தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி-30+ சொற்கள் (Post No.5692)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 November 2018

GMT Time uploaded in London –14-14
Post No. 5692

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

முப்பதுக்கும் மேலான தமிழ்ச் சொற்களை இக்கட்டத்துக்குள் அடைக்கலாம். கீழே அதற்கு உதவுவதற்காக குறிப்புகள் உள. முடியாதபோது விடைகளைக் காண்க

 1  2  3  4
 5  6  7
 8
9 10 11  12
13  14
15
16  17 18  19
20 21
22 23 24

குறுக்கே

2.பனை மரத்தில் கிடைப்பது

3.கோடாரி; ஒரு அவதாரத்தின் பெயர்

5.வழி, காய்ச்சல்

6.அறைகளின் நாற்புறத்தில் நிற்பது

7.ஒரு கருவி

8.கை, கார்யத்தின் மூலச் சொல்

12.ஆகர்ஷணம்; நடிகைகளிடம் உள்ளது

13.பானை

14.ரசம், குழம்பில் சுவை தருவது

15.தாளிக்க வேண்டியது

16.கோத்திரத்துடன் பேசப்படுவது

  1. அம்பு விடத் தேவை

18.வில்லுடன் வருவது

20.கணவன்; சைவ சித்தாந்தச் சொல்

21.பெண்களின்  நண்பன்

22.விளையாடு, ஆனந்தி

22.பத்தாவது அவதாரம்

23.மக்கள் தேர்ந்தெடுப்பது

கீழே

1.பயிர் செழிக்கத் தேவையானது

2.மனிதனைக் கெடுக்கும் குணம்

3.சாதுவான பிராணி

4.வளைவு

9.இடத்தின் எதிர்ப் புறம்

10.முடிச்சு போன்றது; அவிழ்க்க/தீர்க்க வேண்டியது

11.செலவுக்கு எதிர்ப்பதம்

15.நாய் மீதும் வீசலாம், கட்டிடமும் கட்டலாம்

16.இதில் தானியத்தைச் சேமிக்கலாம்

17.கை கழுவி……, போய்……….. என்று சொல்ல உதவும்

17.கை கால்களில் 5 இருக்கும்

19.வாக்கிய முடிவில் வைப்பது

19.பிராமணர்கள் யாகத்தில் பயன்படுத்தும் இலை; ஒரு மரம்

20.வலிமை

24.குடிக்கக் குடிக்க ஆனந்தம்; குடலைக் கெடுக்கும்

 

ள் சு
சு ம் ர் சு ளி
ம் வு
ம் ம்
சி ச் ர்
ம் க் ளி பு
ம் கு டு ள்
கு ம் வி ல் ம் பு
தி ம் வை
ர் ளி ல் கி சு

Answers

சுரம், உரம், கரம், வரம், வலம்,  கலம், குலம், குதிர், பதி, கல், கள், கர்வம், பரசு, பசு, சுள்ளி, கள்ளி, சுவர்,

கவர்ச்சி, சுளிவு, வரவு, சிக்கல், வில் அம்பு, புரசு, வைரம் , அரசு, கடுகு, ,விரல், கல்கி, புள்ளி, உளி, களி, ரம்

TAGS–30+ சொற்கள், குறுக்கெழுத்துப் போட்டி

–subham–

தவளைக் கஷாயம் (Post No.5691)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 November 2018

GMT Time uploaded in London –7-00 AM
Post No. 5691

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

picture from Wikipedia

பிளினி மூத்தவர் ( PLINY THE ELDER ) சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ரோமானிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தார். அவர் நம் நாட்டு வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம் போல வானவியல் முதல் பிராணிவியல் வரையுள்ள எல்லா விஷயங்களையும் எழுதி நேச்சுரல் ஹிஸ்டரி- NATURAL HISTORY இயற்கை வரலாறு-என்ற பெயரில்37 தொகுதிகளாக வெளியிட்டார். இது லத்தீன் மொழியிலுளது. இதை 500 ஆண்டுகளுக்கு முன்னர் வெனிஸ் நகரில் பதிப்பித்தனர். வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம் போன்ற நூல்கள் ஏராளமான விஞ்ஞான பூர்வ விஷயங்களை உடைத்தாய் இருக்கிறது. பிளினி எழுதிய மருத்துவ விஷயங்கள் ஒரே அபத்தக் களஞ்சியமாக உளது. நமது சரகர், சுஸ்ருதர் போன்றோர் எழுதிய நூல்கள் இவருக்கும் சில அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முந்தியவை. இவைகளை ஒப்பிடுகையில் ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டி வைத்தியத்தைக் கடைப்பிடித்தது தெரிகிறது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்:-

ஒருவருக்கு இடது பக்கம் கண் நோய் இருந்தால் ஒரு தவளை அல்லது தேரையின் இடது கண்ணை நோயாளியின் இடது தோளில் இருந்துத் தொங்க விடுக; இதே போல வலது கண் நோய்க்கு வலப்பக்கம் செய்க.

யாருக்காவது காதில் நோய் இருந்தால் தவளைக் கொழுப்பைக் காதில் திணிக்கவும். நோய் பறந்தோடும்.

பல் வலியா? தவளையை புளிச்ச காடி எனப்படும் விநிகரில் கொதிக்க வைத்து அந்தக் கஷாயத்தால் வாயைக் கொப்புளிக்கவும்.

இருமல், தொண்டையில் வியாதி இருந்தால் குட்டித் தவளையை வாயில் போட்டுத் துப்பி விடவும்.

இது போன்ற நம்பிக்கைகள் ஐரோப்பாவில் 1600 ஆண்டுகளுக்கு நீடித்தமைக்கு  அநதக் காலத்தில் வெளியான சில ஆங்கில நூல்களும் சான்று பகர்கின்றன.

1658ல் ஸர் கே.டிக்பி (SIR K DIGBY எழுதிய டிஸ்கோர்ஸ் ஆன் சிம்பதி (DISCOURSE ON SYMPATHY) என்ற நூலில் காணும் விஷயம்:

நீங்கள் பிரயாணம் செய்கிறீர்களா? குறிப்பாக நோய் இருக்கும் பகுதிக்குச் செல்வதானால் தவளை அல்லது தேரையைப் பொடி செய்து டப்பாவில் கொண்டு செல்லவும். அல்லது உயிருடன் உள்ள தவளை அல்லது சிலந்திப் பூச்சிகளையோ ஆர்ஸெனிக் என்னும் விஷத்தையோ கொண்டு சென்றால் நோய்கள், அவைகளுக்குப் போய்விடும் உங்களை விட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

1665ல் ஆலின் லெட்டர்  என்பவர் எழுதிய விஷயம்:-

‘பிளேக்’ போன்ற கொடிய கொள்ளை நோய் இருந்தால்  அப்பகுதிக்குச் செல்லுகையில் தவளை விஷம் கொண்ட தாயத்துகளை அணிக. நோய் வந்தாலும் அது உங்களைக் கொல்லாது.

இப்படி தேரை, தவளை வைத்தியம் 1800 ஆம் ஆண்டுவரை பரப்பப்பட்டு வந்துளது.

தமிழ் ஸம்ஸ்க்ருத நூல்களில் உள்ள மூலிகை மருத்துவம் நாம் எவ்வளவு முன்னேறி இருந்தோம் என்பதற்கு எடுத்துக் காட்டுகள்.

Tags– தவளை, கஷாயம், தேரை, வைத்தியம்

–SUBHAM–

போகுமிடம் வெகு தூரம்! போக வேண்டும் நெடு நேரம்!! (Post No.5690)

Written by S Nagarajan

Date: 23 November 2018

GMT Time uploaded in London –6-13 am
Post No. 5690

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஆங்கில இலக்கியம்
போகுமிடம் வெகு தூரம்! போக வேண்டும் நெடு நேரம்!!
ச.நாகராஜன்
போகுமிடம் வெகு தூரம்!
போக வேண்டும் நெடு நேரம்!!
எத்தனை அற்புதமான வரிகள், பாருங்கள்!
Miles to go before I sleep என்ற அற்புதமான சொற்றொடரை ‘Stopping by Woods on a Snowy Evening’ என்ற கவிதையில் தந்தவர் அமெரிக்க கவிஞரான ராபர்ட் ஃப்ராஸ்ட். (Robert Frost)
ராபர்ட் ஃப்ராஸ்ட் (பிறப்பு 26-3-1874 மறைவு 29-1-1963) அமெரிக்காவில் சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ஆசிரியர்;- பின்னர் அவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் ஆனார்.
இயற்கையிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அமெரிக்க நாட்டுப்புற மொழியில் வல்லுநராக அவர் திகழ்ந்தார்.

Miles to go before I Sleep என்ற வரி வரும் Stopping by Woods on a Snowy Evening என்ற கவிதை 1921ஆம் ஆண்டு வாக்கில் இயற்றப்பட்டது.
குதிரையில் பயணிக்கும் பயணி ஒருவர் கூறுவது இது.
இதை விமரிசிக்கும் இலக்கிய விமரிசகர்கள் இது மரணத்திற்கு முன் தெரிவிக்கும் ஆசை போல என்கின்றனர். Sleep  என்ற சொல் இங்கு  மரணத்தைக் குறிக்கிறது என்பது அவர்களின் எண்ணம்.
ஆனால் பலரோ இது வாழ்க்கையின் லட்சியத்தை நிர்ணயித்து அதை அடையத் துடிக்கும் வாழ்க்கைப் பயணியின் அற்புதமான கூற்று என்கின்றனர்.
ஜவஹர்லால் நேரு முதல் உலகின் அறிஞர்களும் சாமான்யரும் இலக்கிய ஆர்வலர்களும் விரும்பிப் படித்து மேற்கோள் காட்டும் கவிதை இது:
Stopping by Woods on a Snowy Evening
ROBERT FROST
Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
எனது லட்சியம் நிறைவேற போகவேண்டும் நெடு நேரம்; ஏனெனில் அதை அடைய நான் செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம். செல்ல வேண்டிய பாதையோ அடர்ந்த காரிருள் நிறைந்த காட்டு வழி.
உலகத்தினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கவிதா வரிகள்!
ஜான் கென்னடி தனது பதவியேற்பு விழாவின்போது கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்டை அழைத்து கவிதை பாட வைத்தார். 1961ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் நடந்த அந்த விழாவின் போது அவருக்கு வயது 86. அந்த விழாவிற்கென ஃப்ராஸ்ட் Dedication என்ற கவிதையை பிரத்யேகமாக எழுதினார். விழா நடந்த அன்று சூரிய ஒளியில் அதைப் படிக்க மிகவும் கஷ்டப்பட்டார். கடைசியில் மனப்பாடமாக இருந்த The Gift Outright என்ற கவிதையை நினைவிலிருந்து பாடி விட்டார்.
போஸ்டனில் 1963 ஜனவரி 29ஆம் நாள் அவர் மறைந்தார். அவரது கல்லறையில் எழுதப்பட்ட வாசகம் : “ I had a lover’s quarrel with the world.”
அவரது கவிதையில் இன்னொரு அழகிய கவிதை – The Road Not Taken.
The Road Not Taken
 ROBERT FROST
Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.
 இந்த அழகிய கவிதையில் வரும் வார்த்தைகளை வைத்து அநேகமாக ஒவ்வொரு ஆங்கிலப் பத்திரிகையிலும் The Road less Traveled என்ற தலைப்பில் நிச்சயமாக ஒரு கட்டுரை வந்திருக்கும்.
இரு நண்பர்கள் ஒரு சாலை வழியே செல்கின்றனர். பாதை இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கரடுமுரடானது. யாரும் அதிகமாகச் செல்லாதது. இன்னொன்று வழவழ என்று இருக்கிறது. கல், முள் இல்லை. அனைவரும் அதிகமாகப் பயன்படுத்தும் பாதை.
நண்பர் நல்ல பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்.
ஆனால் ஃப்ராஸ்ட் எதைத் தேர்ந்தெடுக்கிறார்?
‘ குறைந்த பேர்கள் தேர்ந்தெடுத்த அந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்தேன்; அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது’ என்கிறார்.
அருமையான இந்தக் கவிதை உலகில் ஏராளமான பேர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரடுமுரடான வழியாக இருப்பினும் லட்சியத்தை நோக்கி அது செல்லும் எனில் அதையே தேர்ந்தெடுப்போம் என்பதே லட்சியவாதிகளின் எண்ணம்.பட்டப்படிப்பு முடிக்கும் பட்டதாரிகள் புதிய வழியில் செல்வோம் என உறுதிமொழி எடுக்க
இந்தக் கவிதை தான் தூண்டியது.
ஆனால் உண்மையில் ஃப்ராஸ்ட் இதை ஒரு ஜோக் கவிதையாகத் தான் எண்ணி எழுதினார். தனது நண்பரைக் கேலி செய்ய அவர் எழுதிய கவிதை தான் இது. அவர் நண்பர் எட்வர்ட் தாமஸ் அடிக்கடி நடைப்பயிற்சியை மேற்கொண்டு அவருடன் நடந்து செல்வது வழக்கம். தாமஸுக்கு எப்போதுமே எந்த வழியைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தயக்கம் இருக்கும். ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்த பின்னர், அட, அடுத்த வழியில் போகாமல் விட்டு விட்டோமே என அங்கலாய்ப்பது வழக்கம். அதற்காக எழுதிய இந்தக் கவிதையை அனைவரும் லட்சியக் கவிதையாகப் பார்த்ததைக் கண்டு ஃப்ராஸ்டுக்கு வியப்பு மேலிட்டது. இது மன உறுதிக்கான ஒரு உருவகக் கவிதை என அனைவரும் சொல்ல, தாமஸிடம் ஃப்ராஸ்ட், “ சும்மா விளையாட்டுக்காக அதை எழுதினேன் என்றாலும் கூட அதை அனைவரும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டனர்”, என்று கூறினார்.
படிப்பவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் கவிதை அல்லவா இது!
எனக்கும் தான்:-
“போகுமிடம் வெகு தூரம்
    போக வேண்டும் நெடு நேரம்
போகும்வழி முள்பாதை
    போகாதோர் பலர்பாதை
நோகுமிடம் உடலெல்லாம்
    நோகாது என் உறுதி
ஆகும் ஆசை முடியட்டும்
     அற்புதமாய் அமையட்டும்”

Where does Lakshmi reside? (Post No.5689)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 November 2018

GMT Time uploaded in London –19-15
Post No. 5689

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Turmeric is a medicinal plant. Turmeric powder has got anti- bacterial properties. Food made with turmeric powder don’t go off quickly. Turmeric was applied on wounds to cure it. Hindu women apply raw turmeric paste on their faces during their bath. This will prevent unwanted hair growth on their faces. In the olden days scholars praised turmeric as one of the auspicious symbols.

Nowadays we believe whatever published in a science journal though the same thing is contradicted  the very next week. ‘A coffee a Day keeps doctor Away’— they publish one story one week. The very next week you read ‘A coffee a day will take you near the grave’. We never go into the details of such research articles, but simply believe them.

In the olden days, scholars attributed all the rules to God so that people wouldn’t challenge them. Turmeric is also given such a holy status due to its medical properties.

Here are some interesting Slokas/couplets on the theme:-
Yadgrham rajate nityam mangalairalepanaihi
Tadgrhe vasate Lakshmihi nityam purnakalanvita

Lakshmi, Goddess of Wealth, resides in full, in the house where a woman cleans the house and decorates it with Kolam or Rangoli.

One more sloka adds Lakshmi resides where there is no fight between husband and wife.
Yadgrhe kalaho nasti pujyante yadgrhestithaha
Tadgrhe vasate Lakshmiihi nityam purnakalanvita

Xxx


Married Hindu women are expected to present themselves with auspicious symbols on their faces. The couplets below say that it will increase the life span of their husbands. Now we know tensions can trigger cancer, increase heart attacks and blood pressure. If one of the partners can help in reducing the tension it will naturally help them to live longer. Here are two couplets which describe the auspicious symbols of a woman
Haridra kumkumam chaiva sinduam kajjalam tada
Kurpasakam ca tambulam mangalyabaranai tada

Kesa samskara kabari karakarnadibhushanam
Bharturayushya micchanti dushayenna pativrata

The symbols or the decorations that will help a husband are
Bathing with turmeric paste
Wearing Kunkum and Sinduram
Wearing blouse

applying kohl (black pigment) to eyes
Having supari, betel nuts
Adorning hands, nose, ear with ornaments
Hair do
These are considered good for husband’s life.
Previous post

Lakshmi resides | Tamil and Vedas

tamilandvedas.com/tag/lakshmi-resides

Posts about Lakshmi resides written by Tamil and Vedas. … which lists the places where Lakshmi, … //tamilandvedas.com/2017/01/20/where-does-lakshmi-reside-post-no ..

Tags- Lakshmi, Kolam, Turmeric
— Subham—

 

லெட்சுமி வசிக்கும் இடம்; மஞ்சள் மகிமை! (Post No.5688)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 November 2018

GMT Time uploaded in London –7-23 am
Post No. 5688

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 

பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் மறைந்து வருகிறது. பல வகையான சோப்புகளும், கிரீம்களும் அந்த இடத்தைப் பிடித்துவிட்டன. மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் பெண்களின் முகத்தில் முடி வளர்வதைத் தடுக்கலாம். பரு முதலியன வராமலும் தடுக்கலாம்.

மஞ்சள் என்பது பாக்டீரியா எதிர்ப்புக் குணம் மிக்க பொருள் என்பதை இப்பொழுது விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டு விட்டனர். மஞ்சள் பொடி போட்டு இந்திய உணவு உருவாக்கப்படுவதை வெளிநாட்டு சமையல் சானல் (channels) கள் மிகவும் சிலாஹித்துப் பேசுகின்றன. சமைத்த பண்டங்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க மஞ்சளும் உப்பும் உதவும் என்பது தாய்மார்கள் அறிந்த விஷயமே.

அந்தக்காலத்தில் தெய்வத்தின் பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள் கேள்வி கேட்காமல் அதை ஏற்றனர். இந்தக் காலத்தில் விஞ்ஞானத்தின் பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள நம்புகின்றனர். இரண்டுமே விவேகமற்ற செயல். ஒரு காரியத்தின் கருத்தை அறிநதால் அது எக்காலத்திலும் நம்பப்படும்; காப்பி குடித்தால் நல்லது என்று ஒரு கட்டுரை வரும்; அடுத்த வாரம் காப்பி குடித்தால் கெடுதி என்று வரும் அநத ஆராய்ச்சியை யார் எங்கு எத்தனை பேரிடத்தில் நடத்தினர், அது எல்லோருக்கும் பொருந்துமா என்பதை எல்லாம் நாம் முழுதும் ஆராய்வதில்லை. இப்படித்தான் அந்தக் காலத்திலும் காரண காரியங்களை விளக்காமல் ‘அங்கே’ லக்ஷ்மி வசிப்பாள் என்று சொல்லி விட்டார்கள். இன்று அறிவியல் சோதனைகள் மூலம் காரண காரியங்களை விளக்க, விளங்கிக்கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

பழங்காலத்தில் லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களைப் பற்றி ஒரு நல்ல ஸ்லோகம் இருக்கிறது. அதை நன்கு சிந்தித்துப்  பார்த்தால் அவர்கள் சொன்னது சரிதான் என்பது தெரியும்.

கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்

ஹரித்ரா குங்குமம் ச ஏவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா

கூர்பாஸகம் ச தாம்பூலம் மங்கள்யாபரணே ததா

கேசஸம்ஸ்கார கபரீ கர்கணாதி பூஷணம்

பர்துர்ராயுஷ்மிச்சந்தி தூஷயேன்ன பதிவ்ரதா

பொருள்

மஞ்சள் பூசிக் குளிப்பது

குங்குமம்,ஸிந்தூரம் தரிப்பது

கண்ணுக்கு மை தீட்டுதல்

ரவிக்கை, தாம்பூலம் (வெற்றிலை பாக்கு)

காது, மூக்குகளில் நகை அணிதல்

வாரின தலை

முதலியன கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்

 

கோலத்தின் மஹிமை

இன்னொரு ஸ்லோகத்தையும் காண்போம்

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது வளத்தை, தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

இந்த இரண்டு ஸ்லோகங்களும் வியாஸர் சொன்னதாக ஒரு புஸ்தகத்தில் படித்தேன். ஆனால் மஹாபாரதத்திலா என்று சொல்லவில்லை.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

மஞ்சள் முகமே வருக, மங்களம் என்றும் தருக என்று பாடுவோம்.

tags– மஞ்சள்,மஹிமை,  கோலம், லெட்சுமி

–சுபம்–

8 லட்சம் ஆண்டு இல்லாத அளவு கார்பன் டை ஆக்ஸைடின் அளவு (Post No. 5687. )

Written by S Nagarajan

Date: 22 November 2018

GMT Time uploaded in London –7-08 am
Post No. 5687

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி எட்டாம் கட்டுரை)!                                              அத்தியாயம் 402

ஜாக்கிரதை! எட்டு லட்சம் ஆண்டுகள் இல்லாத அளவு பூமியில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு!!

ச.நாகராஜன்

மனித குலத்திற்கே வருத்தமூட்டும் ஒரு செய்தியை விஞ்ஞானிகளின் ஆகஸ்ட் 2018 அறிக்கை தருகிறது. எட்டு லட்சம் ஆண்டுகள் இல்லாத அளவு உயர்ந்தபட்ச கார்பன் டை ஆக்ஸைடு அளவை பூமி கொண்டிருக்கிறது என்பது தான் அது!

அண்டார்டிகாவில் கிரீன்லாந்தில் பனியின் உள்ளீட்டைக் (Icecore) குடைந்து பார்த்து பூமியின் வளிமண்டலம் கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் எப்படி மாறி இருக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதில் வந்த ஷாக்கிங் நியூஸ் தான் இது!

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஸ்டேட் கிளைமேட் ரிபோர்ட் 2017இன் படி கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு  பத்துலட்சத்திற்கு 450 என்ற அளவில் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இதை அமெரிக்க காலநிலை கழகம் தெரிவித்திருக்கிறது. 38 ஆண்டுகளில் வருடாவருடம் பனியின் உள்ளீடு பற்றிய ஆய்வு நடந்து வருகிறது. அதில் உச்சபட்சமாக 2017இன் அளவு இருக்கிறது.

எப்படி உலகம் மாறி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டும்  இது, ஆய்வின் ஒரு எச்சரிக்கை தான்.

ஸயின்ஸ் என்ற பிரபல அறிவியல் இதழில் எழுதி வரும் எலிஸபத் கமில்லோ 65 நாடுகளில் உள்ள 524 விஞ்ஞானிகள் இணைந்து செய்த ஆய்வின் அறிக்கையை சமீபத்திய (2018) இதழில் தந்துள்ளார். ஆயிரத்தி எண்ணூறுகளில் இருந்து எடுக்கப்பட்டு வரும் அளவுகளில் 2017ஆம் ஆண்டின் ரிகார்டுகளை அறிவியல் ரீதியாகப் பார்க்கும் போது, அது இரண்டாவது உஷ்ணம் மிகுந்த ஆண்டாக விளங்குகிறது.

உண்மையில் சொல்லப்போனால் 2017ஆம் ஆண்டு ஒரு எல் நினோ ஆண்டு. அதாவது பூமியில் சிறிது குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டு. அந்த ஆண்டிலேயே இப்படி ஒரு அதிக வெப்பம் என்றால் நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

பூமியின் எதிர்கால நிலை என்ன தான் ஆகும்?

இதே போல விஷ வாயுத் தன்மை கொண்ட க்ரீன் ஹவுஸ் கேஸ் எனப்படும் பசுமை இல்லா வாயுக்களான மீதேன், நைட் ரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றின் அளவுகளும் என்றுமில்லாத அளவு அதிகரித்துள்ளன.

1993 ஆண்டு முதல் எடுத்துக் கொண்டால் கடல் மட்ட நீரின் அளவு மூன்று அங்குலம் உயர்ந்துள்ளது. கடல்நீரில் மேல் மட்டத்தில் உள்ள 2300 அடிகள் அதிக அளவு உஷ்ணநிலையை இப்போது காட்டுகிறது. எல் நினோ ஆண்டு என்று அழைக்கப்படும் 2016ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவாக இது உள்ளது.

அண்டார்டிகாவின் பனிப்படலத்தின் பரப்பு கூட 8,11,000 சதுர மைல்களாக மார்ச் 2017இல் ஆகி கடந்த 38 ஆண்டுகளாக இந்தப் பனிப்பரப்பு சுருங்கிக் கொண்டே வருவதை உறுதி செய்கிறது.  இதை வைத்து விஞ்ஞானிகள் கூறுவது 1980இலிருந்து 72 அடி அளவிற்கு மேல் மட்டத்திலிருந்து பனிப்படலம் குறைந்து விட்டது என்பது தான்!

இதன் விளைவாக  1900ஆம் ஆண்டிலிருந்து எடுத்துக் கொண்டு பார்த்தால் ரஷியா இரண்டாவது கடுங் குளிரான ஆண்டாக 2017ஐக் கொண்டிருக்கிறது. வெனிஜுலா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகப் பெரிய அளவில் மழை பொழிந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி வழக்கத்திற்கு மாறான அதிக பட்ச உஷ்ணத்தால் காட்டுத் தீ பெரும் அளவில் உலகின் பல பகுதிகளில் மூண்டது. அமெரிக்காவில் 40 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பை காட்டுத் தீ அழித்தது. அமேஸான் பகுதியில் 2,72,000 காட்டுத் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன!

பவளப்பாறைகள் ஆங்காங்கு பாதிக்குப் பாதியாக அழிவு பட்டு வருகின்றன!

இதை உலகம் தாங்காது; இனியும் பசுமை வாயுக்கள் அதிகரிக்காது என்று வைத்துக் கொண்டாலும் கூட பூமியின் வளி மண்டல வெப்பம் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகும்.

இதன் விளைவுகள் பிரம்மாண்டமானதாக இருக்கும்.

பூமியின் வெப்பம் தாங்காது மனித குலம் படாத பாடு படும். கடலோர நகரங்கள் அழிந்து போகும். கடல் வாழ் உயிரினங்கள் மறையும். தாவரங்கள் செழிக்காது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 2018 ஆம் ஆண்டு நான்காவது அதிக வெப்பமுடைய ஆண்டாக உருவாகி வருகிறது என்ற எச்சரிக்கையையும் விஞ்ஞானிகள் தருகின்றனர்.

ஆகவே வீட்டிற்குள் சுனாமி அலை வந்து விட்டது போல இந்த அபாயத்தை நினைத்து உலக நாடுகளின் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் அறிவுரை.

அரசு எடுக்கும் முடிவுகளுக்கு உலக மக்கள் ஆதரவு தந்தே ஆக வேண்டும்; இல்லையேல் அரசுகளும் இருக்காது; அவர்கள் ஆள மக்கள் கூட்டமும் இருக்காது!

முதலில் வாகனப் புகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் இறங்க வேண்டும். இது தான் முதல் படி!

மனித குலம் காக்கப்படும் வழி இங்கே தான் ஆரம்பிக்கிறது!!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்காவில் பொதுவாக மலரும் நினைவுகளாக எழுதப்படும் புத்தகங்கள் ஏராளம். இந்தியாவிலோ குறைவு; அதுவும் விண்வெளி இயல் பற்றி வரும் புத்தகங்களோ மிகக் குறைவு. இந்தக் குறை போக்கும் விதமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐ.எஸ்.ஆர். ஓவில் பணி புரிந்த வேத பிரகாஷ் சண்ட்லாஸ் ‘தி லீப்ஃப்ராக்கர்ஸ்’ (The Leapfroggers) என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னாள் பாரத ராஷ்ட்ரபதியும் பிரபல விண்வெளி விஞ்ஞானியுமான அப்துல்கலாம் பற்றிய ஒரு சுவையான சம்பவத்தை அவர் தருகிறார்.

அப்துல்கலாம் அவர்களுக்கு அலுவலகத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே செல்ல வேண்டும்  என்பதெல்லாம் கிடையாது. இரவு பகல் பாராது உழைப்பது அவர் இயல்பு. அதே போல அவருடன் இணைந்து பணியாற்றியவர்களும் கூட அப்படியே நேரத்தைப் பாராது பணி புரிந்தனர்.

இதன் விளைவாகத்தான் எஸ் எல் வி – 3 ராக்கெட் 1980 ஜூலையில் முதன் முதலாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டைத் தயாரிக்கும் பணியில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் போது ஒரு நாள் நள்ளிரவில் அப்துல்கலாம் எஸ் எல் வி – 3 ராக்கெட்டின் பணிகளின் முன்னேற்றம் பற்றி சண்ட்லாஸிடம் விசாரித்தார்.

உடனடி பதிலாக,”எந்த விதக் குழப்பமும் இன்றி, ஒரு பிரச்சினையும் இன்றி பணிகள் சீராகப் போய்க் கொண்டிருக்கின்றன” என்று கூறப்பட்ட போது, அப்துல்கலாம், “அப்படியா, அப்போது சில பிரச்சினைகளை உருவாக்குவோம்” என்று பதில் அளித்தார். அங்கு பணி புரிந்தோரிடம் ஏராளமான சிக்கலான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

நிர்வாக இயலின் புது உத்தி இது! வேண்டுமென்றே பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லி அதற்கான சிறந்த தீர்வைக் காண வேண்டும் என்பதே அந்த உத்தி.

கலாம் அவர்கள் கிளப்பிய பிரச்சினைகளால் உந்தப்பட்ட விஞ்ஞானிகள் அவற்றை மனதில் கொண்டு அதற்கான தீர்வைக் காண முற்பட்டனர். எதிர்பார்த்த காலத்தை விடச் சற்றுக் கூடுதலான காலத்தை அவர்கள் எடுத்துக் கொண்டாலும் கூட, ராக்கெட்டின் வடிவமைப்பும் செயல்பாடும் சிறப்பாக அமைந்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தன.

இப்படி, அப்துல்கலாம் அவர்களின் சிந்தனையும் செயல்பாடும் ஒப்பற்றதாய் அமைந்திருந்ததைப் சண்ட்லாஸ் விளக்கியுள்ளார்.

***

பர்த்ருஹரி சொல்லும் விஞ்ஞான விஷயங்கள் (Post No.5685)

Himalaya pictures from Radhika Balakrishnan

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 21 November 2018

GMT Time uploaded in London –10-34 am
Post No. 5685

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பர்த்ருஹரி இந்த ஸ்லோகங்களில் சொல்லும் அறிவியல் துளிகள்

1.மலைகள் பறந்தன;

2.சூரிய காந்தக் கல் நெருப்பைக் கக்கும்;

3.பூமியைப் பாம்பு தாங்குகிறது-

பர்த்ருஹரி நீதி சதகம் தொடர்ச்சி

ஸ்லோகங்கள் 31,32,33

 

 

‘பெருந்தன்மை கொண்டபெரியோர்கள், கொடையாளிகளின் சக்திக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. இந்த பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தாங்குகிறான். அந்த சேஷ நாகத்தை ஆமை தன் முதுகில் தாங்குகிறது. அநத ஆமையை கடல் தனது அடித்தளத்தில் தாங்கி நிற்கிறது’.—1-31

காளிதாஸன் போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களும் பூமியைப் பாம்பு தாங்குவதாகக் கருதினர். இதன் விஞ்ஞான விளக்கம் தெரியவில்லை. இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல் அதன் தாத்பர்யத்தை அறிய வேண்டும். உலகில் ஒவ்வொரு பழைய கலாசாரத்திலும் இப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தது. கிரேக்கர்கள அட்லஸ் (Atlas) என்பவன் தனது தோளில் பூமியைச் சுமப்பதாக நம்பினர். இதனால் தேசப்பட புத்தகத்துக்கு அட்லஸ் என்று பெயர் சொல்லுவர்.

வஹதி புவனேஸ்ரேணிம் சேஷஹ பணாபலகஸ்திதாம்

கமடபதினா மத்யே ப்ருஷ்டம் ஸதச தார்யதே

தமபி குருதே க்ரோடாதீனம் பயோதிரநாதராத்

தஹஹ மஹதாம் நிஸ்ஸீமாநஸ்சரித்ர விபூதயஹ – 31

वहति भुवनश्रेणिं शेषः फणाफलकस्थितां

कमठपतिना मध्येपृष्ठं सदा स च धार्यते ।

तम् अपि कुरुते क्रोडाधीनं पयोधिरनादराद्

अहह महतां निःसीमानश्चरित्रविभूतयः ॥ 1.31 ॥

XXX

‘தேவர்களின் தலைவனான இந்திரன் இமயமலை மீது தன் வஜ்ராயுதத்தை வீசித் தாக்கினான். அப்போது இமயத்தின் மகனான மைநாக பர்வதம் தந்தையை விட்டு ஓடிப்போய் கடலில் அடைக்கலம் புகுந்தது. இது சரியான செயலன்று. மகன் என்னும் பெயருக்கு ஏற்ற செயலுமன்று’ – 1-32

மலைகள் ஆதிகாலத்தில் பறந்தததாகவும் ,இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டியதாகவும் புராணங்கள் புகலும்.இந்த நிகழ்ச்சியை உவமையாகப் பயன்படுத்துவர் புலவர் பெருமக்கள்.

இதில் பெரிய அறிவியல் உண்மை இருப்பதாக நான் கருதுகிறேன். டைனோஸரஸ் போன்ற ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழிய பெரிய விண்கற்களே காரணம் என்று விஞ்ஞானிகள் இப்போது பகர்வர். பூமியின் துவக்க கால சரிதத்தில் இத் தாக்குதல்கள் அதிகம் இருந்தன. இன்றும் ஒவ்வொரு நொடியும் பூமியில் விண்கற்கள் விழுந்தபோதும் அவை காற்றில் பஸ்மம் ஆகி சாம்பல மட்டுமே பூமியில் விழும். இரவு நேரத்தில் வானத்தை உற்று நோக்குவோர் நட்சத்திரங்கள் விழுவது போலக் காண்பது எல்லாம் இந்த விண்கற்களே. ஆயினும் துவக்க காலத்திலிவை அதிகம் இருந்தது.

இதை பாமர மக்களுக்கு விளக்க எழுந்த கதைதான் மலைகள் பறந்ததும் அதை இந்திரன் வெட்டி வீழ்த்தியதும்.

இந்த பர்த்ருஹரி ஸ்லோகத்தில் சொல்லவரும் நீதி ஒருவருக்கு ஆபத்து ,, வருகையில் — குறிப்பாக தந்தைக்கு ஆபத்து வருகையில் — மகன் ஓடிப்போவது — உதவாமல் பயந்து ஒளிவது — முறையன்று– வீரமும் அன்று என்பதாகும்.

நீதியைப் புரிந்து கொண்டு விட்டோம். இதிலுள்ள அறிவியல் விஷயங்களை நுணுகி ஆராய்வோம்:

1.பூமியின் ஆரம்பகட்டத்தில் விண்கற்கள் (Meteorites) , நுண்கிரஹங்களின் (asteroids) தாக்குதல் அதிகம் இருந்ததை இந்துக்கள் அறிவர்.

  1. உலகில் கடலுக்கு அடியிலும் மலைகள் இருப்பது (Submarine mountains) இந்துக்களுக்கு நன்கு தெரியும். (சக்ரவாள மலை பற்றியஎனது கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்)

3.பிற்காலத்தில் இந்த விண்கல், நுண் கிரஹவீ ழ்ச்சி அறவே நின்றதையும் இந்துக்கள் அறிவர். ஆகையால்தான் இந்திரன் பறக்கும் மலைகளின் சிறகுகளை வெட்டி அவற்றை கடலுக்குள் அனுப்பிய கதைகள் எழுந்தன.

கடலியலும் (Oceanography), பூகர்ப்ப இயலும் (Geology) வளந்த இந்த நாட்களில் நாம் படிப்பதை புராணங்கள் கதை ரூபத்தில் நமக்குக் கற்பித்தன.

அது மட்டுமல்ல; இந்திரன்தான் உலகின் முதல் சிவில் எஞ்சினீயர். அவன் மலைப் பாறைகளை அகற்றி தண்ணீரை விடுவித்த கதை உலகின் பழமையான் நூலான ரிக் வேதத்திலேயே உளது.

இதை அறியாத சிலர் இந்திரன் அரக்கனை வெட்டி வீழ்த்தியதாகவும் அவர்கள் பழங்குடி மக்கள் என்றும் பிதற்றினர். இந்திரன் என்பது தலைவன், மன்னன், முழுமுதற் சக்தி போன்ற பல பொருட்களில் ரிக் வேதத்தில் வருகிறது. ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் இந்திரன் பெயர் வநததை ‘ஒரு ஆள்’ என்று நினைத்து வெள்ளைக்காரர்கள் குழம்பிப் போய் நம்மவர்களையும் குழப்பிவிட்டனர்.

வரம் பக்ஷச்சேதஹ ஸமதம கவன்முக்தகுலிஸ

ப்ரஹாரைருத்ரச் சதூபஹலதஹனோத்ரார குரூபிஹி

துஷாரத்ரேஹ்ஹே ! பிதரி க்லேசவிவசே

ந சாசௌ ஸம்பாதஹ பயஸி பயஸாம் பத்யூருசிதஹ -32

वरं पक्षच्छेदः समदमघवन्मुक्तकुलिशप्रहारैर्
उद्गच्छद्बहुलदहनोद्गारगुरुभिः ।
तुषाराद्रेः सूनोरहह पितरि क्लेशविवशे
न चासौ सम्पातः पयसि पयसां पत्युरुचितः ॥ 1.32 ॥

XXX

சூர்யகாந்தக் கல், சூரிய ஒளியை நெருப்பாக கக்குவதை காளிதாஸன், தமிழில் திருமூலர் போன்ற ஏராளமான புலவர்கள் பயன்படுத்துவதால், லென்ஸ் (Lens), உருப்பெருக்கு ஆடி (Magnifying glass) பற்றி இந்துக்களுக்கு முன்னரே தெரிந்ததை நாம் அறிய முடிகிறது.

இதோ பாட்டின் பொருள்

சூரிய ஒளிபட்டவுடன் உயிரே இல்லாத ஜடப்பொருளான சூர்ய காந்த மணி கூடப் பிரகாஸிக்கிறது; நெருப்பை உமிழ்கிறது. அப்படி இருக்கையில் பெரியோர்களை யாரேனும் அவமதித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? 1-33

ஆக, பல விஞ்ஞான உண்மைகளை உவமையாகப் பயன்படுத்துவதால் இவைகளைப் பாமர மக்களும் அறிந்தது புலனாகிறது. நம்மில் பலர் எப்படி டெலிவிஷன், ரேடியோ, மொபைல் போன் பற்றிய விஞ்ஞான விஷயங்களை அறியாமலேயே அதை பயன்படுத்த மட்டுமே தெரிந்து கொண்டது போல பாமர மக்களுக்கு உவமை மட்டுமே தெரியும். அதன் பின்னுள்ள விஞ்ஞான விஷயங்கள் தெரியாது.

பூமியின் சலனம் பற்றி முழுதும் அறியாவிட்டால் இந்துக்கள் கிரஹணத்தைக் கணக்கிட்டும் இருக்க முடியாது. ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி இருக்கவும் முடியாது. சனிக் கிரஹம் குருக் கிரஹம் போன்றவற்றுக்கு விஞ்ஞானப் பெயர்களை சூட்டி இருக்கவும் முடியாது.

சனிக் கிரஹம் (சனை= மந்தம், மெதுவாக) சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆவதை அறிந்து சனைச் சரன் (மந்த கதியில் செல்வோன்) என்று பெயரிட்டனர்.

குரு என்றால் கனமான என்று பெயர்; கிரஹங்களில் பெரியது குரு (வியாழன்)) என்பதாலும், குருவைப் போல ஒருவரை உயர்த்தி, உந்தி விடுவதாலும் (Slingshot Gravity effect) அந்த கிரஹத்துக்கு குரு என்று பெயரிட்டனர், இந்த ‘ஸ்லிங் ஷாட் எப்பெக்ட்’ இப்பொதுதான் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இனி வரப் போகும் எதிர்காலக் கண்டு பிடிப்புகளை இந்துக்கள் முன்னரே அறிவித்துவிட்டதை  எனது முந்தைய  கட்டுரைகளில் பட்டியலிட்டு விட்டேன்.

யதசேதனோபி பாதைஹி ஸ்ப்ருஷ்டஹ ப்ரஜ்வலதி ஸவிதுரினகாந்தஹ

தேஜ்ஸ்வீ புருஷஹ பரக்ருதநிக்ருதிம் கதம் ஸஹதே – 33

Tags- நீதி சதகம், பர்த்ருஹரி, சூர்யகாந்த மணி, பறக்கும் மலைகள், பூமி பாம்பு, சேஷ நாகம்

–சுபம்—

ச.நாகராஜன் எழுதிய நூற்றியெட்டு நூல்களின் பட்டியல்! (Post No.5684)

 

Written by S Nagarajan

Date: 21 November 2018

GMT Time uploaded in London –7-48 am
Post No. 5684

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ச.நாகராஜன் எழுதிய நூற்றியெட்டு நூல்களின் பட்டியல்!

நண்பர்களுக்கு நன்றி! எனது புத்தகங்கள் பற்றி அவ்வப்பொழுது ஆர்வத்துடன் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு கோடி நன்றிகள்!! இவை பற்றிய விவரங்களைக் கீழே தந்துள்ளேன்.

இவற்றில் 52 நூல்களை டிஜிடல் வடிவிலும் 18 நூல்களை அச்சுப்பதிப்பாகவும் உடனே பெற முடியும். ஏனைய நூல்களில் சில தயாரிப்பில் உள்ளன; மற்றையவை பற்றி, இனி தான் வெளியிடப்படும் முயற்சியையே ஆரம்பிக்க வேண்டும்.

 

தமிழகத்தில், பதிப்புத் தொழிலில் இப்போது ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தகுந்த பதிப்பாளர்கள் கிடைத்தால் வெளியிடப்பட வேண்டிய நூல்களை விரைவில் வெளியிட முடியும்.

இங்கு 108 நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 3000 கட்டுரைகள் உள்ளன. சுமார் பதினைந்து லட்சம் சொற்களைக் கொண்ட இந்த நூல்களில் ஆன்மீகம், யந்திரங்கள், மந்திரங்களின் மகிமை, ஹிந்து மதச் சிறப்பு, புத்த மதச் சிறப்பு, அறிவியல், அறிவியல் கேள்வி- பதில்கள், அறிவியல் அறிஞர்கள், விண்வெளியில் மனித சாதனைகள், சுய முன்னேற்றம், அதீத உளவியல், திரைப்பட நடிகர், நடிகைகள், ஆங்கில, தமிழ் திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், உலக நாடுகள், உலகின் முக்கிய இடங்கள், கணிதப் புதிர்கள், ஜோதிடம், ஜோதிட அறிஞர்கள், நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், பெண்கள் முன்னேற்றம், பறக்கும் தட்டுகள், இந்தியாவின் தேசீயத் தலைவர்கள், உலகத் தலைவர்கள், சின்னத்திரை சீரியல்கள், விலங்கு உலகம், ஆங்கில விந்தைகள், தமிழ் விந்தைகள், சம்ஸ்கிருத விந்தைகள், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள், சிறந்த நூல்கள், தமிழ், ஆங்கில, ஹிந்தி, சம்ஸ்கிருத இலக்கியம், பெங் சுயி, வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், ஆரோக்கியம் பெறுவதற்கான வழிகள்,சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் , வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், சரித்திர நாவல்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. சுமார் 18 தின, மாத, வார இதழ்களிலும், http://www.nilacharal.com, http://www.tamilandvedas.com, http://www.ezinearticles.com உள்ளிட்ட இணையதளங்களிலும் கடந்த 48 (1971-2018) ஆண்டுகளில் வெளியானவை இவற்றில் அடங்கும்.

*

கீழ்க்கண்ட 52 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் National Library Board, Singapore- சிங்கப்பூர் தேசீய நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூல்கள் பற்றிய விவரங்களை http://www.nilacharal.com இணையதளத்திலிருந்து பெறலாம்.

 

ஆங்கில நூல்

1) Breakthrough to Success

தமிழ் நூல்கள்

சுய முன்னேற்றம்

2) வெற்றிக்கலை

ஜோதிடம்

3) ஜோதிடம் உண்மையா?

4) ஜோதிட மேதைகளின் வரலாறு!

5) நவகிரகங்கள்

6) நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!

திரைப்படம்

7) திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

8) அதிரடி மன்னன் ஜாக்கிசான்

9) ஹா! ஹா!! ஹாலிவுட்!!!

உலகம்

10) உலகின் அதிசய இடங்கள்

அதீத புலனாற்றல்

11) அறிவுக்கும் அப்பால்

12) பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

13) அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்

14) பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

15) விந்தை மனிதர்கள்

16) மாயாலோகம்! (பாகம் 1)

17) மாயாலோகம்! (பாகம் 2)

18) மாயாலோகம்! (பாகம் 3)

வாழ்க்கை வரலாறு

19) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

20) டயானாவின் கதை

சரித்திர நாவல்

21) நாக நங்கை

22) விஜயதீபம்

அறிவியல் கேள்வி-பதில்

23) ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான கேள்வி பதில்கள்)

விலங்கியல்

24) விலங்கு உலகப் புதுமைகள்!

தொலைக்காட்சி

25) உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்

ஆன்மீகம்

26) சேது தரிசனம் (ராமரின் சேது உண்மையா?)

27) அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

28) திறன் கூட்டும் தியானம்

29) ஆன்மீக ரகசியங்கள்!

30) அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

31) அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்

32) சிறுவர் புராணக் கதைகள்

33) புராணத் துளிகள்!

34) விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

 

அறிவியல்

35) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 1)

36) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 2)

37) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 3)

38) அறிவியல் துளிகள்! (பாகம் 1)

39) அறிவியல் துளிகள்! (பாகம் 2)

40) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)

41) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

42) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3)

43) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4)

வானொலி உரைகள்

44) ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்

45) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 1)

46) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

47) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3)

வானொலி நாடகங்கள்

48) வருவார் காந்திஜி!

புதிர்கள்

49) மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்

மொழி

50) ஆங்கிலம் அறிவோமா?

ஆரோக்கியம்

51) அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 1)

52) அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 2)

*

குறிப்பு:- மேற்கண்ட 52 நூல்களில் 17 நூல்கள் விநாயகா பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை, உரிமையாளர், திரு சுவாமிநாதன் அவர்களால் அச்சிடப்பட்டு அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Vinayaka pathippakam

old no 29 new no 71

muthu street

royapetta chennai – 14

Contact : Mr Swaminathan  9941352785

9380712132

அச்சுப் பதிப்பு நூல்கள்

வெற்றிக்கலை

நவகிரகங்கள்

நாக நங்கை

விஜயதீபம்

அதிரடி மன்னன் ஜாக்கிசான்

உலகின் அதிசய இடங்கள

அறிவுக்கும் அப்பால்

பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

ஆங்கிலம் அறிவோமா?

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

விந்தை மனிதர்கள்

திறன் கூட்டும் தியானம்

ஆன்மீக ரகசியங்கள்!

அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

விஞ்ஞானப் புதுமைகள் 100

சிறுவர் புராணக் கதைகள்

கீழ்க்கண்ட ஒரு நூலை அச்சுப் பதிப்பாக, மணிவாசகர் பதிப்பகம் , சென்னை வெளியிட்டுள்ளது:

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

*

கீழ்க்கண்ட 15 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்படத் தயாராக உள்ளன.

 

அறிவியல்

  1. அறிவியல் துளிகள்! (பாகம் 3)
  2. அறிவியல் துளிகள்! (பாகம் 4)
  3. அறிவியல் துளிகள்! (பாகம் 5)
  4. அறிவியல் துளிகள்! (பாகம் 6)

பெண்ணியம்

  1. ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்
  2. மாறி வரும் பெண்கள் உலகம்

ஆன்மீகம்

  1. அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!
  2. புராணத் துளிகள் பாகம் 2
  3. சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 1

(சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பு)

  1. ராமாயண வழிகாட்டி பாகம் 1
  2. ஸ்வர்ண லோகம் பாகம் 1
  3. பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!!

ஆரோக்கியம்

  1. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3

வானொலி உரைகள்

  1. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4

உலகம்

67.இன்றைய பார்வையில் சில உலக நாடுகள்

கீழ்க்கண்ட 41 நூல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு நூல்களாக ஆக்கம் செய்யப்படத் தயாராக உள்ளன.

  1. அறிவியல் துளிகள்! (பாகம் 7)
  2. அறிவியல் துளிகள்! (பாகம் 8)
  1. சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 2

(நியாயங்கள் பற்றிய தொகுப்பு)

  1. தமிழ் என்னும் விந்தை பாகம் 1
  1. முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!

(சுய முன்னேற்ற நூல் – ஆங்கில நூலின் தமிழாக்கம்)

73) வெற்றிக்கலை – இரண்டாம் பாகம்

74) அறிவியல் துளிகள்! (பாகம் 9)

75) 120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸூ யுன்! (Empty Cloud தமிழாக்கம்)

76) அறிவியல் துளிகள்! (பாகம் 10)

77) அறிவியல் துளிகள்! (பாகம் 11)

78) அறிவியல் துளிகள்! (பாகம் 12)

79) அறிவியல் துளிகள்! (பாகம் 13)

80) அறிவியல் துளிகள்! (பாகம் 14)

81) அறிவியல் துளிகள்! (பாகம் 15)

82) அறிவியல் துளிகள்! (பாகம் 16)

83) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் – பாகம் 5

84) மாக்ஸ்முல்லர் மர்மம்

85) இது தான் இந்தியா!

86) கம்பன் இன் கவித் திரட்டு மற்றும் கட்டுரைகள்

87) மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – பாகம் 1

88) மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – பாகம் 2

89) பாரதி போற்றி ஆயிரம்

90) அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 4

91) ஸ்வர்ண லோகம் (புத்த மதக் கட்டுரைகள்) (பாகம் 2)

92) தேவாரக் கட்டுரைகள் (பாகம் 1)

93) தேவாரக் கட்டுரைகள் (பாகம் 2)

94) கொங்கு மண்டல சதகம் – வரலாற்றுக் கட்டுரைகள்

95) ஹிந்து ராஷ்டிரம் தேவையா?

96) சம்ஸ்கிருதச் செல்வம் (பாகம் 3)

97) மஹாபாரத மர்மங்கள்

98) கண்ணதாசனின் காலம் வென்ற படைப்புகள்

99) மஹரிஷி ரமணர்

100) வாஸ்து சாஸ்திரமும் பெங் சுயி நன்மைகளும்

101) அதிசய கவிஞர் பாரதியார்

102) மதம் மாற்றும் பாதிரிகளும் இங்கர்சாலும்

103) வள்ளுவரிடம் வாழ்க்கை இரகசியங்களை கேட்போம்

104) உலகின் ஒப்பற்ற மேதைகள் – லிங்கன், நெப்போலியன், வால்டேர், மொஜார்ட்

105) அதீத உளவியல் ஆற்றல் மர்மங்கள்!

106) அருமையான ஹிந்தி, ஆங்கில, தமிழ் திரைப்படங்கள்

107) கிருஷ்ண தியானம் ஏன்? மேலை நாட்டு அறிஞர் வியக்கும் ஹிந்து மதம்

108) அதிசய மஹாபுருஷர்கள் வாழ்க்கையில் .. ..

—-  SUBHAM  —

13 சாமியார்களைக் கண்டு பிடியுங்கள்! (Post No.5683)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 20 November 2018

GMT Time uploaded in London –15-52
Post No. 5683

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தியாவை ஆன்மீக உலகில் கொடிகட்டிப் பறக்கச் செய்த 13 சாது, சந்யாஸிக்களும், மஹான்களும், ஆழ்வார், நாயன்மார்களும் கட்டத்தில் மறைந்து இருக்கின்றனர்.

குறுக்காகவோ, நெடுக்காகவோ பார்த்தால் எழுத்துக்கள் இடம் மாறிய நிலையில் பெயர்கள் இருக்கும். முயன்றால் கண்ணுக்குத் தெரிவர்.

 

முடியாவிட்டால் கீழே விடைதனைப் பாருங்கள்.

விடை

சுவாமி விவேகாநந்தர், ராமகிருஷ்ண, நரசிம்ம மேதா,ஆதி சங்கரர், சுவாமி சிவாநந்தர், தாயுமானவர், ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆண்டாள், ஔவையார், ஆனந்தமயி

TAGS– 13 சாமியார், கண்டு பிடி

–SUBHAM–

 

கலைஞரின் கை எப்போதும் சுத்தமானது-மநு சர்ட்டிபிகேட் (Post 5682)

 

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 20 November 2018

GMT Time uploaded in London –11-12 AM
Post No. 5682

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மநு நீதி நூல் – பகுதி 33

மநு தர்ம சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் 110 ஸ்லோகம் வரை கண்டோம். இன்று இறுதி வரை பார்த்து ஐந்தாவது அத்தியாயத்தை முடிப்போம்.

1.இந்தப் பகுதி ரத்தின, தங்கம், வெள்ளி முதலிய பண்டங்களையும், பாண்டங்களையும் சுத்தம் செய்வது எப்படி என்று துவங்குகிறது. மநு, மனிதர்களின் சுத்தம் பற்றி மட்டுமன்றி ஏனையவற்றையும் விவாதிப்பது அக்கால நமபிக்கைகளைக் காட்டுகிறது.

கலைஞரின் கையும், பெண்ணின் வாயும் எப்போதும் சுத்தமானது-மநு சர்ட்டிபிகேட்

முதலில் புல்லட் பாயிண்டுகளில் (bullet points)

முக்கிய விஷயங்களை அலசுவேன்.

2.மநுவை எதிர்த்து துஷ்பிரசாரம் செய்யும் அயோக்கியர்கள் அடிக்கடி காட்டும் முக்கிய ஸ்லோகம் இந்தப் பகுதியில் வருகிறது. இந்துப் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று

மநு செப்பியதாக வெளிநாட்டு விஷமிகளும், திராவிட, மார்கஸீய அரை வேக்காடுகளும் அடிக்கடி மேற்கோள் காட்டுவது ஸ்லோகம் 148. இதை மற்ற ஸ்லோகங்களுடன் கோர்வையாகப் படிக்கையில் மநு, ஒரு பெண்ணின் பாதுகாப்புக்காகச் சொன்னானே தவிர, சுதந்திரம் இருக்கக்கூடாது என்று செப்பவில்லை என்பது வெள்ளிடை மலையென விளங்கும். அது மட்டுமல்ல. வேறு இடங்களில் பெண்களுக்கு ஆதரவாக மநு சொன்ன விஷயங்களை வேண்டுமென்றே மறைப்பர். எந்தக் குடும்பத்தில் ஒரு பெண் அழக்கூடிய நிலைக்குத் தள்ளப் படுகிறாளோ அநதக் குடும்பம் வேரோடு சாயும்- அடியோடு அழியும் என்று மநு சொன்னதைக் காட்ட மாட்டர்கள் அயோக்கியர்கள். அது மட்டுமல்ல; பெண்களுக்குப் புத்தாடைகளையும், நகை நட்டுகளையும் வாங்கித் தந்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் முழுக வைக்கும் இடத்தில்தான் தெய்வங்கள் வசிக்கும் என்று மநு சொன்னதையும் திருடர்கள் மறைப்பர். இதே அத்தியாயத்தில் கூட பெண்ணின் வாய் எப்போதும் சுத்தமானது என்று சொல்லுவதையும் கொடுக்காமல் ஸ்லோகம் 148-ஐ மட்டும் கொடுப்பவர்களை அயோக்கியர்கள் என்று எளிதில் இனம் காணலாம்.

இதைவிட முக்கியமானது இது சங்கத் தமிழ் பாடல்களிலும் உளது. பெண் என்பவள் பிறந்த இடத்துக்குச் சொந்தமானவள் அல்ல; அவள் ஓடிப்போனதைப் பற்றி ஏன் வருந்துகிறாய்? என்று ஒர் புலவர் பாடுகையிலும் இந்த விஷயம் வருகிறது.

 

3.அடுத்தபடியாக ‘தஸ்யூ’ என்னும் சொல்

வரும் ஸ்லோகம் 131. இதற்குத் திருடன், கொள்ளைக்காரன், புறம்போக்கு என்று பொருள். அந்த அர்த்தத்தில் உலகப் புகழ் காளிதாஸன் போன்றோர் பயன்படுத்துவதை அனவரும் அறிவர். ஆனால் ஆரம்பத்தில் வேதங்களை மொழிபெயர்த்த அயோக்கிய வெள்ளைக்காரர்கள், இதை ‘பழங்குடி மக்கள்’- ‘ஆரியர்களை எதிர்த்தவர்கள்’- என்று திருட்டுத்தனமாக மொழி பெயர்த்தனர். சங்க இலக்கியத்தில் சில ஜாதிகளைக் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்றும், கல்லாதவர்கள் என்றும் புலவர்கள் பாடியுள்ளனர். அதற்காக அந்த இனத்தையே நாம் பழிப்பத்தில்லை. இது போல எந்த சமூகத்திலும், ஜாதியிலும்  கொள்ளைக்காரர்கள் இருப்பர். ராபர்ட் கிளைவ் போன்ற வெள்ளைக்காரன் ஒரு தஸ்யூதான்.

பெண்ணின் வாய், கலைஞரின் கை

4.ஒரு பெண்ணை முத்தம் கொடுத்தால் அது எச்சில் ஆகாதா, ஒரு பறவை கொத்தி கீழே விழும் பழம் எச்சில் இல்லையா, குயவன், நெசவாளி, தச்சன் போன்றோர் செய்து கொடுப்பதை எல்லாம் பூஜையில், யாகத்தில் பயன்படுத்துகிறோமே இவை எல்லாம் கீழ் ஜாதியினர் தொட்டதுதானே என்று 5000 ஆண்டுகளுக்கு முன் வாதம் செய்த முட்டாள்களுக்கு மநு– மாபெரும் ஜீனியஸ் great genius– மாபெரும் உளவியல் நிபுணந் psychologist – அழகாகப் பதில் சொல்லிவிட்டான். இவை எல்லாம் எச்சில், தீட்டு, அசுத்தம் இல்லை – இல்லவே இல்லை. இந்த ஸ்லோகத்தை நான் கீழே தந்துள்ள திருலோக ஸீதாரமன் சரியாக மொழி பெயர்க்கவில்லை. காரணம் அவர் திருவைந்திரபுரம் இராமாநுஜாச்சாரியாரைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட நூலை

எளிமையாக்கித் தந்தவரே; ஒரிஜினல் மொழி பெயர்ப்பாளர் அல்ல. மநு நூல் மீது உரை எழுதியோர், சரியான வியாக்கியானம் செய்து இது கைவினைஞர்கள், கலைஞர்களைக் குறிக்கும் என்று விளக்கியுள்ளனர்.

5.உடலில் ஏற்படும் 12 வகை அசுத்தங்கள் என்ன? (ஸ்லோகம் 134, 135)

6.ஐந்து வகை சுத்தி கரிப்பு முறைகள் என்ன?( ஸ்லோகம் 124) என்பன கவனிக்கத்தக்கவை

7.பிராமணன் சொன்னால் போதும் அதை சுத்தம் என்று எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லும் ( ஸ்லோகம் 127) பகுதியும் குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் பிராஹ்மணர்கள் ஸத்திய சீலர்களாக இருந்ததால் அவ்வளவு மதிப்பு. வெளிநாட்டு யாத்ரீகர்களும் பிராஹ்மனர்களை உயர்த்திப் பேசியிருப்பது இதற்கு அத்தாட்சி பத்திரம் கொடுக்கும். அது மட்டுமல்ல. சங்க இலக்கியத்தில் அதிகமான செய்யுட்களை யாத்த கபிலரை மட்டும் பல புலவர்கள் ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ — என்று புகழ்வதையும் கருத்திற்கொள்கையில் இதன் பொருள் பிரகாஸமாகும்.

என் சொந்த அநுபவம்–என் அம்மா, வீட்டு வாசலில் வரும் காய்கறிக்காரி, கீரைக்காரி, மாவடு விற்பனை செய்யும் பெண்மணியிடம் பொருட்களை வாங்குகையில், ‘இதோ பாரம்மா, இத்தனை  ,,,,,,, (நம்பரைச் சொல்லி) பொருட்களைத்தான் வீட்டுக்குள் கொண்டு செல்கிறேன், நன்றாகப் பார்த்துக்கொள்’ என்பார். அதற்கு அந்த

பெண்மணி, ‘அம்மா, நீங்கள் எல்லாம் சாமி மார் (பிராஹ்மணர்கள்), பொய் சொல்ல மாட்டீர்கள்; என்னிடம் காட்ட வேண்டாம்’ என்பாள். அநத அளவுக்கு உண்மை விளம்பிகளாகப் பிராஹ்மணர்கள் இருந்தவரை அவர்களை இலக்கியங்களும் பூசுரர்கள் (பூவுலகத்தில் வாழும் தேவர்கள்) என்று பாராட்டின.

8.தெய்வம் தொழாள்;

கணவனே கண்கண்ட தெய்வம்

கணவனே முதல் தெய்வம்- கணவனுக்குப் பணிவிடை செய்தால், கடவுளைக் கும்பிட வேண்டிய அவஸியம் பெண்களுக்கு இல்லை என்று எல்லா இந்திய மொழி இலக்கியங்களும் விளம்பும். ஆனால் மநுவும், திருவள்ளுவரும் அடித்துக் கூறுவது போல வேறு எவரும் மொழிந்ததாக நாம் அறியோம். கணவனை மட்டும் வணங்கி தெய்வத்தை வழிபடாமல் இருக்கும் பெண்ணுக்கு அபூர்வ சித்திகள் உண்டாகும்; மழை பெய் என்றால் பெய்யும்;மழையை நில் என்றால் நிற்கும் ;முலையை விட்டு எரிந்து அக்கினி தேவனை அழைத்தால் அவன் மதுரை நகரையே (பார்ப்பனர்,பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயோதிகரை விடுத்து) எரிப்பான் என்பது வள்ளுவனும், இளங்கோவும் காட்டும் இந்துப் பண்புகள்; இதையே மநுவும் உரைப்பான் (sloka ஸ்லோகம் 155).

9.சதி என்னும் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிர்ப்பு- ஸ்லோகம் Slokas 156-158 ‘சதி’ இல்லை

ஸ்லோகம் 156 முதல் 158 வரையுள்ள ஸ்லோகங்கள், கணவன் இறந்தவுடன், மனைவி வாழும் முறை பற்றிச் செப்பும்; அது மட்டுமல்ல. மநு வேறு எங்குமே ‘சதி’ என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் பற்றி மொழியவில்லை. இது இரண்டு விஷயங்களைக் காட்டும்:-

1.ஒரிஜினல் மநு வாழ்ந்தது ரிக்வேதம் இருந்த 5000, 6000 ஆண்டுகளுக்கு  முந்தைய காலம். ஏனெனில் உலகின் பழைய நூலான ரிக் வேதமும் சதி பற்றி கதைப்பதில்லை. மேலும் ஸரஸ்வதி நதி பற்றியும் ‘ரிக்’கும், மநுவும் கதைப்பர். இவை எல்லாம் ஒரிஜினல் மநு தர்ம சாஸ்திரத்தின் சுவடுகள். ஆக மநுவைப் போல மகளிரைப் பாராட்டிய, போற்றிய பெருமகன் எவருமிலர் என்பதை ஐந்தாம் அத்தியாயம் வலியுறுத்துகிறது.

Tags–கலைஞரின் கை, சதி, சுத்தமானதுபெண்ணின் வாய்,

—-subham–