ராமாயணத்தில் நதிகள் – 4 (Post No.11,483)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,483

Date uploaded in London – –   29 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ராமாயண வழிகாட்டி 

ராமாயணத்தில் நதிகள் – 4

ச.நாகராஜன்

 கம்ப ராமாயணத்தில் கம்பன் காட்டும் நதிகளைப் பார்க்க அவன் பின் தொடர்வோம்:

2. கௌசிகி

கௌசிகி நதி பற்றிய பாடல்கள் சில பிரதிகளில் இல்ல. வை,மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் பதிப்பில் பால காண்டத்தில், 8வது படலமாக அமையும் வேள்விப் படலத்தில் கௌசிகி நதியின் வரலாறு 10 பாடல்களில் சொல்லப்படுகிறது.

ஆனால் மர்ரே அண்டு கம்பெனி சென்னை -1 – 1958 பதிப்பிலோ இந்தப் பாடல்கள் மிகைப் பாடல்களாகத் தரப்படுகின்றன.

கௌசிகி நதியின் வரலாறைப் பார்ப்போம்.

‘சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?’ – தேவர்கள் வணங்கித் துதிக்கத் தக்க பரிசுத்தி உடைய இந்த நதி எத்தன்மையது?’ – என்று ராமர் விஸ்வாமித்திரரைப் பார்த்துக் கேட்க அவர் கௌசிகி நதியின் வரலாறை விரிவாகச் சொல்கிறார்.

குசன் என்ற அரசனுக்கு அவன் பத்தினியிடத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். குசன், குசநாபன், ஆதூர்த்தன், வசு என்பது இவர்கள் பெயர்கள். குசநாபனுக்கு நூறு பெண்கள் பிறந்தனர். அவர்கள் ஒரு நாள் சோலையில் சென்று விளையாடினர். அச்சமயம் அவர்களை வாயுதேவன் பார்த்தான்.  அவர்களால் கவரப்பட்டான். தன்னை மணந்து கொள்ளும்படி வாயுதேவன் கூற கன்னியரோ எனது தந்தையிடம் சொல்க என்றனர். இதனால் கோபித்த வாயுதேவன் அவர்களின் முதுகுகளைக் கூனாகும்படி ஒடித்தான். கன்னியர் நடந்த விஷயத்தைத் தந்தையிடம் கூறினர்.

குசநாபன் தனது மந்திரிகளுடன் ஆலோசித்து அவர்களை சூளி என்னும் மஹரிஷியின் புத்திரனான பிரமதத்தன் என்பவனுக்கு, கன்னிகாதானம் செய்து மணம் முடித்து வைத்தான்.

பிரமதத்தன் அந்த கன்னியரின் கரங்களைத் தொட அவர்கள் கூன் நிமிர்ந்து தங்கள் பழைய அழகைப் பெற்றனர்.

இதனால் மனம் மிக மகிழ்ந்தான் குசநாபன். ஆனால் தனக்கு மகன் ஒருவன் இல்லையே என்ற எண்ணம் தோன்ற அவன் புத்திரகாம யாகம் ஒன்றைச் செய்தான். அந்த அக்கினியிலிருந்து காதி என்பவன் தோன்றினான்.

குசநாபன் தன் மகனான காதிக்கு முடிசூட்டி, பின்னர் சுவர்க்க லோகம் அடைந்தான்.

காதிக்கு, கௌசிகி என்னும் பெண்ணும்  விஸ்வாமித்திரரும் பிறந்தனர்.

பிருகு முனிவரின் மகனான ரிசீகன் கௌசிகியை மணந்தான்.

மேன்மையான தவத்தைச் செய்த ரிசீகன் பிரமலோகம் செல்ல ஆரம்பித்தான்.

தனது கணவனான ரிசீகன் ஆகாயமார்க்கமாகச் செல்வதைக் கண்ட கௌசிகி அதைப் பொறுக்க மாட்டாமல் ஒரு நதியின் ரூபம் தரித்து அவனைப் பின் தொடர்ந்தாள்.

அவளைக் கண்ட ரிசீகன், “உலக ஜனங்களின் துன்பங்கள் அனைத்தும் உன்னிடத்தில் மூழ்கும் போது ஒழிந்து போகும். இதே ஆற்றின் ரூபமாகவே பூலோகம் செல்வாயாக” என்று கூறினான். பின்னர் ரிசீகன் பிரமலோகம் சென்றான்.

இந்த வரலாறைச் சொன்ன விஸ்வாமித்திரர், ‘சுவர்க்கத்திலிருந்து மீண்ட கௌசிகி இமயமலையிலிருந்து பெரும் நதியாகப் பெருக, அவளது உடன் பிறந்த தொடர்பால் நான் அந்த மலையில் வசிப்பவன் ஆனேன்.  இப்போது வேள்விக்காக சித்தாஸ்ரமத்திற்கு வந்துள்ளேன்’ என்று கூறி முடித்தார்.

‘எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்’ – எனக்கு முன் பிறந்தவளாகிய பெண்களில் சிறந்த கௌசிகி என்பவள் இந்தப் பெரிய ஆற்றின் வடிவமாக ஆயினாள் – என்று விஸ்வாமித்திரர் முடிக்க அதைக் கேட்ட ராமர் ‘அதிசயம் மிகவும் தோன்ற’ – மனதிலே மிகவும் வியப்பு உண்டாக – மேலே லட்சுமணனுடன் நடக்கலானார்.

அற்புதமான இந்த கௌசிகி நதியின் வரலாறு அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும்.

இந்த நதி நேபாளத்தின் முக்கிய நதியாகத் திகழ்கிறது. நேபாளத்தில் மட்டும் 6000 நதிகள் ஓடுகின்றன.’

கௌசிகி என்னும் புனித நதியையும் கொண்டு, நீர் வளத்தில் உலகின் இரண்டாவது பெரும் நாடாகத் திகழும் நேபாளத்தைப் போற்றுவோம்.

*

 புத்தக அறிமுகம் 126 

அறிவியல் துளிகள் – பாகம் 18

பொருளடக்கம்

என்னுரை                                                     அத்தியாயங்கள்                                                              443) அறிவியல் வியக்கும் யோகா!                                       444) சாடலைட்டுகளையும் ஹாக் செய்யும் அபாயம்!                 445) வாபி சாபி – வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றைக் கற்றுக்

    கொள்வோம்!                                                      446) அறிவியலில் சாதனை புரிந்த அபூர்வப் பெண்மணிகள்!          447. கொரோனா பற்றி அறிவியல் புனைகதைகள் முன்பே சொல்லி

    விட்டனவா?!                                                     448. ப்ரூஸ் லீயின் பத்துக் கட்டளைகள்!                               449. ட்ரோன் காட்டும் எதிர்கால உலகம்!                                                                            450. ISBN அதிசயம்                                                                                                                       451. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 1 452. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 2 453. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 3 454. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 4 455. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 5 456. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 6

457. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 7   458. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 8  

459. பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்                            460. கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்!      461.ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி ஜெர்மெய்ன்!      462. ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!!                      463. விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வாழ்வில்!                                            464. விண்வெளி ஏகு முன் ரஷிய விண்வெளி வீரர்கள் கடைப்பிடிக்கும்

       சில பாரம்பரியப் பழக்கங்கள்!

465. விண்கலம் ஏகும் போது அமெரிக்க வீரர்களின் பாரம்பரியப்

       பழக்கங்கள்!                                                                                                           466. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 1                                467.  100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 2                                    468. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 3              469. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 4                               470. மரணத்தை வெல்லும் மனித குலம்! – விஞ்ஞானியின் இன்ப

    அதிர்ச்சிக் கணிப்பு!!

என்னுரை

அறிவியல் துளிகள் வரிசையில் இறுதி பாகமாக அமையும் இந்த பதினெட்டாம் பாகத்தை தமிழ் உலகிற்குச் சமர்ப்பிக்கிறேன்..

அறிவியல் கடலில் சில துளிகளை சுட்டிக் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த முன்னூறு ஆண்டு வரலாற்றைப் பார்க்கும் போது அறிவியலின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் ஒன்றாக அமைகிறது.

962 அறிஞர்கள் 1901ஆம் ஆண்டு முதல் 2020 முடிய நோபல் பரிசைப் பெற்றிருக்கின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் அமெரிக்க பேடண்ட் அலுவலகம் 3,75,000 விண்ணப்பங்களை வருடம் தோறும் பெறுகிறது! 20 லட்சம் ஆவணங்களை வருடம் தோறும் பெறுகிறது;

1883ஆம் ஆண்டு தொடங்கி 2008ஆம் ஆண்டு முடிய உள்ள 126 ஆண்டுகளில் சுமார் 71,76,477 அமெரிக்க பேடண்டுகள் வழங்கப்பட்டுள்ளன!

அறிவியலில் எத்தனை கிளைகள் உள்ளன என்று பார்த்தால் மலைக்க வைக்கும் எழுநூறுக்கும் மேற்பட்ட துறைகளை இணையதளத்தில் பார்க்க முடிகிறது.

இந்த விஞ்ஞான வளர்ச்சியில் 90 சதவிகிதம் சமீப காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிகிறோம்.

இது அறிவு சார்ந்த ஒரு புதிய உலகத்தில் நாம் வாழ்வதைக் காட்டுகிறது.

P.Hd பட்டம் பெற்றவர்கள் உலகளாவிய விதத்தில் எத்தனை பேர் என்ற கேள்விக்கு பதில் அளிப்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக ஆகி விட்டது. என்றாலும் கூட ஃபெர்மி மதிப்பீட்டின் படி (Fermi Estimate) பத்து லட்சம் பேர்கள் இந்த உயரிய ஆய்வுப் பட்டத்தை இப்போது பெற்றுள்ளனர் என்பதை இணையதளம் வாயிலாக அறிய முடிகிறது.

ஆகவே வளர்ந்து விட்ட ஒரு மாபெரும் அறிவியல் உலகில் நாமும் தொழில்நுட்பத்தின் வேகத்திற்கேற்ப வளர வேண்டி இருக்கிறது. இந்த அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களில் முக்கியமானவற்றை கவனக்குறைவினாலோ, அசட்டையாலோ, வேண்டுமென்றோ ஒதுக்கினால் நாம் நடைமுறை உலகியலிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாவோம். முன்னேறுவது கஷ்டம்!

அனைத்தையும் அறிதல் முடியாது என்றாலும் கூட குறைந்தபட்சமாக அடிப்படையான விவரங்களை அறிதல் இன்றியமையாதது.

அந்த வகையில் அறிவியல் துளிகளின் 18 பாகங்களும் பல முக்கிய விஷயங்களைத் தருவதோடு அறிவியலில் ஒரு ஆர்வத்தைத் தூண்டி மேலும் பல புதிய விஷயங்களை அறிய அனைவரையும் தூண்டும் என நம்புகிறேன்.

எனது அறிவியல் கட்டுரைகளத் தொடர்ந்து வெளியிட்ட, டைரக்டரும் பாக்யா இதழ் ஆசிரியருமான திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

அத்துடன் ஹெல்த்கேர், முதல் ஓசை, கோகுலம் கதிர் உள்ளிட்ட பல பத்திரிகைகளும் எனது அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

திரு ஆர்.சி. ராஜா (ஹெல்த்கேர்), முதல் ஓசை (திரு தென்னவன் பாலு), திருமதி கமலி ஶ்ரீபால் (கோகுலம் கதிர்) ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக.

தொடர்ந்து எனது அறிவியல் கட்டுரைகளை www.tamilandvedas.comஇல் வெளியிட்டு வரும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

அறிவியல் துளிகள் முதல் பாகத்திற்கு அணிந்துரை நல்கிய நம் நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான திரு கே.ஜி.நாராயணன் அவர்களுக்கு எனது நன்றி.

பல வருடங்களாக பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தொடர்ந்து தந்த ஆதரவினாலும், வாழ்த்துக்களாலும் உத்வேகம் பெற்று இந்த பதினெட்டு பாகங்களைப் படைக்க முடிந்தது. என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                                                          .நாகராஜன்                                                 21-9-2022

·          

 நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

** 

நல்ல மாணவர் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,482)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,482

Date uploaded in London – 28 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

This is the sixth verse from Arappalichura Satakam with London Swaminathan’s commentary

 6. நன்மாணாக்கரியல் Definition of a Good Student

வைதாலும் ஓர்கொடுமை செய்தாலு மோசீறி

     மாறாதிகழ்ந் தாலுமோ

  மனதுசற் றாகிலும் கோணாது, நாணாது,

     மாதாபி தாவெனக்குப்

பொய்யாமல் நீ யென்று கனிவொடும் பணிவிடை

     புரிந்து, பொரு ளுடலாவியும்

  புனித! உன்றன தெனத் தத்தஞ்செய் திரவுபகல்

     போற்றி, மல ரடியில் வீழ்ந்து,

மெய்யாக வேபரவி உபதேச மதுபெற

     விரும்புவோர் சற்சீ டராம்

  வினைவேர் அறும்படி அவர்க்கருள்செய் திடுவதே

     மிக்கதே சிகரதுகடன்

ஐயா! புரம்பொடி படச்செய்த செம்மலே!

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஐயா! புரம்பொடிபடச் செய்த செம்மலே – தலைவனே!

முப்புரங்களை நீறுபடச் செய்த பெரியோனே!, அண்ணல் – தலைவனாகிய

எமது ……….. தேவனே!, ‘வைதாலும், ஓர் கொடுமை செய்தாலும், மாறாது

சீறி இகழ்ந்தாலும் – திட்டினும் ஏதேனும் கொடுமை யிழைக்கினும்மாறாமற்

சினந்து இழிவுபடுத்தினும், மனது சற்றாகிலும் கோணாது நாணாது – சிறிதும்

மனங்கோணாமலும் வெட்கப்படாமலும், பொய்யாமல் எனக்கு மாதா பிதா

நீயென்று – உண்மையாக எனக்கு அன்னையும் தந்தையும் நீயேயென்று கூறி,

கனிவொடும் பணிவிடை புரிந்து – (ஆசிரியனுக்கு) மனங்கனிந்து வழிபாடு

செய்து, புனித பொருள் உடல் ஆவியும் உன்றனது என – தூயவனே! என்

பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்று கூறி, தத்தம்

செய்து – கொடுத்து, இரவு பகல் போற்றி – இரவும் பகலும் விடாமல்

வணங்கி, மலரடியில் மெய்யாகவே வீழ்ந்து பரவி – (ஆசிரியன்)

மலர்போன்ற திருவடிகளில் உண்மையாகவே வீழ்ந்து புகழ்ந்து கூறி,

உபதேசமது பெற விரும்புவோர் சற் சீடர்ஆம் – அறிவுபெற விழைவோர்

நல்ல மாணாக்கராவர், அவர்க்கு வினைவேர் அறும்படி அருள்

செய்திடுவதே மிக்க தேசிகரது கடன் – அவர்களுக்கு வினையின் வேர்

கெடும்படி அருள் செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.

ஒரு நல்ல மாணவன் யார் என்பதை விளக்கும் பாடல் இது. ஆன்மீக ஒளியை அடைய விரும்பும் குரு -சிஷ்யர்களுக்கு மட்டும் இது என்று நினைத்து விடக்கூடாது. பொதுவாகவே குரு குல  வாசத்தில் இந்த விதிகள்தான் பின்பற்றப்பட்டன. இதற்கு இரண்டு மூன்று எடுத்துக்காட்டுகள் இந்து மத இதிஹாச புராணங்களில் உள. ஏகலைவன் என்பவன் அரசற்கு மட்டுமே உரித்தான ஆயுதப் பயிற்சிகளை மறைவாக நின்று பயின்றான். இதை அறிந்த துரோணர், இப்படிக் கற்றதானால் நீ குருதட்சிணை கொடுதாக வேண்டும் என்றவுடன் அவன்,  கட்டை விரலையே தட்சிணையாகக் கொடுத்தான். அதனால் அவனை சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைவுகூறுகிறோம்.அந்த அளவுக்கு குரு பக்தி இருந்தது.

மஹாபாரதத்தில் குரு பக்திக்கு மேலும் சில உதாரணங்கள் கிடைக்கும்;குருவே ! உங்களுக்கு என்ன தட்சிணை வேண்டும்? என்று கேட்டவுடன் என்னை அவமானப்படுத்திய பஞ்சாப் மன்னன் துருபதனை இழுத்துக்கொண்டுவா என்று துரோணர் சொன்னவுடன் அவனைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவந்தான் அர்ஜுனன்.

xxx

குரு குலக் கல்வியில், ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தவுடன்,  மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அவர் இருக்கையில் உட் கார்ந்த  பின்னர், மாணவர்களும் அமர்ந்துகொண்டு, குருர் பிரம்மா — என்ற மந்திரத்தைச் சொல்லி, ஆசிரியரே மும்மூர்த்திகளுக்குச் சமமானவர் என்று வாழ்த்துவர் (நேற்றைய பதிவில் இந்த மந்திரத்தைக் கொடுத்துள்ளேன் )

பின்னர் வேத/ உபநிஷத மந்திரமான ஸஹ நாவவது – மந்திரத்தைச்ச்சொல்லுவார்கள் . அதன் பொருள் பின் வருமாறு

ஓம் சஹ நாவவது

சஹ நவ் புனக்து

சஹ வீர்யம் கரவாவஹை

தேஜஸ்வினாவதீதமஸ்து

மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

ॐ सह नाववतु ।

सह नौ भुनक्तु ।

सह वीर्यं करवावहै ।

तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Saha Naav[au]-Avatu | ஓம்! ஆசிரியரும் மாணவருமாகிய நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம்

Saha Nau Bhunaktu |நாம் கூட்டாக இணைந்து இதில் சிறப்பு அடைவோம்

Saha Viiryam Karavaavahai | கூட்டாக மிகுந்த உற்சாகத்துடன் இதைச் செய்வோம்

Tejasvi Naav[au]-Adhiitam-Astu |நாம் கற்பது பிரகாசிக்கட்டும் ;(ஒளி பெற்று விளங்கட்டும் )

 Maa Vidvissaavahai- நம் இருவர் இடையே வெறுப்போ, பகைமையோ தோன்றாமல் இருக்கட்டும்

Om Shaantih Shaantih Shaantih || உள்ளத்தில் சாந்தி நிலவட்டும், சுற்றுப்புற த்திலும் அமைதி நிலவட்டும் ;உலகெங்கும் அமைதி நிலவட்டும்.

xxx

நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர்’: சுவையான கதை!

Article written by London swaminathan

Post No. 1780; Date 6th April 2015

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் 
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி 
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் 
கருமமே கண்ணாயி னார் – நீதி நெறி விளக்கம்

ஒரு செயலில் முனைப்பாக இருப்பவர் உடலுக்கு வரும் வருத்தம்நோய் நொடிகளைப் பொருட்படுத்த மாட்டார். பசித்தாலும் கவலைப்படமாட்டார். தூங்க மாட்டார். யாரேனும் கெடுதல் செய்தாலும் அதையும் மனதிற் கொள்ளார். காலம் பற்றியும் கவலைப்படமாட்டார். தனக்கு வரும் அவமதிப்பையும் எடுத்துக்கொள்ளார்.

கற்றவனுக்கு அடையாளம் என்ன?

ஒரு சுவையான கதை கேளுங்கள். ஒரு படிக்காத இளைஞனை நன்றாகப் படித்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். நாளாக ஆக இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவளும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ இவனை குத்திக் காட்டினாள். இவன் ஒரு முடிவுக்கு வந்தான். நன்கு கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.

நல்ல மாணவர்கள் பசி நோக்கார்

அந்தக் காலத்தில் காசி என்ற தலமே கற்றோர் நிறைந்த ஊர். ஆகையால் பெரிய அறிவாளிகள் எல்லாம் காசிக்குச் சென்று கற்று வருவர். இவனும் காசிக்குப் போனான். அங்கே ஒரு வயதான ஆசிரியரைக் கண்டான். தனது சோகக் கதையைச் சொல்லி தனக்கு கல்வி புகட்டும்படி மன்றாடினான். அவரும் இவனை சிஷ்யனாக ஏற்றார்.

இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடின. நல்ல சீடனாகவே இருந்து எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கற்றான். குரு, ஒரு நாள் தனது மனைவியை அழைத்து, நாளை முதல் இவனுக்குப் பரிமாறும் உணவில் ஒரு உத்தரணி (ஸ்பூன்) அளவுக்கு வேப்ப எண்ணையைக் கலந்து பரிமாறு என்றார். ஆனால் அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த நாளைன்றே என்னிடம் சொல்லிவிடு என்றார்.

குருவின் மனைவிக்கு ஏன் என்று புரியவில்லை. இருந்தாலும் கணவன் இட்ட கட்டளையை மீறாத பத்தினி அவள். அந்த சிஷ்யனும் முகம் கோணாது சாப்பிட்டு வந்தான். குருவின் மனைவிக்குக் கூட கொஞ்சம் பரிதாபம் மனதில் ஏற்பட்டது. வேப்ப எண்ணையைக் கலக்காமல் விட்டுவிடலாமா என்று எண்ணிணாள். ஆயினும் அவளுக்கு அந்தத் துணிவு வரவில்லை.

மெய் வருத்தம் பாரார்

இவ்வாறு வேப்ப எண்ணை கலந்த சாப்பாடு மூன்று மாதம் பரிமாறப்பட்டது. ஒரு நாளைக்கு சிஷ்யன், குருவின் மனைவியைப் பார்த்து, “அம்மையே, உங்களுடைய சாப்பாடு எப்போதும் அமிர்தமயமாகவே இருக்கும். கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் வேறுபாடு தெரிகிறது. ஏதோ வேப்பெண்ணை வாசனை அடிக்கிறது” என்றான். குருவின் மனைவியும் சமாளித்துக் கொண்டு, “அப்படியா? என்ன காரணம் என்று கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

ரகசியமாக கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள், “உங்கள் சீடனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் வேப்பெண்ணை வாசனையைக் கண்டுபிடித்துவிட்டான்” என்றாள். குரு சிரித்துக் கொண்டே, சிஷ்யனைக் கூப்பிட்டார்.

“சிஷ்யா! நீ நல்ல மாணவன். மூன்று ஆண்டுகளாக எல்லாவற்றையும் உண்மையான ஆர்வத்தோடு பயின்றாய். நீ எல்லாவற்றையும் கற்றுமுடித்த அறிகுறிகள் தென்படுகின்றன. நாளை காலை நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பலாம். உனக்கு என்னுடைய பரிபூரண ஆசீர்வாதம்” என்றார். சீடனுக்கு மிகவும் சந்தோஷம். மறுநாள் காலையில் தக்க குரு தட்சிணை கொடுத்து, நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டான்.

குருவின் மனைவி வியப்புடன் கேட்டாள், “நாதா! வேப்பெண்ணைக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்கவில்லையே!”

குரு சொன்னார், “அன்பே, நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்ற ஆன்றோர் வாக்கை நீ கேட்டது இல்லையா? ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் சுவை இருக்காது. சொல்லப்போனால் சுவையே தெரியாது. அவனுக்கு கல்வியில் முழு கவனம் இருக்கும் வரை அவனுக்கு ருசியே தெரியவில்லை. அந்த நாட்டம் குறைந்தவுடன் அவனுக்கு ருசி தெரிந்துவிட்டது. ஆகையால்தான் அவனை ஊருக்கு அனுப்பிவைத்தேன். அவன் இனிமேல் பிழைத்துக் கொள்வான்” என்றார்.

xxx

ஆதிசங்கரர் இயற்றிய குரு பாதுகா அஷ்டகம் ,மேற்கண்ட பாடலில் உள்ள கருத்துக்களையே சொல்கிறது.

மாணவர் ஆற்றுப்படை

பின்னத்தூர் நாராயண சாமி ஐயர் 1900ம் ஆண்டில் எழுதிய 335 வரிகளைக் கொண்ட மாணாக்கர் ஆற்றுப்படை நூலையும் நான் பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து எடுத்து இதே பிளாக்கில் வெளியிட்டேன் . ஒரு நல்ல மாணவன் எப்படி வெற்றி பெற்றான் என்று கூறும் நூல் அது..

 —Subham—

ராமாயணத்தில் நதிகள் – 3(Post No.11,481)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,481

Date uploaded in London – –   28 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ராமாயண வழிகாட்டி

ராமாயணத்தில் நதிகள் – 3

ச.நாகராஜன் 

வால்மீகி ராமாயணத்தில் மாமுனிவர் வால்மீகி நதிகளை நன்கு சித்தரித்துக் கொண்டாடி அவற்றின் புனிதத்தை நமக்குக் காட்டுகிறார் எனில் தமிழில் கம்பன் நதிகளைச் சித்தரித்து அவற்றின் புனிதத்தையும் பெருமையையும் கொண்டாடும் விதமோ தனி தான்! அதன் மூலமாக நதிகளின் பெருமையைக் கண்டு பிரமிப்பை அடைகிறோம்!

அற்புதமான கவிதை மழைகளைக் கொட்டுகிறான் கம்பன் நதிகள் விஷயத்தில்.

அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்:

1. சரயு

கம்ப ராமாயணத்தின் ஆரம்பமே ஆற்றுப் படலத்தில் தான் ஆரம்பிக்கிறது.

பால காண்டத்தின் முதல் படலம் : ஆற்றுப் படலம்.

இதில் அழகான 20 செய்யுள்கள் உள்ளன.

ராமாயணத்தின் முதல் பாடலிலேயே ‘ஆற்று அணி கூறுவாம்’ என்கிறான் கம்பன்.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்

காசு அலம்பு முலையவர் கண் எனும்

பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்

கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்

நிலத்தின் தன்மையே நல்லொழுக்கத்திற்கும் தீயொழுக்கத்திற்கும் காரணம் என்பது ஆன்றோர் கொள்கை.

மிகவும் குற்றத்தைச் செய்கின்ற ஆடவர்களுடைய ஐந்து இந்திரியங்களும் பாணங்கள் ஆகும். கழுத்திலே அணிந்திருக்கின்ற இரத்தின ஹாரங்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிப்பதற்கு ஏதுவான மார்பகங்களைக் கொண்ட கண் என்கின்ற போர்த்தொழிலைச் செய்யும் அம்பும் நல்நெறியை விட்டுத் தீநெறியில் செல்லாமல் இருக்கின்ற கோசல நல் நாட்டை அலங்கரிக்கின்ற (சரயு) நதியின் வர்ணனையைக் கூறுவோம்.

இப்படி நன்னெறி நாட்டிலே பாயும் ஆற்றிலே ஆரம்பிக்கிறது ராமாயணம்.

சரயு நதி என்பது தாயின் முலை போன்றது என்று அற்புதமான ஒரு கருத்தை முன் வைக்கிறான் கம்பன். (பாடல் 12 – ஆற்றுப் படலம்)

இரவி தன் குலத்து எண் இல் பல் வேந்தர் தம்

புரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,

சரயு என்பது தாய் முலை அன்னது, இல்

உரவு நீள் நிலத்து. ஓங்கும் உயிர்க்கு எலாம்

கைலாய மலையில் மானஸ மடுவில் தோன்றிய சரயு நதி தாயின் முலைப் பால் குழந்தைக்கு உணவாகி வளர்த்தல் போல அனைத்து உலகத்தாரும் உணவுப் பொருளை உருவாக்கி வளரக் காரணமாகிறது புனிதமான சரயு நதி என்கிறான் கம்பன்.

சூரிய குலத்தில் பிறந்த பல வேந்தர்களுடைய  எண்ணுதற்கும் முடியாத பல காலமாகப் பாதுகாத்து வந்த  நல்லொழுக்கத்தின் தன்மையை மேற்கொண்டதாகி, மழை வெள்ளத்தால் தோன்றிப் பெருகி வரும் சரயு நதியானது  உலவும் தன்மையை உடைய நீரை உடைய கடலினால் சூழப்பட்ட இந்த நிலவுலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் குழந்தைக்குத் தாய் முலை போலப் பயன் படும் தன்மை உள்ளது.

சரயு முல்லையை குறிஞ்சி ஆக்குகிறது. மருதத்தை முல்லை ஆக்குகிறது. நெய்தல் நிலத்தை மருதம் ஆக்குகிறது. ‘செல்லுறு கதியில் செல்லும் வினை என அந்த நதி சென்றதன்றே!’

அடுத்து வேள்விப் படலத்தில் ஐந்தாவது பாடலைப் பார்ப்போம்:

‘மானச மடுவில் தோன்றி வருதலால் ‘சரயு’ என்றே

மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்

ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது’ என்ன, அப்பால்

போன பின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்.

தாடகை வதம் முடிந்து விட்ட நிலையில் விஸ்வாமித்திர மஹரிஷியோடு  ராம லட்சுமணர் நடந்து செல்லுகையில் ஒரு பேரரவம் கேட்கிறது.

இது என்ன ஒலி என்று ராமன் கேட்க விஸ்வாமித்திரர் கூறுகிறார்:

மானஸ மடுவில் தோன்றி வருவதால் சரயு என்ற பெயரைப் பெற்றது.

சரயு என்றால் பொய்கையிலிருந்து ஓடி வருகின்றது என்று பொருள் படும்.

‘மேன்மையான தேவர்களும் சிறப்பித்துச் சொல்லும் நதி சரயு,

அந்த நதியோடு கோமதி என்னும் நதி வந்து கலக்கின்ற போது எழுகின்ற ஓசை இது’ என்று விஸ்வாமித்திரர் கூறுகிறார்.

அடுத்து அவர் கௌசிகி நதி பற்றிக் கூறுகிறார்.

அதை அடுத்துப் பார்ப்போம்.

தொடரும்

***

புத்தக அறிமுகம் 125

முன்னேறவும்முன்னேற்றவும் சில கதைகள்சம்பவங்கள்,  கருத்துக்கள்!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்   

1. ஒரு டம்ளர் பால்!                                                           

2. ரொனால்டோவின் நன்றி!                                                    

3. கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி!                                      

4. உலகையே அதிர வைத்த ஒரு விவசாயி!                                 

5. கருகிய காலன் கரிகாலன் தான்; ஆனால் ஓடி உலக சாதனை படைத்தான் அவன்!                                                     

 6. ஹெலன் கெல்லர் : ஒரு அபூர்வமான பெண்மணி!                               

  7. தசரத் மஞ்சி – மலையை நகர்த்திய மா மனிதன்!                       

8. விருக்ஷ தேவி துளஸி கௌடாவிற்கு பத்ம ஸ்ரீ பட்டம்!             

9. ஒரு புதிய பென்சில்!                                               

  10. இரண்டு கூழாங்கற்கள்!                                               

11. ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுயசரிதை!                            

 12. உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?                         

13. ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

14. நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை! 

15.நெப்போலியனின் வயது                                         

16. இறைவனிடம் அன்பு                                                 

 17. முடா! முரா! முரி!                                             

18. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி? 

19. இருந்தும் இறந்தவர் யார், யார்? – 1                                      

20. இருந்தும் இறந்தவர் யார், யார்? – 2                                 

 21. முதுகுச் சுமையில் யார்?                                                                                                   

  22. சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!                                

   23. அருமையாக இந்த நாள் கழிந்ததா?!                                     

24. தங்கம் அல்லமனிதர்களே தேவை!                             

25. மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!                            

26. மேதை ஆக ஏழு படிகள்!                                             

 27. கெடுதலிலும் நல்லதையே பார் :இறைவனின் திட்டம் என்ன   என்று தெரியாது!                                                        

28. வெற்றி பெற்ற மேதைகள் கடைப்பிடிக்கும் 10 விஷயங்கள்!      

29. எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!                     

  30. வால்டேர் வளர்த்த கழுகு!                                           

 31. சின்னச் சின்ன டிப்ஸ்! பெரிய பலன்கள்!!

என்னுரை

இன்று இருக்கும் நிலையிலிருந்து இன்னும் மேல் நிலைக்கு  முன்னேற விரும்பாதார் தான் யார்தனது குடும்பத்தினர்உறவினர்நண்பர்கள் ஆகியோரை முன்னேற்ற விரும்பாதார் தான் யார்?

முன்னேற வேண்டும்முன்னேற்றவும் வேண்டும் – இந்த நவீன யுகத்தின் வேகமான வாழ்க்கையில் சீக்கிரமாகவும் இதைச் செய்து சாதிக்க வேண்டும்.

இவற்றிற்குச் சில அரிய பண்புகள் தேவை. இவற்றை வாழ்ந்து காட்டி சாதனைகள் படைத்தவர்கள் பலர்.

இன்னல்களைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லைஇருக்கின்ற சூழ்நிலையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்கவில்லைசமுதாயத்தைக் குறை கூறவில்லை. தங்களது இலட்சியத்தை வகுத்துக் கொண்டு முன்னேறினார்கள். மற்றவர்கள் அதிசயித்த போது அவர்களையும் முன்னேற்றினார்கள். முன்னேற உத்வேக உணர்வை ஊட்டினார்கள்.

இப்படிப்பட்ட சாதனையாளர்கள் சிலரை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. உண்மைச் சம்பவங்கள்அழகிய கதைகள் ஆகியவற்றுடன் நல்ல பல கருத்துக்களையும் இந்த நூல் தருகிறது.

இந்தக் கட்டுரைகள் ஹெல்த்கேர்பாக்யாஆகிய இதழ்களிலும் www.tamilandvedas.com ப்ளாக்கிலும் வெளியானவை.

இவற்றை வெளியிட்டு எனக்கு ஊக்கமளித்த பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு கே. பாக்யராஜ்ஹெல்த்கேர் ஆசிரியர் ஆர்.சி.ராஜாதமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக் வெளியிடும் லண்டன்               திரு ச. சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

கட்டுரைகள் வெளியான போது அதைப் பாராட்டிய அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                               ச. நாகராஜன்

29-8-2022

·          

 நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

சத் குரு பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,480)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,480

Date uploaded in London – 27 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

THIS IS FIFTH VERSE WITH LONDON SWAMINATHAN’S COMMENTARY

        5. நல்லாசிரியர் இயல்

வேதாந்த சித்தாந்த வழிதெரிந் தாசார

     விவரவிஞ் ஞானபூர்ண

  வித்யாவி சேடசற் குண சத்ய சம்பன்ன

     வீரவை ராக்ய முக்ய

சாதார ணப்பிரிய யோகமார்க் காதிக்ய

     சமாதிநிஷ் டானு பவராய்ச்,

  சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர

     தருமமும் பரச மயமும்

நீதியின் உணர்ந்து, தத்துவமார்க்க ராய்ப், பிரம

     நிலைகண்டு பாச மிலராய்,

  நித்தியா னந்தசை தன்யராய், ஆசையறு

     நெறியுளோர் சற்கு ரவராம்

ஆதார மாய்உயிர்க் குயிராகி யெவையுமாம்

     அமல! எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆதாரமாய் உயிர்க்கு உயிராகி எவையும் ஆம் அமல –

உலகுக்கு ஆதரவாய், உயிர்களுக் கெல்லாம் உயிராகி, எவ்வகைப்

பொருளும் ஆகிய தூய பொருளே! எமது ………. தேவனே!’ வேதாந்த

சித்தாந்த வழிதெரிந்து – வேதாந்த சித்தாந்த நெறிகளை ஆராய்ந்தறிந்து,

ஆசார விவரம் – ஒழுக்கத்தெளிவு, விஞ்ஞான பூர்ணம் – விஞ்ஞானத்தின்

நிறைவு, வித்தியா விசேடம் – கல்விச் சிறப்பு, சற்குணம் – நற்பண்பு,

சத்தியம் சம்பன்னம் – உண்மையாகிய செல்வம், வீரவைராக்கியம் –

உறுதியான வீரம் (மிகுவீரம்), முக்கியம் – தலைமை, சாதாரணப் பிரியம் –

அருள், யோகமார்க்க ஆதிக்கியம் – யோக நெறியிலே மேன்மை (என்பவற்றுடன்), சமாதி நிஷ்ட அனுபவராய் – சமாதி கூடுதலிற் பயிற்சி

யுடையவராய், சட்சமய நிலைமையும் மேலான மந்திரம் மேலான தந்திரம்

என்பவற்றின் நிலையையும், பரசமயமும் – பிற மதங்களையும், நீதியின்

உணர்ந்து – நெறிப்படி அறிந்து, தத்துவ மார்க்கராய் – உண்மை

நெறியினராகி, பிரம நிலைகண்டு – தூய பொருளின் நிலையை அறிந்து,

பாசம் இலராய் – (உலகப்) பற்று நீங்கியவராய், நித்திய ஆனந்த

சைதன்யராய் – உண்மையின்ப அறிவுருவினராய், ஆசை அறு

நெறியுளோர் – பற்றற்ற நெறியில் நிற்போர். சற்குரவர்ஆம் –

நல்லாசிரியராவார்.

XXXX

எனது விளக்க உரை

இந்தப் பாடல் முழுதும் ஸம்ஸ்க்ருதச் சொற்களால் ஆக்கப்பட்டுள்ளது. சத் குரு – நல்லாசிரியர் யார் என்பது பற்றிய பாடல் இது. தான் இயற்றிய குரு பாதுகா அஷ்டகத்தில் குருவை ஏன் வணங்க வேண்டும் என்று ஆதி சங்கரர் காட்டுகிறார். கந்த புராணத்திலுள்ள குரு கீதா என்பது குருவினைப் போற்றும் பாடல்களில் மிகவும் உன்னதமானது. அதில் சற்குருவின் இலக்கணம் விரிவாக இருக்கிறது.

பாரதியார் கனமான குருவைத் தேடிக் கொள் என்கிறார். குரு என்றால் பொதுவாகச் சொல்லப்படும் அர்த்தம் அஞ்ஞான இருளை அகற்றுபவர். சம்ஸ்க்ருதத்தில் பொதுவாக கனம் என்பதற்கும் இச்சொல் பயன்படும்.

இந்துக்கள் உலக மஹா வானியல்  நிபுணர்கள்; வேத காலம் முதல் ஆயிரக்கணக்கான வானியல் குறிப்புக்களைப் போகிறபோக்கில் சொல்லிவைத்தனர். சூரியனைச் சுற்றிவரும் கிரகங்களில் மிகப்பெரியது குரு JUPITER . பெரிய கிரகம் என்பதை அறிந்து பிருஹஸ்பதி, வியாழன் என்று சொன்னதோடு அதற்கு  குருவின் அந்தஸ்த்தைக் கொடுத்தனர். கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய கண்டுபிடிப்பு இந்துக்களை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றிவைத்துவிட்டது

அதாவது குரு கிரஹத்தின் ஈர்ப்புவிசை விண்வெளிக் கலங்களை உந்தி விடுகிறது SLINGSHOT EFFECT. இதனால் அந்த ராக்கெட்டுகள், விண்கலங்கள் எரிபொருள் இல்லாமல் நீண்ட பயணம் செய்ய முடியும். இதை கவண் கல் விளைவு SLINGSHOT EFFECT  என்பர். எப்படி ஆன்மீக குரு தனது சீடனை உச்சானிக் கொம்புக்கு தூக்கி விடுகிறாரோ அப்படி குரு கிரகமும் செய்கிறது. இந்துக்கள் மஹத்தான விண்வெளி நிபுணர்கள் என்பது இப்போது புரிகிறது.

The effect known as the gravity assist or slingshot effect is a way of using the motion of a planet to accelerate a space probe on its journey towards the outer planets. Think of a space probe on a journey to Neptune. On its way it will have to pass Jupiter – the largest planet in the Solar System.

சத் குரு என்பவரும் இப்படிப்பட்டவரே ; அவருடைய இலக்கணத்தை வருணிக்கும் திருமூலர் அவரை பரிசன வேதி என்கிறார். அதாவது தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் அற்புதக் குளிகை அது ஆங்கிலத்தில் PHILOSO PHER ‘S STONE என்பர் .

The philosopher’s stone or more properly philosophers’ stone, is a mythic alchemical substance capable of turning base metals such as mercury into gold or silver

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) குருவின் பெருமையைச் சொ ல்லுகையில் குருவின் பாதங்களுக்கு மடத்தில் தினமும் பூஜை நடைபெறுவதைக் குறிப்பிட்டுவிட்டு, கடவுளுக்கு அபராதம் செய்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுத்  தப்பித்துவிடலாம் ஆ னால் குருவுக்கு அவமதிப்பு செய்தால் கடவுள் கூட காப்பாற்ற மாட்டார் ; குருவின் காலில் போய் விழு என்று கடவுளே சொல்லிவிடுகிறார். அப்படி உயர்ந்த மதிப்பு குருவுக்கு உண்டு என்று கூறுகிறார்.

xxxxxx

இங்கே சில மேற்கோள்களை மட்டும் கொடுக்கிறன்

ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:

குருஸ்ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு சமம் ஆனவர்

அந்த குருவை வணங்குகிறேன்

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்

நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:

குரு என்பவர் பிறவிப்பிணியை அகற்றும் டாக்டர்.; எல்லா கலைகளுக்கும் இருப்பிடமானவர் . அவர் தட்சிணாமூர்த்தி.

XXX

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே–  திருமந்திரம் 139

குருவின் பெருமையை எளிய தமிழில் திருமூலர் செப்பிவிட்டார்

xxxx

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்

வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்

குருபரி சித்த குவலயம் எல்லாந்

திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே –  திருமந்திரம் 2054

பரிசனவேதி என்ற குளிகை (Philosopher’s stone)   பட்ட உலோகம் எல்லாம் பொன்னாகிவிடும். அது போல குருவானவர் இந்த உலகத்தில் யாரை தொட்டாலும் அவர்கள் மும்மலம் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவார்கள்.

xxxx

கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்

மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்

குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்

மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.  திருமந்திரம் 2051

ரசவாத (Alchemy) வேதியியலின்படி கருமை நிறத்து இரும்பானது பொன்னிறமான தங்கமாகிவிடும். ஆனால் தங்கமானது மீண்டும் இரும்பாக மாறாது. அதுபோல ஆன்மாவானது குருவின் அருளினால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்தும் விடுவிக்கப் படும் அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிடையாது. ஆன்மாவின் மும்மலங்களையும் நீக்கக் கூடிய குரு இறைவனே ஆகும்.

XXXX

ஸ்ரீ குரு கீதை (392 Slokas) …


எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை

குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை

குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபை

– “ஸ்ரீ குரு கீதை”

சத் குருவின் மேன்மையை அறிய வேண்டுவோர் குரு கீதையிலுள்ள நூற்றுக்கணக்கான ஸ்லோகங்களைப் படிக்க வேண்டும்.

(குரு கீதை (392 Slokas or Sutras) யைத் தனியாகத் தருகிறேன்.)

XXXXX subham xxxxxx

TAGS: குரு , சற்குரு , சத்குரு , குரு கீதை , அறப்பளீச்சுர சதகம், நல்லாசிரியர் ,பரிசனவேதி , திருமூலர் 

வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி ரத்னங்களாலும் பெற முடியாது! (Post.11,479)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,479

Date uploaded in London – –   27 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்

வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி ரத்னங்களாலும் பெற முடியாது!

ச.நாகராஜன்

அனந்தம் பத மே வித்தம் யஸ்ய மே நாஸ்தி கிஞ்சன் |

மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் ந மே தஹதி கிஞ்சன் ||

ஜனக மாமன்னன் கூறுவது இது:

எனது பொக்கிஷம் அளவில்லாதது. என்றாலும் கூட எனக்கு ஒன்றுமே இல்லை. மறுபடியும் மிதிலை மீண்டும் எரிக்கப்பட்டு சாம்பலாக ஆனாலும், என்னுடையது எதுவும் எரிக்கப்படாது.

My treasures are immense, yet I have nothing. If again the whole of Mithila were burnt and reduced to ashes, nothing of mine will be burnt. (Translation by C.Roy)

 மஹாபாரதத்தில் வரும் ஸ்லோகம் இது. ஆசைசுகபோகம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஜனக மஹாராஜன் மனதால் முக்தி அடைந்த மன்னன். ஜனகரைப் பற்றி மஹாபாரதத்தில் நிறையப் படித்து அறிந்து கொள்ளலாம்.

**

அனத்யன்யபி ரத்னானி லப்யந்தே விபவை: சுகம் |

துர்லபோ ரத்னகோடத்யாபி க்ஷணோபி கதாயுஷ: ||

விலை மதிக்கவே முடியாத ஒரு ரத்னத்தைக் கூட சுலபமாக பணத்தைக் கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் ஒருவனின் வாழ்க்கை முடிய இருக்கும் தருணத்தில் ஒரு கணத்தைக் கூட கோடி ரத்னங்களைக் கொடுத்தும் கூடப் பெற முடியாது.

Even an invaluable jewel can be easily obtained for money; but one whose life (is due) to expire cannot obtain even a moment (of life) for millions of jewels.

**

அனர்த்தமகராநாராத்  அஸ்மாத் சம்சாரஸாகராத் |

உட்டீயதே நிருத்வேகம்  சர்வத்யாகேன புத்ரக் ||

மகனேஎல்லா வித ஆசைகளையும் துறந்துஅபாயங்களாக வரும் முதலைகளின் இருப்பிடமான உலக வாழ்க்கை என்னும் சமுத்திரத்தின் கவலை இன்றி ஒருவன் பறக்கிறான் (சொர்க்க மகிழ்ச்சிக்கு),

By giving up all (attachments),  O, son, one flies up (to the happiness of heaven), without worry from the ocean of worldly life which is veriable abode of alligators in the form of dangers. (Translation by A.A.R)

**

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினஷ்யதி |

புண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வஜ்ரலேபோ பவிஷ்யதி ||

வேறு ஒரு இடத்தில் ஒருவன் செய்த பாவம் புண்ய க்ஷேத்ரத்தில் போய் விடுகிறது. ஆனால் ஒரு புண்ய க்ஷேத்திரத்தில் செய்த பாவம் அவனை வஜ்ரம் போல ஒட்டிக் கொள்கிறது.

A sin committed in some other place perishes (is remedied) in a holy place.

But a sin committed in a holy place will be attached to him as by adamantine glue. (Translation by A.A.R)

**

புத்தக அறிமுகம் 124

அறிவியல் வியக்கும் மந்திர மஹிமை, மனோசக்திமறுபிறப்பு,  காலம் பற்றிய உண்மைகள்!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1) ஒலியின் ஆற்றல்! – 1

2) ஒலியின் ஆற்றல்! – 2

3) ஒலியின் ஆற்றல்! – 3

4) ஒலியின் ஆற்றல்! – 4

5) ஒலியின் மஹிமை: விஞ்ஞானம் தரும் ஆச்சரியமூட்டும் புதிய

   தகவல்!

6) மந்திரங்களின் மஹிமை – 1

7) மந்திரங்களின் மஹிமை – 2

8) மந்திரங்களின் மஹிமை – 3

9) மனதின் அபூர்வமான சக்தி! – 1

10) மனதின் அபூர்வமான சக்தி! – 2

11) மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின்

    புத்தகம் – 1

12) மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின்

    புத்தகம் – 2

13) மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின்

    புத்தகம் – 3

14) மறு பிறப்பு உண்டா என்ன? –சரகர் தரும் பதில்!!

15) ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் மறுபிறப்பு நம்பிக்கையே!                 

16) காலம் என்னும் மர்மம்! – 1 

17) காலம் என்னும் மர்மம்! – 2

18) காலம் என்னும் மர்மம்! – 3

19) சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!

20) மேடம் ப்ளாவட்ஸ்கி நிகழ்த்திய அற்புதங்கள்                       21) அதீத உளவியல் ஆற்றல் கொண்ட நினா குலாஜினா!                                  22) சில மனிதர்களின் அதிசய சக்திகள்!

23) மந்திரம், யந்திரம், தந்திரம் எல்லாம் உங்கள் பெயரில் இருக்கிறது!

24) எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின்                                     நேரடி அனுபவம் – 1                                                                                                                  25) எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின்                                     நேரடி அனுபவம் – 2                                                                                                                   26) எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின்                                     நேரடி அனுபவம் – 3                                                                                                                  27) அதிசய ஒற்றுமைகள்! – 1                                                                                                28) அதிசய ஒற்றுமைகள்! – 2                                                29) அதிசய ஒற்றுமைகள்! – 3

*

நூலில் இடம் பெற்றுள்ள என்னுரை :

என்னுரை

நாளுக்கு நாள் நாம் காணும் அறிவியலின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் ஒன்று.

ஆனால், அறிவியல் விளக்க முடியாத பல்லாயிரம் விஷயங்கள் இன்றும் உள்ளன. அதே போல பல விஷயங்களைப் பற்றி ஆய்வு நடத்தி அறிவியல் வியக்கும் விஷயங்களும் பல உள்ளன.

அதீத உளவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளை அறிவியல் கடந்த இருநூறு வருடங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வந்திருக்கிறது.

மந்திரங்களின் மஹிமை, மனம், கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல மனித சக்திகள், காலம் பற்றிய மர்மம், பிரக்ஞை, விண் மண்டலம் ஆகியவை பற்றிய அறிவியலின் வியப்பு அவ்வப்பொழுது பல்வேறு விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது.

இவை பற்றிய ஹிந்து மத அணுகு  முறை ஆழமானது; வியக்கத் தக்கது; நுணுக்கமான விவரங்களைக் கொண்டது.

இவை பற்றி பல கட்டுரைகளைப் பல ஆண்டுகளாக எழுதி வந்துள்ளேன்.

அறிவுக்கும் அப்பால் உள்ளிட்ட எனது புத்தகங்களில் இவற்றைக் காணலாம்.

ஹெல்த்கேர், ஞான ஆலயம், www.tamilandvedas.com ஆகியவற்றில் வெளியான சில கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஹெல்த்கேர் ஆசிரியர் திரு ஆர்.சி.ராஜா, ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ், தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக் வெளியீட்டாளர் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக.

அழகிய முறையில் இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி

சான்பிரான்ஸிஸ்கோ                                                                          .நாகராஜன்                                                 15-9-2022

·          

 நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Learn Tamil Verbs 26 : Adai/Reach/Get/Obtain (Post.11,478)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,478

Date uploaded in London – 26 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

One more Tamil verb Adai= reach, Get, Obtain

This Adai is similar to Kadai/Churn, Kudai/

 (but not Udai/break)

அடை– attain, reach, get, obtain ,

குடை– bore, make hole tunnel though

கடை– churn

மகிழ்– feel happy, enjoy,

புகழ்– glorify, praise

இகழ்– ridicule, deride

In noun forms they have different meanings; for instance அடை– lentil pancake, குடை– umbrella. கடை– shop

Some examples for Adai/ Kadai/ Kudai

அவன் காலையில் மதுரையை அடைந்தான்.

Avan kaalaiyil  mathuraiyai adainthaan

He- in the morning – Madurai+I – reached

He reached Madurai in the morning

xxxxxx

அவள் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி அடைந்தாள்

Aval – ottap panthayaththil – vetri— adainthaal

She  – in the running race — victory – attained

xxx

தேவர்களும் அசுரர்களும் கடல் கடந்தனர் (கடலைக் கடைந்தனர்)

Devarkalum Asurarkalum Kadal Kadainthanar

Devas and Asuras Sea/ocean Churned

Devas and Asuras churned the ocean

xxxx

வேலைக்காரன் தயிர் கடைந்தான்

Velaikkaaran Thayir Kadainthaan

Servant Curd Churned

Servant churned the Yoghurt (to make Lassy or butter  milk or to get butter from it)

xxxx

அவர்கள் மலையைக் குடைந்தனர்

Avargal Malaiyaik Kudainthanar

They hill bored

They bored the hill or made a tunnel.

Xxxx

Same sound; but different conjugation!

With Adai /அடை we have two different verbs. The second meaning is block something, detain/ imprison someone. That is conjugated differently; similar to Udai/ உடை break (We are not looking into it now)

Xxx

Makiz, Pugaz, Ikaz were seen in the last lesson

xxxx Subham xxxxx tags- Tamil verbs, Adai, Kudai, Kadai

உடன் பிறப்பு (Brothers, Sisters) பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,477)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,477

Date uploaded in London – 26 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

THIS IS FOURTH VERSE WITH LONDON SWAMINATHAN’S COMMENTARY

4. உடன் பிறப்பு

கூடப் பிறந்தவர்க் கெய்துதுயர் தமதுதுயர்

     கொள்சுகம் தம்சு கமெனக்

  கொண்டுதாம் தேடுபொருள் அவர்தேடு பொருள்

     அவர்கொள் கோதில்புகழ் தம்பு கழெனத்,

தேடுற்ற அவர்நிந்தை தம்நிந்தை தம்தவம்

     தீதில்அவர் தவமாம் எனச்

  சீவன் ஒன்றுடல்வே றிவர்க்கென்ன, ஐந்தலைச்

     சீறரவம் மணிவாய் தொறும்

கூடுற்ற இரையெடுத் தோருடல் நிறைத்திடும்

     கொள்கைபோல் பிரிவின் றியே

  கூடிவாழ் பவர்தம்மை யேசகோ தரரெனக்

     கூறுவது வேத ருமமாம்;

ஆடிச் சிவந்தசெந் தாமரைப் பாதனே!

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே – நடித்துச் சிவப்பான

செந்தாமரை மலரடிகளையுடையவனே! அண்ணல் – தலைவனாகிய, எமது

………… தேவனே!

கூடப் பிறந்தவர்க்கு எய்துதுயர் தமதுதுயர் கொள்சுகம்

தம்சுகம் என – உடன் பிறந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தம் தமது வருத்தம்

அவர்கள் கொள்ளும் இன்பம் தம் இன்பம் என்றும், தாம் கொண்டு தேடு

பொருள் அவர் தேடு பொருள்,

அவர்கொள் கோதுஇல்புகழ் தம்புகழ்என – தாம் முயன்று சேர்க்கும் பொருள் அவர்கள் சேர்க்கும் பொருள், அவர்கள் கொண்ட குற்றமற்ற புகழ் தம்முடைய புகழ் என்றும்,

அவர் தேடு உற்ற நிந்தை தம் நிந்தைதம் தவம் தீதுஇல் அவர் தவமாம் என –

அவர்கள் கொண்ட பழிப்பு தம்முடைய பழிப்பு, தம்முடைய தவம் குற்றமற்ற

அவருடைய தவமாகும் என்றும்,

 இவர்க்குச் சீவன் ஒன்று உடல்வேறு

என்ன – இவர்களுக்கு உயிர் ஒன்று, மெய் மட்டும் வேறு என்றும்,

சீறு அரவம் மணி ஐந்தலைவாய் தொறும் – சீறுகின்ற பாம்பின்

மாணிக்கங்களையுடைய ஐந்து தலைகளிலுமுள்ள வாய்தோறும்,

கூடு உற்ற இரை எடுத்து ஓர் உடல் நிறைத்திடும் கொள்கைபோல் – கிடைத்த

உணவை யெடுத்து ஒருடலை நிறைக்கின்ற இயற்கைபோலவும்,

 பிரிவேஇன்றி – பிரிவே யில்லாமல், கூடி வாழ்பவர் தம்மையே

சகோதரர் எனக் கூறுவதுவே தருமம் ஆம் – கூடிவாழ்கின்றவர்களையே உடன்பிறந்தோர் என்று கூறுவது அறமாகும். 

XXXX

லண்டன் சுவாமிநாதன் விளாக்க உரை- வியாக்கியானம்

இந்தப் பாட்டில் இரண்டு அருமையான உவமைகள் வருகின்றன; முதலா வது – ஈருடல் ஓருயிர் ; பொதுவாக கணவன் மனைவிக்கு அல்லது காதலன்-காதலிக்குப் பயன்படுத்தப்படும் வாசகம். இதை அம்பலவாணர் சகோதர்களுக்குப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது சித்திரம்- ஐந்து தலை நாகம், ஐந்து தலைகளால் சாப்பிட்டாலும் அது ஒரே உடலிலேயே செல்லுவது போல — என்ற சித்திரம் ஆகும். உலகில் 5 தலைப் பாம்பு கிடையாது; கற்பனைக் கதைகளில் மட்டுமே உண்டு. ஆ னால் சிவனுக்கு 5 தலைகள் உண்டு. அப்படிப்பார்த்தாலும் அவருக்கும் உடல் ஒன்றே ; ஆக அதையும் நினைவிற்கொள்ளலாம். 

உடன் பிறந்தார் என்பவர் எப்படி இருக்கவேண்டும் அல்லது யார் உண்மையன சகோதரர் என்று இலக்கணம் வகுக்கும் பாடல் இது. சம்ஸ்க்ருதத்தில் அண்ணன், தம்பி இருவருக்கும் பொதுவான சொல் சகோதரர் .

xxx

Linguistic points 

இது சக + உதர என்பதிலிருந்து உருவான சொல். உலகில் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சகோதர மொழிகள். மெர்காத்தியர் சொல்லுவது போல இரு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. இதை 200 கட்டுரைகள் மூலம் நிரூபித்துள்ளேன். இந்த இரண்டு மொழிகளே பேசசு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இன்று வரை சந்தி விதிகளைப் பின்பற்றுகின்றன.

ஸம்ஸ்க்ருத்த்தில் அ +உ = ஓ ;

ஓம்காரத்தையும்  நாம் அ +உ +ம என்றே பிரிப்போம். அவ்வகையில் ஸஹ + உதர = ஸஹோதர என்று மாறும் .

உதர என்றால் வயிறு ; அம்மாவின் ஒரே வயிற்றுப் பகுதியிலிருந்து வந்தவர்கள் சகோதர , சகோதரி ஆவர் . இந்தச் சொற்களும் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சகோதர மொழிகள்– ஒரு தாய் வயிற்றுப்  பிள்ளைகள் என்பதைக்  காட்டும். ஸம்க்ருதத்தில் எப்படி பெண்பாற் சொற்கள் உருவாக்கப்படுகின்றனவோ அப்பாடித்தான் தமிழும் செய்யும். இதை உலகில் வேறு எந்த மொழிகளிலும் காண முடியாது. கொஞ்ச நஞ்சம் இருந்தால் அவை நம்மிடமிருந்து தோன்றியவையாக இருக்கும்.

சம்ஸ்க்ருதத்தில் ப்ராதா என்றால் சகோதரன்; இது ஆங்கிலத்தில் ப்ரதர் BROTHER ஆக மாறியது

xxxx

இனி மேற்கூறிய பாட்டின் விளக்கத்துக்கு வருவோம்

ஒரே வயிற்றிலிருந்து பிறந்தார் மட்டுமே சகோதரர் என்பதல்ல. அந்தக்  குணத்தை உடைய அனைவருமே சகோதரர் ஆவர். ஏனெனில் அவர்கள்,  மேற்கூறிய பாட்டில் உள்ளது போல, பிறர் இன்ப துன்பங்களைத் தமதாக ஏற்று உதவுகின்றனர். உலகில் முதல் முதலி ல் இதைப்  பின்பற்றிவர் ராம பிரான். அதனால்தான் அந்தப் பெ யரைச் சொன்னவுடன் இந்துக்கள் புனிதம் அடைகின்றனர்.

ராமனுடன் பிறந்தவர் எவருமிலர் ; கோசாலைக்கு அவர் ஒருவரே புதல்வர்; ஆயினும் பிற அன்னையர் வயிற்றில் பிறந்த மூவரையும் சேர்த்து நால்வர் என்று உலகம் அழைத்தது. ஆனால் ராமனோ அதற்கெல்லாம் பல படிகள் மேலே சென்று, வேடர் குல குகனை நீ என் சகோதரன் என்று சொல்லிவிட்டு, ,பின்னர் குரங்கின சுக்ரீவனை ஆறா வதாகச் சேர்த்துக்கொண்டு, இறுதியில் அரக்கர் குல விபீஷணனை ஏழாவது பிரதர் BROTHER என்கிறான்

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின்வந்த

அகம் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்

புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொ லிந்தான் நுந்தை

–வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம் 

பொருள்

அன்பின் காரணமாக எம்முடன் வந்து சேர்ந்தவனே! நாங்கள் பிறப்பால் நான்கு சகோதரர்கள்; கங்கைக் கரையில் குகனுடன் நட்புக் கொண்டு ஐவர் ஆனோம்; பின்னர் கிட்கிந்தையில், மேருவை வலம் வரும் சூரியனின் புதல்வனான, சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்; இன்று உன்னுடன் நட்பு பூண்டு எழுவர் ஆகிவிட்டோம் . என் தந்தை எனக்கு காட்டை அளித்ததால் நிறைய பிள்ளைகள் ஏற்பட்ட மன நிறைவு அவனுக்கு கிடைத்துவிட்டது.- என்று ராமன் சொன்னான் 

என்ன அற்புதமான பாடல்! இதுதான் உண்மையான ‘யாதும் ஊரே, யாவரும் சுற்றத்தார் (கேளிர்)’.

XXXX

ராமனுக்கு டுத்து வந்தவன் கிருஷ்ணன். அவரை  மஹாபாரதத்தில் காண் கிறோம் ; அந்த மஹாபாரதத்தில் மேலும் ஒரு சகோதர இலக்கணம் கிடைக்கிறது. மஹாபாரதத்தில் மிகவும் புகழ்பெற்ற பொன் மொழிகள் உடையது “பேயின் கேள்விகள்” எனப்படும் யக்ஷப் ப்ரச்னம் ஆகும். 120-க்கும் மேலான கேள்விகளுக்கு உண்மையான பதில்களை சொன்னவுடன். மரத்தில் இருந்த பூதத்துக்கு பரம திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. பின்னர் ஏற்கனவே கீழே விழுந்து கிடக்கும் நால்வரில் யாரை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கேட்கிறது. என்னுடன் குந்தி வயிற்றில் பிறந்த மூவரில் நான் ஒருவன் இருக்கிறேன்..என் சிற்றன்னை மாதரி வயிற்றில் பிறந்த நகுலனை எழுப்பு என்று சொன்னவுடன் யக்ஷ /பூதத்துக்கு மனம் உருகிவிட்டது. ஆஹா இஃதல்லவோ ஸஹோதர பாசம் அனைவரும் உயிர்பெற்று எழுவதாக என்று சொல்லி பஞ்ச பாண்டவர்களை அனுப்பிவைக்கிறது . சகோதர இலக்கணத்தை நமக்குச் சொல்லிக் கொடுக்கத்தான் கம்பனும் வியாசனும் நமக்கு இதிஹாச புராணங்களை எழுதி வைத்தனர்.

XXX

இனி ஸம்ஸ்ருத நூல்கள் சிலவற்றைக் காண்போம்:

குறைகள் இருந்தாலும் அதையும் மீறி சகோதரர்களை நேசியுங்கள்

கர்த்தவ்யோ  ப்ராத்ருஷு ஸ்னேஹக விஸ்மர்தவ்யா குணே தராஹா

–பாஷா எழுதிய தூத வாக்ய நாடகம்

XXX

ஜ்யேஷ்டோ ப்ராதா பித்ரு ஸமஹ

அண்ணன் என்பவன் தந்தைக்குச் சமம்

—பாஷா எழுதிய மத்யம வ்யாயோக  நாடகம்

XXX

சகோதர பாசம் தெய்வீகமானது

ப்ராத்ரு ஸ்னேஹோ ஹ்யலெளகிகஹ

–விக்ரம சரித என்னும் விக்ரமாதித்யன் கதைகள் 

XXX

ப்ராத்ரா விஷமஸீலோபி கதம் ப்ராதா நிரஸ்யதே

ஒரு சகோதரன் தவறிழைத்தாலும் அவனை விட்டு நீங்குவதை எப்படி ஏற்க முடியும்?

—-வால்மீகி ராமாயணம் 6-87-20

XXXX

ந ஸர்வே ப்ராதரஸ் தாத பவந்தி பரதோபமா

எல்லா சகோதரரும் பரதனுக்கு சமம் ஆக முடியுமா ?

–வால்மீகி ராமாயணம் 6-18-15

न सर्वे भ्रातरस्तात भवन्ति भरतोपमाः ||६-१८-१५
मद्विधा ना पितुः पुत्राः सुहृदो वा भवद्विधाः |

“My dear one! Neither all brothers are like Bharata, nor all sons of a father like me nor all friends are like you.”

கம்பனும் வால்மீகியை எதிரொலிக்கிறான்

ஆயிரம் ராமர்  = பரதன்

‘தாய் உரைகொண்டு தாதை உதவிய     தரணிதன்னை,

‘‘தீவினை” என்ன நீத்து,     சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்றபோழ்து, புகழினோய்!     தன்மை கண்டால்,

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,     தெரியின் அம்மா!

     ‘புகழினோய்! – புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு – (உன்)

தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு;  தாதை

உதவிய – (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த;  தரணி தன்னை –

(கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து – தீயவினை வந்து

சேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி –

முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை – (வனத்துக்கு) வந்தாய்;

என்ற போழ்து – என்ற காலத்தில்; தன்மை கண்டால் – (உனது)

நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் – ஆராய்ந்தால்; ஆயிரம்

இராமர் நின்கேழ்ஆவரோ – ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -.

     தந்தைமட்டுமே அளித்த அரசை வெறுத்து வந்த இராமனிலும், தாயும்

தந்தையும் இணைந்து அளித்த அரசை வெறுத்த பரதன் மேன்மை புலப்பட

இவ்வாறு கூறினான்.

XXX

தமிழில் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல் வழக்கும் உளது. லட்சுமணனின் புகழைப் பாடும் வரி அது. ராமனுக்கு நேரும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்தவன் அவன். 14 ஆண்டுக்காலம் இரவு முழுதும் தூங்கமால் காவல் காத்தவன் அவன் .

இதற்கு நிகராக அரக்கர் தரப்பில் கும்பகர்ணனையும் ராமாயணம் நமக்குக் காட்டுகிறது ராவணன் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டியும், நீ என் சகோதரன்; எனக்குச் சோறுபோட்டு வளர்த்தாய் அதற்காக உன் தரப்பில் சண்டையிடுகிறேன் என்பான்.

தமிழில் அண்ணன் தம்பிகளைப் போற்றியும் தூற்றியும் பழமொழிகள் இருக்கின்றன. தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால், அண்ணனுக்குத் தம்பி அல்லவென்று போகுமா  என்ற பழமொழி கள் சகோதர பாசத்தைக் காட்டும்.

வடக்கில் ரக்ஷா பந்தன் என்ற விழா சகோதர பாசத்தை அ னைவரிடமும் வளர்க்கும் விழாவாக இருக்கிறது. முஸ்லீம்கள் படையெடுப்பிலிருந்து இந்துப் பெண்களைக் காப்பாற்றுவதற்கு உருவான சடங்கு இன்று பெரிய விழாவாக வளர்ந்து விட்டது.

–SUBHAM— 

TAGS– உடன் பிறப்பு, சகோதரன், யக்ஷப்ரச்னம், பரதன், தம்பி உடையான் , ஆயிரம் ராமர், அறப்பளீச்சுர சதகம்,,குகன், பிராதா

கழுத்தில் சங்கிலி பெண்ணுக்கு! காலில் சங்கிலி ஆணுக்கு!! (Post.11476)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,476

Date uploaded in London – 26 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கலப்பு திருமணம் Okay!  Okay !ஓகே

ஸ்த்ரியோ ரத்னானி யதோ வித்யா தர்மஸ் செளசம் சுபாஷிதம்

வி நிதானி ச சில்பானி  சமேதாயானி ஸர்வதஹ

நல்ல குணமுள்ள பெண்கள், ரத்தினக் கற்கள் , கல்வி, அறநெறி,

தூய்மை, பொன்மொழிகள் நல்ல கலைகள்/கலைப் பொருட்கள் எங்கிருந்து வந்தாலும் ஏற்கலாம்.

Xxx

பெண்களை நம்பாதே! கண்களே பெண்களை நம்பாதே!!

நான்னம் அத்யாத் ஏகவாஸாஹா ந நக்னஸ் ஸ்நானம் ஆசரேத்

நாச்லீலம் கீர்த்தயேத் தீமான் ந குர்யேத் ஸ்த்ரீ வதக்வசிதி 

ஒரு துணியை மட்டும் உடுத்திக்கொண்டு உண்ணக் கூடாது;

நிர்வாணமாக குளிக்கக் கூடாது ; தீமையான கெட்ட வார்த்தைகளைச்

சொல்லக்கூடாது பெண்கள் பேச்சைக் கேட்கக்கூடாது பெண்களைக் கொலைசெய்யக்கூடாது .

XXX

சிரத்த தானாத் சுபாம் வித்யாம் ஆததீதா (அ) வராதபி

அந் த்யாதபி  பரம் தர்மம் ஸ்த்ரீ ரத்னம்  துஷ்குலாதபி

-மனு ஸ்ம்ருதி

தாழ்ந்த ஜாதியில் பிறந்தவர்களிடமும் நல்ல வித்தைகளைக் கற்கலாம்;

நல்ல குணங்களை சண்டாளர்களிடமும் அறிந்துகொள்ளலாம்;

நல்ல குணமுள்ள பெண்களை தாழ்ந்த ஜாதியிலிருந்தும்   திருமணம் செய்யலாம்.

Xxx

பெண்கள் கழுத்தில் தங்கச் சங்கிலிஆண்கள் காலில் இரும்புச் சங்கிலி

நரஸ்ய பந்தார்த்தாய ச்ருங்கலா ஸ்த்ரீ ப்ரகீர்த்திதா

லெள ஹபத்தோபி முச்யதே ஸ்த்ரீ பத்தோ நைவ முச்யதே

பெண் என்பவள் மனிதனைக் கட்டிப்போடும் சங்கிலி ;

இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டவனுக்கு ஒருகாலத்தில் விடுதலை கிடைக்கும் ;  ஆனால் பெண் என்னும் சங்கிலியால் கட்டப்பட்டவனுக்கு ஒருபோதும் விடுதலை இல்லை

தமிழிலும் கூட, கட்டுங்கடங்காத காளையாகத் திரியும் இளைஞனைக் கட்டுப்படுத்துவதற்கு ,

பையனுக்குக் “கால்கட்டு ” (திருமணம்) போட வேண்டும் என்றே சொல்லுவார்கள்.

xxxxx

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!

ஸ்த்ரியோ ஹி மூலம் நிதனஸ்ய பும்ஸ ஹ

ஸ்த்ரியோ ஹி மூலம் வ்யஸனஸ்ய பும்ஸஹ

ஸ்த்ரியோ ஹி மூலம் நரகஸ்ய பும்ஸஹ

ஸ்த்ரியோ ஹி மூலம் கலஹஸ்ய பும்ஸஹ

பெண்களே, மனிதனுடைய அழிவுக்குக்  காரணம்

பெண்களே, மனிதனுடைய துக்கத்துக்குக் காரணம்

பெண்களே, மனிதனுடைய நரகத்துக்குக் காரணம்

பெண்களே, மனிதரிடையே கலகத்துக்குக் காரணம்

மங்கை கைகை (கைகேயி) சொற்கேட்டு மன்னர்

புகழ் தசரதனும் மரணம் ஆனான்

செங்கமலச் சீதை சொல்லை ஸ்ரீராமன்

கேட்டவுடன் சென்றான் மான் பின்;

தங்கை அவள் சொல்லைக் கேட்டு இராவணனும்

கிளையோடும் தானும் மாண்டான்

நங்கையற் சொற் கேட்பதெல்லாம் கேடுதரும்

பேர் உலகோர் நகைப்பர்தாமே.–விவேக சிந்தாமணி

Xxxx

ஸர்வஸ்ய த்வே சுமதி குமதீ ஸம்பத் ஆபத்தீ ஹேது

ஏகோ கோத்ரே ப்ரபவதி புமான் யஹ குடும்பம் பிபர்த்தி

வ்ருத்தோ யூனா ஸஹ பரிசயாத் யஸ்யதே  காமிநீபிஹி

ஸ்த்ரீ பும்வத்  ச ப்ரபவதி யதா தத்தி கேஹம் விநஷ்டம்

எல்லோருக்கும் செல்வத்துக்கும் ஆபத்துக்கும் காரணமாக

இருப்பவை நல்ல புத்தியும் கெட்ட புத்தியும் ஆகும் ;

ஒரே வம்சத்தில் ஒருவன் குடும்பத்ததையே தாங்கி ஆதரிக்கிறான் ;

மற்றவன் வயது அதிக மானலும் பெண்களால் போற்றப்படுகிறான்;

எப்போது ஒரு பெண்ஆண்களைப் போல அதிகாரம் செய்கிறாளோ

அப்போது அந்தக் குடும்பம் அழியும் (உலக இயற்கை பற்றி வியக்கும் கவிதை இது)

பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும்

குணம் மூடப் பேடி லோபர்

முண்டைகளுக்கு இணையில்லா முனை வீரர்

புருடரென மொழியொணாதே

உண்டுலகம் உதிர்ப்பாருள் கீர்த்தியறம்

இன்ன தென உணர்வே யில்லார்

அண்டினவர் தமைக் கெடுப்பார் அழிவழக்கே

செய்வதவர் அறிவுதானே.–விவேக சிந்தாமணி

Xxxx

பெண்ணின் எச்சில் கூடாது

ஸ்த்ரீபாத்ர புங் நரஹ பாபஹ ஸ்த்ரீணாம் உச்சிஷ்டபுக் ததா

தாபிஸ் ஸஹச யோ புங்தே ஸ புங்தே மத்யமேவ ச

பெண்களும் ஆண்களும் ஒரே தட்டிலிருந்து உண்ணுவதும்,

பெண்கள் உண்ட எச்சிலை உண்ணுவதும் , பிற பெண்களோடு சேர்ந்து உண்ணுவதும் பாபமாகும். அப்படி உண்ணப்படும் உணவு தூய்மையற்றதாகும்

உணவு உண்ணப்படும்போது காம உணர்வுகள் எழாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் பாதுகாப்பு இவை. அதுமட்டுமல்ல நல்ல எண்ணங்களுடன் உண்ணும் உணவு தனக்கும், அன்னமிட்ட பெண்களுக்கும் நன்மை செய்யும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சாப்பிட்டு முடிந்தவுடன் மந்திரம் சொல்லி அன்னத்தை வாழ்த்துவர். அன்னதாதா சுகீ பவஅன்னமிட்டவர் வாழ்க, என்று வாழ்த்தி எழுந்திருப்பார்கள். உணவை உண்ணும் முன்பும் உணவை அமிர்தம் என்று சொல்லி, இறைவனை வாழ்த்தி உண்ணத் தொடங்குவர். அப்படிப்பட்ட சமுதாயத்துக்குச் சொன்ன பொன்மொழி இது.

Xxxx subham xxxx

tags- கழுத்து, சங்கிலி, ஆண் , பெண் , கால் , சுபாஷிதம் 

அருள்வாயே! – 5 (Post No.11,475)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,475

Date uploaded in London – –   26 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

அருணகிரிநாதர் தொடர்!

அருள்வாயே! – 5

ச.நாகராஜன்

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

37) சுவாமிமலை

நீடார் ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை

  நீகாணெ னாவ னைச்சொ  லருள்வாயே

பாடல் எண் 223 –  நாவேறு பாமணத்த  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து சஹஸ்ராரத்தில் பெரிய பொருள்களுக்கு எல்லாம் பெரிய பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று அந்த ஐக்கிய வசனத்தை உபதேசித்து அருள்வாயாக!

38) சுவாமிமலை

 உறவுகொள் மடவர்க ளுறவாமோ

   உனதிரு வடியினி  யருள்வாயே

பாடல் எண் 225 –  நிறைமதி முகமெனும்  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் உறவு ஆகுமோ? ஆகாது என்பதால் உன்னிரு திருவடிகளை இனியாகிலும் தந்தருள்வாயாக!

39) சுவாமிமலை

 கால னெனையணு காம லுனதிரு

   காலில் வழிபட அருள்வாயே

பாடல் எண் 228 –  பாதி மதிநதி  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : எமன் என்னை அணுகா வகைக்கு உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக!

40) சுவாமிமலை

 பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற

  பெருவாழ்வு பற்ற அருள்வாயே

பாடல் எண் 230 –  மருவே செறுத்த எனத் தொடங்கும் பாடல்

பொருள் : என் பிழைகளைப் பொறுத்து உன் இரு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பேரின்ப பெருவாழ்வை யான் பற்றும் படியாக அருள்வாயாக!

41) சுவாமிமலை

 அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி

   னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே

பாடல் எண் 231 –  முறுகு காள எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களு கலந்து கூடி அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக!

42) திருத்தணிகை

 பிறவிகள் தொறு மெனைநலி யாத

   படியுன தாள்கள் அருள்வாயே

பாடல் எண் 243 –  இருமலு ரோக எனத் தொடங்கும் பாடல்

பொருள் : ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக!

43) திருத்தணிகை

 தொலைவி லாத பேராசை துரிச றாத வோர் பேதை

     தொடுமு பாய மேதோசொ லருள்வாயே

பாடல் எண் 244 –  உடலினூடு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன் அடைவதற்கு உரிய வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி அருள்வாயாக!

44) திருத்தணிகை

    வாடி முகம் வேறாய்

நலியுமுன மேயு னருணவொளி வீசு

 நளின இரு பாத மருள்வாயே

பாடல் எண் 245 –  உடையவர்கள் ஏவர் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : அகம் வாடி முகம் களை மாற, அப்படி வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக!

45) திருத்தணிகை

    குரவணி நீடும் புயமணீ நீபங்

      குளிர்தொடை நீதந் தருள்வாயே

பாடல் எண் 256 –  கலை மடவார் தம் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : குரா மலர்களைத் தரித்துள்ள நீண்ட புயங்களில் அணிந்துள்ள கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை நீ தலைவிக்குத் தந்தருள்வாயாக!

குறிப்பு : இப்பாடல் அகத்துறையில் ‘நாயக-நாயகி’ பாவத்தில் பாடப்பட்ட பாடல். முருகனைப் பிரிந்த தலைவிக்காகப் பாடிய பாடல் இது. ஊர்ப் பெண்களின் ஏச்சும், கடல், அலைகள், குயிலின் ஓசை, சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் ஆகியவையும் தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுகின்றன. முழுப்பாடலில் இதைக் காணலாம்.

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

புத்தக அறிமுகம் 123

ஆன்மீக ரகசியங்கள்!                

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாமா?

2. பரம மங்களம் தரும் பாராயணம்

3. பாரத ஸாவித்ரியும், அரவிந்த ஸாவித்ரியும்

4. ரிஷிசக்தி    

5. வளமான வாழ்க்கைக்கு வாஸ்துவும் ஃபெங் சுயியும்!    

6. பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்!  

7. ஆதித்ய ஹ்ருதயமும் ராம ஹ்ருதயமும்

8. கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்   

9. சேது தரிசனம் பாப விமோசனம்!  

10. அற்புத புருஷரைச் சந்தித்து ஆனந்தமடைந்த அதிசய சித்தர்!

11. அறிவியல் வியக்கும் ஸ்ரீசத்ய சாயிபாபா!    

12. சொல்லுவதறியேன் வாழி! தோற்றிய தோற்றம் போற்றி!!

13. நீங்கள் செய்த தர்மம், கர்மம் எவ்வளவு, எவ்வளவு?    

14. முப்பத்திரண்டு அறங்கள்!   

15. ரகசியமாய் ஒன்பது ரகசியங்கள்! 

16. யமாய நமஹ! யம பயம் தீர யமனைப் பற்றி படியுங்கள்..

17. ஆதி விநாயகர்   

18. சாபம் பலிக்குமா?

19. எண்ணங்களால் தலைவிதியை மாற்றலாமே!

20. அம்பாளின் பெருமை!  

21. திருப்பதியில் பூப்பறித்தல் விழா!  

22. ரமண நட்சத்திரம்!

23. கண்ணன் இதழ் குழலே, காட்டும் வெற்றி ஒளியே!

24. பலன் அளிக்கும் பத்து முத்திரை ரகசியங்கள்!

25. சரித்திர நாயகன் 

26. கலியுகத்தில் கடைத்தேற வழி!   

*

இந்த நூலுக்கு அழகிய முன்னுரை தந்து சிறப்பித்தவர் மாபெரும் எழுத்தாளரான திரு அசோகமித்ரன் அவர்கள்!

இந்த போட்டோ திரு அசோகமித்ரன் அவர்கள் இல்லத்தில் எடுத்த போட்டோ. வருடம் 2008. இடமிருந்து வலத்தில் முதலாவது ச.நாகராஜன், மூன்றாவது திரு அசோகமித்ரன் இரண்டாவது, நாலாவது : நிலாச்சாரல் மின்னிதழ் குழுவினர்.

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

When the divine secrets and hidden truths behind our religion are explained scientifically, we become spell bound at the knowledge and capacity of our ancestors. This book consists of 27 essays written by S. Nagarajan, and introduction is written by the leading Tamil novelist and great writer, Asokamitran. He has mentioned the lines in his introduction, “ When I read the 27 articles of this book’ Divine Secrets’ , I was really impressed.” Further, he continues, ”At present, owing to the increase of the population and the abnormal development of the information technology, without censorship now our sacred religious places would become almost picnic spots. Changes according to times are inevitable. Here, the question of right or wrong never arises. Under this sort of changing times, man is able to safe guard himself through the beliefs and values which he carries from generation to generation. I this way, S. Nagarajan’s book plays an important place.”

விஞ்ஞான நோக்கில் ஆன்மிக ரகசியங்கள் விளக்கப்படும்போது நம் முன்னோர்களின் அறிவும் ஆற்றலும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன! இந்த நூலுக்குப், புகழ்மிக்க பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் உயர்திரு.அசோகமித்திரன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். அவர், “திரு.ச.நாகராஜன் அவர்கள் எழுதிய ‘ஆன்மீக ரகசியங்கள்’ நூலைப் படித்தபோது எனக்குப் பிரமிப்புதான் ஏற்பட்டது!” என்கிறார்! மேலும் “மாறி வரும் சூழ்நிலையிலும் மனிதனை நிலை தடுமாறாது பாதுகாப்பது, காலம் காலமாக மனித இனத்தைப் போஷித்து வரும் நம்பிக்கைகளும் மதிப்பீடுகளுமே! அந்த வகையில் நாகராஜனின் இந்த நூல் மிகவும் முக்கியமானது!” என்று சிலாகித்துக் கூறுகிறார்.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஆன்மீக ரகசியங்கள்’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

* முக்கிய குறிப்பு : இத்துடன் 123 புத்தகங்களின் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் 62 புத்தகங்கள் பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 62 முதல் 123 முடிய உள்ள 61 புத்தகங்கள் லண்டனிலிருந்து வெளி வரும் இணையதள இதழான www.nilacharal.com மூலம் திருமதி நிர்மலா ராஜு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Hindu Encyclopaedia 30: Lakshmi and 1000 headed Snake in Sangam Tamil Books (11,474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,474

Date uploaded in London – 25 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

In ancient Tami Nadu both Krishna and his elder brother Balarama or Baladeva were worshipped together. Among the holy mountains the best was where the Two are residing. That place was called irum kundram. Both were like word and meaning. This famous phrase was used by the greatest of the Indian poets Kalidasa in his Raghuvamsa

Sollum Porulum pola Pari.15-12 சொல்லும் பொருளும் போல = வாகார்த்தாவிவ சம்ப்ருக்குதெள

Vagardhaviva samprutau —Raghuvamsa 1-1

This is one of the 200 similes Sangam poets borrowed from Kalidasa of first century BCE.

Hindus normally allocate the three tasks of Creation, Preservation and Destruction to Brahma, Vishnu and Siva respectively. Pari 1-46/49 portrayed Vishnu as Three in One.

You are incomparable and unique. You are comparable to you only 1-53/57

You are the hidden meaning of the Vedas/ Upanishads 4-64/65

Number symbolism is used in 3-77/80

Poet used numbers 1 to 9 to describe him. Later day Tiru Mular and Tamil Siddhas used it a lot. They copied it from the Rigveda.

xxx

Lord Vishnu stand with two goddesses Sri Devi and Bhu Devi in South Indian temples . ஸ்ரீ தேவி, பூதேவி

 ஸ்ரீ , ஸ்ரீ வத்ச , திரு மறு மார்பன் 

Sri means wealth and Bhu means Earth

Sri alias Lakshmi is residing in Vishnu’s chest and so he is known as Sri Vatsa. It is in Sangam poems Pari 4-59; Pari 3-90; 1-38/39

Lakshmi is red in appearance and so she is called Seyyol and Seyyaal

Pari.2-31; Pari thirattu 10; Akam.316-13. செய்யோள், செய்யாள், லட்சுமி

Xxxx

Gaja Lakshmi, கஜ லெட்சுமி

Hindu Gaja Lakshmi is found in Gundestrup Cauldron of Denmark and coins and sculpture s through out Indian subcontinent. Kalittokai 44-5/7 also portrayed her where the poet shows her bathed by two elephants on either side . She is seated on red lotus.

Poets called her Sri/ Miss Wealth Murugu line 90; Pattinathar.line 291.

Akam.316-13/16

Xxx

IMAGE OF GAJA LAKSHMI DISCOVERED IN DENMARK

Interesting description of Lakshmi

One poet of Purananuru makes an interesting point about Lakshmi.

She always go to people who have no desire

She always leaves who desires her much-Puram.358-6/7

Xxxx

Hindu kings

Hindus called the kingdom as ராஜ்யலட்சுமி Rajya Lakshmi. Goddess in the form of Land

So Hindu kings are considered Lord Vishnu.

In Tamil Iraivan and Koyil meant both God/king and Temple/ palace.

The greatest of the Choza kings was Karikalan ( kaalan) meaning Charred legged.Lakshmi is residing in her chest says a Sangam poet Puram 7-5

Xx

Bhu Devi பூதேவி

Earth is goddess according to Bhu Suktam of Atharvana Veda. Tamils followed the Vedic description of earth.

Naththaththanaar of Sirupaanaatruppadai depicts Goddess Earth like Atharvana Veda and Kalidasa

Bamboos are her shoulders, Mountains are her breasts, Gems in the hills are her jewels, Waterfalls on the hills are her Pearl necklaces-Sirupaan.

Puram 365-10 shows earth as woman.

Xxx

Varaha Avatara வராஹ அவதாரம்

Pari 2-32/35 says Lord Vishnu dug out earth from the ocean and married her.

This is a symbolic way of saying that kings have been owning lands from immemorable days.

xxx

Bed of Vishnu is 1000 Headed Snake ஆயிரம் தலை அரவுஆதிசேஷன்

Like Vishnu sahasranama and Puranas, Vishnu is portrayed as one who is lying on the bed in subconscious sleep Kali 105-7. He is known as Aadhi Sesha

Perum. 371-373 says it looked like an elephant lying in sleeping posture.

Aadhi sesha has 1000 heads they are fire emitting heads

Pari thirattu.79/80 and Pari 1-1/2

There was a shrine for Aadiseshan in Iruntaiyur and women thronged the temple with flowers and lamps.

Pari thirattu 1-50/59 describes the scene in great details

The snake was the rope in the episode of Churning Milky Ocean.

Also that snake was the bow string when Lord Siva destroyed the Three Forts in the sky. This Snake God is called Poomudi naagar.

Xxxx

Tamil reference

Thousand headed snake emitting fire

பரிபாடல் 1-1/5

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை

தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,

மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்

சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,

வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை;

Xxxx

Two elephants pouring water on goddess Lakshmi –

Gaja Lakshmi

கலித்தொகை 44-1/7

கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல்

எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,

அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,

முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை,

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர,                            5

புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி

திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!

Xxx

Poet name Valmiki

If you seek Lakshmi she won’t come to you

பாடியவர்: வான்மீகியார்

திணை: காஞ்சி

துறை: மனையறம், துறவறம்

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,

கைவிட் டனரே காதலர்; அதனால்  5

விட்டோரை விடாஅள்திருவே;

விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

Xxx

Earth is mother; bhu devi

சிறுபாணாற்றுப்படை வரிகள் 1/2

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை

யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்

Xxx

Varaha avatar – Vishnu’s Boar incarnation

பரிபாடல் 2- 32/35

செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-

வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்

வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு

‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது’ என

உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று

Xxx

Thousand headed snake-Aadiseshan

பரிபாடல் திரட்டு 79/82

அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த

கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,

நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. .. .82

Xxx 

To be continued……………………………………..