BEAUTIFUL POEM ON RAIN IN VEDAS (Post No.10,357)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,357

Date uploaded in London – –   19 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are numerous poems on NATURE in the Vedas. Many of the European translators missed them. Though there are articles on the subject, I have not come across a book on Nature in Vedas. The poems on Rains and gale force Wind are translated by all the foreigners in English without any appreciation. The poems in Sanskrit can be compared with Sangam Tamil poems, though they were composed many thousand years after the Vedas.

Forest fire and its effect on animals and birds, description of deep and dark forest, pythons devouring animals, earth quakes, different types of birds and animals, gale force wind, early morning scenes, roaring seas etc are described vividly by the poets. Earth quake is called ‘wandering earth’! Foreigners noticed only early morning scenes and appreciated them(DAWN= USHAS). Vedic Rishis talk about flying mountains and Indra cutting their wings. Probably they meant landslides after heavy rains.

Strangest thing about foreigners’ translations is that they could not even identify all the “sacrificed” things in the fire during Asvamedha. Many of the herbs are not recognised. Different species of snakes and frogs are given names, but we don’t know what they are.

Tamil Sangam book Malaipadu Kadaam and later Tamil epic Silappdikaram have very  good narrations of Forests, Rivers and Water Falls. Forest orchestra is given in different pictures. We may compare it with Kalidasa’s description.

xxx

Let me compare only one verse from the Atharva Veda (AV) and the Bharati’s poem on Rains. Bharati was the greatest Tamil poet of modern era. He was a great lover of nature and Vedas.

Here is the poem from AV (4-15):-

BOOK 4; HYMN XV

A charm to hasten the coming of the rains

1.Let all the misty regions fly together, let all the rain-clouds sped
   by wind, assemble.
  Let waters satisfy the earth, the voices of the great mist-enve-
   loped Bull who roareth.


2.Let them show forth, the strong, the bounteous Maruts: let
   plants and shrubs be hung with drops of moisture.
  Let floods of rain refresh the ground with gladness and herbs
   spring various with each form and colour.


3.Cause us who sing to see the gathering vapours: out burst in
   many a place the rush of waters!
  Let floods of rain refresh the ground with gladness; and herbs
   spring various with each form and colour.


.4Apart, Parjanya! let the troops of Maruts, roaring, swell the
   song.
  Let pouring torrents of the rain that raineth rain upon the
   earth.


5. Up from the sea lift your dread might, ye Maruts: as light and
   splendour, send the vapour upward! 
  Let waters satisfy the earth, the voices of the great mist-enve-
   loped Bull who roareth.


6.Roar, thunder, set the sea in agitation, bedew the ground with
   thy sweet rain, Parjanya!
  Send plenteous showers on him who seeketh shelter, and let the
   owner of lean kine go homeward.


7.Let the boon Maruts, let the springs and coiling serpents tend!
   you well.
  Urged by the Maruts let the clouds pour down their rain upon.
   the earth.


8.Let lightning flash on every side: from all the regions blow the
   winds!
  Urged by the Maruts let the clouds pour down their rain upon
   the earth.


9.May waters, lightning, cloud, and rain, boon springs and serpents
   tend you well.
  Urged by the Maruts let the clouds pour down their rain upon
   the earth.


10.May he who hath become the plants’ high regent, suiting our
   bodies, Agni of the Waters,
  May Jātavedas send us rain from heaven, Amrit and vital breath
   to earthly creatures.


11.Sending up waters from the flood and ocean Prajapati move the
   sea to agitation!
  Forth flow the moisture of the vigorous stallion!
  With this thy roar of thunder come thou hither,


12.Our father, Lord divine pouring the torrents. Let the streams
   breathe, O Varuna, of the waters.
  Pour the floods down: along the brooks and channels let frogs
   with speckled arms send out their voices.


13.They who lay quiet for a year, the Brāhmans who fulfil their
   vows.
  The frogs, have lifted up their voice, the voice Parjanya hath.
   inspired.


14..Speak forth a welcome, female frog! Do thou O frog, accost
   the rain.
  Stretch thy four feet apart, and swim in the middle of the lake.


15.Khanvakhā, ho! Khaimakhā, ho! thou in the middle, Taduri!
  Fathers, enjoy the rain from one who strives to win the Marutes
   heart.p.


16.Lift up the mighty cask and pour down water; let the wind
   blow, and lightnings flash around us.
  Let sacrifice be paid, and, widely scattered, let herbs and plants
   be full of joy and gladness.

xxx

MY COMMENTS

1.Bull- Rain God Parjanya; god of thunderous rain cloud. Bulls and cows are used for various gods in the Vedas.

2 an 3.The seers want to see plants of different shapes and colours following the rain. This reminds me of Vibhutbhushan Vandopadhyaya’s Aranyak novel. The hero of the story Yugal Prasad plants different species in different places in the forest and wait eagerly for the next flowering season. When he sees that his efforts bear fruits, he celebrates it.

5. Gives the science behind rains; sea water evaporates and comeback as showers

7. Coiling serpents are called Ajagaras= goat swallowing pythons. Tamil poets describe the elephant devouring pythons in Sangam Tamil poems.

8.Flashing lightning streaks are described in ‘Pallup pattu’s of Tamil Literature.

9.Even snakes are welcomed. The Rishis saw them as part of Nature’s cycle.

10.Agni ripens the plants. Rain is compared to Amrit which is echoed by Tiruvalluvar in Tamil Tirukkural couplet 11.

11. The vigorous stallion= fertilising rainy cloud. Even horse is used to denote clouds. Roaring seas are beautifully described

12. The seers wait for the croaking frogs. It shows their love for nature

13.Frogs are compared to Brahmins on vow of silence for a year. |This point is in Rig Veda Frog hymn as well. It may be interpreted in two ways.

The Brahmins change their sacred thread ceremonially after rainy season in Upakarma ceremony. On that day they resume again Paninian studies and Vedic learning. We do it even today. That is the time when frogs also come to life again.

The second interpretation is certain Vratas (vow or fasting) stipulate one year silence for Brahmins. But I will support the first interpretation.

14. It is also about frog; particularly a female frog which is a symbol of fertility.

15. Strange names of frogs. (It is already dealt with in my old article)

Some communities believe that rain also brings new type of plants and seeds. That is also possible with strong winds blowing from different directions.

xxx

BHARATI ON RAIN

In Tamil Original with my literal translation;

Read my translation and Professor ASR’s translation at the end. Most of the Atharva Vedic points are covered by Bharati.

 திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்

All the Eight Directions shatter

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

Dheem tarikita Dheem tarikita Dheem tarikita Dheem tarikita

பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்

Hills on the side break away, letting the floods

பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட

To sweep and leap; flowing , flooding

தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்

Takkat thatching kitaththom –  World/universe

சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு

Tilting, slanting, dancing – gusty winds blow like a fiend

தக்கை யடிக்குது காற்று-தக்கத்

தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட

Takkath thaam tarikkita thaam tarikkita thaam tarikkita

வெட்டி யடிக்குது மின்னல் கடல்

Lightning flashes cutting the sky- sea waves

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

Dashes against the  sky

கொட்டி யிடிக்குது மேகம்-கூ

Clouds thunder – howling winds making noise

கூவென்று விண்னைக் குடையுது காற்று

They drill the sky with  roaring  sound

சட்டச்சடசட சட்டச்சட டட்டா-என்று

Sattach sata sata  Sattach sata sata   tattaa

தாளங் கொட்டிக் கனைக்குது வானம்

Drumming the sky with neighing noise

எட்டுத் திசையும் இடிய –மழை

Eight directions collapsin

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

Where from the rain came my little brother.

அண்டம் குலுங்குது தம்பி-தலை

Eartch is shaking ; and the 1000 headed snake

ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்

மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை

Dancing and jumping like a fiend- directions jump

வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்

Devas in the Heaven burst into joy

செண்டு புடைத்திடு கின்றார்-என்ன

and showering honours

தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்

What a Divine show we are enjoing

கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்

Seen and seen with our own eyes

காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்             

Dance of Time we see with our own wyes.              

Xxxx

ANOTHER TRANSLATION

Shattering the bounds of space

Came the rain;

Dheem tarikita Dheem tarikita Dheem tarikita Dheem

The hills are rent

And the waters burst and leap and sweep in a mad race

The wind beats like a fiend of pain;

The world reels and is bent

Dham tarikita Dheem tarikita Dheem tarikita Dheem

Lightning leaps in a clap,

And the sea

Dashes its mane against Heaven’s dome;

The clouds break and rumble

The wind tears at the sky as at a trap,

And the sky beats a tattoo and laughs in a mad spree

The corners of space crumble

Oh, the mighty rain Dham tarikita Dheem tarikita Dhom

The universe quivers and shakes

And lo the snake

That bears the earth, hoods uplifter, springs amain

Space hills leap

And in the sky, tumult of the Devas breaks

Into a mad sports where live flame s crash awake

Behold Time and the elements dance in a sweep

Tataracita tittom oh the rain the wondrous rain

–Translated into English by Prof. AS Srinivasa Raghavan

–subham–

tags- Rain , Vedas, Bharati on Rain, Nature, Frogs

நாணிக் கண் புதைத்தல்-2 (Post No.10,356)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,356

Date uploaded in London – –   19 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நயம்பட உரைத்தல்                          

நாணிக் கண் புதைத்தல்-2

 B.Kannan, Delhi

நூல் அரங்கேற்றத்தின் போது கூடியிருந்தப் புலவர்கள் கவிராயரின் ஒரு குறிப்பிட்ட செய்யுளைச் சிறப்பித்துப் போற்றியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது இப்போது நினைவுக்கு வருகிறதல்லவா? அது எந்தப் பாடல் எனக் குறிப்பிட்டு எங்கும் பதியப்படவில்லை. அதனாலென்ன, நூலில் முடியிலிருந்து அடி வரைப் பாடல்களை உன்னிப்பாகப் படித்ததில் எதை எடுப்பது, எதை விடுவது என்றே அனுமானிக்க முடியவில்லை! மிகுந்த ரசனை மிக்கப் பாடல்கள் அவை! கவிராயரின் பெயரிலேயே அமுதம் தொற்றியிருக்கும் போது அவரது படைப்புக்களில் அதன் ரசம் ஊடுருவி இருக்குமல்லவா? அப்பாடல் எதுவாய் இருக்கக் கூடும்?

“திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் அகப்பொருளில் 25 முதன்மைத்               துறைகளை ,ஒவ்வொன்றையும் குறைந்தது 16 உட்பகுதிகளாகப் பிரித்து          மொத்தம் 400 துறைகளில் செய்யுட்களை அமைத்துள்ளார். கல்லாடர்                         (கல்லாடம் நூல்), சடகோபர் (திருவந்தாதி) இருவரும் 100 துறைகளில் பாடல்      இயற்றியுள்ளனர். கவிராயர் அவற்றுள் மறைமுகமாக 6 துறைகளை மட்டுமே மேலோட்டமாக மேற்கோள் காட்டுகிறார். அவற்றில் ஒன்று அப்பாடலாக            இருக்குமோ,    யார்அறிவார்,  அந்த அவைப் புலவர்கள், சேதுபதி மன்னரைத்        தவிர?”

சில செய்யுட்களைத் தேர்ந்தெடுத்து, பொருள் விளக்கத்துடன் கொடுத்துள்ளேன். புத்தகத்தை ரசித்துப் படியுங்கள், முடிந்தால் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்!

பாடல்16 : தார்கொண்ட பாடலம் பேரோடை யாம்ப றருங்கமலச்

          சீர்கொண்ட செங்கரத் தான்ரகு நாயகன் றேவைவெற்பி

          லேர்கொண்ட நீல மடலே றுகைபெரி தீனமன்றோ

          வார்கொண்ட கொம்மைப் புளுகப் படாமுலை வஞ்சியர்க்கே. 

முதலிரண்டு அடிகள் மன்னனின் வள்ளல் தன்மையையும், பின்னிரண்டு அடிகள் மங்கையின் உறுதியானக் கட்டமைப்பையும், பெண்களுக்கு ‘மடலூர்தல்’ கிடையாது என்பதையும் விளக்குகின்றன.

பொருள்: தார்கொண்ட- கிங்கிணிமாலை தரித்த, பாலடம்- குதிரைகளையும், பேர் ஓடை- பெரிய முகபடாம் அணிந்த, ஆம்பல்-யானைகளையும், தரும்-பாவலர்களுக்குப் பரிசளிக்கும் குணமுடைய, கமலச் சீர்கொண்ட-அழகியத் தாமரை மலர் போன்ற, செங்கரத்தான்- சிவந்தக் கைகளை உடையவனான, ரகுநாயகன்-ரகுநாத சேதுபதியின், தேவை வெற்பில்-ராமேஸ்வரம் (கந்தமாதன) மலையில்,

வார்கொண்ட- மார்புக் கச்சையணிந்த, கொம்மை- திரட்சியான, புளகம்- மகிழ்வளிக்கக் கூடிய, படா முலை- தொய்வில்லாத ஸ்தனங்களைக் கொண்ட, வஞ்சியர்க்கு- மங்கைக்கு, ஏர்கொண்ட-அழகுடைய, நீலம்- பனை மரம், மடல் ஏறுகை– மடலூர்தல், பெரிது ஈனம் அன்றோ- மிகவும் இழிவல்லவா?

படா முலை என்ற சொல்லுக்கு வலு சேர்க்க உரையாசிரியர், “கடாஅக்களிற்றின் மேல் கட்படா மாதர், படாஅ முலைமேல் துகில்” எனும் குறளை எடுத்துக்காட்டாக வைக்கிறார். அதாவது,மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது என்பது பொருள்.

(கண்ணை மறைத்தல் பற்றிக் ‘கட்படாம்’ என்றான். துகிலால் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பு. நீலமடல் ஏறு கை- நீலநிற கருங்குவளை மலரிதழில் ஏறிப் பொத்தியக் கை. கருங்குவளை கண்களைக் குறிப்பதாகும். மற்றொரு பொருள் மடலூர்தல் அனுசரிக்கும் முறையைக் கூறுகிறது.

மடலூர்தல்-

தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திருநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர். தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் ‘மடல்’ ஆகும். மடலூரும் தலைவன் அணிந்து கொள்ளும் மாலையில் பூளை, ஆவிரை, எருக்கு ஆகிய பூக்கள் தொடுக்கப் பட்டிருக்கும்.

‘திருக்கோவையார் செய்யுளொன்றும் (74) இதை விளக்குகிறது,

  காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து

  வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் றென்புலியூ

  ரீசன சாந்து மெருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப்

  பாய்சின மாவென வேறுவர் சீறூர்ப் பனைமடலே

இன்னுமொரு செய்யுள் இதோ…                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

பாடல்305: சேண்டவர் வாழ்திருத் தேவையை யாளுந் திருமணிமார்

                        பாண்டவர் தூதன் ரகுநாத சேது பதிவரைவாய்

                        நாண்டவர் முன்னிட் டதுவே யொளித்துத்தன்    

                        னற்பெயரைப்

                        பூண்டவர் தானத்தைத் தான்வாங்கிக் கொள்ளப்

                        புறப்பட்டதே

முதலில் அருந் தவசீலர்கள் வாழும் இராமேஸ்வரத் தலத்தின் சிறப்பும் (சேண்+தவர்), சேதுபதியின் பெருமையும் கூறப்படுகிறது. இங்கு,மூன்று ராசிகள், ஒரு கிரகம் ஆகியவற்றை மங்கையின் புருவம், கண் மற்றும் மார்பகத்துக்கு ஒப்பிட்டு இருபொருள்படச் சொல்கிறார் கவிராயர். கடைசி இரு அடிகளைப் பார்ப்போம்…

பொருள்: நாண்தவர்- நாணுடன் கூடிய வில் (தனுசு=புருவம்,வில் போல் வளைந்த), முன்னிட்டது–அதை முந்தி இருப்பது மகரம் (கண்) ஒளித்து- இவற்றை மறைத்து, தன் நற்பெயரைப் பூண்டவர்-மெதுவாக நடப்பதையே (மந்தன்) தன் நல்லப் பெயராகக் கொண்ட சனீஸ்வரர் எனும் கோள், தானத்தை–அவரது இடமாகிய கும்பத்தை (மார்பகம்), தான் வாங்கிக்கொள்ள- (மனமே) பெற்றுக் கொள்ள,புறப்பட்டதே–நன்கு வெளிப்பட்டதே (மங்கையிடமிருந்து).

தனுசு, மகரத்தை மறைப்பது என்பது நாணிக் கண் புதைப்பதைக் குறிக்கும். மீனை ஒளித்து வைத்து விட்டதுமில்லாமல் கும்பத்தை (ஸ்தனம்) மட்டும் ஏற்றுக் கொள்ள மனம் விழைவது ஏற்புடையது அல்லவே! மக்களை விற்று யாரேனும் மகரத்தை வாங்குவார்களா? மகரமும்,கும்பமும் சனிக்குரிய வீடாகும். இவ்விரண்டில் ஒன்றை ஒளித்து வைத்துவிட்டு மற்றதை வாங்கிக் கொள்ளச் செய்வது  முறையற்றது என்கிறார் கவிராயர்.

கடைசியாக இந்தச் செய்யுளைப் பார்ப்போம். எண்கள்,நட்சத்திரம், ராசி ஆகியவற்றைச் செய்யுளில் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார், பாருங்கள்…

பாடல் 29:  மேகந் தருமணி வெண்முத்த ராசியின் மென்மலர்ப்புன்

            நாகந் தருக்கடற் றேவையர் கோன்ரகு நாதன்வெற்பி

            லேகந் தருபதின் மூன்றொம்ப தான்மறைத் திங்குநின்றீ

            ராகந் தருமைந்து மொன்பது மேவெளி யாகியவே.

பொருள்: மேகம் தரு மணி= மேகம், கற்பக விருட்சம்,சிந்தாமணியைப் போன்ற வன், வெண்முத்த ராசியின்=வெண்மையாகிய முத்துத் தொகுதி போல, புன்னாகம்=புன்னை மரங்கள், மெல் மரு தரு= மெல்லிய மலர்களை உதிர்க்கும், கடல்= சமுத்திரக் கரையிலுள்ள, தேவையர் கோன்= இராமேஸ்வரத்தின் அரசன், ரகுநாதன்=ரகுநாத சேதுபதி, (அவனது) வெற்பில்=மலையுள்ளப் பிரதேசத்தில், ஏகம்தரு பதின்மூன்று= ஒன்றை நீக்கிய பதின்மூன்று அதாவது பனிரெண்டை, ஒன்பதால் மறைத்து=ஒன்பதினால் மூடி,  இங்கு நின்றீர்= இவ்விடத்தில் நிற்பதும், ஆகம் தரும்=மார்பினால் தரப்பட்ட, ஐந்தும்,ஒன்பதும் வெளியாகிய =ஐந்தும், ஒன்பதும் வெளிப்பட்டன.

இங்கு ஒன்றை நீக்கிய பதின்மூன்று என்று சொன்னது பனிரெண்டாவது மீன ( மீனம்=கண்) ராசியைக் குறிக்கும். பதின்மூன்று எனச் சிறப்பாகச் சொன்னது 13-வது நட்சத்திரம் அஸ்தத்தையும் (கை) குறிக்கும், ஒன்பதால் மறைத்து என்பது, குபேரனின் நவநிதிகளுள் ஒன்பதாவது நிதியாக விளங்குபவள் பதுமநிதி. பதுமம் கைக்கு உவமையாதலால், அதனால் கண்களை மூடினாள் எனக் கொள்ள வேண் டும். ஐந்தும், ஒன்பதும் என்று சொல்வது, 5-வது நட்சத்திரம் மிருக சீரிடத்தையும் (ம்ருகம் =மான், சீரிஷம்=தலை), 9-வது நட்சத்திரம் ஆயில்யத்தையும் குறிப்பிடுகிறது. மானின் நிமிர்ந்தத் தலை போல் தோன்றுவதால் மிருகசீரிடத்துக்கு ‘மான்றலை என்றும், ஆயில்யத்துக்கு அரவு, பாம்பு என்றும் தமிழில் பெயர்கள் உண்டு. கூர்மையானதும், வசீகரமிக்க உறுதியானக் கொம்புகள் உள்ள நேர்த்தியான மான் தலையை இளம் மார்பகத்துக்கும், வளைவு    சுளிவுகள் கொண்ட இடையை பாம்புக்கும் ஒப்பிடுகிறார் கவி.

உவமான சங்க்ரகம் (3-ம் தொகுப்பு, 17-ம் நூற்றாண்டு) 10-வது பாடலும் பெண்களின் இடையை இப்படி விவரிக்கிறது:

 பாரிலிடைக் கரவும் பைங்கொடியும் பூங்கொம்பு

 மார னுடம்பும் வகிரிழையு–நேர்கைப்

 பிடியளவுந் தேய்ந்த பிறைக்கொழுந்து மின்னும்

 துடியளவுங் கோளரியுஞ் சொல்.

இதுமாதிரி இன்னும் பலவுண்டு படித்து இன்புற

இந்த வர்ணணைகளைக் கேட்டு உள்ளம் கிளுகிளுக்க, உவகையுடன் அந்தப்புர மாந்தரை நினைத்துக் கனவுலகில் சிறகடித்துப் பறந்திருப்பார் அல்லவா, சேதுபதி மன்னர்? அரசனைக் குளிர்வித்துப் பரிசுகள் பெறுவதில் வல்லவர்கள் ஆயிற்றே பாவலர்கள்! அதனால் அல்லவோ இரகுநாத சேதுபதி அரசர் தம்மீது அப்பிரபந்தத்தைப் பாடியதற்காகத் தம் சமஸ்தானத்திலுள்ளதும், புலவர் பிறந்த இடமுமானப் பொன்னங்கால் என்னும் வளப்பம் மிக்கக் கிராமத்தை அமிர்த கவிராயருக்கு மானியமாகப் பட்டயம் எழுதிக் கொடுத்து உரிமையாக்கினார். அது முதல் அவருக்குப் பொன்னங்கால் அமிர்த கவிராயரென்ற பெயரே வழங்கலாயிற்று.

ஒருதுறைக் கோவைக்கான புதுத்தடம் போட்டவர் அமிர்த கவிராயர். இதை ‘வல்லான்  வெட்டிய வாய்க்கால்’ என்கிறார் வித்வான் கா.நயினார் முகமது. அதில் ஏதும் சந்தேகம் உண்டோ?

               ——————————————————————–

, tags–  அமிர்த கவிராயர், சேதுபதி மன்னர், நாணிக் கண் புதைத்தல்-2

அத்யாத்ம விசாரம் என்னும் அதி அற்புத ரகசியம்! (Post No.10,355)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,355

Date uploaded in London – –   19 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டக் கதைகள்!

அத்யாத்ம விசாரம் என்னும் அதி அற்புத ரகசியம்!

ச.நாகராஜன்

     மனித வாழ்க்கையில் எழும் சந்தேகங்கள் பல. அவற்றில் ஒன்று – ஆத்மாவையும் உடலையும் பிரிப்பது எது? என்பதாகும்.

ராமருக்கும் இந்த சந்தேகம் எழவே வசிஷ்ட மஹரிஷி அதை நீக்கும் விதமாக ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

  வசிஷ்டர் ராமரை ஆகாயத்துடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கச் சொன்னார். எல்லையற்ற விண்வெளி அது! பிரபஞ்சமோ அகண்டமானது!! அத்துடன் மட்டுமல்ல ராமரை ‘அத்விதீயா’ – அதாவது இரண்டற்ற ஒன்றே என்று நினைத்துப் பார்க்கச் சொன்னார். அப்போது சர்வத்ரம் – எங்கும் வியாபிக்கும் தன்மை கிடைக்கும் என்றார்.

     வசிஷ்டரின் உபதேசப்படி, மோக்ஷம் என்பது சொர்க்கத்திலும் இல்லை பூமியிலும் இல்லை அல்லது வேறு எந்த உலகத்திலும் இல்லை. அது பிரக்ஞையைப் பொறுத்த ஒன்று தான்! அது ஆத்மஞானம் எனப்படும்.     

மோக்ஷத்தை விரும்பும் ஒருவன் ஆசைகளினால் பீடிக்கப்பட்டு அலைவதால் அதை அடைய முடிவதில்லை. செயல்களில் ஒருவன் ஈடுபட்டுக் கொண்டே இருந்தாலும் கூட அவன் எண்ணத்தை அலைய விடக் கூடாது. ஆக எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டால், செயலுக்கும் எண்ணத்திற்கும் (இரண்டாக) வேறாக உள்ள வித்தியாசம் போய் விடும்.

 இதை விளக்க சுரகுவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் வசிஷ்டர். சுரகு ஆதிவாசிகளின் ராஜா. அவன் மிகுந்த வலிமை வாய்ந்த அரசனாக இருந்தான். நாட்டின் வளமோ அபாரமாக இருந்தது. அவனுக்கு ஒரு ஆச்சரியம் எழுந்தது – தனது ஆடம்பர வாழ்க்கைக்காக தான் எதற்காகத் தனது குடிமக்களை வருத்த வேண்டும் என்று. மற்றவர்களுக்கும் இதே எண்ணம் இருந்ததையும் அவன் உணர்ந்தான். ஆகவே தனது செல்வத்தை எல்லாம் குடிமக்கள் அனைவருக்கும் தர அவன் முடிவு செய்தான். அத்தோடு தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் போதும் அவன் மிகவும் வருத்தமடைந்தான். இப்படி அவனுக்குள்ளாக ஏராளமான முரண்பாடுகள் எழ ஆரம்பித்தன.

 ஒரு சமயம் மஹரிஷி மாண்டவ்யர் அவனைப் பார்க்க வந்தார். சுரகு தனது எண்ணத்தில் உள்ள முரண்பாடுகளை அவரிடம் சொன்னான். அவரிடம் எப்படி தனது அனைத்து மக்களையும் – அவர்கள் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி, சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அனைவரையும் – சமமாக பாவிக்கும் தன்மையைத் தான் அடைய முடியும் என்று கேட்டான்.

சூரியன் எந்த வித பாரபட்சமும் இன்றி எப்படி அனைவருக்கும் ஒரே மாதிரியாக தன் ஒளியை நல்குகிறானோ அதே போலத் தன்னாலும் இருக்க முடியுமா என்று அவன் கேட்டான்.

உடனே மஹரிஷி அவனை நோக்கி அவனது உடலைப் பற்றியும் உடல் அங்கங்களைப் பற்றியும் அவனது செயல்களைப் பற்றியும் தீவிரமாக சிந்திக்குமாறு அறிவுறுத்தினார். அவனுக்கு மிகவும் பிடித்தவர்கள், அவன் வெறுப்பவர்கள் கொண்ட அவனது சுற்றம் உறவு நண்பர்கள் மற்றும் இதர அனைத்தையும் பற்றி அவனை சிந்தித்துப் பார்க்கச் சொன்னார்.

இப்படிப்பட்ட (அத்யாத்ம) விசாரமானது அவனுக்கு சமமாகப் பார்க்கும் தன்மையை அவனுக்கு அளிக்கும் என்று அவர் உபதேசித்தார். இதனால் எந்த வித சம்பவங்களாலும் பாதிக்கப்படாமல் அனைவரையும் சமமாகவும் பட்சபாதமின்றியும் சமமாகப் பார்த்து உணரும் தன்மையைப் பெறலாம் என்றார் அவர்.

இப்படி உபதேசித்த பின்னர் மஹரிஷி மாண்டவ்யர் அரசனிடமிருந்து விடை பெற்றுச் சென்று விட்டார். அரசன் சிந்திக்க ஆரம்பித்தான். தான் உடல் அல்ல என்பதையும் எதுவும் அவனுக்குச் சொந்தமானது இல்லை என்பதையும அவன் உணரத் தலைப்பட்டான். இறுதியில் ஆத்மாவிற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணக்கத்தை அவன் உணர்ந்தான். சூரியனைப் போலவே எந்த வித சம்பவங்களாலும் அவன் பாதிக்கப்படவில்லை. தனது கடமைகளை அனைவரிடமும் அவர்களின் செயல்களால் பாதிக்கப்படாமல் செய்ய ஆரம்பித்தான். அவன் ஒரு சமதர்ஷி – அனைவரையும் சமமாகப் பார்த்து பாவிக்கும் தன்மை கொண்டவனாக – ஆனான். இப்போது அவனால் அனைவரையும் சமமாகப் பார்க்க முடிந்தது.

கதையை முடித்த வசிஷ்டர் ராமரிடம், அத்யாத்ம விசாரத்தில் ஈடுபடும் ஒருவன் அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுபட்டு எப்போதும் சந்தோஷமாக இருப்பான் என்றார். வியவஹாரம் எனப்படும் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களாலும் சூழ்நிலைகளாலும் அவன் பாதிக்கப்படுவதே இல்லை என்பதையும் கூறினார்.

ராமருக்கு அத்யாத்ம விசாரத்தின் அருமையும் அதன் ரகசியமும் இப்போது புரிந்தது.

யோக வாசிஷ்டம் விளக்கும் இந்த ரகசியம் நமக்கும் இப்போது புரியும் – அத்யாத்ம விசாரத்தில் ஈடுபட்டு அதன் அபாரமான பலனை நாமும் அடையலாம்.

இது உபாசம பிரகரணத்தில் இடம் பெறும் கதையாகும்.

***

tags–  அத்யாத்ம விசாரம், யோக வாசிஷ்டம் 

Who is London Swaminathan- 7, Personal Meetings with Shankaracharyas (10,354)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,354

Date uploaded in London – –   18 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Though we had the darshan of Sringeri Mahasannidhanam and Kanchi Shankaracharyas several times from a distance, we brother’s met them personally a few times only.  My father V Santanam, News Editor, Dinamani, was close to all Sadhu Sanyasins. We invited Sringeri Mahasannidhanam to our house for Pada Puja and he blessed us all. When he stayed in Madurai, we all go to his daily puja at the Kalyana Mandapa inside Meenakshi temple. In those days the temple was less crowded, and anyone can walk in at any time. We brothers were interested in the Veda Parayana at the end of his daily Puja. We used to go with Veda Sukta texts and follow the 30 to 40 Vedic pundits there during recitation.

Swamiji Krishna of Ayakkudi near Tenkasi used to tell us

‘You must believe in only two Swamijis-  Kanchi Shankaracharya and Sringeri Shankaracharya’. We brothers nodded our heads ritually and faithfully to acknowledge his advice. But he won’t leave us there. Repeat what I said, he would command us.

Then all of us in chorus would say

‘We must believe only two Shankaracharyas in the world -Kanchi and Sringeri.

Swmiji Krishna wouldn’t stop there. He would sarcastically say

‘For Santanam, that is my dad, all that is white is milk. He would go to all Samiyars/saints!

That is very true. I already wrote about the fraudulent Sanyasins who my father believed. He can be fooled easily . The moment you say something about GOD he would believe you and do extra mileage to support you.

Swamiji Krishna used to boast, ‘Kanchi Paramacharya would send all the people who wanted to know about Ganapathi’to me.

He was a Brahmachari who did Ganapathi Homam from his young age and developed miraculous powers. I would write separately about the miracles we witnessed. Even before V V Giri became the Governor of Kerala and later President of India he used to frequent Ayakkudi, a small village.

Coming back to the darshan of Kanchi Shankaracharya, we three brothers met him somewhere in Andhra Pradesh. One of my brothers was in a dilemma regarding becoming an R S S Pracharak. So after having mottai, shaving and offering all his hair, to Lord Balaji, he went there with two of us. But there were transport problems. We went to Kalahasti and tried to take train at Renigunta . There was heavy rain and we are choked in water. We threw away all the bus tickets from Kalahasti to Renigunta?

We brothers jumped through different carriages and crossed railway lines illegally. A police man who watched us caught us and asked to follow him to the station. We begged and begged telling him all our sufferings because of transport problems. He asked us to give some proof. Each one looked at another and blinked. We told him the truth. We threw away all the used tickets. But lack of evidence made us big suspects.

Following to all gods we know of and all swamijis we heard of somehow, he released us without any charge. Probably we would have told the police that we are on our way to see Kanchi Shankaracharya.

Honestly, I don’t remember it now.

We came to the camp of Sri Paramacharya. He gave us immediate audience when we told his ‘Parivara Devatas’ that ‘We are the Sons of Great V Santanam’. That worked well. We were taken to Him. We sought his blessings. My brother slowly opened the subject and asked whether he could become an R S S Pracharak.

Shankaracharya said emphatically “If You have STRONG conviction, you may do it.

The way Swamiji emphasised the word STRONG made my brother to take a negative decision. All this happened at least 45 years ago.

After coming to London in 1987 I had an occasion to visit Kanchipuram and had the darshan of Shankaracharya Sri Jayendra Sarasvati . I asked him what should be my research topic for PhD:

Origin of Tamil coins in India and Sri Lanka

Or

Subjects, Language and Style in Kanchi Paramacharya’s lectures.

He said to me not to touch Sri Paramacharya’s talk for research.

I chose the coins for research

Doing doing doing still doing the research.

Probably I would get a Ph D in my next birth!!

The reason may be people who should have supported me did not do it.

I went to another newspaper man, who is a pioneer in coin research and President of Numismatic Society etc. My intention was to get his blessings. But he became red faced when I said to him, I am registering myself for coin research at the University of London (Department of Archeology) . He said we have done everything. What else is there for you to do? He said it in raised voice. Then I changed the subject and praised his newspaper and got out of his room.

This happened at the university also where I was teaching Tamil. My Professor happily signed my Ph.D. request letter. But next day I received a letter saying ‘pay 1500 pounds withing 24 hours because the dead line is fast approaching’. I expected a big concession as a Part Time Tutor at SOAS. But my professor told me I have not got enough hours of teaching to qualify for concession. All went against my ambition. All for good! Omnia in bonum! Amen!

Xxx

Third meeting

World Hindu Conference was held in Madurai for three days. Though I was Senior Sub Editor in Dinamani, I went as a special correspondent there and covered speeches of Sri Jayendra Sarasvati, King of Nepal and other scholars.

Next day I met Sri Jayendra Sarasvati, Shankaracharya of Kanchi Mutt, I showed him Dinamani news paper and my coverage of the conference. He happily asked me how did the people receive his speech. I told him Dinamani readership is always supportive. The meeting went on for 15 minutes only.

That is all about my personal meeting with Paramacharya and later Sri Jayendra Sarasvati.

Next I will tell you the miracles done by Swamiji Krishna.

(SWAMIJIS, SCHOLARS AND MUSICIANS; SWAMI DAYANANDA SARASVATI MEETING WAS ARRANGED BY ME FIRST TIME. ONLY 75 PEOPLE ATTENDED. DURING HIS NEXT VIST A SWAMINI APPRAOCHED B.V.BHAVAN AND A GOOD CROWD TURNED UP. SWAMI SUKABODHANANDA VISITED LONDON MANY TIMES. CHENNAI DOSA FOUNDER ASOKAN, TREASURER OF LONDON TAMIL SANGAM , USED TO SPONSOR HIM. I PROVIDED AUDIENCE. EVERY TIME TVG VISITED I ARRANGED HIS CONCERT.. SEKKIZAR ADIPPODI DR T N RAMACHANDRAN INAUGURATED OUR WEEKEND TAMIL SCHOOL AT CANONS HIGH SCHOOL IN LONDON )

FUTURE PRIME MINISTER OF BRITAIN AT No.10 DOWNING STREET; IF RISHI SUNAK AND PRITI PATEL CAN HOLD KEY POSTS IN the MINISTRY, WHY NOT LONDON SWAMINATHAN ?

–subham–

who is lndon swaminathan 7, Shankaracharyas

பகவத்கீதை சொற்கள் INDEX-22; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -22 (Post.10,353)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,353

Date uploaded in London – –   18 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உதாஸீன: 12-16   ஒருபக்ஷத்தை சாராதவனாக

உதா ஹ்ருதம் 13-6  கூறப்படும்

உதா ஹ்ருத்ய  17-24 உச்சரித்து

உத்திச்ய 17-21 கருதி

உத்தேசத : 10-40 குறிப்பால் உணர்த்தல்

உத்தரேத்  6-5  உயர்த்திக் கொள்க

உத்பவ: 10-34 உற்பவமும்

உத்யதா: 1-45  முன் வந்தோமோ

உத் யம்ய 1-20 எடுத்துக் கொண்டு

உத் விஜதே 12-15  துன்புறுதல்

உத் விஜேத் 5-20 மனம் தளர

உன் மிஷன் 5-9 கண் விழி த்தாலும்

உப ஜாயதே  2-62  உண்டாகின்றது

உப ஜாயந்தே 14-2 மீண்டும் பிறத்தல்

உப ஜுஹ்வதி  4-25  ஹோமம் செய்கின்றனர்

உப தேக்ஷ்யந்தி 4-34 உபதேசிப்பார்கள்

உப த்ரஷ்டா  13-22 பார்ப்பவனுக்கு மேல் நின்று பார்ப்பவன்

உப தாரய 7-6  அறிந்துகொள்

உப பத்யதே  2-3  பொருந்துதல்

உப பன்னம்  2-32  வாய்த்ததும்

உபமா  6-19 உவமை

உப யாந்தி 10-10 அடைவார்களோ

உப ரதம் 2-35  பின்வாங்கியவனாய்

உப ரமதே 6-20  ஒழிவடையுமோ

உப ரமேத் 6-25  சாந்தியைக் கூடவேண்டும்

உப லப்யதே 15-3   அறியப்படுதல்

உப லிப்யதே 13-32 களங்கமடைதல்

உப விச்ய  6-12   அமர்ந்து

உப சங்கம்ய 1-2  சமீபித்து, நெருங்கி

உப சேவதே 15-9 அனுபவிக்கின்றான்

உப ஹன்யாம் 3-24 அழித்தவன்

உபாயத: 6-36   தக்க உபாயத்தால்

உபா விச த் 1-47   உட்கார்ந்துவிட்டான்

உபா ஸ்ரிதா: 4-10 சரணடைந்தவர்கள்

உபா ச்ரித்ய  14-2  பின்பற்றி

உபா சதே 9-14 சேவிக்கின்றார்கள்

உபேத: 6-37  கூடியவன்

உபேத்ய – 8-15  அடைந்து

உபைதி 6-27 வந்தடைகிறது

உபய விப்ரஷ்ட: 6-38 இரண்டு மார்க்கத்தையும் இழந்து

உபயோ: 1-21  இரண்டு

உபே  2-50  இரண்டையும்

உபெ ள  2-19  இருவரும்

உரகான்  11-15  பாம்புகள்

உல்பேன 3-38  கருப்  பையால்

உசனா 10-37  உசனா கவி

உஷித்வா  6-41  வசித்து

xxxx

ஊ  வர்க்கம்

ஊர்ஜிதம் 10-41 உயர்ந்த சக்தியாக

ஊர்த்வ மூலம் 15-1  மேலே வேருள்ள

ஊர்த்வம் 12-8 மேல் முகமாக

ஊஷ்மா : 11-22 ஊஷ்மா என்ற பிதிரர்களும்

51 words are added in Index 22

To be continued………………………..

 tags – Gita Word Index 22

இலங்கை அரக்கன் மீது  ஞான சம்பந்தர் கடும் தாக்கு (Post No.10,352)

WRITTEN BY LONDON SWAMINATHAN AND

Post No. 10,352

Date uploaded in London – –   18 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


“கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே….”

புறம் 378  ஊன்பொதி பசுங்குடையார்

Purananuru , Sangam Literature, verse 378

Xxx

அரனுறை தருகயிலையை நிலைகுலைவது  செய்த தசமுகனது

கரமிருபது நெரி  தரவினி றுவிய கழலடியுடையவன்

–திருவீழிமிழலை , சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை

xxx

மலையான் மகளஞ்சவ்  வரை எடுத்தவ் வலியரக்கன்

றலை தோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன்

–திருவேணுபுரம்

xxx

இசைகயிலை யையெழுதரு வகையிருபது  கரமவை நிறுவிய

நிசிசரன் முடியுடை தரவொரு விரல் பணி கொலுமவ னுறை பதி

இவ்வாறு ஒவ்வொரு பதிகத்திலும் இராவணன் கதறியதும், சிவ பிரான் அருளியதும் சம்பந்தர் தேவாரத்தில் காணக்கிடக்கிறது . ராவணன் ஒரு கிரிமினல் CRIMINAL என்பதால் அவனை நிசி சரன் NIGHT WALKER  (ராத்திரியில் ஆட்டம்போடும் கள்ளன் ) என்றும் திட்டுகிறார் திரு ஞான சம்பந்தர்

–திருச்  சிவபுரம்

இலங்கையில் இராவணன்  விமானம் பற்றி ஆராய்ச்சி  நடப்பதாக ஒரு நல்ல செய்தியை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. வரவேற்கத் தக்க ஆராய்ச்சி. அத்துடன் சில அசிங்கமான செய்தியும் வந்துள்ளது. இலங்கை ஒரு விண் கோளுக்கு ராவணன் பெயரை சூட்டி இருப்பதாகவும் அந்தப் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. அது உண்மையானால் இலங்கை  அரசு சொல்லும் செய்தி இதுதான் : “பொம்பளைப் பொறுக்கி இராவணன் வாழ்க ; எல்லோரும் அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு வாங்க” . இது நல்லதல்ல. இதைத்தான் தமிழ் நாட்டு திராவிடங்கள் சொல்லுகின்றன. இதை இலங்கை அரசு பின்பற்றுவது ஆபத்தானது உடனே  மாற்ற வேண்டும்.

தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் ஒவ்வொரு பதிக்கத்திலும் ராவணனை தாக்குவதும் ஆழ்வார்கள், இலங்கை அரக்கனைக் கண்டித்ததும் தமிழர்கள் நன்கு  அறிந்ததே. இதற்கு நேர் எதிரானது புத்த மத வெறியர்களின் போக்கு. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய வெறியை இலங்கை இன்றும் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது

மேலும் சில விஞ்ஞான உண்மைகளை ஆராய்வோம்:

இராவணன் விமானம் விட்டானா? இது என்னடா புதுக்கதை ?

உலகில் 3000 வகை ராமாயணங்கள் உண்டு (ராமன் பற்றிய பஜனைப் பாடலில் வரும் , கீர்த்தனைகளில் வரும் புதிய செய்திகளையும் சேர்த்து). புறநானூறு, அகநானூறு, ஆழ்வார் பாடல்களில் வரும் பல செய்திகள் கம்பன், வால்மீகி ராமாயணத்தில் இல்லை!) ஆனால் ராவணன் கொடியவன், ராமன் நல்லவன் என்ற அடிப்படை விஷயங்களில் மாற்றம் இராது.

உலகில் வால்மீகி எழுதிய ராமாயணம்தான் ORIGINAL ஒரிஜினல்; கம்பனும் தனக்கு கிடைத்த மூன்று ராமாயணங்களில், வால்மீகியையே தான் பின்பற்றுவதாகவும் சொல்கிறான். வால்மீகி ராமாயணத்தில் குபேரன் வைத்திருந்த புஷ்பக விமானத்தை இராவணன் பறித்துக்கொண்ட செய்தியும், பின்னர் அதை விபீஷணன் ராமணனுக்கு அயோத்தி செல்ல கொடுத்ததும் தெளிவாக உள்ளது. மேலும் அது அமெரிக்க , ரஷ்ய விஞ்ஞானிகளை பிரமிக்க வைக்கும் விமானம். ஆட்கள் ஏற ஏற  விரிவடையும்; THOUGHT POWERED எண்ணத்தால் பறக்கும். ஐன்ஸ்டைன் தோற்றுப்போனார். அப்படிப்பட்ட விமானத்தை செய்தவன் இமயமலையில் வாழும் குபேரன். . இதை மறைக்கிறது இலங்கை அரசின் ராவண விண்கோள் செய்தி. !

சங்க இலக்கியத்தில் ராமன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

4 Jun 2014 — Tagged with சங்க இலக்கியத்தில் ராமன் … தமிழ் ராமாயணம் வால்மீகி, கம்பன் சொல்லாத …



பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர் …

https://tamilandvedas.com › பிரா…

13 Nov 2017 — அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் … ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

18ஆவது நூற்றாண்டில் ஏதோ சிங்களர்கள் எழுதிய சுவடியில் மயில் போன்ற வடிவில் விமானம் இருப்பதாகவும் அது பற்றி ஆராய்வதாகவும் ஒரு புதுக்கதை! அதுவும் ஒரிஜினல் அல்ல. படிக்காத மூடர்களுக்கு இதை மட்டும் காட்டினால் உண்மைகள் மறைக்கப்படும்; மறக்கவும்படும்.

அது என்ன மறக்கப்படும், மறைக்கப்படும் உண்மைகள்?

ரிக் வேதத்திலேயே மனிதர்கள் ஒளி வடிவில் பறக்கும் செய்திகள் உள்ளன. ராமாயணத்துக்குப்  பின்னர் வந்த மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனன் வெளி உலகிற்குச் சென்று வந்த செய்தி விரிவாகவே உள்ளது. எண்ணத்தின் மூலம் விமானம் பறக்க முடியும் என்ற செய்தியை உலகப் புகழ்பெற்ற நரம்பியல் பொறியியல் NEURAL ENGINEERING பத்திரிக்கை வெளியிட்டதை 2013ம் ஆண்டில் இதே பிளாக்கில் நான் வெளியிட்டுள்ளேன்.

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? – Tamil …

https://tamilandvedas.com › ராமர…

·

22 Jun 2013 — ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் …



விமானங்கள் பற்றி கம்பன் தரும் அதிசய தகவல்கள் …

https://tamilandvedas.com › விம…

·

31 Jan 2019 — ….ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து … ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

How did Rama fly his Pushpaka Vimana/ Plane? – Tamil and …

https://tamilandvedas.com › 2013/06/22 › how-did-ram…

22 Jun 2013 — Ramayana wonders part -8. How did Rama fly his Pushpaka Vimana/ Plane? 1.This is the first time a flying robot has been controlled by human …

XXXX

LORD SHIVA IN PEACOCK PLANE, HOUSTON FINE ARTS MUSEUM, USA
XXXX

புத்த மதத்தினர் என்ன செய்தார்கள் ?

2300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் உலவி  வந்த எல்லா பஞ்ச தந்திரக் கதைகள், புராண இதிஹாஸக் கதைகளை, போதிசத்துவர் பெயரில் ஏற்றி, ஜாதகக்கதைகள் என்ற பெயரில் கொடுத்தனர். அதில் தசரத ஜாதகம், பாண்டவர் பற்றிய ஜாதக்கதைகளும் உண்டு. அதுமட்டுமல்லாமல் இந்து விக்ரகங்கள் வழிபட்ட இடங்களில் புத்தர் சிலையை வைத்து மாற்றினார்கள். இது அதிகம் நடந்ததும் இலங்கையில்தான் .

அசோகன் என்ற மாமன்னன் நல்ல எண்ணத்தின் பேரில் தனது மகன் மஹேந்திரனையும் மகள் சங்க மித்திரையையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தான். ஆனால் அந்த நல்ல எண்ணம் புத்த  பிட்சுக்களின் மண்டையில் ஏறவில்லை. இன்றும் சீனாக்காரன் வாழ்க என்று சொல்லும் அளவுக்குப் போய்விட்டது!

XXX

மீண்டும் விஞ்ஞானச் செய்திக்கு வருவோம்

ராமாயண மஹாபாரத விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தால், போஜன் எழுதிய வைமானிக சாஸ்திரம் முதலியன உள்ளன. உதயணன் முதலியோர் மயில் வடிவ விமானத்தில் பறந்த செய்தி  உளது. அது சீவக சிந்தாமணியிலும்  உளது. ஆக மயில் வடிவ விமானம் என்பதும் சிங்கள ஒரிஜினல்  அல்ல. கள்ளக் காப்பி! யாரோ ஒருவர் சிங்கள மொழியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூலை வைத்து, உண்மையைத் திரித்து ,இராவணன் ஜிந்தாபாத்; பொம்பளைப் பொறுக்கி ஜிந்தாபாத்; என்று சொல்லும் இலங்கை ‘ மக்கு’-களுக்கு நல்ல புத்தி வர இராமபிரானை வேண்டுவோம் .

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை

https://tamilandvedas.com › ராவ…

24 Jun 2014 — Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் கட்டுரை …


ராவணன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ர…

· 

this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. வீணைக் கொடியுடைய வேந்தனே!

இராவணன் யார் ?

இராவணன் சிவ பக்தன் ; வீணை வாசிப்பதில் மன்னன்; உலகம் சுற்றும் வாலிபன்; அடிக்கடி கோதா வரிக் கரை க்குச் சென்று பெண்களிடம் சில்மிஷம் செய்தவன், கார்த்த வீர்ய அர்ஜுநன் என்பவானால் நை யப் புடைக்கப்பட்டவன் ; எங்கெங்கு அழகிகள் கிடைத்தார்களாளோ அவர்களை எல்லாம் கடத்திக் கொண்டு வந்தவன். அராஜகத்தின்  சின்னம்; அடக்கமின்மையின் மறு உரு ; சிவபெருமானின் கயிலை மலையை ஆட்டலாம் என்று நினைத்து முயன்று கை நசுங்கிக்  கதறியவன் ; 50 சதவிகித பிராஹ்மணன்; 50 சதவிகித அரக்கன்; அகஸ்தியருடன் வீணைப் போட்டியில் தோற்றவன். பாண்டிய மன்னனுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவன்.

இவ்வளவு செய்திகளைச் சொல்லும் தமிழ் சம்ஸ்கிருத நூல்கள், நச்சினார்க்கினியர் உரைகள் எல்லாம் சிங்கள படைப்புக்கு முன்னர் வந்தவை. வால்மீகி ஒருவர்தான் அவன் விமானம் பற்றிய செய்தியையும், குபேரனிடமிருந்து அதை அவன் பறிமுதல் செய்ததையும் தெளிவாகக் கூறுகிறார்.

ஆகவே குபேரன் வைத்திருந்த புஷ்பக விமானத்தை அவன் பறித்து வந்ததை மறைக்கக்கூடாது ; மயில் வடிவ விமானம் முன்னரே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதை மறைக்கக் கூடாது

அமெரிக்காவில் ஹூஸ்டன் நுண்கலை மியூசியத்தில் கூட சிவபிரான் மயில் வடிவ விமானத்தில் பறக்கும் ஓவியம் உளது 

எல்லாவற்றுக்கும் மேலாக இராவணனை வலியகை அரக்கன் என்று சங்க காலப் புலவர் சாடுவதை மறைக்கக் கூடாது. இராமனை 2000 ஆண்டுப் பழமை உடைய சங்க இலக்கியப்  பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய காவியங்கள்  பாராட்டுவதை மறைக்கக்கூடாது  ;  எல்லா தமிழ்ப் புலவர்களாலும் கண்டிக்கப்பட இராவணன் பெயரை விண் கோளில் இருந்து நீக்க வேண்டும். இந்தியா போல வேத, புராண இதிஹாச பெயர்களை சூட்ட வேண்டும்; தொலைந்து போகட்டும்; புத்தர் பெயரையாவது வைத்து மகிழட்டும்.

–subham–

NEWS PAPER REPORT FROM NOVEMBER 16,2021

ராவணனின் விமானம் குறித்து ஆய்வு; இந்தியாவும் இணைந்துகொள்ள இலங்கை அழைப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்பு, விமானப் போக்குவரத்து வல்லுநர்கள், வரலாற்றாச்சியர்கள், தொல்லியலாளர்கள், அறிவியலாளர்கள், புவியியலாளர்கள் பங்கேற்ற மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. அதில், அந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான யோசனை பிறந்தது. அந்த மாநாட்டில் ராவணன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளான் என்று முடிவுக்கு வந்தனர்.

அந்த மாநாட்டுக்குப் பிறகு, இதுதொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு 5 மில்லியன் இலங்கை ரூபாயை முதற்கட்ட நிதியாக அப்போதைய அரசு ஒதுக்கியது. இதுகுறித்த பேசிய இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னாள் அதிகாரி ஷாஷி தனதுங்கே, ‘கொரோனா ஊரடங்கின் காரணமாக அந்த ஆய்வு அப்போது நிறுத்தப்பட்டது. தற்போதைய ராஜபக்ச தலைமையிலான அரசும் இந்த ஆய்வை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதி இதனைத் தொடர்வதற்கு தற்போதைய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டுகள் தொடங்கும் என்று கருதுகிறேன்’ தெரிவித்தார். ஷாஷி வரலாற்றின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். ராவணன் காலத்துக்கு விமான நிலையம் குறித்து ஆய்வு செய்வதற்கு இலங்கை முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார்.


தொடர்ந்து இதுகுறித்து டனதுங்கே பேசும்போது, ‘ராவணன் புராணக் கால கதாப்பாத்திரம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். அவர் நிஜ அரசன். அவர் உண்மையில் விமானம் மற்றும் விமான நிலையம் வைத்திருந்தார். அது தற்போதைய காலத்து விமானம், விமான நிலையம் போன்றதல்ல. பழங்கால இலங்கை மக்கள் மற்றும் இந்தியர்கள் சிறப்பான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்துள்ளனர். இதுதொடர்பாக நாம் சிறப்பான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் முக்கியமாக இருக்கும் இந்த ஆய்வில் இந்தியாவும் பங்கற்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவைத்துள்ளார். இந்த ஆய்வுக்கு ஆதரவாக ஷாஷி மட்டும் பேசவில்லை. இலங்கையின் முக்கியமான சுற்றுச்சூழல் கட்டிடக் கலைஞர் சுனிலா ஜெயவர்த்தனே எழுதிய த லைன் ஆஃப் லங்கா – தீவின் கட்டுக்கதைகள் மற்றும் நினைவுகள் என்ற புத்தகத்தில் ராவணனின் விமானச் சேவை குறித்து எழுதியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த சுனிலா, ‘தற்போதைய உலகில் ராவணனின் விமானம் என்பது கற்பனையானது. தற்போதுள்ள படித்த இளைஞர்கள் எல்லாருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் கடந்த நூற்றாண்டில் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியும். ஆனால் மேற்கத்திய நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர்களாக இருந்துள்ளனர் என்ற கருத்து கடந்த சில நூற்றாண்டுகளாக நம் மனதில் பதிந்துள்ளது. பண்டைக் கால விமானம் குறித்த எழுத்துகள் மிகவும் விரிவானவையாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உள்ளது. ஆனால், அது கட்டுக்கதை என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். அவருடைய மாமா இலங்கையின் நவீன விமானி மறைந்த ரே விஜிவர்த்தனேவும் ராவண கால விமானப் போக்குவரத்து என்ற கருதுகோளை நம்புவதாக தெரிவித்தார். சுனிலாவின் கூற்றுப்படி, தொட்டுபொலகந்தா, உசன்கோடா, வீஹீரங்கதோடா, ருமசல்லா, லகீகலா ஆகிய பகுதிகளில் விமானநிலையம் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார். ராவணன் மற்றும் அவனுடைய ஆட்சி குறித்து இலங்கையில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ராவணனை பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய பெயரில் செயற்கைக்கோளை ஏவி ராவணனுக்கு பெருமை சேர்த்துள்ளது இலங்கை அரசு.

–SUBHAM—

TAGS- ராவணன் விமானம், ஆராய்ச்சி , விண்கோள் ,இலங்கை அரக்கன், சம்பந்தர் ,கடும் தாக்கு, 

நாணிக் கண் புதைத்தல்—1 (Post No.10,351)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,351

Date uploaded in London – –   18 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நயம்பட உரைத்தல்           

நாணிக் கண் புதைத்தல்–1

B.Kannan, Delhi

அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் நமஸ்காரம். வணக்கம் பல.

இன்று நாம் பார்க்கப் போவது அகத்துறையைச் சார்ந்தக் கோவை இலக்கியத்தில் பெரிதும் பேசுபொருளாக விளங்கும் ஒருதுறைக்கோவைப் பாடல்களைப் பற்றித்தான். பாடும் புலவர்களுக்கு மட்டுமின்றி அவற்றைக் கேட்போருக்கும்

“இன்பத் தேன் வந்து பாய்ந்திடுமே காதினிலே!”, உள்ளமும் இறக்கைக் கட்டிப் பறந்திடுமே காற்றினிலே!!

நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் கல்வி வளர்ச்சி அடைவதற்கு முக்கியக்  காரணமாக இருந்தவர்கள் புலவர்களும், கவிஞர்களும் ஆவர். கவிராயர் எனப்படுபவர் தமிழ் மொழியில் கவி இயற்ற வல்லவருக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். தமிழ் மொழியைப் பேண கவிராயர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். ஏட்டுச் சுவடிகளைப் பாதுகாத்தல், அச்சிலேற்றல் ஆகிய முக்கியப் பணிகளை இவர்கள் செய்தார்கள். அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்குரிய உதவிகளை வழங்கி அவர்களை ஊக்கமளித்து வந்தவர்கள் மன்னர்களும், ஜமீன்தார்களும், பிரபுக்களும் ஆவார்கள். சேர, சோழ, பாண்டியர்களும் குறுநில மன்னர்களும் தங்கள் அரசவைகளில் பல புலவர்களை ஆஸ்தானக் கவிகளாக அமர்த்தி ஆதரித்தனர். அப்புலவர்களும் பற்பலத் தமிழ் நூல்களை இயற்றி, மன்னர்களின் புகழ் பார் எங்கும் பரவச் செய்தனர். புலவர்களால் பாடப் பெறாவிட்டால் தங்களுக்கு மதிப்புக் குறைவென்றும், வாழ்க்கைப் பயனை இழந்தது போலாகும் என்றும் கருதினர். புலவர்களுக்குப் பல வகைப் பரிசில்களும், மானியமாகக் கிராமங்களையும் அவர்கள் அளித்துள்ளனர்.

இராமநாதபுர சமஸ்தானத்தை அரசாண்ட சேதுபதி மன்னர்கள் தமிழ் வளர்க்கும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். அவர்களுள் தளவாய் இரகுநாத சேதுபதி (1645-1676) புலவர் பாடும் புகழுடையோராக விளங்கினார்.அவர் தமிழ் நயம் அறிந்து பாராட்டும் வள்ளல். அமிர்த கவிராயர், அனந்த கவிராயர், சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர் முதலியவர்கள் அம்மன்னரின் அரசவையை அலங்கரித்தனர். அமிர்த கவிராயர் 

சிவகங்கையைச் சார்ந்த ‘பொன்னங்கால்’ எனும் ஊரில் 17-ம் நூற்றாண்டின் முற் பகுதியில் பிறந்தவர்.  சைவ சமயத்தைச் சார்ந்த வேளாண் மரபினர்.  

கோவை இலக்கியம் பாடிய புலவர்கள் அகத்துறையைச் சார்ந்த பாடல்களை வரிசைப்படுத்தி  ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர் போலக் கோவையாகப் பாடி உள்ளனர். அகப்பொருள் துறைகள் பலவற்றை நானூறு பாடல்களில் பாடுவதற்குப் பதில் ஒரே ஒரு துறையை நானூறு பாடல்களில் பாடும் மரபும் ஏற்பட்டது. இவ்வகையில் தோன்றிய இலக்கியத்தை ஒரு துறைக் கோவை என்பர். தலைவன் தன்னைப் பார்த்ததை அறிந்த தலைவி நாணித், தன் கண்களைக் கைகளால் மூடிக் கொண்டாள் என்பதே இத்துறையின் பொருளாகும். இப்பாடல்கள் அனைத்திலும் சிலேடை நயம் பொருந்தியிருக்கும். தலைவி கண்மூடி நின்று, தலைவன் தன் வருத்தத்தைக் கூறுவதால் இது ‘இடையூறு கிளத்தல்” எனவும் அழைக்கப்படுகிறது. இறுதியில், கற்பு நிலையில் கூடி மகிழ்ந்து இல்லறம் நடத்துவதே கோவை இலக்கி யங்களின் முடிவுரையாகும் 

அமிர்த கவிராயரின் நூல் “நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒரு துறைக் கோவை” எனவும் “இரகுநாத சேதுபதி ஒரு துறைக்கோவை” எனவும் வழங்கப்படுகிறது. இந்நூலின் 311 பாடல்கள் தற்பொழுது காணப்படுகின்றன. பாடல் 311 முதல் 399 வரை மொத்தம் 89 பாடல்கள் கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் மகாவித்துவான் இராமசாமி நாயுடு அவர்களின் மூல உரையையொட்டி, தமிழ்ப் பண்டிதர் சொக்கலிங்கம்பிள்ளை என்பார் இந்நூலுக்கு விரிவான உரை எழுதியுள்ளார். எங்கே வேண்டுமோ அந்தச் செய்யுட்களுக்கு மாணிக்கவாசகரின் ‘திருக்கோவையாரில் இருந்தும், திருவள்ளுவரின் குறள் பாக்களிலிருந்தும், உவமான சங்க்ரகம் தொகுப்பிலிருந்தும், புகழேந்தியாரின் இரத்தினச் சுருக்கத்திலிருந்தும் பொருத்தமானப் பாடல்களை மேற்கோள் காட்டியிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கிறது.  

பின்னாளில், பாஸ்கர சேதுபதி (1888-1903) காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய மகாவித்துவான் ஸ்ரீ ரா.ராகவவையங்கார் (1870-1946) அமிர்த கவிராயருக்கு இணையாக அதே அகப்பொருளில், பாஸ்கர சேதுபதியின் குமாரர் முத்துராமலிங்க ராஜராஜேஸ்வர சேதுபதியாரின் மீது சுவைபட 400 பாடல்கள் பாடியுள்ளார்

ஒருதுறைக் கோவைகளில், நாணிக் கண் புதைத்தல், வெறி விலக்கல், பாலனைப் பழித்தல், புறங்காட்டல் ஆகியத் தலைப்புக்களில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இது ஒருதுறைக் கோவை என்றாலும், சில செய்யுட்களில் வேறு துறைகளைப் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன–வழி வினாதல் (4), நடுங்க நாட்டம் (5), புறவொடு புலம்பல் (7), மடற்றிரம் (16), பொருள்வயிற் பிரிவு (39), கெடுதி வினாதல் (272). 

கவிராயரின் பாடல்கள் எழுந்த விதத்தைப் பார்ப்போம்……

அரண்மனை நந்தவனத்தில் ஒருநாள் மாலைப் பொழுதில் தளவாய் சேதுபதி தம் புலவர் பெருமக்கள் கூறும் பாடல்களைக் கேட்டவாறு உலவிக்கொண்டிருந்தார். அப்போது மன்னர் புலவர்களைப் பார்த்து அகப்பொருள் துறையுள் ஏதேனும் ஒன்று பற்றி பாடல்கள் பல பாட இயலுமா? எனக் கேட்டார். 

அதற்கு ஒவ்வொரு புலவரும் மிகுந்த ஆவலுடன்  பத்து, இருபது, முப்பது பாடல்கள் இயற்ற முடியும் எனக் கூறலாயினர். ஏனெனில், இத்துறையில் தலைவன்-தலைவியின் ஊடல்,கூடல் பற்றிக் கிறங்க வைக்கும் செய்யுட்களைப் பாடி மன்னர் மனதைக் கிளுகிளுக்க வைத்துப் பரிசில்களைப் பெற முடியுமே! உடனே தன்னால் நூறு பாடல்கள் பாட முடியும் என மன்னரின் அபிமானத்தைப் பெற்ற அமிர்த கவிராயர் கூறினார். கவிராயர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சில அவைக்களப் புலவர்கள் நானூறு பாடல்கள் பாடுமாறு கூறினர். இதில் எப்படியும் அவர் தோற்றுவிடுவார் என்றே அவர்கள் எதிர்பார்த்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமிர்த கவிராயர், “நானூறு பாடல்களைக் கட்டளைக் கலித்தொகையில் புனைந்து அதுவும் ஒரே பக்கத்தில் எழுதி முடிப்பேன்!” என்றார். 

“நாணிக் கண்புதைத்தல்”என்னும் துறையில் பதினைந்து நாட்களில் நானூறு பாடல்களைப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்! ஒவ்வொரு பாடலின் முதல் இரண்டடிகளில் அரசனுடைய பெருமைகளையும் பின்னிரண்டடிகளில் துறைப்பொருள் இருவித அர்த்தம் அமையுமாறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு செய்யுளிலும் வெவ்வேறு கற்பனைகளை அமைத்து நானூறு பாடல்கள் இயற்றி அமிர்த கவிராயர் அப்பிரபந்ததை முடித்தார். அதன் இனிமையை அரசரும் அரசரைச் சார்ந்தோரும் புலவர்களும் அறிந்து இன்புற்ற‌னர். சிறந்த நூல்களை அரங்கேற்றுதல் பழைய கால வழக்கம். அரங்கேற்றம் பெரிய திருவிழாவைப்போல நடைபெறும்.அமிர்த கவிராயருடைய பிரபந்தமும் அரங்கேற்றப்பட வேண்டுமென்பது பெரும்பாலானப் புலவர் பெருமக்களுடைய விருப்பமாக இருந்தது. அரசர் அது மிகச் சிற‌ப்பாக ந‌டைபெறுவதற்குரிய காரியங்களைச் செய்யும்படி மந்திரிகளுக்கு உத்தர விட்டார்.

உள்ளூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பலர் அர‌ங்கேற்ற விழாவிற்கு வந்திருந்தனர். பல கனவான்களும் புலவர்களும் கூடியிருந்த மகாசபையில் ஒருதுறைக் கோவையின் அரங்கேற்றம் தொடங்கப்பட்டது. அரசர் தலைமை ஏற்க ஒவ்வொரு செய்யுளாகக் கூறி அமிர்த கவிராயர் பொருள் சொல்லி வந்தார். ஒவ்வொரு செய்யுளும் ஆனவுடன் அரசர் தங்கத்தால் செய்யப்பெற்ற *பொன் தேங்காய் ஒன்றை (எலுமிச்சம் பழம் எனக் கூறுவதும் உண்டு) புலவருக்குப் பரிசாக உருட்டி வந்தார். சில செய்யுட்கள் ஆயின. மேலே ஒரு செய்யுளைச் சொன்னபோது அனைவரும் அதன் பொருட்சிறப்பில் மனதைப் பறிகொடுத்து விட்டனர். மற்ற‌ச் செய்யுட்களைக் காட்டிலும் கவிராயருடைய திறமை அதில் அதிகமாக வெளிப்பட்டது. அதனைக் கூறி முடித்தவுடன் அரசர் வழக்கம் போலவே பொன் தேங்காய் ஒன்றை உருட்டினார். அப்பொழுது அருகில் இருந்த புலவர் ஒருவர், “இச்செய்யுள் மிகவும் அருமையாக, உள்ளத்தைக் கவர்வதாக அமைந்துள்ளது. இதை மகாராஜா அவர்கள் ந‌ன்றாக உடைத்துப் பார்த்து இதன் சிறப்பை உணரவேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட அரசர், “நாம் நன்றாக இதன் சுவையை உணர்ந்தோம். இதற்கு      உருட்டியத் தேங்காயை உடைத்துப் பார்த்தால் அது தெரிய வரும்” என்றார். உடனே அந்த தேங்காயை உடைத்துப் பார்த்தார்கள். அதனுள்ளே மாணிக்கப் பரல்கள் இருந்தன. அரசர் வரிசைய‌றிந்து பரிசளிக்கும் திறமையை அனைவரும் அறிந்து வியந்து, மகிழ்ச்சிப் பொங்கப் பாராட்டினர். பிறகு அரங்கேற்றம் இனிது நிறைவேறியது.

இதிலுள்ளப் பல செய்யுட்களில் பொதிந்துள்ளச் சொற்பொருள், நடைநயம் படிப்போரை மகிழ்விக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் உண்டாகாது. மங்கையரின் கண்,அதரம்,மார்பகம் ஆகிய அங்கங்களை உபமான, உபமேயத்துடன் விளக்கியும், மங்கையரின் கஜகர்ண, கோகர்ண சாகசங்களைக் கேட்போர், படிப்போர் உள்ளத்தைக் கிறங்கடிக்கும் விதமாக நயம்பட வர்ணித்துச் செல்கிறார். 

“கண்மூடி யோகியர் போலநின் றீரிக் கருத்தினுக்கு 

விண்மூடிய வரைக் கைவிடி லேதம் விளைவிக்குமே!” (27), 

இதில் முதல் வரி நாணிக் கண் புதைத்தலையும், இரண்டாம் வரி, மார்பகம் வெளிப்பட்டதையும், மூன்றாம் வரி, தலைவனுக்குத் துன்பம் விளைவிப்பதையும் சுட்டுகிறது. நாணத்துடன் கண் புதைத்து நிற்கும் தலைவியை நோக்கி ஏக்கமுடன் வினவுகிறான் தலைவன் என்கிறார் கவி.

“தோளும் கரும்பும் எனது ஆருயிர் வந்து சூறை கொள்ள, நீளும் கணை கொண்டு நின்றால் எவ்வாறு உயிர் நிற்கின்றதே!” (70). 

இதில், தோள்= மார்பகத்தையும், கரும்பு=இதழ், மன்மதன் வில், கணை=கண். ‘உனது ஸ்தனம், மன்மதனின் கரும்பு வில் போன்ற இதழ் இரண்டும் என் மனதைப் பறிக்க இருக்கையில் நீ கண் பொத்தி நின்றால் நான் உயிர் வாழ்வது எப்படி?’ என்றும் மருகுகிறான். பின்னொரு இடத்தில்,  

 மஞ்சாங் கருதிலர் போர்ப்படை மேற்சண்ட மாருதம்போல்

 விஞ்சாங்க மூல பலரகு நாதன் வியன்சிலம்பிற்

 பஞ்சாங்க மோதி மறைகாட்டிச் சொர்க்கமிப் பாற்படுத்தி

 யஞ்சாங் குலத்தவர் பார்ப்பாரைச் சேர்ந்த ததிசயமே     (138)   

இப்பாடலில் “அஞ்சாங் குலத்தவர் பார்ப்பாரை சேர்ந்த அதிசயமே” என்று இறுதிப் பாடல் அடி வருகிறது. இதில் அஞ்சாங்குலம் என்பது கையையும் (அங்குலம்=விரல், ஐந்து விரல்கள் கொண்டது) ஆறாம் குலம் (ஆறறிவில் ஒன்று=பார்த்தல்) என்பது கண்ணையும் குறிக்கும். பார்ப்பார் கண் வழியே என்பதால் அச்சொல் கண்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது. கைகளால் கண்களைப் பொத்திக் கொண்டஅதிசயத்தைப் பாரீர் என்கிறான் நாயகன்! 

மேலும்,”பஞ்சாங்கம் ஓதி” என்றால் ஐவகை மயிர்முடியை உடையாளே என்பதாகும். ஓதி=தலை முடி. வணர் ஒலி ஐம்பாலர் =வளைந்த தழைத்த ஐவகை முடி பகுப்பினை உடைய பெண்கள் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதாவது ஒரு பெண் தன் கூந்தலை,முடி, கொண்டை, குழல், சுருள், பனிச்சை என ஐந்து வகைகளாக முடியிடுகிறாள்.

மலையின் உச்சிப்பகுதியை முடி என்கிறோம். அதுபோல ஒரு பெண் தன் கூந்தலை மலையின் முடியைப்போலத் தன் தலையுச்சியில் வைத்து முடிவது முடி (அளகம்) எனப்படும்.(இளவரசி குந்தவை பிராட்டி) கொண்டை என்பது நமக்குத் தெரியும். கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது (ஆண்டாள் நாச்சியார்). கூந்தலை மலர்ச்சரங்களோடு வைத்துப் பின்னிச் செருகினால் அதற்குச் சுருள் என்று பெயர். கூந்தலை அள்ளி முடிந்தால் அதற்குக் குழல் என்று பெயர். கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொண்டால் அதற்குப் பெயர் பனிச்சை. இத்தகைய ஐவகைக் கூந்தல் முடிமுறைகளையும் ஐம்பால் என்கின்றனர். அதுதான் இங்குக் குறிப்பிடப்படுகிறது.

ஓர் ஊசி மேல் (சிறுத்த இடை), இரண்டு பம்பரங்களை (கொங்கை) உறுதியாய் இருத்துகின்ற உபாயம்(169),  மார்பகத்தை யானைக்கு ஒப்பிட்டு கஜகர்ண வித்தை கண்டு மகிழ்ந்தோம், கண்களைப் புதைத்துக் கொண்டால் பெண்களுக்கே உரிய கண்ணால் (கோ=கண்)சேதி சொல்லும் கோகர்ண வித்தையின் அழகை எப்படிப் பார்ப்பது?(170), ‘பந்தாடல் கண்டன மம்மானை யாடலும் பார்க்க’ (133) என்ற வரியில், பந்தாட்டத்தின் போது அவள் ஸ்தனங்களின் அசைதலைக் கண்டு களித்தோம், அம்மானை ஆடல் (அ+மான்+ஐ+ஆடல்) விளையாடுகையில் மங்கையின் அழகியக் கண்கள் போகும் போக்கு, கவர்ச்சிகர சரீர அசைவுகளையும் பார்த்து ரசிக்க,கண்மூடி யிராமல் அனுமதிப்பாயா,தேவி! என வேண்டுகோள் விடுக்கிறானாம் தலைவன். இங்கு மான்= பெண், கண் என்று இரு பொருள் கொண்டுச் சொல்லப்படுகிறது.

இது போன்ற மனதைக் கவரும் அடைமொழிகள் (EPITHETS) ஏராளமாய்க் குவிந்துக் கிடக்கின்றன.

மேலும் சில சுவாரசியமானச் செய்யுட்களை அடுத்துக் காண்போம்…… 

                ——————————————————————–

tags- நாணிக் கண் புதைத்தல், இரகுநாத சேதுபதி, கோவை இலக்கியம், அமிர்த கவிராயர்

விதியா மதியா! மதியையே விதியாக்கு, வெல்வாய்! (Post No.10,350)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,350

Date uploaded in London – –   18 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகவாசிஷ்டம்

விதியா மதியா! மதியையே விதியாக்கு, வெல்வாய்!

ச.நாகராஜன்

விதியா, மதியா எது வெல்லும்?

எப்போதும் எது வெல்லும்? விதி தான்! இதற்கு ஒரு கேள்வி வேறா!

இல்லை, இல்லை, ஊழையும் உப்பக்கம் காண்பர் – உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்கிறாரே வள்ளுவர்?

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்றுபவர்  (குறள் 620))

ஔவையார் வேறு ஊடே வந்து சொல்கிறார் மதியே விதி ஆகி விடும் என்று?

அப்படி அவர் என்ன சொல்கிறார்?

சிவாய நம என்று சிந்திரு ருப்போர்க்கு

அபாயம் ஒரு நாளும் இல்லை – உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்

புரிகிறது, இறைவனைத் தொழுதால் அந்த பிரார்த்தனை புரியும் மதி விதியாகி நற்பயன் அளிக்கும்.

இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க யோக வாசிஷ்டத்தை அணுகலாம்.

அதில் இல்லாதது வேறு எதிலுமில்லையே!

யோக வாசிஷ்டம் கூறுவது :-

நமது முந்தைய முயற்சிகளே (செயல்களே) விதி எனப்படுகிறது!

நமது முந்தைய செயல்களின் விளைவு தவிர வேறு விதி என்று ஒன்றும் கிடையாது.

நமது முயற்சியை வைத்தே நமது சாதனைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகவே நமது முயற்சியே விதி ஆகும்.

நமது முந்தைய முயற்சிகளும் இப்போதைய முயற்சிகளும் ஒருவேளை ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தால் – வேறாக இருந்தால் –  இரு காளைகள் ஒன்றுக்கொன்று சண்டை போடுவது போல இருப்பின் அந்த இரண்டில் எது மிக்க சக்தி வாய்ந்ததாக இருக்கிறதோ அதுவே வெல்லும்.

கடந்த காலமோ நிகழ்காலமோ செய்யப்படும் முயற்சிகளில் எது வலியதோ அதுவெ வெல்லும்.

மனிதன் தனது விதியைத் தனது எண்ணங்களால் தானே நிர்ணயிக்கிறான்.

விதியின் படி நடக்க முடியாமல் இருப்பதைக் கூட அவன் நடக்கச் செய்வான்.

ஆகவே ஒருவன் தனது பழைய கால முயற்சியால் ஏற்படவிருக்கும் கெட்ட விதியைக் கூட இப்போதைய அதிக வலிமை பொருந்திய் முயற்சியால் மாற்ற முடியும். அதன் பல்லை உடைக்க முடியும்.

நல்ல விதமான முயற்சிகளால் இந்த உலகில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.

வரிக்கு வரி வள்ளுவரின் குற்ளை அப்படியே இப்படி யோக வாசிஷ்ட்ம் ஆமோதிக்கிறது; வழி மொழிகிறது.

யோகவாசிஷ்டம் மனித முயற்சியை பௌருஷம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

பௌருஷேண சர்வமாசாத்யதே |

மனித முயற்சியால் அனைத்தும் அடையப்படுகிறது.

அத்ரைகம் பௌருஷம் யத்னம் வர்ஜயித்வேதரா கதி: |

சர்வ துக்க க்ஷயப்ராப்தௌ ந காசிதுபபத்யதே ||

இங்கு மனித முயற்சி என்ற ஒன்றை விட்டு விட்டு வேறு எந்த வித பொருத்தமான ஒரு வழியாலும் எல்லாத் துன்பத்திற்கும் ஒரு முடிவைக் கட்ட முடியாது.

சர்வ துக்க க்ஷயத்திற்கு – துக்க நாசத்திற்கு வ்ழி பௌருஷம் மட்டுமே தான்!

இஹ ஹீந்தோரிவோதேதி ஷீதலாஹ்யதனம் ஹ்ருதி |

பரிஸ்யந்த பலப்ராப்தௌ பௌருஷாதேவ நாந்யத: ||

இங்கு மனித முயற்சியால் செய்யப்படும் நிறைய செயல்களின் விளைவாக வரும் பரிசினால் இதயத்தில் சந்திரனைப் போன்ற குளுமை கிட்டும்; வேறு எதனாலும் கிடைக்காது.

 ந அன்யத – நான்யத – வேறு எதனாலும் அல்ல என்று வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.

இன்னும் பல ஸ்லோகங்களில் விதி மற்றும் மதி பற்றிய விளக்கம் தரப்படுகிறது.

The glory of human effort and Destiny என்பது பற்றி யோக வாசிஷ்டத்தைப் படித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

***

tags– யோகவாசிஷ்டம், விதியா மதியா

WHO IS LONDON SWAMINATHAN?-6; WOMEN HAVE MORE POWER OF OBSERVATION(Post 10,349)

London Swaminathan speaking in one of the book launch events in London. I have presided over sevral Book Launching events in London. Sri Lankan author Rajeswari Balasubrahmanyam called me to speak for all her novel/ book launches

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,349

Date uploaded in London – –   17 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FIRST LET ME STAT WITH SOME GOOD NEWS.  I wrote yesterday that my London friend is a bit hesitant to write his auto biography. Last night I received a text message informing me that he is ready to write and asked me where to start.

Do I have to write like this? My name is S Swaminathan; I was born in Keezvalur near Nagappattinam on a Skanda shasti day that is 6-11-1948. That is why I am called Swaminathan.

No, no.

I learnt a trick from Soviet science books and used that technique in the BBC World Service and I stood first among the 37 languages.

What is it?

Say something interesting to start with and then go into minute details. Ya .Perelman’s book such as ‘Physics for Entertainment’, ‘Astronomy for Entertainmen’t, ‘Math’s for fu’n, ‘150 things about Chemistry’– all these are very interesting books.

Indian books on Moon will begin…

The moon is XYZ distance from our earth; the orbit takes XYZ days. All stat.s, all boring numbers.

But Russian books will begin with………

HAVE YOU EVER THOUGHT OF AN EARTH WITHOUT A MOON? WHAT WOULD HAPPEN IF THERE IS NO MOON?

Then you start thinking; the answers will follow. They will catch you with interesting details, puzzles, and riddles.

I used the same technique in the BBC Tamilosai for 5 ++ years. I threw a challenge to my listeners: Ask me any question about anything under the sun on the earth. Listeners asked me from A to Z; from astronomy to zoology; I took 20 minutes to answer 3 questions every week.

I start with……

The answer to your question in one line is XYZ.

Then I will say……….

Before I go into the details, I wanted to tell you one interesting thing about XXXX

Even a person with no interest in that subject would listen to you.

In a particular year the Audience Research Bureau of the BBC World Service sent a report to the BBC saying Swaminathan’s Q and A programme received 19000+++ letters from our listeners and I was congratulated by one and all for this achievement. The BBC team came and took my picture and sent it to all Tamil newspapers in India, Sri Lanka, Malaysia and Singapore. They published my profile in the in- house BBC magazine.

So the answer to any one who wants to say something, please start with some interesting thing which would attract everyone.

I REQUESTED GREAT TAMIL SCHOLAR SEKKIZAR ADIPPODI  T N RAMACHANDRAN TO LAUNCH LONDON SATH SANGAM’S TAMIL SCHOOL IN CANONS HIGH SCHOOL IN LONDON. I AM WELCOMING HIM.
SRI VELUKKUDI KRISHNAN VISITED LNDON TWICE. ONE OF HIS DISCIPLES INVITED HIM. BUT I ARRANGED ALL HIS LECTURES IN JULY 2007.

My nephew Krishna Prakash in California is an avid reader and listener. He listened to hundreds of hours of lectures on Upanishads and Bhagavad Gita. He gave me his book list year wise in one of his e mails. It was an amazing list of fiction and non- fiction. He has put it in his website. That is a good start. Write something—the countries you visited, the famous people you met, the interesting things you watched on TV, the books you read or liked. Even if my nephew writes a few lines on each book, he read it would make a massive literature.

Xxx

NOW TO WIVES OF THE WORLD

Women are keen observers. They watch the movement of both men and women. My wife once asked me , Can you buy me the XYZ necklace, like the one worn by your colleague?  Though I worked with my lady colleague for years, I never noticed the TYPE of necklace she wore. But she didn’t believe me; how come you have never seen it.

We men, see it but with blind eyes!

It is not with women only; they knew all the men’s dress. They talk among themselves, Oh you mean the person who came in blue suit today; oh do you mean the guy who came with loose tie today? etc

God has given this extraordinary talent to them. I do enjoy the beauty of a woman like I enjoy the beauty of nature. But knows not the jewellery or dress they wear.

Famous poet John Keats said, “A thing of beauty is joy for ever”.

I don’t even remember what I wore yesterday or what my wife wore when she came to a wedding reception with me. Observing others is a good skill. People who interview you for a certain job notice how you behave in a tense circumstance like job interview, how you have tied your shoelace etc.

Having said that I would give you some interesting anecdote in my life. I have already written it in Tamil or English in this blog. Sorry for the repetition.

One day I was looking very sad. The Indian Express team entered my house which they do every day to pick up my father to Dinamani office. The manager, circulation manager, accountant, sometimes the Editor of Indian Express all raid our kitchen, check every tin  and bottle there for snacks made by my mum. They had full freedom to take the ‘war booty!’

While going back they looked at me.

Hey, why are you looking sad?

I did not answer their question. My dad told them that I  did not get M.Sc. Botany seat in Madurai University. Then the manager asked me,

Do you know anything about editing?

Now I became vociferous, Yes,Yes, I do open all the news messages that come every morning and I sort them out before dad comes to the office desk.

Then all of them shouted in chorus,

“Come on, come into the car with us”.

I told them sorry I did not wear proper dress.

“Hey, we TOLD you to board the car”.

 I went with my SSLC certificate, PUC Certificate. The Degree certificate will come only after a few months- after the convocation.

In the office, the senior most sub editor gave me some test matter. In the office, I showed my SSLC (School Final) certificate to check my DOB.

I went home in the evening with my dad in the office car. He was by boss, News Editor Madurai, V Santanam.

Next day the manger phoned me……

Please bring your SSLC certificate. We wanted to photocopy the page of your DOB.

I was looking for it at home. It was not there. I turned the house upside down. Everybody joined me in the Great Search. No , It was not there.

Another phone call came from the manger.

Stop searching. You dropped it in the garden of Dinamani office yesterday (It is known as Pankajam Gardens). We are keeping it safe. Don’t forget to take it back when you come to office today. Everyone in my home was laughing except me. They laughed at me.

Men lose many things which a woman never loose.

They are very good observers.

To be continued

…………

…………

tags–   london swaminathan 6, velukkudi, TNR, 4 books

year 2005

TAMIL AND ENGLISH 2700 YEARS AGO- PART 70 (Post No.10,348)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,348

Date uploaded in London – –   17 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON 9TH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள்பகுதி -69

Tamil and English Words 2700 Years Ago- Part 70

8-2-83

VARTIKA gives Sthaali in example

Sthaali/Pot becomes THAAZI /Pot in Tamil

ஸ்தாலி = தாழி , முதுமக்கள் தாழி 

Xxx

8-2-84

Panini uses Duurath for distance

Dhooram for distance is used in almost all Indian languages even today. தூரம்

Hoothe is used by Panini in the same sutra.

Hoothe= hoot ?? (hooting of owls)

Xxx

8-2-85

Panini gave us two words to call or address a person at a distance. We use them even today in English and Tamil

Hey , hai = these Sanskrit words become Ee in Tamil

ஹேய் , ஹை/ E MAIL , ஏ ராமா

In e mails we use Hi

Xxx

8-2-100

Prasna for question is used by Panini here.

Prasna becomes Question in English and

Vinaa in Tamil (P=V)

பிரஸ்ன = வினா (ப=வ)

Xxx

8-3-1

Panini , giving Vedic grammar, says S becomes R (Sutra 8-2-71) and here T becomes R

Sri Lankan Tamils write Cricket as Crickerr

Brent council in London as Brenrr

T= R (In Tamil poems also we see this T=R)

பிரென்ட் = பிரென்ற் (இலங்கைத் தமிழர் பயன்பாடு)

கிரிக்கெட் -= கிறிக்கெற்

Xxx

8-3-46

Panini gives the examples of Paatra/vessel/Utensil and Kumbha/pot

Even today Paatra for vessel and Kumbha for pot used by Tamls

Pooranakumbha, Kumbabisheka etc

Paatram – you can see Tamil boards with Pittalai Paatram virkum katai, Venkala Paatram………

Paatra might have come from Patram/leaf; in the olden days they were using vessels made out of Patram/leaf.

Even today Donnai (leafy cups)Panai Mattaai for toddy are used

பாத்திரம், கும்பம்; கும்பாபிஷேகம்; பூரண கும்பம்.

பத்ரம்/ இலை= பாத்திரம்

பனை மட்டையில் பதநீர், கள் ; தொன்னையில் பாயசம்

Xxx

8-3-53

Sixth case in Tamil and Sanskrit is OF (Genitive or Possessive case)

In Tamil instead of Udaiya/of I can use N

Example – Veettin  Kathavu or Veetuk kathavu for Door of the house.

In Sanskrit they use S. even in English we see it as ‘s

Book of Rama= Rama’s book

This rule is given by Panini!

ஆறாம் வேற்றுமை

சம்ஸ்க்ருதத்தில் அஸ்ய என்பதற்குப் பதிலாக எஸ்;

தமிழில் உடைய’’ என்பதற்குப் பதிலாக இன் அல்லது என் ;

எ .கா . ராமனுடைய வீடு= ராமன் வீடு அல்லது ராமனின் வீடு

ஆங்கிலத்தில் சம்ஸ்க்ருதம் போல எஸ் ; ஹவுஸ் ஆப் ராமா = ராமாஸ் ஹவுஸ்

In the same Sutra Panini gives Paara for Far, afar

Sri Lankan Tamils use Paarathooramaana even today

This Far ( for  Faraway, afar is in English Para. Even Kalidasa used it for faraway islands (Paradwipa)

பாரதூரமான (இலங்கை வழக்கு)

Xxx

8-3-62

Panini uses swith for Sweat

Swath for Taste it  (S=T; sion=tion)

Taste and Sweat are derived from Sanskrit words

These words become  Ver (sweat) Suvai paar(taste; T=S)

வேர் = வேர்த்து

சுவைத்துப் பார்

Xxx

8-3-65

We have already seen

Soo = juice

Stup= sig= stanza in song

Stu = Thuthi in Tamil துதி

Staa= Stop

Siv = sprinkle is the meaning; may be related to Sieve??

Senaya=  Siege???

Unless we compare it with other European languages we cant say it for sure. There may be some missing links in other euopean languages. Sena= army

Xxx

 It is very interesting to see certain changes are seen in during Sangam period, 2000 years ago.

uPAma becomes uVAmai in Tolkaapiam in Tamil

saBHA becomes aVAi in Tamil (Lok Sabha, Rajya sabha)

suPArna becomes uVAnan in Tamil

ALSO

Svarga becomes Thurakkam in Sangam period (S=T)

SENA = THAANAI ; S=T

மிகவும் அதிசயமான விஷயம் சங்க காலத்திலேயே ப = வ மாற்றம்; ச = த மாற்றம் பதிவாகியுள்ளது. அப்படியானால் அப்பூதி இது பற்றி ஒரு இலக்கண விதி இருந்திருக்க வேண்டும்

உபமா ( ரிக் வேதம், பாணினி) = உவமை இயல் (தொல்காப்பியம்)

ஸபா (ரிக் வேதம்) = அவை (லோக் சபா, ராஜ்ய ஸபா, தமிழ் நாடு சட்டப் பேரவை )

சுபர்ணன் = உவணன்

சுவர்க்கம் = துறக்கம் ;

சேனா = தானை

ஆக நான் இன்று காட்டும் எடுத்துக்காட்டுகள் சங்க கால புலவர்களுக்கு அத்துபபடி!

தொடரும்

To be continued……………………………

 tags-  Tamil in Panini 70