ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1 (Post.13,185)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.185

Date uploaded in London – — 28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1 

ச.நாகராஜன்

ஏசு கிறிஸ்து இந்தியாவில் இருந்தாரா என்ற சர்ச்சைக்குரிய விஷயம் பற்றி பல்லாண்டுகளாக விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது பற்றிப் பலரும் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்துள்ளனர்; நடத்தில் வருகின்றனர்.

ஜி.எம்.ஜகதியானி (G.M. Jagatiani)  என்பவர் 1983-ம் ஆண்டு ஒரு சிறிய புத்தகத்தை பிரசுரித்தார். அதில் அவர் கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Jesus Christ’s Life in India

By

R.R.Sakesana M.A., LLb, DL, SC

டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் எழுதிய Easterm Religions And Western Thought என்ற நூலில் 165-ம் பக்கத்தில், “புதிய ஏற்பாடு ஏசுவின் வரலாற்றை 13-ம் வயது வரை தருகிறது. ஜான் தி பேப்டிஸ்ட் – ஐ உபதேசிக்கும் வரை அடுத்த 17 ஆண்டுகள் அவர் எங்கிருந்தார் என்பதைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. பல மரபு வழிச் செய்திகள் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் கிழக்கே விஜயம் செய்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் இவற்றிற்கு ஆதாரம் இல்லை.” என்று எழுதியுள்ளார்.

இந்த எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் பார்வைக்கு கிறிஸ்துவின் பயணங்கள் பற்றியும் அவர் இந்தியாவில் கல்வி கற்றதைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

தனது 25-2-1974 தேதியிட்ட கடிதத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவருக்கு இது பற்றிய ஆய்வுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பல புத்தகங்களில் குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம் :

The Mystical Life of Jesus

By

Spencer Lewis Ph.D.

Published by

The Supreme Grand Lodge of Amore,

San Jose,

California,

USA

அதில் சில பகுதிகள்:

சிறுவனாக இருந்த ஏசு கூட ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பலருடன் கூட்டமாக ஜகந்நாத்திற்கு மிகக் குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்துச் செல்லலானார். அது இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்தது. அதன் இன்றைய பெயர் பூரி. பல நூற்றாண்டுகளாக அது புத்த மதத்தின் ஒரு மையமாகத் திகழ்ந்தது.

இந்தப் பயணத்திற்கான காலம் ஒரு வருடம்.

ஏசு பூரியில் ஒரு வருடம் கல்வி கற்கலானார்.  லாமாக்களின் உபதேசங்களில் அவர் நல்ல தேர்ச்சி பெற்றார். அவர்களை ஜெருசலத்திற்கு வருமாறும் அழைத்தார். (பக்கம் 181)

ஏசு கங்கை நதிக் கரையில் உள்ள வாரணாசியில் பல மாதங்கள் தங்கி இருந்தார். ஹிந்து மகானும் பெரிய சிகிச்சையாளருமான உத்ரகர் (Udrka) என்பவரிடம் ஹிந்து மருத்துவ சிகிச்சை முறைகளைக் கற்றார். பின்னர் ஏசு மீண்டும் பூரிக்கு வந்தார், அங்கு மதம் மற்றும் தத்துவம் பற்றி இரு வருடங்களுக்கும் மேலாகப் பயின்றார். அங்கு அவர் ஒரு ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

ஏசுவுக்கு ஒரு துயரமான செய்தி வந்தது. அவரது தந்தையார் கலீலியில் (Galilee) இறந்து விட்டதாகவும் அவரது தாயார் மிகவும் துயருற்று வருந்துவதாகவும் அவரை யாராலும் தேற்ற முடியவில்லை என்றும் வந்த செய்தியால் ஏசு துயரமுற்றார்.

இந்த காலகட்டத்தில் தான் இளம் ஜோசப் முதல் முறையாக தெளிவான வார்த்தைகளால் சொன்னவை ஆவணப் படுத்தப்பட்டது.

அது இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர் ESSENE தூதுவர்களுக்கு ஆறுதல் செய்தியாக அனுப்பிய கடிதம் இது:-

 “அன்புள்ள அம்மா, வருத்தப்பட வேண்டாம். தந்தையும் நன்றாகவே இருப்பார். நீங்களும் நன்றாக இருப்பீர்கள். நான் வரும் வரை பொறுத்திருங்கள். தங்கத்தினாலும் ரத்தினங்களாலும் செய்யப்பட்டவற்றை நீங்கள் பார்த்திருப்பதை விட நான் கொண்டு வரும் சிறப்பான பரிசுகளைப் பார்க்கப்போகிறீர்கள். எனது சகோதரர்கள் உங்களை நன்கு கவனிப்பார்கள் என்றும் உங்கள் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்றும் நம்புகிறேன். உள்ளத்தாலும் உயிராலும் உங்களுடன் எப்போதும் இருக்கும் உங்கள் மகன் ஜோசப்

தொடரும்

One Rupee Coin is sold for Rs.30,000 in London (Post No.13,184)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,184

Date uploaded in London – –   27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

4X75= 300 pounds.

There is an interesting advertisement in London Metro Newspaper about the value of Indian one rupee coin. It was published yesterday. It is a silver coin issued with Edward VII picture in India. It is a pure silver coin with one rupee value. Year 1904.

Now the advertisement says they have recovered Indian coins from the bottom of the sea. SS City of Cairo was the name of the ship that was torpedoed by a German war ship. This passenger ship sank in South Atlantic Ocean. No survivors reported. Recently two thirds of the treasures in the ship were recovered. And One Rupee Silver Coin was part of the treasure, says the Advt. Each coin is sold for £300. As of today’s exchange rate, it will be over Rs30,000.

If you have this coin, you can also make good money.

(see the attached pictures) 

–subham—

Tags- One rupee, silver coin, Edward VII, £300, Metro Advt.

More Quotations from Garuda Purana : May 2024 Calendar (Post No.13,183)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,183

Date uploaded in London – –   27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

FESTIVALS :1 May Day; 4 Agni Nakshatra period begins; 10 Akshaya Trtyai; 12 Adi Shankara Jayanthi; 22 Vaikasi Visakam & Narasimha Jayanthi; 23 Buddha Purnima; 28 Agni Nakshatra period ends.

Amavasai/ New Moon Day 7; Purnima/ Full Moon Day – 23; Ekadasi Fastig Days – 4, 19;

Auspicious Days – May 3, 5, 6, 13, 19, 26.

XXXX

May 1 Wednesday

1.112.7. The chief secretary to the king should be intelligent, clever in conversation, shrewd, truthful in speech, with sense organs under his control, and acquainted with all sastras.

xxxx

May 2 Thursday 

1.112.8. The chief ambassador should be intelligent, sensible, a reader of others’ minds, ruthless and blunt in speaking facts.

xxxx

May 3 Friday

1.112.13. Whether he is a writer, or a reciter, an accountant or a chief executive, if anyone is found to be lazy, he should at once be dismissed.

xxxx

May 4 Saturday

1.112.15. A wicked man should be avoided even if he happens to be a scholar. Is not a serpent terrific though its head is bedecked with a precious gem?

xxxx

May 5 Sunday

1.112.17. If a salaried servant of the king becomes so rich as to vie with him, is of equal competency, knows his inner secrets and vulnerable points, is very industrious and puts up a claim to half of his kingdom there is no harm if the king puts him to death.

xxxx

May 6 Monday

1.113.7. The anthill, honey, the moon in the bright half and alms wax little by little.

xxxx

May 7 Tuesday

1.113.9. A vicious and lustful man shall find hundreds of obstacles even in the forest; but if he can control his five senses he can practice penance even in his house. He who is engaged in activities not censurable and he who is free from passion can make his house a hermitage.

XXXX

May 8 Wednesday

1.113.10. Virtue is protected by truth, knowledge by further acquisition, a pot by frequent cleaning and a family by good conduct.

XXXX

May 9 Thursday 

1.113.11. It is better to stay in the forest of Vindhya, to die without partaking of food; it is better to sleep in a spot infested by serpents or to leap into a well; it is better to plunge into a whirlpool or a dangerous water current than to say “Please give” or beg for a sum of money from one’s own kindred.

XXXX

May 10 Friday

1.114.10. She serves one man but cherishes love for another. In the absence of man a woman can very well be chaste.

xxxx

May 11 Saturday

1.114.11. A mother moved by passion may commit some misdeeds. Though the sons may disapprove of the conduct yet they shall not worry much about them.

xxxx

May 12 Sunday

1.114.12. The body of a courtesan is prized in the world; the body that is held at stake always with the neck torn by the hoofs of debauches and hence always agitated and anxious. Her sleep is dependent on others’ convenience; she has to follow the wishes of others and without a show of sorrow she has to laugh and sport always.

xxxx

May 13 Monday

1.114.13. Fire, water, women, fools, serpents and royal households – these are to be resorted to by others always, yet they take away one’s life all of a sudden.

xxxx

May 14 Tuesday

1.112.14. The mouths of a wicked man and a serpent are sources of distress – since they are double-tongued, causing pain, ruthless and terrific.

xxxx

May 15 Wednesday

1.113.22. Everything happens in the age, time, day, night, hour or moment as is ordained beforehand; not otherwise.

xxxx

May 16 Thursday 

1.113.13. Knowledge is an ornament to a brahmana; a king is the beautifier of the world; the moon is an ornament of the sky; a good conduct is an ornament to everyone.

xxxx

May 17 Friday

1.113.14. Bhima, Arjuna and others were born as princes, they were pleasing and delightful like the moon; they were valorous, truthful, brilliant like the sun and were kindly protected by Lord Krsna. Even they were subjected to abject misery by the influence of evil planets; they had to beg for alms; if fate is adverse who is capable of what? The current of previous actions tosses everyone about.

xxxx

May 18 Saturday

1.114.14. What is there to wonder at, if a brahmana well versed in grammar becomes a great scholar? What is there to wonder at, if a king well versed in polity and administration becomes a virtuous king? What is there to wonder at, if a young woman endowed with beauty and charms errs from chastity? What is there to wonder at, if a poor man begins to commit sins sometimes?

xxxx

May 19 Sunday

1.114.16. Women may be confined to the nether worlds or may be imprisoned with high walls all round. Still if there is no moving glossy tuft of hair who can see them? [Using her long tresses she will escape from these places].

xxxx

May 20 Monday

1.114.18. He is the real scholar who pleases children with sweets, the good people with humility, the women with wealth, the deities with penance and people [by work] for their welfare.

xxxx

May 21 Tuesday

1.113.8. Seeing that collyrium and ink, used though very little every day, become exhausted after some time, and that the anthill flourishes day by day, one should be careful in not wasting one’s time. One should engage oneself in activities of charity or self-study.

xxxx

May 22 Wednesday

1.113.21. Even Ravana perished at the hands of time. Ravana whose fortress was the mountain Trikuta, the moat – the very ocean; soldiers – Raksasas; the action of the highest order; and the sastra propounded by Usanas [Sukra].

xxxx

May 23 Thursday 

1.113.24. The learning of bygone days, the money made over as gift and the actions done before – these run ahead of a person who walks at speed.

xxxx

May 24 Friday

1.113.20. A man can never forsake the action done by him far into the sky, or deep into the sea or high on the mountain; whether he is held by his mother on her head or kept in her lap.

xxxx

May 25 Saturday

1.113.19. The happiness is enjoined by oneself, the sorrow too is enjoined by oneself; even the womb selected by him is in accordance with the action of the previous birth.

xxxx

May 26 Sunday

1.113.18. Man enjoys only the fruits of his previous actions; whatever he has done in the previous births has its reactions now.

xxxx

May 27 Monday

1.113.41. The characteristics of a saintly man are: he is not elated much when honoured, he does not become angry when slighted, he does not speak harsh words in anger.

xxxx

May 28 Tuesday

1.113.17. The mother is goddess Laksmi herself; the father is Lord Vishnu; still if the son (Cupid) were to be of crooked mind, who is to be punished for the same?

xxxx

May 29 Wednesday

1.113.34. Riches acquired virtuously become stable; they flourish still more with virtue. Hence, when you aim at riches, remember this and seek virtue. You thus become great in the world.

xxxx

May 30 Thursday 

1.113.39. A man habitually wicked in deeds, with his conscience benumbed with evil thoughts, cannot be cleansed with a thousand lumps of clay or a hundred pots of water.

xxxx

May 31 Friday

1.113.32. When chased, a serpent escapes into a well, an elephant to the trunk (to which it can be tethered); a mouse to its hole; but who can fly from karma which is quicker than all these?

–subham—

Tags- May 2024, calendar, Garuda Purana, quotes, Quotations

கைகேயி எறும்புப் பெண்! கம்பன் சொல்லும் அதிசயக் கதை!! இந்து மதத்தில் எறும்பு – 2 (Post No.13,182)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,182

Date uploaded in London – –   27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

எறும்பு பற்றிய சுவையான இந்து மதக் கதைகளில் கம்பன் சொல்லும் கதைதான் மிகவும் சுவையானது ; பழைய கட்டுரையைத் திருப்பித் தந்துள்ளேன் .

அதற்கு முன்பாக சங்க இலக்கியத்தில், தமிழ்ப் பழ மொழிகளில் எறும்பினைக் காண்போம்.

சங்க இலக்கியத்தில் எறும்புகள்

அகம். 377-3; (339)குறு -12-1; புறம் – 173-7;பதிற்று  – 30-38

xxxx

கோடை நீடலின், வாடு புலத்து உக்க

சிறு புல் உணவு, நெறி பட மறுகி,

நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த

வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்

பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,–அகநானூறு 377

நீண்ட பயணம் மேற்கொண்ட தமிழ்க் காதலனின் புலம்பல்; எறும்புகள் அழகாக ஊர்ந்து செல்கின்றன. கோடைகாலத்தில் புல் லிருந்து விழுந்த அரிசியைச் சேகரித்துச் செல்கின்றன.

xxxx

இருதலைக்  கொள்ளி இதை நின்று வருந்தி,–அகநானூறு 369

இரண்டு புறமும் எரியும் கொள்ளிக் கட்டையில் இடையே நின்று தவிக்கும் மனநிலையில் தவிக்கிறேன் .

xxxxx

எறும்பி அளையின் குறும் பல் சுனைய

உலைக்கல் அன்ன பாறை ஏறி,

கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்–குறுந்தொகை 12

எறும்புப்புற்று போல் பாறைகளும் அதிலுள்ள ஓட்டைகள் நீர்ச்சுனைகள் போலவும் இருக்கின்றன.

xxxx

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!

……….

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,                   5

முட்டை கொண்டு வன் புலம் சேரும்

சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,

சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்– புறநானூறு 173

ஒரு தமிழ் டாக்டர் இருக்கிறார்; அவர் பசி என்னும் நோய்க்கு மறுத்து தருகிறார்; அவர் பண்ணன் என்னும் பசிப்பிணி மருத்துவர்; அவரது வீட்டிலிருந்து சிறுவர்கள் சொருகி கவளத்துட ன் செல்லுவது எறும்புகள் முட்டை கொண்டு திட்டை ஏறுவது போல காட்சி தருகின்றது ; அப்படியானால் மழை  வரும்

XXX

பதிற்றுப்பத்தில் 30-38  நள்ளிரவில் கடவுளருக்கு எரியும் செந்நிறச் சோற்று உருண்டை கீழே விழும் காட்சியும் அந்தச் சிதறிய சோ ற்றுப் பருக்கைகளை பேய்களும் எறும்புகளும் கூட அண்டாத காட்சியும் வருணிக்கப்படுகிறது.

XXXX

நீதிநெறி விளக்கம் 37 (குமரகுருபரர்)

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்

றூங்குங் களிறோ துயருறா – ஆங்கதுகொண்

டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்

ஆருங் கிளையோ டயின்று.        37

யானையானது தனக்குப் பாகன் ஊட்டும் உணவுக் கவளத்தைத் தன் வாயில் போடும்போது ஒரு சிறுபகுதி தப்பிக் கீழே விழந்தால் அதற்காக யானை வருந்துவதில்லை. மாறாகத் தப்பி விழுந்த சோற்றுப் பருக்கைகள் கோடிக்கணக்கான எறும்புகள் உண்டு வாழும் உணவாக அது அமையும். அப்படி செல்வந்தர்களும்  தன் செல்வத்தின்  ஒரு பகுதியைத் தன் உறவினர்கள் அனுபவிக்கும்  படிச் செய்ய வேண்டும். 

XXXX

எறும்புகள் பற்றி மனு தர்ம சாஸ்திரம்

கருட புராண ஸ்லோகம் ஒன்றில் தர்மம், தேன்கூடு, வளர்பிறைச் சந் திரன் , எறும்புப் புற்று  ஆகியன வளர்ந்துகொண்டே வரும் என்கிறது ; அதற்கு முன்பாகவே 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மனு நீதி நூல் அதைச் சொல்லிவிட்டது

Manu 4-238 எறும்பு போல புண்ணியம் சேர்; சிறுகச் சிறுக சேர் என்று புகல்கிறது

धर्मं शनैः सञ्चिनुयाद् वल्मीकमिव पुत्तिकाः ।

परलोकसहायार्थं सर्वभूतान्यपीडयन् ॥ २३८ ॥

dharmaṃ śanaiḥ sañcinuyād valmīkamiva puttikāḥ |

paralokasahāyārthaṃ sarvabhūtānyapīḍayan || 4-238 || மனு

கறையான்கள் / வெள்ளை எறும்புகள் எப்படி மெதுவாக எறும்புப் புற்றினை (பாம்புப் புற்று) வளர்க்கிறதோ அதுபோல மனிதர்களும் சொர்க்கலோக வாழ்வுக்கு ஆன்மீக பலத்தை , எவருக்கும் தொல்லையின்றி; சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும் ( தவம் செய்யவேண்டும்)– (Manu Smriti 4-238).

XXXX

எறும்புகள் பற்றி மஹாபாரதம்

பூமிக்கடியிலிருந்து தங்கம் கொண்டுவரும் எறும்புகள் பற்றி மஹாபாரதம் சொன்னதை 2600 ஆண்டுகளுக்கு முன்னர் ஹெரோடோட்டஸ் என்ற கிரேக்கரும் உலகெங்கும் பரப்பினார்

Pipīlika (पिपीलिक).—An ant .Pipilikam- A kind of gold (said to be collected by ants); तद् वै पिपीलिकं नाम उद्धृतं यत् पिपीलकैः । जातरूपं द्रोणमेयमहार्षुः पुञ्जशो नृपाः (tad vai pipīlikaṃ nāma uddhṛtaṃ yat pipīlakaiḥ | jātarūpaṃ droṇameyamahārṣuḥ puñjaśo nṛpāḥ) || Mahābhārata (Bombay) 2.52.4.

XXXX

வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதா என்ற நூலில் எறும்புப் புற்றுகள் மூலம் நிலத்தடி நீரைக் கண்டுபிடிப்பது எப்படி என்று நிறைய ஸ்லோககங்களைத் தந்துள்ளார். எந்த மரம் இருந்தால் எந்த திசையில் கிணறு தோண்டலாம் என்றும் 30, 40 ஸ்லோகங்களில் சொல்கிறார். இந்துக்கள் இயற்கையை எந்த அ ளவுக்குப் பயன்படுத்தினார்கள், ஆராய்ந்தார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.

XXXX

ராமாயணத்தில் எறும்பின் கதையும் கைகேயி வம்சமும் (Post No.9738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9738

Date uploaded in London – –15 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்ப ராமாயணத்தின் அயோத்யா கண்டத்தில் ஒரு சுவையான கதை வருகிறது. கோடிப்  பேரில் ஒருவருக்கு மட்டும் பிராணிகள் பேசுவதைக் கேட்கும் அபூர்வ சக்தி இருக்கும். இந்து மத நூல்களில் விக்ரமாதித்தன், கழற்றறிவார் , ஆனாய  நாயனார் ஆகியோர் இவ்வாறு அபூர்வ சக்தி படைத்தவர்கள்  வால்மீகி ராமாயணத்தில் கைகேயியின் தந்தை அசுவபதிக்கும்  இந்த சக்தி இருந்ததாக செய்திகள் உள . கம்பரும் நமக்கு போகிற போக்கில் ஒரே வரியில் சுட்டிக்காட்டுகிறார்.

பிரபஞ்சத்தில் 4 விதமான ஒலிகள் உண்டு என்றும் அவற்றில் மனிதன் கேட்கும் ஒலி ஒன்று மட்டும்தான் என்றும் ஒரு அற்புதத் தகவலை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் தீர்க்க தமஸ் (RV1-164) என்ற அந்தகக்  கவிராயர் நமக்கு அளிக்கிறார். ஆக நாம் கேட்க முடியாத ஒலிகளில் ஒன்று பிராணிகளின் ஒலி – பாஷை என்பது சொல்லாமலேயே விளங்கும்.

இதோ கம்பன் சொல்லும் கதை

வன்மா யாக்கை கேசி வரத்தால் , என்றான் உயிரை

முன் மாய் விப்பத் துனிந்தாளேனும்  கூனி மொழியால் ,

தன் மாமகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி

என்மாமகனைக்  கான் ஏகு என்றாள் ; எறும்பின் கதையாள்

நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம் , கம்ப ராமாயணம்

பொருள் –எறும்பின் சரித்திரத்தைக் கொண்டவளின் மகளாகிய கைகேயி வஞ்சனையால் ,

கூனியால் தூண்டப்பட்டுத் தன் வரத்தாலே என் உயிரை வாங்கத் துணிந்துள்ளாள். மேலும் தன்னுடைய பெருமை மிக்க மகனும் தானுமாக இவ்வுலகினைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உயர்ந்த  மூத்த மகனையும் காட்டிற்குச் செல்க என்றாள்  என்று கைகேயியின் கொடுமையை கோசாலையிடம் கூறி, தசரதன் வருந்தினான்.

இங்கே ‘எறும்பின் கதையாள்’ என்ற 2 சொற்களின் பின்னால் ஒரு கதை உளது

அது என்ன கதை?

கைகேயியின் தந்தை பெயர் அஸ்வபதி. அவன் கேகய நாட்டின் மன்னன்.அவனுக்கு ஈ , எறும்பு போன்ற உயிர் இனங்கள் பேசும் மொழி தெரியும். இதை அவனுக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்தார். ஒரு முறை மனைவியுடன் படுக்கையில் படுத்திருந்த போது அஸ்வபதி. திடீரென வெடிச் சிரிப்பு சிரித்தான். மனைவிக்குக்     கோபமும் சந்தேகமும் வந்தது. “ஓய் , என்ன என்னைக் கிண்டல் செய்கிறீர்களா? எதற்காக எம்மைப் பார்த்து இளித்தீர் ?” என்று வினவினாள். அஸ்வபதி சொன்னார்:- “அன்பே, ஆருயிரே, உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நம் படுக்கையின் கீழே போன இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டுச் சிரித்தேன்”  என்றார்.

ஐயா நீவீர் ‘டூப்’ (பொய்) அடிக்கிறீர். அப்படியானால் எறும்புகள் என்ன பேசின என்பதை எமக்கும் செப்பும். பின்னர் உம்  மீதுள்ள ஐயப்பாடு அகலும் என்று புகன்றார்   .

அஸ்வபதி சொன்னார்:- அம்மே; சினம் தணிக !ஐயம் அகல! எனக்கு உயிரின மொழி கற்பித்த முனிவர், அவற்றின் பாஷையை எவருக்கும் நீர் புகலக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அப்படிச் சொன்னால், மரணம் சம்பவிக்கும்; நான் உயிர் வாழ முடியாது என்றான்.

அவளோ அட, நீர் செத்தால் செத்துத் தொலையும் ; எனக்கு எறும்பின் குறும்புப் பேச்சைப்  பகரும் என்றாள். மறு  நாள் முனிவர் அனுமதி பெற்று உரைக்கிறேன் என்றான். முனிவரோ அத்தகைய  கொடியாள் நாட்டில் இருப்பது நல்லதல்ல அவளை நாடு கடத்து என்றார் .

முனிவரின் சொற்படி மனைவியை நாடு கடத்தி விட்டு அஸ்வபதியும் இனிதே அரசாண்டான். அந்தத் தாய்க்குப் பிறந்தவள்தானே கைகேயி! அவள் குணமும் அப்படியே; கணவன் செத்தாலும் ராமன் காட்டுக்குப் போகவே வேண்டும் என்று எண்ணுகிறாள்! என்னும் பொருள் தொனிக்க தசரதன் ஒரு சொல்லைப் போட்டான். அந்தச் சொல்தான் எறும்பின் கதையாள் .

ராமாயணத்தில்தான் எவ்வளவு உண்மைகள்! இதில் மரபணு இயல் என்னும் (Genetics) ஜெனெடிக்ஸ், பிராணிகளின் பாஷை  (Language of Animals) முதலிய அரிய விஷயங்களும் வந்து விட்டன.

தாயைப் போல (பெண்) பிள்ளை!!

நூலைப்  போல சேலை!!

xxxx

தமிழ்ப் பழ மொழிகளில்

தமிழ்ப் பழ மொழிகளில் எறும்பினைக் காணலாம்; தமிழ் மக்களுக்கு இருந்த வானிலை பற்றிய அறிவினையும் எடுத்துக்காட்டுகிறது

எறும்பு ஊர கல்லுந் தேயும்.

(அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல; முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை விளக்கும் பழ மொழி இது)

xxxx

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை வரும் ‘

(வானிலை அறிவு.)

xxxx

எறும்பு முதல்  யானை வரை

(எல்லா உயிரினங்களும் இறைவன் படைப்பே )

யானை முதலா எறும்பீறாய- திருவாசகம் 4-11

xxxx

ஈ எறும்பு கூட நுழைய முடியாது

(அதி பயங்கர பாதுகாப்பு )

xxxx

இருதலைக்  கொள்ளி எறும்பு போல

(வழி தெரியாமல் தவிக்கும் நிலை )

இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்து  — திருவாசகம் 6-33

xxxx

நெய்க்குடந்தன்னை எறும்பெனவே -திருவாசகம் 6-96

xxxx

எறும்பிடை நாங்க்கூழ் எனப் புலனால் திருவாசகம் 6-97

(அதிக துன்பம்; எல்லா திசைகளிலிருந்தும் தாக்குதல்)

xxxx

பிராமணனும் நாய் தின்னும் புலையனும்

இந்து மதத்தின் உயர்ந்த நிலையில் ஒரு பிராமணன், ஒரு எறும்பு, ஒரு யானை,  நாயை அடித்துத் தின்னும் புலையன் (இது கீதை ஸ்லோகத்தில் உள்ள வரி) ஆகிய அனைவரும் சமமே..நம்முடைய தத்துவங்கள் மிகவும் உன்னதமானவை . அத்தைய உயர்ந்த லட்சியத்தை இன்று நாம் கைவிட்டதால் இன்று சகிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுவிட்டது இந்த மதம் மனிதர்களிடையே மட்டும் சகோதரத்துவத்தைப் போதிக்கவில்லை. உயிர் வாழும் எல்லாம் ஓரினம் என்று போதிக்கிறது — காந்திஜி ; ஹரிஜன் பத்திரிகையில்  (Harijan 28-3-1936)

xxxx

தமிழ் அகராதியில்

எறும்பு என்பதற்கான வேத கால ஸம்ஸ்க்ருதச் சொல் – பிபீலிகா; இதை தமிழ் அகராதிகளிலும் காணலாம் :

Pipīlikā (பிபீலிகா) noun See பிபீலிகை. ((சங்கத்தகராதி) தமிழ்சொல்லகராதி) [pipiligai. ((sangathagarathi) thamizhsollagarathi)]

Xxxx

Pipīlikācantāṉam (பிபீலிகாசந்தானம்) [pipīlikā-cantāṉam] noun < pipīlikā +. Continuity, as of a line of ants; எறும்புகள் தொடர்ந்தூர்வதுபோன்ற தொடர்ச்சி. [erumbugal thodarnthurvathuponra thodarchi.] (மணிமேகலை [manimegalai] 30, 38, கீழ்க்குறிப்பு. [kizhkkurippu.])

Xxxx

Pipīlikāniyāyam (பிபீலிகாநியாயம்) [pipīlikā-niyāyam] noun < pipīlikā +. Nyāya illustrating the principle of judging things correctly like ants; எறும்பு போல முறைப்பட எண்ணித் தவறாதுதுணியும் நெறி. [erumbu pola muraippada ennith thavarathuthuniyum neri.] (W.)

xxxx

இருதலைக் கொள்ளி எறும்பு! அப்பர் பெருமான் தவிப்பு! (Post No.4387)

உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை

உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி

எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற

கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே

–நாலாம் திருமுறை

பொருள்

தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.

அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என்  உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.

xxxx

கல்லுக்குள் தேரைபெட்டிக்குள் எறும்பு: உணவு கொடுப்பது யார்?

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:— 1119; தேதி:—- 20 ஜூன் 2014

 ஒரு முறை பார்வதிக்கும் பரமசிவனுக்கும் இடையே ஒரு காரசார விவாதம்:

பார்வதி:– என்ன இது? இப்படி எப்போது பார்த்தாலும் ‘டான்ஸ்’ (நடராஜன் ) ஆடியே பொழுதைக் கழிக்கிறீர்களே. கொஞ்சம் பசியால் வாடும் உயிரினங்களுக்கு உணவு அளிக்கக்கூடாதா?

பரமசிவன்:- அன்பே! ஆருயிரே ! அதைத்தான் ‘’இமைப்பொழுதும் சோராமல்’ அல்லும் பகலும், அனுவரதமும் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

 பார்வதி:– அப்படியா! எனக்கு என்னமோ நீங்கள் ‘’நடராஜ’’னாகப் பொழுது போக்குவதே கண்களுக்குத் தெரிகிறது!

(கதைச் சுருக்கம் முதல் கட்டுரையிலேயே உள்ளது)

–சுபம்–

Tags- எறும்பு,கைகேயி, பழமொழிகளில், அகராதியில், சங்கத் தமிழில்,பாடல்

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2 (Post.13,181)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.181

Date uploaded in London – — 27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2

மாலைமலர் 17-4-2024 இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2

ச.நாகராஜன்

நேர்மையே வெல்லும்!

இன்னொரு சம்பவம் இது.

ஒரு சமயம் பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸுக்கு விஜயம் செய்தார்.

அதனுடைய டைரக்டரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் பகவந்தம் பாபாவின் பக்தராவார்.  அவர் பகவந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த மாடியில் க்ளார்க் வேலைக்காக ஒரு நேர்காணல் பேட்டி நடந்து கொண்டிருந்தது.  அதில் கலந்து கொண்ட ஒரு பையன் சோகமாக ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பாபா அவனை அழைத்து, “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

இண்டர்வியூவில் கலந்து கொண்ட தன்னால் சரியாகப் பதில் சொல்ல இயலவில்லை என்றும் இண்டர்வியூவை நடத்திய பெரும் விஞ்ஞானியான ராமன் தன்னைத் திட்டி அனுப்பி விட்டதாகவும் அவன் வருத்தத்துடன் சொன்னான்.

பாபா, “அது சரி, நீ இங்கு வருவதற்காக அலவன்ஸ் ஏதாவது உனக்குத் தந்தார்களா” என்று கேட்டார்.

அந்தப் பையன், “ ஆமாம். நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன். வந்து போக அலவன்ஸாக பதினைந்து ரூபாய் தந்திருக்கிறார்கள். போக வர செலவு பத்து ரூபாய். மீதி ஐந்து ரூபா என்னிடம் இருக்கிறது” என்றான்.

உடனே பாபா, “ சி.வி. ராமன் இப்போது மாடியிலிருந்து இறங்கி வருவார். அவரிடம் மீதி இருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு” என்றார்.

பையனும் அதற்கு ஒப்புக் கொண்டு சி.வி,ராமனுக்காகக் காத்திருந்தான்.

ராமன் கீழே இறங்கி வந்து காரில் ஏறும் சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்தார். “நீ இன்னமுமா இங்கு நிற்கிறாய்?” என்றார்.

பையன் அவர் அருகில் சென்று, “கொடுத்த பதினைந்து ரூபாயில் எனக்குச் சேர வேண்டியது போக மீதி ஐந்து ரூபாய் இருக்கிறது. அதை உங்களிடம் தருவதற்காகத் தான் காத்து நிற்கிறேன்” என்றான்.

இதைக் கேட்டவுடம் அளவிலா மகிழ்ச்சி அடைந்த ராமன், “ஆஹா! இந்த வேலைக்கு உன்னைப் போன்ற நேர்மையுடைய ஒருவன் தான் வேண்டும்” என்று கூறி விட்டு அங்கிருந்த நிறுவன அதிகாரியைக் கூப்பிட்டு உடனடியாக அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை அடித்துத் தர உத்தரவிட்டார்.

ஐந்து ரூபாயையும் அவனிடமே திருப்பித் தந்தார்.

பையன் கண்ணீர் மல்க பாபாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.

பாபா, “பார்த்தாயா! நேர்மைக்குக் கிடைத்த பரிசை! நேர்மையை எப்போதும் கடைப்பிடி” என்று அருளுரை பகர்ந்தார்.

விருதுகள்

ஏராளமான விருதுகளை சி.வி.ராமன் பெற்றுள்ளார்.

1929-ல் இங்கிலாந்து அரசியார் அவருக்கு சர் பட்டத்தை அளித்துக் கௌரவித்தார்.

1954-ம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது.

1928-ல் அவர் பிப்ரவரி 28-ம் தேதி அவர் தனது மாபெரும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் நாளை இந்திய அரசு அதை தேசீய அறிவியல் நாளாகக் கொண்டாட ஆணை பிறப்பித்தது.

பங்களூரில் சி.வி,ராமன் நகர் என்ற பகுதியும் திருச்சியில் சி.வி,ராமன் நகர் பகுதியும் அவர் பெயரால் கௌரவிக்கப்படும் பகுதிகளாகும். பங்களூரில் சி.வி,ராமன் ஹாஸ்பிடல் உள்ளிட்ட பல இடங்கள் அவர் பெயரைச் சொல்லிப் பெருமைப்படுபவை.

மறைவு

1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் நாளன்று தனது 82-ம் வயதில் மறைந்தார். தனது மனைவியிடம் மிக மிக எளிமையாக எந்த வித சடங்குமின்றி தான் எரியூட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

அவர் மறைவினால் தேசமே வருந்தியது. பிரதமர் இந்திரா காந்தி, தேசமும் பாராளுமன்றமும் ஒவ்வொருவரும் இவரது மறைவினால் வருந்துவதாகக் குறிப்பிட்டார். “நவீன இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானியான அவரது மனம் அவர் ஆராய்ந்த வைரம் போல இருந்தது. அவரது வாழ்க்கைப் பணி எங்கும் ஒளியைத் தந்தது” என்று மேலும் அவர் கூறினார்.

ஊக்கமூட்டும் உரைகள்

சர் சி.வி, ராமனின் ஊக்கமூட்டும் பொன்மொழிகள் ஏராளம்.

அவற்றில் முக்கியமான இரண்டு இதோ:

அறிவியல் என்பது சரியான விடைகளைக் கண்டுபிடிப்பது அல்ல; சரியான கேள்விகளைக் கேட்பதே அறிவியல் ஆகும்.

 நாம் ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் இன்றையத் தேவை என்னவெனில் அந்த தோல்வி மனப்பான்மையை அழிப்பது தான்!”

 ஆம், தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளிவிட்டு இந்தியர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாக மேலெழுவோமாக! உலகின் தலைமை இடத்திற்கு முன்னேறுவோமாக!

—subham—

இந்துமதத்தில் எறும்பு – 1 (Post No.13,180)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,180

Date uploaded in London – –   26 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இந்துக்கள் வணங்காத பொருள்கள் இல்லை; கோவில் மணி முதல் பக்தர்களின் பாதக்குறடுகள் வரை எல்லாமே வணங்கப்படுகின்றன. அதே போல எறும்பு முதல் யானை வரை உள்ள எல்லா உயரினங்களும் வணங்கப்படுகின்றன. . அவைகளிலுள்ள தெய்வாம்சங்ககளை மட்டுமே அவர்கள் காண்பர்; எல்லோரையும் சமாகக் காணும் போது அவைகள் தீங்கிழைக்காது; ஆதி சங்கரர் முதல் அப்பர் வரை பிராணிகளைக் கண்டு அஞ்சியதில்லை ; ஏனெனில் ஒன்றாகக் காண்பதே காட்சி என்ற கொள்கை யுடையோர் அவர்கள்.

கோலம் போடுவது ஏன் ?

எறும்புக்கு இந்து மதத்தில் தனி இடம் உண்டு. தமிழர்கள் தினமும் வாசல் தெளித்து கோலம் போடுவார்கள்  எதற்காக இந்தக் கோலங்கள் ? அதிலுள்ள மாவு எறும்புக்கு உணவாகப் போகிறது . இது இந்துக்கள் தினமும் செய்யும் ஐவேள்விகளில் — பஞ்ச பூத யக்ஞத்தில் ஒன்று .

ஓடும் எறும்புகளைக் கண்டவுடன் அதை நசுக்கிக் கொல்ல விரைவது குழந்தைகள் சுபாவம்; உடனே தாய்மார்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று எச்சரிப்பார்கள் ; குழந்தைகள் ஏன் என்று வினவும்போது அடுத்த ஜென்மத்தில் நீ எறும்பாகப் பிறப்பாய் ; அப் போது அது மனிதனாகப் பிறந்து உன்னை   நசுக்கும் என்பார்கள் . ஆக இளம் வயதிலேயே மறுபிறப்புக் கொள்கையையும் கர்ம வினைக் கொள்கையையும் கற்பிக்க உதவுவதும் எறும்புகளே!

கட்டெறும்புகளை இந்துக்கள் கொல்ல மாட்டார்கள்; தீங்கிழைக்காத – கடிக்காத– கருப்பு எறும்புகளை பிள்ளையார் எறும்பு என்பார்கள் .

தமிழில் உள்ளது போல எறும்பு விஷயங்கள் சம்ஸ்க்ருதத்தில் கூட இல்லை. நிறைய பழமொழிகள், வசனங்கள், கதைகள், தலங்கள் தமிழில்தான் உள்ளன.

xxxx

திரு வெறும்பூரும் தென்காசியும்

திருச்சிக்கு அருகிலுள்ள திரு எறும்பு ஊர் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு அரக்கன் பிரம்மாவை வரம் கேட்கவே அவர் திருவெறும்பூர் சிவனை வழிபடச் சொன்னார். அந்த அரக்கனை வீழ்த்த  தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.; சிவலிங்கத்தின் மீது ஏறிய எறும்புகள் வழுக்கி விழுவதைக் கண்ட சிவனே எறும்புப் புற்றை  உண்டாக்கி அவைகள் சறுக்காமல் ஏற உதவினார் என்பது தல புராணம் ஆகும்.

இதே போல தென்காசிக்கும் எறும்புக்கும் தொடர்பு உண்டு. அந்த வட்டார மன்னரும் ராணியும் காசிக்குச் சென்று வழிபட்டதிலிருந்து தென்காசியில் கோவில் கட்ட எண்ணினர். சிவனே அவர்கள் கனவில் தோன்றி அரண்மனையிலிருந்து வரிசையாகச் செல்லும் எறும்புகளைப்  பின்பற்றிச் சென்றால் அங்கு ஒரு சிலலிங்கத்ததைக் காணலாம் ; அங்கே கோவிலை எழுப்பு என்று கட்டளை பிறப்பித்தார். அதன்படி பெரிய கோவில் எழுந்தது .

பார்வதியும் பரமசிவனும் கதை

பெண்களுக்கு உயிரினங்கள் மீது தாய் போல அன்பு உண்டு.  பார்வதி தேவியும் எல்லையற்ற கருணை உடையவர். ஆனால் சிவனுக்கு இப்படிக் கருணை இல்லையோ என்று சந்தேகப்பட்டார். ஆயினும் சிவனை இது பற்றிக்கேட்ட பொழு து எல்லோருக்கும் உணவு வழங்குவது நான்தான் என்கிறார். இதை நம்பாத பார்வதி ஒரு  சிறிய பெட்டிக்குள் உயிருள்ள எறும்புகளை பிடித்துப் போட்டு மூடி வைத்தார். சிவபெருமான் காணாத இடத்தில் ஒளி த்தும் வைத்தார்.

மறுநாள் காலையில் “அன்பரே நீவீர் எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைத்தீரா?” என்று வினவ, சிவனும் “அன்பே! ஆருயிரே! இதில் என்ன ஐயப்பாடு? நா ன் உணவு படைத்து விட்டேனே” என்றார். சிவன் பொ ய் சொல்கிறார் என்று எண்ணிய பார்வதி,  தான் ஒளித்து வைத்திருந்த எறும்பு டப்பியைத் திறந்து காட்டி இவைகளுக்கு உணவு படைக்கவில்லையே என்று சொல்ல முனைந்தார்; ஆனால் வாயடைத்துப் போனார். ஏனெனில் அந்த டப்பாவுக்குள்ளும் சிவபெருமான் போட்ட உணவுப் பிட்சை இருந்தது. எறும்புகள் அதைச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக மிச்சம் மீதி வேறு வைத்திருந்தன.

பார்வதி யைப் பார்த்து சிவன் ஏதும் சொல்லாமல் புன்னகை பூத்தார்

எறும்பு முதல் யானை வரை உணவளிப்பவன் இறைவனே என உணர்ந்தார் . இது போல பல கதைகள் உண்டு.

xxxx

வேதத்தில் எறும்புகள் !

உலகிலேயே பழமையான புஸ்தகம் ரிக் வேதம் ; அதிலுள்ள மரணம் தொடர்பான துதிகளில் எறும்பு குறிப்பிடப்படுகிறது; இதே போல அதர்வண வேதத்திலும் விஷக்கடி பற்றிய துதிகளில் எறும்பு பற்றியும் வருகிறது . சம்ஸ்க்ருதத்தில் எறும்பினை பிபீலிகா என்பர். தமிழ் அகராதியிலும் இந்தச் சொல்லைக் காணலாம். ஏனெனில் பழந்தமிழருக்கு ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இரு கண்கள்; ஆகையால் தமிழ் அகராதி என்ற புஸ்தகம் அனைத்திலும் ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்!

வால் மீகி = எறும்புப் புற்று = பாம்புப் புற்று

வால்மீகி ராமாயணத்தை எழுதிய வேடர் பெயர் எறும்புப் புற்று; அவர் தவம் செய்தபோது அவரைச் சுற்றி புற்று உருவானதால் வேடன் என்ற பெயர் மறைந்து வால்மீகி என்ற பெயரே நிலைத்தது . இதன் பொருள் புற்று 

இதே பெயரில் புறநானூற்றிலும் ஒரு புலவர் இருக்கிறார் !! மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும்தான் சுவையான கதைகள் உள்ளன. பூமிக்கடியிலிருந்து தங்கத்தைக் கொண்டுவரும் எறும்புகள் பற்றி மஹாபாரதம் கூறுகிறது ; இதனால் தங்கத்தின் பெயரும் பிபீலிகம்; அதாவது எறும்புத் தங்கம் .

இதை வைத்து கிரேக்க இலக்கியத்தில் கதைகள் உண்டு; 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றை எழுதிய ஹெரோடோட்டஸ் என்பார் இந்தியாவில் நரிகள் போல பெரிய எறும்புகள் இருப்பதாகவும் அவைகள் பூமிக்கடியில் சென்று தங்கத்தைக் கொண்டுவந்து கொட்டுவதாகவும் எழுதிச் சென்றார் . பின்னர் வந்தவர்கள் இது எத்தியோப்பியாவில் நடப்பதாக எழுதிச் சென்றனர் .உண்மையில் எறும்பு போல ஊர்ந்து சென்று தங்கம் எடுத்த ஊழியர்களுக்கு எறும்பு மனிதர்கள் என்ற பெயர்  இருந்திருக்கும். மஹாபாரதம் முதலி ய கதைகள் கிரேக்க நாட்டுக்குப் பரவிய போது எறும்புகளே தங்கம் எடுத்து வருவதாக எழுதி விட்டனர் போலும்.

xxxx

Press News

எறும்புகள் கண்டுபிடித்த தங்க சுரங்கம்.. பீகாரில் ஒரு K G F!

கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த பழமையான தங்க வயல்களில் ஒன்றான கோலார் தங்க வயல் (K G F) கடந்த 2001ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட செலவு அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தங்க சுரங்கத்தை மையமாக வைத்துதான் கேஜிஎப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்றைப் பெற்றது.

கோலார் தங்க வயலை விட மிகப் பெரிய தங்க சுரங்கம் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது (June 2022) . அதைத் தொடர்ந்து இந்திய புவியியல் துறை நடத்திய ஆராய்ச்சியில் அங்கு 222 மில்லியன் டன் தங்கம் இருப்பதும் இது இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% என்பதும் தெரியவந்துள்ளது.

அங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஜமுயி பகுதியின் செம்மண் நிலத்தில் எறும்பு கூட்டங்கள் புற்று அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளது. அப்போது அதிலிருந்த மண் தங்கம் போன்று மின்னியுள்ளது.

இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரசு சார்பில் அந்த இடத்தில் ஆய்வு நடத்தியபோது அங்கு தங்கம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘Ants’ give whereabouts of 230 million tons gold mine in Jamui! Bihar Government on lookout

How was this gold found?

1. No one has ever realised that such a huge gold reserve is hidden under the red soil of the Maoist-dominated Jamui.

2. It has taken 40 years to find the gold reserves here. That’s also possible for ants. 

3. Legend has it that forty years ago, there was a huge banyan tree in the area. To escape the heat and heat of the sun, ants start building nests under the banyan tree. 

4. When the ants began to lift the soil from the bottom, the locals saw tiny particles of yellow shingles mixed in the soil. At that moment, the news spread among the people of the area. That’s the beginning of the search. 

The highest number of gold in India is found in the state of Karnataka. Kolar gold mine in this state is one of the oldest and major gold mines in India. In 2001, however, the gold mine was closed. (June 2022 Press Cutting)

To be continued…………

எறும்பு, பிபீலிகா , இந்து மதத்தில் , வேதத்தில், மஹாபாரதத்தில்,எறும்பு தோண்டும் , தங்கம் , ஹெரோடோட்டஸ், gold digging ants

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 26 (Post.13,19)

கோரைக்கிழங்கு,

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,179

Date uploaded in London – –   26 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 26

கோ

265.மேனியழகுண்டாக

கோங்கிலவன் பூவை பாலிலிட்டு க் காய்ச்சியுண்டு வந்தால் நரை திரை தீரும்.  கொடிய வியாதிகள் யாவும் தீரும். மேனி பொன் போலாகும் . நல்ல அழகு கொடுக்கும்.

XXXX

பவழ பற்பம்

கோங்கிலவன்  இலையை  அரைத்து அந்த முத்தைக்குள் , தக்கபடி சுத்தி செய்த பவழத்தை வைத்துப் புடமிட பற்பமாகும். ; க்ஷயம், இருமல் முதலிய வியாதிகளுக்கு கொடுக்கலாம் .

XXXX

வெள்ளை

கோங்கிலவன் கொழுந்தை  பாலில் அரைத்துக் கலக்கியுண்டு வந்தால் வெட்டை சூடு வெள்ளை விழுதல் நிவர்த்தியாகும் .

XXXX

பலத்திற்கும் பால் சுரக்கவும்

கோரோசனையை பாலில் கலக்கி காய்ச்சியுண்டு வந்தால்  முலைப்பால் சுரக்கும்; கண்நோய்  சுரம் இவை தீரும். மூலச்சூடு தணியும்; தொடர்ந்து உயோகித்து வந்தால் தேகத்தில் அழகும் பலமும் உண்டாகும் .

XXXX

நீர்த்தாரையில் சுருக்குச் சுருக்கென்று

குத்தி சுக்கிலம் விழுவதற்கு

கோரைக்கிழங்கு- விஷ்ணுக்கிரந்தி –மிளகு  வகைக்கு ஒன்றரைப்பலம் எடுத்து ஒன்றிரண்டாயிடித்து 4 படி தண்ணீர் வைத்து 1 படி கிஷாயமாகயிறக்கி  ஒருவேளைக்கு அரைக்கால் படி வீதம் ஆறு வேளை கொடுக்காத தீரும்; இச்சாபத்தியம் .

XXXX

விஷ சுரத்திற்கு

கோழியவரை வேர் –சித்திர மூலம் – வேப்பம் ஈர்க்கு சிறு புள்ளடி பற்பட  சுக்கு – செவியம்  வகைக்கு  பலம் (கால்) இரண்டு படி தண்ணீர் வைத்து  அரைப்படியாகக்காய்ச்சி இறக்கி வடிகட்டி  முரித்த தேன் முலைப்பால் கொஞ்சம் விட்டு  கொடுக்கவும். (அதாவது) வேளைக்கு  வீசம் படியாக ஒரு நாளைக்கு  3 வேளை கொடுக்கவும் தீரும். இத்துடன் இழைக்க வேண்டிய மாத்திரைகள் – பார்வ தி பரணீயத்தில் பார்த்து  க்கொள்ளவும்

xxxx

அதிசாரக் கழிச்சலுக்கு

கோறைக்கிழங்கு வில்வ வேர்  கொ த்த மல்லி சிறுநாகப் பூ  இவை சமன் கொண்டு நறுக்கி கஷாயம் வைத்து கொஞ்சம் தேன் வீட்டுக் கொடுக்கவும்.

xxxx

கழிச்சலுக்கு

கோரோஜனை — களிப்பாக்கு – சீரகம் — காசுக்கட்டி — இவைகள் சமன் கொண்டு எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்து – பாக்குப் பிரமாணம்  எடுத்து முளைப்பாலில் கலக்கிக் கொடுத்தாள்  கழிச்சல் உடனே நிவர்த்தியாகும்

xxxx

காலெரிவு காந்தல்  கற்றாழை நாற்றத்திற்கு

கோஷ்டத்தைப் பசும்பால் விட்டரைத்து பாலில் கலக்கியுட்கொண்டு வந்தால் கை காலெரிவு  மூட்டுகளில் கீலுகளி ல்  வலி  கற்றாழை நாற்றம் தீரும்.

xxxx

காமாலை சோகை பாண்டுக்கு

கோசலமென்னும் – சிறுவர் (சிறுநீரும்) வெள்ளாட்டுப் பாலும் சரியாய்க் கலந்து உட்கொண்டுவந்தால் காமாலை சோகை பாண்டு பித்தம்  இவை தீரும் .

xxxx

பாண்டு சோகைக்கு

கோசலமும் வில்வஇலையும் இடித்து சாறு பிழிந்து மூன்று தரம் வடிகட்டி அரைக்கால் பட்டிவீதம் ஆறு நாள் கொடுக்க மேற்படி வியாதிகள் நிவர்த்தியாகும். புளி தள்ள வேண் டியது .

xxxx

பித்த வாய்வு மது மேகம்

கோடக சாலை  என்னும் மூலிகையை பாலில் அரைத்து பாலில் கலக்கியுட்கொண்டு வந்தால்  கிரந்தி- கொப்புளம் – கு ட்டம் – புண் — பித்த வாய்வு- மது மேகம் – வயிற்றுப புழு , வாய்வி ரணம் — இவை தீரும்

xxxx

277. கல்நார் பஸ்மம்

கோழி யவரை  இலையை அரைத்து  அதனுள் கல்நாரை வைத்து கவசம் செய்து தகுந்த புடமிட பஸ்மாமாகும் . இ ந்த இலையை கிரமப்படி உட்கொண்டால்  குடல் வாதம் – கு ட்டம் – ஆமைக்கட்டி இவைகள் தீரும் .

–subham—

Tags- முனிசாமி முதலியார்,   மூலிகை அதிசயங்கள் 26, கோரைக்கிழங்கு, கோழி அவரை, கோங்கிலவன்

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 1 (Post13,178)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.178

Date uploaded in London – — 26 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 17-4-2024 இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 1 

ச.நாகராஜன் 

நோபல் பரிசை வென்ற முதல் வெள்ளையர் அல்லாத இந்திய விஞ்ஞானி

தமிழ்நாட்டில் திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள திருவானைக்காவலில் ஒரு எளிய பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசைப் பெற்ற பெரும் விஞ்ஞானி யார்?,  பாரத் ரத்னா பட்டதைப் பெற்றவர் யார் என்று கேட்டால் அனைவரும் மன மகிழ்ச்சியோடுக் கூறும் பெயர் சர் சி. வி.ராமன். அனைத்து இளைஞர்களையும் அறிவியலில் ஈடுபடுத்தப் பாடுபட்டு அவர்களுக்கென இடைவிடாது உழைத்த விஞ்ஞானி இவர்.

பிறப்பும் இளமையும்

சந்திரசேகர் ராமநாதன் ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் பிறந்த எட்டு பேரில் இரண்டாவது மகனாக 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி  அந்தணர் குலத்தில் தோன்றியவர் சி.வி,ராமன்.

தந்தையார் உள்ளூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்.  சுமாரான வருமானம். பின்னால் சி. வி. ராமன் தனது தந்தையாரின் வருமானம் மாதம் பத்து ரூபாய் தான் என்று குறிப்பிட்டார்.

தந்தையாருக்கு ஆந்திர பிரதேசத்தில் நரசிம்மராவ் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் வேலை பார்க்க அழைப்பு வந்தது.  அவருடன் சென்ற ராமன் விசாகப்பட்டினத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார். 13 வயதில் இண்டர்மீடியட்டில் தேறினார். பின்னர் பட்டம் பெற்றதும் அரசுப் பணியில் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.

அப்போதே அறிவியலில் மிக்க ஆர்வம் கொண்டு தனிப்பட்ட முறையில் பல சோதனைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

கல்காத்தாவில் 1917-ல்,; புதிதாக  ஏற்படுத்தப்பட்ட பாலித் பீட இயற்பியல் பிரிவில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

1926-ல் இயற்பியல் ஆய்விதழ் ஒன்றை நிறுவி அதன் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

கண்டுபிடிப்புகள்

இங்கிலாந்திற்கு முதல் தடவையாக  மத்தியதரைக் கடலில் கப்பலில் அவர் சென்ற போது கடல் நீர் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியதுசிதறிய ஒளியாலேயே நீல நிறமாக அது தோன்றுகிறது என்று அப்போது கூறப்பட்ட காரணம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை ஒள ஊருவிச் செல்லும் ஊடகம் திடப்பொருளாகவோ திரவப் பொருளாகவோ அல்லது வாயுப் பொருளாகவோ எதாக இருந்தாலும் சரி, அதில் ஒளி செல்லும் போது ஒளியின் மூலக்கூறு சிதறல் ஏற்படுகிறது என்பதைத் தன் ஆய்வுகளின் மூலமாக அவர் கண்டறிந்தார். இதை ஸ்பெக்டோகிராப் என்ற கருவியைப் பயன்படுத்தி அவர் கண்டார்.

இந்த ஸ்பெக்டோகிராப் வாழ்நாள் முழுவதும் தேவையான போதெல்லாம் அவர் கையில் வைத்துக் கொள்வது அவரது பழக்கமானது.

அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு ராமன் எஃபெக்ட் – ராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது.

1928-ம் ஆண்டு புதிய கதிர்வீச்சு என்னும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டார். இது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

1930-ம் ஆண்டு உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசு வெள்ளையரல்லாத ஒரு இந்தியரான இவருக்கு அளிக்கப்பட்டது. இதை அறிவியலில் பெற்ற முதல் இந்தியர் இவரே. (ரவீந்திரநாத் தாகூர்1913-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார்.)

இசைக் கருவிகள் மீது தீரா ஆர்வம் கொண்ட ராமன், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசைக் கருவிகள் பற்றியும் அதில் எழுப்பும் அதிர்வலைகள் ஏற்படுத்தும் ஒலியின் நுட்பத்தையும் நுண்மையாக ஆராயலானார்.

இந்தக் கண்டுபிடிப்புகளும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

பார்க்கின்ற எதையும் அறிவியல் கண் கொண்டு பார்ப்பதே அவரது பழக்கமாக ஆனது.

அறிவியலில் அனைவரும் ஈடுபட வேண்டும், இந்தியா அறிவியல் நாடாகத் திகழ வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

முதன்முதலில் இந்தியன் ஸயின்ஸ் அகாடமியை ஆரம்பித்து  அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சையில் அவர் இறங்கவில்லை. காணாததை நம்ப முடியாத அக்னாஸ்டிக்காக – உலோகயதாவாதியாக அவர் கடைசிவரை திகழ்ந்தார். ஆனால் மற்றவர்கள் சடங்குகளில் ஈடுபடும்போது அதை அவர் தடுக்கவில்லை.

இவரது வாழ்க்கையில் நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஒவ்வொரு சம்பவமும் இவரது அரிய குணநலன்களை வெளிப்படுத்துபவையாக அமைந்தவையாகும்.

எடுத்துக்காட்டிற்குச் சில சம்பவங்கள் இதோ:

பத்து கிலோவாட் மூளை!

ஒரு முறை அவரது இந்தியன் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் வேலை பார்த்து வந்த விஞ்ஞானியான பிஷரொடி என்பவர் மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்தார்.  அவர் சோர்ந்திருப்பதைப் பார்த்த ராமன் காரணம் என்ன என்று கேட்டார்.

“இதே போன்று சோதனையை பிரிட்டனில் செய்து வரும் விஞ்ஞானி ஐந்து கிலோவாட்  எக்ஸ்-ரே டியூபை வைத்திருக்கிறார். நானோ ஒரு கிலோவாட் எக்ஸ்-ரே டியூபை வைத்திருக்கிறேன்” என்று அவர் தனது சோர்விற்கான காரணத்தைக் கூறினார்.

“ஓ! இந்தப் பிரச்சினையை சுலபமாகச் சமாளித்து விடலாமே! இந்த சோதனைக்கு புத்து கிலோவாட் மூளையைப் பயன்படுத்து!” என்று சிரித்தவாறே பதில் கூறினார் ராமன்.

இப்படி பத்து கிலோவாட் மூளை உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.

ஹோமி ஜே.பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோரின் திறனைக் கண்டு அவர்களைப் பாராட்டினார் ராமன். இந்த இருவருமே பின்னால் இந்திய விண்வெளி விஞ்ஞானத்தில் பெரும் சாதனையைத் திகழக் காரணமாக அமைந்தனர்.

திறனுடைய இளம் விஞ்ஞானிகளை, ஆணானாலும் பெண்ணானாலும் இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தவர் அவர்.

வைரம் செய்வது எப்படி?

1967-ம் ஆண்டு உஸ்மேனியா பல்கலைக்கழக கோல்டன் ஜூபிளி கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக ராமன் அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

அந்தச் சமயம் அவர் அதனது லாபரட்டரியில் வைரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

வைரங்களைப் பற்றித் தனது சிறப்புரையில் அனைத்து விவரங்களையும் தந்து அனைவரையும் அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

உரை முடிந்த பின்னர் ஒரு மாணவர் எழுந்திருந்து, “ சார்! நீங்கள் வைரங்களைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் விளக்கி விட்டீர்கள். ஆனால் வைரங்களை எப்படிச் செய்வது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லையே” என்று கேட்டார்.

இடக்கான இந்தக் கேள்வி அங்கிருந்தோரை துணுக்குற வைத்தது.

ஆனால் விஞ்ஞானி ராமனோ ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை.

“அது ரொம்ப சுலபம். நீங்கள் ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். பூமிக்கடியில் ஆயிரம் அடி தோண்டி அதைப் புதைத்து விடுங்கள்.  ஆயிரம் ஆண்டு காத்திருங்கள். மீண்டும் தோண்டுங்கள். உங்களுக்கு வைரம் கிடைத்து விடும்” என்றார்/

அரங்கம் அனைவரின் கரவொலியால் அதிர்ந்து போனது! அவரது பதிலை அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர் – கேள்வி கேட்டவர் உடபட!

உடனடியாக பதில் கூறுவதில் வல்லவர் அவர்.

***

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள் – Part 4 (Post.13,177)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,177

Date uploaded in London – –   25 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

MUSTARD- KADUGU in Tamil

. F12. Family: Asteraceae 

51. Ageratum conyzoides L.

குடும்பம் ஆஸ்டரேசி

51.ஆஜராட்டம் கோணி ஸைடிஸ்

இந்து மஹா சமுத்திர தீவு நாடுகளும், இந்தியாவில் மேகாலயாவில் உள்ள புனித வனங்களும் இந்த தாவரத்தை சிகிச்சையாக அளிக்கின்றன 

XXXX

52. Bidens biternata (Lour.) Merr. & Sherff

52.பிடென்ஸ் பைட்டர்னடா

மத்திய இந்தியாவில் கோர்க்கு இன மக்களும்,  கோ ண்ட்  இன மக்களும் இந்தக் கொண்டு சிகிச்சை தருகின்றனர்.

xxxx

53. Blepharispermum petiolare DC.

Vernacular name: Kaattu puthur (Tirunelveli hills, Tamil Nadu, India)

ப்ளீபரிஸ்பெர்மம் பெடியலரே

காட்டுப்புத்தூர் என்ற பெயரில் வேறு பல மூலிகைகளையும் சேர்த்து இதன் பட்டை இலைகளை பொடி செய்து திருநெல்வேலி பழங்குடி மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.

xxxx

54. Blumea lanceolaria (Roxb.) Druce

ப்ளூமியா லான்சியோலரியா

மிஜோரம் மக்கள் இதநைப் பசையாக்கி சிகிச்சை தருகிறார்கள்.

xxxx

55. Chrysanthemum cinerariifolium (Trevir.) Vis.

கிரிசாந்திமம் சினிராரி போலியம்

சந்த்ரோ மல்லிகா என்ற பெயரில் பீஹார், மற்றும் வாங்க தேச மக்கள் முழுத்தாவரத்தையும் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் .

xxxx

56. Eclipta alba (L.) Hassk. எக்லிப்டா ஆல்பா

Bhringraj is called Karisilankanni (கரிசிலாங்கண்ணி)

இதைக்கொண்டு கன்யாகுமரி கிராம மக்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.

xxxx

57. Eclipta prostrata (L.) L.  எக்லிப்டா ப்ராஸ்ட்ரேட்டா

கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) என்பதும் பாம்புக்கடி சிகிச்சையில் பயன்படுகிறது.

xxxx

58. Enhydra fluctuans Lour.

58.என்ஹய்ட்றா ப்ளக்சுவன்ஸ்

ஹர்குச் , ஹெலோஞ்சி, ஹெல்சி என்று இந்தி, வங்கமொழிகளில் அழைக்கப்படும் இதை எருமைக் கீரை என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள் .xxxx

59. Mikania micrantha Kunth

மிகாணியா மைக்ராந்தா

அருணாசல பிரதேச நையிஷி இன மக்கள் இதைக்கொண்டு பாம்புக்கடிக்கு சிகிச்சை  வழங்குவர்.

xxxx

60. Taraxacum officinale F.H. Wigg.

டாராக்ஷகம் ஆபிஸியனாலி

ஆசாக், கர்ண பூல் என்ற பெயரில் ஹிமாச்சல பிரதேச மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

xxxx

61. Vernonia anthelmintica (L.) Willd.

Vernacular name: Kynbat-jiraiong (Khasi and Jaintia community of Meghalaya, வெர் னோனியா அந்தல்மீன்டிகா 

மேகாலயா , காசி-ஜெயந்தியா பழங்குடி மக்கள் தாவரத்தின் விதையைப் போட்டி செய்து பாம்பு கடித்த இடத்தில் அப்புகிறார்கள்

xxxx

குடும்பம்- பிக்னோனியேசி

62. ஓரொக்சைலம் இன்டிகம்: சொரிகொன்றை Chori-Konnai, பாலையுடைச்சி Palai-y-Utaicci, பூதபுஷ்பம்

ஒரிஸ்ஸா பழங்குடி மக்கள் பயன்படுத்தும் பாம்புக்கு கட்டி மூலிகை.

Common name: Broken Bones Tree, Indian Trumpet Flower, Tree of Damocles • Hindi: भूत वृक्ष Bhut-vriksha, दीर्घवृन्त Dirghavrinta, कुटन्नट Kutannat, मण्डूक Manduk, पत्रोर्ण Patrorna, पूतिवृक्ष Putivriksha, शल्लक Shallaka, शूरण Shuran, सोन or शोण Son, वटुक Vatuk • Manipuri: ꯁꯝꯕꯥ Shamba • Marathi: टायिटू Tayitu, टेटु Tetu • Nepali: टटेलो Tatelo • Tamil: சொரிகொன்றை Chori-Konnai, பாலையுடைச்சி Palai-y-Utaicci, பூதபுஷ்பம் Puta-Puspam • Malayalam: പലകപയ്യാനി Palaqapayyani, വാശ്പ്പാതിരി Vashrppathiri, വെള്ളപ്പാതിരി Vellappathiri • Telugu: మండూకపర్ణము Manduka-Parnamu, పంపెన Pampena, శూకనాసము Suka-Nasamu, తుందిలము Tundilamu • Kannada: ತಿಗಡೆ Tigade, ತಟ್ಟುನ Tattuna, ಆನಂಗಿ Anangi, ಅಲಂಗಿ Alangi, ಸೊನೆಪಟ್ಟ Sonepatta, ಪಟಗಣಿ Patagani, ಸಳಾ Salaa • Konkani: Davamadak • Bengali: সোনা Sona • Oriya: टटेलों Tatelo • Assamese: তোগুনা Toguna • Sanskrit: अरलु Aralu, श्योनक Shyonaka • Mizo: Archangkawm • Tangkhul: Phong

xxxx

குடும்பம் – போரோஜீனேசி

63. ஹீலியோட்ரோபியம் மேரிபோலியம்

தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் இந்த தாவரம் காணக்கிடக்கிறது ; ஆயினும் ராஜஸ்தான் மணிலா ஆள் வார் ஜில்லா மக்கள் மட்டுமே பாம்புக்கடிக்குப் பயன்படுத்துகின்றனர்.

xxxx

64. Trichodesma indicum (L.) R. Br.

ட்ரைக்கோடெஸ்மா இன்டிகம்

தாவரத்தின் இலையும் வேரையும் பாகிஸ்தான் மக்கள் பாம்புக் கடி சிகிச்சையில் உபயோகிக்கின்றனர்.

xxxxx

F15. Family: Brassicaceae 

65. Brassica campestris L. பிராஸிக்கா கம்பஸ்ட்ரிஸ்

குடும்பம் – பிராஸிகேசி (கடுகுக் குடும்பம்)

கடுகு குடும்பத்தில் நிறைய தாவரங்களை நாம் பயன்படுத்துகிறோம்.

பிராஸிக்கா கம்பஸ்ட்ரிஸ் என்பது ஒரு வகைக்  கடுகு. மத்திய இந்தியாவின் பில் இனப் பழங்குடி மக்கள் கடுகு தாவரம், கடுகு எண்ணெய், நசுக்கிய வெங்காயம் ஆகியவற்றுடன் பாம்புக் கடிக்குப் பயன்படுத்துகிறார்கள்

—சுபம்—

Tags– பாம்புக்கடி , மூலிகைகள், கரிசலாங்கண்ணி, கடுகு எண்ணெய், Herbs, Snake bite, Part 4

Ants in Hinduism – Part Two (Post No.13,176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,176

Date uploaded in London – –   25 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Ants are referred to even in the Rig Veda, oldest book in the world. Atharvana Veda also mentioned them. Later we see them in the epics.

Funeral Hymn of Rig Veda says,

5. Again, O Agni, to the Fathers send him who, offered in thee, goes with our oblations.

     Wearing new life let him increase his offspring: let him rejoin a body, Jatavedas.

6. What wound soe’er the dark bird hath inflicted, the emmet, or the serpent, or the jackal,

     May Agni who devoureth all things heal it and Soma who hath passed into the Brahmans. Rig Veda 10-16

Emmet means ANTS in English; an archaic word.

यत्ते॑ कृ॒ष्णः श॑कु॒न आ॑तु॒तोद॑ पिपी॒लः स॒र्प उ॒त वा॒ श्वाप॑दः । अ॒ग्निष्टद्वि॒श्वाद॑ग॒दं कृ॑णोतु॒ सोम॑श्च॒ यो ब्रा॑ह्म॒णाँ आ॑वि॒वेश॑ ॥
यत्ते कृष्णः शकुन आतुतोद पिपीलः सर्प उत वा श्वापदः । अग्निष्टद्विश्वादगदं कृणोतु सोमश्च यो ब्राह्मणाँ आविवेश ॥
yat te kṛṣṇaḥ śakuna ātutoda pipīlaḥ sarpa uta vā śvāpadaḥ | agniṣ ṭad viśvād agadaṃ kṛṇotu somaś ca yo brāhmaṇām̐ āviveśa ||

English translation:

“Should the black crow, the ant, the snake, the wild beast, harm (a limb) of you, may Agni theall-devourer, and the Soma that has pervaded the brāhmaṇas, make it whole.”

xxxxx

Ants in Atharvana Veda

Pipiilikaa

7-56-7; 20-134-6

The emmets (ANTS) make a meal of thee and peahens tear and mangle
   thee:
  All ye are crying out, In sooth the scorpion’s poison hath no
   strength.
8Thou creature who inflictest wounds both with thy mouth and
   with thy tail,
  No poison in thy mouth hast thou: what at thy tail’s root will
   there be?- A V 7-56-7

xxxxx

Here are we sitting east and west and north and south, with
   waters. Bottle-gourd vessels.
2Here east and west and north and south sit the calves sprinkling
  Curds and oil. p. 371
3Here east and west and north and south the offering of rice
   clings on. The leaf of the Asvattha tree.
4Here east and west and north and south adheres when touched.
  That water-drop.
5Here east and west and north and south in iron mayst thou not
   be caught. The cup.
6Here east and west and north and south fain would it clasp what
   would not clasp. Emmet (ANTS) hole. A V 20-134-6

Later we find it in many Brahmanas, Aranyakas and Upanishads.

xxxx

Varahamihira in Brhat samhita

Varahamihira gives lot of tips to find underground water through Ant hills. Many slokas in the chapter of Water Divination locate the water sources near ant hills. He also gives the names of trees which indicate underground water. Hindu have studied the subject very  well.

xxxx

Following is my old article on Ants in Ramayana

Story of Two Ants in Ramayana (Post No.9739)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9739

Date uploaded in London – –15 JUNE   2021           

There is an interesting story in Ramayana about two ants. Kamban, the great author , who rendered Valmiki Ramayana in Tamil, hints at it in the Ayodhya Kanda/ canto. Kamban puts the words Erumbin Kathaiyal / ‘the lady of two ants story’ in the mouth of lamenting King Dasaratha. He was the one who gave two boons to Kaikeyi, one of his three queens. Kaikeyi, using the boons sent Rama to forest and got the kingship for her own son Bharat.

In this context Dasaratha was complaining about Kaikeyi to his chief queen Kausalya. The words Erumbin Kathaiyal/ ‘Lady of Ants’ brings out the background of Kaikeyi. Strangely Hindu epics dont give the birth names of Queens. They are always named after their countries or cities,

Gandhari from Kandahar/ Gandhara of Afghanistan

Kunti from the kingdom of Kunti

Kaikeyi from Kekaya kingdom in Afghanistan /Iran border

Kausalya is from Koshala

Mythili  is from the city of Mithila and so on.

Kaikeyi is from the country of Kekaya, where her father Asvapati was ruling. It happened in the life of Asvapati . One day while he was in bed with his beloved queen, he laughed wildly. The queen got annoyed and became suspicious. She asked her husband Asvapati what made him to laugh at the dead of night in the bed. She added further that he was mocking at her. Asvapati pacified her and told that he listened to the talk of two ants  under his bed and burst into laughter about their conversation.

One in a billion gets the power of knowing the language of animals, Hindus believe. In Tamil Periya Purana, we know that Kazatrarivar and Aanayanar knew the language of the animals. So do the great Hindu emperor Vikramaditya.

When Asvapati explained it to his wife, the queen, she was not ready to believe him and so she insisted that he must disclose the joke that the ants exchanged. Asvapati told her that the seer who taught him the language told him that he should never disclose it to anyone. Violating the code would result in his death. Even after this, she insisted that he gives the secret conversation of two ants under the bed. He asked her for time so that he could consult the saint who gave him the power.

When he consulted him, he told Asvapati to banish the queen and that was what Asvapati did.

On the background of this old anecdote, Dasaratha condemned Kaikeyi with the words Ant Story Lady. What he meant was hereditary was more powerful than environment. Her genetics worked more than the acceptable law. According to law, the eldest , in this case Rama, should become king. Moreover she knew that Rama’s exile will shorten the life of Dasaratha , but she didn’t care like Asvapati’s wife, who was the mother of Kaikeyi.

Here we come across a scientific fact in genetics which is known to our forefathers. Another fact that animal languages are understood by humans. In fact Dirgatamas, the blind poet of the oldest book in the world the Rigveda, reveals that there are four levels of sound and humans understand only the fourth level. It is in R V 1-164.

So, scientists in future may find one day what Hindus knew thousands of years before our time.

xxxx

In Tamil Sangam Literature- சங்க இலக்கியத்தில் எறும்புகள்

Valmiki , the great author of Ramayana in Sanskrit , meant Ant Hill. When the hunter turned saint did penance, Ant Hill grew around him and hence the name Mr Ant Hill (Vaalmiikii). Sangam Books also has a poet with the same name.

Akam 377-3; (339); Kuru -12-1; Puram – 173-7; Pathitru – 30-38

xxxx

கோடை நீடலின், வாடு புலத்து உக்க

சிறு புல் உணவு, நெறி பட மறுகி,

நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த

வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்

பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,–அகநானூறு 377

The man who is going to distant places calls his mind.

Ants moving in row gather grains fallen from the grasses due to hot sun in summer. 

The robbing people in arid track make use of the grain for their food. 

The rich peoples of the village migrated to some other places having affected by the robbery of grass-grain eating poor peoples. 

xxxx

இருதலைக்  கொள்ளி இதை நின்று வருந்தி,–அகநானூறு 369

In the state of an ant at the centre of a fire brand burning on both sides

xxxxx

எறும்பி அளையின் குறும் பல் சுனைய

உலைக்கல் அன்ன பாறை ஏறி,

கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்–குறுந்தொகை 12

Just some description of Nature; The rocks look like ant hills; and the holes on it look like small ponds.

xxxx

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!

……….

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,                   5

முட்டை கொண்டு வன் புலம் சேரும்

சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,

சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்– புறநானூறு 173

There lives a doctor who gives medicine to the disease called Hunger. Children are carrying food like the ants carrying eggs towards high places indicating rain will come soon.

In Pthitruppaththu 30-38 we read, “the food thrown to fierce goddess is scattered on ground in blood red colour. Not even the ants and ghosts dare to touch them”.

xxx

Neethi neri venbaa

It is a book with didactic verses from the modern period . Here the poet describes the wealth of the rich is useful to the poor as well like the food morsels given to elephant scatter and helped the ants to eat them.

xxxx

Tamils have beautiful proverbs on Ants:

எறும்பு ஊர கல்லுந் தேயும்.

erumbu uura kallunth theyum (pronunciation)

“Even ants can wear out rocks.” (Hard work can accomplish any task)

xxxx

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை வரும் ‘

If ants carry eggs and climb to higher places, rain will pour down

xxxx

எறும்பு முதல்  யானை வரை

From ant to elephant (all living beings)

யானை முதலா எறும்பீறாய- திருவாசகம் 4-11

xxxx

ஈ எறும்பு கூட நுழைய முடியாது

Not a fly or ant can enter (Very Tight Security)

xxxx

இருதலைக்  கொள்ளி எறும்பு போல

In the state of an ant at the centre of a fire brand burning on both sides

இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்து  — திருவாசகம் 6-33

xxxx

நெய்க்குடந்தன்னை எறும்பெனவே -திருவாசகம் 6-96

Seeking gain not, like ants  that noiseless round the oil jar warm

xxxx

எறும்பிடை நாங்க்கூழ் எனப் புலனால் திருவாசகம் 6-97

Like worm in the midst of ants, by senses gnawed and troubled sore

Throughout devotional literature wee see such age old proverbs .

—subham–

Tags- Kaikeyi Story, Ants, Vedas, Sangam Literature, Tamil Proverbs, Ants in Hinduism – Part Two