LONDON CALLING : ‘GNANA MAYAM’ BROADCASTS :14,15 NOVEMBER 2021 (Post 10,344)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,344

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

14-11-2021 SUNDAY PROGRAMME

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

XXX

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –  London Swaminathan

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   TIRU NINDRAVUR LAKSHMI TEMPLE 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND Miss Shreya Srinivasan, Mrs Aruna Srinivasan and Mr Srinivasan–  10 mts

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

TALK BY S NAGARAJAN ON SWAMI  DAYANANDA SARASVATI- 10 MTS

XXXX XXXX

15 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER –  REVATHY

Talk by London Swaminathan on Kamba Ramayanam -10 mts

‘ARUNTHAVATHTHU ARASI SABARI IN KAMBA RAMAYANA’

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

XXX

CONCERT- PART 3 – 30 minutes

W H M S SILVER JUBILEE CONCERT BY MR YOGESWARAN – THIRD PART

APPR. 60 MINUTES

Xxxx subham xxxx

TAGS- BROADCASTS, 14 15 NOVEMBER 2021

WHO IS LONDON SWAMINATHAN-5; LEARN AND TEACH! (Post No.10,345)

london swaminatha 14 years ago; in 2007

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,345

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Mrs Annapoorani Panchanathan is sitting next to me. Behind her is Mr Panchanathan; he was the founder of London Sath Sangam.

On the other day I received a text message saying, “Sir your profile and autobiography inspired me and I wanted to write mine”. I felt very happy and said to him please jot down the points in a book and I will help you to start it . Once you begin writing then it wouldn’t stop and you don’t need further help from me. But I was disappointed to get another message next day saying “Sir looking at your story today, I was scared to write. I can never come nearer to you”. Then I sent him a message, “My dear friend, don’t get disheartened; God has given some special talents to each and every one; you must be able to tell a person right thing at the right time in the right place”. I have not received any more message from that friend in London. To strengthen my point, I will tell you a few anecdotes.

xxx

MY SON TAUGHT A LESSON TO MY WIFE AND ME!

My wife said to me,

Hey, I am going upstairs to dry the clothes. Put off the oven when the rice is done.

Yes my darling. How long would it be?

Go and look at the boiling rice by slowly opening the cooker and then decide.

She meant that I should take one rice from the cooking pot, crush it in my fingers and see whether it is cooked properly.

It is in a Tamil proverb – one cooked grain of rice is enough to decide one pot full of rice (to see whether t is cooked or not) ORU PANAI SORRUKKU ORU SORU PATHAM in Tamil.

This proverb was done a few thousand years ago when there was no electricity, no clock etc. now we use it as an idiom in different contexts.

My younger son was listening to this conversation from the hall near kitchen. He shouted ,

“What is it mum?  You are telling daddy to open the cooking pot halfway through cooking to check the rice.

Don’t you know it is exactly 20 minutes to cook the rice?

One cup of rice; two cups of water;20  minutes!

Two cups of rice; 4 cups of water; again it is only 20 minutes!

Tell daddy at what time you lighted the oven.

I also learnt it only on that day.

My son was sent to a Pakistani lady when he was going to school. She minded him. She was a registered baby sitter with the Brent Council in London and her house wsa less than 5 minutes from my house in London. We warned her that we are strict vegetarians, and we would provide her vessels/ utensils to cook veggy food. She said to us, never mind; I fully understand your concept of veggy food. I will take care of it. From her only,  my son learnt all the cooking- cooking pasta, noodles, pizza and rice.

If you are observant and interested, you learn everything.

Xxx

We invited Mrs Vishaka Hari and Hariji to do 13 discourses in London in 2007

MY BROTHER LEARNT IT FROM ME

When one of my brothers came to London we were about to leave for sightseeing. I told him please wait for a second saying ‘I have to do this stupid lace; I have to put double knot’. He wondered and asked me what the double knot meant.

 I showed him that by doing one more round of knot in the lace of the shoes.

He commented, ‘Oh My God I have been riding 3-5 (horse power) motor bike every day to office for the past 20 years. The minute I start it, my shoe laces get loosened. I used to struggle till I reach office to redo it”.

Very simple thing; but we don’t watch others doing something better; or you always rush to office and no time to think.

xxx

I WAS LAUGHED AT BY MY SON

Once I called my eldest son and told him “Look, Look, I am going to teach you a trick today; I will show you how to clean the glasses/specs”.

Today I watched an English girl on the train; she must be very clever; I watched her blowing her breath on  her specs and wiped it clean with her clothes/dress.

My son laughed at me and said

“Dad , don’t you know this? Even my classmate (girl) used to do it in school”.  I looked like a stupid then. We never use our mouth, because it would bring out the spit . But for this steaming technique, I don’t have any objection. Till that day I go to the bathroom sink and wash my specs ceremonially and then wipe it clean. But I never watched another person doing it until that particular day. After talking to my son I became the Buddha! Wisdom (regarding specs) dawned upon me.

In the next part I will talk about how clever wives are!

To be continued…………………………….

IN lONDON MURUGAN TEMPLE
IN LONDON MAHALAKSHMI TEMPLE

IN DALE AVENUE SCOUT HOUSE, LONDON
IN SINDHI MANDIR, LONDON
LONDON SWAMINATHAN 14 YEARS AGO, 2007
LONDON SWAMINATHAN ON 16-11-2021

TAGS – LONDON SWAMINATHAN 5

வேதத்தில் தவளை அதிசயம் – பகுதி 2 (Post No.10,343)

EGYPTIAN FROG GODDESS HEQET OR HEKET= HINDU SHAKTI 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,343

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள்” (Post.10,337) -என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் இதுவரை நான் 5 அதிசயங்களைக் கண்டுள்ளேன். அதர்வண வேதம் முழுதும் மாய , மந்திர, இந்திர ஜால (Magic) வித்தைச் செய்திகளாக உள்ளன. யஜுர் வேதத்திலும் மேலும் அதிசயச் செய்திகள் உள்ளன. ஆகவே தவளைகள் பற்றி மேலும் அதிசயச் செய்திகள் கிடை க்கலாம் .

இதுவரை நாம் கண்ட அதிசயங்கள் 4; அவையாவன

1. ரிக் வேதத்தில் வசிஷ்டர் பாடிய நகைச் சுவை மிகுந்த தவளைப் பாட்டு (RV 7-103). இதை அப்படியே கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபனீஸ் காப்பி அடித்து கிரேக்க மொழியில் ஒரு நாடகம் செய்தார். இது உலக அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தி ; கம்பனும் இதே பாணியில் தவளை பற்றிப்   பாடினான்  (எனது முந்தைய கட்டுரைகளில் காண்க).

இரண்டாவது அதிசயம்- ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் தகனக் கிரியைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலில் சடலத்தை எரித்த பின்னர் அங்கே பெண் தவளை ஒன்றை வைக்க வேண்டும் என்பதாகும் .

மூன்றாவது அதிசயம் – அதர்வண வேதத்தில்  இருக்கிறது; சிவப்பு -நீல நிற நூலைக் கட்டி தங்கத்துடனும் ‘அவகா’ என்ற நீர்த் தாவரத்துடனும் கால் வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விட  வேண்டும்  என்று சொல்லி இருப்பதைக் கண்டோம்..

நாலாவது அதிசயம் — அதர்வண வேதத்தில் கண்வக்கா , கைமுக்கா , தஹூரி என்றெல்லாம் தவளைக்குப் பெயர் சூட்டும் மந்திரம் உள்ளது. இதை வெள்ளைக்காரர்கள் , ஒலி நயம் காரணமாக ரிஷிகள் பாடி மகிழ்ந்தனர் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். ஆனால் நான் அது தவறு என்பதை அலிகி , விளிகி பாம்பு விஷயங்களைக் காட்டி விளக்கினேன்.

XXXX

GREEK GODDESS HECATE= HINDU SHAKTI 

இப்போது புதிய அதிசயத்துக்கு வருவோம்.

ஐந்தாவது அதிசயம்

மொழி இயல் (Linguistic researchers) பற்றி ஆராய்வோருக்கு சில விஷயங்கள் கண்களில் ‘சட்’டென்று பட்டு விடும்

ரிக் வேதத்தில் ‘ஸபா’ என்ற சொல் உள்ளது. அதை ‘அவை’ என்று மாற்றி தமிழர்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பன தெயாத இந்தியர்கள் இருக்க முடியாது. அங்கே ‘ப’ என்பது தமிழில் ‘வ’ என்று மாறுகிறது. இன்றும் நாம் ‘பெங்கால்’ என்பதை ‘வங்கம்’ என்கிறோம் . இந்த மாற்றங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து இருக்கிறது!

இதே போல நாம் ‘ச’ என்று சொன்னால் கிரேக்க பாரசீக மொழிகளில் ‘ச’ கிடையாது; அதை அவர்கள் ‘ஹ’ என்பர். இதனால்தான் சிந்து நதிக்கரையில்’ அதற்கு அப்பாலும் வசித்த நம் எல்லோரையும் அவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று எழுதிவிட்டனர் .

இந்துக்கள் ‘சக்தி’ என்றால் அவர்கள் ‘ஹக்தி’ என்பார்கள் . இதே பெயரில் எகிப்திலும் , கிரேக்க நாட்டிலும் சில தெய்வங்கள் உள்ளன. அவற்றில் கிரேக்க நாட்டு ‘ஹெகதி’க்கு நாம் ‘சக்தி’ பற்றி சொல்லிய வருணனைகள் பொருந்துகின்றன.

எகிப்து நாட்டில் ‘ஹெகதி’ Heqet, Heket என்ற தேவதைக்கு தவளை உருவம் கற்பித்துள்ளனர். அவளை குழந்தை பிறப்பதில் உதவவும் தேவதையாகவும் மகப்பேறு மருத்துவச்சி என்றும் பழைய எகிப்திய நூல்கள் வருணிக்கின்றன.

இப்போது நாம் பழைய விஷயங்களை ஒப்பிடுவோம் . சுடுகாட்டில் ஏன் இந்துக்கள், பெண் தவளையை வைத்தனர்? கால்வாயில் ஏன் இந்துக்கள் நீர்  தாவரத்துடன் தவளையை விட்டு திறப்பு விழா நடத்தினர்?

இதற்கு விடை: மறு பிறப்பு, மறு மலர்ச்சி,  (Rebirth, Reincarnation, Resurgence) புத்தெழுச்சி ஆகும் அதாவது தவளை முட்டையாக தோன்றி மீன் போல உருமாறி (தலைப் பிரட்டை Tadpole) நான்கு கால் தவளையாக உருமாறுகிறது. இது மறு பிறப்பைக் குறிக்கும். அது மட்டுமல்ல தவளைக்குள்ள அபூர்வ குணம் நீரிலும் வசிக்கும், நிலத்திலும் வசிக்கும். (Amphibian) கல்லுக்குள் தேரையாகவும் வசிக்கும் .அத்தோடு இந்துக்கள் நீர்த் தாவரத்தையும் கால்வாயில் விட்டனர். அந்த ‘அவகா’ தாவரத்தை இன்று லண்டன் முதலிய இடங்களில் அக்வேரியம் aquarium எனப்படும் மீன் காட்சி சாலைகளில் தண்ணீர் தொட்டிக்குள் காணலாம். இதன் அபூர்வ குணம் தண்ணீருக்குள் வளர்ந்து அதை சுத்தப்படுத்தும் . இதை அறிந்த வேத கால ரிஷிகள் இதையும் சேர்த்து கால்வாயில் விடச் சொன்னார்கள்.

தவளையின் இனப்பெருக்கத்தையும் (fertility) , அதன் உரு மாற்ற (Metamorphosis) குணத்தையும் கண்ட எகிப்தியர் இந்துக் கடவுளுக்கான ‘சக்தி’க்கு தவளை உருவத்தைக் கொடுத்து அதை ‘ஹெகதி’ (சக்தி என்றனர்)

இப்போதும் மேற்கு வங்கம் பீஹார் போன்ற இடங்களில் இந்துக்கள் ‘ஷஷ்டி’ Shasthi என்ற தேவதையாக வணங்கி வருகின்றனர். காலப்போக்கில் சஷ்டியில் (ஆறு என்பதன் சம்ஸ்கிருதம்) முருகன் வழிபாடு இருப்பதாலும், முருகனை 6 கிருத்திகைப் பெண்கள் வள ர்த்தத்தாலும் அதை ஸ்கந்தனுடனும் தொடர்பு படுத்தினர்.

தவளை உருமாற்றம் செய்வது போலவே இந்து தெய்வங்கள் உருமாற்றம் அடைவதையும் காணலாம் (Metamorphosis of Hindu Gods) . ஒரே பார்வதி தேவியை – ஒரே சக்தி அன்னையை- மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயரில் அழைப்பதைக் காணலாம் – 51 சக்தி பீடங்களின் தேவி பெயர்களின் பட்டியலைப் பார்த்தால் இது உங்களுக்குத் புரியும். அத்தோடு local லோக்கல் கதைகளை இணைத்து தலபுராணமும் சொல்லுவார்கள். “கடவுள் ஒருவரே; அவரை பல குணங்களில் ,  பல ரூபங்களில் வணங்கலாம்”– என்பது இந்துக்கள் உலகிற்குக் கற்பித்த  பாடம்.

இந்துக் கடவுளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றோர், அதற்கு மொழி மாற்றம் காரணமாக புதிய உச்சகரிப்பை – புதிய  நாமத்தை — புதிய கதைகளை உருவாக்கி லோக்கல்/ உள்ளூர்  மக்களை கவர்கின்றனர் .

இதுதான் சக்தி – ஷஷ்டி ஆகி கிரேக்க நாட்டில் ஹெகதி ஆகிக் – எகிப்தில் தவளை ரூபா ஹெக்தி ஆக உரு மாறிய கதை.

அதர்வண வேத மந்திரம் ஒவ்வொன்றும் அற்புத விஷயங்களைச் சொல்கிறது. நம்முடைய முதல் கடமை வேதம் படித்தவர்களைப் பார்த்தால் அவர்கள் காலில் விழுந்து, தயவு செய்து இதை ஒலி மாறாமல் சொல்லி வாருங்கள்; நாங்கள் பிற் காலத்தில் அர்த்தம் சொல்கிறோம் என்று சொல்ல வேண்டும்!!

இன்று காலை நான் படித்த அதர்வண வேத ஐந்தாவது காண்டத்தின் முன்னுரையிலேயே, இதிலுள்ள 30 பாடல்களுக்கும் சாயனர் உரை  எழுதவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனருக்கே அர்த்தம் புரியவில்லையா? ஆராய்ச்சிகளைத் தொடர்வோம் .

–subham–

TAGS- எகிப்து, தவளை, தேவதை, கிரேக்க, ஹெகதி , சக்தி , அதர்வண வேதம், அதிசயங்கள்

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! – 2 (Post No.10,342)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,342

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! – 2

ச.நாகராஜன்

அடுத்து இன்னொரு சம்பவம் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி பிரம்மசர்யத்தின் மஹிமையை உணர்த்தியது.

ஒருமுறை பஞ்சாபில் உள்ள குஜ்ரன்வாலாவில் ஒரு கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது அவர், “எனக்கு இப்போது 51 வயதாகிறது. எனது பிரம்மசர்யம் தடையற்றுக் கடைப்பிடிக்கப்படும் ஒன்று. இதை மிகுந்த நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும். உங்களில் எவரேனும் மிகுந்த பலசாலியாக இருந்தால் அவர் என்னிடம் வரட்டும். அவரது கையை நான் பிடிக்கிறேன். அவர் அதை என்னிடமிருந்து விடுவித்துக் காண்பிக்கட்டும் அல்லது இதோ, எனது நீட்டிய கையை மடக்கட்டும்’ என்று சவால் விடுத்தார்.

அந்தக் கூட்டத்தில் பல மல்யுத்த வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட அவரது சவாலை ஏற்க முன் வரவில்லை.

ஆறடி உயரமுள்ள ஸ்வாமிஜி நல்ல அழகிய தோற்றமுடையவர். பிரம்மசர்ய தேஜஸ் தவழ அவர் நடந்து வரும் போது அனைவரும் அவரை வியப்புடன் பார்ப்பர். கெட்டவர்களுக்கோ அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர்கள் அவரை அணுகப் பயப்படுவர்.

தீயவரைக் கண்டால் அவரது குரல் ஓங்கி ஒலிக்கும்; அந்த சிம்ம கர்ஜனையைக் கேட்டால் அவர்கள் அலறி ஓடி ஒளிவர்.

ஒரு நாள் அதிகாலை நேரத்தில் அவர் மிக்க ஓய்வாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர் பின்னால் ஒரு மல்யுத்த வீரர் வந்து கொண்டே இருந்தார்.

அந்த மல்யுத்தக்காரரின் நடையைக் கவனித்த ஸ்வாமிஜி நிச்சயம் அவர் ஏதோ ஒரு கெட்ட எண்ணத்துடன் தன்னைப்  பின் தொடர்வதாக அனுமானித்தார்.

ஒரு கணம் நின்று ஒரு கர்ஜனை செய்தார். அவ்வளவு தான், அந்த தீய எண்ண மல்யுத்தக்காரர் ஓடலானார். அடுத்து என்ன செய்வது என்று ஸ்வாமிஜி நினக்கக் கூட அவர் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. அவ்வளவு வேகமாக வந்த வழியே ஓடி விட்டார்.

இன்னொரு சம்பவம் பரூக்காபாத்தில் நடந்தது.

சில மல்யுத்த வீரர்கள் தங்கள் தங்கள் வலிமையைப் பற்றித் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தனர்.

இதைக் கேட்ட ஸ்வாமிஜி புன்முறுவல் பூத்தார். தனது கையில் ஈரமாக இருந்த தனது கௌபீனத்தை அவர்களிடம் காண்பித்தார்.

பின்னர் அதைக் கையில் வைத்து ஒரு அமுக்கு அமுக்கினார். ஈரமாக இருந்த கௌபீனத்தில் இருந்து நீர் வெளியேறியது.

பின்னர் அந்த மல்யுத்த வீரர்களை நோக்கி ஸ்வாமிஜி கூறினார்:

உங்களில் எவரேனும் ஒருவர் இந்த  கௌபீனத்தை அழுத்திக் கசக்கி இன்னும் ஒரே ஒரு சொட்டு தண்ணீரை வெளியேற்றிக் காண்பியுங்கள் பார்ப்போம்.”

அவர்கள் இந்த சுலபமான சவாலை ஏற்றனர். ஒவ்வொருவராக வந்து தன் வலிமையைக் காண்பித்தனர். ஆனால் யாராலும் இன்னும் ஒரு சொட்டு நீரைக் கூட வெளியேற்ற முடியவில்லை. அப்படி ஒரு பிரம்மசர்ய வலிமையுடன் ஒரே ஒரு அழுத்தலில் அனைத்து நீரையும் அவர் வெளியேற்றிக் காண்பித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

இன்னொரு சம்பவம் இது :

ஜட் சமூகத்தினரிடம் ஒரு நாள் அவர் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் கட்டுமஸ்தான ஒருவர் பெரிய கழியுடன் ஸ்வாமிஜியை நெருங்கினார்.

“அட, துறவியே! விக்ரஹ வழிபாட்டை வேண்டாம் என்கிறாய். கங்கா மாதாவை வழிபட வேண்டாம் என்கிறாய், உடனே சொல், உன் உடலில் எந்த அங்கத்தில் அடி வாங்க விருப்பம், ஒரே அடியில் இனி ஒருபோதும் அப்படியெல்லாம் பேசாதபடி உன்னை நான் செய்து விடுகிறேன்” அவரது ஆவேசக் குரலைக் கேட்ட ஸ்வாமிஜி சற்றுக் கூட அசையவில்லை.

“கனவானே! உங்கள் கருத்துப்படி வேத பிரசாரம் தப்பானது, இல்லையா! அதற்குப் பொறுப்பான அங்கம் என் தலை தான்! ஆகவே எனக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் என் தலையில் தான் அடிக்க வேண்டும்” என்றார் ஸ்வாமிஜி.

இதைச் சொல்லி விட்டு வந்தவரின் கண்களை கூரிய பார்வையுடன் ஆழப் பார்த்தார்.

வந்த குஸ்தி பயில்வான் இப்போது ஒரு கணத்தில் மாறியவராகத் தோற்றமளித்தார். ஸ்வாமிஜி கண்களிலிலிருந்து வந்த ஒளி அவரது இதயத்தை ஊடுருவியது. அவரது மனத்தில் இருந்த அழுக்கெல்லாம் நீங்கியது.

அப்படியே நெடுஞ்சாண்கிடையாக ஸ்வாமிஜியின் பாதத்தில் விழுந்து வணங்கினார்.

அவர் அற்புதம் நிகழ்த்தி விட்டார் என்று பலர் சொன்னாலும் உண்மைக் காரணம் அவரது பிரம்மசர்ய சக்தியே!

இப்படி இன்னும் பல வியப்பூட்டும் சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் உண்டு!

**

tags- தயானந்த சரஸ்வதி! – 2

பகவத்கீதை சொற்கள் INDEX-21; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -21 (Post.10,341)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,341

Date uploaded in London – –   15 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஈ – வர்கம்

ஈக்ஷதே – 6-29  காண்கின்றான்

ஈட்யம்- – 11-44 பூஜித்தற்குரிய

ஈத்ருக்  11-49 இம்மாதிரி

ஈத்ருசம்  2-32 இது போன்ற

ஈசாம் 11-15 ஈசனை

ஈஸ்வர பாவ: 18-43 அடக்கியாளும் தன்மை

ஈஸ்வரம் 13-28 ஈஸ்வரனை

ஈஸ்வர: 4-6 ஈசனாக

ஈஹதே 7–22 விரும்பிச் செய்கிறான்

ஈஹந்தே  16-12 தேடுவார்கள்

xxx

உ – வர்க்கம்

உக்தம்  11-1 சொல்லப்பட்டது

உக்த: 1-24 சொல்லப்பட்டு

உக்தா: 2-18  கூறப்பட்டன

உக்த்வா  1-47 கூறிவிட்டு

உக்ரகர் மண: 16-9 கொடுந்தொழில் புரிவோர்

உக்ரரூபா: 11-31 பயங்கரமான உருவத்தை உடைய

உக்ரம் 11-20 உக்கிர வடிவை

உக்ரா: 11-30 கடுமையான

உக்ரை : 11-48 கடுமையான

உச்சைஸ்ரவச ம் 10-27 கடலில்  இருந்து எழுந்த  அமிர்தத்துடன்   தோன்றிய குதிரை

உச்சிஷ்டம் 17-10 எச்சில்; உண்டு மிகுந்தது

உச்சோஷணம்   2-8 உலர்த்திவாட்டும்

உச்யதே  2-25 கூறப்படுகிறது

உத 1-40 மேலும்

உத்க்ரா மதி 15-8 விட்டுக் கிளம்புகிறானோ

உத் கிராமந்தம் 15-10விட்டுச் செல்பவனாயினும்

உத்தமவிதாம் 14-14 உயர்ந்த ஞானிகளுக்குரிய

உத்தம: 15-17மேலானவன்

உத்தமம் 4- 3 உத்தமமான, மேலான

உத்தமா ங்கை:11-27 தலைகளுடன்

உத்தமௌஜா : 1-6  பாஞ்சால ராஜவம்ச வீரர்

உத்தராயணம் 8-24 6 மத கால.  பருவம்

உத்திஷ்ட 2-3 – எழுந்திரு

உத்திதா  11-12 உதிக்குமானால்

உத்சன்ன குல தர்மாணாம் 1-44 குல ஒழுக்கம் சிதைந்த மனிதர்க்கு

உத்ஸாதனார்தம்  17-19 அழிவைக் கருதியோ

உத்ஸா த் யந்தே 1-43அழிவடைகின்றன

உத்சீ தே யு: 3-24 அழிந்து போகும்

உத்ச் ருஜாமி 9-19 பெய்யவும் செய்கிறேன்

உத் ச்ருஜ்ய  16-23 விட்டு, நீக்கி

உதபானே  2-46 பருகுதற்குரிய   சிற்றூறலில்

உதாராஹா 7-18 சிறத்தவரே

உதாஸீனவத் 9-9 உதாசீனனைப் போல இருப்பவ ர்

TO BE CONTINUED……………………….

43 WORDS ARE ADDED FROM INDEX 21

TAGS- Gita word Index 21

FROG MYSTERY IN VEDAS- 2; HINDU GODDESS TURNS FROG GODDESS IN EGYPT(Post.10,340)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,340

Date uploaded in London – –   15 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I HAVE FOUND FIVE FROG MYSTERIES IN THE RIG VEDA, THE OLDEST BOOK IN THE WORLD, THE OLDEST ANTHOLOGY IN THE WORLD, FIRST REPORT OF HUMAN PROGRESS BY 400 POETS IN 1025+ HYMNS IN 10,552 MANTRAS AND THE ATHARVA VEDA WITH 6000 MANTRAS. I MAY FIND MORE BECAUSE I HAVE JUST FINISHED 4 BOOKS OUT OF 20 BOOKS IN THE ATHARVA DEDA. THERE ARE MORE MYSTERIS IN YAJUR VEDA.

xxx

So far I have explained three mysteries: –

1.Vaishtha’s beautiful poem in the seventh mandala/ book of RV is known to all scholars in the world (RV 7-103). Greek playwright Aristophanes copied it and adapted it in his comedy drama. (My article is in this blog). Thousands of years after Vaishtha appeared the Greek comedy. Later great Tamil poet Kamban also used it .(It is in my Tamil article)

xxx

2.Mystery 2: I have pointed out the frog in the cremation ceremonies of Hindus (RV.10-16). Since the 30+ translators of RV are not practising Hindus, actually anti Hindus, they could not explain several ceremonies in the Vedas; they just translated some literally and others according to their whims and fancies.

xxx

3.Mystery 3: A frog tied with red and blue thread and covered with Avakaa plant is placed in the canal behind gold, already placed in the ground. Then the water in the newly dug out canal is let. This is in the later Kausika Sutra book which explains all the rituals in the AV. (Ref.AV Book 3; Verse 13). But the Avakaa plant here is identified by Western translators with two different species in their translations. It shows they are confused.

xxxx

Now let us look at the New Mysteries:

4.Mystery Four

Interesting names of frogs are found in Atharva Veda (AV.Book 4; Hymn 15)

Mantra 15 (AV.4-15-15)

“Khanvakaa, ho! Khaimakha ho!

Thou in the middle, Taduree!

Fathers enjoy the rain from one who strives to win the Maruts Hearts”.

For this Mantra 15 the explanation given is Khanvakaa! Khaimakha! are onomatopoetic words! I don’t believe it. Whenever the Westerners don’t understand anything, they bluff. How do we know they are bluffing?

In another hymn six different species of SNAKES are given. They are not explained properly. Now we know Aligi and Viligi found in AV were Sumerian King Names ; Tiamath in Babylonia is also in our Vedas (Deva matha?). westerners never said it.

Read my article

Serpent Queen | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › serpent-queen

17 Jun 2012 — Atharva Veda also mentioned two snakes called Aligi and Viligi. Modern research by scholars showed that these were actually the names of two …

So I opine that Khaimukha, Khanvakaa, Taduree have some meanings and they not just funny sounds.

 We have to go back to different cultures where the Naga kings ruled.

In Mahabharata we come across frog in several stories. AAYU, king of frogs, had a  daughter by name Sushobana; she made King Parikshit go mad by her cheating. Parikshit started killing all frogs and then King Aayu brought her in front of Parikshit and requested not to massacre frogs out of anger. This shows clearly FROG was not frog but the people who used frog as totem symbol. So in Atharva Veda also we must look at snakes and frogs as totem symbols. They are the names of the clans or communities of people and not animals.

xxxx

Mystery Five

Now let us look at Mystery 5

Egyptian   Heqet /Hiqet/Hekek is Frog Goddess of Birth.

In ancient Egypt frog was the symbol of fertility. It has a strange phenomenon called metamorphosis. It changes into a tadpole from eggs and tadpoles develop into four legged frog which has the amazing ability to live in water and land. As toad it can live inside the rocks. All these are symbols of Hindus’ rebirth and reincarnation. This can explain why Hindus placed frog at the end of cremation ceremony. Chinese legend says frogs came from heaven with dew.

Egyptian plague of frogs found in Bible (Exodus 8:2-14) also not frogs, but may be frog people (see Aayu story of Mahabharata). Early Christians portrayed frogs as symbols of the devils or heretics. But later Coptic church of Egypt revived the ancient Egyptian belief and gave it a positive image. It appeared on oil lamps as symbol of Resurrection.

Hindu gods also go through the metamorphosis like frogs, when they are adopted by different cultures.

In Egypt we find Heqet as Goddess of child birth and midwifery. She came out of Ra’s mouth with Shu and they were the ancestors of the gods. In Hinduism Shakti and Aditi are ancestors  or Mother of Gods. In Eastern India it becomes Shasthi who is always associated with Skanda who is associated with Number 6 (shashthi) and raised by six Krittikas.

So I guess that Egyptian Frog Goddess is none other than Shasthi , Goddess of Child birth and midwifery in Hinduism.

We know S in Sanskrit becomes H in other languages (Eg. Sindhu=Hindu). Thus Sakti or Shasthi becomes Heqet in Egyptian. Same goddess took different form in Greece as Hekate (H=S) = Sakti

Following is from my old article in this blog:-

Hekate in Greece

Hekate is the corrupted form of Sakti in Sanskrit. The goddess of sorcery, who resided in the Underworld.  There she oversaw the ritual purifications as well as magical invocations. Witches, such as Medea, drew power from the goddess. Hekate would sometimes appear on earth at night time, especially at cross roads, accompanied by baying hounds.

(Hindus fear to cross junction of three roads, particularly at night time,  and they believe evil spirits occupy those places. Greeks also believed in it)

Artistic representations show her carrying torches. Where paths met, a triple figure of Hecate rose from masks placed at the junction. Offerings were left at road side shrines and at junctions. In some parts of Greece she was worshipped by occult bands and moon worshippers.

(Vedic Hindus believed in Path way god Pushan. In South Indian villages lot of road side shrines are there for village gods and goddesses.)

xxx

Even if we look at it as Jagati it makes sense.

Jagati is temple platform at the bottom; Jagati is one of the 26 metres in Vedic prosody . Brahmins recite it everyday in their Sansdhyavandana thrice a day.

Jagati is also earth, floor, ground. Jagat becomes Geo/ Gaiya/jaya in Greece.

In short metamorphosis of Sanskrit words and metamorphosis of Hindu Gods led to different names.

–subham–

tags- Frog Goddess, Sashthi, Heqet, Wgypt, Frog names

திருநின்றவூர்   ஆலயம்    (Post No.10,339) 

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,339

Date uploaded in London – –   15 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 14-11-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருநின்றவூர்

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென்றும் ஓதி

மாண்டு அவத்தம் போகாதே வம்மின், எந்தை என் வணங்கப்படுவானை கணங்களேத்தும்

நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை,

காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல்மல்லைத் தல சயனத்தே

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.  

   ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதும் பூசலார் நாயனாரின் பக்தியை விளக்கும் ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள தலமுமான திருநின்றவூர் திருத்தலம் ஆகும்.

திண்ணனூர் என்று இப்போது அறியப்படும் இத்தலம் சென்னையிலிருந்து வடமேற்கில் 32 கிலோமீட்டார் தூரத்தில் உள்ளது. இங்குள்ள பக்தவத்ஸல பெருமாள் கோவிலில் அருள் பாலிக்கும் மூலவர் திரு நாமம் :

 ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்

தாயார் : என்னைப் பெற்ற தாயார்

விமானம் : ஸ்ரீநிவாஸ (உத்பல விமானம்)  

தீர்த்தம் : வருண புஷ்கரணி விருத்த க்ஷீர நதி    

                                                                      இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு பிரசித்தி பெற்ற ஒன்று. ஒருமுறை சமுத்திர ராஜனாகிய வருண பகவானுக்கும் லக்ஷ்மி தேவிக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. சண்டையில் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற லக்ஷ்மி தேவி இந்த ஊரின் அழகைப் பார்த்து இங்கேயே நின்றாள். சமுத்திரராஜன் அவளைச் சமாதானப் படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. விஷ்ணு பகவானிடம் சென்று வேண்டவே அவர் பக்த வத்ஸலனாக லக்ஷ்மி தேவியிடம் வந்து சமுத்திர ராஜனுக்கு அருள் பாலிக்குமாறு கூறினார்.கடைசியாக ‘என்னைப் பெற்ற தாயே, அருள்வாயாக’ என்று சமுத்திரராஜன்  வேண்டவே, மனமிரங்கிய தாயார் அருள் பாலித்தாள். ஆகவே இங்குள்ள தாயாரின் பெயர் ‘என்னைப் பெற்ற தாயார்’ ஆனது. லக்க்ஷ்மி நின்ற ஊர் என்பதால் இத்திருத்தலம் திரு நின்ற ஊர் என்ற பெயரைப் பெற்றது. இந்தக் கோவிலில் உள்ள

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி மிகவும் விசேஷம் வாய்ந்தது. ஆண்டாள், ஆதிசேஷன், விஸ்வக்சேனர், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கும் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் உண்டு.

இந்த ஊருக்கு வந்த திருமங்கையாழ்வார் தாயாரைப் பற்றிப் பாடவில்லை. நம்மைப் பற்றிப் பாடவில்லையே என்று தாயார் பெருமாளிடம் குறைப்பட்டுக் கொண்டு, அவரைப் பாடல் பெற்று வருமாறு அனுப்பினார். அதற்குள் ஆழ்வார் திருவிடந்தைத் தலத்தைத் தாண்டி திருக் கடல்  மல்லையை அடைந்து விட்டார். பெருமாளுக்காக அவர் ஒரு பாடலைப் பாடினார். அதைக் கேட்ட தாயார் மற்ற தலங்களுக்குப் பல பாடல்கள் இருக்க, நமக்கோ ஒரு பாடல் மட்டும் தானோ என்று எண்ணி, ‘ஒரு பாடல் தான் பாடினாரா என்று கேட்டாள். அதற்குள் ஆழ்வார் திருக்கண்ணமங்கையை அடைந்து விட்டார். பெருமாள் திரும்பி வந்ததை ஓரக் கண்ணால் ஆழ்வார் கண்டு, அங்கிருந்தே இன்னொரு பாடலைப் பாடி பெருமாளையும் தாயாரையும் துதித்து மங்களாசாஸனம் செய்வித்தார்.

இந்தத் தலத்தில் அமைந்துள்ள பெரிய சிவாலயம் ஹ்ருதயாலீஸ்வரர் திருக்கோவில் ஆகும். இது பற்றிய அழகிய சரித்திர வரலாறு ஒன்று உண்டு.

பூசலார் நாயனார் பெரிய சிவபக்தர். இங்குள்ள சிவலிங்கம் மேற்கூரையின்றி வெயிலிலும் மழையிலும் இருப்பதைக் கண்ட அவர் மனம் நொந்தார். தன் உள்ளத்திலேயே இறைவனை நிறுவிக் கோவில் கட்டலானார் அவர். கும்பாபிஷேகத்திற்கு நாளையும் அவர் குறித்தார். அதே சமயம் தொண்டை நாட்டு மன்னனான ராஜசிம்ம பல்லவன் பெரிய சிவாலயம் ஒன்றைக் காஞ்சிபுரத்தில் கட்டிக் கும்பாபிஷேகத்திற்கென அதே நாளைக் குறித்தான். அவன் கனவில் தோன்றிய இறைவன் பூசலார் நடத்தும் கும்பாபிஷேகத்திற்குத் தான் செல்லப்போவதாகக் கூறினார். அதைக் கேட்டு வியந்த அரசன் அப்படிப்பட்ட கோவில் எது, எங்குள்ளது என்று அனைவரையும் விசாரிக்க அவன் பூசலார் நாயனார் பற்றி அறிந்தான். அவர் தனது உள்ளத்தில் கட்டிய அரும் கோவிலைப் பற்றி அறிந்து அவரது பக்தியைக் கண்டு பிரமித்து அவரை வணங்கினான். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அந்த இடத்தில் அரும் பெரும் கோவிலைக் கட்டினான். அதுவே ஹிருதயாலீஸ்வரர் கோவில் ஆகும். பூசலார் தனது இதயத்தில் கோவில் கட்டி அதன் மூலம் அனைவருக்கும் அருள் பாலிக்க இந்தக் கோவில் எழுந்ததால் அவர் பெயர் ஹிருதயாலீஸ்வரர் ஆனது.

இறைவன் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார்.

அம்மன்  மரகதவல்லி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார்.

இங்குள்ள விமானம் கஜபிருஷ்ட விமானம் என்ற அமைப்பில் தூங்கானை மாட வடிவில் அமைந்துள்ள ஒன்றாகும்.தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை தரிசிப்பதோடு, பிரதான வாயிலின் இருபுறங்களிலும் சூரிய சந்திரரைத் தரிசிக்கலாம். வெளி பிரகாரத்தில் விநாயகர் மேற்கு வாயிலப் பார்த்தபடி இருந்து அருள் பாலிக்கிறார். இங்கு சுப்ரமண்யர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். நவகிரக சந்நிதியின் அருகே பல்லவ மன்னனான ராஜசிம்ம பல்லவனின் சிலையையும் காணலாம்.

இதய நோய் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசித்துத் தங்கள் நோய் தீரப் பெறுகின்றனர்.

18 பாடல்களில் பூசலார் நாயனார் புராணத்தை பெரிய புராணத்தில் அழகுற விவரிக்கும் சேக்கிழார் பிரான் இந்த வரலாற்றை,

நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த

நன்று நீடாலயத்து நாளை நாம் புகுவோம், நீ இங்(கு)

ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொளவாய் என்று

கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்

என்று சொல்கிறார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பக்தவத்ஸலப்பெருமாளும் என்னைப் பெற்ற தாயாரும், ஹ்ருதயாலீஸ்வரரும், மரகதவல்லி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.    

திருமங்கையாழ்வாரின் அருள் வாக்கு இது:       

                                                                                                               ஏற்றினையிமயத்துளெம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை

ஆற்றலை அண்டத்தப்புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலழியொன்றேந்திய

கூற்றினை, குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை

காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே!

நன்றி, வணக்கம்!                                    ***

tags–   திருநின்றவூர்   ஆலயம், ,பூசலார் நாயனார் ,ஹ்ருதயாலீஸ்வரர், பக்தவத்ஸல பெருமாள் கோவில்

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! -1 (Post No.10,338)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,338

Date uploaded in London – –   15 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 14-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! -1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

ஹிந்து வேதங்களின் மாண்பை மிக உயரிய விதத்தில் விளக்கிய மகான் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி. ‘இந்தியா இந்தியருக்கே’ என்ற ஸ்வராஜ்ய கோஷத்தை 1876ஆம் ஆண்டு முதலில் இந்தியருக்குத் தந்து உத்வேகம் ஊட்டியவர் அவர். பெரிய சீர்திருத்தவாதி. பெண்களின் உரிமைகளை வற்புறுத்தியவர்.  1824ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ராஜ்கோட்டில், கத்தியவார் மாவட்டத்தில் டங்கரா என்ற கிராமத்தில், பிராமண குலத்தில், கர்ஸன் ஜி திவாரி என்ற அரசு ரெவின்யூ அதிகாரிக்கும் யசோதாபாயி என்ற அம்மையாருக்கும் அவர் மகனாகப் பிறந்தார். தந்தையார் அவருக்கு மூல சங்கர் என்ற பெயரைச் சூட்டினார். இளமையிலேயே வேதங்களின் பால் அளவற்ற ஈடுபாடு கொண்ட மூல சங்கர் யஜூர் வேதம் முழுவதையும் ஓதி தனது அபாரமான நினைவாற்றலைக் காட்டி, ஆசிரியர்களையும் சக நண்பர்களையும் வியக்க வைத்தார்.

அவரது பதிமூன்றாம் வயதில் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே மாற்றியது. சிவன் கோவிலுக்குத் தந்தையுடன் இரவு நேரத்தில் சென்ற மூல சங்கர் சிவலிங்கத்திற்குப் படைக்கப்பட்ட நிவேதனப் பொருள்களை எலி ஒன்று சாப்பிடுவதையும் அருகில் இன்னும் பல எலிகள் ஊர்வதையும் கண்டு மனம் நொந்தார். உருவ வழிபாட்டை அன்றிலிருந்து ஒதுக்கி வைத்த அவர் வேதங்கள் கூறும் இறைவனைப் பற்றி அறிய அடங்காத தாகம் கொண்டார். தவத்தை மேற்கொண்டார். பல மகான்களை அவர் சந்திக்க ஆரம்பித்தார். 22ஆம் வயதில் அவருக்கு மணம் முடிக்க நடந்த முயற்சியை அவர் ஒதுக்கி ஒவ்வொரு ஊராகச் செல்லலானார். வேத வித்தான ஸ்வாமி விர்ஜானந்தரிடம் அவர் சீடராகச் சேர்ந்தார். அவருக்கு சந்யாச ஆஸ்ரமம் தரப்பட்டு தயானந்த சரஸ்வதி என்ற பெயரும்  சூட்டப்பட்டது. வேதத்தில் வல்லவரான அவர் வேத பாஷ்யம், சத்யார்த்த ப்ரகாஷ், ரிக்வேத பாஷ்ய பூமிகா, ஸம்ஸ்கார் விதி உள்ளிட்ட அற்புதமான பல நூல்களைப் படைத்தார். வேத கோஷத்தை நாடெங்கும் முழங்கியவாறு ஊர் ஊராகச் சென்று வேத பிரசாரத்தை உரிய முறையில அவர் செய்யலானார். உறங்கிக் கிடந்த மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.

1875ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதியன்று அவர்  மும்பையில் உள்ள கிர்கானில் (Girgaon, Mumbai) ஆர்ய சமாஜத்தை நிறுவினார். ஆனால் ஜனநாயக வழியை பெரிதும் மதித்த அவர் ஆங்காங்கு உள்ளவர்களே ஆரிய சமாஜ நிர்வாகப் பொறுப்பை ஏற்க வலியுறுத்தினார். தான் நிறுவிய சமாஜத்தின் தலமைப் பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை. எந்த விதத்திலும் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவர் தன் சீடர்களுக்கு அறிவுறுத்தினார். இந்தக் கருத்தை வலியுறுத்தி இரு  முறை அதை தனது உயிலில் அவர் எழுதியுள்ளார். மீரட்டில் முதல் தடவையும் இரண்டாவதாக உதய்பூரில் 1883ஆம் ஆண்டிலும் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதை மதிக்காத சிலரால் ஆர்ய சமாஜ இயக்கம் பல சங்கடங்களுக்கு உள்ளானது. உத்தரபிரதேச்ம மொரொதாபாத்தில் முன்ஷி இந்த்ராமணி என்பவர் முஸ்லீம்களின் அட்டகாசத் தாக்குதலை எதிர்த்து பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார். அதனால் கோர்ட் படி ஏறி நிற்க வேண்டியதாயிற்று.

அவருக்கு ஆதரவாக தயானந்தர் நிற்கவே இந்த்ராமணிக்கு உதவிகள் கிடைக்கலாயின. அப்பீலில் அவர் ஜெயித்தார்.

அவரது பிரம்மசரியம் வியத்தற்குரிய ஒன்றாக இருந்தது.

பிரம்மசர்யத்தை அவர் வெகுவாக வலியுறுத்தினார். அதன் சக்தியைத் தன் வாழ்வில் அவர் பல முறைகள் நிரூபித்தார். அவர் வாழ்க்கை முழுவதும் பிரமிப்பை ஊட்டும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

அவர் பிரம்மசர்யத்தின் சக்தியை நிரூபித்த ஒரு சம்பவத்தை இங்குப் பார்ப்போம்.

குருதாஸ்பூருக்கு ஸ்வாமி தயானந்த சரஸ்வதி விஜயம் செய்தார். அங்கு சர்தார் விஜய் சிங் (Sardar Vijaya Singh) என்பவர் ஸ்வாமிஜியிடம் பிரம்மசர்யம் பற்றிய ஒரு சம்பாஷணையைத் தொடங்கினார்.

விஜய் சிங் : ஸ்வாமிஜி! நீங்கள் பிரம்மசர்யத்தைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசுகிறீர்கள். ஆனால் அதன் சக்தியை நாங்கள் கண்ணால் பார்த்தால் தான் நம்ப முடியும், இல்லையா!

ஸ்வாமிஜி : சர்தார்! இங்கே பாருங்கள்! சாஸ்திரங்கள் பிரம்மசர்யத்தை வெகுவாகப் புகழ்கின்றன. அவை சொல்பவை அனைத்தும் சரியே என்று நான் சொல்கிறேன்.

விஜய் சிங் : ஸ்வாமிஜி! நீங்கள் ஒரு பால பிரம்மச்சாரி. (குழந்தையிலிருந்தே பிரம்மசர்யத்தை அனுஷ்டித்து வருபவர்)

ஆனால் உங்களிடம் நான் எந்த ஒரு வீரியத்தையும் காணவில்லையே!

ஸ்வாமிஜி: சமயம் நேரும் போது அதை நீங்கள் பார்ப்பீர்கள்!

 சம்பாஷணை முடிந்த பின் சற்று நேரம் கழித்து சர்தார் விடை பெற்றுச் சென்றார். குதிரைகள் பூட்டிய தனது கோச் வண்டியில் (Coach) ஏறினார். கோச் வண்டியை ஓட்டியவர் தன் சவுக்கை எடுத்து குதிரைகள் கிளம்ப ஒரு வீசு வீசினார். சாதாரணமாக இந்த சமிக்ஞையினால் உடனே வெகு வேகமாக ஓடும் குதிரைகள், அப்போது நகரவில்லை. கோச் அசையவே இல்லை. தனது சவுக்கை இன்னும் பலமாக வீசினார் கோச்சை ஓட்டும் சாரதி. ஊஹூம், வண்டி நகரவே இல்லை. சர்தாருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ஏன் குதிரைகள் நகரவில்லை?!    

  அவர் திரும்பிப் பார்த்தார் என்ன நடக்கிறதென்று!

அடடா! அவர் பார்த்தது அவரை பிரமிக்க வைத்தது. பிரம்மச்சாரி தயானந்தர் கோச்சைப் பிடித்துக் கொண்டிருந்தார். எவ்வளவு சக்தியைக் குதிரைகள் பிரயோகித்தாலும் வண்டி நகரவில்லை!

ஸ்வாமிஜி விஜய் சிங்கைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.

“விஜய் சிங்! பிரம்மசர்யத்தின் சக்தி எப்படிப்பட்டது என்பதை இப்போது பார்க்கிறீர்களா? உணர்கிறீர்களா?

விஜய் சிங் மட்டுமல்ல; அனைவரும் இந்த சம்பவத்தால் பிரம்மசர்யத்தின் வீரியத்தையும் தயானந்தரின் சக்தியையும் உணர்ந்தனர்; அவரைப் போற்றினர்.

*

tags – தயானந்த சரஸ்வதி!

Please join us Today Monday 15-11-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

15 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER – 

Talk by London Swaminathan on Kamba Ramayanam -10 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

CONCERT- PART 3 – 30 minutes

W H M S SILVER JUBILEE CONCERT BY MR YOGESWARAN – THIRD PART

APPR. 60 MINUTES

Xxxx subham xxxx

TAGS — publicity15112021

மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள் (Post.10,337)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,337

Date uploaded in London – –   14 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் முழுதும் ஒரு ரீடிங் READING கொடுத்துவிட்டேன். இப்போது அதர்வ வேதத்தில் நாலாவது காண்டத்தைப் படித்து வருகிறேன். மொத்தம் 20 காண்டங்கள். இன்னும் யஜுர் வேத அற்புதங்கள் வேறு பாக்கி இருக்கின்றன. இவ்வளவையும் சொல்ல ஒரு வாழ் நாள் போதாது. போகட்டும்; சப்ஜெக் subject டுக்கு வருகிறேன் .

வேதத்தில் இது வரை நான்,  4 தவளை அற்புதங்களைக் கண்டு பிடித்து விட்டேன்.

முதல் அற்புதம் வசிஷ்டர் பாடிய உலகப் புகழ் பெற்ற தவளைப் பாட்டு. ( RV 7-103) அதை கிரேக்க நாட்டு எழுத்தாளர் அரிஸ்டோபனீஸ் காபி copy  அடித்து கிரேக்க அர்சியல்வாதிகளை நக்கல் செய்தார். கம்பனும் அதை இமிடேட் imitate  செய்தான் ; முன்னரே நான் அதைப்பற்றிக் கதைத்து விட்டேன் (கட்டுரையின் கடைசியில் இணைப்பைக் காண்க . அது ரிக் வேத 7-103 பாடல்)

மேலும் 3 அதிசயங்கள்

1.சுடுகாட்டில் நடக்கும் தகனக் கிரியையில் , சடலம் தகனம் செய்யப்பட இடத்தில், குளிர்ந்த பின்னர் ஒரு பெண் தவளையை வையுங்கள் என்று ரிக் வேதம் செப்புகிறது.

2.கால்வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விடுங்கள்;  சிவப்பு; நீல நிற நூல்களால் சுற்றி அலங்கரியுங்கள் ; அதன் மீது அவக என்னும் நீர்த் தாவரத்தை வைத்து கால்வாயில் விடுங்கள் என்று அதர்வண   வேத மந்திரம் உரைக்கின்றது .

3.இன்னொரு அதர்வண  வேத மந்திரம் தவளையின் மூன்று விநோதப் பெயர்களை சொல்கிறது ;  அதற்கு அர்த்தம் புரியாத அத்தனை வெள்ளைக்காரப்பயல்களும் அது ஒலி  நயம் கருதி உருவாக்கப்பட்ட அர்த்தமற்ற சொற்கள் என்று சொல்லிவிட்டார்கள் . இதை ஆங்கிலத்தில் ஒனமோடோபியா ONOMATOPETIC என்பர். நாம் அலிபாபா கதைகளில் அப்ரகடப்ரா , அண்டாகா காசும் அபுல்கா காசும் என்பது போல.. ஆனால் நான் அதை நமபவில்லை; நமக்கு இன்று அர்த்தம் விளங்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்

இதோ 3 அதிசயங்களின் மேல் விவரம்:

XXXX

சுடுகாட்டில் பெண் தவளை; ரிக் வேதம் 10-16-14

தகன துதியில் 14 ஆவது மந்திரம்

குளிர்ந்தவளே! ஈர நிலமே ! பசும் புற்கள் நிறைந்தவளே !

இன்பம் தருபவளே!  இன்பம் ஊட்டும் மரங்கள் நிறைந்தவளே! (பூமாதேவியே ).

பெண் தவளைகளோடு  சேரட்டும் ; இந்த அக்னியை மகிழ்வியுங்கள்

இது பற்றி ப்ளூமபீல்ட்BLOOMFIELD  என்ற மொழி பெயர்ப்பாளர் சொல்கிறார்:-

உடலைத் தீ எரித்த பின்னர் , அதன் மீது நீர் ஊற்றப்படுகிறது . பின்னர் அங்கே சில செடிகள் ஊன்றப்படுகின்றன .நெருப்பு அணைந்த இடத்தில் ஒரு பெண் தவளையோ ஆண் தவளையோ வைக்கப்படுகின்றது இவை நீரின் பிரதிநிதி. நீரானது தீயைத் தடுக்கவும் அணைக்கவும் பயன்படுகிறது.

ஆயினும் வெள்ளைக்காரன் (Bloomfield) விளக்கம் சரியாகத் தோன்றவில்லை .

இன்னும் சிலர் இது மீண்டும் பிறப்பதற்கான அறிகுறி; செழிப்பு என்பதன் சின்னம் தவளை என்பர்.

Xxx

கால்வாயில் தங்கமும் தவளையும்

அதர்வண வேதம் — மூன்றாவது காண்டம் ; துதி 13, மந்திரம் 7

ஜலங்களே ! இது உங்களது இருதயம்;  புனிதம் நிறைந்தவர்களே ! இது உங்களது கன்று; இங்கே பாயுங்கள்; பிரவாகித்து எழும் நீங்கள் இந்த வழியாக வாருங்கள்.

இதற்கு முந்தைய ஆறு மந்திரங்கள் சொற்பிறப்பியல் ETYMOLOGY பற்றியது; அதை தனியாக எழுதுகிறேன்; அதில் குறள் 11 மற்றும் தமிழ்ச் சொல் வாரி/ மாரி உள்ளது

இப்போது ஏழாவது மந்திரத்தின் விளக்கத்தைக் காண்போம். எப்படி மதுரை பாரத்வாஜ கோத்திர பார்ப்பனனான

“உச்சிமேற் புலவர் கொள்” நச்சினார்க்கினியனின்  உரை இல்லாமற் சங்க இலக்கியத்தை நாம் அறிய முடியாதோ, அது போல கெளசிக சூத்திரம் இல்லாமற் நாம் அதர்வண வேதத்தைப் புரிந்துகொள்ள முடியாது!

அந்த சூத்திரம் சொல்லும் விளக்கம்:-

இப்பாடல் கால்வாய் வெட்டும் சடங்கு பற்றியது ; முதல் பாடல் முடிந்தவுடன் சிறிது தங்கம் அங்கே வைக்கப்படுகிறது ; இரண்டாவது பாடலின் பொழு து தங்கத்துக்குப் பின்னால் ஒரு தவளை FROG வைக்கப்படும் . அதன் உடலின் மீது நீளமும் சிவப்பும் கலந்த வண்ண நூல்கள் கட்டப்படுகின்றன. மூன்றாவது பாடலின் போது அவகா AVAKAA என்னும் நீர்தாவரம் அதன் மீது வைக்கப்படவேண்டும் இதன் பொருள் புரியவில்லை. அநத சடங்கிற்குப் பின்னர் அங்கே பொன்னும், தவளைகளும், தாமரைப் பூவும் சிதறிக்கிடக்கும்.

உண்மைதான் ; இதன் பொருளை அறிய இயலாத அளவுக்கு இது பழமையானது. உதவாக்கரை வெள்ளைக்காரன்கூட அதர்வண வேததத்தை கி.மு 1000 என்பான். நாமோ நாலு வேதமும் உருவானது வியாசர் காலம் (கி.மு.3150) என்று நம்புகிறோம் தங்கத்தை வேதம் ஓதும் பிராமணன் எடுத்துக் கொள்வான் என்று எவனாவது கதை கட்டினாலும், எதற்கடா? தவளை மீது குறிப்பிட்ட கலர் நூல், எதற்கு குறிப்பிட்ட ‘அவகா’ தாவரம் என்று நாம் கேட்கலாம். அவகா தாவரத்தை மீன் வளர்ப்போர் இப்போதும் வாங்கி மீன் தொட்டிக்குள் வைக்கின்றனர். தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜன் இல்லாமல் வாழும் தாவரம் இது!

XXXX

நாலாவது அதிசயம்

கண்வகா , கைமுகா ததுரீ !!!

இவைகள் எல்லாம் தவளைகளின் பெயர்காளாம்.!!!

வெள்ளைக்காரப்பயல்களுக்கு விளக்கம் தெரியவில்லை.

இவை அர்த்தமற்ற ஒலி நயச் சொற்கள் என்று எழுதிவிட்டு தப்பித்துப் போய்விட்டான் . அவன் ‘முட்டாள்’ என்பது மற்ற மந்திரங்களைப் பார்க்கையில் நமக்குத் தெரிகிறது.

இப்படித்தான் பாம்புகளுக்கு ஆறு பெயர்கள் ஒரு மந்திரத்தில் வருகிறது. அவைகளில் அலிகி , விளிகி ALIGI, VILIGI என்ற பாம்புகளின் பெயர்கள் சுமேரியாவில் உளது. அதர்வண வேத பாம்புகள் எப்படிச் சுமேரியாவுக்குப் போயிற்று?

வெள்ளைக்காரனால் விளக்கம் சொல்ல முடியாது.

அது போல இந்த மூன்றுத் தவளைப் பெயர்களுக்கும்  மர்ம அர்த்தம் இருக்கலாம்! ஒரு சங்கரனோ நச்சினார்க்கினியனோ பிறக்கையில் இவைகளுக்கு விளக்கம் கிடைக்கலாம். அதுவரை நாமும்

ஹிக்கறி டிக்கரி டாக் தி மவுஸ் ரன் அப் தி க்ளாக்

என்று நாமும் நர்சரி பாட்டுப் பாடலாம்

எப்படி?

கண்வகா , கைமுகாததுரீ  FROGS ஃராக்ஸ்

கம்  டு  மை  ஹவுஸ் டு ஸீ எ பாக்ஸ் TO SEE A FOX   – என்று

KHANVAKHAA!! KAIMUKHAA!! TADUREE FROGS

COME TO MY HOUSE TO SEE A VERY GOOD FOX!

அடுத்த தவளைக் கட்டுரையில் எகிப்திய தவளை முக அரசி /கடவுள் )  இந்து மதத்தினரின் குழந்தைக் கடவுளே என்று காட்டுகிறேன்  TO BE CONTINUED………………………………………

XXX

ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் …

https://tamilandvedas.com › ரிக்…

15 Dec 2016 — ரிக் வேத தவளைப் பாட்டு. ரிக்வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் வசிஷ்டரும் அவரது …

Tags-   தவளைப் பாட்டு , தவளை, மர்மங்கள், கால்வாய், சுடுகாடு, வினோத பெயர்கள், வேதம்