அதிசய புத்த துறவி ஸு யுன்! – 29 (Post No.3603)

Written by S NAGARAJAN

 

Date: 4 February 2017

 

Time uploaded in London:-  6-37 am

 

 

Post No.3603

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 29

ச.நாகராஜன்

 

98ஆம் வயது (1937-1938)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 98. வசந்த காலத்தில் சூத்ரங்களை இசைத்த பிறகு காண்டனிலிருந்து குவாங்டாங் மடாலயத்திலிருந்து ஸு யுன்னுக்கு அழைப்பு வந்தது. அங்கும் சூத்ரங்கள் ஓதப்பட்டன. அங்கு திபெத்திலிருந்து வந்த லாமாக்களை ஸு யுன் வரவேற்றார். அருகிலிருந்த ஃபூஷான் என்ற நகரைச் சேர்ந்த மக்கள் ரென் ஷோ ஆலயத்தில் நிறுவப்பட்ட ஸ்தூபத்தைத் திறந்து வைக்குமாறு ஸு யுன்னை வேண்டினர்.. பின்னர் நான் ஹூவா மடாலயம் திரும்பிய அவர் அங்குள்ள ஆலய கும்பாபிஷேக பணிகளைக் கவனிக்கலானார்.

 

 

99ஆம் வயது (1938-1939)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 99. வசந்த காலத்தில் சூத்ரங்களை இசைத்த பிறகு ஸு யுன் காண்டன் நகருக்குச் சென்றார்.பிறகு அங்கிருந்து மஹாகருணா சடங்குகளைச் செய்ய ஹாங்காங் நகருக்குச் சென்றார். டாங் ஜியான் மற்றும் ஜூ யுவான் ஆலயங்களில் முறையாகச் செய்யப்பட்ட சடங்குகளைத் தொடர்ந்து அவர் நான் ஹூவா மடாலயம் திரும்பினார்.

 

 

100ஆம் வயது (1939-1940)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 100. வசந்த காலத்தில் சூத்ரங்களை இசைத்த பிறகு பெரிய அளவில் மக்கள் மடால்யத்தில் திரண்டனர். வடக்கில் பெரும் கல்வரம் நடக்க ஆரம்பித்திருந்தது. ராணுவ வீரர்களும் மக்களும் பெருமளவில் கொல்லப்பட்டிருந்தனர். கலவரம் சீக்கிரம் முடிவுறவும் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் தினமும் புத்தரின் வழி நடக்கும் சீடர்கள் இரண்டு மணி நேரம் தவம் இருக்க வேண்டும் என்று ஸு யுன் அறிவுறுத்தினார். நிவாரண நிதிக்கு நிதி அளிப்பதற்காக ஒவ்வொருவரும் சற்றுக் குறைத்துச் சாப்பிட்டு அதில் சேமிக்கப்படும் நிதியைத் தரலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். அந்த யோசனைகளை அனைவரும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்தனர்.

 

 

101ஆம் வயது (1940-1941)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 101. வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன. காண்டன் நகரத்தை ஜப்பானிய ராணுவம் தன் வசப்படுத்தியது.சிவில் மற்றும் ராணுவப் பிரிவுகள் குவிஜாங் நகரை நோக்கி நகர்ந்தன. அங்கு எல்லா நகர்களிலிருந்து பெருமளவு புத்த பிட்சுக்கள் திரண்டனர். அங்குள்ள ‘பெரும் கண்ணாடி’ என்று பொருள்படும் டா ஜியான் ஆலயத்தை ஸு யுன் புனருத்தாரணம் செய்தார்.அங்கு விருந்தாளிகள் வந்து தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதே நோக்கத்தில் சந்திர மலர் என்று பொருள்படும் யு ஹூவா ஆலயமும் புனருத்தாரணம் செய்யப்பட்டது.

 

 

 

102ஆம் வயது (1941-1942)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 102. வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன. பின்னர் முந்தைய இரண்டு வருடங்களில் பக்தர்களால் தரப்பட்ட காணிக்கையான இரண்டு லட்சம் டாலர்களை ஸு யுன் அரசுக்கு அளித்தார். இலையுதிர் காலத்தில் குவாங்டாங் புத்த அசோசியேஷன் ஸு யுன்னை தலைவராகவும் உபாசகர் ஜாங் லியானை உபதலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

 

 

103ஆம் வயது (1942-1943)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 103. வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்ட போது ஒரு மரத்தில் குடியிருந்த ஆவி ஒன்று தன் விடிவுக்காக சூத்ரங்களை ஏந்த வந்தது. அதிசயமான இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்ற ஆலயத்தின் சூபரிண்டெண்டெண்ட் மாஸ்டர் குவான் பென் இதை பின் வருமாறு பதிவு செய்தார்:

 

 

சூத்ரங்கள் இசைக்கப்பட்ட போது ஒரு பிட்சு வந்து ‘பிட்சு சூத்திரங்களைக்’ கேட்டார். தனது பெயர் ஜாங் என்றும் குஜியாங்கில் தான் பிறந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவருக்கு வயது 34. அவரது தலையை மழிக்க யாரும் கிடைக்கவில்லை. அந்த சடங்கிறகாக வர வேண்டிய சம்பிரதாய உடையுடனும் அதற்கான பாத்திரங்களுடனும் அவர் வந்துள்ளாரா என்று கேட்கப்பட்ட போது இல்லை எனறு பதில் வந்தது. அவர் வெளிப்படையாக அனைத்தையும் பேசியதால் அவருக்கு வேண்டிய உதவிகள் அளிக்கப்பட்டன. அவருக்கு புதிய பெயராக் ஜாங் யு என்ற தர்ம நாமமும் அளிக்கப்பட்டது. அவருக்கு நாமகரணம் அளிக்கப்படும் முன்னர் வெகு தீவிரமாக உழைத்து மடாலயத்தை அவர் சுத்தப்படுத்தினார்.யாருடனும் அவர் பேசுவதே இல்லை. வினய ஹாலுக்கு அவர் அழைக்கப்பட்ட போது அனைத்து சடங்கு விதிமுறைகளையும் அப்பழுக்கின்றி அப்படியே கடைப்பிடித்தார். போதிசத்வர் உபதேசம் அளிக்கப்பட்ட பின்னர் அவரைக் காணவே இல்லை. ஆகவே அவரது ஆடையும் நற்சான்றிதழும் வினய ஹாலிலேயே வைக்கப்பட்டன. அதன் பின்னர் அவரைப் பற்றிய நினைவே இல்லாமல் போனது. அடுத்த ஆண்டு சூத்ரங்கள் இசைக்கப்படும் சமயத்தில் ஸு யுன் கனவில் அவர் தோன்றி தனது நற்சான்றிதழைத் தருமாறு கேட்டார். அவர் இதுவரை எங்கே போயிருந்தார் என்று ஸு யுன் கேட்டபோது தான் எங்கும் போகவில்லை என்றும் பூமி தேவியிடம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் அவரது நற்சான்றிதழ் எரிக்கப்பட்டு அவருக்குக் காணிக்கையாகத் திருப்பி அளிக்கப்பட்டது.

 

டா ஜியான் ஆலயம் கட்டப்பட்டு விட்டது. ஆனால் நான் ஹுவா ஆலயப் பணி இன்னும் முடியவில்லை. எல்லா ம்டாலயங்களும் ஸு யுன்னை அணுகி ஆலோசனைகளைக் கேட்ட வண்ணம் இருந்தன. ஜப்பானிய குண்டு விமானங்கள் தினமும் மடாலயம் மீது பறந்து கொண்டே இருந்தன.

 

 

காண்டன் நகரம் வீழ்ச்சியுற்ற பின்னர் ஜப்பானிய ராணுவத்தின் உளவுப்பிரிவு,  ஆலயமானது சீன அதிகாரிகள் கூடி விவாதிக்கும் இடமாக இருப்பதாக அறிந்தது.ஏழாம் மாதத்தில் எட்டு எதிரி பாம்பர்கள் ஆலயத்தைச் சுற்றி வளைத்துப் பறந்தன. அவர்களது எண்ணத்தை அறிந்த ஸு யுன் எல்லா பிட்சுக்களையும் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குள் உடனே செல்லுமாறு கூறினார். பின்னர் பிரதான ஹாலுக்குச் சென்று ஊதுபத்திகளை ஏற்றினார். ஒரு குண்டு வீசும் விமானம் மடாலயத்தின் அருகில் இருந்த ஆற்றுப் படுகையில் ஒரு  குண்டைப் போட்டது. பின்னர் எல்லா விமானங்களும் ஆலயத்தைச் சுற்றின. திடீரென்று அவற்றில் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி  த்ரையில் விழுந்து நொறுங்கின. அதிலிருந்த விமானிகளும் வீரர்களும் கொல்லப்பட்டனர், அதிலிருந்து எதிரி விமானங்கள் ஆலயத்தின் அருகில் வரவே இல்லை.

 

 

குளிர் காலத்தில் பதினொன்றாம் மாதத்தில் பிரஸிடெண்ட் லின் ஷென் உபாசகர் சூவையும் ஷாங் ஜி லியன்னையும் அனுப்பி ஸு யுன்னை போர்க்காலத் தலைநகரான சோங்கிங் நகருக்கு வந்து ஒரு பிரார்த்தனை நடத்தித் தருமாறு வேண்டினார். அங்கு சென்று ஸு யுன் ஹெங் ஷான் என்ற புனித மலையில் பிரார்த்தனையை நடத்தினார். பின்னர் அங்கிருந்த பல்வேறு இடங்களுக்கும் அவர் சென்ற போது மக்களும் இராணுவ அதிகாரிகளும் திரளாக வந்திருந்து அவரை தரிசித்தனர். பிரஸிடெண்ட் லின் ஷென்னைப் பார்த்த பிறகு இரண்டு தர்ம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆண்டும் முடிந்தது.

 

-தொடரும்

அனிச்சம் பூவும் சீரிஷம் பூவும் ஒன்றா? (Post No.3601)

சீரிஷம் பூவின் படம் (from Ayurveda website)

 

Written by London swaminathan

 

Date: 3 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  6-41 am

 

Post No. 3601

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ சீரிஷம் என்றும் தமிழ் இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ அனிச்சம் என்றும் கவிகள் பாடி வைத்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இருவரும் ஒரே மலரைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று முடிவுசெய்தேன். எனது ஆராய்ச்சியின் பலனே இக்கட்டுரை.

 

சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப் பாட்டிலும் கலித்தொகையிலும் அனிச்சம் பற்றிக் குறிப்பிடுகின்றனர். சங்க காலத்துக்குப் பின்னர்   வந்த திரு வள்ளுவர் அனிச்ச மலரை நான்கு இடங்களில் உவமையாகக் காட்டுகிறார்.

 

 

இலக்கியங்களில் மென்மைக்கு இலக்கணம் இந்தப் பூக்களே. கடினத்தன்மைக்கு வைரத்தை (வஜ்ரம்) உவமையாக காட்டுவது போல மென்மைத் தன்மைக்கு உவமை அனிச்சம் அல்லது சீரிஷம்.

 

உலகப் புகழ்பெற்ற காளிதாசன் குமார சம்பவத்திலும் ரகுவம்சத்திலும் சீரிஷ மலரின் மென்மைத் தன்மையை  எடுத்துக்காட்டுகிறார்.

 

பார்வதியை வருணிக்க முனைந்த கவிஞன் காளிதாசன், பார்வதியின் கைகள் சீரிஷ மலரைவிட மென்மையானவை என்பான்(குமார 1-41)

 

இன்னொரு அருமையான உவமை பார்வதியின் தவத்தைப் பற்றியது. சீரிஷ மலரானது தேனீக்களின் கால்களைத் தாங்குமேயன்றி, ஒரு பறவையின் கால்களைத்  தாங்க முடியுமா? அது போல பூப்போன்ற உடல்படைத்த பார்வதியின் உடலை கடுமையான தவசு தாங்குமா – என்பது காளிதாசனின் உவமை(குமார 5-4)

ரகுவம்ச காவியத்தில் சுதர்சன மன்னனின் உடல் சீரிஷ மலரைப் போல மென்மையானது என்று சொல்கிறான் (18-45).

 

அனிச்சம் பூ (according to Wikipedia)

 

தமிழ் இலக்கியத்தில்

மகளிர் சேகரித்த 99 மலர்களில் அனிச்சம் என்ற மலரையும் சேர்த்து கபிலர் பாடியுள்ளார் (குறிஞ்சிப் பாட்டு, வரி 62)

 

கலித்தொகையில் (91-1) அனிச்சம் மலர் சூடியது, மாலை சூடியது பற்றி மருதன் இளநாகன் பாடியுள்ளார்.

 

இதன் பிறகு கம்பராமாயணம் முதலிய பிற்காலக் காவியங்களிலும் இம்மலர் இடம்பெறுகின்றது.

 

வள்ளுவர் 4 குறள்களில் தெரிவிக்கும் கருத்துகள்:

 

மோப்பக்குழையும் அனிச்சம்(90)– முகர்ந்து பார்த்,,,,,லேயே வாடிவிடும்.

 

அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள் (1111)– , அனிச்சம் பூவே! என் காதலி உன்னைவிட மென்மையானவள்.

 

(இதைக் காளிதாசன் பார்வதி பற்றிச் சொன்னதோடு ஒப்பிடலாம்)

 

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் (1115)– காம்போடு அனிச்சம் பூவைச் சூடிவிட்டாள் என் காதலி. எடை தாங்காமல் வள் இறந்து போய்விடுவாள்.

 

அனிச்சம்…. மாதர் அடிக்கு நெருஞ்சி பழம் (1120)– அனிச்சம் பூவும் அன்னத்தின் இறகும் கூட  இப்பெண்ணின் பாதங்களில் நெருஞ்சிப் பழம் போலக் குத்தும்!

 

அனிச்சம் பூ எது? என்று சிலர் ஆராய்ச்சி செய்து சில படங்களை வெளியிட்டுள்ளனர். அவை சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னும் சிலர் சீரிஷ மலர் எது என்று படம் போட்டுள்ளனர். அதுவே சரி என்று தோன்றுகிறது. இதற்கு நான் முன் வைக்கும் காரணங்கள்

 

 

  1. அனிச்ச மலர் என்று இவர்கள் குறிப்பிடும் மலர் முகர்ந்தால் வாடுவதில்லை

2.இது மற்ற பூக்களைப் போலவே மென்மை படைத்தது. உண்மையில் இதைவிட மென்மையான தமிழ் மலர்கள் உண்டு

  1. சீரிஷ மலரின் படம் ஓரளவுக்கு தமிழ்ப் பாடல் வருணனைக்கு அனுசரணையாக உளது. களிதாசன் சொல்லுவது போல தேனீக்கள் மட்டுமே உட்கார முடியும்

4.கபிலரும் இளநாகனும் சொல்லக்கூடிய அனிச்சம் தலை யில் அணிவது; மாலையாகச் சூடுவது. ஆனால் WEBSITE வெப்சைட் காட்டும் அனிச்சம் அணியப்படுவதுமில்லை; பூஜைக்கு உதவுவதுமில்லை

5.மேலு வெப்சைட் WEBSITE காட்டும் அனிச்சம் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுவதில்லை.

6.எல்லாவற்றிற்கும் மேலாக சீரிஷம் படத்தையும் அனிச்சம் படத்தையும் அருகருகே வைத்துப் பார்த்தால் சீரிஷமே மென்மை என்பது தெரிகிறது

  1. சீரிஷம் என்ற பெயரை இன்றும் வட இந்தியப் பெண்கள் பெயரில் வைக்கின்றனர். தமிழர்களோவெனில் மற்ற மலர்களின் பெயர்களை பெண்களுக்குச் சூடுகின்றனர். ஆனால் அனிச்சம் என்று பெயர் வைப்பதில்லை.

 

  1. கடைசியாக அனிச்சம் என்பது தமிழ் சொல்லா என்று ஐயுற வேண்டியுள்ளது. அந்த ஒலியை ஒட்டிய தமிழ்ச்சொல் எதுவும் (அனி) சங்க இலக்கியத்தில் இல்லை. அனிச்சம் மட்டுமே உள்ளது. இது ஒரு பெரிய புதிரான மலர்தான்.

 

வள்ளுவன் சொன்னது போல அனிச்சமே! நீ வாழி! (“நன்னீரை வாழி அனிச்சமே”-குறள் 1111)

 

Botanical name of both the flowers as identified in the websites:

Sirisham – Albizia lebbek (East Indian Walnut); Family-Mimosaceae

Anicham- Anagallis arvensis (Scarlet Pimpernel); Family- Primulaceae

 

 

–சுபம்–

Inspiring Anecdotes in the Life of Swami Chinmayananda Saraswati (Post No.3600)

Written by S NAGARAJAN

 

Date: 3 February 2017

 

Time uploaded in London:-  6-10 am

 

 

Post No.3600

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

by Santhanam Nagarajan

Swami Chinmayananda Saraswati (Birth 8-5-1916 Samadhi 3-8-1993) was one of the greatest Hindu spiritual leaders of our times.

He was in Himalayas. One day there was a sudden call! He himself narrated what had happened thus: “Mother Ganga in her incessant hurry seemed to tell me, ‘Son, don’t you see Me? Born here in Himalayas, I rush down to the plains taking with me both life and nourishment. Fulfilment of any possession, is in sharing it with others.’ I decided. I was encouraged. I felt reinforced. The urge became irresistible.”

Then he came down to the plains and started meeting people. He travelled length and breadth of the whole world and attracted thousands of followers. His Gita discourses were very famous. He founded Chinmaya Mission on 8th August 1953. The Chinmaya movement was born out of love and rooted in the wisdom of Truth.

His eloquence in English is very famous. Once when one devotee told him that he was always in the midst of troubles he immediately retorted saying, “When troubles come to trouble you, don’t trouble to stop the troubles, but allow the troubles to trouble the troubles, so that no trouble is free to trouble you. Trouble not at troubles; let the troubles trouble the trouble”. Everybody laughed. The questioner understood the point and was cleared of his doubt. The great Tamil Poet Thiruvalluvar said in his poem, “When trouble comes laugh at it”

He delivered several lectures in America.  At the end of the first talk in Palo Alto, one of the listeners asked him, “What is your technique?”

“What is my technique? My technique is to stand on my nose and meditate” said Swamiji. “But I only practice it in private”.

 

He gave a mischievous laugh, and then thundered seriously, “If you are looking for shortcuts in spirituality or instant psychedelic happenings, you have made a mistake today. But don’t repeat it – don’t come tomorrow.”

His words were straight.  Everyone got the message. They turned every day to hear the discourses.

Once, a young boy asked Swamiji, “What made you renounce the world? You were a postgraduate in English Literature and Law, and a very successful journalist:

Swamiji asked him in return, “when will you spit that thing out?” referring to the chewing gum in the boy’s mouth. “Oh! I am just about to spit it out. There is no juice left in it,” said the boy. “Ah! I, too, did just that,” laughed Swamiji. “I had chewed the world sufficiently and did not find any more juice in it.”

One skeptic asked him, “Whatever you teach is there in the books. What do I need a Guru for?” He replied, “Why don’t you ask the question to the books.”

How to inspire the young children imbibing the idea of God in them? In Manila, some children gathered around him.

He asked them, “What is the color of the milk?”

“White” answered all the children.

“What color is the cow?”

“Black.”

“What does it eat?”

“Grass.”

“What color is the grass?”

“Green.”

“What makes the green grass eaten by a black cow to come out as white milk?”

The children were silent.

He said “Krishna! It is the Lord who makes the impossible possible.”

His unique way of teaching is incomparable.  Devotees used to narrate hundreds of interesting anecdotes happened in his life.

Once, Mr Manian, the famous Tamil writer, journalist and editor of many magazines in his welcoming address at Madras said: “ We find in Swamiji a Good Teacher, a Popular Preacher, a Religious Leader, a Philosopher, a Rational Thinker, a Scientist, an Artist, a communicator, a Journalist, and Educationist and above all a Guiding Spirit. In him we see the wisdom of Vasishta, the vigour of Viswamitra, the knowledge of Brigu, the thought process of Veda Vyasa, the power of Kasyapa, the determination of Gautama and pardom me Swamiji, the anger and humour of Durvasa,”

Verily he was a great saint who propagated the glory of Hinduism.  His life was his message!

This article first appeared in www.ezinearticles.com on 26-1-2017

Peasel follow the link :   http://ezinearticles.com/?Inspiring-Anecdotes-in-the-Life-of-Swami-Chinmayananda-Saraswati&id=9628890

 

Sirisam and Anicham flowers in Tamil and Sanskrit literature (Post No.3599)

Written by London swaminathan

 

Date: 2 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  6-26 am

 

Post No. 3599

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Sirisham is the softest flower in Sanskrit literature. We see girls named after as Sirisha. In Tamil Sangam and post Sangam literature Anicham is the softest flower. My research shows that both the flowers are one and the same.

 

In the Kumarasambhava, Kalidasa compared the arms of Parvati to the delicate Sirisa flower. The arms of Parvati are imagined to be more delicate than even the Sirisa flower– KS 1-41

 

The soft delicate Sirisa flower can stand only the footing of a bee on it but not that of a heavy bird. Similarly the Sirisa like delicate frame can tolerate delicate handling and not the rough handling as in penances –KS 5-4

 

The image imparts grace and charm to the delicacy of Parvati’s body.

In the Raghuvamsa the body of Sudarsana is said to be as tender as the delicate Sirisa flower– RV18-45

 

What is Sirisam or Anicham?

According to Tamil books, Anicham is the softest flower. Like diamond is used to compare the hardness of any object, Sirisham or Anicham flower is used by all the Indian poets to compare the softness of any part of the body or an object.

 

Anicham flower is referred to in Sangam Tamil literature at least in two places in Kalitokai and Kurijipattu. In later works Tirukkural has got four references to Anicham flowers. They are as follows:

Anicham picture from Wikipedia

 

Even as the Anicham flower fades when smelt, so also are guests, so also are guests hurt when the host puts to a vary face. (Kural 90)

 

Blessed art thou, Anicha, tenderest of flowers; more tender than thee is my beloved (1111) (This is similar to the Kumarasambhava couplet of Kalidasa, where he says the same about Parvati)

 

Even the flower Anicha and the down of the swan are ripe nettles to the feet of this maiden (1120)

 

With stems she wears the Anicha flower. The weight may break her waists and sad drums blare (1115)

 

Reasons for my conclusion:

The flower identified as Anicham previously by some people, is not a common flower in Tamil Nadu. Moreover, that is not the softest flower where as Sirisam shown in the picture fits in all the descriptions. Anicham identified does not fade when smelt. Anicham may not be a Tamil word at all. We have no word with that sound (ani) in Sangam literature except Anicham mentioned In Kurinjipattu and Kalitokai. Sirisham is used in naming girls. But Anicham is not used in naming or Puja or decoration or making garlands. It looks very artificial. So we may conclude that Sirisham was known as Anicham in some parts of ancient Tamil Nadu.

Botanical name of both the flowers as identified in the websites:

Sirisham – Albizia lebbek (East Indian Walnut); Family-Mimosaceae

Anicham- Anagallis arvensis (Scarlet Pimpernel); Family- Primulaceae

 

 

–Subham–

 

 

அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார் – பகுதி 3 (Post No.3598)

Compiled by London swaminathan

 

Date: 2 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  5-40 am

 

Post No. 3598

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“அதிசய முதலியார் செய்த அற்புதங்கள்” என்ற தலைப்பில் கடந்த இரண்டு நாட்களில் முதல் இரண்டு பகுதிகள் வெளியாகின. இது மூன்றாம் பகுதி.

 

1878-ஆம் ஆண்டு திருக்கழுக்குன்ற மலை அடிவார மஹா மண்டபத்தில் தசாவதானி ஜெகநாதபிள்ளை முன்னிலையில் கலியாண சுந்தர முதலியார் அஷ்டாவதானம் செய்து காண்பித்தார்.

 

அவ்வமயம் செங்கல்பட்டு வக்கீல் சுந்தர முதலியார் கேள்விக் கணை தொடுத்தார்– எங்கே புத்தகத்துக்கும் கரத்துக்கும் சிலேடை வைத்து செய்யுள் இயற்றுங்கள் பார்ப்போம் என்றார்.

 

மூடித் திறத்தலினால் மொய்ரேகையேயுறலால்

நாடியெவரு நண்ணுகையால்– கோடலினால்

வித்தகர்  கணத்துகின்ற வேதகிரி தண்பதியில்

அத்தமது புத்தகமுமாம் 

 

-என்று முதலியார் சிலேடை—(இரு பொருள்படும்படி செய்யுள்) — செய்தார்.

 

(அத்தம்=ஹஸ்தம்=கை=கரம்)

 

சிவக்கொழுந்து பண்டாரம் என்பவர், பால் என்னும் சொல் பத்து இடங்களில் வருமாறு கவி செய்க என்றார்.

 

பற்றுங்கொடிக்ககனும் பங்கயனும் காணாவும்

பற்றோலுரித்த வன்னப் பாலே பால் — மற்றப் பால்

மாட்டுப் பால் பூப்பால் மரப்பால் வனிதையர்பா

லாட்டுப் பாலப் பாலிப்   பால்

 

-என்று முதலியார் பாடினார்.

செய்யூர் ஜமீந்தார் வைத்தியநாத முதலியார் எழுந்து, நாடு என்று துவங்கி ஊர் என்று முடியுமாறு ஒரு கவி புனையுங்கள் என்றார்.

 

நாடுசேரன் சோழ நற்பாண்டியன் முதலோர்

தேடு பொருள் யாவுஞ்சிறக்குமா –னீடு தொண்டை

மண்டலத்திற் கோர்திலகன் வைத்தியநாதச் சீமா

னொண்டி   றலோடே வாழ்செய்யூர்

 

என்று முதலியார் பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

 

அஷ்டாவதானத்தில் வெறும் கவி பாடுதல் மட்டுமல்ல. பலர் கூட்டல், கழித்தல் போடச சொல்லுவர். மற்றும் சிலர் முதுகில் கற்களையோ, விதைகளையோ வீசி எத்தனை கற்களைப் போட்டென் என்று கேட்பார். தமிழ் இலக்கியத்தில் கேள்விகள் கேட்பர்.  இது போல எட்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இவை எல்லாம் முடிந்தவுடன் செய்யூர் ஜமீந்தார் பரிசளிக்க முயன்றதைக் குறிப்பால் உணர்ந்து

 

காசுதனி லெனக்குக் கவலையில்லை பொற்சரிகைத்

தூசுதனிலேதுந் துயரிலை — வீசுபுக

ழீகட்டும் வள்ளா லியகற்றுக வென்னாசிரியர்

வீடுகட்டி வாழ்ந்திடவே –என்று பாடி முடித்தார்.

 

 

இதன் பொருளாவது: எனக்கு காசு பணம் வேண்டியதில்லை. என்னுடைய ஆசிரியரான தசவதானியாருக்கு வீடுகட்டிக் கொடுக்கவும் என்பதாகும். உடனே தசாவதானியார் ஜெகநாத பிள்ளைக்கு வீடு கட்டத் தேவையான பொருட்களை ஜமீந்தார் அனுப்பி வைத்தார்.

 

இதற்குப் பின்னர் ஜமீந்தாரின் வேண்டுகோளை ஏற்று திரிபுரசுந்தரி மாலை இயற்றினார்.

 

முதலியார், இடைகழி நாட்டுக்கு வந்திருக்கும் செய்தி கேட்டு ஜமீந்தார், யானையை அனுப்பி அவரை அழைத்துவர ஏற்பாடு செய்தார். ஆனால் அவர் ஒரு சீட்டுக் கவி மூலம் சின்னாட்களுக்குப் பின்னர் வருவதாக அறிவித்து சேயூரில் ஒரு வாரம் தங்கினார். அப்போது அவருக்குக் கிடைத்த பரிசுகள் அனைத்தையும் தன்னுடைய  ஆசிரியரான தசாவதானியாருக்கே கொடுத்துவிட்டார்.

 

திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து கமலபந்தமியற்றிப் பரிசு பெற்றார்.

பாம்பு கடித்தது

 

1879 ஆம் ஆண்டில் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூருக்குச் செல்லுகையில் ஒரு பாம்பு இவரைக் கடித்துவிட்டு படம் எடுத்து ஆடியது. இவர் தாம் இறந்து போய்விடுவோமென்றெண்ணி கையிலிருந்த கமலபந்தத்தின் பின்னால் தனது பெயர் முதலியவற்றை எழுதிவிட்டு தியானத்தில் மூழ்கி திருமுருகாற்றுபடையை ஜெபிக்கத் தொடங்கினார். அந்த    கமலபந்தம் திருப்போரூர் சிவசங்கரத் தம்பிரான் மீது இவர் இயற்றியதாகும். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தொட்டியன், பாம்பு கடித்த செய்தி கேட்டு அவருக்கு ஒரு மூலிகையைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னான். இவரும் குணமடைந்து தொட்டியனைத் தேடவே அவனைக் காணவில்லை. முருகப்பெருமானே வந்து உதவியதாக முதலியார் எண்ணினார். தம்பிரானிடம் நடந்த செய்திகளைச் சொல்லவே அவர் அன்று முருகனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளைச் செய்து முதலியாரை மகிழ்வித்தார்.

 

1879-ல் மேடவாக்கம் வெங்கடாசல முதலியார் குமாரத்தி பார்ப்பாத்தியம்மாளுக்கும் முதலியாருக்கும் திருமணம் நடந்தேறியது. காலப்போக்கில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. எஞ்சினீயர் அலு வலகத்தில் கிளர்க் உத்தியோகமும் கிடைத்தது.  பரங்கி மலைக்கு மாற்றப்படவே சென்னையில் மைத்துனர் கடையில் இருந்து கொண்டு சுதந்தர விருத்தியில் இறங்கினார். பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். பெரியபுராணம் முதலிய நூல்கள் பற்றி உபந்யாசம் செய்தார். நடராஜ சபை என்ற பெயரில் சமயப்  பணிகள் தொடர்ந்தன.

 

முதலியாரவர்கள், சிதம்பரத்தில் பாஸ்கர சேதுபதி மஹாராஜவைச் சந்தித்து வார்த்தை சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் சித்திரகவி சடாதர நாவலர் அவரைச் சந்த்க்க வந்தார். நாவலர், தான் கவிபாடும் வல்லமை படைத்தவர் என்று சொல்லவே, மெய்கண்டநாதன் என்பதை வைத்து அஸ்வபந்தம் பாடும்படி சொல்லிவிட்டுப் போஜனத்திற்கேகினார் பாஸ்கர சேதுபதி.

 

நாவலருக்கோ ஒரு சொல் கூட வரவில்லை. மஹாராஜா வந்தபின்னரும் மவுனமா இருந்து விட்டார். முதலியாரோவெனில் ஒரு செய்யுளை எழுதி ராஜா கையில் கொடுக்க, அது அஸ்வபந்தத்தில் அடைபட்டது. நாவலர் சென்றவுடன் முதலியாருக்கு பரிசுகள் கிடைத்தன. ஒரு சால்வையும் போர்த்தினர். வெளியே காத்துக் கொண்டிருந்த நாவலர், தனது இயலாமையைச் சொன்னவுடன் அவருக்கு முதலியார் அஸ்வபந்த இலக்கணம் கற்பித்து, அந்தச் சால்வையையும் அவருக்கே போர்த்தி அனுப்பினார். கலியாண சுந்தர முதலியார் மிகவும் கருணை உள்ளம் படைத்தவர்.

 

 

முதலியார் இயற்றிய நூல்கள், தனிப்பாடல்களின் பட்டியல் மிக நீண்டது. வாழ்நாள் முழுதையும் சைவ சமயத்துக்கும் தமிழ்ப் பணிக்கும் பயன்படுத்தியவர். 1914-ஆம் ஆண்டில் மணவழகு கலியாண சுந்தர முதலியாரின் சஷ்டியப்த பூர்த்தியின் போது அவருடைய மாணவர்கள் ஒரு மலரை வெளியிட்டு அவரது சாதனைகள், திருப்பணிகளைத் தொகுத்து வெளியிட்டனர். அதன் சுருக்கத்தை மட்டுமே நான் மூன்று கட்டுரைகளில் தந்தேன்.

 

–சுபம்–

 

அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 2 (Post No.3596)

Picture of Kancheepuram Garuda Sevai

 

Compiled by London swaminathan

 

Date: 1 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  10-30 am

 

Post No. 3596

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஜயங்கொண்ட தொண்டை மண்டலத்தில், புலியூர்க் கோட்டத்தில், புத்தவேடனு நத்தத்தில், விற்பெற்ற துளுவ வேளாளர் குலத்தில், பூவிருந்த வல்லியார் மரபில், அறுபான்மும்மை நாயன்மார்களில் ஒருவரான வாயிலா நாயனார் பரம்பரையில், சென்னவராய கோத்திரத்தில், அண்ணாசாமி முதலியாருக்கும்-உண்ணாமுலை அம்மாளுக்கும் புதல்வனாக 10-5-1854-ல் பிறந்தார் பூவை கலியாணசுந்தர முதலியார்.

 

ஒரே நேரத்தில் எட்டு வகை காரியங்களைச் செய்யும் அஷ்டாவதானம் என்னும் கலையில் தேர்ச்சிபெற்ற பூவை கல்யாணசுந்தரம், தாலுக்கா பாடசாலையில் மாணவராக இருந்தபோது, ஆசிரியர் சேஷாத்திரி அய்யங்கார் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல் ஒன்றைக் கற்பித்துக் கொண்டிருந்தார்:

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்

தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் யான்முகமாய்

அந்தாதி மேலீட்டறிவித்தே   னாழ்பொருளை

சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து

 

(அந்தாதி மேலீட்டறிவித்தே   னாழ்பொருளை

சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து = அந்தாதி, மேலிட்டு, அறிவித்தேன், ஆழ் பொருளை, சிந்தாமல், கொள்மின், நீர், நேர்ந்து– திருமழிசை ஆழ்வார் பாடிய நான்முகன் திருவந்தாதி)

 

 

என்ற திவ்வியப் பிரபந்த பாடலைச் சொல்லிக்கொண்டிருக்கையில் சிறுவன் கலியாணசுந்தரம் கற்பலகையில் (ஸ்லேட்)

 

சங்கரனே நாரணனைத்தான் படைத்தானம்மாலே

பங்கயனைப் பெற்றெடுத்தான் பார்மிசையில் – துங்கமுடன்

சத்தியமாரணங்கள் சாற்றியது மேயுணர்வீர்

நித்தியத்தைப் பெற்றுய்ய நீர்

 

(பங்கயன்=பிரம்மா, ஆரணங்கள் = வேதங்கள்)

–எனவெழுதி வாத்தியாரிடம் காட்டினார். அவர் இது யாருடையது என்று கேட்க முதலியார் மவுனமாயினார். பக்கத்திலிருந்த சிறுவர், இது கலியாணசுந்தரம் செய்த கவிதைதான் என்றும் அவர் இப்படிப் பாடல்கள் பல எழுதுவது வழக்கம் என்றும் சொன்னார்கள்.

 

உடனே அய்யங்காருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு, இன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை; எங்கே ஒரு கவிதை எழுது பார்க்கலாம் என்றார்.

 

கலியாணசுந்தரமும் சலிக்கவில்லை.

 

மெச்சும் புகழ்வரதர் மென்கருடன் மீதேறிக்

கச்சியினிலே அடைந்தார் கம்பீர– முச்சிதமாய்

மன்னியவே கம்பர் வலனுரைகா மாட்சியெனு

மன்னையினைச் சுற்றுவதால்

 

என்று பாடவே ஆசிரியர் வியப்புற்றார். அழுக்காறுமுற்றார். “ஏகம்பர் வலனுரை காமாட்சி என்னும் அன்னையைச் சுற்றுவதால்” – என்று பாடியதால் கலியாணசுந்தரத்துக்கு சமயத் வேஷம் இருப்பதாகக் கருதி அவருக்கு சரியாகப் பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருந்தார். பின்னர் முதலியார் வேறு பாடசாலையில் சேர்ந்து பயின்றார்.ராமலிங்க சுவாமிகளையும்கண்டு அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

 

1873-ல் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருமயிலைக்கு (மைலாப்பூர்) வந்தபோது

 

சீர்பெருஞ் சிரபுரத்து மீனாட்சி சுந்தரநற் செம்மலேறே

ஏர்பெருகு நின் வீட்டு வாயலினிற்கின்றே நெனையழைத்துப்

பேர்பெருகுங் கல்விநல மென்மேலு மென்றனக்குப் பிறங்கியோங்க

வார்பெருகு நின்னாசி யினைக்கூறி யன்புடனே யாட்கொள்வாயே

 

எழுதி அனுப்பியவுடன் பிள்ளை அவர்கள், முதலியாரை அழைத்து அவர் எழுதிய புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.

 

கலியாண சுந்தர வென்கண்மணியே நின்பால்

மலிவாகக் கல்வி வளரும்– பொலிவாகப்

பொற்புவியிற் கற்றோர் புகழச் சிவஞான

விற்பனனாய் வாழ்ந்திருக்கவே

 

–என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிக்கொடுத்தார்.

1875 முதல் செங்கல்பட்டு மிஷன் பாடசாலையில் பயின்றார். அங்கு இலக்கணக் கடல் தசாவதானம் பேறை ஜெகநாதபிள்ளை யவர்களிடம் இலக்கணம் கற்றார்

 

1876-ஆம் ஆண்டில் சென்னையிலில்ருந்து செங்கல்பட்டுக்குப் புகைவண்டிவிட்டபோது, சக மாணாக்கர் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கவி பாடினார்:

ஆயிரத் தெண்ணூற்றெழுபத்தாறாமாண்டணி செப்டம்பர்

தூயமுற்றிகதி சுக்ரவாரந்தோன்றும் பதினோரு மணியதனில்

பாய வுலகில் பலமாக்கள் பலனையடையப் புகைவண்டி

நேய செங்கை நகரென்னு நிலத்து வந்து நிலவிற்றால்

–என்று எழுதிக்கொடுத்தார்.

 

உடனே அவரது ஆசிரியர் தசாவதனியார்

 

பாருங்களோர் நொடியிற் பன்னுமிடம் போய்வரலாம்

வாருங்களென்ன தடை மாநிலத்தீர்

 

என்று இரண்டு வரிகளை எழுதிச் சேர்த்தார். உடனே முதலியார் மேலும் இரண்டடிகளை எழுதினார்.

நீருங்கள்

காலா நடவாமல் காசு மிகநல்காமல்

மேலாக வாழ்வினி மேல்.

 

பின்னர் இந்து தேச சரித்திரத்தையும், இந்திய பீனல் கோடு சடத்தையும் முறையே 700, 500 விருத்தங்களால் பாடிப் பரத கண்ட இதிஹாசம், நீதிசாகரம் எனப்பெயரிட்டனர்.

 

1877-ல் செங்கல்பட்டு சுந்தரவிநாயகர் பதிகம், ஏகாம்பரேசர் பதிகம், காமாட்சியம்மன் பதிகம் இயற்றினார்.

 

1878-ல் தசாவதனியார் முன்னிலையில், திருக்கழுக்குன்ற வேதமலை அடிவரத்தில் அஷ்டாவதானம் செய்து காட்டினார்.

பதிகங்களைத் தவிர முதலியார் இயற்றிய நூல்கள் 40. பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் 96. அவ்வவ்வமயங்களிற் பாடிய சாத்து கவிகள் முதலியன 864.

(இவையனைத்தும் இந்த மலர் வெளியிட்ட நாள் வரையுள்ள கணக்கு)

 

அஷ்டாவதானத்தில் அவர் செய்த செய்யுட்களை அடுத்த பகுதியில் காண்போம்.

 

–தொடரும்

 

–subham–

TYPES OF FRIENDS (Post No.3595)

Compiled by London swaminathan

 

Date: 1 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  9-32 am

 

Post No. 3595

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Who is your reliable friend?

At home your wife is your reliable friend

In a foreign country, your knowledge or your wisdom is your best friend.

For a sick person, his or her medicine is the friend.

When you are dead Dharma is your best friend. Nothing else can accompany you. Whatever you have done good when you are alive will help you.

This is what our forefathers have found in course of thousands of years and have summarised their wisdom in two beautiful lines:-

Pravaase vidyaa- Knowledge in foreign country

Grhe bhaaryaa – Wife at home

Vyaadhitah ausadam- Medicine for the sick

Mrtasya dharma- Dharma for the dead

 

Vidyamitram pravaseshu bharyamitram Genesis ca

Vyaditasyausadam mitramdharmo mitram mrtasya ca

—-Sushasita Ratna Bhandagara159-287

xxx

How do you get Friends?

 

Aurasa-Born of same parents

Krtasambhandha-Related by marriage

Vamsa-Lineage

Rakshaka-Protector in suffering

 

Aurasam krtasambandhamtatha vamsakrmaghatam

Rakshakam vysanebhya ca  mitral njeyam caturvidham

—Kamandakiya Nitisastra

 

The protector in suffering is a very interesting one. In Tamil and Sanskrit literature, we come across several poems where in a girl falls in love with someone who protected her. This is a theme widely used in feature films as well. It may be saving someone is who is drowning or someone who is attacked by a tiger or someone dying in poverty.

 

Xxx

 

Tamil Wisdom

Tamil saint Tiruvalluvar has summarised the good things about friendship in ten couplets in the Tail Veda ‘Tirukkural’

 

Valluvar compares good and friends with the moon in one of his couplets:

The friendship of the worthy develops day by day like like the waxing crescent moon,

but foolish alliances deteriorate as the waning thereof –(Kural 782)

 

He says good friends are like great books:

As one sees greater beauty and derives enhanced pleasures, from the deeper study of a great book, Noble friendships gain in worth and grace day by day (783)

Swimmer Flavia Zoccari’s wardrobe malfunction (valluvar used this as a simile)

He adds,

Friendship is not for laughing and merry making. It is to hit at wrong movements by harsh advice.(784).

But Valluvar is at his best when he talks about how quick one should help one’s friend in distress:

Like the hand that, that goes to the rescue when a garment slips, stepping into help

When a friend faces adversity, is true friendship (788)

This is reflex action. When one’s garments slips, the hand picks it up quickly. We have seen many such awkward moments in the public events. Valluvar must also have seen such slips!

 

There are beautiful quotations about Friendship in Panchatantra and Valmiki Ramayana. I will give them in another post.

 

–subham–

 

புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (Post No.3594)

Written by S NAGARAJAN

 

Date: 1 February 2017

 

Time uploaded in London:-  6-39 am

 

 

Post No.3594

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

13-1-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3

ச.நாகராஜன்

t

“சுமார் நூறு கோடி கடற்பறவைகள் மற்றும் மிருகங்கள் பிளாஸ்டிக் பைகளினால் மடிந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகள் அவற்றின் குடலைச் சுற்றி இறுக்கவே அவை இறக்கின்றன”

                                                                 – அறிவியல் தகவல்

 

சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்காக முனைந்து பாடுபடும் இன்னும் சிலரைப் பார்ப்போம்.

 

 

மரீனா சில்வா

1958ஆம் ஆண்டு பிறந்த மரீனா சில்வா ஒரு அரசியல்வாதி. பிரேஸிலைச் சேர்ந்த இந்த பெண்மணி ரப்பரை எடுக்கும் ஒருவரின் மகளாகப் பிறந்து அமேஸான் காடுகளில் ரப்பரை எடுத்துக் கொண்டிருந்தவர். சட்டத்திற்கு விரோதமாக மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு மனம் நொந்து போன இவர் காடுகளைக் காக்க தீவிரமாக களத்தில் இறங்கினார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட இவர் பிரேஸில அமைச்சரானார். பல லட்சம் சதுரமைல் பரப்புள்ள காட்டு வளம் இவரால் காப்பாற்றப்பட்டது. காடுகளை அழிப்பவரை 75 சதவிகிதம் ஒழித்துக் கட்டினார். திடீரென்று 1500 கம்பெனிகளை ரெய்டு செய்து பத்து லட்சம் கியூபிக் அளவுள்ள சட்ட விரோதமாக வெட்டப்பட்ட ம்ரங்களைக் கைப்பற்றி அந்த நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கக் கூடிய வகையில் இவருக்கு நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் தான் உலக வளம் காப்பாற்றபபட முடியும் என்ற கொள்கையை ஆணித்தரமாக உலகெங்கும் முழங்கி வரும் துணிச்சல்கார பெண்மணி இவர்.

 

ரெபக்கா ஹாஸ்கிங்

பிபிசியில் காமரா உமனாகப் பணியாற்றிய பெண்மனி ரெபக்கா ஹாஸ்கிங். ஹவாய்க்குப் படம் எடுக்கச் சென்ற போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று இறந்து போன மிருகங்களைக் கண்டு மனம் நொந்து பரிதாபப்பட்டார். விளைவு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. மாட்பரி என்ற சிறு நகரில் உள்ள வர்த்தகர்களிடம் சென்று பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதற்கு பதிலாக மாற்று வழியைக் கையாளுங்கள் என்று வேண்டினார். நல்ல ஆதரவு கிடைக்கவே பிரிட்டனில் பிளாஸ்டிக் இல்லாத முதல் நகரம் என்ற பெயரை 2007ஆம் ஆண்டு மாட்பரி எடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனில் இன்னும் 80 நகரங்கள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தன.

ஆண்டு தோறும் 400 கோடி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் பிரிட்டனை பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக மாற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் இந்த உத்வேகமூட்டும் பெண்மணி. ‘அரசாங்கத்தை எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்’ என்பது இவர் மக்கள் முன் வைக்கும் கோஷம்!

 

ஆப்ரே மேயர்

தென்னாப்பிரிக்க இசைக் கலைஞரான இவர் லண்டனில் வசிப்பவர். உலக நாடுகளை பணக்கார நாடு ஏழை நாடு என்று பிரிப்பதற்குப் பதிலாக சுற்றுப்புறச் சூழல் அடிப்படையில் வெப்ப மாறுதலை வைத்துப் பிரிக்க வேண்டும் என்கிறார் இவர். நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடை ஒரு நாடு எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பது இவரது வாதம்.

இசையை விட்டு விட்டு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக மாறிய இவர், 1990இலிருந்து வாழ்க்கை வாழ்வதற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார். என்றாலும் தான் எடுத்துக் கொண்ட நல்ல பணியை விட்டு விடாமல் தொடர்கிறார்..

முதலில் இவர் கொள்கையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட பிரிட்டன் இப்போது இவரது கொள்கையை ஆதரிக்கிறது. பல நாடுகளும் நச்சுப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டன.

இசையை எழுதுவதும் நச்சுப்புகையைத் தடுப்பதும் பல விஷயங்களில் ஒன்று தான் என்று கூறும் இவர் அதை அழகுற விளக்குகிறார். இசைக்கான நோட்ஸை பேப்பரில் எழுதிப் பார்த்தால் அது என்னவென்றே யாருக்கும் புரியாது. ஆனால் நோட்ஸின் படி இசையை இசைத்தாலோ அனவரும் சொக்கி விடுவர். அதே போல எவ்வளவு நச்சுப்புகையை எந்த நாடு வெளியிடுகிறது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் நச்சுப் புகை கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ ஆரம்பித்தால் அதன் சுகமே தனி. அப்போது தான் அதன் மஹிமையை உணர முடியும் என்கிறார் இவர்.

பிரபல வயலின் வித்வானான இவர் தினந்தோறும் வயலினை இசைப்பதை இன்றும் தொடர்கிறார். ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தான் விட்டு விட்டார்.

உலகத்தை மாற்ற இவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாமல் போயிற்றே என்று அங்கலாய்க்கிறார் இந்த இசைக் கலைஞர்.

 

ஜியா ஜாங்கே

நடிகரும் இயக்குநருமான ஜியா ஜாங்கே ஸ்டில் லைஃப் (Still Life) என்ற திரைப்படத்தை எடுத்து உலகப் புகழ் பெற்றார். வெனிஸில் 2006ஆம் ஆண்டு நடந்த விழாவில் இந்தப் படத்திற்காக கோல்டன் லயன் விருதினைப் பெற்றார். சீனாவில்  மூன்று அணைகள் கட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் கேட்டினைச் சித்தரிக்கிறது படம். ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் ஒன்றிற்காக கட்டப்பட்ட இந்த அணைகளால் லட்சக் கணக்கானோர் தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் துணையைத் தேடி அலைகின்றனர். நகரிலோ வெள்ளப் பெருக்கு. லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, வன்முறை ஆகிய எல்லாவற்றையும் காட்டும் இந்தப் படம் சீன நாட்டு சென்ஸாரிடம்  என்ன பாடுபடுமோ என்ற கவலை முதலில் இருந்தாலும் சென்ஸார் படத்தை அனுமதித்து விட்டது. சீனாவின் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை திரைப்படத்தில் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டிய சிறந்த படம் இது. இவரைப் பார்த்து உத்வேகம் கொண்ட இதர கலைஞர்களும் இப்போது சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக சீனாவில் பாடுபட ஆரம்பித்து விட்டனர்.

 

இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் புத்துலகைக் காண விழையும் வித்தகர்களாக இன்று திகழ்கின்றனர். நாம் தெரிந்து கொண்டது இங்கு சிலரைப் பற்றி மட்டுமே!

உத்வேகமூட்டும் இவர்களைப் பின்பற்றி நாமும் ஒரு சிறு செயலைச் செய்தால் கூட உலகம் புத்துணர்ச்சியுடன் கூடிய புத்துலகமாக மாறும்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

ஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் (Svante August Arrhenius)   ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி.தோற்றம் (19-2-1859 மறைவு 2-10-1927) பூமியில் உயிரினம் ஏற்பட்டதற்குக் காரணம் அயல் கிரகங்களிலிருந்து வந்த உயிரினத்தாலேயே என்று ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டிலேயே முதன் முதலில் அவர் கூறினார். அதை இதர விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. ஆனால் இதே கருத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல பிரிட்டிஷ் விண் இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரெட் ஹாயிலும் கூறிய பின்னர் இந்தக் கருத்தின் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு ஏற்பட்டு விட்டது.

 அர்ஹேனியஸிற்கு ஏராளமான விஷயங்களில் ஆர்வமும் ந்ல்ல அறிவும் உண்டு. பூமி வெப்பமயமாதல் என்ற கருத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 1905ஆம் ஆண்டில் முதலில் சொன்ன அவர், கார்பன் டை ஆக்ஸைடே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

1903ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோப்ல பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. முதல் உலக மகா யுத்தத்தின் போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சாமர்த்தியமாக பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அர்ஹேனியஸ் விடுவித்தார்.

1901 லிருந்து 1927ஆம் ஆண்டு  முடிய இயற்பியல் மற்றும் இரசாயனம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெறத் தகுதியானோரைத் தேர்ந்தெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். பல் துறை விற்பன்னர் என்ற பெயரைப் பெற்ற பெரிய விஞ்ஞானி இவர்.

**********

 

 

ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை? (Post No.3593)

Written by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  18-50

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு — என்ற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 நான் எழுதி வெளியிட்ட கட்டுரையில், பாரதி, பாரதிதாசன், அருணகிரிநாதர், திருமூலர், நம்மாழ்வார், தொல்காப்பியர், நக்கீரர், தாயுமானவர், அப்பர், மாணிக்கவாசகர், திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி, திருவள்ளுவர் ஆகியோரின் பொன்மொழிகளை வெளியிட்டேன். இப்பொழுது சம்ஸ்கிருத நூல்களில் இன்பம், ஆனந்தம், மகிழ்ச்சி பற்றிய சில பொன்மொழிகளையும் பழமொழிகளையும் காண்போம்:-

 

எது அல்லது யார் இன்பம் தருவர்?

 

ஸ்வதாரா- தன்னுடைய மனைவி

போஜன- நல்ல சாப்பாடு

தனம் – பணம்

 

சந்தோஷஸ்த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)160-337

xxxx

ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை?

 

விஷயானந்த- உலக விஷயங்கள் தரும் இன்பம்

 

யோகானந்த – யோகத்தின் மூலம் பெறும் இன்பம்

 

அத்வைதானந்த- அத்வைதக் கொள்கையால் கிடைக்கும் இன்பம்( அஹம் பிரம்மாஸ்மி)

 

விதேஹானந்த- உடல் கடந்த இன்பம்

 

பிரம்மானந்த – இறை இன்பம்

 

விஷயே யோகானந்தௌ த்வாவத்வைதாந்த ஏவ ச

விதேஹானந்தோ விக்யாதா ப்ரஹ்மாந்தஸ்ச பஞ்சமாஹா

xxxx

 

சேரும்போது இன்பம், பிரியும்போது துன்பம்

 

அதிகாரம்- ஆட்சி அதிகாரம், பதவி அதிகாரம்

கர்பம்- கருவுருதல், கரு சிதைதல்

வித்தம்- பணம்

ஸ்வான மைதுனம்- நாய்களின் புணர்ச்சி

 

அதிகாரம் ச கர்பம் ச வித்தமன்வதேர் ச ஸ்வானமைதுனம்

ஆகமே சுகமாப்னோதி நிர்கமே ப்ராணசங்கடம்

 

xxx

 

ஆனந்த சீமா கலு ந்ருத்யசேவா- ஒருவரின் மகிழ்ச்சியின் எல்லை நடனத்தில் (தெரியும்)

 

ஏகத்ர சிரவாசோ ஹி ந ப்ரீதிஜனனோ பவேத் (மஹாபாரதம் 3-36-36)

ஒரே இடத்தில் நீண்டகாலம் வசிப்பது மகிழ்ச்சி தராது

 

கோ ஹி சாந்த்வைர்ன துஷ்யதி (பாரத மஞ்சரி) – ஆறுதல் தரக்கூடிய பேச்சு யாருக்குத்தான் மகிழ்ச்சி தராது?

 

மனத்திருப்தி வந்துவிட்டால் யார் பணக்காரன்? யார் ஏழை? (வைராக்ய சதகம் 53) மனசி ச பரிதுஷ்டே கோ அர்தவான்கோ தரிர்த்ரஹ

 

புத்தியுள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும், அதுதான் கடவுளை வணங்குவதாகும் (சந்தோஷம் ஜனயேத் ப்ராக்ஞஹ ததேவேஸ்வர பூஜனம்)

 

மகிழ்ச்சிக்கு இணையான செல்வம் இல்லை (பஞ்சதந்திரம்) சந்தோஷ துல்யம் தனமஸ்தி நான்யத்

 

மகிழ்ச்சியானவர்கள் வெற்றி அடைவர், அழுகின்றவர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவார்கள்

ஹசத்பிஹி க்ரியதே கர்ம ருதத்பிஹி பரிபச்யதே

 

–Subham–

 

 

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு

https://tamilandvedas.com/…/இன்பம்எங்கேஇன்ப

Translate this page

23 Apr 2013 – இன்று நாம் அலசும் விஷயம் ”இன்பம் எங்கே?” யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம். திருமூலர்: நான் …

அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 1 (Post No.3593)

Compiled by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  9-13 am

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact: swami_48@yahoo.com

 

 

சென்னை பூவிருந்தவல்லி கலியாணசுந்தர முதலியார் ஒரு அஷ்டாவதானி; அதாவது ஒரே நேரத்தில் எட்டுவித செயல்களைச் செய்யும் அற்புதம் நிகழ்த்துபவர். அவருடைய 60-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அவர்களுடைய மாணவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட மலர் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. அதில் படித்த சில விஷயங்கள்:-

 

இவர் சிறுவயதிலேயே தமிழ்ச் செய்யுட்களைப் படிப்பதிலும் மனனம் செய்வத்திலும் ஆர்வம் காட்டி வந்தார். வளர் மதி (சந்திரன்) போல் இவர் மதியும் வளர்ந்தது. சிறுவயதிலேயே இவருக்கு செய்யுள் இயற்றும்  ஆ ற்ற லும் வாய்த்தது.

 

தினமும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் முன், தெருக்கோடியிலுள்ள பிள்ளையார் கோவிலில் தானே இயற்றிய ஒரு செய்யுளின் மூலம் பிரார்த்திப்பார். சக மாணவர்களை அழைத்து நீங்களும் துதிபாடுங்கள் என்று சொல்லிக் கொடுப்பார். இதோ முதலியார் செய்த துதி:-

 

வாத்தியார் சொல்லிவைக்கும் வண்மையுள்ள பாடமெல்லாம்

நேர்த்தியா யென்மனதில் நேர்மையுடன் — பூர்த்தியுறச்

சுந்தர விநாயகனே தூய்மை பெறு நின்றாளென்

சிந்தையினிலே யிருக்கச் செய்

 

(நின்றாள் = நின் தாள் = உன்னுடைய பாதங்கள்)

xxx

இவர் தந்தையார் தினமும் திருமுருகாற்றுப்படையைப் படிக்கும்படி சொல்லவே முதலியாரும் அவ்வாறே செய்து முருக பக்தர் ஆனார்.

 

இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் ஒரு நாள் ஆசிரியர் “வாடியோட வனச மன்னன்” என்ற ‘திருவரம்பக் கலம்பகம்’ பாடல்

பற்றிப் பாடம் எடுத்தார். அதில் முருகன் ஓட என்ற வரிகள் வந்தது இவருக்குப் பிடிக்கவில்லை. இவரோ தீவிர சிவபக்தர். அதைப் படிக்க

மறுத்துவிட்டார். உடனே வாத்தியார், முதலியாரின் தந்தையிடம் இதைத் தெரிவித்தார்.

 

இதற்குப் பின்னர் 38ஆவது வயதில் முதலியார் பாடிய திரு ஒற்றியூர் கலம்பகத்தில் திருமால், லெட்சுமி, பிரம்மா எல்லோரும் ஓட என்னும் பொருள்படும் பாடலை இயற்றி தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார்!

xxx

பள்ளிக்கூடப் பாடம் படிக்கும்  நேரத்தில் படிக்காமல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தால் ஆசிரியருக்குப் பிடிக்காது. அந்தக் காலத்தில் வாத்தியார்கள், பிரம்பைக் கையில் எடுத்து  தண்டிப்பது வழக்கம்.இப்படி விளையாடிய மாணவர் அருகில், கலியாண சுந்தர முதலியாரும் நின்றிருந்தார். ஒவ்வொருவரையாக அடித்த வாத்தியார். முதலியாரையும் அடித்து வைத்தார். உடனே அவர் செய்யுள் வடிவில் தனது தந்தையிடம் புகார் கொடுத்தார். அந்தச் செய்யுளை, முதலியாரின் தந்தை ஆசிரியரிடம் எடுத்துச் சென்று காட்டியவுடன், வாத்தியார் தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் ஐரோப்பிய பிள்ளைகள் படித்த கத்தோலிக்க பாடசாலையில், முதலியாரைச் சேர்க்க அவரே உதவி செய்தார். ஆயினும் முதலியார், ஈராண்டுகள் அங்கே படித்துவிட்டு, தாலுக்கா பாடசாலையில் சேர்ந்து  தனது படிப்பைத் தொடர்ந்தார்.

 

 

இதோ முதலியார் சிறு பையனாக இருந்தபோது கொடுத்த புகார் மனு:-

 

எந்தவித குற்றமுமியானின்று செய்யாதிருக்க

என்றன் தொடையிலேன் சூடு வந்ததெனப்

பூரணமாய்க் கல்வி கற்ற பூங்கா வனக் கவியை

காரணநீ கேட்டிடுக கண்டு.

எந்தன் என்பது என்றன் — என்று இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் முதலியாருக்குத் தெரியாது.

 

xxxx

 

 

ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு கீரைத் தோட்டம் வழியாக மற்ற மாணவர்களுடன் முதலியாரும் நடந்து வந்துகொண்டிருந்தார். கீரைப் பாத்தியை பிள்ளைகள் மிதித்துவிட்டனர் என்பதால் சூரன் என்ற பெயருள்ள தோட்டக்காரன் எல்லோரையும் ஒரு வளார் கொண்டு விரட்டிக் கொண்டு வந்தான். எல்லோரும் ஓடிவிட்டனர். முதலியார் மற்றும் பொறுமையுடன் நின்றவுடன் அவருக்கு அடி விழுந்தது. உடனே கோபத்தில் கவி பொழிந்தார்.

 

தோட்டக்காரச் சூரன் றோன்றி வளாரடியைப்

போட்டான் முதுகில் பொறுக்கேனான் — தோட்டிதழ்சேர்

தாராரும் காளியே தாரணியிலன்னவனைப்

பாராமலேயிருக்கப் பண்

 

என்று தோட்டத்தின் மூலையில் இருந்த காளி கோவிலில் பாடிவிட்டு வந்தார். அந்தச் சூரன் அன்றிரவு தோட்டத்தில் தவறி விழுந்து கால் உடைந்து முடவன் ஆகிவிட்டான்.

 

பகுதி இரண்டில் அஷ்டாவதான அற்புதச் செயல்களைக் காண்போம்

 

தொடரும்……………