உபநிஷதத்தின் பெருமையை உலகிற்கு முரசு கொட்டியவர் ஷோபனேர்! (Post No.13,815)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,815

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உபநிஷதத்தின் பெருமையை உலகிற்கு முரசு கொட்டியவர் ஷோபனேர்!

பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார் மீது ஏதொரு நூல் இது போலே

என்று பாரதியார் பாடுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதை பறை அறிவித்தார் ஜெர்மானிய தத்துவ ஞானி ஷோபனேர்!

Arthur Schopenhauer, 19th century German philosopher, said,

“In the whole world there is no study so beneficial and so elevating as that of the Upanishads. It has been the solace of my life, it will be the solace of my death”

இலங்கையின் தலைநகரமான கொழும்பில், சுவாமி விவேகானந்தர் 1897, ஜனவரி 15-ஆம் நாள் ஆற்றிய சொற்பழிவில் ஷோபனேர்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :

“இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனியின் சிறந்த தத்துவ ஞானியான ஷோபனேர் வேதங்களின் லத்தீன் மொழிபெயர்ப்பைப் படித்தார். அது முதலில் பாரசீக மொழியிலும் பின்னர் அதிலிருந்து பிரெஞ்சு இளைஞன் ஒருவனால் லத்தீனிலும் மொழிபெயர்க்கப் பட்டது. அவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பாக அதனைக் கருதுவதற்கில்லை. இருப்பினும் அதைப் படித்த பின் அவர், உபநிடதங்களைப்போல் நன்மையளிப்பதும் உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்வதுமான நூல் எதுவும் இல்லை. அது என் வாழ்விற்கு அமைதியைத் தருவதாக உள்ளது. என் மரணத்திற்கும் அமைதியை அளிப்பதாக இருக்கும்“ என்று கூறியுள்ளார்.

இந்த மகத்தான ஜெர்மானியப் பேராசிரியர் முன்பே தீர்க்க தரிசனமாக, கிரேக்க இலக்கியங்களால் உலகச் சிந்தனையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைவிட மிக ஆற்றல் வாய்ந்த, மிகவும் தீவிரமான சிந்தனை மறுமலர்ச்சி ஏற்படப்போவதை உலகம் காணப்போகிறது”என்று கூறினார். இப்போது அவரது வார்த்தைகள் உண்மையாகிக்கொண்டிருக்கின்றன. யாரெல்லாம் கண்களைத் திறந்து வைத்துள்ளனரோ, யாரெல்லாம் மேலைத் திசையில் உள்ள பல்வேறு நாட்டு மக்களின் மனப் போக்குகளைப் புரிந்து கொண்டார்களோ. யாரெல்லாம் பல்வேறு நாடுகளைப் பற்றிப் படிக்கின்ற சிந்தனையாளர்களோ, அவர்கள், மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருக்கின்ற இந்த இந்தியச் சிந்தனைகளால் உலக இலக்கியங்களின் கண்ணோட்டமும் போக்கும் வழிமுறைகளும் வெகுவாக மாறி வருவதைக் காண்பார்கள்.”

****

ஆர்தர் ஷோபனேர்

ஷோபனேர் ஒரு ஜெர்மானிய தத்துவ அறிஞர் .தனித்துவமிக்க தத்துவ அறிஞர். உலகிலேயே உன்னதமான நூல்கள் உபநிஷத்துக்கள்தான் என்று பாரதியார் போல முரசு கொட்டினாலும் அவர் படித்தது, மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாக வந்த உபநிஷதம் ஆகும்; இந்துமதத்தைப் புகழ்ந்ததற்காக முஸ்லீம் மதவெறியன் அவுரங்கசீப் கொடூரமாகக் கொலை செய்த தாரா ஷிகோஷ் பாரசீக மொழியில் ஆக்கிய உபநிஷதத்தை ஒரு பிரெஞ்சுக்காரர் லத்தீன் மொழியில் ஆக்கினார். அதைப்      படித்துவிட்டுப்  புகழந்த  ஷோபனேர், ஸம்ஸ்க்ருதத்தைப் படித்திருந்தால் இந்தியாவுக்கு வந்து தங்கி இருப்பார் ஆனால் அவரது வாழ்க்கையோ. கொந்தளிப்பான வாழ்க்கை.

****

Arthur Schopenhauer 1788- 1860 ஆர்தர் ஷோபனேர்

பிறந்த தேதி -22 February 1788

பிறந்த  ஊர் –  ஜிடான்ஸ்க்/ டான்சிக் , போலந்து (அந்தக் காலத்தில் ஜெர்மனியின் பகுதி) அப்போது ஜெர்மானிக்கு பிரஷ்யா என்று பெயர்

இறந்த தேதி – 21 September 1860 (aged 72)

கல்வி கற்ற இடம் – Illustrious Gymnasium

University of Göttingen, University of Berlin,

University of Jena (PhD, 1813)

தந்தை பெரிய வணிகர் . அவருடைய பெயர் Heinrich Floris Schopenhauer , ஹென்றி ஷோபனேர்

தாயின் பெயர் – ஜோவன்னா ஷோபனேர்

Johanna Schopenhauer அவரும் நூலாசிரியர் 

பார்த்த வேலைகள் – Businessman, Writer

ஜெர்மன் உச்சரிப்பு- ஷோபன்ஹவர்

அவரது 1818-ஆம் ஆண்டு புத்தகமான The World as Will and Representation, Vol. 1: Volume 1 தி வேர்ல்ட் அஸ் வில் அண்ட் ரெப்ரசென்டேஷன் என்ற புஸ்தகம் மூலம் புகழ் பரவியது .

ஜெர்மன் இலட்சியவாதத்தின் சமகால கருத்துக்களை நிராகரித்ததால் சர்சைக்குரியவர் ஆனார். அவரது குடும்பமே நாத்தீகக் குடும்பம். ஆனால் பிறந்தது பிராடஸ்டன்ட கிறிஸ்தவப் பிரிவில்; பணம் ஒன்றே குறியாக இருந்த குடும்பம்.

“டேய், படிக்கப் போறீயா? அல்லது என் கூட பயணம் செய்து பிஸினஸ்ஸ கத்துக்கதறியா? “ என்று தந்தை கேட்டார். அப்பா உன் கூட வந்து வியாபாரத்தைக் கத்துக்கறேன் என்று சொல்லி தந்தையுடன் 12 ஆண்டுகள் ஐரோப்பாவை வலம் வந்தார்;  பிற்காலத்தில் இளமையில் கற்காமல் போனதற்கு ஷோபனேர் வருத்தப்பட்டார்.

ஒன்பது வயதான போது, அவரை ஒரு பிரெஞ்சு குடும்பத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு வாழ்வதற்கு, தந்தை ஹென்றி, ஏற்பாடு செய்தார்; இதனால் அவருக்குப் பிரெஞ்ச்  மொழியிலும் புலமை ஏற்பட்டது.

ஷோபனேருக்குப் பல துறைகளில் ஆர்வம் இருந்தது

துறவு, தன்னலத் துறப்பு, உலகின் மாயத்தோற்றம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களின்  கோட்பாடுகளை ஏற்றுத் தழுவினார். அழகியல், ஒழுக்கம், மற்றும் உளவியல் பற்றிய அவரது கருத்துக்கள் அவருக்குப் பின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

ஷோபனேருக்கு 17வயதானபோது தந்தை ஹாம்பர்க் நகரில் தற்கொலை செய்து கொண்டார் . இதன் விளைவாக அவருக்கும் சகோதரிக்கும் தாயாருக்கும் பாகப் பிரிவினையில் பெருந்தொகை கிடைத்தது  பின்னர்தான் அவர் படிக்கச் சென்றார். வணிகத் தொழிலைக் கைவிடவும் தீர்மானித்தார். அவர் டெபாசிட் செய்த தொகைக்கு பெரும் வட்டி கிடைத்ததால் பணம் பற்றிய கவலையே இல்லை; ஆயினும் பயணத்தின் போது ஐரோப்பிய மக்களின் வறுமையையும் ஏழ்மையையும் கண்டதால் தத்துவ எண்ணங்கள் மனதில் உதித்தன. ஏழைகள்  படும்பாடு அவர் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணின.

ஷோபனேர் இத்தாலியில் பல நகரங்களில் தங்கினார்  பெர்லினில் ஒரு பெண்ணைத் தள்ளிவிட்டதால் அவள் பொய்சொல்லி கேஸ் போட்டார் அந்த வழக்கில் ஷோபனேர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டது அவளுக்கு  வாழ்நாள் முழுதும் ஷோபனேர், பென்சன் தர கோர்ட் உத்தரவிட்டது .

****

பெண்களைப் பற்றி

பெண்கள் நர்ஸ் வேலைக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் வேலைக்கும்தான் பொருத்தமானவர்கள். அவர்களே சிறுபிள்ளைத்தனமாவார்கள் ; குறுகிய நோக்கு உள்ளவர்கள் ; அற்பமான எண்ணம் கொண்டவர்கள்; கலைகளில் அவர்களுக்குப் புலமை இல்லை ; நீதி விஷயத்திலும் அறிவு கிடையாது; ஆயினும் முடிவு எடுப்பதில் நிதானமான பேர்வழிகள்; ஆண்களை விட அனுதாபம் அதிகம் உள்ளவர்கள் என்கிறார். ஒருதார மணம் சரியல்ல என்பதும் அவரது கருத்து

பிற்காலத்தில் அவரது சிலையை வடிக்க ஒரு பெண் வந்தாள் ; அவளைப் பார்த்தவுடன் பெண்களைப் பற்றிய கடைசி வார்த்தையையும் சொல்லி விடுகிறேன் என்று பின்வருமாறு சொன்னார் :

ஒரு பெண்மணி பொது ஜனக் கூட்டத்திற்கு மேல் உயர்ந்து நின்றால் மேலும், மேலும் வளர்வாள் ; ஆண்களைவிட உயர்வாள்.

****

எழுதிய நூல்கள் –

The World as Will and Representation, Vol. 1: Volume 1

The World as Will and Representation, Vol. 2: Volume 2:

Essays and Aphorisms (Penguin Classics)

Die Welt als Wille und Vorstellung II: Sämtliche Werke in fünf Bänden, Band 2

The Essays of Arthur Schopenhauer; the Art of Controversy

The Horrors and Absurdities of Religion

Great Ideas : On The Suffering of the World

The Art of Being Right: 38 Ways to Win an Argument

****

ஷோபனேர் ஒரு பன்முகப் பேர்வழி;

பெண்களை வெறுத்தவர்;

தாயாருடன் மோதியவர்

தொழில் ரீதியில் வணிகர்

பிராணிகளை வதைக்கக்கூடாது என்ற கொள்கை உடையவர்

ஐரோப்பாவில் கல்வி கற்போர் அனைவரும் லத்தீன் மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதால் அந்த மொழியைக் கற்றவர் .

ஏனைய ஐரோப்பிய தத்துவ ஞானிகளான இம்மமானுவேல் கான்ட் Immanuel Kant (1724–1804) ,ஸ்பினோசா முதலியோரைக் கற்று,  தனது சித்தாந்தத்தை   நிறுவியவர்; பல நூல்களை எழுதியவர். இதன் காரணமாக இவரே தத்துவம் பயிலுவோருக்கு படிப்பில் ஒரு பாடமாக (Subject) வைக்கப்பட்டார்.

–subham—

Tags–Arthur Schopenhauer , ஷோபனேர், பெண்களைப் பற்றி, உபநிஷதத்தின் பெருமை

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது: இரண்டு கதைகள் (Post No.13,814)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,814

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது தமிழ்ப் பழமொழி ; இது போன்ற கருத்தைத் தெரிவிக்கும் பழமொழிகள் சீன ஜப்பானிய மொழிகளிலும் உண்டு .

வாசல் கதவில் புலியை விரட்டினால் கொல்லைப் புறத்தில் ஓநாய்  புகுந்தது

என்பது சீனா ஜப்பான் கொரியா போன்ற நாடுகளில் உள்ளது .

அவை தெரிவிக்கும் கருத்து :

ஒரு பிரச்சனையைத் தீர்த்தால் இன்னும் ஒரு பிரச்சனை வருகிறது. இதை நாம் நமது குடும்பத்திலும், வீடு கட்டும்போதும், கல்யாணம் செய்யும்போதும், பிசினஸ் நடத்தும் போதும் காண்கிறோம். முதலில் சீனாவில் இந்தப் பழமொழி உருவான கதையைக் காண்போம்.

Chinese

前门打虎,后门打狼 (前門打虎,後門打狼) –

qián mén dǎ hǔ , hòu mén dǎ láng

சீனாவில் க்வான் மென் டா ஹூ ,  ஹூ மென் டா லாங் என்பார்கள்

1.     to beat a tiger from the front door, only to have a wolf come in at the back (idiom); fig. facing one problem after another

ஜப்பானில், சென்மோன் நீ டோரா வோ  புஸேஜி , கொண்மோன் யோ ஓகாமி வோ சுசுமு என்பார்கள்

Japanese

Zenmon ni tora wo fusegi, komon yo okami  wo Susumu

இதோ அந்தக் கதை

ஜப்பான் சக்ரவர்த்தியின் எதிரியை குஸுநோக்கி நசுக்கிவிட்டார் ; சக்ரவர்த்தியை சிம்மாசனத்தில் அமரவைக்கும் தருணத்தில் வேறு ஒரு புரட்சி வெடித்தது. உள் நாட்டில் ஒரு தளபதி புரட்சிக் கொடியைத் தூக்கினார் ; உடனே குஸுநோக்கி அங்கே படைகளுடன் விரைந்தார்; அங்கே அவர் இறந்தார். உடனே மீதோ நகர இளவரசர் ஒரு நடுகல் சமைத்தார். அந்த நடு கல்லில் வாசல் கதவில் புலியை விரட்டினால் கொல்லைப் புறத்தில் ஓநாய் புகுந்தது –என்ற பழமொழியை சீன அறிஞர் ஷூ ஷின் சுய் எழுதினார்.

ஆங்கிலத்திலும் இப்படிப்பட்ட பழமொழிகள் இருக்கிறன.

Misfortunes never come singly

Bad things come in threes

****

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது கதை

முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை சரி செய்வோம்; சனை ஹி சரன் = சனைச் சரன் (மெல்லச் செல்வோன்) என்பதே சரி. மக்களோ  அவனை பகவான் நிலைக்கு உயர்த்தி, சனீஸ்வரன் ஆக்கி விட்டார்கள் . சூரியனைச் சுற்றிவர நமது பூமிக்கு 365 +  நாள் போதும்  ; ஆனால் சனி கிரகத்துக்கோ முப்பது ஆண்டுகள் ஆகும். ஆகையால் அவனுக்கு நொண்டி, மெல்லச் செல்வோன்  என்றெல்லாம் இந்துக்கள் பெயர் சூட்டினார்கள்.

ஒரு கடவுள் பக்தன் இருந்தான். அவனுக்கு சனி திசை துவங்க இருந்தது ; நீண்ட ஆயுள் உடைய ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சனி திசை வரும். அந்த ஏழரை ஆண்டுக்கலாத்தில் பொங்கு சனி, மங்கு சனி என்றெல் காலத்துக்கு கட்டாயம் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் கஷ்டப்படுவார்கள். சனி திசையை வரக்கூயூட்டிய பக்தனுக்கு கடவுள் அருள் இருப்பதால் சனி , அவன் முன் தோன்றி அப்பா, முன் எச்சக்காரிகை தருகிறேன் ; உன்னைப் பீடிக்கப்பகிறேன் என்கிறார்.

அவனோ அலட்சியமாக நான் பெ எரிய பக்தன் ; நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என்று பாட்டுப் பாடினான் ; சனியும் சிரித்துக் கொண்டே போய்விட்டார் ; சனி திசை துவங்கும் நாள் வந்தது ; இந்த  ஆள் தனது அரண்மனை போன்ற வீட்டை விட்டு சாக்கடை ஓடும் இடத்திலுள்ள குடிசையில் ஒளிந்து கொண்டார் . அவர் புத்தி சனி திசை காரணமாக மங்கியதால் இப்படித் தோன்றியது. சனி நம்மைக் கண்டுபிடிக்க முடியாது என்ற அசட்டுத் தைரியாத்தில் வாழ்ந்தார் .

சனி திசை முடிந்தது அப்பாடா என்று எருமூச்சுவிட்டுக்கொண்டு வெளியே வந்தார் . சனி ப அவன் முன் தோன்றி என்ன எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நான் சுகம்தான் நீர் சொன்னபடி எண்ணெய் பீடிக்க முடியவில்லையே என்று நகைத்திட்டார்  இல்லையே  நான் உனைப் பிடித்ததால் அந்தக் காலம் முழுதும் றன் மனை வாசத்துக்குப் பதிலாக நீ சாக்கடை நாற்றத்தின்ல் பன்றிகளுடன் அல்லவா வாழ்ந்தாய் அதுதான் நான் செய்த வேலை என்கிறார். அவன் வெட்கித்து தலை குனிந்தான்.

இதைத்தான் நாம் ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடவில்லை என்கிறோம்.

கடவுள் நம்பிக்கை இருந்தால் அந்தக் கஷ்டம் நமக்கு கஷ்டம்போலத் தோன்றாமல் களிக்கலாம். அனால் இறை நமிக்கை தொடரவேண்டும் நம்பி

கம்பளிக்காரனுக்குப் பயந்து கட்டடியைக் கட்டிக்க  கரடி கொண்டானாம் என்பது போன்ற பழமொழிகளும் உண்டு.

சாண் ஏற முழம் சறுக்குகிறது

One step forward and two steps back

****

உரல் போய் மத்தளத்தோட முறையிட்டது போல

As the mortar went to the tomtom with its complaints.

மத்தளம்= drum, tomtom ; beaten on both sides.

Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas the tomtom is beaten at both ends.

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி ; அப்படி இருக்கும்போது, உரல் போய் மத்தளத்திடம் புகார் மனு கொடுத்ததாம்,

****

இராவுத்தனை தள்ளியதோடும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை!

It is said that the horse not only threw his rider, but dug his grave also.

It is said that the horse has not only thrown its rider, but is digging his grave.

போன்ற பழமொழிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்!

–subham—

Tags- குதிரை, உரல் ,மத்தளம், ராமேஸ்வரம் ,சனீஸ்வரன் விடாது ,கதை , பட்ட காலிலே படும்,வாசல், புலி, கொல்லைப் புறத்தில், ஓநாய்  . சீன ஜப்பானிய தமிழ் பழமொழிகள்

சந்திரனுக்கு உடல் ஊனம்; சனிக்கோ கால் ஊனம்! (Post No.13,813)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.813

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 தனிப்பாடல் தமிழ் இன்பம் 

சந்திரனுக்கு உடல் ஊனம்சனிக்கோ கால் ஊனம்! 

ச.நாகராஜன் 

குறையில்லாத மனிதனே இல்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கும் குறை உண்டாம்.

சொக்கநாதப் புலவர் தன் பாடல் ஒன்றில் வரிசையாக அடுக்குகிறார் தேவர்களின் குறைகளை!

 சந்திரனுக் குடலூனந் தனதனுக்கோர் கண்ணூனந் தருவினீழல்

 இந்திரனுக்கோ பகக்குறையா மியமனுக்கோ புழுக்காலா மிரவியீன்ற

 மைந்தனுக்கோ கால்முடமாம் வனசனுக்கோர் தலைகுறையாம் வரலாறீதேல்

 பந்தமுள மானிடரை விதிவிடுமோ ஆலவாய்ப் பதியுளானே

பாடலின் பொருள்: 

ஆலவாய்ப் பதியுளானே – திருவாலவாய் என்னும் திருப்பதியில் எழுந்தருளி இருப்பவனே

சந்திரனுக்கு உடல் ஊனம் – சந்திரனுக்கு உடல் பழுது

தனதனுக்கு  ஓர் கண் ஊனம் – குபேரனுக்கு ஒரு கண் பழுது

தருவின் நீழல் இந்திரனுக்கு பகக்குறி – கற்பகத்தருவின் நிழலில் இருக்கின்ற இந்திரனுக்கோ உடம்பு முழுவதும் பெண் குறி

இயமனுக்கோ புழுக்கால் – யமனுக்கோ புழுக் கால்

இரவி ஈன்ற மைந்தனுக்கோ கால் முடமாம் – சூரியன் பெற்ற புதல்வனான சனிக்கோ கால் முடம்

வனசனுக்கு ஓர் தலை குறையாம் – தாமரை மலரை ஆசனமாகக் கொண்ட பிரம்மாவுக்கு ஒரு தலை குறையாகும்

வரலாறு ஈதேல் – வரலாறு இதுவென்றால்

பந்தமுள மானிடரை – பாசக்கட்டுள்ள மானிடரை

விதி விடுமோ – விதியானது விட்டு விடுமா என்ன?!

 தனது குறையையும் அவர் சூசகமாக ஒரு பாடலில் கூறி திப்பையராயன் என்ற வள்ளலிடம் வேண்டியதைப் பெற்றார்.

இத்தோடு சூரியனுக்கு பல் ஊனம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்!

பாடல் இதோ:

 இந்திரன் கலையா யென்மருங் கிருந்தா நக்கினி யுதரவிட் டகலான்,

 எமனெனைக் கருதா னரனெனக் கருதி நிருதிவந் தென்னை யென்செய்வான்

 அந்தமாம்வருண நிருகண்விட்டகலா னகத்தினின் மக்களும் யானும்

 அநிலம தாக மமுதினைக் கொள்வோம் யாரெதி ரெமக்குளா ருலகில்

 சந்ததமிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித்

 தலைசெயு மெம்மை நிலைசெய்சற் கீர்த்திச் சாளுவக் கோப்பையளுதவும்

 மந்தர புயத்தான் றிப்பைய ராயன் மகிழ்வொரு விலையிலா வன்னோன்

 வாக்கினாற் குபேரனாக்கினா னவனே மாசிலீ சாணபூ பதியே

பாடலின் பொருள்: 

இந்திரன் – தேவேந்திரன்

கலை ஆய் – ஒரு கூறாகி

என் மருங்கு இருந்தான் – என்னிடத்தில் இருந்தான்

அக்கினி – அக்கினியானவன்

உதரம் விட்டு அகலான் – என் வயிற்றை விட்டு நீங்க மாட்டான்

என்னை அரன் எனக் கருதி – என்னை சிவன் என்று நினைத்து

எமன் கருதான் – எமன் என்னை நினைக்க மாட்டான்

நிருது வந்து என்னை என் செய்வான் – நிருதியானவன் வந்து என்னை என்ன செய்வான்

அந்தம் ஆம் வருணன் – அழகாகிய வருணன்

இரு கண் விட்டு அகலான் – இரண்டு கண்களையும் விட்டு நீங்க மாட்டான்

அகத்தினில் – வீட்டில் மக்களும் யானும்

அநிலமது ஆகும் அமுதினைக் கொள்வோம் – காற்றாகிய அமிர்தத்தை உட்கொள்வோம்

உலகில் – உலகத்தில்

எமக்கு எதிர் – எமக்கு நிகரானவர்

யார் உளார்- யார் இருக்கின்றார்கள்

சந்ததம் – எப்பொழுதும்

இந்த வரிசையைப் பெற்று – இந்த முறைமையைப் பெற்று

தரித்திர ராசனை வணங்கி – தரித்திரராஜனைத் தொழுது

தலைசெயும் எம்மை – தழைக்கின்ற எங்களை’

நிலை செய் – நிலைப் படுத்திய

நற்கீர்த்தி – நல்ல புகழை உடைய

சாளுவ கோப்பையன் உதவும் – சாளுவ கோப்பையன் பெற்ற

மந்தரபுயத்தான் – மந்தரமலை போலும் தோள்களை உடைய

திப்பையராயன் – திப்பையராயன் என்பான்

மகிழ்வொடு – சந்தோஷத்துடன்

அன்னோன் வாக்கினால் – அவனது சொல்லினால்

குபேரன் ஆக்கினான் – குபேரனாகச் செய்தான்

அவனே மாசிலாத – அவனே குற்றமில்லாத

ஈசான பூபதி – ஈசானத்திற்கு அதிபதியானவன்!

அருமையான இந்தப் பாட்டின் மூலம் தன் அவல நிலையைத் தெரிவிக்கிறார் கவிஞர் சொக்கநாதர். 

தான் உடுத்திய ஆசை கந்தையாய்ப் பல துளைகள் உள்ளது என்பதை ஆயிரம் கண்களை உடைய இந்திரனின் மேனிக்கு உவமையாகக் கூறினார்.

பசி ஒருபோதும் தன்னை விட்டு நீங்கவில்லை என்பதை அக்கினி உதரம் விட்டு அகலான் என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.

வருணன் இரு கண் விட்டு அகலான் என்று கூறி தனது இரு கண்களிலும் நீர் அழுகையாகப் பொழிகிறது என்று நயமாகக் கூறினார்.

 அநிலமதாகும் அமுது என்று கூறி வாயுவையே ஆகாரமாகக் கொள்வதைக் குறிப்பாகக் கூறினார். 

இப்படி இந்திரன் முதலிய அஷ்டதிக்பாலகர்களும் தேவர்களும் எனது வசமாய் இருக்கிறபடியால் எனக்கு நிகரானவர் உலகத்திலேயே இல்லை என்று அவர் கூறுகிறார்.

 பசி வருத்துவதை புகழ் மொழி போல இரு அர்த்தம் கொண்ட பாடலாக உரைத்தார் சொக்கநாதர்.

 அவர் பசிப்பிணி தீர்ந்தது; குபேரன் அளவு செல்வம் குவிந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

 தமிழின் அழகையும், புலவரின் கவித்திறனையும் தமிழ் வளர்க்கும் வள்ளல்களின் வள்ளன்மையையும் காட்டும் பாடல் இது! 

**

At the front door a tiger was checked, at the back door a wolf entered ! (Post No.13,812)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,812

Date uploaded in London – 24 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Gu shi  quong lin – Kojikerin

Chinese

前门打虎,后门打狼 (前門打虎,後門打狼)

 – 

qián mén dǎ hǔ , hòu mén dǎ láng

1.     to beat a tiger from the front door, only to have a wolf come in at the back (idiom); fig. facing one problem after another

Japanese

Zenmon ni tora wo fusegi, komon yo okami  wo Susumu

The story for this proverb is

Kusunoki has just succeeded in crushing a powerful enemy of the Japanese

Emperor and restoring the latter to his throne , when another chief revolted. Realising that the situation is desperate, and there was no hope of his return in safety, Kusunoki departed to the battle. The prince of Mito set up a memorial stone to Kusunoki , and the epitaph, containing the proverb cited, was written by the naturalised Chinese scholar Shu Shin -sui.

The meaning is when one problem is sorted out another problem crops up.

This is very common in many of our works such as building work or health issues or family problems.

In English , we have Misfortunes never come singly

Bad things come in threes

Tamils also have equivalent proverbs,

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது

Even when one goes to hoy place like Rameswaram evil planet Saturn/ Saneesvaran follow

There is a story about Sani and Siva Devotee

Planet Saturn/ Saniachcharan told a devotee of Lord Siva that he is going to catch him during Sani Disa (Hindu horoscope shows every one is affected by planet Saturn during one’s life time). He told him that he is a devotee of all powerful Siva and no one can catch him. Sani even told the exact time of his attack . The devotee hid himself for the whole period in the dirtiest place like a drainage thinking that Sani wont be able to find him there. After the attack time was over, Siva ‘s devotee came out and teased Sani,

Hey Saturn, I told you can’t catch me.

Saturn smiled and said,

Oh Ye All Powerful devotee . Where were you during Sani Disa period?

Oh now I can reveal the secret. I was in a place like a drainage.

Sani laughed and said, I made you to hide there. You let your beautiful palace like house or Siva Temple and spent your time at the worst place where only pigs roam.

The devotee was speechless.

It is like tackling tiger at  the front door  and letting in wolf through the back door .

****

சாண் ஏற முழம் சறுக்குகிறது

One step forward and two steps back

****

உரல் போய் மத்தளத்தோட முறையிட்டது போல

As the mortar went to the tomtom with its complaints.

மத்தளம்= drum, tomtom ; beaten on both sides.

Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas the tomtom is beaten at both ends.

****

இராவுத்தனை தள்ளியதோடும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை

It is said that the horse not only threw his rider, but dug his grave also.

It is said that the horse has not only thrown its rider, but is digging his grave.

****

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்

Misfortunes never come single.

—subham—

Tags- Tiger, wolf, front door back door, Chinese, Japanese, Proverbs, planet Sani, Saturn, devotee, drainage

அண்டங்காக்கை ஜோதிடம்-2 (Post No.13,811)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,811

Date uploaded in London – 24 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – 2

பிருஹத் ஜாதகம் என்னும் ஜோதிட நூலையும் பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியாவையும் வராஹமிஹிரர் எழுதினார். இந்தக் கலைக்களஞ்சியத்தில்  அத்தியாயம் 88 சகுனங்கள் பற்றியது ; அதில் காகங்கள் பற்றி மூன்று ஸ்லோகங்களில் குறிப்பிடுகிறார்.அவற்றின் குரல் கர்ண கடூரமாக இருந்தால் ஆபத்து;. இரண்டு பறவைகள் வலமாகப் பறந்து சண்டையிட்டு ஒன்று இறந்தால் ஆபத்து என்கிறார்.

அத்தியாயம் 45- ல் ,  16  ஸ்லோகங்களில் வாலாட்டி குருவி ஜோதிடம்- சகுனம் பற்றி     எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடல்களில் அதன் நிறம் எப்படி இருந்தால் வெற்றி,  அது எங்கெங்கு காணப்பட்டால் வெற்றி, மன்னன் படை எடுக்கும்போது அது எங்கு காணப்பட்டால் வெற்றி என்றெல்லாம் சொல்கிறார். அதே போல, தோல்வி ஏற்படுவது எப்போது என்றும் அந்தப் பறவையை வைத்துச் சொல்கிறார்.

வாலாட்டிக் குருவி பறவையின் ஆங்கிலப் பெயர் Wagtail (khañjana-kalakṣaṇa)

ஸம்ஸ்க்ருதப் பெயர் – கஞ்சன கலக்சன ( Mounta alla, Alba )

****

உலகம் முழுதும்  அண்டங்காக்கை பற்றி அபூர்வமான செய்திகள் உள்ளன :-

ண்டங்காக்கை என்பது பெரும்பாலும் கெட்ட சகுனமாகவே கருதப்படுகிறது. ஆனால் சில கலாசாரங்கள் இதை அறிவின் சின்னமாகவும் கருதுகின்றன.

பைபிளில் முதல் அத்தியாயத்திலேயே இது வருகிறது  கப்பலில் சென்ற நோவா , கரையை நெருங்கி விட்டோமா என்று அறிய இந்தப்  பறவையை அனுப்புகிறார். மேலும் எலிஜாவுக்கு Prophet Elijah ரொட்டியும் மாமிசமும் கொண்டுவருகிறது..

பாபிலோனியர்கள் இதைக் கெட்ட பறவையாகவே கருதினர்.  இது 13 ஆவது மாதத்தை ஆளும் பறவை. இந்துக்கள் அந்த மாதத்தை மல மாதம் என்று சொல்லி நல்ல காரியங்களை ச்      செய்யமாட்டார்கள்.

கிரேக்க  புராணத்திலும்  இந்தப்  பறவைக்கு கெட்ட பெயர்தான். இது ரகசியங்களை வெளிப்படுத்தியதால், இதன் வெள்ளைச் சிறகுகளை  அப்பலோ APOLLO கருப்பாக மாற்றினார். அதீனாவின் ATHENA  பறவையாக இருந்த இதை பதவி நீக்கம் செய்து ஆந்தையை அதீனா அருகில் அமர்த்தினர்.

தண்ணீர் கொண்டு வா என்று சொல்லி .அண்டங்காக்கையை, அப்பலோ அனுப்பினார். அது ஒரு அத்தி மரத்துக்கு அடியில் அமர்ந்து அதன் காய்கள் பழமாகும் வரை காத்திருத்தது. இதனால் கோபமுற்ற அப்பலோ அந்தப் றவையை வாநத்திற்கு அனுப்பி நட்சத்திர மண்டலம் ஆக்கினார். அது மட்டுமல்லாமல் அதை ஹைட்ரா  நட்சத்திர மண்டலம் எப்போதும் கண்காணிக்கும் இடத்தில் வைத்தார் .

மூத்த பிளினியும் இந்தப்பறவையின் குரல் பற்றி எழுதியுள்ளார்.

இந்தப் பறவை அலகின் வழியாக முட்டையிடும் என்று    பழங்கால மக்கள் நம்பியதால் கர்ப்பிணிப் பெண்கள் இதன் அருகில் வரமாட்டார்கள். அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழாது என்ற ச்சகமே இதற்குக்  காரணம்.

****

இது பற்றிய நல்ல செய்திகளும் உண்டு; அப்பலோ இந்தப் பறவையின் வடிவத்தில் சன்டோரினி தீவிலிருந்து வழி காட்டிப் பலரையும் வெளியே கொணர்ந்தார். அலெக்சாண்டருக்கும் இந்தப் பறவை வழிகாட்டியது..

ரோமில் மித்ரா  வழிபாட்டுக்காரர்களும் வட அமெரிக்காவில் பழங்குடி மக்களும், அண்டங்காக்கையை,  தங்கள் சின்னமாக வைத்துக் கொண்டனர்

நார்ஸ் Norse Mythology  புராண கதைகளில் ஓடின்  ODIN என்னும் தெய்வத்துக்குத் துணையாக வருவது இரண்டு அண்டங் காக்காய்கள்தான் ஒன்றின் பெயர் சிந்தனை இன்னொன்றின் பெயர் ஞாபகம்.

பல கிறிஸ்தவ சான்யாசிகளுடன் இந்தப் பறவையைக் காணலாம்.

சீனாவில் மூன்றுகால் அண்டங்காக்கையை,  சூரியனுடன் தொடர்புபடுத்தி கதைகள் செல்கின்றனர்.; சூ வம்ச அரசர்கள் சோசர்களைப்போல சூரிய வம்சத்தினர் என்று சொல்லிக்கொண்ண்டனர் அவர்களுக்கு சிவப்பு நிறப்   பறவைகள் சொந்தமாகும் . அவர்கள் வணங்கிய தெய்வங்களுக்கு இந்தப் பறவைகள் உணவு கொண்டு வந்தன. 

 –subham–

Tags- ஷேக்ஸ்பியர், அண்டங்காக்கை, காகம் ,ஜோதிடம் – Part 2, Wagtail,  வராஹமிஹிரர், வாலாட்டிக் குருவி

அடச் சீ, கழுதை! கழுதை பற்றி எட்டு ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!( Post No.13,810)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,810

Date uploaded in London – 24 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 அடச் சீ, கழுதை! கழுதை பற்றி எட்டு ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!( Post No.13,810)

முதலில் இரண்டு நியாயங்களைக் காண்போம்.

ஸம்ஸ்க்ருதத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லாத நியாயங்கள் சுமார் ஆயிரம் உள்ளன. அருந்ததி நியாயம் , மர்கட நியாயம் முதலியன பலருக்கும் தெரிந்திருக்கும் . கழுதை நியாயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .

रासभरतितन्यायः ராசபரதிதந்யாயஹ என்பது இதன் பெயர்

கழுதை கத்துவது முதலில் உரத்த குரலில் துவங்கும்; பின்னர் குறைந்துகொண்டே வரும்; ரோட்டில் ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ்கார் சங்குகள் ஒலிப்பதைக் கேட்கிறோம்; அவை தூரத்தில் செல்லச் செல்ல ஒலி குறைந்து கொண்டே வரும்.; ஆக தற்காலத்தில் ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ் கார் நியாயம் என்று கூடப் பெயர் வைக்கலாம்.

இதன் கருத்து சில விஷயங்கள் முதலில் பெரிதாகப் பேசப்படும். நாட்கள்  செல்லச் செல்ல சத்தம் குறைந்துகொண்டே வரும்.

பத்திரிகைகளில் இதை நன்றாகவே பாக்கிறோம். முதலில் பெரிதாக அடிபடும் விஷயங்கள் முடிவு தெரிவதற்குள் அடுத்த கழுதை வந்து சப்தம் போடுகிறது!

****

புரிடான் கழுதை முரண்பாடு 

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவ ஞானி ஜான் புரிடான் ஒரு கழுதை முரண்பாட்டைச் சொன்னார்.

பசியால் வாடும் ஒரு கழுதை நடுவில் நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு சமதூரத்தில் ஒரு புறம் தண்ணீர் எதிர்ப்புறத்தில் உணவு வைப்போம். அது எந்தப் பக்கம் போகும்?

அவர் சொல்கிறார் எந்தப் பக்கமும் போகாமல் செத்து விடும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் நவீன கால உரைகாரர்கள் சொல்லுவர்.

இரண்டு கழுதைப் பேர்வழிகள் தேர்தலில் நிற்கிறார்கள்; நடுவில் நிற்கும் கட்சி சாரா வாக்காளர் யாருக்கும் வோட்டுப் போடாமல் இருந்து விடுவார் இதுதான் புரிடான் கழுதை முரண்பாடு Buridan’s ass” or “Buridan’s donkey”: 

The French philosopher Jean Buridan (1300-1358) is the namesake of the philosophical paradox known as “Buridan’s ass” or “Buridan’s donkey”:

The paradox: A hungry and thirsty donkey is placed exactly between a stack of hay and a pail of water. Because there’s no reason to choose one over the other, the donkey is unable to decide and starves to death.

****

வேண்டாத ஆறு

1.பாலஸகித்வம் அகாரண ஹாஸ்யம் ஸ்திரீஷு விவாதம்  அஸஜ்ஜன சேவா

கர்தப யானம்   அஸம்ஸ்க்ருத வாணீ  ஷட்ஸு நரோ லகுதாம் உபயாதி

மனிதனை இழிவு அடைய வைக்கும் ஆறு செயல்கள் :

1.சிறுவர்களுடன் நட்புகொண்டு அவர்களுடன் திரிவது;

2.காரணமின்றி சிரிப்பது;

3.பெண்களோடு வாக்குவாதம் செய்வது;

4.கெட்டவனுக்கு பணியாற்றுவது / சேவை செய்வது;

5.கழுதை மீது சவாரி செய்தல்;

6.சம்ஸ்க்ருத மொழி அறிவு இல்லாமல் அதைப் பயன்படுத்துவது;

ஆகிய ஆறும் ஒருவரை நகைப்புக்குள்ளாகி விடும்.

ராமாயணத்தை பலரும் ராமயாணம் என்பர். வேங்கடாசலபதியை வெங்கடாஜலபதி என்பர் ; இது ஸம்ஸ்க்ருதம் அறியாமையைக் காட்டிவிடும் கேது எனற கிரகத்தை KETU என்று சொல்லவேண்டும்; KEDHU என்று சொல்லக்கூடாது.

****

2.முக்தா  பலைஹி கிம் ம்ருக பக்ஷிணாம் ச

மிஷ்டான்ன பானம் கிமு  கர்த்தபானாம்

அந்தஸ்ய தீபோ பதிரஸ்ய கீதம்

மூ    கஸ்ய கிம் சாஸ்த்ரா கதா ப்ராஸங்கஹ

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் முத்துக்களால் பயன்?

கழுதைகளுக்கு அறுசுவை உணவைப் படைப்பதால் என்ன பயன்?   

குரு ட னுக்கு பலவண்ண விளக்குகளும்

செவிடனுக்கு இனிய சங்கீதமும் பயன் தருமா ? தராது;

அது போல

முட்டாளுக்கு சாஸ்திர அறிவுரைகளை எடுத்துரைப்பதும் பலன் தராது .

நீதி – நாய்வாலை நிமிர்த்த முடியாது

பாத்திரம் அறிந்து தானம் செய்

****

3.வாங் மாதுர்யாத் சர்வ லோக ப்ரியத்வம்

வாக் பாருஷ்யாத் சர்வ லோக அப்ரியத்வம்

கிம் வா த்ரவ்யம் கோகிலே நோ  பநீதம்

கோ வா லோகே கர்தபஸ்யா (அ )பராதஹ

குயிலினிடத்தில் அதன் குரல் இனிமையால் எல்லோருக்கும் ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது ;

கழுதையின் குரலால் ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது ;

அதே போல ஒருவரின் இனிமையான சொற்களால் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் கடுஞ் சொற்களால் வெறுப்பும் உண்டாகின்றது

(கருத்து- எப்போதும் இனிமையே பேசுக)

*****

கழுதையும் குதிரையும்

4.போதித்தோ (அ)பி பகு சூக்தி விஸ்தரைஹி

கிம் கலோ ஜகதி  சஜ்ஜனோ பவேத்

ஸ்நாபிதோ(அ)பி  பஹூசோ நதி ஜலைஹி

கர்த்தபஹ கிமு ஹயோ பவேத் க்வசித்

எத்தனை நல்லுபதேசம் செய்தாலும் முட்டாள் திருந்த மாட்டான்; எவ்வளவு  புண்ணிய நதி நீர்களில் கழுதையைக் குளிப்பாட்டினாலும் குதிரை ஆகாதல்லவா!

****

கழுதையின் தூசி

5.அஜா ரஜஹ கரா ரஜஹ ததா  சம்மார்ஜநீ ரஜஹ

தீப மஞ்சகயோஹா  சாயா சக்ரஸ்யாபி  ச்ரியம் ஹரேத் 

கழுதையின் தூசி , ஆட்டின் தூசி  துடைப்பத் தூசி– இவை பட்டாலோ, விளக்கு அல்லது கட்டிலின் நிழல் பட்டாலோ  இந்திரனின் செல்வம் கூட அழிந்து விடும் ( நம் மீது பட்டால் நாம் எம்மாத்திரம்?)

****

6.ஏகேனோபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்

ச ஏவ தசபிப் புத்ரைர்  பாரம் வஹதி கர்த்தபீ.  

–சுபாஷித ரத்ன சமுச்சயம்

ஒரு குட்டியை என்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால் பத்து குட்டிகளை ஈன்றாலும் கழுதை தனது பாரத்தை தானே சுமக்கவேண்டடிவரும்.

(அவரவர் வினைப்பயன் இது என்பது கருத்து)  

****

7.யதா கரச் சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேதா ந து சந்தனஸ்ய

ததைவ லோகா பஹுஸாஸ்த்ரயு  க்தாஹா தர்மே ஹீனாஹா  பசுபிஸ் சமானஹா —சமயோசித  பாஹ்ய மாலா

 சந்தனத்தைச் சுமந்து செல்லும் கழுதைக்கு அதன் சுமை மட்டுமே தெரியும்; அதன் வாசனை தெரியாது. அது போலப் பலர் ,  நூல்களைக் கற்றாலும், அதன் உட்பொருள் தெரியாமல் விலங்குகளைப் போல அலைகிறார்கள்.

ஒப்பிடுக —

கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி /கற்பூர  வாசனை?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமா?

****

8.கரம் லிம்பாமி கந்தேன புஷ்பய் ராபூஷாயாமி தம்

ருஷ்டஹ ச  பத்ப்யாம் மாம்  ஹந்தி  மூர்கபூஷா பலம் த்விதம்

கழுதைக்கு சந்தனம் பூசுகிறேன்; அதை மலர்களால் அலங்கரிக்கிறேன் என்று போனால் அது கோபத்தால் கால்களைக் கொண்டு எட்டி உதைக்கிறது. முட்டாளை வழிபட்டு அவனை உயர்ந்த இடத்தில் வைப்பவனுக்கும் இதே கதிதான்.

—subham—

Tags- அடச் சீ, கழுதை! கழுதை, எட்டு, ஸம்ஸ்க்ருத கவிதைகள், கழுதை நியாயம், Buridan, donkey, ass, புரிடான் கழுதை முரண்பாடு 

ராமாயணத்தில் வரங்கள் (15)  கைகேயி  மந்தரைக்கு வரம் தருவதாகக் கூறியது! (Post.13,809)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.809

Date uploaded in London – 24 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் வரங்கள் (15) 

ராமாயணத்தில் வரங்கள் (15) கைகேயி  மந்தரைக்கு வரம் தருவதாகக் கூறியது!

ச. நாகராஜன் 

அயோத்யா காண்டத்தில் ஏழாவது ஸர்க்கமாக அமைவது, ‘மந்தரையின் துக்கம்’ என்னும் ஸர்க்கம்.

ராமருக்கு பட்டாபிஷேகம் என்ற செய்தியைக் கேட்டு அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டது. எங்கும் விழாக் கோலம் பூண்டிருப்பதைக் கண்ட மந்தரை என்ற கூனி விஷயம் என்ன என்று விசாரித்தாள். ராமருக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தியைக் கேட்டு நேரடியாக கைகேயிடம் வந்தாள்.

“தசரதர் ராமனை இளவரசனாய் பட்டம் சூட்டப் போகிறார்.அவர் வாயினால் இனிய மொழி பேசி செயலினால் கொடியதைச் செய்கிறார்.பரதனை விலக்கி விட்டு நாளை சூரியோதய காலத்தில் ராமனை ராஜ்யத்தில் நிலை நிறுத்தப் போகிறார். இப்போதே உமது நன்மையைத் தேடிக் கொள்ளும்” என்று பலவாறாகக் கூறுகிறாள். 

இதைக் கேட்ட கைகேயி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். மந்தரைக்கு ஒரு ஆபரணத்தைப் பரிசாக அளித்துக் கூறுகிறாள் இப்படி:

“மந்தரையே, எனக்கு மிக்க மங்களச் செய்தியையே இப்போது நீ சொன்னாய். எப்னக்கு இந்த மகிழ்ச்சியைப் பெருக்கும் சந்தோஷ சமாசாரத்தைச் சொன்ன உனக்கு இன்னும் என்ன வேண்டுமோ கேள்.

தருகிறேன். சக்கரவர்த்தியார் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போகிறார்.அதனால் மிக்க சந்தோஷம் அடைகிறேன். ஏனெனில் நான் ராமனிடத்தில் தானாகட்டும் பரதனிடத்தில் தானாகட்டும் ஒரு வித பேதத்தைக் கொள்ளவில்லை” என்கிறாள்.

மேலும் கைகேயி கூறுகிறாள்:

ந மே பரம்  கிஞ்சிதிதஸ்த்வயா புன: ப்ரியம் ப்ரியார்ஹே சுவசம் வச: பரம் |

ததா  ப்ஹ்ருவோசஸ்த்வமத: ப்ரியோத்தரம் பரம் வரம் தே ப்ரததாமி தம் வ்ருணு |\

மே – எனக்கு

ப்ரம் – சர்வோத்கிருஷ்டமான

ப்ரியம் – மனோரதமிது.

இத: – இதைக் காட்டிலும்

பரம் – சிலாக்கியமான

வச: – சொல்

கிஞ்சித் ஹி – ஏதொன்றும்

த்வயா – உன்னால்

புன: – இனிமேல்

சுவசம் ச – சொல்ல முடியாது

த்வம் – நீ

ததா – அப்படிப்பட்டதாகிய

தம் – அதை

அவோச – சொல்லி விட்டனை

அத: – ஆகையால்

ப்ரியார்ஹே – அனுக்ரகத்திற்குப் பாத்திரமானவளே

ப்ரியதோத்தரம் – உனக்கு இஷ்டமாயிருக்கும்

பரம் – வேறு

வரம் – வரம் எது வேண்டுமோ அதை

வ்ருணு – கேட்டுக் கொள்

தே – உனக்கு

ப்ரததாமி – நான் கொடுக்கிறேன்.

அயோத்யா காண்டம் ஏழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 36

கைகேயியை ப்ரமதோத்தமா – பெண்களில் உத்தமி என்று வால்மீகி இங்கு கூறுகிறார்.

உத்தமமான மனதை உடைய கைகேயி கூனிக்கு வேண்டியதை இன்னும் தருவதாக ஒரு ஆபரணத்தைப் பரிசாக வழங்கிய பின் கூறுகிறாள்.

இங்கு வரம் அளிக்கும் கைகேயியின் மனதைப் பார்க்கிறோம்.

**

Learn Tirumanthiram through Pictures- 10 (Last Part) Post No.13,808

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,808

Date uploaded in London – 23 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Learn Tirumanthiram through Pictures- 10 (Last Part) Post No.13,808

Sugarcane: Learn Tirumanthiram through Pictures- 9 (Post No.13,770) was posted on 11 October 2024 .              

Tirumular under Linga Puranam section of Tirumathiram shows how compassionate was Lord Shiva. Through four verses he shows Shiva was merciful and sympathetic towards Ravana, Sandesar and Brahma and Vishnu. These episodes are in most of the Saivite scriptures as well.

Let us look at the four verses first :

348: The Lord is not Beyond Reach
Mighty is the Lord
The Flying Fortess He destroyed.
Thus despair not
That He is your reach beyond;
Sure is the Lord to seekers true
In them He abideth, Grace abounding.

349: The Lord Blessed Aya and Mal
The Lord is the Primal One,
He is the Light Effulgent;
Seeking Him they went–Aya and Mal
Girdling the boundless oceans
And across the endless aeons;
And to Atchutha He granted the Disc Divine
And to Brahma, Jnana’s Sword Eternal.

350: Lord Blessed Ravana
Of peerless in might and shoulder twenty
Ravana the Giant lifted lofty mount Kailas;
With toe down, the Lord but gently pressed
And lo! the Giant screamed: “Lord Eternal.”

351: The Lord Blessed Chandeswara
Dandi, that knew the way of Hereafter
Heaped sands into linga shape
And poured on it in adoration
The five products of his herd of cows;
His father seeing beat the boy
And kicked his fond image off;
Dandi flew into a blind rage
And smote the parent’s leg with sword;
And lo! the Lord
Bedecked Dandi with His own garland of flowers forever to sport.

****

First verse quoted above shows how he destroyed the three flying fortresses. Symbolically speaking he destroys everyone’s Kama, Krodha and Lobha- Lust, Anger and Greediness. Lord Krishna says these three are the gateways to Hell; as a part time Hindu prison chaplain in England, I also saw all the prisoners or most of the prisoners came into jail because of the three vices. These three things lead one to extreme violence.

*****

The second verse describes Shiva’s great virtues and then says , Lord Shiva gave Vishnu the disc and Brahma the sword. Here also the commentators see the symbols  Disc and Sword represent Power and Knowledge. Lord Vishnu destroyed many demons with the boomerang like Chakra, the disc. Brahma’s sword here represent knowledge. Sword of Wisdom is used by many Hindu saints and Lord Krishna.

****

The third verse shows Lord will punish anyone with arrogance, but he shows utmost sympathy when the offender relinquishes that. Ravana, King of Lanka, tried to lift the Hill of Kailash, the abode of Lord shiva and got crushed. When he apologised by singing the glory of Shiva by playing Veena, Lord also relented and pardoned him.

****

The story in the Fourth verse is not known beyond Tamil Nadu. It is part of Periya Puranam.. And the story is,

In Seyanur, a town in Choza country, a Brahmin boy was born whose name was Visakasarumar. He instinctively understood the whole Saiva creed. When the sages came to instruct him, he met them with the recitation of the essential doctrines of the system which he grasped by a divine intuition.

Here Sekkizar, author of Periya Puranam explains the doctrine at length.

One day he went to the bank of the river with his classmates. The village cows were grazing in charge of a man of herdsman caste. This rustic, having no sense of right and wrong, beat one of the cows with a stick. Visakasarumar was vehemently stirred by this outrage and rushed up to him with great wrath. He explained the importance of the cows and the five products—Panchagavyam– the Hindus use. He sent him home and took charge of the cows from that day. The village also accepted his offer of maintaining the cows.

For a long time, this continued, and the cows increased in number and the milk was available in plenty.

The young boy constructed Siva Lingam with the sand under a tree and used the milk for bathing the Lingam. But all the owners of the cows got their usual quota. One bad guy watched this and reported this to his father Yagnaduttan (in Tamil Echchaduttan) . He went to the spot and watched his son doing abisheka- bathing- of sand Linga with milk. Without saying anything, he beat him severely. And yet the boy was continuing what he was doing. Enraged father raised his foot and broke the vessels and destroyed the lingam. The boy did not know that his father was doing this heinous act. He took the staff nearby and gave a blow at the offender’s feet. The staff became axe and cut off his legs. He fell and died. The boy then went on with his worship as if nothing had happened.

Lord Siva came with his wife Uma on the white bull and blessed the boy. He said, you did this because of great devotion to me. So you will become the chief among my servants and you are Sandeswarar from this day. The meaning is Impetuous Lord. Siva took his cassia flower wreath from his head and crowned the youthful saint. He ascended to heaven. Father was also forgiven and restored. The whole family went to Siva’s abode according to Periya Puranam. It has the story of 63 saints including this Sandesa Nayanar story.

Original Tamil verses of Tirumular’s Tirumanthiram are given below:

348. திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே

349. ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
.வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே


350. தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நொ஢த்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே

351. உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே

–subham–
Tags- Learn Tirumanthiram, Pictures, Part 10, Last part, Sandesa Nayanar, Sandevarar, Ravana, Brahma Vishnu, Shiva. Compassion, mercy, Periya puranam, Yagnaduttan, Ecchaduttan

ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – Part 1 (Post No.13,807)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,807

Date uploaded in London – 23 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

 ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – Part 1 (Post No.13,807)

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல்லே!

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே

அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்

பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி

பிழைக்க முடியல்லே

இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்

பேதம் தெரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே

அவன் இருக்கின்றான்

அவன் இருக்கும் இடத்தினிலே

நான் இருக்கின்றேன்

நாளை எங்கே யாரிருப்பார்

அதுவும் தெரியல்லே

இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்

பேதம் தெரியல்லை

அட என்னத்தச் சொல்வேண்டா

தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று

காசை எண்ணுகிறான்

நம்பி ஒருவன் சிறையில் வந்து

கம்பி எண்ணுகிறான்

உண்மை இங்கே கூட்டுக்குள்ளே

கலங்கி நிக்குதடா

அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு

வெளியில் நிற்குதடா

அட என்னத்தச் சொல்வேண்டா

தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே

அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்

பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல

முகம் இருக்குதடா

மோசம் நாசம் வேஷமெல்லாம்

நிறைந்திருக்குதடா

காலம் மாறும் வேஷம் கலையும்

உண்மை வெல்லுமடா

கதவு திறந்து பறவை பறந்து

பாடிச் செல்லுமடா

அட என்னத்தச் சொல்வேண்டா

தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே

அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்

பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

—–பலே பாண்டியா திரைப்படம்

Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan

Raven in Tower of London

பலே பாண்டியா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடும் பாடல் பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் மூலம் ஒரு காலத்தில் அண்டங் காக்கை எல்லோர் வாயிலும் முழங்கியது. காகம் பற்றி சாணக்கியர் முதல்  வராஹமிஹிரர், வள்ளுவர் வரை  எல்லோரும் பாடி விட்டனர். ஆயினும் இவைகளை ப்  

 பற்றிய ஜோதிடத்தை- சகுனத்தை– ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும் சம்ஸ்க்ருதத்தில் வராஹ மிஹிரரும் மட்டுமே பாடியுள்ளனர் அது மட்டுமல்ல; ரோமானிய கிரேக்க சாம்ராஜ்யங்களிலும் இவை பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன

முதலில் ஷேக்ஸ்பியர் சொன்னதைக் கேளுங்கள்:

ஷேக்ஸ்பியர் கெட்ட சகுனங்களைக் காட்டுவதற்கு ஆந்தைகளையும் கிரகணங்களையும் பயன்படுத்தியதை முன்தைய கட்டுரைகளில் கண்டோம். அதற்கு அடுத்தபடியாக அவர் பயன்படுத்தும் கெட்ட பறவைகள் எல்லாம் காகம் குடும்பத்தைச் (crows, magpies, ravens and rooks ) சேர்ந்தவையே .

இதோ அண்டங் காக்கை (raven) ..

மேக்பெத் மற்றும் ,ஹாம்லெட் நாடகங்களில் கொலைகள் மிகுதி; அவை நடப்பதற்கு முன்னால் சகுனங்களைக் காட்டி அல்லது சொல்லி கிளைமேக்ஸ் உண்டாக்குகிறார் நமது புலவர்:

லேடி மேக்பெத் கொலை நடக்கப் போவதை இப்படி சொல்லிக் காட்டுகிறார் :

The raven himself is hoarse

That croaks the fatal entrance of Duncan

Under my battlements. Come, you spirits

That tend on mortal thoughts, unsex me here,

அண்டங் காக்கை அபத்தமான கொடுரமான குரலில் கத்துகிறது — என்கிறார்

****

“Yes / As sparrows [dismay] eagles, or the hare the lion” (1.2.34-35).

இன்னும் ஒரு இடத்தில் வரும் வசனம்

ஆமாம் குருவிகளும் கழுகும் போல,  முயலும் சிங்கமும் போல.

****

“Stones have been known to move and trees to speak; / Augurs and understood relations have / By magot-pies and choughs and rooks brought forth / The secret’st man of blood” (3.4.122-125).

Magot-pies (magpies), choughs (jackdaws), and rooks are all birds that can be taught to speak a few words. And of course,

கொலை நடந்த பின்னர் வரும் காட்சியில் கொலைகளை மறைக்க முடியாது ஏனெனில் காகக் குடும்பப் பறவைகள் அதைக் காட்டிவிடும் என்கிறார் நாடக ஆசிரியர் . மாமிசத்தைத் தின்ன அவை வரும் அல்லது அவைகளின் குரல் காட்டிவிடும் என்று உரைகாரர்கள் பொருள் கற்பிக்கின்றனர்.

மாக்பெத் நாடகத்தில் கொலைகள் நடத்தப்பட்ட பின்னர் இரவுநேரம்  நெருங்குகிறது அப்போது வரும் வசனத்திலும் காகம் அடிபடுகிறது

Light thickens; and the crow / Makes wing to the rooky wood: / Good things of day begin to droop and drowse; / While night’s black agents to their preys do rouse” (3.2.53). “Night’s black agents” are all things that hunt and kill in the dark, including birds of prey.

****

காகத்தைக் கண்டு இந்துக்கள் பயப்படுவதில்லை ; தினமும் அதற்குச் சோறுபோட்டுவிட்டுத்தான் தமிழ் இந்துக்கள் சாப்பிடுவர். மேலும் அதை சனி பகவானின் வாகனம். ஜாதகத்தில் சனி திசை வந்தாலும் எள்ளு விளக்கு ஏற்றி வழிபடுவர் ஆயினும் அது வலமாகப் பறக்கிறதா, இடமாகப் பறக்கிறதா என்றெல்லாம் சகுன சாத்திரமும் தமிழ்ப் பழமொழிகளும் செப்பும். மேலும் தமிழ் பஞ்சாங்கங்களில் வரும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் சகுனம் சொல்லும் ஐந்து பறவைகளில் காகமும் ஒன்று.

ஷேக்ஸ்பியர் அவரது ஜுலியஸ் சீசர் நாடகத்தில் காகத்தையும் கெட்ட சகுனத்துக்குப் பயன்படுத்துகிறார்:

In “Julius Cæsar,” (v. 1), Cassius, on the eve of battle, predicted a defeat, because, to use his own words:—

                           “Crows and kites
Fly o’er our heads and downward look on us,
As we were sickly prey: their shadows seem
A canopy most fatal, under which
Our army lies, ready to give up the ghost.”

தோல்வி ஏற்படப்போவதை காசியஸ் சகுனங்களைக் காட்டிக்  கூறுகிறார்

காகங்களும் பருந்துகளும் நமது தலைக்கு மேலே பறக்கின்றன ; நாம் அவைகளின் இரை போல எண்ணி நம்மையே பார்க்கின்றன.

****

கிங் ஜான் , ட்ராய்லஸ் அண்ட் கிரஸ்ஸிடா Troilus and Cressida” (i. 2); “King John” நாடகங்களிலிலும் இதே சகுனம் வருகிறது ;வர்ஜில் என்ற கவிஞர் பல நூற்றாண்டுகளுக்கு  முன்னர் இதை ப்    பயன்படுத்தி இருக்கிறார் .

****

தமிழ் நாட்டிலும் இதர மாநிலங்களிலும் சோளக்காட்டு பொம்மையை வைத்து பறவைகளை விரட்டுவார்கள்; சங்க காலத்தில் பெண்கள் ஆலோலம் பாடி பறவைகளை விரட்டினார்கள்; ஐரோப்பாவில் காகங்களை இப்படி விரட்டியதால் அந்த பொம்மைகளுக்கு ஸ்கேர் க்ரோ Scare Crow என்று காகத்தின் பெயரைத்தான் வைத்துள்ளனர்.

வட இங்கிலாந்தில் சிறுவர்கள் காகங்களை விரட்ட கீழ்க்கண்ட வரிகளை சொல்லுவர்; இதில் காகத்தின் மேலுள்ள வெறுப்பு வெளிப்படுகிறது :

“Crow, crow, get out of my sight,

 Or else I’ll eat thy liver and lights.”

*****

காகத்திடமிருந்து கற்கவேண்டிய ஆறு குணங்கள், லண்டனில் ராஜ வம்சத்தைப் பாதுகாக்க அண்டங்காக்கை,களை கோஹினூர் வைரமுள்ள டவர் ஆப் லண்டனில் பாதுகாத்து வளர்ப்பது பற்றி முன்னரே நிறைய எழுதிவிட்டேன்  ஆனால் வராஹமிஹிரர் அண்டங்காக்கை, காகம் , வாலாட்டிக் குருவிகள் பற்றி சொன்ன சகுன ஜோதிடம் பலருக்கும் தெரியாது.

அவைகளையும் காண்போம் .

தொடரும் ……………………………

Tags — அண்டங்காக்கை, காகம், ஷேக்ஸ்பியர், ஜோதிடம்-1 வராஹமிஹிரர், வள்ளுவர் , சகுனம், Part 1,RAVENS AND OMENS

படித்ததை எல்லாம் நம்பாதே! பார்த்ததை எல்லாம் நம்பாதே! (Post.13,806)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.806

Date uploaded in London – 23 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

படித்ததை எல்லாம் நம்பாதே! பார்த்ததை எல்லாம் நம்பாதே! 

ச. நாகராஜன் 

ஒரு மிக மோசமான காலகட்டத்திற்குள் நுழைந்து விட்டோம் என்று யாரேனும் நினைத்தால் அதை தப்பு என்று சொல்லி விட முடியாது. 

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு அபாயகரமானது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட பலரும் சொல்லி வருகின்றனர்.

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி தவறானது அல்ல; ஆனால் அது கெட்டவர்களின் கையில் சேர்ந்தால் உலகம் உருப்படாது என்பதே இவர்களின் எச்சரிக்கையாகும்.

 சமீபத்தில் 9-10-2024ல் மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா சொன்ன ஒரு பொன்மொழி இது:

“மக்கள் தாங்கள் படித்ததை எல்லாம் உண்மை என்றே இன்னும் நம்புகிறார்கள்.”

 ஏராளமான போலிச் செய்திகள் வருகின்றன. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல ஆளாளுக்கு அவனவன் “கதை” விடுகிறான்.

இதை யூ டியூப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களில் காண முடிகிறது.

 ஆகவே இவற்றில் படிப்பதைக் குறையுங்கள்; படித்ததைப் பகிரவே பகிராதீர்கள் – இது நிச்சயமான உண்மை என்பதை சரி பார்க்காதவரை!

 சமீபத்தில் உலா வரும் ஒரு செய்தி இது: இது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்பொழுது தலை தூக்கும். ஏமாளிகள் தங்கள் நேரத்தை வீணாக்குவதோடு தங்கள் நண்பர்கள், உறவினர்கள் நேரத்தையும் வீணாக்குவார்கள்.

செய்தி கீழே உள்ளது:

Your Life in 2030 (according to the NWO Globalists) என்பது தலைப்பு. 

 NEW WORLD ORDER UN Agenda 21/2030 Mission Goals

One World Government

One World Cashless Currency

One World Central Bank

One World Military

The End of National Sovereignty

The End of ALL Privately Owned Property

The End of the Family Unit

Depopulation: Control of Population Growth and Population Density

Mandatory Multiple V

Universal Basic Income (Austerity)

Microchipped Society for Tracking and Controlling Purchasing and Travel

Implementation of a World Social Credit System (like China has)

Trillions of Appliances Hooked into the 5G Monitor System (Internet of Things)

Government Raised Children

Government Owned and Controlled Schools, Colleges and Universities

The End of Private Transportation, Owning Cars etc.

All Businesses Owned by Government Corporations

The Restriction of Nonessential Air Travel

Human Beings Concentrated into Human Settlement Zones – Cities

The End of Immigration

The End of Private Farms and Grazing Livestock

The End of Single Family Homes

Restricted Land Use that Serves Human Needs

வடிகட்டிய பொய் இது. இதற்கும் ஐநா சபைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

 இது போல ஆயிரக்கணக்கான மோசமான பொய்ச் செய்திகள் அன்றாடம் சோம்பேறிகளால் பரப்பப்படுகின்றன; பகிரப்படுகின்றன.

 ஃபேக்ட் செக் என்ற தளத்தில் இது உண்மை தானா என்று பாருங்கள்; உடனே ‘வண்டவாளம் தண்டவாளத்தில்’ ஏறிவிடும்.

330 கோடி யூ டியூப் காணொளிக் காட்சிகளில் மிகச் சிலவே பார்க்கக் கூடியவை.

முட்டாள்களாலும், மோசடிப் பேர்வழிகளாலும் தமக்குத் தெரிந்த பல கணினி, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு/மாற்றப்பட்டு இவர்களால் பரப்பப்படும் செய்திகளைத் தவிர்ப்போம்.

இவற்றை என்ன செய்யலாம். பார்க்காதீர்கள்; படிக்காதீர்கள் – முடிந்தவரை

 எனது வேண்டுகோள்:

எதையும் யாருக்கும் அனுப்பாதீர்கள் – உண்மை என்று தெரிந்து கொள்ளாதவரை!

***