திருடனுக்கு பிடித்த ராகம் எது? மாணவர்களுக்கு பிடித்த ராகம் எது? (Post No.10,989)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,989 (Missed Number)

Date uploaded in London – –   17 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 81

Kattukutty

(இது முழுக்க முழுக்க கடிஜோக்ஸ் – ஏற்கனவே நீங்கள் படித்தாககக் கூட இருக்கலாம். இருந்தாலும் ரசிக்கவும்)

வரதட்சிணையா two wheeler கேட்டது தப்பாப் போச்சு

மாட்டு வண்டிய கொடுத்து அனுப்பியிருக்காங்க?

திருடனுக்கு பிடித்த ராகம் எது?

“சுருட்டி”

மாணவர்களுக்கு பிடித்த ராகம் எது?

“காப்பி”

மிகவும் மக்கான ஊர் எது?

“மா மண்டூர்”!

கப்பல் ஏன் ஆடுது?

அது “தண்ணில “ இருப்பதால்’!

சலூன்காரருக்கு பிடித்த காய் எது?

“கத்தரிக்காய்”!

எலிக்கு பிடிக்காத படிப்பு எது?

“பொறியியல்”!

நோயாளி -ஆபரேஷனுக்கு பிறகு பீஸ் வாங்கிகங்க!

டாக்டர் -யாருகிட்ட?

உலகத்திலேயே எந்த நாட்டிலுள்ள மக்கள் சிரிக்கவே மாட்டாங்க?

“சிரியா”

ராவணன் காதலித்து தோத்து போனா அதுக்கு என்ன பெயர்?

ஒரு தலைக்காதல்

இல்லை ……. பத்து தலை காதல்!

புள்ளிமான் உடம்புல புள்ளி இருக்கும்,

கன்னுக் குட்டி உடம்புல கண்ணு இருக்குமா?…

‘வெட்டி’ சம்பளம் வாங்கரவரு யார்?

டெய்லர், பார்பர்

ரயில் நிதானமில்லாம தள்ளாடி தள்ளாடி்வருகிறது ஏன்?

அது “சரக்கு”ரயில்!

தண்ணீரிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கல்லன்னா குளிக்கும்பொது ஷாக் அடிக்குமே!

மண்டேல போடறது DYE!

மண்டைய போட்டா அது DIE!

பரம்பரையா உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,

பாஸ்ட் புட் கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடணும்!

நீண்ட நாள் வாழ என்ன வழி?

வேறன்ன சாகாமல் இருப்பதுதான் !

டீ மாஸ்டர் என்னதான் டீ “லைட்டா”போட்டாலும்

அதுலேர்ந்து வெளிச்சம் வராது!

பவர்கிளாச எவ்வளவு நேரம் வச்சாலும்

அது கூலிங் கிளாஸ் ஆகாது!

என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும்,

அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்!

காதலி அடிச்சா வலிக்கும்,

பிரண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்,

சரக்கு அடிச்சா வலிக்குமா?

ஒரு அரசனுக்கு வந்த இரண்டு புறாக்களுக்கும்

கால்கள் இல்லை?

என்ன மந்திரி இது?

இதுதான் ‘Missed call” அரசே!

என்னதான் நாம அனுப்பற மெஸேஜ் அட்டு பழசாயிஇருந்தாலும்

உங்க மொபைல்ல நியூ மெஸேஜ் ரிசீ வ்டு ன்னு தான் வரும்!

ஒருவர்- என்னப்பா ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பிச்சை

எடுக்க வரே?

பிச்சை -இந்த ஏரியாவ இரண்டு லட்சத்திற்கு ஏலம்

எடுத்திருக்கேங்க!

இந்த முறை நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு

என்ன தருவாங்க?

அல்வா தருவாங்க!

தலைவரை உங்ங்க வீட்டு பிள்ளைன்னு சொன்னது தப்பாப்போச்சு

ஏன்.

எல்லார் வீட்லயும் போய் “பாக்கெட் மணி”கேக்குறார்!

என்னதான் கம்ப்யூட்டர்வ விண்டோவுலே  (COMPUTER WINDOWS) உலகமே தெரிஞ்சாலும்

எதிர் வீட்டு விண்டோவுல பொண்ணு தெரியமா?

ஏம்மா பிச்சை எடுக்க நீ வந்துருக்கே? உன்புருஷன் எங்கே?

பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கரம்மா!

டைம் இஸ் கோல்ட் TIME IS GOLD  ன்னா ஏன் ஒத்துக்க மாட்டேங்கறே?

அத அடமானம் வைக்க முடியாதே?

ஜனவரி 14க்கும், பிப்ரவரி 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14!

அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14!

மாங்கா மடையனை சிங்கம் கடிச்சா என்ன செய்யும்?

சே புளிக்குதுன்னு துப்பிடும்.

என் மகனும் கரண்டும் ஒண்ணு,

இரண்டுமே வீட்டில இருக்கறதில்லே?

உங்க சின்ன குழந்த எப்படி அந்த சேரில் ஏறிச்சு?

அது “ஈஸி” சேராச்சே!

என்னதான்பூமி சூரியனை சுத்தி வந்தாலும்

பூமிக்கு சூரியன் பிக்கப் ஆகாது!

ரத்த வங்கிக்கு போனா ரத்தம் வாங்கலாம்,

இந்தியன் வங்கிக்கு போனா இந்தியா வாங்க முடியுமா?

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ண காதலிக்கும்போது நீங்க அடிமை,

அதுவே அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா

நீங்க கொத்தடிமை!

காந்திஜி சாகரதுக்கு முன்னாடி எப்படி இருந்தார் தெரியுமா?

ஏன் தெரியுமே, உயிரோடு இருந்தார்!

லாரில கரும்பு ஏறினா காசு!

கரும்புல லாரி ஏறினா ஜூஸு!

பேப்பர போடுறவன் பேப்பர்காரன்,

பால் போடுறவன் பால்காரன்,

அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?

அதிரடி மெகா சீரியல் எடுக்கப்போறாங்களாமே, என்ன தலைப்பு?

இதுவாடா முடியும்!

சிகரட் குடிச்சா கேன்ஸர் வரும்ன்னு சொல்றாங்களே

அது உண்மையாடா?

தெரியல்லடா மாப்ளே, நான் குடிச்சா புகைதான் வருது!

நேற்று ஏன் லீவு?

ஒரு சேஞ்சுக்காக வீட்டிலேயே தூங்கிட்டேன்!

எல்லா மொழியும் பேசக்கூடியது எது?

எதிரொலி!

**

 TAGS- ஞான மொழிகள் – 81

மனம் என்னும் மாயம்! – 2 (10,995)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,995

Date uploaded in London – –     17 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனம் என்னும் மாயம்! – 2

ச.நாகராஜன்

மூளை தான் மனமா?

இல்லை!

மனித தேகமானது தோல், சதை, ரத்தம், மாமிசம், எலும்பு, மலம், சிறுநீர், கேசம், நகம் உள்ளிட்ட பலவற்றின் சேர்க்கையே.

நன்கு சோதித்தால் இவை தவிர மற்ற எதுவும் உடலில் காணப்படவில்லை என்பதால் இவை மட்டுமே ஸ்தூல தேகம் எனப்படுகிறது.

 மூளையும் இந்த ஸ்தூல தேகத்தில் அடக்கம் என்பதும் பெறப்படுகிறது.

மூளை தான் மனம் என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால் மூளை உள்ள போதெல்லாம் மனத்தின் தொழில் ஏற்பட வேண்டும்.

உறங்கும் போதோ, மயங்கி இருக்கும் போதோ (அதாவது ஸுஷூப்தி மற்றும் மூர்ச்சை காலங்கள்) மூளை இருந்தாலும் அது வேலை செய்யவில்லையே.

அதே போல ஒருவர் இறந்து விட்ட போதும் மனம் செயல்படக் காணோம்.

ஆகவே ஸ்தூல சரீரம், -மனித தேகம் – தான் மனம் என்பது சரியல்ல.

உண்மையில் மனம் என்பது தேகத்திலிருந்து வேறானது என்றும், அது ஸ்தூல சரீரத்தில் ஒரு ஆற்றல் போல உள்ளது என்றும், சங்கல்பம், காமம், நிச்சயம், ஊஹம் முதலியவற்றைச் செய்யும் ஒரு சூக்ஷ்ம வஸ்து என்றும் அறிய முடிகிறது.

மனதின் தோற்றமானது மூன்று விதமாக உள்ளது.

உணர்ச்சி, எண்ணம், தீர்மானம் (Feelings, Thought, Will) ஆகியவையே மனதின் தோற்றங்கள்.

இந்த மூன்றில் எது ஏற்பட்டாலும் மனித மூளை கொஞ்சம் சலிக்கிறது.

மனம் தொழில்படுகின்ற போது மூளையில் சலனம் ஏற்படுவது உண்மை.

மூளை என்பது தலையில் உள்ள ஒரு பாகம். இதில் சலனம் ஏற்படும் போது எண்ணம் உள்ளிட்டவை ஏற்படுகிறது.  மனம் வேலை செய்யும் போது மூளை சலனப் படுகிறது என்பதும் உண்மையே.

மனம் காணப்படாத ஒரு சூக்ஷ்ம வஸ்து என்பதால் அதன் தொழிலும் சூக்ஷ்மமாகவே இருக்கிறது.

ஒரு சைக்கிளில் செல்கிறோம். காலால் மிதித்து அதை உந்துகிறோம். சைக்கிளும் காலும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

கடிகாரம் செயல்படும் போது மணிகாட்டி முள்ளும் விநாடி முள்ளும் நிமிஷம் காட்டும் முள்ளும் சலிக்கின்றன. அதனால் கடிகாரத்தில் உள்ள சக்கரங்களும் மணி, நிமிஷம், வினாடி காட்டும் முள்ளும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

சக்கர இயக்கம் வேறு; முள்களின் இயக்கம் வேறு.

முள்களின் இயக்கம் நம்மால் காணப்படுகிறது. சக்கர இயக்கங்கள் காணப்படவில்லை.

இவை இரண்டும் வேறு என்பது போலவே மூளை இயக்கமும் மனதின் இயக்கமும் வேறு வேறு தான்!

ஒரு நீதிபதியும் அவர் உட்கார்ந்து விசாரிக்கும் ஆசனமும் போலத் தான் மனமும் மூளையும் உள்ளது.

கோர்ட்டில் நீதிபதியின் ஆசனம் எப்போதும் உள்ளது. ஆனால் நீதிபதி அதில் அமர்ந்தால் தான் விசாரணை நடக்கும்.

அதே போல மூளை எப்போதும் இருக்கிறது என்றாலும் அந்த மூளையில் மனம் நின்று இயக்கம் ஏற்படவில்லை எனில் எண்ணம் உள்ளிட்டவை உண்டாவதில்லை. மனம் வந்து இயக்கம் ஏற்படும் போது உணர்ச்சி முதலியன ஏற்படுகின்றன.

ஆதலால் மூளையும் மனமும் வேறு வேறு என்பது உறுதிப்படுகிறதில்லையா!

         ***    

Tags-   மனம், மாயம், மூளை

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 54 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.10,994)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,994

Date uploaded in London – –    16 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 54 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

மத்வ்யபாஸ்ரயஹா 18-56 என்னிடம் சரண் புகுந்து

மதுசூதன  1-35 கிருஷ்ணனின் மற்றொரு பெயர்

மத்யம் 10-20  நடு , மத்திய பகுதி

மனவஹ 10-6  மனுக்களும்

மனவே 4-1  மனுவுக்கு

மனஸா  3-6  மனத்தால்

மனஸஸ்து  3-42  மனத்தினும்

மனஹ 1-30  மனம்

மனஹ ப்ரஸாதஹ 17-16 மனத்தின் தெளிவு ; தெளிந்த மனம்

மன ப்ராணே ந்த்ரிய க்ரியாஹா  18-33

மனஹ ஷஷ்டானி  15-7  மனத்துடன் கூடிய  ஆறு இந்திரியங்கள்

மனீஷிணஹ 2-51  அறிஞர்

மனீஷிணாம் 18-5 விவேகிகளுக்கு; அறிஞர்களுக்கு

மனுஷ்ய லோகே 15-2  மானிட உலகில்

மனுஷ்யாணாம் 1-44  மனிதர்களுக்கு

மனுஷ்யாஹா 3-23   மனிதர்கள்

மனுஷ்யேஷு 4-18  மனிதர்களுள்

மனோகதான் 2-55  மனத்தில் அடங்கிய

மனோரதம் 16-13  ஆசை

மந்தவ்யஹ 9-30 கருதற்குரியவன் 20 WORDS

மந்த்ர ஹீனம் 17-13  மந்திரத்தில் குறைபாடுகளுடன்

மந்த்ரஹ  9-16  மந்திரம்

மந்தான் 3-29  மூடர்களை , மந்த புத்தி உடையோர்

மன் மனா 9-34  என்னிடம் மனத்தை வைத்தவனாகவும்

மன் மயாஹா 4-10 என் மயமானவர்களும்

மன் யதே 2-19   நினைக்கிறானோ

மன்யந்தே 7-24 கருதுகின்றனர்

மன்யஸே 2-26  நினைத்தாய்

மன்யே 6-34 கருதுகின்றேன்

மன்யேத 5-8  எண்ண வேண்டும்

மம 1-7 என்னுடைய

மயா 1-22 என்னால்

மயி 3-30  என்னிடத்தில்

மரணாத்  2-34  மரணத்தைக் காட்டிலும்

மரீசி  10-21  (மருத் தேவர்களுள்) மரீசி

மருதஹ 11-6 மருத் தேவர்கள்

மருதாம் 10-21 மருத் தேவர்களுள்

மர்த்ய லோகம் 9-21  மனித உலகை

மர்த்யேஷு 10-3  மனிதர்களுள்

மலேன 3-38 அழுக்கால் 40 WORDS

மஹதஹ 2-40 பெரிய

மஹதா 4-2 பெரிய

மஹதி 1-14   பெரிய

மஹதீம் 1-3  பெரிய

மஹத் ப்ரஹ்ம 14-3 பெரிது; எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது

மஹத் யோனிஹி 14-4 எல்லா உயிர்களின் பிறப்பிடம்

மஹர்ஷயஹ 10-2  மகரிஷிகளும்

மஹர்ஷி ஸித்த ஸங்காஹா 11-21

மஹர்ஷிணாம் 10-2  மகரிஷிகளுக்கும் 

மஹாத்மனஹ 11-12 மஹா புருஷனுடைய          50 WORDS

மஹாத்மா 7-19 மஹாத்மா – மனிதர்களில் உயர்ந்தோன்

மஹாத்மானஹ 8-15   மஹான்கள்

மஹானுபாவான் 2-5  போற்றுதலுக்குரிய பெரியோர்

மஹான்  9-6  அளவு கடந்ததும்

மஹா பாப்மா 3-37  பெரிய/ மஹா பாவத்தை தோற்றுவிப்பது

மஹா பாஹோ 2-26   பெருந்தோளா

மஹா பூதானி  13-5  பஞ்ச பூதங்கள்

மஹா ரதஹ -1-4   பெரிய (தேர்) வீரர்கள்

மஹா சங்கம் 1-15   பெரிய சங்கு (பெளண்ட்ரம் )

மஹாசனஹ 3-37  பெருந்தீனி வேண்டுவது

மஹிமானம் 11-41 பெருமையை

மஹீ க்ருதே  1-35   பூமியால்

மஹீ க்ஷிதாம் 1-25  அரசர்களுக்கு

மஹீ பதே 1-20 மஹா ராஜா

மஹீம்  2-37  பூமியை       65 WORDS

65 words added from this index 54

TO BE CONTINUED ………………………………..

Tags –பகவத் கீதை, சொற்கள், இண்டெக்ஸ் 54, Gita index 54,

பணமே உனக்குத் தான் எத்தனைப் பெயர்கள்!!!(Post No.10,993)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,993

Date uploaded in London – –   16 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள் – 79

Kattukutty

பணமே உனக்குத் தான் எத்தனைப் பெயர்கள்…

அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்…

கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்…

யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்…

கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்…

திருமணத்தில் வரதட்சணை என்றும்…

திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்…

விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்…

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்

தர்மம் என்றும்…

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்…

திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்…

திருப்பித் தர வேண்டும் என

யாருக்காவது கொடுத்தால் அது

கடன் என்றும்…

திருப்பித் தர வேண்டாம் என

இலவசமாகக் கொடுத்தால் அது

அன்பளிப்பு என்றும்…

விரும்பிக் கொடுத்தால்

நன்கொடை என்றும்…

நீதிமன்றத்தில் செலுத்தினால்

அபராதம் என்றும்…

அரசுக்குச் செலுத்தினால்

வரி என்றும்…

அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி என்றும்…

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்…

தினமும் கிடைப்பது கூலி என்றும்…

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம் என்றும்…

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்

லஞ்சம் என்றும்…

கடன் வாங்கினால் அத்தொகைக்கு

அசல் என்றும்…

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி என்றும்…

தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு முதலீடு என்றும்…

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம் என்றும்…

குருவிற்குக் கொடுக்கும் போது

குருதட்சணை என்றும்…

ஹோட்டலில் நல்குவது

டிப்ஸ் என்றும்…

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக

வேறொன்றும் இப்புவியில் இல்லை…

இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற…

சிலர் அன்பை இழக்கின்றனர்…

சிலர் பண்பை இழக்கின்றனர்…

சிலர் நட்புகளை இழக்கின்றனர்…

சிலர் உறவுகளை இழக்கின்றனர்…

சிலர் கற்பை இழக்கின்றனர்…

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்…

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்…

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்…

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்…

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்…

***

பாடல்களில் பூக்களைத் தேடுங்கள் Post 10,992)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,992

Date uploaded in London – –   16 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள் – 78

Kattukutty

பாடல்களில் பூக்களைத் தேடுங்கள்

1.______கன்னங்கள் தேன்மலர் சின்னங்கள்

2._____மலருக்கு கொண்டாட்டம்

3.______ என் மன்னன் மயங்கும்

4._____மலர் மேலே மொய்க்கும்

5._____பூவின் நறுமணத்தில்

6. சந்திரனைத் காணாமல் ___ முகம் மலருமா

7.____ _____ பூச்செண்டு மரகத மாணிக்க

8._____தண்டு காலெடுத்து

9.______பூ முடிச்சு தடம் பார்த்து

10.______பூ திரியெடுத்து

வெண்ணையிலே நெய்யெடுத்து

11._____மலரே ராஜகுமாரி

12. மலரே _____ மலரே தலைவன் சூட

13._____புஷ்பங்களே ராகம் பாடு

14.______அவள் வீற்றிருப்பாள் புகழ்

ஏற்றிருப்பாள்

15.______ ஆறழு நாளா நான் போகும்

16._______ சிறு மைனாவே எங்க ராசாத்தி

17._____ _____ மனசுக்கேத்த _______

காம்போ கறுப்பு கைப்படாத _______

18.____ பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே

19.______ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும்

வந்தாச்சு

20.______ பாதக் ____

உயர் மறையெலாம் புகழும்

21.____பூ பல்லக்கு போவதெங்கே

22. இங்கு ரெண்டு _____ தொட்டுக்கொள்ளும்

காமன் பண்டிகை

23. முள்ளில்லா ______

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

24. சூரியன் போகும் திசையினில் எல்லாம்

வளையும் ______

25._______ பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க

எல்லா விடைகளும் தெரிந்தால் எழுதுங்கள்; உங்கள் பெயருடன் வெளியிடுவோம்

***

 tags- ஞானமொழிகள் – 78, பாடல்களில் பூக்கள்

மனம் என்னும் மாயம்! – 1 (Post No.10,991)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,991

Date uploaded in London – –     16 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனம் என்னும் மாயம்! – 1

ச.நாகராஜன்

மனம் ஒரு மாயம்.

அதை முழுவதுமாக அறிவியல் இன்னும் அறியவில்லை.

ஆனால் நமது சனாதன தர்மம் அதை ஆராய்ந்து அதன்

தத்துவத்தை விளக்கியுள்ளது.

அறிவியல் ரீதியாகவும் சனாதன தத்துவ வாயிலாகவும்

மனதிற்குள் சற்றுப் புகுந்து ஆராய்வோம்.

மனதைப் பற்றி முற்றிலுமாக அறிந்து விட்டால் அதை வசப்படுத்த முடியும்.

மனம் என்பது என்ன? அது எப்படி இருக்கிறது? எங்கு இருக்கிறது?

மனதை எவராலும் கண்ணால் காண இயலாது.

உடலில் உள்ள எந்த அவயவங்களும் மனதைக் காணவில்லை.

மனம் நமது ஸ்தூல சரீரரத்தை அதாவது உடல் சார்ந்த ஒன்றே

தான் என்பது நாத்திகர்களின் முடிந்த முடிவு.

மனம் என்று தனியே ஒன்று இல்லை என்பது அவர்களின் வாதம்

இது சரியா?

பூமி (ப்ருதிவி), அப்பு (நீர்), தேஜஸ் (அக்னி) வாயு ஆகிய நான்கு பூதங்களும் தேகத்தின் வாயிலாகப் பரிணமிக்குமாயின்  அந்த தேகத்தில் அறிவு சக்தி பரிமளிக்கிறது.

விருப்பம், வெறுப்பு, சங்கல்பம், சந்தேகம், நிச்சயம், ஊகம்

ஆகியவை அந்த சக்தியினால் ஏற்படும் செயல்கள்.

மனத்தை எந்த இந்திரியத்தாலும் காண முடியவில்லை என்பதால்

அது சூக்ஷ்மமான ஒரு வஸ்து என்று கூறுவதும் ஒத்துக்கொள்ளத் தக்க ஒன்று அல்ல. இப்படி சூக்ஷ்ம வஸ்து என ஆத்திகர்கள்

கூறுவர்.

மனம் என்பது நான்கு பூதங்களின் பரிணாம விசேஷமாகிய

ஸ்தூல தேகத்தின் குணமே ஆகும். மரணகாலத்தில் அது குலைந்து அழிந்து போகின்றது என்பது நாத்திகர் வாதம். இது சரியல்ல.

சரி, ஒரு வாதத்திற்காக இதை சரி என்று வைத்துக் கொண்டால் ஸுஷூப்தி காலத்திலும் மூர்ச்சை அடைந்த காலத்திலும் அந்த

அறிவு சக்தி இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு விதமான அறிவு சக்தியையும் காணோம்.

தேகம் உண்டானது முதல் மரணம் வரையிலும் அந்த அறிவு சக்தியாகிய குணம் இருக்குமெனில் மரணத்தை விட வேறாக இருக்கும், தினந்தோறும் நடக்கும், ஸுஷூப்தி காலத்திலும்

மூர்ச்சை அடைந்த காலத்திலும் அந்த அறிவு சக்தி ஏன் காணப்படவில்லை?

ஆகவே நாத்திகர்களின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

இல்லை, இல்லை, மூளை தான் மனம் என்று சிலர் சொல்வர்.

இது சரியா? சற்று ஆராய்வோம்!

***  

தொடரும்Tags – மூளை, மனம், மாயம்

கெளடில்யரின் அர்த்த சாஸ்திர பொன்மொழிகள் (Post No.10,990)

கெளடில்யரின் அர்த்த சாஸ்திர பொன்மொழிகள் (Post No.10,990)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,990

Date uploaded in London – –    15 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

FESTIVAL DAYS- 12- VAIKASI VISAKAM, 13- KANCHI PARAMACHARYA JAYANTHI, 21- INTERNATIONAL YOGA DAY.

FULL MOON DAY – 14; NEW MON DAY- 28;  EKADASI-10, 24

AUSPICIOUS DAYS – JUNE 1,3,9, 10, 17,23, 27

ஜூன் 2022 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் – ஜூன் 12- வைகாசி விசாகம், 13- காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஜெயந்தி, 21- சர்வ தேச யோகா தினம்

அம்மாவாசை -28; பெளர்ணமி -14; ஏகாதசி விரத நாட்கள் -10,24

சுப முகூர்த்த நாட்கள்- JUNE 1,3,9, 10, 17,23, 27

xxx

ஜூன் 1 புதன் கிழமை

ரக்ஷேத் ஸ்வ தேஹம் ந  தனம்,  கா ஹ்யநித் யே  தனேதயா?

ஒருவனுடைய உடலைத்தான் காக்கவேண்டும்; உடைமையை அல்ல ; நித்தியமில்லாத செவத்தைப் பற்றி கவலைப்படுவதேன்

xxx

ஜூன் 2 வியாழக்  கிழமை

சமவ்யாயா மோ யோகக்ஷேமயோ ர் யோனிஹி

அமைதியும் தொழில்களும் தான் பாதுகாப்புக்கும் பொது நலனுக்கும் ஆதாரம் ஆகும்

xxx

ஜூன் 3 வெள்ளிக்  கிழமை

ந ச அகாமஹ   புருஷோஸ்தி

ஆசையில்லாத மனிதனே இல்லை

xxx

ஜூன் 4 சனிக்  கிழமை

நக்ஷத்ரமதி ப்ருச்சந்தம் பாலமர் தோ நிவர்த்ததே

அர்த்தோஹ்யர்த்தஸ்ய நக்ஷத்ரம் கிம்  கரிஷ்யந்தி தாரகாஹா ?

எப்போதும் ஜோதிடம் பார்ப்பவனை விட்டு செல்வம் பறந்தோடிப்போகும் ; அவன் செயல் சிறுபிள்ளைத்தனமானது ; செல்வமே செல்வத்துக்குரிய நக்ஷத்ரம் ; ஆகாயத்திலுள்ள தாரகைகள் என்ன செய்யும்?

xxx

ஜூன் 5 ஞாயிற்றுக்  கிழமை

சாஸ்த்ராவித ஹஷ்டகர்மா கர்மசு விஷாதம் கச்சேத்

(ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது)- அனுபவ அறிவு இல்லாத படிப்பாளி காரியத்தை நிறைவேற்ற முடியாமல் தவிப்பான்

xxx

ஜூன் 6 திங்கட்  கிழமை

ந த்வே வார்யஸ்ய தாஸ பாவஹ

நல்ல பண்பாடுமிக்க ஆளை (ஆரியனை)அடிமை(தாசன்) ஆக்கக்கூடாது

XXX

ஜூன் 7 செவ்வாய்க்  கிழமை

பரஸ்பர ஸாதகா  ஹி சக்தி தேச காலாஹா

இடம், காலம், அதிகாரம் ஆகியன ஒன்றுக்கு ஒன்று உதவி செய்யும்

ஒப்பிடுக – குறள் – கருவி, காலம், இடம்

xxx

ஜூன் 8 புதன் கிழமை

கார்ய சாமத்யார்த்தி  புருஷ ஸாமர்த்யம் கல் ப்யதே

செயலில் காட்டும் திறமையை வைத்தே ஒருவன் எடைபோடப்படுகிறான் .

xxx

ஜூன் 9 வியாழக்  கிழமை

இந்த்ரஸ்ய ஹி  ஸப்ரணமதி யோ பலீயசோ  நமதி

அதிகாரத்தில் உள்ளவனை வணங்குவது, இந்திரனை வணங்குவதற்கு சமம் ஆகும் .(இந்திரனைப் போல வரம் தருவார்கள்)

XXX

ஜூன் 10 வெள்ளிக்  கிழமை

ஸ்திர கர்மா நாஸமாப்ய கர்மோ பரமதே 

உறுதியான தொழிலாளி (அரைக் கிணறு தாண்ட முடியாது)  ; காரியத்தை முடிக்கும் வரை அவன் விடமாட்டான். ஒப்பிடுக- கருமமே கண்ணாயினார் பாடல்

XXX

ஜூன் 11 சனிக்  கிழமை

காஷ்டம் ஹ்யக்நி ரவஹிதோ வசதி

கட்டைக்குள் தீ வசிக்கிறது ; (விறகில் தீயினன் )

(எந்தப் புற்றில் எந்தப் பாம்பு வசிக்குமோ!)

XXX

ஜூன் 12 ஞாயிற்றுக்  கிழமை

நதீ  பாத்ருகம் ஹி ஸ்வாஜீவம் அபாக்ஷயஸ்சாபதி பவதி

ஆற்று நீர் பாசனமுள்ள பூமி, வாழ்க்கைக்கு வழிவகுக்கும்; கஷ்ட காலத்தில் ஆதரவும் தரும் ; ஒப்பிடுக- குறள் -துப்பார்க்குத் துப்பாய ……

XXXX

ஜூன் 13 திங்கட்  கிழமை

சித்தமநித்யம் ஹி  மனுஷ்யாணாம்

(மனம் ஒரு குரங்கு) மனிதனின் மனம் மாறிக்கொண்டே இருக்கும்

XXX

ஜூன் 14  செவ்வாய்க்  கிழமை

அசூசயோ ஹி காரவஹ

கொல்லன், தச்சன், கொத்தன் போன்றோர் பொதுவாக நேர்மையில்லாதவர்கள் .ஒப்பிடுக- சிலப்பதிகாரம்- பொற்கொல்லன்

XXX

ஜூன் 15 புதன் கிழமை

தைவ மானுஷம் ஹி கர்ம லோகம் யாபதி

கடவுளும் மனிதனும் சேர்ந்துதான் உலகத்தை நடத்துகிறார்கள்

ஒப்பிடுக – பகவத் கீதை – கர்மண்யேவ திகாரஸ்தே ; வினையே ஆடவர்க்குயிரே – குறுந்தொகை

XXX

ஜூன் 16 வியாழக்  கிழமை

ப்ரணிபாதேன ப்ராஹ்மணஸ்வ பரோஅபீஹாரயேத்

வணங்குதல் மூலம் அறிஞர் பட்டாளத்தைக்கூட வென்று விடலாம்

XXX

ஜூன் 17 வெள்ளிக்  கிழமை

ஸுமஹதாப்யர்த்தேன ந கஸ்சன் சரீர விநாசமிச்சேத்

பெரும் செல்வமே கிடைப்பதாயினும் , யாரும் சாவதற்கு ஆசைப்படுவதில்லை

XXX

ஜூன் 18 சனிக்  கிழமை

ஸாமான்யா ஹி பதி ஸித்திஸ்சாஸித்திஸ்வ

வெற்றியும் தோல்வியும் எல்லா பாதைகளிலும் வரக்கூடியதே

XXX

ஜூன் 19 ஞாயிற்றுக்  கிழமை

தாத்ருஸா ஹா தாத்ருசைரேவ  போத்தப் யாஹா

(பாம்பின் கால் பாம்பறியும்). ஒரு இனத்தைச் சேர்ந்தவர் அவர் இனத்தை எளிதில் அடையாளம் காண்பர் .

XXX

ஜூன் 20 திங்கட்  கிழமை

பராக்ரமோ ஹி  வ்யஸன மபஹந்தி

வீரத்தைக் காட்டினால்தான் தொல்லைகளை அடக்கமுடியும்

XXX

ஜூன் 21 செவ்வாய்க்  கிழமை

கர்மபலோ ப போகானாம் க்ஷேமா ராக்ஷனஹ சமஹ

கிடைத்தவற்றை தொல்லைகளின்றி அனுபவிக்கும்போதுதான் சாந்தி ஏற்படும்

XXX

ஜூன் 22 புதன் கிழமை

விக்ரமாதிகோபி ஹஸ்தினமிவ லுப்தகஹ ப்ராக்ஞஹசூரமதி சந்ததே

வீரதீரத் செயல்களில் கூட புத்திமான் பலவான் ஆவான்; பெரிய யானையை வேடன் கொன்றுவிடுகிறானே

XXX

ஜூன் 23 வியாழக்  கிழமை

விரக்தா யாந்த்யமித்ர வா பர்த்தாரம் க் நந்தி  வா ஸ்வயம்

மக்களுக்கு அதிருப்தி உண்டானால் எதிரிகளை நாடுவர் அல்லது ஆட்சிசெய்வோரை அழிப்பர் .ஒப்பிடுக ரஷ்யப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி

XXX

ஜூன் 24 வெள்ளிக்  கிழமை

புத்ரார்த்தா  ஹி  ஸ்திரியஹ

பிள்ளைகளைப் பெற்றுத் தருவதற்கு பெண்கள் அவசியமே

XXX

ஜூன் 25 சனிக்  கிழமை

ஸஹஸ்ரேஷு ஹி முக்யோ பவத்யேகோ  ந வா

ஆயிரம் பேரில் ஒரு தலைவன் கிடைப்பது அரிதிலும் அரிது

XXX

ஜூன் 26 ஞாயிற்றுக்  கிழமை

த்ருவம் ஹி ஸாக்ஷிபிஹி ஸ்ரோதவ்யம்

சாட்சிகள்  உண்மையை உரைக்கவேண்டும்

xxx

ஜூன் 27 திங்கட்  கிழமை

கர்மா ரம்பாணாம் யோகாராதனஹ வ்யாயாமஹ

செயல்கள் தான் வெற்றியைக் கொணரும் (வாய்ச்சொல், திட்டம் மட்டும் போதாது )ஒப்பிடுக – குறள் – வினைத் திட்பம்

XXX

ஜூன் 28  செவ்வாய்க்  கிழமை

ஏகம் ஹன்யாத் ன வாம் ஹன்யாதிஷுஹூ க்ஷிப்தோ தனுஷ்மதா

ப்ராக்ஞ்நேன மதிஹி க்ஷிப்தா ஹன்யாத் கர்பஹதானபி 

வில் வீரன் விடுத்த அம்பு ஒருவனைக் கொல்கிறதோ இல்லையோ , புத்திசாலி மனிதன் போடும் திட்டம் கர்ப்பத்தில் உள்ள சிசுவைக் கூடக் கொன்றுவிடும் .ஒப்பிடுக – மஹாபாரதம் – பிரம்மாஸ்திரம்

XXX 

ஜூன் 29 புதன் கிழமை

பலம் ஹி சித்தம் விகரோதி

பலமே மனிதனின் மனத்திற்கு ஆதாரம்; பலம் வந்துவிட்டால் மனது மாறும் ;ஒப்பிடுக – பலவீனனால் ஆத்மாவை அறிய முடியாது- உபநிஷதம்

XXX

ஜூன் 30 வியாழக்  கிழமை

அஸாரம் ஹி பால ப்ராதிபாவ்யம்

வயது குறைந்தவனின் வாக்குமூலம் பயனற்றது

xxx

BONUS QUOTE

ஸுகோபருத்தாஹா ஹி புத்ரா ஹா பிதரம் நாபித்ருஹ்யந்தி 

பிள்ளைகளுக்கு சுக போகத்தைக் கொடுத்துவிட்டால், அப்பாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க மாட்டார்கள்

—SUBHAM—

TAGS-  கெளடில்யர், அர்த்தசாஸ்திரம், சாணக்கியன், பொன்மொழிகள்,

சும்மா, சும்மா, சும்மா (Post No.10,988)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,988

Date uploaded in London – –   15 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 77

Kattukutty

நண்பர் ஒருவர் மனநல மருத்துவர்.

அவரிடம்

”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.

“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.

“for example?”

“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”

“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”

“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”

“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”

“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”

“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”

“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”

*முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன் (சும்மா) என்ற தலைப்பில் நீண்ட நேரம் பேசினார்(மலரும்நினைவு) மேலும்படியுங்கள்*

xxx

சும்மா

சும்மா இதைப் படியுங்கள். நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்!!*

உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து, இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!

தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.

சும்மா== சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த ‘சும்மா’

அது சரி ‘சும்மா’ என்றால் என்ன??*

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த ‘சும்மா’!!

“சும்மா” என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த”சும்மா”எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1. கொஞ்சம் “சும்மா” இருடா?

(அமைதியாக/Quiet)

2.கொஞ்ச நேரம் “சும்மா” இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely)

3.அவரைப் பற்றி “சும்மா” சொல்லக் கூடாது!

(அருமை/in fact)

4.இது என்ன “சும்மா கிடைக்கும்னு நினச்சியா?

(இலவசமாக/Free of cost)

5. “சும்மா” கதை அளக்காதே?

(பொய்/Lie)

6. “சும்மா” தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் –

(உபயோகமற்று/Without use)

7. “சும்மா” *”சும்மா” கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)

8.இவன் இப்படித்தான்.. சும்மா சொல்லிக்கிட்டு இருப்பான்.

(எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை*”சும்மா” சொல்கின்றேன்-

(தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை “சும்மா” தான் இருக்கின்றது*

(காலி/Empty)

11.சொன்னதையே *”சும்மா” சொல்லாதே.

(மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல் “சும்மா” போகக் கூடாது- (வெறுங் கையோடு/Bare)

13. “சும்மா”தான் இருக்கின்றோம்-

(சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன் *”சும்மா” ஏதாவது உளறுவான் –

(வெட்டியாக/idle)

15.எல்லாமே “சும்மா” தான் சொன்னேன்-

(விளையாட்டிற்கு/Just for fun)

*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த “சும்மா”

என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது “சும்மா” இல்லை!)

சும்மா. வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.

இந்த சும்மா என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்குப் பிடித்து இருந்தால் சும்மா ஒரு Forward பண்ணுங்க.

]**

Tags-  ஞான மொழிகள் – 77

New Proverbs: A Vaccine today keeps  Virus Away! (Post No.10,987)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,987

Date uploaded in London – –   15 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்  – 76

Kattukutty

New Proverbs likely to be included in the English language.

1. A vaccine today keeps the virus away!

2. A sneeze, in time… infects nine!

3. All that sniffles has caught a cold!

4. Home stay is the best policy!

5. One man’s mask is another man’s poison!

6. An unmasked guy is the Covid’s workshop!

6. As you spray, so shall you reap.

7. Better to be poor & healthy than being rich & sick!

8. Curiosity killed the doc!

9. Don’t count your chickens before next March!

10. Every cough has its spray!

11. Rome wasn’t infected in a day!

12. When the cough is away, you can come out & play!

Xxx

Not_Easy_to_be_a_Teacher

Teacher: ”Construct a sentence using the word “sugar”

Pupil: ”I drank tea this morning.”

Teacher: ”Where is the word sugar.”

Pupil:  ”It is already in the tea..!!”

TEACHER: Our topic for today is Photosynthesis.

TEACHER : Class, what is photosynthesis?

Student: Photosynthesis is our topic today.

TEACHER : John is climbing a tree to pick some mangoes. (Begin the sentence with Mangoes)

Student : Mangoes, John is coming to pick you…

TEACHER : What do you call mosquitoes in your language?

Student: We don’t call them, they come on their own…

TEACHER : Name the nation, people hate most

Student: Exami-nation…

TEACHER : How can we keep our school clean?

Student: By staying at home…

TEACHER : One day our country will be corruption free. What tense is that??

Student: Future impossible tense…

*AND THE STRUGGLE CONTINUES!!!!!

God Bless Our, Teachers 

***

tags- tags-  ஞான மொழிகள்  – 76

வேதத்தை அறிய இதிஹாஸ புராணங்களைப் படிக்க வேண்டும்! (Post No.10,986)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,986

Date uploaded in London – –     15 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

வேதத்தை நன்கு அறிய இதிஹாஸ புராணங்களைப் படிக்க வேண்டும்!

ச.நாகராஜன்

வேதங்களை ஓதுதல் அந்தணர் கடமை. அதில் உள்ள நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்ள ஆன்றோர், ரிஷிகள், மஹான்கள் உதவி தேவை. அது மட்டுமல்லாமல் இதிஹாஸ புராணங்களை முறைப்படி பெரியோர் வாயிலாகக் கற்றுணர வேண்டும்.

வேதம் பிரதிக்ஞா ரூபமாக உள்ளது. இதில் பல மர்மங்கள் உள்ளன. இதை அறிய ஹேது, திருஷ்டாந்த ரூபமாக உள்ள ஸ்மிருதி, சூத்ர, இதிஹாஸ, புராண அறிவு தேவை.

அந்தணர் அல்லாதவர்க்காக இராமாயணம்,  மஹாபாரதம், புராணங்கள் இயற்றப்பட்டன என்று கூறுவது தவறு. பெண்களுக்காக (அவர்கள் வேதம் ஓத முடியாது என்பதால்) இவை இயற்றப்பட்டன என்று கூறுவதும் தவறு.

அனைவருக்குமானதே இதிஹாஸ புராணங்கள்.

பாதராயண முனிவர் என்னும் மஹரிஷி இப்படிக் கூறுகிறார்:

“எவன் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து இதிஹாஸ புராணங்களைக் கற்றறிந்து கொள்ளவில்லையோ அந்த அல்ப ஆராய்ச்சி உடையவனிடம் வேதமானது, “அந்தோ! நம்மை இவன் தாறுமாறாய்க் கெடுத்து விடுவானே” என்று பயந்து நடுங்குகிறது.

‘இதிஹாஸ புராணங்களினால் வேதத்தை நிச்சயித்துக் கொள்க” என்பது ஆன்றோர் வாக்கு.

முற்காலத்தில் இப்படி ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம் என்ற முறைப்படி அனைவரும் கற்று வந்தனர்.

தற்காலத்திலோ பாதி பாதியாய் ஸ்மிருதி அறிவு கொஞ்சம், சில புராணங்களின் சில பகுதிகள், ராமாயணம் கொஞ்சம், மஹாபாரதம் கொஞ்சம் என்று கற்று, நினைத்ததைச் சொல்ல ஆரம்பித்ததால் ஆஸ்திகர்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது; நாஸ்திகர்களுக்கோ அது கொண்டாட்டமானது.

வேத ரிஷிகள் கட்டளைகளைச் சொல்லும் போது அறிவியல் பூர்வமான சோதனைச்சாலை பரிசோதனை முறைகளையும் அதன் முடிவுகளையும் ஏன் எடுத்துக்காட்டவில்லை என்பது அறிவு ஜீவிகளின் கேள்வி.

இவர்களால் அறிவியல் அறிஞர்கள் – விஞ்ஞானிகள் சொல்வதை உடனே நம்ப முடிகிறது. அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கொள்கைகளை, ‘நாங்கள் நினைத்தது தவறு; இதோ இப்படித் தான் இன்றைய முடிவு இருக்கிறது’ என்று சொல்லும் போதெல்லாம் பகுத்தறிவுவாதிகள் கொண்டாடுகின்றனர்.

புதிய கொள்கை கண்டுபிடிக்கப்பட்டது என்று கொண்டாட்டம்; பழைய கொள்கைகளை ஏன் தவறாகச் சொன்னாய்; அதை நம்பி அல்லவோ இத்தனை நாங்கள் நடந்து வந்தோம் என்று எவரும் கேள்வி கேட்பதில்லை.

எடுத்துக்காட்டிற்கு ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஒரே ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

வலது பக்க மூளை, இடது பக்க மூளை என்று இரு பகுதிகளாக மூளையைப் பிரித்து அதன் அடிப்படையில் செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் வகுப்புகளில் ஆயிரம் விஷயங்களைச் சொன்னோம். இன்றோ அதெல்லாம் ஒன்றுமில்லை, மூளை ஒன்று தான் என்று இன்றைய கொள்கை கிளம்புகிறது!

‘நியூட்டன் போய்விட்டார்; அவர் கொள்கையும் போனது; ஐன்ஸ்டீன் வந்து விட்டார், புதிய கொள்கை ஆனது’ என்று அறிவியல் கூறும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

பிக் பேங் என்கிறார் ஒருவர்! அந்த பெரிய ஓட்டை கொள்கையில் ஒரு ஓட்டை இருக்கிறது என்கிறார் இன்னொரு விஞ்ஞானி.

ஒரு சிறு பையனுக்கு வியாதி வந்த போது என்ன செய்கிறோம்? பத்திய சாப்பாடு கொடுத்து மருந்தையும் கொடுக்கிறோம். அந்தச் சிறுவன் இதைச் சாப்பிட மறுத்தால் என்ன செய்கிறோம்.

அவனிடம் வாத, பித்த, ச்லேஷ்ம தத்துவங்களையோ மாத்திரையில் உள்ள பொருள்களை விவரித்து அது எப்படி உடலில் வேலை செய்கிறது என்றோ விளக்கமா கொடுக்கிறோம்? அது சாத்தியமா, அப்படியே செய்தாலும் சிறு வயதுச் சிறுவனுக்கு அது புரியுமா?

வற்புறுத்தி அதைக் கொடுக்கிறோம். அவன் குணமாகிறான். அவன் குணமாவது தான் மருந்தின் செயல்பாட்டிற்கான நிரூபணம். ப்ரூஃப்!

அதே போல மஹரிஷிகள் ஒவ்வொரு விஷயத்திற்கும் அது சாமான்யனின் புத்திக்கெட்டாமல் இருக்கும் போது யுக்தி, ஹேது ஆகியவற்றால் அவற்றை விளக்காமல் இதைச் செய்; நலம் பயக்கும் என்கின்றனர்.

இங்கு சிறுவனுக்கு மருந்து கொடுத்த வைத்யரின் அறிவுக்கும் சிறுவனின் அறிவுக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளதோ அதே போலத் தான் ரிஷிகளுக்கும் அவர்கள் உபதேசத்தைக் கேட்போருக்கும் வேறுபாடு உள்ளது.

வேதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களையே மனு, ப்ருஹஸ்பதி, தக்ஷர், கௌதமர், யமர், அங்கிரஸ், யாக்ஞவல்க்யர், ப்ரசேதஸ், சாதாதபர், பராசரர், ஸம்வர்த்தர், உசநஸ், சங்கரர், லிகிதர், அத்ரி, விஷ்ணு, ஆபஸ்தம்பர், ஹாரிதர் ஆகிய பதினெட்டு மஹரிஷிகள் தாங்கள் இயற்றிய மூல ஸ்மிருதிகளில் சொல்லியுள்ளனர்; விளக்கியுள்ளனர்.

இன்னும் ஜாபாலி, நசிகேதஸ், ஸ்கந்தர், லோகாக்ஷி, கஸ்யபர், வியாஸர், ஸநத்குமாரர், சந்தனு, ஜனகர், வியாக்ரபாதர், காத்யாயனர், ஜாதுகர்ணர், கபிஞ்ஜலர், போதாயனர், கணாதர், விஸ்வாமித்ரர், பைடினஸி, கோபிலர், வஸிஷ்டர், நாரதர், ஸுமந்து, பிதாமஹர், பப்ரு, கராஷ்னாஜினி, ஸத்தியவ்ருதர், கார்க்கியர், தேவலர், ஜமதக்நி, பரத்வாஜர், புலஸ்தியர், க்ருது, ஆத்ரேயர், சாகலேயர், மரீசி, வத்ஸர், பாஸ்கரர், ருச்யஸ்ருங்கர், பைஜாவாபர் ஆகிய ரிஷிகள் இயற்றிய உபஸ்மிருதிகள் பல வேத விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன.

அடுத்து, ப்ராம்மம், பாத்மம், லிங்கம், வாராஹம், வாமனம், ஸ்காந்தம், ஆக்நேயம், ப்ரும்மவைவர்த்தம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், பவிஷ்யத், மார்க்கண்டேயம், கௌர்மம், காருடம், ப்ரும்மாண்டம் ஆகிய பதினெட்டு புராணங்கள் வேத கொள்கைகளை விளக்குகின்றன.

இன்னும் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு இதிஹாஸங்களும், உசனர், காளீ, ஸநத்குமாரர், கபிலர் ஆகியோர் இயற்றிய உபபுராணங்களும் படிக்க உள்ளன.

இவை அனைத்தையும் அல்லவோ படிக்க வேண்டும், எதையும் கீழ்த்தரமாக விமரிசிப்பதற்கு முன்!

அரைகுறையாகப் படித்து கேள்விகளை முன் வைக்கும் நாத்திகர்களைப் பார்க்காதே; அவர்களுடன் பேசாதே; அவர்களுக்கு ஒன்றும் புரியாது; சிறுவனுக்கு மருந்து மஹிமை சொல்லி விளக்க முடியாத தன்மை போல அவர்களுக்கு அவர்களது மனப்பக்குவத்தில் விளக்கம் தர முடியாது; அனுபவத்தால் அவர்கள் உணர்வார்கள் என்பதே பெரியோர் தரும் அன்புரை; அறிவுரை!

ஆகவே வேதங்களை மதிப்போம்; வேதம் ஓதுவோரைப் போற்றுவோம்.

ஸ்மிருதி, சூத்ர, புராண, இதிஹாஸங்களை விளக்கும் பெரியோர்களை, உபந்யாசகர்களை ஆதரிப்போம்; உயர்வோமாக!

***