற ஒரு கருத்தை முன் வைத்தார். பல்கேரியத் தயிரை சாப்பிடுங்கள்; உடலில் நச்சுத் தன்மை ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். வலுவுடன் 150 ஆண்டுகள் வாழலாம் என்று அவர் கூறினார். தானும் பல்கேரியத் தயிரை சாப்பிட ஆரம்பித்தார்.

 

 

ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பினால் அவரால் நீண்ட நாள் வாழ முடியவில்லை. தனது 71ஆம் வயதிலேயே இறக்க நேரிட்டது.

150 வயது வாழ வழி சொன்னவர் இப்படி ‘அகால மரணம்’ அடையவே அவரது கொள்கைக்கு விஞ்ஞான உலகில் அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை.

 

என்றாலும் கூட, நோய் இயல், நோய் தடுப்பியல், பாக்டீரியா இயல் என இப்படிப் பல்வேறு துறைகளிலும் அவர் செய்த ஆய்வு தான் நோய் தடுப்பிற்கான முன்னோடி ஆய்வுகளாகும்.

இன்று உலக மக்கள் நோய்களிலிருந்து துரிதமாக நிவாரணம் அடைய அந்த அபூர்வ மேதையே காரணம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

நோபல் பரிசு பெற்ற பிரப்ல விஞ்ஞானி பாரத் ரத்னா சர் சி.வி.ராமன் (தோற்றம் : 7-11-1888 மறைவு: 21-11-1970) 1967ஆம் ஆண்டு உஸ்மேனியா பல்கலைக்கழக கோல்டன் ஜூபிளி கொண்டாட்டத்தில் த்லைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆய்வு விஞ்ஞானிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

 

 

அந்தச் சமயம் அவர் பங்களூரில் உள்ள தனது லாபரட்டரியில் வைரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

வைரங்களைப் பற்றித் தனது சிறப்புரையில் அனைத்து விவரங்களையும் தந்து அனைவரையும் அவர் அசத்தினார்.

 

 

உரை முடிந்த பின்னர் ஒரு மாணவர் எழுந்திருந்து, “ சார்! நீங்கள் வைரங்களைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் விளக்கி விட்டீர்கள். ஆனால் வைரங்களை எப்படிச் செய்வது என்பது பற்றி ஒன்றும் கூறவில்லையே” என்று கேட்டார்.

 

 

 

இடக்கான இந்த கேள்வி அங்கிருந்தோரை துணுக்குற வைத்தது.

ஆனால் விஞ்ஞானி ராமனோ ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை.

“அது ரொம்ப சுலபம். நீங்கள் ஒரு கரித் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். பூமிக்கடியில் ஆயிரம் அடி தோண்டி அதைப் புதைத்து விடுங்கள். ஆயிரம் ஆண்டு காத்திருங்கள். மீண்டும் தோண்டுங்கள். உங்களுக்கு வைரம் கிடைத்து விடும்” என்றார்.

அரங்கம் அனைவரின் கரவொலியாலும் அதிர்ந்து போனது.

அவரது பதிலை அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர் – கேள்வி கேட்டவர் உட்பட!

***

 

Battle Anecdotes (Post No.3747)

Compiled by London swaminathan

 

Date: 22 March 2017

 

Time uploaded in London:- 21-57

 

Post No. 3747

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

Bull Run Battle

 

One day Chauncey Depew met a soldier who had been wounded in the face. He was a Union Man and Depew asked him in which battle he had been injured.

“In the last battle of Bull Run, sir”, he replied.

“But how could you get hit in the face of a Bull Run?”

“Well, sir”, said the man, “after I had run a mile or two I got careless and looked back.”

((Bull Run, Battle of definition. The first battle of the American Civil War, fought in Virginia near Washington, D.C. The surprising victory of the Confederate army humiliated the North and forced it to prepare for a long war. A year later the Confederacy won another victory near the same place.))

xxxx

 

George Washington

 

During the Revolutionary war, an Irish man in the American service having come by surprise on a small party of Hessians who were foraging, seized their arms which they had laid aside. He then presented his musket, and with threats drove them before him into the American camp where the singularity of the exploit occasioning some wonder, he was brought with his prisoners before General Washington who asked him how he had taken them.

By God, general, said he, I surrounded them.

 

((HESSIAN: a native or inhabitant of Hesse. a Hessian soldier in any of the mercenary units of the British Army in the War of American Independence or the Napoleonic Wars. (US) any German mercenary in the British Army during the War of American Independence.))

 

Xxx

 

Fire to Yourself

 

General Winfield Scott said that during the War of 1812, before an action began between the two opposing armies, it was customary for the respective army commanders to ride forward accompanied by their staff, and formally salute each other. Each then returned to his own lines, and the battle opened.

This custom is well illustrated by the anecdote told by Fournier,

Lord Hay at the Battle of Fontenay,1745, called out

“Gentleman of the French Guard, fire first”.

 

To which the Comte d’ Auteroches replied,

“Monsieur, we never fire first; please to fire yourselves”

 

Xxx

Duke of Wellington Statue Modelling

 

When Sir John Steel, the sculptor, had the Duke of Wellington sitting for a statue, he wanted to get him to look warlike. All his efforts were in vain, however, for Wellington seemed, judging by his face, never to have heard of Waterloo or Talvera.

 

At last Sir John lost patience, somewhat.

“As I am going to make the statue of Your Grace, he said, “can you not tell me what you were before, say, the Battle of Samamaca? Were you not galloping about the fields, cheering on your men to deeds of valor by word and action?”

 

“Bah!, said the Duke scornfully. “If you really want to model me as I was on the morning of Salamanca, then do me crawling along a ditch on my stomach, with a telescope in my hand.”

xxx SUBHAM xxx

தற்பெருமை பேசிய ராம்செஸ் மன்னர்கள்! எகிப்திய அதிசயங்கள் -பகுதி 24 (Post No.3746)

 

Written by London swaminathan

 

Date: 22 March 2017

 

Time uploaded in London:- 21-18

 

Post No. 3746

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் 11 மன்னர்கள் ராம்செஸ் என்ற பெயருடன் ஆட்சி செய்தனர். இவர்களில் ஒருவர் காலத்தில் உலகின் முதலாவது தொழிலாளிகள் ஸ்டிரைக் நடந்தது. இன்னொருவர் காலத்தில் அ ந்தப்புர அழகிகளின் சதியில் மன்னர் உ யி ர் போனது. இன்னொரு வெட்டிப் பேச்சு வீரன் தன் பெயருடன் 20 பட்டங்க ளை  ச் சேர்த்துக்கொண்டான். இன்னொருவன் தசரத மன்ன னு க்குப் போட்டியாக பல மனைவியரைக் கல்யா ணம் செய்து கொண்டு குசேலனுக்குப் போட்டியாக 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றான். இன்னொருவன் தன்னுடைய உருவச் சிலைகளை நம்மூர் அரசியல் வாதிகளை மிஞ்சும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிரம்மாண்ட அளவில் நிறுவினான்.

 

இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை மிகவும் கீர்த்தி வாய்ந்த, கியாதி பெற்ற, பிரசித்தமான மன்னர் பெயர் விக்ரமாதித்தன். எகிப்தில் கியாதி பெற்ற பெயர் ராம சேஷன். சிலர் ரமேசன் என்றும் கருதுவர். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994), ராமன் பெயர் பல இடங்களில் இருப்பதைக் காட்ட இதை உதாரணமாகக் காட்டியுள்ளார் தனது உபந்யாசங்களில்!

 

இதோ ராம்செஸ் (Ramesses) மன்னர்கள் பற்றி சுவையான செய்திகள்!!!

 

முதலாம் ராமசெஸ் (கி.மு. 1295-1294)

19ஆவது வம்சம்; இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக ஆண்டார். போர் வீரனாக இருந்து அரசனாக உயர்ந்த பெருமையுடையவர்.

 

இரண்டாம் ராமசெஸ் (கி.மு. 1279-1213)

சேதி SETI) என்ற மன்னரின் மகன்; சிறுவயது முதலே அரசியல் பயிற்சி பெற்றவர். கரிகால் சோழன் போல சிறுவயதில் அரசு கட்டில் ஏறியவர். 67 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்தார். பிரம்மாண்டமான கட்டிடங்களையும் தனது உருவம் கொண்ட சிலைகளையும் நிறுவினார். சிவபெருமான் போல தலை யில் நாகம் சூடியதால் இவரை ரமேசன் என்றும் கருதலாம். ராமசெஸ் என் ற பெயர்,  இந்துக்களின் தொடர்புக்குப் பின்னர் எகிப்தில் வந்தது. என்னுடைய கட்டுரைகளில் மிட்டன்னி மன்னன் தசரதன் எழுதிய கடிதங்கள், இரண்டு இந்துப் பெண்களை எகிப்திய மன்னனுக்கு கல்யாணம் முடித்தது, இரண்டு அம்மன் சிலைகளை அனுப்பியது பற்றி முன்னரே எழுதியுள்ளேன்.

 

இவர் பல பெண்களைக் கல்யாணம் கட்டினார். நூறு குழந்தைகளுக்கு மேலாகப் பெற்றெடுத்தார்

 

தான் வளர்த்த சிங்கக் குட்டீயுடன் போர்க்களம் ஏகினார். இவருடைய சிலைகளிலும், படங்களிலும் சிங்கத்தைக் காணலாம். HITTITES ஹிட்டைட் இனத்தாருடன் போரிட்டுத் தோற்றார். ஆனாலும் அதைப் பெரிய வெற்றி என்று சொல்லி, சில படைத் தலைவர்களுக்குப் பட்டமும் பரிசும் தந்தார்.

 

இவருடைய ஒரு உடைந்த சிலையைப் பார்த்து, ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி (P B Shelley) , ஒஸிமாண்டியாஸ் (Ozymandias)  என்ற கவிதை புனைந்தான்.

மூன்றாம் ராமசெஸ் (கி.மு. 1184-1153)

இருபதாவது வம்ச அரசன். இவனுடைய ஆட்சியில் டேரி எல் மெடினா என்ற இடத்தில் உலகின் முதலாவது தொழிலாளர் ஸ்டிரைக் நடந்தது. பலர் கூட்டாகச் சேர்ந்து மத்திய தரைக் கடல் வழியாக வந்து இவனைத் தாக்கினர். அந்த கடல் மக்களை (SEA PEOPLES) இவன் தோற்கடித்தான். கோவில்களுக்கு வாரி வழங்கினான். ஆனால் இறுதியில் அந்தப்புர அழகிகளின் சதியில் உயிர் இழந்தான்.

 

 

நாலாவது ராமசெஸ் (கி.மு.1153-1147)

 

முந்தைய மன்னரின் காலத்தில் துவங்கிய தொழிலாளர் ஸ்டிரைக்கை தீர்த்துவைத்தார். எகிப்திய கடவுளர் கோவில்களுக்கக நல்ல கற்கள் தேவை என்று எண்ணி கற்சுரங்க ஆய்வுகளை நடத்தினார். பல கோவில்களுக்கு இந்து மன்னர்களைப் போல மான்யம் வழங்கினார். அத்தனையையும் பபைரஸ்(Papyrus) புல் பேப்பரில் எழுதிவைத்தார். அதனால்தான் நாம் இவ்வளவு விவரங்களைப் பெற முடிகிறது. நீண்டகாலம் வாழ ஆசைப்பட்டாலும் ஆறே ஆண்டுகளில் இவர் ஆட்சி முடிந்தது.

 

ஐந்தாவது ராமசெஸ் (கி.மு. 1147-1143))

சென்ற மன்னர் காலத்தில் கோவில் அர்ச்சகர் இடையே ஊழல் மலிந்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இவர் பல சீர்திருத்தங்களைச் செய்தார். இவருடைய குறுகிய ஆட்சியில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை ஆயினும் இருபத்துக்கும் மேலா விருதுகளைத் தன் பெயருடன் சேர்த்து தம்பட்டம் அடித்துக்கொண்டார். இறுதியில் அம்மை நோய் கண்டு இறந்ததாகத்  தெரிகிறது.

 

இதோ அவரது விருதுகள்/ படங்களில் சில:–

 

வாழும் ஹோரஸ் தெய்வம்; பலமான காளை; வெற்றி மன்னன்; மேல், கீழ் எகிப்துகளைக் கட்டிக்காப்போன்; இரண்டு தேவதைகளின் அபிமானி; வீரசூரன்; மில்லியன் பேரை விரட்டியவன்; தங்க ஹோரஸ்; நாட்டில் வெற்றிடம் இருந்தால் தன் பெயரால் சின்னம் எழுப்பி, வெற்றிடத்தை நிரப்புவோன் — இன்னும் பல.

 

ஆறாவது ராமசெஸ் (1143- 1136 கி.மு.)

இவனது காலத்தில் கோஷ்டிப் பூசல் அதிகரித்தது.

ஏழாவது, எட்டாவது மன்னர்களின் காலத்தில் குறிப்பிடத் தக்க நடவடிக்கை ஒன்றும் நடைபெறவில்லை.

ஒன்பதாவது ராமசெஸ் (1126-1108 கி.மு.)

 

இவர் 17 ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்ததால் உருப்படியான காரியங்களைச் செய்ய அவகாசம் கிடத்தது. இவரது காலத்திலேயே – அதாவது இற்றைக்கு 3100 ஆண்டுகளுக்கு முன்னரே — கல்லறைகளைக் கொள்ளை அடிப்பது துவங்கிவிட்டது. அதில் விலை உயர்ந்த அணிகலன்கள் இருந்ததே காரணம்.. கல்லறை உடைப்புகள், அது தொடர்பான கோர்ட் கேசுகள் (Court Cases)  ஆகியன இவரது காலத்திலேயே துவங்கி  விட்டது

 

 

இவர் பழைய மன்னர்களின் மம்மி உருவ சடலங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றினார்.

பத்தாவது ராமசெஸ் பத்து ஆண்டுகள் ஆண்டார். பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.

 

பதினோராவது ராமசெஸ் (கி.மு.1097-1069)

கடைசி ராமசெஸ் மன்னர் இவர்தான். 27 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். கட்டுக்கடங்காத பழங்குடி மக்கள், இவருக்குத் தொல்லை கொடுத்தனர். தீப்ஸ்(THEBES)  நகர கோவில் குருக்கள்மார்கள், மிகவும் பணக்காரர்களாகவும், செல்வாக்குமிக்கவர்களாகவும் ஆகி அரசனையே கேள்வி கேட்கத் துவங்கினர். கோவில் அர்ச்சகர்களின் செல்வாக்கு ஓங்கியதால், மோதல் ஏற்பட்டது. ஒரு அர்ச்சகரை இந்த மன்னர் நாடு கடத்தினார். பின்னர் மற்றவர்களுடன் சமாதானமாகப் போனார். கல்லறைக் கொள்ளைகள் நீடித்தன.  இவரது கல்லறையையே இதுவரை கண்டுபிடிக்க  முடியவில்லை.

இதுதான் ராம்செஸ் மன்னர்களின் கதை.

 

–சுபம்–

மதுரை ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்! (Post No.3745)

1000 Pillar Mandap at Madurai Temple

Written by S NAGARAJAN

 

Date: 22 March 2017

 

Time uploaded in London:-  7-02 am

 

 

Post No.3745

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

10-3-2017 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்!

 

by ச.நாகராஜன்

 

 

நம்முடைய ஆலயங்களில் நமது முன்னோர்கள் பல அதிச்ய தொழில்நுட்ப அதிசயங்களைச் செய்துள்ளனர் என்பதை ந்வீன அறிவியல் கருவிகளின் மூலம் ஆராயும் போது தெரிய வருகிறது.

 

 

மதுரையில் பழங்காலந்தொட்டு இருந்து வரும் மீனாட்சி அம்மன் கோவில் அதிசயங்களையெல்லாம் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு மாபெரும் அதிசயமாகும்.

அவற்றில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம்.

ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் இருந்தாலும் கூட இதில் இருப்பது 985 தூண்கள் மட்டுமே!

இந்த மண்டபத்தின் தூண்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் படி அமைக்கப்பட்டிருப்பது ஒரு பெரும் அதிசயம்.

 

1983ஆம் ஆண்டு மதுரையின் பிரபல இ.என்.டி (தொண்டை காது மூக்கு மருத்துவ நிபுணர்) மருத்துவ நிபுணரான காமேஸ்வரன் ஒரு பெரும் குழுவுடன் இந்த மண்டபத்தை நவீன கருவிகளுடன் ஆராய்ந்தார்.

 

இந்த மண்டபத்தில் ஒலியைக் கட்டுப்படுத்தும் அற்புத கட்டிட உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை தன் ஆய்வின்  முடிவில் அவர் கண்டு பிடித்தார்.

முழுக் கோவிலுமே மிகுந்த ஜன சந்தடியுட்ன இருந்தாலும் கூட எப்போதாவது ஒரு முறை தான் 80 டெசிபல் என்ற அளவை எட்டுகிறது என்பது அவரது ஆய்வின் முடிவு.

1000 Pillar Mandapam at Madurai Temple

 

ஒரு அமைதியான் அறை அல்லது சூழலில் 40 டெசிபல் என்ற அளவில் ஒலி இருக்கும். ஜன சந்தடியுள்ள இடங்களில் 80 முதல் 85 டெசிபல் என்ற அளவில் ஒலியின் அளவு இருக்கும். ஒரு ஜெட் விமானம் மேலெழும்பும் போது விமான நிலையங்களில் 100 டெசிபல் என்ற அளவில் ஒலி இருக்கும்.

 

சாலையின் அருகே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அஷ்ட சக்தி மண்டபத்திலேயே 40 டெசிபல் தான் ஒலியின் அளவு இருக்கிறது!

 

இந்த குறைந்த அளவு ஒலி சிற்பிகளால் கோவிலுள் வருபவர்கள் அமைதியாக வழிபாடு ந்டத்தவும் தியானம் செய்யவும் வசதியாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது,

ஒரு நாளைக்கு சுமார் 5000 முதல் 6000 பேர்கள் வரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இதில் உச்ச கட்ட அளவாக ஒலியின் அளவு  70 முதல் 80 டெசிபலே இருக்கிறது.

 

 

இது எதைச் சுட்டிக்காட்டுகிறது என்றால் சிற்பிகள் ஒலி இயலில் மிகவும் தேர்ந்த நிபுணர்கள் என்பதைக் காட்டுகிறது.

இங்குள்ள பாலிஷ் செய்யப்படாத தூண்கள், ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் சாளரக் க்ட்டமைப்புகள், காற்று துவாரங்கள், மணடபத்தைச் சுற்றி திறம்பட அமைக்கப்பட்டிருக்கும் திறந்த வெளிகள் இவை யனைத்தும் ஒலியைக் கட்டுக்குள் வைப்பதற்கான அதிச்ய உத்திகளாகும்.

இந்த அமைப்புகளை நேர்த்தியான வடிவமைப்பின் அம்சமாக ஆக்கி அழகுடன் விஞ்ஞானத்தையும் இணைத்த சிற்பிகளின் அறிவு ஆச்சரியகரமான ஒன்று.

 

 

இப்போது நவீன் கட்டிடங்களில் ஒலியைக் கட்டுப்படுத்த செய்யப்படும் ஏற்பாடுகள் கட்டிடத்தின் அழகைக் குலைத்து கூரையிலிருந்து ஆங்காங்கே கீழே தொங்க விடப்படும் பல் அமைப்புகளைக் கொண்டுள்ளன.

 

ஆனால் ஆயிரங்கால்  மண்டபத்திலோ அழகுடன அறிவியல் இணைகிறது. ஒவ்வொரு தூணும் சுமார் 12 அடி உயரம் உள்ளது. ஒவ்வொரு தூணும் ஒரு வித வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒன்றில் சதுர அமைப்பு, ஒன்றில் ஒரு தேவதை, இன்னொன்றில் யாளி, இன்னொன்றில் ஆலயத்திற்கு சேவை செய்த குடும்பத்தின் உறுப்பினரில் ஒருவர் என்று சிறபம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறந்த உத்தியாகும்.

 

ஒரே அளவுள்ள தூண்கள் கணிதவியலின் அளவுப்படி சரியான் இடங்களில் துல்லியமாக நிறுவப்பட்டுள்ளன.

இந்த அத்தனை அம்சங்களும் சேர்ந்தே இதை ஒலியியல் அதிசயத்தின் உச்சகட்ட மண்டபமாக ஆக்கியுள்ளது.

 

இந்த மண்டபத்தின் மையத்தில் வீற்றிருக்கும் ஒருவரை மண்டபத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அவரை ஒரு தூணும் மறைக்காது என்பது பெரிய அதிசயம். வெவ்வேறு அகலம் மற்றும் நீளமுடைய 16 பகுதிகள் இந்தத் தூண்களைக் கொண்டு நேர்த்தியுடன் அமைக்கப்பட்டவையாக இருப்பதால் மண்டபமே உலகின் தலை சிறந்த அதிசய மண்டபமாக ஆகும் பெருமையைப் பெறுகிறது.

 

 

இந்த மண்டபத்தை ஆராய்ந்த தெரஸ் மேரி என்ற கிறிஸ்தவ கன்யா ஸ்தீரி தனது ஆய்வுக் கட்டுரையை பிரான்ஸிலுள்ள சார்ன்போர்ன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.

 

அவரை இந்தக் கட்டுரையாசிரியர் 38 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி கதிர் இதழுக்காகப் பேட்டி கண்ட போது இதன் அதிச்யங்களை ஒன்றன் பின் ஒன்றாக விவரித்து இது போன்ற ஒரு அதிசயத்தைத் தான் கண்டதில்லை என்றும் அதனாலேயே ஈர்க்கப்பட்டு இந்த ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

பல அதிசயங்களைக் கொண்டு ஆன்மீகத்துடன் அறிவியலை இணக்கும் இந்த மண்டபம் தமிழர்களின் கட்டிடக்கலையைச் சுட்டிக் காட்டி தலை நிமிர வைக்கும் மண்டபம் என்றால் அதில் சந்தேகம் இல்லை!

***                                                                (ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையை அவரே மொழியாக்கம் செய்து தரப்பட்டுள்ள கட்டுரை இது)

 

xxxx

 

 1000 Pillar Mandap at Hanumakonda

 

ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்தவர்

 

by ச.நாகராஜன்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் ஒரு பிரெஞ்சுப் பெண்மணி என்றால் ஆச்சரியமாயில்லை? இந்தச் சிறப்புக்குரியவர் மதுரை காமராஜ் பலக்லைக் கழகத்தில் பிரெஞ்சுத்துறைத் தலைவி சிஸ்டர் தெரஸ் மேரி ஆவார். கிறிஸ்துவ ‘நன்’னுக்கே உரிய தூய எளிமையான வெண்ணிற ஆடை, சிரித்த முகம்; குழந்தைகள் போல பால் பொங்கி நிற்கும்; அன்பை விளக்கும் இனிய மெல்லிய குரல். சிறிது நேரம்  பேசினாலும் நட்பிற்கு நிரந்தரப் பாலம் வகுக்கும் பண்பு. ஆழ்ந்த அறிவுடன் கூடிய அடக்கம். இவர் தான் தெரஸ் மேரி.

 

கிறிஸ்துவ மதத்தின் சாரம் பிரெஞ்சு தேசத்து சர்ச்சுகளில் சிற்பமாகவும் சித்திரமாகவும் இருப்பதை ஊன்றிக் கவனித்த இவர் இந்து  மதத்தின் சாரம் ஆலயங்களின் சிற்பத்திலும் சித்திரத்திலும் இருப்பதைக் கண்டார். மீனாட்சி அம்மன் கோவிலுள்ள ஆயிரங்கால் மண்பத்தை அணு அணுவாக ஆராய்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுடைய ஆராய்ச்சி உரை ஒன்றை எழுதி பாரிஸிலுள்ள சார்போர்ன் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து டாக்டரேட் பட்டத்தைப் பெற்றார்.

1000 Pillar temple at Moodbidri

“மண்டபம் சைவ, வைணவத்தின் மொத்தக் களஞ்சியமாக விளங்குகிறது. பல தூண்கள் பூர்த்தி செய்யப்படாமலும் சிறபங்கள் இல்லாமலும் இருக்கின்றன. இருக்கும் சிற்பங்களோ ஏராளமான புராண சம்ப்வங்களை விளக்கிக் காட்டுகின்றன” என்று கூறிய அவர் சிவனுடைய திருவிளையாடல்கள் அற்புதங்களை அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதை முக்கியமாகக் கூறுகிறார்.

 

 

1966-ல் இந்தியா வந்த இவர் முதலில் திருச்சியிலும் நாகர்கோவிலிலும் ஹோலி கிராஸ் கல்லூரியில் வேலை பார்த்து விட்டுப் பின்னர் மதுரை பல்கலைக் கழகப் பிரெஞ்சுத் துறைக்கு வந்ஹார். பிரெஞ்சு கற்றுக் கொடுப்பதில் மறக்க முடியாதவராக ஒரு  மாணவியைக் குறிப்பிடுகிறார் இவர். இந்துமதி என்ற அந்த மாணவி பிரெஞ்சு மொழியில் இருந்த ஒரு துணைப்பாட நூல் முழுவதையும் மனப்பாடமாக எந்த வரியிலிருந்து கேட்டாலும் ஒப்பிப்பாராம்.. அபாரமான அவரது நினைவுத் திறனை இவரால் இன்னமும் வியக்காமல் இருக்க  முடியவில்லை.

 

 

மதர் தெரஸாவைச் சந்தித்த சம்பவம் இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. மதுரை பாத்திமாக் கல்லூரியில் மதர் தெரஸா பேசுகையில், பங்களா தேஷில் சேவை புரிய வருமாறு அறைகூவல் விடுத்தார். அவரது பேச்சைப் போற்றச் சென்ற இவரிடம் , “நீங்கள் பங்களாதேஷ் வர வேண்டாம்” என்று கூறி விட்டார் மதர் தெரஸா. காரணம்? “நீங்கள் அங்கு வந்தால் சேவை புரிய இரண்டு கரங்களே எனக்குக் கிடைக்கும். ஆனால் இந்தப் பல்கலைக் கழகப் பொறுப்பினாலோ இந்தச் சேவை உணர்வை உங்களிடமிருந்து பலர் பெறும் போது பல நூறு சேவைக் கரங்கள் உருவாகும். ஆகவே தான் பங்களா தேஷ் வர வேண்டாம் என்கிறேன்” என்றாராம் தெரஸா. “அவர்து இந்தப் பதிலால் எனது பணியை ஒரு புது நோக்கிலே காண – உணர என்னால் முடிந்தது: என்கிறார் இவர்.

 

 

“கடவுளிடம் அர்ப்பணிக்கும் மனப்பான்மையுடன் கூடிய சேவையின் மூலம் மத் எல்லையைக் க்டந்து நாம் ஒருவரை ஒருவர் நெருங்குகிறோம். இதுவே வாழ்க்கையில் நான் கற்ற பாடம்” என்று கூறும் இவர் கீதை உபநிடதத்தை ந்ன்கு படித்திருக்கிறார்.

 

ஆண்டுக்கு ஒரு முறை அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு பெரிய முகாம் நடத்தி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்த முயற்சி செய்யும் இவருக்கு ஒரே ஒரு ஆசை – “குழந்தைகளுக்கான கிராமம்” ஒன்றை உருவாக்க வேண்டும் எனப்து தான்.

 

 

தையலும், இசையும் இவரது பொழுதுபோக்குகள். லத்தின், தமிழ் (கொஞ்ச்சம் கொஞ்ச்சம் தெரியும்) ஆங்கிலம் உட்படப் பல மொழிகள் அறிந்தவர் இவர் ஆயிரங்கால் மண்டப ஆய்வுரையை பிரெஞ்சு இலக்கியத்திற்கு அளித்த 51 வயதான இப் பெண்மணி ஒரு ‘குழந்தைகள் கிராமத்தை’ உருவாக்க எண்ணும் குழந்தை உள்ளம் கொண்டவராக இருப்பதை அறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பேட்டி : கிருஷ்ணபிரகாஷ்

Mayan 1000 Pillar Temple in Mexico

 

கட்டுரை பிறந்த கதை

 

22-9-78 தினமணி கதிர் இதழில் முதல் பக்கத்தில் வெளியான இந்தக் கட்டுரை எழுதப்பட்ட விதத்தை இங்கு நினைவு கூர்கிறேன்.

 

1978இல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பகுதி நேரப் படிப்புகள் தல்லாகுளம் தாண்டி புதூர் சாலையில் இருந்த ஒரு வளாகத்தில் மாலை நேரத்தில் நடை பெற்று வந்தன. அதில் பிரெஞ்சு மொழி படித்து வந்த எனது இளைய சகோதரர் திரு சுவாமிநாதன் என்னிடம் தெரஸ் மேரியைப் பற்றிக் கூற அவரைக் காண ஆவல் எழுந்தது.

 

அந்தச் சமயம் தினமணி கதிர ஆசிரியப் பொறுப்பில் இருந்த திரு கே.ஆர்.வாசுதேவன் (தற்போதைய அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி. டாக்டர் மைத்ரேயன் இவரது புதல்வர்) எனது இல்லத்திற்கு வந்தார். அவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னிடம், “இதை ஒரு பேட்டிக் கட்டுரையாக அனுப்பேன்” என்றார்.

 

 

தெரஸ்மேரி அவர்களை ஒரு நாள் மாலை நேரத்தில் சந்தித்து ஆயிரங்கால் மண்டபத்தின் பெருமையை விரிவாக அறிந்து கொண்டேன்.

 

பேட்டிக் கட்டுரை வெளியான் பின்னர் சில நாட்கள் கழித்து மகிழ்வுடன் அவர் தந்த ஃஃபீட் பேக் : இந்தக் கட்டுரையைப் பார்த்து விட்டு ஹிந்து உள்ளிட்ட பல பத்திரிகைகள் அவரைப் பேட்டி கண்டனவாம். : .

 

பேட்டிக் கட்டுரை எனது புனைபெயரில் வெளியானது.

 

xxxxx

 

1000 Pillar Mandap at Chichenitza, Mexico

Previous Articles on 1000 Pillar Mandap and Madurai Meenakshi Temple in my blogs:-

 

1).Vedic Origin of Thousand Pillar Halls in Indian and Mayan Culture!; posted on 5 July 2014

2).Acoustic Marvel of Madurai Temple; posted on 12 May 2013

3).Musical Pillars in Hindu Temples; posted on 12 May 2013

4).The Wonder that is Madurai Meenakshi Temple; posted on 29 September 2013

 5).Madurai Temple Photos; posted on 31 May 2013

6).MADURAI TEMPLE VAHANA PICTURES; posted on 2 June 2013

7).21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?; posted on 30 May 2013

8).Tirupparangkundram Temple Pictures; posted on 31 May 2013

9).உலக அதிசயம்: 1000 கால் மண்டபம் !! posted on 6 July 2014

 

10).Who is Dhananjayan? posted on 12 January 2013 (about Madurai temple)

 

11).Thousand Pillar Hall – An Acoustic Marvel in Madurai Meenakshi Temple(Post No.3632); posted on 13 February 2017

 

–SUBHAM–

11 Egyptian Kings with Same Name: Ramesses! (Post No.3744)

Written by London swaminathan

 

Date: 21 March 2017

 

Time uploaded in London:- 19-38

 

Post No. 3744

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

Egypt has many wonders such as the Pyramids and Sphinxes; over 100 pyramids and several sphinx statues! Apart from the gigantic monuments, the history of Egypt itself has many wonders. One of the wonders is the long reigns of the kings. Historians around the world allocate 20 years for every king on an average. But Egyptian kings ruled for 90 years, 80 years, 70 years, 60 years according to historians. This is incredible and impossible. Just to create excitement and interest, historians, like our tourist guides, created lot of stories. When Kalhana, author of Rajatarangini, said that the kings  Pravrasena, Siddha, Hiranyakula, Vasukula, Baka, Nara, Gopaditya and Aksa  ruled for 60 years each, the historians did not believe him and never entered them into our history books. Same Kalhana in his Rajatarangini, gave Mihirakula 70 years reign and a Tamil verse gave Karikal Choza 83 years  which the historians ridiculed. But in Egypt’s case, they believed whatever said by the people who lived 3000 years after them! This is business; tourist business; Book writers make millions and tourism industry is making billions.

Here is the breakdown of reign by some famous ancient Egyptian kings:-

Pepi II – ruled for 94 years! became king at the age of six and died at the age of 100!

Ramesses II – 64 years

Narmer – 64 years

Aha (Hor) -64 years

 

In fact, history was first written by the Hindus in their mythologies (Purana). No religious scripture in the world includes history as a compulsory section. But Hindu Puranas must have a section called Dynasties of the Kings. This is one of the five sections of all the Puranas.

 

When the historians found out lot of discrepancies in the Sumerain King list given by Berossus and others, in the Egyptian king lists given by Manetho and others, they made lot of patch work, additions, omissions and commissions, and presented a “full history”.

 

When the Puranas gave a long list of kings, which even Megasthanes believed, they simply did not enter it into History books. When the Hindu Panchang (almanac) gave the official beginning of Kaliyuga as 3102 BCE, they ridiculed it. But they began all the histories including Chinese, Mayan, Babylonian, Egyptian histories from 3000+ BCE. They didn’t even know that it was the starting year of the Kaliyuga. All histories around the world began in a year very close to Kaliyuga!

 

11 Kings with same name!

Hindus are the ones who have the highest number of similar names in the list of kings. VIKRAMADITYA is used by several kings from Kanyakumari to Kashmir for over 2000 years. Probably Egypt comes next with 11 kings holding the same name Ramesses.

The name itself sounds very interesting; knowledgeable people and greatest ascetic of modern times Kanchi Paramacharya (1894-1994) think that there is a Hindu influence of Ram; others think it may be Lord Shiva, because all Ramesses kings have snake over their heads like Lord Shiva. there is a reason to believe in such theories because all these came only after Hindu contacts.

( Please see encyclopaedias for more details about Dasaratha letters, Amarna letters and Mitanninan Hindu king’s daughters marriage with Egyptian kings and sending two goddesses statues (Durga or Lakshmi?) to Egyptian Pharaoh etc).

Now let us look at some interesting details about these 11 kings:

Ramesses I (1295-1294 BCE)

He was a soldier turned Pharaoh! ruled only for one and half years. He was the founder of the Nineteenth Dynasty.

Ramesses II (1279 – 1213 BCE)

He ruled Egypt for 67 years! He became a king when he was twenty years old. He was famous for his huge statues. He built gigantic structures, most of them containing huge representations of himself!

He had several wives and had over 100 children! He beat Hindu Dasaratha in marriage and Hindu Kuchela (Sudhama) in fathering children!

He was always portrayed with his pet lion in battlefields. He fought a war with the Hittites at the city of Qadesh, but was defeated. But like modern politicians, he depicted the outcome of the war as a big victory according to his inscriptions. His temple is in West Thebes and called Ramesseum. English poet Shelly wrote Ozymandias based on Ramesses’ broken statue.

 

Ramesses III (1184 BCE – 1153)

World’s first labour strike happened during his reign at Deir El Medina. He had to deal with the invasion of Sea Peoples. He defeated them and inscribed it at his temple in Medinet Habu. He died because of a harem plot. He might have been murdered.

Like Hindu Kings he made lot of grants to Egyptian temples. They are all recorded on papyrus by his successor and it is known as The Great Harris Papyrus.

Ramesses IV (1153-1147 BCE)

He settled the labour dispute which began in the previous king’s period. He did many mining expeditions to get good stones for the temples. He prayed to Gods that he should also live like his predecessor. But Gods had different plans and he died in the sixth year of his rule.

Ramesses V (1147-1143 BCE)

Corruption among temple priests grew in his time. An enquiry was ordered and the corruption was exposed. Ruled only for five years.

He had a long list of hollow titles:

Living Horus (god of Egypt)

Mighty bull

Great in Victory

Sustaining the two lands (Upper and Lower Egypt)

Favourite of the Two Goddesses

Mighty in Strength; repulser of Millions

Rich in Years

Protector of Egypt

Filling Every Land with Great Monuments in His Name

Son of Re (Solar God)

Lord of Diadems and several more!!

 

Ramesses VI (1143-1136)

It is thought that he came to rule because of an insurrection against his father Ramesses V.

Ruled only for a brief period.

Ramesses VII (1136-1129BCE)

Little is known about his rule; prices rose alarmingly and people became angry. He ruled for seven years.

Ramesses VIII (one year rule)

He ruled for one year.

Ramesses IX (1126-1108 BCE)

He ruled for 17 years. He built extensively and gave special attention to Heliopolis (Surya Puri). During his reign pillaging of royal and private tombs came to light. Even 3000 years before our time such scandals happened. Since there were treasures in tombs, people started plundering them. He ordered an investigation into the scandals and moved the mummies of the kings to a safer place.

Ramesses X

Ruled for ten years. Nothing remarkable happened.

Ramesses XI (1097- 1069 BCE)

He was the last of the Ramessid kings, the eleventh of the name, proved to be one of the longest lasting, reigning for twenty-seven years. He had to tackle the attacks of tribesmen. Priests in Thebes became very powerful and challenged his authority. He even sent one priest out of the country. Priests of God Amun became richer and more powerful than kings! Number of tomb robberies were recorded and court investigations launched. Kings were slowly losing control from his time.

Source: Who is who in Ancient Egypt by Michael Rice.

My Research Articles on Egypt

Please Read my earlier Posts:—

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

Vishnu in Egyptian Pyramids (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

Hindu Mudras in Egyptian and Sumerian Statues (Posted on 7 October 2012)

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)
 

 

–Subham–