பாரதி 97! – 3 (Post No.5416)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-09 AM (British Summer Time)

 

Post No. 5416

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை!

பாரதி 97! – 3

 

ச.நாகராஜன்

 

  1. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.

மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலுக்கு தாகூர் வருவதை அறிந்து அவருடன் கவிதைப் போட்டி நடத்த விரும்பினார். ஆனால் அந்த விஷயத்தைப் பற்றித் தொடராமல் அப்படியே விட்டு விட்டார். தாகூரின் பாடலையும் கட்டுரைகளையும் மொழி பெயர்த்து வெளியிட்டவர்.

  1. சுயசரிதை எழுதியவர்

தன் சுயசரிதையைக் கவிதை வடிவில் யாத்தவர்.

 

  1. சர்வ மதம் சமரஸம் கண்டவர்

அனைத்து மதங்களையும் மதித்தவர். அல்லா,அல்லா, அல்லா என்று பாடியவர்.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று ஏசு கிறிஸ்துவைப் பற்றிப் பாடியுள்ளார்.

 

  1. சிறந்த ரசிகர்

அனைத்துக் கலைகளையும் ரசிக்கும் சிறந்த ரசிகர். ஓவியர் ரவிவர்மா மறைந்ததை ஒட்டி இரங்கல் பா பாடினார்.சுப்பராம தீக்ஷிதர் மறைந்ததற்கும் இரங்கல் பா பாடியுள்ளார்.

 

  1. இயற்கை ஆர்வலர்

இயற்கையை ரசிப்பதில் அளவிலா ஆர்வம் கொண்டவர். பாஞ்சாலி சபதத்தில் சூரியாஸ்தமனம் பற்றி எழுதியுள்ளார். அநேக பாடல்கள் அவரது இயற்கை ஆர்வத்தை விளக்கும்.

70.நேரம் பயனுள்ளதாகக் கழிய விரும்பியவர்.

நேர நிர்வாகம் பற்றி மிகவும் அக்கறையுடனிருந்தவர். பொழுது வீணே கழிய சற்றும் இடங்கொடேன் என குறிப்பில் எழுதியவர்.சோம்பலின்றி தன் பணிகளைத் தொடர்ந்தவர்.

  1. நையாண்டி வல்லுநர்

எழுத்தாளர், நகைச்சுவை எழுத்தாளர் என்பதைத் தாண்டி நையாண்டி செய்வதில் வல்லுநர். ஒரு பெரிய நையாண்டி கதையையே எழுதியுள்ளார். கட்டுரைகளில் சரளமான நையாண்டி நடையைக் கையாண்டவர்.

 

  1. மதமாற்றம் எதிர்த்தவர்

மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து அழுதார்.

 

  1. அழகிய கையெழுத்தைக் கொண்டவர்

சிறிய எழுத்துக்கள். இடம் விட்டு இடம் எழுதும் பாங்கு. அழகிய கையெழுத்தைக் கொண்டவர். அவரது கையெழுத்துப் பிரதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

 

  1. நன்கு உடை அணிபவர்

சுத்தமான உடை.அழகிய உடை அணிய விரும்பியவர்.கோட்டு, தலைப்பாகை என அவரது கம்பீரமான உருவத்தை உடையால் இன்னும் மேம்படுத்திக் கொண்டவர்

 

  1. நண்பர்களை அரவணைத்தவர்

சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரையும் வெகுவாக மதித்து நட்பு பாராட்டி வந்தார்.

 

  1. புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்

வலிமையற்ற தோளினாய் போ போ போ என்று நலிந்த பாரதத்தை விரட்டியவர் ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்றும் எதிரிலா வலத்தினாய் வா வா வா என்றும் புதிய பாரதத்தை வரவேற்று அழைத்தார். அவரது பாரதம் உலக நாடுகளில் மேன்மையுற்ற பாரதம். அதையே அவர் அமைக்க விரும்பினார்.

  1. வெளிதேச வாசம் வெறுத்தவர்

புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.

 

  1. மாதாமணி வாசகம் வெளியிட்டவர்

தன் நூலான மாதா மணிவாசகத்தை தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியிட்டவர்.

 

  1. ஆங்கில பத்திரிகாசிரியர்

தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.

 

80.தெய்வ அருள் பெற்றவர்

‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். விண்ணும் மண்ணும் தனி ஆளும் வீரை சக்தி நினதருளே என்றவர் அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.

 

81.மரணம் வென்றவர்

காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர்.

உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.

  1. சகல உயிர்களையும் நேசித்தவர்

தின்ன வரும் புலியையும் அன்போடு நேசிக்க உபதேசித்தவர்; குருவிகளுக்கு அரிசி மணிகளைப் போட்டு ஆனந்தித்தவர். காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.

 

83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர்

புதுவை வாழ்க்கையில் வ.வே.சு ஐயரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவரது பாடல்களைக் கண்ட ஐயர் வெகுவாக அவரை வியப்புடன் போற்றினார். சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் போன்ற அக்ஷர லக்ஷம் பெறும் பாடல்களை பாடுபவர் என்று முகவுரை எழுதி அவரது நூல்களை அனைவரும் வாங்கி அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

 

84.விவேகானந்தரின் பக்தர்

விவேகானந்தரின் பக்தராக விளங்கினார். அவரது ஜீவித சரித்திரத்தையும் எழுதியுள்ளார். விவேகானந்தரை ‘பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன்’ என்று போற்றிப் பாடியுள்ளார்.

 

85.ரமணரை தரிசித்த கவிஞர்

திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார். அங்கு அவர் முன் மௌனமாக அமர்ந்திருந்தார்; பேசவில்லை.

86.நாடக ஆசிரியர்

குட்டி நாடகங்களைச் சிறப்பாக எழுதியவர். ஜகத் சித்திரம் உள்ளிட்டவற்றில் அவரது நாடகம் எழுதும் வல்லமையைப் பார்க்கலாம்.

 

  1. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதை மாற்றி அமைத்து அதை புதிய பாணியில் மாற்ற நினைத்தவர். அது பற்றி அறிவிப்பும் வெளியிட்டவர். ஆயின் முயற்சி தொடரவில்லை.

  1. பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.

பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை   “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.

 

ஆக வந்தேமாதரம் என்ற இந்தியாவின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.

 

 

  1. பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.

இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே  வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.

 

  1. புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்

தனது புதிய கவிதா நடையினாலும், பொருளினாலும் தமிழில் புதிய கவிஞர்கள் பரம்பரையை உருவாக்கியவர். பாரதி காலம் தொட்டு இன்று வரை அவரது தாக்கம் இல்லாத கவிஞர் ஒருவர் கூட இல்லை.

91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்

பெண் விடுதலை வேண்டியவர், ‘முன்னை அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து’ வாழ உபதேசித்தார். காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுக்கச் சொன்னவர் மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழச் சொன்னார். பழமையைப் போற்றி அதில் உள்ள நல்லது அனைத்தையும் எடுத்துக் கொண்டு நவீன உலகின் சிறப்புக்களையும் ஏற்று வாழச் சொன்னவர். பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்க விரும்பியவர்.

 

 

  1. உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்

லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.

 

  1. புராணங்களைப் பரப்ப விரும்பியவர்

புராணங்களைப் பற்றி,’நன்று புராணங்கள் செய்தார்- அதில் நல்ல கவிதை பல பல தந்தார், கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்’ என்று பாடினார். ஆனால் புராணங்கள் என்று கட்டுரை எழுதி, (கற்பனை என்றாலும்) அவற்றை நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று அறிவுறுத்தினார். ஏனெனில், ‘புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவை தாம்’ என்று காரணத்தையும் தெரிவித்தார். ஸ்வாமி விவேகானந்தரும் புராணங்களை நாடெங்கும் வெள்ளமெனப் பாய்ச்சுங்கள் என்று கூறியதை நோக்கினால் இருவர் கருத்தும் ஒன்றாகிறது.

 

  1. ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்

ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.

 

  1. சிறை சென்ற தியாகி

1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

 

  1. ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்

வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  1. சிறந்த மனிதர்

மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த  வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார்.

*

பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை

97 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!!

 

முற்றும்

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

 

இவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம்.

(www.tamilandvedas.com பார்க்கவும்)

 

இந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும்

‘கொழ கொழ கண்ணே’ – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 19-34 (British Summer Time)

 

Post No. 5415

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கொழ கொழ  கண்ணே எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

 

இப்பொழுது ‘ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்’ (Twinkle twinkle Little Star) தெரியாத தமிழ்க் குழந்தைகள் கிடையாது. ஆனால் ‘நிலா நிலா ஓடிவா’ பாட்டோ, ‘கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு’ நர்ஸரி ரைமோ (Nursery Rhyme) தெரிந்த தமிழ்க் குழந்தை இருக்கிறார்களா என்பது ஐயப்பாடே.

 

நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது (65 ஆண்டுக்கு முன்னால்) என்னுடைய தாயார் எங்களுக்கு ‘கொழ கொழ கண்ணே’ கதையைச் சொல்லுவார்கள். அதை ஒவ்வொரு நாள் இரவிலும் சொல்லச் சொல்லிக் கேட்போம். இது தஞ்சைப் பகுதியில் மட்டும் வழங்கியதா அல்லது மற்ற பகுதிகளிலும் வழங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் மாவட்டம் தோறும் பல குழந்தைகள் பாடல்கள் வழங்கியதை அறிகிறோம். 1899ம் ஆண்டு வெளியான விவேக சிந்தாமணி என்ற சென்னை மாத இதழைப்  பார்த்தவுடன் மஹா சந்தோஷம்.அதில் இன்று படித்த, முன்னொரு காலத்திலென் தாயார் சொன்ன குழந்தைப் பாட்டு இதோ.

 

‘கொழ கொழ  கண்ணே’ என்று துவங்கி

 

‘என் பெயர் ஈ, இது தெரியாதா’? என்று முடிவடையும் தமிழ் நர்ஸரி ரைம்.

 

 

 

 

 

 

FULL  RHYME

தமிழ் வாழ்க

 

–சுபம்–

லீட்னெர் காலமானார்- 1899-ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி (Post No.5414)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 18-52 (British Summer Time)

 

Post No. 5414

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

1899ஆம் ஆண்டு மொழியியல் அறிஞர் டாக்டர் லீட்னர் இறந்தவுடன் விவேக சிந்தாமணியில்

ஒரு அனுதாபச் செய்தி வெளியானது.

 

இதோ அந்தச் செய்தி:–

 

Gottlieb Wilhelm Leitner or Gottlieb William Leitner M.A., Ph.D., L.L.D., D.O.L. (14 October 1840 – 22 March 1899) was a British orientalist.

 

WHAT DID I DISCOVER IN INDIA?– JAWAHARLAL NEHRU (Post No.5412)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 17-53 (British Summer Time)

 

Post No. 5412

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Quotes from Jawaharlal Nehru’s ‘Discovery of India’

Man’s dearest possession is life, and since it is given to him to live but once, he must so live as not to be seared with the shame of a cowardly and trivial past, so live as not to be tortured for years without purpose, so live that dying he can say, ‘All my life and my strength given to the first cause of the world- the liberation of mankind’ –Nicolai Ostrovsky
Xxxx

We in India do not have to go abroad in search of the past and the distant. We have them here in abundance. If we go to foreign countries, it is in search of the present. That search is necessary, for isolation from it means backwardness and decay.

Xxxx

Nearly five months have gone by since I took to this writing and I have covered a thousand hand written pages with this jumble of ideas in my mind. For five months I have travelled in the past and peeped into the future and sometimes tried to balance myself on that point of intersection of the timeless with time.

Xxx

On June 15th both were discharged ( Narendra Deva and Nehru) , 1041 days after our arrest in August 1942. Thus, ended my ninth and the longest term of imprisonment.

Xxx

What did I discover?
The discovery of India — what have I discovered.
It was presumptuous of me to imagine that I could unveil her and find out what she is today and what she was in the long past. Today she is four hundred million separate individual men and women, each differing from the other, each living in a private universe of thought and feeling. If this is so in the present, how much more difficult is it to grasp multitudinous past of innumerable successions of human beings. Yet something has bound them together and binds them still. India is a geographical and economic entity, a cultural unity amidst diversity, a bundle of contradictions held together by strong but invisible threads.

 

Overwhelmed again and again, her spirit was never conquered, and today when she appears to be the plaything of a proud conqueror, she remains unsubdued and unconquered. About her there is the elusive quality of a legend of long ago; some enchantment seems to have held her mind. She is a myth and an idea, a dream and a vision, and yet very real and present and pervasive. There are terrifying glimpses of dark corridors which seem to lead back to primeval night, but also there is the fullness and warmth of the day about her. Shameful and repellent she is occasionally, perverse and obstinate, sometimes even a little hysteric, this lady with a past, but she is very lovable, and none of her children can forget her wherever they go, whatever strange fate befalls them. For she is part of them in her greatness as well as her failings, and they are mirrored in those deep eyes of her that have seen so much of life’s passion and joy and folly, and looked down into wisdoms well.

Each one of them is drawn to her, though perhaps each one has a different reason for that attraction or can point to no reason at all, and each sees some different aspect of her many -sided personality. From age to age she has produced great men and women, carrying on the old tradition and yet ever adapting it to changing times.

 

What Tagore said………………

Rabindranath Tagore, in line with that great succession, was full of temper and urges of the modern age and yet was rooted in India’s past and in his own self built up a synthesis of the old and the new.’ I love India’, he said, ‘not because I cultivate the idolatry of geography, not because I have had the chance to be born in her soil but because she has saved through tumultuous ages the living words that have issued from the illuminated consciousness of her great ones’. So many will say, while others will explain their love for her in some different way.

 

Xxx SUBHAM xxx

பாரதி 97! – PART 2 (Post No.5411)

WRITTEN BY S NAGARAJAN

Date: 10 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-52 AM (British Summer Time)

 

Post No. 5411

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி .. ..

பாரதி 97! – PART 2

 

ச.நாகராஜன்

 

  1. ஜாதிகள் இல்லையென்றவர்

ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று முழங்கியவர்

 

  1. ஆதி திராவிடர்க்கு பூணூல் போட்டு புரட்சி செய்தவர்

1913இல் கனகலிங்கம் என்ற ஆதி திராவிடர்க்குப் பூணூல் போட்டு புரட்சி செய்தார்.

 

  1. வானியல் நிபுணர்

வானத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் பாட்டில் கொணர்ந்தவர். வானில் சுழலும் கோளங்களை இறையுடன் இணைத்தவர்

  1. தேசீய ஒற்றுமை போதித்தவர்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள், எனில்

சிந்தனை ஒன்றுடையாள்

என்றும் நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்றும் முழங்கியவர்.

 

  1. பெண் விடுதலை கேட்டவர்

பெண்ணுக்கு விடுதலை வேண்டும்  என்றும் பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த பூமியில் என்றும் பாடி பெண்களை அடிமைகளாக நடத்தக் கூடாது என்று முழங்கியவர்.

 

  1. சிறந்த மொழிபெயர்ப்பாளர்

ஆங்கிலத்திலிருந்து அரவிந்தர் கவிதை உள்ளிட்டவற்றையும் மற்றும் ஏராளமான கட்டுரைகளையும் மொழி பெயர்த்தவர். பத்திரிகை துறையிலும் அவர் செய்த மொழிபெயர்ப்புப் பணி மிகச் சிறப்பான ஒன்று.

  1. வரலாற்று ஆசிரியர்

காங்கிரஸ் மஹாசபையின் வரலாற்றை எழுதியவர். சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட வரலாற்றுப் பின்னணி பாடல்களைப் புனைந்தவர்.

 

  1. புதிய தமிழ்நடையை உருவாக்கியவர்

சுவை புதிது பொருள் புதிது என எளிய நடையை உருவாக்கியவர். பாடல்களிலும் இனிய, எளிய, புதிய சந்தங்களைக் கையாண்டவர். கடினமான சொற்களை அறவே வெறுத்து நீக்கியவர்

 

  1. பலரால் பாராட்டப் பெற்றவர்

பிரான்ஸ் நாட்டு அறிஞர் பாரதியாரது பாடலை மொழிபெயர்த்தார். பரலி.சு.நெல்லையப்பர் அவரது பாடல்கள் எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரால் பாடப்படுவதை நான் காண்கிறேன் என்றார். பல பெரியோராலும், அறிஞர்களாலும், கவிஞர்களாலும் பாராட்டப்பட்டவர்

  1. தமிழறிஞர் உ.வே.சாவைப் பாராட்டியவர்

உ.வே.சாமிநாதையரைப் பாராட்டிப் பாடல் புனைந்தவர். நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறியோம் என்று மனம் வருந்தற்க; பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே என்று பாடி அவரை வாழ்த்தியவர்

 

43.காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட செயல்வீரர்

காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். செயல் வீரர். பலரை சென்னைக்கு அழைத்து கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்.

 

  1. பகைமை பாராட்டாதவர்

பகைவருக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று பாடியதோடு அதை வாழ்ந்து காட்டியவர். ஆங்கில துரையின் மனைவி இறந்த போது அதற்கு இரங்கல் தெரிவித்தவர்.ஏராளமான நிகழ்வுகள் அவரது பகைமை பாராட்டாத குணத்தைத் தெரிவிப்பவை.

 

  1. ராஜதந்திர நோக்குடையவர்

பிரிட்டிஷ் இந்தியா அடக்குமுறையை ஏவி விட்ட போதும், அவர் பாடல்களைத் தடை செய்த போதும் மனம் தளராமல் பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட புதுவைக்கு ராஜதந்திர நோக்குடன் வந்தார். அங்கும் பணியைத் தொடர்ந்தார்.

 

  1. அஞ்சாநெஞ்சர்

பிரிட்டிஷ் அடக்குமுறைக்குப் பயப்படாதவர். புதுவையிலிருந்து மீண்டும் சென்னைக்கு வருமளவு அவர் நெஞ்சில் உரமிருந்தது. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று முழங்கி அனைவரையும் அச்சத்திலிருந்து விடுவித்தவர்.

 

  1. தபஸ்வி

நீண்ட நேரம் தியானத்தில் அமர்ந்து தவம் இயற்றும் பாங்குடையவர். சொல் ஒன்று வேண்டும் என அனைத்து பிரச்சினைகளுக்குமான மந்திரச் சொல் வேண்டித் தவம் புரிந்தவர்.

 

  1. கொடையாளி

செல்வந்தர் இல்லை என்றாலும் தனக்கு வந்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர். ஏழைகளுக்கு அளித்தவர்.

 

  1. வந்தேமாதரம் மந்திரத்தைப் பரப்பியவர்

பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடலை இரு முறை மொழிபெயர்த்தவர். வந்தே மாதரம் என்ற சொல்லை மந்திரச் சொல்லாக்கியவர்; தமிழ்நாடு முழுவதும் பரவக் காரணமானவர்.

  1. படிப்பாளி

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உடையவர். ஆய்வு செய்பவர். கிடைத்த பணத்தையெல்லாம் கொடுத்து புத்தகம் வாங்கி வந்த சம்பவமும் அவர் வாழ்க்கையில் உண்டு.

 

  1. விருந்தினரை உபசரிப்பவர்

தனது ஏழ்மை நிலையிலும் கூட வந்தோரை உபசரித்து உணவளிப்பவர். கபாலி சாஸ்திரி, வ.ரா. உள்ளிட்டோரை வரவேற்று உபசரித்தவர்; அரவிந்தரிடம் அவர்களை அழைத்துச் சென்றவர்.

 

  1. புதிய நெறி கண்டவர்

புதிய ஆத்திசூடி பாடி காலத்திற்கேற்றபடி நெறிகளை மாற்றியவர்.

 

  1. கல்வியாளர்

தேடு கல்வி இலாததொரு ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் என்ற புரட்சிப் பாடலைப் பாடி வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்ற லட்சியத்தை முன் வைத்த சிறந்த கல்வியாளர்.

  1. விஞ்ஞான ஆர்வலர்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான அறிவியல் திட்டங்களை மனக்கண்ணால் கண்டு பாடல்களில் அளித்தவர். ஜகதீஸ் சந்திர போஸ் உள்ளிட்டவர்களைப் பாராட்டியவர்.

 

  1. சக்தி உபாசகர்

சிறந்த சக்தி உபாசகர். காளியைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்.

 

  1. கண்ணபிரான் பக்தியில் திளைத்தவர்

கண்ணனைப் பல கோணங்களில் கண்டவர். தீராத விளையாட்டுப் பிள்ளையாக, எஜமானனாக, சேவகனாக இப்படிப் பல கோணங்களில் கண்டு பாடல்களைத் தந்தவர்.

 

  1. நல்ல கனவு கண்டவர்

கற்பனையின் சிகரத்தில் ஏறி பல கனவுகளைக் கண்டவர். காணி நிலம் வேண்டும் என்பதில் ஆரம்பித்து சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்பது வரை அவர் கண்ட கனவுகள் ஏராளம்.

 

  1. நடைமுறை வேதாந்தி

ப்ராக்டிகல் வேதாந்தம் என்பதைக் கடைப்பிடித்தார். ஆவது ஆம். போவது போம் என்பது இருந்தாலும் முயற்சியைக் கை விடேல் என்றார்.  மனைவி,மக்கள் வாழ்வு எல்லாம் பொய்யா என்ன என்று கேட்டவர்.

  1. பாஞ்சாலி சபதம் இயற்றியவர்

மகாபாரதத்தின்  முக்கிய கட்டத்தை விடுதலையை மனதில் எண்ணி காவியமாக இயற்றியவர்.

 

  1. வேதாந்தமாக விரித்துரைக்க ஒரு குயில்பாட்டு கண்டவர்

காதல் காதல் காதல் என்ற அமர வரிகளுடன் உள்ள குயில் பாட்டில் வேதாந்தமாக விரித்துரைக்க யாதானும் சற்று இடமிருக்கிறதா என்று கேட்டு வேதாந்தப் பொருளை அதில் அடக்கியவர்.

 

  1. நடுநிலையாளர்

ஏழ்மையிலும் வளத்திலும் ஒரே மாதிரியாக இருந்தார். பகைவரிடமும் கூட அருள் நோக்கைக் கொண்டிருந்தார். சிறந்த நடுநிலை தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

 

  1. சிறந்த ஹிந்து

ஹிந்து வாழ்க்கைத் தத்துவத்தை மிகவும் மதித்து வாழ்ந்த சிறந்த ஹிந்து. கீதையின் பால் பற்று கொண்டவர். அதற்கு உரை எழுதியவர்.  பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்று கீதையை  இரண்டே வரிகளில் சித்தரித்தவர்.

 

  1. பயணி

பல இடங்களுக்கும் பயணம் செய்து வாழ்க்கையின் பல அம்சங்களையும் அலசியவர். கல்கத்தா,சூரத், காரைக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, புதுவை, சென்னை என பாரதியார் சென்ற இடங்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர் வாழ்க்கையின் பயண அம்சங்கள் தெரிய வரும்.

  1. சிறந்த சித்தர்

எனக்கு முன்னே சித்தர் பலர் வந்தாரப்பா – யானும் வந்தேன் ஒரு சித்தன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாரதியார் கண்ட சித்தர்கள் பலர். கோவிந்த சாமி உள்ளிட்ட பலரிடம் பழகியவர்; பல அனுபவங்களைப் பெற்றவர்.

 

அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

இவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம்.  (www.tamilandvedas.com பார்க்கவும்)

இந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும் பாரதியின் சொல்லில் அடங்கவொண்ணா சிறப்புக்களைப் படித்து இன்புறலாம். (www.tamilandvedas.com பார்க்கவும்)

 

அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இக்கட்டுரையாசிரியர் எழுதி வரும் தொடரில் உள்ள நூல்களைப் படித்தும் பாரதியாரின் சிறப்புக்களை உணரலாம். இந்த தளத்தில் இதுவரை 56 அத்தியாயங்களில் 56 நூல்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. (www.tamilandvedas.com பார்க்கவும்)

Poet Bharati and Mahatma Gandhi condemned Purdah (Post No. 5408)

Compiled by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 17-07 (British Summer Time)

 

Post No. 5408

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Bharati born on 11 December 1882

Died on 11 September 1921

 

Subrahmanya Bharati, the greatest of the modern Tamil poets, condemned purdhah (veil) on Hindu women. he teases animaginary lady love Kannamma on wearing veil.

Here is the poem with English translation by Dr T N Ramachandran

 

Removal of the Veil by Bharati
TN Ramachandran’s Translation

It is the custom with Delhi Muslims
To keep the lotus face with veil covered
The liana waist and the jutting breast
Are to be veiled, as Sastras so prescribe

By veiling the breast and liana waist
Beauty is not under bushel hid;
Cupidry is not taught by word of mouth;
Can love flourish behind a veiled visage?


Noble you say are Aryan custom s old;
Did ever Aryan dames their face s veil?
Having met more than once and love exchange d
Wherefore this coy persistence— all formal?

Who will then dare essay, me to obstruct
If by force I pluck the veil from you r face?
Of what avail is pretension idle?
Can ever rind of fruit the eater defy?

 

Orignal Tamil Verse

 

 

Gandhi on veil from Nehru’s ‘Discovery of India’ (posted yesterday)

 


Anti Purdah
Gandhiji has been, and is, a fierce opponent of purdah and has called it ‘a vicious and brutal custom’ which has kept women backward and undeveloped. I thought of the wrong being done by the men to the woman of India by clinging to a barbarous custom which, whatever use it might have had when it was first introduced, had now become totally useless and was doing incalculable harm to the country. Gandhiji urged that woman should have the same liberty and opportunity of self -development as man.

 

–subham–

குருவியிடம் பாரதியார் கேட்ட கேள்விகள் (Post No.5407)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 16-28 (British Summer Time)

 

Post No. 5407

 

பாரதியார் பிறந்த நாள்: டிசம்பர் 11, 1882

இறந்த நாள் செபடம்பர் 11, 1921

 

பறவைகளையும் மிருகங்களையும் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாடம் கற்பிப்பது வேத காலம் முதல் இருந்து வருகிறது. இயற்கையிலிருந்து  தத்தாத்ரேயர் கற்ற விஷயங்களை  முன்னரே பாகவத புராணத்தில் கண்டோம்.

பாரதிக்குக் குருவியும் காகங்களும் போதித்த விஷயங்கள் ஏராளம். இதனால்தான் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினார் போலும். குருவியின் விடுதலை உணர்வைக் கண்டவுடன் நாட்டு விடுதலை கூட அவருக்கு மற ந்து விட்டது. ஆன்ம விடுதலை பற்றிப் பாடத் துவங்கினார். அதையும் முன்னரே ‘விட்டு விடுதலையாகி’ என்ற பாடலில் கண்டோம். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாப்பா பாட்டில் எல்லா மிருகங்கள் மூலம் கற்க வேண்டிய விஷயங்களை எடுத்துரைத்து அவைகளிடத்தில் இரக்கம் கொள்ள வேண்டும் பாப்பா என்கிறார்.

 

 

இது தவிர குயில் பாட்டு, கிளிப் பாட்டு என்று பறவைகளை வைத்து பல பாடல்கள் வேறு.

ஆயினும் நிறைய பேரை கவந் து ததி ஈர்க்காத பாடல் ஒன்றில் பெரிய பட்டியலே குருவியின் வாய் மூலமாக கேட்கிறார்.

 

பாரதியார் குருவியிடம் கேட்ட கேள்வி:

ஏ குருவியே நீ என்ன வேலை செய்கிறாய்?

எப்படி வாழ்க்கை நடத்துகிறாய்?

 

உடனே குருவி சொன்ன பதிலைப் பாருங்கள்:

 

எங்களிடம், கீழ் ஜாதி , மேல் ஜாதி இல்லை;

அடிமைகளில்லை; எல்லோரும் மன்னர்!

 

 

மேலும் எங்களிடம் காசு பணம் கிடையாது.

ஆனால் எப்போதும், எங்கும் எங்களுக்கு உணவு கிடைக்கும்

 

சின்ன வயிற்றுக்காக ஆட்டுக் குட்டிகள் போல பிறரிடம் கட்டுப்பட்டிருக்க மாட்டோம்.

 

வீடு வாசல் தேவை இல்லை; ஆகாயமே கூரை!

 

உணவோ உயர்ந்த பொருள்கள்தான்.

 

எங்களிடம் ஏழை பணக்காரர் இல்லை.

ஏற்ற தாழ்வு இல்லை.

கள்ளம் கபடம் கிடையாது.

 

கொலை, களவு கிடையாது;

இளையோரை வலியோர் ஏறி மிதிப்பதும் இல்லை.

 

நீங்கள் சின்னஞ்சிறிய வீடுகளில் வசித்தாலும் துன்பத்தில் உழல்கிறீர்கள்; நாங்கள் அப்படித் துன்பப் படுவதில்லை.

 

மரம், செடி, மலர்கள், ஏரி, குளங்கள், மலை, குன்று, வீடுகள் ஆகியவற்றில் சுற்றிச் சுற்றி விளையாடுவோம்.

குடும்பக் கவலைகள் இல்லை.பந்தங்கள் கிடையா.

தீட்டு முதலியன இல்லை.

 

இன்பம்; எப்போதும் இன்பம்.

 

காலையில் எழுந்து கடவுளைத் தொழுவோம்.

மாலையிலும் கடவுளைத் தொழுவோம்.

 

துன்பத்தில் உழலும் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்வேன்.

 

மெய்ஞ் ஞானத்தைப் பெறுங்கள்;சிறுமைத் தனங்களை உதறி விடுங்கள். இதனால் தேவர் நிலை கிடைக்கும். கடவுள் உங்களுக்குத் துணை இருப்பான். இன்பம் கிட்டும்.

 

அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடியுங்கள்;

 

பொய் வேஷம் போடாதீர்கள்;

தர்மத்தைக் கைக்கொள்ளுங்கள்.

 

பயத்தை விட்டு துணிச்சலாக நில்லுங்கள்.

 

இப்படி வாழ்ந்தால் என்றும் இன்பம் என்று குருவி நல்ல யோசனை கூறுகிறது.

நல்ல யோசனைதான்; ஆனால்  பின்பற்றுவதோ எளிதல்ல.

குருவிகளைக் கவனித்தோருக்கு அவை எப்போதும் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் திரிந்து விளையாடுவது வியப்பை ஏற்படுத்தும். அவற்றின் ரஹஸியம் இப்போது நமக்கும் தெரிந்துவிட்டது. ஏற்ற தாழ்வில்லாத சமுதாயம்; அடிமை வேலை இல்லாத சமுதாயம்; காசு பணம் என்று திரியாத சமுதாயம் ; ஏழை பணக்காரர் இல்லாத எப்போதும் உணவு கிடைக்கும் வளமை! பெரிய பங்களாக்கள், மாட மாளிகைகள் இல்லாத எளிமையான வாழ்வு.

 

வாழ்க சிட்டுக் குருவிகள்!

 

 

 

பாரதி நாமம் வாழ்க

 

–சுபம்—

 

பாரதி 97!- PART 1 (post No.5406)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5406

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

பாரதி 97!- PART 1

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11. 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். 97 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 97ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

 

 

  1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

1898 ஜூன் மாதம். பாரதியார் காசிக்குப் பயணமானார். அங்கே ஹிந்து கலாசாலையில் சேர்ந்தார். ஸம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையைப் பெற்றார்.அத்துடன்  ஹிந்தி பாஷையிலும் தேர்ந்தார்.

  1. பல்மொழி அறிந்தவர்

பாரதியார் இயல்பாகவே பல மொழிகளை அறிந்து கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.புதுவை வாழ்க்கையில் பிரெஞ்சு மொழியையும் வங்காள மொழியையும் அறிந்து கொண்டார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்பதால் அவர் தெலுங்கு மொழியும் அறிந்தவரே. யாம் அறிந்த மொழிகளிலே’ என்ற அவரது பாடல் குறிப்பின் மூலமாக அவரது பன்மொழி அறிவைத் தெரிந்து கொள்ளலாம்.

 

  1. பள்ளி ஆசிரியர்

1903ஆம் ஆண்டு பாரதியார் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மூன்று மாதம் பணி புரிந்தார்.

  1. சிறந்த பத்திரிகாசிரியர்

இந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததோடு தேசபக்தி உணர்வூட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

  1. சிறந்த பதிப்பாளர்

பல நூல்களை வெளியிட்டவர். மிகத் தரமான முறையில் குறைந்த விலையில் தன் கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குண்டு.

  1. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

இந்தியா இதழில் கார்ட்டுனை அறிமுகப்படுத்தி சிறந்த கருத்துக்களை சித்திரம் மூலம் வெளிப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

பல நூறு பாடல்களை இயற்றியவர். இந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 

  1. சிறந்த கணவர்

தன் மனைவி செல்லம்மாவை உயிரினும் மேலாக நேசித்தார். சம உரிமை தந்து கை கோர்த்து தெரு வீதியில் அந்தக் காலத்திலும் சென்று புதுமை படைத்தார்.

  1. சிறந்த தகப்பன்

தன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார். அவர்களுக்கு அன்பைக் குழைத்து அறிவைத் தந்தார். அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நூல்களில் அவரது அன்பைக் காட்டும் பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

  1. சிறந்த கதாசிரியர்

ஞான ரதம் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் அவர் சிறந்த கதாசிரியர் என்பதை உணர்த்தும்.

  1. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

மகாகவியின் எழுத்துக்களில் ஆங்காங்கே நகைச்சுவை கொப்பளிக்கும்.சின்னச் சங்கரன் கதை நல்ல நகைச்சுவை கதையாக மிளிர்ந்தது.

  1. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

வசன கவிதைகள் பலவற்றை இயற்றிய புதுமையாளர். காட்சி, புகழ் உள்ளிட்டவை இவரது வசன கவிதை  படைப்புகளை இனம் காட்டுபவையாகும்.

13.சிறந்த சொற்பொழிவாளர்

ஏராளமான மேடைகளில் அனல் பறக்கும் தேசிய உணர்வூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்;

  1. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

ஷெல்லியின் பாடல்களில் தோய்ந்தவர். ஷெல்லி தாசன் எனப் புனைப்பெயரையே கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் பைரன், வால்ட் விட்மன் உள்ளிட்ட ஏராளமானோரின் கவிதைகளைப் படித்து உணர்ந்து அனுபவித்தவர்.

 

  1. மஹாத்மாவை இனம் கண்டவர்

மஹாத்மா காந்தி பஞ்சகத்தை இயற்றி இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மஹாத்மா என்று போற்றினார். மஹாத்மாவை சென்னையில் சந்தித்து அவரது தலைமைக்கும் இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

  1. திலகரைப் போற்றியவர்

திலகரிம் பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க திலகன் நாமம் பால கங்காதர திலகர் ஆகிய பாடல்களைப் பாடி அவரைப் போற்றியவர்.

  1. தேசபக்தர்களைப் போற்றியவர்

தாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய் உள்ளிட்ட பெரும் தலைவர்களைப் போற்றியவர்.

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ பாடியவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்.

 

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை 1906ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டு திரும்பும் போது சந்தித்து உபதேசம் பெற்றவர். நிவேதிதா தேவி துதி இயற்றிப் போற்றியவர். தனது இரு நூல்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தவர்.

  1. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்

அரவிந்தரின் நட்பு புதுவையில் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி அளவளாவி பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டவர். வேதத்தை அரவிந்தரிடம் கற்றார். அரவிந்தரும் பாரதியாரும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

  1. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை பகன்றவர். தமிழைப் புதிய சிகரத்தில் ஏற்றியவர்.

22.சிறந்த இசை விற்பன்னர்

பல பாடல்களை – கிருதிகளை – தாளம், ராகத்தோடு இயற்றியவர். அவற்றை பலருக்கும் சொல்லித் தந்தவர். தமிழில் உள்ள இசைப் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுதல் வேண்டும் என முதன்முதலில் முழக்கம் இட்டவர்.

  1. சிறந்த பாடகர்

கணீரென்ற குரலில் தனது பாடல்களை ஆவேசத்தோடு அவர் பாடியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு மெய் சிலிர்ப்பது வழக்கம்.

  1. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

தேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவற்றை அடியொற்றிய பாடல்களையும் இயற்றியவர்.

  1. சங்க இலக்கிய விற்பன்னர்

சங்க இலக்கியங்களைக் கற்றவர். இளங்கோ மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளைப் போற்றியவர்.

 

  1. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

எல்லையற்ற தன்மையைக் கொண்டவர் என கம்பனைப் போற்றியவர்.கம்பன் பிறந்த தமிழ்நாடு என கம்பனையும் தமிழ் நாட்டையும் உச்சியில் ஏற்றிப் பாராட்டியவர்

  1. வேதம் புகழ்ந்தவர்

வேதம் உடையது இந்நாடு என வேதத்தைப் பெருமையாகப் பறை சாற்றிய ‘வேத அறிஞர்’ பாரதியார்.  ஏராளமான வேதக் கருத்துக்களை தன் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியவர். அரவிந்தருடன் வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

ஜார் மன்னன் வீழ, ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷிய புரட்சியை அழியாத கவிதை மூலம் பாராட்டியவர்.

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன் என்று பாடினார்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

முதல் உலக மகா யுத்தத்தில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த சுதந்திர அரசை வீழ்த்தியபோது திறத்தினால் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றதாக பெல்ஜியத்தைப் பாராட்டினார். துயருண்டோ துணிவுள்ளோர்க்கே என்று தன் கவிதையை முடித்தார்.

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

கரும்புத் தோட்டத்திலே ஹிந்து மாதர் படும் துன்பம் தீர ஒரு மருந்திலையோ என வேதனைப் பட்டார். எங்கு ஹிந்துக்கள் துன்பப்பட்டாலும் தனது வேதனைக் குரலை வெளியிட்டார்.

 

Hindu temple in Fiji

  1. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

தனது பத்திரிகை வாயிலாக அறத்தினால் நிமிர்ந்து நிற்கும் அரசுகளுக்கு ஆதரவு தந்தார். புரட்சியை வரவேற்றார். மறத்தினால் ஆளும் ஆட்சிகளை – பிரிட்டிஷ் ஆட்சி உட்பட அனைத்தையும் கண்டித்தார்.

  1. தீர்க்கதரிசி

ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று தீர்க்கதரிசன வாக்குக் கூறியவர்.

  1. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று வெள்ளையரை இகழ்ந்து சுதந்திரத்திற்காக வெகு ஜன எழுச்சியைத் தன் பாட்டாலும் செயலாலும் சொற்பொழிவாலும் ஏற்படுத்தியவர். பாரத தேசம் பெற்ற சிறந்த தவப்புதல்வர்.

அடுத்த இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

Gandhi condemned Purdah: Nehru (Post No.5405)

 

Gandhi Statue in San Francisco, USA; picture by Krishna Srinivasan

Compiled by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 8 September 2018

 

Time uploaded in London – 18-45 (British Summer Time)

 

Post No. 5405

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 
India’s first prime minister Jawaharlal Nehru refers to Gandhi several times in his book ‘Discovery of India’.
Here are some quotations:
Some kind of ethical approach to life has a strong appeal for me, though it would be difficult for me to justify it logically. I have been attracted by Gandhiji’s stress on right means and I think one of his greatest contributions to our public life has been this emphasis.
Xxx

Blood-shot Eyes!

I remember the words that Gandhiji said on that fateful evening on August 8 th,1942( about World War II)
We must look the world in the face with calm and clear eyes even though the eyes of the world are blood- shot today.

Xxxx

 

Bogus Interview
Some weeks earlier a friend in Rome had written to me to say that Signor Mussolini would like to meet me. There was no question of going to Rome. And then there had been the bogus interview with Mr Gandhi which the Giomale d’italia had published in 1931.

Xxxx

Picture of Gandhi Statue by  Krishna Srinivasan, SFC, USA.

Gandhi is not a Brahmin
There are innumerable examples of non- Brahmins and even persons belonging to the depressed classes, being so respected and sometimes
considered as saints.

Even today, in this money age, the influence of this tradition is marked, and because of it Ganghiji who is not a Brahmin can become the Supreme leader of India and move the hearts of millions without force or compulsion or official position or possession of money.

Xxx

 

Tapas- Penance does it!
This idea of some kind of penance, tapasya, is inherent in Indian thought, both among the thinkers at the top and the unread masses below. It is present today as it was present some thousands of years ago, and it is necessary to appreciate it in order to understand the psychology underlying the mass movements which have convulsed India under Gandhiji’s leadership.

Xxx


About Bhagavad Gita
Even the leaders of thought and action of the present day— Tilak, Aurobindo, Ghose, Gandhi— have written on it, each giving his own interpretation. Gandhiji places his firm belief in non -violence on it, others justify violence and warfare for a righteous cause.

Xxx

Caste must be eliminated!
Gandhiji’s references to caste have been progressively stronger and more pointed, and he made it repeatedly clear that the caste as a whole and as it exists, must be eliminated. And again, quite recently, he said:
The caste system, as we know, is an anachronism. It must go if both Hinduism and India are to live and grow from day to day.

Xxx
Anti Purdah

Muslim Voters in Gujarat where Gandhi was born

Gandhiji has been, and is, a fierce opponent of purdah and has called it ‘a vicious and brutal custom’ which has kept women backward and undeveloped. I thought of the wrong being done by the men to the woman of India by clinging to a barbarous custom which, whatever use it might have had when it was first introduced, had now become totally useless and was doing incalculable harm to the country. Gandhiji urged that woman should have the same liberty and opportunity of self -development as man.

Xxx
Tagore and Gandhi have undoubtedly been the outstanding and dominating figures of India in this first half of the twentieth century.

 

Picture by london swaminathan; location Bharatiya Vidhya Bhavan, London

— Subam —

ஸம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள்- நேருஜி தகவல் (Post No.5404)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 8 September 2018

 

Time uploaded in London – 8-25 am (British Summer Time)

 

Post No. 5404

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஸம்ஸ்க்ருத மொழியின் சிறப்புகள் பற்றி எவ்வளவோ படிக்கிறோம். பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.

 

ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

 

1924 ஆம் ஆண்டிலேயே சூத்ரகன் என்ற பிரபல ஸம்ஸ்க்ருத நாடகாசிரியர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ (மண்ணியல் சிறுதேர்) நியூயார்க்கில் நாடக மேடை ஏறியதும் அது பற்றி நேஷன் என்ற பத்திரிக்கையின்  கலை விமர்சகர் ஜோஸப் வுட் க்ரட்ச் நீண்ட விமர்சனம் எழுதியதையும் அப்படியே கொடுத்துள்ளார் நேரு.

“அந்த நாடகம் யார் எழுதியது, எந்த நூற்றாண்டில் எழுதியது என்பதைவிட அதன் இதயத்தைத் தொடும் அம்சங்களும், உண்மையுமே மிகவும் கவர்ர்ந்திழுக்கிறது. இது போன்ற ஒரு தூய நாடகத்தை ஐரோப்பாவில் காண முடியாது” என்றார்.

 

ஷேக்ஸ்பியர் எழுதிய Mid Summer Night’s dream

‘மிட் சம்மர் நைட் ட்றீம்’ என்ற நாடகம் அந்தக் காலத்திலேயே , அதாவது 1892 ஆம் ஆண்டில்– ஸம்ஸ்க்ருத மொழியாக்கம் செய்யப்பட்ட செய்தியையும் எழுதியுள்ளார்.

 

 

1789-ஆம் ஆண்டில் ஸர் வில்லியம் ஜோன்ஸ் (SIR WILLIAM JONES) காளிதாசனின் சாகுந்தலம் நடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவுடன் மேலை உலகம் முழுதும் பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் உண்டானதாகவும் உடனே அவரது மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஜெர்மன், பிரெஞ்ச், இதாலிய மொழிகளில் சாகுந்தலம் வெளியானதாகவும்நேருஎழுதுகிறார். அது மட்டுமல்ல கெதே (GOETHE) போன்ற பெரும் புலவர்களை இது மிகவும்  ஈர்த்தது என்கிறார்.

நாடகங்களுக்கு அறிமுகம்/ பீடிகை (PROLOGUE) எழுதுவது ஸம்ஸ்க்ருத நாடகங்களில் மட்டுமே உண்டு. காளிதாசன் நாடகங்களைப் பார்த்துத்தான் பாஸ்ட் (FAUST) போன்ற நாடகத்தில் அறிமுகம்/ பீடிகை இடம்பெற்றது என்றும் சொல்கிறார்.

 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் வில்ஸன் (WILSON) பவபூதி, காளிதாஸன் நாடகங்களைப் புகழ்ந்து எழுதியதையும் மேற்கோள் காட்டுகிறார். ‘இசை போன்று ஒலிக்கும் மஹத்தான காவியங்கள்’ என்பது வில்ஸனின் பாராட்டுரை.

 

2800 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி விதித்த வரம்புக்குள் இவ்வளவும் நடந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாடகம் முதலிய கலைத்துறைகள் படிப்படியாகக் குறைந்தமைக்கு இஸ்லாமிய மதத்தின் கலை வெறுப்பே காரணம் என்று ஒரு கருத்து உள்ளது. இந்தக் கலைகள் அனைத்தும் இந்தியாவின் தேசீய மதத்தைத் தழுவி இருந்ததால் ஆட்சியாளரின் ஆதரவு கிடைக்காமல் போயிற்று என்பதைக் குறிப்பிட்ட நேரு இதை முழுதும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அதற்கு முன்னரே கலைகளின் வீழ்ச்சியைக் காண முடிகிறது என்பார்.

 

ஸர் வில்லியம் ஜோன்ஸ் சொன்ன கருத்தை அப்படியே கொடுத்துள்ளார்.

 

“சம்ஸ்க்ருத மொழி, எவ்வளவு பழமையாக இருக்கட்டும்; அதன் அமைப்பு மிகவும் அதிசயமானது. கிரேக்க மொழியை விட சிறப்பானது; லத்தீன் மொழியைவிட வளம் பொருந்தியது; இரண்டு மொழிகளையும் விடசெம்மையானது; ஆயினும் வியப்பான ஒற்றுமையைக் காணமுடிகிறது. வினைச்சொற்களின் வேர், இலக்கண அமைப்பு ஆகியவற்றில் அதிக ஒற்றுமை இருப்பதை தன்னிச்ச்சையாக நடந்தது என்று எண்ண முடியாது. எந்த ஒரு மொழி அறிஞனும் அவை ஒரே மூலத்திலிருந்து பிறந்த மொழிகள் என்றே எண்ணுவான். அந்த மூல மொழி இப்போது இல்லாமல் இருக்கலாம்”.

 

நேருவும் தனது சொற்களில் சம்ஸ்க்ருத்த மொழியின் வளமை, பழமை, செம்மை ஆகியவற்றைப் பாராட்டுகிறார்.

 

பாணினி பற்றி (ABOUT PANINI)

உலக மஹா இலக்கண மேதை, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதிய, பாணினி பற்றி ஜவஹர்லால் நேரு, டிஸ்கவரி ஆப் இந்தியா- வில் கூறுகிறார்:-

“கி.மு. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டிலேயே பாணினி என்பவர் ஸம்ஸ்க்ருத இலக்கணத்தை எழுதிவிட்டார். அவருக்கு முந்தி இருந்த இலக்கண வித்தகர்களின் பெயர்களையும் அவர் செப்புகிறார். அவரது காலத்தில் ஸம்ஸ்க்ருத மொழி செம்மொழியாகி  எப்போதும் வளரும் இலக்கியமாக உருப்பெற்றது. அவர் எழுதிய புத்தகம் வெறும் இலக்கண புஸ்தமன்று. அதற்கும் மேலானது . பாணினியின் இலக்கணம் (அஷ்டாத்யாயி) பற்றி சோவியத் (ரஷ்ய) பேராசிரியர் ஸ்டெசர் பாட்ஸ்கி பகர்கிறார்: ‘

‘மனித சிந்தனையின் மஹத்தான சாதனைப் படைப்புகளில் இதுவும் ஒன்று. இதுவும் இதன் மீது பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யம் என்னும் பேருரையும் இந்திய விஞ்ஞான சிந்தனையின் அடிப்படையாகத் திகழ்கின்றன.’

 

பாணினிக்குப் பிறகு பல வியாக்கியானங்களும் பிற்சேர்க்கைகளும் வந்த போதும் இன்றும் அது, ஸம்ஸ்க்ருத இலக்கணத்தின் அளவுகோலாக நிற்கிறது. பாணினி யவன லிபி பற்றிச் சொல்லுவது வியப்பானது – அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே இந்தியாவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் தொடர்பு இருந்ததை இது காட்டுகிறது.

 

பாணினி பல்வேறு நாட்டியங்கள் பற்றி உரைப்பது 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டியம், நாடகம் வளர்ந்ததைக் காட்டுகின்றது.

 

அடிக்குறிப்பு:

கீத் போன்றோர் கி.மு.300 வாக்கில் பாணினி இருந்ததாகச் சொன்னாலும் அவர் புத்தர் காலத்துக்கும் முந்தியவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாணினி சொல்லும் விஷயங்களில் எங்குமே புத்தமத வாசனை துளிக்கூட இல்லை.

 

 

வட மேற்கு இந்தியாவில் தற்போதைய பெஷாவர் (பாகிஸ்தானில் உள்ளது) நகருக்கு அருகில்  புத்தர் பிறபதற்கு முன்னர் (2700 ஆண்டுகளுக்கு முன்னர்) தட்ச சீலம் நகரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது. விஞ்ஞானம் மருத்துவம் கலைகள்,சம்யம் ஆகியவற்றைப் போதித்தது (இதுதான் உலகின் முதல் பல்கலைக்கழகம்).அதில் கல்வி கற்க தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து பிராஹ்மணர்களும் பிரபுக்களின் பிள்ளைகளும் பயமின்றி, ஆயுதப் பாதுகாப்பின்றி பயணம் செய்ததை ஜாதக் கதைகளில் காண்கிறோம். அதில் படித்துப் பட்டம் பெறுவதை பெறும் கௌரவமாகக் கருதினர். பாணினியும் இந்த இடத்தில் கல்வி கற்றவரே.முன்காலத்தில் பிராஹ்மண (வேத) பாடங்கள் கற்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் பௌத்தம் கற்பிக்கும் கேந்திரமாக மாறியது.

 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது நான் சேர்த்த விளக்கங்கள்.  நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர், சிறைவாசத்தின்போது நேரு எழுதியது டிஸ்கவரி ஆப் இந்தியா. அனைவரும் படிக்க வேண்டிய நூல்)

 

–சுபம்–