சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!

indus4

Research Paper written by London swaminathan

Research Article No.1653; Dated 16th February 2015.

சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25  கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆரிய-திராவிடம் என்னும் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்காது புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க முடியுமா, புதிரை விடுவிக்க முடியுமா என்று பார்ப்போம் என்பதே.

50 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் –பின்னிஷ் ஆராய்ச்சியா ளர்கள், அதற்கு முன்னால் அதைத் தோண்டி எடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே சொல்லி ஆராய்ச்சி உலகத்தையே திசை திருப்பிவிட்டார்கள். இதனால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை–  சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த முத்திரையில் இருப்பது — தனி நபர்களின் பெயர்களாக இருந்தால்  — அதை எப்படிப் படிப்பது என்ற ஒரு யோஜனைதான்.

InscriptH506

மக் டொனால்ட் (Mac Donald) என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். இதற்கு ஐரிஷ் மொழியில், டொனால்ட் மகன் என்று பொருள். இதே போல ஓ’ஷானஸ்ஸி (o’ Shaughnessy) என்ற பெயரும் அயர்லாந்தில் அதிகம் காணப்படும். ‘ஓ’ என்பது பேரன் என்ற பொருளில் வரும். அதாவது ஷானஸ்ஸியின் பேரன். இதை சிந்து சமவெளியிலும் பார்க்க முடியுமா? முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சிந்து சமவெளியில் பல முத்திரைகள் ஒரு வட்ட வடிவ எழுத்துடன் துவங்கும். அதற்கு அடுத்தாற் போல், ஆங்கிலத்தில் ‘அபாஸ்ட்ரோபி’ (apostrophe) குறி போடுவது போல இரண்டு கோடுகள் வரும். படத்தில் காண்க. இதுவும் அயர்லாந்தில் உள்ளது போல இன்னாரது மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்கும் குறி ஈடாக இருக்கலாம்.

சிந்துவெளி முத்திரைகளில் உள்ள விஷயம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் அது, உப்பு, புளி, மிளகு கணக்கு என்று எண்ணுகின்றனர். அதாவது இன்ன அளவு இன்ன பொருள்களை ஏற்றி அனுப்புகிறோம் என்ற (ஏற்றுமதி) விஷயம் என்பர். மற்றும் சிலரோ, இது தனி நபர்களின் பெயர்கள் பொறித்த டோக்கன் (Token) வில்லைகள், ஜப்பானில் இப்படி குடும்பத்திற்குக் குடும்பம் உண்டு என்பர். அது உண்மையானால், நான் எண்ணுவது போல மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்க கோடுகள் பயன்பட்டிருக்கலாம். அல்லது என்ன ஊர் என்பதைச் சொல்லும் குறியாக இருக்கலாம்.

Indus_script.jpg3

இதை உறுதிப் படுத்த சில எடுத்துக் காட்டுகளைத் தருவேன். புறநானூற்றில் “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று அப்பா பெயருடன் மகன் பெயர் வரும்.

இப்படிப் பல தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லும் வழக்கம் இந்தியாவில்தான் முதலில் இருந்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் புகழ் பெற்ற துதியில் ஐந்து தலை முறைகளின் பெயர்கள், ஒரே ஸ்லோகத்தில் வந்து விடுகிறது!

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்

பரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்

இதில் வசிஷ்டர், அவருடைய மகன் சக்தி, அவருடைய மகன் பராசரர், அவருடைய மகன் வியாசர், அவருடைய மகன் சுகர் ஆகிய ஐந்து தலைமுறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.

இதே போல பிராமணர்கள் மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் செய்யும் தர்ப்பணத்தில் தந்தை, தாத்தா (தந்தைக்கு தந்தை), கொள்ளுத் தாத்தா (பிதா, பிதாமஹான், ப்ரபிதா மஹான்)  என்ற மூன்று தலை முறைக்கு நீர்க்கடன் செலுத்துவர்.

ammonite-king.jpgthree generations

இந்த வழக்கம் உலகம் முழுவதும் இருந்தது. அஸ்ஸீரீயாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தில் “பாலாவின் மகனான ஆடா”வின் அம்பு (Arrow of Ada, Son of Bala) என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு.1100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. எட்டாம் நூற்றாண்டு மன்னர் ஒருவர் உருவத்தில் அந்த மன்னர், அவருடைய தந்தை மற்றும் தாத்தா பெயர் எழுதப் பட்டுள்ளது.

பெயர் வைக்கும் முறை உலகம் முழுதும் இந்திய முறையை ஒட்டியே இருந்தது. சம்ஸ்கிருதத்தில் ‘சு’மதி, ‘சு’கந்தி, ‘சு’கர்ணன் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் இந்த “சு” என்பது நல்ல என்று பொருள்படும். இதையே தமிழ்ப் புலவர்களும் ‘நக்’கீரன், ‘நன்’னாகன், ‘நச்’செள்ளை, ‘நப்’பின்னை என்று வைத்துக் கொண்டனர். அதாவது முன் ஒட்டு Pre fix (நல்/ நற்) மூலம் பெயர் பெற்றனர். இதே போல வர்மன், சேன என்பதற்கு இணையாக மாறன், சேரன் என்று பின் ஒட்டுகளையும் (Suffix) பயன்படுத்தினர். வட மொழியில் சு= தமிழில் நல்.

kassite weapon 1275 BCE

அயர்லாந்தில் பெண்கள் “மக்”, “ஓ” என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக “நி” அல்லது “நிக்”  (Ni or Nic) எனப் பயன்படுத்தினர். சுமேரியாவிலும் “என்” என்ற முன் ஒட்டு ஆண்களுக்கும் “நின்”  (En and Nin) என்ற முன்னொட்டு பெண்ளுக்கும் பெயர்களில் வரும்.

அயர்லாந்தில் “மோர்” என்றால் பெரிய, “ஓக்” என்றால் (Mor and Og) இளைய (ஜூனியர்) என்பது பெயர்களில் ஒட்டிக் கொண்டுவரும். இதுவும் சம்ஸ்கிருத வழக்கே. தமிழில் இதை “முது”கண்ணன், “முது”கூத்தன் என்றும் “இள”நாகன், “இள”ங்கீரன் என்றும் பயன்படுதுவதைக் காணலாம். சம்ஸ்கிருதத்தில் மஹா மூலன், மஹா சாஸ்தா என்பர். இது சங்க இலக்கியத்தில் தமிழில் “மா”மூலன், “மா”சாத்தன் என (புறநானூற்றில்) வரும். சுருங்கச் சொல்லின் சம்ஸ்கிருதப் பெயர்களில் உள்ள முன் ஒட்டுகளை (Prefix) சுமேரியா, அயர்லாந்து, சங்கத் தமிழில் காணாலாம். உலகில் மிகப் பழைய இலக்கியமான வேதங்களில் இப்படிப் பெயர்கள் காண ப்படுவதால் நாமே உலகிற்கு இதைக் கற்றுத தந்தோம் என்றால் அது மிகையாகாது.

indus1

உலக மொழிகள் எல்லாம் தமிழில் இருந்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் சென்றனவே என்றும், அவ்விரு மொழிகளும் பாரத மண்ணில், பாரத சிந்தனையில் பிறந்தவை என்றும் நான் இதே பிளாக்-கில் ஆய்வுக் கட்டுரை எழுதிவிட்டேன். நான் சொல்லும் மறுக்க முடியாத ஆதாரம் “சந்தி (புணர்ச்சி)” விதிகள் ஆகும். உலகில் இரண்டே மொழிகளில்தான் அது நடை முறையில் உள்ளது- இலக்கண விதிகளில் உள்ளது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரே மூலத்தில் உதித்தவை என்ற நம் முன்னோர் கருத்து மேல் நாட்டாரின் மொழிக் கொள்கைகளைத் தகர்த்து எறியும். இதற்கு சந்தி விதிகள் ஒன்றே போதும். உலகில் வேறு எங்காவது கொஞ்சம் மிச்சம் சொச்சம் சந்தி விதிகள் இருக்கிறதென்றால் அவைகள் எல்லாம் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய மொழிகளாக இருக்கும் (பிரெஞ்ச், லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் கொஞ்சம் உண்டு. அவை எல்லாம் சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே என்பதை எல்லோரும் ஏற்பர்).

inscription

ஆகவே இந்த மொழிக் கொள்கைகளின் பின்னணியில் சிந்து வெளி முத்திரைகளை அணுகினால், ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) இல்லாமலேயே சிந்துவெளி முத்திரைகளைப் படித்து விடலாம்.

லண்டனுக்கு வரும் சொந்தக் காரர்களையும் நண்பர்களையும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் நான் ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) பக்கத்தில் போய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு வருவேன். “இறைவா! எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே! எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா! அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே! என்று ஏங்குவேன்.

rosettastone-detail

Rosetta Stone in Ancient Greek, Demotic and Hieroglyphs, displayed in British Museum,London.

முடிவுரை: சிந்துவெளி முத்திரைகளில் Personal Name பெர்ஸனல் நேம்- கள் இருந்தால் ஐரிஷ் மொழி Formula பார்மூலாவை apply ளை செய்யுங்கள். உலகின் பழைய மொழிகள் எல்லாம்,ஆண்-பெண் பெயர்களில் முன் ஒட்டைப் பயன்படுத்டுவது சம்ஸ்கிருதத்தில் உள்ளது போலவே உள்ளது. சங்கத் தமிழ் புலவர் பெயர்களும் அப்படியே உள்ளன. ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்கள் பெயர்கள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கும் இதே பார்முலாவை Formula பயன்படுத்துங்கள்.

வாழ்க தமிழ் (வலக் கண்)! வளர்க சம்ஸ்கிருதம் (இடக் கண்)!!

swami_48@yahoo.com

Mac Donald and O’Shaughnessy in Indus Valley Civilization!!

indus4

Research Paper written by London swaminathan

Research Article No.1652; Dated 15th February 2015.

Three Generations in Indus Valley Civilization!

This article explains the apostrophe like strokes after the circle sign. See the pictures please.

 

The Irish name ‘Mac Donald’ means Son of Donald and O’Shaughnessy means Grandson of Shaughnessy. Mac means son (Makan in Tamil) and O is the abbreviation for grandson (Mor means big or Og means young).

Studying Irish names may help us to decipher Indus seals. Many of the scholars in this field think that the 4000+ seals found in the Indus Valley have names of people or the quantity of exports or imports.

Instead of O’, female will have Ni which means daughter of grandson of XXXX.

Instead of Mac, female will have Nic which means daughter of son of XXXX.

This is what we find in ancient Sanskrit and Tamil works. Hindus always remember three generations. The Irish people simply followed the ancient Hindu customs. The famous Vishnu Sahasranama sloka runs like this:–

Indus_script.jpg3

(1)Vyasam (2)Vasistha – naptharam (3)Sakthehey pauthram-akalmasham I

 

(4)Parasara-athmajam vande (5)Suka thatham thaponidhim II

 

I bow to the flawless Vyasa, great grand-son of Vasistha, grandson of

Sakthi, son of Parasara, and father of Suka, and one who leads a simple, austere life.

Names of five generations:

 

Here we see Vasistha, his son Sakthi, his son Parasara, his son Vyasa and his son Suka – five generations in one sloka and the all the five generations are saluted. This Hindu custom is followed in Assyria and other places where we see Hindu influence through Hittites, Kassites and Mitannians.

inscription

Assyrian Inscription

Here are some more examples:

kassite weapon 1275 BCE

Kassite weapon 1275 BCE

1.A bronze arrow head inscribed with the owner’s name in early Phoenician letters, ‘Arrow of Ada’ son of Bala. It is dated 1100 BCE

(Picture is in page 13 of Dictionary of the Ancient Near East, British Museum)

ammonite-king.jpgthree generations

2.Limestone statue of  Yerah, Azar from Amman citadel, late eighth century BCE, inscribed with his name and those of his father and grandfather.

(Picture is in page 15 of Dictionary of the Ancient Near East, British Museum)

Indus_script.jpg3

This is a typical Hindu custom. Tamils also follow their north Indian colleagues in naming. Most of the Tamil poets have the prefix Nal (Nar) meaning good as in Nakkiran, Nannagan, Nachellai, Nappinnai. They simply followed Sanskrit names. In Sanskrit Su as in Sugandhi, Sumathy, Sukarna (Indonesian President Sukarno) etc

Tamils follow Sanskrit language in the alphabetical order, Case suffixes, origin of sound etc. My theory is that both the languages have come from same source. The biggest proof is Sandhi rules. No other languages except Tamil and Sanskrit have these Sandhi (Punarchi) rules. If there is any language that has Sandhi to some extent they are related to Sanskrit!

(I have already written an article about it in Tamil)

Like Irish Mor (big), Tamils have Mudu Kannan, Mudu Kuthan and like Og (young), they have Ila nagan (Mudu=old or big and Ila= young). In Sanskrit they have Maha, Yuva etc. (Purananuru poet Masathan=Maha Sastha)

Tamils also say son of so and so XXX (e.g. Madurai Kanakkayanar Makanar Nakkiranar (Madurai Kanakkayanar’s son Nakkiran).

Tamil takes prefixes like Sanskrit in names and adjectives!

InscriptH506

Indus Seals

On Indus seals we see round symbol and then apostrophe (two strokes) followed by several letters. I guess that this also like Mac Donald or O Shaughnessy. Just to identify the person, they say son or daughter or grandson of so and so.

Hindu Brahmins who perform Tharpan every month for their ancestors also pray to the departed souls  “father, grandfather and great grandfather”- Pitha , Pitha Mahan, Prapita mahan. Remembering three generations and paying respects to them at all times is a must in Hinduism. Understanding these things will help us to decipher the Indus seals properly if they contain personal names.

indus1

(Please Read my 20+ Indus articles)

தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும்

sangam-map1

தமிழ் பூமி- தமிழ் நாடு

Research Paper written by London swaminathan

Research Article No.1652; Dated 15th February 2015.

தமிழ் நாட்டுக்குத் தெற்கே இப்பொழுதுள்ள கன்யாகுமரியைத் தாண்டி ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததும், அது அடுத்தடுத்து வந்த இரண்டு சுனாமி கடல் எழுச்சியால் அழிந்து போனதும் மறுக்க முடியாத உண்மைகள். இதற்கு இலக்கியச் சான்றுகள் இருப்பதோடு கடலியல், பூகர்ப்பவியல் சான்றுகளும் உள.

இந்து மகாசமுத்திர கடலுக்கடியில் உள்ள மலைகள் படத்தை நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் (மாத இதழ்) சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. அதிலும் ஒரு புறம் லட்சத் தீவுகள் வரையிலும் மறுபுறம் அந்தமான் நிகோபர் தீவுகள் – இந்தோ நேஷியத் தீவுகள் வரையும் கடலடி மலைகள் இருப்பதைக் காண முடிகிறது. மிகவும் பழங்காலத்தில் ஆஸ்திரேலியா வரை நிலமும் கடலும் விட்டு விட்டு இருந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம்- ஒருவேளை நாகரீகம் மிக்க மனித இனமே தோன்றாத காலத்து இருந்திருக்கலாம்.

நாம் அறிந்த – தென் தமிழ் நாட்டை மூழ்கடித்த சுனாமி எல்லாம் 2300 அல்லது 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தவையே. இதை மொழி இயலும் மெய்ப்பிக்கிறது.

மூன்று தமிழ் சங்கங்களும் சுமார் 300 அல்லது 500 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க முடியும் என்பதை எனது மூன்று தமிழ் சங்கம் பற்றிய கட்டுரையில் எழுதிவிட்டேன். அதாவது இரண்டாவது தமிழ் சங்க காலப் பாடல்கள் என்று நாம் எதை எதை அறிந்திருக்கிறோமா அவை எல்லாம் அதிக மொழி வேற்றுமை உடையன அல்ல. ஆகவே ஏறத்தாழ ஒரே காலத்தில் உருவானவையே.

south_east_asia_map

தமிழ்க் கொடி பறந்த நாடுகள்

சிலப்பதிகாரமும் கலித்தொகையும்

தென் மதுரை, கபாடபுரம் ஆகிய பாண்டியத் தலைநகர்களை கடல் அழித்தது பற்றி சிலம்பும் கலியும் செப்புவது என்ன?

“வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை;

ஊழிதோறு ஊழி உலகம் காக்க;

அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்  திசை ஆண்ட தென்னவன் வாழி!

(காடுகாண் காதை,சிலப்பதிகாரம்)

—இளங்கோ தந்த இதே செய்தியை முல்லைக் கலியில் சோழன் நல்லுருத்திரனும் (கலித் தொகை) சொல்கிறார்:

map-5

கர்நாடக பிரதேசம்

மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேல் சென்று மேவார் நாட்டு இடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ் பொறித்த புகழ் கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்

(முல்லைக் கலி, கலித்தொகை)

அதாவது கடல் கொண்ட பகுதிகளுக்கு நஷ்ட ஈடு கோருவதுபோல இமயம் வரை உள்ள பூமியை வென்றான் தென்னவன் (பாண்டியன்). சுனாமிக்கும், வட இமய விஜயத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிடினும் புகழ்ச்சிக்காக இப்படிப் பாடுவதுண்டு. வட திசையை வென்றதும் உண்மை- தென் திசையை கடலுக்குப் பலி கொடுத்ததும் உண்மைதான். கவிஞர்கள் இணைத்துப் பாடுவது மட்டுமே செயற்கையானது.

பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டுக் கொடுத்ததால் மலையாள பூமிக்குப் ‘’பரசுராம க்ஷேத்திரம்’’ — என்ற பெயர் உண்டு. இதுவும் பழைய சுனாமியின் போது கடல் பின்னாலுக்குப் போனவுடன் வெளிவந்த பூமியாக இருக்கலாம். ஆயினும் இதை நிரூபிக்க நமக்கு உறுதியான சான்றுகள் வேண்டும்.

Chola_dynasty_map_-_Tamil

தமிழர்கள் இழந்த பூமி பற்றி அடியார்க்கு நல்லார் , தனது சிலப்பதிகார உரையில் நமக்குத் தெரியாத செய்திகளைச் செப்புகிறார்:

“அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடஎல்லை ஆகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிந்தது”.

அடியார்க்கு நல்லார் பொய் சொல்லவோ எட்டுக்கட்டி கதை எழுதவோ தேவை இல்லை. அவர் சொல்வது எல்லாம் உண்மை என்பது அர்த்தசாஸ்திரத்தில் (கி.மு.300) பாண்டிய கவாடம் என்னும் முத்து பற்றிக் குறிப்பதாலும், வால்மீகி ராமாயணம் கபாடபுரம் என்னும் இரண்டாம் தமிழ் சங்க ஊர் பற்றிக் குறிப்பிடுவதாலும், ராமனுக்கு நினவுப் பரிசாக இலங்கை அரசன் விபீஷணன் ஏழு தங்கப் பனைமர பொம்மைகளைக் (ஏழ்குறும் பனைநாடு) கொடுத்ததாலும், பரசுராமன் காலத்தில் கேரள பூமி கடலுக்கு மேலே வந்ததாலும் உண்மை என்று உறுதியாகிறது.

அடியார்க்கு நல்லார் 700 காதம் என்பதை சிலர் 7000 சதுர மைல் என்பர். அது மிகப் பெரிய நிலப்பரப்பு. அவ்வளவு இருக்க முடியாது. இரண்டு முறை அடுத்தடுத்து சுனாமிப் பேரலைகள் தாக்கியதால் பாண்டிய மன்னன் இருமுறை தலை நகர்களை மாற்றினான். ஆகவே 700 சதுர மைல்களாவது கடலுக்குள் போயிருக்கலாம்.

2000px-India_Tamil_Nadu_locator_map.svg

பஃறுளி என்ற ஆறு வட எல்லையாக இருந்தது. குமரி ஆறு தென் எல்லையாக இருந்தது. இதன் இடையே இருந்த தென் மதுரையைக் கடல் விழுங்கியதால் முதல் தமிழ் சங்கத்தை இழந்தோம். அதன் பிறகு கபாடபுரம் தலை நகரமானது. 200 அல்லது 300 ஆண்டுகளுக்குள் அதையும் கடல்கொண்டது. பின்னர் தற்போதைய மதுரையில் மூன்றாம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டது. தலைநகர் மாற்றம் பற்றி ரோமானிய யாத்ரீகர்களும் சொல்லுவதால் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்த கபாட புரம் அதற்குப் பின் கடலுக்குள் போனதாகவும் ஊகிக்கலாம்.

இந்துமத நூல்கள் 7 கடல், 7 மலை, 7 தீவுகள் என்று ரிக் வேத காலம் முதல் கூறிவருகிறது. இதே போல தமிழர்களும் ஏழு , ஏழாக நாடுகளைப் பிரித்திருப்பது பொருள் பொதிந்ததே. மேலும் கங்கை முதல் காவிரிவரையுள்ள 700 காதம் என்று ஒரு தமிழ் கல்வெட்டு கூறுவதால் நமக்கு அடியார்க்கு நல்லார் கூறும் “700 காவத” விஷயமும் உண்மையே எனக் காட்டும். (நாடு என்பது சங்க காலத்தில், ஒரு தாலுக்கா அல்லது ஜில்லா (வட்டம்/மாவட்டம்) அளவுடைய நிலப்பரப்புகள்).

historical_map_of_Tamil_Nadu

பழந்தமிழ் நாடு

தமிழர் இழந்த நூல்கள்

தமிழ் தாத்தா உ.வே சாமிநாத அய்யர் என்ற ஒருவர் மாட்டு வண்டியில் ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்து, நமக்குக் கொடுத்திராவிடில் தமிழர்களின் வரலாறு முற்றிலும் அழிந்திருக்கும். பழைய உரைகளில் இருந்து இது வரை தமிழர்கள் இழந்த நூல்கள் என்ன என்ன என்பதை அறிய முடிகிறது. ஆனால் அடியார்க்கு நல்லார் சொல்லும் பாண்டிய மன்னன் பெயரும் (சயமா கீர்த்தி), கீழேயுள்ள பல நூல்களும் சம்ஸ்கிருதச் சொற்களுடன் இருப்பதையும் நோக்குதல் வேண்டும். தொல் பழங்காலத்தில் மொழிக் காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதை இது காட்டும்:

u-v-2

அகத்தியம், அவிநயம், இசை நுணுக்கம், மயேச்சுரம், மாபுராணம், பூதபுராணம் ( தமிழ் புலவர்கள் வேண்டுகோளை எல்லாம் புறக்கணித்து கணவன் சிதைத் தீயில் பாய்ந்து உயிர்நீத்த பாண்டியன் மனைவி “பூத”ப்பாண்டியன் தேவி என்று புறநானூறு சுட்டுவதையும் நினைவிற்கொள்க), பனம்பாரம், பல்காப்பியம், பன்னிருபடலம், முதுகுருகு, முதுநாரை, முறுவல், சயந்தம், பரதம், செயிற்றியம், பெருங்கலம், பஞ்சமரபு, இந்திரகாளியம், காக்கைபாடினியம், நற்றத்தம், வாய்ப்பியம், வியாழமாலை, பரத சேனாபதீயம், சிற்றடக்கம், பெரும்பொருள் விளக்கம், வெண்டாளி, களரியாவிரை, வாமனம், வையாபிகம், சிகண்டியம், பஞ்சபாரதீயம், குணநூல், மதிவாணம், கழாரம்பம், சங்கயாப்பு, துராலிங்கம் – முதலிய நூல்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

உரைகாரர்கள் மேற்கோள் காட்டியதன் பெயரில் இந்த நூல்களின் பெயர்களும் அவற்றில் உள்ள சில செய்யுட்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

வாழ்க தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

பாரதி போற்றிய ஐயர்!

Dr_U_V_Swaminatha_Iyer_stamp

உ.வே.சா. தபால்தலை

Post No: 1651;  Dated: 14 February 2015

by S Nagarajan

மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை வணங்கிப் போற்றி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

 

உ.வே.சாமிநாத ஐயர் : தோற்றம் 19-2-1855 மறைவு: 28-4-1942

 

பொதியமலை பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் நீ வாழ்வாய்!

 

எழுதியவர் ச.நாகராஜன்

மகாகவி போற்றிய ஐயர் அவர்கள்!

கவிஞர்களுக்குப் பல சிறப்புக் குணங்கள் உண்டு. இவை அனைத்தையும் கொண்டவர் மகாகவி பாரதியார்.

 

கவிஞன் காலத்தின் கண்ணாடி. கவிஞன் ஒரு தீர்க்கதரிசி. இந்த இரண்டு குணங்களையும் அவரது மகாமகோபாத்தியாயர் என்ற கவிதையில் காண்கிறோம்.

தமிழுக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த மேதையான உ.வே.சாமிநாதையரைப் பாராட்டி பிரஸிடென்ஸி காலேஜில் ஒரு விழா   நடந்தது. அதில் கலந்து கொண்டு மகாகவி அவரை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார். இறவா வரம் படைத்த பாடல் அது. காலத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்த பாரதி தமிழ் மேதையின் அன்றைய நிலைமையை அப்படியே வடித்து விட்டார்


who-are-these-people

உ.வே.சாமிநாத  ஐயரின்  அபூர்வ புகைப்படம்.

இதிலுள்ள தமிழழறிஞர்கள்  யாரென்று தெரியவில்லை.

இந்தியன்     எக்ஸ்பிரஸ்  டீ.ஏ. சீனிவாசன் கொடுத்த படம்

.

“நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி         இன்பவகை நித்தம் துய்க்கும்                                   கதியறியோம் என்று மனம் வருந்தற்க              குடந்தை நகர்க் கலைஞர் கோவே!”

என்ற இந்த வரிகளால் தமிழுக்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் நிதியின்றி வாடினார்; உலகத்தில் உள்ள கோடி வகை இன்பங்களையும் அனுபவிக்கவில்லை என்பதை படம் பிடித்துக் காட்டி விட்டார்.


உ வெ ச

அதே சமயம் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதால், “

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்  காலமெலாம் புலவோர் வாயிற்                                 துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்      இறப்பின்றித் துலங்குவாயே”

என்று தீர்க்கதரிசன வாக்கால் தமிழ் உள்ளளவும் அவர் தமிழை உண்மையாக நேசித்துப் போற்றும் நல்லோரால் நினைக்கப்படுவார் என்று கூறி அவரை வாழ்த்துகிறார்.

மகாகவியே பிறிதோரிடத்தில் கூறியபடி,”பார்ப்பனக்குலம் கெட்டழிவெய்திய பாழடைந்த கலியுகமாதலால்” சாமிநாத ‘ஐயர்’ என்ற மேதைக்கு அவர் வாழ்ந்த காலத்திலும் உரிய மரியாதை இல்லை; மறைந்த பிறகும் மரியாதை இல்லை என்பதை உளம் சோர, வருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியதாயிருக்கிறது.

 

அவர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டதை தினமணி நாளிதழ் 2014, டிசம்பர் 14ஆம் தேதி பதிவு செய்கிறது.

உ.வே சா வீடு படம்

தமிழை அரசியலாக்கி அதன் பெயரைச் சொல்லி தன் நலத்தையும் தன் வாரிசுகள் நலத்தையும் பேணுவோர் இருக்கும் இன்றைய தமிழகத்தில் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது தான்.

ஆங்கில அரசும் பாண்டியர் அரசும்

மகாகவி தன் கவிதையில் ஆங்கில அரசையும் முன்னமிருந்த பாண்டியர் தம் அரசையும் ஒப்பிடுகிறான். மனதால் ஆங்கில அரசை முழுவதும் வெறுத்தாலும அப்படிப்பட அரசே உ.வே.சாமிநாதையரைப் பாராட்டுவதை உள்ளக் களிப்புடன் ஏற்றுக் கொண்ட மகாகவி, முன்னம் இருந்த பாண்டியர் அரசு இருந்தால் இவரை உச்சி மேல் வைத்து எப்படியெல்லாம் கொண்டாடி இருப்பார்கள் என்று மனதால் எண்ணிக் களிக்கிறான்.

“அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்    இன்றெம்மை ஆள்வோ ரேனும்

பன்னிய சீர் மகாமகோ பாத்தியாயப்      பதவி பரிவுடன் ஈந்து

பொன்னிலவு குடந்தை நகர்ச் சாமிதா      தன்றனக்குப் புகழ் செய்வாரேல்,

முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின்  இவன் பெருமை மொழியலாமோ?”

என்ற மகாகவியின் பாடல் எவ்வளவு பொருள் பொதிந்ததாக ஆகிறது, இன்று!

uvesa_table1_320x115

பிரான்ஸ் நாட்டவரின் வருத்தம்

 

ஐயர் அவர்கள் எழுதிய ‘நினைவு  மஞ்சரி’யின் முதல் பாகத்தில் முதல் கட்டுரையாக ‘கடல் கடந்து வந்த தமிழ்’ என்ற கட்டுரை இடம் பெறுகிறது. அதில் பிரெஞ்சு அறிஞரான ஜூலியன் வின்ஸோன் என்பவர் தனது தமிழ் சுவடி ஆராய்ச்சி குறித்து எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதை ஐயர் அவர்கள் விளக்குகிறார். ஜூலியன் விண்ன்ஸோனின் மாணாக்கரான பொண்டெனூ என்பவர் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் அங்கிருந்து ஐயர் அவர்களைப் பார்க்க அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வந்த போது தான் இருந்த நிலையை ஐயர் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்:-
“நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், “இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். நான், “என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது.”

 

இது போன்று  தமிழ் ஆராய்ச்சியை எந்தெந்த நிலையில் எல்லாம் அவர் செய்ய வேண்டி இருந்தது என்பதை அவரது நூல்களைப் படிப்போர் நன்கு அறிய முடியும். பல்லாயிரக் கணக்கான பக்கங்களில் அவ்வப்பொழுது உதிரியாக அவர் தம்மைப் பற்றிக் குறித்தவை தாம் இவை. தனது கஷ்டங்களைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை அல்ல இவை.

 

91க்கும் மேற்பட்ட நூல்களை அயராது உழைத்த ஆராய்ச்சியால் வெளியிட்டவர் தமிழ்த் தாத்தா. அவரது நல்லுரைக் கோவை (4 பாகங்கள்), நினைவு  மஞ்சரி உள்ளிட்ட பல நூல்களை www.projectmadurai.org  தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

தமிழ் வளர்த்த பாண்டியர் நாள் மலருமாக!

அவரை நினைப்பவர் மனதில் அவர் புகழோடு இன்றும் இலங்குகிறார். கெட்ட கலி யுகம் அழிந்து பாண்டியர் நாள் ஒரு நாள் எழும்; அன்று மாமேதை நன்கு போற்றப்படுவார்! தமிழை உளமார நேசிக்கும் நல்லோர்கள் மனதில் அவர் என்றும் இற்வாமல் புகழோடு வாழ்வார்.

அவரது பிறந்த நாளான இன்று உண்மையாக தமிழை நேசிப்போர் அவரை ஒரு கணம் நினைந்து அவரை உளமார வணங்குவோமாக! அப்படி வணங்கும் போது அவரால் மறும்லர்ச்சி கண்ட தமிழ்த்தாய் நம்மை ஆசீர்வதிப்பாள் என்பதில் ஐயமில்லை!

********

2014 டிசம்பர் 14ஆம் தேதி, தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தி  கீழே தரப்பட்டுள்ளது:

uvasae_2242800f

சென்னை திருவல்லிக்கேணியில் இடிக்கப்பட்ட தமிழறிஞர் உ.வே.சா வாழ்ந்த வீடு.

சென்னையில் தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது.

 

தமிழின் தொன்மையான ஓலைச்சுவடிகளையும், இலக்கியங்களையும் மீட்டுத் தந்தவர் உ.வே. சாமிநாத ஐயர். இவர் தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஓலைச் சுவடிகள், கையெழுத்து ஏடுகள், நூல்கள் ஆகியவற்றை பத்திரமாக மீட்டு, பதிப்பித்தார்.

இன்று தமிழில் உள்ள பெரும்பான்மையான இலக்கியங்கள் இவரால் மீட்கப்பட்டவை. புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் என தமிழில் உள்ள சிறந்த இலக்கியங்கள், இவரின் முயற்சியாலேயே தமிழர்களுக்குக் கிடைத்தது.

 

கும்பகோணம் உத்தமதானபுரத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்ற 1903-ஆம் ஆண்டு சென்னை வந்தார்.

 

அப்போது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்த ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். பின்னர் அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார்.

இரண்டாம் உலகப்போரின் போது சென்னையில் இருந்து வெளியேறி, திருக்கழுக்குன்றத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் வசித்தார். காலப்போக்கில் உ.வே.சா.வின் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த திருவல்லிக்கேணி வீடு, பிறருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டின் உள்பகுதியை இடிக்கும் பணி நடைபெற்றது. அதனைக் கண்டித்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்தனர்.

 

தமிழின் இலக்கியங்களை மீட்டுத் தந்த உ.வே.சா.வின் நினைவாக அந்த வீட்டை உ.வே.சா. நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

uvesa_table2_420x187

இந்த நிலையில் வீட்டை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளர்கள் வீட்டை இடிக்கும் பணியை கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டுள்ளனர். இப்போது அந்த வீடு முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது என்று அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.

*******

Gems of Women: Varahamihirar’s Definition

pen paint 10

Research Paper written by London swaminathan

Research Article No.1650; Dated 14th February 2015.

VANENTINE DAY SPECIAL: 14TH FEBRUARY, 2015

Varahamihirar, author of encyclopaedic Sanskrit book Brhat Samhita, gives the definition of great women. He says, the excellences of women are

Youth, Beauty, Charming Dress, Favourable Attitude, Knowledge of the arts of winning man’s affection, graceful gait and the like. The best of those, possessed of the above excellences, are termed “Gems of women”, whereas others are “Feminine diseases for a cultured men”.

STRINAAN GUNAA YAUVANA RUUPA VESHA DAKSHINYA VINJAANA VILASA PURVAA:

STRI RATNA SAMNJAA SA GUNAANVINTHAASU STRI VYDHYO ANYAS SATHURASYA PUMSA:

–CHAPTER 73, BRHAT SAMHITA

pen paint5

Manu in his Manu Smrti (Hindu Law Book) even dictates how a woman’s name should be, “The names of women should be easy to pronounce, not harsh, of patent meaning, and auspicious; they should captivate the mind and heart, end in a long vowel, and contain a word of blessing” (Manu 1—33)

Hindu women names are always auspicious: Shanti, Karunaa, Lathaa, Shantaa, Sumati, Sugandhi, Siitaa, Raadhaa (long vowel ending), Nidhi etc.

Manu adds that how a man should introduce himself to a woman, who is not related, “Now, to woman who is another man’s wife and not related by birth, one should say LADY! and GODD WOMAN! and SISTER!. (Manu. 2—129)

Jewel of a Woman (Gem of a Woman= Stri Ratna)

A man who has faith may receive good learning even from a man of the lowest caste, and a Jewel of a Woman even from a bad family (Manu 2—238)

Women, jewels, learning, law, purification, good advice and various crafts may be acquired from anybody — (Manu 2—240)

tulasi lady

Ladies! Don’t Send Money to Your Relatives: Vyasa

Women belonging to Ethnic minority communities living in western countries cause a big rift in the families by sending money to their relatives living on the subcontinent. Veda Vyasa has warned women against such a thing 5000 years ago! This is applicable to women living in the subcontinent also.

Vyasa warns

Don’t give anything to your relatives without the knowledge or permission of your husband.

Bhartur aknjaam vinaanaiva sva bandhubyodisech dhanam

Athyaalaapa santhosham paravyaapaara sanjitham

amuthasurabhi

Kalidasa’s Advice

Kalidasa, the most celebrated Indian poet, gave the following advice to women, who are going to their husbands’ home immediately after the marriage:

Kanva to Shakuntala : My child, you are now leaving for your husband’s home; when you enter it:

Serve your elders with diligence; be a friend to your co wives

Even if wronged by your husband do not cross him through anger;

Treat those who serve you with the utmost courtesy;

Be not puffed up with pride by wealth and pleasures;

Thus do girls attain the status of Mistress of the Home;

Those who act contrary are the bane of their families. Sakuntalam 4-21

Long Live Indian Women!

Pictures are taken from face book; thanks.

Drawings by S Ilayaraja and others.

152 Hindu Kings of Nepal

nepal

Dictionary of 10,000 Indian Kings – Part 16

Compiled by london swaminathan

 

Post No: 1648;  Dated: 13 February 2015

160 Kings in Rig Veda published here on 23rd November 2014.

First part of the article –146 kings beginning with letter ‘A’.

Second part– 65 Pandya Kings of Madurai+ Puranic Kings

Third part — 122 kings beginning with letter ‘B’

Fourth Part- 43 Kings of Vijayanagara Empire + 34 Kings under letter C.

Fifth Part – 106 Kashmiri Hindu Kings

Sixth Part – 30 Satavahana  Kings  + 136 Kings underletter D.

Seventh Part –  35 Tamil Pandya Kings of Sangam Age.

Eighth Part – List of Chera (Kerala) 22 kings of Sangam Age+ Kings listed under E (3),G(37) & H(28)=68kings

Ninth Part- 39 Choza Kings of Tamil Nadu

Tenth Part- 104 kings from Cambodia, Champa, Sri Vjaya Kingdom of Indonesia and Pallava

11th part:Under ‘I’  13 kings+ Under ‘J’ 40 kings+ Under ‘K” 147 kings are listed.

12th Part:– 113 kings of various Indonesian kingdoms are listed.

13th Part –UNDER ‘L’ 14 + UNDER ‘M’ 72 + PANDYA II LIST 36=122 KINGS

14TH PART:Dynasties of Vishnukundina (10), Vakataka (16),Salankayana (4),Andra Ikshvaku (4) and Names under “N”(60)=94 kings.

15th Part:—-Kadamba dynasty – 14 kings, Badami Chalukya -10 kings, Rashtrakuta dynasty kings- 16

Western Chalukya kings – 14, Kakatiya dynasty – 16, Eastern Chalukya kings – 33, Ganga vamsa – 16, Kalachuri dynasty- 14, Pala vamsa -21, Chandela dynasty 34, Gurjara Pratihara -17

Hoysala-13, Alupa – 32 kings are listed = Total 226 kings

In this 16th part – Under R—121 kings and 152 Kings of Nepal = 273 kings

So far we have listed 1875+ 273= 2148 kings!

500px-Ancient_india

Kings under Letter ‘P’ (From R Morton Smith’s Book)

Padmavati, sister of Darsika – 469 BCE

Padmavati vaihotri- 505 BCE

Padmika , wife to Asmaka, 1290 BCE

Paippilada, brother of pippiladi – 880 BCE

1.Palaka ajapala –

2.Palita

3.Panchajana aiksvakava

4.Panchasikha

5.Pancavana asamanjas

6.Pandu of Mahabharata- 1000 BCE

Pandya – 1160 BCEpanini dakshiputra, grammarian,420 BCE

7.Para I Nipa – 1260 BCE

8.Para II Nipa 1200 BCE

9.Atnara hairanyanabha

10.Paramaksa

11.Paramanyu anava – 1520

12.Parasu Raukminiya Karsna –

13.Paravrt yadava – 1340

14.Parigha paravrta 1315

15.Parikshit I Kaurava – 1260 BCE

16.Parikshit II abimanyava – 950 BCE

17.Parikshit I 1490

18.Parikshit of Mahabharata

19Parikshita janamejanya –

20.Pariplava vatsa – 660 BCE

21.Pariyatra aiksvakava 1240 BCEparsva Tirthankara – 792 BCE

22.Parsvamardin, son of Rama –

Parsvin, son of Rama107 BCE

23.Partha arjuna

24.Parvata narada – 1150 BCE

Paryasravas

25.Patusravas caidya 980

Paura

26.Porus 325 BCE

Pauravasi, wife of Gadhi – 1340 BCE

27.Parusti

28.Pijavana pancala – 1110

29.Pindaraka rauhineya

30.Pippiladi

31.Pitayudha

32.Prabha vaidharbi – 1280 BCE

Prabha, wife of Ayu – 1840 BCE

Prabhavati, wife of Udayana – 460 BCE

33.Pracetas Druhyu – 1390 BCE

34.Pracetas anava – 880 BCE

35.Pracetas akisvakava

36.Pracinvat paurava 1740

37.Pradyota of Avanti – 503

38.Pradyumna karsna – 960 BCE

39.Prajani pramsava – 1440

40.Parakasa saunaka – 1080

Pramdvara , wife of Ruru – 100

41.Pramati vaisali – 1080

42.Pramati saunaka – 1025 BCE

43.Pramoda akisvakava 1590 BCE

44.Pramsu manava  1460

45.Prasena

46.Prasenajit aikvakava – 1540

47.Prasenajit of kosala -550

48.Prasenajit naighna yadava – 1120

49.Prastoka sarsnjaya – 1160

50.Prasusruta aiksvakava 925

51.Pratardana of Kasi – 1310 BCE

52.Pratibahu vajri – 920

53.Pratiksatra ksatradharmana -1580

54.Pratiksatra sameya Yadava – 1150 BCE

55.Pratindhaka marava vaideha – 1260

56.Praatipa kaurava – 1090

57Pratiratha

58.Pratiratha tamsu – 1500

59.Pratitasva aiksvakava  790

60.Prativaha yadava – 850

61.Pratoyoman aksvakava – 910

62.Prativyuha

63,Pratyagraha vasava caidya -1170 bc3

64.Prativillasana Andhra -73 CE

65.Pravira paurava -1720

67.Pravira sadyumna ailina – 1250

68.Prasadhra manava -1430

69..Prasata panchala – 1015

70.Prtha gandusi sauri – 1060

71Prtha kunti – 1060 BCE

72.Prthu aiksvakava – 1760

73.Prthu of sitraka – 1100

74..Prthu nipa – 1280

75.Prthu visnvrdhdha –

76.Prthukirti

77.Prthukirti sasabindava – 1500

78.Prthulaksa anava 1050

79.Prthurukman paravrta yadava – 1320

80.Prthusena yadava -940 bce

81.Prthusena nipa 1280

82.Prthsrvasa sasabindava 1500

83.Prthuyasas sasabindava

84.Pulastya trnabindu – 1300

85.Pulindaka sunga – 132

86.Pulomavi – Andhra – 4 to 38 CE

87.Pulomavi vasisthiputra 136

88.Pulomavi sivasri satakarni- 164

89.Pulomavi III – 242

90.Punarvas nalaya yadava -1065

91.Pundarika Aikskvakava – 1330

92.Pundra baleya –

93.Pundra saugandeya sauri –

94.Punika in Avanti – 510

95.Punjaka – 1290

96.Puramjaya (satyakarman) 1450

97.Purana vaisvamitra 1260

98.Purana kasyapa -530

99.Puravasa (Pururuvasu)

100.Purnabhadra vaibhandaki -1040 BCE

101.Purnotsanga Andhra 168 CE

102.Puru yayateya -1780 BCE

103.Puruvaha madhu

104.Prudvant yadava – 1280

105.Purujanau pancala – 1290

106.Purukutsa Aikskvakava –  -1470

107.Purukutsa vishnuvrdhdha

108.Purumidha sauhotra – 1350

109.Purumitra, son of Ajamidha

110.Pururuvas Aila- 1860 BCE

111.Puruvasa, father in law of Kusasva – 1380

112.Puruvasu yadava – 1300

113.Puruvadhya saura – 1270

114.Pusanara -1090

115.Puskara, brother of nala – 1365

116.Puskarin (Brahmaruna)96

117.Puskarini , mother of Vitatha – 1230

118.Puspavant of Magadha – 1110

119.Pusya Aikskvakava – 1o60

120.Pushyadharman ,Mauryan viceroy – 185 BCE

121.Pusyamitra sunga -185 BCE

All the years are in BCE; Dates and Dynasties in Earliest India by R Morton Smith. I don’t agree with the dates given in the book. But we can use it as a starting point and adjust it with the eras one follows.

Here is a list of Kings of Nepal, taken from Wikipedia:—

Yalamber (The Legend King)

King Yalamber

Legendary Kirata Rulers

 

The Kirat Kings

The 29 Kirat kings were as follows :

  1. Yalamber 2. Pavi 3. Skandhar 4. Balamba, 5. Hriti, 6. Humati, 7. Jitedasti, 8. Galinja, 9. Pushka, 10. Suyarma, 11. Papa, 12. Bunka, 13. Swananda, 14. Sthunko, 15. Jinghri, 16. Nane, 17. Luka, 18. Thor, 19. Thoko, 20. Verma, 21. Guja, 22. Pushkar, 23. Keshu, 24. Suja, 25. Sansa, 26. Gunam 27. Khimbu, 28. Patuka, 29. Gasti.

Kushal (Mahabharata period)

Jitedasti (Buddha period)

Sthunko (Asoka Period)

We have lost scores of names of kingss in between the  above rulers.

Thakuri Dynasty

1.Amshu Varma

2.Raghu Deva (869 CE)

3.Gunakama Deva (949 -994)

4.Bhola deva –(1024-1040)

5.Lakshmi kama deva

6.Bhaskara deva

7.Vijayakama deva

8.Bala Deva

9.Padma Deva

10.Nagarjuna Deva

11.Shankara Deva (1067-1080 CE)

12.Bama Deva

13.Harsha Deva

14.Siva Deva III (1099-1120)

15.Mahendra Deva

16.Mana Deva

17.Narendra Deva

18.Rudra Deva

19.Amruta Deva

20.Ratna Deva

21.Someswara Deva

22.Gunakama II Deva

24.Lakshmikama III Deva

25.Vajayakama II Deva

1st_king

First Legendary King of Nepal

Lichchavi Vamsa

1)185  Jayavarmā (also Jayadeva I)

2)Vasurāja (also Vasudatta Varmā)

3)c. 400 Vṛṣadeva (also Vishvadeva)

4)c. 425 Shaṅkaradeva I

5)c. 450 Dharmadeva

6)464-505 Mānadeva I

7)505-506 Mahīdeva (few sources)

8)506-532 Vasantadeva

9)Manudeva (probable chronology)

10)538 Vāmanadeva (also Vardhamānadeva)

11)545 Rāmadeva

12)Amaradeva

13)Guṇakāmadeva

14)560-565 Gaṇadeva

15)567-c. 590 Bhaumagupta (also Bhūmigupta, probably not a king)

16)567-573 Gaṅgādeva

17)575/576 Mānadeva II (few sources)

18)590-604 Shivadeva I

19)605-621 Aṃshuvarmā

20)621 Udayadeva

21)624-625 Dhruvadeva

22)631-633 Bhīmārjunadeva, Jiṣṇugupta

23)635 Viṣṇugupta – Jiṣṇugupta

24)640-641 Bhīmārjunadeva / Viṣṇugupta

25)643-679 Narendradeva

26)694-705 Shivadeva II

27)713-733 Jayadeva II

28)748-749 Shaṅkaradeva II

29)756 Mānadeva III

30)826 Balirāja

31)847 Baladeva

32)877 Mānadeva IV

nepal-stamp

Malla rulers of the whole Kathmandu valley

  1. Ari Deva1201 – 1216
  2. Abhaya Malla1216 – 1235
  3. Ranasura1216
  4. Jayadeva Malla1235 – 1258
  5. Jayabhima Deva1258 – 1271
  6. Jayasimha Malla1271 – 1274
  7. Ananta Malla1274 – 1310
  8. Jayananada Deva1310 – 1320
  9. Jayari Malla1320 – 1344
  10. Jayarudra Malla1320 – 1326
  11. Jayaraja Deva1347 – 1361
  12. Jayarjuna Malla1361 – 1382
  13. Jayasthiti Malla1382 – 1395
  14. Jayajyotir Malla1395 – 1428
  15. Jayakiti Malla1395 – 1403
  16. Jayadharma Malla1395 – 1408
  17. Jayayakshya Malla1428 – 1482

RaniOfNepal1920

Rani of Nepal, 1920

Malla rulers of Kantipur

  1. Ratna Malla1482 – 1520
  2. Surya Malla1520 – 1530
  3. Amara Malla1530 – 1538
  4. Narendra Malla1538 – 1560
  5. Mahendra Malla1560–1574
  6. Sadashiva Malla1574–1583
  7. Shivasimha Malla1583–1620
  8. Lakshminarasimha Malla1620 – 1641
  9. Pratap Malla1641–1674
  10. Chakravartendra Malla1669
  11. Mahipatendra Malla1670
  12. Jayanripendra Malla1674–1680
  13. Parthivendra Malla1680–1687
  14. Bhupalendra Malla1687–1700
  15. Bhaskara Malla1700–1714
  16. Mahendrasimha Malla1714–1722
  17. Jagajjaya Malla1722–1736
  18. Jaya Prakash Malla1736–1746, 1750–1768
  19. Jyoti Prakash Malla1746–1750

nepal-locator6

Malla rulers of Lalitpur

  1. Purandara Simha1580 – 1600
  2. Harihara Simha1600 – 1609
  3. Shiva Simha(King of Kantipur) 1609 – 1620
  4. Siddhi Narasimha1620 – 1661
  5. Srinivasa Malla1661 – 1685
  6. Yoga Narendra Malla1685–1705
  7. Loka Prakash Malla1705–1706
  8. Indra Malla(Purandara Malla) 1706–1709
  9. Vira Narasimha Malla1709
  10. Vira Mahindra Malla1709–1715
  11. Riddhi Narasimha1715–1717
  12. Mahindra Simha(King of Kantipur) 1717–1722
  13. Yoga Prakash Malla1722–1729
  14. Vishnu Malla1729–1745
  15. Rajya Prakash Malla1745–1758
  16. Vishvajit Malla1758–1760
  17. Jaya Prakash Malla(King of Kantipur) 1760–1764
  18. Ranajit Malla(King of Bhaktapur) 1762–1763
  19. Dala Mardan Shah1764–1765
  20. Tej Narasimha Malla1765–1768

Jijabai-blessing-shivaji-

Jijabhai blessing Veera Shivaji of Maharashtra!

Malla rulers of Bhaktapur

  1. Raya Malla1482 – 1519
  2. Prana Malla1519 – 1547
  3. Vishva Malla1547 – 1560
  4. Trailokya Malla1560–1613
  5. Jagajjyoti Malla1613–1637
  6. Naresha Malla1637–1644
  7. Jagat Prakasha Malla1644–1673
  8. Jitamitra Malla1673–1696

9.Bhupatindra Malla 1696–1722

10.Ranajit Malla 1722–1769

(Pictures are taken from various sites;thanks)

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று!!

ruby

மாணிக்கம்/ கெம்பு

Research Paper written by London swaminathan

Research Article No.1647; Dated 13th February 2015.

 

கடந்த சில நாட்களில் முத்து, வைரம், ரத்தினக் கற்களின் எடை, விலை ஆகிய தலைப்புகளில் வராஹமிகிரர் கருத்து என்ன என்பதை அவரது சம்ஸ்கிருதக் கலைக் களஞ்சிய நூலான பிருஹத் சம்ஹிதையில் இருந்து கண்டோம். இன்று மரகதம், மாணிக்கம், நாகரத்தினம் பற்றி அவர் செப்புவதைக் காண்போம்.

வராகமிகிரர் 66 ஸ்லோகங்களில் ரத்தினக் கற்கள் பற்றிப் பாடினார். அவற்றில் முத்து பற்றி மட்டும் 36 பாடல்கள் பாடிவிட்டு, மரகதம் பற்றி ”ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” — என்று ஒரே ஒரு பாடலோடு முடித்துவிட்டார்! இதோ அது:–

Group-emerald

மரகத மகிமை

சுக வம்சபத்ர கதலி சீரிஷ குசுமப்ரபம் குணோபேதம்

சுர பித்ரு கார்ய மரகதம் அதீத சுபதாம் ம்ருனாம் விஹிதம்

 

இதன் பொருள்:– கிளியின் சிறகு, மூங்கில் இலை வாழைத் தண்டு (சாம்பல்/மஞ்சள்), சீரிச மலரின் நிறம் (வெள்ளை/மஞ்சள்) ஆகிய வர்ணங்களில் உள்ள மரகதக் கற்கள் நல்ல ஜாதிக் கற்கள். இதை தெய்வங்களைக் கும்பிடும்போதும், முன்னோருக்கான கிரியைகளைச் செய்யும் போதும் அணிந்தால் மிகவும் நன்மை பயக்கும்.

தெய்வ வழிபாடு, இறந்தோர் வழிபாடு ஆகிய காலங்களில் ரத்தினம் அணிவது அற்றி இந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே உள்ளது.

நாகரத்தினக் கல் உண்மையா?

மாணிக்கக் கல் (சிவப்புக் கல்), முத்து பற்றிய பாடல்களில் நாகரத்தினம் பற்றிய விவரங்களைத் தருகிறார்:

நாகரத்தினக் கல் உண்மை என்றே வராஹமிகிரர் நம்புகிறார். ஆனால் விஞ்ஞான முறைப்படி இது வரை யாரும் கண்டதில்லை. நாகரத்தினக் கல் தருவதாகச் சொல்லி பலர் மோசடி செய்து வருவதால் இதைப் படிக்கும் எமது வாசகர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

இதோ வராகமிகிரரின் கூற்று:

ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்

பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா:

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82

இதன் பொருள் என்ன?

பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்;  ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிக்க ஒண்ணாதது.

snake worship

இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்:

நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் (வேர் அறுப்பான்) செய்வான்.

நாகரத்தினக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட ‘’ஆஸ் யூ லைக் இட்’’ — நாடகத்தில் குறிப்பிடுகிறார். நாகரத்தினம் உண்மையா என்று நான் எழுதிய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் விவரம் காண்க:

Please read my research paper, “How did Shakespeare know about the Indian Cobra Jewel-Nagaratna?”– Posted on 1 October 2011.

http://swamiindology.blogspot.co.uk/2011/10/how-did-shakespeare-know-about-indian.html

வராகமிகிரர் மேலும் கூறுவதாவது: தக்ஷக, வாசுகி வம்சத்தில் வந்த பாம்புகளின் தலையில் ஒளிவீசும் நீல நிற முத்துக்கள் இருக்கும். இந்திரன் பெய்யும் மழை, இந்த பூமியில் அதிர்ஷ்டம் மிக்க இடத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் முத்தாகப் பொழிவதுண்டு. அவைகளும் பாம்பிடம் இருந்து வந்த முத்துகளே என்று அறிக!

இத்தகைய பாம்பு முத்துக்களை மன்னர்கள் அணிந்தால் எதிரிகள் அழிவர். மன்னரின் புகழும் வெற்றியும் ஓங்கும்.வெற்றி கிட்டும்.

ஆக, முத்து என்ற அத்தியாயத்தில் பாடுகையில் பாம்பின் தலை முத்து பற்றியும், மாணிக்கம் என்னும் அதிகாரத்தின் கீழ் பாடுகையில் நாகரத்தினம் என்றும் இரண்டு வகைக் கற்கள் பற்றிப் பகரும் பிருஹத் சம்ஹிதை!

நாகப்பாம்பு

எனது விளக்கம்:

நாகரத்தினம் என்பது பாம்புகளின் அகச்சிவப்பு உணரும் உறுப்பைக் குறித்துச் சொல்லி  இருக்கலாம்; பிற்காலத்தில் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு நாகரத்தினக் கல் என்று சொல்லிவிட்டனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது; கண்களே காதுகள் என்பதால் தமிழில் கட்செவி (கண்+செவி) என்றும் சம்ஸ்கிருதத்தில் சூன்ய கர்ண என்றும் சொல்லுவர். இருட்டில் இரை தேட அகச்சிவப்பு கதிர்கள் உதவும் .இப்பொழுது இரவு நேரத்தில் எதிரிகள் நடமாட்டத்தைக் காண அகச் சிவப்பு (இன்ப்ரா ரெட் பைனாகுலர்ஸ்) பைனாகுலர்களை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர். இது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையை “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்”– (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009) புத்தகத்தில் காணுங்கள். இந்தப் புத்தகம் 1990-ம் ஆண்டுகளில் நான் லண்டனில் இருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.

மாணிக்கக் கல்=குருந்தம்=குருவிந்தம்=கெம்பு

மாணிக்கம் என்னும் சிவப்புக் கல் — குருவிந்தம், ஸ்படிகம், சௌகந்திகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது (சௌகந்திகம் என்பது கந்தகக் கல்)

மாணிக்கக் கற்களின் விலை (1500 ஆண்டுகளுக்கு முன்)

ஒரு பலம் ( 4 கார்ஷா) எடையுள்ள கல்= 26,000 கார்ஷாபணம்

அரைப் பல கல்= 20,000 கார்ஷாபணம்

ஒரு கார்ஷா எடை= 6000 கார்ஷாபணம்

எட்டில் ஒரு குந்துமணி எடை= 3000 கார்ஷாபணம்

நாலில் ஒரு மாசா எடை கல் = 1000 கார்ஷாபணம்

(இதைப் புரிந்து கொள்ள நேற்று கொடுத்த எடைக் கல் வாய்ப்பாட்டைப் பார்க்கவும்)

குறைகள் உள்ள, ஒளி குன்றிய, மட்டான பிரகாசம் உடைய கற்களுக்கு விலை என்ன விகிதாசாரத்தில் குறையும் என்றும் வராகமிகிரர் விளக்கி இருக்கிறார்.

ஆர்வம் உடையோர் 66 பாடல்களையும் அதற்கு உரைகாரர்கள் எழுதிய வியாக்கியானங்களையும் படித்துப் பயன் அடைக!

முடிவுரை:

யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே அன்றி உண்மை அல்ல!! அல்ல!!

எனது பழைய கட்டுரை நிலாசாரல்.காம்  – இல் வெளியானது:–

Ruby_Jewel

தமிழ் இலக்கியம் கூறுவது என்ன?

பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு. இது இங்கிலாந்து வரை பரவி சேக்ஷ்பியர்(Shakespeare) கூட ஒரு நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம். காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை. நாகரத்தினம் என்பது என்ன என்பதை ஊகித்தறியலாம்.

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்”

அகம் 72

உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்
திருமணி விளக்கிண் பெறுகுவை”

அகம் 92

பாம்புகள் தனது இரையைப் பார்க்கும் போது அவைகளின் கண்ணுக்கு அவை சிவப்பாகவே தெரியும்! அதுதான் நாகரத்தினம்! இது எப்படி என்பதைக் கீழே காணலாம் :-

பாம்புகளுக்கு தமிழில் நிறைய பெயர்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான பொருளும் உண்மையும் அடங்கியுள்ளது. இன்று அதிநவீன கருவிகளைக் கொண்டு உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததை தமிழர்கள் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்துள்ளனர்.

பாம்புக்கு ‘கட்செவி’ என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது.

corundumpink

குருவிந்தம் (குருந்தம்)

இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இருட்டு நேரத்தில் எலி, தவளை போன்ற பிராணிகளை நாம் பார்க்கமுடியாது. ஆனால் பாம்புகள் அவைகளை நாகரத்தினம் போல சிவப்பாக காணும். இது எப்படி என்றால் எலி,தவளை ஆகியவற்றின் உடல்வெப்பத்தைக் கொண்டு அவை இருக்குமிடத்தை பாம்புகள் அறிந்துகொள்ளும். இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு ‘கட்செவி’ எண்று பெயரிட்டான்!

நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும். பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்.

opal
ஒபல் — ஓரளவு மதிப்புடைய ரத்தினக் கற்கள்

பாம்புகளுக்கு கண் பார்வையும் குறைவு! காது கேட்பதும் குறைவு. ஆனால் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு வெப்ப நிலை மாற்றத்தை அறியும் உறுப்புகள் (HEAT PITS) உண்டு. கண்ணுக்கு அருகிலுள்ள இந்தக்குழிகள் காதுகளின் பணியைச் செய்வதால் இதற்கு கட்செவி (கண் காது) என்ற பெயர் ஏற்பட்டது.

ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை!

-ச.சுவாமிநாதன் M.A (LIT), M.A (HIST)
நிலாச்சாரல்

amethist4

அமெதிஸ்ட்

agate

அகேட்

எவ்வழி உலகம் அவ்வழி அனைவரும்! உலகின் போக்கு!

NRF-cow-herd960

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. எவ்வழி உலகம் அவ்வழியே அனைவரின் வழியும்!

 

ஆய்வுக்கட்டுரை எண்: 1646; தேதி 13 பிப்ரவரி 2015

எழுதியவர் ச.நாகராஜன்

 

நியாயங்களைத் தொகுக்கப் போனால், தொகுப்பானது சுமார் 900 நியாயங்களையும் தாண்டி விடும். பல்வேறு நூல்களில் மேற்கோள்களாக எடுக்கப்பட்டவைகளைத் தொகுத்தாலோ அது ஒரு பெரிய நூலாக ஆகி விடும். மேலும் சில முக்கியமான நியாயங்களை

ப் பார்ப்போம்:-

खलमैत्रीन्यायः

khalamaitri nyayah

கலமைத்ரி நியாயம்

மைத்ரி – நட்பு

 

ஒரு வில்லனை- அயோக்கியனை- நண்பனாகக் கொள்வது பற்றிய நியாயம் இது.

ஒரு அயோக்கியனின் நட்பு ஆரம்பத்தில் பிரமாதமாக இருக்கும். போகப்போக அதன் தீவிரம் குறைவு படும். ஒரு கெட்டவனின் சிநேகம் மண்ணாங்கட்டி போல நம்புதற்கு உரியது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட வரும் நியாயம் இது.

stars-and-moon

தேய் பிறை நிலவின் படம்

திருக்குறளில் இதே கருத்தைக் காணலாம்:

 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு      – திருக்குறள் 782

நாலடியாரில் 125 பாடல் இதனுடன் ஒப்பு நோக்குதற்கு உரியது:

 

“பெரியவர் கேண்மை பிறை போல நாளும்,

வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்

வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு”    – நாலடியார் பாடல் 125


pigeon
புறாவும் தானியக் களஞ்சியமும்

खलेकपोतन्यायः

khalekapota nyayah

கலேகபோத நியாயம்

தானியக்களஞ்சியமும் புறாக்களும் என்ற நியாயம் இது.

 

ஒரு தானியக் களஞ்சியம் இருந்தது. பெரிய புறாக்களும் குஞ்சுப் புறாக்களும் அங்கு சென்று வேண்டியபோதெல்லாம் வயிறு முட்ட தானியங்களைச் சாப்பிட்டுக் காலம் கழித்தன.அதன் அடிப்படையில் எழுந்த நியாயம் இது.

ஆக இது போல நல்ல மனமுடைய ஒரு பெரும் தனவந்தன் இருந்தால் அவனை அண்டி தங்கள் தேவைகளை ஏழை எளியோர் பூர்த்தி செய்து கொள்வர்.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சொல்லப்படும் நியாயம் இது..

 

.

wood apple

விளாம் பழம்

गजभुक्तकपित्थन्यायः

gajabhuktakapittha nyayah

கஜபுக்தகபித்த நியாயம்

 

கஜம் – யானை கபித்தம் – விளாம்பழம்

யானை சாப்பிட்ட விளாம்பழ நியாயம் இது.

யானை சாப்பிட்ட விளாம்பழக் கதை அனைவரும் அறிந்த ஒன்று தான். யானை விளாம்பழத்தைச் சாப்பிட்டால் அது உள்ளே இருக்கின்ற பழத்தைச் சாப்பிட்டு விடும். ஆனால் வெளியே பார்த்தால் ஓட்டுடன் பழம் முழுவதுமாக அப்படியே இருக்கும். ஆகவே யானை சாப்பிட்ட விளாம்பழம் போல என்ற பழமொழி வழக்கில் உள்ளது.

பார்வைக்குப் பெரிதாகத் தோன்றும் ஒருவன் உள்ளீடற்று இருக்கும் போது, இந்த நியாயத்தைச் சொல்லி அவன் சுட்டிக் காட்டப்படுகிறான்.


elephant

गतानुगतिको लोकःन्यायः

gatanugatiko lokah nyayah

 

கதானுகதிகோ லோக: நியாயம்

குருட்டுத்தனமாக ஒரு விஷயத்தைப் பின்பற்றுவதைக் குறிக்கும் நியாயம் இது.

ஒரு லேடஸ்ட் ஃபாஷன் சிலரால் பின்பற்றப்படுகிறது என்றால் ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாமல் அதை அப்படியே குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது உலக வழக்கமாகி விட்டது. அது சரியா தவறா என்ற ஆராய்ச்சியெல்லாம் எழுவதில்லை. உலகம் எவ்வழி அவ்வழி நம் வழி என்ற நிலைப்பாடில் எழும் நியாயம் இது. லோகம் என்ன செய்கிறதோ அதை அனுசரி என்ற இந்த நியாயத்தைச் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்!


Blind Faith- Blind leading Blind

குருடன் குருடனைப் பின்பற்றுதல்

गोबलीवर्दन्यायः

gobalivarda nyayah

 

கோபலிவர்த நியாயம்

பசு மந்தையும் காளையும் என்னும் நியாயம் இது.

 

சாதாரணமாக பசு என்ற வார்த்தை இலக்கண ரீதியாக ஆண் மாட்டையும் குறிக்கும்; பெண் மாட்டையும் குறிக்கும். ஆனால் பசு என்றால் பெண் மாட்டையே நாம் குறிப்பிடுகிறோம். ஆண் மாட்டை காளை என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம்.

cow_herd

இதே போல ஒரு வார்த்தையை நாம் வழக்கில் ஒத்துக் கொண்டாலும் கூட அது எதை நிஜமான பொருளாகக் கொண்டிருக்கிறதோ அந்தப் பொருளால் வழங்கப்படுவதில்லை.

இது போன்ற தகுந்த சந்தர்ப்பத்தில் இந்த நியாயம் கையாளப்படுகிறது.

bull-and-cow

பசுவும் காளையும் படம்

***************

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!!

nose_ring_wikipedia

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

 

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

 

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

pearl-large

முத்து கிடைக்கும் இடங்களைக் குறிப்பிடுகையில் தாம்ரபரணி நதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளையும் பரளி என்னும் இடத்தையும் இவர் குறிப்பிடுதல் சிறப்புடைத்து.

வராகமிகிரருக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே- இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் — சாணக்கியன் எனப்படும் உலக மகா அறிவாளிப் பிராமணன் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் ‘பாண்டிய கவாடம்’ என்று பாண்டிய நாட்டு முத்தை சிறப்பிகின்றான்.

முத்து என்ற சொல்லும் பரல் (பேர்ள்) என்ற சொல்லும் சம்ஸ்கிருத வேத கால (முக்தா) இலக்கியங்களிலும், ஆங்கிலத்திலும் இருப்பது தமிழர் பெருமைப்படவேண்டிய விஷயம். பரளி என்ற ஊரின் பெயரில் இருந்து பரல் (முத்து) என்ற சொல் உண்டாகியதா அல்லது முத்து என்ற ரத்தினமே பரளி என்ற  பெயரை உண்டாகியதா என்பதையும் ஆராய வேண்டும். பரளி என்ற ஊரும் ஆறும் கேரளத்தில் உள்ளது. லட்சத் தீவுகளில் பரளி  என்ற தீவும் உளது.

வேத கால இலக்கியங்களில் வரும் முத்து பற்றிய சத்தான விசயங்களை கீழேயுள்ள எனது ஆய்வுக்கட்டுரையில் கண்டு கொள்க:

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

pearl-oyster

ரத்னங்களின் குணங்கள்

ஸ்னிக்த: ப்ரபானுலேபி ஸ்வச்சோ அர்சிஷிஷ்மான் குரு: சுசம்ஸ்தான:

அந்த: ப்ரபோ அதிராகோ மணிரத்னகுணா: சமஸ்தானாம்

—–(பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82)

ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும்.  கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.

என்ன கிடைக்கும்?

ஏதானி சர்வானி மஹா குணாணி சுதார்த்த சௌபாக்ய யசஸ்கரானி

ருக்சோக ஹந்த்ருனி ச பார்த்திவானாம் முக்தாபலானி ஈர்ச்சித காமதானி — (பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81)

இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.

இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.

குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:
1)Lord Krishna’s Diamond in USA? –  posted on 23 April 2012

https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/

2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html

3)Gem Stones in Kalidasa and Tamil Literature

13th February 2012

http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html

mthangi sevai

அம்மனுக்கு முத்து அங்கி

தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.

அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.

17 வகை முத்து மாலைகளில் சில:

1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)

504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா

108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)

81 வடம் = தேவ சந்தா

64 வடம் = அர்த்த ஹார

54 வடம் = ரஸ்மி கலாப

32 வடம் = குச்ச

20 வடம் = அர்த்த குச்ச

16 வடம் = மாணவக

12 வடம் = அர்த்த மாணவக

எட்டு வடம் = மந்தர

ஐந்து வடம் = ஹார பலக

27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா

இவ்வாறு முத்துக்களின்  பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.

muthangisrivaishnavism-site

எடைகள் பற்றிய வாய்ப்பாடு

ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:

விம்சதி: ஸ்வேதிகா: ப்ரோக்தா: காகின்யேகா:

விசக்ஷணை: தத் சதுஷ்கம் பண: இதி சதுர்த்தம் தத் சதுஷ்டயம்

 

சதுர்த்தக சதுஷ்கம் து புராண: இதி கத்யதே

கார்ஷா பண; சஹ ஏவ உக்த: க்வசித் து பண விம்சதி:

 

20 வெள்ளிக் காசு= ஒரு காகினி

4 காகினி = ஒரு பணம்

4 பணம் = ஒரு சதுர்த்தம்

4 சதுர்த்தம் = ஒரு புராண அல்லது கார்ஷா பணம்

80 வெள்ளிக்காசு =ஒரு பணம்

20 பணம் = ஒரு கார்ஷா பணம்

muthu angi

8 வெள்ளைக் கடுகு (ஐயவி)= ஒரு அரிசி

20 அரிசி எடை வைரம் = 2 லட்சம் கார்ஷா பணம்

14 அரிசி அடை= 1 லட்சம் கார்ஷா பணம்

முத்து விலை

5 குந்து மணி (ரத்தி/குஞ்சா/கிருஷ்ணல) = 1 மாச

16 மாச = 1 சுவர்ண

4 சுவர்ண = ஒரு பல

அரை பல = தரண அல்லது சுவர்ண

4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்

ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்

இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.

68-March-Pearl

அடுத்த கட்டுரையில் நாகரத்தினம் (பாம்பின் தலையில் உள்ள ரத்தினம்), மாணிக்கம், மரகதம் பற்றி வராகமிகிரர் சொல்லுவதைக் காண்போம்.

—தொடரும்……………………………..

கர்ணன் பெயரில் ஒரு நியாயம்! கிணறு பெயரில் இரு நியாயம்!!

Karnan

கட்டுரை எண் 1644; தேதி 12 பிப்ரவரி 2015

எழுதியவர் ச.நாகராஜன்

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. ராதேயன் கர்ணன்!

 

நியாயங்களின் வரிசையில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:-

कूपखानकन्यायः

kupakhanaka nyayah

கூபகானக நியாயம்

கூபம் – கிணறு

கிணறு வெட்டுவது பற்றிய நியாயம் இது.

ஒரு கிணறை வெட்டும் போது அதை வெட்டுபவனுடைய உடலில் சகதிகள், மண், சேறு முதலில் படியும். ஆனால் வெட்ட வெட்ட கிணற்றிலிருந்து தண்ணீர் ஊறும். அந்த நீரினாலேயே அவன் தன் உடல் முழுவதையும் கழுவிக் கொண்டு சுத்தமாக ஆகி விடுவான். இதே போல ஒருவன் செய்யும் பாவங்கள் எல்லாம் கூட அவன் பின்னால் செய்யும் தான தர்மங்களினால் கழுவப் பட்டு விடும். இதை அழகாக எடுத்துரைக்கும் நியாயம் கூப கானக நியாயம்.


communal-well_kerala1

कूपयन्त्रघटिकान्यायः

kupayantraghata nyayah

கூபயந்த்ரகடிகா நியாயம்

ஒரு கிணறில் நீர் எடுக்க உதவும் உருளையில் பக்கட்டுகளை இணைத்திருப்பது பற்றிய நியாயம் இது.

கிணறிலிருந்து நீர் எடுக்கும் போது சில பக்கட்டுகள் நீர் நிரப்பப்பட்டு மேலே வரும். சில சமயம் நீர் இல்லாமலேயே மேலே வரும். கீழே போகும் போதோ காலியாக கீழிறங்கும். அதே போல உலகியலில் வாழ்க்கையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நீர் நிரம்புவதும் நீர் நிரம்பாமல் இருப்பதுமாக, மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமாக எத்தனை எத்தனையோ மாறுதல்கள்.

இந்த மாறுதல்களைச் சுட்டிக் காட்டுவது தான் கூபயந்த்ரகடிகா நியாயம்.

 

drinking09-village-well_13106_600x450

कैमुतिकन्यायः

kaimutika nyayah

கைமுதிக நியாயம்

“இன்னும் எவ்வளவு” என்னும் நியாயம் இது. வேலையே பார்க்காமல் இன்னும் எவ்வளவு அதிகமாகக் கிடைக்கும் என்று அதிகம் பெறுவதையே நோக்கமாக ஒருவர் கொள்ளும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

Karnan29211

कौन्तेयराधेयन्यायः
kaunteyaradheya nyayah
கௌந்தேய ராதேய நியாயம்
கௌந்தேய ராதேய என்னும் நியாயம் இது பிரபலமான ஒன்று.

மஹாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்ட நியாயம் இது. குந்தியின் மகனான கர்ணன் அவளால் ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விடப்பட அந்தக் கூடையை எடுத்துப் பார்த்துத் திகைக்கிறாள் ராதா என்னும் பெண். அவனைத் தன் மகனாக வளர்க்க ஆரம்பிக்கிறாள்.ராதையின் மகன் என்று அவனைச் சுட்டிக் காட்டப்படுகிறான் அவன்.

ஆகவே அவனை ராதேயன் என்று சாதாரணமாகக் கூப்பிடுவது வழக்கம்.

பேச்சு வாக்கில் கடைப்பிடிக்கப்படும் ஒரு பழக்கம் எப்போதுமே வழங்கப்பட்டு நிஜமான ஒன்றாக ஆவது போல இருக்கும் சமயத்தில் இந்த நியாயம் வழங்கப்படும்.

குந்தியின் மகன் தான்; ஆனால் ராதேயனாக ஆகி அதுவே நிஜமாகி விட்டது. அதைப் போன்ற தருணங்களில் வழங்கப்படும் நியாயம் இது!

bald

खल्वाटबिल्वीयन्यायः

khalvatabilviya nyayah

கல்வாடபில்வீய நியாயம்

வழுக்கைத் தலையரும் வில்வப் பழமும் என்னும் நியாயம் இது.

இதற்கு அடிப்படையான கதை ஒன்று உண்டு.

 

ஒரு நாள், வழுக்கைத் தலையரான ஒருவர் வெய்யிலின் கொடூரம் தாங்காமல் களைப்பாறுவதற்காக ஒரு வில்வ மரத்தின் அடியில், நிழலில் வந்து அமர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய வில்வப் பழம் அவர் மண்டை மீது திடீரென்று விழுந்து காயம் ஏற்பட அவர் துடிதுடித்துப் போனார். துரதிர்ஷ்டம் எங்கு போனாலும் தொடர்ந்து வரும் என்பது போல சிலருக்கு எங்கே போனாலும் ஏதாவது இப்படி நடந்தால் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

WoodApple_12339

*****************