Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
The pictures are shared between swamiindologly.blogspot.com and tamilandvedas.com. So far four parts were posted in both the blogs (2+2) in the past two days.
This is fifth part .
(1,3,5 parts are posted in tamilandvedas and 2,4,6 are posted in swamiindology.blogspot.com)
tags- part-5, old german book, rare pictures, Ajanta, Sigiriya
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LET ME CONTINUE MY COMMENTARY ON BHUMI SUKTA IN ATHATHARVANA VEDA (A.V.)
A.V.BOOK 12; HYMN 1 WITH 63 MANTRAS
We have already seen 20 out of 63 mantras or stanzas. See the attachments for original Sanskrit and English translation of the mantras.
MY COMMENTS
Mantra 21/ Stanza 21
Here the poet echoes the most famous Gayatri Mantra found in all the Four Vedas
“May Mother Earth sharpen me bright and make me aflame”
Compare it with the Gayatri Mantra.
“We meditate on that most adored Supreme Lord, Sun/the creator, whose effulgence (divine light) illumines all realms (physical, mental and spiritual). May this divine light illumine our intellect. (May He stimulate our intellect)”
Earth is described as ‘clad in her fiery mantle’. It is a beautiful scientific description. Earth is alive and kicking . The space shuttle pictures and Hubble telescope pictures show it with all the illuminated areas. When the Vedic poets sang, there was no electric light. But the millions or billions of Yaga Fire illuminated the Earth. That is what made the poet to say ‘Agnivasa/Fiery Mantle.
xxx
Mantra 22/ Stanza 22
Here the poet describes the decorations and fire altars and the happy men and women wandering. In another hymn a Vedic poet says ‘let us decorate like a mother decorating/beautifying her child’. All men and women do this to their children. Vedic poets describe also the bedecked, bejewelled brides. So we may get a good picture of decorated fire altar or the entire earth.
I am reminded of two anecdotes-
Sakuntala, the forest beauty, the heroine of world famous Sakunatala Drama of Kalidas decoratesthe forest. Y/Jugal Prasad, the hero in Aranyak Novel of Bengali writer Vibhuti Bhushan Vandopadhyaya decorates the forest by planting newer species in newer areas in different parts of the forest. He waits for a whole year and feels very happy when they bloom in those areas. He decorated the forest without expecting anything.
Aranyak, Bibhutibhushan Bandyopadhyay
The Vedic poet prays also for healthy and long life. The word Jara for old age gives the word Gerontology in European languages.
Xxx
Mantra 23/ Stanza 23
Those who live in villages are very familiar with the fragrance from the earth. For city dwellers it is a rare commodity; in fact, they did not know what it is. He talks about the fragrance in rivers, the plants. Here the word ‘Gandha’ for good smell and fragrance is very important. We find the heavenly singers Gandharvas and heavenly dancers Apsarasses through out Rig Veda (RV) the oldest book in the world. Gandharvas mean sweet smelling. Apsaras are their wives. According to one AV hymn, there are 6333 Gandharvas. We don’t know the significance of this number. Wherever the Number meaning is not known, Western translators reject or ridicule them as ‘fanciful’, ‘meaningless’ numbers!!!
“May no one hate me is added in many stanzas.”
When the poet says it, there is a hidden message. One should not hate another in this beautiful world- The Big Blue Marble. That is why after describing the beauty of earth, he adds it again and again.
Xxxx
Mantra 24/ Stanza 24
Traditional Hindu marriage is celebrated for 4 days. Now a days it is shortened to half a day because of the expenses and travels involved in it. No one celebrates marriage like a Hindu. The decorations and the jewellery involved in it beats all imaginations. The most popular Wedding Mantras in the RV 10-85 and AV 14 give full details where the bride is described ‘You are the Queen’. It elevates women to the highest place. The mantra projects Surya’s bride as an ideal bride. That Surya bride comes in many other Vedic hymns. The poet prays that he should also have the same fragrance as that girl. One who has seen a Tamil Brahmin Family Wedding would know the fragrance of flowers, sandal, Kumnkum, Turmeric and Kasturi. In addition to it, they make fragrance powder with various ingredients. They use it in the bath. (Known as Srivilliputur Andal Snana Powder).
Here the fragrance entering Lotus is also mentioned by the poet. Lotus is the National flower of India. In Tamil the word for Flower and Lotus is same- MALAR. So we may take it as the representative of all flowers. Like peacock, the lotus flower is praised as Satapatra (100 petalled) in Sangam Tamil literature and Sanskrit literature.
Sangam Tamil poems Aka Nanuru 86 and 136 also describe the beautiful Hindu Weddings.
In short, the poet looks at all that is ‘positive on earth’ and then gives the message ‘please don’t hate anyone’ in such a beautiful place called Mother Earth. Throughout the 63 stanzas feminine pronoun SHE is used for Mother Earth.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 10
அதர்வண வேத பாடல் / மந்திரம் 25,26,27 ஆகிய மூன்றையும் படித்தால் மனிதன், மிருகங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்தையும் புலவர் குறிப்பிடுவதைக் காணலாம். இவை அனைத்திலும் உள்ள வாசனை அனைத்தும் , அதாவது நல்ல குணங்கள் அனைத்தும் என்னுள்ளே இணைய பூமா தேவி அருள் புரியட்டும் என்பது பிரார்த்தனை . “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (உறவினர்) என்ற புறநானூற்று வரிக்கும் ஒரு படி மேலே சென்றார் பாரதி.
காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம் ;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம் — பாரதி.
இவை எல்லாம் வேதத்தில் இருக்கிறது என்பதை அதற்கு முந்திய இரண்டு வரிகளில் பாரதியார் சொல்லிவிடுகிறார்.
வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் –
என்று பாடுகின்றார்
மந்திரம் 24ல் இறவாத தன்மையுடைய ‘அமர்த்யாஹா /தேவர்கள்’ என்ற சொல் வந்துவிட்டது. என்னையும் அப்படி ஆக்குக என்று வேதப்புலவன் வேண்டியதையும் கண்டோம். ஆக மொத்தத்தில் இந்த பூமாதேவியின் மேல் வசிக்கும் ஒரே இனம்! பூமி என்பது சுவாசிக்கும் ஒரு உயிர் (Earth is living; earth is breathing) என்ற கருத்து வேத காலத்திலேயே வந்துவிட்டது. இப்பொழுது ஆண்டு தோறும் ஒருநாளை ஒதுக்கி அன்னை பூமியைக் காப்பாற்றுக (Save Mother Earth Day) என்று கொண்டாடுகிறார்கள். அதை வேத காலத்திலேயே சொல்லிவிட்டார்கள் இந்துக்கள். பூமியை அன்னை என்று 63 பாடல்களில் / மந்திரங்களில் போற்றும் புலவன்/ முனிவன் ஒரு பாடலில் பூமாதேவி ‘கல் , மண் , தூசியால் ஆனவள்’ என்றும் பாடுகிறான் (காண்க மந்திரம் 26)
இதை யெல்லாம் சொல்லிவிட்டு, தாயே உன்னை வணங்குகிறேன் என்கிறார் முனிவர்/புலவர்.
அதர்வண வேத மந்திரம் 25-ஐ உற்று நோக்கினால் இது மேலும் விளங்கும் ; அதில் ஆண்கள், பெண்கள், மகன்கள் , குதிரைகள், காட்டு மிருகங்கள் , யானைகள் , தள , தள , பள பள கன்னிப் பெண்கள் — எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லும் புலவன் — இவர்களிடையே உள்ள ஒளி, வனப்பு பள பளப்பு , ஆகிய அனைத்தும் என்னுள் புகட்டும் என்று வேண்டுகிறார். காட்டு மிருகமானாலும் 16 வயது இளம் மங்கையானாலும் — அவர்கள் எல்லாவற்றிலும் ஒரு சிறப்பு உண்டு என்ற கருத்து வேத கால மக்கள் மனதில் பதிந்திருந்தது.
மந்திரம் 27-ல் தாவரங்கள் அனைத்தும் வந்து விடுகின்றன.
மந்திரம் 28 இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நிற்கும்போது, நடக்கும்போது, உட்காரும்போது, தாண்டும்போது இடது, வலது கால்கள் தடுமாறக் கூடாது என்று வேண்டுவது விநோதமாகத் தோன்றும்.
ஆனால் பிராதஸ்மரணம் என்னும் காலை வழிபாடு செய்வோருக்கு இது வியப்பாக இருக்காது. படுக்கையில் இருந்து எழுந்திருந்து பூமியில் காலை வைத்து மிதிப்பதே தவறு என்று எண்ணி, இந்துக்கள் மன்னிப்பு கோருகிறார்கள்; அவ்வளவு மதிப்பு. அதாவது இந்துக்கள் உதட்டளவில் பூமியை வெறுமனே புகழவில்லை. அடி மனத்தின் ஆழத்திலிருந்து பூமாதேவியை உயிருள்ள அன்னையாகவே மதித்தனர் ; ஆகையால் தாயே கோபித்துக் கொள்ளாதே! என் நடையும் செயல்பாடும் நன்றாகவே இருக்கட்டும் என்கிறார்.
இப்படி நமக்கு நாமே சொல்லிக்கொள்வது நமக்கு நம்பிக்கையையும் பலத்தையும் அதிகரிக்கும் ; இதை ஆட்டோ சஜ்ஜஷன் Auto Suggestionஎன்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நம் வீட்டில் சின்னக் குழந்தைகள் “எனக்கு கணக்கு வராது , படிப்பு வராது, பாட்டு வராது” என்று சொன்னால், நாம் தைரியம் ஊட்டும் சொற்களை சொல்லுகிறோம். உடனே அவர்கள், செய்ய முடியாததை செய்கிறார்கள்; இதே போல நமக்கு நாமே நம்பிக்கை ஊட்டிக்கொள்ளும் வாசகங்கள் வேதத்தில் மிக மிக அதிகம்.
சில வரிகளை புலவர் மீண்டும் மீண்டும் சொல்வதும் இதனால்தான்; என்னை யாரும் வெறுக்கக் கூடாது என்று அவர் திரும்பத் திரும்ப சொல்லுவதில் மறறொரு செய்தியும் உளது. அதாவது நீயும் யாரையும் வெறுக்காதே; பாரதியார் வரியில் ‘உலகு இன்பக் கேணி ‘.அதையும் வேதம் சொல்வதாகவே பாரதியார் பாடுகிறார் !
இதோ சான்று
சமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே
“ஆழி சூழ் உலக நாயகியே! மலைகளை முலைகளாக உடைய என் தாயே !
விஷ்ணுவின் மனைவியே ; உனக்கு என் பணிவான வணக்கங்கள் உரித்தாகுக :
என்னுடைய கால்களை உன்மீது வைக்கிறேன் ; அதைப் பொறுத்து அருள்வாயாகுக”
என்ற மந்திரத்தைச் சொல்லி விட்டு ஒவ்வொரு இந்துவும் எழுந்திருக்கிறான். அதற்கு முன்னர் கண்களை விழித்தவுடன் வலது கையைப் பார்த்து
கராக்ரே வசதி லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி
கரமூலே து கோவிந்தஹ ப்ரபாதே கரதர்சனம்—
என்று சொல்லி கரத்தில் உள்ள எல்லா கடவுளரையும் வணங்குகிறான் . பூமியின் மீதும் தன உடலின் மீதும் மனிதக்குள்ள மதிப்பை, மரியாதையை அதர்வண வேத பூமி சூக்தத்திலும் “காலை நினைவுகள் / ப்ராத ஸ்மரணம்” என்ற துதியிலும் காண்கிறோம். (இந்த மந்திரம் சிறிது மாறுதலுடனும் சொல்லப்படும்; ஆனாலும் கடவுளர் பெயர்களில் மாற்றம் இல்லை )
கோடிக் கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இன்றும் இந்த காலை வழிபாட்டை, அவர்களுடைய ஷாகாக்களில் சொல்வது சிறப்புடைத்து.
Xxxxx
இதோ அதர்வண வேத பூமி சூக்த (AV; Book 12; Hymn 1) மந்திரங்களும் அவற்றின் பொருளும்:–
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,556 Date uploaded in London – – 13 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் ஜனவரி 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! -1 ச.நாகராஜன்
இந்த வேக யுகத்தில் மூளை ஆற்றலை மிக அதிகமாகப் பயன்படுத்தி உடனுக்குடன் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. நவீன் சாதனங்கள் ஒரு புறம், அன்றாடம் வளர்ந்து வரும் பல அறிவியல் கலைகள் என்று மறு புறம், குழந்தைகளானாலும் சரி, முதியோர்களானாலும் சரி மூளை ஆற்றலைப் பயன்படுத்தாமல் வாழவே முடியாத சூழ்நிலை.
ஆனால் பயப்படத் தேவை இல்லை. மூளை ஆற்றலைப் பயன்படுத்த நூறு வழிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை உங்களுக்கு உகந்த நேரத்தில் பயன்படுத்தி மூளை ஆற்றலை முழுதுமாகப் பெற்று உலகில் வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம்.
இதோ நூறு வழிகள் :-
உலகில் உள்ள தலையாய ஆய்வு நிறுவனங்கள் இந்திய யோகாவின் பயனைக் கண்டு பிரமிக்கின்றன. ஹார்வர்டு, யேல், மசாசூசெட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் தியானத்தினால் மூளையின் அளவு பெரிதாகிறது என்று கண்டு பிடித்துள்ளன. கவனத்தையும் புலன்களின் உணர்வைச் செயல்படுத்தும் மூளைப் பகுதிகளின் கனம் தியானம் செய்வோர்களிடம் கூடுகிறது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உங்களின் மன அழுத்தத்தைப் போக்கி உங்களை நிதானமாக எப்போதும் வைக்க வல்லதும் தியானமே. ஆகவே தியானத்தை மேற்கொள்ளுங்கள்! ஒரு சுலபமான வழி படிப்பது. ஆனால் யாரும் இதை அவ்வளவாகச் செயல்படுத்துவதில்லை. நீங்கள் படிக்கும் போது மூளையானது தகவலை ஆய்ந்து நடைமுறைப்படுத்தி ஒரு புதிய நியூரான் வழியை உண்டாக்குகிறது. தகவலைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. இதனால் அறிவு கூடுகிறது. புதிய தகவல்களைப் பெற முனைப்புடன் ஈடுபடுங்கள்; அறிவை அதிகமதிகம் பெறுங்கள். இதற்கு சுலபமான எளிய வழி படிப்பது தான்! ஆகவே படியுங்கள்!!
கேள்வி கேளுங்கள் : எந்த மேதையை எடுத்துக் கொண்டாலும் அவர் கேள்வி கேட்டுக் கேட்டு அறிவைக் கூர்மைப் படுத்திக் கொண்டதைக் காணலாம். தனக்குப் புரியாத எதையும் நன்கு அறிந்து கொள்ள அவர்கள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. நீங்கள் கேள்வி கேட்கும் போது ஒரு பிரச்சினைக்கான விடையைக் காணத் துடிக்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். சிந்திப்பது என்பது மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான சிறந்த பயிற்சி! ஆகவே கேள்விகளைக் கேளுங்கள். இசையை அனுபவியுங்கள் : இசைப் பிரியராக இல்லாத ஒருவரை உலகில் காண்பது மிகவும் அரிது. இசையைக் கேட்கும் போது மூளை ஆற்றல் கூடுவதையும் வாக்கு வன்மை கூடி சரளமாகப் பேச முடிவதையும் ஆய்வுகள் கண்டுள்ளன. குறிப்பாக கரோனரி ஆர்டிரி வியாதி (Coronary artery disease) உள்ளவர்கள் தங்களுக்குப் பிடித்த கர்நாடக, ஹிந்துஸ்தானி, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படப் பாடல்களைக் கேட்டு அமைதி பெறலாம். வாக்கு வன்மை இரட்டிப்பாகக் கூடுவதை ஆய்வுகள் நிரூபிக்கும் போது வியப்பு தான் அடைய வேண்டியிருக்கிறது. இசை கேளுங்கள்!
கற்றுக் கொண்டே இருங்கள் : ஒரு விஷயத்தைக் கற்கும் போது நியூரான்கள் மற்றும் அவற்றின் இடையே உள்ள இணைப்புகள் ஆகியவற்றின் அளவும் அமைப்பும் மாறுகின்றன. படிப்பதால் மட்டும் கற்க முடியும் என்பதில்லை. புதிய இடங்களுக்குப் போவது, ஒரு புதிய மொழியை அறிவது, ஒரு புதிய இசையைக் கற்று நாமே பாடுவது, ஒரு இசைக் கருவியைக் கற்பது, ஏன் இணைய தளத்தில் ஒரு புதிய தகவலைத் தேடுவது இவை எல்லாமே கற்பதற்கான வழிகள் தாம்!
நண்பர்களைப் பெறுங்கள். மனிதர்கள் கூட்டு சமூகத்தால் வாழ்பவர்கள். தனியாக ஒருவரால் வாழவே முடியாது. உறவுகள் மூளையை மேம்படுத்தும். மற்றவர்களுடன் ஊடாடி மகிழ்வது, உண்மையிலேயே மூளைக்கான சிறந்த பயிற்சி. நண்பனில்லா மனிதன் பாழ்! மன அழுத்தத்தைக் குறையுங்கள். அது தான் மனிதனின் முதல் எதிரி. தொடர்ந்து மன அழுத்தம் இருந்தால் அது மூளை செல்களைப் பாதிக்கிறது. நினைவாற்றல் திறன் குறைகிறது. ஆகவே வாழ்க்கையை லகுவாக எடுத்துக் கொள்ளுங்கள். சிரித்து மகிழுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து என்ற அனுபவ மொழி அற்புதமான உண்மை. அது மூளைக்கும் நினைவாற்றலுக்கும், உடலுக்கும் அற்புதமாகப் பொருந்தும். ஜோக்குகளும், பஞ்ச் டயலாக் வரிகளும் மூளையைக் கற்கச் செய்கிறது; படைப்பாற்றல் திறனைக் கூட்டுவிக்கிறது.
எதையும் நேர்த்தியாக வைத்திருங்கள் : இந்தியரிடம் இருக்கும் மகத்தான குறை எதையும் நேர்த்தியாக நிர்வகிக்காமல் கன்னா பின்னாவென்று அலங்கோலமாக வைத்திருப்பது தான். எதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். இது மூளைச் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலைக் கூட்டுகிறது. விஷயங்களை எளிதாக்குகிறது. படபடப்பைத் தவிர்க்கிறது. டெஸ்கிலிருந்து மட்டும் குப்பைகளை அகற்ற வேண்டாம். மூளையிலிருந்தும் அனாவசிய விஷயங்களைத் தேக்காமல் அகற்றி விடுங்கள்.
பகல் கனவு காணுங்கள் : பகல் கனவை அனுபவித்துக் காண்பது மூளைக்கான சிறந்த பயன் தரும் ஒன்று. மனம் அங்கும் இங்கும் அலை பாயும் போது பிரச்சினைக்கான தீர்வைக் காணும். இது ஆய்வின் முடிவு. பல மேதைகளின் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இது அமைந்துள்ளது.
கையினால் எழுதுங்கள் : நாம் மறந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கம் கையினால் எழுதுவது. வார்த்தைகளை எழுதிப் பார்ப்பதால் மூளை ஆற்றல் கூடுகிறது; கற்றல் மேம்படுகிறது. நினைவாற்றல் கூடுகிறது.
மூளை விளையாட்டுக்கள் எனப்படும் ப்ரெய்ன் கேம்ஸ் – Brain Games – பலவற்றை விளையாடுங்கள். மூளையில் உள்ள வெவ்வேறு பகுதிகள் புதிர்களை விடுவிக்கும் போதும், விடுகதைகளை விடுவிக்கும் போதும் புதிய தொடர்புகளைப் பெறுகின்றன; மூளைத் திறனைக் கூர்மையாக்குகின்றன.
தொலைக்காட்சியைப் பாருங்கள். தொலைக்காட்சியை அளவோடு அதாவது ஒரு நாளைக்கு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் பார்ப்பது மூளை ஆற்றலை வளர்க்கிறது. நேரடிப் பேட்டியில் பங்கு கொள்வோரில் பலர் இப்படி தொலைக்காட்சியை அளவோடு பார்ப்பதால் மிகத் திறமையுடன் பதில் அளிக்கின்றனர் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரே வழியில் தினமும் போகாமல் சற்று வழியை மாற்றிப் பழகுங்கள். இப்படிப் புதிய செயலைச் செய்வதால் டோபமைன் வெளியாகிறது. அது புதிய நியூரான்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. உங்களை ஊக்குவிக்கிறது. உங்கள் நகரைப் பற்றி நன்கு அறிந்து அதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஆய்வு ஒன்றில் நகரத்தில் டாக்ஸி ஓட்டும் டிரைவர்கள் இடம் பற்றி அறியும் மூளைப் பகுதிகளில் வல்லுநர்களாக இருப்பது தெரிய வருகிறது.
ஒரு புதிய இசைக் கருவியைக் கற்றுக் கொள்ளுங்கள். மோட்டார் கண்ட்ரோல், கேட்டல், பார்க்கும் பகுதிகள் எனப்படும் மூளைப் பகுதிகள் இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களிடம் மற்றவர்களை விட அதிகத் திறனுடன் இயங்குவதை ஆய்வு கூறுகிறது. உரக்கப் படியுங்கள். எதையேனும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உரக்கப் படித்துப் பழகுங்கள். உரக்கப்படித்தால் நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிறது.
ஒரு புதிய மொழியைக் கற்க ஆரம்பியுங்கள். மூன்று மொழிகளுக்கு மேல் தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களை விட அதிக ஐ க்யூ கொண்டிருக்கின்றனர். அல்ஜெமீர் வியாதி உள்ளவர்கள் ஒரே ஒரு மொழி மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பேடுகளில் குறிப்பெடுங்கள் : உங்கள் கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொள்வது நினைவுக்கு ஆதாரமாகவும் இலக்கியத்தை கற்கும் உங்கள் மூளையில் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆக்ஸிஜனோடு கூடிய இரத்தைத்தை கொண்டு செல்லவும் உதவுகிறது. ஆகவே தான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் மாணவர்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும் படி தூண்டுகின்றனர்.
மற்றவர்களுக்குக் கற்பியுங்கள். மற்றவர்களுக்கு எதையேனும் கற்பிக்கும் போது நீங்கள் தகவலை நினைவுக்குக் கொண்டு வர வேண்டியதாக இருக்கிறது. அதைப் புதிய முறையில் திருப்பி அமைத்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இதனால் நினைவாற்றல் திறன் கூடுகிறது.
ஓவியம் வரையுங்கள். ஏதேனும் ஒரு சித்திரம், படம், ஓவியம் ஒன்றை வரைந்து பாருங்கள். படம் வரைவது வலது பக்க மூளைப் பகுதியின் செயலை அதிகரித்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துகிறது. கலர் பென்சில்கள் உங்கள் மூளையைச் சக்தி உள்ளதாக ஆக்கும் சிறிய கருவிகள்!
ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள். வெட்டி அரட்டை, வீண் பேச்சு இவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு விவாதத்தில் கலந்து கொள்ளும் போது மூளை வெகு வேகமாகச் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. கருத்துக்களை உரிய வார்த்தைகளில் சொல்ல அவசியம் ஏற்படுகிறது. ஆகவே சிறந்த விஷயங்களைக் குறித்து நிபுணர்களுடன் விவாதிப்பது மூளை ஆற்றலைக் கூட்டுவிக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆகையால் தான் அறிஞர்களிடம் பழகு, நல்லோரை அணுகு என நமது அறநூல்கள் வலியுறுத்துகின்றன.
உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். ஒரே இடத்தில் இருக்காமல் புதிய இடங்களில் செயல்படுவது மூளையை ஊக்கப்படுத்தி மாற்ற வழி வகுக்கிறது. அடுத்த முறை வேறு ரெஸ்டாரண்ட், ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுப்பது போன்றவை இதற்கான வழிகள். குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பாஸிடிவ் சிந்தனைக்காக மூளையில் உள்ள பகுதிகளைச் செயலாற்ற வைப்பது உங்களால் நிர்ணயிக்கப்பட்ட உங்களின் குறிக்கோளே. வெற்றியைப் பெறச் சிறந்த வழி முதலில் குறிக்கோளை நிர்ணயிப்பது தான்! வாழ்க்கையை வளமாக்க வழி குறிக்கோள் ஒன்றைக் கொள்வது தான்! *** மற்ற வழிகள் தொடரும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IN MARCH 2020 , I POSTED RARE PTCTURES FROM 100 YEAR OLD GERMN BOOK. NOW I HAVE GOT ANOTHER OLD GERMAN BOOK FROM LONDON UNIVERSITY. SINCE THERE ARE OVER 100 PICTURES, I PUBLISH HALF IN TAMILANDVEDAS.COM AND HALF IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM WITH THE SAME POST NUMBER DIVIDING THEM INTO A AND B.
HERE IS PART 3 (PART ONE AND TWO WERE POSTED YESTERDAY)
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,553 Date uploaded in London – – 12 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த தினம் : ஜனவரி 12. நினைவைப் போற்றித் துதிக்கும் அஞ்சலிக் கட்டுரை (அவதார தினம் : 12-1-1863 சமாதி 4-7-1902)
ஸ்வாமி விவேகானந்தர் : அளக்க முடியா, அறிய முடியா, மாபெரும் மஹான்! ச.நாகராஜன்
அறிய முடியா மாபெரும் மஹான்
வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தைக் காக்க வந்த மாபெரும் மஹான் ஸ்வாமி விவேகானந்தர். அவரை யாராலும் அளக்க முடியாது; அவரை யாராலும் முழுவதுமாக அறிய முடியாது. தான் வந்த நோக்கத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டுத் தன் இருப்பிடத்திற்கு மீண்டார் அவர். அவரைப் பற்றிய ஏராளமான அனுபவங்களை அவருடன் பாரதத்திலும் மேலை நாடுகளிலும் பழகியவர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர். ஜோஸபைன் மக்லியாட் ஸ்வாமிஜியின் அணுக்க பக்தை. அவர் தனது நினைவலைகளில் குறிப்பிடும் சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.
ஏன் ஸ்வாமிஜி நீங்கள் தனிப்பட்ட கடவுளைப் புகழ்கிறீர்கள்? ஆல்பெர்டா ஸ்டர்ஜெஸ் (Alberta Sturges) என்பவர் ஜோஸபைனுக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி (Niece). பின்னால் இவர் லேடி சேண்ட்விச் என்ற பெயரால் அறியப்பட்டார். (Lady Sandwich) அவர் ஸ்வாமிஜியின் அளப்பரிய அறிவைக் கண்டு பிரமித்துப் போனார்.
எதை எடுத்தாலும் அவரை விஞ்ச முடியாது; அப்படி ஒரு பிரம்மாண்டமான பல்துறை அறிவு.
ரோமுக்கு அவருடன் சென்ற ஆல்பெர்டா அங்குள்ள பல்வேறு இடங்களை ஸ்வாமிஜிக்கு விவரித்தார். ஆனால் அவரே அந்த இடங்களைப் பற்றிய ஸ்வாமிஜியின் பேரறிவைக் கண்டு வியந்து போனார். செயிண்ட் பீட்டருக்கு ஸ்வாமிஜியை அழைத்துச் சென்ற அவர் அங்குள்ள ரோமன் தேவாலயத்தில் உள்ள அடையாளச் சின்னங்களையும் நகைகளையும் மகான்களின் மீதிருந்த அற்புதமான அணிகலன்களையும் காண்பித்து விவரித்தார். அவர் ஸ்வாமிஜியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் :”ஸ்வாமிஜி! தனிப்பட்ட கடவுளை நம்பாதவர் நீங்கள். அப்படி இருக்க, இங்கு இப்படி மிகவும் போற்றுகின்றீர்களே”
ஸ்வாமிஜியின் போற்றுதலால் வியந்து இந்தக் கேள்வியைக் கேட்ட ஆல்பெர்டாவை நோக்கி ஸ்வாமிஜி, “ஆனால் ஆல்பெர்டா, நீ இதை நன்கு போற்றித் துதிக்கிறாயே! இதற்கு உரிய மரியாதையைத் தந்து தானே ஆக வேண்டும்”. ஆல்பெர்டா நெகிழ்ந்து போனார்.
பணமா, நானா, வாங்கவே மாட்டேன்!
இலையுதிர்காலம் வந்தது. ஸ்விட்ஸர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு ஸ்வாமிஜி மிஸ்டர் சேவியர் (Mr and Mrs Sevier) தம்பதிகளுடனும் மிஸ்டர் ஜே.ஜே. குட்வினுடனும் (J.J.Goodwin) வந்தார். பிரம்மாண்டமான வரவேற்பு இந்தியாவில் ஸ்வாமிஜிக்காகக் காத்திருந்தது. குட்வின் தான் ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்த சுருக்கெழுத்தாளர். அவர் மிகுந்த திறமைசாலி. கோர்ட்டில் ஸ்டெனோகிராபராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவரை 54, வெஸ்ட் 33வது தெருவில் நடந்த ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு அழைத்து அனைத்தையும் பதிவு பெறச் செய்தனர். அவை தான் நமக்கு Lectures from Colombo to Almora போன்ற நூல்களில் கிடைத்துள்ளன. ஒரு நிமிடத்திற்கு 200 வார்த்தைகளைச் சுருக்கெழுத்தாக எடுக்கும் அசகாய சூரர் அவர்.
அவரை இந்த பணிக்கு அழைப்பது என்பது நிறைய செலவாகும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் ஸ்வாமிஜியின் ஒரு வார்த்தையைக் கூட யாரும் இழக்க விரும்பவில்லை. ஆகவே அவர் அழைக்கப்பட்டார். ஒரு வாரம் சுருக்கெழுத்துப் பணியில் ஈடுபட்ட குட்வின் பின்னர் பணம் வாங்க மறுத்து விட்டார்.
“என்ன ஆயிற்று, உங்களுக்கு?” என்று அவரைக் கேட்ட போது, குட்வின் கூறினார்; ”விவேகானந்தர் தன் வாழ்க்கையையே கொடுக்கும் போது நான் எனது சேவையையாவது கொடுக்கக் கூடாதா?” என்று கேட்டார். ஸ்வாமிஜியுடன் உலகம் முழுவதும அவர் கூடவே சென்றார்.
ஸ்வாமிஜியின் வாயிலிருந்து உதிர்ந்த பொக்கிஷமான வார்த்தைகள் ஏழு தொகுதிகளாக வெளி வந்ததற்குக் காரணம் குட்வின் தான்!
இதென்ன நெற்றியில் செங்குத்துக் கோடு?! (நாமம்)
ஜோஸபைன் இந்தியா வந்தார். பம்பாயில் அவரை அளசிங்கர் வரவேற்றார். அவர் நெற்றியில் செங்குத்தான கோடு (நாமம்) இருந்ததைப் பார்த்து வியந்தார் ஜோஸபைன். காஷ்மீருக்கு ஸ்வாமிஜியுடன் ஜோஸபைன் சென்ற சமயம் ஒரு முறை அளசிங்கரைப் பற்றி அவர், “ என்ன பரிதாபம் பாருங்கள், அளசிங்கர் வைஷ்ணவ சின்னத்தை நெற்றியில் போட்டுக் கொண்டிருப்பது?” என்று விமரிசித்தார்.
உடனே அவர் பக்கம் திரும்பிய ஸ்வாமிஜி கடுமையாக, “என்ன, என்ன சொன்னாய் நீ? உனக்கென்ன தெரியும் அவரைப் பற்றி!” என்று கூறினார். ஜோஸபைனுக்கு ஒன்றும் புரியவில்லை – ஸ்வாமிஜி ஏன் இப்படிக் கடுமையாக வார்த்தைகளைக் கூறினார் என்று. பின்னால் தான் அவர் தெரிந்து கொண்டார்.
அளசிங்கர் தான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துப் பணம் சேர்த்து ஸ்வாமிஜியை மேலை நாட்டிற்கு அனுப்பினார் என்று. அளசிங்க பெருமாள் சென்னையில் உள்ள கல்லூரியில் தத்துவப் பாடம் போதித்தவர். அவருக்கு மாதச் சம்பளம் 100 ரூபாய்கள். தந்தை, தாய், மனைவி, நான்கு குழந்தைகளைப் பேணி குடும்பத்தை அவர் நடத்தி வந்தார். “அவர் அப்படிப் பணம் சேர்த்திராவிடில் ஒரு வேளை எங்களைப் போன்றவர்கள் ஸ்வாமிஜியைப் பார்த்திருக்கவே முடியாது” என்று பின்னால் நினைவுக் குறிப்புகளில் எழுதினார் ஜோஸபைன்.
இப்படி ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. படித்தால் வியப்போம், பிரமிப்போம். பிரம்மாண்டமான ஒரு அவதாரம் பூமிக்கு வரும் போது அதன் ஒவ்வொரு கணமும் நமக்கு ஒரு பாடத்தை போதிக்கும், இல்லையா! விவேகானந்தரைப் போற்றுவோம்; அவர் காட்டிய வழியில் செல்வோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IN MARCH 2020 , I POSTED RARE PTCTURES FROM 100 YEAR OLD GERMN BOOK. NOW I HAVE GOT ANOTHER OLD GERMAN BOOK FROM LONDON UNIVERSITY. SINCE THERE ARE OVER 100 PICTURES, I PUBLISH HALF IN TAMILANDVEDAS.COM AND HALF IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM WITH THE SAME POST NUMBER DIVIDING THEM INTO A AND B.
HERE IS PART 1
FOLLOWING IS THE I THE REFERENCE TO 2020 POST
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7706
Date uploaded in London – 17 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
FOLLOWING ARE SOME RARE PICTURES ABOUT INDIA IN AN OLD GERMAN BOOK. PICTURES ARE TAKEN AT BERLIN AND LONDON MUSEUMS. SOME ARE FROM INDIA. THE BOOK WAS PUBLISHED IN 1929.
கனலை அணிந்துள்ள கருமையான அங்கங்களை உடைய பூமி எனக்கு அறிவு ஒளியை கொடுப்பாளாகுக; என் அறிவை கூர்மை ஆக்குவாளாகுக -21
எனது கருத்துக்கள் :_
21- கிட்டத்தட்ட காயத்ரீ மந்திரத்தின் பொருள்தான் இது. எனது அறிவை பிரகாசம் ஆக்கு; கூர்மை ஆக்கு என்று புலவர் வேண்டுகிறார். காயத்ரீ மந்திரத்தை மொழிபெயர்த்த பாரதியாரும்
எந்த பூமியில் தேவர்களுக்கு மக்கள் அவியையும் யக்ஞத்தையும் அலங்காரங்களுடன் அளிக்கிறார்களோ , எங்கு மக்கள் உண்டும் குடித்தும் வாழ்கிறார்களோ , அந்த பூமாதேவி எங்களுக்கு நல்ல சுவாசக்காற்றையும் , நீண்ட ஆயுளையும் அளிப்பாள் ஆகுக; நாங்கள் கிழவர்கள் ஆகும் வரை வாழவேண்டும் –22
எனது கருத்துக்கள்
யாக மேடை, யூப ஸ்தம்பம் ஆகியவற்றை அலங்கரித்த செய்தி
ரிக் வேதத்திலேயே வருகிறது. மணப்பெண்ணின் அலங்காரம் பற்றி கல்யாண மந்திரத்தில் வருகிறது .ஒரு குழந்தையை தாயார் அலங்கரிப்பது போல அலங்கரி யுங்கள் என்ற உவமை RV 9-104-1 மந்திரத்தில் வருகிறது. பெண்கள் நகை அணிந்த காட்சிகளும் உலகின் மிகப்பழைய நூலில் வருவதால், வேத கால மக்கள் மஹத்தான நாகரீகத்தில், செழிப்புடன் வாழ்ந்ததை அறிகிறோம்..
ஓ பூமியே உன்னிடமிருந்து மண் வாசனை வருகிறது.; உன்னிடம் தாவரங்களும் , மூலிகைகளும் நீரும் வாசனையுடன் மிளிர்கின்றன ; கந்தர்வர்களும், அப்சரஸ்களும் அவற்றைப் பகிர்கிறார்கள் அந்த இனிமையை எனக்கும் அருள்வாயாகுக; என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -23
எனது கருத்துக்கள்
மண் வாசனை என்பது நல்ல ஒரு கருத்து. கிராமப் புறத்தில் வாழ்வோருக்கு இது நன்கு தெரியும். ரிக் வேதம் முழுதும் கந்தர்வர்கள், அப்ஸரஸ்களை வருணிக்கும்போது அவர்களை வாசனை மிகுந்தவர்கள் என வருணிக்கின்றனர். கந்தம் Good Smell இருப்பதால்தான் அவர்களை கந்தர்வர்கள் என்று அழைக்கிறோம். மேலும் அப்சரஸ் என்றால் சென்ட், பெர்ப்யூம் Scent, Perfume என்றும் பொருள்; அவர்களுடைய பெயர்கள் அனைத்தும் பூக்களின் பெயர்கள்; செடிகளின் பெயர்களே என்றும் வியாக்கியானங்கள் உள்ளன. கந்தர்வர்கள் 6333 பேர் உள்ளதாக ஒரு அதர்வண வேத துதி பாடுகிறது. அவர்கள் ஆடல், பாடலில் வல்லவர்கள்; பெண்களிடத்தில் பிரியம் உள்ளவர்கள்; தேவர்களுக்கு சோம ரசம் தயாரிப்பவர்கள். ஆடல்-பாடல் கலைகளுக்கே காந்தர்வ வேதம் என்றே பெயர்; புராணங்களில் இவர்கள் பற்றி நிறைய கதைகள் உள்ளன. அப்ஸரஸ் கள் என்னும் அழகிகள் அவர்களுடைய மனைவியர். இந்தப் பின்னணியை நோக்கும்போது இந்தப் புலவன் அத்தைகைய இனிமையை நன்மணத்தை எனக்கும் கொடு என்று வேண்டுவது ஏன் என்பது புரிகிறது .
உன்னுடைய எந்த நல்ல மணம் தாமரைப்பூவில் நுழைந்ததோ, எந்த மணத்தை வைத்து திருமணப் பெண் சூர்யாவை கந்தம் உள்ளவராக ஆக்கினார்களோ அந்த இனிமையான மணத்தை எனக்கும் அளிப்பாயாகுக .; என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -24
எனது கருத்துக்கள்
மந்திரம் 24-ம் இதையே மேலும் விளம்புகிறது . இந்தியாவின் தேசீய மலர் தாமரை Lotus. தேவியர் அனைவரும் வீற்றிருப்பது தாமரை; தமிழில் மலர் (பூ) என்றாலே தாமரை. வேதத்தில் நூற்றிதழ் தாமரை என்ற சொற்றோடர் உளது. அதை சங்க இலக்கிய பாடலிலும் காண்கிறோம். அத்தகைய தாமரை மலர் மணமும் உன்னுடையதே என்று புலவன் பூமியைப் போற்றுகிறான்.
இந்த 24 ஆவது மந்திரத்தில் சூர்யாவின் வாசனை வருகிறது. அவள்தான் முன் உதாரணமான மணப்பெண் Exemplary Bride ; ரிக் வேதம் 10-85 ஆவது துதியில் நீண்ட கல்யாண மந்திரம் உளது. அதில் சூர்யாவை காண்கிறோம். அதர்வண வேதத்தில் அந்தக் கல்யாண மந்திரத்தோடு கூடுதல் மந்திரங்களை சேர்த்துள்ளார்கள் ; மணப் பெண் அலங்கா ரம் பற்றி இந்துக்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை. இந்து மதம் போல நாலு நாள் திருமணச் சடங்கு உலகில் வேறு எங்கும் இல்லை. மலர்களும் மணப் பெண்ணும் ஒன்று என்னும் அளவுக்கு அவள் மீது வாசனை மலர்கள் இருக்கும். இது தவிர சந்தனம் , குங்குமம், கஸ்தூரீ என்று கூடுதல் வாசனையும் இருக்கும். அதையெல்லாம் நினைவு கூறும் புலவன் எனக்கும் அந்த மணமும் இனிமையும் கிடைக்கட்டும் என்கிறான். இவ்வளவு இருந்தால் அவனை வெறுப்பாரும் இருப்பாரோ !! பூமியை வெறுப்பாரும் இல்லை ; மணப் பெண்ணை விரும்பாதவ ரும் இல்லை !!!
ரிக் வேத கல்யாண மந்திரம் குறித்தும், அகநா நூறு கல்யாணப் பாடல்கள் 86, 136 குறித்தும் முன்னரே விரிவாக எழுதியுள்ளேன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Rig Veda, the oldest book in the world, mentioned a demon by name Druh and a Goddess by name Aramati (araamati). Both are in the Zend Avesta of Parsees (Parsi or Zoroastrians). Not much attention is paid to these references by the scholars for some reason. If more research is done, one can pinpoint the age of Zoroaster.
Zoroaster ‘s period, his birth place and etymology of his name are all in utter confusion. Druh is also found in Atharvana Veda (AV).
Another interesting point would be to analyse it with Druids of Europe and Dravidas of South India.
An A V hymn is punning on the word Hari. If Zora is a corrupted form of Hari as some scholars think, then Zoroaster ‘s name would be Golden Camel or Yellow camel or a horse and camel breeder.
AV-20-30, 31 – (618, 619 SUKTAS)
Word Hari is in poet’s name as well (Varu Sarva Harirva)
Five mantras are in the first hymn. The poet plays with the sound Hri, Hari etc
HRI = TO TAKE
HARYATA = DELIGHTFUL
HARYAN = LOVING, DEAR, DARLING
HARI = HORSE IN TAWNY OR BAY COLOUR
HARIT = GOLDEN, YELLOW; ALSO GREEN
(Dictionary meaning of BAY = REDDISH BROWN; TAWNY= ORANGE BROWN; IN SUN LIGHT GOLDEN COLOUR)
DEVAS AND ASURAS
Zoroaster demonised Devas and glorified Asuras. Rig Veda also praise Asuras and give this epithet to Gods Agni, Varuna and Indra. There is nothing new in it. Later scriptures demonised Asuras completely.
Hindu religion revitalizes itself to suit the times and circumstances. Adi Shankara wiped out the unwanted 90 odd Hindu sects and established Shanmatha- Six Sects or Types of worship.
Ramalinga Swamikal and Narayana Guru and others established new type of worship in Tamil Nadu and Kerala respectively.
In the North, Arya Samaj and Brahma Samaj tried newer things. So do Theosophical society in south and north.
Degrading Lord Shiva
In our own days a great saint Bhakti Vedanta Prabhupada who spread Hare Krishna movement throughout world, for no reason belittled Lord Shiva as Demi God. This is also not new. We find such tendency in the Saivite and Vasihnavite Puranas and the Hymns by Tamil Alvars and Tamil Nayanmras . One degrading the God worshipped by another sect or opposite sect.
Buddhists and Jains also did this. They replaced all Hindu Gods in temples and established their own. Later Hindus reversed it. Sri Lankan Buddhists wiped out the Ramayana traces and symbols in Sri Lanka. Now Sri Lanka government is renewing them for tourist money.
Christians and Muslims destroyed all that looked Pagan and Kafir to them . And yet the customs prevailed in one form or another.
If we look at Zoroaster’s demonising of Devas with this in background, we would understand him better.
Armaiti in Avesta = devotion, love, piety, zeal; one of the Amesha Spenta
(in Vedas we see good and bad things are personified as Goddesses or Demons)
Druj in Avesta = Lie
Drujo Demana= House of Lies/ Hell
Please see the attachments showing Aramati and Druh in RV:
Old Articles written by me:–
Who was Zoroaster? Why Did Parsees ‘Return’ to Gujarat?
19 Apr 2017 — Written by London swaminathan Date: 19 APRIL 2017 Time uploaded in London:- 6-55 am Post No. 3831 Pictures are taken from various sources; …
Kanchi Paramacharya (1894-1994) was a great linguistic scholar and he said that word Sourashtra (a region in modern Gujarat of India) gave the word Zoroaster.
tags- Aramati, Druh, in Vedas, in Avesta
PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM IF THE LINKS DONT WORK IN TAMILANDVEDAS.COM