நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ: கம்பன் (Post No.3137)

sugreeva

Written by London Swaminathan

 

Date: 9 September 2016

 

Time uploaded in London: 9-04 AM

 

 

Post No.3137

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகம் முழுதும் அகதிகள் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. ஆயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று அடைக்கலம் கோருகின்றனர். அவர்களுக்குப் பல நாடுகள் அடைக்கலம் தருகின்றன. இவையெல்லாம் சரணாகதி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கோட்பாடு. யாராவது ஒருவர் உன்னைச் சரண் அடைகிறேன் என்று மற்றவர் காலில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்து தர்மக் கோட்பாடு. ராமாயணத்தில் மிகப் பெரிய அளவுக்குப் பேசப்படுவது சரணாகதி தத்துவம் ஆகும். இது ராமாயணத்தின் பிற்பகுதியில் விபிஷணன் சரண் அடையும்போது பெருமளவில் விவாதிக்கப்படுகிறது; விவரிக்கப் படுகிறது. அதற்கெல்லாம் பீடிகை போடும்படியாக கிஷ்கிந்தா காண்டத்திலேயே கம்பன் சில பொன்மொழிகளை உதிர்க்கிறான். இதோ இரண்டு பொன் மொழிகள்:–

 

ஒடுங்கல் இல்  உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி

தொடங்கின மற்றும் முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ

 

பொருள்:-

பரந்த இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் விரும்பியவற்றை உதவி, வேள்வி, தவம் முதலியவற்றை நிறைவேற்றும்படி மேலோர் செய்வர் அல்லவா? அததகைய அறங்களுள், எமன் போன்ற எதிரிக்குப் பயந்து நம்மிடம் சரண் அடைந்தவர்க்கு அஞ்சாதே என்று அருள் காட்டுவதை விடப் பெரிய அறம்/தர்மம் வேறு ஏதாவது உளதோ?

 

இது யார் சொன்னது? எங்கே சொன்னது?

 

ராம லெட்சுமணர்களைச் சந்தித்த அனுமன் சுக்ரீவனுக்கு, வாலியினால் ஏற்பட்ட துனபங்களை விவரித்துவிட்டு சரண் அடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது (இந்து) தர்மம் அல்லவா? என்கிறான்.

28_24_kishkinta_vali-fight-ground

சுக்ரீவன் இதைத் தன் வாயாலேயே சொல்லி காலில் விழும்  ஒரு பாடலும் வருகிறது:–

 

முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை

இருள்நிலைப் புறத்தின் காறும் உலகு எங்கும் தொடர இக்குன்று

அரண் அடைத்து ஆகி உய்ந்தேன்  ஆர் உயிர் துறக்கலாற்றேன்

சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்

பொருள்:-

என் அண்ணனான வாலி, தம்பியாகிய என்னை அடிப்பதற்காக ஓங்கிய கைகளுடன் இவ்வுலகத்துக்கு அப்பாலும் எல்லா உலகங்களிலும் என்னைத் துரத்தி வந்தான். இம்மலையே பாதுகாப்பான இடம் என்பதால் இங்கே வந்தேன்; உயிரை விடவும் மனம் இல்லை; உன்னை அடைக்கலம் அடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குக் கடமையாகும் – என்று சொன்னான் சுக்ரீவன்

 

என்னைத் தாங்குதல் தருமம் என்றான் என்ற வாக்கியத்தில்தான் இந்து தர்மக் கோட்பாடு பளிச்சிடுகிறது.

 

இன்று உலகம் முழுதும் அகதிகள் வாழ வழிவகுத்தது இந்து மதம். சுக்ரீவன், வாலி என்பவர்கள் ஓரிரு தனி நபர்கள். ஆயினும் போரில் சரண் அடைந்தவர்களையும் காப்பாற்றுவது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது. சரியான ஆயுதம் இல்லாதவர்ளையும், ஆயுதமே வைத்திராதவர்களையும் தாக்கக்கூடாது என்பதும் தெளிவாககக்  கூறப்பட்டுள்ளது.

 

புருஷோத்தமன் (போரஸ்) என்ற மன்னனை அலெக்ஸாண்டர் வென்று விட்டான். உனக்கு என்ன வேண்டும்? உயிர்ப்பிச்சை வேண்டுமா? இவ்வளவு சிறிய மன்னனாலும் என்னையே திணறடித்துவீடாய்! — என்றான். அவனோ சிறிதும் அஞ்சாமல் என்னை மன்னன் போலவே நடத்த வேண்டும் என்றான். அதன்படியே செய்தான் அலெக்ஸாண்டர். இது தர்மம் என்பதால் அப்படிக்கேட்டான் புருஷோத்தமன (போரஸ்). இந்துமதத்தின் பெருமையையும் பாரதத்தின் பெருமையையும் அறிந்து யோகிகளைச் சந்திக்கவே இந்தியாவுக்கு வந்தவன் அலெக்ஸாண்டர் என்பதால் உடனே அவனை மன்னன் போலக் கருதி அவன் ராஜ்யத்தை அவனிடமே ஒப்படைத்தான் என்பதை நாம் அறிவோம்.

 

வாழ்க சரணாகதி தத்துவம்!! வாழ்க அகதிகள்!!

 

 

 

நூறு வயதானவர்களின் மகிமை! (Post No.3136)

100-yr-old-berry-seller

100 year old lady sells berries on the road!

Written by London Swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 21-34

 

 

Post No.3136

 

Pictures are taken from various sources; thanks.

A over 100 year old Sadhu at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

A over 100 year old Sadhu with his incredible long hair at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

ஒரு பந்தியில் (வரிசையில்) யார் யார் உட்கார்ந்தால் அந்த வரிசையே தூய்மையாகிவிடும், புனிதமாகிவிடும் என்று மனுஸ்மிருதியில், மனு ஒரு பட்டியல் கொடுக்கிறார். அதில் 100 வயதுக் கார்களையும் சேர்த்திருக்கிறார். அவர்கள் அனுப்பும் VIBRATIONS வைப்ரேஷன்ஸ் — எல்லோரையும் உயர்த்திவிடும். அதுவும் அவர்களை யாருடன் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கையில் 100 வயதானவர்களின் மதிப்பு இன்னும் உயர்கிறது!

அவர்களுக்கு “பங்தி  பாவனாள்” என்று பெயர்

 

ஆக்ரயா: சர்வேஷு வேதேஷு சர்வ ப்ரவசனேஷு ச

ஸ்ரோத்ரியான் அன்வயஜா: ச ஏவ விக்ஞேயா:  பங்க்திபாவனா:

 

வேதார்த்தவித்ப்ரவக்தா ச ப்ரஹ்மசாரி சஹஸ்ரத:

சதாயுஸ்சைவ விக்ஞேயா: ப்ராஹ்மணா:  பங்க்திபாவனா:

 

மனு 3- 184-186

 

வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், அதன் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= ஷடங்கம்=சடங்கு) அறிந்தவர்கள், அவர்கள் வம்சத்தில் பிறந்தவரகள், ஆகியோர் வரிசையைப் புனிதப்படுத்துவர்.

 

குருவினிடத்தில் வேதப் பொருளை அறிந்தவன்,  அதைச் சொல்லிவைப்பவன், பிரம்மச்சாரி, ஆயிரம் பசுக்களை தானம் செய்தவன், நூறு வயதானவன் ஆகியோரும் எங்கே உட்காருகிறார்களோ அந்த வரிசையே தூய்மை ஆகிவிடும்!

 

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் மனு இதைச் சொல்லுகிறார்.

0phil

இந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் வேதம் கற்றவர்கள், தானம் செய்தவர்கள். ஆனால் இதில் வயதுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டிருப்பது விஷேஷமானது.  நூறு வயது ஒருவர் வாழ்கிறார் என்றால் அவர் வாழ்வு சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்; மேலும் வேத மந்திரங்களில்  நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது.

 

வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும்.

 

வாழ்க நூற்றாண்டு கண்டோர்!

Riddles in the Vedas (Post No.3135)

dogs-circle

Compiled by London Swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 16-38

 

 

Post No.3135

 

Pictures are taken from various sources; thanks.

 

Most of the foreign writers who wrote about Vedas, or in general Hindu scriptures, fall under five categories; so one must be careful before reading any foreigner’s book on Hinduism:-

1.Those who came to propagate their religion

2.Those who colonised our territories

3.Those who want to be on headlines by creating controversies

  1. Half-baked researchers; ignoramuses

5.Those who write for international book companies or to anyone who gives money.

So before buying a book use it as the touch stone. Better read books written by Indian authors except Marxists and atheists. There is no need to say anything about the bluffers who are attached to Marxism or Atheism.

 

Another touch stone is to see whether these trouble makers have written criticizing about any other religion. To my knowledge they did not write anything against other religions. They are cowards! Most of them are morally corrupt and bankrupt. They can’t be the judges of our culture.

Don’t ask questions about anything before you read a scripture in full. You cannot criticise anything before reading and understanding a book.

 

Hindu Scholar Subash kak has described the symbolism in the Vedic literature. Here is a small excerpt from his book:

 

Source book:

The Asvamedha, The Rite and its Logic by Subhash Kak, Delhi, 2002

dogs2

“The central idea behind the Vedic system is the notion of ‘bandhu’ (bindings or connections) between the astronomical, the terrestrial, the physiological and the spiritual. These connections are described in terms of number of characteristics, such as the 360 bones of the infant (which later fuse into the 206 bones of the adult) and the 360 days of the year. In a similar vein, the Garbha Upanishad says that the body has 180 sutures, 900 sinews. The Brhadaranyaka Upanishad takes the number of Nadis to be 72,000. All these numbers are related to 360, the nominal day count of the year.

Modern research has shown that all life comes with its inner clocks. Living organisms have rhythms that are matched to the periods of the Sun or the Moon.

 

It is reasonable to assume that the Vedic thinkers were aware of these connections, as were the ancient people in other cultures. The uniqueness of the Vedic vision was the extension of the bindings to the body to those in the inner landscape of the spirit.

 

The Vedic rites were meant to help the participant transform themselves this was accomplished through sacrifice. The place of sacrifice represents cosmos. Three fires are used which stands for the three divisions of space. The course of the sacrifice represents the year, and all such rituals forms part of continuing annual performances.

 

The riddle of the sacrifice is best expressed in the Asya Vamasya Hymn (Rig Veda 1-164):

I ask you about the farthest end of the earth

I ask you about the navel of the universe

I ask you about the seed end of the bursting horse

I ask you about the final abode of the speech

 

This altar is the farthest end of the earth

This sacrifice is the navel of the universe

The Soma is the seed of the bursting horse

This voice is the final abode of speech

 

The mystery of the sacrifice, with its suspension between life and death, reality and magic, logic and mystical experience is communicated in a language which is full of paradox. For example, it is stated that that Prajapati is Agni’s father, but he is also Agni’s son (SB6-1-2-26); also the gods sacrificed to the sacrifice with the sacrifice (RV 1-164-50)

 

The sacrifice is the drama associated with it, but rather the transformation accruing from it. Says Kena Upanishad 2-3:

“He by whom Brahma is not known, knows it.

He by whom it is known, knows it not. It is not

Known by those who know it; it is known by those who do not now it”.

Vedic ritual is also related to ongoing struggle, between the Devas and Asuras, where the Devas represent the higher cognitive centres in man and the Asuras represent the lower centres associated with the body.

dogs-1

WHITE DOG STORY IN UPANISHAD

Unfortunately, to a beginner trying to understand the Vedic system, the asuric position appears most natural and this is responsible for much misunderstanding of Vedic rites and their meaning.

 

Let me add that the Chandogya Upanishad warns us about those who do not understand that the rite is about paradox and regeneration, and not the actual mechanics of the theatre. It compares the ritual of such people, who look only at the outer performance, to the Udgitha of the dogs. That is what Vaka Dalbya (also called Glava Maitreya) saw of the dog udgita (C.U.1-12)

 

A white dog appeared and other dogs gathering around him, asked, “Sir, sing and get us food, we are hungry”.

 

The white dog said to them, “come to me tomorrow morning.”

 

The dogs came on, holding together, each dog keeping the tail of the preceding dog in his mouth, as the priests do when they are going to sing praises with the Vahispavamana hymn. After they had settled down, they began to say Hin.

 

Om Let us eat! Om, let us drink!”

 

The dangers of misreading a highly symbolic language were recognised. The Puranas warn that the asuras copy whatever the devas do and do it on a grander scale.

 

— Subham–

 

 

 

 

 

 

வேதத்தில் சுவையான குதிரைக் கதை! (Post No.3134)

horsehead

Translated by London swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 9-36 AM

 

 

Post No.3134

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதம் என்பதற்கு மறை என்று பொருள்; அதை வெளிநாட்டுக்காரர்கள் -மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்திருக்கிறரார்கள். இவர்களில் 5 வகை உண்டு:–

 

1.மதத்தைப் பரப்ப வந்தவர்கள்

  1. நாடு பிடிக்க வந்தவர்கள்

3.குறைகூறுதல் மூலம் பெயர் பெற விரும்புவோர்

  1. அறியாமையில் ஆராய்ச்சி செய்யும் அரை வேக்காடுகள்

5.சர்வதேச நிறுவனங்கள், புத்தகம் வெளியிடும் கம்பெனிகளிடம் பணம் வாங்குவோர்; அதாவது கூலிக்கு மாரடிப்போர்.

 

ஆகையால் இவர்கள் எழுதிய புத்தகங்களை முதலில் படிக்காதீர்கள். இந்தியர்கள் எழுதிய நூல்களை — திராவிட/மார்கஸீய பேத்தல்  — இல்லாதோர் நூல்களை முதலில் பயிலுங்கள்.

 

பகவத் கீதையையே படிக்காமல், எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்கத் துவங்காதீர்கள்!

 

ராமாயணத்தையே படிக்காமல் வாலியை ராமன் கொன்றது சரியா? – என்று பட்டிமன்றம் பேசாதீர்கள்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்தையே கற்காமல் தமிழின் பெருமையை, தமிழர்தம் பெருமையைப் பேசாதீர்கள்!

 

எந்த ஒரு விஷயத்தையும் அதன் முழுப் பொருளில், அது வந்த கால கட்டத்தில், அதே காலத்தில் மற்றவர் இருந்த நிலையில் வைத்து எடை போட வேண்டும்.

 

polands

இதோ மறை பொருள் உடைய ஒரு வேதக் கதை:–

சுபாஷ் கக் என்பவர் ஆங்கிலத்தில் அஸ்வமேத யக்ஞம் பற்றி எழுதிய புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்த குதிரைக் கதை:–

 

அதர்வணனின் மகன் தத்யாங்க் (பிற்கால இலக்கியத்தில் ததீசி). அவரைப் பற்றி ரிக் வேதத்தில் 1-117-22, 1-84 துதிகளில் செய்திகள் உள.

அவருக்கு யாகத்தின் ரஹசியம்- உட்பொருள்– மறை பொருள் தெரியும்.

 

சதபதப் பிராமன்ணத்தில் (14-1-18/24) இந்தக் கதை வருகிறது:-

 

“தத்யாங்கனுக்கு ஒரு ரகசியம் தெரியும் யாகத்தின் தலையை எப்படி மீண்டும் வைப்பது, எப்படி அதன் மூலம் யாகம் நிறைவு பெறும் – என்பது தெரியும்’

 

இந்திரன் சொன்னான்: “இந்த ரஹசியத்தை நீ யாருக்காவது சொன்னால் உன் தலையை வெட்டி விடுவேன்”  என்று

 

அஸ்வினி தேவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்

 

அவர்கள் தத்யாங்கனிடம் சென்று, எங்களை மாணவர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் -என்றனர்

 

அவர் கேட்டார், எதைக் கற்க வந்திருக்கிறீர்கள்?

 

அஸ்வினி தேவர்கள் இருவரும் சொன்னார்கள்:- அதுதான்; யாகத்தின் தலையை எப்படி மீண்டும் வைப்பது, அதன் மூலம் யாகம் எப்படி நிறைவு பெறும்– என்ற ரஹசியம்.

 

தத்யாங்கன் சொன்னார்: இதை நீ வேறு யாருக்காவது கற்பித்தால் உன் தலையை வெட்டிவிடுவேன் என்று இந்திரன் சொன்னான் ; எனக்கு பயமாக இருக்கிறது. என் தலை போய்விடும்; ஆகையால உங்களை நான் மாணவர்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது.

 

அஸ்வினிதேவர்கள் சொன்னார்கள்: நாங்கள் இருவரும் உங்களைக் காப்பாற்றுவோம்

எப்படிக் காப்பாற்றுவீர்கள்?

எங்களை நீங்கள் மாணவர்களாக ஏற்றுக் கொண்டவுடன் உங்கள் தலையை வெட்டி ஒளித்து வைத்து விடுவோம். ஒரு குதிரையின் தலையைக் கொண்டுவந்து பொருத்துவோம்; ஆதன் மூலம் கற்பியுங்கள்; இந்திரன் வந்து குதிரைத் தலையை வெட்டுவான். பின்னர் உங்களுடைய பழைய தலையை எடுத்து வந்து பொருத்தி விடுவோம்”;அதை ஏற்று தத்யாங்கன் அவர்கள் இருவருக்கும் கற்பித்தார்.

அவரும் கற்பித்தார்; உண்மைத் தலை போய் குதிரைத் தலை வந்தது; இந்திரன் வந்தான்; தலையை வெட்டினான்; பின்னர் நிஜ தலையை தத்யாங்கனுக்கு அஸ்வினி தேவர்கள் பொருத்தினர்.

 

island-horse

தத்யாங்கன் சொல்கிறார் (சதபத பிராமன்ணம் 6-4-2-3:

 

யாகத்தின் முக்கிய வாஹனம் “பேச்சு”; சொற்களுக்குதான் மாற்றம் செய்யும் சக்தி உண்டு; அது பேசுபவரையும் மாற்றிவிடும்; ஒருவர் பேசியவுடன் அதே ஆளாக இருப்பதில்லை.; யாகமானது ஒருவரின் தலையை இழக்கச் செய்துவிடும்; குதிரைத்தலை என்பது இந்த அபூர்வ ஞானத்தின் ஆதாரம் ஆகும்.

 

அதாவது குதிரைத்தலை என்பது அடையாளம்தான். குதிரைத் தலை மாறி உண்மைத் தலை வரும் என்பது பேசுபவர் , மற்றவர்களை மாற்றுவதோடு தானும் மாறிவிடுவார் என்பதாகும். யாகம் என்பது ஒருவர் “தலையை” இழக்கச் செய்துவிடும்.

 

–சுபம்–

லண்டனில் புதிய இந்திய ஹோட்டல்!(Post No.3133)

london-hotel

Compiled by London swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 6-24 AM

 

 

Post No.3133

 

Pictures are taken from various sources; thanks.

 

 

லண்டனில் ஒரு பள்ளிக்கூடம் இருந்த இடத்தில் ஆடம்பர இந்திய ஹோட்டல் வருகிறது. ஒரு நாள் அறை வாடகை 350 பவுன் (35000 ரூபாய்)! இதில் 70 அறைகள் இருக்கும். வருவோருக்கு இந்து முறையில் நமஸ்தே கிடைக்கும்; ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவும் இருக்கும். யோகாவும் பயிற்றுவிக்கப்படும். ஹோட்டல் முழுதும் இந்தியப் பொருளாலேயே அலங்கரிக்கப்படும்.

 

இந்திய வந்தனோபசாரத்தை — விருந்தோம்பலை — மக்களுக்குக் காட்டுவது முக்கிய நோக்கமாகும். இது சவுத் பேங்கில் (South Bank)  டவர் பிரிட்ஜ் (Tower Bridge) அருகே இருக்கிறது. ‘நான்’ , ரொட்டி, இந்திய தேநீர், சமோசா முதலியவற்றுடன் பல்வேறு வகை இந்திய உணவு பரிமாறப்படும். இது லலித் ஹோட்டல் குரூப்பைச் சேர்ந்தது. ஹோட்டலின் விலை ஐந்து கோடி பவுன் (500 கோடி ரூபாய்).லலித் சூரியின் மனைவி டாக்டர் ஜ்யோத்ஸ்னா சூரி இதன் மானேஜிங் டைரக்டர்.

 

கட்டிடத்தின் விலை 15 மில்லியன் பவுன்கள். அதற்குப்பின்னர் அதை ஹோட்டலாக மாற்ற 30 மில்லியன் செலவு!

 

லண்டனுக்குப் போனால் ஜாக்கிரதை!

chinese-airlines

லண்டனில் இந்தியர்கள், பாகிஸ்தானியர், கறுப்பர்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் போகாதீர்கள்; உங்கள் பாதுகாப்புக்காக இதைச் சொல்லுகிறோம் — என்று சீன விமான நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது இனவெறி விளம்பரம் என்று லண்டனில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது

 

ஏர் சைனா Air China விமானத்தில் போடப்படும் பத்திரிக்கையில் In flight magazine இந்தக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. பெண்கள் தனியாக போகக்கூடாது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எழுதியுள்ளனர்.

 

இது இனச் சிறுபானமையினருக்கு மட்டும் எதிரானதல்ல. லண்டனுக்கே எதிரான அறிவிப்பு என்று எம்.பி.க்களும் பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

குளவிக்கூடு: ரயில சர்வீஸ் ரத்து!

 

அதிகாலை எழுந்து அவசரம் அவசரமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி  வந்தால் ஒரு விநோத அறிவிப்பு?

 

“நார்பிடன் Norbiton  வழியாக லண்டன்  வா ட்டர்லூ London Waterloo ஸ்டேஷனுக்குச் செல்லும் காலை 5-51 ரயில் சர்வீஸ் ரத்து என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம். ரயில் பெட்டிகளில் இரவோடு இரவாக குளவிகள் கூடு கட்டி இருந்தன என்பதே இதற்குக் காரணம்!”

wasp

இதைக் கேட்ட அதிகாலை பயணிகளுக்கு ஒரே கோபம். குளவி கூடு கட்டினால் அதை விலக்கிவிட்டு ரயிலைக் கொண்டுவரக்கூடாதா? அல்லது குளவிகள் உள்ளே போகாமல் கதவுகளை மூடி வைத்திருக்கக்கூடாதா? என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.

 

கோடை காலம் வந்துவிட்டால் ரயில்கள்  மெதுவாக வேறு ஓடும்! ரயில் பாதை வெப்பத்தால் விரரிவடைவதால் வேகக் கட்டுப்பாடு அமலுக்கு வரும். குளிர் காலம் வந்துவிட்டாலோ,  பனி  பெய்து ரயிலகள் ரத்தாகும். ஒரு நாள் லண்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் பாடம் நடத்திவிட்டு, ” பையன்களே  , பெண்களே! வெளியே பனி பெய்வதை ஜன்னல் வழியாகப் பாருங்கள். எல்லோரும் தாமதமின்றி வீடு போய்ச் சேருங்கள் என்று சொல்லிவிட்டு ஓடி வந்து ரயிலில் ஏறினேன். ‘இந்தப் பக்கம் ரயில்கள்’ போகாது’ ‘அந்தப் பக்கம் ரயில்கள் போகாது’ என்று அறிவிப்பு வந்துகொண்டே இருந்தன. பல லைன் Lineகளுக்கு மாறி மாறி பாதி தூரம் வந்தேன். “மிக பயங்கரமாக பனி பெய்வதால் எல்லா பஸ்களும் எல்லா ரயில்களும் ரத்து; ரயிலை விட்டு இறங்குங்கள்” என்று ஒரு ஸ்டேஷனி ல் அறிவித்தார்கள். இரவு முழுவதும் கெண்டகி ப்ரைடு சிக்கன் Kentucky Fried Chicken  கடையில் ஒரு மூலையில் குந்தி இருந்தேன். நானோ வெ ஜிட்டேரியன் Vegetarian . காப்பிகூட வாங்கப் பிடிக்கவில்லை. அதிகாலையில் பக்கத்தில் வசித்த ஒருவரை அழைத்தேன். அவரும் எனக்கும் காரை ஓட்ட பயமாக இருக்கிரது உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் என் கார் உங்கள் ஸ்டேஷன் வரை வரும் என்று சொல்லி வந்தார். தப்பித்தேன் பிழைத்தேன் என்று காரில் ஏறிச் சென்றேன் அடுத்த சில மணி நேரத்தில் பஸ்கள் ஓடத் துவங்கின. அதிகாலையில் வீடு வந்து சேர்ந்தேன். உண்மையில் ஒருவருடைய முட்டாள்தனமான முடிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் ஓடக்கூடிய அளவுக்குதான் பனி பெய்திருந்தது.

ஆகையால் குளவி மட்டுமில்லை; கொசுவுக்குக் கூட லண்டன் போக்குவரத்து நின்றாலும் நிற்கும்!

 xxx

லண்டன் திருடன் பலே திருடன்!

 

சில நாட்களுக்கு முன் லண்டனில் கற்பழிப்புகள் அதிகரிக்கின்றன. மிகவும் பாதுகாப்பாற்ற நகரம் லண்டன் என்று பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் செய்திகள் போட்டன. இன்று மாலையில் உலகம் முழுதும் சுற்றிய ஒருவரின்  மோட்டார் சைக்கிள் லண்டனில் தொலைந்து போயிற்று.

 

லண்டன் கென்சிங்டனைச் Kensington  சேர்ந்த எலி கூரி Eli Coory  படத் தயாரிப்பாளர்.  அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுவதற்காக மூன்றாண்டுகளாக மோட்டார் சைக்கிளில் உலக வலம் வருகிறார். அவர் சொன்னார்: “அலாஸ்காவில் கரடிகளுக்குப் பயப்படாமல் அதன் நடுவே ஓட்டி வந்தேன். சிலி நாட்டில் எரிமலை பொங்கும் போதும் மலைக் கணவாய்களைக் கடக்கையில் காட்டு நாய்கள் விரட்டும் போதும் ஓட்டி வந்தேன்.  உலகில் பாதுகாப்பற்ற இடங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் இடையூறின்றி ஓட்டி வந்தேன். இளம் வயது புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்ட இதைச் செய்தேன். இறுதியில் லண்டனில் ஓட்டல் வாசலில் நிறுத்தியிருந்த வண்டியை யாரோ களவாடிவிட்டார்கள்”.

 

(அவருடைய பைக்கின் விலை 18,000 பவுன்கள்).

 

“இதயமில்லாத் திருடர்கள் இப்படிச் செய்துவிட்டார்களே. அதுவும் உலகப் புகழ் பெற்ற லண்டனில் இப்படித் திருட்டு நடந்தது மிகவும் வெட்கக்கேடு” என்றார்.

 

–subam–

 

 

Interesting Horse Story from the Vedas (Post No.3131)

horsehead

compiled by London swaminathan

 

Date: 7 September 2016

 

Time uploaded in London: 19-27

 

 

Post No.3131

 

Pictures are taken from various sources; thanks.

 

island-horse

“Vedic ritual is a highly systematized performance of various elements, that include manipulations, formulas, liturgy, exchanges where some of these elements are varied according to specific rite these elements have symbolic significance”.

 

“The horse appears in the Rig Veda in connection with the story of Dadhyanc, the son of Atharvana, who knows the mystery of the sacrifice. Dadhyanc is the teacher of Madhu-vidya, the mystical doctrine that brahman is present every where (SB 4.1.5.18). the name of this Vidya comes from the essence of sweetness in all flowers, transformed by bees into honey, which is not apparent to anyone.

(S.B.= satapata Brahmana, Madhu= Honey, Vidya= knowledge, doctrine)

 

“Upon Dadhyanc a horse head is placed by the Asvins, who wish to learn his knowledge (R.V.1-117-22). This story is explained in SB 14-1-18/24:

Now, Dadhyanc Atharvana knew this essence, this sacrifice – how this head of the sacrifice is put on again, how this sacrifice becomes complete. Indra said to him, ‘if you teach this (mystery) to anyone else, I will cut off your head.’

 

Now the Asvins heard this : Dadhyanc Atharvana knows this pure essence, this sacrifice – how this head of the sacrifice is put on again, how this sacrifice becomes complete.”

 

They went to him and said, “Let us be your pupils”.

He asked, “What do you wish to learn?”

“This pure essence, this sacrifice – how the head of sacrifice is put on again, how the sacrifice becomes complete”, they replied.

 

He said, “Indra has told me, ‘if you teach it to anyone else, I will cut off your head’. Therefore, I fear that he might indeed cut off my head. I will not accept you as pupils.”

They said, “We too will protect you from him.”

“How will you protect me?”, he asked.

They said, “When you accept us as your pupils, we will cut off your head and put it aside elsewhere. Then we will bring the head of a horse and put it on you, and you will teach us with it. When you have taught us, Indra will cut off that head of yours. Then we will bring your own head, and put it on you again”. He agreed and accepted them as pupils.

 

When he had received them as pupils, they cut off his head and put it aside elsewhere, and having brought the head of a horse, they plaed it on him. With that he taught them. And when he had taught them, Indra cut off that head of his. Then they brought his own head and placed it on him again.

 

This story provides a lesson abacus the meaning of sacrifice. Dadhyanc Atharvana, SB 6-4-2-3 tells us, is speech, which is the true vehicle of sacrifice. Speech has the power to transform and it transforms the speaker himself. Having spoken, one is not the same person,so the sacrifices causes one to lose one’s original head. The horse is head (here symbolizing time) is the source of transcendent knowledge.

 

There is another reference to Dadhyanc in the Rig Veda (1-84). Here Indra uses his bones to slay ninety-nine Vrtras. There are various versions of this story.in one, Indra finds the bones of a dead Dadhyanc to fashion a thunderbolt to slay the Asuras (demons). In the Mahabharata (12-343) version of the story, Dadhyanc, upon hearng the unstoppable power of the demon Visvarupa, the son of Tvastr, gives up his body so that Indra can fashion a thunderbolt out of his bones. With this irresistible weapon, Indra triumphs over Visvarupa. This shows how words, even old ones like the bones of Dadhyanc represent, have the power to vanquish ignorance.

polands

Source book:

The Asvamedha, The Rite and its Logic by Subhash Kak, Delhi, 2002

 

My old post on the same subject:

Horse Headed Seer: Rig Veda Mystery – 1
Research Paper written by London Swaminathan

Post No.1255; Dated 27th August 2014.

 

ஆரியம் முதல் பதினெண் பாடையில்…… கம்பன் மொழி (Post No.3130)

tamil-alphabet

Written by London swaminathan

 

Date: 7 September 2016

 

Time uploaded in London: 8-23 AM

 

 

Post No.3130

 

Pictures are taken from various sources; thanks.

 

பழங்கால இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய அளவில் பேசப்பட்டன என்பதை கம்பனும் பாரதியும் நமக்கு சொல்லும் அழகே தனி!

 

பம்பை நதியின் இயற்கை அழகை கம்பன் வருணிக்கும் அழகு படித்து இன்புறத் தக்கது. முதலில் பம்பை என்னும் நதி பற்றி ஓரிரு வார்த்தை; இது பழங்காலச் சொல். கேரளத்தில் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பம்பை நதி உளது; தென் அமெரிக்காவில் ஒரு பம்பை நதி உளது; கிஷ்கிந்தா காண்டத்தில் ராம பிரான் கண்ட பம்பை நதி வட இந்தியாவில் உளது!

 

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்

பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என

ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பில

சோர்வில விளம்பு புள் துவன்றுகின்றது

 

பொருள்:–

அந் நீர் நிலை சம்ஸ்கிருதம் முதலான பதினெட்டு மொழிகளில் நல்ல தேர்ச்சி பெறாத அற்பப் புலமை உடையவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து ஆரவாரம் செய்வது போல இன்ன இன்ன பறவையின் ஒலி இது இது என்று ஆராய்ந்து அறிய மாட்டாதவைகளும், ஒன்றுடன் ஒன்று ஒத்திராதவைகளுமாய் உள்ள ஒலிகளை ஓய்வின்றி ஒலிக்கும் பலவகைப்பட்ட பறவைகள் கூடி நெருங்கி இருக்கப்பெ ற்றதாகும்.

 

இதிலிருந்து தெரிவதென்ன?

sanskrit_vwl

1.இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய மொழிகளாகக் கருதப்பட்டன. அதில் சம்ஸ்கிருதமே முதலிடம் பெற்றது

2.ஆரியம் என்றால் ரிஷி முனிவர்கள், வடக்கில் வாழும் பண்பாடுமிக்கோர் என்னும் பொருள், சங்க இலக்கியம் முதல் கம்பன் காலம் வரை இருந்தது. அதாவது மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் “சிவபூஜையில் கரடி புகுந்தது போல” புகும் வரை ஆரிய என்ற சொல்லுக்கு இனத் துவேஷப் பொருள் இல்லை. கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இன வெறியைப் பரப்பியதால் ஹிட்லர் தன்னை ஆரியன் என்று சொல்லி மற்றவர்களைக் கொடுமைப்படுத்தியதை வரலாறு படித்தோர் அறிவர் (விவரங்களை எனது பழைய கட்டுரைகளில் காண்க)

 

  1. ஆரியருக்கு எதி ர்ப்பதம் பூரியர் என்பதாலும் இது உறுதியாகிறது அதுவே ஆங்கிலத்தில் இன்றும் ஸ்பூரியஸ் (Spurious = false, fake, illegitimate) என்று வழங்கப்படும்

 

4.கம்பன் பல்வேறு மொழிகளைப் பயின்றான் அவனே வால்மீகி புகழைப்பரப்ப அவனுடைய ராமாயணத்தை மொழிபெயர்ப்பதாக பால காண்டத்தில் கூறியதையும் அகத்தியனையும் தமிழையும் வானளாவப் புகழ்வதையும் எனது முந்தைய கட்டுரைகளில் காண்க

 

5.பறவைகள் பற்றிய தமிழனின் அறிவையும் இப்பாடல் விளக்கும். ஒவ்வொரு பறவையையும் அதனுடைய ஒலியைக்கொண்டே அறிவான் தமிழன்.ஆனால் பம்பை நதிக்கரையிலோ எல்லாப் பறவைகளும் சேர்ந்து ஒலித்தது “குறை குடம் தழும்பியது போல” இருந்தது!

 

பாரதி மொழியில்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனிற்

சிந்தனை ஒன்றுடையாள் (பாரதியார் படல்)

 

என்று பாரத தேவியைப் பாரதி புகழ்வதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பேரின்பம் தரும்.

 

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

இறுதியாக ஒவ்வொரு மொழியும் அவரவர் காதுக்கு இனிமையானது என்பதை உணர்தல் வேண்டும். பார்லிமெண்டில் பேசிய சேத் கோவிந்த தாஸ், தமிழ் மொழி என்பது தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்கினால் எப்படி ஒலி வருமோ அது போலக் கடூரமானது என்று கிண்டல் செய்தார். உடனே தி.முக. உறுப்பினர்கள், இந்தி மொழியில் உள்ள மிகப்பெரும் இலக்கியம் டெலிபோன் டைரக்டரிதான் என்றும் செப்பினர். இரண்டும் மொழிப்பற்றினாலும், அறியாமையினாலும் வெளிப்பட்ட கூற்றுகள்!

 

பி.பி.சி. தமிழோசையில்…………

 

லண்டனில் புஷ் ஹவுசில் (Bush House, London) ஏழாவது மாடியில் நான் B.B.C. தமிழோசை ஒலிபரப்பளராக வேலை பார்த்த காலத்தில் நானும் சங்கர் அண்ணாவும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி விவாத்தித்துக் கொண்டிருப் போம். அடுத்த அறையிலுள்ள நேபாளி ஒலிபரப்பாளர்கள் வந்து ஏன் இப்படிச் சண்டை போடுகிறீர்கள்?  என்று சிரித்துக்கொண்டே சொல்லுவர். அவர்களுக்குத் தெரியும் நாங்கள் சுவையான விவாதத்தில் இருக்கிறோம் என்பது. ஆயினும் தமிழ் மொழியின் குரல் அவர்களுக்குச் சண்டை போடுவது போலக் கடூரமாக இருப்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லுகின்றனர் என்பது எங்களுக்குப் புரிந்து விடும். இதே நேரத்தில் எம்.எஸ். சுப்புலெட்சுமி, .சுசீலா, ஜானகி போன்றோரி ன் பாடல்களைக் கேட்டிருந்தால் அவர்கள் கருத்து வேறு மாதிரி இருந்திருக்கும்!

 

–Subham–

வாதாபி கணபதிம் பஜே ஹம் ; புதிய பிள்ளையார் புராணம் – பகுதி 4

mumbai-ganesh-8

Written by London swaminathan

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 19-16

 

 

Post No.3128

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வாதாபி கணபதிம் பஜே ஹம்

வாதாபி கணபதிம் பஜே

 

ganesha

முதல் மூன்று பகுதிகளில் பல புகழ்பெற்ற பிள்ளையார்களைக் கண்டோம்; பிள்ளையார் பற்றி ஏராளமான வியப்பான, அதிசயமான செய்திகள் உண்டு. கணேசனைப் பற்றி ஒரு என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியமே தேவை; இதுவரை அது இல்லாதது ஒரு குறையே. எல்லாப் பிள்ளையார்களையும் விட அதிக வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் வாதாபி கணபதி; முத்து சுவாமி தீட்சிதரின் அற்புதமான சம்ஸ்கிருத கீர்த்தனையில் இடம் பெற்றவர் வாதாபி கணபதி; நரசிம்மவர்மனின் வெற்றிக்குக் காரணமானவர் வாதாபி கணபதி.

 

சுருக்கமாக காண்போம்:– இரண்டாவது புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னன் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவ வர்மனைத் தோற்கடித்தான். அவனது மகன் பெயர் நரசிம்ம வர்மன். பெயருக்கு ஏற்ற நர சிங்கம்தான் அவன். தந்தையைத் தோற்கடித்த புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி என்ற  கமாண்டரின் (படைத் தளபதி)

தலைமையில் ஒரு படையை கர்நாடகத்திலுள்ள பாதாமிக்கு (வாதாபி) அனுப்பினான். அவர் சாளுக்கியப் படைகளைச் சிதறடித்தார். அங்கே பல்லவர்களின் கொடி பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நகரிலிருந்த கணபதியையும் எடுத்து வந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.

stamps-on-ganesh

ஆயினும் நரசிம்ம வர்மனின் காலத்துக்கு முன்னரே கணபதி வழிபாடு பிரபலமானது சம்பந்தரின் தேவாரப் பாடலாலும் (பிடி அதன் உரு உமை  கொள மிகு கரி அது), சா. கணேசனின் பிள்ளையார்பட்டி ஆய்வாலும் (பகுதி மூன்றில் காண்க), காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் திருவாரூர் கணபதி பற்றி ஆற்றிய சொற்பொழிவாலும் தெளிவாகிறது.

 

எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

வாதாபியை எப்படி அகத்தியர் வெற்றிகண்டாரோ அப்படி நரசிம்ம வர்மன் வாதாபியை வென்றான் என்று பல்லவர் கல்வெட்டுகள் புகழாரம் சூட்டுகின்றன (வாதாபி ஜீர்ணோ பவ: கதையை தனியாக முன்னரே கொடுத்துள்ளேன்) இந்த வாதாபி கணபதி கதையை முத்துசாமி தீட்சிதரும் தனது ஹம்சத்வனி ராக கீர்த்தனையில் சொல்லுவது சிறப்புக்குரியது.

 

எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

 

திருவாருருக்கு அருகில்தான் திருச்செங்காடங்குடி உளது. நரசிம்மவர்மனின் படைத் தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாராகத் தோன்றுகிறார். அவருடைய சிவபக்தியை அறிந்த பல்லவ மன்னன் அவரைப் போற்றி வணங்கி படைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து இறைப்பணியைத் தொடர வேண்டுகிறான். அவருடைய ஊருக்கு கணபதீச்வரம் என்றும் பெயர்.

 

வெள்ளை விநாயகர்

 

திருவலஞ்சுழி என்னும் தலத்தில் இவர் கோவில் கொண்டுள்ளார்.

 

வெள்ளை என்பதை சம்ஸ்கிருதத்தில் ஸ்வேத என்பார்கள். இதிலிருந்துதான் WHITE ஒய்ட் (SWHITE= white) என்ற ஆங்கிலச் சொல்லும் உதித்தது. இந்த வெள்ளை விநாயகர் வழக்கத்திற்கு மாறான பொருளால் செய்யப்பட்டதால் அபிஷேக ஆராதனை யின்றி சிறப்புச் சாத்துமுறையுடன் வழிபடப்படுகிறார். சிற்ப வேலைப்படுமிக்க பலகணி வழியாக இவரைத் தரிசிக்கலாம்.

 ganesh-chaturthi-01-jpgfp

Final touches given to Ganesh in Mumbai

படிக்காசு விநாயகர்

பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும் சம்பந்தரும், திருவீழிமிழலையில்

 

“வாசி தீர வே காசு நல்குவீர்” — என்று சிவ பெருமானை நோக்கிப் பதிகம் பாடினர். நாள்தோறும் கோவில் படியில் ஒரு தங்கக் காசு வீதம் வந்தது. அங்கிருக்கும் பிள்ளையார் படிக்காசு பிள்ளையார் ஆவார்.

இவர் பேரளத்திலிருந்து நாலு மைல் தொலைவில் கோவில் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் துதிக்கப் பெற்றவர்:-

 

கடிக்காசு மதியொரு அணி

கடவுள் எங்கள்

குடிக்காசு தவிர்த்து அருள்

செய் படிக்காசு மழகளிற்றை

குறித்து வாழ்வாம்

எனப் போற்றப்படுவார்.

vyasaganesasivaraman

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவில் உள்ள எல்லாப் பிள்ளையார்களின் கதைகளைத் தொகுத்தால் ஒரு கலைக் களஞ்சியம் வெளியிடலாம். இதே போல மஹராஷ்டிரத்திலும் எட்டு புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள் உள. அவைகளைப் பின்னொரு சதுர்த்தியில் தரிசிப்போம்.

 

–சுபம்–

 

 

 

ராமன்-சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தம்! கம்பன் தரும் சுவைமிகு தகவல்

sugreeva

Written by London swaminathan

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 9-42 AM

 

 

Post No.3127

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர் பல ராணுவ உடன்பாடுகள் ஏற்பட்டன. எல்லோருக்கும் நன்கு தெரிந்தது நேட்டொ (North Atlantic Treaty Organisation)  எனப்படும் மேலை நாடுகளின் கூட்டணியாகும். இதில் முக்கியமான விதி கூட்டணியிலுள்ள ஒரு நாட்டை ஏதாவது ஒரு நாடு தாக்கினால் உடனே இந்தக் கூட்டணியும் தலை யிடும். அங்கே தர்ம, நியாயம் என்பதெல்லாம் கிடையாது. என் நண்பனை நீ தாக்கினாய், ஆகையால் நான் உன்னத் தாக்குவது சரியே என்பது அவர்தம் கொள்கை.

 

இதே போல அரசியல் கட்சிக் கூட்டணிகள் பல அமைகின்றன ; போகின்றன. இ வைகளுக்கெல்லாம் மூலம் ராமாயணத்தில் உள்ளது! கம்பன் ஒரு பாட்டில் சொல்வது நமக்கே வியப்பைத் தரும். இதோ பாருங்கள்:–

 

 

என்ற அக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி

உந்தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன் நாள்

சென்றன போக மேல்வந்து உறுவன தீர்ப்பல் அன்ன

நினறன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா

 

மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது காதல்

சுற்றம் உன் சுற்றம் நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்.

 

பொருள்:-

 

நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் (அம்சங்கள்):-

1.இனி உனக்கு வரக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க உதவுவேன்

2.இதற்கு முன் உனக்கும் எவருக்கும் பகைமை, சண்டை சச்சரவுகள் இருந்தால் அதில் எனக்குப் பொறுப்பில்லை

3.இனி உனக்கு இன்பம் வந்தால் அதில் 50 சதவிகிதம் உனக்கு; மீதி 50 சதவிகிதம் எனக்கு; அதே போல துன்பம் வந்தாலும் இருவரும் சமமாக பங்கு போடுவோம்

4.உன்னை யார் தாக்குகின்றனரோ அவர் என்னையே தாக்கியதாகக் கருதப்படுவார்

5.கொடியவரே என்றாலும் உன்னுடன் நட்புடையவர் எமக்கும் நண்பரே

6.உன் உறவினர் யாவரும் என் உறவினர்; அன்புகாட்டும் எம் உறவினரும் உனக்குச் சொந்தம் (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).

7.நீ இன்றுமுதல் என் ஆருயிர்த் தோழன்

 

எவ்வளவு தெளிவான பேச்சு. இக்காலப் பத்திரிக்கைகள் கூட இப்படி இரண்டே பாடலில் — எட்டே வரிகளில் இப்படிச் சுருக்கி வரைய முடியாது!

ram lak

வாலியை, இராம பிரான் மறைந்திருந்து கொன்றதை, இந்த சமாதான உடன்பாட்டின் பின்ன்ணியில் நோக்கினால் தர்ம- நியாயம் விளங்கும்!

 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஐந் தா வது எண்ணாகும். கொடியவரே என்றாலும் உன் நண்பன் எனக்கும் சிநேகிதனே. அதாவது நட்புறவு ஒப்பந்தம் வந்துவிட்டதால் அங்கே தர்ம நியாயம் கிடையாது! இது இன்றும் இன்டெர்நேஷனல் பாலிடிக்ஸில் INTERNATIONAL POLITICS கடைப்பிடிக்கும் கோட்பாடு.

 

இராக் அதிபர்  சதாம்ஹுசைனையும், லிபியா அதிபர் கர்னல் கடாபியையும் அநியாயமாகக் கொன்றது அமெரிக்கா. ஏன்? பெட்ரோல்

 

தர மறுத்தனர். உடனே அமெரிக்கவுக்கு வால் பிடிக்கும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி , பிரான்ஸ் போன்ற நாடுகள் படை அனுப்பி உதவி செய்தன. இன்று அதன் காரணமாக புதிய முஸ்லீம் பயங்கரவாதம் தலை தூக்கி இருக்கிறது.

 

ஹிட்லருக்குத் துணை போனதற்காக அப்பாவி புத்த மதத்தினர் மீது — பொது மக்கள் மீது – அணுகுண்டு போட்டு லட்சக் கணகானோரை அமெரிக்கா கொன்று குவித்தது ; யாரும் கண்டிக்கவில்லை; கா ரணம் நட்புறவு ஒப்பந்தம்!

 

ஆப்கனிஸ்தானத்துக்குள் ரஷ்யப் படைகள் புகுந்து நீண்ட நெடுங்காலம் நிலை கொண்டிருந்தன. அதை அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்துக் குரல் கொடுத்தார். எத்தனை வெளிநாட்டு நிருபர்கள் எத்தனை முறை  கேள்வி கேட்டாலும் ரஷ்யா செய்தது நியாயமே என்றார். காரணம்? ரஷ்யா என்பது, இந்தியாவின் நீண்ட நெடுங்கா ல நட்புறவு நாடு. அதை விட்டுக்கொடுக்க முடியாது.

 

ஆனால் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி கட்டு ரையை முடிப்பேன். ராமன் சொன்ன சொல் தவறாதவன்! சத்ய தர்ம பராக்ரமன்! ஆனால் மேலே குறிப்பிட்ட மேலை நாடுகளும் அரசியல் கூட்டணிகளும் தம் நிலையை மாற்றிக் கொண்டே இருப்பர்.

இந்த சத்தியத்தினால்தான் ராமனை இன்றும் வழிபடுகிறோம். அரசியல் கங்கை என்னும் தர்மப் பிரவாகத்தில் அரசியல் கட்சிக் கூட்டணிகள்அடித்துச் செல்லப்படும்.

 

-Subham–

விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்! (Post No. 3126)

Fallen_Astronaut

Written by S NAGARAJAN

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 5-47 AM

 

 

Post No.3126

 

Pictures are taken from various sources; thanks.

  

2-9-2016  பாக்யா இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்!

.நாகராஜன்

 

book

அபாயம் என்பது விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதி! விண்வெளிப் பயணத்தில் உள்ள சவால்களைத் துணிச்சலாக எதிர்கொண்ட விண்வெளி வீரர்களை நாம் நினைவில் இருத்திப் போற்றுகிறோம்      – நினைவு நாளின் போது விண்வெளி வீராங்கனை ஐலீன் காலின்ஸ்

 

விண்வெளி சரித்திரம் விந்தையான தியாகங்கள் நிறைந்த ஒன்று.

சுமார் 45 ஆண்டுகளூக்கு முன்பு 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அபல்லோ விண்கலத்தில் சந்திரனுக்குச் சென்ற டேவ் ஸ்காட் மற்றும் ஜிம் இர்வின் ஆகியோர் தரை நிலையத்திலிருந்து  தங்களுக்குக் கட்டளை இடப்படாத ஒரு சிறிய சடங்கை சந்திரனிலிருந்து கிளம்பும் முன்னர்  தாங்களாகவே செய்து முடித்தனர். எந்த ஒரு காமராவின் கண்ணிலும் படாமல் அவர்கள் இதைச் செய்து முடித்தனர்.

 

சந்திரனின் மேற்பரப்பில்விழுந்த வீரர்கள்என்ற பொருள் படும்  ‘FALLEN ASTRONAUTS’ என்ற வாசகங்களை எழுதி ஒரு நினைவுச் சின்னத்தை வைத்தனர். இந்தச் சின்னத்த்தில் அமெரிக்க மற்றும் ரஷிய விண்வெளி வீரர்களின் 14 பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.மனித வரலாற்றில் விண்வெளிப் பயணம் தொடங்கியதிலிருந்து விண்வெளி வெற்றிக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த விண்வெளி வீரர்களின் பெயர்கள் தாம்  வை எட்டரை செண்டிமீட்டரில் ஒரு அலுமினிய சிற்பமானது பால் வான் ஹோய்டொன்க் என்பவரால் செய்யப்பட்ட்து. அபல்லோ 15 பயணத்திற்கு முன்னர் இந்த சிற்பியை விண்வெளி வீரர் ஸ்காட் ஒரு இரவு விருந்தில் சந்தித்தார். அங்கு தான் அந்தச் சிற்பி ஒரு சிறிய நினைவுச் சின்னத்தைச் செய்ய ஒப்புக் கொண்டார். அதில் ஒரு விண்வெளி வீரர் விண்வெளி உடையில் இருப்பது போல சித்தரிக்கப்பட்டது. சிறபம் இலேசாக எடை அதிகமின்றி செய்யப்பட்டது. ஆனால் சந்திரனில் ஏற்படும் மிக அதிக உஷ்ணநிலையையும் தாங்கும் படி வடிவமைக்கப்பட்டது. இதை பயணம் வெற்றிகரமாக முடியும் வரை ரகசிய்மாக வைத்திருப்பதாக இருவரும் முடிவு செய்தனர். பயணம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் பூமிக்குத் திரும்பிய பின்னர் தான் ஸ்காட் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் இதை வெளிப்படுத்தினார்.

 

நினைவுச் சின்னத்தையும் அதில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் கொண்ட ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுக்கப்பட்டிருந்தது.

 

இந்தச் சிறிய சடங்கு, அந்தச் சின்னத்தில் பொறிக்கப்பட்ட பெயர்கள் ஆகியவற்றால் உத்வேகம் பெற்று FALLEN ASTRONAUTS என்ற புத்தகத்தை விண்வெளி சரித்திரத்தை எழுதி வரும் எழுத்தாளர்களான காலின் பர்கெஸ், கேட் டூலன் மற்றும் பெர்ட் விஸ் ஆகியோர் எழுதி இப்போது வெளியிட்டுள்ளனர்.

 

Fallen Astronauts Memorial

Fallen Astronauts Memorial

இந்த 14 வீரர்களின் வரலாறையும் இந்தப் புத்தகம் விரிவாகச் சொல்கிறது. இவர்கள் எப்படி இன்னுயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது என்பதை நூல் உருக்கமாக விளக்குகிறது இவர்களில்  பலர் விண்ணில் பறக்கும் போது இறக்கவில்லை.

 

விளாடிமிர் கொமாரோவ் தனது சோயுஸ் 1 கலம் பிரதான பாராசூட் சரியாக வேலை செய்யாததால் விபத்துக்குள்ளாகி பூமியில் மோதி மரணமடைந்தார்.

சோயுஸ் 11 கலமானது சல்யுட் என்ற விண்வெளி ஸ்டெஷனிலிருந்து விடுபட்டு வெளி வரும் போது ஒரு கசிவினால் காபினில் அழுத்தம் குறைந்து போகவே மூச்சுத் திணறி மரணமடைந்தனர்.

 

அபல்லோ 1 விண்கலப் பயணத்தை மேற்கொள்ளவிருந்த கஸ் க்ரிஸாம், எட் ஒய்ட், ரோஜர் காஃபீ ஆகியோர் பறப்பதரற்கு முன்னாலேயே தரை சோதனை ஒன்றின் போது விபத்துக்குள்ளாகி இறந்தனர்.

 

மற்ற அனைவரும் விமான விபத்து, நோய்வாய்ப்படல், கார் விபத்து ஆகியவற்றால் மரணமடைந்தனர். இதில் முதன் முதலாக விண்ணீல் பறந்த யூரி ககாரின் விமான விபத்து ஒன்றில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

இது தவிர இன்னும் பல வீரர்களும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயர்கள் சந்திரனில் உள்ள நினைவுப் பலகையில் இல்லை.

 

உதாரணமாக ரஷிய வீரர் க்ரிகோர் நெல்யுபோவ் என்ற ரஷிய வீரரைக் கூறலாம். 1963இல் இராணுவ பாதுகாப்பு ரோந்துப் படையுடன் ஏற்பட்ட மோதலால் இவர் விண்வெளித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டார். 1966இல் ரயில் முன் குதித்ததாலோ அல்லது தற்செயலாக ரயிலின் முன்னால்  வீழ்ந்ததாலோ மரணமடைந்தார். 1986ஆம் ஆண்டு வரை இவரை ரஷியா விண்வெளி வீரராக அங்கீகரிக்கவில்லை.

 

 newton apple

இப்படி பல சுவையான விஷயங்களை ஃபாலன் அஸ்ட்ரானட்ஸ் நூல் தருகிறது. நூலின் விலை 2300 ரூபாய்!

ஆண்டு தோறும் நினைவு நாள் என்று ஒரு நாளை அமெரிக்கா அனுசரித்து வருகிறது. அன்று விண்வெளிப் பயணத்திற்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தோரை நினைவு கூர்ந்து அஞ்சலி செய்கிறது.  இதில் நாஸாவில் பணிபுரியும் அனைவரும் கலந்து  கொள்வது வழக்கம்.

 

இந்த விண்வெளி வீரர்களின் நினைவைப் போற்றி நாமும் கூட அஞ்சலி செய்வோமே!

 

 

அறீவியல் அறிஞர் வாழ்வில் .. . 

பிரபல விஞ்ஞானியான ஐஸக் நியூட்டன் வாழ்வில் ஏராளமான சுவையான சம்ப்வங்கள் உண்டு. அவற்றில் சில:

ஐஸக் நியூட்டனின் இளம் வயதில் நடந்தது இது. மற்ற சிறுவர்கள் எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் விளையாடாமல் ஐஸக் நியூட்டன் மரத்தால் பல்வேறு  மாடல்களில் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருந்தார். இந்த மாடலில் ஒரு காற்றாலை  (windmill) மாடலும் அடக்கம். இதை வீட்டின் கூரையில் பொருத்திப் பார்த்த போது அற்புதமாக அது வேலை செய்தது!

 

சிறுவனாக இருந்த போதே அவர் ஒரு ஒரிஜினல் டார்ச் லைட்டைத் தானாகவே செய்தார். பேப்பரினால் ஆன இது மடக்கி வைத்துக் கொள்ளக் கூடியது. அதைத் தன் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொள்வார் அவர். பள்ளிக்குச் செல்லும் போது காலையில் இருள் சூழந்த குளிர்காலத்தில் அவர் இதை உபயோகிப்பது வழக்கம்!

 newton 3

சின்ன வயதிலேயே ‘சன் டயல் என்ப்படும் சூரிய கடிகாரத்தில் அபார மோகம் நியூட்டனுக்கு! அவர் அறை முழுவதும் சூரிய ஒளியால் நேரத்தைக் காட்டும் அடையாளங்கள் ஆங்காங்கே குறிக்கப்பட்டிருக்கும். இதனால் மணி, அரை மணி, கால் மணி உட்பட குறித்த நேரத்தை அவரால் சரியாக அறிய முடிந்தது. இதனால் சூரிய கணநிலை நேரம், சம இரவு நாள் உள்ளிட்ட அனனத்தையும் அவர் அறிந்தார்.

 

விஞ்ஞானியாக இருந்த போதே அரசாங்கத்தின் நாணயசாலைக்கு அவர் பெரிதும் உதவினார். போலி நாணயங்கள் பிரிட்டனில் உலவி வந்ததை நீக்க வழிமுறைகளைக் கண்டு கண்காணிப்பாளராக இருந்ததோடு தீவிரமான சீர்திருத்த  முறைகளை அமுல் படுத்தி கள்ள நாணயங்களை அவர் அறவே ஒழித்தார்.

 newton 1

அவர் வாழ்வில் சுவையான் சம்பவங்கள் இது போல இன்னும் ஏராளம் உண்டு!

**********************