On the auspicious day of 6 July 2023, between 11 am and 12 noon, it has been decided by the elders of Vivekanandan and Ramaswami families that the wedding between
Chiranjeevi Viswanathan
(the Dauhitran of Shrimathi Mathangi, grandson of Ramachandran and son of Vivekanandan)
( Note dauhitra—grandson (daughter’s son))
and
Sowbhagyavathi Visalakshi
(Dauhitri of Shrimathi Shyamala, granddaughter of Ramanathan and daughter of Ramaswami)
In Part 9 , we learnt about Purushasukta Homam, Sri Sukta Homam and Gayatri Homam.
In Part 10 , we learnt about Bhagavad Gita homa, Pratyangara Sarabha Sulini Homa and Chandi Homa
xxxx
Now Part 11
Sudarsana Homam is one of the powerful Homas to control enemies and eliminate evil forces. It is done as a ghost busting homa as well. If one is worried about some inimical activities of enemies Sudrsana Homam is the best solution to nullify the evil effects. Vaishnavites don’t do Saivite Homas and so they do Sudarsana Homa.
Sudarsana is the wheel in the right hand of Vishnu. It has eliminated many of his and Krishna’ enemies. Hindus, and not Australian aborigines, invented boomerang. If Sudarsana wheel is thrown in a particular angle it will finish the intended action and comes back to the thrower. Mythology lists a long list of victories that obtained through Sudarsana wheel. In all the Tamil Vaishnavite tempes there is a shrine for Sudarsana Chakra/wheel. In Tamil it appears as a man amidst wheel and it is called Chakra (th) Alvar.
Xxx
How to do it ?
We need priests who know the Vedic rituals to do it. It contains all the preliminaries of erecting a fire pit and Sankalpa (purpose).
There are special Sudarsana mantras to be used in the homa. Varuna is invoked in the water filled metal pots.
Then Sudarsana is worshipped with the Dhyaana Mantra. Pancha Puja (Chandan, Pushpa/flowers, Doopa, Deepa, Naivedyam) offering is done.
Main Homa
With rice and ghee, with Sweet Pongal, with Naayuruvi Samiththu (Plant Achyranthes aspera)336 times or 1008 times offerings are placed in the fire. During this Sudarsana mantras are used.
Priests recite Purusha suktam, Vishnu Suktam and Narayanasuktam from the Vedas.
Final offering (Purnaahuti) is done with the relevant mantras.
This Homa is done in the houses as well as in the temples.
Vaishnavite priests are very familiar with the rituals.
–subham–
Tag- Sudarsana Homa, Chakraththalvar, Wheel, Hindu Boomerang
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. என்று துவங்கும் பதிகம்.
XXXXX
4.பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (600 CE )
XXXXX
5.தந்தை பெயர்- புகழனார்; தாயார் பெயர்- மாதினியார்; தமக்கை பெயர்- திலகவதியார். பிறந்த ஊர்- திருவாமூர்
XXXX
6.சீர்காழிக்கு வந்து ஞான சம்பந்தரைக் கண்டு வணங்கியபோது , அவர் திருநாவுக்கரசரின் கைகளைப் பிடித்துக்கொண்டு அப்பரே என்று அழைத்து வணங்கினார்.
XXXXX
7.பெண்ணாடகத்துக்கு வந்து சிவனை வணங்கிய போது ஒரு சிவ பூதம் தோன்றி, அவருடைய தோள்களில் சூல , இடப இலச்சினைகளைப் பொறித்தது.
XXXX
8.திருவீழி மிழலையில் மக்களின் பசி, பட்டினி தீர பதிகம் பாடியபோது அவருக்கு படிக்காசுகள் (தங்கக் காசுகள்) கிடைத்தன .
திருமறைக் காட்டு உறை சிவபெருமானைப் பாடியபோது வேதங்கள் அடைத்திருந்த கதவை பாடல்கள் பாடி திறக்கச் செய்தார் .
கயிலை செல்ல முயன்றபோது உடல் வருத்தவே, சிவபெருமான் ஒரு முனிவர் வடிவத்தில் வந்து, தோன்றி இக்குளத்தில் மூழ்கி திருவையாற்றில் கைலைக் காட்சியைக் காண்க என்றார் . அவர் அவ்வாறு செய்ய டெலி ட்ரான்ஸ்போர்டேஷன் TELE TRANSPORTATION மூலம் அவர் திருவையாற்றில் நின்றார். மாதர் பிறைக்கண்ணியானை என்ற பாடல் பாடி கயிலை தரிசனம் பெற்றார் .
xxxxx
9.சமணர்களின் துர் போதனையால் அப்பரை சுண்ணாம்புக் காளவாயில் போட, அவர் மாசில் வீணையும் பாடியவு டன் , அது இனிமையான சோலை போல குளிர்ந்தது.
அவரைக் கற்களைக் கட்டி கடலில் வீசியபோது ,கற்றூணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயமே என்று பாட, கல் தூண்களும் மிதந்தன . மகேந்திர பல்லவன் அவரை அழைத்துவர காவலர்களை ஏவிய போது அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று வீர முழக்கம் செய்தார்
xxxxx
10.அவர் கையில் உழவாரப்படை இருக்கும்.. அதைக் கொண்டு கோவில்களில் முளைக்கும் செடிகொடிகளை அகற்றி அவர் திருப்பணி செய்தார். இறுதியில் எண்பதாவது வயதில் சித்திரை மாத சதய நன்னாளில் சிவனடி சேர்ந்தார் .
பன்னர்கட்டா சாலை ஹுலிமாவில் இந்தக் குகைக் கோவில் இருக்கிறது. இது ஒரு சிவன் கோவில். அங்கே சிவன், கணபதி, தேவி ஆகியோரைத் தரிசிக்கலாம். 500 ஆண்டுகளு க்கும் மேலாக பழமையுடைய கோவில் . ஸ்ரீ பால கங்காதர சுவாமியினால் நிறுவப்பட்டது. அவரது சமாதியும் அங்கே உளது.XXXX
10. Kote Venkataramana Temple
கோடி வெங்கடரமண கோவில்
300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் வேங்கட ரமணனைத் தரிசிக்கலாம் . பசவனக்குடியில் கிருஷ்ண ராஜேந்திர ரோடில் அமைந்த இந்தப் பழைய கோவிலில் சுவற்றில் பிரம்மா, விஷ்ணு சிவன் உருவங்களும் இருக்கின்றன
திப்புசுல்தானின் கோடைகால அரண்மனைக்கு அருகில் உள்ளது 1790-92-ல் மூன்றாம் மைசூர் யுத்தம் நடந்தது. அப்போது பீரங்கிக் குண்டுகள் விழுந்த தடயங்களை இன்றும் தூண்களில் காணலாம். 300 ஆண்டுகளுக்கு முன்னர் சிக்க தேவராய உடையார் இந்தக் கோவிலைக் கட்டினார்..
XXX
11. Jagannath Temple
ஜகந்நாத் கோவில்
ஒரிஸ்ஸாவில் பூரி ஜகன்னாத் கோவில் பாணியில் கட்டப்பட்ட கோவிலில் ஜகந்நாதர், அவர் சகோதரர் பலபத்ரா , சகோதரி சுபத்திரா ஆகியோரை தரிசிக்கலாம். அகரத்தில் சர்ஜாபூர் சாலையில் கோவில் இருக்கிறது.
XXXXXX
12. Gavi Gangadhareshwara Temple
கவி கங்காதரேஸ்வர கோவில்
கெம்ப கவுடா கவி புரத்தில் இடம்பெறும் இக்கோவிலில் சிவ பெருமானைத் தரிசிக்கலாம். இது ஒரு குடைவரைக் கோவில். கவி என்றால் குகை.
ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று சூரியனுடைய கிரணங்கள் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் விழுந்து குகையினுள் உள்ள சிவலிங்கத்தின் மேல் படும். இந்துக்களின் வியத்தகு வான சாத்திர அறிவுக்கு இதுவும் ஒரு சான்று.
XXXXX
13. Halasuru Someshwara Temple
ஹலசுரு சோமேஸ்வர கோவில்
பெங்களுர் கண்டோன்மெண்ட் பகுதி சோமேஸ்வரபுரத்தில் எழுப்பப்பட்டுள்ள ஹலசூரு சோமேஸ்வர் கோவில் ஒரு சிவன் கோவில்.12 ரிஷிகள் உள்ள நவக்ரஹ சந்நிதியும் உள்ளே இடம்பெற்றுள்ளது நுழைவாயிலின் அருகே பெரிய ஸ்தம்பம் இருக்கிறது . 48 தூண்கள் உள்ள மண்டபத்தின் தூண்களிலும் நல்ல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.. முன்னர் இங்கு பெரிய குளமும் இருந்ததாம்.
சிவ – பார்வதி கல்யாணமும் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. சோழர் கால கோவிலை 16ஆம் நூற்றாண்டில் கெம்ப கவுடா புதுப்பித்தார் .
XXXXX
14. Kadu Malleshwara Temple
கடு மல்லேஸ்வர கோவில்
Kadu Malleshwara Temple Picture
சத்ரபதி சிவாஜியின் சகோதரர், தஞ்சாவூரிலிருந்து ஆட்சி செய்த காலத்தில் எழுப்பப்பட்ட கோவில் இது . இதன் அருகிலுள்ள மல்லேஸ்வரம் முதலிய இடங்கள் அந்தக் காலத்தில் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்தது . சிவராத்திரி காலத்தில் ஒரு வாரத்துக்கு பெரிய திருவிழா நடைபெறும். ஒரு நீர்வீழ்ச்சி இங்கு இயற்கையாக அமைந்தது குறிப்பிடத்தத்தக்கது . மேலும் நிறைய நாகர் சிலைகளும் இங்கே இருக்கின்றன. இருப்பிடம் சிங்க்ரி ஹல்லி .மல்லிகார்ஜுன என்ற பெயரில் சிவன் வணங்கப்படுகிறார் . கோவிலுக்கு எதிரே நந்தீஷ்வர தீர்த்தக் கோவில் இருக்கிறது விருஷபநதி இங்கே தோன்றுகிறது
XXXX
15. Ragigudda Sri Prasanna Anjaneyaswamy Temple
ராஜி குட்ட பிரசன்ன ஆஞ்சனேய சுவாமி கோவில்
ஜய நகர் குன்றில் அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட ஆஞ்சனேயர் கோவில் இது. அமைதியான சூழ்நிலையில் ராம, லட்சுமண, சீதை ஆகியோருடன் அநுமனைக் கண்டு வணங்கலாம். அருகிலுள்ள பாறையில் பிரம்மா , விஷ்ணு சிவன் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
XXXX
16. Nageshwara Temple
நாகேஸ்வர கோவில்
பெங்களூரின் புறநகர்ப்பகுதியில் பேகூர் மெயின் ரோட்டில் அமைந்த பழமையான சிவன் கோவில் இது. சோழர்கால,கங்க வம்ச கலை அம்சங்களைக் காணலாம் பெங்களூரு யுத்தம் பற்றிக் குறிப்பிடும் ஒன்பதாவது நூற்றாண்டுக் கல்வெட்டு இருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது ஐந்து லிங்கங்கள் இருப்பதால் பஞ்சலிங்கேஸ்வர கோவில் என்ற பெயரும் உண்டு
XXXX
17. Shri Abhaya Anjaneya Temple
ஸ்ரீ அபய ஆஞ்சனேய சுவாமி கோவில்
அகரம் கிராமத்தில் ஜகந்நாத் கோவிலுக்கு அருகில் அமைந்த இந்த ஆஞ்சநேயர் கோவிலின் சிறப்பு 102 அடி உயர பிரமாண்டமான அனுமன் சிலை ஆகும்
XXXXX
18.Sri Dwadasa Jyotirlinga Devasthana
ஸ்ரீ த்வாதச ஜ்யோதிர்லிங்க தேவஸ்தானம்
ஓம்கார குன்றில் அமைந்த 12 ஜோதிர் லிங்க கோவில் இது. ஸ்ரீனிவாசபுரத்தில் இருக்கிறது 12 லிங்கங்களையும் ஒரே கோவிலில் தரிசிக்கலாம்.
ஒம்கார குன்று பெங்களூரில் மிக உயர்த்த இடம் அங்கு . ஓம்கார ஆஸ்ரமும் , பல சிறிய கோவில்களும், புனித ஆலமரமும், 1500 கிலோ எடையுள்ள பெரிய மணியும் இருக்கின்றன .
XXXXX
.Kanyakaparameswari Temple Picture
19..Kanyakaparameswari Temple
கன்யகா பரமேஸ்வரி கோவில்
அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் குமரா பார்க்கில் உள்ளது. இதன் சிறப்பு அம்சம் நாடு முழுதுமுள்ள முக்கியக் கோவில்களை சலவைக்கற்களில் அமைத்துள்ளனர். அந்த சலவைக்கல் மண்டபத்தில் வண்ண ஓவியங்களில் அவைகளைக் காணலாம் . கோவிலுக்கு மேல் மாடத்தில் உள்ள தர்ப்பண / கண்ணாடி மண்டபத்தில் பகவத் கீதை, ரிஷிகள், வாசவி சரிதம் ஆகியனவும் தீட்டப்பட்டுள்ளன .Address: 10/3, Kumarapark West, Kumara Park West, Seshadripuram, Bengaluru, Karnataka 560020, India
பெங்களூரில் இன்னும் நிறைய கோவில்கள் இருக்கின்றன. இனி பெங்களூருக்கு வெளியே உள்ள கோவில்களைக் காண்போம் .
TO BE CONTINUED……………………………………
TAGS- கர்நாடக, கோவில்கள், 108, பகுதி 2, பெங்களூர் , கோவில்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நக்ஷத்திர ரகசியம்!
ச.நாகராஜன்
அர்ஜுனனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
இந்திர லோகத்திலிருந்து.
இந்திரனிடமிருந்து!
இந்திரபுத்திரனான அர்ஜுனனை இந்திரன் பார்க்க விரும்பினான்.
ஆகவே தனது ரதத்தையும் அனுப்பினான் – அர்ஜுனனை அதில் அழைத்து வரச் சொல்லி!
ரதம் வந்தது.
ரதத்தை ஓட்டி வந்த ரத சாரதியான மாதலி அர்ஜுனனைப் பார்த்து, “உன்னை இந்திரன் பார்க்க விரும்புகிறான். நீ இந்திரனுக்குப் பிரியமான இந்தத் தேரில் சீக்கிரம் ஏறு” என்றான்.
குந்திபுத்திரனான அர்ஜுனனை தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் பார்க்கட்டும் என்று உனது தந்தையான இந்திரன் கூறினான் என்றான் மாதலி.
இந்திரனின் ரதம்!
எப்படிப்பட்டது அது?
ஒளியுள்ளது. ஆகாயத்தை இருளற்றதாகச் செய்ய வல்லது.
மேக ஓசைக்கு ஒப்பான ஒலிகளால் திக்குகளை நிரப்பிக் கொண்டு மேகங்களைப் பிளப்பது போல அது வந்து சேர்ந்தது.
வாயு வேகம் கொண்ட பொன்னிறமான பதினாயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டது அந்த இந்திர ரதம்.
அதில் கத்திகள், பயங்கர சக்திகள், கொடிய தோற்றம் கொண்ட கதைகள், பிராஸங்கள், மின்னல்கள் அசனிகள், காற்றினால் வெடிப்பவை, நாகங்கள் உள்ளிட்ட ஏராளமானவை இருந்தன.
அர்ஜுனன் மாதலியைப் பார்த்துக் கூறினான்:” நூற்றுக் கணக்கான அச்வமேத யாகங்களைச் செய்தவர்களாலும், தேவர்களாலும் அசுரர்களாலும் ஏற முடியாத இந்த ரதத்தில் நீ முதலில் ஏறு. நானும் புண்ணியம் செய்தவன் நல்ல கதியில் ஏறுவது போலப் பின்னால் ஏறுகிறேன்” என்றான்.
பின்னர் தான் இருந்த மந்தர மலையிடம் முறையாக விடை பெற்றான் அர்ஜுனன்.
ரதம் கிளம்பியது.
தர்மானுஷ்டத்தைச் சிறந்த முறையில் செய்யும் மனிதர்களாலும் கூடப் பார்க்க முடியாத வான மார்க்கத்தை அது அடைந்தது; பறந்தது.
அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான விமானங்களை அர்ஜுனன் பார்த்தான்.
அங்கு சூரியனோ, சந்திரனோ அல்லது அக்னியோ பிரகாசிப்பதில்லை.
புண்ணியத்தால் அடைந்த தமது காந்தியினாலேயே அந்த இடத்தில் அனைத்தும் பிரகாசிக்கின்றன!
ஒளியுள்ள அவைகள் மிகப் பெரியவையாக இருந்தாலும் கூட வெகு தூரத்திற்கு அப்பால் இருப்பதால் சிறிய நக்ஷத்திர ரூபங்களாக பூமியிலிருந்து பார்ப்பதற்குக் காணப்படுகின்றன.
அவற்றை அர்ஜுனன் அந்த இடத்தில் மிக ஒளி பொருந்தியவையாகவும் தம் வடிவம் உள்ளவையாகவும் தம்மிடங்களில் தமது காந்தியால் பிரகாசிக்கின்றவையாகவும் பார்த்தான்.
அங்கே ராஜ ரிஷிகளும், சித்தர்களும், யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரர்களும் தவத்தால் ஜெயிக்கப்பட்ட சுவர்க்கத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
சூரியன் போல ஜொலிக்கும் ஆயிரக் கணக்கான கந்தர்வர்கள், குஹ்யகர்கள், ரிஷிகள், அப்ஸரஸ்கள் ஆகியோரின் கூட்டங்களை அவன் பார்த்தான்.
தாமாகவே ஜொலிக்கின்ற லோகங்களை அவன் பார்த்து ஆச்சரியமுற்றான்.
அர்ஜுனனின் வியப்பைப் பார்த்த மாதலி, “ ஓ! பார்த்தா! தம் தம் இடங்களில் இருக்கின்ற இவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! இவைகளைத் தான் பூமியிலிருந்து நீ நக்ஷத்திரங்களாகப் பார்க்கிறாய்” என்றான்.
யாரெல்லாம் நக்ஷத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி மாதலியிருந்து அறிந்து கொண்டு நேரிலும் பார்த்து வியந்தான் அர்ஜுனன்.
பின்னர் ஐராவத்தைப் பார்த்தான். பின்னர் சித்தமார்க்கத்தை அடைந்தான்.
அங்கிருந்து அரசர்களின் லோகங்களையும் தாண்டி ஸ்வர்க்கலோகத்தில் போய்க்கொண்டே இருந்தான்.
கடைசியில் இந்திரனுடைய பட்டணமான அமராவதியைக் கண்டான்.
மஹாபாரதத்தில் வன பர்வத்தில் நாற்பத்தி இரண்டாவது அத்தியாயமாக அமைகிறது இந்த நக்ஷத்திரப் பயணம்!
அர்ஜுனனுடன் பயணம் செய்து நக்ஷத்திர ரகசியத்தை நம்மால் அறிய முடிகிறது.
அடுத்த முறை நக்ஷத்திரங்களைப் பார்க்கும் போது எத்துணை ஆயிரம் புண்யசாலிகளை வானத்தில் பார்க்க முடிகிறது என்று வியக்கலாம்; அவர்களை வணங்கலாம்; புண்ணியமும் பெறலாம்!
This blog has three articles on Sister Nivedita written from 2018. I was fortunate to attend the unveiling of Sister NivedIta’s statue in London on 1 July 2023.
Here is the report about the great event.
Sister Nivedita started a school in Wimbledon and used novel methods in teaching. So a spot on Lake Road in Wimbledon, London under Merton council was chosen. Moreover, it is near the Ricards Lodge High School for girls. The school hall was used for the unveiling event. The event was well attended and well organised. All the speakers pointed out Sister Nivedita’s work in the field of education, particularly women’s education. They said that her life and service to community will inspire everyone for ages to come. Singers sang relevant songs and enthralled the audience in between the speeches. Girl students read the English translation.
Swami Sarvasthananda, Minister in charge of Ramakrishna Vedanat Centre, UK and Swami Nirmalatmananda from Brazil centre , American historian and academic Ruth Harris and many others spoke and praised the service of Sister Nivedita. Songs by Singers Dr Uma Basu and Pundit Chiranjib Chakravarthy and others sanctified the atmosphere.
Just before the start of the meeting Mayor Councillor Doug Smyth Mayor of Great Torrington ( Devon area in England)where Sister Nivedita Celebrations have installed another statue of Nivedita, unveiled the statue . along with Madam Mayor Jill Manly Mayor of Merton (in London) where the statue is installed now .
Torrington is the place where Sister Nivedita’s ash was buried in the family cemetery though Sister Nivedita died in Darjeeling in India.
Following the unveiling two Swamijis, Rev Swami Nirmalatmanandaji Maharaj Minister in charge of Sao Paolo Brazil and Rev Swami Sarvasthanandaji MIC London paid respects by garlanding the statue.
In her speech Mrs K Page Head teacher at the Girls High school praised the girl students who came as volunteers for the event. Mrs Sarada Sircar thanked everyone from the sculptor of the statue to the donors for the installation of the statue.
A souvenir with good articles on Nivedita was released. Descendants of Sister Nivedita also participated in the event.
Merton council, under which Wimbledon falls, did a great job in making the event a success.
Here is a brief life history of Sister Nivedita (28 October 1867 – 13 October 1911)
1867, October 28 The child Margaret Elizabeth Noble (later called Sister Nivedita by Swami Vivekananda) is born to Mary Isabel Hamilton and Samuel Richmond Noble of Scotch Street, Dungannon, Northern Ireland. Her siblings :Richmond Noble, May Noble (Wilson)
1891-94 A young Margaret takes up a teaching job at Wimbledon, England. She is an exceptionally gifted teacher and within a few years, starts a school of her own, influenced by the progressive methods of Swedish educator Johann Pestalozzi and his pupil Friedrich Froebel.
1894 Margaret co-founds the Sesame Club, where she is noticed for her strong, progressive views on education. She makes the acquaintance of leading intellectuals such as Thomas Huxley, the poet W. B. Yeats and playwright George Bernard Shaw.
1895 November. Margaret meets Swami Vivekananda at a lecture at Isabella Margesson’s residence at West End, London. She is profoundly influenced by the Swami’s vision and starts corresponding with him on a regular basis.
1898, January 28. Margaret arrives in Calcutta on the ship Mombasa.
1898, March 17. Margaret meets Sarada Devi for the first time who shares food with her, breaking a centuries old taboo. Sarada Devi’s gesture throws opens doors for foreign-born Margaret in orthodox Hindu society of the time.
1898, March 25. Initiated by Vivekananda into Brahmacharya, becomes Nivedita, The Dedicated, of Ramakrishna-Vivekananda.
1898, May 11. Travels to the Himalayas with Swamiji and fellow disciples Sara Bull and Josephine McLeod.
1898, November. Nivedita returns to Calcutta and moves to 16, Bosepara Lane.
1898, November 13. Sarada Devi inaugurates the girls’ school on November 13 with a puja in the Thakur Dalan. Swami Vivekananda is present with his brother disciples.
1899, March. Plague breaks out in Calcutta. Nivedita throws herself into relief work.
1899, May 28. Nivedita delivers her historic lecture on Kali Worship at the Kalighat Temple.
1899, June 20. Nivedita leaves for England with Vivekananda and Turiyananda to raise funds for the school. In London, Vivekananda meets her family for the first time.
1899, November 5, Chicago. Vivekananda bestows spiritual powers upon Nivedita and Sara Bull. “What came to us from a Woman I give to you two women,” he says. Nivedita calls the incident the “great turning point” of her life.
1900, February 27. Nivedita establishes the “Ramakrishna Guild of Help” in America, supported by Besse Leggett of Ridgely Manor and longtime Vivekananda disciple Sara Bull. The modest plan is to take in and train “twenty widows and twenty orphan girls.”
1900, 8 July. Nivedita’s book Kali the Mother is published. She dedicates it to her guru Swami Vivekananda, as Vireshwar, Lord of Heroes.
1900, 29 August. Nivedita receives Swamiji’s now famous benediction at Perros-Guirec village, in Brittany, France. “Be thou to India’s future son / The mistress, servant, friend in one.”
1901 May. Nivedita travels to Norway as Sara Bull’s guest,accompanied by Abala and JC Bose, and the renowned historian Romesh Chandra Dutt
1901 September-December. Nivedita assists JC Bose in writing his epoch-making The Living and Non-Living.
1902
Sister Nivedita saw Swami Vivekananda for the last time on 2 July 1902 at Belur Math
Swami Vivekananda died at 9:10 p.m. on 4 July 1902
Xxxx
1905
Partition of Bengal by Lord Curson
Nivedita takes active role in independence Movement.
1906
Tamil Poet Subrahmanya Bharati meets her. She inspired him to work for freedom of Women
1906 to 1911
Meeting all leading persons in Bengal and Ananada Coomaraswamy (Sri Lanka)
1911
Nivedita died on 13 October 1911, aged 43, at Roy Villa in Darjeeling, West Bengal
Xxx
Nivedita has written a few books and her lectures, poems and essays have been brought out in book form after her death.
Articles on Nivedita in this blog:
VISIT TO SISTER NIVEDITA’S HOME TOWN (Post No.5734)
4 Dec 2018 — This is a non- commercial blog. I went to Dungannon, the birth place of Sister Nivedita, disciple of Swami Vivekananda. The Mayor of the town …
11 Dec 2018 — This is a non- commercial blog. Greatest of the Modern Tamil Poets Subrahmanya Bharati met Sister Nivedita on his way back to Madras from the …
மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் பற்றி எழுதி முடித்தவுடன் அதை புத்த கமாக அச்சிட அனுப்பிவிட்டேன். இப்போது கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் பற்றியும் எழுத ஆசை பிறந்தது .வெப் சைட்டுகளில் நுழைந்தால் சிறியதும் பெரியதுமாக 400 கோவில்களின் பெயர்கள் வருகின்றன. அவற்றில் 108 கோவில்களை மட்டும் தெரிந்தெடுப்பது கடினமானதே ; முயன்றுதான் பார்ப்போமே சில கோவில்களில் வழிபாடு இல்லா மல் சிற்பங்கள் மட்டும் இருக்கும். இன்னும் சில இந்து மதத்துக்குப் புறம்பான சமண தலங்கள் (உ.ம். சிரவண பெல கோலா ) .அவைகளையும் காண்போம்.
தமிழ்நாட்டைப்போலவே கர்நாடக மாநிலத்திலும் 30,000 கோவில்களுக்கு மேல் உள்ளன. இந்தியாவில் ஐந்து லட்சம் கோவில்கள் உள்ளன. இவை அனைத்திலும் அயோத்தியா கோவில் திறப்பு தினத்தில் விசேஷ பூஜைகள் செய்ய ராமர் விக்ரக பிரதிஷ்டை செய்வோர் அழைப்பு விடுத்துள்ளனர் பெங்களூரு வட்டாரத்தில் மட்டுமே நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன
முக்கியமான வழிபாட்டுத் தலங்கள் அல்லது இந்து சமய புராணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் உள்ள இடங்களின் பட்டியல் இதோ:–
XXXXXX
முதலில் பெங்களூரிலுள்ள முக்கியக் கோவில்களை ‘புல்லட்bullet points பாயிண்டு’களில் (சிறப்பு அம்ஸங்களை மட்டும்) காண்போம்
1.The Chokkanathaswamy Temple
சொக்கநாத சுவாமி கோவில் பெங்களூர்
தொல்மூர் பகுதியில் உள்ள சொக்கநாத சுவாமி கோவில் விஷ்ணு கோவில் ஆகும். மதுரையில் இதைச் சொன்னால் சிவன் கோவில் என்று பொருள்படும். ஆனால் இங்கோ சொக்க பெருமாள் குடிகொண்டுள்ளார். சுந்தர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் சொக்க . இது மிகப்பழமையான கோவில். சோழர்கால கோவில். தமிழ்க் கல்வெட்டுகளும் கன்னடக் கல்வெட்டுகளும் இருக்கும் இடம். கலை வேலைப்பாடு அமைந்த தூண்களையும் சிற்பங்களையும் இங்கே காணலாம். ஒரே கம்பத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
xxxxx
2. The Nandhi Temple
நந்தி கோவில்
கெம்ப கவுடாவினால் (1500 CE ) கட்டப்பட்ட இந்தக் கோவில் பசவன குடியில் இருக்கிறது
கன்னடத்தில் பசவ என்றால் காளை . இங்கு சிவ பெருமானின் பெரிய வாகனமான நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டு காட்சி தருகிறது உயரம் 4-6 மீட்டர் அதன் தலையில் இரும்புத் தகடு இருக்கிறது. அது வளராமல் இருக்க இப்படிச் செய்ததாகச் சொல்லுவார்கள் அதைத் தாண்டி உள்ளே சென்றால் பெரிய கணபதியைக் காணலாம். விஜயநகர ஆட்சியில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது . இங்கு நடைபெறும் நிலக்கடலைத் திருவிழா (Kadalekaye Parishe Festival (groundnut fair) மிகவும் பிரசித்தமானது. அன்று இறைவனுக்கு நிலக்கடலை மலை போலக் குவியும்.
xxx
3. ISKCON Temple
ஹரே கிருஷ்ணா கோவில்
அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட கவர்ச்சிமிகு தங்கக்கோவில் . மிகப்பெரிய 56 அடி உயர த்வஜ ஸ்தம்பம் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. அதே போல கலச சிகரமும் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது.. ஒரு கோடி டாலர் செலவில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் ராதா- கிருஷ்ணர் , பலராமனை தரிசிக்கலாம் . நீரூற்றுகளும் பெரிய அலங்கார வளைவுகளும் நம்மை வரவேற்கும். கோவிலுக்குள் ஐந்து பிரார் த்தனை ஹால்/ HALLS மண்டபங்கள் இருக்கின்றன
இருப்பிடம்– ராஜாஜி நகர், ஹரே கிருஷ்ணா குன்று
xxxxxx
4. Shivoham Shiva Temple
சிவோஹம் சிவன் கோவில்
பழைய விமான நிலைய ரோட்டில் அமைந்த சிவோஹம் சிவனை யாரும் மிஸ் MISS பண்ண முடியாது. ஏனெனில் சிவபெருமானின் உயரம் 65 அடி. ஆண்டுக்கு 5 லட்ச ம் பேர் தரிசனத்துக்கு வருகின்றனர் . 1995-ல் சிருங்கேரி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னணியில் கைலாஷ் பர்வதம் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.32 அடி உயரகணபதி, 28 அடி உயர சிவலிங்கம் ஆகியன எல்லாம் நினைவிலிருந்து நீங்காத அளவுக்கு பெரியவை. சிவன் தலையிலிருந்து கங்கை பாய்கிறது.
xxxxx
5. Banashankari Amma Temple
வனசங்கரி அம்மன் கோவில்
இந்தக் கோவில் கனகபுர சாலையில் நிற்கிறது அண்மைக்கால கோவில் ஆனாலும் இங்கு நடைபெறும் ராகுகால பூஜை பிரபலம் அடைந்துள்ளது. பார்வதியின் உருவமான ஷாகம்பரி தேவியை கன்னடியர்களும் மராட்டியர்களும் வழிபடுகின்றனர்.
6.Annamma Temple
அன்னம்மா கோவில்
அன்னம்மா தேவி இந்த நகரத்தின் காவல் தேவதையாக கருதப்படுகிறா ள் ; உள்ளூர் மக்கள் திருமணத்திற்கு முன்னர் வழிபடுவது சம்பிரதாயம். இது நகரின் மெஜஸ்டிக் பகுதியில் கடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. பாறையில் செதுக்கப்பட்ட ஒற்றைக் கல் புடைப்புச் சிற்பமாக அமமன் உள்ளார்
7. Dharmaraya Swamy Temple
தர்மராய கோவில்
800 ஆண்டுகளுக்கு முன்னர் வன்னி குல க்ஷத்ரியர் கட்டிய கோவில் இது. நகரின் கடைத் தெரு பகுதியில் கம்ப கவுடா பஸ் நிலையம் அருகில் அமைந்தது . விவசாயிகள் வணங் கும் இந்தக் கோவிலின் சித்திரைமாத காவடி உற்சவம் மிகவும் புகழ்பெற்றது.
Xxxxx
8. Shrungagiri Shanmukha Temple
ச்ருங்ககிரி ஷண்முக கோவில்
ராஜ ராஜேஸ்வரி நகரில் அமைந்த முருகன் கோவில் இது. இங்கு சுப்ரமண்யர் ஆறுமுகங்களுடன் காட்சி தருகிறார் . 240 அடி உயரமுள்ள சிறு குன்றில் கோவில் கட்டப்பட்டுள்ளது கோபுர உயரம் 62 அடி மேலே 3000 படிகமுள்ள கிரிஸ்டல் மாடம் CRYSTAL DOME இருக்கிறது பகலில் சூரிய ஒளியில் வானவில்லின் வர்ண ஜாலங்களைக் காட்டும் . இரவில் மின்விளக்குகளால் பலவண்ண ஒளி அலை வீசும் . கோபுரத்தில் உள்ள சண்முகருக்கு சூரிய கிரண அபிஷேகம் செய்ய இது அமைக்கப்பட்டது. கோவிலின் நுழை வாயிலில் இரட்டை மயில்களும் மேலே திரி சூலமும் , பஞ்சமுகி ( 5 முக) கணபதியும் நம்மை வரவேற்பார்கள் பின்னர் ஆறுமுக இறைவனைக் காணலாம்
To be continued…………………………………………..
tags- கர்நாடகம், 108 கோவில், முதல் பகுதி, ஷண்முகர் , சிவன் , கோவில், பெங்களூரு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
2-4-2023 மாலைமலர் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.
ஜூலை நான்காம் தேதி சுவாமி விவேகானந்தர் சமாதி அடைந்த நாள்.
அஞ்சலிக் கட்டுரை
சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – இரண்டாம் பகுதி
ச.நாகராஜன்
விஞ்ஞானி டெஸ்லா
உலகம் கண்ட ஆகப் பெரும் விஞ்ஞானிகளுள் பெரிய விஞ்ஞானி நிகோலா டெஸ்லா. ( பிறப்பு: 10-7-1856 மறைவு 7-1-1943). இன்று உலகெங்கும் ஓடுகின்ற டெஸ்லா கார்களே அவரது விஞ்ஞானத் திறமைக்கான சான்றாகும்.
மின்சாரத் துறையில் அவரது கண்டுபிடிப்புகள் பெரும் புரட்சியைச் செய்தது,
1895ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நவம்பர் மாதம் 27ஆம் தேதி நியூயார்க் நகருக்குக் கிளம்பினார் விவேகானந்தர். அங்கு வியத்தகும் பிரபல மேதைகள் மூவரின் சந்திப்பு நிகழ்ந்தது.
பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, பிரபல கலையுலக மேதையான பிரெஞ்சு நடிகை மேடம் சாரா பெர்ன்ஹர்ட், சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரும் ஒரு நாள் சந்தித்தனர். அறிவியல் உலகில் ஆதிக்கத்தைச் செலுத்தியவர் டெஸ்லா. புலன் சார்ந்த கலை உலகில் தன் பெருமையை நிலை நாட்டியவர் நடிகையான பெர்ன்ஹர்ட். இவை இரண்டும் கடந்த ஆன்மீக உலகின் சிகரத்தில் ஏறி அமர்ந்தவர் விவேகானந்தர்.
நடிகை பெர்ன்ஹர்ட் நடித்த புத்தரின் வாழ்க்கை பற்றிய இஸில் என்ற நாடகத்தைப் பார்க்கச் சென்றார் விவேகானந்தர். இஸில் என்ற பெண்மணியாக நடித்த பெர்ன்ஹர்ட் அவருடன் பேசப் பெரிதும் விரும்பி வந்தார். அப்போது அங்கு டெஸ்லாவும் இருந்தார்.
டெஸ்லா விவேகானந்தர் கூறிய கல்பங்கள், பிராணன், ஆகாயம் பற்றிய விவரங்களைக் கூர்ந்து கேட்டு மகிழ்ந்தார். டெஸ்லாவின் அறிவியல் பூர்வமான கருத்துக்கள் வேதாந்த கருத்துக்களுடன் ஒத்து இருந்ததால் அனைவரும் மகிழ்ந்தனர்.
உலகம் நலமுற வேண்டும் என்ற உன்னதமான கருத்தை இந்த மூவரும் கொண்டிருந்ததால் அனைவரது பார்வையும் ஒன்றாகவே இருந்தது.
டெஸ்லா தனது மின்சாரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அவரது கண்டுபிடிப்பால் பெரிய கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது.
அழிவைச் செய்யும் அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி எவரிடமும் கூற அவர் மறுத்து விட்டார். அது அவருடனேயே மறைந்தது. டெஸ்லா வேதாந்தம் கலந்த ஒரு விஞ்ஞானி!
பாடகி எம்மா கால்வே
1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து கிளம்பிய விவேகானந்தர் பாரிசை அடைந்தார். அங்கு ஒரு பிரம்மாண்டமான உலகக் கண்காட்சி ஏற்பாடாகி இருந்தது. அதற்குப் பலமுறை சென்றார் அவர். அப்போது பாரிசில் பிரபல ஒபேரா பாடகியான எம்மா கால்வே (பிறப்பு 15-8- 1858 மறைவு 6-1-1942) விவேகானந்தரைச் சந்தித்தார். ஒரு நாள் அவர் பாடிய இசை நிகழ்ச்சிக்கு விவேகானந்தர் விஜயம் செய்தார். அந்த நிகழ்ச்சி தான் எம்மா கால்வேயை உலகப் புகழ் பெற்ற பாடகி ஆக்கியது.
ஆனால் கால்வேயின் வாழ்க்கை மிக சோகமயமான ஒன்று. அவர் பாடிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியின் போது, அவரது ஒரே மகள் தீக்கு இரையாகி மாண்ட செய்தியை நடுவில் கேட்டு அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
அவரால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. பலமுறை தற்கொலைக்கு முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது நெருங்கிய தோழி வீட்டிற்கே சென்றார். அங்கு தான் விவேகானந்தர் தங்கி இருந்தார்.
அவருக்கு ஆறுதல் அளித்த விவேகானந்தர் அவரது வாழ்க்கையில் அவர் மட்டுமே அறிந்திருந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறினார்.
பிரமித்துப் போன கால்வே, “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கேட்ட போது, “ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல உன்னைப் படிக்கிறேன்” என்று கூறிய விவேகானந்தர், “அனைத்தையும் மறந்து விடு. உற்சாகமாக இரு. மகிழ்ச்சியுடன் இரு உன் பணியைத் தொடர்.” என்றார்.
இந்தச் சந்திப்பால் உத்வேகம் பெற்ற கால்வே கலைத்துறையில் தன் கவனத்தைச் செலுத்தலானார். பெரும் புகழையும் பெற்றார்.
இதே போல ஏராளமான விஞ்ஞானிகளும், அறிஞர்களும், இதர துறை விற்பன்னர்களும் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தனர்.
அவரிடமிருந்து உத்வேகம் பெற்று தம் தம் துறையில் சிறந்து விளங்க ஆரம்பித்தனர்.
12-1-11893 அன்று அவதரித்த சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவையே ஆட்கொண்டார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை நான்காம் தேதியையே தனது சமாதி அடைவதற்கான தினமாகவும் தேர்ந்தெடுத்தார்.
அவர் சமாதி எய்திய தினம் 4-7-1902
அவர் ஒரு முறை கூறினார் : “இந்தியாவின் திரண்ட வடிவமே நான்!” என்று.
இந்தியா உலகிற்கு என்னவெல்லாம் அளிக்க முடியும் என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் காண்பித்தார்.
ரவீந்திரநாத் தாகூர், “இந்தியாவை அறிய வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள்” என்றார்.
இந்தியாவின் திரண்ட வடிவத்திற்கு நமது உள்ளார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்து அவர் காட்டிய வழியில் முன்னேறுவோம்!