Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வால்டேர் VOLTAIRE
(1694 – 1778)
வால்டேரின்முழுப்பெயர்FRANCOIS MARIE AROUET. இவர் ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர். புதிய சிந்தனை (AGE OF REASON) பிறந்த காலத்தில் தோன்றிய எழுத்தாளராகையால் அதனுடைய முழுநிறை தாக்கத்தை இவருடைய எழுத்தில் காணலாம்.
வால்ட்டே(ய)ர் என்பது இவரது புனைப்பெயர். உண்மைப் பெயர் பிரான்ஸ்வா மரி அருவே . இவர் 20,000 கடிதங்களுக்கு மேல் எழுதினார். 2000 புஸ்தகங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார்
இந்து மதம்
இந்து மதம் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டவர்.வேதங்கள் என்பது உலகிற்குக் கிடைத்த பெரிய நன்கொடை. இதற்காக மேலை நாடுகள் கீழ்த்திசை உலகத்திற்கு என்றும் கடமைப்பட்டது என்றார்.
இந்துக்கள் அமைதியானவர்கள்; அப்பாவி மக்கள்; மற்றவர்களைத் தாக்கவும் தெரியாது. தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தெரியாதவர்கள் . பைபிளுக்கு நல்ல பதிலடி கொடுக்கவல்லது இந்து மதம் என்றார்
அவரும் உயர்குல இந்துக்களைப் போல மாமிச உணவை வெறுத்தவர். பிராணிகளை வதைக்கக் கூடாதென்று வாதிட்டவர்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தையும் பிரெஞ்சு அரசாங்கத்தையும் தொடர்ந்து தாக்கி வந்ததால் பாரிஸ் நகரைவிட்டு வெளியேற நேரிட்டது.
பணக்கார வழக்குரைஞரின் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். ஏசு சமய சமூகத்தார் – இவருக்கு கல்வி புகட்டினர். இவருக்கு இளம் வயதில் தந்தை கொடுத்த படித்தொகையில் (ALLOWANCE) இவர் சுகமாக வாழ்ந்தார்.
பாரிஸில் உயர்குடி வட்டாரத்தில் இடம்பெற்றார். அந்தக்காலத்தில் LAMPOONS என்னும் நையாண்டிக் கவிதைகளை எழுதுவது ஒரு புதிய வழக்கமாகத் தோன்றியிருந்தது.
அவர் கடுமையாகத் தாக்கி எழுதியதன் விளைவாக சிறைக்கம்பி எண்ண நேரிட்டது. சிறையிலும் அவர் கைகள் வாளாவிருக்கவில்லை. அங்கு முதல் நாடகமான ஈடிபஸ் (OEDIPUS)ஐ எழுதினார். அதை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கவே மேலும் பல நாடகங்களை எழுதினார்.
சிறையிலிருந்து விடுதலையானவுடன் இவர் உயர்குடி வட்டாரத்தில் மீண்டும் மதிப்பைப் பெற்றார். ஆனால் 1726ஆம் ஆண்டில் அவர் எழுதிய மற்றொரு புஸ்தகத்துக்காக மீண்டும் சிறை செல்ல நேரிட்டது. பிரான்ஸை விட்டு வெளியேறுவதாக இருந்தால் விடுதலை தருவதாக அதிகாரிகள் கூறினர். உடனே அவர் இங்கிலாந்துக்குச் சென்றார்.
பிரெஞ்ச் சமூகத்தைவிட ஆங்கில சமுகத்தில் அதிக சுதந்திரம் இருப்பதாக அவர் எண்ணினார். LETTRES PHILOSOPHIQUES என்ற புத்தகத்தில் அதைப்புகழ்ந்து எழுதினார். அவர் பாரிஸ் திரும்பிய பின்னர் இதை வெளியிட்டார். இது புதிய நெருக்கடியைத் தோற்றுவிக்கவே பாரிஸை விட்டு வெளியேற நேரிட்டது. மர்கூயிஸ் து சாதலே MARQUISE DU CHATELET என்ற அழகிய பெண்ணைக் காதலித்து அவரது வீட்டிலேயே குடியிருந்தார். அவருடைய வீடு ஷாம்பைன் CHAMPAGNE வட்டாரத்திலுள்ளது.
1744இல் அவர் PARIS திரும்பிய போது அவருக்கு வெர்சாய் VERSAILLES அரசவையில் இடமளித்தனர். அரசவை வாழ்வு அவருக்கு இன்பம் தரவில்லை. 1749இல் மர்கூயிஸ் இறக்கவே அவர் பிரஷ்யாவின் மன்னர் இரண்டாவது பிரெடெரிக்கின் (KING FREDERICK) அழைப்பை ஏற்று
பெர்லின் நகருக்குச் BERLIN சென்றார். அங்கு அரசவையில் இடம் பெற்றார். ஆனால் இந்த அன்னியரின் நட்பை பல ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. இதனால் பிரெடெரிக்-வால்டேர் நட்பு கரைந்தது. 1753இல் ஏமாற்றவுணர்வுடன் பாரிஸ் திரும்பினார்.
1755ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். பின்னர் FERNEYக்குச் சென்றார். இது ஜெனிவா நகரிலிருந்து சிலமைல் தொலைவில் பிரெஞ்ச் எல்லைக்குள் உள்ளது. இங்கு அவரது புகழ்பெற்றCANDIDE கதை பிறந்தது.
1778இல் 84 வயதான VOLTAIRE பாரிஸ் திரும்பி தனது முதலாவது நாடகமான IRENEஐப் பார்த்தார். அப்போது அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு முதிய வயதில் அவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தை அவர் அனுபவிக்க முடியவில்லை. அதே ஆண்டு அவர் இறந்தார்.
வால்டேர் பிறந்த தேதி -நவம்பர் 21, 1694 இறந்த தே தி – மே 30, 1778 வாழ்ந்த ஆண்டுகள் – 84
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள் எங்கே? – 1
ச.நாகராஜன்
கடவுளைப் பற்றி விவரிக்கப் புகுந்தவர்கள் அவர் விவரிக்க முடியாதவர்; சொல்லுக்கு அப்பாற்பட்டவர் (அநிர்வசனீயம்) என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுவார்கள்.
ஹரி கிஷன்தாஸ் அகர்வால் (Hari Kishandas Aggarwall) என்பவர் நான்கு வரிகள் கொண்ட ஆங்கிலச் செய்யுள்களை ஏராளமாக இயற்றியுள்ளார். பொதுவாக அறப்பண்புகள், இறை சிந்தனை உள்ளிட்ட கொண்ட அவரது நூல்கள் PEACE OF MIND என்ற தலைப்பில் முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று இரு தொகுதிகளாக வெளியாகி உள்ளன. Quiter Moments என்பது அவரது இன்னொரு கவிதை நூல்.
Peace of Mind -இல், கடவுளைப் பற்றி அவர் கூறும் பாடல்களில் சில இவை:-
God is life in all beings,
God is light in all our seeings,
God is Bliss everywhere
God is present everywhere
அழகிய இனிய சொற்களால் கடவுளை விவரிக்கப் புகும் கவிஞர் மேலே தொடர்கிறார்:
God is seated in our hearts,
God looks through our eyes:
God hears through our ears,
God searches Himself in disguise.
கடவுள் எங்கே இருக்கிறார் என்று வெளியில் தேடாதே; உன் உள்ளேயே தேடு, கண்டுபிடிக்கலாம் என்கிறார் அவர்.
To search God outside is to get lost,
Therefore seek God within at all cost;
If God does not exist in us,
God does not exist anywhere else!
கடவுளை மறுக்கும் நாத்திகர்களைக் கேலியாகப் பார்த்து அவர் கூறுவது இது:
Denial of the existence of God,
Is in itself the proof of the existence of God,
One who says: “I have no tongue”,
Is not the one who is mum and dumb!
எனக்கு நாக்கே இல்லை என்று உரக்கப் பேசுகின்றவன் ஊமையோ, பேச முடியாதவனோ இல்லை, அவன் பேச்சே அவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறது அவன் நாக்கை உடையவன் என்பதை! ‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் அந்தச் சொற்களிலேயே ‘கடவுள்’ இருக்கிறானே!
GOD IS NOWHERE என்றான் ஒரு நாத்திகன். அவனது ஆசிரியர் GOD IS NOWHERE என்பதை NOW என்ற இடத்தில் ஒரு கமா போட்டுக் காட்டினார். GOD IS NOW HERE என்று அதிலே கடவுள் வந்து விட்டான்!
To realize God is to realize Oneself,
Devoid of SELF no GOD exists,
Self is the same in all of us,
Self is Omnipresent in each one of us
ஆக தன்னை மறுப்பவனே கடவுளை மறுப்பவன் ஆகிறான்!
God is the hope of the helpless,
God is the existence on all beings,
God is the knowledge on the Universe
God is the bliss in all things.
ஆகவே கவிஞர் தரும் அன்புரை இது:
Surrender to God,
Become one with Him,
Make Him your own
As yours very Self own HIM.
சரணாகதி ஒன்றே எளிய அருமையான வழி!
Like a magician producing by magic
God created the world basic;
Universe is the re- appearance of God,
God manifesting Himself in all and Odd.
He is the controller of the Universe,
He is the regulator in all of us,
He is the Omnipresent power in us,
He is the Light of lights within us.
He is present in all levels,
He is visible at all times,
He is appearing in all Beings,
He is projecting in all lives.
கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை அழகுறச் சொல்கிறார் இந்தப் பாடலில்!
Just as salt pervades the sea,
God pervades the universe;
Just as in the seed the tree is hidden,
Likewise in everyman God is hidden.
கடலில் உப்பு பரவி இருப்பது போல, கடவுள் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கிறான். எப்படி விதைக்குள் மரமானது ஒளிந்திருக்கிறதோ அதே போல ஒவ்வொருவரிடமும் கடவுள் ஒளிந்திருக்கிறான்!
இன்னும் கடவுளைப் பற்றிச் சிறிய சிறிய வார்த்தைகளால் அவர் நன்கு விவரிக்கிறார். அதை அடுத்துப் பார்ப்போம்.
***
அடுத்த கட்டுரையுடன் ‘கடவுள் எங்கே?’ தொடர் முடியும்
For this sutra 2400 year old Varttika adds 12 Notes.
One of them is Hruth from which Heart is derived.
There in NO word for heart in Tamil
(Ullam, Nenjam, Maarbu don’t mean the organ that pumps blood=heart)
ஹ்ருத்= ஹார்ட்= இருதயம்
May be Hruh came from Tamil Kuruththu, but there is no proof to support it.
Kuruththu = Bud; young or tender part of a vegetable
தமிழில் உள்ளம், நெஞ்சம் , மார்பு என்பது இருதயம் என்ற ரத்தம் செலுத்தும் உறுப்பைக் குறிக்காது
ஹார்ட் ஆபரேஷன் செய்து கொள்ளுவோர் இருதயம் என்ற சம்ஸ்க்ருத ச சொல்லை பயன்படுத்தியே ஆக வேண்டும் . ஹ்ருத் என்பது குருத்து/bud வடிவில் இருப்பதால் தமிழே மூலச் சொல்.
ஆனால் அதற்கு என்னால் ஆதாரம் தர முடியவில்லை
Xxx
5-2-123
Urna is given by Panini
Urna becomes Wool
Urna nabhi is spider that gives Nul/thread
So Urna= Wool= Nuul/thread are cognate words
ஊர்ண = wool கம்பளி நூல் = ஊல் /ஆங்கிலம்
ஊர்ண நாபி = நூல் விடும் சிலந்தி
ஊர் = நூல் R=L
Xxx
5-2-130 to 5-2-132
These three sutras contain the words used often in Indian languages
Vayas= vayathu in Tamil = v/age in English
Poorana = full = Muzu; P=M
Suka = Sukam சுக/ம்
Dharma, Seela/character/Varna(Guna)
Varna is not colour a person’s Guna/virtue
5-2-134 also used Varna, not Jaati/caste nor Colour
It is a category .
வயசு, பூரண = முழு
தர்ம = தரம் = அறம்
சீல = ஒழுக்கம்
வர்ண = வகை, பிரிவு, குணம் ; ஜாதியோ தோலின் நிறமோ இல்லை
Xxx
5-2-135
Panini used Pushkara as Tank
In South India still this is used in many temples for Temple Tanks or Theertha/Holy water
எல்லா கோவில்களிலும் புஷ்கரம் = குளம்/தீர்த்தம் உளது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அண்மைக் காலமாக இந்து விரோதக் கும்பல்கள், தமிழ் இலக்கியத்தில் புகுந்து மக்களைக் குழப்பி வருகிறது. தமிழ் இலக்கியம் ஒரு பெரிய கடல் ; சம்ஸ்க்ருத இலக்கியமோ மஹா மஹா சமுத்திரம் ; இரண்டையும் நீந்திக் கரை சேர முடியாது. இதனால் ஏதோ ஒரு பாட்டை எங்கிருந்தோ எடுத்துக் காட்டி ஏதோ உண்மை போல பொய் யைச் சொல்லி விடுவார்கள்
“நான்மறை” என்றால் 4 வேதங்கள் என்று சங்க இலக்கியம் முழுதும் உளது.
சைவப் பெரியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவாரம், திருவாசகம் என்னும் திருமுறைகளை நமக்கு அளித்தனர். அவர்கள் சொன்னது திருமுறை. வேத கால ரிஷிகள் சொன்னது திருமறை.
சில அசட்டுப் பிசட்டு அரைவேக்காடுகளும் , தத்துப் பித்து தான் தோன்றிகளும் ‘நால்வர் சொன்னதே நான் மறைகள்‘ என்று உளறிக்கொட்டி கிளறி மூடிவருகின்றன.
நால்வரும் தோன்றி நான்மறை என்ற சொல் உருவாக அந்த நால்வரும் மறைந்த பின்னர் ஒரு சில நுற்றாண்டுகளாவது ஆகும். அது மட்டுமல்ல. சுந்தரர், மாணிக்க வாசகர் தோன்றுவதற்கு முன்னரே சம்பந்தர் “நான் மறை” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். நால்வர் சொன்ன விஷயங்கள் நான் மறை கண்ட உண்மைகள் என்பதில் ஐயமில்லை ஆனால் அவர்கள் பாடலில் வரும் “நான்மறை” என்ற சொல் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களையே.குறிக்கின்றன. பழைய உரை காரர்களும் அப்படியே உரை செய்துள்ளனர்.
இதோ சில சான்றுகள் –
திருஞான சம்பந்தரின் முதல் திருமுறையில் (தேவாரத்தில்)
இவ்வாறு சம்பந்தரும் அப்பரும் நூற்றுக்கணக்கான இடங்களில் மறை, ருக்கு வேதம், சாம வேதம், 4 வேதங்கள் என்று தெளிவாகப் பாடியுள்ளனர். ஆக தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தத்தில் வருவன ருக், யஜுர், சம அதர்வண வேதங்களே என்பதில் ஐயம் வேண்டாம்.
Xxx
சங்க இலக்கியத்தில் நான் மறை
நான்மறை -பரிபாடல் 9-12, புறம்.6-20, 362-9;
நான்மறை முதல்வர் – புறம்.26-13, 93-7
நான்மறை முதுநூல் – அகம்.181-16
நான்மறையோர் – பட்டினப்பாலை 202
சிலப்பதிகாரம் 15-12, 23-68
நான்மறை மரபு- சிலப்பதிகாரம் 5-175, 28-191
நான்மறை மருங்கு- சிலப்பதிகாரம் 28-176
நான்மறைக் கேள்வி -பரி .திரட்டு 8-8
நான்மறையந்தணர் – சிலம்பு 13-141, மணி 6-169
நான்மறையாளன் – சிலம்பு 28-137
நான்மறையாள- சிலம்பு 11-152; 27-54
நான்மறைமாக்கள் – மணி.13-99
நான்மறைமாக்காள்– மணி..13-69
நான்மறையாளர் – திரிகடுகம் 3-3; ஆசாரக்கோவை-61-1
Xxxx
சங்க இலக்கிய, சிலப்பதிகார உரைகாரர்களும் சம்ஸ்க்ருதத்தில் உள்ள நான்கு வேதங்களையே குறித்துள்ளனர்.
நான் கூறும் புதிய கருத்தோ, எனது கண்டுபிடிப்போ இல்லை; எனக்கு முன்னே பல ஸைவப் பெரியோர்களும் இந்தக் கருத்தைச் செப்பியுள்ளனர்.
ஆகவே நேற்று வந்த சுள்ளான்களை, கள்ள மதம் பரப்ப வந்தோர் என்று கருதி விலக்குக .
–subham—
tags- நான்மறை, குழப்பம் வேண்டாம், சங்க இலக்கியத்தில்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ALFRED TENNYSON
(1809 – 1892)
உலகை அலங்கரித்த கவிஞர்களில் ஒருவரான டென்னிஸன் ஆங்கிலக் அரசவைக் கவிஞனாக (POET LAUREATE) இருந்தார்..
டென்னிஸன் குடும்பமே கவிஞர்கள் குடும்பம். இவரது தந்தை ஒரு சமயப் பிரசாரகர் (CLERGY MAN);கவிஞர்; RECTOR-ஆகப்பணிபுரிந்தார். டென்னிஸன் பள்ளியில் படித்த காலத்திலேயே அவரது அண்ணன் சார்லஸ் (CHARLES) முதல் கவிதைத் தொகுப்பை (POEMS BY TWO BROTHERS) வெளியிட்டார்.
டென்னிஸன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தபோது டிம்பக்ட்டூ (TIMBUCTOO) பற்றிய கவிதைக்கான பதக்கம் (CHANCELLOR’S MEDAL) வென்றார். அவர் எழுதிய முதல் கவிதைப் தொகுப்பு அடுத்த ஆண்டு அச்சாகி வந்தது. 23ஆவது வயதில் அவரது ஆருயிர்த் தோழர் ஹாலம் (HALLAM) அவர்களுடன் ஐரோப்பிய பயணம் புறப்பட்டார்.
1832-இல் ஹாலம் HALLAM இறக்கவே டென்னிஸன் சோகக்கடலில் மூழ்கினார். —- சிறிது காலத்திற்குப் பின்னர் ‘இன் மெமோரியம்’ IN MEMORIAM என்ற கவிதையை எழுதத்துவங்கினார். அதே ஆண்டில் , எமிலி செல்வுட் EMILY SELLWOOD என்ற பெண்ணை மணக்க நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால் அது திருமணமாக மலர 17 ஆண்டுகள் பிடித்து. இந்தக் காலத்தில் டென்னிஸன் அவரது குடும்பத்துடன் அமைதியாகக் காலந்தள்ளினார். அத்தோடு கவிதைகளையும் எழுதினார்..
அவர் 1832-இல் எழுதத்துவங்கிய IN MEMORIAM 1850-இல்தான் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில்தான் அவர் EMILY SELLWOODஐ மணந்தார். கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் WORDSWORTH அவர்களைத் தொடர்ந்து அரசவைக் கவிஞர் பதவியும் கிடைத்தது.
இதற்கு ஈராண்டுகளுக்குப் பின்னர் ODE ON THE DEATH OF DUKE OF WELLINGTON எழுதப்பட்டது. அதற்கு ஈராண்டுகளுக்குப் பின்னர் ‘த சார்ஜ் ஆப் தி லைட் பிரிகேட்’ (THE CHARGE OF THE LIGHT BRIGADE) எழுதப்பட்டது. 1855-இல் அவர் MAUD கவிதையை எழுதியபோது அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் THE IDYLLS OF THE KING என்ற கவிதை அச்சேறிய பின்னர்தான் அவருக்கு மீண்டும் புகழ் சேர்ந்த்து.
இந்த காலத்தில் அவர் நாடகங்களையும் எழுதினார். அந்தக்கால மக்கள் ரசித்த நாடகங்களை இப்போது இலக்கிய உலகு மறந்துவிட்டது.
75 வயதானபோது அவர் பிரபு பட்டம் பெற்றார். 83-வயதில் உயிர்நீத்தார்.
இவர் 11 சகோதர சகோதரிகளுடன் பிறந்தார். மொத்தத்தில் ஒரு டஜன் பிள்ளைகள்!
முதல் கவிதை எழுதியபோது வயது எட்டு. முதல் புஸ்தகம் வெளியான பொழு து வயது 17.
டென்னிஸனின் இறுதிச் சடங்கில் சர் ஆர்தர் கானன்டாயில்
, தாமஸ் ஹார்டி ஆகியோர் கலந்து கொண்டனர்
1992ல் டென்னிஸன் நூற்றாண்டின்போது பிரிட்டன் 4 தபால்தலைகளை வெளியிட்டு கவுரவித்தது
டென்னிஸனின் யுலிசிஸ் கவிதை மிகவும் உணர்ச்சி ஊட்டக்கூடியது,.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வைணவ அமுதத் துளிகள்
உண்மை தெரிந்தவுடன் சண்டை இல்லை; சந்தோஷம் தான்!
ச.நாகராஜன்
அடங்கு எழில் சம்பத்து
அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அக்தென்று
அடங்குக வுள்ளே 1-2-7
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் பாசுரமான இது இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கும் ஒரு பாடல்.
இதை நஞ்ஜீயர் ஒரு கதை மூலம் அழகுற விளக்குகிறார். வியாபாரி ஒருவன் பணம் சம்பாதிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினான். அவள் மனைவியோ கர்ப்பிணி. அவன் திரும்பி வர வெகு காலம் ஆயிற்று. இதற்கிடையே கர்ப்பிணி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவன் வளர்ந்து பெரியவன் ஆகி விட்டான். அவனும் வணிகத்தில் ஈடுபட்டான். வியாபார நிமித்தமாக வெளியில் செல்ல ஆரம்பித்தான். அகஸ்மாத்தாக அப்பனும் பிள்ளையும் ஒருவரை இன்னொருவர் யார் என்று அறியாமலேயே சந்திக்க நேர்ந்தது. அவர்கள் இருவரும் சாமான்களை வாங்கி ஒரே இடத்தில் வைத்தனர். அவர்கள் வைத்த கிட்டங்கியோ மிகச் சிறியதாக இருந்தது. இதனால் சண்டை ஒன்று உருவாயிற்று.
வாக்குவாதத்தில் ஆரம்பித்த சண்டை மிகப் பெரிதாகி ஒருவர் தலையை இன்னொருவர் எடுக்கக் கூடிய அளவு போய் விட்டது. அப்போது மூன்றாவது நபர் அங்கே வந்தார். அவருக்கு தந்தையையும் அவரது பிள்ளையையும் நன்கு தெரியும். இருவரும் சண்டையிடுவதைப் பார்த்த அவர் அவர்களுக்கு இடையெ சென்று நின்று, இது உன் தந்தை, இதோ இவன் தான் உன் மகன் என்று கூறினார். அந்த க்ஷணமே விரோதம் மறைந்தது. சண்டை நின்றது. இருவருக்கும் ஒரே ஆனந்தம். இருவரும் தாங்கள் வாங்கிய சாமான்களை ஒன்றாக ஆக்கினர். இருவருக்கும் இப்போது ஒரே நோக்கம் தான். தந்தை என்ற நிலையில் அவர் தனது பையனைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தார். பையன் என்ற நிலையில் அவன் தந்தையால் காக்கப்பட வேண்டியவன் ஆகி விட்டான்.
இதே போலத் தான் நாம் நமது இறைவனுடனான சம்பந்தத்தை மறந்தவர்களாகி விட்டோம். அவருக்கே நாம் சொந்தம். அவரது விருப்பமும் நமது விருப்பமும் ஒன்றே தான். நமது விருப்பம் அவரது விருப்பத்துடன் இணைந்து விட்டது. இருவரையும் தனித்தனியே பிரிக்கும், இருவருக்கும் இடையே இருந்த ஆழமான பிளவு இப்போது நீக்கப்பட்டு விட்டது. அவரது எல்லையற்ற கம்பீரத்தாலும் தலைமைத்தன்மையாலும் இறை மண்டலங்களாலும் நமது சிறுமையும் நம்மிடம் ஒன்றுமில்லாத் தன்மையும் நீக்கப்பட்டு விட்டது. அவரது எல்லையற்ற உயரிய நிலை முன்னர் நமது ஒன்றுமே இல்லாத நிலை தெள்ளத் தெளிவாகிறது. மாபெரும் அலைகடலில் ஒரு சிறு துரும்பென அல்லாடுகிறோம் நாம். பொங்கி ஆடும் அலைகளில் கரை சேரத் தவிக்கிறோம். ஆனால் அப்படி இல்லை; அவரே நமது சரியான அரசன் என்றும் நம்முடையது எல்லாமே அவருக்குச் சொந்தம் என்பதும் ஆனவுடன் நாம் அவரை அன்புடன் அணுகத் தகுதி உள்ளவர்களாக ஆகிறோம். அவருக்கும் நமக்கும் அலைகடலுக்கும் துரும்புக்கும் உள்ளது போன்ற எல்லையற்ற இடைவெளி இருப்பினும்கூட அன்பினால் அச்சமின்றி அவரை நம்மால் அணுக முடிகிறது.
இதைத் தான் அடங்கு பாசுரம் விளக்குகிறது (திருவாய்மொழி 1-2-7)
அச்சமின்றி இறைவனை நமக்கு உரியவனாக ஆக்கலாம், அவனுக்கு உரியவனாக நாம் ஆகும் போது!
இதை பகவத் விஷயம் முதல் தொகுதி பக்கம் 213-214இல் காணலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
VIRGIL
(70 – 19 BC)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புகழ்மிக்க ரோமானிய கவிஞர் வர்ஜில் VIRGIL
ஏனீட் (AENEID) என்ற காவியத்தின் கர்த்தா இவர்.
ஸிசால்பின் என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவரது தந்தை குடியானவர் என்று தோன்றுகிறது. மிலன் நகரிலும் ரோமாபுரியிலும் இவர் கல்வி கற்றார். சிறுவயதிலேயே கிரேக்க கவிஞர்கள் வாழ்க்கையைப் பயின்ற அவருக்கு வாழ்நாள் முழுவதும் கவிதை எழுதுவது தொழி லானது. ‘நமக்குத் தொழில் கவிதை; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்ற பாரதியின் வாக்கு இவர் வாழ்க்கையில் உண்மையானது
வர்ஜில் லத்தின் மொழிக் கவிஞர்; மிகவும் கூச்சம்முடையவர். ஏனைய ரோமானியப் பெரும்புள்ளிகளைப் போல ராணுவத்திலோ அரசியலிலோ ஈடுபட்டவரல்ல. இருந்தபோதிலும் இவரது நண்பர்கள் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்தார். அவை இவரது கனிதைகளில் எதிரொலித்தன.
VIRGIL மூன்று பெரிய நூல்களை லத்தின் மொழியில் எழுதினார். அவை THE ECLOGUES, THE GEORGICS, THE ANENEID என்பன.
ECLOGUES என்ற நூலில் இயற்கை, நாட்டுப்புறம் தொடர்பான கிராமிய பாடல்களைக் காணலாம். கி மு 42 – கி மு 37க்கு இடைப்பட்ட காலத்தில் மலர்ந்த கவிதைகள் அவை. வர்ஜில் VIRGILக்கு முதல் வரிசையில் இடம்பெற்றுக் கொடுத்தவை இவை. சிறிது காலத்திற்கு ரோமானிய அரச வட்டாரத்திற்கு நெருக்கமாகி இருந்த இவர் ரோமில் வாழ்ந்தார். பின்னர் தெற்கு இதாலியிலுள்ள CAMPANIAவுக்குச் சென்று தனது வாழ்நாள் இறுதிவரை நேப்பிள்ஸ் NAPLES நகரில் தங்கினார்.
பண்ணைத்தொழில் பற்றிய இவரது கவிதைகள் கி மு 37 – கி மு 30க்கு இடைப்பட்டவை. என்ற நூலில் இவை உள்ளன.
கி மு 30 முதல் இறுதிநாள் வரையுள்ள காலத்தில் இவர் படைத்ததுதான் AENEID காவியம்.
ஹோமரின் காவியங்கள் அவரது நடையில் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.
AENEID நூலில் 12 காண்டங்கள் உண்டு. TROY நகர வீழ்ச்சிக்குப் பின்னர் AENEASக்கு என்ன ஆகியது என்பதை விளக்கும் காவியம் இது.
கி மு 19-இல் அவர் இதை எழுதி முடிக்கவில்லை. கிரேக்க நாட்டில் மூன்றாண்டுகள் தங்கி இதை முடிக்க எண்ணியிருந்தார். ஆனால் பயணம் துவங்கிய சிலநாட்களில் நோய்வாய்ப்பட்டார். இதாலிக்குத் திரும்பினார். BRINDISI என்னுமிடத்தில் உயிர்நீத்தார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Tamils are very familiar with two food items 1Appam or Aappam and 2.Puttu or Pittu. Agastya , the great seer of the Tamil language, has 27 poems or hymns to his credit in the first book of the Rig Veda alone. And one of them is on food. Along with the gods, food, water, birds and inanimate objects have hymns in the oldest book of the world.
It may look strange to 30 foreign translators who have no practical knowledge of Hindu culture. And we have the gang leader Max Muller who was scared to death to visit India and refused to see India or Hindus in his lifetime. Such a coward! And there is another set of white skinned fellows like Ralph T H Griffith. He was very honest and apologised hundreds of times saying ‘the meaning is not clear, he is uncertain, it is obscure’ etc. In his 650 page Rig Veda book I have seen it more than 200 times. At least, he was honest in admitting his ignorance!
Brahmins who practice Hinduism worship food every day. Like the Catholic Christians’ ‘Grace’, Brahmins say Pariseshana Mantra. They praise the food as God sent Amrosia/ Amrita and finish eating by saying ‘Anna Dhata Sukhi Bhava’. Let the provider of food live longer healthily.
Actually Catholics followed the Pada Puja of guests which we see in the pictures where Jesus feet were given a holy wash. Great Hindu saints are honoured that way even today. And Jesus saying Namaste in old Christian drawings are also there. In short, Catholics copied Hindus.
Worshipping Food
It is part of Hindus’ day to day life. Agastya, Father of Tamil Language, sings the glory of Food. It is Tamil Food Pittu or Puttu. Kerala Malayalees and Sri Lankan Tamils use it as staple food. It is salted and spiced. But Agastya talks about sweet Puttu. Lord Siva of Madurai worked for an old Puttu vending lady of Madurai and got beaten by the Pandya King, according to Saint Manikka vasagar.
Brahmins make such Sweet Puttu on festive days and in particular, on the day a girl comes of age in a family. Close relatives are given that Sweet Puttu. Agastya use the spelling Pithu ten times in the said hymn RV 1-187.
Since I am attaching the hymn at the end, I am going to leave my comments alone.
Aapupa is a fried cake which is called Appam or Aaappam in Tamil. Like Puttu, this is also made spicy and sweety. It is in many verses of Rig Veda. Even Tamil villagers are very familiar with this Aapuupa- AAppam.
Now in this verse 1-187 we come across 3 or 4 tasty food items. Puttu (Pithu) Mork Kali (Karamba), Barley cake and Soma juice.
Pithu and Puttu are the same though the spellings are different. Th= T is seen in moTHer and maTErnal uncle. (Other examples Pitha= Pitr= Pater= Peter= FaTHer; moTHer= matha= mater etc)
There are 11 mantras in the hymn describing various dishes. But in general Agastya thank Gods for providing Food and Water.
Apart from Pittu, Agastya sings about, Karamba. It is rice flour mixed with sugar or spices. One way of eating it is mixing flour in diluted yoghurt/ curd and add spices. After boiling it will be thick and can be cut into pieces. It is called Kali. Brahmins make it as snacks and call it Mork Kali (Mor is diluted Youghurt).
Xxx
Three interesting Tit Bits
Since Rig Veda is many thousand years old, no one can give us correct meaning to many words. One of them is Trita. Literally it means ‘Mr Number Three’.
Griffith says about Trita:- “ a mysterious ancient deity frequently mentioned in the Rigveda, principally in connection with Indra , Vayu and Maruts. His home is in the remotest part of heaven and he is called Aaptya , the Watery, that is sprung from or dwelling in the sea of cloud and vapour. By Sayana, (the most famous Hindu commentator ), he is identified sometimes with Vayu, sometimes with Indra as pervader of Three worlds and sometimes with Agni stationed in the Three Fire receptacles.”
Every Brahmin house had Three Fires in Three geometrically shaped Altars. 2000 year old Sangam Tamil Literature also called Brahmins with the epithet ‘Three Fire Brahmins’. Trita is in RV. 1-187-1
The mystery doesn’t stop there. In 1-187-5 we come across an animal with the epithet ‘Like creatures that have mighty necks’. Griffith says ‘like strong bullocks’.
I don’t agree with Griffith. It is also a mysterious word like Trita. We come across Bulls in the Rig Veda hundreds of times with the normal Sanskrit word Vrsa/ba. Here Agastya plays on words to mean perhaps a Rhino. They are also vegetarians, but their horn and neck can even knock down a heavy truck. In Tamil they are called Kaandamrga meaning Neck animal or Horn animal.
xxx
Vaatapi Mystery
There is more mystery towards the end of the hymn with the word ‘Vatape peetha Bhava.’ This occurs in three Mantras.
“Vaataapi = Fermenting Soma. According to Saayana, the body” says Griffith
White skinned Max Muller gang interpreted Rig Veda as a Book of Songs of Drug Addicts. in the very first page of 650 paged Rig Veda of Griffith, we see the description of the hallucinatory Drug Soma. Scores of pages later Max Muller pours more poison saying he couldn’t find any word in English to explain the Matha/Kick the drug Soma gives. So according to the white skinned gangsters , Soma is a hallucinatory narcotic chemical. And there is no hymn without Soma in the Rig Veda!! So the gang hints at a drug addicted Hindu religion/ society. So no wonder here also Vaatapi is interpreted as fermenting Soma by Griffith.
Vatapi- Ilvalan Story
There is a very interesting story in the later Hindu mythology about Agastya whose statues are found throughout South East Asia. He is a short guy with a big belly like Lord Ganesh. Two demon brothers Ilvala and Vaataapi killed lot of sages and ate them. Some hymns clearly say they were cannibals. When Ilvala invited a sage he used to cook Vatapi and as soon as the sage ate Vaataapi meat, Ilvala called ‘Vatapi, Come out’ and the sage tummy was torn to pieces. When Ilvala played the same trick on Agastya, he said Vataapi Jeerno Bhava= Vataapi Get Digested.
This story is hinted in this mantra.
The Tamil translation by Jambunathan says ‘let the body get fattened’. Or ‘become stronger’.
All these mean the same. When the food is digested and get absorbed, the body becomes stronger or fatter.
So my Bhasyam/ interpretation is ‘Vatape peetha Bhava’ is ‘Vataapi Jeerno Bhava’. So we have the mythological story in the Rig Veda itself.
Kaamabha and Pithu
I said in the beginning two tasty items mentioned in the hymn are Pittu or Puttu and Mor Kali (karamba). Old Brahmin ladies make this spicy tasty Mor Kali by mixing Curd/Yoghurt with rice flour. Boil it and spice it with Jeera, Turmeric powder and chilies or black pepper. Chillies were imported from South America at a very late stage in Indian History and Hindus used black pepper instead.
The very word Pishta in Sanskrit means rice flour. In Agamas Rice Flour Abhisheka is prescribed to Lord Siva.
So my conclusion is Pithu= Pittu= Puttu and Karambha is Mor Kali= Yoghurt+ Rice Flour.
1935 Tamil Dictionary published by Ananda Vikatan magazine gives the meaning of Karambha.
Let us enjoy the Tamil Food from the Menu of Agastya Restaurant of Rig Vedic times!!
If you can’t make it, visit Kerala or Sri Lanka for a spicy Puttu or a Brahmin family for Sweet Puttu and Mor Kali/Karambha.
Long Live Tamil Saint Agastya!
Please see the attached original hymn below: —
1. Now will I glorify Food that upholds great strength,
By whose invigorating power Trita rent Vrtra limb from limb.
2. O pleasant Food, O Food of meath, thee have we chosen for our own,
So be our kind protector thou.
3. Come hitherward to us, O Food, auspicious with auspicious help,
Health-bringing, not unkind, a dear and guileless friend.
4. These juices which, O Food, are thine throughout the regions are diffused.
like winds they have their place in heaven.
5. These gifts of thine, O Food, O Food most sweet to taste,
These savours of thy juices work like creatures that have mighty necks.
6. In thee, O Food, is set the spirit of great Gods.
Under thy flag brave deeds were done he slew the Dragon with thy help.
7. If thou be gone unto the splendour of the clouds,
Even from thence, O Food of meath, prepared for our enjoyment, come.
8. Whatever morsel we consume from waters or from plants of earth, O Soma, wax thou fat thereby.
9. What Soma, we enjoy from thee in milky food or barley-brew, Vatapi, grow thou fat thereby.
10. O Vegetable, Cake of meal, he wholesome, firm, and strengthening: Vatapi, grow thou fat thereby.
11. O Food, from thee as such have we drawn forth with lauds, like cows, our sacrificial gifts,
From thee who banquetest with Gods, from thee who banquetest with us.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல். இதில் இல்லாத விஷயங்களே இல்லை. இது ஒரு சமய நூல் மட்டுமல்ல. சமையல் நூலும் கூட !! பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் பயிலப்பட்ட சொற்களை – கங்கை, யமுனை, சிந்து , சரஸ்வதி நதிக்கரைகளில் இந்துக்கள் முழங்கிய சொற்களை — இன்று தமிழர்களாகிய நாமும் அன்றாடம் பயன்படுத்துவது இமயம் முதல் குமரி வரை ஒன்றே என்பதைக் காட்டுகிறது.
இரண்டு தமிழ் உணவுகள் ரிக்வேதத்தில் உளது. அப்பம், பிட்டு தெரியாத தமிழர் இருக்க முடியாது. ‘பிட்டுக்கு மண் சுமந்த சிவனை’ மாணிக்க வாசகர் பாடியதை அனைவரும் அறிவோம். ஆப்பத்தில் வெல்லம் போட்ட இனிப்பு அப்பம், உப்பு போட்ட வெள்ளையப்பத்தையும் நாம் ரசித்து, ருசித்து சாப்பிடுகிறோம். ‘ஆபூப’ என்ற ரிக்வேத சொல் தமிழில் அப்பம் என்றும் ஆப்பம் என்றும் இன்றும் வழங்குகிறது.
இன்று பிட்டு பற்றிய ரிக் வேதக் கவிதையைக் காண்போம்.. இதைப் பாடியவர் ‘தமிழ் மொழியின் தந்தை’ அகஸ்தியர். (இது லண்டன் சாமிநாதன் சொல்வதல்ல. பாரதியாரும் அவருக்கு முந்தைய கம்பனும் சொன்னது. அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் பாண்டிய மன்னனையும் அகத்தியனையும் சேர்த்து இந்துமதிக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான் ரகு வம்ச காவியத்தில்.)
அப்பேற்பட்ட அகஸ்தியன் பிட்டு பற்றிப் பாடியது பொருத்தமே. ரிக் வேதத்தின் பத்து புஸ்தகங்களை பத்து மண்டலங்கள் என்பர். அதில் முதல் மண்டலத்தில் அகஸ்தியன் பாடியது 26 பாடல்கள். அதில் ஒன்று -187 ஆவது பாடல் (RV 1-187).
xxx
உணவுக்கு முன்னர் வேறு இரண்டு சுவையான, மர்ம விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். இந்த துதியில் 11 மந்திரங்கள் உள . இதில் முதல் மந்திரத்தில் வரும் திருதன் (TRITA) யார் என்று, ரிக் வேதத்தை எள்ளி நகையாடும் 30 வெள்ளைக்காரர்களுக்கும் தெரியவில்லை. இவர் பற்றி ரிக் வேத மொழிபெயர்ப்பை வெளியிட்ட கிரிப்பித் RALPH T H GRIFFITH (இவரது மொழிபெயர்ப்புதான் இப்போது எல்லா என்சைக்கிளோ பிடியாக்களிலும் — விக்கிபீடியா உள்பட — இலவசமாகக் கிடைக்கிறது):–
“இவர் ஒரு மர்மமான கடவுள். இவர் பெயர் ரிக் வேதத்தில் அடிக்கடி வருகிறது. இந்திரன், வாயு, மருத் ஆகிய கடவுளருடன் சேர்த்து பாடப்படுகிறார். இவர் சொர்க்கத்தில் ஏதோ ஒரு மூலையில் வசிக்கிறார்.’ஆப’ என்றால் தண்ணீர். இவரை ‘ஆப்த்யா’ என்று அழைப்பதால் இவர் நீரில் உண்டானவர் என்று தெரிகிறது”.
ரிக்வேதத்தில் புகுந்து விளையாடிய கும்பலில் கிரிப்பித், ஒவ்வொரு துதியிலும் தனக்குப் புரியாத விஷயங்களை ஒப்புக்கொண்டு விடுகிறார். ஏனையோர் இஷ்டப்பட்டபடி கருத்து கூறுகின்றனர். இரண்டாவது சுவையான மர்மமான விஷயம் ‘பெரிய வலுவான கழுத்து உள்ள பிராணி’ என்ற அகஸ்தியரின் வருணனையாகும். இதை காளை மாடு என்று கிரிப்பித் சொல்கிறார். காளை மாடு ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் காளை என்றே வரும்போது அகஸ்தியர் இப்படிச் சொல்வாரா என்பது என் கேள்வி. காண்டா மிருகம் போன்ற ஒன்றாக இருக்கலாம் என்பது நான் எழுதும் பாஷ்யம்/உரை.
சாயனர் என்ற இந்து சமய உரைகாரர் அக்னீ , வாயு, இந்திரன் ஆகியோரின் மறுபெயர் திருதன் Mr Three (மூன்றாம் எண் ) என்கிறார். திருதன் என்றால் ‘மூன்றாம் நம்பர்காரன்’ என்று பொருள். பிராமணர் வீடுகளில் மூன்று வடிவ குண்டங்களில் மூன்று தீ எரியும். இதனால் சங்க இலக்கியப் புலவர்கள் முத்தீ அந்தணர் என்பர். இந்திரனை மூன்றுடன் தொடர்பு படுத்த காரணம் அவர் மூன்று உலகங்களுக்கு அதிபதி
இன்னொரு முக்கிய சொல் ‘வாதாபே’ . இதற்கு பருமன்/ குண்டு என்று ஜம்புநாதன் மொழி பெயர்க்கிறார். இது உடலைக் குறிக்கும் என்று சாயனர் சொல்கிறார். வெளிநாட்டுக் கும்பலோ இதை ‘சோம ரஸ ஊறல்’ என்கிறது
என் கருத்து
பிற்காலத்தில் இல்வலன், வாதாபி கதையில் வரும் ‘வாதாபி ஜீர்னோ பவ’ வசனத்துக்கு இதுதான் மூல காரணமோ !!!
மந்திரத்தில் வரும் உணவை ஜம்புநாதன் ‘பிது’ என்று மொழி பெயர்த்து இருக்கிறார். உண்மையில் இது பிட்டு. ‘த’ வும் ‘ட’ வும் இடம் மாறுவதை இன்றும் ஐரோப்பிய மொழிகளில் காணலாம். பித்ர், பிதா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ‘பாதர்’ father என்று ஆங்கிலத்தில் மாறினாலும் வேறு மொழிகளில் ‘பேட்டர் pater , பீட்டர்’ என்றுதான் சொல்வர். ‘மாதா’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ஆங்கிலத்தில் மதர் mother என்று மாறினாலும் மேட்டர் mater என்றே பிற ஐரோப்பிய மொழிகளில் இருக்கும் ஆங்கிலத்திலேயே மெடர்னல் maternal uncle என்று பல சொற்களில் காணலாம். ஆக ‘பிது’ என்பது ‘பிட்டு’ என்பதற்கு மொழியியல் ஆதாரம் உளது. Pithu= pittu
இனி உணவு பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்
xxx
முதல் மந்திரம்
“இப்போது நமக்கு மகத்தான வலிமை தரும் பிட்டு உணவை நான் போற்றுகிறேன்
விருத்திரன் என்னும் அசுரனை திருதன் , இதன் உதவியால் பிட்டுப் பிட்டு வைத்தான்”.
மந்திரம் 2
ஓ இனிமையான பிட்டே! தித்திக்கும் தெள்ளமுதே ! நாங்கள் உன்னை விரும்பி ஏற்று இருக்கிறோம். ஆகையால் எங்களின் பாதுகாவலனாக இரு .
மந்திரம் 3
பிட்டே ! நீ மங்களமானவன் , மங்களத்தைக் கொண்டு வருக. நீ ஆரோக்கியத்தை அளிப்பவன். வெறுப்பு என்பதை அறியாதவன்; வஞ்சகம் இல்லாத நண்பன்.
மந்திரம் 4
உணவே! உன்னுடைய ரஸம் / சத்து எல்லா பகுதிகளிலும் பரவி இருக்கிறது. காற்று போல வானத்திலும் பரவி இருக்கிறது.
(இங்கு நாம் உண்ணும் ஆக்சிஜனை அகஸ்தியர் சொல்கிறாரோ என்று எண்ணுகிறேன் )
மந்திரம் 5
இனிய உணவே, இனிப்பான பிட்டே ! நீ எங்களுக்கு வழங்கும் கொடை மிகவும் இனிப்பானது. அதன் சக்தி “மகத்தான கழுத்துக்களை உடைய பிராணிகள்” போல வேலை செய்கிறது.
(காளை என்பது சிலர் கருத்து. ஆனால் காண்டா மிருகம் என்ற சொல்லுக்கே கழுத்துள்ள – பலமான கழுத்துள்ள / கொம்புள்ள மிருகம் என்று பெயர். அது மோதினால் பஸ் , லாரி ஆகியன கவிழ்ந்து விடும்)
எல்லாம் சைவ உணவு -பிராமணர் வீட்டு மோர்க்களி
மந்திரம் 6
பிட்டே ! தேவர்களின் மனமும் உன்னையே நினைக்கிறது உன்னுடைய கொடியின் கீழ் / தலைமையில் மிகப்பெரிய செயல்கள் நடந்தேறின. அஹீ என்னும் பாம்பு அரக்கனை இந்திரன் கொன்றான்.
மந்திரம் 7
பிட்டே ! நீ மறைந்துள்ள மேகத்திலிருந்து மழை பெய்யும்போது எங்கள் அருகிலேயே இரு. நாங்கள் முழுக்க முழுக்க சுவைத்துச் சாப்பிட வேண்டும்
‘துப்பார்க்குத் துப்பாய’…………… என்ற குறளை இது நினைவு படுத்தும். மழை நீர் (துப்பு) உணவு மட்டுமல்ல. உணவை உண்டாக்கவும் – பிட்டை உண்டாக்கவும் – உதவுகிறது.
மந்திரம் 8
நீரிலிருந்தோ நிலத்தில் விளையும் தாவரங்களில் இருந்தோ நாங்கள் எதை எதை சாப்பிடுகிறோமோ அவை வளரட்டும் / ஜீரணமாகட்டும் (அதாவது உடலில் சேரட்டும்)
‘வாதாபே பீவைத பவ’ என்று மூன்று மந்திரங்கள் முடிகின்றன. உடல் பருமனாகட்டும் என்பது ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு
வாதாபி என்ற அரக்கனை விழுங்கி ‘வாதாபி ஜீரணோ பவ’ என்று அகஸ்தியர் வயிற்றைத் தட விக்கொண்டு வாதாபி என்ற அரக்கனை அழித்து முனிவர்களைக் காப்பாற்றிய கதையை நினைவு படுத்தும் சொற்றோடர் இது
மந்திரம் 9
சோமனே ! உன்னுடைய ரசம் சேர்ந்த பால் உணவையும், பார்லி உணவையும் நாங்கள் சாப்பிடுகிறாம் ; உடல் பருக்கட்டும் / உணவு செமிக்கட்டும்
மந்திரம் 10
காய்கறிகளே (ஓஷதி) ! பொடி மா ! தயிரோடு கலந்த அரிசி மா களியே! (சம்ஸ்க்ருதத்தில் கரம்ப))– உங்களால் உடல் வலு வாகட்டும் (அல்லது சாப்பிட்ட மோர்க்களி ஜீரணமாகட்டும்)
மந்திரம் 11
பசுவின் பாலில் இருந்து வெண்ணை எடுத்து எப்படி நெய்யாக மாற்றி ஹோமத்தில் விட்டு உங்களை மகிழ்விக்கிறோமோ அப்படி இந்த உணவின் ரசமும் எங்களை மகிழ்விக்கிறது
xxx
மொத்தத்த்தில் பிட்டு என்பதை உணவு என்று கொள்ள வேண்டும். ஏனெனில் முதலில் பிட்டுவில் துவங்கி பின்னர் ‘கரம்பம்’ என்னும் அரிசி மா களி , கீரை, மூலிகை (ஓஷதி) வரை செல்கிறது பாடல்
சுருங்கச் சொல்லின் உணவைப் போற்றி , அது ஜீரணமாகி தன்மயமாகி உடலுக்கு வலுக் கூட்ட வேண்டும் என்று இறைவனை வேண்டும் பாடல் இது.
xxx
வெள்ளைக்காரனுக்கு பிரமணனுக்கும் வித்தியாசம்
இதை முப்பது வெள்ளைக்காரனாலும் விளக்க முடியாது. சாயனர் போன்ற பிரமணர்களாலேயே விளக்க முடியும். ஏனெனில் பிராமணர்கள் மூன்று போதும் இப்படி உணவைப் போற்றி மந்திரம் சொல்லித்தான் உணவு உண்கிறார்கள். இலையில் போடப்பட்ட உணவில், மனைவி உப்புப் போட மறந்தாலும் கூட அவளைத் திட்டாமல். அமிர்தம் என்று மூன்று முறை நீரால் சுற்றி இது என் உடலில் அமிர்தமாகட்டும் என்று சொல்லி உண்கின்றனர். ஆகையால் அகஸ்தியர் பாடிய பாட்டில் வியப்பில்லை.
இறுதியில் பிராமணர்கள் “எனக்கு அன்னமிட்டவர்கள் நீடூழி வாழ்க = அன்னதாதா சுகீ பவ” என்று மந்திரம் சொல்லிவிட்டு எழுந்திருப்பர்.
உலகில் இது போனற அற்புதத்தை எங்கும் காண முடியாது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டும் எப்படி ஏசுவுக்கு கால கழுவி பாத பூஜை செய்வதை பிராமணர்களிடம் இருந்து கற்றுக் கொண்டார்களோ அது போலவே தட்டில் சாப்பாடு போட்டவுடன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இறைவனை (GRACE) வாழ்த்தி சொல்லிவிட்டு சாப்பிடுகின்றனர்.
பிராமண வழக்கம், பிராமண தர்மம் உலகம் முழுதும் பரவ வேண்டும்.
பிரிட்டன் போன்ற நாடுகளில் டெலிவிஷனில் ஹிப்னாடிசம் மெஸ்மெரிஸம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அற்புதங்களைச் செய்து காட்டிய பால் மெக்கன்னா (Paul Mckenna) போன்றோரும் டெலிவிஷனைப் பார்த்துக் கொண்டு அளவில்லாமல் சாப்பிடாதீர்கள். ஒரு கிரிஸ்ப் (Crisp packet) பொட்டலத்திலுள்ள ஒவ்வொரு உருளைக் கிழங்கு வறுவலையும் வாயில் மெதுவாகப் போட்டு ரசித்து, ருசித்து அசைபோட்டு உண்ணுங்கள். உடல் பருமனும் ஆகாது. உடலில் சக்தியும் கூடும். சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும் என்கிறார்.
இதைப் படிக்கும் பிராமணர்கள் தினமும் சாப்பிடும்போது பரிசேஷணம் செய்து உணைவச் சுத்தப்படுத்தி மந்திரம் சொல்லி உண்டால் உடல், உள்ள ஆரோக்கியம் வளரும்.
உலகில் முதல் உணவுப் பாடலைப் பாடிய அகஸ்தியன் வாழ்க!
அவன் சொன்ன தமிழ் பிட்டு வாழ்க !!
(இப்போதும் மலையாளிகளும் இலங்கைத் தமிழர்களும் பிட்டு என்பதையே முக்கிய உணவாக சாப்பிடுவதைக் காணலாம். குழல் புட்டு கேரளத்திலும் பிரசித்தம். பிராமணர் வீடுகளில் இனிப்பு பிட்டும் செய்வார்கள் பெண்கள் பருவம் எய்தியபோது இதை செய்வார்கள் ;ஒக்காரை ,பிட்டு ,குழல் புட்டு என்ற பல வகைகள் உண்டு . )
1. Now will I glorify Food that upholds great strength,
By whose invigorating power Trita rent Vrtra limb from limb.
2. O pleasant Food, O Food of meath, thee have we chosen for our own,
So be our kind protector thou.
3. Come hitherward to us, O Food, auspicious with auspicious help,
Health-bringing, not unkind, a dear and guileless friend.
4. These juices which, O Food, are thine throughout the regions are diffused.
like winds they have their place in heaven.
5. These gifts of thine, O Food, O Food most sweet to taste,
These savours of thy juices work like creatures that have mighty necks.
6. In thee, O Food, is set the spirit of great Gods.
Under thy flag brave deeds were done he slew the Dragon with thy help.
7. If thou be gone unto the splendour of the clouds,
Even from thence, O Food of meath, prepared for our enjoyment, come.
8. Whatever morsel we consume from waters or from plants of earth, O Soma, wax thou fat thereby.
9. What Soma, we enjoy from thee in milky food or barley-brew, Vatapi, grow thou fat thereby.
10. O Vegetable, Cake of meal, he wholesome, firm, and strengthening: Vatapi, grow thou fat thereby.
11. O Food, from thee as such have we drawn forth with lauds, like cows, our sacrificial gifts,
From thee who banquetest with Gods, from thee who banquetest with us.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வைணவ அமுதத் துளிகள்
அன்னவர்க்கே சரண் நாங்களே!
ச.நாகராஜன்
மாபெரும் ராமாயண காவியத்தை இயற்றிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் ராமாயண காவியத்தின் முக்கிய தத்துவத்தை முதல் செய்யுளிலேயே சொல்லி விடுகிறான். சரணாகதி தான் அது!
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
நான்கே நான்கு வரிகள். 17 வார்த்தைகள். இதன் பொருளை விவரிக்க வார்த்தைகள் போதாது. ராமாயணத்தை சரணாகதி காவியம் என்றே அழைப்பர்.
சரணாகதி மிக எளிதான வழி. யார் வேண்டுமானாலும் இறைவனைச் சரண் அடையலாம். எண்ணித் தொலையாத பிறவிகளில் சேர்த்த பாவங்களை விலக்கிக் கொள்ள ஒரே வழி சரணாகதி தான் என்பதே ராமாயணத்தின் சாரம்.
சரணமடைய விசேஷ தகுதி தேடி அலைய வேண்டியதில்லை என்பதை பிள்ளைலோகாசார்யாரின் ஸ்ரீ வசன பூஷணம் 32, 33,34 சூத்திரங்களில் ஆதாரங்களுடன் விளக்குகிறது.
சூத்திரம் 32
அதிகாரி நியமமின்றைக்கே ஒழிந்தபடி என்? என்னில், தர்ம புத்ராதிகளும் திரௌபதியும், காகமும், காளியனும், ஸ்ரீ கஜேந்திராழ்வானும், ஸ்ரீ விபீஷணாழ்வானும், பெருமாளும், இளைய பெருமாளும் தொடக்கமானவர்கள் சரணம் புகுதுகையாலே அதிகாரி நியமமில்லை.
இதன் பொருள்:
தர்மர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் கண்ணபிரானைச் சரணம் அடைந்தார்கள். ஆகவே இங்கு ஆண், பெண் என்ற பேதமில்லை.
காகம் சரணம் புகுந்தது. ஆகவே பறவை என்ற பேதம் இங்கு இல்லை. காளிங்கன் சரணம் புகுந்தது. பாம்பு என்பதால் ஊர்வன என்ற பேதமும் போயிற்று. கஜேந்திரனோ ஆதிமூலமே என்று கூவி சரணமடைந்தது. விலங்கு என்ற பேதமும் போயிற்று. விபீஷணன் இராமரைச் சரண் அடைந்ததால் ராக்ஷஸர் என்ற பேதமும் போயிற்று. பெருமாளே கடலைச் சரண் புகுந்தார். இளைய பெருமாளாகிய லக்ஷ்மணன் ராமரைச் சரணம் அடைந்து கூடவே காட்டிற்கு ஏகினார். இன்னும் கத்திரபந்து, முசுகுந்தன் உள்ளிட்டவர்களும் அவனைச் சரண் அடைந்தார்கள். இதன் மூலம் சரணம் அடைய ஒரு தகுதியும் தேவையில்லை, ஒரு நியமமும் இல்லை என்பதை நன்கு அறியலாம். சரணாகதி செய்ய அதிகாரி நியமம் இல்லை.
அடுத்த சூத்ரம் 33:
பல நியமமின்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் தர்மபுத்ராதிகளுக்குப் பலம் ராஜ்யம்; திரௌபதிக்குப் பலம் வஸ்திரம். காகத்திற்கும், காளியனுக்கும் பலம் ப்ராணன். ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்குப் பலம் கைங்கர்யம்; ஸ்ரீ விபீஷணாழ்வானுக்குப் பலம் ராம பிராப்தி. பெருமாளுக்கும் பலம் ஸமுத்ர தாரணம்; இளைய பெருமாளுக்குப் பலம் ராமானுவ்ருத்தி.
இந்த சூத்ரத்தின் விளக்கம்:
சரணாகதி அடையும் ஒருவருக்கு இன்ன பலன் தான் கிடைக்கும் என்பதில்லை. அவரவர் தேவைக்குத் தக்கபடி அருள் கிடைக்கும்.
உதாரணமாக
பாண்டவர்கள் பெற்றது அரசாளும் உரிமை (ராஜ்யம்)
திரௌபதி பெற்றது – வஸ்திரம் (மானம் காக்க சேலை)
காகம், காளியன் பெற்றது – உயிர்
ஸ்ரீ கஜேந்திராழ்வான் பெற்றது கைங்கரியம். தனது துதிக்கையில் தாமரை மலரை எடுத்து அதைப் பகவானிடம் சேர்ப்பித்த கைங்கரியம்.
ஸ்ரீ விபீஷணாழ்வான் பெற்றது ஸ்ரீ ராமபிரானை அடைந்தது.
ஸ்ரீ இராமபிரான் அடைந்தது கடலில் அணை கட்டுதல்.
இளைய பெருமாளான லக்ஷ்மணன் பெற்றது – இராமனுடன் கூடவே காட்டிற்குச் சென்று கைங்கரியம் செய்யும் அரிய வாய்ப்பு.
ஆகவே மனிதனானாலும் சரி, விலங்கு, பறவை, அரக்கர் என்று எதாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, சராணகதி என்ற எளிய வழி மேன்மையைத் தரும்; அவரவர்க்கு உரியதைத் தரும்.
‘கொற்றவ சரணம்’ என்று சுருக்கமாகக் கூறிச் சரணாகதி அடைந்தான் விபீஷணன். அப்போது அபயம் என்று வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்தோரைப் பற்றி ராமர் விரிவாக எடுத்துரைப்பதை கம்பன் அழகுற எடுத்துரைக்கிறான்.
வால்மீகி ராமாயணத்தில் சரணாகதி ஸ்லோகம் பிரசித்தி பெற்ற ஒன்று.
(இதை ராமாயண வழிகாட்டி என்ற எனது தொடரில் (பின்னர் புத்தகமாகவும் வந்துள்ளது- பிரசுரித்தோர் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் – தொடர்புக்கு www.nilacharal.comஅணுகவும்) விவரித்திருப்பதால் இங்கு மீண்டும் விவரிக்கவில்லை)
சரணடைந்தோரை ஏற்பது இறைவனின் தர்மம்; ஆகவே தான் அன்னவர்க்கே சரண் நாங்களே என்றான் கம்பன்.
இந்த பிரபத்தி தர்மத்தை உணர்ந்தவர்கள் பாக்கியசாலிகளே.