Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிராகிருத மொழி பற்றிய குறிப்பு
சம்ஸ்க்ருதம் என்பது இலக்கிய மொழி வழக்கு ; பிராகிருதம் என்பது பேச்சு வழக்கு ; காளிதாசனின் புகழ் மிகு சம்ஸ்க்ருத நாடகங்களில் பெண்களும் ஊழியர்களும் பிராகிருதத்தில் கதைப்பார்கள்; புலவர்களும் மன்னர்களும் புரோகிதர்களும் சம்ஸ்க்ருதத்தில் பேசுவார்கள். சம்ஸ்க்ருதம் அறிந்த எவரும் ப்ராக்ருதத்தைப் புரிந்து கொள்ளலாம் ; ஆர்ய என்பதை அஜ்ஜ என்பார்கள்; அது தமிழில் அய்யர் என்றாகிவிடும்! இதைப்புரிந்து கொள்ள திருவிளையாடல் என்னும் திரைப்படம் உதவும் ; சிவாஜி கணேசன் விறகுவெட்டியாகப் பேசுவது தமிழ் பிராகிருதம் ; அவரே புலவராகப் பாடுவதும் பேசுவதும் தமிழ் சம்ஸ்க்ருதம். தமிழ் நாவல்கள் , சினிமாப்பாட்டுகள் பிராகிருதம்; பாரதியார் கண்ணதாசன் கவிதைகள் தமிழ் சம்ஸ்க்ருதம் ; இதனால் ஹால போன்ற மன்னரின் காதா சப்த சதி இதில் உள்ளது ; ஆயினும் அறுபது கவிஞர்களுக்கு மேலேயும் நாம் இந்தக் கட்டுரைத்தொடரில் காணப்போகிறோம்.
18.தாமோதர மிஸ்ரா
ஹநுமான் நாடக என்னும் நூலை எழுதியவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. இந்த நாடகத்தில் 14 காட்சிகள் / அத்தியாயங்கள் உள்ளன ராமபிரான் பிறப்பிலிருந்து ராவணாவதம் வரையுள்ள இதில் ஆறாவது அங்கத்தில் அனுமான் தூதராக அறிமுகப்படுத்தப்படுகிறார் ; அதிகமான அங்கங்கள் இருப்பதால் இது மஹாநாடகமென்ற பிரிவில் உள்ளது
19.தனேஸ்வர
பிராகிருத சூரசுந்தரி நாவலை கவிதை வடிவத்தில் எழுதினார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு.
19.தர்மகீர்த்தி
பெளத்த சமய தத்துவ வித்தகர் ; காலம் ஏழாம் நூற்றாண்டு
நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் பிராமாணவார்த்திகா என்ற பெரிய தத்துவ நூலை எழுதினார் இவர் தென்னிந்தியாவில் பிறந்த பிராமணர் என்றும் குமாரிலபட்டரின் உறவினர் என்றும் திபெத்திய படைப்புகள் கூறுகின்றன.
20.திவாகர
ஹர்ஷ மன்னர் அரசவைப் புலவர்களில் ஒருவர் . காலம் ஏழாம் நூற்றாண்டு. மாதங்க திவாகர சண்டாள/ தலித் குலத்தில் பிறந்தவர் ; ஹர்ஷரின் அரசவைப் புலவர்களில் ஒருவர் ; ஜாதி வேறுபாடுகள் அக்கால இந்தியாவில் இல்லை என்பதற்கு இவர் எடுத்துக் காட்டு.
21.ஹர்ஷ 606-647 CE
மன்னர்களில் புலமை பெற்ற ஆசிரியர்- எழுத்தாளர் இவர் ; புலவர்களை எல்லாம் ஆதரித்த மன்னரே ரத்னாவளி, ப்ரியதர்சிகா, நாகானந்தம் ஆகிய புகழ்பெற்ற நாடகங்களை எழுதினார்.
22.மஹேந்திர வர்மன் 600-630 CE
மிகப்பெரிய புலவன் ; மாமன்னன்; ஓவியன் ; கலைஞன் . நாடக ஆசிரியன் ;இவன் எழுதிய மத்தவிலாஸ பிரஹசணம் என்ற நாடகம் சம்ஸ்க்ருத மொழியில் எழுந்த நல்ல நகைச்சுவை நாடகம் ; புத்தமதம் மற்றும் காபலிக மதம் ஆகியன எப்படிச் சீரழிந்தன என்பதைக் காட்டும் நாடகம் இது ; ஓவியக்கலையில் வல்ல மன்னன் பல குடைவர்க் ரை கோவில்களையும் தோற்றுவித்தான் ; அப்பர் பெருமானால் மீண்டும் சைவ சமயத்துக்குத் திரும்பினான்; சிம்ம விஷ்ணுவின் மகன்.
23. போதாயன
இவனது காலத்தில் போதாயனஎன்ற ஆசிரியர் பகவத்தாதஜுகம் என்ற இன்னும் ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதியதை மன்னரே மாமண்டூர் கல்வெட்டில் கூறியுள்ளார்
During his period “Bhagwatajjukam”, another satire (prahasan), was written by Bodhayan. King Mahendravarman mentioned this on a stone inscription in Mamandur along with his own Mattavilas Prahasan
1400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சம்ஸ்க்ருத மொழி எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. காஞ்சிபுரத்தில் இருந்த பல்கலைக் கழகம் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் ஒருங்கே வளர்த்தன . அப்பர் பெருமான் பாடல்களில் தமிழின் வளர்ச்சியைக் காணலாம். அவர் சங்க கால பிராமண நக்கீரன்- பிராமணப் புலவன் தருமி ஆகியோருக்கு இடையே நடந்த மோதலையும் பாடலில் குறிப்பிடுகிறார்.சேர நாட்டைச் சேர்ந்த ஆதிசங்கரர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதியதை கணக்கிட முடியாது.
24.கோவிந்தா
ஸ்வயம்பூசந்தஸ் என்ற நூலில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவை அபிப்பிராம்ச என்னும் கிளை மொழியில் உள்ளது காலம் எட்டாம் நூற்றாண்டு
25.ஹால
சாதவாகன மன்னனர்; காதல் கவிதைகளை பிராகிருதம் மொழியில் தொகுத்தார். காதா சப்த சதி என்னும் பெயரில் எழுநூறு கவிதைகள் உள்ளன. காலம் இரண்டாம் நூற்றாண்டு
26.ஹரிபட்ட
புத்தமத துறவி; ; காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ; காலம் 12ஆம் நூற்றாண்டு; ஆர்யசுராவின் ஜாதகமாலை போல இவர் முப்பத்து நான்கு கதைகளை ஜாதகமாலை என்ற பெயரில் பாடல் வடிவில் கூறியுள்ளார்
27.ஜகந்நாத
ஷாஜஹான் ஆண்ட காலத்தில் வாழ்ந்த இவர் பாமினி விலாச, ரசகங்காதாரே முதலிய பல நூல்களை எழுதினார் ; காலம் 17ஆம் நூற்றாண்டு.
28.ஜயதேவ
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற நூலின் அஷ்டபதி பாடல்களை இன்றும் பஜனைகளில் கேட்கலாம். நாயகன்- நாயகி பாவத்தில் கிருஷ்ணனைப் புகழும் பாடல்கள் அவை. புத்தரை பத்தாவது அவாதாரங்களில் ஒன்றாகப் புகழ்ந்து புத்த மதத்தைக் கபளீகரம் செய்த பெருமை உடையவர் ; காலம் 12 ஆம் நூற்றாண்டு
29.கலசக
காஷ்மீர் மன்னர்- புலவர் – காலம் பத்தாம் நூற்றாண்டு
30.குதுகால
லீலாவதி என்ற பிராகிருத நூலை எழுதியவர் ; காலம் எட்டாம் நூற்றாண்டு
31.க்ஷேமந்திர
காஷ்மீர் புலவர்; பல்மொழி வித்தகர் காலம் 11ஆம் நூற்றாண்டு.
காஷ்மீர் மாநிலப் புலவர்களில் மிகவும் பிரபலமானவர் க்ஷேமேந்திரா; இவர் புலவர் மட்டுமல்ல; நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் கூட . இவரை வால்டேருக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்துள்ளார் கல்ஹணரின் ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆர் எஸ் பண்டிட். க்ஷேமேந்திரா , குணாத்யர் எழுதிய பிருஹத் கதாவை சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்தார் தன்னை வியாஸதாஸர் என்று அழைத்துக்கொண்டார் மஹாபாரதத்தை கவிதை வடிவில் பாரத மஞ்சரி என்ற பெயரில் எழுதினார் . ஏனைய நூல்கள் – நார்மமாலா, கவி கண்டாபுரண , சமய மாத்ரிகா . ஒரு வேசியின் துணிகரச் செயல்களைக் கூறும் கவிதை சமய மாத்ருகா நூலாகும்.
32.க்ஷேமீஸ்வர
கூர்ஜர பிரதிகார மன்னர் மஹீபால காலப் புலவர் ; சந்திரகெளசிக, நைஷதந்த போன்ற நாடகங்களின் ஆசிரியர்; காலம் பத்தாம் நூற்றாண்டு
33.குமாரதாஸ
ஜானகிஹரண என்ற காவியத்தைப் படைத்தவர் ; காலம் ஏழாம் நூற்றாண்டு
34.மாக
மிகவும் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவர் ; சிசுபாலவதம் என்ற காவியத்தை எழுதியவர்; காலம் ஆறாம் நூற்றாண்டு
To be continued…………………………..
Tags- மாக, க்ஷேமந்திர, நாடக ஆசிரியர்கள், சம்ஸ்க்ருத மழை, பகுதி 3, கவிஞர்கள் ஜயதேவ , கீத கோவிந்தம் , மஹேந்திர பல்லவன், கால, ஹர்ஷ, பிராகிருதம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
21-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை
நீடித்து வாழ சுவாச ரகசியம்!
ச. நாகராஜன்
பூவுலகில் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் இயற்கையாகத் தாமே செய்வது சுவாசிப்பது என்னும் இன்றியமையாத செயலாகும்.
உணவில்லாமல் சில நாட்கள் கூட இருக்க முடியும். ஆனால் காற்றை சுவாசிக்காமல் நான்கு நிமிடங்களுக்கும் மேல் இருக்க முடியாது. ஆறு நிமிடங்கள் இருந்தால் அது ஒரு அதிசயமே
ஒரு நாளைக்கு 25000 முறை சுவாசிக்கிறோம். இந்த சுவாசித்தலுக்கும் ஒருமுனைப்பட்ட கவனத்திற்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் உண்டு. சுவாசம் சரியில்லையேல் கவனமும் இருக்காது; உடல் இயக்கங்களும் பாதிக்கப்படும். சுவாசம் சீரற்றதாக இருந்தால் மனமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
ஆனால் நமக்குத் தெரியாமலேயே மூன்றில் ஒரு பங்கு சுவாசிக்கும் திறனையே நாம் பயன்படுத்துகிறோம்.
ஆகவே தான் ஆசனப் பயிற்சியும் தியானமும் நமது முன்னோர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
பதஞ்சலி முனிவர் இதை வெகு அழகாக விளக்கிக் கூறுகிறார்.
உடலையும் மனதையும் பேணி நீடித்து வாழச் செய்வது சுவாசமே.
ஆழ்ந்த சுவாசம், பிராணாயாமம் ஆகியவை ஆயுளை நீட்டிக்கும் வழிகளாகும்.
இன்னொரு ரகசியமும் சுவாசத்தில் உண்டு.
ஸ்வரோதய விஞ்ஞானம் என்ற நமது சாஸ்திரத்தின் படி மூச்சுக் கலையை வைத்து ஜோதிடமும் கூறலாம்; நமது காரியங்களில் சுலபமாக வெற்றியும் பெறலாம்.
நன்றாக சுவாசிப்பது உடலில் இருக்கும் அழுக்குகளையும் மலங்களையும் நீக்குகிறது என்பதை பதஞ்சலி மகாமுனிவர் வலியுறுத்திக் கூறுகிறார்.
நமது முன்னோர்கள் மூச்சைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து அதை விளையாட்டுகளில் கூடப் புகுத்தி விட்டார்கள்.
எடுத்துக்காட்டாக சடுகுடு எனப்படும் கபடி விளையாட்டை எடுத்துக் கொள்வோம். எவர் அதிகமாக மூச்சைப் பிடித்து விளையாடுகிறாரோ அவர் தான் ஜெயிப்பார்.
இதே போலவே ஹாக்கி, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளிலும் இந்த மூச்சு பிடிப்பது அவசியமே. வின்னிங் ஷாட் எனப்படும் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி தருணங்களில் இந்த சுவாசக் கட்டுப்பாடே வெற்றியைத் தரும்.
மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மனதையும் உடலையும் சீராக வைக்க உதவுகிறது.
சுவாசமே உயிர்; நன்கு சுவாசித்தால் பூமியில் நீண்ட காலம் வாழலாம் என்கிறது ஆன்றோர் மொழி!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 18
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
World Telugu Conference,
Vandemataram , Urdu poem, Earth Conference, Birds of India, Swamp Deer, Dr Hari Sing Gour, Arunagiri nathar, Paramahamsa Yogananda, Vir Chakra Medal, Industries emblem, Bird Sanctuary, Maharaja Agrasen, Film Festival, Coconut Research, Mahila Vidyapeeta, Blood Donation
–Subham—
Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 18, Vandemataram , Urdu poem, Earth Conference, Birds of India, Swamp Deer, Dr Hari Sing Gour, Arunagiri nathar, Paramahamsa Yogananda, Vir Chakra Medal, Industries emblem, Bird Sanctuary, Maharaja Agrasen, Film Festival, Coconut Research, Mahila Vidyapeeta, Blood Donation
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான மருத்துவ நூல்கள் சரக சம்ஹிதையும் சுஸ்ருத சம்ஹிதையும் ஆகும்; இவற்றில் சம்ஸ்க்ருத மொழியில் கண்டுள்ள மருத்துவ விஷயங்கள் அந்தக் காலத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை . அதற்கும் முன்னதாக அதர்வ வேதத்தில் பல மருத்துவச் செய்திகள் இருந்தபோதிலும் அவை ஒரு சில தகவலே ஆகும். மேலும் வேத கால இலக்கியங்கள் சமய நூல்கள்; மருத்துவ நூல்கள் அல்ல .
மூன்றாவது முக்கிய நூல் அஷ்டாங்க ஹ்ருதயம் ஆகும் . இது தவிர வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரத்திலும் மருத்துவச் செய்திகள் உள்ளன .
****
சீனாவில் அதிசயக் கண்டுபிடிப்பு
வடமேற்கு சீனாவில் குச என்னும் நகரில் ஒரு புத்த விஹாரத்தில் புதைக்கப்பட்டிருந்த சமஸ்க்ருத ஆயுர்வேத சுவடிகளை போயர் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்; ஏழு பகுதிகளாகக் கிடைத்த இந்த சுவடிகளில் உள்ளிப் பூண்டின் மகத்துவம் முதலியன விவரிக்கப்பட்டுள்ளன . இவை குப்தர் கால லிபியில் எழுதப்பட்டுள்ளதால் குறைந்தது 1600ஆண்டுகள் பழமை ஆனவை; பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹாமில்டன் போயர் Hamilton Bower இவைகளைக் கண்டுபிடித்தார் (The Bower Manuscript is a collection of seven fragmentary Sanskrit treatises found buried in a Buddhist memorial stupa near Kucha, northwestern China.)
மூன்று முக்கிய நூல்களில் என்ன உள்ளன என்பதைக் கண்டால் அவைகளின் வீச்சு , தாக்கம் நமக்குத் தெரியும்
சரக 1-30-31, சுஸ்ருத 1-1-7, அஷ்டாங்க ஹ்ருதய 1-1-5 நூல்களில் பொதுவான எட்டு அத்தியாங்கள் உள்ளன. அவையாவன-
1.உள்ளுக்குள் கொடுக்கப்படும் மருந்து – காய சிகித்சா
2.குழந்தை மருத்துவம் – பால சிகித்சா- கெளமார பிருதிய
3.மனம் தொடர்பான மருத்துவம் – பூத வித்யா அல்லது கிரஹ சிகித்சா
4.சிறிய அறுவைச் சிகிச்சைகள் – சாலக்ய தந்த்ர
5.அறுவைச் சிகிச்சை- சல்ய தந்த்ர
6.விஷமருத்துவம் – அகாத தந்த்ர
7.முதியோர் மருத்துவம்- ரசாயன தந்த்ர
8.பாலுணர்வுக்கு உதவும் காம ரஸ குளிகைகள்.
இதில் அறிவியல் அணுகுமுறையைக் காணலாம் குழந்தைப் பருவ , இளமைப்பருவ, முதியோர் பருவ நோய்களை அத்தியாயம் அத்தியாயமாக அணுகுகின்றனர்; மேலும் இளைஞர்களுக்குத் தேவையான குளிகை விஷயங்களும் பேசப்படுகின்றன.
மேற்கண்டவை பொதுவான அணுகுமுறை ஆகும்
****
குறிப்பாக எட்டு அத்தியாயங்களை சரக சம்ஹிதையில் காண்கிறோம்:
அத்தியாயம் 1 – சூத்ர ஸ்தான – பொதுவான மருத்துவ விதிகள்
2.நிதான ஸ்தான- நோயின் காரணம் (அ) தோற்றம் பற்றிய ஆய்வு
3.விமான ஸ்தான – நோயின் அறிகுறிகள் – சுவை – பத்தியம்
4.சரீர ஸ்தான- கருவுருதல், உடற்கூறுகள்
5.இந்திரிய ஸ்தான- நோயைக் கண்டுபிடித்தல்
6.சிகித்சா ஸ்தான- சிகிச்சை அளிக்கும் முறைகள்
7.கல்ப ஸ்தான – என்ன என்ன மருந்துகள் கொடுக்கலாம்.
8.சித்தி ஸ்தான- பேதி மருந்துகள்; அசுத்தங்களை உடலிலிருந்து அகற்றும் முறைகள்
****
சுஸ்ருத சம்ஹிதை அத்தியாயங்கள்
சூத்ர, நிதான, சரீர, சிகித்சா, கல்ப ஆகிய ஐந்து ஸ்தானங்களை வைத்துக்கொண்டு ஆறாவது அத்தியாமாக உத்தர ஸ்தானம் என்று ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது; இதில் மூக்கு அறுவைச் சிகிச்சை, மனக்கோளாறுகள், குழந்தை நோய்கள், பொதுவான மருத்துவக் கொள்கைகள்/விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் திரிதோஷ – வாத ,பித்,த கப — அணுகுமுறை பொதுவாக இருக்கிறது இதை வள்ளுவர் குறளிலும் காண்கிறோம் .
****
சீனாவில் கண்ட சம்ஸ்க்ருத சுவடிகள்
போயர் கண்டுபிடித்த சுவடிகளில் நவநீதகம் , சித்த சங்கர்ஷ என்ற இரண்டு நூல்களின் துண்டுப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன . அதில் 13 விஷயங்கள் காணப்படுகின்றன-
1.சூர்ணங்கள் தயாரிப்பது எப்படி?
2.நெய்யை மருத்துவ முறையில் பக்குவப்படுத்தல்
3.மருத்துவ எண்ணெய்கள் / தைலங்கள்
4.எனிமா – மலக்குடலை தண்ணீர் செலுத்திக் கழுவும் முறை
5.ஊட்டச்சத்து / டானிக்
6.கஞ்சி வகைகள்
7.காம உணர்வுக்கான குளிகைகள்
8.கண் மை/ அஞ்சனம்
9.தலை முடிக்கு சாயம்
10.கடுக்காய் மருத்துவம்
11.தார் – கரிப்பிசின் பயன்கள்
12.சித்ர மூலம் குணங்கள்
13.குழந்தை மருத்துவம்
****
சுவையான விவரம்
அமிர்தத்தைத் திருடிய அசுரர் தலைகளை விஷ்ணு வெட்டி வீழ்த்தினார் என்றும் அந்தத் தலைகள் விழுந்த இடத்தில் உள்ளிப்பூண்டுகள் விளைந்ததால் அவைகளை பிராமணர்கள் சாப்பிடமாட்டார்கள் என்றும் ஒரு சுவடியில் உள்ளது ; அதில் உள்ளிப்பூண்டுகளை வீட்டில் தொங்கவிடும் விழா பற்றியும் இருக்கிறது!
–subham—
Tags- சீனாவில் ,சம்ஸ்க்ருத சுவடிகள் , நவநீதகம் , சித்த சங்கர்ஷ, மேஜர் ஜெனரல் ஹாமில்டன் போயர், மூன்று முக்கிய மருத்துவ நூல்கள், சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8.பாண
ஹர்ஷ மாமன்னனின் அரசவைப் புலவர் பாண .
ஹர்ஷ சரித என்ற புஸ்தகத்தில் ஹர்ஷரின் வாழ்க்கையைத் தந்தார். காதம்பரி என்னும் காதல் காவியத்தையும் எழுதினார். சம்ஸ்க்ருதத்தில் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் வரிசையில் இவரே சிறப்பான இடத்தைப் பெற்றவர் .
காலம் – ஏழாம் நூற்றாண்டு.
****
9.பாரவி
பல்லவர் காலத்தில் வாழ்ந்த பெரிய ஸம்ஸ்க்ருதப் புலவர். கிராதார்ஜுனியம் என்னும் காவியத்தைப் படைத்தவர். பிற்காலப் புலவர்களின் பாராட்டினைப் பெற்றவர்; ஐஹோல் கல்வெட்டில் 634 CE காளிதாசனுடன் இவரையும் புகழ்ந்துள்ளனர் ; காலம் ஆறாம் நூற்றாண்டு.
****
10.பர்த்ருஹரி
சதகத்ரயம் என்ற முன்னூறு நீதிநெறிப்பாடல்களைப் பாடியவர் . நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்காரசாதகம் , ஆகிய மூன்று பிரிவுகளை உடையது இது. இவை மூன்றும் திருக்குறளுக்கு இணையான நீதி நூல் . காலம் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டு.
****
11.அனந்த
இவரது காலம் பத்தாம் நூற்றாண்டு. காஷ்மீரை ஆண்ட மன்னர்களில் ஒருவர். சார்ங்கத்தர பத்ததி என்ற நூலில் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது சாரங்கத்தரன் என்ற ஆசிரியர் 280 கவிஞர்களின் கவிதைகளை 1363-ல் தொகுத்தார் ; அந்த நூலில் ஹடயோகம் பற்றிய முக்கியக் குறிப்புகள் உள்ளன.
****
12.பட்ட நாராயண
மஹாபாரதப் போரை வருணிக்கும் வேணி சம்ஹார என்ற நாடகத்தை எழுதினார் . கூந்தலை முடித்த கதை என்பது இதன் பொருள் . திரவுபதியின் துகிலை உரித்து அவமானப்படுத்தியபோது அவள் கூந்தலை முடிப்பது பற்றி எடுத்த சபதத்தையும் பீமனின் சபதத்தையும் விவரிக்கும் நாடகம் இது. காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
13.பவபூதி
காளிதாஸருக்குப் பின்னர் வந்த முக்கிய சம்ஸ்க்ருத நாடகாசிரியர்; இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு.
இவர் எழுதிய உத்தர ராம சரிதம் , மாலதி மாதவம் என்ற இரண்டு நாடகங்களும் மிகச் சிறந்த படைப்புகள். இவர் நாடக ஆசிரியர் மட்டுமில்லை; பெரிய கவிஞரும் ஆவார்
****
14.போஜதேவன்
தாரா என்ற நகரிலிருந்து ஆண்ட மிகப் புகழ்பெற்ற மன்னன்.
இந்த மன்னன் எழுதாத விஷயமே இல்லை ; தாமஸ் ஆல்வா எடிசனைவிட அதிக கண்டுபிடிப்புகளையும் லியர்னாடோ டா வின்சியைவிட அதிக சப்ஜெக்டுகளையும் — விமான சாஸ்திரம் உட்பட– எழுதியவன். பெரும் கவிஞன் ; புலவர்களின் புரவலன் . எண்ணற்ற நூல்கள் இவன் பெயரில் உள்ளன .காளிதாசன் காலத்தில் வாழ்ந்த போஜனுக்கு நிகரனாவன் . கவிதை / யாப்பு இலக்கண நூலையும் எழுதினான் காலம் 11-ஆம் நூற்றாண்டு.
****
15.பில்ஹண/ன்
காஷ்மீர் புலவர்; செளர பஞ்சசிகா என்ற காதல் கவிதைத் தொகுப்பினையும் மேலைச் சாளுக்கிய மன்னரின் பிரதாபங்களைக் கூறும் விக்ரமாங்கதேவ சரித என்ற நூலையும் எழுதினார்.
ஒரு மன்னரின் மகளான யாமினி பூர்ண திலகாவைக் காதலித்ததால் அந்த மன்னன் புலவரைச் சிறையில் அடைத்தான்; அவரது கதி என்ன என்று காஷ்மீர் சுவடிகள் கூறவில்லை; ஆனால் தென் இந்திய சுவடிகள் தமிழ்த் திரைப்படங்களைப் போல சுபமாக முடிக்கின்றன . ஸம்ஸ்ருத இலக்கணம் கற்கப்போன இடத்தில் காதல் வலையில் சிக்கிய இந்தப் புலவனின் காதல் கவிதைகள் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. காலம் 11-ஆம் நூற்றாண்டு.
****
16.தண்டி/ன்
காஞ்சிபுர பல்லவர் காலப் புலவன். ஸம்ஸ்க்ருதத்தில் உரைநடை நூலையும் படைத்தவன் ; கவிதை யாப்பு இலக்கணத்தைக் கூறும் காவ்ய தரிசன நூலின் ஆசிரியர் ; உரை நடையில் தச குமார சரிதம் என்ற காதல் கதைகளை எழுதினார் ; மனிதனின் குணாதிசயங்களையும் மாயாஜாலத்தையும் வருணிக்கும் கதைகள் அவை ; தச குமார சரிதத்தைத் தழுவி ஜியோவன்னி பொக்காஸியோ டெகாமரன் கதையை எழுதினார் என்பார்கள் காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
17.தாமோதர குப்த
காஷ்மீர் மன்னன் ஜெயாபிடனின் மந்திரி; வேசிகள் தாசிகள் கதைகளைக் கவிதை வடிவத்தில் கூறும் நாவலை -புதினத்தை எழுதினார்; நாவலின் பெயர் குட்டனிமதம் ; ஆயிரம் கவிதைகளுக்கு மேலுள்ள இந்த நூல் விலைமாதர்களைப் பற்றி எச்சரிக்கும் நீதி நூலாகவே கருதப்படுகிறது. காலம் 8-ஆம் நூற்றாண்டு.
கந்தபுராணத்தை நன்கு ஆராய்ந்து காலத்திற்கேற்றபடி இப்படி ஒரு நூலைத் தொகுத்து வழங்கியுள்ள சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர்.
இந்நூலுக்கு அருள்வாழ்த்துரையை கல்யாணபுரி என்கிற கூனம்பட்டி ஆதீனம் 57வது குருமஹா சந்நிதானம் அவர்களும், பெங்களூர் ஶ்ரீஶ்ரீ வேதாகம ஸம்ஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் அவிநாசி சிவஶ்ரீ எஸ். சுந்தரமூர்த்தி சிவாசாரியார் அவர்களும், திருப்பனந்தாள் காசித் திருமடம் ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் அவர்களும் தந்து சிறப்பித்துள்ளனர்.
அணிந்துரையை குளித்தலை சீகம்பட்டி சைவ.சு.இராமலிங்க ஐயா அவர்கள் அளித்துள்ளார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 16
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
Family Planning 25 pence, Sarat Chandra Chatterjee, , Olympics, krishna menon, Shivaji, army tank, three mini sheets, Kamaraj, family planning triangle, parliament conference, republic anniversary, medal, muthuswami Dikshitar, Aryabhata satellite, veena, Gandhi big, kncb, child with cock, American revolution, ahalyabhai Holkar, Hindi conference
–Subham—
Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 17, Family Planning 25 pence, Sarat Chandra Chatterjee, , Olympics, krishna menon, Shivaji, army tank, three mini sheets, Kamaraj, family planning triangle, parliament conference, republic anniversary, medal, muthuswami Dikshitar, Aryabhata satellite, veena, Gandhi big, kncb, child with cock, American revolution, ahalyabhai Holkar, Hindi Conference