பரிபாடல், சிலம்பில் ரிக்வேத வரிகள் ! (Post No.7588)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7588

Date uploaded in London – 18 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பரி பாடல் என்னும் நூல், சங்க இலக்கியத்தி ல் எட் டுத் தொகையில் ஒரு நூல்  ஆகும்  . அதில் நாலாவது பாடல் கடுவன் இளவெயினனார் பாடியது. அவர் திருமாலைப் புகழ்கையில் சொல்கிறார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 —

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள

நின் குளிர்ச்சியும் தண்மையும் சாயலும் திங்கள் உள

நின் கரத்தலும் வண்மையும் மாரி  உள

நின் புரத்தலும் நோன்மையும்  ஞாலத்து உள

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள

நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள

பொருள்

உன்னுடைய வெம்மையும் ஒளியும் சூரியனிடத்தில் உளது;

உன்னுடைய குளிர்ச்சியும் மென்மையும் சந்திரனிடத்தில் உளது;

உன்னுடைய அருட் பெருக்கும் கொடையும் மேகத்திடம்  உளது

உன்னுடைய பாதுகாப்பும் பொறுமையும் நிலத்தின்பால் உளது;

உன்னுடைய நறுமணமும் ஒளியும் காயாம் பூவிடத்தில் உளது

உன்னுடைய தோற்றமும் விரிவும் கடலில் உளது

உன்னுடைய உருவமும் ஒலியும் வானில் உளது

உன்னுடைய பிறப்பும் மறைவும் காற்றில் உளது

ஆகையால் இவை அனைத்தும் உன்னிடத்திலிருந்து பிரிந்து

உன்னைத் தழுவியே உள்ளன என்று திருமாலை (விஷ்ணுவை)ப் போற்றுகிறார் . அதாவது எல்லாம் ‘இறைவன் படைப்பு, எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான்’ என்ற மாபெரும் தத்துவம் , வேதத்தில் உள்ளதை போல இந்தப் பாடலிலும் காணப்படுகிறது

இவ்வாறு இயற்கைச் சக்திகளின் உருவத்தில் இறைவனைக் காண்பதை  உலகின் மிகப்பழைய சமய நூலான ரிக் வேதத்தில் தான் முதன்முதலில் காண்கிறோம். ஏனைய சுமேரிய, எகிப்திய கிரேக்க நாகரீகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை பற்றிய குறிப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆயினும் வேதத்தில் கோர்வையாக இதே வரிசையில் கடவுளைப்  போற்றுவதை ரிக் வேதத்தின் 8-29 பாடலில் வருவதை நேற்று இங்கே  கொடுத்தேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல்

சங்க இலக்கியத்தில் இல்லாத, திருக்குறளில் இல்லாத, ஒரு புதுமையை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பரிபாடலைப் பாடிய கடுவன் இளவெயினனார் போலவே, இளங்கோ அடிகளும் ரிக் வேதத்தைப் பின்பற்றுகிறார். ரிக் வேதம் 8-29 பாடலைப் போல சந்திரனை முதலில் வாழ்த்துகிறார்.. ரிக் வேதம் 8-29ல் இந்திரன்/மழை , மித்ரன்/சூரியன், வருணன்/கடல் நீர் ஆகியனவும் போற்றப்படுகின்றன. இளங்கோ அதை அப்படியே, கொஞ்சம் வரிசை மாற்றிப், பாடுகிறார். அவ்வளவுதான். வேதங்களையும், பிராமணர்களையும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இளங்கோ அடிகள், வானளாவப் புகழ்வதையும் பார்க்கிறோம். (சிலப்பதிகாரம் பிராமண காவியமா? என்ற எனது ஆராய்ச் சிக் கட்டுரையை இதே பிளாக்கில் படியுங்கள்; முழு விவரமும் தந்துள்ளேன் )

மங்கல வாழ்த்துப் பாடல் tamilandvedas.com, swamiindology.blogspot.com

திங்களைப் போற்றுதும்!  திங்களைப் போற்றுதும்!

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெங்குடை போன்று இவ்

அம் கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான் 

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்

பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு

ஓங்கிப் பரந்து ஒழுகலான்

சிலப்பதிகாரத்தில் சந்திரன், சூரியன், இந்திரன் (மழை ), ஊர் (நிலம்/பூமாதேவி) என்ற வரிசையில் போற்றுதல் வருகிறது

ஆக மொத்தத்தில் இப்படி இயற்கைச் சக்திகளை போற்றும் வழக்கம் ரிக் வேதத்தில் துவங்கி, கிட்டத்தட்ட அதே வரிசையில்,  சிலம்பு வரை வருகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே வேத மரபு என்பது தெளிவாகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

கீழ்கண்ட பத்து கடவுளர் அல்லது ரிஷிக்கள் ரிக் வேதம் 8-29ல் வருகிறது.

1.சோமன்/சந்திரன் 2.அக்நி (தீ), 3.துவஷ்டா , 4.இந்திரன், 5.ருத்ரன் 6. பூஷன் , 7.விஷ்ணு , 8.அஸ்வினி தேவர்கள், சூரியை என்னும் பெண், 9. மித்திரன், வருணன், 10.அத்ரி ரிஷி குடும்பத்தினர்.

மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களிலும் திங்கள்/சோமன் , ஞாயிறு/மித்திரன், மழை /இந்திரன் என்பன பொதுவாக உள்ளதைக் காணலாம்.. tamilandvedas.com, swamiindology.blogspot.com

சங்க இலக்கியத்திலும் மநு நீதி நூலிலும்  அரசர்களின் ஆற்றலை விளக்கும்போதும் இதே வருணனையைக் காணலாம்..

Tags  –  பரிபாடல்,  ரிக்வேத,  வரிகள், சிலப்பதிகாரம்,

–subham–

வள்ளி கொண்டான் மயில் ஏறிக் கொண்டான் – ஏன்? (Post No7587)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7587

Date uploaded in London – 18 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

வள்ளி கொண்டான் மயில் ஏறிக் கொண்டான் – ஏன்?

ச.நாகராஜன்

பள்ளிகொண்டான் என்று ஒரு பெரும் வள்ளல் இருந்தார். புலவர்களைப் பெரிதும் மதிப்பவர்; பரிசுகளை அள்ளிக் கொடுப்பவர்.

இவரைப் பாடாமல் இருக்க முடியுமா?

நையாண்டிப் புலவர் இவரைப் பற்றிப் பாடிய இரு பாடல்களைப் பார்ப்போம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 :

சிவபிரான் சூரியனையும் சந்திரனையும் தினமும் பூமியைச் சுற்றிச் சுற்றிக் காவல் காக்கச் செய்து விட்டாராம். ஏன்?

செங்கை வரிச்சிலை தங்கம தைச்சம்பு தீவுதன்னில்

எங்குவைத் தாலும் பள்ளிகொண் டான்றமிழ்க் கீவனென்றே

திங்க ளிரவி தினஞ்சுற்றிக் காக்கத் திரை சுருட்டும்

கங்கைக்கு முத்தரத் தேயொளித் தானுமை காதலனே

உமைகாதலன் – உமாதேவிக்குப் பிரியமான சிவபிரான்

செங்கை – தனது சிவந்த கையில் ஏந்துதற்கு உரிய

வரிசிலை – கட்டமைத்த வில்லானது tamilandvedas.com, swamiindology.blogspot.com

தங்கம் – தங்கமாயிருக்கிறது என்று

அதை – அந்த வில்லை

சம்புத்தீவு தன்னில் – ஜம்புத் தீபத்தில்

எங்கு வைத்தாலும் – எந்த இடத்தில் வைத்தாலும் கூட

அ – அந்த

பள்ளிகொண்டான் – பள்ளிகொண்டான் (என்னும் பிரபு)

தமிழ்க்கு – தமிழ்ப் பாடல்களுக்கு

ஈவன் என்றே – பரிசாகத் தந்து விடுவான் என்றே

திங்கள் இரவி – சந்திர சூரியரை

தினம் – நாள் தோறும்

சுற்றிக் காக்க – வலம் வந்து காக்கும்படி செய்ததோடு

திரை சுருட்டும் – அலைகள் சுருட்டப்படுகின்ற

கங்கைக்கும் உத்தரத்தே – கங்கை நதிக்கு வடபுறத்தில்

ஒளித்தான் – அந்தச் சிலையை ஒளித்து வைத்தான்

பள்ளி கொண்டான் தமிழ்ப் பாடல்களுக்குப் பரிசு அளிக்க வேண்டும் என்று விரும்புபவன். சிவபிரானின் சிலையோ தங்கமாகும் அதாவது மேருமலை தங்கம் போல் ஒளிர்வதால் அதைப் புலவர் தங்கம் என்கிறார். திரிபுர சங்கார காலத்தில் இறைவனுக்கு மேருமலை வில்லாக அமைந்தது. ஆகவே அது செங்கை வரிச்சிலைத் தங்கம் எனப்படுகிறது. அந்த வில்லைக் காக்க நினைத்த சிவபிரான் அதை கங்கைக்கு வடபுறத்தில் ஒளித்து வைதததோடு சூரிய சந்திரரை தினமும் சுற்றிச் சுற்றி வந்து அதைக் காவல் காக்குமாறு பணித்தார்.

பள்ளிகொண்டான் நையாண்டிப்புலவருக்கு பரிசளிக்காமல் விடுவாரா என்ன? tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதே பள்ளிகொண்டானைப் பற்றி நையாண்டிப்புலவர் பாடிய இன்னொரு பாடல் இது :-

வள்ளிகொண் டான்மயி லேறிக்கொண் டான்மதி போலுமலை

வெள்ளிகொண் டான்விடை யேறிகொண் டான்விண் ணவர்க்கமுதம்

துள்ளிகொண் டான்புள்ளி லேறிக்கொண் டான்சுப சோபனஞ்சேர்

பள்ளிகொண் டான்புகழே றிக்கொண் டானென்று பார்க்கவென்றே tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுப சோபகம் சேர் – சுப சோபகம் பொருந்திய

பள்ளிகொண்டான் – பள்ளிகொண்டான் என்ற வள்ளல்

புகழ் ஏறிக் கொண்டான் என்று – புகழ் மீது ஏறிக் கொண்டான் என்று

பார்க்க என்றே – அதனைப் பார்க்க வேண்டும் என்றே

வள்ளிகொண்டான் – வள்ளியை மணம்புரிந்து கொண்ட முருகப்பிரான்

மயில் ஏறிக் கொண்டான் – மயில் மீது ஏறிக் கொண்டான்

மதி போலும் வெள்ளிமலை கொண்டான் – சந்திரன் போன்ற வெள்ளி மலையாகிய கைலாயத்தை தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபிரான்

விடை ஏறிக்கொண்டான் – ரிஷபத்தின் மீது ஏறிக் கொண்டான்

விண்ணவர்க்கு – தேவர்களின் பொருட்டு

அமுதம் துள்ளிக் கொண்டான் – அமுதத்தைத் துளித்தவனாகிய திருமால் tamilandvedas.com, swamiindology.blogspot.com

புள்ளில் ஏறிக் கொண்டான் – கருடன் மீது ஏறிக் கொண்டான்.

அருமையான பாடல்களை அள்ளிக் கொண்டோம் என்று மகிழலாம் இல்லையா, நாமும்!

***

Tags பள்ளி கொண்டான், நையாண்டிப்புலவர், மயில் 

RIDDLE POEM IN THE RIG VEDA (8-29)- Post No.7586

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7586

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

There are several poems in the Rig Veda addressed to Visve Devaas. ‘Visve Devaas’ mean ‘All Gods’. The seers make it a point to include all the important deities such as Mitra and Varuna, Indra and Agni. The verses of this hymn are in the form of riddles. None of these deities is mentioned by name in the following poem. Generally, Rig Vedic seers enjoy speaking in symbolic language or coded language. Visve Devas hymns always have challenges to scholars. Strange names are used leading to various interpretations by scholars.

This feature in the religious or mythological thought of many peoples is a significant factor in the invention and development of myths. This shows that the story telling tendency is not a mere blind impulse or a mis understood interpretation of natural phenomena , but that the poets could be deliberately invent and imagine, and just for that reason we cannot expect to trace myths back to a primitive  stock of ideas, any more  than we can derive all words from a primitive stock of roots.

xxx

Also note one Doctor is ready with medicines in one of the following Mantras!!!

Also note there is a god who knows hidden treasures!!

Here is a poem (RV. 8-29) from the eighth mandala of the Rig Veda:-

1.One is tawny, of changing form, bountiful, young; with golden ornament he decks himself .

2. One shining has taken his seat in the lap- the altar- a wise one among the gods.

3. One bears in his hand a bronze axe; constant among the gods.

4. One bears grasped in his hand a thunderbolt, wherewith he slays his enemies.

5. One bears in his hand a sharp weapon; a pure One, mighty, bearing healing medicines.

6. One makes the paths prosperous, like a thief; one knows of hidden treasures.

7. One, wide going, makes three steps; thither where the gods enjoy exhilaration.

8. With birds two go together with one woman; faring forth as on a journey.

9. Two highest ones made their seat in the sky; lords sipping ghee

10. Some singing hymns conceived a great Sama song ;ith it they made the sun to shine.

ANSWERS TO RIDDLE

1.SOMA, 2 AGNI, 3.TVASHTAR, 4.INDRA, 5.RUDRA, 6.PUUSHAN, 7.VISHNU, 8.ASVINS WITH SUURYAA, DAUGHTER OF SURYA, 9.MITRA, 10. THE ATRIS, FAMILY OF PRIESTS.

Xxx subham xxx

டாக்டர் கடவுள் யார்? புதையல் கடவுள் யார்? ரிக் வேதப் புலவர் புதிர் ! (Post No.7585)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7585

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ரிக் வேதப்  புலவர்கள் மகா மேதாவிகள்; அவர்கள் எதையும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். மறை பொருளில் பகர்வர். உலகிலேயே ரிக் வேதத்தை சரியாகப் புரிந்து கொண்டவன் தமிழன் ஒருவன்தான். வேதத்துக்கு மறை  (ரகசிய மொழி)  என்ற அழகான பெயரைக் கொடுத்தான். சங்கத் தமிழ் நூல்களில் இந்த அழகான சொல் பயிலப்படுகிறது. அது மட்டுமல்ல. ரிக் வேதத்தையே தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்களோ என்றும் எண்ண வேண்டி இருக்கிறது. ஏனனில் தமிழர்களின் கடல் தெய்வம் வருணன் என்றும், மருத நிலக் கடவுள் இந்திரன் என்றும் தொல்காப்பியர் செப்புகிறார். இவ்வளவு தெளிவாக, ரத்தினச்  சுருக்கமாக எந்த சம்ஸ்கிருத நூலிலும் இல்லை. ரிக் வேதத்திலுள்ள பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்களை படித்தால்  இந்திரனுக்கும் வருணனுக்கும் மாயோனுக்கும் (விஷ்ணு) 1008 அடை மொழிகள் கொடுத்து இருப்பர். அதைப்  படிக்கும் வெளிநாட்டினர் வருணன் வான் தெய்வமா, கடல் தெய்வமா, சந்திரனா, இருளைக் குறிக்கும் ராத்திரி தெய்வமா என்று காரசார விவாதம் நடத்தினர். இன்னும் கதைக்கின்றனர். தமிழனோ பொட்டில் அடித்தாற்போல புகன்று விட்டான்.

இதே போல யாக, யக்ஞ, ஹோம, ஹவனுக்கு ‘வேள்வி’ என்ற ஒரே சொல்லைப்  போட்டு அசத்திவிட்டான் தமிழன். இந்த ‘வேள்வி’ என்ற சொல், தமிழத்தில் வேத மதம், சங்க காலத்துக்கு வெகு காலம் முன்னரே தழைத்து ஓங்கி விட்டதற்குச்  சான்று என்று காஞ்சி முனிவரும், பரமாசார்யாருமான ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி  (1894-1994)  சுவாமிகளும் விளம்புவார் .

ரிக் வேதப் புலவர்கள், மறை பொருளில் கவி படுவதை உலகோர்  அறிவர். சில கவிதைகள் முழுக்க முழுக்க விடுகதையாக அமைந்துள்ளன. குறிப்பாக எட்டாவது மண்டலத்திலுள்ள 29-ஆவது கவிதையைப் படித்து ரசிக்கலாம். ஒவ்வொரு கடவுளின் சிறப்பையும் சொல்லிவிட்டு கடவுளின் பெயரை நாமே கண்டுகொள்ளும்படி புதிர் போடுகிறார் புலவர் . இதோ இந்தக் கவிதையின் மொழி பெயர்ப்பைப் படியுங்கள்.. விடை கடைசியில் உளது. அதைப்  பார்க்காமலேயே எத்தனை கடவுளரை நீங்கள் கண்டுபிடிக்க முடிகிறது என்றும் பாருங்கள்:–

1.ஒருவன் பழுப்பு நிறமுள்ளவன் . எங்கும் பரவுபவன்; இரவுகளின் தலைவன், யுவன்; போன் ஆபரங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்பவன் (அவன் யார்?)

2.ஒருவன் அறிஞன்- தேவர்களின் நடுவே பிரகாசிப்பவன் – தன்னுடைய இடமான  வேதியிலே அமர்ந்துள்ளான் .

3.ஒருவன் தேவர்களிடையே இரும்புக் கோடாலியைச் சுழற்றிக் கொண்டிருக்கிறான்.

4.ஒருவன் தன கையில் இயங்கும் வஜ்ராயுதத்தை பற்றுகின்றான். அதனால் அவன் விருத்திரனைக் கொல்கிறான்.

5.ஒருவன் ஒளி வீசுகிறான்- உக்கிரமானவன் –  கையில் கூரிய ஆயுதத்தை வைத்து இருக்கிறான் . அவன் குணப் படுத்தும் மருந்துகளைத் தருகிறான்.

6.ஒருவன் கள்ளர்களைப் போல வழிகளை, பாதைகளைக் கவனிக்கிறான். அவனுக்கு மறைந்து கிடக்கும் புதையல் செல்வங்கள் தெரியும் .

7.ஒருவன் கம்பிர நடையுள்ளவன் மூவடியால் ஓங்கி உலகளந்தவன்

8.இருவர் சிட்டாகப் பறந்து செல்லும் குதிரைகளில் ஒரு பெண்ணோடு போகின்றனர். அவர்கள் அந்நிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளைப் போல விரைகிறார்கள்.

9.இருவர் வானத்தின் உயரே அமர்ந்து இருக்கிறார்கள் ; வணங்கப்படும் அவர்கள் நெய் ஆகுதிகளை ஏற்கிறார்கள்.

10.சிலர் சாம கீதம் இசைத்து , புகழ் பாடி , சூரியனையே பிரகாசிக்க வைக்கிறார்கள் (யார் இவர்கள்)

புதிர்களுக்கு விடை –

1.சோமன்/சந்திரன் 2.அக்நி (தீ), 3.துவஷ்டா , 4.இந்திரன், 5.ருத்ரன் 6. பூ ஷன் , 7.விஷ்ணு , 8.அஸ்வினி தேவர்கள், சூரியை என்னும் பெண், 9. மித்திரன், வருணன், 10.அத்ரி ரிஷி குடும்பத்தினர்.

இது வைவஸ்வத மநு பாடியது அல்லது மரீசி காஸ்யபன் பாடியது என்று பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது.

–subham–

மனிதர்களில் இந்திரன் , பிரம்மா, விஷ்ணு, சிவன் யார்? (Post No.7584)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7584

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மனிதர்களிலும் இந்திரன் , பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இருக்கிறார்களாம். இதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் அறப்பளீஸ்வர சதகம் எழுதிய அம்பலவாண கவிராயர் கண்டுபிடித்துள்ளார். அவர் பாடலில் பகர்வதாவது,

பிறர் கைகளை எதிர் பாராது தன்னை மட்டும் காத்துக்கொள்பவன் சாமர்த்தியன் ஆவான்.

10 பேரை   காப்பாற்றுபவன் உலகம் புகழும் தேவன்  ஆவான்;

100 பேருக்கு தங்கக் காசுகள் கொடுத்து போற்றுபவன் ஒப்பற்ற இந்திரன் ஆவான் ;

1000 பேரை, இந்தப் பூவுலகில் காப்பாற்றும் புண்யவான் பிரம்மன் ஆவான்;

10,000 பேரை, அதாவது நன்மை செய்கின்ற பத்தாயிரம் பேரைக் காத்து ரக்ஷிப்பவன் செங்கண் மாலாகிய விஷ்ணு ஆவான்;

100000000 +++++  இவர்கள் போக மிச்சமுள்ள  எல்லா நல்லவர்களையும் காப்பாற்றும் மனிதன் இருக்கிறானே, அவன் சிவபெருமானுக்கே சமம் ஆவான்.தேன் ஒழுகும், இருள் போன்ற கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்திருக்கும், மன்மதனை மிஞ்சும் அழகுடைய சிவ பெருமானே ! அறப்பளிச்சுரனே ! (உன்னை வணங்குகிறேன்

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். நீதிகள் அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.

—subham —-

Four Tamil Folktales (Post No.7582)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7582

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

A spendthrift asked a miser for a loan.

How will you repay the loan? He asked.

I will save monthly from my pay and will pay it, he said.

Could you not save it so it before? He asked.

I was ignorant and neglected to do so, he said.

Then I will make you understand it now. I am not going to lend you money.

Start saving now. Think that you are repaying my loan.

Afterwards the spendthrift began to save money.

Xxx

A man saw a rich gentleman and said to him,

If you supply me with good food for six months,

after that I will carry a big mountain.

He accordingly gave him good food.

Afterwards called him and took him to a nearby mountain.

Carry this mountain, he ordered.

He said, if you put the mountain on my hand, I will carry it, he replied.

Xxx

A Guru was teaching his disciples.

While he was teaching, one of the pupils saw a rat entering into its hole.

He was distracted. Guru watched his pupil’s behaviour.

Immediately after finishing, he asked his pupil,

Has it all entered? Guru asked his disciple.

He meant has it all gone into his brain.

Pupil answered, it has all gone in, but the tail only remains.

This is the story behind a Tamil proverb.

Xxx

A priest went to one of his disciple’s house after he complained that his children were behaving strangely. Then the priest wanted to find out the level of wickedness in them.

My friend, which of your four children is well behaved one?

He replied, Sir, this one who is on the top of the thatched house and whirling a firebrand. He is trying to set fire to the house. He is the best behaved among them all.

The priest said,

What kind of persons must the other three be? and having put his finger on his nose he heaved a deep sigh and went away.

This is the story behind a Tamil proverb.

Placing a finger in one’s nose is a sign of exclamation or surprise in Indian culture.

Source book – Katha Manjari, R H James, Senthamiz, Munushi, Puduvai Rajagopala Mudaliyar, Bangalore, year 1850

—subham–

கடவுள் செய்த ஆறு தவறுகள்- அம்பலவாணர் பட்டியல் (Post No.7581)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7581

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கொல்லிமலை சதுரகிரியில் வாழும் அறப்பளீச்சுரனே ! சிவ பெருமானே. நீ கீழ் கண்ட ஆறு செயல்களை ஏ ன் செய்தாய் ? (பதில் சொல்லாவிடில் என் தொகுதி எம்.எல்.ஏ. மூலம் சட்டசபையில் கேள் வி கேட்பேன். பார்லிமெண்டில் எங்கள் தொகுதி எம்.பி.யும் இதுபற்றிக் கதைப்பார். எச்சரிக்கை)

1.கொஞ்சம்  கூட ஈவு இரக்கம் இல்லாதவர்களினிடையே, ஏனப்பா, கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்தாய்? சொல், சொல்.

2.அது சரி, போகட்டும். நல்ல புண்ணிய ஆத்மாக்களைப் பார்த்தால் ஏழைகளாக இருக்கிறார்களே. அவர்களிடம் ஏனப்பா வறுமை என்னும் கொடுமையை வைத்தாய்?

3.கொஞ்சம் கூட நீதி நெறி தெரியாத மூடர்களுக்கு கற்பு நெறி தவறாத அருந்ததி போன்ற கற்புக்கரசிகளை மனைவியாக வைத்தாயே . இது என்னப்பா, நியாயம்?

4.நிதானமாகச் சிந்தித்துச் செயல்படும் உத்தமர்க்கு பாசாங்கு செய்யும் நீலி போன்ற பெண்களைக் கொடுத்த்தனை . ஏன் , ஏன் ?

5.கற்றோரும் மற்றோரும் , குணமற்ற கீழ்மட்ட மக்களிடையே கைகட்டி, வாய் புதைத்து, அடிமை வேலை செய்ய வைத்தனையே . அது நியாயமா?

6.அதையெல்லாம்கூட பொறுத்துக்கொள்வேன். தமிழின் பெருமையே தெரியாத ஆட்கள் மீது நல்ல புலவர்களைக் கவிபாட வைத்தனையே. என்ன கொடுமை இது? பதிலைச் சொல்லிவிடப்பா.

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு

பாம்புச் செடி உண்மையா? (Post No.7580)

பாம்புச் செடி உண்மையா ? (Post No.7580)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7580

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஞாயிறு தோறும் நான் நடத்தும் SKYPE ஸ்கைப் கிளாஸ்ஸில் கம்பராமாயணம் முடித்து அகநாநூற்றுக்கு  வந்துள்ளோம் . அகனானூற்றுப் பாடலில் பாம்புச் செடி பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அதுபற்றி எங்களிடையேயே விவாதம் எழுந்தது. உடனே நான் காளிதாசனும் தனது காவியத்தில் ஒளிவிடும் ஜோதிர்லதா மரம் பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறான். தமிழ் இலக்கியத்திலும் அது இருக்கிறது. பி.பி.சி. டீ.வி. யில் (David Attenborough) டேவிட் அட்டன்பரோவின் இயற்கை (Nature) பற்றிய டாகுமெண்டரிகளை பார்த்தபோது அதற்கு விளக்கம் கிடைத்தது. அவர் காட்டிய படம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை tamilandvedas.com, swamiindology.blogspot.com

..

அதாவது நியூஜிலாந்தின் குகைகளில் பல லட்சம் மின்மினிப் பூச்சிகள் (Fire Flies)  வசிக்கின்றன. அவை ஒளிவிடும் போது அந்தக் குகைகள் முழுதும் ஜகஜ்ஜோதியாகக் காட்சி தரும். அடுத்த நிமிடம் இருள் சூழும் . அதாவது நாம் திருவிழாக்  காலங்களில் போடும் அலங்ககார விளக்குகள் போல எரிந்தும் (on and Off) அணைந்தும் மாறி மாறி வரும். இது போல அந்தக் காலத்தில் நம் இந்தியக் காடுகளிலும் சில இடங்களில் மரம் முழுதும் மின்மினிகள் வசித்து இருக்கலாம். அதைத்தான் காளிதாசன் ஜோதிர்லதா என்றும் தமிழ் இலக்கியம் ஒளிவிடும் மரங்கள் என்றும் சொல்லுகின்றன போலும் அந்தக் கோணத்தில் இந்த அகநானுற்றுப் பாடலையும் காண்போம் என்றேன். tamilandvedas.com, swamiindology.blogspot.com

உடனே ஸ்கைப் (Skype)  மாணவர்கள் புஸ்தகங்களில் இருந்து இரண்டு விளக்கங்களைப்  படித்தார்கள். ஆனால் நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் உட்கார்ந்து பழங்கால புஸ்தகங்களைப் படித்தபோது ஒரு அதிசயச்  செய்தி கிடைத்தது.

முதலில் அகநாநூற்றுப்  பாடல்

அன்னாய்  !  வாழி , வேண்டு அன்னை! நம் படப்பைத்

……………………

……………………

வெண்கோட்டு யானை விளிபடத்துழ வும்

அகல்வாய்ப் பாந்தட் படா அர் ப்

பகலும் அஞ்சும்  பனி க்கு கடுஞ் சுரனே

—அகநானூறு பாடல் 68

– என்று 21 வரிப் பாடல் முடிகிறது.

பாடியவர் ஊட்டியார் , திணை – குறிஞ்சி

இதில் ‘அகல்வாய் பாந்தள்’ என்பது யானையை விழுங்கும் மலைப் பாம்பா அல்லது பாம்புச்  செடியா ? (Python or Snake plant?) என்பதை யே ஆராய வேண்டியிருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாடலின் மொத்தக்க கருத்தும் மிகவும் சுவையானது. இரவு நேரத்தில் காதலியை ரகசியமாக சந்திப்பதற்கு காதலன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறான். அப்போது தோழி போய், காதலியின் அம்மா அசந்து தூங்குகிறாளா அல்லது பாசாங்கு செய்கிறாளா என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கிறாள். இறுதியில் அதற்கு அம்மா பதில் சொல்லாததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள்; கஷ்டமான வழியைக் கடந்து வந்த காதலனை சந்திக்கலாம் என்று காதலிக்கு ‘க்ரீன் சிக்னல்’ Green Signal கொடுப்பது பாடலின் பொருள்.

காதலன் கடந்து வந்த கஷ்டமான பாதையை வருணிக்கும் போது ,

“யானைக் குட்டிகளை வெள்ளம் அடித்துச் செல்கிறது. அதைக் காப்பாற்ற வெண்மையான தந்தம் உடைய ஆண் யானையும் பெண் யானையும் ஆரவாரம் செய்கின்றன. . மேலும் அங்கே இடம் அகன்ற பாம்புச் செடிகள் வேறு  உள்ளன . இவைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறான் உன் காதலன் என்கிறாள் தோழி.

‘ஸ்கைப்’ கிளாஸ் முடிந்தவுடன் பழைய உரைகளைத் தேடித் படித்தேன். அதில் ‘அகல் வாய்ப் பாந்தள்’ என்பதற்கு அகன்ற வாய் உடைய பாம்புச் செடிகள் என்று சொல்லிவிட்டு அகன்ற வாயுடன் யானையை விழுங்கும் மலைப் பாம்பு என்றும் சொல்லுவர் என்று கண்டேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

முன்னரே யானையை விழுங்கும் மலைப் பாம்புகள் பற்றிய சங்க இலக்கியப்  பாடல்களை இதே ‘பிளாக்’கில் எழுதியுள்ளதாலும், நானே பி.எஸ்சி. பாட்டனி (தாவரவியல்) படித்ததாலும் பாம்புச் செடி தவறென நினைத்தேன்.

ஆனால்………………………………

ஆனால் வாரத்துக்கு மூன்று முறை லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி போய் 100 ஆண்டுப் பழமையான புஸ்தகங்களை ஆராயும் ஒரு பகுதியாக நேற்று ஒரு புஸ் தகத்தை போட்டோ காப்பி எடுத்தேன் . புஸ்தகத்தின் தலைப்பு –

கொடைக்கானல் அருகில் பண்ணைக்காட்டில் கன்னியநாதசுவாமிகள் என்ற  மாம வுன தேசிகர் பற்றிய புஸ்தகம் 1924ல் வெளியிடப்பட்டது. இதை பெரியகுளம் கற்பூர திருவேங்கட சுவாமிகள் இயற்றியிருக்கிறார். இதில் பழனிக்கும் கொடைக்கானலுக்கும் இடையே உள்ள காட்டுப் பகுதி பற்றி வருணிக்கும் பகுதியில் ‘நாகதாளி’ என்னும் செடி பாம்புபோலச் சீறி தீப்பொறி கக்கும் என்கிறார். பின்னர் மலையில் எழும் வினோத ஒலிகளை வருணிக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

எனது கருத்து

நாகதாளி என்பதற்கு ஒரு வகை மரம், சப்பாத்திக்கு கள்ளிச் செடி என்று ஆனந்த விகடனின் பழைய அகராதி கூறுகிறது . தாவரவியல் விலங்கியல் படித்த நான் (Phosphorescent)  ஒளி உமிழும் மீன் வகைகள், கடல் பிராணிகள், பிளாங்க்டன் (Planktons)  என்னும் நுண்ணுயிர்கள் , சில வகை  (Glow worms)புழுக்கள், மின்மினி பூச்சிகள்  முதலியவற்றை  அறிவேன். ஆ னால் பாம்பு போல சீறும் செடி வகைகளை அறியேன்; சில காலத்துக்கு முன்னர் மனிதர்களைக் கண்டால்  நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் ஒரு செடியின் வீ டியோவைக்  கண்டேன். ஆயினும் இதில் 99 சதவிகிதம் மோசடி வீடியோக்கள் தான் அதிகம். . யாரும் எதையும் எடிட் செய்து என்ன அற்புதத்தை வேண்டுமானாலும் யூ  டியூ ப்பில்  காட் டமுடியும் . ஆயினும் 1920களிலேயே இப்படி பழனி மலைக்காடுகளில் நாகதாளி என்னும் பாம்புச்  செடி இருந்ததாக மக்கள் நம்பியது தெரிகிறது. ஆகையால் அகநாநூறு பாடல்  விளக்கத்தில் நாகதாளி செடி என்றும் கொள்ளலாம் .

ஒரு வேளை உண்மையில் இப்படி பாம்புச் செடிகள் இருந்து அழிந்தும் போயிருக்கலாம். சங்க இலக்கியத்தில் சர்வ சாதாரணமாக வருணிக்கப்படும் நீர் நாய்களை (Otter) நாம் இப்போது எல்லா நதிகளிலும் காண முடியவில்லை. திருவள்ளுவர், கபிலர் வருணிக்கும் முகர்ந்தால் வாட்டும் அனிச்சம் பூவையும் காணமுடியவில்லை. அதுபோல நாகதாளி என்னும் பாம்புச் செடியும் அழிந்து இருக்கலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxxx

Snake Flowers of Himalayas and North America

ஆனால் பாம்பு போலத் தோன்றும் பலவகை பூக்கள்  உடைய செடி கொடிகள் உண்டு. கூகுள் (Google) செய்தால் நிறைய செடிகளைப்  பார்க்கலாம். நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் நாகலிங்கப் பூக்கள் முதல் இமயமலை பாம்புப் பூ  வரை பல செடி கொ டிகள் இருக்கின்றன.

xxxx

From Wikipedia

டார்லிங்டோனியா என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது; இதனை அமெரிக்க சாடிச் செடி அல்லது கலிபோர்னிய சாடிச் செடி எனவும் அழைப்பார்கள். இது ஈரமான மண் சேறு நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் வளரும் ஒரு செடி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை இதில் புதிய இலைகள் வளர்கின்றன. இது தரையில் வளரும் மிகச்சிறிய மட்டத்தண்டு கிழங்கைக் கொண்ட செடியாகும். மண்ணின் மேல் இலைகள் ரோஜாப்பூ இதழடுக்கு போல அமைந்திருக்கும். இந்த இலை போன்ற அமைப்பு குழாய்வடிவ ஜாடிகளாக நேராக நிமிர்ந்து செங்குத்தாக நிமிர்ந்து இருக்கும். சில நேரங்களில் இந்த இலை போன்ற அமைப்பு நுனியில் முறுக்கிக் கொண்டு, இரண்டாகப் பிளவுபட்டுக் காணப்படும். இது பாம்பு படமெடுத்து ஆடுவது போல தோற்றமளிக்கும் எனவே இதனை பாம்புச் செடி எனவும் கூறுவர்.(Wikipdia)

common name of this plant is Snake Plant.

TAGS — பாம்புச் செடி, நாகதாளி, சப்பாத்திக்கு கள்ளி, சங்க இலக்கியம்

–subham–

ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்!- Part 1(Post No.7579)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7579

Date uploaded in London – – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கள்,நூல்கள் – 1

பஜகோவிந்தம்!

ச.நாகராஜன்

1971ஆம் ஆண்டிலிருந்து 1972,73,74,75,76,77,78 என்று பல ஆண்டுகள் கல்கி வார இதழில் வாரந்தோறும் காஞ்சிபெரியவாளின் (ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள்) அருளுரைகள் வெளியாகி வந்தன. அதில் ஆதி சங்கரரின் நூல்களுக்கு அவர் அவ்வப்பொழுது அளித்து வந்த விளக்கம் பக்தர்களைப் பரவசப்படுத்தி வந்தது.

ஆதிசங்கரரின் நூல்களுக்குச் சரியான விளக்கம் அறிந்து கொள்ள விரும்புவோர் அவற்றைப் படித்தாலேயே போதும்.

இந்தப் பகுதியில் ஆதிசங்கரரின் ஸ்தோத்திரங்கள், நூல்கள் பற்றிய ஒரு அறிமுகம் மட்டும் செய்ய விழைகிறேன். (விளக்கங்களுக்கு ஜகத்குரு உள்ளிட்ட மகான்கள், அறிஞர்களின் புத்தகங்கள் ஏராளம் உள்ளன, அவற்றை வாங்கிப் படித்துப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்)

  1. பஜகோவிந்தம்

ஜகத்குரு காஞ்சி பெரியவாள்  ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிக் கூறுவது இது:

“ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள் உலகத்திலுள்ள மேதைகள் எல்லாரும் ஆச்சரியப்படும்படியாக அத்வைத பாஷ்யங்கள் செய்திருக்கிறார். ஏற்கனவேயிருந்த ‘பிரம்மசூத்திரம்’, உபநிஷத்துக்கள், பகவத்கீதை முதலியவற்றை விளக்கி அவர் எழுதியதற்கு ‘பாஷ்யம்’ என்று பெயர்.

இது தவிர, தாமே (ஒரிஜினலாக) ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ் ரீ’ முதலான பல அத்வைத கிரந்தங்களைச் செய்திருக்கிறார்.

பாஷ்யத்திலிருந்து வித்தியாசம் தெரிவதற்காக  அவர் சொந்தமாகச் செய்த இது போன்ற நூல்களைப் ‘பிரகரண கிரந்தங்கள்’ என்பார்கள்.”

ஆக ஜகத்குரு பாஷ்யம் மற்றும் பிரகரண கிரந்தம் என்றால் என்ன என்பதை இப்படி விளக்கியுள்ளார். ஆதி சங்கரர் பக்தர்கள் ஓதி நலம் பெறுவதற்காக ஏராளமான ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார்.

இவை அற்புதமான லலிதமான தேர்ந்த சம்ஸ்கிருதச் சொற்களால் இயற்றப்பட்டிருப்பதால் சொல்லும்போதே ஆனந்தமாக இருக்கிறது; பொருளை உணரும் போது மனம் பண்படுகிறது. ஆன்மா உயர்கிறது.

1. பஜகோவிந்தம்

31 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்டது பஜகோவிந்தம். வேதாந்தக் கருத்துக்களை எளிய நடையில் தரும் இது எப்படிப் பிறந்தது என்பதற்கு ஒரு சுவையான கதை உண்டு.

ஒரு நாள் ஆதி சங்கரர் தனது சீடர்களுடன் வாரணாசியில் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வயதான பண்டிதர் ஒருவர் இலக்கண சூத்திரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதைக்  கண்டார். வயதான காலத்தில் மரணம் நெருங்கி வரும் சமயத்தில் இந்த இலக்கணம் அவரை எப்படிக் காப்பாற்றும் என்று மிகவும் இரக்கப்பட்டு  அவரைக் கடவுள் பால் மனதைச் செலுத்தும் படி அருளுரை புகன்றார்.

உடனேயே அவர் பஜகோவிந்தத்தைப் பாடியருளினார்.

இந்த ஸ்தோத்திரம் 12 ஸ்லோகங்களைக் கொண்டதாக் அமைந்தது. அதனால் இதை ‘த்வாதசமஞ்சரிகா ஸ்தோத்ரம்’ என்று சொல்வது வழக்கம்.

கூட வந்த சீடர்கள் 14 பேரும் ஆளுக்கு ஒரு ஸ்லோகத்தைப் பாடி இதில் சேர்க்கவே இதை (14 ஸ்லோகங்கள் கொண்டது என்ற அர்த்தத்தில்) ‘சதுர்தச மஞ்சரிகா ஸ்தோத்ரம்  என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இந்த இரண்டையும் தனித்தனியே பல சுவடிகளில் காண முடிகிறது. ஒவ்வொன்றிலும் இறுதியில் ஒரு ஸ்லோகம் சேர்க்கப்பட்டது.

காலப்போக்கில் இது 31ஆக வளர்ந்து இப்போதிருக்கும் உருவை அடைந்து விட்டது.

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

பஜகோவிந்தம் மூடமதே |

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே

நஹி நஹி டுக்ருஞ்கரணே ||

என்பது முதல் ஸ்லோகம்.

இதை ஏராளமானோர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளனர்.

ஸ்ரீ காமாக்ஷிதாஸர் மொழிபெயர்த்துள்ள எளிய அழகிய இனிய மொழிபெயர்ப்பை எடுத்துக்காட்டாக இங்கு காணலாம்:

கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி

கோவிந்தனைத் துதி மடநெஞ்சே!

காலத்திற்கெதிருன் காலத்தெல்லை

கசதப காத்திடல் இல்லை இல்லை.

இதை ஆங்கிலத்தில் அறிஞர் ஸ்ரீ T.M.P. மஹாதேவன் மொழிபெயர்த்துள்ளார்.

முதல் ஸ்லோகத்திற்கு அவர் மொழிபெயர்ப்பு இது:

Adore the Lord, Adore the Lord, Adore the Lord, O, Fool!

When the appointed time (for departure) comes,

The repetition of grammatical rules will not, indeed, save you.

புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம் |

இஹ சம்ஸாரே பஹுதுஸ்தாரே

க்ருபயாபாரே பாஹி முராரே || (ஸ்லோகம் 21)

பொருள் : மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு, மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு

இந்த சம்சாரமானது தாண்டுவதற்கு அரிதாக இருக்கிறது. முராரீ! (முரனை சம்ஹாரம் செய்த ஹே! கிருஷ்ணா!) என் மீது கருணை கொண்டு என்னைக் காப்பாற்று!

இப்படி ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் இருப்பதோடு  மிக நுட்பமான அதி ரகசியமான வேதாந்தக் கருத்துக்களையும் உபதேசிப்பதாக அமைந்திருக்கிறது.

பாரத ரத்னா ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி தனது இனிய குரலில் இதைப் பாடியுள்ளார். அதைக் கேட்டவர்கள் மனம் உருகி இதில் லயிப்பர்.

பக்திக்கு ஒரு கீதம் பஜகோவிந்தம்!

  (அடுத்து தொடர்வோம்)

****

மாதவையா குடும்பத்தினரின் மகத்தான தமிழ் சேவை (Post No.7578)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7578

Date uploaded in London – 15 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பழைய தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? என்று 2016ல் ஒரு கட்டுரை எழுதினேன். முத்தமிழ் நாவல் முன்னோடிகளில் ஒருவரான அ. .மாதவையா பற்றியும் அவருடைய மகன், மகள்கள் பற்றியும் கிடைத்த செய்தியை பிரிட்டிஷ் லைப்ரரி நூல் ‘தில்லைக் கோவிந்தன்’ கதையிலிருந்து இங்கு இணைத்து இருக்கிறேன்.. பெண் எழுத்தாளர்கள் வரலாற்றை எழுதுவோருக்குப் பயன்படும். மாதவையாவின் வாழ்க்கைக்குறிப்பும் சுவையானது. அவருக்கு ‘பம்பா’ (PAMBA) என்ற புனைப்பெயர் எப்படி ஏற்பட்டது என்பதை படியுங்கள்.

Tags -மாதவையா, விசாலாக்ஷி அம்மாள், பம்பா

tamilandvedas.com › tag › எழுத்தாளர்க…

எழுத்தாளர்கள் | Tamil and Vedas

  1.  

6 Jun 2016 – தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … புரிந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களைப் பார்த்தால் பெண்கள் பெயர்களையே …

SUBHAM