அலுமினியம் பற்றிய அதிசயச் செய்திகள்( Post No.9399)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9399

Date uploaded in London – –19 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

அலுமினியம் பற்றிய அதிசயச் செய்திகள்தங்கம் முதல் யுரேனியம் வரை இதுவரை 30 மூலகங்களின் (31 out of 118 elements) கதைகளை  எழுதினேன். இன்று 31ஆவது தனிமத்தைக் காண்போம். இதன் பெயர் அல்யு மினியம் (Aluminium). நாம் அலுமினியம் என்று தவறாக உச்சரிப்போம். . இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வெள்ளிக்கு நிகராக சிம்மமாசனத்தில் வீற்றிருந்தது. பின்னர் எங்கும் கிடைக்கும்……………………….

tags — அலுமினியம் , அதிசயச் செய்திகள், 

‘Terrorist Columbus’ கொலம்பஸ் பற்றிய அதிசயச் செய்திகள் (Post No.7164)

Recent pictures of Demonstrations in America

WRITTEN  by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 NOVEMBER 2019

Time  in London – 8-59 AM

Post No. 7164

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1992ம் ஆண்டு நவம்பர் 8-ல் தினமணிப் பத்திரிக்கையில் நான் கொலம்பஸின் புத்துலகக் கண்டுபிடிப்பின் 500ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஒரு கட்டுரை எழுதினேன். அப்பொழுதே அவரது விழாவுக்கு எதிர்ப்பு அலைகள் கிளம்பின. சென்ற மாதமும் இதே போல ஒரு விழாவுக்கு எதிர்ப்பு அலைகளும் ஆதரவு அலைகளும் கிளம்பி கொலம்பஸ் சிலைக்கு கரி பூசும் அளவுக்கு அது போய்விட்டது. கொலம்பஸ் செய்த அக்கிரமங்கள், அதிசயங்கள் பற்றிய கட்டுரை – “கொலம்பஸ் குறித்து சர்ச்சை” — இதோ:–

Columbus statues vandalized on US holiday named for him

October 15, 2019

PROVIDENCE, R.I. (AP) — Several Christopher Columbus statues were vandalized with red paint and messages against the 15th century Italian navigator Monday when the U.S. holiday named for one of the first Europeans to reach the Americas was being celebrated.

A statue in Providence, Rhode Island, was splashed from head to toe Monday with red paint, and a sign reading “Stop celebrating genocide” was leaned against the pedestal.

The word “genocide” was written in orange paint on the rear of the pedestal.

The statue has been the target of vandals on Columbus Day in the past. A spokeswoman for Mayor Jorge Elorza said the statue will be cleaned Monday.

–subham–

அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 1 (POST NO.3162)

kumara-4842-1bv-344-31

Written by London swaminathan


Date: 17 September 2016

Time uploaded in London: 14-30

Post No.3162

Pictures are taken from various sources; thanks.

 

அஸ்வமேத யக்ஞம் என்றால் என்ன?

இது அரசர்கள் மட்டும் செய்யக்கூடியது. தங்கள் ஆட்சியை விஸ்தரிக்க – விரிவாக்க — அதிகாரத்தை நிலைநாட்டச் – செய்யும் வேள்வி. யாகக் குதிரையை இறுதியில் பலி கொடுக்கும் வேள்வி இது.

 

இது எப்போது துவங்கியது?

ரிக் வேத காலத்திலேயே இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 18 ஆம் நூற்றாண்டு வரை இது நடந்தது. ராமாயணம், மஹாபாரதம், புராணங்களிலும், கல்வெட்டுகளிலும் இது பற்றிய தகவல்கள் உள. இதை நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவை.

 

அதிசயம் 1

இந்த வேள்வியில் 4, 400  முதலிய நான்கின் மடங்கிலுள்ள எண்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சங்கத் தமிழர் வாழ்விலும் இதே போக்கைக் காணலாம். 18 மேல் கணக்கு நூல்களிலும் , 18  கீழ்க்கணக்கு நூல்களிலும் இதே போல 4, 40, 400  எண்களிலேயே பல நூல்கள் தொகுக்கப்பட்டன. இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் பார்க்கவும்.

 

 

அதிசயம் 2

யாகத்தில் விடப்பட்ட குதிரைக்கு 1000 முத்துக்களாலும், தங்கத்தாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த முத்துக்கள் எங்கிருந்து வந்தன? “பாண்டிய கவாடம்” என்னும் முத்து பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் குறிப்பிடுகிறான். தமிழ் நாட்டிலிருந்து முத்து  போயிருந்தாலும், குஜராத்திலிருந்து போயிருந்தாலும், இது வரை வெள்ளைக்காரர்கள் எழுதிய தவறான கருத்துகளுக்கு இது வேட்டு வைக்கும்.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் என்பதே தெரியாது என்றும், அவர்கள் கங்கை நதிக்ரையில் கூட குடி புகவில்லை என்றும், அவர்கள் நாடோடிகள் என்றும் பல அரை வேக்காடுகள் எழுதிவைத்துள்ளன. ஆனால் உலகின் பழைய நூலான ரிக் வேதமோ அஸ்வமேதம் பற்றி குறைந்தது மூன்று மண்டலங்களில் பேசுகிறது. தங்கம் முத்து என்பவை நாகரீக வளர்ச்சியையும், செல்வ வளத்தையும் பூகோள வீச்சையும் காட்டுகிறது.

 

அதிசயம் 3

அஸ்வ மேத யாகத்தில் பயன்படுத்தப்பட்ட குதிரைக்கு 34 விலா எலும்புகள் இருப்பதாக வேதம் குறிப்பிடுகிறது. இது இந்திய வகைக் குதிரையாகும். ஆரியர்கள், மத்திய ஆசியாவிலிருந்து வந்தனர் என்று பல அரை வேக்காடுகள் எழுதியுள்ளன. ஆனால் வேதமோ இந்திய குதிரைகள் பற்றிப் பேசுகின்றன!

அதுமட்டுமல்ல. இந்த 34 என்ற எண் 27 நட்சத்திரங்களையும் 5 கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் குறிக்கும் என்றும் வியாக்கியானம் உள்ளது. இது உண்மையாகில் வேத காலத்திலேயே நமக்கு இந்த வானவியல் தெரியும் என்று விளங்குகிறது .பல அரைவேக்காடுகள்,  நாம் இவற்றை கிரேக்கரிடமிருந்து கற்றதாக எழுதிவைத்துள்ளன.

 

அஸ்வமேத யாகத்தில் வரும் குதிரை சூரியனைக் குறிக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

gupta-empire-samudragupta-i-c-330-70-av-dinar-7-70g

அதிசயம் 4

இந்திய அரசர்கள் அஸ்வமேத யாகம் முடிந்தவுடன் தங்கக் காசுகளை வெளியிட்டனர். குதிரை பொறித்த குப்தர் கால தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதே போல பெருவழுதி என்ற பெயருடன் குதிரை பொறித்த நாணயம் கிடைத்துள்ளது. இது புற நானூறு குறிப்பிடும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ராஜசூய வேள்வி செய்த குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் பெருவழுதியும் அஸ்வமேதம் செய்திருக்கலாம். இதை காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் குறிப்பால் உணர்த்துவதை ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆக, தமிழர்கள் வேறு கலாசாரம் உடையவர்கள் என்ற வெளிநாட்டுக்கா ரன் வாதத்துக்கு இது பயங்கர வேட்டு வைக்கிறது.

 

புறத்துறை நூல்களில் பத்து வரிக்கு ஒரு முறை இந்துமத குறிப்புகளைக் காணலாம்.

 

அதிசயம் 5

சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதி நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகத்தில் காளைமாடு முத்திரைகள் உண்டு ஆனால் பசு மாடுகள் படம் இல்லவே இல்லை. அது போல குதிரை எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் குதிரை படம் இல்லை. ஒரு வேளை  பசுவும், குதிரையும் புனிதம் என்பதால் முத்திரையில் போடாமல் இருந்திருக்கலாம்.

 

ரிக்வேதத்தில் அஸ்வமேத என்ற பெயரில் ஒரு அரசன் இருந்ததாகப் பாடியுள்ளனர் (RV 5-27-4/6; 8-68-15)

 

அதிசயம் 6

குஷ்டரோகிகள், அஸ்வமேத யாகத்தில் இடம்பெறுகிறார்கள். ஏன் என்றே தெரியவில்லை. வெள்ளைக் குதிரை, மற்றும் வெள்ளைக் குதிரையில் கருப்புக் காதுடைய குதிரைகள் புகழப்படுகின்றன. சிந்து வெளி, சரஸ்வதி நதிப் பகுதி குதிரைகள் புகழப்படுகின்றன.

 

அதிசயம் 7

தாவர, பிராணிகள் உலகத்தில் புழுப்பூச்சிகள் முதல் பெரிய காட்டு மிருகங்கள் வரை 609 மிருகங்கள் அஸ்வமேதத்தில் பங்குபெற்றன. இவைகள் அனைத்தும் கொல்லப்படவில்லை, விடுதலை செய்யப்பட்டன என்றே பலரும் கருதுகின்றனர். காட்டு மிருகங்களைக் கொல்லாமல் விட்டது பற்றிய தெளிவான குறிப்புளது. அந்த அளவுக்கு வனவிலங்குகலைப் பாதுகாக்கும் நாகரீக முதிர்ச்சி பெற்று இருந்தனர்.

 

அகநானூறில் வேள்விக்குண்ட ஆமை உவமை ஒரு புதிராக இருந்தது. அதுவும் அசுவமேத யாக குண்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆமையாக இருக்கலாம் (இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் படிக்கவும்)

 

அதிசயம் 8

ஆரியர்கள் அங்கிருந்து வந்தனர் , இங்கிருந்து வந்தனர் என்று பிதற்றும் பேர்வழிகளுக்கு ஒரு யாகமோ யக்ஞமோ, ஒரு சுயம்வரமோ அப்பகுதியில் நடந்ததாக இன்று வரை காட்ட முடியவில்லை;  மிகவும் கஷ்டப்பட்டு சில பிராணிகள் படுகொலையை ஒப்பிட முயற்சி செய்கின்றனர். ஒன்று கூட பொருந்துவ தில்லை.அத்தகைய ஆராய்ச்சிகளைப் பார்கையில் நமக்குச் சிரிப்பும் பரிதாபமும்தான் வரும். இந்துக்கள் உலகம் முழுதும் சென்றதால் அவர்கள் மொழியின் தாக்கம் அவர்கள் மீது அதிகமாகவும் மற்ற விஷயங்கள் குறைவாகவும் இருக்கிறது என்றே கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் ஈரான் (பாரசீகம்) வரை நமது ஆட்சி இருந்ததால் அங்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அவர்கள் இங்கிருந்து குடியேறிய ஒரு பிரிவினர் ஆவார்கள்.

 

ஆனால் இரண்டயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இமயம் முதல் குமரி வரை இந்தப் பண்பாடு ஒரே மாதிரியாக இருந்ததற்குச் சான்றுகள் உள. இந்த அளவுக்கு வேறு எங்கும் சான்றுகள் இல்லை.

 

malayalam-coin

அதிசயம் 9

 

அஸ்வமேதத்தின்போது ஏராளமான தட்சிணை கொடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பசுமாடுகள், நூற்றுக் கணக்கான குதிரைகள் கொடுக்கப்பட்டன. மேலும் அந்த நேரத்தில் பிராமணர்கள் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும் . அரசாட்சியையே கேட்டாலும் கொடுக்க வேண்டும் ஆனால் அக்கால பிராமன்ணர்கள் அப்படி எக்குத் தப்பாக எதுவும் கேட்கவில்லை. துரோணர் மட்டும் பரசுராமர் செய்த அஸ்வமேதத்தில் பங்கு பெறாமல் வேடிக்கை பார்க்கும் பிராமணர்களில் ஒருவராக நின்றபோதும் எனக்குத் தனுர்வேதம் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். பரசுராமனும் அவ்வாறே செய்தார்.

 

 

அதிசயம் 10

வேள்வி என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. அக்கினியில் ஆகுதி செய்வது என்பது மட்டும் பொருள் அல்ல. யஜூர்வேதத்திலேயே யாகக் குதிரையின் கண்களை சூரியனாகவும், தலையைக் காலைப் பொழுதாகவும், வாயு தேவனை மூச்சாகவும், சந்திரனைக் காதுகளாகவும் ஒப்பிடும் பகுதிகள் உள்ளன. வேத இலக்கியத்தை அப்படியே பொருள் கொள்ளாமல் அதிலுள்ள தத்துவங்களை உணரவேண்டும்.

 

 

 

அதிசயம் 11

யாரேனும் ஓருவர் நூறு அஸ்வமேதம் யாகம் செய்தால் அவருக்கு இந்திரனின் பதவி கிடைத்துவிடும். இதனால் யாரையும் 100 யாகம் செய் யாதவாறு மண், பெண், பொன் பதவி ஆசைகளைக் காட்டி அவர்களை இந்திரன் விழுத்தாட்டி விடுவானாம். பரசுராமர், ஆண்டுக்கு ஒன்று வீதம்    100 அஸ்வமேதம் செய்தவர். இந்திரன் பிருஹஸ்பதியின் கீழ் 100 அஸ்வமேதம் செய்தவன் அவன் பெயர் சதக்ரது (நூறு செய்தவன் = சதக்ரது).

 

 

அதிசயம் 12

அஸ்வமேத யக்ஞத்தின்போது புதிர்கள் போடுவதுண்டு. அவர்கள் மந்திரங்கள் புதிர்கள் நிறைந்ததாகவும் சில ஆபாச வசனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இவைகள் ஏன் இப்படி உள்ளன? உண்மைப் பொருள் என்ன என்பது எவரும் அறியார். வேத கால சமூகம் இலக்கியம் தெரிந்தவர்கள்’ நாகரீகத்தின் உச்சியைத் தொட்டவர்கள் என்பது இதனால் விளங்கும். வெளிநாட்டு, உள்நாட்டு அரை வேக்காடுகள் எழுதியது போல அவர்கள் மாடு மேய்த்த நாடோடிகளும் அல்ல, காலனி பிடிக்க வந்த வெள்ளைக்க ரர் போன்ற பரதேசிகளும் அல்ல!

 

இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைக் காண்போம்.

தொடரும்……………………………..

 

–SUBAM–

 

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்!-Part 1 (Post No.3042)

manusmriti

Written by london swaminathan

Date: 7th    August 2016

Post No. 3042

Time uploaded in London :– 9-14 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

உலகின் முதல் சட்டப் புத்தகம் மனு ஸ்மிருதி! இதில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன. இவர் பல அதிசய விஷயங்களை ச் சொல்லுகிறார். இது சம்ஸ்கிருத மொழியில் இருந்தாலும் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றது. 1794 ஆம் ஆண்டிலேயே இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிட்டார். தமிழ் இலக்கியமு ம், கல்வெட்டுகளும் மனு ஸ்மிருதியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. தேரில் மகனை முறை செய்த சோழனுக்கு மனு நீதிச் சோழன் என்று பெயர்! அவ்வளவு புகழ் வாய்ந்த மனு நீதியைப் படிக்காமல், இடைச் செருகலாகச் சொல்லப்பட்ட சில பாக்களைக் கொண்டு, சிலர் அவதூறு கற்பிக்கின்றனர். தமிழில் இதை முழுதும் வாசித்தால் இதன் அருமை பெருமைகள் புரியும்!

9 பேர் இதற்கு விளக்க உரைகள் எழுதியுள்ளனர் என்றால் இதன் பெருமையையும், ஆழ்ந்த பொருளையும் கூறலும் வேண்டுமோ!

 

 

அதிசயம் 1 Woman’s mouth is unpolluted!

பெண்களின் வாய் எப்போது சுத்தமாக இருக்கும் என்கிறார் மனு! ஒரு பறவை,  பழத்தைக் கொத்திக் கீழே போட்டால் அது எச்சில் இல்லை; பாலைக் கன்றுக்குட்டி வாய் வைத்துக் குடித்தாலும் அங்கே சுரக்கும் பால் அசுத்தம் இல்லை; ஒரு நாய், தனது வாயை வைத்துக் கடிக்கும் வேட்டை மிருகங்களும் அசுத்தம் இல்லை; அது போல ஒரு பெண்ணின் வாய் எப்போதும் அசுத்தம் அடைவது இல்லை (மனு 5-130)

 

அதிசயம் 2 Men lived for 400 years!

கிருத யுகத்தில் மனிதன் 400 வயது வரை வாழ்ந்தான். பின்னர் ஒவ்வொரு யுகத்திலும் ஆயுள் ஒவ்வொரு கால் பகுதியை இழந்தது (அதாவது நூறு, நூறு ஆண்டுகளாகக் குறைந்து வந்தது (1-83)

வேறு பல இடங்களில் கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் 100 என்று மனு பகர்வார்.

 

திருக்கோவிலூர் ஞானானந்தா, காசி பூதலிங்க சுவாமிகள் முதலானோர் நமது காலத்திலேயே 150 முதல் 300 ஆண்டுகள் வரை வாழ்ந்த அற்புதங்களையும் நினைவு கூறுதல் சாலப் பொருந்தும்.

 

 

அதிசயம் 3 Manu lived when Saraswati River flowing for 1000 mile!

ஒரு மனிதனுக்கு பிரம்மஹத்தி விலக (பிராமணனைக் கொன்ற பாவம் விலக), அவன் சரஸ்வதி நதிக் கரையில் நடந்து கொண்டே வேதம் சொல்ல வேண்டும் என்பார் மனு. இதற்கு முன் அவன் 1000 மைல் நடக்க வேண்டும் என்று ஒரு பாட்டில் பகர்வார். ஆக மனு என்பவர் வேத காலத்தில், சரஸ்வதி நதி ஓடிய காலத்தில் இருந்தவர். வேதத்தின் ஒரு சாகை முழுவதையும் மூன்று முறை சொல்லிக் கொண்டு விரத உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்றும் இயம்புகிறார்.!(11-78)

 

ஆங்கிலம் மட்டும் படித்த அரைவேக்காடுகள் மனுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்று செப்புவர். ஆனால் மனு இக்ஷ்வாகுவுக்கும் முந்தியவர் என்று கண்ணன் பகவத் கீதையில் செப்பியதையும் நினைவு கூறுதல் பொருத்தம்!

 

அதுமட்டுமல்ல பூமிக்கு சர்க்கரையைக் கொண்டு வந்தவர் இக்ஷ்வாகு என்பதையும் சர்க்கரை சிந்து சமவெளியில் கண்டு பிடிக்கப்பட்டதையும்  நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறுவியுள்ளேன்.

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் பல மனுக்களின் பெயர்கள் இருப்பதை வேறு ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறினேன்.

 

ஆக மனு என்பவர் மிக, மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்று புலனாகும்.

மங்கட் என்பவர் இவரை கி.மு.5700க்கு முன்னதாக வைக்கிறார்.

 

சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயெ வறண்டு போயிருந்ததை மஹாபாரதம் மற்றும் பிராமணங்கள் வாயிலாக நாம் அறிவோம்.

 

இந்திய அரசியல் சானத்துக்கு பார்லிமெண்ட் நேற்று கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தத்தை வைத்து இந்திய அரசியல் சட்டம் நேற்று தோன்றியது என்று சொன்னால் நம்மை எல்லோரும் இகழ்வாரன்றோ; இதுபோல மனு பற்றி வெளிநாட்டினர் தத்துப் பித்து என்று உளறி இருக்கின்றனர். உண்மையில் மனுவும் சரஸ்வதி நதியும் சிந்து  சமவெளி நாகரீக காலத்தவை அல்லது அதற்கும் முந்தியவை.

 

அதிசயம் 4 (Sumukan Mystery)

சுமுகன் என்றொரு மன்னனி பெயரை மனு (7-41) குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியங்களில் இவர் பெயர் இல்லை. ஆனால் சுமேரியாவில் இவர் பெயர் இருக்கிறது. இது குறித்து முன்னரே விரிவாவக ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். வேறு எந்த இலக்கியமும் செப்பாத ஒரு விஷயத்தை மனு இயம்புவதிலிரந்தே அவரின் பழமை வெளிப்படும்.

manu2

அதிசயம் 5 (Soma Herb)

சோம யாகம் பற்றி மனு பல இடங்களில் பேசுகிறார். சோமலதை எனப்படும் மூலிகையின் விற்பனை, அதற்குள்ள தடைக ளையும் அவர் சொல்லுகிறார். சோம யாகத்துக்கான சோமக் கொடி வேத காலத்திலேயே அருகிவிட்டது. வேத கால இறுதியிலேயே இதற்கான மாற்றுத் தாவரங்களைக் கதைகத் துவங்கிவிட்டனர். ஆகவே வேத காலத்தின் ஆரம்பத்திலேயே மனு தர்ம சாத்திரம் தோன்றியிருத்தல் வேண்டும்.

3-87, 211, 257

4-26, 52

9-129, 11-7 to 12, 255

Sale of Soma – 3-158, 180, 10-80

 

 

அதிசயம் 6 No Interpolation!!!

வெளி நாட்டுக்காரர்கள் இந்திய இலக்கியங்களை மட்டம் தட்டுவதில் மன்னர்கள். இந்திய இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இடைச் செருகல் உண்டு என்று சொல்லி இந்துக்கள் மனதில்,  ஐயப்பாட்டைக் கிளப்பி இந்து  மத தையே ஆட்டம் காணச் செய்ய ஆசைப்பட்டவர்கள். ஆங்கிலம் படித்த நம்மூர் அசட்டுப் பிச்சுகளும் அதை அப்படியே நம்பி மேலும் உளறுவதைக் காணலாம்; வாழ்நாளில் 700 கீதை ஸ்லோககளை ஒரு முறை கூடப் படிக்காமல், கீதை பற்றி கேள்வி மட்டும் கேட்பர்! விநோதப் பிறவிகள்!!

 

இப்படிப்பட்ட வெளிநாட்டினர், மனு தர்ம சாத்திரத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிக் கதைப்பதே இல்லை. ரிக்வேதத்தில் கிலம் (பிற்சேர்க்கை), தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் பிற்சேர்க்கை, சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் எல்லாம் பிற்சேர்க்கை என்று கதைக்கும் மாக்கள், மனு தர்ம சாத்திரம் பற்றி வாயே திறக்கா!. இதை அப்படியே எடுத்துக் கொண்டால்தான் சூத்திரர்கள் பற்றிய பகுதிகளை எடுத்துக்காட்டி இந்து மதத்தை அழிக்கலாம் என்று நம்பினர் அந்தப் பேதைகள்.

 

உண்மையில்; சூத்திரருக்கு எதிரான பகுதிகள் சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் இடை யில் செருகப்பட்டவை.

 

இதற்கு என்ன ஆதாரம்?

 

கீழ்ஜாதிப் பெண்ணான, வசிட்டரின் மனிவியான அருந்ததியைப் புகழும் மனு, எல்லா ஜாதிகளிலும் உள்ள ரத்தினம் போன்ற பெண்களைக் கல்யாணம் செய்யலாம் என்பார். அது மட்டுமல்ல கீழ் ஜாதியில் படித்தவன் இருந்தால் அவனிடம் போய்க் கற்று அவனுக்கு குருவுக்குரிய மரியாதை செய்க என்கிறார்.

 

உலகில் பெண்களை மனு புகழ்ந்த மாதிரி எந்த நாட்டு இலக்கியத்திலும் பெண்கள் புகழப்பட்டதை இன்று வரை காண முடியாது! ஆனால் பெண்களுக்கு எதிரான சில ஸ்லோகங்கள் இடைச் செருகலாக சொருகப்பட்டுள்ளன. இத்தகைய முரண்பாடுகளே மனு தர்ம சாத்திரத்தில் இடைச் செருகல் உண்டு எனக்காட்டி நிற்கின்றன. ஆனால் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’ மனுதர்மத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிப் பேசவே இல்லை. இது உலக மஹா அதிசயம்! ராமாயணத்திலும் மஹா பாரதத்திலும் கூட இடைச் செருகல் உண்டு என்று சொல்லும் இந்த “யோக்கியர்கள்” மனுவில் மட்டும் எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொண்டு தாக்குவர்.

திராவிடக் கோமளிகள் திருக்குறளையே முழுதும் படிப்பதில்லை. மனுவையா படிக்கும்?

 

அதிசயம் 7 (Water Origin of Life on earth)

 

கடவுள் முதலில் தண்ணீரைப் படைத்தார் என்றும், உயிரினங்களைப் படைக்க எண்ணிய அவர்,  தண்ணீரில் தனது விந்துவை விட்டார் என்றும் அது பெரிய தங்க முட்டையாகி அதில் பிரம்மா தொன்றினார் என்றும் மனு கூறுவார். ( 1- 8 முதல் 10 வரை).

 

உலகில் தண்ணீர் தோன்றிய பின்னரே உயிரினம் தோன்றின என்ற விஞ்ஞான உண்மையும், தண்ணீரில் முதல் உயிர் தோன்றியது என்ற விஞ்ஞான உண்மையும், உலகம் முழுதும் கோள வடிவமானது (முட்டை) என்ற விஞ்ஞான உண்மையும் மனுவின் ஸ்லோகங்களில் பொதிந்து கிடப்பதை சொல்லத் தேவை இல்லை.

 

தொடரும்……………

 

Please read my earlier posts:–

Mystery of Manu: Rig Veda Mystery No.8, posted on 19 January 2015

 

The Sugarcane Mystery: Indus Valley and Ikshvaku Dynasty, posted on 19 November 2011

 

Sanskrit words in Sumerian Culture: Sumukan Mystery, posted on 12 May 2014)

 

–சுபம்–