சுவாமி இந்து குறுக்கெழுத்துப் போட்டி-1(Post No.5550)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 October 2018

 

Time uploaded in London – 6-39 AM

(British Summer Time)

 

Post No. 5550

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

விடை அடுத்த குறுக்கெழுத்துப் போட்டியில் வெளியாகும்

குறுக்கே

3.மலைமகளின்  நாமம்

5.கண்ணன் அருளியது

6.வேதகால இலக்கியம்

9.பாக்களின் பெயர் கொண்ட பாவை

11.காவிரியை உண்டாக்கிய முனி

13.செல்வ தேவதைகள் 8

14.இறந்தோருக்கு அளிப்பது

15.அயோத்திமன்னன் கதை

16.சிவனின் மனைவி

17.சர்ச்சைக்குரிய குந்தி மகன்

18.காற்றுக்கு அதிபதி

19.கடலுக்கு அதிபதி

20.தேவனின் எதிரி

25.நாட்டின், நூலின் பெயர்

26.கடவுளின் வாஹனம்

28.தீ வழிபாடு

  1. தீயின் அதிபதி

 

கீழே

1.ராமனின் மனைவி

2.முதல் தெய்வம்

3.பாவம் செய்தவன்

4.சிவனின் படை

7.கிருஷ்ணன், காதலி திருமணம்

8அன்னைக்கு அடுத்த தெய்வம்

9.சிவன் கழுத்தில் இருப்பது

12.நெற்றியில் வைப்பது

13.வேத கால பெண் தெய்வம்

14.நீத்தார் நினைவு தினம்

20.ராமனின் கால்பட்டு எழுந்தவள்

21.தேவலோக நர்த்தகி

22.விஷ்ணுவும் சிவனும்

23.ஐந்தெழுத்து

  1. ஓரெழுத்து மந்திரம்

27.முனிவர்கள் செய்வது

30.கலைமகள்.

 

–சுபம்–

SWAMI HINDU CROSSWORD PUZZLE No.3 AND SOLUTION TO PUZZLE 2 (Post No.5548)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

Time uploaded in London – 17-25

(British Summer Time)

Post No. 5548

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1 X 2 X X X X X 3
4 X X X 5
X 6 X X X X
X X X 7 8
X X 9 X X X X X X
X X X X X
10 X X X X X X X X X X
11 X X X
X X X 12 X X X X
X X 13 X X X X X X X
X 14 X X X X X X X X
15 X X X X X X X
16 X X X X N 17 X

ACROSS

1.FAMOUS EPIC

5.VEDIC GODDESS; DAUGHTER OF MANU AND SRADDHA

6.CELESTIAL MUSICIAN

9.STRONGEST OF THE PANDAVA BROTHERS

  1. A SAINT WHOSE BODY WAS BENT DUE TO SOUND EFFECT

12.BOOK CONTAINING FIRE SACRIFICE POCEDURES

14..KRISHNA’S DEAREST FRIEND

15.ANOTHER NAME OF SUN

16.WIFE OF INDRA

DOWN

2.LONGEST EPIC IN THE WORLD

3.OLDEST BOOK IN THE WORLD

4.ONE OF THE THREE BOOKS CALLED PRASTHANA TRAYA

6.SIVA AND VISHNU

7.LIFE STORY OF KRISHNA; ONE OF 18 PURANAS

8.HOLY BOOK MEANING KNOWLEDGE

11.SHORT AND PITHY FORMULA; SUFFIX OF MANY BOOKS

13.NAME OF GODDESS MEANING WAVE

  1. GOD’S NAME; SUFFIX OF SIVA

XXXX

SOLUTION TO PUZZLE 2

PUZZLE 2

ACROSS

1.YAYATI—SON OF KING NAHUSA; EARLY ANCESTOR OF KURU DYNASTY

7.URVASI–ENCHANTING  APSARAS OF HEAVEN

9.RAMA–BROTHER OF LAKSHMANA

11.AKALI–SIKH TERM; SIKH POLITICAL GROUP

12.BALI–DEMON KING KILLED BY VAMANA

13.Kali–GODDESS OF DESTRUCTION

14.ojas–MIGHT, POWER

15.anga–A MLECHA KING; ALSO COUNTRY RULED BY KARNA

DOWN

2.amrita—HEAVENLY ELIXIR

3.ambalika—DAUGHTER OF KASI RAJA; SISTER OF AMBA

4.agni–GOD OF FIRE

5.drona—TEACHER OF PANDANAS AND KAURAVAS

6.rishi–SEER

8.apsaras—-HEAVENLY BEAUTIES

10.rohini—MOON’S FAVOURITE WIFE; ALSO NAME OF BALARAMA’S MOTHER

14.om—PRIMORDIAL SOUND MANTRA

16.shibi–GREAT KING WHO GAVE HIS FLESH TO A BIRD

–subham—

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

Time uploaded in London – 7-04 AM

(British Summer Time)

Post No. 5546

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

மூட நம்பிக்கைகள் பற்றிய ஒரு ஆங்கிலப் புஸ்தகம் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரியில் கிடைத்தது. அதில் பல விநோத நம்பிக்கைகள். ஒன்று யானை பற்றியது. நான் இதுவரை கேள்விப் பட்டத்தில்லை. லண்டனில் என் வீட்டிலும் நிறைய மர யானை பொம்மைகள்  உண்டு. அவை ஒவ்வொன்றும் நவக் கிரஹங்கள் போல ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றன. இப்படி நிற்கக் கூடாதாம். வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள்.

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை”

என்னும் திருமூலர் பாடலின் தத்துவம் பற்றி காஞ்சி பரமாசார்யார் சொல்லிவிட்டார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது?

இருந்த போதிலும் திருமூலர் காலத்திலிருந்து மர யானை பொம்மைகள் தமிழ் நாட்டில் இருந்தது தெரிகிறது. எங்கள் மதுரையில் புகழ்பெற்ற கல் யானை கூட உண்டு. ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வந்து கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவி  ளையாடல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

யானையின் அபார ஞாபக சக்தி, பழி வாங்கும் குணம், உ.வே.சாமிநாத ஐயர், காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன யானக் கதைகள், சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பெண்ணின் பாடலுக்கு மயங்கி தானியக் கதிர்களைச் சாப்பிடாமல் நின்ற யானை, புத்தர், மஹாவீரர் ஆகிய பெரியோர்களின் தாய்மார்களின் கனவில் தோன்றிய

யானைகள், புத்தர் முன் மண்டியிட்ட யானை, யானை லத்தி காப்பிக் கொட்டை ஸ்பெஷல் காப்பி, கஜ சாஸ்திரம், கோவில்களில் கஜ பூஜை, யானைக்கு உள்ள பல பெயர்கள்– என்று நூற்றுக் கணக்கான யானை புராணங்களை எழுதிய எனக்கு நேற்று ஆங்கிலப் புஸ்தகத்தில் படித்த செய்தி வியப்பு அளித்தது.

அதாவது வீட்டில் யானை பொம்மையோ, வரைபடமோ, காலண்டரோ எது இருந்தாலும் அது வாசல் கதவை நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டுமாம்! அப்படியில்லாவிடில் துரதிர்ஷ்டமாமம்!!!

 

ஒரு லண்டன் வாசி எழுதுகிறார்,

என் வீட்டில் மர யானை பொம்மைகள் உண்டு. நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். நான் சொன்னேன்; நான் சரியான அதிர்ஷ்டக் கட்டை. ராமே ஸ்வரம் போனாலும் சனைஸ்சரன் விட மாட்டான் என்ற பழமொழி போல எனக்கு யானை பொம்மை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை. உடனே என் ஆங்கில நண்பர் சொன்னார்:– அட, உங்களுக்குத் தெரியாதா? யானை பொம்மையை வாசலை நோக்கி வரவேற்பது போல வைக்க வேண்டும் என்று.

அன்று முதல் யானை பொம்மையை வாயில் திசை நோக்கி வைத்தேன். பின்னர், ஒரே அமோகம் தான்.

 

யானை முடி தாயத்து!

இன்னொரு பெண்மணி எழுதுகிறார்– யானை பொம்மை, யானை முடி தாயத்து– இவை எல்லாம் அதிர்ஷ்டச் சின்னங்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஆனால் பொம்மை வாசலை நோக்கி இருக்க வேண்டும்.

இன்னொரு பெண்களுக்கான பத்திரிக்கையில் ஒரு குறிப்பு:

எனது அப்பா திடீரென்று இறந்து போனார். பின்னர்தான் தெரிந்தது. எதேச்சையாக யாரோ கை பட்டு எங்கள் வீட்டு யானை பொம்மை திசை மாறித் திரும்பி இருந்தது என்று. அதாவது அவர் மரணம் அடையப் போவதை, யானை முன்னரே தெரிந்து கொண்டுவிட்டது.

இன்னொரு அன்பர் பத்திரிக்கையி     எழுதுகிறார்; அவர் கிண்டல் செய்கிறாரோ, உண்மையைச் செப்புகிறாரோ; துப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவர் மப்புடன் எழுதியது இதுதான்:

உங்களுக்குத் தெரியாதா?

யானைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் மதம் பிடித்துவிடும். ஆகையால் வாயிற் கதவுகளை நோக்கி வையுங்கள்.

 

மற்றொரு பெண்மணி யானை முடி தாயத்து  அதிர்ஷ்டம்

அளிக்கும் என்கிறார். நான் குருவாயூர்

அருகில் உள்ள யானை முகாமுக்கு சென்றிருந்தேன். அங்கு 50, 60 யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

சிலர் யனைப் பாகனுடன் ‘கிசு கிசு’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்ட போது தமிழும் மலையாளமும் அறிந்த ஒருவர் எனக்கு விளக்கினார். யானை முடி வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமாம். அவர் கண்ணுக்கு முன்னால் யானையின் வால் முடியைப் பிடுங்கி நமக்குக் கொடுப்பாராம். எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டாம்; யானை முடியைப் பிய்த்து அதைக் கொடுமைப் படுத்திய பாவமும் வேண்டாம் என்று சொல்லி விட்டு நைஸாக நகர்ந்து விட்டேன்.

இதில் வேடிக்கை என்ன வென்றால், யானையை உலகிற்குக் காட்டியவனே இந்தியந்தான். ஆப்பிரிக்கவின் புகழ்மிகு எகிப்திய ஓவியங்களில் யானையே இல்லை. தென் கிழக்காஸிய நாடுகள் முழுதும் இந்திரனின் அதிர்ஷ்டக்கார வெள்ளை யானை ஐராவதம்தான் சி   லைகளிலும், கொடிகளிலும்!!! தாய்லாந்து போன்ற நாடுகளின் அரசாங்க சின்னங்களிலும் உளது.  தமிழ்நாட்டுக் கோவில்களில் பூமியைக் காக்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் எட்டு யானைகள் கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றிலும் உள. சங்க இலக்கியப் பாடல்களில் யானைக் குறிப்புகள் பற்றி ஒரு ஆராய்ச்சி புஸ்தமே உளது. ஸரஸ்வதி மஹால் லைப்ரரி (தஞ்சாவூர்) யில் கஜ சாஸ்திரம் இருக்கிறது.

ஸிந்து-ஸர்ஸ்வதி நாகரீக முத்திரையில் யானைப் படம் உளது; ஆயினும் ஆப்பிரிக்காவில் தந்த சிற்பங்கள் உள. யானைப் படமோ சிலையோ இல.

யானை என்னும் பிராணி வெப்ப மண்டல நாட்டுப் பிராணி. அது ஐரோப்பியா சென்றது 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான். டேரியஸ், அலெக்ஸான்டர் ஆகியோர் படை எடு  , ப்புக்கு முன்னால் அவர்கள் யானையைப் பார்த்தது இல்லை. மாமூத் போன்ற யானையின் மூதாதையர் இருந்ததோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தும் யானை பொம்மை பற்றி இவ்வளவு நம்பிக்கைகள் எப்படிப் பரவின என்பது ஆரய்ச்சிக்குரிய விஷயம்.

(யானை பற்றிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் வெள்ளைக்காரர்களின் பெயர்களையும் புஸ்தகம், பத்திரிக்கைகளின் பெயரையும் கொடுத்துள்ளேன்)

“பொம்மையில் மறைந்தது மாமத யானை

பொம்மையை மறைத்தது மாமத யானை”– ஆங்கிலத் திருமூலர்.

யானைகள் வாழ்க!!

–SUBAHM–

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

 

Time uploaded in London – 7-09 AM

(British Summer Time)

 

Post No. 5546

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

மூட நம்பிக்கைகள் பற்றிய ஒரு ஆங்கிலப் புஸ்தகம் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரியில் கிடைத்தது. அதில் பல விநோத நம்பிக்கைகள். ஒன்று யானை பற்றியது. நான் இதுவரை கேள்விப் பட்டத்தில்லை. லண்டனில் என் வீட்டிலும் நிறைய மர யானை பொம்மைகள்  உண்டு. அவை ஒவ்வொன்றும் நவக் கிரஹங்கள் போல ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றன. இப்படி நிற்கக் கூடாதாம். வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள்.

 

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை”

 

என்னும் திருமூலர் பாடலின் தத்துவம் பற்றி காஞ்சி பரமாசார்யார் சொல்லிவிட்டார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது?

 

இருந்த போதிலும் திருமூலர் காலத்திலிருந்து மர யானை பொம்மைகள் தமிழ் நாட்டில் இருந்தது தெரிகிறது. எங்கள் மதுரையில் புகழ்பெற்ற கல் யானை கூட உண்டு. ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வந்து கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவி  ளையாடல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

யானையின் அபார ஞாபக சக்தி, பழி வாங்கும் குணம், உ.வே.சாமிநாத ஐயர், காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன யானக் கதைகள், சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பெண்ணின் பாடலுக்கு மயங்கி தானியக் கதிர்களைச் சாப்பிடாமல் நின்ற யானை, புத்தர், மஹாவீரர் ஆகிய பெரியோர்களின்

தாய்மார்களின் கனவில் தோன்றிய

யானைகள், புத்தர் முன் மண்டியிட்ட யானை, யானை லத்தி காப்பிக் கொட்டை ஸ்பெஷல் காப்பி, கஜ சாஸ்திரம், கோவில்களில் கஜ பூஜை, யானைக்கு உள்ள பல பெயர்கள்– என்று நூற்றுக் கணக்கான யானை புராணங்களை எழுதிய எனக்கு நேற்று ஆங்கிலப் புஸ்தகத்தில் படித்த செய்தி வியப்பு அளித்தது.

 

 

அதாவது வீட்டில் யானை பொம்மையோ, வரைபடமோ, காலண்டரோ எது இருந்தாலும் அது வாசல் கதவை நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டுமாம்! அப்படியில்லாவிடில் துரதிர்ஷ்டமாமம்!!!

 

ஒரு லண்டன் வாசி எழுதுகிறார்,

என் வீட்டில் மர யானை பொம்மைகள் உண்டு. நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். நான் சொன்னேன்; நான் சரியான அதிர்ஷ்டக் கட்டை. ராமே

ஸ்வரம் போனாலும் சனைஸ்சரன் விட மாட்டான் என்ற பழமொழி போல எனக்கு யானை பொம்மை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை. உடனே என் ஆங்கில நண்பர் சொன்னார்:– அட, உங்களுக்குத் தெரியாதா? யானை பொம்மையை வாசலை நோக்கி வரவேற்பது போல வைக்க வேண்டும் என்று.

அன்று முதல் யானை பொம்மையை வாயில் திசை நோக்கி வைத்தேன். பின்னர், ஒரே அமோகம் தான்.

 

 

யானை முடி தாயத்து!

 

இன்னொரு பெண்மணி எழுதுகிறார்– யானை பொம்மை, யானை முடி தாயத்து– இவை எல்லாம் அதிர்ஷ்டச் சின்னங்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஆனால் பொம்மை வாசலை நோக்கி இருக்க வேண்டும்.

 

இன்னொரு பெண்களுக்கான பத்திரிக்கையில் ஒரு குறிப்பு:

எனது அப்பா திடீரென்று இறந்து போனார். பின்னர்தான் தெரிந்தது. எதேச்சையாக யாரோ கை பட்டு எங்கள் வீட்டு யானை பொம்மை திசை மாறித் திரும்பி இருந்தது என்று. அதாவது அவர் மரணம் அடையப் போவதை, யானை முன்னரே தெரிந்து கொண்டுவிட்டது.

 

இன்னொரு அன்பர் பத்திரிக்கையி     எழுதுகிறார்; அவர் கிண்டல் செய்கிறாரோ, உண்மையைச் செப்புகிறாரோ; துப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவர் மப்புடன் எழுதியது இதுதான்:

 

உங்களுக்குத் தெரியாதா?

யானைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் மதம் பிடித்துவிடும். ஆகையால் வாயிற் கதவுகளை நோக்கி வையுங்கள்.

 

மற்றொரு பெண்மணி யானை முடி தாயத்து  அதிர்ஷ்டம்

அளிக்கும் என்கிறார். நான் குருவாயூர்

அருகில் உள்ள யானை முகாமுக்கு சென்றிருந்தேன். அங்கு 50, 60 யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

 

 

சிலர் யனைப் பாகனுடன் ‘கிசு கிசு’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்ட போது தமிழும் மலையாளமும் அறிந்த ஒருவர் எனக்கு விளக்கினார். யானை முடி வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமாம். அவர் கண்ணுக்கு முன்னால் யானையின் வால் முடியைப் பிடுங்கி நமக்குக் கொடுப்பாராம். எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டாம்; யானை முடியைப் பிய்த்து அதைக் கொடுமைப் படுத்திய பாவமும் வேண்டாம் என்று சொல்லி விட்டு நைஸாக நகர்ந்து விட்டேன்.

 

இதில் வேடிக்கை என்ன வென்றால், யானையை உலகிற்குக் காட்டியவனே இந்தியந்தான். ஆப்பிரிக்கவின் புகழ்மிகு எகிப்திய ஓவியங்களில் யானையே இல்லை. தென் கிழக்காஸிய நாடுகள் முழுதும் இந்திரனின் அதிர்ஷ்டக்கார வெள்ளை யானை ஐராவதம்தான் சி   லைகளிலும், கொடிகளிலும்!!! தாய்லாந்து போன்ற நாடுகளின் அரசாங்க சின்னங்களிலும் உளது.  தமிழ்நாட்டுக் கோவில்களில் பூமியைக் காக்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் எட்டு யானைகள் கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றிலும் உள. சங்க இலக்கியப் பாடல்களில் யானைக் குறிப்புகள் பற்றி ஒரு ஆராய்ச்சி புஸ்தமே உளது. ஸரஸ்வதி மஹால் லைப்ரரி (தஞ்சாவூர்) யில் கஜ சாஸ்திரம் இருக்கிறது.

ஸிந்து-ஸர்ஸ்வதி நாகரீக முத்திரையில் யானைப் படம் உளது; ஆயினும் ஆப்பிரிக்காவில் தந்த சிற்பங்கள் உள. யானைப் படமோ சிலையோ இல.

யானை என்னும் பிராணி வெப்ப மண்டல நாட்டுப் பிராணி. அது ஐரோப்பியா சென்றது 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான். டேரியஸ், அலெக்ஸான்டர் ஆகியோர் படை எடு  , ப்புக்கு முன்னால் அவர்கள் யானையைப் பார்த்தது இல்லை. மாமூத் போன்ற யானையின் மூதாதையர் இருந்ததோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தும் யானை பொம்மை பற்றி இவ்வளவு நம்பிக்கைகள் எப்படிப் பரவின என்பது ஆரய்ச்சிக்குரிய விஷயம்.

 

(யானை பற்றிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் வெள்ளைக்காரர்களின் பெயர்களையும் புஸ்தகம், பத்திரிக்கைகளின் பெயரையும் கொடுத்துள்ளேன்)

“பொம்மையில் மறைந்தது மாமத யானை

பொம்மையை மறைத்தது மாமத யானை”– ஆங்கிலத் திருமூலர்.

 

யானைகள் வாழ்க

–SUBAHM–

 

Elephants are Lucky (Post No.5544)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 October 2018

 

Time uploaded in London – 19-54

(British Summer Time)

 

Post No. 5544

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

In India people believe seeing elephants in person or in dream is a lucky sign. In Kerala,hair from elephant tail is used as a talisman. Mothers of Buddha and Mahavira dreamt of elephant before the great people were born. Elephant is an auspicious symbol.

It is very interesting to see the beliefs of European’s though it is a tropical animal native of Asia and Africa.

 

Here are some excerpts from magazines and books:-

1953 Folklore (Westmorland) says,
Elephants are lucky.
1957 Folklore says,
I was once at a marriage in Morecambe, Lancashire, when the bride groom met such a beast as he drove to church and afterwards received numerous congratulations on his singular good fortune.

1974 D Scannel, Mother knew Best, says,
Everyone knew that an elephant’s hair bracelet was lucky.

1957, Woman’s Own 4 April,
I have two small ebony elephants which I kept on the mantelpiece, but they did not bring any luck. Then a friend told me that elephants should always face the door. I moved them the next day and our happiness, health and luck really seem to have changed for better.


1969 Folklore,
If you own a drawing or a carving of an elephant, it must always be so placed in the room that its head is facing the door.

1970 Folklore,
It is a superstition in my family (East London/Essex ) that any ornament that has a face should be so placed that it is facing the door by which one would normally enters the room…..it was suggested that the death of my father in 1967 was affected or portended by an ornament being accidentally turned round some weeks earlier.

1984 Woman (Hawk Hurst, Kent),
I know people who have elephants in the room always face them to the door as they get wild if they do not know what is going on.

Elephants came to Europe only 2000 years ago but they knew about the elephants even before that due to Persian and Greek invasions.

It is strange to read how the belief or superstition about elephant toys spread there .

Elephant has positive symbolic associations.

A white elephant announced the birth of Gautama Buddha. Hindus worship elephant headed Ganesh before venturing into new business.
Elephant seals are discovered in Indus- Saraswati River civilisation .

In the Christian imagery of Physiologus of late antiquity, the elephants chastity is celebrated . It will procreate only after eating Mandrake root. The same sources say that female elephants give birth in marsh lands and the male elephants protect them from snakes.

 

The ancient Chinese also lauded the chastity of the elephants.

White elephants are considered lucky because they were the vehicles of Vedic god Indra. In the old Thailand/ Siam white elephant was used in the royal emblem. Indra’s elephant is called Airavata.
South Indian Hindu temples have eight elephants sculpted around the sanctum sanctorum. Those eight elephants guard the earth in eight directions.
The Chinese phrase ‘to ride on an elephant’ means Happiness.

Indian Folklore and anecdotes about the amazing memory of elephants are well known. ( I have already umpteen anecdotes about the Memory of Elephants)

Xxx Subham xxx

SWAMI HINDU CROSSWORD PUZZLE 2 AND SOLUTION TO PUZZLE 1 (Post No.5543)

 

 

SWAMI HINDU CROSSWORD PUZZLE 2 AND SOLUTION TO PUZZLE 1 (Post No.5543)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 October 2018

 

Time uploaded in London – 15-09

(British Summer Time)

 

Post No. 5543

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

PUZZLE 2

ACROSS

1.SON OF KING NAHUSA; EARLY ANCESTOR OF KURU DYNASTY

7.ENCHANTI APSARAS OF HEAVEN

9.BROTHER OF LAKSHMANA

11.SIKH TERM; SIKH POLITICAL GROUP

12.DEMON KING KILLED BY VAMANA

13.GODDESS OF DESTRUCTION

14.MIGHT, POWER

15.A MLECHA KING; ALSO COUNTRY RULED BY KARNA

 

DOWN

2.HEAVENLY ELIXIR

3.DAUGHTER OF KASI RAJA; SISTER OF AMBA

4.GOD OF FIRE

5.TEACHER OF PANDANAS AND KAURAVAS

6.SEER

8.HEAVENLY BEAUTIES

10.MOON’S FAVOURITE WIFE; ALSO NAME OF BALARAMA’S MOTHER

14.PRIMORDIAL SOUND MANTRA

16.GREAT KING WHO GAVE HIS FLESH TO A BIRD

 

SOLUTION PUZZLE 1

 

ACROSS

 

1.SUBANU-TWO WORDS: NAME OF SUN, BRIGHT/SHINING

NAMES OF SATHYABAMA’S CHILDREN

2.KAMA-HINDU CUPID

3.VARUNA, RNA-TWO WORDS—LORD OF OCEAN, DEBT (T PITR, DEVA ETC)

4.ASVIN–VEDIC TWIN GODS

5.UMA-SIVA’S WIFE

6.INDRA- LORD OF HEAVEN, CHIEF VEDIC GOD

7.YAMA, NIYAMA–TWO WORDS- GOD OF DEATH, RESTRICTION/CONTROL

8.VALI– KILLED BY RAMA WHILE FIGHTING WITH SUGREEVA

9.AGASTYA–SEER WHO DRANK OCEAN

  1. YAGA–FIRE CEREMONY

11.SISTER OF AMBIKA AND AMBALIKA

12.MITRA–VEDIC GOD WHOSE CULT SPREAD TO ROME

DOWN

13.USHAS–GODDESS OF DAWN

14.YOGA–CONTROLLING BODY AND MIND TOGETHER

15.KRISHNA–DRIVER OF ARJUNA

16.SITA–FAMOUS WOMAN OF MITHILA

17.AYU–SON OF KING PURURUVA AND URVASI

18.RAVI–ANOTHER NAME OF SUN

  1. RAMA–SON OF DASRATHA

20.ANU–SECOND SON OF YAYATI AND SHARMISHTA

21.LINGAM–FORMLESS SHIVA

22.AUM–PRANAVA MANTRA

 

u M A       S U B A N U
S     K A M A       N    
H     R       V A R U N A
A S V I N               U
S     S   S       M     M
      H   I N D R A      
      N   T     A     L  
N I Y A M A     V A L I  
    O       U   I     N  
  A G A S T Y A   Y A G A
    A       A         A  
  A M B A     A R T I M  
S W A M I ­­C R O S S W O RD

 

 

அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்- மநு பயங்கர எச்சரிக்கை! (post No.5542)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 October 2018

 

Time uploaded in London – 8-39 am

(British Summer Time)

 

Post No. 5542

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மநு நீதி நூல்- PART 29

மநு என்பவர் வேத காலத்தில் வாழ்ந்தவர் என்பது ரிக் வேத துதிகள் மூலம் தெரிகிறது. அப்படியானால் இற்றைக்குக் குறைந்தது 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் இன்று நம்மிடம் இருக்கும் மநு தர்ம சாஸ்திரம் பல முறை மாறுதல்களுக்கு, இடைச் செருகல்களுக்கு, உள்ளாக்கப்பட்டுள்ளது. 2600 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ள மநு தர்ம நூலில் 40 + ஸ்லோகங்கள் சூத்திரர்களுக்கு எதிராக உள்ளது. திராவிடங்களும் மார்கஸீயங்களும், யாரும் பின்பற்றாத இந்த மநு நூலை வைத்துக் கொண்டு அவ்வப்போது கூச்சல் போடுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல அந்தக் கும்பல்களுக்கு பணம் கொடுக்கும் பேர்வழிகள், மதம் மாற்றக் கும்பல்கள் யார் என்பதையும் வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. பெண்களைப் பாராட்டி மநு எழுதிய ஸ்லோகங்களை வெளி உலகிற்குக் காட்டாமல் மறைப்பதால் இவர்கள் பெண்களை எதிர்க்கும் அயோக்கியக் கும்பல் என்றும் புரிகிறது. 2600+ ஸ்லோககங்களில் இடைச் செருகலாக வந்த ஸ்லோகங்களைப் பார்க்கையில் உலகம் கண்டறியாத மஹா ‘ஜீனியஸ்’ மநு என்றும் புரிகிறது.

 

அது மட்டுமல்ல. பிராஹ்மணர் அல்லாத எல்லோரையும் சூத்திரர் என்று திராவிடங்களும் மார்கஸீயங்களும் முத்திரை குத்தி இந்தியாவிலுள்ள நூறு கோடிப்பேரை சூத்திரர் என்றும் காட்டி வருகிறது. வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் ‘ஆர்ய’ என்ற சொல்லை இனச் சொல்லாகக் காட்டப்பட்டுள்ளது. ‘படித்தவர்கள்’, ‘பண்பாடு உடையவர்கள்’ என்ற உரிச்சொல்லை இனப் பெயர்ச் சொல்லாக பயன்படுத்தி மக்களை திசை திருப்பியுள்ளனர். ஆக ஒவ்வொருவரும் 2600 ஸ்லோகங்களையும் படித்து அதில் இக்காலத்துக்கு உரிய விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சொல்லப்போனால்  அடிமைகளையும் பெண்களையும் ஐரோப்பியர்கள் மிருகங்களாக நடத்திய காலத்தில்—(நமது காலத்திலேயே தென் ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கறுப்பர்களையும் பழங்குடி மக்களையும்– மிருகங்களாக நடத்தியதை நாம் அறிவோம்). —அப்படியில்லாமல் 2500 அல்லது 8000 ஆண்டுகளுக்கு முன் இந்து சமுதாயம் எப்படி இருந்தது  என்பதைப் பார்க்கையில் நாம் வெட்கப்பட எதுவுமே இல்லை. முழு மானவ தர்ம சாஸ்திரத்தையும் படிப்பவர்கள் இதை அறிவர். அரை வேக்காடுகள், தனக்குப் பிடித்த 40, 50 இடைச் செருகல்களைக் காட்டி கூத்தடிப்பர்.

அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்- மநு பயங்கர எச்சரிக்கை! (post No.5542)

 

மநுநீதி நூலின் நாலாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம்..

முதலில் சுவையான, முக்கியமான விஷயங்கள்

 

(ஸ்லோகங்கள் 4-154 முதல் காண்போம்.)

 

ஸ்லோகங்கள் 4-156- 158 யார் நீண்ட காலம்   வாழ்வான் என்று கூறுகிறது

ஸ்லோகங்கள் 160-162

வேலையில் எது  இன்பம் தரும்,  எது துன்பம் அளிக்கும் என்றும் விளக்குகிறார்.

எது நல்லது எது கெட்டது என்பதை  விளக்குகையில் மனதுக்கு இன்பம் பயக்கும் எல்லா நல்ல விஷயங்களும் நல்லது என்கிறார்

அடிமை போல வேலை செய்வது நல்லதல்ல; மனச் சாட்சிப்படி நடப்பதே மகிழ்ச்சி தரும் என்று மநு சொல்வதைப் பார்க்கையில் பெரும் அனுபவசாலி, உளவியல் நிபுணன் என்பது புலப்படும்

 

4-166 பிராமணர்களை பிராமணன் கூடத் தாக்கக் கூடாது; அப்படி தாக்கினால் நரகம், 21 பிறவிகள் ஏற்படும் என்பார்.

 

ஸ்லோகம் 172-174 கெட்டது செய்வோரை தெய்வம் நின்று கொல்லும், அதுவும் குடும்பத்தை வேரோடு சாய்த்து விடும். முதலில் நல்லது நடப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் அழிந்தே போவான் என்று எச்சரிக்கிறார். அரசன் “அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்னும் தமிழ்ப் பழமொழியை நினைவு படுத்துகிறார்.

 

கெட்டது செய்தோர் உலகில் நன்றாகதானே இருக்கிறார்கள்; தருமமே பொய்யோ என்று வியக்கிறோம். இதை மநுவும் அறிவார். பசு புல்லைத் தின்னுவீட்டு உடனே பால் தருவது போல   இல்லை இது. மெதுவாக ஒருவனை அதர்மம் கொல்லும். முதலில் நன்றாக இருப்பது போலத் தோன்றி பரம்பரையோடு அழிவான் என்று  பயங்கர எச்சரிக்கை கொடுக்கிறார்.

இங்கே பசு உவமை போல, பல இடங்களில் பூனை போல நடப்பவனையும் எச்சரிக்கிறார்.

4-178 பெரியோர் போட்ட பதையைப் பின்பற்று என்று கூறுகிறது.

 

4-179 முதல் 4-185 வரையுள்ள ஸ்லோககங்களில் சடுகுடு விளையாடும் சிறுவர் முதல் குடுகுடு கிழவனார் வரை- மனைவி மக்கள், உறவினர், வேலைக்காரர்கள் ஆகியோரை மதிக்கச் சொல்லிவிட்டு யார் யார் என்ன லோகத்துக்கு அதி தேவதை என்றும் பின்னர் மொழிவார்.

4-180, 4-185 வேலைக்கார்களை எப்படி மதிக்க வேண்டும் என்று காட்டும்

4-186 பிராஹ்மணர்களை தானம் பற்றி எச்சரிக்கிறது. அதிக தானம் வாங்கிப் பழகாதே; அதற்கு அடிமையாகிவிடாதே என்று சொல்கிறது.

 

4-196,197 ருத்ராக்ஷப் பூனை,பஞ்ச தந்திர கொக்கு- நண்டு கதைகளைப் போல ஒருவன் இருக்கக்கூடாது என்கின்றது

கொக்கு-நண்டு கதை பஞ்ச தந்திரக்கதைகளில் உள்ளது. ருத்ராக்ஷப் பூனை சிலை மஹாபலிபுரத்தில் அர்ஜுனன் தபஸ் சிற்பத்தில் உளது. மேலும் பல ஸம்ஸ்க்ருத நூல்களிலும் உளது ( முன்னர்

எழுதிய எனது கட்டுரையில் விவரங்கள் உள.

 

4-203, 204-ல் மற்றொருவனுடைய அனுமதியின்றி அவனது கிணறு, கார், வண்டி வாஹனங்கள், தோட்டம், சோஃபா முதலிய ஆசனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது இக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது. அலுவலகத்திலும், பிற இடங்களிலும் இது எவ்வளவு பெரிய சச்சரவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாம் அறிவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

xxxxxxxxxxxxxxxxxxxxxx

 

 

 

 

வைச்ச பொருள்?! – 2 (Post No.5541)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 October 2018

 

Time uploaded in London – 6-33 AM (British Summer Time)

 

Post No. 5541

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

ஆய்வுக் கட்டுரைகளை காப்பி அடித்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டாம். சிலர் கட்டுரைகள் வெளியான தளம், எழுதியவர் பெயர் இல்லாமல் நண்பர்களுக்கு அனுப்ப அவர்கள் தங்கள் பெயரில் அனுப்பி வெளியிடுகிறார்கள். எழுதியவர் பெயர், வெளியிட்ட இணையதளமான www.tamilandvedas.comஇன் பெயர் ஆகியவற்றையும் நண்பர்களுக்கு இணைத்து அனுப்புங்கள்.

வைச்ச பொருள்?! – 2

 

.நாகராஜன்

5

பொருள் என்பதைச் செல்வம் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கையாளும் போது பல சிக்கல் நிறைந்த விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார், வெவ்வேறு குறட்பாக்களில்.

அருள், பொருள் ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழ் தந்த அரும் வார்த்தைகள். அருள் என்ற வார்த்தைக்கு ஈடு இணையான இன்னொரு வார்த்தை எந்த மொழியிலும் கிடையாது.

 

பால் பிரண்டன் உள்ளிட்ட மேலை நாட்டோர் வியந்து போற்றிய வார்த்தை இது. பொருள் என்பதும் அதே போன்ற அருமையான வார்த்தை.

 

இந்த இரண்டையும் சீர் தூக்கிப் பார்க்கும் வள்ளுவரின் பான்மை வியத்தற்குரியது.

 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்  பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள  – குறள் 241

 

மிகத் தெளிவாக அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் என்றும் பணத்தால் பெறப்படும் சகல சௌகரியங்களும் அற்பர்களிடத்தும் உள்ளன என்கிறார்.

 

ஆனால் அந்தப் பொருளைக் கொண்டே அருளைப் பெறலாம் என்பதும் அவர் முடிபு.

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு – குறள் 757

அன்பானது பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித் தாயால் வளரும்.

பெற்ற பணத்தை நல்ல வழியில் செலவழித்தால் அருளை அடையலாம்.

 

பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்

அற்றார் மற்றாதல் அரிது   – குறள் 248

பணம் இல்லாவிட்டாலும் கூட ஒருவேளை பின்னால் வரக் கூடும்; ஆனால் அருள் இல்லையெனிலோ ஒன்றுமே இல்லாதவர்கள் தாம் அவர்கள்; அவர்கள் வளத்தைப் பெறுதல் அரிது.

 

ஆனால் அந்த அருள் மறு உலகத்தில் செல்லுபடியாகும் ஒன்று; பொருள் இல்லையெனில் இவ்வுலக வாழ்க்கை இல்லை! அருள் அவ்வுலகிற்குத் தேவை;பொருள் இவ்வுலகத்திற்குத் தேவை!

 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு   – குறள் 247

 

 

இந்தப் பொருள் இருந்தால் பொருளற்றவர் கூடப் போற்றப்படுவர். பொருளற்றவர் என்றால் இங்கு மதிக்கவே தகாதவர் என்று அர்த்தம்.

 

பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்  – குறள் 751

அருமையான இந்தக் குறளில் பொருள் என்னும் வார்த்தை பல பரிமாணங்களைக் காட்டுகிறது.

 

உலகியல் ரீதியான பொருள் தான் – பணம் தான் – சிறப்புடைய பொருள். அதுவன்றி வேறு எதுவும் ஒரு பொருள் அல்ல. மதிக்கத் தகாதவரைக் கூட மதிக்கும்படி வைக்கும் ஒரு அற்புதம் செல்வமே.

 

காசே தான் கடவுளடா!

பொருள் என்னும் பொய்யாவிளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று    -குறள் 753

பொருள் மட்டும் இருந்தால் போதும். அதுவே நந்தா விளக்கு. நினைத்த தேசத்திற்கெல்லாம் சென்று வெல்வதோடு இருளை ஒழித்து விடும். இருள் என்பது இங்கு பகை உள்ளிட்ட பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

 

ஆகவே வள்ளுவரின் கட்டளை ‘செய்க பொருளை

எப்படியாவது பணத்தை சம்பாதித்துக் கொள். பகைவரின் கர்வத்தை அடக்க வல்ல  கூர்மையான வாள் அதை விட வேறில்லை.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரியது இல்     – குறள் 759

 

 

ஆனால் இந்தப் பொருளை நியாயமான வழியில் சம்பாதிக்க வேண்டும்.பிறரை அழவைத்துப் பெற்றால் நீ அழப்போவது நிச்சயம் (குறள் 659)

 

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்றுகுறள் 660

சலத்தால்கெட்ட வழியால்வஞ்சனையால்பொருளைப் பெற்றால் அது நிலைக்காது; அது பச்சை மண்பாண்டத்தில் நீரை ஊற்றி வைப்பதற்குச் சமம்.

 

சம்பாதித்த பணம் குறையாமல் இருக்க ஒரு வழி உண்டு.

பிறனுடைய கைப்பொருளைக் கைப்பற்றாமல்கவராமல்வஞ்சனையால் அடையாமல் இருத்தல் வேண்டும்.

 

இப்படி வழி காட்டும் குறள் இது:-

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கைப்பொருள்  – குறள் 178

ஆனால் இப்படிப் பெரும் செல்வத்தை சம்பாதித்து என்ன பிரயோஜனம்? அதனை நன்கு அனுபவிக்க அல்லவா வேண்டும்?

 

அனுபவிக்காமல் செத்துப் போனால் அந்தச் செல்வத்தைக் கொண்டு செத்தபின் அவன் என்னதான் செய்யப் போகிறான்?

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்   – குறள் 1001

 

சேர்த்த பணத்தால்செல்வத்தால்எல்லாம் அடையலாம் என்று எண்ணி அதைச் சேர்த்து வைத்து யாருக்கும் கொடுக்காமல் செத்தொழிந்தால் அடுத்த பிறப்பு இழிந்த பிறப்பாகவே அமையும்.

 

பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு   – 1002

அப்பாடா!

தலை சுற்றும் அளவுக்குப் பொருளைப் பற்றிய பொருள் வாய்ந்த குறள்கள் இவை.

செல்வம் என்ற அர்த்தத்தில் எப்படிப் பொருளைச் சேர்க்க வேண்டும், அப்படிச் சேர்ப்பது எவ்வளவு முக்கியம், அதைக் காக்கும் வழி என்ன, அடுத்த பிறவி நல்லதாக அமைய வழி என்ன என்பன உள்ளிட்ட அற்புத உண்மைகளை அள்ளிக் கொட்டுகிறார் வள்ளுவப் பிரான்.

இதில் அப்பர் கூறிய வைச்ச பொருள் பற்றி நமக்குத் தெரியவில்லை.

 

அதற்கு இன்னும் பல குறட்பாக்களை ஆராய வேண்டும்.

ஆராய்வோம்!

                     –தொடரும்

 

 

***

 

 

 

 

SWAMI HINDU CROSSWORD PUZZLE -1 (Post No.5540)

SWAMI HINDU CROSSWORD PUZZLE -1 (Post No.5540)
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 14 October 2018

 

Time uploaded in London – 19-49

(British Summer Time)

 

Post No. 5540

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

SWAMI HINDU CROSSWOD PUZZLE 1

 

ACROSS

 

1.TWO WORDS: NAME OF SUN, BRIGHT/SHINING

NAMES OF SATHYABAMA’S CHILDREN

2.HINDU CUPID

3.TWO WORDS—LORD OF OCEAN, DEBT (T PITR, DEVA ETC)

4.VEDIC TWIN GODS

5.SIVA’S WIFE

6.LORD OF HEAVEN, CHIEF VEDIC GOD

7.TWO WORDS- GOD OF DEATH, RESTRICTION/CONTROL

8.KILLED BY RAMA WHILE FIGHTING WITH SUGREEVA

9.SEER WHO DRANK OCEAN

10.FIRE CEREMONY

11.SISTER OF AMBIKA AND AMBALIKA

12.VEDIC GOD WHOSE CULT SPREAD TO ROME

DOWN

13.GODDESS OF DAWN

14.CONTROLLING BODY AND MIND TOGETHER

15.DRIVER OF ARJUNA

16.FAMOUS WOMAN OF MITHILA

17.SON OF KING PURURUVA AND URVASI

18.ANOTHER NAME OF SUN

  1. SON OF DASRATHA

20.SECOND SON OF YAYATI AND SHARMISHTA

21.FORMLESS SHIVA

22.PRANAVA MANTRA

 

SOLUTION WILL BE PUBLISHED WITH THE SECND PUZZLE

 

5,13

      1 17
    2,15          
          3 19 22
4              
      16          
        6 18      
                21  
7 14     8  
                 
  9   10
          20          
  11     12  
1.S W A M I ­­C R O S S W O RD

 

 

–SUBHAM-

 

 

 

செருப்பால் அடி — தமிழ்ப் பாடல் (Post No.5539)

written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 14 October 2018

 

Time uploaded in London – 10-31 am (British Summer Time)

 

Post No. 5539

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

தற்காலத்தில் சில சொற்களைப் பயன்படுத்த நாம் தயங்குகிறோம். உதாரணமாக மயிர், செருப்பு. ஆனால் அந்தக் காலத்தில் அப்படி இல்லை. மயிர் , செருப்பு முதலிய சொற்களைத் தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்துவர்.

 

மேலும் வள்ளுவர் போன்றோர் அஹிம்ஸை முதலியவற்றில், தேவையில்லாமல் நம்ப மாட்டார்கள். ‘ஆடுற மாட்டை ஆடி கற; பாடுற மாட்டைப் பாடிக் கற’ என்பது அவர்களின் பாலிஸி. மரண தண்டனை இருந்தல்தான் சமூகம் சிறக்கும் என்பது அவர்கள் கூற்று. வள்ளுவரே மரணதண்டனைப் ப்ரியர். அது மட்டுமல்ல. கஞ்சப் பயல்களைக் கண்டால் ஓங்கி தாடையில் ஒரு குத்து விட்டு கையை  முறுக்கி காசு வாங்கு என்கிறார்.

 

முதலில் செருப்படிப் பாடலைப் பார்த்துவிட்டு குறளுக்குப் போவோம்.

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்

பாலிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி

அருட்பாலா மறப்பாலைக் கனவிலுமே

விரும்பார்கள் அறிவு ஒன்றில்லார்

குருபாலர் கடவுளர்பால் வேதியர்பால்

புரவலர்பால் கொடுக்கக் கோரார்

செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே

கோடி செம்பொன் சேவித்தீவார்

–விவேக சிந்தாமணி (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்

செல்வத்தில் அதிக விருப்பம் கொள்பவர்கள் அருளாகிய செல்வத்தைத் தரும் தருமத்தைக் கனவிலும் விரும்பமாட்டார்கள் ஆசிரியருக்கும். கடவுளுக்கும், பிராஹ்மணர்களுக்கும், புரவலர்க்கும் ஒரு பொருளும் தர மாட்டார்கள். கோடி செம்பொன்னாக இருந்தாலும்   செருப்   பால் அடித்துப் பறிப்போருக்கே சலாம் போட்டுக் கொடுப்பார்கள்.

xxx

 

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு!

 

தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

 

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

 

பரிதியார் உரை:  கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்

காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.

 

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

மரண தண்டனைக்கு ஆதரவு

மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (550)

 

பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.

 

காதலர் இல்வழி மாலை கொலைகளத்து

ஏதிலர் போல வரும் – குறள் 1224

 

காதலர் இல்லாத மாலைப் பொழுது , கொலைக்களத்தில் மரணதண்டனையை  நிறைவேற்ற வரும்  ஆளைப் போல வருகிறது

பாரதியும் பாடுகிறான்

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

 

‘’வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்

நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்

வெம்மையோடொறுத்தல் வீரர் தம் செயலாம்’’.

 

வாழ்க வள்ளுவன்!! வளர்க வன்முறை!!!! (அயோக்கியர்களுக்கு எதிராக)

 

–subham–