Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Panini in his grammar book Ashtadhyayi gives remarkably interesting information about cabinet formation in the government.
He used ASHADAKSHIINA, which literally meant “that which is not seen by six eyes. The Kasika (Kaasikaa) explains it to mean deliberations between two persons only and not more.
“Ashadakshiino mantras, yo dvaabhyaameva kriyate, na bahubhih”
In the political evolution of the Mantri Parishad and with the emergence of the office of the Prime Minister there was a tendency to form a smaller body inside the Parishad/council for more effective and responsible deliberation.
As to the number of ministers constituting this Inner Body, Kautilya supplies valuable information recording the views of earlier political thinkers like
Pisuna
Parasara
Visalaksha and
Bharadvaja
Kautilya states that the number of ministers should three to four (Arthasastra 1-15)
In this matter the most forceful view was that of Kaninka Bharadvaja, the severe theorist who advocated the system of one minister cabinet
This was the ashadakshiina mantra referred to by Panini,i.e.the secret counsel of the king and the chief minister only, in which Six Eyes had not participated. It signified the same thing as
“Shad karno bhidyate mantrah of later literature”
Bharadvaja held that a plethora of councillors betrayed the secret.
“Mantri paramparaa mantram bhinnati, Artha 1-15”
Cited in the Kasika on 5-2-10
This view was disputed by Visaalaaksha, who perhaps true to the veiled suggestion of his name, was in favour of admitting more ministers to that secret sessions of the council.
The Six Eye must have related to urgent and important matters of the state. Panini refers to Aatyayika Vinayadi gana 5-4-34, urgent business, to which Asoka also refers in Rock Edict 6 and so also Kautilya.
Summoning the ministers and the council, the king shall speak to them on urgent matters,
Here ‘mantrinah’ refers to the Inner Cabinet, and ‘Mantri Parishad’ to the fuller Council of Ministers.
The No Six Eyes deliberations belonged to the former.
Similarly, in the Gana patha 4-3-118 ,an act or resolution of the Parishad is called ‘Paarishatka’
All these show how advanced was our political system 2700 years ago
xxx
500 members in Raaja Sabhaa
As distinguished from the Parishad, the General Assembly was represented by the Raaja Sabhaa. Tradition makes King Bindusara having a Council of 500 members.
As examples of Raja Sabha, Patanjali cites Chandragupta Maurya Sabha and Pushyamitra Sabha, Bhashya 1-177
11 May 2015 — Rig Veda mentioned female members of the Sabha as sabhavati (RV 1-167-3). … Later literature gives us information about Council of Five and …
–SUBHAM—
tags – one member, cabinet, Six Eyes, Panini, Kautilya
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(பெண்கள் வாழ்க தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)
வரதட்சிணை முறை தலைகீழாக மாறியது எப்படி?
இன்றைய இந்து சமுதாயத்தில் பெரிய கொடுமையாக நிற்பது வரதட்சிணை வாங்கும் – கொடுக்கும் வழக்கமாகும். இதில் விந்தை என்னவென்றால் சாஸ்திரங்களில் வரதட்சிணை கொடுப்பது பற்றி எந்த விதியும் இல்லை! அதைவிட பெரிய விந்தை என்னவென்றால் தமிழ் இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் ஆண்கள்தான் பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துள்ளனர். மனுதர்ம சாஸ்திரம் எழுதப்பட்ட காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது போலும். பெண்ணின் அப்பா வரதட்சிணை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் பெண்ணை விற்பதற்குச் சமமாகிவிடும் என்று சாடுகிறார். ஒரு துளிக்கூட வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் அது அசுரர் திருமணமாக ஆகிவிடும் என்றும் கூறுகிறார்.
பெண்களே பெற்று வந்த இந்த வரதட்சிணை எப்படி தலைகீழாக மாறியது? எப்போது இப்படி மாறியது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.
தமிழ் மன்னர்கள் மூவேந்தரும் குறுநில மன்னர்களின் பெண்களை மணக்க முயன்றபோது பெண்களுக்கு நிறைய பணம் கொடுத்ததை சங்க இலக்கியப் பாடல்கள் வருணிக்கின்றன.
ஆயமகள் மறவுரை :
இதோ ஆயர் முறைமையைப் பாடும் குரவைக் கூத்தாடும் தலைவி கூறுவன:
“உயிரை ஒரு பொருட்டாக எண்ணி அதனால் ஏற்றின் மருப்பினை அஞ்சும் நெஞ்சினையுடையார் ஆயமகளிரின் தோளைப் பொருந்துவது எளிதல்ல”
“கொலைத் தொழிலினையுடைய ஏற்றினது கொம்பினிடையினிலே தாம் விரும்பும் மகளிர் மார்பில் விழுவது போல் வீழில் எம்முடைய இனத்தில் ஆயர்தம் மகளிருக்கு விலை வேண்டா” (கலி 103: 72-73)
ஆயமகளிர் ஆயரின் வீரத்தையே தம் காதலுக்கு விலையாக மதித்தனர். அவர் மறநெஞ்சின் மாண்பு மிகப் பெரியதேயாகும்.
XXX
பெண் ஆட்சியாளர்கள்
ஒரு சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பையும் மரியாதையையும் கொண்டு அது எவ்வளவு நாகரீக முன்னேற்றம் உடையது என்று அளந்து விடலாம். இந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மற்ற நாகரீ கங்களை ஒப்பிடுகையில் இந்திய நாகரீகம் முன்னேறியிருந்தது என்று துணிந்து கூறலாம். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தாத பண்டைய சமுதாயம் எதுவும் இல்லை. எல்லா நாகரீகங்களிலும் 99 சதவிகித அரசர்களையும் 1 சதவிகித அரசிகளையும் காண்கிறோம். கவிஞர்கள் முதல் மருத்துவர்கள் வரை எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். ரிக் வேதத்திலும் சங்கத்தமிழ் இலக்கியத்திலும் காணப்படும் பெண் கவிஞர்கள் எண்ணிக்கை கூட வேறு எந்த சமுதாயத்திலும் இல்லை.
குழந்தைகளைப் பெறுவதும் அவர்களை ஆரோக்கியமாக நற்பண்புகளுடன் வளர்ப்பதும் பெண்களின் கடமையாக இருந்தது. இல்லத்தரசி (HOUSE WIFE) என்பதே அவளுடைய முக்கிய தொழில். ஒரு ஔவையாரும், ஆண்டாளும், காரைக்கால், அம்மையாரும், கங்காதேவியும், மீராபாயும், ஜானாபாயும் விதிவிலக்குகள் ஆவர். ‘மனைக்கு விளக்காகிய வாணுதல்’ (புறம் 314) ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ (குறுந் 135) என்பன இலக்கியச் சான்றுகள்.
போருக்குச் செல்லுதல், வேட்டையாடுதல், நிலத்தை உழுது பயிர் செய்தல், ஆயுதங்களை உருவாக்கும் இரும்பாலை நடத்தல் போன்ற தொழில்களில் எல்லாம் ஆண்களை மட்டுமே காண்கிறோம். தர்மயுத்தம் நடத்தும் (அறப்போர்) மன்னன் பெண்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு முரசு அறிவித்த பின்னரே போர் நட்த்துவான் (புறம் 9 நெட்டிமையார்பாடல்). கண்ணகி மதுரையை எரித்த போதும் பசு பத்தினி பார்ப்பனர் ஆகியோரை விடுத்து மற்றவர்களை எரிக்கும்படி அக்னி தேவனுக்கு உத்தரவிடுகிறாள்.
ராமாயணத்தில் தசரதனுக்கும்சம்பரனுக்கும் நடந்த யுத்தத்தில் தேரோட்டிச் சென்று அவன் உயிரைக் காத்த கைகேயி, முல்லைப் பாட்டில் மன்னனுடன் பாசறைக்குச் சென்ற (முல்லை வரி 45-49) மகளிர் ஆகியோர் விதிவிலக்குகள். பொதுவாக வீரமகன்களை உருவாக்குவது மட்டும் (காண்க புறநானூறு 278-279) அவர்கள் பொறுப்பு, வீரப்போரில் ஈடுபடுவது அல்ல.
ஆயினும் 2000 ஆண்டு பாரத வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரடியாக ஆட்சி புரிந்த அரசிகளைப் பற்றி கேள்விப் படுகிறோம். மதுரையில் மீனாட்சி அரசாட்சி செய்ததும், பட்டாபிஷேகம் செய்து கொண்டதும் இன்று வரை ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவியின் உருவத்தையும் ஓவியத்தையும் இந்தியா முழுதும் காணலாம். (காண்க எல்லோரா, மகாபலிபுரம்…)
இவைகளை புராணம் என்று ஒதுக்கி விட்டாலும் கல்வெட்டுகள் சாசனங்கள் மூலம் பல ராணிகளை அறிகிறோம்.
சந்திரகுப்த விக்ரமாதித்தனின் மகளான பிரபாவதி தேவி தன் கணவன் ( வாகடக வம்ச மன்னன்) இளவயதில் இறந்ததால் அரசு கட்டில் ஏறினாள். குஜராத்தை சகரர்க ளிடமிருந்து வெல்வதில் தகப்பனுக்கு துணை புரிந்தாள்.
ஹர்ஷனுடைய ஆட்சியில் அவன் சகோதரி ராஜ்யஸ்ரீ முக்கிய பங்காற்றினாள். ராஜ ராஜ சோழனுக்கு அவன் தமக்கை குந்தவை ஆலோசகராக இருந்து ஆட்சியை வழிநடத்தினாள்.
ஜயசிம்மனின் சகோதரி அக்கா தேவி (கிபி 1025) ஆட்சிப்பொறுப்பிலும் போரிலும் முற்றுகையிலும் பங்கேற்றாள். காகதிய வம்சத்தரசி ருத்ராம்பாளும் மதுரை நாயக்கர் வம்சத்தரசி ராணி மங்கமாளும் மீனாட்சியும் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தனர்.
சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த விஜய பட்டாரிகாவும் (கிபி—) காஷ்மிரத்தைச் சேர்ந்த சுகந்தாவும் தித்தாவும் (கி பி 10 11ஆவது நூற்றாண்டுகள்) ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தனர்.
சாளுக்கியர் ஆட்சியில் அக்கா தேவி தவிர, சோமேஸ்வரரின் ராணி மைலா தேவி (கிபி 1080), ஆறாவது விக்ரமாதித்தனின் முதல் ராணி லெட்சுமிதேவி (கி பி 1100) ஆகியோர் தீவிர பங்கேற்றனர்.
ரஜபுதனத்தில் அரசர் சமர்சீ இறந்தவுடன் அவனது மனைவி கூர்மாதேவி (கி பி 1195) ஆண்டாள். ராணா சங்காவின் மனைவி மர்னாவதி தனது வீராவேச உரையில் அனைவரையும் ஊக்குவித்தாள். மற்றொரு மனைவியான ஜவஹர்பாய் போரிட்டு களத்திலேயே மாண்டாள்.
மராட்டியர் வரலாற்றுக் கோலாப்பூர் தாராபாயும் சித்தூர் அகல்யா பாயும் போர்களத்தில் பெரும் பங்காற்றினர்.
ரஜபுதனத்து பெண்கள் தங்கள் கணவர்கள் போருக்குச் சென்றபோது இரத்தத் திலகமிட்டு வழியனுப்பினர். கணவன் இறந்து விட்டால் மாற்றான் வசம் சிக்காமல் தீயில் பாய்ந்து உயிர் தியாகம் செய்தனர்.
அலாவுதீன் கில்ஜியிடமிருந்து தப்பிப்பதற்காக சித்தூர் ராணி பத்மினி நூற்றுக் கணக்கான தோழியருடன் தீப்புகுந்து தியாகம் செய்த வரலாறு உலகம் அறிந்த ஒன்று.
இவ்வாறு தீப்பாய்ந்து உயிர்த்தியாகம் செய்த பெண்களின் கைச்சுவடுகள் பதித்த கல்வெட்டுகளை நாடு முழுதும் காணலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருச்சிற்றம்பலம். அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.இன்று சித்திரை மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நன்னாள். சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் அவர்களின் குருபூஜை தினம் இன்று! அவரைப் போற்றி வணங்குவோம்.
ஹிந்து மதத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று அது யாரையும் பாவி என்று குறிப்பிடுவதில்லை. மாறாக அனைவரையும் அம்ருதஸ்ய புத்ரா: என்றே அழைக்கிறது. அது மட்டுமல்ல; மனிதர்களுக்கு மட்டுமல்ல மோக்ஷம். எந்த உயிரும் முக்தியைப் பெறலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறது அது. இதை மெய்ப்பித்துக் காட்டியவர் உமாபதி சிவாசாரியார்.
உமாபதி சிவம் தில்லை மூவாயிரவர் எனப்படும் மூவாயிரம் தீக்ஷிதர் குடும்பங்களுள் ஒன்றில் பிறந்தார். ஒருநாள் சோழ மஹாராஜன் அளித்த முத்துப் பல்லக்கில் அவர் சிதம்பரம் வீதியில் சென்று கொண்டிருந்த போது
அவரது பல்லக்கை கண்ட பெரும் மகானான மறைஞான சம்பந்தர் தான் அமர்ந்திருந்த திண்ணையிலிருந்தவாறே, “ பார், பார், பகல் நேரத்தில் குருடன் ஒருவன் பலகைகளில் ஏறிச் செல்கின்றான்” என்றார்.
பல்லக்கின் திரைகளை விலக்கிப் பார்த்த உமாபதி சிவாசாரியார் கண்களுக்கு மறைஞானசம்பந்தர் தோன்றவில்லை.சிதம்பரம் நடராஜரே தோன்றினார். உடனே பல்லக்கை விட்டுக் கீழே இறங்கிய உமாபதி சிவம் மறைஞானசம்பந்தரின் காலடிகளில் வீழ்ந்தார்,
மறைஞானசம்பந்தர் அந்த இடத்திலிருந்து ஓட்டமாக ஓட, உமாபதி சிவம் அவரைப் பின் தொடர்ந்து ஓடலானார். ஓடி ஓடி இருவரும் களைத்துப் போன நிலையில் நெசவாளர்ர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மறை ஞானசம்பந்தருக்கு கூழ் வார்த்தார். அதை அவர் சிவ பிரசாதம் சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே அருந்த அவர் முழங்கை வழியே சிறிது கூழ் சொட்டு சொட்டாகக் கீழே சிந்த, அந்தத் துளிகளை குரு பிரசாதம், குரு பிரசாதம் என்று சொல்லிக் கொண்டே உமாபதி அருந்தலானார். இந்தச் சம்பவத்தால்
அவரை தீக்ஷிதர் சமூகத்திலிருந்து விலக்கி விட்டனர்.
சிதம்பரத்திற்கு கிழக்கே உள்ள கொற்றவன் குடி என்ற இடத்திற்குச் சென்று ஒரு மடத்தை அமைத்து அவர் சிவ பூஜையை மானசீகமாகச் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள், ஆலயத்தில், உற்சவ நாளன்று கொடி ஏற்ற முயன்ற போது அதுகம்பத்தில் மேலே ஏறவே இல்லை. ‘உமாபதி சிவத்தை கொடி ஏற்றச் செய்க’ என்ற அசரீரி ஒலிக்கவே அனைவரும் அவரை அழைத்து கொடியை ஏற்றுமாறு வேண்டினர். உமாபதி சிவம் கொடிக்கம்பத்தின் முன் வந்து
ஒளிக்குமிருளுக்குமொன்றேயிடமொன்றுமேலிடிலொன்
றொளிக்குமெனினுமிருளடராதுள்ளுயிர்க்குயிராய்த்
தெளிக்குமறிவுதிகழ்ந்துளதேனுந்திரிமலத்தே
குளிக்குமுயிரருள்கூடும்படிகொடிகட்டினனே என்று பாடினார்.
உடனே கொடி மேலே ஏறியது அனைவரும் வியந்து அவரைப் போற்றிப் வணங்கினர்.தொடர்ந்து அவர் இன்னும் மூன்று பாடல்களைப் பாடினார்.
இந்த நான்கு பாடல்களும் கொடிப்பாட்டு என்ற பெயரால் சிறப்புற இன்றளவும் அழைக்கப்படுகின்றன.
இன்னொரு முக்கியமான அற்புத சம்பவம் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்தது.
அந்த நாளில், தாழ்ந்த குலத்தில் உதித்த பெற்றான் சாம்பான் என்பவன் விறகு வெட்டி தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தான். அவன் சிறந்த சிறந்த சிவ பக்தன்.
அவன் திருமடைப்பள்ளிக்கு ஒரு விறகுக் கட்டும் உமாபதி சிவாசாரியருக்கு ஒரு விறகுக் கட்டும் தினமும் தவறாமல் கொடுத்து வந்தான்.
நடராஜப் பெருமான் தன் சிறந்த பக்தனுக்கு அருள் பாலிக்க அருள் கொண்டார்.
தனது இயல்பான தோற்றத்தில் ஒரு திரிசூலம், கோடாலி, மான் உள்ளிட்ட அனைத்துடனும் அவன் முன் தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவபிரான் கேட்க, “ஐயனே! எனக்கு முக்தியே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்” என்றான் சாம்பான்.
உடனே சிவ பிரான் ஒரு ஓலை நறுக்கில் ஒரு செய்யுளை எழுதினார் இப்படி:
“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்
பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை”
அடியார்க்கெளியவனான சிற்றம்பலவன் கொற்றங்குடியார்க்கு எழுதிய ஓலை இது: பெற்றான் சாம்பானுக்கு உரிய முறையில் தீக்ஷை அளித்து அவன் முக்தி பெறச் செய்வதே முறையாகும். இது எனது ஆணை.”
ஓலையை பெற்ற சாம்பான் உமாபதி சிவாசாரியரின் காலில் வீழ்ந்து சிவ பிரான் தந்த ஓலையைத் தந்தான். ஒலையைப் படித்த சிவம் பரவசமடைந்தார். ஒரு க்ஷணத்தில் சாம்பானுக்கு நயன தீக்ஷை அளித்தார். அவ்வளவு தான், முதிர்ந்த பக்குவ நிலையில் இருந்த சாம்பான் ஒளி உடலைப் பெற்று சிதாகாசத்தில் கலந்தான்.
செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது. இதை அறிந்த அரசன் பெரிதும் வியப்புற்றான். தானே நேராக கொற்றங்குடிக்கு விஜயம் செய்தான். சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.
உமாபதி தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.
அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது. அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது. அரசன் இதைப் பார்த்து பிரமித்தான். இது பற்றி நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம் என்றான் அரசன்.
அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர். அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர். அரசன் உட்பட அனைவரும் சிவாசாரியரின் அடி பணிந்து வணங்கினர்.
இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை. கருடன் பூஜித்த தலம் பட்டீசுரம்; யானை திருவானைக்கா, குதிரை -திருக்குற்றாலம், புலி- பெரும்பற்றப் புலியூர் நரி- சிறுகுடி, ஆடு- திருவாடானை, நாய்- வீழிமிழலை, குரங்கு – தென்குரங்காடுதுறை அன்னம் – அம்பர், மயில் – மாயூரம் கிளி- கீரனூர் வண்டு- திரு வண்டுறை இப்படி மிருகங்களும் பறவைகளும் பூஜித்த தலங்கள் ஏராளம் ஏராளம் உண்டு. அவை முக்தி பெற்ற வரலாறுகளும் நிறைய உண்டு. ஆனால் மிகச் சிறப்பாக முள்ளுக்கும் முக்தி கொடுத்து அருளிய உமாபதி சிவாசாரியாரின் சிறப்பே சிறப்பு. அவரது குருபூஜை தினமான இன்று அவரைப் போற்றி வணங்குவோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று APRIL 25 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
திருமலையில் பிறந்தார் அனுமன்: ‘திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
திருப்பதி :’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் நேற்று அறிவித்தது.
ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் நேற்று வெளியிடப்பட்டது.ராமநவமி தினமான April 21 திருமலை திருக்கோவிலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது முன்னிலையில், இந்த அறிவிப்பை தேஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.
இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, இதுநாள் வரை கருதப்படுகிறது.மேலும், ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி; குஜராத்தில் உள்ள நவ்சாரி; ஹரியானாவின் கைத்தல்; மஹாராஷ்டிராவின் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களும், அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ‘திருமலையின் அஞ்சனாத்ரியில் பிறந்த அனுமன், அங்கிருந்து, 363 கி.மீ., தொலைவில் உள்ள ஹம்பிக்கு சென்றிருக்கலாம்’ என கூறப்படுகிறது. திருமலை தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு, புராண, இதிகாச ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
Xxx
திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 90 நாட்கள் வரை தரிசிக்கலாம்
கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது.
ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது.
ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது.
திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாடகை அறை ரிசிப்ட் ஸ்கேன் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பக்தர்கள் ஸ்கேன் செய்து கொண்டால், திருமலைக்கு செல்லும் முன் அவர்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு துணை விசாரணை அலுவலக எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின்னர் பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று தங்களின் அறையை பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பதியில் ஒரே நாளில் 25,695பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,253பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.21கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
xxxxx
அமர்நாத் பயணம் முன்பதிவு நிறுத்தம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.
:கொரோனா தொற்று பரவல் காரணமாக, அமர்நாத் பனிலிங்க கோவில் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள இமய மலையில், 12 ஆயிரத்து, 730 அடி உயரத்தில், அமர்நாத் பனிலிங்க குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு இணையதளம் வாயிலாக, ‘ஆன்லைன்‘ முன்பதிவுகள் செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம், வரும், ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது.
இதற்கான முன்பதிவுகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு – காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகள் மற்றும், ‘ஆன்லைன்‘ வாயிலாக, சமீபத்தில் துவங்கியது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அமர்நாத் பனிலிங்க புனித பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்தது.‘நிலைமை கட்டுக்குள் வந்த பின், முன்பதிவு மீண்டும் துவங்கப்படும்‘ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
XXX
இந்திய பக்தர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை: நித்தியானந்தாஅறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இந்திய பக்தர்கள் தனது கைலாசா தீவிற்கு வர அனுமதி இல்லை என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் சாமியார் நித்தியானந்தா. இவர், இந்துக்களுக்காக கைலாசா என்னும் தனித் தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல், தன்னுடைய நாட்டுக்கு தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். கைலாசா வர விரும்புபவர்களுக்கு இலவச விமான சேவை வழங்கி கூட்டி செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு நாடு எங்கு இருக்கிறது என்பதற்கான விடை மட்டும் கிடைத்தபாடில்லை.
கைலாசா எங்கு உள்ளது என்பது நித்தியானந்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியா செல்ல பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதேபாணியில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்துள்ளார். கடந்த 19ம் தேதியிட்டு, நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xxxx
உடுப்பி சிரூர் மடத்தின் மடாதிபதியாக 16 வயது சிறுவன் நியமனம்
உடுப்பி மாவட்டத்தில் உள்ள, அஷ்ட மடங்களில் ஒன்றான சிரூர் மடத்தின் மடாதிபதியாக 16 வயது சிறுவன் அனிருத் நியமிக்கப்பட்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்த மாதம் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
கர்நாடக மக்களால் வேதாந்தி, தத்துவவாதி என்று போற்றப்படும் மத்வாச்சாரியாரால் உடுப்பி மாவட்டத்தில் 8 மடங்கள் அமைக்கப்பட்டன. அவை பெஜாவர், பலிமாறு, அடமாறு, புத்திகே சோதே, கனியூறு, சிரூரு, கிருஷ்ணபுரா ஆகிய 8 மடங்கள் ஆகும். இந்த 8 மடங்களையும் சேர்த்து ஒன்றாக அஷ்ட மடங்கள் என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த அஷ்ட மடங்களில் பெஜாவர் மடம் தான் தலையாய மடம் என்று கூறப்படுகிறது.
இந்த அஷ்ட மடங்களில் ஒன்றான சிரூரு மடத்தின் மடாதிபதியாக லட்சுமிவரதீர்த்த சுவாமி இருந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து இந்த மடத்தின் பொறுப்பை சோதே மடத்தின் மடாதிபதி நிர்வகித்து வந்தார்.
16வயது சிறுவன்
இந்த நிலையில் சிரூர் மடத்தின் மடாதிபதியாக வித்யோதயா பள்ளி மாணவனான 16 வயதே நிரம்பிய அனிருத் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் துளு மொழி பேசும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரூர் மடத்தின் மடாதிபதியாக அனிருத் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து உடுப்பியில் சோதே மடத்தின் மடாதிபதி விஸ்வவல்லப தீர்த்த ஸ்ரீபாதரு சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனிருத், தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா பகுதியைச் சேர்ந்தவர். இவர் சிரூர் மடாதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கான பட்டாபிஷேக விழா அடுத்த மாதம்(மே) 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உத்தர கன்னடா மாவட்டம் சோதே மடத்தில் நடக்கிறது.
அதற்கு முன்பாக இவர் அஷ்ட மடங்களிலும் சன்னியாசம் பெறும் நிகழ்ச்சி நடைபெறும். இது அஷ்ட மடங்களின் சம்பிரதாய முறைப்படி நடக்கிறது. அஷ்ட மடங்களின் யாகம விதிகளின்படி சன்னியாசம் பெற்ற பிறகு அனிருத்துக்கு மடம் சார்பில் பெயர் சூட்டப்பட்டு, அவர் சிரூர் மடத்தின் மடாதிபதியாக பதவி ஏற்பார்.
மடாதிபதியாக நியமிக்கப்படுபவருக்கு வயது ஒரு பிரச்சினை இல்லை. ஒருவரின் அறிவுக்கூர்மை, மனிதாபிமான தன்மை, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கவனித்துதான் அந்த பதிவி அவருக்கு வழங்கப்படுகிறது– இவ்வாறு அவர் கூறினார்.
Xxxxx
ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமா ஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் ஏப்ரல் 14ம் தேதி கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வ சாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-
இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து நடைபெறும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும்.
புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும்.
விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக்கூடும்.
புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்க நேரிடும். பழைய கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.
இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும்.
அயல் நாடான பாகிஸ்தான் 3 நாடுகளாக பிரிய நேரும். நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க நேரும். சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். அண்டை நாடான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது சண்டை போட நேரம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவசாய உபகரணங்களின் விலை கடுமையாக உயரும். ராக்கெட் ஏவுகணையை தயாரித்து இந்தியா வெற்றி அடையும்.
மருத்துவத்தில் பெரும் முயற்சி செய்து ெதாற்று நோய்க்கான மருந்தை இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பார்.
இவ்வாறு பஞ்சாங்கத்தில் தகவல்கள் இடம்பெற்று இருந்தது.
Xxxxx
கேரளாவில் எளிமையாக நடந்தது ‘திருச்சூர் பூரம்’ விழா
கேரளாவின் பாரம்பரிய பெருமை மிக்க, ‘திருச்சூர் பூரம்‘ திருவிழா திருச்சூறில் ஏப்ரல் 23ம் தேதி எளிமையாக நடந்தது.
கேரளா மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், எல்லா ஆண்டும் சித்திரை மாதம் பூரம் நட்சத்திர நாளில், ‘திருச்சூர் பூரம்’ திருவிழா நடக்கிறது.
ஏப்ரல் 23ம் தேதி கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல்படி, மக்கள் கூட்டமின்றி விழா நடந்தது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 7:00 மணியளவில், கன்னிமங்கலம் சாஸ்தா, யானை மீது எழுந்தருளி தெற்கு கோபுர நடை வழியாக நுழைந்து, வடக்குநாதரை வணங்கினார்.
தொடர்ந்து, திருவம்பாடி கிருஷ்ணர், பாறமேக்காவு பகவதி அம்மன், செண்டை மேளம் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எழுந்தருளினர். இதன்பின், வடக்குநாதர் கோவில் வளாகத்தில், ‘இலஞ்சித்தறை மேளம்’ என அழைக்கப்படும், செண்டை மேளம் இசைக்கப் பட்டது.திருவம்பாடி மற்றும் பாறமேக்காவு கோவில் விழா குழுவினர் நடத்தும், ‘குடை மாற்றம்’ நிகழ்ச்சி, இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக நடந்தது.
திருவம்பாடி கோவில் சார்பில் ஒரு யானையும், பாறமேக்காவு பகவதி அம்மன் கோவிலின், 15 யானைகளும் அணிவகுத்தன. யானைகளின் மீது அமர்ந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய, வண்ண குடை மாற்றினர்.இரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.
Xxxxx
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ராஜாமணி நியமனம்
கோவை மாவட்ட முன்னாள் கலெக்டராக இருந்த ராஜாமணி ஐஏஸ்., தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, தமிழக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்தார்.
சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கலெக்டர் ராஜாமணி மற்றும் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் மீது எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தன. இதனையொட்டி, இருவரையும் இட மாற்றம் செய்வதுடன், தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவை பிறப்பித்தது. புதிய கலெக்டர் மற்றும் கமிஷனரை நியமிக்கவும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டது.
தற்போது ராஜாமணிக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
XXXX
ராமேசுவரம் கடல், தீர்த்த கிணறுகளில் புனித நீராடலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தடுப்பு தொடர்பாக அரசின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று அரியமான், காரங்காடு, ஏர்வாடி கடற்கரை பகுதிகளுக்கும் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21தீர்த்த கிணறுகள் சுற்றுலாத்துைற கட்டுப்பாட்டிற்குள் வராது என்பதால் சமூக இடைவெளியுடன் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.
XXX
எல்லோருக்கும் மஹாவீரர் ஜயந்தி வாழ்த்துக்கள்
24 ஆவது தீர்த்தங்கரர் ஆன சமண முனிவர் மஹாவீரர் ஜெயந்தி இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது . இன்று.சத்யம், அஹிம்சை ஆகியவற்றைப் போதித்த மஹாவீரர் பிறந்த தினம் ஆகும்.
அனைத்து மக்களுக்கும் மஹாவீரர் பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகுக
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
Xxx
TTD announces that Tirumala is birthplace of Lord Hanuman, provides ‘evidence’
The Tirumala Tirupati Devasthanams (TTD) on Wednesday announced that Japali Theertham near Akasha Ganga waterfall in Tirumala Hills was the birthplace of Lord Hanuman. The announcement cam on April 21, that is National Sanskrit University vice-chancellor V Muralidhara Sharma, who was one of the experts on the committee constituted by the TTD to establish Anjanadri Hill of the Seven Hills (Tirumala Hills) as the birthplace of Hanuman, announced at a programme organised in Tirumala that this was established after four months of intense research and collecting various pieces of evidence.
“It has been established based on puranic anthologies, literary evidence, epigraphic evidence and geographic details,” he said and added that Venkatachalam is also known as Anjanadri and 19 other names. Hanuman was born on Anjanadri in Treta Yuga, he said.
He said they have collected evidence from 12 Puranas and as for literary evidence, they were found in verses of Kamba Ramayanam and Annamacharya Sankeerthanas. He said that epigraphic evidence includes inscriptions found in Tirumala temple that in 12th and 13th-century Venkatachala Mahtyam was recited in Tirumala temple, processional deity of Sri Rangajanaya was brought to Anajandri for protection during the attack of Turks and later taken from there to Srirangam, inscriptions at Varadaraja Swamy temple in Kanchipuram, Sawal-e-Jawab, a record of practices engaged in Tirumala by North Arcot First Collector G Stratton in 1801–2 and later translated by VN Srinivas Rao in 1950.
As for geographical details, Sharma said in Skanda Puranam, when Anjana Devi asked Sage Matanga where Venkatachalam is, he clearly explained that it is north of Swarnamukhi river and 12 yojanas from Ahobilam.
“Claims that Hampi is the birthplace of Hanuman are not true. Hampi is Kishkinda while Venakatchalam is Anjanadri. It is clearly evident from the conversation between Sugreeva and Hanuman when the former asks the latter to bring Vanaras from Anajandri. If it was in Kishkinda, he would not have asked that way,” he said. He also dismissed the claims of other places like in Bhoomla district of Jharkhand, Gujarat and Kaikal in Haryana.
Tamil Nadu governor Banwarilal Purohit, TTD Executive Officer Dr KS Jawahar Reddy, who constituted the committee to determine the birthplace of Lord Hanuman, additional EO Dharma Reddy and others were present.
Other Claims
However, there is doubt among some historians over Anjaneya’s birthplace. The five other places which claim Hanuman originated from include:
1. There is a hillock near Anjanadri at Hampi in Karnataka. But scholars of Kannada University at Hampi affirmed that there is no material evidence to prove that.
2. Anjan village, 21 km from Gumla district headquarter in Jharkhand.
3. Anjan mountain in Navsari region of Gujarat.
4. Kaithal region in Haryana
5. Anjaneri, 7 km from Triambakeswar in Nashik district of Maharashtra
Historians contend that the Hampi region was popularly known as Kishkinda in legends and Puranas. Hence, Anjaneya could have gone to Hampi from Tirumala, which was just 363 km away. They also scientifically say that Hampi was 1,240 km from Gumla in Jharkhand, 1,626 km from Kaithal of Haryana, 616 km from Maharashtra, and ruled them all out and suggested that migration to Hampi is feasible.
Xxx
Restrictions on darshans in Tirumala
Tirumala Tirupati Devasthanams (TTD) is likely to impose restrictions on darshan of Lord Venkateswara in Tirumala due to the rising intensity Covid-19 cases in the country. Free Darshan is completely stopped. More restrictions on special entry tickets are also expected.
It is now mulling cutting down on daily issuance of Rs. 300 special entry darshan tickets too, starting from the month of May. Guidelines in this regard are expected to be released soon.
The devasthanam has in a statement said devotees, who have booked Rs. 300 special entry darshan tickets online for darshan from April 21 till April 30; but cannot come to Tirumala due to rising cases of Coronavirus in the country, can use the same tickets for darshan in the next 90 days.
xxxxxxxxxxxxx
Sixteen-year old boy to head Shiroor mutt
Sixteen-year old boy to head Shiroor muttShiroor mutt is one of the ‘Ashta’ (eight) mutts of Udupi
At a press meet in Udupi on Wednesday, the Sode seer introduced Aniruddha Saralatthaya, a class X student, who will be the next head of the Shiroor mutt.
Three years after the death of Shiroor mutt chief Swami Lakshmivara Teertha, a 16-year old boy has been named as his successor by Sode mutt seer Sri Vishwa vallabha Teertha.
Shiroor mutt is one of the ‘Ashta’ (eight) mutts of Udupi. Lakshmivara Teertha died on July 19, 2018, without naming a successor. Vishwavallabha Teertha, seer of Sode mutt, the ‘Dwandva’ Mutt of Shiroor, has been handling the mutt’s activities.
Xxx
Registration for Amarnath Yatra temporarily suspended
In view of evolving Covid-19 situation, registration for Amarnath Yatra is being temporarily suspended, said Shri Amarnathji Shrine Board on Thursday.
The board further said that the situation is being constantly monitored and it will be reopened once the situation is improved.
Online registrations for this year’s Amarnath Yatra commenced on April 15.
This year’s 56 day-yatra will commence simultaneously on both routes from June 28 and culminate on Raksha Bandhan, August 22.
The yatris who propose to travel by helicopter do not require registration as their helicopter tickets shall suffice for this purpose. However, they shall be required to produce the Compulsory Health Certificate,(CHC) in the prescribed format issued by an authorised doctor, before they are allowed to travel by helicopter.
Xxxxxxxxxx
Thirrsur Pooram celebrated without pomp amid Covid
Amid strict vigil and restrictions in the wake of surging Covid-19 cases in the second wave of the pandemic in Kerala and across the country, Thirrsur Pooram was celebrated on Friday without spectators.
Unlike the usual pomp and thunderous cheers of spectators — who enjoy the ensemble of percussion instruments and parade of 80-odd, caparisoned elephants — this time, Pooram was restricted to mere rituals.
The entry was restricted to only artists, temple board members, mahouts and others involved in the rituals of the festival. Earlier, the temple body and many Hindu outfits had insisted for a regular festival, citing the just- concluded assembly elections, but after several rounds of discussion, all agreed to limit the festival to mere rituals.
The lack of spectators, however, failed to dampen the grandeur of the visual spectacle. The Pandi Melam led by maestro Peruvanam Kuttan Marar enthralled the festival, which was live streamed by many channels. Thiruvambadi temple only paraded only one elephant, but Paramekavu Devi temple brought 15 jumbos and Kudamattom, the change of colourful parasols in quick succession, added to the grandeur.
The largest cultural pageant of the state, Pooram was started in the late 18th century by erstwhile King of Kochi, Sakthan Thamburan. Every year, the festival is held at Vadukunathan temple in Thrissur. But last year, it was not held in view of the pandemic situation. Usually, more than two million devotees take part in the 10-day celebration, which culminates with a musical ensemble and grand fireworks. It is also a major tourist attraction of the state. But over the last two years, pandemic has taken sheen out of the festival.
XXXX
Planting trees crucial to protect soil’s fertility: Isha founder
Fertile soil is the real asset of the nation and planting trees is crucial to protect the fertility of the soil and the health of the people, Isha Foundation Founder Sadhguru Jaggi Vasudev said on Thursday.
This is the primary objective of Isha’s Cauvery Calling movement which is encouraging farmers in Tamil Nadu and Karnataka to adopt tree-based agriculture which has proven to yield enormous ecological and economic benefits for the farmer,a release from Isha said on the occasion of World Earth Day.
“Mother Earth is so generous. If only we give her the chance, she will restore everything in absolute abundance and beauty,” he said in a message.
In the 2020 planting season, farmers in both states planted 1.1 crore saplings on their farmlands in the Cauvery river basin which is expected to have a significant impact on the soil health and water holding capacity of the densely populated river basin, the release said.
“Without fertile soil, there is no question of abundant water as healthy soil is the greatest reservoir of water. Nutrient-rich soil can absorb rainwater and store it underground, protecting it from evaporation and recharging groundwater tables,” the spiritual leader said.
xxxx
Fugitive godman Swami Nithyananda bans Indians from entering ‘Kailasa’ ISLAND NATION
Fugitive godman Swami Nithyananda has banned Indians from entering ‘Kailasa’, his island ‘nation’ due to the ongoing Covid pandemic.
Nithyananda has also banned travellers from Brazil, European Union, and Malaysia. His statement was released in a video.
In December 2020, Nithyananda had made headlines when he announced a 3-day visa to ‘Kailaasa’ off the coast of Ecuador in South America.
When the Covid-19 pandemic struck the world in March this year, Nithyananda had made headlines saying that those who made fun of him for going into self-isolation are scrambling to find a place where they can quarantine themselves, a media report said.
The godman had fled India following several charges against him,
While the police were investigating how Nithyananda managed to flee the country when his passport had expired, shockingly, the website says ‘Kailaasa’ has its own “passport”. The symbols on the passport include the flag of Kailaasa, called Rishabha Dhvaja, and features Nithyananda along with Nandi, Lord Shiva’s mount.
Xxxx
Mangaluru temple authorities booked for violating COVID-19 norms
The authorities of the Ullal Somanath temple near Mangaluru in Karnataka have been booked by the local police on charges of violating COVID-19 guidelines by organising a religious event in which thousands of devotees had participated.
Mangaluru tahsildar Guruprasad had issued a notice to the temple at Ullal three days ago seeking a reply. On Tuesday, Ullal police registered a case under the Epidemic Act and section 269 of the Indian Penal Code for organizing the ‘Jatrotsav’ violating the state government order.
As part of Brahma kalasha Utsav, the temple authorities had organised a chariot procession and ‘hore kanike’ on Monday. Thousands of devotees from various corners had gathered for the procession and many were seen not wearing masks or maintaining social distancing.
Xxxxxx
HAPPY MAHAVIR JAYANTI TO EVERYONE
Mahavir Jayanti is one of the most auspicious festivals in the Jain community. This year, it is being celebrated TODAY April 25, 2021. The Jains offer prayers, carry out rath yatras and visit temples, to commemorate Mahavir Jayanti.
This festival marks the birth of Vardhamana Mahavira, who was the 24th and the last Tirthankara, spiritual teacher in Jainism.
XXXXXXX
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு, சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு, தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே
ஞானசம்பந்தர் திருவடி போற்றி! ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் மந்த்ரிணி பீடமாகத் திகழும் மதுரை ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள இது சென்னையிலிருந்து 454 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. மலயத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை ஆகியோரின் தவத்திற்கிணங்க அவர்களுக்கு மீனாட்சி மகளாகப் பிறந்தாள். மூன்று மார்பகங்களுடன் பிறந்த தேவி தன்னை மணம் முடிப்பவரைப் பார்க்கும் போது நடுவில் உள்ள மூன்றாவது மார்பகம் மறையும் என்ற நிலையில் சுந்தரேஸ்வரராகத் தோன்றிய சிவபிரானைப் பார்த்தவுடன் மூன்றாவது மார்பகம் மறையவே அவரையே மணமுடித்தாள் என இப்படி புராண வரலாறு கூறுகிறது.
இறைவன் திரு நாமம் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர் – சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்களும் உண்டு. அம்மன் திரு நாமம்: மீனாக்ஷி
மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் சந்நிதிகளின் மேல் உள்ள விமானங்கள் தங்கத்தினால் வேயப்பட்டவை. தல விருக்ஷம் : கடம்ப மரம் தீர்த்தம் – இந்திரனால் அமைக்கப்பட்ட பொற்றாமரைக் குளம்
மீனாக்ஷி அம்மனின் சிலை மரகதத்தால் ஆனது. மரகதவல்லி, அங்கயற்கண்ணி, தடாதகை, பாண்டியராஜகுமாரி என்ற பல சிறப்புப் பெயர்களும் மீனாக்ஷி அம்மனுக்கு உண்டு. மீன் எப்படி தன் கண் பார்வையினாலேயே தனது முட்டைகளைத் தன்மயமாக்குகிறதோ அதே போல தனது பக்தர்களை தன் கண்களின் பார்வை மூலம் மீனாக்ஷி காப்பாற்றுவதாக மேலோர் தெரிவிக்கின்றனர். மீனாக்ஷி அம்மனின் கருவறை 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் படி தேவேந்திரனால் அமைக்கப்பட்டதாகும்.
ஸ்வாமி சந்நிதியில் உள்ள லிங்கம் மேருமலை, வாரணாசி உள்ளிட்ட தலங்களை விட மிகப் பழமையானது என்பதால் இது மூல லிங்கம் என்று கூறப்படுகிறது.
சிவபிரான் தாண்டவமாடிய பஞ்ச ஸ்தலங்களில் இது ரஜத சபை எனப்படும் வெள்ளியம்பலம் ஆகும். இங்கு இறைவன் கால் மாறி வலது காலைத் தூக்கி நடனமாடிய கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சியைக் கண்டு மகிழலாம்.
வைகை நதிக் கரையில் அமைந்துள்ள இந்தத் தலம் தொன்று தொட்டு புகழ் பெற்ற தலமாக இருந்து வந்திருப்பதை ஏராளமான புராணங்களும், பழம்பெரும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஆலவாய் என்றும் நான்மாடக் கூடல் என்றும் தூங்கா நகரம் என்றும் பல்வேறு சிறப்புப் பெயர்களைக் கொண்ட இது சங்கத் தமிழ் வளர்த்த தமிழ் நகரமாகும். இறைவனே 49 புலவர் உள்ள சங்கப் புலவர் சபையில் தலைவராக இருந்திருப்பதோடு கோவிலின் உள்ளே உள்ள மண்டபத்தில் இன்றும் அருள் பாலித்து வருகிறார்.
மீனாக்ஷி சந்நிதிக்கு வெளியில் அமைந்துள்ள பொற்றாமரைக் குளம் தகுதி வாய்ந்த நூல்களை மட்டும் ஏந்தும் சங்கப் பலகை கொண்ட அதிசயக் குளம் என்பது உள்ளிட்ட ஏராளமான வரலாறுகளைக் கொண்டது. திருக்குறள் அரங்கேற்றப்பட்ட இடமும் இதுவே! கோவிலின் உள்ளே சுந்தரேஸ்வரர் பிரகாரத்தில் அமைந்துள்ள முக்குறுணி விநாயகர் மிக பெரிய அளவில் இருப்பதோடு விழாக் காலங்களில் உரிய முறைப்படியான பெரும் அப்பங்கள், கொழக்கட்டைகள் உள்ளிட்ட நிவேதனத்தால் வழிபடப் பெறுகிறார். இங்குள்ள முருகன், துர்க்கை சிலைகளுக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு.
மீனாட்சி பட்டணம் என்று அன்புடன் அழைக்கப்படும் இந்தத் தலத்தின் அரசாட்சி உரிமையைப் பெற்றவர் மீனாட்சி அம்மனே. அவரை முதலில் வணங்குவதே இங்குள்ள மரபாகும். ஏராளமான உற்சவங்களைக் கொண்ட கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்களில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
கோவிலில், மூன்று இடங்களிலிலிருந்து வருவது போன்ற குரங்கு சிலை, ஒரு புறம் பார்த்தால் பசு, மறு புறம் பார்த்தால் யானை என்று அமைக்கப்பட்ட சிற்பம், மஹாபாரத வீரர்கள் உள்ளிட்டோரின் சிலைகள் என நூற்றுக் கணக்கில் அதிசய சிற்பங்கள் உள்ளன. வடக்குக் கோபுர வாயில் வழியாக நுழைந்தால் இடப்பக்கம் நாம் காண்பது பல்வேறு ஸ்வரங்களை இசைக்கும் இசைத் தூண்களைத் தான்! திருக்கல்யாண மண்டபம், அஷ்ட சக்தி மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், 985 தூண்கள் கொண்ட, எங்கிருந்து பார்த்தாலும் மையம் தெரியும் படி அமைக்கப்பட்டுள்ள ஆயிரங்கால் மண்டபம், உள்ளிட்ட ஏராளமான மண்டபங்கள் பல்வேறு அரசர்களால் காலந்தோறும் கட்டப்பட்டு வந்துள்ளன. கோவிலின் எதிரில் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள திருமலை நாயக்கர் மன்னர் கட்டிய புது மண்டபம் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.
அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் கொண்ட அற்புதத் தலம் இது. பிட்டுக்கு மண் சுமந்தது, நரியைப் பரி ஆக்கியது உள்ளிட்ட வரலாறுகளை அனைவரும் அறிவோம். அத்திருவிளையாடல்களின் சின்னங்களாக ஆனைமலை, பசுமலை, நாகமலை உள்ளிட்டவை இன்றும் மதுரை நகரிலும் மதுரையைச் சுற்றிலும் உள்ளன. சுவாமி சந்நிதி பிரகாரங்களில், இந்த 64 விளையாடல்களின் சித்திரங்களைக் காணலாம். கோவிலைச் சுற்றி சதுர வடிவில் ஆடி, ஆவணி, சித்திரை, மாசி வீதி என மாதங்களின் பெயர்களைக் கொண்ட வீதிகள் உள்ளன. மாசி வீதியில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்ச்சியாகும். கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன. தெற்குக் கோபுரம் 170 அடி உயரம் கொண்டு வானளாவி இருக்கிறது.
பாண்டிய நாட்டில் முக்கியத் தலமாகத் திகழும் இதில் ஞானசம்பந்தர் 9 பதிகங்களையும் அப்பர் இரு பதிகங்களையும் அருளியுள்ளனர். அருணகிரிநாதர் 12 திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார். நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார், மூர்த்தியார் ஆகிய நாயன்மார்கள், சுந்தரர், மாணிக்கவாசகர், அப்பய்ய தீக்ஷிதர்,நீலகண்ட தீக்ஷிதர் உள்ளிட்ட ஏராளமான சித்தர்கள், மகான்கள் வசித்த தலம் இது. பகவான் ரமணர் உயரிய ஞான அனுபவம் பெற்ற இல்லம் தெற்கு கோபுரத்திற்கு எதிரில் உள்ள தெருவில் சிறிது தூரத்தில் உள்ளது.
திருப்பல்லாண்டு பாடப்பட்ட வைணவ திருத்தலமும் மதுரையே. ஸ்ரீ கூடலழகர் அருள் பாலிக்கும் இது 108 வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகவும் அமைகிறது. பாண்டியனுக்கு மெய் காட்டிய பொட்டல் இன்று பேச்சு வழக்கில் மேங்காட்டுப் பொட்டலாக மாறி உள்ளது. இது மீனாட்சிஅம்மன் தெற்குக் கோபுரத்திற்கு மிக அருகே உள்ளது. காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
(பெண்கள் வாழ்க தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)
வேதகாலத்தில் மைத்ரேயி போன்ற பெண் தத்துவ ஞானிகள் இருந்ததை போல இதிகாச காலத்திலும் பலர் இருந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் சபரி. இவர் தமிழ்நாட்டு ஔவைப்
என்கிறது இதிஹாசம். ராவணன் சீதையால் அழிந்த ராமாயணக் கதையை அனைவரும் அறிவர்.
ஜிஹ்வாஹ்ரே பந்தனம் ப்ராப்தம் ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம் |
உனது நாக்கு நுனியில் தான் லக்ஷ்மி வசிக்கிறாள். உனது நாக்கு நுனியில் தான் நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர் – (இனிமையான வார்த்தைகளைப் பேசும் போது!) அதே நாக்கு தான் உன்னைச் சிறைக்கும் கொண்டு செல்லும், ஏன் மரணத்திற்கே கூட இட்டுச் செல்லும் கடினமான வார்த்தைகளைப் பேசினால்!
At the tip of your tongue reside riches and also friends and relatives (when it utters sweet words). The same tongue can lead to prison or even death if it utters harsh words.
Translation by : Kalyana- Kalpataru August 2017 issue
*
சர்வநாஷே சமுத்பன்னே ஹ்ரார்தம் த்யஜதி பண்டித: |
அர்தேன குருதே கார்யம் சர்வநாஷோ ந ஜாயதே ||
சர்வ நாசம் ஏற்படும் ஒரு நிலையில் புத்திசாலியானவன் பாதி நாசமடைவதை தன் விருப்பத்துடனேயே அனுமதிக்கிறான். இப்படியாக, மீதி இருக்கும் பாதியுடன் சர்வ நாசத்திலிருந்து அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.
When a situation arises of total ruination, a wise person willfully allows destruction of half. Thus, he is able to pull along with remaining half and saves himself from total ruination.
Translation by : Kalyana- Kalpataru September 2017 issue
பேராசை பிடித்த ஒருவனை புத்திசாலியானவன் பணத்தைக் கொடுத்து வெல்ல வேண்டும். கோபம் கொண்டவனையோ உடனடி சரணாகதி மூலம் வெற்றி பெற வேண்டும். முட்டாளையோ அவன் சொன்னதை ஆமோதித்து வெல்ல வேண்டும். பண்டிதனான ஒருவனையோ தத்வார்த்தம் (உண்மையைச்) சொல்லி வெல்ல வேண்டும்.
*
A wise man should win over a greedy person by offering money, an angry person by instant surrendering, a fooling person by supporting his viewpoint and a learned by merely stating truth.
Translation by : Kalyana- Kalpataru November 2017 issue
தூரஸ்தம் ஜலமத்யஸ்தம் தாவந்தம் தனகார்விதம் |
க்ரோதவந்தம் மதோன்மத்தம் நமஸ்காரேபி வர்ஜயேத் |
தூரத்தில் நின்று கொண்டிருக்கும் ஒருவனுக்கோ அல்லது ஆற்றில் இருக்கும் ஒருவனுக்கோ அல்லது ஓடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கோ அல்லது கோபத்துடன் இருக்கும் ஒருவனுக்கோ அல்லது தனது செல்வாக்கினால் கர்வம் பிடித்த ஒருவனுக்கோ நமஸ்காரம் செய்யக் கூடாது.
One should avoid doing pleasantries to a person standing far away or in a river or who is running or is proud of his own affluence or full of anger and pride.
Translation by : Kalyana- Kalpataru December 2017 issue
*
சலம் சித்தம் சலம் பித்தம் சலே ஜீவிதயௌவநே |
சலாசலமிதம் சர்வம் கீர்திர்யஸ்ய ச ஜீவதி ||
மனம் சஞ்சலமானது. செல்வம் மாறும் இயல்புடையது, நிலையற்றது. அதே போலத் தான் ஜீவிதமும் (வாழ்க்கையும்), இளமையும் கூட! சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த உலகில் அனைத்துமே நிலையற்றவை தாம்! ஆனால் எவன் ஒருவன் தனது புண்ணியச் செயல்களால் அழியாத கீர்த்தியைப் பெறுகிறானோ அவனே நிலையாக வாழ்பவன் ஆவான்.
The mind is fickle, wealth is transient and so is life as well as youth: in short, all in the world is transitory, but he only lives for ever who has earned everlasting fame through his meritorious deeds.
Translation by : Kalyana- Kalpataru August 2018 issue